<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-06T09:14:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய முக்கிய அரசியல்வாதி - சிஐடியினருக்கு கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-premalal-jayasekara-left-country-1788684125"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-premalal-jayasekara-left-country-1788684125</id>
            <summary type="text">&amp;nbsp;மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உயர் நீதிமன்றம் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உயர் நீதிமன்றம் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

குற்றவியல் புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையின் போது இது தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc6d20b-cda3-4e72-8c87-ea213d801d04/26-6a9d2b79679fc.webp' /></p><h2>வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு</h2><p>
</p><p>
 கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்று, பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உட்பட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aee670-a53c-41eb-b47e-0d038db0d968/26-6a9d2b78b740b.webp' /></p><p>
</p><p>
உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பயணத்தடையை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.</p><p> 

இதற்கு கூடுதலாக, பிரேமலால் ஜெயசேகர உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கும் அக்டோபர் 21 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகள் அனுப்புமாறும் அந்த அமர்வு உத்தரவிட்டது.</p><p> </p><p>

இந்த உத்தரவுகளின்படி, குற்றவியல் புலனாய்வுத் துறை சட்ட நடவடிக்கைகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ​​முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.</p><h2>நாடு திரும்பி விமான டிக்கெட் முன்பதிவு</h2><p> </p><p>

இருப்பினும், பிரேமலால் ஜெயசேகர, திரும்பி வருவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பின்னரே வெளிநாடு சென்றதாக குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aee670-a53c-41eb-b47e-0d038db0d968/26-6a9d2b78b740b.webp' /></p><p> 

2015 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு அரசியல் பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததற்காக, பிரேமலால் ஜெயசேகரவுக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. </p><p>

அந்த தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜெயசேகரவும் பிரதிவாதிகளும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது. </p><p>

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.</p><p> 

அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில், பிரதம நீதிபதி தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T09:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரமின்றி கைது செய்யப்படும் பெரும் புள்ளிகள்.. ரணில் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-ranil-blames-anura-government-1788681579"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-ranil-blames-anura-government-1788681579</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இது தொடர்பில் அவர்&nbsp; மேலும், "அரசாங்கம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), வைத்தியர்கள் மற்றும் பௌத்த துறவிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதுடன், அரசியல் கட்சிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p> மேலும், அரசியல்வாதிகள் போதிய ஆதாரங்களின்றி கைது செய்யப்படுகின்றனர், இந்நடவடிக்கைகள் ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.&nbsp;</p><h2>அரசாங்கத்தின் இலக்கு..&nbsp;</h2><p>இன்று மேற்கொள்ளப்படும் அனைத்தும் நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அத்துடன் சுயாதீன தொழிற்சங்கங்களை ஒழிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b840e241-28a9-4c18-8692-a06b7fa40e21/26-6a9d290dbac1b.webp' /></p><p>

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கான ஏற்பாட்டைச் சேர்க்காததால் ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்தது.</p><p>எனவே, இதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கட்சி நீதிமன்றம் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியுள்ளது.</p><p>
அத்துடன், சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்முறை அமைப்புகளை அரசாங்கம் இலக்கு வைக்கின்றது. பௌத்த துறவிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் கவலையளிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc31d59-37d9-4088-b253-fbfa50687b39/26-6a9d290e8a6c3.webp' /></p><p> இவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் சீர்குலைக்கும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன.&nbsp;</p><p>எதிர்க்கட்சித் தலைவரால் அழைக்கப்பட்ட போதிலும் ராஜீவ் அமரசூரிய நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

</p><p>இந்த மாற்றங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்நாடு நாடாளுமன்றத்தில் இருந்தா அல்லது பெலவத்தையில் இருந்தா ஆட்சி செய்யப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்க திமோர்-லெஸ்டே பயணமாகிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-leaves-for-timor-leste-1788683424"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-leaves-for-timor-leste-1788683424</id>
            <summary type="text">உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது
அமர்வில் பங்கேற்பதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர்
நள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது
அமர்வில் பங்கேற்பதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர்
நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு இன்று (செப்டம்பர்) 6 ஆம்
திகதி திமோர் - லெஸ்டேயின் திலி நகருக்குப் புறப்படுகிறது.

​</p><p>செப்டம்பர் 7 முதல் 10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த உயர்மட்ட
மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரோஸ்
அதானோம் கெப்ரேயஸ், பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட
அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.</p><h2>தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்</h2><p>
</p><p>
மேலும் ​2025ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 78வது அமர்வில் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய தலைவர்
தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமர்விலும் தலைவராகச் செயல்படுவார்.
</p><p>
அத்துடன் ​இலங்கைத் தூதுக்குழுவில் சுகாதார அமைச்சகச் செயலாளர் மருத்துவர்
அனில் ஜசிங்க உட்பட அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ
நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501725a8-4bf5-4863-b3b9-9927aa4e0bc7/26-6a9d2832264d3.webp' /></p><p>இந்த நிலையில் ​ சிறப்பு மருத்துவச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதி
செய்யும் ‘திலி பிரகடனத்தை’ ஏற்றுக்கொள்வது குறித்து இம்மாநாட்டில்
பரிசீலிக்கப்படுவதுடன்
​ சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு,
எண்ணிம சுகாதாரம் (Digital Health), செயற்கை நுண்ணறிவு, மீள்திறன் கொண்ட
சுகாதார வசதிகள் மற்றும் காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிப்பது குறித்து
ஆலோசிக்கப்படும்.

​</p><h2>பிராந்திய ஒத்துழைப்பு</h2><p>மேலும் நாட்டின் இலவச சுகாதாரச் சேவை அனுபவங்களையும் பிராந்திய
ஒத்துழைப்புக்கான முன்மொழிவுகளையும் இலங்கை முன்வைக்கும்.
​ </p><p>இந்த பயணத்தின் போது இந்தியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ் பூட்டான்,
இந்தோனேசியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும், WHO
பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸுடனும் அமைச்சர் தனிப்பட்ட இருதரப்புப்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது இடத்தை பறிக்க வேண்டாம்! கொட்டகலை - ரொப்கில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-space-lokhill-estate-residents-protest-1788680875"></link>
            <id>https://tamilwin.com/article/public-space-lokhill-estate-residents-protest-1788680875</id>
            <summary type="text">கொட்டகலை - ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி
வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை - ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி
வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (06.09.2026) பொதுமக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
ரொப்கில் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் இந்த
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><h2>பொதுத் தேவைக்காக பயன்படுத்தப்படும் இடம்</h2><p>
</p><p>ரொப்கில் தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில், குறித்த இடம் கடந்த
பல வருடங்களாக தங்களின் பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98c083b-60c1-4660-b888-51e56a722d33/26-6a9d23622648d.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, அப்பகுதியில் அமைந்துள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் விசேட
நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த
இடத்தில் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அத்துடன், சீரற்ற காலநிலையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் குறித்த இடத்திலிருந்தே
முன்னெடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1856f74-acb8-46fe-9e32-2f14b7d2a742/26-6a9d2363dcd9b.webp' /></p><h2>ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு</h2><p>
</p><p>
இந்நிலையில், தாங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் இந்த பொது இடத்தை தோட்ட
நிர்வாகம் தனியாருக்கு வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/181feb48-7dd0-4c7b-8def-918fd006d088/26-6a9d2364c33ab.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24f7b1c-441f-47b0-b6d1-42380a69dd17/26-6a9d23659bf5a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diamond-league-mens-javelin-throw-competition-1788682955"></link>
            <id>https://tamilwin.com/article/diamond-league-mens-javelin-throw-competition-1788682955</id>
            <summary type="text">டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த ருமேஷ் தரங்க பத்திரகே சாதனைப் படைத்துள்ளார்.

இந்தப் போட்டி நேற்று (05.09.2026) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த ருமேஷ் தரங்க பத்திரகே சாதனைப் படைத்துள்ளார்.
</p><p>
இந்தப் போட்டி நேற்று (05.09.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
இதில் ருமேஷ் தரங்க பத்திரகே 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார்.
</p><h2>
சாதனை படைத்த வீரர்</h2><p>
உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவரான ருமேஷ் தரங்க, போலந்தின் டேவிட் வெக்னரை விட 1.57 மீற்றர் அதிக தூரம் எறிந்து இந்த வெற்றியை உறுதி செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43143bbc-31c7-4a6e-8dd7-c88880446421/26-6a9d22f98d5dd.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த ஜூன் 4ஆம் திகதி ரோமில் நடைபெற்ற போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்ததே, இந்த ஆண்டில் உலகளவில் பதிவான சிறந்த பெறுபேறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 வருடங்களாக போராடும் யாழ். மக்கள் - அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-palali-1788682316"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-palali-1788682316</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 12 வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டமானது, இன்று(06.09.2026) பலாலி சந்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 12 வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(06.09.2026) பலாலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><h2>

36 வருடங்களாக போராடும் மக்கள்</h2><p>
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192f36d5-b1e3-4549-820a-7833b5e4ed1b/26-6a9d20987a3c9.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ade5600a-750a-4e2c-a8be-dd3f90e1314d/26-6a9d20998e739.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் போட்டிகள்.. பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053"></link>
            <id>https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053</id>
            <summary type="text">கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க கலந்துகொண்டு பார்வையற்றோர் கிரிக்கெட்
விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>கிரிக்கெட் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு
என்றும், அதில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்றும்,
இவ்விளையாட்டு தடைகளை உடைத்து அனைவரையும் உள்ளடக்க உதவுகிறது என்றும் பிரதி
அமைச்சர் குறிப்பிட்டார்.</p><h2>பார்வையற்றோரின் திறமை&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் பந்து இயக்கத்தைக் கண்காணிக்க உதவும் சத்தத்தை எழுப்பும் கடினமான
பிளாஸ்டிக் பந்துகள் மற்றும் ஒலி எழுப்பும் எஃகு விக்கெட்டுகள் இதில்
பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை பந்துவீச்சு அண்டர்ஆர்ம் (Underarm) முறையில் செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a26ab51d-ed19-40c6-9653-dabafd3429e8/26-6a9d1cb796a4b.webp' /></p><p>

இதற்கமைய முற்றிலும் பார்வையற்றவர்கள் (இவர்கள் எடுக்கும் ஒட்டங்களுக்கு
கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்).

மிகவும் குறைந்த பார்வை கொண்டவர்கள்.
</p><p>அதிக பார்வை வசதியும் குறைந்த தெளிவும் கொண்டவர்கள் என 11 பேர் கொண்ட அணியில்
3 B1, 4 B2 மற்றும் 4 B3 வீரர்கள் இடம்பெறுவர்.
</p><p>
மேலும் வீரர்களின் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் வியப்பளிப்பதாகக் கூறிய
பிரதி அமைச்சர், இலங்கையின் முதல் பார்வையற்ற பாராளுமன்ற உறுப்பினரான சுகத்
வசந்தா போன்றவர்கள் கொள்கை மாற்றங்களுக்கும் சமூக உள்ளடக்குதலுக்கும்
ஆற்றிவரும் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய 21ஆம் நாள் திருவிழா நிறைவு - நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284</id>
            <summary type="text">&amp;nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.</p><p> 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கான சிறப்பு பூஜைகள் இடம்பெறும் நிலையில், இன்று(06) கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் நடைபெற்றுள்ளது. </p><p>

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
</p><p>
அதேவேளை, இன்று மாலை தங்க ரத உற்சவமும், நாளைய தினம்
காலை மாம்பழத் திருவிழாவும், மாலை ஒருமுக திருவிழாவும்
இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு - 6 இலட்சம் பெறுமதியான வலைகள் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808"></link>
            <id>https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்றைய தினம்(05.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>

6 இலட்சம் பெறுமதியான வலை சேதம்</h2><p>
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்களின் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce143b9e-f045-41dd-b50b-50191dc86bfe/26-6a9d1a9aa1619.webp' /></p><p> </p><p> 

அதே போன்று, வலைகளை இந்திய கடற்றொழிலாளர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>


 குறித்த சம்பவம் தொடர்பில், தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 


இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டாட்டத்தில் ரணில் தலைமையிலான குழு - ஒரே இடத்தில் ஒன்றுகூடிய பல அரசியல் முக்கியஸ்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>
முன்னாள் பிரதமர் மேதகு டி.எஸ்.சேனநாயக்க மற்றும் பிற தலைவர்களால் 1946 செப்டெம்பர் 6 அன்று நிறுவப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இன்று தனது 80வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.</p><h2>நினைவு விழா</h2><p>
</p><p>இதனை முன்னிட்டு பிட்டகோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நினைவு விழா நடைபெற்றுள்ளது.</p><p>

இந்த நிலையிலை குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.. தொடரும் தேடுதல் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-missing-drowning-in-ratnapura-1788678516"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-missing-drowning-in-ratnapura-1788678516</id>
            <summary type="text">இரத்தினபுரி - எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற
இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார் என்று
பொலிஸார் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற
இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார் என்று
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>தம்புளுவன, மாரலிய பகுதியைச் சேர்ந்த, கடந்த ஆறு மாதங்களுக்கு
முன்னர் திருமணம் முடித்த 32 வயதுடைய பிரசாத் சம்பத் விஜேரத்ன என்பவரே இவ்வாறு
காணாமல் போயுள்ளார்.</p><h2>தேடுதல் பணி..&nbsp;</h2><p>

இவர் இரத்தினபுரி நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் ஊழியராகக்
கடமையாற்றி வந்தவர் ஆவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45477dd8-2e0d-4f5e-8a07-3d8aa35d1749/26-6a9d14db545dd.webp' /></p><p>
நேற்று அந்தப் பகுதியில் நண்பர்கள் சிலர் மாணிக்கக் கற்கள் தோண்டிக்
கொண்டிருந்த வேளையில், அங்கு நீராடச் சென்ற மேற்படி இளைஞர் ஆழமான குழியில்
சிக்கி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
</p><p>
இளைஞர் திடீரெனக் காணாமல் போனதைத் தொடர்ந்து, மாணிக்கக் கல் தோண்டும் பணியில்
ஈடுபட்டிருந்தவர்களும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணி வரை
தேடியும் அவர் கிடைக்கவில்லை.
</p><p>
இது குறித்து எலபாத்த பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார்
படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை அவரைக்
கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-fire-accident-in-kilinochchi-1788679943"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-fire-accident-in-kilinochchi-1788679943</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.

இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.</p><p>

இன்று அதிகாலை (6) 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
இதன் காரணமாக கடையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a8c701-0bbf-4fd4-9cf6-6f88f3f0d0de/26-6a9d170be6137.webp' />&nbsp;</p><p>

இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நடந்த விசேட சுற்றிவளைப்பு - சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-illegal-gem-mining-1788678719"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-illegal-gem-mining-1788678719</id>
            <summary type="text">நுவரெலியா - வட்டவளை குயில்வத்தை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர், நல்லதண்ணீர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - வட்டவளை குயில்வத்தை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர், நல்லதண்ணீர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை இன்று(06.09.2026) வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், அதிகாலை சுமார் 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>


விசேட சுற்றிவளைப்பு</h2><p>
நல்லதண்ணீர் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,
குறித்த பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு
தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87bfe113-3822-4187-bf17-1db47a908e7a/26-6a9d12a1d6b8f.webp' /></p><p>
</p><p>
சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, அங்கிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச்
சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
உபகரணங்களுடன் ஒருவர் கைது</h2><p>
மேலும், சட்டவிரோத மாணிக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்
உபகரணங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணீர்
அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வை தடுக்கும் வகையில், எதிர்காலத்திலும் தொடர்ச்சியான
சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புத் தரப்பினர்
தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பகல் நேர வெப்பநிலை! சுமார் ஒரு வாரத்திற்கு பதிவாகப்போகும் நிலைமை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788677249"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788677249</id>
            <summary type="text">இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணியில் உள்ள வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணியில் உள்ள வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், பல பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்யும் நிலை காணப்படுகிறது.இருந்த போதிலும், தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடரும்.</p><h2>பகல் நேர வெப்பநிலை</h2><p>
</p><p>
இந்த நிலைமை சுமார் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. இதேவேளை இரவு நேர வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa2f7d49-ce1f-41f3-9a1b-f459e46bf4c6/26-6a9d117d46712.webp' /></p><p> 

இதேவேளை, தற்போது நிலவும் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>வறண்ட வானிலை</h2><p> </p><p>

அத்துடன் மொனராகலை, அம்பாறை, அநுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

மேலும் இவ்விரு மாவட்டங்களில் மொனராகலை மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வறண்ட வானிலை காரணமாக பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,13,354 மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்! களமிறங்கிய வனவிலங்கு அதிகாரிகள் - பல மணிநேர தீவிர போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788676174"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788676174</id>
            <summary type="text">கந்தளாய் - பேராறு பகுதியில் நேற்று முன் தினம் (04.09.2026) கிராமத்திற்குள் புகுந்த காட்டு
யானைகள் வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர போராட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - பேராறு பகுதியில் நேற்று முன் தினம் (04.09.2026) கிராமத்திற்குள் புகுந்த காட்டு
யானைகள் வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர போராட்டத்திற்குப்
பிறகு நேற்று மாலை (05) பாதுகாப்பாக வனப்பகுதியை நோக்கி விரட்டப்பட்டது.
</p><p>
பேராறு கிராமத்திற்குள் நுழைந்த இந்த காட்டு யானை, குடியிருப்புகள் நிறைந்த
பகுதிக்குள் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும்
உள்ளாகினர். </p><p>இது குறித்து கந்தளாய் வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு
உடனடியாக தகவளிக்கப்பட்டது.</p><h2>யானைகளை வெளியேற்றும் பணி</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல் வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸ்
மற்றும் கிராம மக்கள் இணைந்து யானையை கிராமத்தை விட்டு வெளியேற்றும் பணியில்
ஈடுபட்டனர். </p><p>நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று
மாலையளவில் யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa94463f-ef82-4207-abc7-3bede2ea1532/26-6a9d0db1d397f.webp' /></p><h2>பிரதேச மக்கள் வேதனை</h2><p>

யானை ஊருக்குள் புகுந்திருந்த அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதுடன், பல வீடுகளின் பாதுகாப்பு வேலிகளையும்
உடைத்து நாசம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளிடம்
இருந்து பேராறு கிராம மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்க நிரந்தர
தீர்வு காணப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T06:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்தடுத்து கரையொதுங்கும் இந்திய படகுகள்! கடற்படையினர் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-boats-continue-to-run-aground-in-sri-lanka-1788676440"></link>
            <id>https://tamilwin.com/article/indian-boats-continue-to-run-aground-in-sri-lanka-1788676440</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகொன்று புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில்&amp;nbsp;கரை ஒதுங்கியுள்ளது. இந்திய கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டில் உள்ள வக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகொன்று புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில்&nbsp;கரை ஒதுங்கியுள்ளது. </p><p>இந்திய கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டில் உள்ள வகையை சேர்ந்த படகு ஒன்றே
இயந்திரமின்றி நேற்று இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.</p><h2>கடற்படையினர் விசாரணை</h2><p>இந்த படகு இந்தியாவின் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகாக இருக்கலாம்
என கருதப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb9acf00-a271-4624-b2b7-46ec36924db2/26-6a9d0c308311d.webp' /></p><p>
</p><p>இதேவேளை, கரையொதுங்கிய படகு தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p>

இதேநேரம், இவ்வகையான இந்திய படகு ஒன்று கடந்த மாதமும் இதே பகுதியில் கரை
ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T06:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை அடுத்து வரிசையில் ரணில் மற்றும் கோட்டாபய! அமைச்சர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-ranil-may-be-arrested-in-the-future-1788672339"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-ranil-may-be-arrested-in-the-future-1788672339</id>
            <summary type="text">

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல ரணில், மைத்திரி, கோட்டாபய என யார் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல ரணில், மைத்திரி, கோட்டாபய என யார் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

அநுராதபுரம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பு தற்போது எதிர்நோக்கி வரும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் என பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.</p><h2>சட்டம் அனைவருக்கும் சமம்&nbsp;</h2><p> </p><p>

நிச்சயமாக அது அப்படியல்ல. நீதிமன்றத்தில் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2059577-9419-4c7c-b1e1-3f3f865cfe8b/26-6a9d016ecdfff.webp' /></p><p> </p><p>

இந்த அதிகாரத்தின் அடிப்படையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு, இதுவரை 4 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும்போது பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி தப்பித்த கதைகள் இனிமேல் செல்லுபடியாகாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7e0260-eb5d-467b-8048-23e9147bc63a/26-6a9d016e25368.webp' /></p><p> </p><p>

2024 செப்டெம்பர் மாதத்தில் நாட்டின் சாதாரண மக்கள் வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல, ரணில், மைத்திரி, கோட்டாபய என அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p>
நாங்கள் விரும்பிய எவரையும் சிறையில் அடைக்க முடியாது. 2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிநாடுகளுக்குச் சென்ற சாட்சியங்களைப் பதிசு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-09-06T06:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை தொடர்ந்து அநுரவிடம் சிக்கவுள்ள சஜித்..! மொட்டுக் கட்சி தரப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-complain-in-un-1788604168"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-complain-in-un-1788604168</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் அரசாங்கத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என&amp;nbsp;பொதுஜன பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் அரசாங்கத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என&nbsp;பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,</p><p> </p><p>இலங்கையில் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார ஆட்சியை நோக்கியும் அரசியல் பழிவாங்கலை நோக்கியும் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளோம்.&nbsp;</p><p>
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவுள்ளோம்.&nbsp;</p><h2>ஜெனிவாவில் முறைப்பாடு..&nbsp;&nbsp;</h2><p>

அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுக்கு இணைவாக, செவ்வாய்க்கிழமை இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d772de7c-9f3a-41e5-99c5-41437d108f50/26-6a9cf843b5774.webp' /></p><p>ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார அதிகாரத்தைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி, நீதித்துறையின் சுயாதீனத்தின் மீதான தாக்கம், மக்கள் எதிர்ப்பு முறையில் அரசியலமைப்பை மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைக் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல் என்பனவற்றுக்கே முக்கிய கவனம் செலுத்தப்படும்.&nbsp;</p><p>
</p><p>
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் பழிவாங்கலின் விளைவே.&nbsp;</p><p>
எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களை அடக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் இதுபோன்ற நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T06:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் விலைகள்! அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selling-motorcycles-illegally-warrning-1788665009"></link>
            <id>https://tamilwin.com/article/selling-motorcycles-illegally-warrning-1788665009</id>
            <summary type="text">நாட்டில் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு 100% குத்தகை வசதியின் கீழ் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக நிதி அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு 100% குத்தகை வசதியின் கீழ் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக நிதி அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கை மத்திய வங்கி வாகன கொள்முதலுக்கான கடன் வட்டி விகித வரம்புகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் இவ்வாறான மோசடியாக விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி</h2><p>

இலங்கை மத்திய வங்கி மே 25 முதல் மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளுக்குப் பொருந்தக்கூடிய அதிகபட்ச கடன் வட்டி விகித வரம்புகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f0b3b9-2962-4119-b4a3-0f53a9ae8a08/26-6a9d01a7357b9.webp' /></p><p>
</p><p>
அதன்படி, கார்கள், வான்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான கடன் வசதிகளை வழங்குவதற்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச வரம்பு 50%-லிருந்து 40%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், மோட்டார் சைக்கிள்களை விற்கும் சில நிறுவன முகவர்கள், மோட்டார் சைக்கிளின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையில் விலைப்பட்டியல்களை தயாரித்து, நுகர்வோர் 100% குத்தகை கடன் வசதியை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.</p><p>

குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளுக்கு காப்பீடு செய்யும்போது, ​​அதன் விலைப்பட்டியலில் அதன் உண்மையான விலையை விட இரு மடங்கு குறிப்பிடப்பட்டிருந்ததால், காப்பீட்டுச் சான்றிதழைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் அதன் உண்மையான மதிப்பை விட அதிக தொகையைச் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T06:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் வியாபாரியின் மனைவியிடம் மோசமாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-suspended-for-bribery-from-accused-1788673617"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-suspended-for-bribery-from-accused-1788673617</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து அவரின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;திருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து அவரின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்காக, இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் குறித்த அதிகாரி கோரியுள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றி வரும் ஓட்டுமாவடியைச் சேர்ந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரே இச்சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்..&nbsp;</h2><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ஆம் ஆண்டு திருகோணமலை பொலிஸ்
நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின்
மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf0f19c-90db-4fee-8758-fb7ef7ccb9df/26-6a9d0027509c0.webp' /></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு
எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு
செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன.&nbsp;</p><p>குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும்
கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு
அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு
இடமாற்றப்பட்டு கடமையாற்றி வந்துள்ளார்.&nbsp;</p><p> இந்த நிலையில், அவரை உடனடியாக பணி இடைநீக்கம்
செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக லொறி மோதி சைக்கிள் ஓட்டுநர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cyclist-killed-in-collision-with-heavy-lorry-1788672672"></link>
            <id>https://tamilwin.com/article/cyclist-killed-in-collision-with-heavy-lorry-1788672672</id>
            <summary type="text">கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.09.2026) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.09.2026) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>
</p><p>கொழும்பு - குருநாகல் வீதியில் ஏகல மற்றும் ஜா-எல ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட
பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.&nbsp;</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>இதன்போது கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற நபர்
ஒருவர் லொறிக்கு அடியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d660d7-401e-422e-a129-eb5892f9f519/26-6a9cfebe41e33.webp' /></p><p>
</p><p>மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-examination-results-released-date-1788671699"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-examination-results-released-date-1788671699</id>
            <summary type="text">கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றுடன் (05) நிறைவடைந்துள்ளன.
</p><h2>விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள்</h2><p>
இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மதிப்பீட்டு செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7b5b82-0b1d-415c-bb82-d2e5d0dadd3e/26-6a9cfa74674ed.webp' /></p><p>

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இம்முறை பரீட்சையில் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்து இப்போது பயணிகள் சேவையில்..! யாழில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-transport-fish-douglas-now-passenger-service-1788670101"></link>
            <id>https://tamilwin.com/article/bus-transport-fish-douglas-now-passenger-service-1788670101</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச பேருந்துகள் தொடர்ச்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக
கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p> அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p>காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச
பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து
தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><h2>தொடர் சிரமங்கள்..&nbsp;</h2><p> </p><p>மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3abe31b-1d72-4ecc-bf4f-0d2d39c6d06f/26-6a9cf3965659a.webp' /></p><p> கடந்த வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு
பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.</p><p>
பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து
இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை. </p><p>இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலரும் பாதிப்படைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12ea989-ff01-4bcf-b0cd-175f582b725f/26-6a9cf397cf706.webp' />&nbsp;</p><p>
</p><p>
வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக
விடப்பட்ட பேருந்துகள் இவை. </p><p>தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள்
தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்.</p><p> அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.
சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம்
காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து
சேவையை வளங்க வழி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு நடந்ததை சிந்தித்து பார்க்கவும்! அநுர தொடர்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைத்த சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549"></link>
            <id>https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல் தொகுதி, லுனுகம்வெஹர புதிய நகரில்
விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை
நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,</p><h2>இளைஞர் மன்றத்தேர்தல்</h2><p>

"மாறுபட்ட அரசே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. சர்வாதிகார,
எதேச்சதிகார அரசாகவே இந்த அரசு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2681219-c899-40a7-8927-5288bb91cebb/26-6a9cf2d2a1413.webp' /></p><p> </p><p>அவ்வாறே ஜனநாயகத்தை மரணப்
படுக்கைக்குக் கொண்டு செல்லும் அரசாகவும் இது திகழ்கின்றது. தற்சமயம் இந்தப்
பிரஜைகளின் பங்களிப்பைக் குறைக்கும் தேசியத் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து,
ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
</p><p>
இதன் ஆரம்பம் இளைஞர் மன்றத் தேர்தல் ஊடாக நடந்து, பின்னர் சிவில் பாதுகாப்பு
குழுக்கள் வரை சென்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது 22 ஆவது அரசமைப்புத்
திருத்தம் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகப் பாரம்பரியங்கள் அனைத்தையும்
நாசமாக்கி, தனிவழியில் எல்லா விடயங்களையும் செய்துகொள்ள இந்த அரசு முற்பட்டு
வருகின்றது.
</p><p>
சர்வாதிகாரப் போக்கில், தனிவழியில் செயற்படும் இந்த அரசு எடுக்கும்
தீர்மானங்கள் காரணமாகவே நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>தனிக்கட்சி நாட்டை ஆட்சி
செய்வதே ஜனாதிபதிக்கு தற்போதுள்ள ஒரே நோக்கமாகக் காணப்படுகின்றது. முழு அரசும்
அரச இயந்திரமும் ஒரு கட்சியினது உத்தரவுகளுக்கு இணங்கச் செயற்பட இந்த அரசு
நடவடிக்கை எடுத்து வருகின்றது. </p><p>இதற்காகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கொண்டுவந்துள்ளனர்.</p><h2>எரிபொருள் மற்றும் எரிவாயு விலை</h2><p>
</p><p>
எதிர்க்கட்சியாக இருந்தவேளை மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால்
குறைப்பதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில்
எரிபொருளைப் பெற்றுத் தருவதாகவும், இளைஞர் தலைமுறைக்கு 12 இலட்சத்துக்கு
விட்ஸ் ரக காரைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும், நெல்
ஒரு கிலோவுக்கு 150 ரூபா நிலையான விலையைச் சட்ட ரீதியாக ஆக்கித் தருவதாகவும்
பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று வரை இதில் எதையுமே செய்யவில்லை. நாட்டை
சர்வாதிகார ஆட்சி நோக்கியே அரசு நகர்த்திச் செல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6607421-f4bc-4971-8a52-517ac3d297d3/26-6a9cf32970250.webp' /></p><p>
</p><p>
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைச் சொற்ப தொகையில் குறைத்துவிட்டு ஊடகக்
காண்பிப்புகளையே இவர்கள் செய்து வருகின்றனர்.</p><p> தமக்கு வாக்களித்த மக்கள்
துன்பப்பட வேண்டும் என்பதே இந்த மாறுபட்ட அரசின் ஆசையாகக் காணப்படுகின்றது.

விவசாயியின் மகன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க, இன்று சுழற்சி முறை விவசாயத்தைக்கூட தடை செய்து வருகின்றார்.</p><p> இதன்
மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்செய்கை, தோட்டப்
பயிர்கள், மரக்கறி மற்றும் பழங்கள், ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட
ஒட்டுமொத்த விவசாயமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><h2>கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்தது</h2><p>
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின்
அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஆகியவை இவர்களிடம் இருப்பதால் அரசு
தங்களை அதிகாரம் படைத்தோராக நினைத்துக்கொண்டிருக்கின்றது.</p><p>

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன
நடந்தது என்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>மக்கள் வீதியில்
இறங்கியமையாலேயே அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. 2019 இலும் 2024 இலும்
மக்கள் ஏமாந்தனர். ஆகவே, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வீதியில்
இறங்கத் தயாராகுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்." - என்றார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gov Pay பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106</id>
            <summary type="text">&#039;Gov Pay&#039; அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.</p><h2>புதிய நடைமுறை</h2><p> </p><p>பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e987570-62f6-469f-975f-c9fb50e133cd/26-6a9cf28c7db66.webp' /></p><h2>மோசடி</h2><p> </p><p>இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.</p><p> 'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:56:51+00:00</updated>
        </entry>
    </feed>
