<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T17:38:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் குற்றமற்றவர் என வழங்கப்பட்ட நீதிமன்ற தீா்ப்பு ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591"></link>
            <id>https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591</id>
            <summary type="text">சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.</p><p>
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹமட் சகீர் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>
குறித்த வழக்குகளில், சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்தியதுடன், அவர்களுக்கு அரசுப் பணத்தில் ஊதியம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22da8d0c-840c-4d8e-90f8-1a783ae27beb/26-6a72219174543.webp' /></p><p>
</p><p>இந்த வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p><p>
எனினும், விசாரணையை ஆரம்பிப்பதற்கும் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பங்களும் இடம்பெறவில்லை என்ற பிரதிவாதி தரப்பின் ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்றம் 2023 மே 19ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்திருந்தது.
</p><p>அந்தத் தீர்ப்புக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 1994ஆம் ஆண்டின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 2(8) பிரிவின்படி, ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்த மூன்று ஆணையாளர்களும் ஒரே நேரத்தில் இருப்பது கட்டாயமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனித்தனியாக அமர்ந்தாலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், அத்தகைய நடவடிக்கை முழு ஆணைக்குழுவின் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>அத்துடன், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை; அவ்வாறான அதிகாரம் அதனை விடவும் அதிகாரம் கூடிய நீதிமன்றங்களுக்கே உரியது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஒவ்வொரு விசாரணைக்கும் மற்றும் வழக்குத் தாக்கலுக்கும் மூன்று ஆணையாளர்களின் கையொப்பமும் கட்டாயம் என்ற நிலைப்பாடு நீதித்துறை செயல்முறையை தேவையற்ற வகையில் தாமதப்படுத்தும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:33:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>
ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a27615-1a5b-4c6b-ae3a-c59fc9042e41/26-6a721ecf4390a.webp' /></p><p> </p><p>
சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>
இடையூறு விளைவிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளைத் தெஹ்ரானில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் விமர்சித்த போதிலும், ஒப்பந்தம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாகவும், நாளைய தினத்தின் இறுதிக்குள் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>
இந்த ஒப்பந்தம் வெறும் உடன்படிக்கை என்பதை விட, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல்சார் வர்த்தக நடைமுறையை சீரமைப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளது. </p><p>
ஈரான் - ஓமன் இடையிலான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மேலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
</p><p>எனினும், மோதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைத் தவிர்க்கவும், நிரந்தர தீர்வை எட்டவும் பின்வரும் சிக்கல்கள் ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை - உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090</id>
            <summary type="text">தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p>

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு பொலிஸ் நிலைய பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரபரப்பான சூழல்</h2><p>

பொலிஸ் நிலைய வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான திமுகவினர் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7814d651-708e-4a1d-b2f8-243c77a57c95/26-6a721d60c92fe.webp' /></p><p>

 பாதுகாப்பு பணிக்காக கூடுதல் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.15 மணியளவில் உதயநிதி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்றுள்ளார்.</p><p>

தனது காரில் இருந்தபடியே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><h2>&nbsp;கைது</h2><p>
</p><p>
தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08f7435-62cf-4b66-a2a7-ff354dee1174/26-6a721d617c028.webp' /></p><p>
</p><p>
அதனால் அவர் இன்று(4) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T17:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>
இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், துப்பாக்கி செயல்படாததால், பேக்கரி உரிமையாளர் உடனடியாக எதிர்த்து தாக்குதலாளியுடன் போராடி, அவரது கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ef7d9a-c469-45ef-9bb4-5717963b3fa5/26-6a721bf5af824.webp' /></p><p>
</p><p> இந்த மோதலின் போது பேக்கரி உரிமையாளருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இரு சந்தேகநபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இலக்கான பேக்கரி உரிமையாளரின் மகன், "கொஸ் மல்லி" என அழைக்கப்படும் பாதாள உலகக்குழு குழு உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனவும், அவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், இந்த தாக்குதலை "சாண்டோ" தரப்பு அல்லது "படோவிட்ட அசங்க" தரப்பைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
எனினும், இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை.</p><p>
தப்பியோடிய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் இரண்டு விசேட விசாரணைக் குழுக்களை நியமித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண ஒப்பந்த விவகாரம்: ட்ரம்ப் உதவியை கோரியதாக எழுந்த முறைப்பாட்டுக்கு ஃபிஃபா மறுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044"></link>
            <id>https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044</id>
            <summary type="text">&amp;nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ
கோரியதாக வெளியான செய்திகளை ஃபிஃபா நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.</p><p>
உலகக் கிண்ணத்தின் வணிகப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 4.2 பில்லியன் டொலர்
நிதியைத் திரட்ட ஃபிஃபா திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பிஃபா மறுப்பு</h2><p> இருப்பினும், பல்வேறு
தரப்பிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த நடவடிக்கை
கைவிடப்பட்டது.</p><p>
இதன் தொடர்ச்சியாக, இன்ஃபான்டினோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொலைபேசியில்
தொடர்புகொள்ள முயன்றதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில்
செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b745bb-f1cc-4475-a55f-ee7b2e0bc7d4/26-6a7219c1bca5c.webp' /></p><p>

இந்த குற்றச்சாட்டுகளை "முற்றிலும் கற்பனையானவை" என்று வர்ணித்துள்ள ஃபிஃபா,
ஜியானி இன்ஃபான்டினோ சமீப நாட்களில் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அவரது
நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களையோ தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை
என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்த ஒப்பந்த விவகாரத்தால் ஃபிஃபா தலைவர் பதவியில் இன்ஃபான்டினோ
தொடர்வது குறித்து கால்பந்து அமைப்புகளிடையே தொடர்ந்து விவாதங்கள் வலுத்து
வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளமான நாடும் அழகான வாழ்க்கையும் வெறும் ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதிகளே - அரசாங்கத்தை சாடிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137</id>
            <summary type="text">அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(04.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விவசாயிகளின் பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், "2024ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி நாட்டில் 39 இலட்சம்
முதியோர் சமூகம் காணப்படுகின்றனர். </p><p>இவர்களுக்குக் கடந்த காலத்தில் 15 இலட்சம்
சேமிப்புக் கணக்கிற்கு 15 சதவீத வட்டி கிடைத்த போதிலும், இன்று அந்த வட்டி 7
சதவீமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79813c06-32d0-4bd8-b21f-707ebafa8d73/26-6a720397481d7.webp' /></p><p> அரசாங்கம் கூறும் ஸ்திரத்தன்மையும் வளமான நாடும்
இதுதானா?

விவசாயிகளுக்குச் சிறந்த உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என
வாக்களித்துவிட்டு, வயல்வெளிகளுக்குள் இறங்கி நெற்கதிர்களைக் கடித்துக்கொண்டு
நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு இன்னும்
அதனை நிறைவேற்றவில்லை. </p><p>உரிய நேரத்தில் விதை நெல் கிடைக்காததுடன், அவை தரம்
குறைந்தவையாகவும் உள்ளன. விவசாய இரசாயனப் பொருட்களின் விலையேற்றம், தரமின்மை,
உபகரணங்கள் மீதான வற் வரி மற்றும் மனித - யானை மோதல்களால் விவசாயிகள் பெரும்
இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p>சர்வதேச நாணய நிதியம் முதன்மை மீதியை 2.5 ஆக இருக்கச் சொன்ன போதிலும், அரசு
அதனை 5.4% வரை அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற வரிச் சுமையைச்
சுமத்தியுள்ளது.</p><p></p><h2>அரசின் வருமான இலக்குகள்</h2><p>அரசின் வருமான இலக்குகளும் வரி மூலமே பெறப்படுகின்றன. இதனால்
மொத்த உள்நாட்டு உற்பத்திற்க்கு 52% பங்களிப்பு வழங்கும் நுண், சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டு
வருகின்றன.
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற வாக்குறுதியும்
நிறைவேற்றப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு
எரிபொருளைப் பெற்றுத்தரவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f096be4a-f6df-49de-bc15-fb48199fbefd/26-6a720398681c3.webp' /></p><p>ஈரான் மோதல்கள் காரணமாக ஏனைய நாடுகள் வரிகளைக்
குறைத்த போதிலும், நம் நாட்டில் அது நடக்கவில்லை. 'டித்வா' சூறாவளியால்
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பில்லியன்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டதாகக்
கூறப்பட்டாலும், களத்தில் எந்த உதவியும் சென்றடையவில்லை.
</p><p>பொய் கூறாமல், மக்களை ஏமாற்றாமல், இப்போதாவது மக்களுக்கு வழங்கிய 'வளமான நாடு,
அழகான வாழ்க்கை' வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-malnutrition-among-children-in-afghanistan-1785856361"></link>
            <id>https://tamilwin.com/article/severe-malnutrition-among-children-in-afghanistan-1785856361</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை
எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

ஆப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை
எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.</p><p>

ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்களில் 'சிறுவர் உடல் மெலிவு'
ஆபத்தான அளவை எட்டியுள்ளது. </p><p>மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்
குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>

இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இரண்டு வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்கே ஏற்படுவதாகவும், பலர் மிகவும் தாமதமாகவே மருத்துவ மையங்களுக்கு
அழைத்து வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அண்டை நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ஆப்கானியர்கள் கட்டாயமாகத் திருப்பி
அனுப்பப்படுவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சர்வதேச நிதி
உதவியில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு ஆகியவையே இந்நிலைக்கு முதன்மை
காரணங்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b21cabc-974f-4a3c-8511-003119541dfc/26-6a7203a61cddc.webp' /></p><p>
</p><p>
நிதியுதவி தட்டுப்பாடு காரணமாக, கடுமையான பஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில்
செயல்படுத்தப்பட்டு வந்த உணவு விநியோகத் திட்டங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், இலட்சக்கணக்கான தாய்மார்கள்
மற்றும் சிறுவர்களின் உயிரைப் பாதுகாக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார்
500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கோரிக்கை
விடுத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T15:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-ship-in-strait-of-hormuz-us-iran-talks-1785853985"></link>
            <id>https://tamilwin.com/article/attack-ship-in-strait-of-hormuz-us-iran-talks-1785853985</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத்
தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதன்
எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத்
தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. </p><p>இதன்
எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் மீண்டும் கணிசமாக
உயர்ந்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள்
நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் செய்வதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

ஆனால், அமெரிக்காவுடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என
ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>

ஓமன் நாட்டினருடன் மட்டுமே கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு
வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தரப்பில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d755d6f-e9a0-4240-a404-a2aa90eba391/26-6a71fbf56f8b5.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையே, ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த உலர் சரக்குக் கப்பல் மீது
அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதில், கப்பலிலிருந்த ஊழியர்கள்
வெளியேற்றப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>

உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20
சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தற்போது கப்பல் போக்குவரத்து
பெருமளவில் முடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39288cd7-4c03-477c-8d79-ed42a662a352/26-6a71fbf6201a6.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், சர்வதேச சந்தையில்
பொருளாதார நெருக்கடியை உருவாக்கிப் போரைத் தொடரவே ஈரான் முயன்று வருவதாக
அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
</p><p>
அதேவேளையில், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட
நாடுகள் பின்னணியில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் திடீர் பேரிடரால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-death-toll-increased-1785853618"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-death-toll-increased-1785853618</id>
            <summary type="text">கடந்த சில நாட்களில் ஏற்பட்ட திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் (04) வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களில் ஏற்பட்ட திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (04) வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான சேதம்..&nbsp;</h2><p>

மேலும், 9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff70592-ac5a-4027-9cdd-71c64200c849/26-6a71f8a3d43e6.webp' /></p><p>
</p><p>அதேநேரம், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்&nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
பேரிடரில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04)&nbsp;காணொளி&nbsp;மூலம் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>ஐந்து கொலைகள்</h2><p>இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f32ac1b-e2cc-430b-b0f2-4b2d22e2b8c5/26-6a71bd24dce80.webp' /></p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தது.
</p><p>


இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர் மீது, கல்லடி பகுதியில் நடந்த ஐந்து கொலைகள் மற்றும் நிலத்தகராறு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை செய்யப்பட்ட சம்பவம், ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>2025ஆம் ஏப்ரல், பயங்கரவாத
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் 2025 நவம்பர் மாதம், காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரையும் சிஜடியினர் கைது செய்தனர்.</p><h2>அதிகாரிகளின் சோதனை</h2><p>

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளில் தொடர்பு இருப்பதாக, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜீன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09de7a47-ed1d-4e97-973c-0834e9ed14da/26-6a71c926b9c9b.webp' /></p><p>இந்நிலையில் குறித்த வழக்கு இன்று&nbsp; (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக
நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (Zoom)
முன்னிலைபடுத்தப்பட்டனர்.</p><p>

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பபடுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>எனவே, உணவை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்
73 வயதான அவரது தாயார் சுகயீனமடைந்துள்ளதாகவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தருமாறும் கோரினார்.&nbsp;</p><p>இதன்போது, நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறை உள்ளதோ அதை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyDBgwtC3Hc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-04T14:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284</id>
            <summary type="text">முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேது அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>முன்னாள் சிறைச்சாலை ஆணையர் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒரு நிரந்தர ஆணையரை நியமிப்பது சாத்தியமில்லை என்று கூறினார்.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்..&nbsp;</h2><p>

மாறாக, அந்தப் பணியைக் கவனித்துக்கொள்ள ஒருவரை நியமிக்கலாம் என்றும், அதன்படி அந்த நோக்கத்திற்காக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f156908-a4cc-4965-8f1c-27fd67b88aae/26-6a71d59666cad.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஆணையாளர் தொடர்பான விசாரணைகள் முடிந்த பிறகு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

அதன்படி, முன்னாள் ஆணையாளர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், ஒரு புதிய ஆணையாளiu நியமிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணைகளில் அவர் எப்படியாவது விடுவிக்கப்பட்டால், அவரை மீண்டும் பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு.. பெருமளவு நீர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409</id>
            <summary type="text">நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கருதி அதன் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர்
தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக
பெய்துவரும் தொடர் மழையினால் நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கு நீர்வரத்து
திடீரென அதிகரித்தமை காரணமாக வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும்,
அணையின் பாதுகாப்பைக் கருதி, நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர்
நிரம்பியதால் குறித்த வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர்
வெளியேற்றப்படுகிறது.</p><p></p><h2>உரிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p><span style="font-size: 14px;">ஞாயிற்றுக்கிழமை இரவு&nbsp;</span>(02)&nbsp;<span style="font-size: 14px;">நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும்
ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி இரத்து செய்யப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5149069e-0b45-460b-9afb-22575c529c56/26-6a71ed766f17c.webp' /></p><p>
நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் அடர்ந்த பனி
மூட்டம் காரணமாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி
நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில்
செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என பொறுப்பான
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நுவரெலியாவில்
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c0811-281e-483f-a7c1-13ce787bd197/26-6a71ed7775961.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f4d7bf-cb21-4de7-b582-8d9803e4149d/26-6a71ed784a46e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-04T14:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940"></link>
            <id>https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940</id>
            <summary type="text">செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2
என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு
தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a578f1-db59-4860-89ca-feeed94553df/26-6a71e89a836a0.webp' /></p><p>

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என
இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 483 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06c5ee5-e60e-4276-8f86-d4ba9512dbf6/26-6a71e89b62965.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8feb38e1-47d6-4022-bae3-f706b46529e9/26-6a71e89c39fb3.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி அமைச்சின் அலட்சியப் போக்கை எதிர்த்து ஆசிரியர் - அதிபர் கூட்டமைப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/teacher-principal-federation-protest-1785847024"></link>
            <id>https://tamilwin.com/article/teacher-principal-federation-protest-1785847024</id>
            <summary type="text">கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், இலவசக்
கல்வியைப் பாதுகாக்கவும் வலியுறுத்தியும், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், இலவசக்
கல்வியைப் பாதுகாக்கவும் வலியுறுத்தியும், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்
கூட்டமைப்பு சார்பில், கொழும்பு - பத்தரமுல்லையிலுள்ள 'இசுருபாய' கல்வி
அமைச்சுக்கு முன்பாக இன்று (08.04.2026) கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசின் தற்போதைய கல்விப் போக்கையும் கல்விச்
சீர்திருத்தங்களையும் கடுமையாகச் சாடினார்.
</p><p>
கல்வி சீர்திருத்தங்கள், பரீட்சை முறை மாற்றம் மற்றும் புதிய கல்வித்
திட்டங்கள் குறித்துக் கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் மேடைக்கு மேடைப்
பேசினாலும், நடைமுறையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி வெறும் காலத்தைக்
கடத்தும் தந்திரங்களையே அரசாங்கம் கையாள்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p></p><p>
</p><p>
மேலும், அரசாங்கம் படிப்படியாக இலவசக் கல்வியைச் சீரழித்து, கல்வித் துறையைத்
தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்றும், மறுபுறம் அரச
பல்கலைக்கழகங்களில் கல்வித் துறையில் பட்டம் பெற்ற 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
</p><p>
எனவே, இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், கல்வித் துறையின்
தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுப் போராட
வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
</p><p>
இந்தப் போராட்டத்தின் போது, பாடத்திட்டத் தொகுதிகள் மற்றும் பதவி உயர்வுகளில்
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கக் கோரிப்
பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd454b2-6573-457c-bd9a-5f91d7c72931/26-6a71e2e881127.webp' /></p><h2>'மொடியூல்' சிக்கல்களுக்குத் தீர்வு</h2><p>

'மொடியூல்' முறையினால் பாதிக்கப்பட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முடியாத
ஆசிரியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
</p><p>அத்துடன், அவர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் பகுதி
அளவில் மொடியூல்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களை எஞ்சிய தடைகளில் இருந்து
விடுவிக்க வேண்டும். </p><h2>நிபந்தனையற்ற பதவி உயர்வு</h2><p>
கடந்த 30.06.2025 வரை நிபந்தனையுடன் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு
முந்தைய தரநிலைத் தடைகளில் இருந்து விலக்களிக்க வேண்டும்.</p><h2>மறுமதிப்பீடுகளுக்குத் தடை</h2><p></p><h2> </h2><p>ஏற்கனவே மொடியூல்களைப் பூர்த்தி செய்து எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறவுள்ள
ஆசிரியர்களை மீண்டும் மீண்டும் மதிப்பீடுகளுக்கு அல்லது பரீட்சைகளுக்கு
உட்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். </p><h2>புதிய மொடியூல் உள்ளடக்கம்</h2><p>
புதிய மொடியூல்களின் உள்ளடக்கங்களை உடனடியாக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66350fa-6c7b-4fe0-a60a-e2093253987d/26-6a71e2e96ee7d.webp' /></p><p>
</p><p>
கல்வி அமைச்சு ஆசிரியர்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளுக்கு உடனடியாகச்
செவிசாய்க்கத் தவறினால், வரும் நாள்களில் இந்தப் போராட்டங்கள் மேலும்
தீவிரமடையும் என்று ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்
பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் தொடர்ந்து இடம்பெறும் மின்தடை: மின் பாவனையாளர்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/power-outages-in-mannar-electricity-consumer-1785848902"></link>
            <id>https://tamilwin.com/article/power-outages-in-mannar-electricity-consumer-1785848902</id>
            <summary type="text">மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி
மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி
மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அடிக்கடி மின் தடை காரணமாக எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்
தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து
வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக சீரான மின் விநியோகம் இடம் பெற்று வந்த
நிலையில் தற்போது தொடர்ச்சியாக இரவு பகல் பாராது மின்தடை ஏற்பட்டு வருகிறது.</p><p></p><h2>மின்தடை</h2><p>
</p><p>
திடீர் திடீர் என இரவு பகல் பாராது மின்தடை ஏற்படுவதால் மின் பாவனையாளர்களின் மின் உபகரணங்கள் சேதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>மேலும் கடந்த காலங்களில் பரீட்சை காலம் நெருங்கு கின்ற போது மன்னாரில்
அடிக்கடி மின் தடை ஏற்படுவதை போன்று தற்போது புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
உயர் தர பரீட்சை நெருங்கும் காலப்பகுதியில் குறித்த மின்தடை இடம் பெற்று
வருவதாக மின் பாவனையாளர்களும்,மாணவர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1465099-7d84-49e2-aae8-8fd85b022134/26-6a71e5510c4ab.webp' /></p><p>
</p><p>
குறித்த மின் தடை தொடர்பாக மன்னார் மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வடக்கிற்கு
பொறுப்பான மின்சார சபை அதிகாரிகள் உரிய பதிலை வழங்குவதில்லை என
பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உரிய அதிகாரிகள் குறித்த விடையத்தில் கவனம்
செலுத்தி அடிக்கடி ஏற்படும் மின் தடையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-discussion-tourism-sector-held-in-jaffna-1785848119"></link>
            <id>https://tamilwin.com/article/important-discussion-tourism-sector-held-in-jaffna-1785848119</id>
            <summary type="text">சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் பங்கேற்புடன் யாழில்
சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று(04.08.2026) இடம்பெற்றது.

யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் பங்கேற்புடன் யாழில்
சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று(04.08.2026) இடம்பெற்றது.
</p><p>
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், றஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியக
தலைவர் ஜெ.விவேகானந்தன் உள்ளிட்ட சுற்றுலா துறைசார்ந்த அதிகாரிகள், சுற்றுலா
பொலிஸார், முதலீட்டாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம்</h2><p>இதன்போது சுற்றுலா துறைசார்ந்த நிலவும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டு அது பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும்
ஆராயப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8133c11b-c5f0-4db1-85c7-9ddea5fb2f58/26-6a71e3a261964.webp' /></p><p>
காரைநகர் கசூரீனா கடற்கரை, நெடுந்தீவு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம்
செய்த பிரதி அமைச்சர் அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்
எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்களையும் ஆராய்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf5b760a-25c1-4e42-9bd4-ff3551b8853b/26-6a71e3a33b65e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-holiday-1785846703"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-holiday-1785846703</id>
            <summary type="text">நாளையதினம் (05), ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையதினம் (05), ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.</p><p>

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோசமான வானிலை</h2><p>இது தொடர்பில் இன்று&nbsp;ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6fed54-771b-4b8b-ada0-5b241fb2b63e/26-6a71dfb418b79.webp' /></p><p>மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இருப்பினும்,&nbsp;ஹட்டன் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக,&nbsp;ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டையில் யானை தாக்கி உணவக ஊழியர் ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/injured-attacked-by-elephant-in-hambantota-1785846832"></link>
            <id>https://tamilwin.com/article/injured-attacked-by-elephant-in-hambantota-1785846832</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(03.08.2026) மாலை இடம்பெற்ற காட்டு
யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(03.08.2026) மாலை இடம்பெற்ற காட்டு
யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>

அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையின் உணவக ஊழியர் ஒருவரே இவ்வாறு யானையின்
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
</p><p></p><h2>சம்பவம் தொடர்பான விசாரணை</h2><p>
அவர் மற்றொரு நபருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தபோதே
இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2c0de2-1ed6-4fb2-8b56-10caf19934da/26-6a71df3e8193c.webp' /></p><p> இதன்போது, அவருடன் சென்ற மற்றைய நபர்
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளார்.</p><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாந்தோட்டை போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று
வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca55a440-7ee6-4e71-bb69-7c4b47b1d976/26-6a71df3f5280c.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை வனஜீவராசிகள்
திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:47:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pradhusas</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-bundles-of-kerala-cannabis-arrested-in-mannar-1785847246"></link>
            <id>https://tamilwin.com/article/man-bundles-of-kerala-cannabis-arrested-in-mannar-1785847246</id>
            <summary type="text">மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p>
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று(3) மாலை விரைந்து செயல்பட்ட பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதன் போது குறித்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான
9 கிலோ 400 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியதோடு சந்தேக நபர்
ஒருவரையும் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c2e38dd-a111-4e49-baf7-99947cef0369/26-6a71dedd97e05.webp' /></p><p>

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு மீதான விசாரணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808</id>
            <summary type="text">தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால
மனுக்கள் மீதான பரிசீலனை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(04.08.2026) ஆரம்பமானது.
</p><p>
இதன்போது, குறித்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த 'தேசஹிதைஷி தேசிய
இயக்கம்' மற்றும் 'தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்' ஆகிய அமைப்புக்களின்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது ஆரம்ப வாதங்களை
முன்வைத்தனர்.</p><p></p><h2>இடைக்கால மனு</h2><p>இரு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் கவனத்தில் கொண்ட மேன்முறையீட்டு
நீதிமன்றம், இந்த இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8a756a-27ba-4a51-8589-21b5f7c97d94/26-6a71dadd9b758.webp' /></p><p>

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலேயின்
மனைவியும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் மற்றும் ஹேமசிறியின் மரண தண்டனையால் ஆபத்தில் இருந்து தப்பித்த சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024"></link>
            <id>https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை தப்பிக்க&nbsp; வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என சிவில் செயற்பாட்டாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்&nbsp; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>உண்மையைக் கண்டறிக..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>போதியளவான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8807a0a8-3052-4e00-9ba8-d771b60b8cb3/26-6a71b54840c89.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக சூழ்ச்சி செய்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் ஆதரவாக செயல்பட்ட&nbsp; அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.&nbsp;</p><p>உண்மையைக் கண்டறிந்து தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467a3ad1-2bd6-41c4-bc19-a5ba382b96c0/26-6a71b5490d19e.webp' /></p><p>எனினும், பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கு மாத்திரம் தண்டனை வழங்கிவிட்டு தொடர்புடைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை இந்த அரசாங்கம் தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.&nbsp;</p><p>ஏனெனில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னர் விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான சில உயர் அதிகாரிகளிடமே மீண்டும் தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது&nbsp; இந்த வழக்கின் நடுநிலைத்தன்மையைப் பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457</id>
            <summary type="text">சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (04.08.2026) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், 2018ஆம்
ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டமானது இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.</p><h2>வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும்</h2><p></p><p>தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா
வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது
வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான மிகுதி பணத்தை வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர்
தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employees-pension-salary-issues-1785844238"></link>
            <id>https://tamilwin.com/article/government-employees-pension-salary-issues-1785844238</id>
            <summary type="text">அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது. </p><p>இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.</p><p></p><h2>ஆணைக்குழு</h2><p>
</p><p>
ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் செயல்படும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a84e8fe-3db2-45e7-86f0-7543ec5aa060/26-6a71d9f54ae51.webp' /></p><p>
</p><p>
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகே ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு</h2><p>
</p><p>
நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரச அதிகாரிகளுக்குப் பெரும் பங்கு உள்ளதால், அரசு சேவையைப் பலப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அரச சேவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2947d7ae-a093-4fb6-91c3-d98d1abc2177/26-6a71d9f5f25e4.webp' /></p><p>
</p><p>
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்த போதிலும், அதற்கான விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

அரச சேவையின் ஒரு துறையிலுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை மட்டும் ஆராய்ந்து தீர்க்க முயன்றால், அது மற்றொரு துறையிலுள்ள ஊழியர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்ற அனுபவம் உள்ளது என்றும்</p><p>அத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து முழு அரச சேவைக்கும் பொருந்தக்கூடிய விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:24:35+00:00</updated>
        </entry>
    </feed>
