நாட்டில் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கையென செய்தி! இ.மி.சபை பொறியியலாளர் சங்கத்தின் அறிவிப்பு
மக்களை பாதிக்கும் வகையில் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின் இணைப்பை துண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
மக்களை பாதிக்கும் வகையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
மக்களுக்கான மின் இணைப்பை எப்போதும் துண்டிக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை. நாம் அனைவரும் வெளியேறினால், தவிர்க்க முடியாமல் மின்சார துண்டிப்பு ஏற்படும்.
ஆனால் நாங்கள் அதைச் செய்ய மாட்டோம், ஏனென்றால் இந்த நேரத்தில் மின்சாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.
எனவே எக்காரணம் கொண்டும் மின்வெட்டை அனுமதிக்க மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan