லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகளில் மீட்கப்பட்டுள்ள 16 உடல்கள்
ஐ.நா.வுக்கான அகதிகள் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், திரிபோலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, உயிர்பிழைத்த 187 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
சிலருக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட நிலையில் அவை வழங்கப்பட்டு உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26,314 சட்டவிரோத அகதிகள் மீட்கப்பட்டு, லிபியா நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அத்தோடு 474 பேர் உயிரிழந்துள்ளதுடன் 689 பேரை காணவில்லை. இந்த நிலையில், லிபிய கடற்கரையில் 16 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியுடன் இணைத்து மற்றும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,