14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞன் கைது
மாத்தளையில் வீடொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவருடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞனுக்கு உதவிய மேலும் மூன்று நபர்களை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அலவத்துகொடையில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இரவு முதல் தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நேற்றையதினம் (01) பொலிஸ் நிலையத்திற்கு தனது பாட்டியுடன் வந்த குறித்த சிறுமி, தனது 18 வயதுடைய காதலனுடன் சென்று மாத்தளை பிரதேசத்தில் இரண்டு மாதங்களாக வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில், 14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த குற்றத்திற்காக 18 வயதுடைய காதலனையும், அவருக்கு உதவிய மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரு வீடுகளுடைய உரிமையாளர்களும், மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை இன்றையதினம் (02) கண்டி நீதவானிடம் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
