<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-03T01:22:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று இரவு முதல் பல பகுதிகளில் நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-hour-water-cut-in-colombo-areas-1788396341"></link>
            <id>https://tamilwin.com/article/24-hour-water-cut-in-colombo-areas-1788396341</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.</p><h2>நீர்வெட்டு</h2><p>
</p><p>
இதன்படி, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdd77081-7d53-48bb-a89a-2f809253e2bd/26-6a98c54835c0a.webp' /></p><p>
</p><p>
மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நீர் விநியோகம் தடைப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முக்கியஸ்தர் வீடு ஒன்றிற்கு உதவி தேடிச் சென்ற 3 தாய்மார்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296"></link>
            <id>https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
</p><p>

இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு வடக்கிலுள்ள முக்கிய கட்சியொன்று கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.</p><p>

இதனால் இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவி அ. அமலநாயகி இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தினார்.
</p><p>


அதாவது குறித்த கட்சியை நேரில் சென்று அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்று முழுவதாக மறுப்பதாக அமலநாயகி குறிப்பிட்டார்.</p><p>

கட்சியின் முக்கியஸ்தர் வீட்டிற்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்ற நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.மீண்டும் ஒகஸ்ட் மாதமளவில்&nbsp; சென்று நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த முக்கியஸ்தர் வெளியில் சென்றுள்ளார் என்ற பதிலே கிடைத்தது.</p><p>

எனவே அழைப்பிதழை மட்டுமே கொடுத்து விட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1VkU2Km2zbg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயர் - திடீர் மரணத்தில் பின்னணியில் எழுந்துள்ள சந்தேகம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mayor-embroiled-in-multiple-controversies-1788395093"></link>
            <id>https://tamilwin.com/article/former-mayor-embroiled-in-multiple-controversies-1788395093</id>
            <summary type="text">அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றையதினம்(2) சடலமாக மீட்கபட்டுள்ளமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றையதினம்(2) சடலமாக மீட்கபட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முதற்கட்ட விசாரணைகளில் இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டாலும், பொலிஸார் இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்தநிலையில், எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து, பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவரைத் தாக்க மற்றும் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;2014 ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 2014 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகப் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் அரசியல் தாக்கம் உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் 
NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MrLQGVaVBrk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்கின்றன- யாழ். ஊடக அமையத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134</id>
            <summary type="text">போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவு தினமானது யாழ். ஊடக
அமையத்தில் நேற்று(02.09.2026) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழ் மக்களின் இனப்பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே
தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கை ஊடகங்கள் அதனை
வெளிப்படுத்தத் தவறிவிட்டன.</p><p>

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த
அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள். அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a0479b-e0b0-4ff1-a02d-ae83489f8b5b/26-6a98b554534ee.webp' /></p><p>செம்மணி
மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை
செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை
போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன்
டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.
</p><p>
நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின்
கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை
செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.</p><p>

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன
உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய மரணம் - அம்பலமான திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502"></link>
            <id>https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502</id>
            <summary type="text">நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்னாண்டோ மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இவர் தவறான முடிவின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பின் பின்னணி என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) ஆகியவற்றின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக (நகரபிதா) பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்பொழுது நாட்டில் அரசியல் தரப்பில் பல முக்கிய நபர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பொழுது இவ்வாறான மரணங்கள் நிகழ்வதும் வழமையான விடயமாக மாறியுள்ளது.</p><p>
இவ்வாறான நிலையில் இவருடைய மரணத்திற்கு பின்னணியிலும் ஏதாவது அரசியல் காரணங்கள் காணப்படலாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் சில அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hCXh9BxV9x4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கொழும்பில் இன்று பிரம்மாண்டப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-colombo-against-22nd-amendment-1788392725"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-colombo-against-22nd-amendment-1788392725</id>
            <summary type="text">அரசு கொண்டுவர முனையும் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு
எதிராகப் பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து&amp;nbsp; பிரம்மாண்டப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு கொண்டுவர முனையும் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு
எதிராகப் பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து&nbsp; பிரம்மாண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.</p><p>குறித்த போராட்டமானது&nbsp;இன்று(3) பிற்பகல் 2 மணிக்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை
நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்
பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf72aad0-ceed-4b97-bdce-9836c26c3060/26-6a98b917b76ba.webp' /></p><p>

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அரசைத் தவிர
நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முழுமையான
எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்த அவர், </p><p>நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாக்க இந்தச் சட்டமூலத்துக்கு மக்களின் கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது
அத்தியாவசியமானது என்றார்.</p><h2>&nbsp;இறுதித் தீர்ப்பு</h2><p>
</p><p>
இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நீதித்துறையை விமர்சிக்கத்
தயாராக இல்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகவே தாம்
காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20532401-ea4a-48ac-ba07-263d2d734f29/26-6a98b91710778.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், எவ்வாறாயினும் திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என நீதி
அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றமை நீதித்துறைக்கு அழுத்தம்
கொடுக்கும் முயற்சியாகவே உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நீதி அமைச்சர்
தற்போது ஒரு வேடிக்கையான மனிதராக மாறிவிட்டார் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார
எம்.பி. கடுமையாகச் சாடினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் தன்மானத்தின் அடையாளம் தமிழரசுக் கட்சி- சி.வி.கே. சிவஞானம் சிவஞானம் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-founded-on-tamil-self-respect-1788382092"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-founded-on-tamil-self-respect-1788382092</id>
            <summary type="text">தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான
பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குகிறது என இலங்கை தமிழரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான
பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(02.09.2026) வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்ற அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தனித்துவமும் தன்மானமும்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் தன்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
தனித்துவமானதும் பழம்பெருமை மிக்கதுமான அரசியல் கட்சியாகும்.
</p><p>தமிழரசுக் கட்சியின் தனித்துவமும் தன்மானமும் எந்த இடங்களில்
கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதோ, அந்த இடங்களில் தமிழரசுக் கட்சி
பிரசன்னமாகாது.இது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5902f206-9b12-42ad-bf6a-773f9e41a96d/26-6a98a65bb8f21.webp' /></p><p>பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தியோ அல்லது ஓரங்கட்டியோ
தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதன் பின்னர் பகிரங்கமாக ‘வாருங்கள்’ என அழைப்பு
விடுத்தால் எவ்வாறு நாம் அங்கு செல்ல முடியும்? அவ்வாறு அழைக்கப்படும்
இடங்களுக்கு நாம் செல்லவும் மாட்டோம்.
</p><p>தமிழரசுக் கட்சி யாராவது அழைத்த இடத்தில் சென்று அமருகின்ற கட்சி அல்ல.
அதற்கென ஒரு தனித்துவமும் கௌரவமும் இருக்கின்றது.</p><h2>நிலைப்பாட்டின் உறுதி</h2><p> </p><p>இதனை ஏனைய தமிழ் அரசியல்
கட்சிகளும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழரசுக் கட்சியை கடந்த காலங்களில் வழிநடத்தியவர்கள் முதுகை வளைத்து அரசியல்
செய்தவர்கள் அல்லர். அவர்கள் முதுகை நிமிர்த்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக
குரல் கொடுத்தவர்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3cfc6f0-d478-4968-baf0-8ee4048da2b1/26-6a98a65b125a3.webp' /></p><p>அந்த வழியில் வந்த நாங்களும் வளைந்து செல்ல முடியாது.
எங்களை மதிப்பவர்களிடம் ஒரு படி கீழிறங்கி சென்று பேசுவதற்கும், இணைந்து
செயல்படுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் எங்களை மதிக்காதவர்களிடம்
எங்களுடைய தன்மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து செயல்பட முடியாது.
</p><p>தேவைப்பட்டால் ஒரு படி மேலே சென்று எங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக
வெளிப்படுத்தவும் தயாராக இருக்கின்றோம்.
இதனை நான் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122"></link>
            <id>https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.
</p><p>யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>அகில இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>
</p><p>மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197570-8255-44dd-94e8-86061f262ff9/26-6a986c8f2f563.webp' /></p><p>2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று(2) வெளியானமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trincomalee-development-committee-meeting-1788379804"></link>
            <id>https://tamilwin.com/article/trincomalee-development-committee-meeting-1788379804</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்,
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில்
மாவட்ட செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்,
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில்
மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் மகளிருடன் தொடர்புடைய துறைசார்
தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>முக்கிய தீரமானங்கள்</h2><p>

பிரதேச மட்டத்தில் இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத
நிலையில் மாவட்ட மட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இந்தக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e389ecc-608a-4643-a0c9-69ddc12b3c8b/26-6a9883cd166a1.webp' /></p><p>குறிப்பாக, சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள், உளசமூக நலன்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான
தீர்வுகளை முன்னெடுப்பதற்கான பல்வேறு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-coordination-meets-under-mp-prabhu-1788375807"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-coordination-meets-under-mp-prabhu-1788375807</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை தெற்கு, எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச
செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்&amp;nbsp; களுவாஞ்சிகுடி பிரதேச செயலக
மாநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை தெற்கு, எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச
செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்&nbsp; களுவாஞ்சிகுடி பிரதேச செயலக
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இந்தக் கூட்டமானது நேற்று(02.09.2026) நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><h2>அபிவிருத்திப் பணிகள்</h2><p>
</p><p>
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மண்முனை - தெற்கு, எருவில்
பற்று பிரதேசசபையின் தவிசாளர் எம்.வினோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>அத்துடன் திணைக்களங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு துறையினர்,பிரதேசசபை
உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ad05021-3322-45bb-983f-aba57654a264/26-6a9875f80487b.webp' /></p><p>இந்தக் கூட்டத்தின்போது&nbsp; பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப்
பணிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அவசரப் பிரச்சினைகள்
குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
பிரதேசத்தில் 281 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில்
மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது 100வீதம்
பூர்த்தியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்களின் பிரச்சினைகள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அதேவேளை, இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதிக வேகம்
காரணமாக ஏற்படும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்குத் தெளிவான
வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அத்துடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களைக்
கைது செய்யவும், விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் செல்லும் சாரதிகளுக்கு எதிராகத்
தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f917256-8d15-4a77-a0db-1ceae3cb15af/26-6a9875f6ef25f.webp' /></p><p>

களுவாஞ்சிகடி வைத்தியசாலையின் கழிவகற்றல் 15 நாட்களுக்கும் மேலாக
மேற்கொள்ளப்படவில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் பிரதேச சபைக்கு உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>மேலும், வைத்தியசாலையின்
செயற்கை கருத்தரிப்பு மையத்தின் செயல்பாடுகள் மந்தகதியில் இருப்பது
குறித்தும், சேவைக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டும் முறையான சேவைகள்
கிடைக்கவில்லை என்பது குறித்தும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி விரைவில்
தனிக் கூட்டமொன்றைக் கூட்டித் தீர்வு காணத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் தீவிரமடையும் நிவாரணப் பணிகள்: உயிரிழப்பு 1,100 ஐக் கடந்தது என ஐ.நா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/46-nepal-hydropower-workers-may-still-be-alive-1788377339"></link>
            <id>https://tamilwin.com/article/46-nepal-hydropower-workers-may-still-be-alive-1788377339</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க திடீர்
வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நிவாரண
நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க திடீர்
வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நிவாரண
நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>
இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான இந்த
வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் இதுவரை குறைந்தது 1,114 பேர்
உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><h2>காலநிலை மாற்றத்தினால்&nbsp;ஏற்பட்ட&nbsp;பேரழிவு</h2><p>
</p><p>
திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்திருப்பதுடன், 540க்கும் மேற்பட்டோர்
காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட பாலங்கள் முற்றாக
அழிவடைந்துள்ளதால், தொலைதூரக் கிராமங்களுக்கு இராணுவ வானூர்திகள் மூலமே
உணவும் அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/065cf357-9634-4b2b-a930-921dd26912c2/26-6a9881f2961e7.webp' /></p><p>வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 12,000க்கும் மேற்பட்டோர் இதுவரை
மீட்கப்பட்டுள்ள போதிலும், நீர்மின் நிலையச் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள
தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்தப் பேரழிவு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நேபாளப் பிரதமர் பாலேந்திர
ஷா, இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத ஒரு பேரழிவு
எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதகால அவசரநிலையை அறிவித்துள்ள நேபாள
அரசு, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 4 மாதகால சர்வதேச நிவாரணக்
கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.&nbsp;</p><h2>46 தொழிலாளர்கள்&nbsp;</h2><p>&nbsp;இந்தநிலையில், நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர்
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ரசுவாகாதி நீர்மின் நிலையத்தின்
நிலத்தடிச் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 46 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன்
இருக்கக் கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.</p><p>

சுரங்கப் பாதையின் பாதுகாப்பான பகுதிக்குள் அவர்கள் சிக்கியிருப்பதாகவும்,
அங்கு உணவும் குடிநீரும் இருப்பதனால் அவர்கள் ஒரு வாரத்தின் பின்னரும்
உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் நேபாள மின்சார சபையின் பணிப்பாளர்&nbsp; ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;279 பேர் பாதுகாப்பாக மீட்பு</h2><p>

ரசுவா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த 111 மெகாவோட் மின் உற்பத்தி நிலையத்தின்
சுரங்கங்களுக்குள் நேபாள இராணுவத்தினர் மற்றும் இந்திய, சீன சிறப்பு மீட்புக்
குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd895c0-5ce1-4fcf-ae28-8245a3db3dff/26-6a988004ecc86.webp' /></p><p>இதுவரை நீர்மின் திட்டப் பகுதிகளில் இருந்து 279 பேர் பாதுகாப்பாக
மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இயற்கை பேரழிவினால் நாட்டில் இதுவரை 1,114க்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளதுடன், 600 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
எஞ்சியவர்களை மீட்கும் பணியில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச
மீட்புக் குழுக்களின் உதவிகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சிப் பகுதியில் விபத்து - ஒருவர் பலத்த காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-kilinochchi-one-seriously-injured-1788380368"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-kilinochchi-one-seriously-injured-1788380368</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்ற
வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்ற
வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(02.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்</h2><p>ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த
நபர் மீது, கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற
மகிழுந்து(கார்) மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac48816-5c1f-4883-b582-21ea6c8c4fc8/26-6a988677f153b.webp' /></p><p>விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக்
குழுவினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நீண்டகாலமாக கால்நடைகளை திருடி வந்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-thief-in-batticaloa-1788368428"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-thief-in-batticaloa-1788368428</id>
            <summary type="text">மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆடு ஒன்றை கடத்திச் சென்ற காத்தான்குடி
பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆடு ஒன்றை கடத்திச் சென்ற காத்தான்குடி
பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(01.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை&nbsp;</h2><p>

கடந்த மாதம் 18ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதி ஓரமாக
மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை குறித்த நபர்&nbsp; சிறிய ரக வான் ஒன்றில் கடத்திச்
சென்றுள்ளார்.</p><p>

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்
சிசிடிவி கெமரா மூலம் ஆடு கடத்தப்பட்ட வாகனத்தினை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e51e54-4a24-4419-91ef-9b447d926886/26-6a985d11d5564.webp' /></p><p>பின்னர் பொலிஸார் சம்பவ தினமான நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை
காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதுடன் ஆட்டை கடத்த பயன்படுத்திய சிறிய ரக வானையும்
மீட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு மற்றும் மாடுகளை
திருடி வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.</p><p>

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக&nbsp; குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T22:31:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்: ட்ரம்பின் அதிரடி பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565"></link>
            <id>https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
“இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ‘ட்ரம்ப் நீரிணை’ என மாற்றலாமா? அமெரிக்காவைப் போலவே இதுவும் முன்னெப்போதையும் விட சூடாக இருக்கும்!” என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117202132375758936/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

முன்னதாகவும் இந்த நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகள் செய்த அதே வேலையை தான் அநுரவும் செய்கிறார்! எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-does-same-former-president-batti-cordinator-1788366846"></link>
            <id>https://tamilwin.com/article/anura-does-same-former-president-batti-cordinator-1788366846</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோர் செய்த அதே வேலையைத்தான்
இன்று ஜனாதிபதி அநுரவும் செய்கிறார் என முன்னணி சோஷிஸக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோர் செய்த அதே வேலையைத்தான்
இன்று ஜனாதிபதி அநுரவும் செய்கிறார் என முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம்
கிருபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(02.09.2026) மட்டக்களப்பில் 22வது திருத்தச் சட்டத்துக்கு&nbsp;எதிர்ப்பு தெரிவித்து&nbsp;துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையை அடுத்து&nbsp;ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; உயர் நீதிமன்றத்தில் உள்ள 65 வயதுடைய நீதியரசர்களை 67 வயது வரை நீடிப்பதற்கு
22வது அரசியல் அமைப்பு தொடர்பாக புதிய ஒரு சட்டத்தை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு
முன்னர் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p>

இந்த சட்டம் கொண்டுவருவதற்கு காரணம் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்
இருக்கின்றமைய என தேசிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மேல் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்றங்களில் தான்
கூடுதலான வழக்குகள் இருக்கிறது என சாதாரண மனிதர்களுக்கும் கூட தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2295d6b-0442-4556-9ff8-aa675e371116/26-6a98545494822.webp' /></p><p> இந்த நிலையில் நீதியரசர்களை 2 வருடம் நீடிப்பதை கொண்டு வரும் செயலைப் போன்று அன்று ஜே.ஆர்.
ஜெயவர்த்தன&nbsp; அவருடைய நண்பரான நெவில் சமரகோன் என்ற சட்டத்தரணியை
நீதியரசராக மாற்றினார்.
</p><p>
அவ்வாறே சந்திரக்கா ஜனாதிபதியாக வந்ததும் சட்ட ஆலோசகராக இருந்த மார்க்
பெர்னாண்டோ நிறுத்திவிட்டு அவரது நண்பரான சரத் டி சில்வா என்ற மிக மோசமான
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியவரை நீதியரசராக மாற்றினார்.
</p><p>
நீதியரசராக இருந்த சிரானி பண்டாரநாயக்காவை ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் தாங்கள்
சொன்னதை செய்யவில்லை என்று அவரை நீக்கிவிட்டு அவர்களுக்கு சாதகமானவரை
நீதியரசராக கொண்டு வந்தார்கள் அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி நடக்கப்போவது வேறு...அமெரிக்காவுக்கு எதிராக ஈரானின் அடுத்த அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-warns-us-of-new-strategy-in-war-1788383904"></link>
            <id>https://tamilwin.com/article/iran-warns-us-of-new-strategy-in-war-1788383904</id>
            <summary type="text">ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “புதிய உத்தியை” முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தனது X பதிவில், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளார்.
</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
ஈரானின் புதிய போர்க்கள உத்தி, இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் அடித்தளத்தை சிதைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய, பெரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec25851c-986d-46a6-934f-edfdba9d0885/26-6a98958627de4.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை பதிக்க ஈரான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஈரான் தரப்பில் இருந்து இதற்குப் பதிலடி வழங்கப்பட்டால், அதைவிட மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>ஈரான் பதிலடி&nbsp;</h2><p>

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகமும், ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீதும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.</p><p>

இதனிடையே, அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fa" dir="rtl">با این دست و پا زدن‌ها، نه تنها از قعر جهنمی که برای خود ساخته‌اید بیرون نخواهید آمد، بلکه به زودی خواهید دید راهبرد جدید ایران در میدان جنگ، دیپلماسی و مقابله با محاصره اقتصادی، بنیان‌‌تان را درهم خواهد شکست.</p>&mdash; محسن رضایی (@ir_rezaee) <a href="https://x.com/ir_rezaee/status/2095106961394077902?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கின் தன்னாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தானின் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
“தற்காப்புக்கான இயல்பான உரிமையின் அடிப்படையிலேயே” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்கா தமது பிராந்தியத்திலிருந்து இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி நாடுகளையும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயல்களுக்கு வைத்த தீயால் புகைமூட்டம் – மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/smoke-from-field-fires-motorcycle-accident-1788370953"></link>
            <id>https://tamilwin.com/article/smoke-from-field-fires-motorcycle-accident-1788370953</id>
            <summary type="text">கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தானது நேற்று(02.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த விபத்தானது நேற்று(02.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து</h2><p>
</p><p>
காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
படுகாயமடைந்த பெண் மற்றும் மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e686c394-79a9-4461-b4f5-17b4de7d8bd5/26-6a9861ce72994.webp' /></p><p>அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் வயல்களில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்ததால்
ஏற்பட்ட புகைமண்டலம் காரணமாக வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு
எதிரே வந்த வாகனங்கள் தென்படாமல் விபத்து ஏற்பட்டதாக கந்தளாய் பொலிஸார்
தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T20:12:12+00:00</updated>
        </entry>
    </feed>
