<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-23T15:05:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் மனித உடலால் உணரப்படும் வெப்பம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-districts-to-remain-extremely-hot-tomorrow-1787495865"></link>
            <id>https://tamilwin.com/article/some-districts-to-remain-extremely-hot-tomorrow-1787495865</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இன்றைய தினம் (23.08.2026) வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p> 

இன்றைய தினம் (23.08.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளைய தினம் (24.08.2026) பி.ப 4 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை அறிவித்தல்</h2><p> </p><p>

இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccea5eaf-8411-4068-a61d-6cbf76924809/26-6a8b0a827a770.webp' /></p><p> </p><p>

அப்பகுதிகளின் சில இடங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அல்லது வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இதன் காரணமாகப் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், வெப்பமான வானிலை நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:58:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக முதலீட்டாளர்களை குறிவைக்கும் இலங்கை - துறைமுக நகரில் குவியும் பில்லியன் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-reforms-investments-amounting-us-2-1-billion-1787496130"></link>
            <id>https://tamilwin.com/article/tax-reforms-investments-amounting-us-2-1-billion-1787496130</id>
            <summary type="text">புதிய வரி சீர்திருத்தங்களின் பின்னணியில், இதுவரை கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய வரி சீர்திருத்தங்களின் பின்னணியில், இதுவரை கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை பெற்றுக்கொள்வதை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;முக்கிய முதலீடு</h2><p>

இந்த இலக்கை அடைவதற்காக தற்போது இரண்டு பாரிய வீடமைப்புத் திட்டங்கள், நவீன ஹோட்டல் ஒன்றின் திட்டம் மற்றும் மாநாட்டு மையம் ஒன்றை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f63fc0f-a651-44ef-b337-ba24231b023e/26-6a8b09760c105.webp' /></p><p>
தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில், துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பல முக்கிய முதலீடுகளும் உள்ளடங்குவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;புதிய முறை</h2><p>
</p><p>
துறைமுக நகரில் வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை சர்வதேச தரங்களுக்கு ஏற்பவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்படி, முதன்மை முதலீடுகளுக்கு 15 முதல் 23 ஆண்டுகள் வரையிலான வரிச் சலுகைகளும், இரண்டாம் நிலை முதலீடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு குறைந்த வரி விகிதமும் வழங்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b308c3b-f389-455f-8870-794b8a77cf59/26-6a8b0976be96f.webp' /></p><p>

இந்த முதலீடுகள் அனைத்தும் இலங்கை முதலீட்டு சபை (BOI) ஊடாக கிடைக்கும் முதலீடுகளுக்கு மேலதிகமானவை எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரிச் சலுகைகள் மட்டுமன்றி, நிலைத்தன்மை, நம்பிக்கை, தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனவும், தற்போதைய அரசாங்கம் இத்தகைய முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/preventing-prison-conflicts-protecting-prisoners-1787492450"></link>
            <id>https://tamilwin.com/article/preventing-prison-conflicts-protecting-prisoners-1787492450</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் ஆகஸ்ட் 18ஆம் திகதி மஹர சிறைச்சாலை உள்ளிட்ட மேலும் சில சிறைச்சாலைகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
</p><p>

பாதுகாப்பு, நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகம் மற்றும் பல சிறைச்சாலை ஆணையாளர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.</p><h2>கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயம்</h2><p>
</p><p>

2018ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையும் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளும் ஆணைக்குழுவின் தலைவரால் இதன்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc331086-0355-4a4f-980d-d2c263b4f5da/26-6a8b0486a1016.webp' /></p><p>

இதன்போது 2021 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிக்கும்போது, குறித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழு ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளதோடு, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>

அத்துடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் போதுமான சுகாதார பாதுகாப்பு மற்றும் நீர் வசதிகள் இன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><h2>புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கை</h2><p>


போகம்பரை மற்றும் மஹமோதர ஆகிய சிறைச்சாலைகளின் புனர்நிர்மாணப் பணிகள், காலி, மாத்தறை மற்றும் வாரியபொல சிறைச்சாலைகளை பரந்த அளவிலான இடங்களுக்கு மாற்றுவது மற்றும் களுத்துறை மற்றும் பூசா சிறைச்சாலைகளில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda59b08-0498-48ef-8310-57d474adab03/26-6a8b04875931a.webp' /></p><p>

சிறைச்சாலை நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டங்களை திருத்துவதற்கும், வீட்டுக் காவலில் வைப்பதற்காக தடுப்பு காவலுக்கான மாற்று வசதிகளை வழங்குவதற்குத் தகுந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:34:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபர் - உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155</id>
            <summary type="text">கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

சந்தேகநபர் பெரஹெராவிற்காக பணியில் இருந்த பல பொலிஸ் அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியதோடு, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குழப்பமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc3a9c54-f8f0-4f2d-b04c-480aeb3da031/26-6a8b0187b64a8.webp' /></p><p>தலதா மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை அந்த நபர் வாய்மொழியாகத் திட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p>
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும் அவர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-9-magnitude-earthquake-eastern-japan-37-injured-1787493517"></link>
            <id>https://tamilwin.com/article/5-9-magnitude-earthquake-eastern-japan-37-injured-1787493517</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானில் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பிராந்தியங்களை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானில் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பிராந்தியங்களை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இப்பாராகி பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 70
கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d66d75e-20e8-4261-b383-58619f44bc7a/26-6a8afda764d77.webp' /></p><p>

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான
ரயில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர்
அவை வழமைக்கு திரும்பின.</p><p>

நிலநடுக்க அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும்,
மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T14:03:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர குற்றம் சாட்டப்பட்டுள்ள மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை - உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679"></link>
            <id>https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. </p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு அங்கு வந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

மீண்டும் விசாரணை</b></h2><p>தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e075c43e-aec1-47f1-b811-efd9a182de07/26-6a8afc6b4e102.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.<br><br><b><i>you may like this..<br><br><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HLy_ny-xG4I" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T13:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் வரிப்போர்: அமெரிக்காவுக்கு கனடாவின் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-canada-impose-1787490035"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-canada-impose-1787490035</id>
            <summary type="text">அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும்
மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும்
மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம்
திகதி முதல் பதிலடி வரிகளை விதிக்கவுள்ளதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி
அறிவித்துள்ளார்.</p><p>

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான
பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து, அதற்குப்
பதிலடி கொடுக்கும் வகையிலேயே கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.</p><h2>தீவிர பேச்சுவார்த்தை</h2><p>

ஒட்டாவாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி,
</p><p>கனடாவின் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப்
பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் வரிகளுக்கு நிகரான வரியை கனடாவும் விதிக்கும்
எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23fa52e-e7be-4460-9132-17246423d050/26-6a8af46f6e145.webp' /></p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான பல நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த
நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா
அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இல்லாமல், அதன் அனைத்துச் சலுகைகளையும் அனுபவிக்க
விரும்புவதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் இந்த கடுமையான வரி விதிப்பினால் கனடாவில் பொருட்களின் விலைகள்
மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என அஞ்சப்படும் அதேவேளை, கனடா
பிரதமர் ஏனைய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை
பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651"></link>
            <id>https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651</id>
            <summary type="text">ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2> ஈரானிய எண்ணெய் கப்பல்கள்</h2><p>

காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே இந்தக் கப்பல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்துள்ள தடைகளுக்கு உட்பட்ட ஈரானின் ‘Dark Fleet’ உடன் தொடர்புடைய இந்தக் கப்பல்கள், அமெரிக்காவின் சர்வதேச தடைகளை மீறி எண்ணெயை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7187a046-e3c8-4bd5-ad6c-ed61cdc0b34f/26-6a8aa92b6a806.webp' /></p><p>
</p><p>
குறித்த பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் டொக்டர் ஜனித ருவன் கொடிதுவக்கு, குறித்த கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இந்த எண்ணெய் கப்பல்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா தடை</h2><p>

“அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட கப்பல்கள் எவை என்பதை அடையாளம் காண எங்களிடம் நேரடி வழிமுறை இல்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் பட்டியல் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கிறது.</p><p>
</p><p>
 அமெரிக்கத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தகவல் வழங்கினால், அந்தக் கப்பல்கள் தொடர்பில் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b355a6c0-b124-406b-81a1-8a24c28625dd/26-6a8aa92ab7573.webp' /></p><p>

இதற்கிடையில், இலங்கை கடற்படை இந்தக் கப்பல்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை இவ்வாறான கப்பல்களை இடைமறிக்க முயற்சித்தால், இலங்கையின் கடற்கரைக்கு அருகில் மோதல் நிலைமை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்ற பாரிய கடல் மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>காலி கடற்பரப்பு</h2><p>
</p><p>
நிபுணர்களின் கருத்துப்படி, மலேசியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தக் கப்பல்கள், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் அமெரிக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் தங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f47919-9636-4f97-8951-3426c3034cb5/26-6a8aa929e2f78.webp' /></p><p>
</p><p>
‘MT Amber’ உள்ளிட்ட சில கப்பல்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தே காலி கடற்பரப்புக்கு அருகில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தீவிரமான நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அல்லது துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கருத்துகளைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/h5n1-bird-flu-infection-in-mammal-in-australia-1787486361"></link>
            <id>https://tamilwin.com/article/h5n1-bird-flu-infection-in-mammal-in-australia-1787486361</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1)
பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக
உறுதிப்படுத்தப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1)
பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட் கடலோரப் பகுதியில் இறந்து கிடந்த 'நீண்ட
மூக்கு கடல்நாய்' ஒன்றிலேயே இத்தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>ஆபத்து மிகக் குறைவு</h2><p>
</p><p>காட்டுப் பறவைகள் மூலம் இந்த வைரஸ் கடல்நாய்க்கு பரவியிருக்கலாம் எனச்
சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டின் விவசாயத்துறை அல்லது பண்ணை
விலங்குகளுக்கு இத்தொற்று இதுவரை பரவவில்லை என அவுஸ்திரேலிய மத்திய அரசு
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739e027c-5127-4a74-9cb5-f0fb3c2fbecc/26-6a8af1d16cb47.webp' /></p><p>
</p><p>
வனவிலங்குகளிடையே இந்நோய் பரவுவதைத் தடுப்பது கடினம் எனக் குறிப்பிட்டுள்ள
அதிகாரிகள், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சுகாதார ஆபத்து மிகக் குறைவாகவே
உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வசமாக சிக்கிய மூவர் - 43 பவுண் தங்க நகைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-for-burglary-in-jaffna-1787489689"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-for-burglary-in-jaffna-1787489689</id>
            <summary type="text">யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச்
சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர்
சாவக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச்
சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர்
சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண்
தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின்
வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த
விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்
ஒருவர் நேற்று (22.08.2026) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19ee61b7-153f-4c55-8f72-0ebab7258950/26-6a8aefde48d0e.webp' /></p><p>
</p><p>அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கோப்பாய்
பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்
தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><p>
மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு
வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன.</p><h2>சாவகச்சேரி பொலிஸாரால் கைது</h2><p>
திருட்டுச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை
பகுதியைச் சேர்ந்த பெண்ணும் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33006c3a-12e2-4494-b8b5-f6945c83c07c/26-6a8aefdf0adbc.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (23.08.2026) சாவகச்சேரி நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனவாதம் - மதவாதம் பேசி அடுத்த தேர்தலுக்கு தயாராகும் சிலர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-musilm-girls-dress-issue-1787489177"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-musilm-girls-dress-issue-1787489177</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியர்களின் ஆடை தொடர்பான சர்ச்சையை இனவாதமாகப் பார்க்க வேண்டாம் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவரான சிதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியர்களின் ஆடை தொடர்பான சர்ச்சையை இனவாதமாகப் பார்க்க வேண்டாம் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவரான சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள், உண்மைத்தன்மையை உணர்ந்து அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்க வேண்டும்.

இன ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்படக் கூடாது. </p><p>

தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிலவும் ஒற்றுமையைப் பேண வேண்டியதன் 

இனவாதம் மற்றும் மதவாதம் போன்ற கருத்துக்களைப் பரப்பி, வரவிருக்கும் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் லாபம் பெற சிலர் முயற்சிக்கின்றனர்.
</p><p>

மேலும், கல்முனை வைத்தியசாலை விவகாரத்தைப் பயன்படுத்திச் சிலர் வேண்டுமென்றே இனவாதத்தைத் தூண்டி, தங்களின் சுயநலத்திற்காக மக்களைப் பிரிக்கப் பார்க்கின்றனர் என குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KIv74GUrG7A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[450 கோப்புகள் - காசோலைகள் எங்கே..! மகிந்தவை மறந்து போன என்பிபி அரசாங்கம் - அரசியல் மேடையில் அதிரடி காட்டிய ஜோன்ஸ்டன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-criticizes-government-promises-1787484453"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-criticizes-government-promises-1787484453</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிக்கையையும், வழங்கிய வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதாக முன்னாள் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிக்கையையும், வழங்கிய வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சக் காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் 450 கோப்புகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துகள் தற்போது மறக்கப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f075ffb-5e0d-4e2b-aefc-63b0c0839607/26-6a8ae0fb11ded.webp' /></p><p>

“மகிந்த ராஜபக்ச பெற்றதாகக் கூறப்பட்ட காசோலைகளின் இலக்கங்கள் தெரியும் என்றும், தொகைகள் தெரியும் என்றும், ஹோட்டல்கள் குறித்தும் தெரியும் என்றும் கூறினார்கள். 

இப்போது இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. அவற்றுக்கு என்ன நடந்தது? எதுவுமே இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஒரே பேனா கையெழுத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதாகக் கூறிய போதிலும், தற்போது அரிசியின் விலை சுமார் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h2>விவசாயிகளின் வாக்குகள்</h2><p>
</p><p>
மேலும், நெல் உற்பத்தி தொடர்பில் பெருமையாகப் பேசிய அரசாங்கம், தற்போது பல இலட்சம் தொன் அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
</p><p>
ரஜரட்ட மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அவர்களின் நெல் அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனவும், ஒரு கிலோ நெல்லை சுமார் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd071120-856b-47d3-93b2-ccfc3d73acc8/26-6a8ae0fbde270.webp' /></p><p>

விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை ‘சட்டவிரோத மதுபானம் விற்பவர்கள்’ எனக் கூறி அவமதிப்பதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p>
நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய முன்னாள் அமைச்சர், அவர்கள் மக்களின் அறிவாற்றலை அவமதிக்கும் வகையில் செயற்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
</p><p>
அத்துடன், அரசாங்கம் கூறிய ‘மலர் செடிகளுக்கு’ பதிலாக நாடாளுமன்றத்திற்கு ‘மிதியடித் துண்டுகள் போன்றவர்கள்’ வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களின் இடமாற்றம்! வெளிவந்துள்ள புதிய சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-staffs-in-sri-lanka-1787482827"></link>
            <id>https://tamilwin.com/article/government-staffs-in-sri-lanka-1787482827</id>
            <summary type="text">முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதற்கமைய, குறித்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரச நிர்வாக சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

விருப்பமான சேவை இடத்தில் 05 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுவர் என்பதுடன், வேறு சேவை இடத்தில் 02 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கும் இடமாற்றத்திற்குத் தகுதி பெறுகின்றனர்.</p><h2>விண்ணப்பம் சமர்ப்பிப்பு</h2><p> 

2027 வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி முறைமை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அதிகாரிகளின் அடிப்படை விபரங்கள் மற்றும் முந்தைய சேவை இடங்கள் பற்றிய விபரங்களும் சரியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். 

சுற்றறிக்கையின்படி, 2026 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடைக்கால/வழக்கத்திற்கு மாறான இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fe1612-ae19-4c12-b4e8-d7e32829a432/26-6a8adcd088c72.webp' /></p><h2>இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடு</h2><p> </p><p>

வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடு அக்கட்டளை அதிகாரிக்குக் கிடைத்த திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, 2027ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வருடாந்த இடமாற்ற முறைமையின் கீழ், குறித்த அதிகாரிகளின் சேவைக்காலம், சேவை இடம் மற்றும் இடமாற்றக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்டு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-organizer-of-slpp-party-in-batticaloa-1787481547"></link>
            <id>https://tamilwin.com/article/new-organizer-of-slpp-party-in-batticaloa-1787481547</id>
            <summary type="text"> ​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய...</summary>
            <content type="html"><![CDATA[<p> ​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நியமனத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று இன்று (23) நடைபெற்றுள்ளது.</p><h2>பட்டதாரிகளுக்கான&nbsp;தொழில் வாய்ப்புகள்</h2><p>
</p><p>
இதன்போது புதிய அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு - கிரான் பாலம் மற்றும் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. </p><p>

மழைக்காலங்களில் பொதுமக்கள் இதனால் சந்திக்கும் இன்னல்களையும் பாதிப்புகளையும் தவிர்க்கும் வகையில், உறுதியான மற்றும் நிலையான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d1854a-8aec-45f5-b76b-bb43e56ae97d/26-6a8ad6470b48d.webp' /></p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே எனது முதன்மை இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை நினைவுகூர்ந்த ஆதரவாளர்கள், புதிய அமைப்பாளரின் நியமனத்தை வரவேற்பதாக இதன்போது தெரிவித்துள்ளார்.

​</p><p>மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் கண்டு, இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய அமைப்பாளருடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக கட்சியின் மாவட்ட ஆலோசகர் ராஜன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹ்ரான் செல்லும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி : பிராந்திய அமைதி தொடர்பில் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-army-chief-to-visit-tehran-monday-1787483515"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-army-chief-to-visit-tehran-monday-1787483515</id>
            <summary type="text">பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் திங்கட்கிழமை ஈரான்
தலைநகர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு
தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் திங்கட்கிழமை ஈரான்
தலைநகர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு
தெரிவித்துள்ளது.</p><p>

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் பாகிஸ்தானின்
முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்த விஜயம் அமைவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின்
பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>புதிய பொருளாதாரத் தடை</h2><p>
</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை
ஏற்படுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b3dbc1-6b40-4101-a1ae-586303a8f6f4/26-6a8ad6839a775.webp' /></p><p>
</p><p>
இதன் கீழ், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கை, ஹூதி
விவகாரம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஈரான்
தலைவர்களுடன் இராணுவத் தளபதி அசிம் முனீர் பேச்சுவார்த்தை நடத்துவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடொன்றில் திடீர் சோதனை! பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்ளிட்ட மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officers-injuring-arrested-three-people-1787462416"></link>
            <id>https://tamilwin.com/article/police-officers-injuring-arrested-three-people-1787462416</id>
            <summary type="text">கொழும்பு , ஹங்வெல்ல, பன்சல வீதி பகுதியில் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளை தடுத்தமை மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு , ஹங்வெல்ல, பன்சல வீதி பகுதியில் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளை தடுத்தமை மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

ஹங்வெல்ல, பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, சட்டவிரோத மதுபானக் கும்பலை சோதனை செய்வதற்காக குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றுள்ளது.</p><h2>அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு</h2><p> 

இதன்போது அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fef4139-329c-404f-ac9f-bf53d89ca972/26-6a8a89358520c.webp' /></p><p>
</p><p>
இதன்போது அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், அரசாங்க அதிகாரியின் உத்தரவுகளை மீறுதல் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் காயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், பொலிஸ் அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணைகள் </h2><p>

அதன்படி, தனக்கும் சிகிச்சை தேவை என்று கூறியுள்ளதால், சந்தேகநபர் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p>

இந்த நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமது உறவுகளுக்கு நீதி கோரியே சர்வதேசத்தை நாடியுள்ளோம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sought-international-justice-for-missing-relatives-1787479676"></link>
            <id>https://tamilwin.com/article/sought-international-justice-for-missing-relatives-1787479676</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களை தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களை தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி
தெரிவித்துள்ளார்.
</p><p>காரைதீவு நூலக கேட்போர் கூடத்தில் இன்று (23.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சர்வதேச
மாநாடு</h2><p>
</p><p>

இதன்போது எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள்
சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மாநாடு தொடர்பிலான
தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e23b65-733d-431f-aadf-68b54dfc17b7/26-6a8ac8efdc9b6.webp' /></p><p>அத்தோடு குறித்த நிகழ்விற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புகளை
எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p>மேலும் வருகை தந்தவர்கள் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு
முன்வந்துள்ளதுடன் குறித்த மாநாட்டிற்கு தங்கள் ஆதரவுகளை வழங்குவதாகவும்
உறுதியளித்துள்ளனர்.</p><h2>&nbsp;உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை</h2><p>
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட
சங்கத்தின் தலைவி, எதிர்வரும் 30ஆம் திகதி நடக்கவிருக்கும் அந்த சர்வதேச மாநாடானது எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையும் நீதியும் வேண்டி நடைபெறவுள்ளது.
</p><p>
நாங்கள் பலமுறை பல ஜனாதிபதிகளிடம் மாறி மாறி எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கேட்டும் எமக்கு எந்தவித தீர்வும் கிடைக்காத பட்சத்திலேயே நாங்கள்
சர்வதேசத்தை நோக்கி சென்றிருக்கின்றோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb29e298-3fae-4041-9b05-1ea43c0d09e0/26-6a8ac8f0b5069.webp' /></p><p>எங்களது உறவுகளின் இந்த போராட்டத்தை இலங்கை அரசாங்கம் உள்நாட்டு
பொறிமுறைக்குள்&nbsp; தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். </p><p>

தள்ளுவதற்கு
பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு
இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால் தான் நாங்கள் நமது
சர்வதேச பொறிமுறையை நோக்கி எங்களது போராட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

குறித்த கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன், உபதவிசாளர்
கி.ஜெயசிறில், கல்முனை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ச.சந்திரசேகரம், சிவில்
சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீவன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கப்
பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T10:52:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் ஏற்பட்ட பரபரப்பு.. சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214"></link>
            <id>https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துபாயில் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>

துபாயில் கைது செய்யப்பட்ட ‘வானாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கைக்குண்டை வீசும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6347ba3b-6e02-4e7a-993f-9eef66537a1c/26-6a8abbf2e19cc.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் இவ்வாறான கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் புதிய போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீதும் இதேபோன்ற கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு கைக்குண்டு வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<br><br><b><i><a href="https://youtu.be/6eC2li0RwTQ" target="_blank">காணொளிக்கு இங்கே அழுத்தவும்..</a></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T10:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் நடுவீதியில் விடுக்கப்பட்ட மிரட்டல்! பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-threat-in-street-in-colombo-private-bus-1787478160"></link>
            <id>https://tamilwin.com/article/death-threat-in-street-in-colombo-private-bus-1787478160</id>
            <summary type="text">கொழும்பு - குருந்துவத்தை, லிப்டன் சுற்றுச்சாலைக்கு அருகே தனியார் பேருந்தின் நடத்துனரை&amp;nbsp;கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருந்துவத்தை, லிப்டன் சுற்றுச்சாலைக்கு அருகே தனியார் பேருந்தின் நடத்துனரை&nbsp;கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவி மற்றும் ஒரு மாலுமி ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>வெளியான காரணம்</h2><p> </p><p>

தனியார் பேருந்தின் பாதையை காரில் வந்த ஒரு கும்பல் மறித்து, நடத்துனரின் தலையில் கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டி காரில் தப்பிச்செல்வதாக 119 மையத்திற்கு வந்த அழைப்பினை தொடர்ந்து, கொழும்பு தெற்கு பிரிவு அதிகாரிகள், பொரள்ளை பொது மயானத்திற்கு அருகே சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530ecd86-120f-4f92-a465-39cd0b230906/26-6a8acd451ad25.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர்கள் பல்கலைக்கழக மாணவியுடன் பயணித்த கார் மற்றும் இரண்டு கத்திகள், இரண்டு அடி நீளமுள்ள ஒரு சங்கிலி ஆகியவை பொலிஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. </p><p>இதயைடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பயணித்த காரின் பாதையை பேருந்து மறித்தமையினால் மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T10:37:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-borella-1787480360"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-borella-1787480360</id>
            <summary type="text">கொழும்பு, பொரளை பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) காலை வேளையில் பதிவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொரளை பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) காலை வேளையில் பதிவாகியுள்ளது.</p><h2>கைக்குண்டு பொலிஸாரால் மீட்பு</h2><p> </p><p>

பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டே இதன்போது பொரளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a70bfdf2-27ba-4d39-ab56-e133f72cda35/26-6a8acc462fee5.webp' /></p><p>
</p><p>
இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முச்சக்கரவண்டி சேவைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-plans-age-of-40-three-wheeler-drivers-1787478719"></link>
            <id>https://tamilwin.com/article/govt-plans-age-of-40-three-wheeler-drivers-1787478719</id>
            <summary type="text">இலங்கையில் முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

தொழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.</p><p>

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;கல்வியில் மாற்றங்கள்</h2><p> </p><p>

பாடசாலை படிப்பை முடித்தவுடன் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழையக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அவர்களை கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88e3438-b00a-440a-a56e-c42a45a6b710/26-6a8ac4ec3cde4.webp' /></p><p>
</p><p>
இதன்படி, முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழைவதற்கான வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இளைஞர்கள் பாடசாலை படிப்பை முடித்தவுடன் உடனடியாக முச்சக்கர வாகனத்தை வீதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும், அதனால் கல்வியில் மாற்றங்களை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதி – அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-provide-hostel16-000-uni-students-1787471026"></link>
            <id>https://tamilwin.com/article/government-provide-hostel16-000-uni-students-1787471026</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை
உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம்
என பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை
உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம்
என பிரதமர் ஹரிணி
அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (22.08.2026)
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதிக்காக அடிக்கல் நாட்டும்
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சுதந்திரமான கல்விச் சூழல்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல தசாப்தங்களின் பின்னர் 2026 ஆம் ஆண்டிலேயே அரச பல்கலைக்கழக மாணவர்களின்
நலன்புரித் துறையினை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்ய எம்மால் முடிந்தது.
</p><p>இதன் மூலம் 55 விடுதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை நாம் ஆரம்பிக்க
எதிர்பார்க்கின்றோம்.

இந்தத்திட்டத்தின் ஆரம்பம் வவுனியா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவது குறித்து
நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9156da79-6993-4088-b649-5ae0e0b74a5c/26-6a8abb2cf0284.webp' /></p><p>அதுமட்டுமன்றி, மேலும் 03 விடுதிகள் இந்தத்திட்டத்தின்
மூலம் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க இருக்கின்றன. அதனூடாக இந்தப்
பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எதிர்நோக்கிவரும் விடுதிப் பற்றாக்குறை
பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம்
எதிர்பார்க்கின்றோம்.
</p><p>
பல்கலைக்கழகங்களுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும் போது,
புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு வெளியில்
அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றோம்.
</p><p>
அதற்கமைய ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே இந்த
55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முன்னுரிமையளித்துள்ளோம்.</p><h2>விடுதி வழங்கும் திட்டம்</h2><p>
</p><p>இந்தத்திட்டத்தினூடாக இலங்கையின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பிலுள்ள
சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க முடியும் என நாம்
எதிர்பார்க்கின்றோம்.</p><p>

இந்த 55 விடுதிகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தினூடாக, சபரகமுவா
பல்கலைக்கழகத்திற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் தலா 7 விடுதித்
திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9345683a-93be-43fe-8d3d-d317f3c1e607/26-6a8abb2dc1e56.webp' /></p><p>அதேபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு
6 விடுதித் திட்டங்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 5 திட்டங்களும், ஊவா
வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு 6 திட்டங்களும் பெற்றுக்கொடுக்க நாம்
திட்டமிட்டிருக்கின்றோம்.
</p><p>
அதேபோல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் வயம்ப பல்கலைக்கழகத்திற்கும்
தலா 4 திட்டங்கள் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. </p><p>ருஹுணு பல்கலைக்கழகத்திற்கு
4 திட்டங்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2 திட்டங்களும் கிடைக்க
இருக்கின்றன. இறுதியாக, மொறட்டுவை, திருகோணமலை மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி
ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு தலா 2 விடுதித் திட்டங்கள் வீதம் இந்தத்திட்டத்தின்
மூலம் நாம் ஒதுக்கியுள்ளோம்.</p><h2>எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடம்</h2><p>

அத்துடன், இந்த விடுதியை நிர்மாணிக்கும் திட்டமானது மாணவர்களுக்கு உரிய
நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்
நிறைவுசெய்யப்பட வேண்டும். </p><p>அதேபோன்று, உரிய முறையில் அந்த வளங்களைப்
பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொண்டு அடுத்த தலைமுறையிடம்
கையளிக்கும் பொறுப்பையும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67cbc001-44f3-455b-bcec-413eea936955/26-6a8abb2e8eedd.webp' /></p><p>பல்கலைக்கழகங்கள் என்பவை நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடங்கள்
என்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தரமான கற்றல் செயற்பாடுகள், முழுமையான
உட்கட்டமைப்பு வசதிகளைப் போன்றே சரியான அரசியல் மற்றும் கலாச்சார
வாழ்க்கையையும் வழங்க வேண்டியுள்ளது. </p><p>அதனாலேயே பல்கலைக்கழகங்களுக்குள்
சுதந்திரமான கல்விக் கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர்
அரசாங்கம் என்ற வகையில் இந்த முதலீட்டை செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.ஷ</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார தொடருந்து திட்டம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-trains-to-start-next-year-1787474652"></link>
            <id>https://tamilwin.com/article/electric-trains-to-start-next-year-1787474652</id>
            <summary type="text">கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மாகாணசபைகள் மற்றும் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். </p><p>

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்தின் நோக்கம்</h2><p>

மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்திற்கு தேவையான ஆரம்பத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டன.

இந்த சேவையின் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197b2eb2-c89e-44bd-920e-4b10bd303625/26-6a8ab9b3eea5e.webp' /></p><p>
</p><p>
அதன்படி, பெலியட்டாவிலிருந்து 'ருஹுனு குமாரி' தொடருந்து மூலம் வரும் பயணிகள், பானந்துறையில் இறங்கி மின்சார தொடருந்து மூலம் கொழும்பை சென்றடையும் வாய்ப்பைப் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைப்பில் தாமதமான பல அபிவிருத்தி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:13:41+00:00</updated>
        </entry>
    </feed>
