<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-21T02:48:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-sarath-fonseka-gotabaya-rajapaksa-1784601471"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-sarath-fonseka-gotabaya-rajapaksa-1784601471</id>
            <summary type="text">&amp;nbsp;நான் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத் துறையில் இருந்த ஹெந்த வித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நான் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத் துறையில் இருந்த ஹெந்த வித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,000 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக தனக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். </p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்கள், </p><p>சலேவின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கு 9,000 மட்டும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் நடக்கும் முறையை வைத்து நான் ஒரு ஆய்வு செய்தேன்.</p><h2>

</h2><p></p><h2>தனியாக செய்த ஆய்வு</h2><p>கிழக்கில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற ஊகிப்பு, தாக்குதல் வியூகம் , எந்தப் பக்கத்தைப் பாதுகாத்துத் தாக்குகிறார்கள், பங்கர்களை எப்பக்கத்தில் அமைத்துக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதை நன்கு ஆய்வு செய்தேன்.
</p><p>யாழ்ப்பாணம் முகமாலையில் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள். இப்படி நான் கணக்கிட்டுப் பார்த்தபோது, இது நிச்சயமாக 30,000-க்கும் அதிகம் என்று எனக்குப் புரிந்தது. </p><p>இந்த 9,000 அல்லது 10,000 பேரைக் கொண்டு இவர்களுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்த முடியாது. குறைந்தபட்சம் 30,000 பேராவது இருக்க வேண்டும் என்பதுதான் எனது கணிப்பு. </p><p>சிறிது காலம் கழித்து இக்பால் அதாஸ் என்ற புலனாய்வு ஊடகவியலாளர் 
அக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 பேர் இருப்பதாக ஒரு கட்டுரை எழுதினார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3cd7dc-3b8b-43c3-8c3e-27c0b0593904/26-6a5edb8207668.webp' /></p><p>அப்போதுதான் நான் இதுதான் சரியான எண்ணிக்கை என்று தெரிந்து கொண்டேன். எனவே இவர்களால் எந்தப் பயனும் இல்லை, பொய் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். </p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறது என்று கூடத் தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தைப் பற்றிய புரிதலும் இல்லை. </p><p>அதனால்தான் நான் ஹெந்த விதாரன- சுரேஷ் சலேவை நீக்கினேன். பின்னர் கோட்டாபய ராஜபக்ச இவர்களைச் சேர்த்துக் கொண்டு, கொழும்பில் உளவுத் தகவல் கூட்டம் என்று நடத்தி, கொழும்பு உளவு வேலையை கோட்டாபய தான் ஹெந்தவிதாரன மற்றும் சலேவுடன் இணைந்து தனியாக ஒரு குழுவை அமைத்துச் செயற்பட்டார்.
</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகப் போரிட்டு உன்னதமான சேவை செய்த, சிறந்த உளவுத்துறைத் தலைவர் என்றுதானே சொல்கிறார்கள்?
</p><p>இவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு உன்னதமான சேவை செய்தவர்கள்.ஈழம் போரின் நான்காம் கட்ட நடவடிக்கைக்கு அவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T02:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோழியால் நேர்ந்த விபரீதம் - தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-attacked-father-for-chicken-1784600944"></link>
            <id>https://tamilwin.com/article/son-attacked-father-for-chicken-1784600944</id>
            <summary type="text">நுவரெலியா, லிந்துலை பகுதியில் மகன் ஒருவர், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமைந்துள்ளார்.

கோழியைக் கொன்று இறைச்சிக்காக உட்கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, லிந்துலை பகுதியில் மகன் ஒருவர், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமைந்துள்ளார்.</p><p>

கோழியைக் கொன்று இறைச்சிக்காக உட்கொண்டதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார். </p><p>

சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்</b></h2><p>இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் லிந்துலை, மவுஸ்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15f3d1d4-cf15-4847-aede-2e424dfe5215/26-6a5edb12890e9.webp' /></p><p>குறித்த நபரால் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்று கொல்லப்பட்டு இறைச்சிக்காக உட்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இதனால் கோபமடைந்த மகன் தந்தையுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான தந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
தாக்குதலை நடத்திய மகன் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p>]]></content>
            <updated>2026-07-21T02:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-the-public-dengu-symptoms-1784599535"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-the-public-dengu-symptoms-1784599535</id>
            <summary type="text">டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.</p><p>இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,00 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்</h2><p>அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f489772-afea-4b34-b2c4-cdee184fbd1d/26-6a5ed73d6375d.webp' /></p><p>இந்நிலையில், டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்கள் மற்றும் மூட்டுகளில் தீவிர வலி, குமட்டல், வாந்தி மற்றும் தோலில் தடிப்புகள் தென்படுமாயின்&nbsp;உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த டெங்கு அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p>
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T02:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர வைக்கும் வெளிநாட்டு பொறிக்குள் சிக்கப் போகும் ராஜபக்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-team-is-in-australia-to-arrest-nimal-perera-1784598913"></link>
            <id>https://tamilwin.com/article/cid-team-is-in-australia-to-arrest-nimal-perera-1784598913</id>
            <summary type="text">வெளிநாடு சென்று ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரங்களை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமகால அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. 

அதற்கமைய குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடு சென்று ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரங்களை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமகால அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. </p><p>

அதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு தொடர்புடைய நபர்களின் தகவல்களை பெறுவதற்கு கூட்டு சிறப்புப் பொலிஸ் குழு ஒன்றை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்பஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.</p><p> </p><h2><b>2 மில்லியன் அமெரிக்க டொலர்</b></h2><p>இதன் போது, ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றதாக தகவல்கள் வெளியானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fccb61e-a3e5-47a8-83ef-f418a3ace2fe/26-6a5ed4d2cca5b.webp' /></p><p>இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

எயார்பஸ் இலஞ்சப் பரிவர்த்தனையின் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கணக்கின் உரிமையாளரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கான சாட்சியங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த இலஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>
</p><h3><b>
 நீதிமன்றங்களால் பிடியாணை</b></h3><p>இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வர் சமீந்திர ராஜபக்ச ஆகிய சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
</p><p>
அத்துடன், அவர்களுக்கு தற்போது கொழும் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p> 

புரூணை நாட்டில் போலி நிறுவனம் ஒன்றை நிறுவி, புகழ்பெற்ற ஐரோப்பிய விமான நிறுவனத்திடம் இருந்து 1,454,645.54 யூரோக்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-21T02:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527"></link>
            <id>https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527</id>
            <summary type="text">பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>காதலியான இளம் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கோனாபினிவல பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

காதல் தொடர்பு</b></h2><p>அலுபோமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளம் பெண், சந்தேக நபருடன் சுமார் மூன்று ஆண்டுகள் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f591d4f-be07-49f7-8c79-b9112a5be852/26-6a5ed03a646a0.webp' /></p><p>அப்போது தமக்கிடையேயான தகாத காட்சிகள் அடங்கிய வீடியோவை, சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரில் இருந்த போலியான பேஸ்புக் கணக்கு மூலம் தனது தோழிக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 பின்னர் அந்த முறைப்பாட்டை மீளப் பெறுமாறும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட வீடியோவை முழுமையாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் எனவும் கான்ஸ்டபிள் தமக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகப் பெண் கூறியுள்ளார்.</p><p> 

இதனைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> சந்தேக நபரான கான்ஸ்டபிள் பொலிஸ் நிலையத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடமிருந்தும் விசாரித்து தகவல்கள் பெறப்பட்டன.</p><p> </p><h3><b> தண்டனைச் சட்டக்கோவை</b></h3><p>இதன்போது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 486 பிரிவுகளின் கீழ் பாலியல் செயற்பாடு மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea331ad-539e-447b-be82-1f84dbb04320/26-6a5ed03b21c57.webp' /></p><p>எப்படியிருப்பினும், சம்பந்தப்பட்ட வீடியோ பெண்ணின் விருப்பத்தின் பேரில் அவரது சொந்த கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இதன் காரணமாக, இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T01:50:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நச்சு இரசாயனங்களை பயன்படுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்கள் - கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stop-fruit-ripening-by-using-toxic-chemicals-1784597610"></link>
            <id>https://tamilwin.com/article/stop-fruit-ripening-by-using-toxic-chemicals-1784597610</id>
            <summary type="text">பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை&nbsp;</h2><p>
</p><p>
வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பப்பாளி பழங்களில் இதுபோன்றவற்றிற்கு நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது என்று அமைச்சர்&nbsp;கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d04d4f-3666-444d-9dae-83cd779bcbfe/26-6a5ed03554900.webp' /></p><p> அத்தகைய நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் சோதனை நடத்துவதே அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னரும் வர்த்தகர்கள் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தினால், இது தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalist-threatened-by-army-commanders-security-1784597255"></link>
            <id>https://tamilwin.com/article/journalist-threatened-by-army-commanders-security-1784597255</id>
            <summary type="text">ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான துன்புறுத்தல்கள் தொடர்பாக உடனடியாக தலையிடுமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
</p><p>
அச்சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தினசரி ஆங்கில பத்திரிகையின் இணையத்தள ஆசிரியரான லஹிரு தொலொஸ்வல ஜூலை 15 ஆம் திகதி தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் காரில் தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,</p><p> இராணுவத் தளபதியின் பாதுகாப்பு வாகனத் தொடரணியைச் சேர்ந்த லேண்ட் குரூஸர் வாகனம் ஒன்று அவர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது. </p><h2>


</h2><p></p><h2>அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்</h2><p>அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பவத்தை காணொளி பதிவு செய்ய முயன்றபோது கொமாண்டோ அதிகாரி ஒருவர் அவரைப் அச்சுறுத்தி காணொளி பதிவை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். </p><p>இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அச்சந்தர்ப்பத்தில் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முற்றபட்டபோது அங்கு சுமார் 30 இராணுவ அதிகாரிகள் வருகை தந்து அவர் முறைப்பாடு செய்வதைத் தடுத்துள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் தொலொஸ்வல பயமுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார்.</p><p>
இறுதியில் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்ட போதிலும் அழுத்தங்கள் காரணமாக அது மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரது தொலைபேசியில் இருந்த காணொளி சாட்சியங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d2b0b04-1285-4d48-84d6-ab5243edb063/26-6a5ecb092e023.webp' /></p><p>சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இந்த பயங்கர அனுபவம் காரணமாக லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் மன உளைச்சலில் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோருவது யாதெனில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக முறையான விசாரணையை ஆரம்பித்து கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் - சமீர பெரேரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-arrest-gota-syas-chameera-1784596663"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-arrest-gota-syas-chameera-1784596663</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என &#039;ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்&#039; அழைப்பாளர் சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என 'ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்' அழைப்பாளர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார். </p><p>
உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடத்தப்பட்ட கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைச் சதி தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்தச் சதித்திட்டம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்களை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69025692-d9b2-4384-a687-3208eedff0f9/26-6a5ec8b960034.webp' /></p><p>
</p><p>ராஜபக்ஷ குடும்பத்தினரும் அவர்களைச் சுற்றியுள்ள குழுவினரும் பாதாள உலகக் குழுவைப் போல் செயற்பட்டு, கூலிப்படையினரைப் பயன்படுத்தி விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைக் பகடைக்காயாகப் பயன்படுத்தி, 'தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்' எனக் கூறிக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தைக் கைப்பற்றினார். இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
பிணங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பது முழு நாட்டுக்குமே இப்போது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சிங்கள பௌத்த அடையாளத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட பெருமளவிலான மோசடிகளும் குற்றங்களும் தற்போது அம்பலமாகி வருகின்றன. உண்மையான பௌத்தர்கள் இத்தகைய கொடூர அரசியலுக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
</p><p>மதத் தலைவர்களைக் கூட ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த சீரழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் இந்த விசாரணைகளை மேலும் தாமதிக்காமல் உடனடியாகச் செயற்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதை மேலும் ஓரிரு மாதங்களுக்கு இழுத்தடிக்க வேண்டாம் எனவும் இந்த சதித்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் எனவு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T01:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கான சுற்றுலா வீசாவை உடனடியாக இடைநிறுத்திய நாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/taiwan-suspends-tourist-visa-1784595574"></link>
            <id>https://tamilwin.com/article/taiwan-suspends-tourist-visa-1784595574</id>
            <summary type="text">இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா விண்ணப்பங்களை ஏற்பதை தாய்வான் அரசாங்கம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
தாய்வான் வெளியுறவு அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா விண்ணப்பங்களை ஏற்பதை தாய்வான் அரசாங்கம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
</p><p>தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சுற்றுலா வீசாக்கள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இலங்கைப் பிரஜைகள் பின்வரும் குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தொடர்ந்து வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6f5df72-5441-4bcc-866f-361019bba531/26-6a5ec47cbb87d.webp' /></p><p>
தாய்வான் அரசாங்க அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள், கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற நடவடிக்கைகள், குடும்ப உறுப்பினர்களைப் பார்ப்பதற்கான பயணம் (மூன்றாம் நிலை உறவினர்கள் வரை), வர்த்தகம் மற்றும் வணிக நோக்கங்கள், தாய்வானில் உள்ள கப்பல்களில் பணியாளர்களாகச் சேருதல் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லுதல் போன்ற காரணிகளுக்கான வீசா கோரி விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் உள்ள 'தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம்' அல்லது சிங்கப்பூரில் உள்ள 'தைபே பிரதிநிதித்துவ அலுவலகம்' மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
</p><p>தாய்வானில் உள்ள பிணையாளரின் உத்தரவாதக் கடிதம் மற்றும் அவரது தாய்வான் தேசிய அடையாள அட்டை நகல், விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு முதன்மைப் பக்க நகல், குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதற்கான பொலிஸ் சான்றிதழ், பயணச் செலவுகளை மேற்கொள்ளப் போதுமான நிதி வசதி உள்ளதற்கான ஆதாரம், தாய்வானில் தங்குவதற்கான முன்பதிவு சான்று மற்றும் திரும்பும் விமான பயணச்சீட்டு ஆகிய ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பித்து வீசாவிற்காக விண்ணப்பம் செய்ய முயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியாகத் தயாரித்து வைத்துக்கொள்ளுமாறு தாய்வான் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T00:59:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தன விக்ரமரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சம்பவம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>அத்தோடு சானி அபேசேக்கர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சார்பாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல முக்கிய சம்பவங்களுக்கு முக்கிய சாட்சியாளர் என்பதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். </p><p>ஆனால், அவர் பிரதான சாட்சியாளராக இருப்பது மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பலமான சாட்சியாளராக சந்தன விக்கிரமரத்ன விளங்குகின்றார்.
</p><h2>

</h2><p></p><h2>தேசபந்துவுக்கு எதிரான சாட்சி</h2><p>தேசபந்து தென்னகோன் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறுவதற்கான பலமான சாட்சியத்தை சந்தன விக்ரமரத்னவே குறிப்பிடுகிறார்.</p><p>அவர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளித்துள்ளார்.

அதேபோன்று ஷானி அபேசேகர ஆட்சி மாறிய உடனேயே, 2019 நவம்பர் 20 ஆம் திகதி, பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியவர் சந்தன விக்ரமரத்னவே. </p><p>அவர் அவ்வாறு நீக்குமாறு கோரும் அளவுக்கு, அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யாரின் பேச்சைக் கேட்டு இவ்வாறு மாற்றினார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் சரியான தீர்மானத்தை எடுக்கவில்லை. </p><p></p><p>அவர் தனது அதிகாரிகளின் பக்கம் நிற்கவில்லை. 
ஷானி போன்றவர்களை மாற்றினாலும், இறுதியில் ஷானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு முக்கிய பங்காற்றினார்.
</p><p>
இறுதியில் ஷானியின் பதவியுயர்வுக்கு பரிந்துரைத்தவர்களில் சந்தன விக்ரமரத்னவும் ஒருவர். ஆனால் இன்னமும் ஷானிக்குப் பதவியுயர்வு கிடைக்கவில்லை.
</p><p>
அதேபோன்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து ஓய்வுபெற்ற ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்ட சம்பவம். அச்சம்பவம் நடந்த போது சந்தன விக்ரமரத்னவே பொலிஸ் மா அதிபராக இருந்தார். </p><p>ரவி செனவிரத்னவை பொலிஸார் கைது செய்துவிட்டனர் என்பதை அறிந்து, அது தொடர்பாக அவர் பொலிஸாரிடம் விசாரணை நடத்துகின்றார். </p><p>ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும், பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
</p><h2>
சானி- ரவிக்கு செய்த உதவி</h2><p>அதன் பின்னர் பொலிஸ் மா அதிபர் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெறுகின்றார். இது பிணையில் செல்லக்கூடிய குற்றம் என்று சட்டப் பிரிவு கூறுகிறது. </p><p>அதற்கமைய, இது பிணையில் செல்லக்கூடிய குற்றமாக இருந்தபோதிலும், தேஷபந்து உள்ளிட்ட குழுவினர் வேறு ஒரு சக்தியினால் அவரைச் சிறையிலடைக்கவே முயற்சிக்கின்றனர் என்பதைப் பொலிஸ் மா அதிபர் சந்தன புரிந்துகொள்கிறார்.
</p><p>
பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு உடனடியாக அறிவுறுத்துகின்றார். ஆனால், பொலிஸ் மா அதிபர் கூறியதைக் கூட கேட்காமல், பொலிஸ் பிணை வழங்காமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ரவி செனவிரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b8ed6e-17cd-4346-8fe7-9d456c4e0d94/26-6a5ec22502c6e.webp' /></p><p>இது தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறிப்புகளைக் கூட எழுதியிருந்தார். இவ்வாறாக அவர் பல்வேறு விடயங்களில் பல வழிகளில் தலையிட்டிருந்தார். </p><p>அது நன்மை தீமை இரு பக்கங்களையும் கொண்டுள்ளது. 
அவர் மரணமடைந்த சந்தர்ப்பத்தில், அவருடைய அனைத்துத் தவறுகளையும் பேசுவதை விட, அவர் பொலிஸில் ஆற்றிய பங்களிப்பைப் பேசுவது மிகவும் முக்கியமானதாகும்.
</p><p>
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் தேஷபந்துவின் சம்பவத்தில் அவர் ஒரு பலமான சாட்சியாளராக இருக்கின்றார். இவ்வாறானதொரு பலமான சாட்சியாளரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். </p><p>அவருடைய மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:55:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸி ஆர்ஜென்டீனா ரசிகர்களுக்கு அனுப்பிய உருக்கமான கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-sends-letter-to-argentina-fans-1784594842"></link>
            <id>https://tamilwin.com/article/messi-sends-letter-to-argentina-fans-1784594842</id>
            <summary type="text">உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அர்ஜென்டீனா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அர்ஜென்டீனா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>இந்தத் தோல்வியால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது; இந்தக் காயம் ஆற சிறிது காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், நாம் கடந்து வந்த நல்ல தருணங்களையும், நமது முழுத் திறனையும் வெளிப்படுத்திப் பல போட்டிகளில் மீண்டு வந்த நினைவுகளையும் நான் உறுதியோடு நெஞ்சில் நிறுத்த விரும்புகிறேன். அந்த தருணங்கள் என்றும் நம் நினைவில் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53db28a4-a3b4-4921-996c-247ac95f0192/26-6a5ec19c62bc4.webp' /></p><p>
இந்த அணியின் உழைப்புடனும் முயற்சியுடனும் இணைந்து, எம்மை மீண்டும் உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக உயர்த்திய முழு நாட்டின் ஆதரவையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இன்று நாம் அடைந்த சாதனையை உணர்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த அணி தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளுக்கும் செய்திகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். மீண்டும் ஒருமுறை, நாம் அனைவரும் ஒரு நாடாக இணைந்து, அர்ஜென்டீனாவாசி என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p>உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மெஸ்ஸி தனது உருக்கமான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T00:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை விலை உயர்விற்கு அரசாங்கமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egg-price-climbs-due-to-govt-act-1784593224"></link>
            <id>https://tamilwin.com/article/egg-price-climbs-due-to-govt-act-1784593224</id>
            <summary type="text">முட்டை விலை அதிகரிப்புக்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>முட்டை விலை அதிகரிப்புக்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p>
முட்டை விலைகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அறிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>கோழிப் பண்ணைத் துறையின் மிக அத்தியாவசிய தேவையாகச் சோளம் காணப்படுகின்றது. தற்போது சோள இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87002cfe-496b-4d16-b6b3-acf71d714474/26-6a5ebb52a2d7d.webp' /></p><p>உள்ளூர் சோள உற்பத்தி முட்டை உற்பத்திக்கு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
சோளத்திற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த போதிலும், நடைமுறையில் அது சாத்தியமற்ற ஒன்றாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சோளத்திற்கு மாற்றீடாக வேறு உணவுகளைப் பயன்படுத்துவது கோழிகளின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>அரிசி போன்ற மாற்று உணவுகளால் கோழிகளுக்குக் குடல் அழற்சி மற்றும் தொற்றுகள் ஏற்படுவதோடு, முட்டை உற்பத்தி 20% முதல் 30% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>பண்ணையாளர்கள் தற்சமயம் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.</p><p>மேலும், விலங்கு உணவுகளில் போலி வியாபாரிகள் 'டொலமைட்' போன்ற இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதால் பெருமளவிலான கோழிகள் உயிரிழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனால் பண்ணையாளர்களுக்கு மீள முடியாத இழப்பு ஏற்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>விலங்கு உணவுகளின் தரம் குறைந்துள்ளதன் காரணமாக நாளாந்த முட்டை உற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் சந்தையில் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T00:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு தயாராகும் நீண்ட பட்டியல் - அவுஸ்திரேலியாவுக்கு விரைந்த சிஐடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213</id>
            <summary type="text">இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து, குழுக்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த விசாரணை பணச்சலவை, இணையவழி மோசடி மற்றும் சர்வதேச இலஞ்சம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கலாம்.</p><p> 

திருடப்பட்ட அரச நிதிகளைக் கண்டறியவும், சர்வதேச குற்றக் குழுக்களைக் குறிவைக்கவும் CID, அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்நிலையில், ஏர்பஸ் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான பெரும் வெளிநாட்டு நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>

இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wDwDUkPZbmU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-20T23:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நாள் கடந்தும் சிகிச்சையளிக்கவில்லை.. மகனை திருப்பி அழைத்து சென்ற தந்தை - வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kinniya-hospital-no-treatment-son-fb-video-1784589397"></link>
            <id>https://tamilwin.com/article/kinniya-hospital-no-treatment-son-fb-video-1784589397</id>
            <summary type="text">கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைமுறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என அச்சிறுவனின் தந்தை கடுமையான குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைமுறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என அச்சிறுவனின் தந்தை கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.</p><p>குறித்த காணொளியில், கடந்த 18ஆம் திகதி சிறுவன் கைமுறிந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறுவனின் தந்தை குறிப்பிடுகின்றார்.&nbsp;</p><p></p><h2>தந்தை வெளியிட்ட காணொளி..&nbsp;</h2><p>எனினும், ஒரு நாள் கடந்தும் வைத்தியசாலை நிர்வாகம் எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3996d484-90b2-4d55-a3b5-04d52df3c896/26-6a5eb37add014.webp' /></p><p>
</p><p>அதேநேரம், குறித்த வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள் இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, எக்ஸ்ரே (X-Ray) மற்றும் சிகிச்சையளிக்கப் பயன்படும் பொருட்கள் வரை அனைத்தையும் வெளியிலுள்ள தனியார் மருந்தகங்களிலேயே பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>கிண்ணியா வைத்தியசாலையின் இவ்வாறான குறைபாடுகள் குறித்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை எனப் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T23:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் சபாநாயகர்.. உடன் கைது செய்யுங்கள்! - கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-speaker-immediately-gammanpila-urges-1784585537"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-speaker-immediately-gammanpila-urges-1784585537</id>
            <summary type="text">சபாநாயகரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.சபாநாயகர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.</p><p>சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் 10 ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யுமாறும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>பல்வேறு முறைப்பாடுகள்..&nbsp;</h2><p>
</p><p>
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சபாநாயகர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு:-</p><p>வாசஸ்தல முறைகேடு: தாபன விதிக்கோவைக்கு முரணாக, அரச செலவில் பராமரிக்கப்படும் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைத் தவிர்த்து, லோரிஸ் மாவத்தையில் உள்ள மற்றொரு இல்லத்தில் வசிப்பதுடன், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcbb2b00-487f-4f5b-9185-b6c239809550/26-6a5ea0eae214c.webp' /></p><p>பணிக்குழாம் நியமனம்: உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சேவையாற்றாத 8 பேரைத் தமது பணிக்குழாமில் இணைத்து, அவர்களுக்காக மாதம் 7 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அரச நிதி செலவிடப்படுகின்றது.</p><p>ஊழியர் நியமனத்தில் முறைகேடு: அமைச்சரவை அனுமதி இன்றி தகுதியற்ற நபர்களைத் தனிப்பட்ட பணிக்குழாமில் நியமித்தல்.</p><p>வாசஸ்தல மாற்றம்: அமைச்சரவை அனுமதியின்றி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை ஆராய்ச்சி மையமாக மாற்றத் தீர்மானித்தமை.</p><p>தனிப்பட்ட தேவைக்கு அரச சொத்து: தனிப்பட்ட செயலாளருக்கு அரச செலவில் இல்லம் ஒதுக்கியமை மற்றும் குளிரூட்டி இயந்திரத்தைப் பழுதுபார்க்க நாடாளுமன்றப் பணியாளர்களைப் பயன்படுத்தியமை.</p><p>ஊடகப் பிரிவு மோசடி: அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவுக்காக அரச வாகனங்கள் மற்றும் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை. இது தொடர்பில் ஏற்கனவே முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><h2>வரலாற்றில் இடம்</h2><p>இரட்டை எரிபொருள் மானியம்: சபாநாயகர் பதவிக்கான மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான எரிபொருள் மானியங்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்வது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b909ab6-85fa-45bb-b1ba-7b981276acbd/26-6a5ea0ebd8ef4.webp' /></p><p>இது குறித்து உதய கம்மன்பில மேலும் கூறுகையில்,</p><p>"கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், அவர் அதனைப் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார். </p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலமுறை கோரியும் எனக்கு அது கிடைக்கவில்லை. தற்போது தபால் மூலம் அந்த அறிக்கை என் கைக்கு கிடைத்துள்ளது. ஒழுக்கக்கேடான சில தகவல்களைத் தற்போதைக்கு வெளிப்படுத்தவில்லை, வெளிப்படுத்தினால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்." - என்றார்.</p><p>

"இந்த அறிக்கை ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையே பிளவை ஏற்படுத்தும். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் இந்த அறிக்கையை அடுத்த வாரம் கையளிக்கவுள்ளோம். பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்ட சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன வரலாற்றில் இடம்பிடிப்பார்." என்று அவர் மேலும் எச்சரித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T22:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது சர்வாதிகாரத்தின் முதல் படி! நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-govt-rajitha-senarathna-condomns-1784582867"></link>
            <id>https://tamilwin.com/article/anura-govt-rajitha-senarathna-condomns-1784582867</id>
            <summary type="text">மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை
நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை
நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறி என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.&nbsp;</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, இந்த ஆண்டு
4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.</p><p>&nbsp;</p><p>
</p><p>
பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டிய சூழலில், உலக வங்கி
அதனை 3 சதவீதமாகவே கணித்துள்ளது.</p><p>

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை விட்டுச் செல்லும்போது இருந்த அதே 6 பில்லியன்
டொலர் மட்டத்திலேயே வெளிநாட்டு கையிருப்பு தேக்கமடைந்துள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதார நிலை
மோசமடையக்கூடும் என எச்சரித்துள்ள நிலையிலும், அரசு அதற்குத் தீர்வு காணாமல்
அரசமைப்புத் திருத்தங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
</p><p>
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஒன்பது நீதியரசர்
வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல்,
ஏன் பதவிக்காலத்தை நீடிக்க இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்? இது சட்டத்தரணிகள்
சங்கம் மற்றும் நீதிபதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0a4a07a-5f75-4425-98a3-c5f9da737dde/26-6a5e939a6597b.webp' /></p><p> </p><p>இவர்களுக்கு ஒரு
சலுகை வழங்கினால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என அனைவரும்
இதே கோரிக்கையை விடுப்பார்கள். </p><p>இவ்வாறான சர்வாதிகாரப் போக்கு நாட்டின்
எதிர்காலத்துக்குப் பெரும் ஆபத்தாகும்.

நிர்வாகத் துறை மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றால் பொதுமக்களிடம் சர்வஜன
வாக்கெடுப்பு கோர வேண்டும். </p><p>தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை
ஒழிப்போம் என்று சொன்னவர்கள், இன்று அதிகாரத்தைப் பலப்படுத்த அரசமைப்பைத்
திருத்த முற்படுகின்றார்கள். </p><p>மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள்
மீது சர்வதேச கண்காணிப்பு உள்ளஇன்றைய சூழலில், இவ்வாறான நடவடிக்கைகள்
நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கடற்படைத் தளபதி டேமியனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anua-secretary-congratulates-new-navy-commander-1784580918"></link>
            <id>https://tamilwin.com/article/anua-secretary-congratulates-new-navy-commander-1784580918</id>
            <summary type="text">இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயகவை சந்தித்துக்
கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(20.7.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>
</p><p>
இலங்கைக் கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் தனது மனமார்ந்த
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p></p><h2>நினைவுப் பரிசு</h2><p>
</p><p>
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் நினைவாக, கடற்படைத் தளபதியால் ஜனாதிபதியின்
செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f48375-57ad-4cb4-92df-2b0161ccf596/26-6a5e91e082eba.webp' /></p><p>
இந்தச் சந்திப்பில் இருவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடற்படை சார்
விடயங்கள் குறித்து சுருக்கமாகக் கலந்துரையாடினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலையில் கருணாவுடன் சென்ற பெண் யார்..! - நான்காவது கோடீஸ்வரரான மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p> பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பிரியந்த ஜயகொடி, "எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.</p><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>யார் அந்த பெண்? என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T20:51:39+00:00</updated>
        </entry>
    </feed>
