<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-07T20:34:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கலவரங்களால் நடுங்கும் அரசியல்வாதிகள்! அடுத்தடுத்து காத்திருக்கும் காட்சிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிலுவையில் உள்ள வழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><p>

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது மற்றும் நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகள் சிறைச்சாலைச் சூழலில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
</p><p>
ஒகஸ்ட் 2, 2026 அன்று அனைத்து சிறைச்சாலைகளிலும் உடனடிச் சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டது. 

மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
 இது கைதிகள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்

 சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் வெளியில் இருக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள், சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை சிறைச்சாலைகளில் அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளன.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJYEZdz4PfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:06:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் மாற்று எரிபொருள்- வாகன விற்பனை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282"></link>
            <id>https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282</id>
            <summary type="text">இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>

இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் 40.59% மாற்று எரிபொருள் வாகனங்களாக பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p><h2>E20 பெட்ரோல் அறிமுகம்</h2><p>
இது பெட்ரோல் வாகனங்களின் விற்பனைப் பங்கான 41.68 சதவீதத்திற்கு மிகவும்
நெருக்கமான அளவாகும்.

முந்தைய E10 பெட்ரோலுக்குப் பதிலாக E20 பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள
நிலையில், பழைய ரக வாகனங்களின் எஞ்சின் செயற்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம்
பாதிக்கப்படுவதாகப் பயனாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f854f0-6547-41e1-b5cc-bc58594c36ae/26-6a7618da5221f.webp' /></p><p>இதன் காரணமாகப் புதிய பெட்ரோல் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்கும் நுகர்வோர்,
மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
</p><p>
இருப்பினும், E20 பெட்ரோல் தொடர்பாகப் பரவும் தவறான தகவல்களே இந்த
அச்சத்திற்குக் காரணம் என்றும், இது தொடர்பில் வாகன உற்பத்தியாளர்களும்
விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும் என்றும் வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:43:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியுரிமையைக் கட்டுப்படுத்த ட்ரம்பின் புதிய உத்தரவு..! மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-issues-new-order-restrict-citizenship-1786117054"></link>
            <id>https://tamilwin.com/article/trump-issues-new-order-restrict-citizenship-1786117054</id>
            <summary type="text">அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் &#039;பிறப்புரிமை
அடிப்படையிலான குடியுரிமையை கட்டுப்படுத்தும்
வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் 'பிறப்புரிமை
அடிப்படையிலான குடியுரிமையை கட்டுப்படுத்தும்
வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 புதிய நிறைவேற்று
உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
முன்னதாக இத்தகைய முயற்சியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த
போதிலும், தற்போது வரையறுக்கப்பட்ட சில புதிய விதிகளுடன் இந்த உத்தரவுகளை அவர்
பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>குடியுரிமை&nbsp;கட்டுப்பாடு</h2><p>
</p><p>
இதன்படி, வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், குறிப்பிட்ட அமைப்புகளுடன்
தொடர்புடையவர்கள் மற்றும் "எதிரி நாட்டவர்கள்" (Alien Enemy) என
வகைப்படுத்தப்படுபவர்களின் குழந்தைகளுக்குத் தானியங்கி முறையிலான அமெரிக்கக்
குடியுரிமை மறுக்கப்படும்.</p><p>

மேலும், போலி ஆவணங்கள் மூலம் குடியுரிமை பெற முயன்ற பெற்றோரின்
குழந்தைகளுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f5722c1-6eef-4970-b6b9-0641394cca80/26-6a76015b88f8f.webp' /></p><p>

அத்துடன், பிரசவத்திற்காகவே சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தந்து
குழந்தையைப் பெற்றெடுக்கும் "பிறப்பு சுற்றுலா" (Birth Tourism) முறையைத்
தடுக்கும் வகையிலும் இரண்டாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகளின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து மீண்டும்
சர்ச்சைகள் எழுந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறை தகர்பின் பின்னணியில் பிரான்சில் தீட்டப்பட்ட சதி! திடுக்கிடும் இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991</id>
            <summary type="text">அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்கள் மற்றும் சிறை உடைப்பு முயற்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
சிறைச்சாலைகளில் நடக்கும் இந்தக் கலவரங்கள் தற்செயலானவை அல்ல; இவை வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக பிரான்சில் மறைந்திருக்கும் குடு சலிது (Kudu Salidu) என்பவரால் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உறவினருடன் இணைந்து திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இலங்கையிலிருந்து தப்பியோடிய இவர், பிரான்சில் இருந்தபடியே இக்கலவரங்களை இயக்கி வருவதாகவும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இந்தச் சூழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
</p><p>
 சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர், அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்தக் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்தச் சூழலைச் சீர்குலைவு முயற்சிகளாகக் குறிப்பிடுகிறார். </p><p>

 இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YuCqi6-ulDM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T18:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இளம் பேராசிரியர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youngest-professor-at-cambridge-university-resigns-1786115754"></link>
            <id>https://tamilwin.com/article/youngest-professor-at-cambridge-university-resigns-1786115754</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயது பேராசிரியரான ஜேசன் ஆர்டே , தன் மீதான
கல்வித்துறைசார் முறைகேட்டுக் குற்றச்சாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயது பேராசிரியரான ஜேசன் ஆர்டே , தன் மீதான
கல்வித்துறைசார் முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளை அடுத்து பதவி விலகியுள்ளார்.
</p><p>
அவரது கல்வித் தகுதிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் "புதிய
தகவல்கள்" கிடைத்துள்ளதாகக் கூறி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வ
விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.</p><p></p><h2>தேவையற்ற விமர்சனங்கள்</h2><p>
</p><p>
கடந்த 2015-ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த (Ph.D.) பட்ட ஆய்வேட்டில், பிற
ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாகக்
குற்றச்சாட்டுகள் எழுந்தன.
</p><p>
அத்துடன், தொண்டு நிறுவனங்களுக்காக மரதன் ஓட்டங்கள் மூலம் 5.5 மில்லியன்
பவுண்டுகளை நிதியாகத் திரட்டியதாக அவர் கூறிய கூற்றுகள் குறித்தும்
சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e9da7f3-5a40-49f1-949f-02fe28958ee8/26-6a75f9eb097aa.webp' /></p><p>ஆட்டிசம் உள்ளிட்ட கற்றல் குறைபாடுகளை வென்று பேராசிரியர் நிலையை அடைந்த ஜேசன்
ஆர்டே, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளார்.</p><p>

எனினும், ஊடகங்கள் மற்றும் வெளித்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் தேவையற்ற
விமர்சனங்கள் மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகவே தாம் இந்த பதவியிலிருந்து
விலகுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T18:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA['டொல்பின்' சூறாவளி அச்சுறுத்தல்: சீனத் தலைநகர் பீஜிங்கில் கனமழை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-dolphin-threat-heavy-rain-warning-chinese-1786124747"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-dolphin-threat-heavy-rain-warning-chinese-1786124747</id>
            <summary type="text">சீனாவை நோக்கி &#039;டொல்பின்&#039; (Typhoon Dolphin) சூறாவளி நகர்ந்து வரும் நிலையில்,
தலைநகர் பீஜிங்கின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு அபாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவை நோக்கி 'டொல்பின்' (Typhoon Dolphin) சூறாவளி நகர்ந்து வரும் நிலையில்,
தலைநகர் பீஜிங்கின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சீனக் கடலோரப் பகுதிகளை டொல்பின்
சூறாவளி தாக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;கனமழை எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதன் முன்னெச்சரிக்கையாக பீஜிங்கின் டோங்செங், ஹைடியன் மற்றும் சியோயாங்
உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் மணிக்கு 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை
பெய்யக்கூடும் என அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff6610a-88ae-4117-8b03-9dba64a67454/26-6a761c130b2e6.webp' /></p><p>
</p><p>
வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மண்சரிவு அபாயங்கள் குறித்து மக்களுக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 2,000-க்கும்
மேற்பட்ட ஊழியர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
சூறாவளி அச்சுறுத்தல் காரணமாகச் சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில்
படகுச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மீன்பிடிப் படகுகளும் பாதுகாப்பான
இடங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
</p><p>
அதேவேளை, நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் 38 பாகை செல்சியஸைத்
தாண்டிய கடுமையான வெப்ப அலையும் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஜனாதிபதியின் கனவுத் திட்டத்திற்கு நீதிமன்றம் அதிரடித் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-appeals-court-halts-trump-ballroom-1786123555"></link>
            <id>https://tamilwin.com/article/us-appeals-court-halts-trump-ballroom-1786123555</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டமான 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பால்ரூம் (Ballroom) கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டமான 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பால்ரூம் (Ballroom) கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சர்ச்சைக்கரிய திட்டத்திற்கு நீதிமன்றம் அளித்துள்ள மிகப்பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. </p><p>
கொலம்பியா மாகாணத்திற்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9818a5ea-c0be-4422-bb6f-6a7f2f30ccf0/26-6a761524eac16.webp' /></p><p> இவ்வளவு பெரிய பால்ரூம் கட்டப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.</p><p> இது ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரம் சார்ந்த விடயம் அல்ல என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>
ஒவ்வொரு ஜனாதிபதியும் வெள்ளை மாளிகையின் தற்காலிக குடியாளிதானே தவிர, அதன் உரிமையாளர் அல்ல. தற்போதைய மற்றும் எதிர்கால அதிபர்களுக்காகவும், அமெரிக்க மக்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை, தனது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க அதிபருக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p><p> 
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, பால்ரூம் கட்டுவதற்காக வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்குப் பகுதியை டிரம்ப் நிர்வாகம் இடித்தது.</p><p>
இதை எதிர்த்து 'வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை' நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. </p><p>
கீழ் நீதிமன்றம் தரைக்கு மேல் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது அந்தத் தடையை மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. </p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இதன் மூலம் டிரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p> 
நாடாளுமன்ற அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமானப் பணியையும் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T17:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meta-fined-567-million-dollar-1786118653"></link>
            <id>https://tamilwin.com/article/meta-fined-567-million-dollar-1786118653</id>
            <summary type="text">சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரின் மன ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, &#039;மெட்டா&#039; நிறுவனத்திற்கு 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரின் மன ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, 'மெட்டா' நிறுவனத்திற்கு 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நியூ மெக்ஸிகோவில் தொடர்ந்த வழக்கில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் சிறுவர்களை அடிமையாக்கும் வகையிலும், பாலியல் சுரண்டலிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறிய வகையிலும் வடிவமைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மெட்டா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்</h2><p>

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரையன் பீட்ஷீட் (Bryan Biedscheid), மெட்டா
நிறுவனத்தின் செயற்பாடுகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளதாகத்
தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பின்படி, விதிக்கப்பட்ட அபராதத் தொகை சிறுவர்களின் மன நல
நிதியத்திற்குப் பயன்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac1f900-edbb-494b-b2cd-49b734954203/26-6a76067a8f7e8.webp' /></p><p>

அத்துடன், எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குச் சிறுவர்கள் பேஸ்புக் மற்றும்
இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்திற்கு மாதாந்தக் கட்டுப்பாடு விதித்தல்,
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் AI செயற்கை நுண்ணறிவு அரட்டைகளில்
பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கடுமையான மாற்றங்களை மெட்டா நிறுவனம்
நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

எனினும், இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகத்
தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தாம்
தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதி கோர விபத்து - வங்கி முகாமையாளர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-officer-dies-in-accident-1786115929"></link>
            <id>https://tamilwin.com/article/bank-officer-dies-in-accident-1786115929</id>
            <summary type="text">அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். எப்பதொல பகுதியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். </p><p>எப்பதொல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p> உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ரொஹான் ஜயந்த பண்டார என்ற 43 வயதுடைய திருமணமாகாதவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>நேருக்கு நேர் மோதி விபத்து </b></h2><p>அனுராதபுரத்தில் இருந்து எப்பதொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அனுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பேருத்துடன் நேருக்கு நேர் மோதி&nbsp; விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e84822-d9ef-44b4-a56b-0f999c81516a/26-6a75ffd2569ca.webp' /></p><p>மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக வீதியின் வலது பக்கமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய வேளையில் எதிரே வந்த பேருத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>விபத்தில் காயமடைந்த வங்கி முகாமையாளர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.<br><br><b><i>You may Like This..</i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-07T17:18:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214"></link>
            <id>https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214</id>
            <summary type="text">பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

இந்த பதற்றம் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

வெளிப்புறத்திலிருந்து ஒரு தரப்பினரால் சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றமையினால் மோதல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2><b>குற்றக் கும்பல்</b></h2><p>இதன்போது சில கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் கொண்ட குழுவினர் சிறைக் கதவை உடைத்து வெளியே வந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8f69bd9-37d1-4b9a-8dc9-b65d967a3be4/26-6a760b0dbde35.webp' /></p><p>அவர்களில் பெரும்பான்மையினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கொஸ்மல்லி என்பவரின் ஆதரவாளர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குழுவினர் சிறைச்சாலை வாயிலின் ஊடாக வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இதன் போது, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்தக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். </p><p>கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 35 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது. </p><h3><b>உயிரிழந்த கைது</b></h3><p>அவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை, நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உள்ளிட்ட பல கொலைகளுடன் தொடர்புடையர் ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06deaf0c-b270-4512-88ca-bea34c24d349/26-6a760aa4089a8.webp' /></p><p>மேலும், ஹோமாகம ஹந்தயா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் ஒப்பந்தத் துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும் செயற்பட்டுள்ளார். </p><p>குற்றவாளிக்கு எதிராக காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p> அத்துடன், கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்துநராக முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்பட்டவரும் இவராகும். </p><p>சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைகளுக்காகச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 


</p>]]></content>
            <updated>2026-08-07T16:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-mechanism-prison-security-inmate-welfare-1786113139"></link>
            <id>https://tamilwin.com/article/president-mechanism-prison-security-inmate-welfare-1786113139</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமையையும், கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் (7) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்..&nbsp;</h2><p>

முன்மொழியப்பட்ட இந்த பொறிமுறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதுடன், அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் பதிலளிப்புகளை ஒருங்கிணைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6d17be-e8d0-48f8-8347-a263f3fb07bf/26-6a75fb03bf397.webp' /></p><p>
இந்த பொறிமுறையானது அனைத்து 33 சிறைகளையும் உள்ளடக்கி, சிறைகள் திணைக்களம், இலங்கை பொலிஸார், சிறப்பு பணிப்படை (STF) மற்றும், தேவைப்பட்டால், ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும். இது அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பொறிமுறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கைதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இக்கூட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மற்றும்&nbsp; சிறைச்சாலைகள் மற்றும் புலனாய்வு சேவைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-07T15:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஏமனில் மீண்டும் தீவிரமடையும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292</id>
            <summary type="text">ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவூதி ஆதரவு இராணுவப் படை அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.</p><p>

சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஏமன் தலைநகர் சனாவிற்கு (Sanaa) மேற்கே உள்ள பகுதியிலிருந்தே இந்த ஏவுகணைகள்
ஏவப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
மாரேப் நகரின் பல பகுதிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,
இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும்
அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64ae4d1-6812-4fa4-b1d4-2bd0afcdbb43/26-6a75f733b279a.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, சவூதி அரேபியாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியான நஜ்ரான் (Najran)
பிராந்தியத்தின் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக
சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மேஜர் ஜெனரல்
துர்கி அல்-மால்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>

பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெண்
மற்றும் குழந்தை உட்பட 11 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சவூதி
கூட்டுப் படை, ஹூதி அமைப்பினரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளை உடைத்து கொண்டு தப்பிக்க முயற்சிக்கும் கைதிகள்! அநுரவை வீழ்த்த நடக்கும் சதியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221"></link>
            <id>https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&amp;nbsp; சமூக செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&nbsp; சமூக செயற்பாட்டாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, ஊழல்வாதிகள், கடந்த கால அரசாங்கத்திலே குற்றச் செயல்களிலே ஈடுபட்டோர் தாங்கள் போய் சிறைச்சாலைகளில் இருப்பதற்கு சிறைச்சாலைகள் உகந்த நிலையில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>சிறைச்சாலைக்கு செல்ல இருக்கக்கூடிய ஊழல்வாதிகளும் கடந்த காலத்தில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் தங்களுக்கு சிறைச்சாலைகள் சரியான விதத்தில் இல்லை, அங்கு பாதுகாப்பு இல்லை என்ற விடயத்தை கூறி சிறைக்கு செல்வதை தடுக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நிச்சயம் தண்டணை வழங்கும்.சிறைச்சாலைகள் இல்லாவிட்டாலும் புதிய சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு ஊழல்வாதிகள் அடைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OdsoL-OTxHs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:37:50+00:00</updated>
        </entry>
    </feed>
