<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T17:31:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

இந்த துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இந்த துப்பாக்கிச்சூடு தற்போது பிரான்ஸில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான குடு அஞ்சு என்பவரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அண்மையில் குடு அஞ்சுவின் நெருங்கிய நபர் ஒருவர் இரத்மலானை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h2><b>

துப்பாக்கி சூடு</b></h2><p>இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b6613f-9ec6-4ce8-b1f0-a5db6fe45ba7/26-6a79e3a216e66.webp' /></p><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து பிற்பகல் 1.30 மணியளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர். </p><p> 

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விதம் அருகிலுள்ள கட்டடமொன்றின் சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T16:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் - துருக்கி - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அச்சப்பட தேவையில்லை: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553</id>
            <summary type="text">​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக அமைந்தது என அஞ்சத் தேவையில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

​</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், பிராந்திய நாடுகள் வெளிச்சக்திகளைச் சாராமல் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகவே இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2> புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>

​பிராந்தியத்தின் புவிசார் மற்றும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,
துல்லியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு செயற்படுத்தப்படும்
எந்தவொரு திட்டமும், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும்
ஸ்திரமின்மையை தடுக்கவும் உதவும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18607002-05d0-485b-a1d2-ae6279883f11/26-6a79e957be462.webp' /></p><p>

​சவுதி அரேபியாவின் மக்கா நகரில் இடம்பெற்ற சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர்
ஷெஹ்பாஸ் ஷரீப், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகான் மற்றும் சவுதி பட்டத்து
இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோரால் இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி: சர்வதேச நியதிகளுடன் விசாரணை நடத்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814"></link>
            <id>https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட
என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.100 நாட்களைத் தாண்டி அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால்
இதுவரை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ecb540-d2f2-4691-8a56-487dc7e083bd/26-6a79f93917361.webp' /></p><p>
</p><p>
முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள
முடியும்.

அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை
என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும்
உண்மையானது. </p><p>அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு
உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை
அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக
இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும்
நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக்
குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da005d3-b8f5-4062-bfe7-4f70743ba501/26-6a79f939bd775.webp' /></p><p>
</p><p>
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட
என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்திற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786376865"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786376865</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசதிக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசதிக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையின் அடிப்படையில் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>சாகர, மத்திய குற்றவியல் விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடுவெல நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175d1307-bb04-4125-993f-e9924cce9f09/26-6a79f2a3376ed.webp' /></p><p><br></p><p>
இதேவேளை, சாகர காரியவசம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடுவல நீதவான் அருண இந்திரஜித் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T15:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச -சரித் அபேசிங்க ஆகியொருக்கிடைலான நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் &#039;ஹரக் கட்டா&#039; என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
</p><p> 2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005-இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு</h2><p>அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர்&nbsp; காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில்&nbsp; இருக்கின்றன. </p><p>அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார். </p><p>அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439c6cae-2804-485a-a932-5363c9d24a0a/26-6a79d2a977344.webp' /></p><p>இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர். </p><p>நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. </p><p>அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன்.
நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். </p><p>எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477d1bdc-e96c-493c-8ea5-b798600afc49/26-6a79d2aa28255.webp' /></p><p>2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.</p><p>நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான். </p><p>நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T13:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுப்பு; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisons-department-information-1786366668"></link>
            <id>https://tamilwin.com/article/prisons-department-information-1786366668</id>
            <summary type="text">தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.நீதிமன்றத்தினால் உத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>விரிவாக கலந்துரையாடப்பட்ட விடயம்</h2><p>
நாட்டில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87349493-72c0-49f8-a45f-e4e4626573a8/26-6a79d31820c03.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
</p><p>போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள்</h2><p> </p><p>இதற்குத் தேவையான அதிகாரிகளைச் சேவையில் இணைத்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1890ca-495a-438f-947e-e5940b503f4f/26-6a79d318cb977.webp' /></p><p>
</p><p>
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்குச் சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p> 

புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் திறமையான முறையில் முன்னெடுப்பதற்குச் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T13:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை.. அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-penalty-drug-crimes-government-decision-1786367709"></link>
            <id>https://tamilwin.com/article/death-penalty-drug-crimes-government-decision-1786367709</id>
            <summary type="text">போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற “ரதம ஏகத” தேசிய செயல்பாடுகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p> </p><p>இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள் பொருளாதாரம், சுற்றுலாத் துறை மற்றும் சமூகச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.&nbsp;</p><h2>மிகக் கடுமையான நடவடிக்கை..&nbsp; &nbsp;</h2><p>அத்துடன், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6acda245-eaec-4673-9278-225447f3b734/26-6a79d11c4b2d8.webp' /></p><p>இதன்போது, போதைப்பொருள் நெருக்கடியைக் கையாள்வதிலும், போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த பொதுமக்களின் மனப்பான்மையில் மாற்றத்தை ஊக்குவிப்பதிலும், மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் அதிகப்படியான ஈடுபாட்டிற்கு ஜனாதிபதி திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.</p><p>
</p><p>
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது. இந்தத் திருத்தங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>எனவே, இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அரசிதழில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தீவிர பணியில் அதிகாரிகள்</h2><p>

அரசுப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைச் செயலாக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர், இது போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa43308-8306-484b-a48b-7e29de2a9a50/26-6a79d11d0cc44.webp' /></p><p> </p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 6,414 பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை 5 கிராமுக்கும் குறைவானவை மற்றும் 10 கிராமுக்கும் குறைவானவை என அவற்றின் அளவுகளுக்கு ஏற்ப வகைப்படுத்துவதற்கான ஒரு முறையை நிறுவுமாறும், மேலும் முறைப்பாடுகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்கள் உடனடியாக நீதிமன்றங்களில் முன்னிலைடுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
</p><p>
அரசுப் பகுப்பாய்வாளர் துறையின் திறன் மற்றும் வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான ஆதாரங்களைப் பரிசீலிப்பதற்கு ஆதரவளிக்க, கடற்படையின் உதவியும் பெறப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெசின் சிறையில் உயிரிழந்த கைதி.. அதிகாரிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cause-death-inmate-borella-magazine-prison-1786363577"></link>
            <id>https://tamilwin.com/article/cause-death-inmate-borella-magazine-prison-1786363577</id>
            <summary type="text">பொரளை - மெசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை - மெசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். </p><p>ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் அஸ்மன் ஜெரால்டின் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.&nbsp;</p><h2>ஏற்பட்ட மோதல்..&nbsp;</h2><p>
கடந்த 6ஆம் திகதி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து குறித்த கைதி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5456cf-c4a4-452a-bb9d-589e82065616/26-6a79ca7dd3f5e.webp' /></p><p>இதன் பின்னர், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேலதிக சட்ட வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 8ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
</p><p>தொடர்ந்து, சடலம் மத்தேகொட பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உறவினர்கள், சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதலின் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T12:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862</id>
            <summary type="text">உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் அரசாங்கங்களைச் சேர்ந்த பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லை என்ற ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.</p><p> </p><h2><b>தீர்ப்பிற்கு எதிராக மேன்முறை</b></h2><p>அதனைத் தொடர்ந்து, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657d2885-8e73-41f0-ab04-81e9a7af64a0/26-6a7979da45060.webp' /></p><p>அத்துடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளரின் கையெழுத்துடனும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>அதற்கமைய, குறித்த நிபந்தனையின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்பட்ட மகிந்த ராஜபக்சவின் சொத்து வழக்கு, கோட்டாபய ராஜபக்சவின் சொத்து வழக்கு, பஸில் ராஜபக்சவின் 5 சொத்து வழக்குகள், நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரின் 3 வழக்குகள், ரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு ஒன்று, கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்று உள்ளிட்ட பல வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே ஆணையாளரின் கையெழுத்துடன் வழக்கு தொடரப்பட்டமை காரணமாக அவை வாபஸ் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T12:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்போகும் முக்கிய மைல்கல் - வட மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/company-to-be-established-in-the-northern-province-1786358355"></link>
            <id>https://tamilwin.com/article/company-to-be-established-in-the-northern-province-1786358355</id>
            <summary type="text">வட மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு
கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine
Lanka)...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு
கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine
Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைவதாக&nbsp;வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>

வட மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும்
ஏற்றுமதியாளர்களுக்கு உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளபாடச் சேவைகளை
நெருக்கமாகக் கொண்டு வரும் இந்த முயற்சி, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு
புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம் தனது யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தை இன்று
(10.08.2026) யாழ்ப்பாணம், கண்டி வீதியில் அமைந்துள்ள தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில், வடக்கு
ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தது.
</p><p>
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dea3f6cb-d529-4f83-8106-893a64593a90/26-6a79bbe9b91a1.webp' /></p><h2>வட மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் காங்கேசன்துறை துறைமுகத்தின்
மீளுருவாக்கமும் அதனூடான கப்பற் போக்குவரத்து வளர்ச்சியும் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாணத்தில்
உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப்
பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு
செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் இந்நிறுவனத்தின் வருகை குறிப்பிடத்தக்க
பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக
திருகோணமலை மற்றும் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்படவுள்ள நேரடி பொருட்கள்
கப்பற் போக்குவரத்து சேவை, வடக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய
பரிமாணத்தை ஏற்படுத்தும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e82d0ea-c8ab-4a68-af99-83d83d60900d/26-6a79bbea91706.webp' /></p><p> </p><p>இதன்மூலம்
பொருட்களை குறுகிய காலத்திலும் குறைந்த செலவிலும் கொண்டு செல்லும் வாய்ப்பு
உருவாகுவதுடன், வர்த்தகர்களின் செயற்பாட்டுத் திறனும் மேம்படும் என்றார்.</p><p>

யாழ்ப்பாணத்தில் களஞ்சியசாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் மற்றும்
தளபாட மையங்களை அமைக்கும் நிறுவனத்தின் திட்டம் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு
பெரும் நன்மையை வழங்கும். குறிப்பாக மாம்பழம், முருங்கை மற்றும் ஏனைய பழங்கள்,
காய்கறிகள் போன்ற விரைவில் பழுதடையக்கூடிய விளைபொருட்களை குளிரூட்டப்பட்ட
கொள்கலன்களில் பாதுகாத்து, சந்தை விலை உயர்ந்த காலத்தில் விற்பனை செய்வதற்கான
வாய்ப்பு இதன்மூலம் உருவாகும் என்பதுடன், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும்
குறைக்க முடியும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><h2>தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும்</h2><p>

இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இனி
கொழும்பு துறைமுகத்தைச் சாராமல் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரடியாக
வந்தடையும் சூழல் உருவானால், போக்குவரத்து நேரம், கையாளும் செலவு மற்றும்
தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f307a18-8bea-4f01-87a1-70a663425629/26-6a79bbeb6b9a3.webp' /></p><p> </p><p>அதேவேளை, வணிகர்களின் முதலீட்டுச்
சுழற்சியும் விரைவடைவதன் மூலம் அதன் நன்மைகள் பொதுமக்களையும் சென்றடையும்.

ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம், கப்பல் முகவர் சேவைகள், பொருட்கள்
போக்குவரத்து சேவைகள், தளபாட முகாமைத்துவம், கப்பல் மற்றும் விமான வழி
பொருட்கள் கையாளல், கொள்கலன் சேவைகள், சுங்க அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு
சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை யாழ்ப்பாணத்திலிருந்தே வழங்கவுள்ளது.
</p><p>
இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய
நாடுகளில் நிறுவனம் கொண்டுள்ள வலையமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்தின் வர்த்தகத்
தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும்,
காங்கேசன்துறை துறைமுகத்தை மையமாகக் கொண்ட பிராந்திய வர்த்தக வளர்ச்சியை
ஊக்குவிப்பதற்கும், வடக்கு மாகாணத்தை சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும்
தளபாட வலையமைப்புடன் மேலும் வலுவாக இணைப்பதற்கும் இக்கிளை அலுவலகத்தின்
ஆரம்பம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a530a231-24b8-4658-ad1a-dc36dae69453/26-6a79bbec4178f.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு ஏற்றுமதியாளர்
சம்மேளனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனத்தின்
முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், வர்த்தக மற்றும்
தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T12:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் பெண் ஊழியர்களைத் தாக்கிய மர்ம நபர்கள் - மனம் திறந்த பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/richa-integrated-farm-s-food-festival-suspended-1786363244"></link>
            <id>https://tamilwin.com/article/richa-integrated-farm-s-food-festival-suspended-1786363244</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் நடைபெறவிருந்த மாபெரும் உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதற்கான காரணத்தை, நிர்வாகத் தலைவர் கந்தைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் நடைபெறவிருந்த மாபெரும் உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதற்கான காரணத்தை, நிர்வாகத் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மாபெரும் உணவுத் திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டு, ஊடகங்கள் வாயிலாகவும் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. </p><p>

இதன்படி, கடந்த 7, 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நான்கு நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவிருந்தது. எனினும், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, குறித்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>

உணவுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட பணம் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த குழப்ப நிலையை ஏற்படுத்தியவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை றீச்சா பண்ணையின் நிர்வாகத் தலைவர் கந்தையா பாஸ்கரன் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7ZhC4P7s_AA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyn_c6u3fNU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T12:01:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலேசியாவில் பதுங்கியிருந்த கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-s-close-friend-arrested-1786362378"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-s-close-friend-arrested-1786362378</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபரான தனுஷ்க கௌசல்யா எனப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபரான தனுஷ்க கௌசல்யா எனப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நடவடிக்கை இன்று(10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, மூன்று சந்தேகநபர்களும் இன்று மாலை சுமார் 4.28 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL315 மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
</p><h2>
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள்</h2><p>

சந்தேகநபர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக பொலிஸ் உதவி கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவொன்று மலேசியாவுக்கு பயணம் செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998ead46-efc1-4bcc-a2c7-9dd718e15d3c/26-6a79ba5538821.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மேலும், குறித்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

இலங்கை மற்றும் மலேசிய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, இந்த மூன்று சந்தேகநபர்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:47:40+00:00</updated>
        </entry>
    </feed>
