திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து 23 பேர் உயிரிழப்பு (Video)
கென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு ஆற்றில் உள்ள பாலத்தின் மீது வேகமாக ஓடும் தண்ணீருக்கு மத்தியில் பேருந்து கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என்றும் விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் பேருந்தில் சிக்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கென்யாவின் பல பகுதிகளில் சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்து வருகிறமையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam