ஜோர்தான் துறைமுகத்தில் விபத்து: 12 பேர் பலி-உலக செய்திகள்
ஜோர்தான் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் மஞ்சள் நிற வாயு கசிந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்தானின் அகுவாபா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் கிரேன் ஒன்றின் உதவியுடன் பெரிய அளவிலான உருளை ஒன்று இறக்கப்பட்டுள்ளது.
இதன்போது திடீரென அந்த உருளை கிரேனில் இருந்து நழுவி கப்பலில் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில், மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியில் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து, துறைமுக பணியாளர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர். துறைமுகத்திற்கு அருகே உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குடியிருப்பில் வசித்தவர்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்,
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri