தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறையாகுமென அறிவிப்பு
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்திருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதி மற்றும் நிறுவன அடையாள அட்டைகளுடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பணிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தேவையின்றி மற்றும் அனுமதியின்றி ஏனையோருக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்து நடமாட அனுமதியில்லை எனவும், இவ்வாறு நடமாடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தளர்த்தப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
