வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்! மாணவர்களுக்கு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையத்தின் வாயிலாக சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளியான பெறுபேறுகள்
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், பரீட்சைக்கு விண்ணப்பித்த 323,900 மாணவர்களுள், 4616 மாணவர்கள் பரீட்சைக்கு முகம்கொடுக்கவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு முகம்கொடுத்து பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட ஏனைய 319,284 மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய விரும்பினால், 27ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதியான காலப் பகுதிக்குள் விண்ணப்பிக்க முடியும்.
மேலும், வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களில் பார்வையிட முடியும் என்றும், ஏதேனும் விசாரணைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 1911, 0112 784208, 0112 784537 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 15 மணி நேரம் முன்

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
