டொக்டர் எலியந்த வைட்டின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பலத்த பொலிஸ் பாதுகாப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக மருத்துவராக கடமையாற்றி வந்த அமரர் எலிந்த வைட்டின் பிள்ளைகள் இருவருக்கும் 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பாதுக்க (Niroshan Paadhuka) இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஆன்மீக சக்தியின் மூலம் நோய்களை குணப்படுத்துவதாக கூறி வந்த டொக்டர் வைட், பிரதரமர் மஹிந்தவின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்காகி டொக்டர் வைட் உயிரிழந்தார். இவ்வாறான ஓர் நிலையில் அவரது மகனும்,மகளும் தற்பொழுது தந்தை கனவில் மருந்துகள் பற்றி கூறுவதாகவும் தங்களினால் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைட்டின் இரண்டு பிள்ளைகளுக்கும் யார் எவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் பற்றி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் நிலைப்பாடு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் 4 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 21 பேர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பாதுக்க தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
