கொழும்பு - பம்பலப்பிட்டியில் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது!
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி, கொழும்பு பம்பலப்பிட்டி - மிலாகிரிய பகுதியில் இரவுநேர கேளிக்கைவிடுதி ஒன்றில் விருந்து வைத்த 25 பேரை புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரவுநேர கேளிக்கைவிடுதியில் விருந்துக்குத் தயாராகி வந்த குழுவினர் தொாடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது விருந்தில் கலந்து கொண்ட 07 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கோவிட் 19 இன் புதிய வழிகாட்டுதலின் கீழ், Pub,பார் (Bars),கசினோ (Casino), இரவு நேர களியாட்ட விடுதிகள் மறு அறிவித்தல் வரைக்கும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி குறித்த விருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam