திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து 23 பேர் உயிரிழப்பு (Video)
கென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு ஆற்றில் உள்ள பாலத்தின் மீது வேகமாக ஓடும் தண்ணீருக்கு மத்தியில் பேருந்து கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என்றும் விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் பேருந்தில் சிக்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கென்யாவின் பல பகுதிகளில் சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்து வருகிறமையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam