<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T20:28:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-illegal-sand-mining-fields-kilinochchi-1787859112"></link>
            <id>https://tamilwin.com/article/increase-illegal-sand-mining-fields-kilinochchi-1787859112</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல
சேவை நிலைய பிரிவுவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல
சேவை நிலைய பிரிவுவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல்
நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எந்தவித அனுமதியும் இன்றி இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு குறித்த
பகுதியில் இடம் பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>

இதனால் நெற்செய்கை மேற்கொள்ளும் வயல்கள் பாதிப்படைந்து வருவதாகவும்,
தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்
பொலிஸாருக்கு தெரியாமல் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் உரிமையாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d34083db-f54c-4550-af43-d58717e15dbe/26-6a90926c3ddf3.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய திணைக்கள அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக
உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குறித்த மணல் அகழ்வைத் தடுத்து
நிறுத்தாது விட்டால் பெரும் போக நெற்செய்கையில் பெரும் பாதிப்பை
விவசாயிகளாகிய நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும்
தெரிவிக்கின்றனர்.
</p><p>
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வை தடுத்து
நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T20:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-steps-reduce-fuel-prices-sri-lanka-1787860324"></link>
            <id>https://tamilwin.com/article/government-steps-reduce-fuel-prices-sri-lanka-1787860324</id>
            <summary type="text">​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை
இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று
திருகோணமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை
இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை
விடுத்துள்ளார்.

​</p><p>கிண்ணியாவில் இன்று (27)இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​</p><p>அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
​"ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளின் காரணமாக ஹோர்முஸ்
நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து சுமுகமடைந்துள்ளது. </p><p>இதன் எதிரொலியாக
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.
​சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போதெல்லாம், அந்தப் சுமையை
மக்கள் மீது சுமத்தி உடனடியாக இங்கு எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம்,
உலகச் சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கத் தயங்குவது
ஏன்?

​</p><p>தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில், எரிபொருள் விலை
குறைக்கப்பட்டால் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், போக்குவரத்து
கட்டணங்கள் மற்றும் மீனவர்கள், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் குறையும்.
</p><p>எனவே, உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைத்து
மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-27T19:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு - 54 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deadly-forest-fire-northern-algeria-12-dead-1787858230"></link>
            <id>https://tamilwin.com/article/deadly-forest-fire-northern-algeria-12-dead-1787858230</id>
            <summary type="text">வடக்கு அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ
காரணமாகக் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக
அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ
காரணமாகக் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாகவே இந்த
காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளது.</p><h2>உயிர்சேதங்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஜிஜெல், பெஜாயா மற்றும் திசி ஓசோ ஆகிய மாகாணங்களில் அதிகளவில் உயிர்சேதங்கள்
ஏற்பட்டுள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd548c6-fedd-4f65-ba36-8298428d937b/26-6a908eb6b14ba.webp' /></p><p>
</p><p>
நாடு முழுவதும் 69 இடங்களில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப்
படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
</p><p>
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்தப் பகுதியில் தீவிர வெப்ப அலை மற்றும்
காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக உலக வானிலை அமைப்பு
கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T19:23:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்.. ட்ரம்ப் கையிலெடுத்துள்ள கடுமையான ஆயுதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288"></link>
            <id>https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288</id>
            <summary type="text">ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான &quot;Economic D-Day&quot; பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான "Economic D-Day" பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> அமெரிக்க கருவூலத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரானுடன் எண்ணெய் வணிகம், வங்கிப் பரிவர்த்தனை, டிஜிட்டல் சொத்துக்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் அனைத்து பொருளாதாரப் பாதைகளையும் முடக்குவதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தானும் அமெரிக்கா மீது நிதி ரீதியான தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்துள்ளது. </p><p>ஈரான் - அமெரிக்க போர் பதற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அமெரிக்கா கையாளும் இந்த மிக நுணுக்கமான யுக்தி சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது குறித்து மிக ஆழமாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kuwqKWzBX2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-injured-in-an-accident-in-kilinochchi-1787856659"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-injured-in-an-accident-in-kilinochchi-1787856659</id>
            <summary type="text">A9வீதி கிளிநொச்சி 155ஆம் கட்டை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக நேற்றிரவு
இடம்பெற்ற விபத்தில் 32வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.&amp;nbsp;டிப்பர் வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>A9வீதி கிளிநொச்சி 155ஆம் கட்டை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக நேற்றிரவு
இடம்பெற்ற விபத்தில் 32வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.&nbsp;</p><p>டிப்பர் வாகனமும் மோட்டார்
சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>விபத்து
தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T18:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472"></link>
            <id>https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472</id>
            <summary type="text">யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>எதற்காக குறித்த பெண் வெளியேற்றப்பட்டார் என்பதற்கான சரியான காரணம் தெரியாமல் கூட சிலர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருக்கும் விதிமுறைகளை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியது அவசியம்.&nbsp;</p><p>அந்தவகையில், ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. எனவே, குறித்த பெண் அதனை மீறியதாகவும் அவரை வெளியில் இருந்து புகைப்படம் எடுக்குமாறு அறிவுறுத்தி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உட்பட சர்வதேசத்தில் மற்றும் நாட்டில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RmNDeKRbHN4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை திரும்பப் பெறமாட்டோம்! ஜனாதிபதியின் அதிரடியான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895</id>
            <summary type="text">சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&amp;nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&amp;nbsp;அண்மைய காலமாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>அண்மைய காலமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>குறிப்பாக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>அதேநேரம், இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பல மோசமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் எவ்வாறான பதிலை வழங்குவார் என நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் நிகழ்த்திய உரை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FrbTK1osark" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை இதற்காக தான்! பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaturanga-abesinga-statement-1787844901"></link>
            <id>https://tamilwin.com/article/chaturanga-abesinga-statement-1787844901</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது
பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என&amp;nbsp;அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது
பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என&nbsp;அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தேவைப்பட்டால் புதிய சட்டங்களை இயற்றியாவது அல்லது இருக்கும் சட்டங்களை
மாற்றியமைத்தாவது ஒரு முழுமையான 'முறைமை மாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும்
என்பதற்காகவே வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>வரலாற்று சிறப்புமிக்க ஆணை</h2><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், மக்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆணையை மூன்று பிரதான காரணங்களுக்காக
வழங்கியுள்ளனர்.</p><p> முதலாவதாக, பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிப் பிள்ளைகள்
நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது, இரண்டாவதாக, சட்டம் மற்றும்
நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவது, மூன்றாவதாக, வங்குரோத்தான பொருளாதாரத்தை
மீட்டு முன்னோக்கிச் செல்வது என்பனவாகும்.
</p><p>
நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்வாதிகள், பெரும் தொழில்
உரிமையாளர்கள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகள் உட்பட அனைவரும் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டு, சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை தற்போது
உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a01abe2-e337-45e7-b7b7-044fd32f0850/26-6a905dbe597f6.webp' /></p><h2>இலங்கையின் பொருளாதாரம்</h2><p>
</p><p>
முற்றிலும் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஆசிய
பிராந்தியத்திலேயே மிகவும் வலுவான பொருளாதாரமாக மாற்றப்பட்டுள்ளதுடன்,
அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்த நாடு தற்போது நேர்மறையான நிலைக்கு
மீண்டெழுந்துள்ளது.
</p><p>
போக்குவரத்து, கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதித் துறைகளிலும்
தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருவதால், மக்கள் எதிர்பார்த்த முறைமை
மாற்றத்தின் பெரும்பகுதியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கம் வெற்றிகரமாக
நிறைவேற்றியுள்ளது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T17:20:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவும் இஸ்ரேலும் பதற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-envoy-to-un-calls-for-de-escalation-1787849990"></link>
            <id>https://tamilwin.com/article/us-envoy-to-un-calls-for-de-escalation-1787849990</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேலும் சிரியாவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. 
சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேலும் சிரியாவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>
சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப் படைத்தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அமெரிக்க துணைப் பிரதிநிதி டாமி புரூஸ் இந்த விடயத்த வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1039f04-336c-4803-b5e5-b15c7fd441f6/26-6a906d0839c72.webp' /></p><p>
</p><p>பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக இரு நாடுகளுடனும் பிராந்தியத்தின் பிற பங்காளர்களுடனும் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.</p><p>
வடமேற்கு சிரியாவில் அலெப்போ அருகே அமைந்துள்ள அபு அல்-துஹூர் தளத்தின் ஓடுபாதை மற்றும் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து, ஆகஸ்ட் 18 அன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் 8 வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதில் சிரியாவின் உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா அண்மையில் எடுத்த தீர்மானத்தை டாமி புரூஸ் சுட்டிக்காட்டினார்.</p><p> 
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைத் திறந்துவிடும் எனவும், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T17:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 49000இற்கும் அதிகமான குடியேற்றவாசிகள் கைது : ட்ரம்ப் ஆட்சியில் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098</id>
            <summary type="text">அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தைப்
பொறுப்பேற்ற பின்னர் பதிவான மிக அதிகளவிலான மாதாந்த கைது நடவடிக்கை இதுவெனக்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>புதிய ஆளணி சேர்ப்புத் திட்டம்</h2><p>
கலிபோர்னியா பல்கலைக்கழகங்களின் திட்ட தரவுகளை மேற்கோள்காட்டி
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தை விட 15
சதவீதமும், பெப்ரவரி மாதத்தை விட 70 சதவீதமும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36370105-efae-48ff-8be2-6a31f4bcbe18/26-6a90124f9f464.webp' /></p><p>

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டமையே இத்தகைய கைதுகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக்
கூறப்படுகின்றது.
</p><p>
குறிப்பாக டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சுமார் 20,000
கைதுகள் இடம்பெற்றுள்ளன.</p><p> உள்ளூர் பொலிஸார் குடியேற்ற அமுலாக்கப் பிரிவினருடன்
இணைந்து செயற்படும் ஒப்பந்தங்கள் மூலம் அங்கு அதிகளவிலான கைதுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
அமைச்சரவையின் புதிய ஆளணி சேர்ப்புத் திட்டத்தின்கீழ் சுமார் 12,000 புதிய
அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும்
குடியேற்றவாசிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கைகள் மேலும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஹரால்ட்டின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு - அவசரமாக நாடு திரும்பிய மதத்தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672</id>
            <summary type="text">நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று(2...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று(27.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் ஹரால்ட், 1991 ஆம் ஆண்டு முதல்
நோர்வேயின் தலைவராக கடமையாற்றி வருகிறார்.
</p><p>
மன்னரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இளவரசர் ஹாகோன் மற்றும் அரசி சோன்யா
ஆகியோர் தமது அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
பதவியை துறக்க மறுப்பு</h2><p>
மன்னர் சிகிச்சை பெற்று வரும் ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அரச குடும்ப
உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் பதற்றமான சூழல்
நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5c004c-2026-45ce-b880-9a740b6eec08/26-6a9025d3c05a3.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமை காரணமாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே தனது ஜெர்மனிக்கான
பயணத்தை இரத்துச் செய்துள்ளதுடன், மன்னருக்கும் அரச குடும்பத்தினருக்கும்
ஒட்டுமொத்த தேசத்தினதும் பிரார்த்தனைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நோர்வே நாடாளுமன்ற சபாநாயகர் தனது ஐஸ்லாந்து பயணத்தை பாதியிலேயே
கைவிட்டு நாடு திரும்பியுள்ளதுடன், ரோம் நகருக்கு விஜயம் செய்திருந்த நோர்வே
மதத்தலைவர்களும் அவசரமாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
</p><p>
தனது வயது முதிர்வு காரணமாக உத்தியோகபூர்வ செயற்பாடுகளை குறைத்துக்கொண்ட
போதிலும், நாட்டின் மீதான தனது உறுதிமொழி ஆயுட்காலம் வரை நீடிக்கும் எனக் கூறி
மன்னர் ஹரால்ட் தனது பதவியை துறக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T16:42:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல கிரிக்கெட் வீரர் தில்ஷான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/t-m-dilshan-lodges-complaint-1787848353"></link>
            <id>https://tamilwin.com/article/t-m-dilshan-lodges-complaint-1787848353</id>
            <summary type="text">இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி மற்றும் அவதூறு பதிவுகளுக்கு எதிராக நடவடிக்க எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>நாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய சேவையின் மூலம் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தில்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998f8ae5-33b7-462d-be70-8b2cdd0ac6ba/26-6a9066a2935b8.webp' /></p><p>அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் இந்த முறைப்பாட்டைப் அவர் பதிவுசெய்துள்ளார்.</p><p>
தனது பெயரை எதிர்மறைப் பிரசாரங்களிலிருந்து மீட்டெடுக்க நியாயமான மற்றும் விரைவான விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அல்லது விளம்பரத்துக்காகப் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புணர்வுடன் செயல்படுமாறும் சமூக வலைதளப் பயனர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>அவதூறான பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு எதிராகத் தனது வழக்கறிஞர்கள் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், தனக்கு ஏற்பட்ட சேதத்திற்குச் சட்டரீதியான தீர்வுகளைப் பெறவுள்ளதாகவும் தில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளி ஓருவருடன் தில்ஷான், தொடர்பு பேணியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த தகவல்கள் பொய்யானவை எனவும் இதனால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் தில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T16:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தத்திற்கு ஓரு மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கும் இலங்கை அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-announces-us-1-million-humanitarian-aid-1787847488"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-announces-us-1-million-humanitarian-aid-1787847488</id>
            <summary type="text">வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
நேபாளத்தில் வெள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.</p><p>
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் மற்றும் பெருமளவிலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன. </p><p>
நேபாளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியுதவியை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f13efb0-d75b-4505-b1e9-b52b0bb3e637/26-6a9063462de02.webp' /></p><p>
இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொதுமக்களின் துயரங்கள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்க தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். 
குறிப்பாக, அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் நேபாள மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.</p><p>
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவே இந்த உதவி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>இதேவேளை, இலங்கை வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளி விவகார அமைச்சர் சிசிர் கனாலுடன் தொலைபேசியில் உரையாடி, இலங்கையின் இரங்கலையும், நேபாளத்திற்கான முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருப்பதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்கான வழிகளை இலங்கை தொடர்ந்து ஆராயும் என வெளி விவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T16:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீப் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் மூவர் ஸ்தலத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-killed-three-wheeler-jeep-collision-1787846377"></link>
            <id>https://tamilwin.com/article/three-killed-three-wheeler-jeep-collision-1787846377</id>
            <summary type="text">கெப்பித்திகொல்லாவை அருகே இன்று (27) காலை ஜீப் ரக வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெப்பித்திகொல்லாவை அருகே இன்று (27) காலை ஜீப் ரக வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
கெப்பித்திகொல்லாவை - மதவாச்சி பிரதான வீதியில் கோனமரியாவை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கெப்பித்திகொல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bee5cb4-7bde-4149-bbc6-4fc9bb591b36/26-6a905ffd84214.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தில் பதவிய பகுதியைச் சேர்ந்த பாட்டி, அவரது மகள் மற்றும் 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் துயர விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை இழந்த கே.வி.தவராசாவுக்கு கொழும்பில் காத்திருந்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140"></link>
            <id>https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140</id>
            <summary type="text">40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

சாதாரண மனிதராக இருந்த என்னை கொழும்பிற்கு அழைத்து வந்து, இவ்வளவு பெரிய சட்டத்தரணியாக மாற்றியவர் என்னுடைய துணைவியார் தான். சுமார் 40 ஆண்டுகளாக எனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்து வந்தார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் எங்களுடன் அலுவலகத்தில் பணியாற்றிய இளம் பெண் சட்டத்தரணி ஒருவரால் 60 கோப்புகள் திருடப்பட்டன. அதேபோன்று, இந்த விடயம் தொடர்பில் விசாரித்தபோது, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் பேசினார்கள்.
</p><p>
அதன் பின்னர், தற்போது என்னுடன் இருப்பவர்களை வைத்துத்தான் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியை தொடர்ந்து வருகின்றேன்.</p><p>

மேலும், மாயமான கோப்புகள் காரணமாக ஏராளமான வழக்குகள் இன்றுவரை நிலுவையில் உள்ளதாகவும் அறிய முடிகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களையும், அனுபவங்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fSE6JfGxUrU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:48:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்! அமைச்சர் பிமல் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-wimal-ratnayake-statement-1787841578"></link>
            <id>https://tamilwin.com/article/minister-wimal-ratnayake-statement-1787841578</id>
            <summary type="text">யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கமே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

யாழில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (26.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>நிதி கிடைத்துமே அபிவிருத்தியில் தாமதம்</h2><p> </p><p>

“காங்கேசன்துறை முகாம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை அபிவிருத்தி செய்ய பின் நிற்கிறது” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை பணத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87efae7a-9bbf-4b70-b4ce-72c9166bf5be/26-6a90555334e71.webp' /></p><h2>அரசாங்கமே முடிவு செய்யும்</h2><p> </p><p>

அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம். ஆனால் எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்.</p><p> 

மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று காட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது. அபிவிருத்தி தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:23:15+00:00</updated>
        </entry>
    </feed>
