<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T19:42:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார சேவையில் புதிய மாற்றம்: அரசு அறிமுகப்படுத்தும் 39 புதிய திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-change-in-healthcare-services-1789500803"></link>
            <id>https://tamilwin.com/article/new-change-in-healthcare-services-1789500803</id>
            <summary type="text">பொதுமக்களின் அதிகரித்து வரும் சுகாதார சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 39 புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களின் அதிகரித்து வரும் சுகாதார சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 39 புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.</p><p>
அதனடிப்படையில், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான அரச சுகாதார சேவை நிறுவனங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், அதிநவீன உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நவீன சுகாதார சேவை தரநிலைகளுக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p><h2>

39 புதிய திட்டங்கள்</h2><p>

இதற்கமைய, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட யோசனைகளில் 41 திட்ட யோசனைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a800a07-95a3-4c22-9655-1e740236c1fc/26-6aa99dc97fae8.webp' /></p><p>
</p><p>
குறித்த திட்ட யோசனைகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் த்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>

2027-2031 காலப்பகுதிக்குரிய அரசாங்க முதலீட்டுத் திட்டத்தில் யோசனைகள் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில் 39 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தயார் நிலையைக் கருத்திற்கொண்டு, 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதற்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த 39 புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T19:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 22 இறுதித் தீர்ப்பு: வைத்தியர்களுடன் போலி நாடகமா..! சுரேஷ் சலேவுக்கு கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-verdict-on-the-easter-sunday-attacks-1789499833"></link>
            <id>https://tamilwin.com/article/final-verdict-on-the-easter-sunday-attacks-1789499833</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, 100 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, 100 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பது போலி நாடகமா என்ற கேள்வியையும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி திலீப பீரிஸ் எழுப்பியுள்ளார்.</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதேவேளை, சிறையில் இருந்தவர்களையும் விடுதலை செய்து, தேசத்திற்கு பெரும் அநீதி இழைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2>

ராஜபக்சர்கள் அரங்கேற்றும் போலி நாடகங்கள்</h2><p>
இலங்கையில் இருந்த வளங்களை கொள்ளையடித்த ராஜபக்சர்கள், தற்போது மேடைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea07bf8b-0987-4325-86d4-88385a483e37/26-6aa999e9092e8.webp' /></p><p>
</p><p>
மேலும், செப்டம்பர் 22ஆம் திகதி குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள முக்கிய குற்றவியல் வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுரேஷ் சலே வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
</p><p>
இவ்வாறான நிலையில், சுரேஷ் சலேவின் வைத்தியசாலை தங்கல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
</p><p>
இதுபோன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Insight நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TQJRICBAAbw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T19:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண் - அநுர அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262</id>
            <summary type="text">நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p> 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p> 

“<i><b>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</b></i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2><b>முதலாவது தமிழ்&nbsp;பெண்</b></h2><p>

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம், நோர்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தமிழ் பெண்ணாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76f8fff-057d-4be3-8f5d-3976bcf16d81/26-6aa9630584a9a.webp' /></p><p>கடந்த 11ஆம் திகதி தனது அமைச்சினை பொறுப்பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கைகள், அத்துடன் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
</p><p>
1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

பிரதான அமைச்சு பதவி</b></h3><p>தனது 19 வயது முதல் தொழிலாளர் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்த கம்சி, சமகாலத்தில் பிரதான அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ce473e-195f-4d51-8a97-825bb5037c46/26-6aa96306382ba.webp' /></p><p>ஒஸ்லோவின் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் ஒஸ்லோவின் துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர் என படிப்படியாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். </p><p>

இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் கம்சி குணரட்னம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-15T18:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/providing-data-myanmar-military-norwegian-1789494283"></link>
            <id>https://tamilwin.com/article/providing-data-myanmar-military-norwegian-1789494283</id>
            <summary type="text">மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர்,
அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர்,
அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி
மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல
தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினோர் (Telenor) மீது நோர்வே பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின் ஒரு பகுதியாக ஓஸ்லோவிலுள்ள டெலினோர் நிறுவனத்தின் தலைமையகத்தில்
நோர்வே குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்
செவ்வாய்க்கிழமை சோதனைகளை மேற்கொண்டனர்.
</p><h2>மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய</h2><p>
மியான்மார் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கடுமையான மனித உரிமை மீறல்களைச்
செய்து வந்த காலப்பகுதியில், அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தொலைபேசி
அழைப்பு விபரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை இராணுவத்திடம் கைமாற்றியதாகக்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40f79765-953b-4f25-88dd-f2c7233650ca/26-6aa992c4e818d.webp' /></p><p>இதேவேளை, இராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் தமது
ஊழியர்கள் சிறைவாசம், சித்திரவதை மற்றும் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்
என்ற அசாதாரண சூழல் காரணமாகவே இத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருந்ததாக
டெலினோர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.</p><p>

அத்துடன், தடைகள் விதிக்கப்பட்ட கண்காணிப்புக் கருவிகளை வெளியாட்களுக்குக்
கைமாற்றியமை மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சின் அனுமதியின்றி வர்த்தகத்தை
விற்பனை செய்தமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

2022 மார்ச் மாதத்துடன் மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய அந்நிறுவனம்,
பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத்
தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T18:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மில்லியன் ரூபாய் மோசடி: மேல் மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prasanna-sanjeeva-arrested-1789496594"></link>
            <id>https://tamilwin.com/article/prasanna-sanjeeva-arrested-1789496594</id>
            <summary type="text">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ, மோசடியான டெண்டர் நடைமுறைகள் செய்த குற்றத்திற்காக தொடர்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ, மோசடியான டெண்டர் நடைமுறைகள் செய்த குற்றத்திற்காக தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

டெண்டர் நடைமுறைகளை மீறி பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4.1 மில்லியனுக்கும் அதிகமான ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று(15.09.2026) அவரைக் கைது செய்துள்ளது.
</p><h2>
மோசடி குற்றச்சாட்டு</h2><p>
அவருடைய பதவிக் காலத்தில் மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட விதிமுறைகளை மீறி, முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயணிகள் போக்குவரத்து அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad71711a-a0a8-41b5-80ae-a6d7075a226a/26-6aa98d41e1173.webp' /></p><p>
</p><p>
இந்த சட்டவிரோத அனுமதிகள் மூலமாக அரசாங்கத்திற்கு மொத்தம் 4,160,000 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

வெளித்தரப்பினருக்குச் சட்டவிரோதமாகப் பயனளித்து ஊழல் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T18:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில நாட்களில்.. சரித்திரம் படைக்கவுள்ள போராட்டம் திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-music-launch-event-1789495539"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-music-launch-event-1789495539</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள
போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில்
கோலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள
போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில்
கோலமாக இடம்பெற்றது. </p><p>

இந்த திரைப்படமானது,உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாகவும், ஈழத்தை களமாகவும் 
கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
</p><p>
கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன் , கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளார். </p><p>

இதேவேளை, ஈழ சினிமாவின் பிரபல நடிகர் நடிகைகளும் நடித்துள்ளார்கள்.</p><p> 

அத்துடன், இந்த திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2> 

இசை வெளியிட்டு விழா</h2><p>
படத்தில் பாடல்களை வாகீசன் ராசையா , உமாகரன் ராசையா , பொத்துவில் அஸ்மீன் ,
பூவன் மதீசன் , கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர்
எழுதியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d9505-26b4-4d77-b27b-4a6a0a4a9fdd/26-6aa98910beefd.webp' /></p><p>
</p><p>
பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா,
பாடகர் சத்யன், பாடகி கோவை கமலா ஆகியோருடன், ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன், கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன், டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளனர்.
</p><p>
இசை வெளியீட்டு நிகழ்வில், தென்னிந்தியாவின் பிரபல யூடியூப்பரான மைக் செட்
சிறீராம், பிரபல பாடகர் சத்யன் உள்ளிட்டோருடன் திரைப்பட குழுவினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T18:06:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202</id>
            <summary type="text">எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனையடுத்து சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது.
</p><h2>நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d073db3d-8e5d-48c3-bff3-2ebf727477ed/26-6aa97e68032fe.webp' /></p><p>
தற்போதைக்கு குறித்த சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மிகவிரைவில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றின் இரகசியத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எப்படித் தெரிந்தது..! சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853"></link>
            <id>https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853</id>
            <summary type="text">&amp;nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><h2>22வது அரசியலமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் நீதித்துறைத் திருத்தச் சட்டமூலத்தையும் ஒன்றாகவே பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80c4ce2-2584-4464-b1e8-6463c75d53be/26-6aa96ed6c5c43.webp' /></p><p>
</p><p>இதன் மூலம் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்படுவதுடன், சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீடு மற்றும் சமநிலை முறையும் சீர்குலையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
மேலும், அரசியலமைப்பின் 3, 4, 83 மற்றும் 107 ஆகிய பிரிவுகளுடன் 22வது திருத்தத்தைப் பரிசீலிக்கும்போது, இது மக்களின் இறையாண்மையை பாதிக்குமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகலாம் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஜனநாயகத்தைச் சுருக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனக் குற்றம்சாட்டிய அவர், மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
எனவே, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அமைதியான போராட்டப் பேரணியில் இணைந்து ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க முன்வருமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் குறித்து சஜித்திடம் வாக்கு மூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்டவர்கள் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாப்பதாக தாம் முதலில் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bf080a2-54e3-49ba-8cc6-206d3f0cbcbb/26-6aa97c4983a1c.webp' /></p><p>
தமக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கூறியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடமும் வாக்கு மூலங்கள் பதியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே அறிந்திருந்தும், இராணுவப் புலனாய்வுத் துறையினர் அனைத்துத் தகவல்களையும் சதித்திட்டமாக மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
</p><p>மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையை ஓய்வு விடுதியாக மாற்றிக் கொண்டு ஓய்வெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த வழக்கு எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T17:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வெளியானது அவசர தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba170f6-14b3-4be5-9889-0abd3c681f31/26-6aa97b164cdd0.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவுக்கு வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் அதிரடி கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106</id>
            <summary type="text">தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள இளைஞர் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
கஞ்சாவை பயன்படுத்தி போதைப்பொருள் தயாரிப்பு</h2><p>
குறித்த இலங்கை இளைஞர்கள் குழு, கஞ்சாவை பயன்படுத்தி ஹஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eca14c0-d165-4e0d-93e5-01651f627e9b/26-6aa977f698c3e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தென்கொரியப் பொலிஸார் இளைஞர்கள் குழுவைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஹஷிஷ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டுவெடிப்பு: விசாரணையில் சிக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955"></link>
            <id>https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் பொலிஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை, தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>தெஹிவளை குண்டுத்தாக்குதல்</h2><p>இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்களின் தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.</p><p>தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வீடும், தாக்குதலுக்கு உள்ளான வீடும் ஒரே ஒரு சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்ததால், தவறுதலாக இந்த குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e4b3ef-bd2a-4719-bd5a-257825de39e8/26-6aa975591622a.webp' /></p><p>பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கொஸ் மல்லி” என்ற தனது உறவினர் மற்றும் போதிய வத்த பகுதியைச் சேர்ந்த “அவிஷ்கா” ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p>தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் கேரேஜ் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>விசாரணையில் வெளிவந்த இரகசியம்</h2><p> 
வாகனத்தைக் கேரேஜில் ஒப்படைத்த நபர் மற்றும் கேரேஜ் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
செப்டம்பர் 10 இரவு 9 மணியளவில், களுபோவில சரணங்கர வீதியைச் சேர்ந்த ஹிருத்ம ஷாஷ்மிக என்ற “ஹிரு மல்லி” மற்றும் தாக்குதலை நடத்திய மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்ற “மது” ஆகியோர் அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c30a4f8-6b98-405b-98b7-539292286b0d/26-6aa97559bff30.webp' /></p><p> </p><p>
மேலும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கண்டவல வீதியில் “ஜதுங்க பிரியந்த” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மது என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. </p><p>
தற்போது தாக்குதலை நடத்திய நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். 
இவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் வேலையை தொடரும் நாமல்! பிள்ளையான் - கருணாவைத் தொடர்ந்து அர்ச்சுனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450"></link>
            <id>https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450</id>
            <summary type="text">
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச மாற்றியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்றையதினம்(15.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தடை செய்யப்பட்ட அமைப்பை பிரசாரம் செய்வது அவருக்கே நல்லதல்ல.</p><h2>அர்ச்சுனாவின் உறுதி மொழி&nbsp;</h2><p> 

ஏனெனில், தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் சார்பாக அவர் நாடாளுமன்றத்தில் செயற்பட மாட்டேன் என்றும், அரசுக்கு எதிராக சதி செய்யமாட்டேன் என்றும்&nbsp; உறுதி செய்திருக்கின்றார்.</p><p>

அதையும் மீறி, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று தொடர்பில் அவர் பிரசாரம் செய்வாரெனில் அது அவருக்குத்தான் நல்லதல்ல.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, அந்த மேடையில் இருந்தவன் என்ற வகையில், அர்ச்சுனா இராமநாதனின் அன்றைய முழு உரையிலும் நான் கண்டுகொண்ட விடயம், வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அவர் ஒரு முயற்சி செய்து வருகின்றார் என்பது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4d5294-e75e-4f1b-b4db-6fc0395549d2/26-6aa9046a5b4fc.webp' /></p><p> 

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சகோதரர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக, அதற்குரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதற்காக அர்ச்சுனா இராமநாதன் முயற்சி செய்து வருகின்றார்.</p><p>

இந்த நாட்டைப் பிரிக்க எண்ணுபவர்களுக்கு இந்த நடவடிக்கை கண்ணை குத்துகிறது போலும்.</p><p>

ஆனால், அர்ச்சுனாவின் கடந்த கால வரலாற்றையும், அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த விதத்தினையும் நோக்கும் போது, அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழும்.
</p><p>
நிச்சயமாக அவருடைய இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம், நாமல் ராஜபக்ச தான். வேறு யாரும் இல்லை.
அவர்தான் அர்ச்சுனாவை மாற்றியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89794755-dd61-4190-989e-d18612429dbe/26-6aa9046b230e7.webp' /></p><p>

அதேபோல, கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியைக் காட்டியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
ஆனால் ஒருபோதும் கருணாவோ, பிள்ளையானோ, ஆட்சி மாற்றத்தைக் கோரவோ, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றோ கோரியதில்லை.
</p><p>
இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. அந்த நிலையை எற்படுத்தியது நிச்சயமாக நாமல் ராஜபக்சதான். இது ஒரு பாரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-15T15:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரியம்மன் ஆலயத்திற்காக விறகு தேட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - 5 நாட்களுக்கு பின் வந்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736"></link>
            <id>https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக 41 இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.
</p><h2>
41 பேர் கைது</h2><p>
இதன்போது, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் 41 பேரும் கைது செய்யப்பட்டனர். 

அத்துடன், அவர்கள் ஏற்றி சென்ற பெட்டியுடனான இரண்டு உழவு
இயந்திரங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7831240b-6f3e-47b1-aa89-a4bb93132e3b/26-6aa966c369de0.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட அனைவரும் கந்தளாய் நீதவான் நீதிமன்றினால் சொந்த பிணையில்
கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றயதினம் (15/09/2026) குறித்த
வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் நீதவான் மன்றினால்
உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டது.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி நிருஷ்
ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T15:40:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பல்கலைக்கழகங்களில் கடுமையான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-shortage-of-lecturers-in-state-universities-1789484587"></link>
            <id>https://tamilwin.com/article/severe-shortage-of-lecturers-in-state-universities-1789484587</id>
            <summary type="text">இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் பல்கலைக்கழக பாடநெறிகளுக்கான மாணவர்களை சேர்ப்பதிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதனால் 2025 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதிலும் இந்தப் பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>அதிக வரி</h2><p>
</p><p>
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் பேராசிரியர் அருண வன்னிநாயக்க ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்பொது மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறைந்த சம்பளம், அதிக வரி மற்றும் குறைந்த சலுகைகள் காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் வெளிநாடுகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20e5676c-91d3-4f4f-91aa-0aec7cf4c983/26-6aa961fda1c5e.webp' /></p><p>
</p><p>
இதனால் ஓய்வு பெறும் அல்லது பணியை விட்டு விலகும் விரிவுரையாளர்களின் இடங்களை நிரப்புவதிலும் பல்கலைக்கழகங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தீர்க்க கல்வியாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 50 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும், வரிச்சுமையை குறைக்க வேண்டும் மற்றும் ஏனைய சலுகைகளை விரிவுப்படுத்த வேண்டும்.</p><h2>பல்கலைக்கழக முறைமை</h2><p>
</p><p>
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டது.
</p><p>
இதேவேளை, புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், முதலில் தற்போது உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c76619e5-d481-402c-bb76-f7c6abeed73d/26-6aa961fe57ad5.webp' /></p><p>

மேலும் விரிவுரையாளர் நியமனம் தொடர்பிலான இழுப்பறி நிலை தொடருமானால் அரச பல்கலைக்கழக முறைமை பாதிக்கப்படலாம் என்றும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T15:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ட்ரோன் தாக்குதல்: எாிபொருள் நிலையங்கள் இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937"></link>
            <id>https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937</id>
            <summary type="text">உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது.</p><p>அத்தோடு, குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தலைநகர் மேயர் விட்டாலி
க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இரு நாடுகளும் ஒன்றின் சக்திவள மையங்கள் மீது மற்றையது தாக்குதல்
நடத்துவதில்லை என உடன்பாடு கண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
அறிவித்த அடுத்த நாளே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அண்மைக்காலமாக உக்ரேனின் சக்திவள உள்கட்டமைப்புகளை இலக்குவைத்து வரும் ரஷ்யா,
தற்போது எாிபொருள் நிலையங்கள் மீதும் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, உக்ரேனும் பதிலடித் தாக்குதலாக ரஷ்யாவின் தாகன்ரொக் பகுதியிலுள்ள
மின்-வணிகக் களஞ்சியசாலை மற்றும் சமாரா பிராந்தியத்திலுள்ள தொழிற்துறை வளாகம்
என்பனவற்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a2f84e-5c99-4afc-91c5-f685d7c58ac9/26-6aa95c3ae7988.webp' /></p><p>

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளான போலந்து
மற்றும் லிதுவேனியா ஆகியன தமது வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் போர்
விமானங்களை அவசரமாக இயக்கின.
</p><p>
இதில் லிதுவேனியாவில் வான்வெளியை அண்மித்த ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானம்
சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116"></link>
            <id>https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.

குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.</p><p>

குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bd02c08-5ca2-4084-8777-a3bc92238ec5/26-6aa95356cd002.webp' /></p><p>&nbsp; வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில்
சந்தி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால்
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>

தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:17:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226"></link>
            <id>https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226</id>
            <summary type="text">
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்</b></h2><p>இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9f5234-11e3-44de-85b7-b7265395a1ef/26-6aa950c131178.webp' /></p><p>கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><h3><b>

பல கொலை குற்றச்சாட்டுக்கள்</b></h3><p>பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ce1d0-9da5-4f2f-9839-8d9747d7e295/26-6aa950c1e2283.webp' /></p><p>சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T14:06:13+00:00</updated>
        </entry>
    </feed>
