புதுக்குடியிருப்பில் சூட்சுமமான முறையில் கசிப்பினை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கான் கசிப்புக்களுடன் இரண்டு வீட்டு உரிமையாளர்களுமே நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கசிப்பு விற்பனை மேற்கொண்டு வரும் நபர்கள் சிலர் தொடர்பிலும் மக்கள் கிராம அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கமையவே பொலிஸாரின் உதவியுடன் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த இடத்துக்குச் சென்று இரண்டு காணிகளுக்குள் இரண்டு கான் கசிப்புக்களுடன் அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கசிப்பு வியாபாரம் அதிகரித்துள்ளதோடு குடும்ப வன்முறைகளாலும் பலர் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri