முதல் மூன்று மாதங்களில் வீதி விபத்துக்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணம்
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 22ஆக காணப்படுவதுடன், சிறு காயங்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆகும். கடந்த ஆண்டில் வீதி விபத்துக்களினால் 39 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் 394 உத்தியோகத்தர்கள் சிறு மற்றும் படுகாயம் அடைந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் 38 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 44ஆக காணப்பட்டுள்ளது.
மேலும், நாள் ஒன்றுக்கு வாகன விபத்துக்களினால் உயிரிழப்போரின் சராசரி எண்ணிக்கை எட்டு என தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டு தோறும் மூவாயிரம் பேர் வரையில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாகவும், அண்மைய நாட்களாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.