இலங்கையில் புத்தாண்டில் நடந்த பெரும் சோகம் - இரு இளைஞர்கள் பலி - மூவரை தேடும் கடற்டை
இலங்கையில் நீர் தொடர்பான இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று மாலை பதிவாகி உள்ளது. மஹிந்தபுர பிரதேசத்தைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
தனது தந்தை மற்றும் மற்றுமொரு சகோதரனுடன் இணைந்து ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். இதன் போது இவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாரிய தேடுதல்
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கடற்படையின் உயிர்காப்புப் பிரிவினரும், சேருநுவர பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, காலி - ஹபராதுவ கடற்கரைக்கு சுற்றுலா சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது இவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த நிலையில், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கலுக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam