13ஆவது திருத்தம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு இல்லை : இராமலிங்கம் சந்திரசேகர்(Video)
13 ஆம் திருத்தம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீண்டு நிலைக்கும் தீர்வு இல்லை என்பது எமது நிலைப்பாடு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவர் இன்று (21.02.2023) நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
ரணில் நாட்டு மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டவர்
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட நபர் ரணில் விக்ரமசிங்க, மக்கள் மனதை புரிந்துக்கொள்ள முடியாத, நெஞ்சில் ஈரம் இல்லாத ஒரு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.
தேர்தலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துவிட்டார்.
நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அமைந்தால் ரணில் ராஜபக்சாக்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்க முடியாது.
தமிழ் மக்களின் இரத்தத்தை குடிக்கும் காட்டேரியாக ரணில் விக்ரமசிங்க இருந்துள்ளார்.
13 ஆம் திருத்தம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீண்டு நிலைக்கும் தீர்வு இல்லை என்பது எமது நிலைப்பாடு.” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
