<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T08:42:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரனின் ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை நிறைவேற்ற திட்டம்..! எழுந்துள்ள கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dharmalingam-suresh-speech-tamils-1785830766"></link>
            <id>https://tamilwin.com/article/dharmalingam-suresh-speech-tamils-1785830766</id>
            <summary type="text">
நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள்
கொண்ட கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள்
கொண்ட கூட்டமைப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்
தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.</p><p>

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின்
வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அவர்,&nbsp;</p><p>"இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன? இந்த மண்ணிலே
மக்களுக்காக நடந்தேறியுள்ள தியாகங்கள் என்ன? இந்த தியாகங்கள் எதற்காக நடந்தது
என்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.</p><p></p><h2>அரசியல் அமைப்பு</h2><p>இந்த இலங்கை நாட்டில் தமிழர்கள் கடந்த 78 வருடங்களாக அடிமைகளாக வழிநடத்தப்பட்டு
கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற
நடாளுமன்றம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9baf04a5-2395-4914-a230-566a1117741e/26-6a719f5fb0d78.webp' /></p><p> இந்த அரசியல்
அமைப்புக்காலம் காலமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின்
விருப்பத்துக்கு மாறாகவும் நேர்மையாக இருந்த சில சிங்கள மக்களின்
விருப்பத்துக்கு மாறாகவும் அந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.</p><p>1972ஆம் அண்டு 78 ஆண்டு அரசியல் அமைப்புக்கள் எங்கள் விருப்பத்துக்கு மாறாக
நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றும் அந்த அடிமைசாசனமான ஒற்றையாட்சி அரசியல்
அமைப்பு தான் இந்த மண்ணிலே இவ்வளவு அழிவுகளும் தியாகங்களும் நடந்தேறுவதற்கு
காரணமாக இருந்தது.</p><p> 1987 யூலை 2ஆ ம் திகதி முன்னாள் மறைந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனவும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின்
அரசியல் ஆசைக்கு மாறாக தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒப்பந்தத்தை
நிறைவேற்றியதால் இன்று இவ்வளவு இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது" என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக வீதிகளில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-renewed-traffic-disruptions-on-roads-1785828681"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-renewed-traffic-disruptions-on-roads-1785828681</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன்- கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன்- கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் போக்குவரத்து தடைப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>நேற்று முதல் இடைவிடாது பெய்து வரும் மழையால், ஹட்டன் – கொழும்பு மற்றும்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள்
ஏற்பட்டுள்ளதுடன், மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளன. </p><p>இதன்
காரணமாக பல இடங்களில் ஒரு வழிப் போக்குவரத்து மட்டுமே முன்னெடுக்கப்பட்டு
வருவதால், வாகன நெரிசலும் பயண தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p></p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>
</p><p>குறிப்பாக, இன்று அதிகாலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வூட்லன் மற்றும்
குயில்வத்தை பகுதிகளில் பாரியளவில் மண் சரிந்து வீதியை மறைத்ததால்,
ஹட்டனிலிருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களின்
போக்குவரத்தும் பல மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000608d7-5699-4ca1-b9c3-ad22fe81316a/26-6a719b807db9c.webp' /></p><p>
</p><p>இதனையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரங்கள் சம்பவ இடங்களுக்கு
விரைந்து சென்று, வீதியில் குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகளை
முன்னெடுத்தன. </p><p>அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு
வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><h2>அறிவுறுத்தல்</h2><p>
எனினும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மலைச்சரிவுகள் மேலும்
தளர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f180df67-6700-4989-a65c-1879209fc75e/26-6a719b8154626.webp' /></p><p> </p><p>இதனால் எந்நேரமும் புதிய மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம்
காணப்படுவதாகவும், இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பொதுமக்களும்
மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>&nbsp;தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில்,
மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களும், பிரதான வீதிகளைப் பயன்படுத்தும்
வாகன சாரதிகளும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்புடன்
செயல்படுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் காவலில் உதயநிதி ஸ்டாலின்..பரபரப்புக்கு மத்தியில் அவசரமாக புறப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrested-mk-stalin-tvk-office-1785828059"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrested-mk-stalin-tvk-office-1785828059</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;இந்நிலையில், திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும்&nbsp;உதயநிதி ஸ்டாலினின் தந்தையான மு.க ஸ்டாலின் அவசரமாக புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>பரபரப்பான சூழ்நிலை</h2><p> உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக முறைப்பாடளிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5cce0a6-7254-4215-af0b-48d54ec32561/26-6a719725db42b.webp' /></p><p>இதற்கு அமைய அவர் இன்று தமிழ்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஸ்டாலினின் கைதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.&nbsp;</p><p>இதற்கு மத்தியில், முன்னாள் முதலமைச்சர்&nbsp;ஸ்டாலின்&nbsp;திமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது மகனின் கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் இதுவரை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி..! தமிழகம் முழுவதும் பரவிய பெரும் பரபரப்பு - களமிறக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்</h2><p>
</p><p>
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9704d7-f715-4329-854a-b42066832c20/26-6a71947f611db.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக பதற்றத்தினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் பெருமளவு ஆதரவாளர்கள் குவிந்துள்ளதுடன், பெரும் பரபரப்பு நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p><p> </p><p>இந்த நிலையில் உதயநிதியின் நீலாங்கரை வீட்டை சுற்றி காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-world-bank-representatives-1785827163"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-world-bank-representatives-1785827163</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக
வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (03) திருகோணமலையில் உள்ள
ஆளுநர் செயலகத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக
வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (03) திருகோணமலையில் உள்ள
ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. </p><p>இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி
வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
</p><p></p><h2>ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பின்</h2><p>குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான்
அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் உட்பட மாகாண
அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் உயரதிகாரிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c1f452d-87bc-4a5b-9811-22523a84e190/26-6a7193bcf2df7.webp' /></p><p>உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 மில்லியன்
அமெரிக்க டொலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது</p><p>மேலும், தேவையான
ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பிறகு, இத்திட்டம் 2027ஆம்
ஆண்டில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக்கலவரம்.. புலனாய்வில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-police-investigation-cid-1785825963"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-police-investigation-cid-1785825963</id>
            <summary type="text">மஹர சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான ஒரு தகராறால் தூண்டப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான ஒரு தகராறால் தூண்டப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>
இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் புலனாய்வுக் குழுக்கள், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பட்டா மற்றும் சாத்தான் என அடையாளம் காணப்பட்ட இரண்டு கைதிகள், இந்தக் கலவரத்தைத் தூண்டுவதில் ஈடுபட்டிருக்கலாம் என்பது குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>

மேலும், இந்தச் சம்பவத்தில் கூடுதலாக இரண்டு கைதிகளின் ஈடுபாட்டைக் காட்டும் ஆதாரங்களையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>வாக்குமூலங்கள் பதிவு</h2><p>
</p><p>

சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த கைதிகள் உட்பட, சுமார் 25 நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de9d914-93a0-4320-a86e-ff482cf873f8/26-6a718ff247ff0.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைத் தீர்மானிக்கவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காணவும் பல புலனாய்வுக் குழுக்கள் தற்போது மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.
</p><p>


இதற்கிடையில், மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
</p><p>

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சிறை வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பைப் பேணுவதற்காக பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையும் (STF) தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைக் கூரை மீது&nbsp;ஏறியவர்கள்..&nbsp;</h2><p>

அதே நேரத்தில், மஹர சிறையில் நடந்த கலவரம் குறித்த தொடர் விசாரணைகளில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e9da26-a7cd-47ef-9186-2d3a6132e0a6/26-6a7190f76ce1d.webp' /></p><p>அங்கு, கைதிகள் குழு ஒன்று வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சிறைச் சொத்துக்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, கடந்த சனிக்கிழமை மாலையில் சுமார் நான்கு கைதிகள் எந்தவித காரணமும் இன்றி சிறைக் கூரை மீது ஏறியுள்ளனர்.
</p><p>
தங்களால் இனி சிறையில் இருக்க முடியாது என்று கைதிகள் கூரையிலிருந்து கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>
மேலும் விசாரணையில், சிறை அதிகாரிகள் கைதிகளைப் பாதுகாப்பாகக் கீழே இறக்க முயன்றபோது, ​​மற்றொரு கைதிகள் குழு ஆத்திரமடைந்து ஆக்ரோசமாகச் செயல்படத் தொடங்கியதும் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-sainthamaruthu-narcotic-pills-1785826917"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-sainthamaruthu-narcotic-pills-1785826917</id>
            <summary type="text">சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை
மாத்திரைகளுடன் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை
மாத்திரைகளுடன் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது
பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகலாதன் தலைமையில்
அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் நேற்று(03) மாலை குறித்த
இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
</p><p>
இதன்போதே, மருத்துவப் பரிந்துரைகள் ஏதுமின்றி சட்டவிரோதமாகப் பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்த சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் அதே இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>
</p><p>
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய சந்தேகநபரிடம் சாய்ந்தமருது
பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcdacd1-6fe4-488f-b04c-41725bf08c24/26-6a71906c5f963.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரைச் சான்றுகளுடன் கல்முனை நீதவான்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாக திறக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076</id>
            <summary type="text">நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேல் கொத்மலை ஒரு வான் கதவு இன்று (04.08.2026) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேல் கொத்மலை ஒரு வான் கதவு இன்று (04.08.2026) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இன்றைய தினம் அதிகாலையிலும் நீர்மட்டம் அதிகரித்ததால் வான் கதவு திறந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடருமானால், ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கும் அபாயம் உள்ளது.</p><p>இதனால், அணைக்கட்டிற்கு கீழ் உள்ள கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வாழும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4963b751-bb62-42e9-abca-6c8c72f982fc/26-6a718e17e6913.webp' /></p><p>

அப்பகுதியில் நிலவும் தொடர் மழை காரணமாக, செயின்ட் கிளேயர் மற்றும் டெவோன் ஆகிய அருவிகளில் வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-for-yositha-and-wasantha-1785823745"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-for-yositha-and-wasantha-1785823745</id>
            <summary type="text">அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்று இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p>
</p><h2><b>
கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான்</b></h2><p>இதன்போது சந்தேகநபர்களான யோசித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னகொட ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbf2ad4-e6eb-4048-b2b9-7ee645dc08ea/26-6a718c45403cf.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T06:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டவளை பகுதியில் சுமார் 661 மில்லிமீட்டர் கனமழை பதிவு! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785823330"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785823330</id>
            <summary type="text">வட்டவளை பகுதியில் கடந்த 4 நாட்களில் சுமார் 661 மில்லிமீட்டர் கனமழை பெய்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி டாக்டர் வசந்த சேனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை பகுதியில் கடந்த 4 நாட்களில் சுமார் 661 மில்லிமீட்டர் கனமழை பெய்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி டாக்டர் வசந்த சேனதீர தெரிவித்துள்ளார். </p><p>

தற்போதைய வானிலை நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று (03.08.2026) மட்டும், அப்பகுதியில் 204 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே நேற்று (03) பதிவான அதிகபட்ச மழையளவாகும்.</p><p></p><h2>உலகளாவிய வானிலை மாற்றம்</h2><p> </p><p>

மேலும், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 3 நாட்களில் 150 மில்லிமீட்டர் முதல் 500 மில்லிமீட்டர் வரை அதிக மழை பெய்துள்ளது. 

உலகளாவிய வானிலை மாற்றங்களின் தாக்கத்தால், மிகக் குறுகிய காலத்தில் கனமழை பெய்வது தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ef9220-aa00-42b2-a308-42e35fbc23bb/26-6a7188ced37f9.webp' /></p><p>

இருப்பினும், இந்த நிலைமையை முந்தைய 'தித்வா' புயலின் போது இருந்த நிலைமையுடன் ஒப்பிட முடியாது. தித்வா புயலின் தாக்கத்தின் போது கணிசமாக அதிக மழை பதிவானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், நிலச்சரிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. </p><p>

எனவே, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை முன்னறிவிப்புகளை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-court-due-to-bad-weather-1785822015"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-court-due-to-bad-weather-1785822015</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் மாவட்ட
நீதவான் நீதிமன்றங்களில் இன்று(04.08.2026) அழைக்கப்படவிருந்த வழக்குகள்
அனைத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் மாவட்ட
நீதவான் நீதிமன்றங்களில் இன்று(04.08.2026) அழைக்கப்படவிருந்த வழக்குகள்
அனைத்தும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க அந்த நீதிமன்றத்தின் நீதவான்களால்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிலவும் மழைக் காலநிலையுடன் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குகளில் முன்னிலையாகும்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு வருகை தருபவர்களுக்கு
போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b132ef31-f881-4d43-a7f7-dcb95e687d39/26-6a7180fade1c2.webp' /></p><p>அந்த நீதிமன்றங்களில் பணியாற்றும்
சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதவான்களால் வழக்குகள் இவ்வாறு
வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன...! பதற்றத்தின் பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-mahara-prison-tense-1785813941"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-mahara-prison-tense-1785813941</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலைக்குள் இருந்த தடைசெய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் தங்கள் பொறுப்பிற்குக் கீழ் கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலைக்குள் இருந்த தடைசெய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் தங்கள் பொறுப்பிற்குக் கீழ் கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையே அண்மைய பதற்றத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளன.</p><p> அதிகாரிகளின் நடவடிக்கையின் காரணமாக, கைதிகள் சில நாட்களாகவே ஒருங்கிணைந்து பதற்றத்தை உருவாக்க தயாராகியிருந்ததாக தெரியவந்துள்ளது. </p><p>மஹர சிறைச்சாலையின் புதிய பிரதான அதிகாரியாக கயான் திலகரத்ன கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.</p><p> </p><h2><b> சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன</b></h2><p>அவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரரின் சகோதரராகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a01936-fe87-49c1-b4c0-424a0e144d3a/26-6a71838c4e29a.webp' /></p><p>குறித்த பிரதான அதிகாரி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பல ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு இடமாற்றம் பெற்றிருந்தார். </p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அவர் மஹர சிறைச்சாலையின் பிரதான ஜெயிலராகக் கடமைகளை ஆரம்பித்திருந்தார். </p><p>குறித்த பிரதான அதிகாரி சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் அதிகாரியொருவர் எனச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>அதற்கமைய, அவர் மஹர சிறைச்சாலையில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதைத் தவிர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.</p><p> </p><h3><b>தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள்</b></h3><p>சிறை அறைகளுக்குள் இருந்த போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைத் தங்கள் பொறுப்பிற்குக் கீழ் எடுப்பதற்காக அவரது தலைமையில் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dce22fd4-0693-4310-9432-8fcd877ad2f5/26-6a71838b97341.webp' /></p><p>அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சிறைச்சாலையில் இருந்த போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.</p><p> சில கைதிகள் போதைப்பொருள் கிடைக்காமையின் காரணமாக கடந்த வாரத்தில் சிறைச்சாலைக்குள் அசெளகரியத்திற்குள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>சில கைதிகள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பின்னணியில், கைதிகள் சிலர் கடந்த சனிக்கிழமையன்று குறித்த அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர். </p><p>சிறைக்குள் அரங்கேறிய வன்முறை சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பல கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T06:18:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்பு - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-of-four-people-missing-landslide-recovered-1785823460"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-of-four-people-missing-landslide-recovered-1785823460</id>
            <summary type="text">நுவரெலியா - பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது
மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல்போயிருந்த நால்வரின் சடலங்களும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது
மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல்போயிருந்த நால்வரின் சடலங்களும் (03) ஆம்
திகதி இரவு மீட்கப்பட்டுள்ளன.</p><p>இதன்படி, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது
வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>உறவினர் வீட்டிற்கு வருகை&nbsp;</h2><p>
</p><p>
காணாமல்போயிருந்த பெண் ஒருவரின் சடலத்தை 19 ஆவது தேசிய பாதுகாப்பு
படைப்பிரிவின் சிப்பாய்கள் மீட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61410645-da2b-49e8-a3f9-7243847c7274/26-6a7183ee0083e.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து பொல்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதேசவாசிகளும்
இணைந்து (03) ஆம் திகதி இரவு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் ஏனைய 3
சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
(03) ஆம் திகதி பிற்பகல் 1:30 மணியளவில் பொல்பிட்டிய பகுதியில் பெய்த பலத்த
மழையினால் குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகவும், அவ்வீட்டில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
உயிரிழந்த நால்வரும் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், உறவினர்
வீட்டிற்கு வருகை தந்திருந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதத்தில் சிக்கி
உயிரிழந்துள்ளனர் என்றும் பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T06:17:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-tamil-nadu-1785823705"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-tamil-nadu-1785823705</id>
            <summary type="text">தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>முறைப்பாட்டின் அடிப்படையில்</h2><p>மேகதாது அணை விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்தும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தஞ்சாவூரில் பனகல் கட்டிடம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று(03.08.2026) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b797baf8-f9ba-4c13-943b-4c8dea03cd4e/26-6a7186b958a1d.webp' /></p><p> 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p><p>மேலும், இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உதயநிதி மீது பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். </p><p>


அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறையான அனுமதியின்றி கடத்தப்பட்ட கடலட்டைகள் ஏலத்தில் விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seized-smuggled-sea-cards-1785822346"></link>
            <id>https://tamilwin.com/article/seized-smuggled-sea-cards-1785822346</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகரில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக எடுத்துச்
செல்லப்பட்ட 3111 கடலட்டைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நகரில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக எடுத்துச்
செல்லப்பட்ட 3111 கடலட்டைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>குறித்த கடலட்டைகள்,
பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் ஊடாக 11,19,960 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p>மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட
அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது,
சட்டவிரோதமாக கடலட்டைகளை ஏற்றிச் சென்ற சிறிய கன்டர் வாகனம் ஒன்று
கைப்பற்றப்பட்டது.</p><h2>சந்தேகநபர்கள் கைது</h2><p> </p><p>வாகனத்தில் இருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டைகளும், சந்தேகநபர்களும் யாழ். மாவட்ட
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
</p><p>பின்னர் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பறிமுதல்
செய்யப்பட்ட 3111 கடல் அட்டைகள் 11,19,960க்கு ஏலத்தில் விற்பனை
செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T05:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிகுடி பகுதியில் திருடப்பட்ட தங்க நகை : யுவதி ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-jewelry-stolen-in-kaluwanchikudy-woman-arrest-1785820151"></link>
            <id>https://tamilwin.com/article/gold-jewelry-stolen-in-kaluwanchikudy-woman-arrest-1785820151</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை(02.08.2026) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை(02.08.2026) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள்
களவாளப்பட்டுள்ளன. </p><p>இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே
களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
</p><p>


உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றையதினம் (03.08.20226) களவாடப்பட்ட
பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595bcae2-a907-4b2c-b8ba-309b21f7d758/26-6a7179e19f910.webp' /></p><p>


வெளிமாவட்டத்திலிருந்து குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த
யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3423d99-5723-45a6-b105-bce7fb72e75f/26-6a7179e277099.webp' /></p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-08-04T05:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை நிலைகுலையச் செய்ய சதி! அதிரப் போகும் சிறைகள் - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/planned-to-make-tense-in-5-prisons-1785814404"></link>
            <id>https://tamilwin.com/article/planned-to-make-tense-in-5-prisons-1785814404</id>
            <summary type="text">திட்டமிட்ட குழுவொன்றினால் மேலும் 5 சிறைச்சாலைகளில் மோதல்களை ஏற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குழுவொன்றினால் மேலும் 5 சிறைச்சாலைகளில் மோதல்களை ஏற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும் ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பகரமான நிலைக்குள்ளாக்கும் திட்டம் குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களுக்கு பின்னணியிலும் இந்தச் சதிக்குழு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2><b>குழப்பகரமான நிலை</b></h2><p>

தும்பர, களுத்துறை, காலி, கொழும்பு மெகசின் மற்றும் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைகளில் இந்த மோதல்களை ஏற்படுத்தும் திட்டங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் எச்சரித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471f3044-36db-4815-9034-f5694377ab46/26-6a7160885afe8.webp' /></p><p>சிறைச்சாலைகளில் இவ்வாறான மோதல்களை ஏற்படுத்தி நாட்டையே குழப்பகரமான நிலைக்குள்ளாக்கும் திட்டங்களுக்கு பின்னால் பல அரசியல்வாதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
பல உயர் சிறைச்சாலை அதிகாரிகளும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரும் உள்ளமைக்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><p>
இது தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h3><b> 

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு</b></h3><p>இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கிருந்த சொத்துக்களுக்கு 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73b66b3d-34d5-47da-8cc5-fb7600b38498/26-6a7161509302d.webp' /></p><p>இந்த மோதலுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறிப்பிட்ட காரணமின்றி இந்த மோதலானது சதிக்குழுவின் வழிகாட்டலின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இதேவேளை, தற்போது இலங்கையில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video&nbsp;&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XReRi0v-K0A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-04T05:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-alert-for-sea-areas-1785818870"></link>
            <id>https://tamilwin.com/article/red-alert-for-sea-areas-1785818870</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக&amp;nbsp;கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக&nbsp;கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை</h2><p>அதன்படி, கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் மற்றும் இக்கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3f77cf-f7ca-46be-a3fe-b21dce543af6/26-6a7177f506573.webp' /></p><p>
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை கடல் பகுதிகளுக்குள் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>எனவே, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T05:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-records-decline-tourist-arrivals-in-july-1785817494"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-records-decline-tourist-arrivals-in-july-1785817494</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) அறிக்கையின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) அறிக்கையின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு சிறிய சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
 

இந்த மாதத்தில் மொத்தம் 196,845 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். </p><p>இது, ஜூலை 2025 உடன் ஒப்பிடும்போது 1.7வீத சரிவைக் குறிக்கிறது.
</p><p></p><h2>மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை</h2><p>
 

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்தில் 44,547 வருகைகளுடன் இந்தியா உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881d5203-609e-47e3-a484-776adbd54965/26-6a7171de06370.webp' /></p><p>இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 26வீதம் ஆகும்.
</p><p>
 

ஐக்கிய இராச்சியம் 21,834 பார்வையாளர்களுடன் இரண்டாம் இடத்தையும், அதைத் தொடர்ந்து நெதர்லாந்து 12,493 பேருடனும், சீனா 12,336 பேருடனும், பிரான்ஸ் 10,102 பேருடனும் அந்த மாதத்தில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
</p><p>
 

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,343,418 ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T05:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலைய பெண்கள் கழிப்பறைக்குள் சிக்கிய ஆபத்தான பொதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-drugs-found-in-bia-toilet-1785816865"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-drugs-found-in-bia-toilet-1785816865</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. </p><p>இவை விமான நிலையத்தின் பெண்கள் மலசலகூடத்திலிருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><p> </p><h2><b>போதைப்பொருள் தொகை</b></h2><p>இந்த நிலையில் இந்தப் போதைப்பொருள் தொகையை நேற்று காலை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50aec65a-4980-4ecd-883f-45e2542170b3/26-6a716ecc0cffa.webp' /></p><p>1 கிலோ 187 கிராம் எடைக் கொண்ட இந்த ஹஷிஸ் போதைப்பொருள் தொகை 7 பக்கெட்டுகளுக்குள் பொதியிடப்பட்டிருந்தது.</p><p> அத்துடன், அவற்றுடன் சில ஜோடிப் பெண்களின் காலணிகளும் சில பெண்களின் ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. </p><p>விமான நிலையத்திலிருந்து வெளியேறத் தயாராகும் போது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், விமானப் பயணி ஒருவர் போதைப்பொருள் தொகையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். </p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T04:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-egg-price-increase-1785816817"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-egg-price-increase-1785816817</id>
            <summary type="text">உற்பத்தி செலவு அதிகரிப்பால் எதிர்காலத்தில் ஒரு முட்டை விலை 50 ரூபாய் வரை உயரும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உற்பத்தி செலவு அதிகரிப்பால் எதிர்காலத்தில் ஒரு முட்டை விலை 50 ரூபாய் வரை உயரும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.</p><p>
இந்த நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் முட்டை ஒன்றின் சில்லறை விலை 47 முதல் 48 ரூபா வரை அதிகரித்துள்ளது.</p><p></p><h2>தீவனத்துக்கான சோளம் வழங்குவதில் நெருக்கடி&nbsp;</h2><p>
சோள இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டதன் காரணமாக கால்நடை தீவனத்துக்கான சோளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e64eca0c-bf88-4e1f-a7c1-382630438771/26-6a716dff07859.webp' />&nbsp;</p><p> </p><p>

கால்நடை தீவனத்தின் விலையும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நாட்டின் நாளாந்த முட்டையின் தேவை சுமார் 95 இலட்சமாக இருந்த போதிலும், நாளாந்த முட்டை உற்பத்தி 70 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

தற்போது நிலவும் காலநிலைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி குறையும் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T04:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-red-alerts-kandy-kegalle-nuwaraeliya-1785817106"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-red-alerts-kandy-kegalle-nuwaraeliya-1785817106</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;தற்போது நிலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>தற்போது நிலவும் மழைக்கால வானிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகளை மேலும் நீடித்துள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை நீடிப்பு</h2><p>
</p><p>
அதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, உடுதும்பரா மற்றும் பஸ்பாகே கோரல பிரிவுகளுக்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டைக்கும் இவ்வாறு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நார்வட்டத்திற்கும் நிலை 3இன் கீழ் வெளியேற்ற அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff19c6f-09e7-4dc0-a87d-1a1056cfe04b/26-6a716c1a5607a.webp' /></p><p>இந்த நிலையில் குறித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதேநேரம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் பகல் நேரங்களிலேயே பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T04:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களின் உரிமைகள் குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு : ஜீவன் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-s-opinion-on-today-s-meeting-1785814032"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-s-opinion-on-today-s-meeting-1785814032</id>
            <summary type="text">நாடாளுமன்றத்துக்குள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி
உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் சார்பில் ஜனாதிபதியை
நேரில் சந்தித்து மலையக மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்துக்குள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி
உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் சார்பில் ஜனாதிபதியை
நேரில் சந்தித்து மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்புத் திட்டங்கள் மற்றும்
மாகாண சபை தேர்தல் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்
தொண்டமான் தெரிவித்துள்ளார். </p><p>நேற்றைய தினம்(03.07.2026) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதியுடனான
பேச்சின் பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இயற்கை அசம்பாவிதங்களால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ள நிலையில், மலையகத்தில்
காணி மற்றும் வீடமைப்பு பிரச்சுனை இன்னமும் இழுபறியாகவே உள்ளதாக அவர்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி</h2><p>இது அரசின் மீதான விமர்சனம் அல்ல என்றும், மாறாக நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு
முறைமைச் சார்ந்த பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/071de2bd-5b39-49e9-9fb5-7964c4e02f19/26-6a715f6832a67.webp' /></p><p>
பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை முறைமை காரணமாக காணிகளை விடுவிப்பதில்
பெரும் சிக்கல்கள் நிலவுவதுடன், காணிகளை விடுவித்தாலும் தோட்டத்தில்
பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வீடமைப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என
நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கின்றன எனத் தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைச்
சிக்கல்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்றும்
தெரிவித்தார்.</p><p>அத்துடன், மலையக வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபா
நிதி போதுமானது அல்ல என்பதால், எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இந்த
நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும்
அவர் தெரிவித்தார்.
</p><p>
கடந்த முறை ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் நிதியில் 67 வீதம் இந்திய அரசிடன்
நிதியுதவி என்பதால், இலங்கை அரசின் நேரடி நிதி ஒதுக்கீடு மலையகப் பகுதிகளுக்கு
அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காணி உரிமை கட்டாயம் வழங்க</h2><p>காணி வழங்குவது சுலபமான காரியம் அல்ல என்றும், வளங்கள் மற்றும் மலையக
சுற்றாடல் பாதுகாப்பு குறித்த சவால்கள் இருக்கின்றன என ஜனாதிபதி தரப்பில்
சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அக்கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும்,
மலையக மக்களுக்கு உறுதியான காணி உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில்
தாம் உறுதியாக இருக்கின்றார் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec37ade2-3e15-4d42-8d55-74eb6841f380/26-6a715f68e759a.webp' /></p><p>
மேலும், மாகாண சபை என்பது தமிழர்களுக்கு மட்டுமேயான ஒரு விடயம் அல்ல என்றும்,
அது இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் அவசியமான அதிகார
பரவலாக்கத்தின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>13 மாவட்டங்களில் சிறுபான்மையாக (10 வீதம் முதல் 15 வீதம் வரை) வாழும் மலையகத்
தமிழ் மக்களுக்கு, தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழேயே
பிரதிநிதித்துவத்தைப் பெற முடிகிறது எனக் கூறிய அவர், தேர்தல் முறைமை
மாற்றப்பட்டால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் அபாயம்
உள்ளதால், புதிய அரசமைப்பு வரும் வரை பழைய தேர்தல் முறைமையிலேயே மாகாண சபைத்
தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததார்கள் எனவும்
தெரிவித்தார்.
</p><p>
ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் வரவேற்பு மிகவும் சுமுகமாக அமைந்த போதிலும்,
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான நடைமுறை முடிவுகளை இனிவரும்
காலங்களிலேயே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற ஜீவன்
தொண்டமான் தனது பேட்டியில் நிறைவாகத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T03:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை பெய்தால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் - கரையோர பகுதி மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-situation-irrigation-department-announcement-1785811296"></link>
            <id>https://tamilwin.com/article/flood-situation-irrigation-department-announcement-1785811296</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இன்று (04) காலை ஊடகங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இன்று (04) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை&nbsp;</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் மழை பெய்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed99fbbd-ca4b-49af-a779-699a0bf37376/26-6a715f62d111c.webp' />&nbsp;</p><p>இதன்படி, மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக அவர் கூறியுள்ளார். </p><p>

மேலும், களனி கங்கையின் மேல் பகுதிகளான கித்துல்கல மற்றும் நோர்வூட் ஆகியவற்றின் நீர்மட்டமும் குறைந்து வருவதுடன், கித்துல்கல பகுதியில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தாலும் அது ஆபத்தான நிலைமை அல்ல என தெரிவித்துள்ளார். </p><p>

அவிசாவளை, லென்கொஸ் மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட தாழ்நிலைப் பகுதிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதால், களனி கங்கையைச் சுற்றியுள்ள வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என அவர் கூறினார்.</p><h2>மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும்&nbsp;</h2><p>களு கங்கையைச் சுற்றியுள்ள இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதால், அந்த ஆற்றுப் படுகையிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என சூரியபண்டார தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8392a5f9-0e76-4803-b353-ded7c8c89d29/26-6a715f6380abd.webp' />&nbsp;</p><p>

நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு கிடைக்கவில்லை என்பதுடன், இன்றைய தினமும் 25 மில்லிமீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். </p><p>

இதன் காரணமாக அந்த ஆறுகளின் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்தாலும் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் கூறினார். </p><p>

அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவின் நீர்மட்டங்களும் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அந்த நீர்மட்டங்கள் அபாயக் கட்டத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>எதிர்வரும் நாட்களில் ஈர வலயத்தின் மேல் சரிவுப் பகுதிகளில் மழை பெய்தால், ஏற்கனவே உயர் நீர்மட்டத்தில் இருக்கும் களனி கங்கை, களு கங்கை மற்றும் மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோரியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T03:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை - ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087</id>
            <summary type="text">தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது</p><p>பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள்,
நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று (4) மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தொடரும் சீரற்ற காலநிலை</h2><p>மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கண்டி மற்றும் நுவரெலியா
மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a3a188-04e4-4aaf-a9c9-98aba9a75616/26-6a715944eea49.webp' />&nbsp;</p><p>மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப்
பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட
மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள்
மீட்கப்பட்டன.</p><h2>மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி</h2><p>
</p><p>
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச்
சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e394e94-5897-42d7-bf41-3f200b0390c7/26-6a715945d0d6c.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581
குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு
சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண்
ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து
வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T03:16:58+00:00</updated>
        </entry>
    </feed>
