<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-27T19:37:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுஞ்சாலைகளை கட்டுக்குள் கொண்டுவந்த சூடான் இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-army-takes-control-of-highways-1785174289"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-army-takes-control-of-highways-1785174289</id>
            <summary type="text">சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமையும் முக்கிய நகரமான எல்-ஒபெயினையும்
இணைக்கும் முக்கிய அதிவேக நெடுஞ்சாலையைத் தங்கள் படை முழுமையாகக்
கைப்பற்றியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமையும் முக்கிய நகரமான எல்-ஒபெயினையும்
இணைக்கும் முக்கிய அதிவேக நெடுஞ்சாலையைத் தங்கள் படை முழுமையாகக்
கைப்பற்றியுள்ளதாகச் சூடான் இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>
எதிரணித் துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளின் (RSF) முற்றுகையில்
இருந்த எல்-ஒபெயித் நகரைக் காப்பாற்றவும், RSF படைகளின் முன்னேற்றத்தைத்
தடுக்கவும் இந்த வெற்றி சூடான் இராணுவத்திற்குப் பெரிதும் உதவும்.</p><p></p><h2>நெடுஞ்சாலைகள் முடக்கம்</h2><p>

கடந்த இரண்டு நாட்களாக RSF படைகளுடன் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பிறகு,
இந்த நெடுஞ்சாலையில் உள்ள பல நகரங்களையும் கிராமங்களையும் மீட்டுள்ளதாகச்
சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359320e1-29f6-4e87-8e18-2539ed6710b6/26-6a679b9e0831d.webp' /></p><p>குறிப்பாக உம் குர்ஃபா மற்றும் ஜாரிகாக் ஆகிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின்
போது எதிரணிக்கு பெரும் உயிர்ச்சேதமும் தளவாடச் சேதமும் ஏற்படுத்தப்பட்டதாக
இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த முக்கிய நெடுஞ்சாலையைக் கைப்பற்றியதன் மூலம் தலைநகருக்கும் கொர்தோஃபான்
பகுதிக்கும் இடையே பல மாதங்களுக்குப் பிறகு நேரடிப் போக்குவரத்துத் தொடர்பு
மீண்டும் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஐ.நா. தகவல்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன், இராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் எரிபொருள்களை விரைவாக
எல்-ஒபெயித் நகரத்திற்குக் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aad449c-f57b-4bf5-86b2-9da44e0d87e6/26-6a679b9d580cb.webp' /></p><p>
RSF படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பாதை கை மாறியுள்ளதால்,
அந்த நகரில் உள்ள சுமார் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மனிதநேய
உதவிகள் இனி எளிதாகச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார்
40,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள்
வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனம்
மற்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-disappeared-persons-held-in-jaffna-1785168571"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-disappeared-persons-held-in-jaffna-1785168571</id>
            <summary type="text">எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த
"வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கம்" ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இந்த மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.</p><p></p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்</h2><p>
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது
நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எந்தவித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை
என்பதையும், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தும்
வகையில் இந்த மாநாடு அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f692d741-d52c-4a7c-b43f-1c344203cce6/26-6a6786e8b4233.webp' /></p><p>
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள்,
சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்
தியாகராஜா நிரோஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b113f7-5821-4412-bea4-28acd064f9d7/26-6a6786e9a3e59.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளக்கரையில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு - மேலதிக விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-elderly-man-body-recovered-from-pond-1785166111"></link>
            <id>https://tamilwin.com/article/an-elderly-man-body-recovered-from-pond-1785166111</id>
            <summary type="text">அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப்
பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப்
பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(26.07.2026) மாலை
பிரதேச மக்களின் உதவியுடன் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்தவர் அனுராதபுரம் - நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 79
வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aecfc3ac-b791-45f7-be5a-2323d01f9730/26-6a6795c009126.webp' /></p><p>நீதிவான் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கெக்கிராவ
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: 100ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monsoon-floods-pakistan-death-toll-crosses-100-1785174781"></link>
            <id>https://tamilwin.com/article/monsoon-floods-pakistan-death-toll-crosses-100-1785174781</id>
            <summary type="text">பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை,
வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை,
வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர்
முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>

தொடர் மழையால் 344-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான
வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வார இறுதியில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
</p><p>
தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகார சபையின் தகவலின்படி, மழை தொடர்பான
சம்பவங்களால் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகபட்சமாக 55 பேரும், பஞ்சாப்
மாகாணத்தில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>17 நிவாரண முகாம்கள்</h2><p>

உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகள் மற்றும் கூரைகள் இடிந்து
விழுந்ததால் பலியாகியுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரும், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமுமான
லாகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைக்க குறைந்தது 17 நிவாரண
முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c287ebc-db67-4c1a-9e36-a3297b8d1802/26-6a679c8f951cc.webp' /></p><p>
</p><p>
லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா பிரிவுகளில் சுமார் 400 சதுர கிலோமீட்டர்
பரப்புக்கு நீரின் தாக்கம் பரவியுள்ளதால், நிலமை உள்நாட்டுக் கடல் போலக்
காட்சியளிப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப், வெள்ள நீரைக் வெளியேற்ற மீட்புக்
குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதன்கிழமை முதல் இஸ்லாமாபாத், மேல் பஞ்சாப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில்
புதிய மழைப் பொழிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
பருவமழைக்காலம் செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பதால், தாழ்வான
பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்காவின் உளவு விமானம் P-8A Poseidon]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-spy-plane-p8a-poseidon-sri-lanka-1785173865"></link>
            <id>https://tamilwin.com/article/us-spy-plane-p8a-poseidon-sri-lanka-1785173865</id>
            <summary type="text">இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான 6ஆவது காராட் (CARAT Sri Lanka 2026) கூட்டுப் பயிற்சி திருகோணமலை மற்றும் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான 6ஆவது காராட் (CARAT Sri Lanka 2026) கூட்டுப் பயிற்சி திருகோணமலை மற்றும் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. </p><p>இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, அவசர கால மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.</p><p> இதில் அமெரிக்க கடற்படையின் அதிநவீன P-8A போஸைடான் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் SLNS கஜபாகு கப்பல் ஆகியவை விசேட கண்காணிப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> மேலும், இரு நாட்டுப் படைகளும் இணைந்து கடல்சார் கண்காணிப்பு, குண்டு வெடிப்புச் செயலிழப்பு மற்றும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைச் சோதனையிடும் (VBSS) பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.</p><p> 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சி, வாஷிங்டன் மற்றும் கொழும்பு இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பையும் இருதரப்பு உறவையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Kktuo41eSFA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தி குத்தால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-family-member-was-stabbed-to-death-1785165541"></link>
            <id>https://tamilwin.com/article/a-family-member-was-stabbed-to-death-1785165541</id>
            <summary type="text">கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற
கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று (26.07.2026...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற
கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவமானது நேற்று (26.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த நபர்</h2><p>

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p>

மதுபோதையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாக
மாறிய நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/540cb559-48e3-4a31-84a3-da15c4a0a6ef/26-6a6777449e799.webp' /></p><p>தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து
தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.</p><p>

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளைப்
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்காகக் காத்திருந்த தாய்க்கு நேர்ந்த கதி - படுகாயமடைந்த மகன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-dies-hit-by-tipper-2-sons-seriously-injured-1785164308"></link>
            <id>https://tamilwin.com/article/mother-dies-hit-by-tipper-2-sons-seriously-injured-1785164308</id>
            <summary type="text">தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த 46 வயதுடைய பெண் ஒருவர் மீது சிறிய
ரக டிப்பர் வாகனம் மோதியதில் அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த 46 வயதுடைய பெண் ஒருவர் மீது சிறிய
ரக டிப்பர் வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது இரு
மகன்களும் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>இந்த விபத்தானது&nbsp; நேற்றைய தினம் (26.07.2026) நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>பெண் ஒருவர் பலி&nbsp;</h2><p>
மகனுக்குப் பரிகார பூஜை நடத்துவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் ஏனைய
பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக நகரத்துக்குச் செல்வதற்காக வீதியோரமாக
நின்றிருந்தபோதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் அவர்கள் மீது
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279094b2-ddc1-4453-8f06-5482b1dbc78a/26-6a6775596f358.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் தம்புள்ளை - கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின்
தாயான 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். </p><p>விபத்தில் படுகாயமடைந்த அவரது 19
மற்றும் 14 வயதுடைய இரு மகன்களும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து விட்டு, கடந்த
8ஆம் திகதி தான் நாடு திரும்பியிருந்தார் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன்
தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7daaf83b-7604-4e72-89ac-e44af8530b30/26-6a677558be9c3.webp' /></p><p>மூத்த மகனுக்கான நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்குத்
தேவையான பொருள்களை வாங்குவதற்காக&nbsp;பேருந்துக்காகக் காத்திருந்த வேளையிலேயே இந்தத்
துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளைப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உலகக் கிண்ண விமர்சகர்களுக்கு ஃபிஃபா தலைவர் காட்டமான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-chief-hits-back-at-2026-world-cup-critics-1785170034"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-chief-hits-back-at-2026-world-cup-critics-1785170034</id>
            <summary type="text">2026 FIFA உலகக் கிண்ணம் குறித்து தொடர்ந்து விமர்சனம் முன்வைப்பவர்கள் பொய்களையும் வெறுப்பையும் பரப்புவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 FIFA உலகக் கிண்ணம் குறித்து தொடர்ந்து விமர்சனம் முன்வைப்பவர்கள் பொய்களையும் வெறுப்பையும் பரப்புவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ குற்றஞ்சாட்டியுள்ளார். </p><p>அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து நடத்திய தொடரில் ஸ்பெயின் சாம்பியனானது. எனினும், அமெரிக்க விசா கட்டுப்பாடுகள், நடுவர் தீர்ப்புகள் மற்றும் வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.</p><p></p><h2>2026 FIFA உலகக் கிண்ணம்</h2><p>
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்ஃபான்டினோ தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் வெளியிட்டுள்ள திறந்த மடலில் தெரிவித்திருப்பதாவது:</p><p>திரைக்குப் பின்னாலும், பேனா மற்றும் காகிதங்களுக்குப் பின்னாலும் அமர்ந்து
கொண்டு பொய் செய்திகளையும் வெறுப்பையும் பரப்புபவர்களுக்கு நான் ஒன்றைக்
கூறிக் கொள்ள விரும்புகிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15a7357-0229-4704-bb16-8d1dc89bb19d/26-6a6790d735f12.webp' /></p><p>நீங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் போது,
ஃபிஃபாவில் உள்ள நாங்கள் தான் களத்தில் நின்று, கடினமாக உழைத்து உலகிலேயே
மிகச்சிறந்த ஒரு விளையாட்டு நிகழ்வை வழங்கியிருக்கிறோம்.
</p><p>
நீங்கள் வெறுப்பிலும் விமர்சனங்களிலும் மூழ்கியிருந்ததால், உலகெங்கிலும் உள்ள
மில்லியன் கணக்கான ரசிகர்கள் அனுபவித்த மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும்
பார்க்கத் தவறிவிட்டீர்கள்.</p><p></p><h2>மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்</h2><p> </p><p>இந்தத் தொடரில் எந்தவித வன்முறையோ அல்லது
அசம்பாவிதங்களோ இன்றி 100% பாதுகாப்பும், மகிழ்ச்சியும் மட்டுமே
நிறைந்திருந்தது.</p><p>இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது பல்வேறு விவகாரங்கள் பூதாகரமாயின.

ஈரான், ஹைட்டி போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகக்
குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f97c8f-a1af-4051-a1f2-14edafc0d5ed/26-6a6790d7dad4d.webp' /></p><p>சோமாலியாவைச் சேர்ந்த உலகக் கிண்ண நடுவர் உமர் அப்துல்காதிர் அர்தானுக்குச்
செல்லுபடியாகும் விசா இருந்தபோதிலும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி
மறுக்கப்பட்டது.
</p><p>
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் அணி
தனது பயிற்சி முகாம் இடத்தை மெக்சிகோவின் டிஜுவானாவுக்கு மாற்ற வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.</p><p></p><h2>விசா ஒப்புதல்</h2><p>
</p><p>
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டிற்குப் பிறகு,
அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனுக்கு விதிக்கப்பட வேண்டிய தடை இரத்து
செய்யப்பட்டது பெரும் விவாதப் பொருளானது.</p><p>

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இன்ஃபான்டினோ, "மில்லியன்
கணக்கான மக்களுக்கு விசா ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட்டுவிட்டு, ஒரு சிலருக்கு
விசா மறுக்கப்பட்டதை மட்டுமே பெரிதுபடுத்துகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15a7357-0229-4704-bb16-8d1dc89bb19d/26-6a6790d735f12.webp' /></p><p>ஈரான் அணி எந்தவித
பிரச்சனையும் இன்றி அமெரிக்காவிற்குள் நுழைந்தது.

கால்பந்து என்பது அமைதிக்கானது, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
செய்தியாளர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்கள் பேனாக்களையும் விசைப்பலகைகளையும்
சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, தொடரில் பங்கேற்று விளையாடிய அணிகளுக்கு உரிய
மரியாதையை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T17:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி விவகாரம்.. நீதிமன்ற தீர்ப்பு குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chavakachcheri-urban-council-deputy-chairman-1785169729"></link>
            <id>https://tamilwin.com/article/chavakachcheri-urban-council-deputy-chairman-1785169729</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை
உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை
உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில்&nbsp; எதிர்வரும் 5ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.</p><p>
எனினும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் வெற்றிடத்தை நிரப்ப உள்ளூராட்சி
உதவி ஆணையாளரால் திட்டமிடப்பட்டுள்ள சபைக்கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு
நடைபெறவுள்ள நிலையில், அதற்கு நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை.</p><p>
</p><p>
அதனால் சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை நடைபெற்று புதிய உப தவிசாளர் நளையே
பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>இடைக்காலத் தடை</h2><p>
</p><p>
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் நடத்தை தொடர்பில் ஆளுநரால்
நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு
அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை ஆளுநரால் வெறிதாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb13224-dfdf-478e-8bf9-ca4b20e82b59/26-6a678a7dd9e21.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு தடை கோரி முன்னாள் உப தவிசாளர்
ஞா.கிஷோர் சார்பில் கடந்த 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட் மனு இன்றைய தினமும்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> இதன்போது, தமது தரப்பு
ஆட்சேபனையை மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் நீண்ட சமர்ப்பணமாக சபையில் தொடர்ச்சியாக முன்வைத்தார்.

வாத இறுதியில் இந்த வழக்குக்கான தீர்ப்புக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி
குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
</p><p>
நாளைய தெரிவுக்கு இடைக்காலத் தடை ஏதும் நீதிமன்றம் பிறப்பிக்காத காரணத்தால்
நாளை சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தேர்வு இடம்பெறும் என்றே
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:46:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் தீவிரமடையும் காட்டுத்தீ : அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மேக்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-france-macron-emergency-meeting-1785154817"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-france-macron-emergency-meeting-1785154817</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ்
ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
</p><p>
சுமார் 8.5 இலட்சம் மக்கள் வாழும் போர்டோ பெருநகரப் பகுதியில் இருந்து வெறும்
15 கிலோமீட்டர் தொலைவில் தீ பரவி வரும் நிலையில், வரும் நாட்களில் மீண்டும்
வெப்ப அலை வீசக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு அதிகாரிகளிடையே பெரும்
பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p></p><h2>தொடர் வெப்ப அலை</h2><p>
பிரபல திராட்சை மதுபான உற்பத்தி பிராந்தியமான ஜெரோண்டே பகுதியில் தற்சமயம்
நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதுவரை
கண்டிராத அளவிலான காட்டுத்தீ பரவி வருவதாக உள்ளூர் மேயர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e10b61-8616-4457-b017-dfb95f625780/26-6a674ea004eee.webp' /></p><p>ஐரோப்பாவில் தொடர்ந்து பதிவாகி வரும் வெப்ப அலை மற்றும்
வறட்சியால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீ மிக வேகமாகப்
பரவி, இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற
வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
அண்டை நாடான ஸ்பெயினிலும் காட்டுத்தீ காரணமாக 75,000இற்கும் மேற்பட்ட மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்குப் மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
தலைநகர் மட்ரிட்டை நோக்கி நகர்ந்து வந்த தீயின் வேகம் தற்போது சற்று
குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்குள்ள மக்களை மீண்டும் தங்கள்
வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
</p><p>
ஐரோப்பா முழுவதையும் உலுக்கி வரும் இந்தத் தொடர் வெப்ப அலைகள் மற்றும் காலநிலை
மாற்ற விளைவுகள், அப்பகுதியில் கடுமையான இயற்கை அழிவை ஏற்படுத்தி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதியுதவி குறைப்பால் காஸாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு - ஐ.நா. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-food-shortages-gaza-due-cuts-un-warns-1785167621"></link>
            <id>https://tamilwin.com/article/severe-food-shortages-gaza-due-cuts-un-warns-1785167621</id>
            <summary type="text">நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள்
தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக
ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள்
தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக
ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முற்றிலும் சர்வதேச மனிதநேய
உதவிகளையே நம்பி வாழ்கின்றன.</p><p></p><h2>நிதியுதவி</h2><p>
</p><p>
இருப்பினும், சர்வதேச உதவி நிறுவனங்களுக்கான நிதியுதவி வேகமாக வற்றி வருவதாக
அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a261634-10e4-4869-bb37-0ed6ec8af59f/26-6a6782e46c4ff.webp' /></p><p>
</p><p>
அத்துடன், தொடர்ச்சியான இஸ்ரேலியத் தாக்குதல்களால் அங்குள்ள விவசாய நிலங்களும்
வணிக நிறுவனங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனால் அப்பகுதி மக்கள் சொந்தமாக வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தைப் பேண முடியாத
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! காவடி ஊர்வலத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-to-launch-drone-attack-on-kavadi-procession-1785162464"></link>
            <id>https://tamilwin.com/article/plan-to-launch-drone-attack-on-kavadi-procession-1785162464</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பவர்கள் ராஜபக்சர்களே. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்று வருவதாக தேசிய மக்கள் சக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பவர்கள் ராஜபக்சர்களே. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன்&nbsp; தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

பெரஹராவின் போது நடைபெறவுள்ள பாதாள உலகக் கும்பல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. </p><p>

மக்களிடையே அரகலய போராட்டத்தைப் போன்ற ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் யார் எப்படி செயற்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் அளவிற்கு மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.</p><p>
கலவரத்தை ஏற்படுத்தி நாட்டை கைப்பற்றலாம் என்ற எண்ணமே இத்தகைய குழப்பங்களுக்கு அடித்தளமாக இருக்கின்றது. கஞ்சிபாணி இம்ரானை ஆட்டிப்படைத்து வருபவர்கள் ராஜபக்சர்களே என்றார்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vAnKIoYja74" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T15:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் சுட்டுக்கொலை : பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-year-15-persons-gun-shoot-death-1785153064"></link>
            <id>https://tamilwin.com/article/this-year-15-persons-gun-shoot-death-1785153064</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
பதிவாகியுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
பதிவாகியுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்
என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதில் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையிலான
14 நாள்களுக்குள் மாத்திரம் 10 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன. </p><p>இந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 3 பேர்
உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p></p><h2>திட்டமிடும் பிரதான குற்றவாளிகள்&nbsp;</h2><p>துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர்,
அனைத்துத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் திட்டமிடப்பட்ட பாதாள உலகக்
குற்றங்கள் மற்றும் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை என்று
குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54b9c5de-bd40-4ba6-aff6-aec93b97e86a/26-6a6749cb75acd.webp' /></p><p>தாக்குதல்களைத் திட்டமிடும் பிரதான குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளில்
இருந்துகொண்டு, தங்கள் எதிரிக் கும்பலின் உறவினர்கள் அல்லது உதவியாளர்களை
இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர். </p><p>ஒப்பந்தக்
கொலைகளுக்குப் பணத்துக்குப் பதிலாகச் சிறிய அளவிலான போதைப்பொருள்களே கூலியாக
வழங்கப்படுவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைக்குக் கடுமையாக
அடிமையானவர்களே இத்தகைய கொலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர்.
</p><p>
கடந்த 25ஆம் திகதி அன்று கொழும்பு - பெல்லன்விலையில் நடந்த கொலைச்
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளைச்
செலுத்தியவர் ஆகிய இரு சந்தேகநபர்களும் சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்தில்
கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>பொலிஸ்மா அதிபரின் நேரடி வழிகாட்டலின் கீழ்,
தொலைபேசி மற்றும் தகவல் தொடர்புப் பகுப்பாய்வுகள் உட்பட உளவுத்துறை
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை</h2><p>இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெற்ற முக்கியத் துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவங்கள் வருமாறு:-
</p><p>
ஜூலை 11: மாத்துகம, நெபொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த
துப்பாக்கிதாரிகள் வீடொன்றை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எவருக்கும்
காயம் ஏற்படவில்லை.</p><p>
ஜூலை 15: கட்டுநாயக்கவில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகநபர்
ஒருவர் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரியின் சேவைத் துப்பாக்கியைப் பறித்து அவர்
மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அதிகாரி காயமடைந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df82459d-a441-4ffd-a8d2-4131032b2ece/26-6a6749cc4a186.webp' /></p><p>
ஜூலை 16: நவகமுவ, வண்டுரம்புமுல்ல பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர்
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>
ஜூலை 19: தெஹிவளை – கல்கிஸ்ஸை பொது மயானத்தில் பணியாற்றிய 56 வயதுடைய
பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர்
காயமடைந்தார்.</p><p>&nbsp;ஜூலை 19: பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் வாளால் தாக்க முயன்ற 24 வயதுச்
சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
</p><p>
ஜூலை 21: தேவிநுவர பகுதியில் கடற்றொழிலாளி ஒருவரின் வீட்டை நோக்கி காரில் வந்த
ஆயுததாரிகள் பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிர்ச்சேதம் எதுவும்
ஏற்படவில்லை.
</p><p>
ஜூலை 22: பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீடு மீது
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வித
காயமுமின்றி உயிர்தப்பினர்.
</p><p>
ஜூலை 23: வத்தளை, பள்ளியாவத்தை பகுதியில் குழந்தையின் பிறந்தநாள் விழா
நடைபெற்ற மண்டபத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>
ஜூலை 23: தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானம் அருகே இடம்பெற்ற
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.
</p><p>
ஜூலை 25: தெஹிவளை – பொரலஸ்கமுவ வீதியில் அமைந்துள்ள பெல்லன்வில நடைபாதை
நுழைவாயிலுக்கு அருகில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்
கொல்லப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T15:16:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்புடனான சந்திப்பில் ஈரான் விவகாரமே முதன்மையாக இருக்கும்: நெதன்யாகு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-issue-priority-in-meeting-trump-netanyahu-1785160993"></link>
            <id>https://tamilwin.com/article/iran-issue-priority-in-meeting-trump-netanyahu-1785160993</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச்
சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும்
என்று இஸ்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச்
சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும்
என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெதன்யாகு,
"எங்கள் சந்திப்பின் போது மேசையிலுள்ள அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும்
விவாதிப்போம். அதில் ஈரான் விவகாரமே முதன்மையாக இருக்கும்" என்று
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டின் பலத்தைப் பெருக்குவதும்,
தங்களைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதுமே தங்கள் தெளிவான
இலக்கு என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><h2>ட்ரம்புடன் அதிக தடவை சந்திப்பு</h2><p>

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கிய பிறகு,
அவரைத் தான் சந்திக்கும் எட்டாவது சந்திப்பு இதுவென்றும், உலகத் தலைவர்களில்
வேறு எந்தவொரு தலைவரையும் விடத் தான் ட்ரம்பை அதிக முறை சந்தித்துள்ளதாகவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>மேலும், தமது இந்த பயணத்தின் மற்றொரு நோக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இஸ்ரேலின் மிகச்சிறந்த நண்பராகவும், தமது நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த
மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிராமுக்கு நேரில் இறுதி அஞ்சலி
செலுத்தவும் தான் அமெரிக்கா சென்றுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="iw" dir="rtl">אני יוצא עכשיו לפגישה עם ידידנו הנשיא דונלד טראמפ - הפגישה השמינית שלנו מאז שנבחר לכהונתו השנייה, יותר מכל מנהיג בינלאומי אחר. זו זכות גדולה, וזו גם אחריות גדולה.<br><br>בפגישתנו נדון בכל הנושאים שעל הפרק, ובראשם איראן. המטרה שלנו ברורה: לשמור על ביטחונה של ישראל, לחזק את עוצמתה…</p>&mdash; Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) <a href="https://x.com/netanyahu/status/2081702825948553603?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T14:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-after-a-branch-of-a-tree-falls-1785159744"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-after-a-branch-of-a-tree-falls-1785159744</id>
            <summary type="text">கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மரக்கிளை முறிந்து விழுந்ததில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.</p><p></p><p> </p><h2><b>பெண் உயிரிழப்பு</b></h2><p>இவர் நேற்று குறித்த விகாரை வளாகத்திற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே மரத்திலிருந்து முறிந்து விழுந்த கிளைக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c005b156-aee7-4c89-a12c-5ffc8bf70bdd/26-6a6765f809ac2.webp' /></p><p>இந்த கிளை முறிந்து விழுந்ததன் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> 

 இச்சம்பவம் தொடர்பாக கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[p</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-27T14:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-the-vattapalai-kannagi-amman-temple-1785159806"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-the-vattapalai-kannagi-amman-temple-1785159806</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் கௌரி சங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த வழக்கு விசாரணை கடந்த 13ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணியின் வாதத்தையடுத்து வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாவன சபையின் நிரந்தர உறுப்பினராக இருந்த குலசேகரம் கிருஸ்ணபவன் சட்டரீதியற்ற முறையில் நீக்கியது தொடர்பிலும், சட்ட நீதியற்ற முறையில் செயற்படும் ஆலய பரிபாலன சபை தொடர்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியால் வற்றாளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர், உபதலைவர், இணைச் செயலாளர்கள், பொருளாளர்களான 1, 2,3,4,5 எதிராளிகள் உட்பட பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
இந்த வழக்கின் 1ஆம் 3ஆம் 5ஆம் எதிராளிகள் சார்பில் ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இன்று(27.07.2026) வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழங்கப்பட்ட கட்டாணைகளை நீக்க எதிர்த்தரப்பு சட்டத்தரணியால் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a30cdcd1-979f-4cbc-9181-7dc200ea340a/26-6a6760cb6ee74.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வழக்கை தாக்கல் செய்தவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை மறுத்து வழங்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது. </p><p>

இந்த வழக்கினை தாக்கல் செய்த கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா, சட்டத்தரணி அழகரட்ணம் ஜினோசன், சட்டத்தரணி ஜி. ஏ அருண்ராஜ் மற்றும் சட்டத்தரணி த. சிவானந்தராஜா ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியுடன் பேருந்து மோதி விபத்து - சாரதி பலி! இரு பயணிகள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-colombo-kolonnawa-road-1785159515"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-colombo-kolonnawa-road-1785159515</id>
            <summary type="text">கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே
உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
</p><p>முச்சக்கரவண்டி எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>முச்சக்கரவண்டி சாரதி பலி</h2><p>

முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்தில்
பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>முச்சக்கரவண்டி&nbsp;சாரதியின் அலட்சியமான செயற்பாடே இந்த விபத்துக்குக் காரணம் என
ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:39:09+00:00</updated>
        </entry>
    </feed>
