வரலாற்று சிறப்பு மிக்க கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருச்சொரூப பவனி
புதிய இணைப்பு
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கொட்டாஞ்சேனை - புனித லூசியாஸ் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூப பவனி ஆரம்பமாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
திருவிழாத் திருப்பலி ஆராதனைகள் தமிழ் - சிங்கள மொழிகளில் நடைபெற்று வருகின்றது.
திருப்பலி ஆராதனைகள் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சொரூப பவனி
மேலும், முற்பகல் 10 மணிக்கு சிங்களத்திலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
இதன்பின்னர் மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
