22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை! பல குழுக்களை கடுமையாக சாடிய சுசில் பிரேமஜயந்த
22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து என அவைத்தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ''அடுத்த அமர்விற்கான நிகழ்ச்சி நிரலை நேற்று தயாரித்தேன், அது அதில் இல்லை.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை.
பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படாது
22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து.
22வது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைக்கு வராது என நினைக்கிறேன். இந்த திருத்தம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அதனால் தேர்தல் பாதிக்கப்படாது.

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
