ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்துக்களினால் 205 பேர் பலி
ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற விபத்துக்களினால் சுமார் 205 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1959 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துக்களினால் 205 பேர் கொல்லப்பட்டதுடன், 1254 பேர் காயமடைந்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் மட்டும் 766 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதுவே அதிக எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகியதாகவும், அடுத்தபடியாக முச்சக்கர வண்டிகள் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலேயே அதிகளவு விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
