2021 இல் 120,000 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் (Sri lanka Bureau of Foreign Employment) பதிவு செய்த, ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் 2021 ஆம் ஆண்டில் வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் நிலைமையிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்றுள்ளனர். கத்தாருக்கு 30 ஆயிரம் பேரும், சவுதி அரேபியாவுக்கு 27 ஆயிரம் பேரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு 20 ஆயிரம் பேரும் சென்றுள்ளனர்.
இதனை தவிர தென் கொரியாவுக்கு ஆயிரத்து 400 பேரும், சிங்கப்பூருக்கு ஆயிரத்து 100 பேரும், சைப்ரஸ் நாட்டுக்கு ஆயிரத்து 600 பேரும், ஜப்பானுக்கு 800 பேரும் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
