<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T22:48:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகால ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-dealers-involved-in-heroin-sales-arrested-1786390280"></link>
            <id>https://tamilwin.com/article/2-dealers-involved-in-heroin-sales-arrested-1786390280</id>
            <summary type="text">நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சாய்ந்தமருது
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சாய்ந்தமருது
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(10.08.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>கைது செய்யப்படோர்</h2><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே
கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய
இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து
2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின்
போதைப்பொருட்களுடன், போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக
நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586b4425-1026-4886-b32a-4a13e6c626fe/26-6a7a3435b3de6.webp' /></p><p>அத்துடன் இந்தக் கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால்
திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும்
கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப்
பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவில் அதிரடியாக ரத்து செய்யப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/under-trump-us-has-revoked-over-1-75-000-visas-1786396484"></link>
            <id>https://tamilwin.com/article/under-trump-us-has-revoked-over-1-75-000-visas-1786396484</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>

விசா விதிமுறைகளை மீறியவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரித்தவர்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள், குடியேற்ற முறையை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டவர்கள் ஆகியோரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;விசா ரத்துகள்</h2><p>

பெரும்பாலான விசா ரத்துகள் சட்ட அமலாக்க அமைப்புகளுடனான தொடர்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் தாக்குதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0a2dfd2-d532-425b-8d62-89e4a389ff95/26-6a7a463ca75ea.webp' /></p><p>
</p><p>
மேலும், பாலியல் துர்நடத்தை, மனிதக் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>

வட ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பயணம் செய்ததாகக் கூறப்படும் 100-க்கும் மேற்பட்ட ‘பிறப்புச் சுற்றுலா’ பெற்றோரின் விசாக்களையும் ரத்து செய்துள்ளது.</p><p></p><h2>மீண்டும்&nbsp;ட்ரம்ப்</h2><p>
</p><p>
கடந்த ஜனவரியில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.75 லட்சத்தைக் கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7569f70-3182-471f-bf49-8a9e6aafd404/26-6a7a463d6334a.webp' /></p><p>

ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. விசா வழங்கும் நடைமுறையில் சமூக ஊடகக் கண்காணிப்பு மற்றும் விரிவான பின்னணி ஆய்வுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
எனினும், இந்த சமூக ஊடகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்தை பாதிப்பதாகவும், குடியேற்றவர்களை குறிவைக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளாகவும் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-10T21:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறைபதமடைந்தார் தமிழ் வித்துவான் வாகரைவாணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-scholar-vagaraivanan-achieved-natural-beauty-1786392666"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-scholar-vagaraivanan-achieved-natural-beauty-1786392666</id>
            <summary type="text">1941 டிசம்பர்22 ல் மட்டகளப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு உதித்த அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட 
வாகரை வாணன் நேற்று(10.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>1941 டிசம்பர்22 ல் மட்டகளப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு உதித்த அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட 
வாகரை வாணன் நேற்று(10.08.2026) இறைவடி சேர்ந்துள்ளார்.
</p><p>இவர் தோற்றத்தில் எளிமையும், அறிவில் ஆழமும் செயற்பாட்டில் இடையறா உக்கிரமும் தளராத நெஞ்சமும் கொண்ட அறிவாளன் ஆவார்.</p><h2>தமிழ் வித்துவான் வாகரைவாணன்</h2><p>
</p><p>
இலங்கை தமிழரசுக் கட்சி உத்தியோக பூர்வ பத்திரிகையான “சுதந்திரன்”பத்திரிகையில் பணியாற்றிய இவர்
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியால் 1960, காலப்பகுதியில் இடம்பெற்ற அறவழிப்போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார்.
</p><p>
தமிழ் வித்துவான் வாகரைவாணன் ஆங்கிலம் மற்றும் இலத்தின் மொழிகளில் புலமை மிக்கவராக காணப்படுவதுடன் தழிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை ஆக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d85f9cea-0c8b-49b9-be91-18cbe8af2be6/26-6a7a32dbb03ef.webp' /></p><p>

மேலும் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் தமிழர் தேசியச் சிந்தனை மற்றும் தமிழ் உணர்வு கொண்ட ஒரு ஆளுமையாக இவர் அறியப்படுகிறார்.</p><p>அன்னாரில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மட்டக்களப்பு நாவற்குடா புனித சின்னலூர்து அன்னை திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று(11) பி.ப.3.30 மணிக்கு நாவற்குடா கத்தோலிக்க சேமக்கவாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.</p><p> </p><p>

இவர் சுட்ட பொன் (கவிதைகள்) 1970, எண்ணத்தில் நீந்துகிறேன் (கவிதைகள்) 1971, பயணம் (கவிதைகள்) 1972 ,துரோணர் சபதம் (நாடகம்) 1972தமிழ்ப்பாவை 1980, கடற்கரைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) 1983, இனிக்கும் தமிழ் (கட்டுரை) 1989, கிறிஸ்து தத்துவம் 1991, சின்னச் சின்னக் கதைகள்1991, ஆசிரியன் ஓர் அட்சயப்பாத்திரம் (புதுக்கவிதைகள்) 1992, அருளாளர் அந்தோனியார் (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, ஒரு பூ மலர்கிறது (நாடகம்) 1993, பாலர் தமிழ்ப்பாட்டு (சிறுவர் இலக்கியம்) (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, கிறிஸ்து காவியம் 1995, சின்னச் சின்னப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் – இலங்கை அரசின் இலக்கியப்பரிசு பெற்றது.) 1997, சமயம் – சில சிந்தனைகள் (கட்டுரைகள்) 1997
சிறு கதை விமர்சனம் 1997, அரசி உலக நாச்சியார் (சிறுகதைத் தொகுப்பு) 1998, புதுக்கவிதைப் புத்தகம் (புதுக்கவிதைகள்) 1998, விசுவாசத்தின் புதிய விடியல் (தமிழ் மொழி பெயர்ப்பு) 1998, தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள் 1999, இன்ரநெற் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) 1999, ஆல ஊழரவெசல (ஆங்கிலக் கவிதை) 2000, நீ வா நிலாவே (சிறுவர் இலக்கியம்) 2000, சின்னஞ் சிறு கிளியே (சிறுவர் இலக்கியம்) 2000, ஆய் தமிழ் (ஆய்வுக்கட்டுரைகள்) 2001, வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை (வரலாறு) 2003
நந்திக்கொடி (வரலாற்றுக் குறு நாவல்) 2004, பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் 2005, இன்னாசியார் காவியம் 2005, பனிச்சங்கேணி அரசி (வரலாற்றுச், சிறுகதைகள்) 2007, கிழக்கிலங்கைத் தமிழகம் (வரலாறு) 2011, மட்டக்களப்புக் காவியம் 2016, வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள் 2017, உரைநடை மற்றும் கவிதை 2017, தமிழ்ப் பாவை தைப்பாவை 2017, தமிழ் மண் மட்டக்களப்பு. 2019, தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் 2021, சோளன்சேனையும் சேலைக்கிளிகளும் 2023, எண்ணங்கள் ஆயிரம் (கட்டுரை) 2024, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம்(மொழிபெயர்ப்பு) ஆகிய 42 கட்டுரைகளை எழுதியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கியுள்ள மிகப்பெரிய நிலநடுக்கம்..! இதுவரையில் 111 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057</id>
            <summary type="text">புதிய இணைப்புகொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இதுவரை அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
</p><p>
இதுவரை அதிகாரப்பூர்வமாக குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2>முதல் இணைப்பு</h2><p>கொலம்பியாவில் இன்று(10) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்பட்டுள்ளது.</p><p>


உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7:34 மணிக்கு இந்த நிலநடுக்கம் நாட்டை உலுக்கியுள்ளது.</p><p></p><h2>5,000 மக்கள்</h2><p> </p><p>

இதன் மையப்புள்ளி, மேற்கு கொலம்பியாவில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் நகரமான சான் ஜோஸ் டெல் பால்மருக்கு வெளியே சுமார் மூன்று மைல் தொலைவில் பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd78dfe-5e41-4bff-aac2-b0b3bec99740/26-6a7a144eb19b3.webp' /></p><p>
</p><p>
 பொகோட்டா மற்றும் காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

2.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவிலான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.</p><p>

 இந்த தொடர் நிலநடுக்கங்களால், கட்டிடங்கள் உடனடியாக இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் நசுக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம்&nbsp;</h2><p> </p><p>

அதிகாலையில் மேற்கு கொலம்பியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியதுடன், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.</p><p>

அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/707cd0a6-383c-4921-a44e-48b636436ac6/26-6a7a144f6b89f.webp' /></p><p>


டஜன் கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதால், மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

கட்டிடங்கள் அதிர்ந்தபோது, ​​மக்கள் இடிபாடுகளிலிருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்ததாக தேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பேரழிவு</h2><p> </p><p>

கொலம்பிய புவியியல் சேவை, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் (66 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், எல் கெய்ரோ மற்றும் எல் அகுய்லா போன்ற அண்டை நகரங்களைப் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532d6bd-337b-4bb3-8eab-0e5f561f1a38/26-6a7a14501cfd5.webp' /></p><p>

நிலநடுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான பகுதி நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தில் இருப்பதாக USGS தெரிவித்துள்ளது. </p><p>

இந்த பேரழிவிற்கு வெறும் ஏழு மணி நேரத்திற்கு முன்பு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில் உள்ள மூன்று நகரங்களைப் பாதித்தது. </p><p>

பெருவின் ஸ்டிபோவில், கிட்டத்தட்ட ஒரு நாள் முன்பு 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T21:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் குழப்பம் விழைவிக்க பிரான்சில் இருந்து சென்ற உத்தரவு - சிக்கியது பெரும் ஆதாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119</id>
            <summary type="text">றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் இந்தத் திருவிழாவிற்காக பெரும் உழைப்பைச் செலுத்திய நிலையில், எதிர்பாராத மக்கள் கூட்டத்தால் சில சிக்கல்கள் எழுந்தன. </p><p>

இருப்பினும், உணவுத் திருவிழாவின் தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட குழுவின் திட்டமிட்ட வன்முறை மற்றும் குழப்பங்கள் தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த உணவுத் திருவிழாவைத் திட்டமிட்டு முறியடிக்க, பிரான்சிலிருந்து சில உத்தரவுகள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இது குறித்து சில குரல் பதிவுகள் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், எதிர்பாராத நெருக்கடியாலும் ஏற்பட்ட சிரமங்களுக்கு கந்தையா பாஸ்கரன் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
</p><p>
 மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார் .

 திருவிழா நடந்த இடத்தில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
</p><p>
 இது வெறும் உணவுப் பற்றாக்குறையினால் ஏற்பட்டதல்ல, மாறாகத் திட்டமிட்ட வன்முறை என்று காணொளி என்பதும் தெளிவாகின்றது.

கந்தையா பாஸ்கரன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்றும், அவர் தனது மண்ணின் மீதான பற்றுதலாலேயே இத்தகைய முதலீடுகளைச் செய்கிறார்.
</p><p> 
இந்தத் திருவிழா, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்பட்ட முயற்சி என்றும், சில விசமிகளின் குறுக்கீடுகளால் அது பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணி! தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தொழிலதிபர்களை குறிவைப்பது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191</id>
            <summary type="text">வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

இந்தநிலையில்,&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்தநிலையில்,'இந்திரன்' மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்றோர் முன்னெடுத்த நிகழ்வுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்மமான விமர்சனங்கள், தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இலங்கையில் மிகக் குறைவாகவே உள்ளது.

 பொருளாதார ரீதியாக வடக்கும் கிழக்கும் வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்கான திரைமறைவுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.</p><p>

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அரசியல் உறுதித்தன்மை (Political Stability) அங்கு இல்லாததே முதலீடுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம் .

ஊழல் மற்றும் தவறான குழுக்களின் அச்சுறுத்தல்களை அரசு கண்டுகொள்ளாமல் விடுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது.
</p><p>
13-வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால், பொலிஸார் மற்றும் காணி அதிகாரங்கள் அடங்கிய உண்மையான அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
</p><p>
 தமிழகம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் போல, வடக்கிலும் கிழக்கிலும் ஊழலற்ற அரசியல் கலாச்சாரம் மற்றும் புதிய தலைமைத்துவ மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YEoM2J-B56w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்பட்ட பிரித்தானியாவின் பிரபல பொழுதுபோக்கு பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439"></link>
            <id>https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுதுபோக்கு பூங்கா திடீர் நீர்
தட்டுப்பாடு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>

உள்ளூர் பகுதியில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை காரணமாகவே இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக பூங்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>திடீர் நீர் தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அத்துடன், இன்றைய தினத்திற்காக முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்கள்
பூங்காவிற்கு வருகை தர வேண்டாம் என்றும், அவர்களின் நுழைவுச்சீட்டுகள்
'ரிட்டர்ன் புரொமிஸ்' (Return Promise) திட்டத்தின் கீழ் மறுபரிசீலனை
செய்யப்பட்டு எதிர்காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d373be57-fcf4-4625-930b-a20c91fcf727/26-6a79ee5bc3f70.webp' /></p><p>ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தரும் ஐரோப்பாவின்
முன்னணி பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான செசிங்டன், இதற்கு முன்னர் 2018
ஆம் ஆண்டிலும் இதேபோன்று பிரதான நீர்ழாய் உடைந்தமையினால் மூடப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஃபா தலைவர் மீது ஐரோப்பிய, ஆசிய மற்றும் வட அமெரிக்க காற்பந்து கூட்டமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/global-football-federations-accuse-fifa-president-1786375986"></link>
            <id>https://tamilwin.com/article/global-football-federations-accuse-fifa-president-1786375986</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் சில வணிகப் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில், FIFA தலைவர் ஜியாணி இன்ஃபான்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் சில வணிகப் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில், FIFA தலைவர் ஜியாணி இன்ஃபான்டினோ ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

ஐரோப்பிய (UEFA), ஆசிய (AFC) மற்றும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் (CONCACAF) காற்பந்து கூட்டமைப்புகள் கூட்டாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.</p><p></p><h2>FIFA தலைவர் மீதான விமர்சனம்</h2><p>

இது தொடர்பில் குறித்த மூன்று பிராந்தியக் கூட்டமைப்புகளின் தலைவர்களும்
பொதுச் செயலாளர்களும் இணைந்து வெளியிட்டுள்ள பகிரங்கக் கடிதத்தில், காற்பந்து
விளையாட்டு என்பது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதல்ல
என்றும், அது வீரர்கள், இரசிகர்கள் மற்றும் உறுப்புச் சங்கங்களுக்கே சொந்தமானது
என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இன்ஃபான்டினோவின் இந்த நடவடிக்கை விளையாட்டுத் தலைவருக்குரிய பண்பு அல்ல
என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c5389b-bf2a-4780-9561-d046ecdabd62/26-6a7a151b8e0e1.webp' /></p><p>குறித்த சர்ச்சைக்குரிய வணிகப் பங்கு விற்பனைத் திட்டம் கைவிடப்பட்டு FIFA மன்னிப்புக் கோரியிருந்த போதிலும், இன்ஃபான்டினோவின் தலைமையை ஏற்க முடியாது என
நோர்வே காற்பந்துச் சம்மேளனம் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக்
கோரியுள்ளது.</p><p>இதனையடுத்து இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை&nbsp; மீளப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்கு இல்லாமல் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி! ஏன் இந்தச் சிறப்புச் சலுகை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488"></link>
            <id>https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது கைவிலங்கு இடப்படுவது வழக்கம்.</p><p>

ஆனால், இஷாரா செவ்வந்தி கைவிலங்கு இன்றி, ஆடம்பரமான தோற்றத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி சி.ஐ.டி (CID) காவலில் இருந்தபோது அவருக்கு கேக் வெட்டியது மற்றும் பிஸ்கட் வழங்கியது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.</p><p> 

அந்தச் சம்பவங்களின் போது சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

 இவருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன, இவருக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பது போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். </p><p>இதற்கான முறையான விளக்கத்தை பொலிஸ் தரப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் #NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9zirngiDydA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T19:01:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.</p><p>

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 48ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df1e7adc-d3ad-4a17-bd45-2208acd5b94c/26-6a79f84915978.webp' /></p><p>இந்த நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும்
சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிலுக்கு பதில் - ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்..! ட்ருத் சோசியலில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interesting-idea-iran-demand-trump-compensation-1786382594"></link>
            <id>https://tamilwin.com/article/interesting-idea-iran-demand-trump-compensation-1786382594</id>
            <summary type="text">எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிடம் இழப்பீடு கோரியுள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில்,</p><p> 

கடந்த ஐந்து மாதப் போரில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவது தொடர்பான யோசனையை "சுவாரஸ்யமான யோசனை" என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானிடம் இழப்பீடு</h2><p> </p><p>

அதேவேளை, அதற்குப் பதிலாக அமெரிக்காவும் ஈரானிடம் இழப்பீடு கோரும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் கோரி வரும் இழப்பீடு தொடர்பான விடயம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117072168149236615/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

2000ஆம் ஆண்டு யேமன் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலான USS Cole மீது நடத்தப்பட்ட கொடிய குண்டுத் தாக்குதலையும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என FBI தெரிவித்துள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

"இது ஒரு சுவாரஸ்யமான யோசனை. ஏனெனில், பல மோதல்களிலும் சாலையோர குண்டுத் தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த மக்களுக்காக, தற்போது நானும் ஈரானிடம் இழப்பீடு கோருகிறேன்.</p><p></p><h2>ட்ரம்ப் பதிவு</h2><p>
</p><p>
 இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஈரான் பிரபலமானது. ஆரம்பத்தில் ஜெனரல் சுலைமானி தலைமையிலும் இவை இடம்பெற்றன. USS Cole தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காகவும் இந்த இழப்பீட்டை கோருகிறேன்" என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa5eed04-60b9-44d2-8b8e-8b762d66711f/26-6a7a0ae34eddc.webp' /></p><p>
</p><p>
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பொது எழுச்சிப் போராட்டங்களின்போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
"எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இந்த விடயத்தை உறுதியாக முன்வைக்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>YOU MAY LIKE THIS..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rampG3yZRg0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

இந்த துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இந்த துப்பாக்கிச்சூடு தற்போது பிரான்ஸில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான குடு அஞ்சு என்பவரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அண்மையில் குடு அஞ்சுவின் நெருங்கிய நபர் ஒருவர் இரத்மலானை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h2><b>

துப்பாக்கி சூடு</b></h2><p>இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b6613f-9ec6-4ce8-b1f0-a5db6fe45ba7/26-6a79e3a216e66.webp' /></p><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து பிற்பகல் 1.30 மணியளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர். </p><p> 

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விதம் அருகிலுள்ள கட்டடமொன்றின் சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-10T16:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் - துருக்கி - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அச்சப்பட தேவையில்லை: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553</id>
            <summary type="text">​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக அமைந்தது என அஞ்சத் தேவையில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

​</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், பிராந்திய நாடுகள் வெளிச்சக்திகளைச் சாராமல் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகவே இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2> புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>

​பிராந்தியத்தின் புவிசார் மற்றும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,
துல்லியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு செயற்படுத்தப்படும்
எந்தவொரு திட்டமும், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும்
ஸ்திரமின்மையை தடுக்கவும் உதவும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18607002-05d0-485b-a1d2-ae6279883f11/26-6a79e957be462.webp' /></p><p>

​சவுதி அரேபியாவின் மக்கா நகரில் இடம்பெற்ற சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர்
ஷெஹ்பாஸ் ஷரீப், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகான் மற்றும் சவுதி பட்டத்து
இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோரால் இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:57:19+00:00</updated>
        </entry>
    </feed>
