<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-24T04:47:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபெருட்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-explosive-devices-1787534942"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-explosive-devices-1787534942</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை நடத்தியுள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில் மிகவும் முக்கியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை நடத்தியுள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில் மிகவும் முக்கியமானது FBI,அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் ஆகியவை நடத்திய விசாரணைகளாகும்.
</p><p>அவர்கள் இரண்டு விசாரணைகளை நடத்தியுள்ளனர்.ஒன்று டிஜிட்டல் சான்றுகள் பகுப்பாய்வு (Digital evidence analysis). இரண்டாவது இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (Explosive devices) தொடர்பான விசாரணைகள். </p><p>தயவு செய்து இந்த அறிக்கைகளை வரவழைத்து ஜனாதிபதியை பரிசீலிக்குமாறு சட்டத்தரணி சன்ஜீவ வீரவிக்ரம தெரிவித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>வெடிப்பொருட்களின் தன்மை</h2><p>“சலேக்கு நீதி” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுரேஷ் சலே தடுத்து வைத்திருக்கும் முறைமை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்...
</p><p>அனைத்து டிஜிட்டல் பயன்பாடுகள் (Digital apps) தொடர்பான விசாரணையை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் துறையும் . அமெரிக்காவின் FBI தெளிவாகக் கூறியுள்ளது என்னவென்றால், இது இலங்கையில் தயாரித்து பயன்படுத்தப்பட்டவை அல்ல.
</p><p>இலங்கையில் இராணுவத்தினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர், மேலும் சில ஆயுதமேந்திய அமைப்புகளும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளன. </p><p>அவர்கள் பயன்படுத்திய அதிகபட்ச பொருட்கள் RDX மற்றும் TNT ஆகும். ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பது TATP (Triacetone Triperoxide) ஆகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3f9838-248d-4a2e-adc1-9dd4639fa90c/26-6a8b9e60712a3.webp' /></p><p>அதற்குப் பயன்படுத்தப்பட்ட திரவம் மிகவும் சக்திவாய்ந்த Liquid Precursor என்ற வகையாகும். 2019 ஆம் ஆண்டளவில் உலகளவில் இதை ஒரு குறிப்பிட்ட அமைப்பே பயன்படுத்தியிருந்தது. </p><p>அதனால்தான் FBI மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆகியவை மிகவும் தெளிவாகக் கூறின இந்தத் தாக்குதல் குறித்த அமைப்புடன் தொடர்புடையது என்றும், அவர்களிடம் இருந்து தகவல்களையும் அறிவையும் பெற்று இங்குள்ள ஒரு அமைப்பால் செய்யப்பட்டது என்றும். </p><p>அந்த அமைப்புத் தான், தௌஹீத் ஜமாஅத் தலைவர் வழிநடத்திய அமைப்பாகும்.
இந்தக் கருத்தை புறக்கணித்துவிட்டு, நீதிமன்ற விடயங்களில் தலையிடவோ, தடுப்புக் காவல் உத்தரவு (Detention order) பிறப்பிக்கவோ அல்லது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியாது. </p><p>தயவுசெய்து அந்த அறிக்கையை வரவழைத்துப் பாருங்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் ராஜ் படேல் சமர்ப்பித்த சாட்சியங்கள் மற்றும் சாட்சிய பகுப்பாய்வுகளைப் பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்த முழு கதையும் புரியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T04:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் சுரேஷ் சலே விவகாரம்! ஜனாதிபதிக்கு அடுத்தடுத்து பறக்கும் அவசர கடிதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-mother-writes-to-the-president-1787543797"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-mother-writes-to-the-president-1787543797</id>
            <summary type="text">அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தாயார், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

சுரேஷ் சலே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தாயார், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். </p><p>

சுரேஷ் சலேவின் தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள குறித்த கடிதம் நேற்று (24.08.2026) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>நாட்டிற்காக தியாகம்</h2><p>
</p><p>
குறித்த கடிதத்தில், எனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, தனது இளமையையும், குடும்பத்துடன் செலவிடக் கூடிய பொன்னான ஆண்டுகளையும் நாட்டிற்காக தியாகம் செய்தார். </p><p>

ஒரு வயதான தாய்க்கு, தனது மகன் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் இருப்பதைப் பார்ப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

இருப்பினும், ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவை விசாரிக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee36718-35a1-4fa6-8bf9-fd2d19357421/26-6a8bc5537e703.webp' /></p><h2>விசாரணைகள்</h2><p>
</p><p>
ஒரு தாயாக எனது மகனின் தடுப்புக்காவல் மேலும் நீட்டிக்கப்பட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

விசாரணைகள் சான்றுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். தடுப்புக்காவல் என்பது சான்றுகளுக்கு மாற்றாக அமையக் கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். </p><p>

மேலும், ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு வழங்கக் கோரியுள்ள சுரேஷ் சலேவின் தாயார், தனக்குச் சிறப்புச் சலுகைகள் எதுவும் தேவையில்லை என்றும், நீதி, மனிதாபிமானம் மற்றும் நியாயமான வாய்ப்பு மட்டுமே வேண்டும் என்றும் கூறியுள்ளார். </p><p>

இதேவேளை அண்மையில் சுரேஷ் சலேவின் <a href="https://tamilwin.com/article/suresh-sale-health-condition-request-president-1787367322" target="_blank">மனைவியும்</a> ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896"></link>
            <id>https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896</id>
            <summary type="text">இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 

நபர் ஒருவர் தனது பிள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. </p><p>

நபர் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காகப் பணம் திரட்ட முயன்ற போது, வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் 22 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

கொடூரமாக கொலை</b></h2><p>வீடு வீடாக சென்று தேங்காய் பறிக்கும் நபர் ஒருவரும், 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f649e6dd-62ca-4d90-a410-6e6dbdd688e5/26-6a8bc57085de0.webp' /></p><p>இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிட்டிய, பெலவத்தை பகுதியை சேர்ந்த விமலானி என்ற ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 21ஆம் திகதி மாலை, தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயிரிழந்த பெண்ணின் ஒரே மகன், இரவு 7.45 மணியளவில் வீடு வந்து தனது தாயை தேடியுள்ளார். </p><p>

இதன்போது தாயின் நிர்வாணமான சடலம் வீட்டின் அறை ஒன்றின் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து அயலவர்களுக்கு தெரிவித்து, தாயின் மர்ம மரணம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> 

சம்பவம் நடந்த நாளின் பகல் வேளையில் கூலிக்குத் தேங்காய் பறிக்கும் நபர் ஒருவர் நடமாடியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>அன்று மாலை வேளையில் ஆசிரியை கொல்லப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் பிரதான சந்தேக நபர் நடமாடியுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>

அடுத்த நாள் அதிகாலை மூன்று மணியளவில் சந்தேக நபரை கைது செய்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு சொந்தமான தங்க மோதிரம் ஒன்று சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h3><b>

தங்க மோதிரம்</b></h3><p>பெண் அதிபரின் வீட்டின் காணிக்குள் சென்று மறைந்திருந்து வீட்டின் பின்பக்க கதவூடாக வீட்டிற்குள் நுழைந்து, குளிக்கத் தயாராக இருந்த அவரது தலையில் கட்டையால் பலமுறை தாக்கியதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66367a69-b77a-48cc-8714-a81086f1f2d4/26-6a8bc57149717.webp' /></p><p>பின்னர் அவர் கீழே விழுந்ததும், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் தங்க மோதிரத்தையும் கழற்றிக் கொண்டு தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>

இந்தச் செயலுக்காகத் தனது உதவிக்கு முச்சக்கர வண்டி ஓட்டுநரான தனது நண்பரையும் ஈடுபடுத்திக் கொண்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். </p><p>தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்குப் பணம் தேடுவதற்காகவே இதனைச் செய்ததாகச் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>

திருடப்பட்ட தங்கச் சங்கிலியை கொடகெவல நகரில் உள்ள தனியார் அடகு மையமொன்றில் 90,000 ரூபாவிற்கு அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டதாகவும், அன்றைய இரவில் நண்பர்களுடன் சேர்ந்து விருந்து வைத்து கொண்டாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருவரிடமும் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T04:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்! சிறீதரன் எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sridharan-mp-international-action-reclaim-lands-1787539530"></link>
            <id>https://tamilwin.com/article/sridharan-mp-international-action-reclaim-lands-1787539530</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின்
நாடாளுமன்ற உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

 நேற்று (23.08.2026) யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி இடம்பெறும்
போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>அறவழிப் போராட்டம்</h2><p>
</p><p>&nbsp;இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை தொடர்ந்து அபகரித்துவரும்
நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும்
நோக்கில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது புலனாய்வுத் துறையினரும்
இராணுவத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன், அவர்களைப்
பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும்
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e3349c-1cda-4cbd-80e1-01aa9ff4a13e/26-6a8bb43d227a8.webp' /></p><p>
</p><p>
மக்கள் சுதந்திரமாக போராட முடியாதவாறு பந்தல் அமைக்கக்கூட அனுமதி
மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 36 வருடங்களாக சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும்
வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.</p><h2>தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள்</h2><p>
</p><p>
போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இராணுவ முகாம்களுக்கு அருகில்
சிங்களக் குடும்பங்கள் தொடர்ச்சியாக குடியேற்றப்பட்டு வருகின்றன. </p><p>இது தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும்
முழுமையான முயற்சியாகும்.

இலங்கை அரசும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாக தெரிவித்தாலும்,
களத்தில் நிலைமை முற்றிலும் மாறாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e095ed9-98cf-4fb4-a29c-08f0659e926c/26-6a8bb43e08d94.webp' /></p><p>

எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்திடமிருந்து மீட்டுத் தருவதற்கு உடனடியாக தலையிட வேண்டும்.
</p><p>
தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிளான்
மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மக்களின் இந்த நியாயமான போராட்டம்
தொடரும் என&nbsp; சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போயுள்ள மயக்கவியல் வைத்திய நிபுணர் - காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561"></link>
            <id>https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை பணியில் இருந்ததன் பின்னர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணராக பணிபுரியும் கண்டியை சேர்ந்த திருமணமான வைத்தியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.</p><h2> கார் கண்டுபிடிப்பு</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ​​மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், அந்த வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிச்செல்வது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5948d344-4c37-49aa-b39a-77298e4fc3ac/26-6a8bbbe80dfd9.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் உள்ள 17வது தூண் பகுதியில் நேற்றிரவு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக, பொலிஸார், குற்ற நிகழ்வு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p>வைத்தியரின் கார் கண்டெடுக்கப்பட்ட இடம் யானைகள் நிறைந்த காடு என்றும், வனவிலங்கு அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T03:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலின் சர்ச்சைக்குரிய வீட்டில் தொடரும் சிக்கல் - ஆபத்தான கூடாரமாக மாறும் வீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basils-building-is-a-place-of-illegal-activities-1787539241"></link>
            <id>https://tamilwin.com/article/basils-building-is-a-place-of-illegal-activities-1787539241</id>
            <summary type="text">மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில், அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில், அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

அந்த கட்டடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. </p><p>

இந்தக் காணியை கொள்வனவு செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.</p><p> </p><h2><b>

நிர்மாணப் பணிகள் </b></h2><p>விசாரணையில் இருக்கும் போதே, வழக்கறிஞரின் தலையீட்டுடன் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த காணியை கொள்வனவு செய்தது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு பல சந்தர்ப்பங்களில் பசில் ராஜபக்ச முன்னிலையாக தவறியுள்ளார். </p><p>

இதன் காரணமாக, பசில் ராஜபக்சவின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்யவும், அவரது பிணைதாரிகளிடம் இருந்து பிணைப் பணத்தை அறவிட்டுக்கொள்ளவும் மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a44ff83-63db-45e9-bdc2-e7d87ad99afa/26-6a8bb660aacb2.webp' /></p><p> </p><p>

அத்துடன், பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குக்கு தொடர்புடைய காணியில் கட்டப்பட்டுள்ள வீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அதற்குள் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

அங்கு வெற்று மதுபானப் போத்தல்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள் மற்றும் ஊசி செலுத்தும் உபகரணங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தன.</p><h3><b>சட்டவிரோத நடவடிக்கை</b></h3><p> இந்தக் கட்டடத்தைப் பல்வேறு குழுக்கள் அல்லது நபர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது.</p><p>ஆரம்பக் கட்டத்தில் 2 அல்லது 3 மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாரிய தடிமன்கொண்ட கம்பிகளையிட்ட தூண்களின் மீது நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>

பின்னர் அவசரமாக அதன் மீது சுவர்கள் எழுப்பப்பட்டு, பூச்சு பூசப்பட்டு, கூரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15ea5587-bbdd-473e-a781-b687b43ee268/26-6a8bb78f73d94.webp' /></p><p> </p><p>9 கொள்கலன் பெட்டிகளில் கட்டடப் பொருட்கள் இவற்றுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வப்போது நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த காணி ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்பெட் கெல்லர் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. இதன்போது, அவருக்கு 60 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்தி அந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

காணியைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளது. இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p> பசில் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-08-24T03:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் கொலை சம்பவம் - வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-arrested-murder-peko-saman-mother-1787538944"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-arrested-murder-peko-saman-mother-1787538944</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார்&amp;nbsp; சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார்&nbsp; சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்த கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>&nbsp;மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e45c89d7-7529-445a-9a68-4388868226e6/26-6a8bb3cfd02d9.webp' /></p><p> 

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபரை மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். </p><p>இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறைகள் குறித்து ஜெனீவாவில் விவாதிக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-matters-will-raised-in-geneva-1787539369"></link>
            <id>https://tamilwin.com/article/prison-matters-will-raised-in-geneva-1787539369</id>
            <summary type="text">&amp;nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில், இலங்கையின் அண்மைய சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில், இலங்கையின் அண்மைய சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்</h2><p>
</p><p>இந்த அமர்வின் போது, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்த விடயங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77698420-7f36-4fb8-b0fe-c35d4304f1b1/26-6a8bafab0b828.webp' /></p><p>
</p><p>கடந்த சில மாதங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் வன்முறைகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த சம்பவங்களில் பல கைதிகள் கொல்லப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்திருந்தனர்.</p><p>கைதிகளின் உரிமைகள் தொடர்பிலும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், ஜெனீவா அமர்வுகளில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வு அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T02:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-had-connection-with-a-teacher-1787535734"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-had-connection-with-a-teacher-1787535734</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிடம் நிதி உதவி பெற்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், சில ஆண்டுகளுக்கு முன்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிடம் நிதி உதவி பெற்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், சில ஆண்டுகளுக்கு முன்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை, பரீட்சைக்கு முன்பாக கசியவிட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>இந்தத் தனியார் வகுப்பு ஆசிரியர் தற்போது டுபாயில் வசித்து வருவதாக பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>குறித்த ஆசிரியரை கைது செய்வதற்காக இன்டர்போல் அமைப்பின் உதவி பெறப்படவுள்ளது.</p><p> </p><h2><b>சிவப்பு அறிவிப்பு </b></h2><p>அத்துடன், அவருக்கு எதிராகச் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99bb1e7-e79b-4a9f-932c-f4ec36957e3b/26-6a8baa8626419.webp' /></p><p> தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள அவரது மகனையும் மனைவியை பொலிஸார் விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-24T02:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் எல் நினோவின் தாக்கம்! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-affects-7-districts-1787535714"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-affects-7-districts-1787535714</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் &#039; எச்சரிக்கை&#039; (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இயற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ' எச்சரிக்கை' (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9b3552-34f0-42af-ae6d-6eb8b51860bf/26-6a8ba996903d9.webp' /></p><p>எனவே போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்குமாறும், வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது.

வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.

இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணியவும் கோரப்பட்டுள்ளது.</p><h2>எல் நினோவின் தாக்கம்</h2><p>இதேவேளை, 7 மாவட்டங்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மையம் சுட்டிக்காட்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/facedab5-1f65-4820-b49c-160655122bc1/26-6a8ba997411d3.webp' />&nbsp;</p><p>

மேலும், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 நபர்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்கத்தின் காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகிக்கவும் பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T02:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச வீட்டு பொருட்களுடன் வீதியில் காத்திருந்த நிலை.! பின்னணியில் நடந்த இரகசிய பேச்சுவாரத்தை அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188"></link>
            <id>https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும், தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும், தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்த சொகுசு வீடான பீகொக் மென்சன் (Peacock Mansion) வழங்குவதாக அறிவித்திருந்தார்.</p><p>இறுதியில் அதை வழங்க முடியாத சூழ்நிலையில் வீட்டு பொருட்களுடன் தங்காலையில் இருந்து கொழும்புக்கு வந்த மகிந்த ராஜபக்ச வீதியில் நின்ற ஒரு கதையை வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.</p><p>அவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்..</p><h2>
</h2><p></p><h2>மைத்திரி லியனகேவிடம் என்ன கூறினார்</h2><p>மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் ஒரு வீடு வழங்குவதாக அறிவித்திருந்தேன். அதை அறிந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்திருந்தார்.</p><p>நான் மைத்திரியின் வீட்டுக்கு சென்றபோது ராஜித சேனாரத்தினவும் இருந்தார். அந்த வீட்டை மகிந்தவுக்கு கொடுத்தால் சிறைச்செல்ல நேரிடலாம் என்றனர்.</p><p>நான் கேட்டேன், " நான் ஏன் சிறைக்குச் செல்ல வேண்டும்? அக்காலத்தில் எதற்கெடுத்தாலும் சிறையில் அடைத்து அரசியல் பகையை தீர்த்துக்கொண்ட ஒரு கலாசாரம் இருந்தது.
</p><p>"உங்களுக்கு நாங்கள் ஒரு ஆளுநர் பதவி தருகிறோம்" என்று சொன்னார்கள். வீட்டை கொடுக்க வேண்டாம் என்று கூறினர். நான் யோசித்தேன், சிறைக்குச் செல்வதை விட ஆளுநராவது நல்லது தானே என்று.</p><p>ஆனாலும் நான் சொன்னேன், " தூதுவர் பதவி வேண்டாம்" என்று. இல்லை, ஆளுநர் பதவியை தருகிறோம், நாளைக்கே வீட்டின் கதவை மூடுங்கள் என்று எனக்கு சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f20bb47-2c4f-4452-9adf-1842b8a1d296/26-6a8b97864362d.webp' /></p><p>ஆனால் மகிந்த வீட்டுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் என்னை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரின் மனைவியும் பல அழைப்பு எடுத்திருந்தனர்.</p><p>ஆனால் என்னால் அழைப்பை எடுக்க முடியாமல் இருந்தேன். கடைசியில் வேறு வழியின்றி நான் சொன்னேன், "சர், இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. என்னை மன்னிக்க வேண்டும்" என்று. </p><p>அதற்கு மகிந்த ராஜபக்ச என்னிடம் சொன்னார், "நீங்கள் பயப்பட வேண்டாம். பயமில்லாமல் இதை திறந்துவிடுங்கள், நான் இப்போது எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்" என்றார். ஒன்றும் செய்ய வழியில்லாம் வீட்டை கொடுத்தேன். அதன்பின் சுமார் நான்கு மாதங்கள் சென்றன ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T01:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் - 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

வாக்குமூலம் பதிவு </b></h2><p>இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார். </p><p>அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74269162-f58b-44a6-9f60-c9ec104d4e02/26-6a8b2bf985a63.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. </p><p>

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். </p><p>அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது. </p><p> எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன. </p>]]></content>
            <updated>2026-08-24T00:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூபாவைப் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம்! குறையும் கையிருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/low-foreign-reserves-1787528239"></link>
            <id>https://tamilwin.com/article/low-foreign-reserves-1787528239</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவாகவே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவாகவே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இந்த வருடத்தில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கையிருப்பு 8.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். எனினும், தற்போது 6.5 பில்லியன் டொலர்களே கையிறுப்பில் உள்ளது.</p><h2>கையிருப்பு</h2><p> </p><p>

இந்தநிலையில், மாதத்திற்கு 250 முதல் 300 மில்லியன் டொலர் வரை சேமிப்பது இலகுவானதல்ல.

2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின்போது வெளிநாட்டு கையிருப்பு 6100 மில்லியன் டொலராக இருந்தது.</p><p> அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புக்காக மூன்று காலாண்டுக்கான நிதி ஒத்துழைப்பு வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae29a83-2648-4645-b95c-ac83f7fb5fce/26-6a8b867631d8e.webp' /></p><p>
</p><p>
இந்த ஒத்துழைப்புக்கு அமைய வெளிநாட்டு கையிருப்பு குறைந்தது 7,100 மில்லியன் டொலராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக இன்று 6591 மில்லியன் டொலரே கையிருப்பில் உள்ளது.</p><p> சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட வெளிநாட்டு கையிருப்பு குறைவாக உள்ளது.

எனவே இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன.</p><p>கையிருப்பைக் கொண்டு ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க இந்த டொலர்களைப் பயன்படுத்துகிறார்கள்.&nbsp; கையிருப்பைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் இந்தச் சுமை அரசாங்கத்தின் மீதே விழும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T23:47:29+00:00</updated>
        </entry>
    </feed>
