கைதான 17 இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களில் 13 கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நான்கு கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் முன்னிலை படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
கடூழிய சிறை
தொடர்ந்து விசாரணைகள்இடம் பெற்று வந்த நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம்(7) மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.

விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய கடற்றொழிலாளர்களிள் இருவர் கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் அவர்களை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan