அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 110ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு
கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 110ஆவது ஜனன தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் (30.08.2023) இந்த அனுஷ்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஜனன தின நிகழ்வு
கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட கட்சி பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் இதன்போது கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், கொட்டகலையில் உள்ள சி.எல்.எப் வளாகம் உட்பட ஏனைய பகுதிகளிலும் ஜனன தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
சௌமியமூர்த்தி தொண்டமான்
சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.
இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இவர், இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக
பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டுள்ளார் மற்றும் முக்கிய பல
அமைச்சுகளை வகித்துள்ளார்.








தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 5 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
