பிரசார வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தாத வேட்பாளர்கள்!
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 பேர் வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ள போதிலும் இதுவரை எந்தவிதமான பிரசார வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின்(IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரு கூட்டத்தை கூட நடத்தவில்லை என ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலின் போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பாரிய தொகையை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாதது பிரச்சினைக்குரிய நிலைமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதுடன் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் பத்து (10) வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri