ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் 10 மணித்தியாலங்கள் விசாரணை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றிய சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய விசேட பொலிஸ் குழுக்கள் இரண்டு நேற்று ஹட்டன் - டயகம பிரதேசத்தில் விசாரணை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாகவும் சிறுமியின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மட்டும் 10 மணித்தியாலங்கள் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ளுமாறு நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam