நீரில் மூழ்கிய 2 வயது சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சம்மாந்துறையில் சகோதரனுடன் விளையாடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (9) சிறுவன் தனது சகோதரனுடன் விளையாடிய நிலையில் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த விபத்தில் 2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

இறந்த சிறுவனது சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம் செவ்வாய்க்கிழமை (9) மாலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri