பாக்கு நீரிணையை நீந்தி சாதனை புரிந்த 13 வயது திருகோணமலை சிறுவன்
திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்திக்கடந்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
வாழ்த்திய துணைத் தூதுவர்
குறித்த சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்துள்ளார்.
இவர் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து
சிறுவன் தன்வந்த்திற்கு அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குறித்த சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார்.
இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.







இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
