எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு மத்தியில் நான்கரை மணிநேரம் உரையாற்றிய அநுர
2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத்திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 2 ஆவது வரவு - செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நான்கரை மணிநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, எதிர்க்கட்சிகளிடம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரவு - செலவுத் திட்ட உரையின் நிறைவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan