புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் இந்த செயலமர்வு நடத்தப்படும்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இந்த செயலமர்வினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணிகள் காரணமாக 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும், எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
