சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 20 தொழில்கள் புதிதாக அடையாளம்
16 முதல் 18 வரையான சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாத ஆபத்தான தொழில்களின் பட்டியலில் புதிதாக 20 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்போது ஆபத்தான தொழில்களுக்கான பட்டியலை 71 வரைக்கும் அதிகரிப்பதற்கான கட்டளைகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது.
அத்துடன், திருத்தப்பட்ட கட்டளைகள் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, 16 முதல் 18 வரையான இளைஞர்களுக்கு 51 ஆபத்தான தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில்களில் ஈடுபடுத்தல், சட்டத்தில் தண்டனைக்குரியதாகவும் குற்றமாக்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட குறித்த கட்டளைகளை மேலும் திருத்தியமைத்து, வீட்டுப்பணி, ஒப்பனை அலங்காரத் தொழில்கள் மற்றும் கணினி மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களுடனான தொழில் உள்ளிட்ட தொழில்களை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் புதிதாக 20 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam