<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-24T10:33:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் அதிக வெப்பம்: ஏற்படவுள்ள அபாய நிலை - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157"></link>
            <id>https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157</id>
            <summary type="text">உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீர் கொள்ளளவு வீழ்ச்சி</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியபோதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b55b5a2-55d6-4dda-869b-60d8d746a420/26-6a8c144c579e9.webp' /></p><p>அத்துடன் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வேகமாக ஆவியாகி வற்றிப்போதல் இடம்பெறுகிறது. 

இந்த நிலைமையின் கீழ் நீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், நீர்வளம் வேகமாகச் சுருங்கி வருகிறது. </p><p>

இதனால் கடும் வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் சுற்றாடல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய நேரிடுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிப்பது கடினமாக அமையக்கூடும்.</p><h2>குடிநீர் விநியோகம்</h2><p> </p><p>குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், சில பகுதிகளுக்கான விவசாயத்திற்காக விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ccd6a1-c493-4f1f-88c4-73e6b43039c1/26-6a8c144d0dc51.webp' /></p><p>இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் சுற்றாடலுக்கு இணக்கமாக வாழ்வதும் ஆகும். நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அது மிக வேகமாகப் பரவும் அபாயமும் காணப்படுகிறது.</p><p> எனவே இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அவர் பொது மக்களை எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் தினத்திற்கான மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மன்னாரில் இன்று (24.08.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>போராட்டங்களுக்கான பலன்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோர்
தினம் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தன்று நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள்
துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ
அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு
இருக்கிறோம்.</p><p>

காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது
அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக்
கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து
பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை.</p><p>அதனால் தான் இந்த சர்வதேச
வலிந்து காணாமலாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த
தீர்மானித்திருக்கிறோம்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை
செல்வா கலையரங்கத்தில் மாநாடு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

உறவுகளைத் தேடித் திரிந்த அம்மாக்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம்
மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு
இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0de07a-1b6b-482a-8259-5e025af59432/26-6a8c1b024efe8.webp' /></p><h2>புத்தகம் வெளியிட தீர்மானம்</h2><p> </p><p>காணாமல்போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம்
வெளியிடுவதற்கு இருக்கிறோம்.

காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு
மகஜர் கையளித்தோம், காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார்
யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள்
தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்றதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம்
வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
</p><p>
வருகிற 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.
காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17000 உறவுகள் 8 மாவட்டத்திலும் இந்த காணாமல்போய் உள்ளனர். அவர்களின் அம்மாக்களும்
மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு
அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம். </p><p>ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து
வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த
மாநாட்டை செய்கிறோம்.

இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த
அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள்
என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மகாநாட்டை செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தொடரும் போலி வாக்குறுதிகள் - ஏமாந்து விட்டார்களா தமிழ் மக்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468"></link>
            <id>https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வருகின்றார்.
</p><p>
எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுடன் வரப்போகும்
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு தொடர்பான பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக
அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய
மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு
துறைநீலாவணை பிரதேசத்தில் நேற்று(23.08.2026) மாலை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

போலி வாக்குறுதிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

“பட்டிருப்பு தொகுதி என்றால் அது ஒரு தமிழ் தொகுதி. இங்கு தேசிய கட்சிகளோ அல்லது மாற்றுக் கட்சிகளோ ஆசனங்களைப் பெற முடியாது. துறைநீலாவணை, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற பகுதிகளில் தமிழ் தேசிய உணர்வுடன், தமிழர்கள் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f0c0db-19f0-4bc7-bad4-3c61b5247f12/26-6a8c163eaa04f.webp' /></p><p>
</p><p>
அந்த உணர்வையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, எங்களுடைய வாக்குகளைச் சூறையாடி, தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
தேர்தல் காலங்களில் இங்கு வந்து போராடினோம், மாவீரர்களை இழந்திருக்கிறோம் என்று கூறி எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்றனர். </p><p>பின்னர் நாடாளுமன்றம் மற்றும் பிரதேச சபைகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற்று அதிகாரம் கைக்கு கிடைத்ததும், அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.</p><h2>

76 வருடங்களாக தொடரும் அடக்குமுறை</h2><p>
இதுதான் இன்று வடக்கு, கிழக்கில் காணப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை. தமிழர்கள் நம்பி வாக்களித்த, தமிழர்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய இந்த மண்ணின் தரப்புகள், தமிழர்களுடைய விவகாரங்களைக் கையாளாமல், தங்களுடைய சொந்த நலனுக்காகவும் அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e227e1b0-84bf-431d-a81d-f99cb698d885/26-6a8c163f78f77.webp' /></p><p>

எமது மக்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும் கிழக்கில் எந்தவொரு தரப்பும் இல்லை.
</p><p>
இந்த மண்ணில் கடந்த 76 வருடங்களாக மிகப்பெரிய இன அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றோம். சிங்களப் பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்கி வருகின்றது” என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் பரபரப்பை ஏற்படுத்திய கைக்குண்டு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505"></link>
            <id>https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட ‘வனாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா தட்சிண கப்புகே என்ற ராணாவிற்கு சொந்தமான வீட்டின் மீதே (23) நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மோட்டார் சைக்கிள்&nbsp;கண்டெடுப்பு</h2><p>சந்தேகநபர் மோட்டார் சைசைக்கிளில் பிரவேசித்து கைக்குண்டை வீசிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e829b5-4d5e-45ac-a1e3-441f65b5e5d9/26-6a8c158f77f4f.webp' /></p><p>இதற்கமைய, குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததற்காக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p>

குண்டுத் தாக்குதலை நடத்தப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொட்டிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb2e7b3-1060-4033-b760-856051275432/26-6a8c15902af2d.webp' /></p><p>மோட்டார் சைக்கிளின் பதிவு எண் சிசிடிவி கமராவில் தெரியவந்ததையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>

கைது செய்யப்பட்டவர்களில், மோட்டார் சைக்கிளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர், அதை அடகு வைத்ததாக கூறப்படும் அவரது சகோதரர், மற்றும் அடகு வாங்கியதாக கூறப்படும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/inhdnMV3aNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-24T09:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருளுக்காக கோடிக்கணக்கில் செலவிட்ட முன்னாள் சபாநாயகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-of-sri-lanka-national-audit-office-1787564883"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-of-sri-lanka-national-audit-office-1787564883</id>
            <summary type="text">மகிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பதவி வகித்த 9ஆவது நாடாளுமன்றத்தின் 2023 மற்றும் 2024 ஆகிய இறுதி இரண்டு ஆண்டுகளில் வரம்பற்ற முறையில் எரிபொருளை பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பதவி வகித்த 9ஆவது நாடாளுமன்றத்தின் 2023 மற்றும் 2024 ஆகிய இறுதி இரண்டு ஆண்டுகளில் வரம்பற்ற முறையில் எரிபொருளை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் சபாநாயகரால் சராசரியாக மாதந்தோறும் முறையே 3,994 லீட்டர் மற்றும் 6,122 லீட்டர் வரை எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p> இந்த எரிபொருள் பயன்பாட்டு அதிகரிப்பானது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 66 சதவீதம் மற்றும் 155 என்றளவில் பாரிய அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>2023-2024 காலப்பகுதியில் பாவிக்கப்பட்ட எரிபொருள்</h2><p>2023 ஆம் ஆண்டில் சபாநாயகரின் எரிபொருளுக்காக வருடத்திற்கு ரூ. 19,373,866 செலவிடப்பட்டுள்ளது.</p><p> 2024 ஆம் ஆண்டில் ரூ. 26,045,103 செலவிடப்பட்டுள்ளது. 
ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது கணிசமான அளவு அதிகரிப்பாகும.</p><p>இந்த கணக்காய்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 9-வது நாடாளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்ட 3 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான எரிபொருளுக்கு மேலதிகமாக அவரது தனிப்பட்ட சொகுசு காரிற்காக ரூ. 8,545,032 பெறுமதியான 21,299 லீட்டர் எரிபொருள் பெறப்பட்டுள்ளது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f380d44-ccf0-4a31-9319-69a71b1f36d6/26-6a8c1355d44bd.webp' /></p><p>2024 ஆம் ஆண்டில் 2 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,515 லீட்டர் எரிபொருள் அதிகமாகப் பெறப்பட்டுள்ளது.</p><p> 
2022 மற்றும் 2024 இற்கு இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ரூ. 6,071,690 பெறுமதியான 15,063 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார். </p><p>இதன் வருடாந்த சராசரி 5,021 லீட்டர்களாகும். தற்போது அரச சேவையில் அதிகபட்ச எரிபொருள் நுகர்வைக் கொண்ட அமைச்சின் செயலாளரின் பதவியைக் கருத்திற்கொள்ளும்போது இது சுமார் 2,300 லீட்டர் மேலதிகப் பயன்பாடாகும்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T09:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறை! அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-initiative-accelerate-air-cargo-transport-1787559688"></link>
            <id>https://tamilwin.com/article/digital-initiative-accelerate-air-cargo-transport-1787559688</id>
            <summary type="text">இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டு வான்வழி சரக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டு வான்வழி சரக்கு சமூக அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த முயற்சிக்கு, பலதரப்பு பங்குதாரர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இதில் விமான நிலையங்கள் மற்றும் வான்வழி சேவைகள் நிறுவனம், இலங்கை சுங்கம், இலங்கை முதலீட்டு சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களும் பங்குதாரர்களும் அடங்குவர்.</p><h2>ஆரம்ப முயற்சி</h2><p>
</p><p>
2023ஆம் ஆண்டிலும் இந்த அமைப்பை அறிமுகப்படுத்த ஒரு ஆரம்ப முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையில் போதுமான ஒருங்கிணைப்பையும் உடன்பாட்டையும் ஏற்படுத்த இயலாததால், அதனை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e5442d-f3b8-442b-85fe-8896cb9c239c/26-6a8c0c67f323b.webp' /></p><p>
</p><p>
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் இந்த முயற்சி முறையாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
வான்வழி சரக்கு சமூக அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் வணிகத் தேவைகளை மதிப்பிடுவதற்காக ஒரு சாத்தியக்கூறு ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.</p><h2>சிறப்பு ஆய்வுக் கூட்டம்</h2><p>
</p><p>
இதன் முன்னேற்றம் குறித்த ஒரு சிறப்பு ஆய்வுக் கூட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்குவின் தலைமையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd2b61e0-0754-4d93-a739-f752edf38076/26-6a8c0c68c4800.webp' /></p><p>
</p><p>
இந்த அமைப்பைச் செயல்படுத்துவது, நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, விமான சரக்கு அனுமதி வழங்கும் செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களையும் தேவையற்ற ஆவணப் பணிகளையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இது இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்க உதவுவதோடு, விமான சரக்குத் துறையின் செயல்திறனை அதிகரித்து, நாட்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கும் என்றும் அமைச்சு குறிப்பிடுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T09:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-village-destroyed-by-military-in-ampara-1787562551"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-village-destroyed-by-military-in-ampara-1787562551</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால்
அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ
போராட்ட வரலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால்
அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ
போராட்ட வரலாற்றில் முதல் 1985 ஒகஸ்ட் 24ஆம் திகதி விடுதலை
இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான 
பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40
பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும், தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம். </p><p>என்பதுடன் இந்த இனஅழிப்பின் 41 வருட நினைவு தினம் 24.08.2006 திங்கட்கிழமை ஆகும்.

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8
மையில் தொலைவில் வயலூர் கிராமம் 1972ஆம் ஆண்டு காணியற்ற வறிய மக்கள் 200
குடும்பங்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது.
</p><p>
அரசாங்கம் அக்கால பகுதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மரவள்ளிக்
கிழங்கும், குரக்கனும் சாப்பிடுமாறும், உணவு விடுதிகளில் சோறு சமைக்கக் கூடாது என கேட்டுக் கொண்ட காலப்பகுதியில் இக்கிராமம் உணவு மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டது.</p><h2>



உணவு பஞ்சம் வந்தும் இடம்பெயராத மக்கள்</h2><p>


இந்த கிராமத்தை அடைவதற்கு சாகமத்திலிருந்து காட்டு வழிபாதை மட்டும் உள்ளதுடன்
நான்கு சக்கர உழவு இந்திரங்கள் மாட்டுவண்டிகள் என்பவை விவசாயத்துக்கான
உள்ளீடு மற்றும் உற்பத்திகளை ஏற்றிச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டன, அதேவேளை
ஏழைகள் வழமையாக இந்த தூரத்தை நடந்து சென்று வந்தனர்.</p><p>

இவர்கள் தடிகள், களிமண், ஓலை புல்லுகளினால் தமது இருப்பிடங்களை அமைத்து
குடியமர்தப்பட்ட இவர்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள் என்பன இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a16814b-45e2-4f93-88c3-d78bac448629/26-6a8c0c1a5204c.webp' /></p><p>
</p><p>

இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மலேரியா மற்றும் நீரிலான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதுடன், தமது
வைத்திய சேவையை பூர்த்தி செய்ய 10 மையிலுக்கு அப்பால் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது.</p><p>

இருந்தபோதும் தமது விவசாயமான சோளம், குரக்கன், மரவள்ளி போன்ற பயிர்களை தொடர்ந்து பயிர் செய்துவந்ததுடன், அவர்களது ஆடுகள், கோழிகளை நரிகள், சிறுத்தைகள்,
திருடிச் சென்ற அதேவேளை, காட்டுப்பன்றிகள் பயிர்களையும் நாசம் செய்தன.</p><p>

 ஆயினும் அவர்கள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.
</p><h2>
அடிப்படை வசதிகளற்ற கிராமம்</h2><p>

இத்தகைய ஒரு சமூகம் தான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டது, இந்த யுத்த
நிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்தனா தலைமையிலான
அரசாங்க குழுவும் (ரி.யு.எல்.எப்) தமிழர் விடுதலைக் கூட்டணியிலான விடுதலை இயக்கங்களான தமிழ்ழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ்.
ரெலோ ஆகிய 5 இயக்கங்களுக்கும் இடையிலான திம்புவில் பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருந்த சமயம், இராணுவப் படைகள் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5bf4a7-5b85-412c-80a1-890bfefd4b12/26-6a8c0c1b57472.webp' /></p><p>
</p><p>
1985ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை வேளை வயலூர் மக்கள் மீது தாக்குதல்
ஆரம்பிக்கப்பட்டது.

 இந்த தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டன, இவ்வயலூரின்
தாக்குதலில் விதவையாக்கப்பட்ட பெயர் குறிப்பிடாத 5 பிள்ளைகளுக்கு தாயாரானவர், “ இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் எனது கணவர் கொல்லப்பட்டார்” என்றார்.</p><h2> 

இராணுவத்தினரின் அட்டூழியங்கள்</h2><p>
அவர் மேலும் கூறுகையில், </p><p>

“நாங்கள் வயலூரில் கிழங்கு, மாப்பொருட்கள், மரக்கறி வகைகள். பழமரங்கள் செய்கைபண்ணி வாழ்ந்துவந்தோம், ஆனால் எங்களுக்கு சுத்தமான குடிநீர்,கடைகள், பாடசாலை, வைத்தியசாலை இருக்கவில்லை.

1985.08.24ஆம் திகதி அதிகாலை 6 மணியளவில், நான் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். </p><p>திடீரென ஒரு தொகை
மனிதர்கள் துப்பாகியுடன் எமது குடிசைகளை சுற்றி நின்று கொண்டிருப்பதை அவதானித்தேன் .

நான் பீதியடைந்து வந்தவர்களைக் கண்டு மிகப்பயத்தில் நடுங்கினேன், நான் பதற்றப்பட்டிருப்பதை கண்டுகொண்ட அவர்கள் என்னை நெருங்கி சிங்கள மொழியில் கேள்விக்கு
மேல் கேள்வி கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01882e0d-589e-4be7-8eda-c1ab41e7591f/26-6a8c0c1c0a98f.webp' /></p><p>
</p><p>
எனக்கு அவை விளங்கவில்லை, அப்பொழுது எனது கணவர் வந்ததால்
நட்புணர்வு சைகைகளை காட்டி நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் வாளியை எடுத்துக்
கொண்டு தங்களுடன் வருமாறு கேட்டனர்.</p><h2> 

காட்டு வழிப்பாதையில் சென்ற மக்கள்</h2><p>
எனது கணவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.
</p><p>
குடிசைகளுக்குள் புகுந்து அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாவரையும்
வெளியில் கொண்டதுடன் வயோதிபர் நோயாளிகள் என்போரை அப்பால் செல்லுமாறு கூறினர்.
</p><p>
பின் உடல் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றனர் இதில் பெண்களும் அடங்குவர்.

அங்கிருந்து கிழக்கு திசையாகக் காட்டுப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம்.</p><p> இராணுவச் சிப்பாய் ஆண்களை அழைத்து தமது காலை ஆகாரத்திற்கு முகம் கழுவுவதற்கு
நீர் கொண்டுவருமாறு கேட்டனர்.

அப்பொழுது காலை 8 மணியிருக்கும் அவ்வாறே ஆண்கள்
தண்ணீர் கொண்டு வந்ததும் சிப்பாய்கள் தமது காலை ஆகாரத்தை சாப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/040eacf0-7c00-4513-905f-ca5c9990cf80/26-6a8c0c1cb2d61.webp' /></p><p>
</p><p>
 ஆனால் நாங்கள் பட்டினியாக இருந்தோம் ஒரு கோப்பை தேநீர் கூட கிடைக்கவில்லை, அவர்கள்
தமது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் எல்லோரையும் தம்மோடு வருமாறு கூறினர், ஆனால் எங்கே என்று கூறவில்லை.</p><p>
அவர்கள். கட்டளைக்கு இணங்கி நாங்கள் காட்டுவழிபாதை ஊடாக சென்றோம், அப்பொழுது
மற்றுமொரு இராணவ சிப்பாய்க் குழு ஒன்றை சந்தித்தோம்.

அந்த குழுவிற்கு
தலைமை தாங்கிய உத்தியோகத்தர் ஆண்களுடன் பெண்களை அழைத்து வந்ததை பிழையெனக்
கண்டுகொண்டார்.</p><p>

 இரண்டாது குழு தலைவர் பெண்களிடம் வந்து தமிழிலே பேசினார் அவர் கூறும்போது, “ நீங்கள் ஆண்களுடன் வரவேண்டியதில்லை இராணுவ வீர்கள் தமக்கு
அறிமுகமற்ற பகுதியில் இருக்கின்றனர். எங்களுக்கு ஆண்கள் தேவை அந்த மரத்தின் கீழ் சென்று மதியம் வரை காத்திருங்கள், ஆண்கள் திரும்பிவருவார்கள்” என்றார்.
</p><h2>
கிராமத்து ஆண்களுக்காக காத்திருந்த பெண்கள்</h2><p>
நாங்கள் அந்த மரத்தின் கீழ் காத்திருந்தோம் அவர்கள் குமரன் குளத் திசையில்
சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஆண்கள் திரும்பிவரவில்லை சூரியகதிர் தலையை
சுட்டெரிந்தன எமது ஆண்கள் திரும்பிவரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை.</p><p>
வீட்டில் இருக்கும் எமது குழந்தைகளுக்காகவும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எமது ஆண்களுக்காகவும் உணவு சமைக்க வேண்டியிருந்தது.
</p><p>
 எங்கள்
குடிசைகளுக்கு திரும்பி வந்து உணவு சமைப்பதில் ஈடுபட்டோம் அப்பொழுது கொலை செய்தி வந்தது

இந்த செய்தியை கொண்டுவந்தவர் உயிர் தப்பி வந்தவர் ஏனையவர்கள் குமரன்
குளப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டு கிடக்கின்றனர் என கூறினார்.</p><p>இவ்வாறு நடந்த செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் பாதுகாப்புக்காக உடுத்த உடையுடன்
நடந்து சென்று திருக்கோவில், பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள
உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தோம்.


அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்களை 
வயோதிபர்கள் அந்த இடத்துக்கு சென்று சடலங்களை பூர்விக கிராமத்துக்கு
கொண்டுவந்து உரிய மரணச்சடங்குடன் புதைக்கப்பட்டனர்.</p><p> 

வயலூரில் எங்களின் சொத்துக்கள் யாவற்றையும் இழந்தோம்.

கே. வேலுப்பிள்ளை என்பவர் தனது 2 மகன்களான குழந்தைவேல் ஜெயகாந்தன்,(22)
நாகலிங்கம்(22) மருமகன் சின்னவன் கந்தசாமி(30) தனது மூத்த சகோதரன் தம்பிப்பிள்ளை மாமா ஆன ஏரம்பு என்பவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
</p><h2>

உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் சொன்ன செய்தி</h2><p>

படுகொலையின் போது உயிர் தப்பிய வர்த்தகரான வைரமுத்து கனகசபை பின்வருமாறு கூறினார்,
</p><p>
“அடிக்கடி வியாபார நிமித்தம் வயலூருக்குச் செல்லும் நான் 23ஆம் திகதி பிற்பகல் 2 மாடுகள் பூட்டிய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு
திருக்கோவிலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தைக்காக பொருட்களை கொண்டுவர
வயலூருக்கு போயிருந்தேன்.
</p><p>
அன்றிரவு மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அங்கு
தங்கிருந்தேன் 24ஆம் திகதி காலை அப்பகுதியை விட்டு புறப்படும் போது அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

 நான் விவசாயிகளுடன் ஒரு குடிசையில் இருந்தேன். </p><p>நான் கைது செய்யப்பட்டாலும், பின்
விடுவிக்கப்பட்ட போது நான் எடுத்துச் சென்ற பணமும் சைக்கிளும் காணாமல் போயிருந்தது.

இராணுவத்தினர் என்னை செல்லுமாறு சொன்னதால் நான் சென்றேன் ஆனால் குமரன் குளப்பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில் மறைந்திருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27445167-eb72-4f95-9994-6909c9fa8517/26-6a8c0c1d64498.webp' /></p><p>

 சிறிது நேரத்தில் துப்பாகி வேட்டுக்கள் கேட்டன பின் இராணுவத்தினர் தமது வாகனத்தில்
சென்ற பின்பு நான் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபொழுது அவர்கள் சுடப்பட்டு இறந்து கிடந்தார்கள்.</p><p>

 ஆயினும் இரு விவசாயிகள் காயத்துடன் கிடந்தனர், ஒருவருக்கு
வாய்க்குள் துப்பாகி வைத்து வெடிவைக்ப்பட்டுள்ளது. இவர் இறக்கவில்லை மற்றவரின்
பெயர் நடராஜா நான் இந்த செய்தியை வயலூருக்கு சென்று கூறினேன்” என்றார்.</p><h2> 


40க்கும் மேற்ப்பட்டோர் படுகொலை</h2><p>

இந்த சம்பவத்தின் போது, 40 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக கனகசபை உறுதிப்படுத்தினார்.

வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்பு 2008ஆம்
ஆண்டு தான் முதல் முதலாக இப்படுகொலை பற்றி வெளியுலகிக்கு கொண்டு வர முடிந்தது.</p><p>


இருந்தபோதும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசுடன் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தமிழ் மக்களை சிங்கள
பேரினவாத அரசின் படையினரால் பௌத்த கோட்பாடு அடிப்படையில் வயலூர் கிராமம்
தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன், இது ஒரு கிராமத்தையே அழித்த
கறைபடியாத படுகொலையாகும். 

இந்த கிராமம் காடுகளாகி விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7b68aa-025f-432c-ae9a-a6806b476eba/26-6a8c0c1e1692c.webp' /></p><p> </p><p>தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தையின் போது
முதல் முதல் நிகழ்ந்த ஒரு படுகொலை என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான
படுகொலைகள் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பொத்துவில்
தொடக்கம் நீலாவணை வரை தங்கவேலாயுதபுரம், பெத்துவில், குண்டுமடு, அக்கரைப்பற்று,
திராய்க்கேணி, வீரமுனை, சென்றல்காம், மல்வத்தை, அம்பாறை நகர், காரைதீவு,
கல்முனை, நிந்தவூர் போன்ற தமிழ் கிராமங்கள் இராணுவத்தினராவும்
ஊர்காவல்படையினராலும் சுற்றிவளைத்து சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள்
என நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களது வாழ்விடங்கள் தீ வைத்து எரித்து உடைத்து அழித்தனர்.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன.
</p><h2>
மனித உரிமைக்காக உயிரை கொடுத்தவர்கள்</h2><p>

இருந்தபோதும் அந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை
இதனால் தற்போதைய சமூதாயத்துக்கு தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை
மீறல்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
 எனவே தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள்
மனித உரிமை மீறல்கள் அந்தந்த காலத்தில் அதற்கான நினைவேந்தல்களை செய்யவேண்டும்
என்பது தமிழ்களின் கடமையாகும்.</p><p>

இருந்த போதும். தமிழ் இன அழிப்பின் ஆரம்ப புள்ளியாக இந்த மாவட்டத்தில்
ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புக்களை பறைசாற்றி
நிற்கின்றது. என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும்.</p>]]></content>
            <updated>2026-08-24T09:18:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூகலிப்டஸ் மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-died-after-falling-from-a-tree-1787561002"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-died-after-falling-from-a-tree-1787561002</id>
            <summary type="text">யூகலிப்டஸ் மரத்தில் ஏறி அதனைத் துண்டுகளாக வெட்ட
முயன்றபோது மரத்திலிருந்து கீழே ​​தவறி விழுந்து
பலத்த காயமடைந்த ஒருவர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யூகலிப்டஸ் மரத்தில் ஏறி அதனைத் துண்டுகளாக வெட்ட
முயன்றபோது மரத்திலிருந்து கீழே ​​தவறி விழுந்து
பலத்த காயமடைந்த ஒருவர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார் என பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையின்
மாவட்ட மருத்துவ அதிகாரி திரு. ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
</p><p>
மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர், ஹகுரங்கெத்த, ஹெவஹெட்டவைச் சேர்ந்த 52
வயதான சரத் வீரசேகர ஆவார்.
</p><h2>சம்பவம் குறித்து விசாரணை</h2><p>
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் ஹெல்பாட தோட்டதில் கீழ் பகுதியில்
யூகலிப்டஸ் மரங்களை வெட்டுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரின் கீழ்
உயிரிழந்தவர் பணிபுரிந்து வந்து உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08f400c7-20e9-4d49-a271-5a9fe9efc23c/26-6a8c0b4818715.webp' /></p><p>சுமார் 35 அடி உயரமுள்ள யூகலிப்டஸ்
மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது தவறி அவர் கீழே விழுந்து பலத்த
காயமடைந்தவரை மீட்டு பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
</p><p>
நோர்வூட் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T09:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவுகளில் முறைகேடு - பிரதேச செயலகத்திற்கு முன்பு கூடிய பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregularities-ashwesuma-payment-public-complaint-1787559367"></link>
            <id>https://tamilwin.com/article/irregularities-ashwesuma-payment-public-complaint-1787559367</id>
            <summary type="text">நோர்வூட் பகுதியில் அஸ்வெசும கொடுப்பனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும்,&amp;nbsp; அஸ்வெசும தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பகுதியில் அஸ்வெசும கொடுப்பனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும்,&nbsp; அஸ்வெசும தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் பெருமளவான
மக்கள் இன்று(24 )பிரதேச செயலகத்திற்கு முன்பு கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த பலருக்கு இதுவரை நிதி கிடைக்காமை தொடர்பில் விசாரிப்பதற்காக பிரதேச
செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>அஸ்வெசும நிதி</h2><p>
</p><p>
இதன் காரணமாக, காலை முதல் நோர்வூட் பிரதேச செயலக வளாகத்தில் நீண்ட வரிசையில்
மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்ததுதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சிலர், அஸ்வெசும நிதியை
பெற்றுக்கொள்வதற்காக தாங்கள் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வருகை தர
வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b195f51-56f7-4890-92c5-a008c062e79e/26-6a8c02084fafc.webp' /></p><p>

மேலும், அதிகாரிகள் தங்களது வீடுகளுக்கு நேரடியாக வந்து நிலைமைகளை
பார்வையிடவுள்ளதாகவும், அந்த ஆய்வின் பின்னரே அஸ்வெசும நிதி வழங்குவது
தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்
மக்கள் கூறுகின்றனர்.</p><p>

சிலர் தங்களது விண்ணப்பங்கள் தொடர்பில் தெளிவான தகவல்களை பெற்றுக்கொள்ள
முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வர
வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.</p><h2>மக்களின் முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
அஸ்வெசும நிதி என்பது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு
வழங்கப்படும் நலன்புரி உதவியாகும். எனவே, தகுதியுடையவர்களுக்கு உரிய
முறையில் நிதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf499264-930b-44a2-824a-bddc0b0e6f1e/26-6a8c0207823d2.webp' /></p><p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாக
கூறப்படும் நிலையில், தற்போது பெருமளவான மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு
தீர்வு கோரி பிரதேச செயலகத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு,
தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அஸ்வெசும நிதி வெளிப்படையான முறையில்
வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய
கோரிக்கையாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம் - கூறுகிறார் ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-provience-governer-statement-1787560126"></link>
            <id>https://tamilwin.com/article/northern-provience-governer-statement-1787560126</id>
            <summary type="text">வட மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.உயிர்கொல்லி போதைப்பொருள்
கட்டுப்பாடு,...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>உயிர்கொல்லி போதைப்பொருள்
கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்
இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும்
தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், புதிதாக வட மாகாண
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (24.08.2026) காலை
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec0e92d-ae29-4125-80c6-8c5ac278215a/26-6a8c05abea847.webp' /></p><h2>ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு</h2><p>

இதன்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு
ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வட மாகாணத்தில் சட்டம்,
ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த
சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>இதன்போது வட மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும்
பரிமாறிக் கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2222ab6c-af46-492f-a4dc-7154367ce575/26-6a8c05acc3b40.webp' /></p><p>
</p><p>
வட மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம்
காணப்படுவதாக குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின்
பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.</p><h2>கவனம் செலுத்தப்பட்ட விடயம்</h2><p>
</p><p>
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல்
மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக
மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம்
செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079d36b3-53bc-44f5-8fed-98c95b928c3a/26-6a8c05ad990e6.webp' /></p><p>
</p><p>
இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு,
பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில்
தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும்
கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜெயமகா
அவர்களும் கலந்துகொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்! வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-explosive-devices-1787534942"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-explosive-devices-1787534942</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.FBI அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் ஸ்கொட்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.</p><p>FBI அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் ஆகியவை நடத்திய விசாரணைகள்&nbsp;இவை அனைத்திற்கும் மத்தியில் மிக முக்கியமானதாகும்.</p><p>இவர்கள் இரண்டு விசாரணைகளை நடத்தியுள்ளதுடன், அவற்றிலொன்று டிஜிட்டல் சான்றுகள் பகுப்பாய்வு (Digital evidence analysis) ஆகும். </p><p>இரண்டாவது இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (Explosive devices) தொடர்பான விசாரணைகள் ஆகும்.</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை வரவழைத்து ஜனாதிபதியை பரிசீலிக்குமாறு சட்டத்தரணி சன்ஜீவ வீரவிக்ரம தெரிவித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>வெடிப்பொருட்களின் தன்மை</h2><p>“சலேக்கு நீதி” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுரேஷ் சலே தடுத்து வைத்திருக்கும் முறைமை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3f9838-248d-4a2e-adc1-9dd4639fa90c/26-6a8b9e60712a3.webp' />&nbsp;&nbsp;</p><p>அனைத்து டிஜிட்டல் பயன்பாடுகள் (Digital apps) தொடர்பான விசாரணையை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் துறையும், அமெரிக்காவின் FBI தெளிவாகக் கூறியுள்ளது என்னவென்றால், இது இலங்கையில் தயாரித்து பயன்படுத்தப்பட்டவை அல்ல.
</p><p>இலங்கையில் இராணுவத்தினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர், மேலும் சில ஆயுதமேந்திய அமைப்புகளும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளன. அவர்கள் பயன்படுத்திய அதிகபட்ச பொருட்கள் RDX மற்றும் TNT ஆகும். ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பது TATP (Triacetone Triperoxide) ஆகும்.</p><h2>தடுப்புக்காவல் உத்தரவு</h2><p>இதற்கு பயன்படுத்தப்பட்ட திரவம் மிகவும் சக்திவாய்ந்த Liquid Precursor என்ற வகையாகும். 2019 ஆம் ஆண்டளவில் உலகளவில் இதை ஒரு குறிப்பிட்ட அமைப்பே பயன்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fcb52b8-3618-4b4b-9ebe-5abe184e1ed6/26-6a8be9a6af2cc.webp' />&nbsp;</p><p>இதனால் தான் FBI மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆகியவை மிகவும் தெளிவாகக் கூறின, இந்த தாக்குதல் குறித்த அமைப்புடன் தொடர்புடையது என்றும், அவர்களிடம் இருந்து தகவல்களையும் அறிவையும் பெற்று இங்குள்ள ஒரு அமைப்பால் செய்யப்பட்டது என்றும் இந்த அமைப்பு தான், தௌஹீத் ஜமா அத் தலைவர் வழிநடத்திய அமைப்பாகும்.</p><p>இந்த கருத்தை புறக்கணித்துவிட்டு, நீதிமன்ற விடயங்களில் தலையிடவோ, தடுப்புக்காவல் உத்தரவு (Detention order) பிறப்பிக்கவோ அல்லது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியாது. </p><p>தயவுசெய்து அந்த அறிக்கையை வரவழைத்துப் பாருங்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் ராஜ் படேல் சமர்ப்பித்த சாட்சியங்கள் மற்றும் சாட்சிய பகுப்பாய்வுகளைப் பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்த முழு கதையும் புரியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TSLf6CJ-wUs" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T08:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561"></link>
            <id>https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>

சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே இன்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>

இவர் நேற்று (23) காலை காணாமல்போனதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் உடனடியாக விசாரணையை தொடங்கிய நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

இதன்போது சம்பவ இடத்திலிருந்து 3 வகையான மருந்துகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

அதன்படி, அந்த மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>காணாமல்போனதாக கூறப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் உள்ள பாறையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>தீவிர தேடுதல்&nbsp;&nbsp;</h2><p>அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக இன்று (24) அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3312eb81-1f9b-4961-9802-d17476ee720b/26-6a8be3cf628d3.webp' /></p><p>இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், வைத்தியரின்&nbsp; உடலுக்கு அருகில் ஒரு வகை மருந்து, மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
இந்த சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee21249-9e49-47ff-8e38-8bcdf6cde5bc/26-6a8be3d017c1f.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை பணியில் இருந்ததன் பின்னர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணராக பணிபுரியும் கண்டியை சேர்ந்த திருமணமான வைத்தியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.</p><h2> கார் கண்டுபிடிப்பு</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ​​மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், அந்த வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிச்செல்வது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5948d344-4c37-49aa-b39a-77298e4fc3ac/26-6a8bbbe80dfd9.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் உள்ள 17வது தூண் பகுதியில் நேற்றிரவு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக, பொலிஸார், குற்ற நிகழ்வு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p>வைத்தியரின் கார் கண்டெடுக்கப்பட்ட இடம் யானைகள் நிறைந்த காடு என்றும், வனவிலங்கு அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjp_-haI_-w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கள தேசத்தின் லங்கா சமுத்திர கனவும் ஈழத்தமிழர் அரசியலும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinhalese-nation-dream-lanka-politics-eelam-tamils-1787550145"></link>
            <id>https://tamilwin.com/article/sinhalese-nation-dream-lanka-politics-eelam-tamils-1787550145</id>
            <summary type="text">மாறிவரும் உலக அதிகார ஒழுங்கில் கடல் வலுச் சமநிலை யார்பக்கம் இருக்கிறதோ அவர்களாலேயே உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியும். இன்று சமுத்திரங்களின் முக்கியத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாறிவரும் உலக அதிகார ஒழுங்கில் கடல் வலுச் சமநிலை யார்பக்கம் இருக்கிறதோ அவர்களாலேயே உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியும். </p><p>இன்று சமுத்திரங்களின் முக்கியத்துவம் என்றும் இல்லாதவாறு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தப் பூமியில் உள்ள ஐந்து சமுத்திரங்களில் ஆட்டிக் மற்றும் அந்தாட்டிக் சமுத்திரங்கள் உறை பனிச்சமுத்திரங்கள் என்பதனால் அவை பெரும் முக்கியத்துவம் பெறவில்லை.</p><h2> இலங்கையின் சர்வதேச அடையாளம்&nbsp;</h2><p> ஆனால் பசுபிக், அட்லாந்திக் மற்றும் இந்து ஆகிய மூன்று சமுத்திரங்களையும் இணைக்கின்ற சமுத்திரமாக இந்து சமுத்திரம் அமைவதனால் அதன் முக்கியத்துவம் இன்றியமையாதது. </p><p>இத்தகைய இந்து சமுத்திரத்தின் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் பிரிக்கின்ற பகுதியின் மையப்பகுதியை அண்டி இலங்கைத் தீவு இருப்பதனால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுதான் சிங்கள தேசத்தின் ராஜதந்திரி Chevaan Daniel&nbsp; “Indian Ocean” என்பதற்குப் பதிலாக “Lanka Ocean” என்று அழைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7799eb44-4084-4a55-8187-11f8b3e66321/26-6a8bf8251f0b2.webp' /></p><p>அது சிங்கள தேசத்தின் விருப்பமும் கூட.

இந்த சமுத்திரத்தை லங்கா சமுத்திரம் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற சிங்கள தேசத்தின் விருப்பை வெளிப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட The Colombo Conversation 2026 நிகழ்ச்சியில் Chevaan Daniel&nbsp; ஆற்றிய உரையின் காணொளி Newsfirst Englishஇல் வெளியாகியுள்ளது. </p><p>அவரது உரையில் இலங்கைத் தீவை வெறும் சுற்றுலாத் தலமாகப் பார்க்கக்கூடாது. பொதுவான பார்வையில் இலங்கையின் சர்வதேச அடையாளம் பெரும்பாலும் அழகான கடற்கரைகள், இயற்கை, வனவிலங்குகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையின் உண்மையான ஆற்றல் இதைவிட மிகவும் விரிவானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்த “Brand Sri Lanka” என்பது சுற்றுலா விளம்பரமோ அல்லது ஒரு சின்னமோ அல்ல. அது எங்கள் நாட்டின் மக்கள், திறமை, கலாசாரம், படைப்பாற்றல், தொழில், நம்பகத்தன்மை, மதிப்புகள் மற்றும் உலகத்துடனான உறவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.</p><h2>நாட்டின் சர்வதேசப் பிம்பம்</h2><p> </p><p>இலங்கையின் மிகப்பெரிய&nbsp; புவியியல் இருப்பிடத்தை முன்னிறுத்தி இலங்கை உலகிற்கு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்லாமல், "Made in Sri Lanka” என்ற அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். ஒரு நாட்டின் சர்வதேசப் பிம்பத்தை உருவாக்குவதில் கதைசொல்லலும் ஊடகமும் முக்கியமானவை. </p><p>இலங்கை தன்னைப் பற்றிய கதையை உலகம் எவ்வாறு கேட்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானித்து, சர்வதேச ஊடகங்கள் மற்றும் புதிய டிஜிட்டல் தளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19cafdab-9e68-469c-88fc-5272bfd7fda8/26-6a8bf79a9a33f.webp' /></p><p>இலங்கையின் விருப்புக்கள், கருத்தியல்கள், வாய்ப்பக்கள் மற்றும் பார்வைகளை பரந்த Lanka Ocean-Pacific பிராந்தியத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்து சமுத்திரம் உலகின் மூன்றாவது பெரிய நீர்ப்பரப்பாகும். இது 73.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலும் இந்துசமுத்திர கரையில் 38 நாடுகள் உள்ளன. 8 நாடுகள் இந்து சமுத்திர துறைமுகங்களை அண்டி பிழைக்கும் நாடுகளாக உள்ளன. </p><p>இப்போது இந்து சமுத்திரத்தில் சீனாவும் துறைமுகங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்ற அடிப்படையில் எல்லாமாக இந்து சமுத்திரத்தில் 47 நாடுகள் உள்ளன.</p><h2>நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம்</h2><p> </p><p>மேற்குலக வல்லரசுகளான பிரான்சும், பிரிட்டனும், அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தில் தங்களுக்கான தீவுகளைக் கொண்டுள்ளன என்ற அடிப்படையில் மொத்தமாக 50 நாடுகள் நேரடியாக இந்து சமுத்திரத்தை பங்குபோடும் நாடுகளாகவும் அதன் வளங்களை அனுபவிக்கும் நாடுகளாகவும் உள்ளன. </p><p>

இந்த வகையில் இந்து சமுத்திரத்தை பங்கு போடுகின்ற நாடுகளில் 10 சிறிய தீவுநாடுகள் உள்ளன. இந்த தீவுநாடுகளில் இலங்கை தீவு மாத்திரமே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாக முன்னிலையிலுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0774ab82-51cd-4db7-adbb-1e67c7b5b789/26-6a8bf94539212.webp' /></p><p>அதே நேரத்தில் இலங்கை ஐரோப்பிய காலனித்துவ காலத்திலும் முக்கியத்துவம் பெற்ற தீவாக இருந்தது என்பதற்கு உலகளாவிய ஆதிக்க போட்டியில் ஈடுபட்ட ஐரோப்பிய நாடுகள் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் யுத்தத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்திருந்த நிலையில் பிரான்சின் ஏமியன் நகரில் 27-03-1802 அன்று ஏமியன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.</p><p>பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பாட்டேவியக் குடியரசு(நெதர்லாந்து) ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், ஐரோப்பாவில் தற்காலிகமான அமைதியை ஏற்படுத்தியது. போரின்போது தான் கைப்பற்றிய பல பிரெஞ்சு, ஸ்பானிய மற்றும் டச்சுப் பிரதேசங்களை பிரிட்டன் திருப்பி கைளித்தது. </p><p>பிரிட்டன் இலங்கைய(Ceylon) மற்றும் கரீபியன் கடலில் டிரினிடாட் (Trinidad) ஆகிய இரண்டு தீவுகளையும் பிரிட்டன் தன்வசம் வைத்துக் கொண்டது. காரணம் இந்து சமுத்திரத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கைத் தீவு இன்றியமையாது என்பதை அன்றைய பிரிட்டன் உணர்ந்து இருந்தது.</p><h2>பாக்கு நீரிணை</h2><p> </p><p>இந்தத் தீவை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் முயற்சித்தார். “இலங்கைத் தீவின் திருகோணமலை துறைமுகத்தை என்னிடம் தந்து விடுங்கள் இந்த உலகத்தை நான் ஆள்வேன்“ என அவர் குறிப்பிட்டதாக கூறப்படும் வரலாற்று குறிப்புகளும் உள்ளது.
</p><p>
ஏமியன் உடன்படிக்கை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர் 1803 மே மாதத்தில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814 மே 30 அன்று கையெழுத்தான முதலாம் பரிஸ் உடன்படிக்கை (First Treaty of Paris) மற்றும் வியன்னா மாநாடு (Congress of Vienna - 1815) மூலமாக மீண்டும் தன்வசம் பெற்றுக்கொண்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc29cf4-baa7-40ae-a715-2f1601e1735b/26-6a8bf5b0c9923.webp' /></p><p>இந்து சமுத்திரத்திலுள்ள இலங்கைத் தீவை பிரிட்டன் தன்வசம் வைத்திருந்தபடியினால்தான் ஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ள தனது காலணிய நாடுகளை பாதுகாத்தது மாத்திரமல்ல இந்து சமுத்திரத்தினுள் பிரான்சியர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தடுக்க முடிந்தது.
</p><p>
இத்தகைய உலாகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவு ஈழத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் தாயக பூமியாக மாத்திரமல்ல அது இரண்டு பகுதியினரும் பங்குபோட்டு வாழ்ந்த நிலப்பகுதியாகும்.</p><p> அதேநேரத்தில் இலங்கைத்தீவு இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பாக்கு நீரிணையினால் பிரிக்கப்பட்டிருப்பதுதான் இலங்கைத்தீவின் பாதுகாப்பும், பலமுமாகும்.</p><h2>பௌத்தமும் சிங்களமும்</h2><p> </p><p>கடந்த 2500 ஆண்டுகால வரலாற்றில் பௌத்தமும், சிங்கள இனமும் தமது சுயாதீனத்தை தொடர்ந்து பேணுகிறார்கள் என்றால் அது தீவாக இருப்பதால்தான். </p><p>பாக்குநீரினை இல்லையேல் இன்று இலங்கை தீவில் பௌத்தம் முற்றாக இல்லாமல் போயிருக்கும். கி.பி.4ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் பலம்வாய்ந்த மதமாக இருந்த பௌத்தம் இன்றில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1783022e-4032-4eb8-9d74-53a2b3bce285/26-6a8bf79b7c712.webp' /></p><p>காரணம் தமிழகம், இந்திய பெருங்கண்டத்தின் தென்கோடியில் நிலத் தொடர்பால் இணைக்கப்பட்டிருந்தமையால் அது வடக்கின் இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு பௌத்தமதம் இல்லாது ஒழிந்துவிட்டது. </p><p>ஆனால் இலங்கை தீவாக இருப்பதும், அது பார்குநீரிணையால் பிரிக்கப்பட்டிருப்பதும் இலங்கைத்தீவில் பௌத்தத்தை தொடர்ந்து பேண முடிந்ததோடு, சிங்கள மொழியையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க முடிந்துள்ளது. </p><p>இது இலங்கை தீவாக அமைந்துள்ளமைதான் பௌத்த சிங்கள மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும்.

சிங்களவர்களை பொறுத்தளவில் பாக்குநீரினை என்பது ஒரு நச்சு ஆறாகவும் அதேநேரத்தில் அது ஒரு பால் ஆறாகவும் இரண்டு முகங்களைக் கொண்டது.</p><h2>பண்பாட்டு அம்சங்கள்</h2><p> </p><p>பாக்குநீரினையால் இலங்கைத்தீவு பிரிக்கப்பட்டிருப்பது சிங்களவர்களுக்கு பாக்குநீரினை பாலாறு, அதுவே அவர்களை காக்கின்ற பாதுகாப்பரணகாவும் பாதுகாப்பு அகழியாகவும் உள்ளது. </p><p>ஆனால் பாக்குநீரிணையின் இந்தியக் கரையில் தமிழகத் தமிழர்களும், இலங்கையின் வடகிழக்குக் கரைகளில் ஈழத்தமிழர்களும் வாழ்வதும், இரண்டு கரை மக்களும் ஒரே பண்பாட்டு அம்சங்களோடு வாழ்வதும், பரஸ்பர தொடர்பாளர்களுடன் வாழ்வதும் இந்தப் பாக்குநீரை சிங்களவர்களின் கண்களுக்கு நச்சு ஆறாக தோன்றுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b62bf6-36dd-4a35-90a6-83dd475fbc2e/26-6a8bf945f1b67.webp' /></p><p>

 அதே நேரத்தில் இருகரையிலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்வது ஈழத்தமிழர்களுக்கு தேன் ஆறாகவும் தமிழர்களின் நீச்சல் தடாகமாகவும், பண்பாட்டுப் போக்குவரத்து பாலமாகவும் காணப்படுகிறது. பாக்குநீரிணையின் இலங்கைத்தீவுக் கடற்கரையில் உள்ள ஈழத்தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைத் தீவின் சுயாதீனத்தை தொடர்ந்து பாதுகாக்க முடியும் என சிங்கள தேசம் நம்புகிறது.</p><p> அதனை மகாவம்சம் என்ற புணைகதை நூலில் 2,500 ஆண்டு கால வரலாற்றை எழுதுகையில் இந்திய எதிர்ப்பை மையப்படுத்தியே வரலாற்றை எழுதியுள்ளனர். அது சிங்கள மக்களின் பண்பாட்டிலும், வரலாற்றிலும், வாழ்வியலிலும், ஒவ்வொரு சிங்கள மக்களின் சிந்தனையிலும், அவர்களுடைய கருத்து மண்டலத்திலும் இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>அந்தக் கருத்து மண்டலத்தில் இருந்து சிங்கள மக்களை விடுவித்துவிட முடியாது. 

இந்த நிலையில் ஈழத் தமிழர்களை அழிப்பதனையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இந்தியாவிடமிருந்து பிரித்து வைப்பதில் வெற்றி பெற்றுவிட்டது.</p><h2>தேசிய இனங்கள்</h2><p> </p><p>அவர்களடைந்த வெற்றியை மேலும் வெற்றியாக்க கூடிய வகையில் ஈழத் தமிழர்களிடையேயும் இந்திய எதிர்ப்பு சற்று தலை தூக்கி விட்டது. அத்தகைய எதிர்ப்பை இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார். </p><p>ஈழத் தமிழர்களை இந்தியாவிடமிருந்து பிரித்ததில் ஜே.ஆர் அடைந்த வெற்றி என்பது சிங்கள சமூகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கொள்ளளவையும், ராஜதந்திர முதிர்ச்சியின் உச்சத்தையும் வெளிகாட்டி நிற்கிறது.

இலங்கை தீவின் வரலாற்றில் மொழிவழி தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசை பதினாறாம் நூற்றாண்டு வரை வைத்திருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b601a6-512f-4296-9f4a-b7d84c5d16f2/26-6a8bf5b27cb43.webp' /></p><p> இலங்கைத் தீவின் மீது இந்திய பேரரசர் அசோகர் பௌத்த மதம் படையெடுத்த போதும் வட கிழக்கு தமிழர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை. பௌத்தத்தை வடக்கிலே வரவேற்று அதனை தெற்கே சிங்களவர்கள் பக்கம் செல்வதற்கு வழிவிட்டார்கள். </p><p>அதன் மூலம் பௌத்தம், சிங்கள தேசத்தில் நிலைபெற்றது. அதேபோல பின்னாட்களிலே சேர சோழர் கலிங்கர்கள் படையெடுத்தபோதும் அந்த இந்திய மன்னர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மன்னர்கள் வாலேந்தவில்லை. அவர்களை வரவேற்று தெற்கு நோக்கி செல்ல வழிகாட்டி அனுப்பினர். </p><p>இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னர்கள் யாரும் இந்திய மன்னர்களுடன் போரிட்ட வரலாற்றுச் செய்தியை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. காரணம் தமிழ் மொழி பேசும் மன்னர்களுடன் ஈழத்தமிழ் மன்னர்கள் யாரும் போரிடவில்லை என்ற உண்மை புலப்படும்.</p><h2>படையெடுப்புகள்</h2><p>

 தென்னிந்திய மன்னர்களுடன் ஈழத்தமிழர்கள் போரிடாமையும், அவர்களுடன் நட்புரிமை பாராட்டியமையும்தான் மகாநாம தேரர் இந்திய படையெடுப்பை எதிர்ப்பதோடு அந்தப் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நட்பு உறவு கொண்ட ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களுடைய பொது எதிரியாக வகைப்படுத்தி இந்திய ஆக்கிரமிப்பின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் உள்ளார்கள் என்பதனால் அவர்களை இந்த தீவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சிவாத நோக்கிலேயே மகாவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது.</p><p> அதனால்தான் அந்த நூலிலே தம்ம தீபக் கோட்பாடு வலுவாக வரையப்பட்டது. இலங்கை தீவு பௌத்தத்துக்கே சொந்தம் என்றும், இலங்கைத் தீவு விஜயனும் அவனுடைய சந்ததிகளுக்கு உரித்தானது என்றும், இலங்கை அரசு சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்றும் அவர் தனது விருப்பு வாதத்தை இலட்சிய வாதமாக மனதிலே பதிய வைத்திருக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda2a9a4-9ab5-45d5-b275-e77b4f18d564/26-6a8bf79da6b46.webp' /></p><p>இந்த வரலாற்று பின்புலத்திலிருந்து ஈழத் தமிழர்கள் தம்மை இலங்கை தீவில் பாதுகாப்பதற்கான மூலபாயங்களை வகுக்க வேண்டும்.</p><p> ஈழத் தமிழர்கள் கடல் சார்ந்த கொள்கையில் மிகவும் பின்னோக்கியுள்ளார்கள். ஆனால் சிங்களவர்கள்&nbsp; முன்னேறியுள்ளார்கள் என்பதனை “லங்கா சமுத்திரம்“ என இந்து சமுத்திரத்திற்கு பெயர் மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பும் அளவிற்கு வளர்ந்திருப்பதன் ஊடாக அறியலாம்.
</p><p>
இறுதியாக யாழ்ப்பாண இராச்சியம் 1619-1621களில் போர்த்துக்கேயர் முற்றுகையிடப்பட்டு வீழ்ச்சி அடையும் தருவாயில் தென்னகத்தின் சேதுபதி மன்னர்களும் குஞ்சலி மரைக்காயர்களும் ஈழத் தமிழர்களுக்கு கைகொடுக்க படைகளை அனுப்பினார்கள்.</p><h2>யாழ்ப்பாண ராச்சியம்</h2><p> ஆயினும் தொடர்ந்து யாழ்ப்பாண ராச்சியத்திற்கு வழங்களை செய்வதற்கு போர்த்துக்கேய கடற்படை பாக்குநீரணையில் தரித்து நின்று தென்னிந்திய தொடர்பை துண்டித்தமையே யாழ்பாண ராச்சியம் வீழ்ச்சியடைந்தமைக்கான முக்கிய காரணமாகும். ஆகவே தமிழர்களுடைய இறைமை தோற்கடிக்கப்பட்டது தரையில் அல்ல கடலிலேதான். </p><p>ஈழத்தினுடைய இறையாண்மை பாக்கு நீரிணையின் அடையாளத்திலேயே வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. எங்கு ஈழத்தமிழனுடைய இறையாண்மை புதைக்கப்பட்டுள்ளதோ, எங்கு வீழ்த்தப்பட்டதோ அங்கிருந்துதான் ஈழத்தமிழரின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d542fd97-5ef3-46da-9720-e08bf2abe292/26-6a8bf5b1af8e4.webp' /></p><p>பாக்கு நீரிணையும், இந்து சமுத்திரமும்தான் ஈழத் தமிழர்களுடைய பலம். தமிழர்களுடைய சனத்தொகை என்பது இலங்கைத் தீவில் மிகச்சிறியது. </p><p>ஆனால் சிறிய தொகை ஈழத் தமிழர்கள் இலங்கை தீவின் பாக்குநீரிணை கடற்கரையில் முழுமையாகவும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரக்கரையின் பெரும்பகுதியையும் தமது தாயக நிலப்பகுதியாகக் கொண்டிருப்பதுதான் ஈழத்தினுடைய பலமாகும். </p><p>ஈழத் தமிழர்கள் வாழ்கின்ற அந்த சிறிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பே ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச முக்கியத்துவத்தையும், இந்து சமுத்திர அரசியலில் பங்கையும் பாத்திரத்தையும் கொடுக்கிறது என்பதை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>பாக்குநீரிணையின் முக்கியத்துவம்</h2><p> </p><p>இந்தப் புரிதலில் இருந்து கொண்டுதான் ஈழத் தமிழர்கள் தனது புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும்&nbsp; வழிநடத்த வேண்டும்.

ஈழத்தமிழர்கள் பாக்கு நீரணையில் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஆரம்பித்துள்ளனர்.</p><p>ஆயினும் ஈழத் தமிழர்கள் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்ற துயரகரமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படாததன் விளைவுதான் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தமைக்குக் காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63455242-8326-4a38-ba91-96022e6dffd3/26-6a8bfa7933219.webp' /></p><p>ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது முள்ளிவாய்க்கால் மண்ணில் அல்ல. போராட்டம் தோல்வி அடைந்தது முதலாவது பாக்கு நீரிணையிலும் இறுதியாக தோல்வியடைந்தது இந்து சமுத்திரத்திலும் ஆகும். மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தது தரையில் அல்ல அது கடலில்தான். </p><p>இந்த தத்துவார்த்த உண்மை புரியாத வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியாது. 

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பின்தளமாக ஆரம்ப காலத்தில் தமிழகமே இருந்து வந்தது. தமிழகத்தின் பின் தளத்தை ஈழத்தமிழர்கள் இழந்த பின்னரும் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளவில்லை.</p><p>அவற்றில் மூன்று கப்பல்களை தவிர ஏனைய கப்பல்கள் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் தாக்குதல்களினாலேயே அழிக்கப்பட்டன.</p><h2>தமிழிழ விடுதலை போராட்டம்</h2><p>மூன்று கப்பல்கள் மாத்திரமே இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டது என்ற உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது கடலிலே என்றால் நாம் அந்த கடலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.</p><p>விடுதலைப் போராட்டம் இந்து சமுத்திரத்தின் அடையாளத்தில் புதைக்கப்பட்டு விட்டது என்றால் அங்கிருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் கடலை கையாள கற்றுக்கொள்ளவில்லை என்றால் வெற்றிக்கான பாதையை நாம் கண்டறியவில்லை என்பதே அர்த்தமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d99393b-9c8b-429e-b80e-5c167854efcf/26-6a8bf4b83e9b9.webp' /></p><p> கடலை நம் கைக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு இலங்கை தீவில் எதுவும் மிஞ்சாது.

கடல்தான் ஈழத் தமிழர்களைக் காக்க வல்ல கவசம். ஆகவேதான் இப்போது சிங்கள தேசம் இந்து மகாகடலை “லங்கா கடலாக“ அறிவிக்க முனைப்பு காட்டுகின்றது.</p><p> இந்த நேரத்திலாவது ஈழத் தமிழர்கள் விழித்துக் கொள்ளவேண்டும். முதன் முதலில் சமுத்திர அரசியலை ஆரம்பித்தவர்கள் தமிழர்கள். அந்தத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் இந்த 21ஆம் நூற்றாண்டில் கடல் பற்றிச் சிந்திக்கவில்லையாயின் நாம் அறிவியலில் மாத்திரமல்ல அரசியலிலும் தோல்வியடைந்த சமூகமாகவே விழுந்து கிடப்போம்.</p><p> மாறாக ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும் என்றால் தமிழ் மக்களின் இறையாண்மை புதைக்கப்பட்டிருக்கும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[போகம்பர சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு! சிறப்பு அறையிலிருந்து தப்பிக்கும் கைதிகளின் திட்டம் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bogambara-prison-death-row-inmates-attempt-escape-1787543285"></link>
            <id>https://tamilwin.com/article/bogambara-prison-death-row-inmates-attempt-escape-1787543285</id>
            <summary type="text">கண்டி - பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலையில் சிறப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்த, மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளும், ஆயுள் தண்டனை விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலையில் சிறப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்த, மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் இரும்பு கம்பிகளை உடடைத்து தப்பிக்க முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.</p><p>

சிறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் இணைந்து இந்த முயற்சியை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சிறை அறைகளில் உள்ள இரும்புக்கம்பிகளை சாமர்த்தியமாக அறுக்க முயன்றதாக கைதிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வேறு&nbsp;சிறைச்சாலைக்கு இடமாற்றம்</h2><p>

மேலும், அந்த அறையில் இரும்புக்கம்பிகளை அறுக்க பயன்படுத்தப்பட்ட பிற உபகரணங்களையும் சிறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09b04c7-f20d-4f74-a741-ef6d8f1c1458/26-6a8bf8a0b9e9d.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதற்கமைய, சிறை நிர்வாகம், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை வெலிக்கடை சிறைக்கும், மற்ற கைதிகளை அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
</p><p>
சிறை அறையில் இரும்புக்கம்பிகளை வெட்டுவதற்காக இந்த கைதிகள் சிறிய ஆயுதங்களை எவ்வாறு பெற்றனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.</p><p>

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
கைதிகளின் தப்பிக்கும் முயற்சிக்கு சில சிறை அதிகாரிகளும், மேலும் பல கைதிகளும் உதவி செய்தார்களா என்பது குறித்து தற்போது விசாரித்து வருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aC0aSVT_PJM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787557226"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787557226</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (24.08.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (24.08.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த சனிக்கிழமை (22.08.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 384,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபா அதிகரித்து 386,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26ce932b-809e-43b9-98d3-11921979c9e9/26-6a8bf7275151d.webp' /></p><p>
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-people-trying-destroy-evidence-1787556590"></link>
            <id>https://tamilwin.com/article/some-people-trying-destroy-evidence-1787556590</id>
            <summary type="text">குற்றச் செயல்கள் தொடர்பிலான சான்றுகளை அழிப்பதற்காகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றச் செயல்கள் தொடர்பிலான சான்றுகளை அழிப்பதற்காகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
அண்மைய நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், குற்றங்களுடன் தொடர்புடைய சான்றுகளை அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
விரிவான விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab3f0782-a782-4481-97ac-16ff71832393/26-6a8bf2ef836ec.webp' /></p><p>
களுத்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களின் ‘அதிட்டன’ அமைப்பின் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், அதனுடன் தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல கடினமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பொதுமக்கள் வழங்கிய மக்கள் ஆணையாலேயே அரசாங்கத்தால் இத்தகைய கடினமான வேலைத்திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது குறித்து மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
</p><p>"சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 58 பாரிய அளவிலான குற்றவாளிகளை கடந்த காலத்தில் நாம் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு அழைத்து வந்தோம். அவர்கள் அந்த நாடுகளில் ஆடம்பர பங்களாக்கள், வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுடன் இணைந்து இந்தச் சொகுசு வசதிகளை அனுபவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p> இதைப் பற்றி எப்போதாவது தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறீர்களா? அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டதா? நாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாகவே எதிர்க்கட்சியினர் தற்போது இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
</p><p>நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. நாம் விரட்டியடித்தது ஒரு அரசியல் குழுவை அல்ல, மாறாகப் பல குழுக்களை உள்ளடக்கிய அபாயகரமான, கொடூரமான சதிமிக்க குற்றவாளிக் கும்பலையே ஆகும். சீரழிந்த நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம் என தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போது நிதி ஒழுக்கத்தைப் பேணி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வருவாயைச் சரியாகத் திரட்டி, பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளோம். கடந்த 15 மாதங்களுக்குள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுடன், அதிக பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலிலும் இலங்கை இணைந்துள்ளது என மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T07:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றிவளைப்பில் மேலும் 537 சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/537-more-suspects-arrested-in-raids-1787554745"></link>
            <id>https://tamilwin.com/article/537-more-suspects-arrested-in-raids-1787554745</id>
            <summary type="text">சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் மேலும் 537 சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் மேலும் 537 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

நேற்று (23.08.2026) 27,001 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>4000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை</h2><p> 

இந்த சந்தேகநபர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 147 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25efd56d-eb55-4954-8d01-bfa9ade2b9af/26-6a8bf0c972ad0.webp' /></p><p>

அத்துடன், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 89 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இதேவேளை, ஏனைய வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,126 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:20:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட 17 பவுண் தங்க நகைகள் மீட்பு - நால்வர் அதிரடி கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-arrested-for-stealing-17-pounds-1787555886"></link>
            <id>https://tamilwin.com/article/four-arrested-for-stealing-17-pounds-1787555886</id>
            <summary type="text">வவுனியாவில் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண்
நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா
குற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண்
நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா
குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இந்த சம்பவம் இன்று(24.08.2026) தெரிவித்துள்ளனர்.</p><p> 


கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள்
நுழைந்து சிலர் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண்
தங்க நகைகளை திருடியிருந்தனர்.</p><p>

இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.</p><h2> 

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தங்க நகைகள்</h2><p>
இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து
திருடப்பட்ட14 பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/201fe5d8-2b25-4ecd-bbcd-f1482fd124f8/26-6a8bf0a6eb2ad.webp' /></p><p>
</p><p>
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், திருடப்பட்ட வீட்டிற்கு அருகில்
வசிப்பர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர், திருடிய ஒரு பகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின்
பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளார்.</p><p> 

மேலும், ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடை
வீதியில் அமைந்துள்ள பிரபல அடகு நிலையத்தில் அடைவு வைக்கப்பட்ட நிலையில்
மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என பொலிஸார்
தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் வவுனியா நீதவான்
நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:20:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பயணங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-members-spent-27-crores-foreign-trips-1787554815"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-members-spent-27-crores-foreign-trips-1787554815</id>
            <summary type="text">2016 முதல் 2024 வரை 451 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 115 நாடாளுமன்ற அதிகாரிகளும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏறக்குறைய 27 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2016 முதல் 2024 வரை 451 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 115 நாடாளுமன்ற அதிகாரிகளும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏறக்குறைய 27 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

நாடாளுமன்றம் மீதான இந்த சிறப்பு தணிக்கை அறிக்கை, இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ள கோடிக்கணக்கான பணம்</h2><p>

இதன்படி, 451 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2016 முதல் 2024 வரை வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏறக்குறைய 21 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1da802ca-98e4-437b-90d1-64353cf3a4e2/26-6a8bf00d2c20a.webp' /></p><p>
 115 நாடாளுமன்ற அதிகாரிகள் 2016 முதல் 2024 வரை 83 மூன்று வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளனர். </p><p>

 இந்த வெளிநாட்டுப்பயணங்கள், நாடாளுமன்றத்தின் வெளி உறவுகள் மற்றும் நெறிமுறை அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன. </p><p>

இருப்பினும், வெளிநாட்டுப் பயிற்சித்திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அதிகாரிகள் பெறும் அறிவையும் அனுபவத்தையும் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதற்கு முறையான அமைப்பு எதுவும் இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
 சம்பள உயர்வுகள் வழங்கும் போது, ​​ஏனைய அரச அதிகாரிகளை விட நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதற்கான எந்த காரணங்களையும் கண்டறியவில்லை என்றும் குறிப்பிடுகின்றது.</p><p></p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-24T07:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்க முயற்சிக்கும் அரசாங்கம் : ஹிருணிகா சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hirunika-slams-npp-1787555532"></link>
            <id>https://tamilwin.com/article/hirunika-slams-npp-1787555532</id>
            <summary type="text">அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>அரசாங்கத்தின் இந்த போக்கை பார்த்தால் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரையும் சிறையில் அடைக்கும் ஓர் நிலையையே அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறையில் அடைப்பார்கள் என்ற அச்சத்தில்&nbsp;</h2><p>
இறுதியில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
உள்ளே தள்ளி விடுவார்கள் சிறையில் அடைப்பார்கள் என்ற அச்சத்தில் அனைவரும் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22afa778-e14e-469e-b66b-a113e0daffe4/26-6a8bf4502aacd.webp' /></p><p>ஏனைய அரசாங்கங்களை போன்று அல்லாது தற்போதைய அரசாங்கம் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக இந்த அரசாங்கம் கொலைகாரர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
எனினும் வாழ்க்கையில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் மக்களின் உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடி பிரச்சினையில் சிக்கினாலும் பரவாயில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
</p><p>மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி - வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-licenses-issued-for-oil-and-gas-exploration-1787550895"></link>
            <id>https://tamilwin.com/article/new-licenses-issued-for-oil-and-gas-exploration-1787550895</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL)இலங்கையின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL)இலங்கையின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களை அழைக்கும் புதிய உரிமச்சுற்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்யவும், தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சட்ட கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கை</h2><p>

மேற்கு கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிகள், வணிக ரீதியான இயற்கை எரிவாயு இருப்புகள் இருப்பதை உறுதி செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/416bf62a-015c-4dd1-96f4-b2f92ba4abb1/26-6a8be1cfc04af.webp' /></p><p>

இவை எரிபொருள் இறக்குமதியை நாடு பெருமளவில் சார்ந்திருப்பதை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
புதிய உரிமச்செயல்முறை தொடர்பான மேலதிக விபரங்கள் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.</p><p>

2021 ஆம் ஆண்டின் பெட்ரோலிய வளங்கள் சட்டம் எண் 21 இன் கீழ் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் இருந்து காணாமல் போன 2 வயது குழந்தை - கால்வாய் பாலத்தில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/child-s-body-recovered-in-kalnewa-police-area-1787554093"></link>
            <id>https://tamilwin.com/article/child-s-body-recovered-in-kalnewa-police-area-1787554093</id>
            <summary type="text">அனுராதபுரம் - கல்நேவா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஓடும் கால்வாயில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று(23.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - கல்நேவா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஓடும் கால்வாயில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(23.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


கால்வாயில் சிக்கியிருந்த குழந்தை</h2><p>


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
குறித்த குழந்தை வீட்டில் இல்லை என அதன் தந்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் கல்நேவா பொலிஸாரும் இணைந்து நேற்று (23.08.2026) பிற்பகல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, குழந்தை வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள ஓடும் கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த பாலம் ஒன்றில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc1bd29-acd5-4839-9596-2d434fcb0e06/26-6a8bea5dc6252.webp' /></p><p>
</p><h2>
வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

இதையடுத்து, குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு கல்நேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்நிலையில், குழந்தையின் சடலம் கல்நேவா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கல்நேவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/R6ZCirXEwHw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-24T06:54:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறி எம்.பிக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-chaminda-wijesiri-granted-bail-1787552150"></link>
            <id>https://tamilwin.com/article/mp-chaminda-wijesiri-granted-bail-1787552150</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>


தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த பதுளை மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae788241-1deb-4379-8cc7-37825d7a440c/26-6a8be566c306a.webp' /></p><p>இருப்பினும், பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rrq8dxxmrDg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : 76 அதிக அபாய பிரிவுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-patients-has-exceeded-94000-1787549424"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-patients-has-exceeded-94000-1787549424</id>
            <summary type="text">நாட்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்பு எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 29,96...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்பு எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 29,962 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 டெங்கு நோயாளிகளும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
</p><h2>மேல் மாகாணத்தைச் சேர்ந்த</h2><p>நாட்டில் பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளில் 52.93 சதவீதம், அதாவது 49,771 நோயாளிகள், மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b536c7-1d3c-4db1-951b-d251d6dd2e38/26-6a8bded512b8f.webp' /></p><p>
மேலும், தெற்கு மாகாணத்திலிருந்து 13,763 நோயாளிகளும், மத்திய மாகாணத்திலிருந்து 8,519 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். </p><p>

மாவட்ட அளவில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 20,034 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
கொழும்பு மாவட்டத்தில் 18,652 நோயாளிகளும், கொழும்பு மாநகர சபைப் பகுதியில் மட்டும் 3,787 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>அதிக அபாயம் உள்ள சுகாதார மருத்துவ பிரிவுகள்</h2><p>

இதேபோல், கண்டி மாவட்டத்தில் 6,818 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 நோயாளிகளும், காலி மாவட்டத்தில் 6,079 நோயாளிகளும், இரத்தினபுர மாவட்டத்தில் 5,160 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,003 நோயாளிகளும், கேகாலை மாவட்டத்தில் 2,713 நோயாளிகளும், குருநாகல் மாவட்டத்தில் 2,651 நோயாளிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,510 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b33307-2c34-4ce6-9080-92605d8cfd24/26-6a8bded5d5320.webp' /></p><p>

நாடு முழுவதும் 76 அதிக அபாயம் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தவறாமல் சுத்தம் செய்யுமாறும், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்திிிியுள்ளள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UQTZQbqOCRo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:13:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத்துறையின் இரகசிய தகவல்! காட்டுப் பகுதியில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-production-two-arrested-1787550817"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-production-two-arrested-1787550817</id>
            <summary type="text">யாழ். துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய, மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. </p><p>

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சுற்றிவளைப்பில் 20,000 மில்லிலீற்றர் கசிப்பு, 540,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>சந்தேகநபர்கள் கைது</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e244c5-8630-482c-b9ce-c38bf9afb680/26-6a8be0ca9cb71.webp' /></p><p>

அத்துடன் அங்கிருந்து தப்பியோடிய மிகுதி சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வந்துள்ளனர்.</p><p>

இதேவேளை அண்மைக்காலங்களாக வடமராட்சி பிரதேசத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:13:04+00:00</updated>
        </entry>
    </feed>
