15ஆம் திகதி அரச பொது விடுமுறை : இன்று எடுக்கப்படவுள்ள தீர்மானம்
எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் அரச பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மே மாதம் முதல் வழங்கப்படும் கொடுப்பனவு
ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில், ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக காணப்படுகிறது.
இதுவரை தீர்மானம் இல்லை
இந்தநிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக மாற்றுமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு விடுமுறை தினமாக மாற்ற வேண்டுமாயின் அமைச்சரவை தீர்மானம் தேவை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த முன்னர் தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்று பிற்பகல் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026