திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து 23 பேர் உயிரிழப்பு (Video)
கென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு ஆற்றில் உள்ள பாலத்தின் மீது வேகமாக ஓடும் தண்ணீருக்கு மத்தியில் பேருந்து கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என்றும் விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் பேருந்தில் சிக்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கென்யாவின் பல பகுதிகளில் சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்து வருகிறமையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam