நிதி அமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட 20 மில்லியன் டொலர்கள்
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான தட்டுபாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மருந்து விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 22 மில்லியன் டொலர் தேவையாக இருந்ததாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரையில் அத்தியாவசிய மற்றும் அவசர மருந்து பொருட்கள் 14ல் 9 மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மருந்து பொருட்கள் எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்திய கடனுதவின் கீழ் நாட்டுக்கு அவசியமான மருந்து பொருட்களுக்காக 80 மில்லியன் டொலர் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
