தென்னிலங்கையில் சொகுசு மாளிக்கைக்குள் சிக்கிய வெளிநாட்டவர்கள் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
அளுத்கம பகுதியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, இணையம் வழியாக பெரிய அளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட 16 சீன நாட்டினர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய சீன நாட்டவர்களிடம் இருந்த 20 ஆப்பிள் கையடக்க தொலைபேசிகள், 50 சிம் அட்டைகள், மடிக்கணினிகள் மற்றும் பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பணம் மோசடி
இந்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக வீட்டை வாடகைக்கு எடுத்தல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்து பணம் பெறுதல் மற்றும் மக்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல கணினி குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய சீன நாட்டினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த அதிகாரி சஜீவ மேதவத்தவின் அறிவுறுத்தலின் பேரில் அளுத்கம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri