நுவரெலியாவில் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் பலர் கைது!
பல்வேறு போதைப்பொருட்களுடன் நீண்ட வார விடுமுறைக்காக நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் பி.எஸ்.சி. சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இன்று (18) நடைபெறவிருந்த விருந்துக்கு பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு குழு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக நுவரெலியா தலைமையக காவல்துறை தலைமை ஆய்வாளர் குறிப்பிட்டார்.
கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகொட, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 18-28 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குஷ், ஹெராயின், ஐஸ், போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய் பிரிவின் உதவி
நுவரெலியா பொலிஸ் துறை மோப்ப நாய் பிரிவின் உதவியுடன், நுவரெலியாவிற்கு உள் நுழையும் அனைத்து பிரதான வீதிகளை உள்ளடக்கிய பொலிஸ் சோதனை சாலைத் தடைகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீண்ட வார இறுதி மற்றும் தீபாவளி பண்டிகை காலம் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









