பிரகீத் எக்னலிகொட மறைந்து 13 வருடங்கள் பூர்த்தி! சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள மனைவி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பிரார்த்தனை செய்துள்ளார்.
கடந்த 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் நீதிக்கோரி இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே தனது கணவரின் காணாமல் போதல் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தக் கோரி பிரகீத் எக்னெ லிகொடவின் மனைவி சந்தியா எக்னெலி கொட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடி தம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.