ஜே.வி.பியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க போவதாகவும் துறைசார்ந்த திறமையான அணியினரை உருவாக்க போவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மொறட்டுவை ரந்திய ஹொட்டலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தனி நபரின் மயாஜால செயற்பாடு அல்ல. இதனால், எதிர்காலத்தில் நாங்கள் நாட்டின் அமைச்சரவையை 25 ஆகவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 25க்கு மேல் அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்.
ஜப்பானுடன் ஒப்பிடும் போது 25 அமைச்சர்கள் என்பதும் அதிகம். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
ஜப்பானுக்கு இது தேவையில்லை, இருக்கும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதே அவர்களுக்கு தேவை. இதனால், அதிகளவான அணியை பயன்படுத்தி வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
உதவியவர்களை மகிழ்விக்கவே தற்போது அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் மாற்றுவோம். மாற்றியமைத்து என்ன செய்ய போகிறோம்?.
நாங்கள் சிறந்த அணியை நியமிப்போம். கல்வியை எடுத்துக்கொண்டால் எமக்கு இருக்கும் சிறந்த அணி எது?. உதாரணமாக சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால், அணியை அறிமுகப்படுத்துவோம். அவர்களே சுகாதாரத்தை மேம்படுத்துவார்கள்.
எமது நளின் ஜயதிஸ்ஸ ஒரு மருத்துவர். எம்மிடம் விசேட மருத்துவ நிபுணர் நிஹால் அபேசிங்க இருக்கின்றார். ராகமை மருத்துவப் பீடத்தின் பேராசியர் நிஷாந்த அபேசிங்க இருக்கின்றார்.
இவர்களே எமது சுகாதார அணியினர். அதேபோல் வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழு இருக்கின்றது. பேராசிரியர் அனில் ஜயந்த, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க இவர்கள் எமது பொருளாதார அணியினர்.
நாட்டில் இதுவரை உருவாக்கப்படாத திறமையான, புரிந்துணர்வுள்ள, அர்ப்பணிப்பு, நேர்மையான, மோசடியற்ற அமைச்சரவையை நாங்கள் உருவாக்குவோம். அந்த அமைச்சரவையே நாட்டை ஆட்சி செய்யும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கஞ்சியும் செல்ஃபியும் 1 நாள் முன்

55 வயதில் கனடா சாக்லேட் நிறுவனத்தில் வேலை! மகிழ்ச்சியில் துள்ளிய நபருக்கு தெரியவந்த உண்மை... எச்சரிக்கை செய்தி News Lankasri

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்.. தந்தையின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு.. Cineulagam

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி - பணத்திற்கு பஞ்சமே இருக்காது... அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்! Manithan

மாத இறுதியில் லட்சுமி தேவியின் அருளால் செல்வந்தராக போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? News Lankasri

மேஷ ராசியில் சுக்கிரன்! 25 நாட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்: யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்? Manithan

அஜித்தின் திருப்பதி படத்தில் சதாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?- தற்போது கூறிய இயக்குனர் Cineulagam

11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன் Cineulagam

பிரபல பாடகி சங்கீதா கொன்று புதைப்பு! மாயமான 12 நாட்களுக்கு பின் சிதைந்த நிலையில் கிடைத்த சடலம் News Lankasri
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022