வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்கள்
குவைத் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இலங்கை கைதிகள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குவைத் - இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த கைதிகள் குவைத் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருள் பயன்பாடு, போக்குவரத்து, கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதித்துறை செயல்முறைக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குழுவாகும்.
இலங்கை கைதிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகள் வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.

குவைத் - இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், 52 இலங்கை கைதிகள் இரண்டு சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri