எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் கழிவறையை பயன்படுத்தியதற்காக பணம் அறவிட்ட நபர்
ஹோமாகம பகுதியில், பொதுமகன் ஒருவர் கழிவறையை பயன்படுத்தியதற்காக 100 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபரிடமே இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளது.
எரிபொருள் வரிசையில் பல நாட்கள் வரிசையில் காத்திருந்த நபர், கழிவறைக்குச் செல்வதற்காக அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று கேட்டுள்ளார்.

நூறு ரூபா பணம் வசூலித்த கடை உரிமையாளர்
அந்த கடை உரிமையாளர் கடையின் பின்னால் உள்ள கழிவறையை காட்டி அங்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
கழிவறைக்குச் சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த நபர் கடை உரிமையாளரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக கடை உரிமையாளர் அந்த நபரிடம், கழிவறையைப் பயன்படுத்தியதற்காக 100 ரூபாய் பணம் வசூலித்துள்ளார்.
பின்னர் கடை உரிமையாளரிடம் 100 ரூபாயை கொடுத்துவிட்டு அந்த நபர் கடையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam