<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-28T08:30:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வெளிநாட்டு கடனில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sri-lanka-foreign-debt-next-10-years-1787903697"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sri-lanka-foreign-debt-next-10-years-1787903697</id>
            <summary type="text">அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை எந்த பிரச்சினையுமின்றி திருப்பிச்செலுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை எந்த பிரச்சினையுமின்றி திருப்பிச்செலுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை மற்றொரு கடன் தவணை தவறுதலையோ அல்லது கடன் நெருக்கடியையோ சந்திக்காது என்றும் கூறியுள்ளார். </p><p>

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதால், அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு கடனின் அளவு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு&nbsp;</h2><p> 

இதற்கமைய, ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய அந்த கடன் தொகையை எந்த பிரச்சினையுமின்றி திருப்பி செலுத்துவதற்கு தேவையான மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பை நாடு உருவாக்கி வருகின்றதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ae660b-d03e-46ec-8fc3-0b5ef45307cf/26-6a91458167b68.webp' />&nbsp;</p><p>
</p><p>
சுற்றுலா வருவாய், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து வரும் பணப்பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் கடன்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், நாட்டின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

நாட்டின் தற்போதைய மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு, வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இதன் விளைவாக, இலங்கை ஆண்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான அந்நியக்கடன் செலுத்துதலை எந்த பிரச்சினையுமின்றி செய்ய முடியும் என்று வீரசிங்க கூறியுள்ளார்.</p><h2>மத்திய கிழக்கு நெருக்கடி</h2><p> 

மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இலங்கையால் அத்தகைய பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77b020c5-fcab-4626-9f58-8c02ed36763d/26-6a91458231f40.webp' /></p><p>
இந்த ஆண்டின் முதல் பாதியில் இலங்கை 5 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதை சர்வதேச அளவிலும் பாராட்டப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் தற்காலிகமாக 7 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அது 5 சதவீத இலக்கு நிலைக்கு திரும்பும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T08:23:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக்கூடு - அச்சத்தில் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wasp-nest-at-thalawakkala-busstand-passengers-fear-1787900198"></link>
            <id>https://tamilwin.com/article/wasp-nest-at-thalawakkala-busstand-passengers-fear-1787900198</id>
            <summary type="text">நுவரெலியா - தலவாக்கலை
பேருந்து நிலையத்தில் பாரிய
குளவிக்கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் பல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - தலவாக்கலை
பேருந்து நிலையத்தில் பாரிய
குளவிக்கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையக்
கட்டடத்தின் நாவலப்பிட்டி பேருந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் இந்த பாரிய குளவிக்கூடு அமைந்துள்ளது.</p><h2>பாதுகாப்பு அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
குறித்த குளவிக் கூடு கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில்
காணப்படுவதாகவும், இதுவரை பொதுமக்களுக்கு குளவிக் கொட்டு சம்பவங்கள்
இடம்பெறவில்லை எனவும் அங்கு கடமையாற்றும் பேருந்து சாரதிகள் மற்றும்
நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குளவிக் கூட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், ஒரே
நேரத்தில் அதிகளவான குளவிகள் வெளியேறி பொதுமக்களை தாக்கக்கூடிய அபாயம்
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a629f59-e67c-4125-99bb-c38c9afa3b70/26-6a913a17b98e7.webp' /></p><p>
குறிப்பாக, பேருந்துகளின் தொடர்ச்சியான இயக்கம், அதிர்வுகள் மற்றும் அதிகளவான
மக்கள் நடமாட்டம் காணப்படும் இந்த இடத்தில், குளவிக்கூடு அமைந்திருப்பது
எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.</p><p>

குளவிகள் தமது கூட்டை பாதுகாக்கும் இயல்பைக் கொண்டுள்ளதால், கூட்டை நேரடியாக
கலைப்பது அல்லது அதற்கு இடையூறு ஏற்படுத்துவது குளவிகளின் தாக்குதலைத்
தூண்டக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>குளவிக்கூட்டை அகற்றல்</h2><p>
</p><p>
மலையகத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர்
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில்
ஒன்றுகூடும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் காணப்படும் இந்த குளவிக் கூட்டை
அதிகாரிகள் உடனடியாக அவதானத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7d5d20-180f-4510-9f6c-962c620b6397/26-6a913a188e2b2.webp' /></p><p>அதேவேளை உரிய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகளுடன், குளவிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தற்போது ஆபத்து ஏற்படவில்லை என்பதால் எதிர்காலத்திலும் ஆபத்து ஏற்படாது என
அலட்சியப்படுத்தாமல், மக்கள் அதிகம் கூடும் பொது இடம் என்பதால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என&nbsp; சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுக் காரில் சட்டவிரோத மதுபானம் கடத்தல்! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-smuggling-illegal-liquor-luxury-car-1787900918"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-smuggling-illegal-liquor-luxury-car-1787900918</id>
            <summary type="text">வென்னப்புவையில் இருந்து பாணந்துறை வரை சொகுசுக் கார் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வென்னப்புவையில் இருந்து பாணந்துறை வரை சொகுசுக் கார் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வாடகைக்கு பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து பாணந்துறை பகுதிக்கு சட்டவிரோத மதுபானம் கடத்தப்படுவதாக மேல் மாகாண குற்றத் தடுப்புபிரிவுக்கு இரகசியத்தகவல் கிடைத்திருந்தது.&nbsp;</p><h2>பொலிஸாரால் கைப்பற்றல்</h2><p>அதனடிப்படையில் ஹொரணை அருகே கிந்தெல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது, அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு சட்டவிரோத மதுபானப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41ef187d-9af8-4eba-9d8e-7c5d15550fd8/26-6a913de57e458.webp' /></p><p>
இதன்போது 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 8 பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. </p><p>அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாய் என்று கூறப்படுகின்றது. </p><p>அதனையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் தடுப்பூசிகள் தேக்கம் - அரச நிறுவனங்களின் அலட்சியத்தால் தாறுமாறாக உயரும் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-vaccines-in-a-backlog-1787902615"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-vaccines-in-a-backlog-1787902615</id>
            <summary type="text">சுகாதார அமைச்சின் கீழுள்ள இரண்டு அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்கு காரணமாக அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சுமார் 1,60,000 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சின் கீழுள்ள இரண்டு அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்கு காரணமாக அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சுமார் 1,60,000 புற்றுநோய் தடுப்பூசிகள் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாகவே, குறித்த 1,60,000 அளவிலான புற்றுநோய் தடுப்பூசி மருந்துகள், மருத்துவ விநியோகப் பிரிவின் சேமிப்புக் களஞ்சியங்களில் தேங்கியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><h2>

கள்ளச் சந்தையில் 25,000 ரூபாய்க்கு விற்பனை</h2><p>

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் மருத்துவ விநியோகப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்புப் பிழையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளது என்று குறித்த மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6f605b-329e-43bf-8523-e90d9beed329/26-6a913b0013689.webp' /></p><p>

புற்றுநோய் தடுப்பூசி அடங்கிய பெட்டியில் தேவையான அனைத்து தகவல்களும், சிலிண்டரின் முன்புறத்தில் உள்ள சரியான விலைச்சீட்டிலும், அதாவது உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதி திகதி மற்றும் பொருளின் தரம் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

இருப்பினும், சிலிண்டரின் பின்புறத்தில் உள்ள விலைச்சீட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாக, மருத்துவ விநியோகப் பிரிவு இந்த இருப்பை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.</p><p> 

சுமார் 900 ரூபா விலையுள்ள இந்தத் தடுப்பூசி, தற்போது கள்ளச் சந்தையில் 25,000 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும், அந்த விலையில் கூட இதனைக் கொள்வனவு செய்வது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:38:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டே நாட்களில் கோடிக்கணக்கில் வருமானம்: அதிவேக நெடுஞ்சாலையில் குவிந்த வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/expressways-generate-over-rs-124-million-1787893587"></link>
            <id>https://tamilwin.com/article/expressways-generate-over-rs-124-million-1787893587</id>
            <summary type="text">கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. </p><p>இந்த இரு நாட்களிலும் மொத்தம் 325,316 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.&nbsp;</p><h2>120 மில்லியன் ரூபா வருமானம்</h2><p>

ஓகஸ்ட் 27ஆம் திகதி 161,553 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 64,164,930 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337fbe5f-0ca5-4636-8236-6042c542366f/26-6a9117554188a.webp' /></p><p>
இந்தக் காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GbmpCCFkr_w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட மருத்துவர்களுக்கான புதிய சேவைப் பிரிவு - அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-service-unit-for-specialist-doctors-1787902075"></link>
            <id>https://tamilwin.com/article/new-service-unit-for-specialist-doctors-1787902075</id>
            <summary type="text">விசேட மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த விசேட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம், சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு நீண்டகாலத் தேவை நிறைவேற்றப்பட்டதில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மேலும் தரமான மற்றும் பொறுப்பான விசேட மருத்துவ சேவைகளைப் பெற வழிவகுக்கும் என்று விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>இலங்கையின் மருத்துவ சேவை</h2><p>

மேலும், இந்தப் புதிய சேவைப் பிரிவு இலங்கையின் மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5badc3ad-87ed-42d3-84bb-7c1242422ae6/26-6a9139696e0bf.webp' /></p><p>
</p><p>
இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, அதற்கான தேவையான தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், அதை நனவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் விசேட மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் மருத்துவர் ஞானசேகரம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்த விவகாரம்: நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட தயாராகும் அரசாங்கம்! சம்பிக்க சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551"></link>
            <id>https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீள பெறப் போவதில்லை என அவர்
குறிப்பிடுவது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டுச் செயற்படத் தயாராக இருப்பதையே
மறைமுகமாகக் காட்டுகின்றது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று (27.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்பு</h2><p>

அவர் மேலும் கூறுகையில், எவ்விதமான விரிவான கலந்துரையாடல்களும் இல்லாமல் நீதிபதிகளின் பதவிக்காலத்தை
இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்குத் தேசிய மற்றும்
சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d083510-940a-44d9-8add-495be15e5d7c/26-6a91361f4ac7b.webp' /></p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்த தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p>
இந்த சட்டமூலம் தற்போது உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள
பின்னணியில், எவருக்காகவும் அதனை மீளப்பெறப் போவதில்லை என ஜனாதிபதி கூறுவது,
நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட அரசாங்கம் தயாராகின்றது என்பதையே
வெளிப்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa7eb7d0-00d7-467e-a373-2fa05aad436d/26-6a91362007777.webp' /></p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பது அரசாங்கத்திற்கு மட்டுமே
சாதகமாக அமையுமே தவிர, நாட்டு மக்களுக்கு அதனால் எந்தவிதப் பயனும் கிடைக்கப்
போவதில்லை. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நீதித்துறையை
மாற்றியமைக்கும் இவ்வாறான முயற்சிகள் முற்றிலும் தவறானவை என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய மின்படலங்கள் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: காலநிலை மாற்றத்தால் புதிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-to-users-of-solar-panels-1787900844"></link>
            <id>https://tamilwin.com/article/notice-to-users-of-solar-panels-1787900844</id>
            <summary type="text">வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்படலங்களை, காலை 8.00 மணி முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்படலங்களை, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>

தற்காலிகமாக இடைநிறுத்தம்</h2><p>இதன்படி, கடந்த 27ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை குறித்த 300 கிலோவோட்டிற்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06416e73-c3b8-4a2a-80fe-d70489da3501/26-6a9133ff568cc.webp' /></p><p> மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் தேசிய மின் கட்டமைப்புடன் அதன் இணைப்பு தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.</p><p>

இதற்கமைய, 300மறுக்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மல்வத்து - அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-receive-blessing-asgiri-mahanayake-monks-1787898917"></link>
            <id>https://tamilwin.com/article/president-receive-blessing-asgiri-mahanayake-monks-1787898917</id>
            <summary type="text">கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா
விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா
விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு
மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.</p><p>ஜனாதிபதி குறித்த விஜயத்தை நேற்றைய தினம்(27.08.2026) மேற்கொண்டிருந்தார்.</p><h2>தேரர்களிடம் ஆசி பெற்ற&nbsp;ஜனாதிபதி </h2><p>
</p><p>
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பின்
மகா நாயக்க&nbsp; திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க
தேரரைச் சந்தித்து ஆசி பெற்றமையுடன், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலிலும்
ஈடுபட்டுள்ளார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, மல்வத்து தரப்பின் அனுநாயக அதிவணக்கத்துக்குரிய
திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்து, அவரிடமும் ஆசி
பெற்றதோடு சிறுகலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0db8498-50ae-4392-8f27-2f10e51f3460/26-6a912fd8130ea.webp' /></p><p>இதனை அடுத்து அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி,
அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க வராகொட ஸ்ரீ ஞானரதன மகா
நாயக்க தேரரின் நலன் விசாரித்ததோடு அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>மேலும் மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ச சுரங்கவும் இந்தச் சந்திப்பில்
இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:02:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை! அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1787898938"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1787898938</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள்
முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக
மக்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள்
முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக
மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்றைய தினம் (27.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசமைப்புத் திருத்தம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 22ஆவது அரசமைப்புத் திருத்தம் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும்
கேட்டறிந்த பின்னரே கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்குப்
புறம்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e5cf78-c719-4d23-9016-cf4dca1da3fb/26-6a9130bf1232e.webp' /></p><p> </p><p>நாட்டின் நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு, இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம், நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும்
இலங்கை சட்ட ஆணைக்குழு என எந்தவொரு முக்கிய தரப்பினருடனும் அவர் இது குறித்து
எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்துக் கலந்துரையாட ஏப்ரல் மாதத்திலேயே
நேரம் கோரியிருந்த போதிலும், அமைச்சரவை ஒப்புதல் பெற்று வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்ட பின்னரே அவர்களுக்குச் சந்திப்பு வாய்ப்பளிக்கப்பட்டது.</p><h2>ஆலோசனை</h2><p> </p><p>தான்
கூறுவது தவறு என்றால், எந்தெந்த நாள்களில் எந்தெந்தத் தரப்பினருடன் ஆலோசனை
நடத்தப்பட்டது என்ற விவரங்களை ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c434b7c-b9c5-4035-ae3d-6cc8f67ce1ff/26-6a9130bfdb2eb.webp' /></p><p>

ஜனாதிபதி திறந்த மனதுடன் செயற்படாமல் தன்னிச்சையாக எடுத்துள்ள
இத்தீர்மானத்தின் விளைவை இறுதியில் முழு நாடும் அனுபவிக்க நேரிடும்.
</p><p>
5 வருட காலத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையின்படி ஒரு மக்களின் பிரதிநிதியாக
மட்டுமே ஜனாதிபதி செயற்பட முடியுமே தவிர, நாட்டின் உரிமையாளரைப் போலச் செயற்பட
முடியாது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்: 472 பேர் பலி - 1 535 பேர் காணாமல் போனதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767</id>
            <summary type="text">நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், 1,535 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 469 பேரும், திபெத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
 இயற்கைப் பேரழிவு</h2><p>
கடந்த 26ஆம் திகதி பாறைகள், பனி, மண் மற்றும் பெருக்கெடுத்த நீர் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட இயற்கைப் பேரழிவினால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், “வான்டர்” என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்திற்கு முன்னரும் பின்னரும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Our thoughts are with the communities affected by this week’s devastating flash floods in Nepal. <br><br>To support ongoing response and recovery efforts, Vantor has activated its Open Data Program, providing free access to high-resolution satellite imagery for frontline organizations… <a href="https://t.co/RqQJdqAghr">pic.twitter.com/RqQJdqAghr</a></p>&mdash; Vantor (@vantortech) <a href="https://x.com/vantortech/status/2093038515927842948?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களில், ஆற்றங்கரையில் அமைந்திருந்த பல அடுக்குகளைக் கொண்ட பெரிய எல்லைக் கட்டிடம், சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன.</p><h2>

வர்த்தக செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள்</h2><p>

ஆனால், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி, அதாவது பேரழிவு ஏற்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்களில், அந்த உள்கட்டமைப்புகளில் பெரும்பாலானவை பாறைகள், மண் மற்றும் இடிபாடுகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728aac89-81e9-46b2-a4e0-d509bc20daad/26-6a9130cfb93e9.webp' /></p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய செயற்கைக்கோள் படங்களிலும் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதையோ அல்லது இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதையோ காண முடிகிறது.
</p><p>
இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, நேபாளத்தில் 977 பேரும், திபெத்தில் 558 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களில், அப்பகுதி வழியாகப் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட குறைந்தது 540 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மருந்தகம் சுற்றிவளைப்பு - கைப்பற்றப்பட்டுள்ள மருந்துகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pharmacy-selling-banned-drugs-raided-in-colombo-1787897393"></link>
            <id>https://tamilwin.com/article/pharmacy-selling-banned-drugs-raided-in-colombo-1787897393</id>
            <summary type="text">அரசாங்க மருத்துவமனைகள் தவிர வேறெந்த இடத்திலும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று கொழும்பில் சுற்றிவளைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்க மருத்துவமனைகள் தவிர வேறெந்த இடத்திலும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு - மருதானை பிரதேசத்தில் அமைந்திருந்த மருந்தகம் ஒன்றே இவ்வாறு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><h2>போதைப்பொருளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகள்</h2><p>

குறித்த மருந்தகத்தில் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மருத்துவரொருவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளும் மருதானை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd6073c-236f-4504-ac35-c254f9e843d8/26-6a912b1b476ac.webp' /></p><h2>8 வகை மருந்துகள் கைப்பற்றல்</h2><p>மேலும், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட 8 வகையான மருந்துகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் இந்த மருந்தகம் நடத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த மருந்தகத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும் - நீதி அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609"></link>
            <id>https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609</id>
            <summary type="text">அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்
என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.</p><p>

அநுராதபுரம் சிறைச்சாலையை நேற்று(27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்கள்</h2><p>மேலும் கூறுகையில்,

"அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்த
தாமதம் காரணமாகவே, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23
ஆயிரம் கைதிகள் விசாரணைகள் முடிக்கப்படாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4511c554-5d29-42a6-b7db-3c8bdc32e383/26-6a912b4b84d59.webp' /></p><p>இந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு, அரச பகுப்பாய்வாளர்
திணைக்களத்துக்குப் புதிதாக 70 அதிகாரிகள் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்
மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை துரிதமாக
வழங்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கைதிகளின் அடிப்படைப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும்
உடைமைகளைப் பாதுகாப்பதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக அனைத்துச்
சிறைச்சாலைகளிலும் பிரத்தியேகமான கூட்டுப் பொறிமுறை ஒன்றையும் அரசு தற்போது
நிறுவியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது! சுட்டிக்காட்டும் சமன் ரத்னப்பிரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saman-ratnapriya-statement-1787897371"></link>
            <id>https://tamilwin.com/article/saman-ratnapriya-statement-1787897371</id>
            <summary type="text">முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை
ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசாங்கம் கூறிவரும் கருத்துக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை
ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசாங்கம் கூறிவரும் கருத்துக்கள்
முற்றிலும் பொய் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய
சுட்டிக்காட்டினார்.
</p><p>
கொழும்பில் நேற்று (27.08.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன
என்பது கூட இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறான வழக்குகள் அனைத்தும்
நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே
நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a1e903-6070-4e62-a01b-b4475e384058/26-6a9128f434585.webp' /></p><p>

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை ஆரம்பத்தில் உயர்
நீதிமன்றத்துக்கே கொண்டுவரப்பட்டது. அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகள்
காரணமாகவே, பின்னர் அது மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் அதன் கீழ் உள்ள
நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.</p><h2>நிலுவையில் உள்ள வழக்குகள்</h2><p> </p><p>இதில் 10,000 வரையிலான வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு
நீதிமன்றங்களில் உள்ளன. எஞ்சிய 10 இலட்சத்து 90 ஆயிரம் வழக்குகள் அனைத்தும்
கீழ் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c210e1b-e09d-4013-b88a-680e028fdc6b/26-6a9128f5275cf.webp' /></p><p>
</p><p>
கீழ் நீதிமன்றங்களிலேயே அதிகளவிலான நீதிபதி வெற்றிடங்கள் காணப்படுகின்ற
போதிலும், கடந்த எட்டு மாதங்களாக அரசு அந்த வெற்றிடங்களை நிரப்பாமல்
வைத்துள்ளது.</p><p> </p><p>அதை முறைப்படி நிரப்பாமல், வெறும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன்
மூலம் நீதிமன்றப் பிரச்சினைகளுக்கோ அல்லது மோசடிக்காரர்களைச் சட்டத்தின் முன்
நிறுத்துவதற்கோ எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது - சுனில் ஹந்துன்னெத்தி எம் பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-national-salt-co-new-building-inaugurated-1787893101"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-national-salt-co-new-building-inaugurated-1787893101</id>
            <summary type="text">கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என தொழில்துறை மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p> 

நேற்று(27.08.2026) நடைபெற்ற மன்னார் தேசிய உப்பு நிறுவனம் புதிய நிர்வாகத் தொகுதி மற்றும் களஞ்சியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>2 கோடியே 58 இலட்சம்&nbsp;ரூபா&nbsp;ஒதுக்கீடு</h2><p>
</p><p>மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு காலடி எடுத்து வைக்கும் பொழுது, நடப்பு அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக நான் வருகைத்தந்திருந்தேன். </p><p>இன்று பல பேரையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. 

அதே நேரத்திலே, நான் இந்த இடத்தில் பழைய மன்னார் உப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியின் ஒரு புகைப்படத்தை பார்த்தேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/145a2ea6-8e91-4283-bb45-6eb2f5f01c1b/26-6a911f29965fa.webp' /></p><p>இதனையடுத்து இந்த உப்பளத்தின் 4,000 ஏக்கர் நிலப்பரப்பையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தேவைப்பாடு எங்களுக்கு இருந்தது. 

இதற்காக நாங்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாவை திரைசேரியிலிருந்து ஒதுக்கீடு செய்து இந்தக் கட்டிடத்தொகுதியை நாம் அமைத்திருக்கிறோம்.</p><p>
இந்த உப்பு நிறுவனத்திற்காக நாம் ஒதுக்கிய இந்தப் பணம், உங்களது வியர்வையினால் பெறப்பட்ட பணமாகும். அதாவது, நீங்கள் உற்பத்தி செய்த உப்பினை விற்று பெற்ற இலாபத்தினால் திரைசேரிக்கு வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.</p><h2>தேசிய உப்பு உற்பத்தி</h2><p> </p><p>

ஆகவே, இது உங்களுடைய சொத்து.உங்களது உழைப்பினால் இந்தப் பணம் சம்பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் சந்தோஷத்துடன் தெரிவிக்க வேண்டும்.
</p><p>
அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தெரியும், உப்பு இல்லாமல் உணவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் உப்பு அத்தியாவசியமான ஒரு பொருள். ஆனால், எல்லோராலும் இந்த உப்பு உற்பத்தி செய்ய முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c963eb4-ea81-4f9c-97a1-105bb7475178/26-6a911f2a865d2.webp' /></p><p>உப்பு உற்பத்தி செய்வதற்கு ஒரு காலம் தேவை. அதே நேரத்தில், சிறந்த சூரிய ஒளி, கடல் நீர் மற்றும் நல்ல காற்று கிடைக்கப் பெற வேண்டும். இதன் ஊடாகவே தூய்மையான உப்பை உற்பத்தி செய்ய முடியும்.
</p><p>
உங்களுக்குத் தெரியும், 788 மில்லியன் ரூபாய் நாங்கள் இந்த உப்பு உற்பத்திக்கு முதலீடு செய்து, அதில் 2 கோடியே 58 மில்லியன் ரூபாய்கள் எங்களுக்கு வருமானமாகக் கிடைக்க பெற்றிருக்கின்றது.
</p><p>
அதே நேரத்தில், இந்த தேசிய உப்பு உற்பத்தியில் 100க்கு 30 சதவீதமான உப்பு மன்னார் உப்பளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் இந்த இடத்திலே ஞாபகமூட்டல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது! பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-jayasinghe-explanation-regard-government-1787895821"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-jayasinghe-explanation-regard-government-1787895821</id>
            <summary type="text">அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு
எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த
ஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு
எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த
ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து
தெரிவிப்பதற்கு ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது
என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மஹரகம பகுதியில் நேற்று (27.08.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>அரசமைப்பின் 22ஆவது திருத்தம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில்
தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். இந்தத் திருத்தம் நாட்டுக்கும்
நாட்டு மக்களுக்கும் முற்றிலும் சாதகமானதே தவிர எவ்விதத்திலும் பாதகமானதல்ல.
</p><p>
எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள்,
பலர் பிணையில் உள்ளவர்களுமாவர். கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான
விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதனாலேயே இவர்கள்
கலக்கமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c551454-1735-4071-9c35-5ef04227d07f/26-6a91249d1243c.webp' /></p><p> ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட
பிரச்சினையே தவிர, அது மக்களின் பிரச்சினையல்ல என்றார்.</p><h2>நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை</h2><p>

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்சக்களின்
காலத்தில் தான் முழுமையாக இல்லாமல் போனது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்கவை அவர்கள் முறையற்ற வகையிலேயே பதவி நீக்கம் செய்தனர். </p><p>அதற்காக
அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் பிரதி
அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:03:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா. மனித உரிமை பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-the-semmani-issue-at-the-human-rights-council-1787896255"></link>
            <id>https://tamilwin.com/article/un-the-semmani-issue-at-the-human-rights-council-1787896255</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி
செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய
நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி
செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்க
வேண்டும் என்று அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு
அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை
விடுத்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,


</p><h2>செம்மணியில் தடயவியல் அகழ்வாய்வுகள்</h2><p>
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு அவுஸ்திரேலிய ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான
தருணம் இது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6272753d-362d-4772-b12f-422e828fb522/26-6a9123efafd85.webp' /></p><p>
</p><p>"இலங்கையில் யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் தடயவியல் அகழ்வாய்வுகளில் 500
இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில
எலும்புக்கூடுகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது, அவை குழந்தைகள் மற்றும்
சிறுவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.</p><p>

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின்படி இலங்கையில் நாடளாவிய ரீதியில்
சுமார் 20 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவற்றுள்
குறைந்தபட்சம் ஒரு புதைகுழி தொடர்பில் கூட முழுமையான விசாரணைகள்
நடத்தப்படவில்லை.</p><h2>சர்வதேச மன்னிப்புச்சபை ஆதரவு</h2><p>
</p><p>
மேலும், 1998ஆம் ஆண்டு முதன்முறையாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச
ஆதரவுடனான சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து செம்மணி விவகாரம்
ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b62a5ded-8532-4030-94d1-ed7af539628a/26-6a9123f061a0b.webp' /></p><p>
</p><p>
அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தடயவியல் நிபுணர்களின் பங்கேற்புடன்
சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்
தொடரில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை
உறுதிப்படுத்த ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்திருந்தது.
</p><p>அந்த வாக்குறுதியை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கமைய, செம்மணி
தளத்தைப் பாதுகாத்தல், மனித எச்சங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுயாதீன
விசாரணைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுதல் போன்ற
நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று டேவிட்
ஷுபிரிட்ஜ் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் குறைந்த ஊதியம் பெறும் நாடுகளில் இலங்கை பெற்றுள்ள இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sl-ranks-120th-among-130-countries-1787894581"></link>
            <id>https://tamilwin.com/article/sl-ranks-120th-among-130-countries-1787894581</id>
            <summary type="text"> உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டில், கணக்கெடுக்கப்பட்ட 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளது

வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p> உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டில், கணக்கெடுக்கப்பட்ட 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளது
</p><p>
வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு திறனைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்பட்ட இந்தத் தரவு அடிப்படையில், இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 200 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது</h2><p>சுவிட்சர்லாந்து (3,804 டொலர்), ஜெர்மனி (2,928 டொலர்), ஐக்கிய இராச்சியம் (2,902 டொலர்) மற்றும் நெதர்லாந்து (2,876 டொலர்) ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும் உள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bace784-b396-489c-a0ce-eb78a7ecfc1d/26-6a9123d97afb9.webp' /></p><p>
ஆசியாவில் தென் கொரியா (2,362 டொலர்) 11ஆவது இடத்தையும், ஜப்பான் (1,839 டொலர்) 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
</p><p>
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் (68 வது இடம் - 570 டொலர்), நேபாளம் (78 வது இடம் - 490 டொலர்), பங்களாதேஷ் (89 வது இடம் - 379 டொலர்) மற்றும் இந்தியா (111 வது இடம் - 233 டொலர்) ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.</p><p>

இலங்கைக்குக் கீழே நைஜர், பூட்டான், கானா போன்ற வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்ளன.

இந்த மதிப்பீடுகள் நேரடி அமெரிக்க டொலர் வருமானத்தின் அடிப்படையில் அல்லாமல், அந்தந்த நாடுகளின் உள்நாட்டு கொள்வனவு திறனின் அடிப்படையில் (வரி மற்றும் பிற கொடுப்பனவுகள் இல்லாமல்) கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை இடம்பெறுவது தொடர்பாக பருத்தித்துறை சாலை முகாமை விளக்கம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pedro-road-camp-explains-bus-service-1787893795"></link>
            <id>https://tamilwin.com/article/pedro-road-camp-explains-bus-service-1787893795</id>
            <summary type="text">கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து
பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான
விளக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து
பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான
விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் வழங்கியுள்ளனர்.&nbsp;</p><p> கடந்த 24/08/2026 திங்கட்கிழமை 15 நிமிடங்கள் இலங்கை
போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக
பருத்தித்துறைக்கு தனது முதலாவது சேவையை 15 நிமிடங்கள் முன்னதாக
மேற்கொண்ருந்தது.</p><h2>மிகுந்த சிரமம்</h2><p> இதனால் வழமையாக செல்கின்ற உத்தியோகத்தர்கள், வடமராட்சி
கிழக்கின் பல கிராமங்களிலிருந்தும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்காக அம்பன்
அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பருத்தித்துறை நகரின் பல
பாடசாலைகளில் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் பேருந்தை தவற விட்டிருந்த
நிலையில் மிக மிக சிரமங்களுக்கு மத்தியில் அவசர அவசரமாக உரிய நேரத்திற்கு
வாகனங்களிலும், நடந்தும் சென்றிருந்தார்கள். </p><p> </p><p>இது
தொடர்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எம்மை தொடர்பு கொண்டு விளக்கம்
ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3691b3c1-ccaf-4ed3-b79d-9ab55a6b0564/26-6a911de61bcd5.webp' /></p><p> </p><p>விளக்கத்தில் மேலும், எமது முதலாவது பேருந்து சேவை கேவிலிலிருந்து மருதங்கேணியூடாக 5:45 மணிக்கு
புறப்படுவது வழமை. ஆனால் தனியார் போக்குவரத்து சேவையினர் தங்களது
சேவையினை குழப்பும் வகையில் அன்றைய தினத்ததிலிருந்து 5:45 மணிக்கு கேவிலிலிருந்து சேவையை ஆரம்பிக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை
அனுமதியளித்திருந்தார்.</p><h2>குழப்பும் செயற்பாடு</h2><p> இதனால் நாம் அன்றிலிருந்து காலை 5:30 மணிக்கு
சேவையை ஆரம்பித்திருந்தோம். ஆனால் அத்தனையும் குழப்பம் வகையில் தனியார்
போக்குவரத்து சங்கம் நாங்கள் புறப்பட தயாரான நேரமான 5:30 மணிக்கு
புறப்பட்டனர். </p><p>இதனால் தான் குறித்த நாள் பரீட்சை எழுத செல்லவிருந்த
மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டதாகவும், இந்த நிலைமைக்கு வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபை தான் காரணம் என்றும் பருத்தித்துறை இலங்கை
போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச மாநாட்டுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oppose-international-disappear-persons-conference-1787891806"></link>
            <id>https://tamilwin.com/article/oppose-international-disappear-persons-conference-1787891806</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளமையை நாங்கள் அறிவோம் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளமையை நாங்கள் அறிவோம் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார். </p><p>


மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (27.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>போராட்டத்திற்கு எதிராக செயற்படும் சக்திகள்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும்.
அன்றைய தினத்தில் வடக்குக் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமானது
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடொன்றை
நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
</p><p>
அன்றைய காலத்தில் பொறுப்பு வாய்ந்த முப்படைகளினுடைய கைகளில் ஒப்படைக்கப்பட்ட அப்பாவி மக்கள் உட்பட சிறுகுழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் என பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd35f929-e6ae-42bb-8f90-6ff61d4fdc21/26-6a91138083d8b.webp' /></p><p>இந்த சம்பவத்தினை அடுத்து உலகத்திலேயே இரண்டாவதாக அதிகமான மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்ட
நாடு என்ற பட்டியலை இலங்கை பெற்றிருக்கின்றது. எம்மை பொறுத்தவரையில் இது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும்.</p><p>

இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டத்தின் முன்னேற்றத்தையும் வலுவையும் குறைப்பதற்காக சில சக்திகள் மற்றுமொரு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை தொடர்பில் நாம் அறிவோம்.</p><h2>அரசாங்கத்தின் செயற்பாடு</h2><p>
</p><p>
எனவே அவைகள் தவிர்க்கப்பட
வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே இடத்தில்
தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b245b5-d2c0-45f6-8a8e-ce1bd811ed00/26-6a9113816e0fe.webp' /></p><p>

கடந்த 25ஆம் திகதி காணாமல் போனோர் அலுவலகம்
யாழ். மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தது. 

அந்த
கலந்துரையாடலின் போது உள்ளக பொறிமுறைக்குள் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக
இழப்பீடு வழங்குதல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதலை வழங்குவது
தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. </p><p>

இதன்போது அதிகமான நபர்கள் வாகனங்கள் மூலமாக அந்த இடத்திற்கு அழைத்து
வரப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அரசாங்கம் இந்தப் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று கங்கணம்
கட்டிக்கொண்டு திரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:19:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்லக்கதிர்காமர் ஆலயத்தின் சித்திரத் தேர்த்திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chithiratheer-festival-of-sellakathiragamam-temple-1787892589"></link>
            <id>https://tamilwin.com/article/chithiratheer-festival-of-sellakathiragamam-temple-1787892589</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு
ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயத்தின் சித்திரத்தேர்த்திருவிழா நேற்று(27....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு
ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயத்தின் சித்திரத்தேர்த்திருவிழா நேற்று(27.08.2026) ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.
</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலயமானது
கதிர்காமத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக ஆலய வரலாறுகள்
கூறுகின்றன.
</p><h2>தீர்த்த உற்சவம்</h2><p>இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது தமிழர்களின் வழிவந்த மரபில்
நடத்தப்பட்டு வருகின்றது.</p><p>
கடந்த 19ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் சிறப்பாக
ஆரம்பமானது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc81e65e-b4e7-46ed-a228-beeeb6a5ef11/26-6a911941db2d3.webp' /></p><p>பத்து தினங்கள் நடைபெற்றுவரும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சத்தில் தினமும்
சுவாமி உள் வீதியுலா, வெளி வீதியுலா நடைபெற்றுவருவதுடன் தம்ப பூஜை கொடித்தம்ப
பூஜை என்பன நடைபெற்று வருகின்றது.
</p><p>ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் அரோகரா ஓசையுடன் அடியார்கள்
தேரினை இழுத்துவந்த காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
</p><p>தேர் உற்சவத்தினை தொடர்ந்து பச்சைத்திருவிழா நடைபெற்றதுடன் சுவாமிக்கு பச்சை
நீர் இறைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பிராயச்சித்த அபிஷேகம்
நடைபெற்றது.</p><p>இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பெருமளவான அடியார்கள்
கலந்துகொண்டனர்.
இன்று ஆலயத்தின் தீர்த்த உற்சவம் குருக்கள்மடம் சமுத்திரத்தில்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் நண்பனால் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-who-was-attacked-by-her-husband-s-friend-1787888197"></link>
            <id>https://tamilwin.com/article/woman-who-was-attacked-by-her-husband-s-friend-1787888197</id>
            <summary type="text">தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்ப பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்ப பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த பெண் நேற்றைய தினம் (27.08.2026) உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2> கணவரின் நண்பனால் தாக்கப்பட்டப் பெண்</h2><p>
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய்
பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>இந்த பெண் கடந்த 23ஆம் திகதி தனது கணகனின் நண்பனினால் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f36941ae-d33c-4e07-bec5-c61b3b961ef7/26-6a91086903277.webp' /></p><p>சம்பவம் இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.எல்.முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.</p><p>இதன்போது உயிரிழந்த பெண் தனது கணவரின் நண்பனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது குறித்த நபரினால் கூரிய
ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>இதனையடுத்து சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டவளை பொலிஸாரின் துரித நடவடிக்கை! காப்பாற்றப்பட்டது இரு மாணவர்களின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-students-saved-from-electrocution-1787891451"></link>
            <id>https://tamilwin.com/article/two-students-saved-from-electrocution-1787891451</id>
            <summary type="text">வட்டவளை - குயில்வத்தை பகுதியில் மரம் ஒன்றில் உலர்ந்த
விறகுகளை வெட்டுவதற்காக சென்றிருந்த இரு மாணவர்கள் உயர் மின்னழுத்த
மின்சார தாக்குதலுக்கு உள்ளான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை - குயில்வத்தை பகுதியில் மரம் ஒன்றில் உலர்ந்த
விறகுகளை வெட்டுவதற்காக சென்றிருந்த இரு மாணவர்கள் உயர் மின்னழுத்த
மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரித
தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா
வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 12 மற்றும் 13
வயதுடைய இரு மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த மாணவர்கள் தமது வீட்டிற்கு மேற்புறத்தில் அமைந்துள்ள புதர்காடு
பகுதியில் இருந்த மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காக ஏறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed09d84e-ca84-496d-be8c-f099a9650493/26-6a9116b5727fd.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அந்த மரத்திற்கு மேலாகச் சென்றிருந்த உயர் மின்னழுத்த மின்சார
கம்பிகள் மரத்துடன் உரசிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>திடீர் மின் தாக்குதல்</h2><p>
</p><p>
இதன் காரணமாக மரம் முழுவதும் மின்சாரம் கசிந்த நிலையில், மரத்தின் மீது இருந்த
இரு மாணவர்களுக்கும் திடீரென மின்சார தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக
சம்பவ இடத்திற்கு சென்று, மின்சார தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை பாதுகாப்பாக
மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
பின்னர் இரு மாணவர்களும் உடனடியாக வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4115f9-3fe8-4259-a1d3-32825d188a54/26-6a9116b634e82.webp' /></p><p>
</p><p>
பொலிஸாரின் துரிதமான தலையீட்டினால் மாணவர்கள் இருவரும் சரியான நேரத்தில்
மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதால், அவர்களின் உயிரை
காப்பாற்ற முடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையடக்க தொலைபேசி வெடித்து 19 வயது இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787891672"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787891672</id>
            <summary type="text">மட்டக்களப்பு -&amp;nbsp; கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசி&amp;nbsp;வெடித்ததில்&amp;nbsp;19 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு -&nbsp; கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசி&nbsp;வெடித்ததில்&nbsp;19 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27( மாலை
6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
கல்குடா,கருங்காலிச்சோலை வீதியைச்சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன்
என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
குறித்த இளைஞன் நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற
நிலையில், கையடக்க தொலைபேசியை மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கையடக்க தொலைபேசியை நெஞ்சில் பகுதியில் வைத்து உறங்கியுள்ளார். இதன்போது&nbsp;கையடக்க தொலைபேசி&nbsp;சூடாகி வெடித்து தீப்பற்றியெரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da2ff5b9-336b-4b24-891b-e30023b95894/26-6a91150973c2b.webp' />&nbsp;</p><p>
</p><p>இதன் காரணமாக படுகாயமடைந்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது அவர் ஏற்கனவே
உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக அதிஉயர் பாதுகாப்பு சிறைக்கு இடமாற்றப்பட்டுள்ள பாதாள உலகக்குழுவின் முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kehalpatara-padme-shifted-to-bhusa-prison-1787888735"></link>
            <id>https://tamilwin.com/article/kehalpatara-padme-shifted-to-bhusa-prison-1787888735</id>
            <summary type="text">பாதாள உலகக்குழுவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக்குழுவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, சர்வதேச நடவடிக்கையை தொடர்ந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><h2>பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்</h2><p>

இந்நிலையில், அவரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f88e4a-e438-4047-977c-7cecfeae44a8/26-6a910d96b4d32.webp' />&nbsp;&nbsp;</p><p>

இதன்போது, சந்தேகநபரின் எதிர்தரப்பினர் வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை வேறு சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு சந்தேகநபர் சார்பில் முன்னியான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.</p><p>

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.</p><p>

இதற்கமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/osqwaZHEm-c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:44:51+00:00</updated>
        </entry>
    </feed>
