கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட 14 புதிய செக் இன் கவுண்டர்கள் பரீட்சார்த்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி ஒரு மாத காலத்திற்குள் நிறுவப்பட்டுள்ளதென விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.
இது இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் முக்கிய தொழில்துறை கூட்டாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு சான்றாக இது உருவாக்கப்பட்டுள்ளதென விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளுக்கு சீரான வசதி
குளிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு சீரான விமான நிலைய செயல்பாடுகளையும், தொந்தரவு இல்லாத வசதியையும் உறுதி செய்வதே முக்கிய நோக்கமாகும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவிக்கின்றன.

பயணிகளின் தேவையின் அடிப்படையில் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் குறிப்பிடப்படுகின்றது.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan