மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி 13 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 13 நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு,புல்லுமலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா அழைப்பு விடுத்ததையடுத்து இன்று புல்லுமலை தேவாலய சந்தியில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
மக்கள் நாங்கள் சுதந்திரமாக வாழ உரிமைவேண்டும், நாங்கள் நாட்டை துண்டாடவே தனி அரசை கேட்கவில்லை, இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கின்றோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், காணாமல்போனவர்களுக்கு தீர்வு வேண்டும். பேச்சு சுதந்திரம் வேண்டும் நாங்கள் எங்கள் உரிமையை கேட்கின்றோம் எனும் சுலோகங்களை ஏந்தியவாறும்,கோஷங்களை எழுப்பியவாறும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை ஊடகங்கள் ஊடாக வெளிகொண்டு வருமாறு ஊடகவியலாள்களிடம் மகஜரை கையளித்த பின்னர் போராட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.