<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-02T06:21:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் பிரஜாசக்தி திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் களஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560"></link>
            <id>https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560</id>
            <summary type="text">2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் &quot;தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை&quot; எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை" எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் 17
பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.
</p><p>
இவ்வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேற்றுமுன் தினம் (31.07.2026) நேரடியாகச் சென்று களஆய்வு செய்ததுடன், உரிய பயனாளிகளுடன்
கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.</p><p></p><h2>அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த
விஜயத்தின் போது, வீடுகளின் கட்டுமான நிலவரங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற
உறுப்பினர், நிர்மாணப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பூர்த்தி
செய்வதற்கு தேவையான பொறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p>

இப்பயணத்தின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தின் 17 கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளையும் சேர்ந்த பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் சமூக
வலுவூட்டல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலையினால் தலவாக்கலையில் மரம் முறிவு - போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118"></link>
            <id>https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118</id>
            <summary type="text">மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று (02) காலை முதல் கடும் மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா -
ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம்
ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>

இந்நிலையில் பிரதேசவாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை
அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a38ed075-6f72-4b7b-bf65-58ac406691bd/26-6a6edbcc7c7b0.webp' /></p><p>மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் முதல் நுவரெலியா மற்றும் ஹட்டன் -
கொழும்பு வரையிலான பிரதான வீதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் மலைப்பிரதேசங்கள் மற்றும் பிரதான வீதிகளில்
பயணம் செய்யும் போது சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும்
பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358"></link>
            <id>https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358</id>
            <summary type="text">புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. 

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் புத்தளம் மாவட்டம், கல்பிட்டிய தீபகற்பத்தில் உள்ள பிரபல கத்தோலிக்க திருத்தலம். </p><p>

இது புனித அன்னம்மாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும்.</p><p></p><h2>பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு</h2><p> </p><p>

பொதுவாக இந்த திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழமை.</p><p> 

இந்த நிலையில் இம்முறையும் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fweb.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F2291980718280123%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்திற்கான காரணம்..! கைதிகளால் ஏற்பட்ட சேதவிபரம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சம்பவத்துக்கான காரணம்&nbsp;</h2><p>

இதேவேளை, சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், காரணத்தை கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d939bce-58ed-4ab3-a0ac-28bc8320617c/26-6a6ed257686d9.webp' />&nbsp;</p><p>

மேலும், கைதிகளால் சிறைச்சாலைக்குள் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டடம், அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியன சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதன்படி, நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும், கைதிகளின் உறவினர்கள் அமைதியாக குறித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T05:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்! பிரதியமைச்சர் வழங்கியுள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்துள்ளார்.</p><p>

நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p><p> இதன்போது யாழ்.
அஞ்சல் வளாகத்தில் வடமாகாண அஞ்சல் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள்</h2><p> </p><p>இதனையடுத்து யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்தினை பார்வையிட்டதுடன் வடமாண பிரதி
அஞ்சல்மா அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதுடன், வடமாகாண அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள் குறித்தும்
கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d57dec0-45a2-4e69-9f07-9e8b3889279b/26-6a6ecc89199b3.webp' />&nbsp;</p><p>இதன்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள
பருத்தித்துறை அஞ்சலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில், இதற்கு பிரதியமைச்சர் பதிலளித்துள்ளார்.</p><p>

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடிதம் ஒன்று
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;விடுவிக்க நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பில் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து
அதன் பின்பு எமது அரசாங்க உயர்மட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb3d415-6662-4672-9c56-71e29ec7cecf/26-6a6ecc89cc650.webp' /></p><p>
</p><p>
1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் செயற்படாமல் போன நிலையில், இன்று வரை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
</p><p>
இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர்,
பிராந்திய கணக்காளர், வவுனியா அஞ்சல் அத்தியட்சகர் யாழ் தபால்நிலைய பிரதம
தபாலதிபர், பருத்தித்துறை அஞ்சலதிபர் மற்றும் அஞ்சல் பயிற்சிக்கல்லூரியின்
பிரதம போதனாசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:50:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை! பல பகுதிகளில் பலத்த மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;

வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த மழை பெய்ய வாய்ப்பு</h2><p></p><p>
</p><p>
இதன்படி இன்று (02.08.2026) சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
</p><p>
மேலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களு 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>நடைமுறைக்கு வரும் தடை&nbsp;</h2><p>இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள் உள்ளிட்டவை 5ஆம் திகதி நள்ளிரவுக்கு முதல் முடிவுறுத்தப்பட&nbsp; வேண்டும்.&nbsp;</p><p>குறிப்பிட்ட காலத்தில்,&nbsp; புலமைப்பரிசில் பரீட்சைக்கான&nbsp; மாதிரி வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba90d4d-f858-4665-a3fd-52b0ee61bf67/26-6a6ec8457e1b6.webp' />&nbsp;&nbsp;</p><p>அத்துடன், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இணைய இணைப்புக்களின் ஊடான கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,&nbsp;</p><p>எதிர்வரும் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>மடுமாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944c6d32-f82a-4633-a32b-df4e022e6973/26-6a6ec3481a7d2.webp' /></p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810"></link>
            <id>https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப்பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப்பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையானது, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்</h2><p>
</p><p>நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாகும். ஆனால், நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாகும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/decfda42-e872-4c5e-afbc-a95e85df3a44/26-6a6ec323ed054.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதை முற்றாகக் கட்டுப்படுத்தியமையே நேற்றைய மோதலுக்கு பிரதான காரணமாகும். போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளே இந்த மோதலைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் சதிமுயற்சி நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளன. நேற்று இரவு கைதிகள் சிலர் பல இடங்களில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயற்சித்துள்ளனர். எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதல் வரிசையின் பின்னணி அடுத்து கோட்டாபய ராஜபக்ச! சிக்கவுள்ள பல சூத்திரதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்&nbsp;</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471b052-5321-4125-b43d-b5872692edeb/26-6a6ec0bab42e6.webp' /></p><p>
</p><p>
நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17ddcbb-c6dd-45f8-bfa0-58241f14dc51/26-6a6ec0bb628bc.webp' /></p><p> </p><p>

இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், சதித்திட்டம் ஒன்றுக்கு துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.&nbsp;&nbsp;</p><p> </p><p>

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், அநுர குமார தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி&nbsp;கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விலங்கு நலச் சட்டம் அறிமுகம்: தண்டனைகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613"></link>
            <id>https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், விலங்குகள் மீதான கருணை, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
மத அல்லது கலாச்சார நிகழ்வுகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், விலங்கின் கால்களில் முள் வளையங்கள் அணிவிப்பது, சங்கிலியால் கால்களை கட்டுவது மற்றும் கம்பிகளால் கட்டுவது போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p>
விலங்குகளை மிதமிஞ்சி நடக்க வைப்பது, அதிக சுமை ஏற்றுவது, சித்திரவதை செய்வது, வேதனையை ஏற்படுத்தும் வகையில் கயிறு அல்லது சங்கிலியால் கட்டிப்போடுவது ஆகியவை குற்றமாகும்.
</p><p>விலங்குகளை கொண்டு செல்லுதல், அடைத்து வைத்தல், விற்பனை செய்தல், குட்டிகளைப் பெருக்குதல், அவற்றுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு அளித்தல் போன்ற விவகாரங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
</p><p>விலங்குகளை கொடூரமாக நடத்துதல் அல்லது கொடூரமாகக் கொல்லுதல், கர்ப்பிணி விலங்குகளைக் கொல்லுதல், பொறிகளை வைத்து விலங்குகளைப் பிடித்தல், பறவைகளை சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைத்தல், நோயுற்ற விலங்குகளை பொது இடங்களில் இறக்க விடுதல், தகுதியற்ற நபர்கள் விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்தல், சட்டவிரோத வேட்டையாடுதல், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விலங்குகளை விற்பனை செய்தல் மற்றும் பொது இடங்களில் விலங்குகளை விற்பனை செய்தல் போன்றன சட்டவிரோதமான செயல்கள் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இப்புதிய சட்ட விதிகளை மீறுவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், விலங்குகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக விலங்கு நல ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. 
இதில் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் 11 பேருடன், அமைச்சரினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T03:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றநிலை! பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269"></link>
            <id>https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269</id>
            <summary type="text">புதிய இணைப்புமஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய, மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலை பதற்றநிலை காரணமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p>

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் நேற்று இரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62aecf3-f6bd-40a9-adca-9fc0d8455372/26-6a6eac1a4760d.webp' /></p><p>

இதன்படி, மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே அப்பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அருகிலிருக்கும் பொலிஸ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>மஹர சிறையில் நிலவிய பதற்றமான சூழல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அனைத்து கைதிகளையும் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T03:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பெயரில் பெரும் பணமோசடி - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276"></link>
            <id>https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276</id>
            <summary type="text">கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் விளிப்புடன் இருக்குமாறு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தல்</h2><p>
இந்த அறிவிப்பின்படி, ஒரு தனிநபர் அல்லது குழு, பிரதி அமைச்சராக நடித்து தொலைபேசி அழைப்புகள் செய்து பணம் கோருவதோடு, பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852165c4-1c4f-4565-82e0-dba23e2d5d61/26-6a6eafb08a3c5.webp' /></p><p>

அத்தகைய நபர்களுக்கு எந்த பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை பெறுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T02:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல்! சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

சிறைச்சாலைக்குள் கைதிகள் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சுவரை உடைக்க கைதிகள் முயற்சிப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><h2>சிறையிலிருந்து தப்பிக்க&nbsp;முயற்சி </h2><p>
</p><p>
இதற்கிடையில், கைதிகள் அடங்கிய மற்றொரு குழுவினர் 15 அடி உயரத்தகட்டை அகற்றிவிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cd280f4-5bb5-402f-ad82-f51fe915516c/26-6a6ea3bfd32a2.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் பதற்றகரமான நிலைமையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> அத்துடன் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இவ்வாறான பின்னணியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சிறைச்சாலை முன்பாகவும், சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர கண்காணிப்பின் கீழ் மஹர சிறைச்சாலை.. தற்போதைய நிலவரம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-defense-ministry-cid-stf-1785632982"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-defense-ministry-cid-stf-1785632982</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மத்தியில் அமைதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.</p><p>

நேற்று (01) மதியம், கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, மஹர சிறையில் கலவரம் வெடித்தது.</p><p></p><h2>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு&nbsp;</h2><p>இதன்போது, அங்கு, 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4365699-3212-46e3-b584-0302100f4f4c/26-6a6e9eda635b3.webp' /></p><p>தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு சிறப்பு அதிரடிப் படை, இராணுவம் மற்றும் பொலிஸாரை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கலவரத்தைக் கண்காணிக்க விமானப்படையும் பெல் 412 விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியது.</p><p>இந்நிலையில், நேற்று பகல், கைதிகள் தலைமைச் சிறை அதிகாரியின் அலுவலகத்திற்கு தீ வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>
</p><p>
மேலும் நேற்று மதியம், கைதிகளைப் பார்க்க உறவினர்கள் மஹர சிறைக்கு சென்ற நிலையில், ஆனால் அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.</p><p></p><h2>பதற்றநிலை&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, உறவினர்கள் மஹர சிறைக்கு முன்பாகக் கூடியதாகவும் அங்கு அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c213df6-61dd-4777-90eb-b36294f432c8/26-6a6e9edb2c6fc.webp' /></p><p>
சிறையிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்ற சில ஒலிகளைக் கேட்ட பிறகு, கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் உள்ளூர் மக்களும் பொலிஸார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளனர். </p><p>பின்னர், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், கைதிகளைப் பார்க்க சென்ற சில உறவினர்களும் உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையில், மஹர பகுதியில் உள்ள பல பொலிஸ் அதிகார வரம்புகளில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸார் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>தீவிர கண்காணிப்பு&nbsp;</h2><p>

அமைதியைப் பேணுவதற்காகவே இந்த நடவடிக்கை என்று பொலிஸார் தெரிவித்ததோடு, அதன்படி, A, 246/கண்டலியத்த பாலுவ - மேற்கு, 246/C கண்டலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/G தம்புவ ஆகிய கிராமப்புற சேவைப் பகுதிகளில் இந்த ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2b85a0-e9e2-4b82-b948-dbe592046d38/26-6a6e9edbd8b82.webp' /></p><p>

இதற்கிடையில், பதற்றமாக இருந்த மஹர சிறைச்சாலையின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோரும் நேற்று இரவு சிறை வளாகத்தைப் பார்வையிட்டனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கலந்தாலோசித்ததாகவும், சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.</p><p>

சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது விவகாரம்.. சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ag-approves-constitutional-amendment-judges-1785630789"></link>
            <id>https://tamilwin.com/article/ag-approves-constitutional-amendment-judges-1785630789</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். </p><p>1983ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நீதித்துறைச் சட்டமும் திருத்தப்பட்டு, கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் உயர்த்தப்பட இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது.&nbsp;</p><p> இந்த புதிய திருத்தங்களின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 63ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு 62ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டது.</p><p></p><h2>வெளியிடப்பட்ட வர்த்தமானி&nbsp;</h2><p> </p><p>சட்டமா அதிபரின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலங்கள் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், வர்த்தமானியில் வெளியாகி 14 நாட்களுக்குள் பொதுமக்கள் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527b47b1-5c8c-4192-ad22-f783ea2fc2ac/26-6a6e932cc4534.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைப் பெற்று வழக்குகளை விரைவாக முடிப்பதே இதன் முக்கிய நோக்கம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>வளர்ச்சியடைந்த நாடுகளில் 1 மில்லியன் மக்களுக்கு 40 முதல் 60 நீதிபதிகள் வரை உள்ள நிலையில், இலங்கையில் 20 நீதிபதிகளே உள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> எனினும், நீதிபதி பணியிடங்களை நிரப்பாமல் திடீரென ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது வெளிப்படைத்தன்மையற்றது என்றும், இதற்கு மக்கள் தீர்ப்பு தேவைப்படலாம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய குற்றம் சாட்டியுள்ளார். </p><p>ஆனால், இதற்கு மக்கள் தீர்ப்பு தேவையில்லை என அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T00:53:36+00:00</updated>
        </entry>
    </feed>
