புதுக்குடியிருப்பில் சூட்சுமமான முறையில் கசிப்பினை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கான் கசிப்புக்களுடன் இரண்டு வீட்டு உரிமையாளர்களுமே நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கசிப்பு விற்பனை மேற்கொண்டு வரும் நபர்கள் சிலர் தொடர்பிலும் மக்கள் கிராம அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கமையவே பொலிஸாரின் உதவியுடன் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த இடத்துக்குச் சென்று இரண்டு காணிகளுக்குள் இரண்டு கான் கசிப்புக்களுடன் அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கசிப்பு வியாபாரம் அதிகரித்துள்ளதோடு குடும்ப வன்முறைகளாலும் பலர் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
