போதைப்பொருள் கடத்தலில் கைதான 22 தேரர்களின் அதிர்ச்சியான பின்னணி! ஞானசார தேரரின் எச்சரிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களுடன் 22 துறவிகள் கைது செய்யப்பட்டுள்ள விடயமானது தற்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ளது.
அவர்கள் கொண்டு வந்திருந்த பயணப் பைகளில் பாடசாலை உபகரணங்கள், பல்வேறு இனிப்புகள் மற்றும் போலிப் பைகள் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துறவிகள் குழுவொன்று போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமும் இது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அவர்களின் தொலைப்பேசியை ஆராய்ந்ததில் பல மோசமான விடயங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், இவர்களை தேரர்கள் என்று குறிப்பிட வேண்டாம், தேர்கள் போன்று வேடமிட்டவர்கள் என்று கூறுங்கள் என்று ஞானசார தேரர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போதும் ஈஸ்டர்ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் தற்போதும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின்" கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..! திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான போட்டி
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan