வைத்தியசாலையின் 6வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சமபவத்தில் உயிரிழந்த சிறுவன், பன்வில - கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருகச என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
