சீட்டிழுப்பில் 25 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை வெற்றி பெற்ற தமிழ் பெண் உள்ளிட்ட ஐவர்
அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி சீட்டிழுப்பின் வெற்றியாளர்கள் ஐவருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து நேற்று காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கோடிபதி கப்ருக 687 மற்றும் 689, சனிக்கிழமை அதிஷ்டம் 3507, 3543 மற்றும் அபிவிருத்தி அதிஷ்டம் 411 ஆகிய வெற்றி வாரங்களின் வெற்றியாளர்களுக்கு இவ்வாறு பிரதமரினால் பரிசு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. வஞ்சாவல, பேராதனை, லுணுவில, புஸ்ஸல்லாவ, மற்றும் கஹவத்த பிரதேசங்களின் குறித்த சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
இந்த வெற்றியாளர்களில் தமிழ் பெண்ணும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தர்ப்பத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அமித கமகே உள்ளிட்ட அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri