ஹோர்முஸ் நீரிணையில் முடங்கிய எண்ணெய் கப்பல்கள்! விலைகளில் மாற்றம் ஏற்படுமா
சுமார் 230 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் எரிபொருளுடன் பயணத்திற்குத் தயாராக உள்ள போதிலும், 'ஹோர்முஸ் நீரிணை' இன்னும் திறக்கப்படவில்லை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கான எரிபொருள் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 230 கப்பல்கள் எண்ணெய் ஏற்றப்பட்டு பயணத்திற்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தடைகள்
கப்பல்கள் தயார் நிலையில் இருந்தாலும், பிரதான கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. "ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படவில்லை" என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் பெரும் பகுதி இந்தப் பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பாதையில் ஏற்படும் தடைகள் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே கப்பல்களின் பயணம் குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.