உள்ளூராட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறிய 25 வேட்பாளர்கள் கைது
உள்ளூராட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (24) வரையில் 25 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதே போன்று தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.
முறைப்பாடுகளின் எண்ணிக்கை
நேற்றைய(23) நாளில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மொத்த குற்றவியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 61 ஆகும். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நேற்று 20 முறைப்பாடுகள் கிடைத்ததோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 23 வாகனங்கள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
