2024 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு
நடப்பு ஆண்டின் மகளிர் 20க்கு 20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்காக, அனுபவம் வாய்ந்த நான்கு நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் நிமாலி பெரேரா, ஜமேக்காவின் ஜாக்குலின் வில்லியம்ஸ், தென்னாபிரிக்காவின் லோரன் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிளாரி பொலோசாக் ஆகிய நான்கு பேரே அரையிறுதிகள் மற்றும் இறுதிப்போட்டியின் நடுவர்களாக செயற்படவுள்ளனர்.
இதன்படி இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டிக்கு நிமாலி பெரேரா மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள் என்றும், மூன்றாவது நடுவராக இங்கிலாந்தின் அன்னா ஹாரிஸ் செயற்படவுள்தாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.
மிச்செய்ல் பெரேரா
மேலும், நான்காவது நடுவராக நியூஸிலாந்தின் கிம் கொட்டன் மற்றும் போட்டி நடுவராக இலங்கையின் மிச்செய்ல் பெரேரா ஆகியோர் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் நியூசிலாந்தை சார்ஜாவில் எதிர்கொள்ளும் இரண்டாவது அரையிறுதியில், தென்னாப்பிரிக்காவின் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலிய பொலோசாக் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள்.
இருவருடன் அவுஸ்திரேலியாவின் எலோயிஸ் செரிடன் மூன்றாவது நடுவராகவும், இந்தியாவின் விருந்தா ரதி நான்காவது நடுவராகவும் இணையவுள்ளனர்.
மேலும், போட்டி நடுவராக இந்தியாவின் ஜி.எஸ்.லட்சுமி செயற்படவுள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri