13 தொடர்பில் பொது உடன்பாட்டுக்கு ”சம்பிக்க ரணவக்க”வும் தயார்!
இலங்கையில் அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தம் தொடர்பில், பொது இறுதி உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
43வது படையணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை வெளியிட்டார்.
இதனை விடுத்து, 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள 13க்கு அப்பால் செல்வது, அல்லது சமஸ்டிக்கு செல்வது என்றில்லாமல், தற்போது அரசியல் அமைப்பில் அடங்கியுள்ள 13வது அரசியலமைப்பு தொடர்பில், விருப்பத்துடனே,விருப்பமின்றியோ பொது உடன்பாட்டை எட்டவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.