<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-19T15:45:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மக்கள் - கிளிநொச்சியில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19.08.2026) வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
விஸ்வமடு சந்தியில் இருந்து பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியின் சுமார் இரண்டு கிலோமீட்டர் பகுதி ஏற்கனவே புனரமைக்கப்பட்டு காபெட் வீதியாக காணப்படுகிறது. எனினும், எஞ்சியுள்ள சுமார் மூன்று கிலோமீட்டர் வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
16 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி</h2><p>

குறித்த வீதி புனரமைக்கப்படாத பிரச்சினை சுமார் 16 வருடங்களுக்கும் மேலாக தொடர்வதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் நாளாந்த போக்குவரத்து நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ee1d30-153e-4e75-a419-d9af8395f441/26-6a85cdc667f4a.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதிலும், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இந்த வீதியின் மோசமான நிலை பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறு பிரதான வீதியின் எஞ்சிய பகுதியையும் விரைவாக புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a21d2f-aedf-4e6d-8827-bac728475daf/26-6a85cdc76f039.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் 6 பில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegations-of-6-billion-rupees-fraud-goverment-1787152842"></link>
            <id>https://tamilwin.com/article/allegations-of-6-billion-rupees-fraud-goverment-1787152842</id>
            <summary type="text">தேசிய மக்கள் கட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காலி, போப் போத்தல பிரதேச சபையைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, மயானக் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் கட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காலி, போப் போத்தல பிரதேச சபையைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, மயானக் கட்டுமானத்தில் முறைகேடுகள் மற்றும் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>



மயான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள மோசடி</h2><p>
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,</p><p>


மயானக் கட்டுமானங்கள் திட்டம் கொள்முதல் நடைமுறையின்படியும், முறையான ஒப்புதல் இல்லாமலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f6b107-b743-494f-a8b6-7fbc35a40cb3/26-6a85ca1f84f65.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப ஒப்பந்தத் தொகை சுமார் ரூ. 3.5 மில்லியனாக இருந்தபோதிலும், ரூ. 6 பில்லியனுக்கும் அதிகமான புதிய மதிப்பீடு சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது பொதுமக்களின் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்பதால், கொள்முதல் நடைமுறையும் முறையான ஒப்புதலும் புறக்கணிக்கப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி ஒருவரின் இரட்டை வேடம் அம்பலம்: மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778"></link>
            <id>https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778</id>
            <summary type="text">கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார். </p><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விகாராதிபதி போட்ட இரட்டை வேடம்</h2><p>சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 
தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb84cbb-d298-47cf-8a06-5c19944c3a63/26-6a857fa964808.webp' /></p><p>அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.</p><h2>நான்கு இலட்சம் ரூபா</h2><p>
</p><p>மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.</p><p>பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f939cb-0b09-4af8-a318-2a1feaf9251d/26-6a857faa1a28f.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார். </p><p>இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O8f4RVu6rWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T14:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fundamental-responsibility-constitution-democrati-1787148950"></link>
            <id>https://tamilwin.com/article/fundamental-responsibility-constitution-democrati-1787148950</id>
            <summary type="text">இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அரச
நிறுவனங்களினதும் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் நியமனங்களில் அனைத்து
சமூகங்களினதும் நியாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அரச
நிறுவனங்களினதும் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் நியமனங்களில் அனைத்து
சமூகங்களினதும் நியாயமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டியது
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் அடிப்படைப் பொறுப்பாகும்.</p><p>

இருப்பினும், அண்மையில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்
சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நியமிக்கப்படாமை மிகுந்த கவலையையும்
அதிர்ச்சியையும் அளிக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;விகிதாசார அடிப்படை</h2><p>
</p><p>ஊடகங்களுக்கு இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>


கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள் இவ்வாறான
ஆணைக்குழுக்களை நியமிக்கும் போது, நாட்டின் மூவின சமூகங்களினதும்
பிரதிநிதித்துவத்தை விகிதாசார அடிப்படையில் பேணி வந்த வரலாறு இங்கு
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b047430-9ab3-4c58-ab1e-b0f0b89d6e77/26-6a85bbf6b73c8.webp' /></p><p>

"இன, மத பாகுபாடற்ற ஆட்சி மாற்றம்", "வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற
முழக்கங்களுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், எல்லை நிர்ணய ஆணைக்குழு
நியமனத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டமை குறித்து வினவியபோது
வழங்கிய விளக்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p> "துறை சார்ந்த
தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களே நியமிக்கப்பட வேண்டும்; அதற்கான தகுதி
தராதரங்கள் புள்ளி அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு முறையான வழிமுறையிலேயே
நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் தரப்பில் கூறப்படும் பதிலானது,
மறைமுகமாக "முஸ்லிம் சமூகத்தில் இப்பதவிக்குத் தகுதியானவர்கள் இல்லை" என்று
சொல்வது போல் அமைந்துள்ளது.</p><h2>சிறுபான்மைச் சமூகம்</h2><p>

அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான
நியமனங்களுக்கும் — அனைத்து மட்டங்களிலும் "தகுதி" மற்றும் "துறை சார்
தொழில்நுட்ப அறிவு" என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு
வருவது நியாயமான ஒன்றா? அரச உயர் பதவிகளுக்கும் தொழில்நுட்பக் குழுக்களுக்கும்
பங்களிப்பு செய்யக்கூடிய தகுதியும் ஆளுமையும் மிக்க பல புத்திஜீவிகளும்
நிபுணர்களும் முஸ்லிம் சமூகத்தில் அங்கம் வகிக்கும் சூழலில், இத்தகைய
நியாயங்கள் முன்வைக்கப்படுவது எமது பிரதிநிதித்துவ உரிமையை அப்பட்டமாக
மறுக்கும் செயலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a7960e-5879-46d8-b8dd-40be7145aa4a/26-6a85bbf60e9b4.webp' /></p><p>

பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும்
பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய அரசு, தகுதி என்ற காரணியைச் சாட்டாக
வைத்து எமது சமூகத்தைப் புறக்கணிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
</p><p>
இக்கட்டான இந்த வரலாற்றுச் சூழலில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சமூகச்
சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து, எமது சமூகத்தின் நியாயமான
பிரதிநிதித்துவ உரிமைகளை வென்றெடுக்கச் சாதுரியமாகவும் தீவிரமாகவும்
சிந்தித்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-19T14:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/food-prices-up-25-due-to-el-nino-1787144284"></link>
            <id>https://tamilwin.com/article/food-prices-up-25-due-to-el-nino-1787144284</id>
            <summary type="text">உலகளாவிய விவசாயத் துறையை பாதித்துள்ள எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எதிர்வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய விவசாயத் துறையை பாதித்துள்ள எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள், அத்துடன் முக்கிய உணவு உற்பத்தி நாடுகள் தமது உள்நாட்டு நுகர்வை உறுதி செய்வதற்காக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.</p><h2>ஏற்றுமதிக்கு தடை&nbsp;</h2><p>
</p><p>
தற்போது இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், இதன் காரணமாக பிரேசில் போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> இதனால் போக்குவரத்து செலவும், இறக்குமதிக்கான கால அவகாசமும் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd03e1d-bd0a-43ca-bafa-a0de74697b57/26-6a85b6a64e302.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.
</p><p>
இந்தியாவும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வருவதாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>உலகளாவிய நிலைமை&nbsp;</h2><p>

அவ்வாறான நிலை ஏற்பட்டால், நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும், அதன் காரணமாக அதிகரிக்கும் கடல் போக்குவரத்து கட்டணங்களால் விலைகள் மேலும் உயரக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13623a51-1b7b-4547-afda-7b2ac703bb56/26-6a85b6a581db4.webp' /></p><p> </p><p>ஏற்கனவே கடல் போக்குவரத்து கட்டணங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை பருப்பு, சர்க்கரை, கோதுமை, சில வகையான அரிசி மற்றும் டின் மீன் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வருவதால், இந்த உலகளாவிய நிலைமை இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பில் பரபரப்பு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-spread-false-inform-l-t-t-e-training-camp-1787109879"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-spread-false-inform-l-t-t-e-training-camp-1787109879</id>
            <summary type="text">புதிய இணைப்புசமூக வலைத்தளங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய நபரை, எதிர்வரும் செப்டம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சமூக வலைத்தளங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய நபரை, எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>மு<span style="color: inherit; font-size: 1.75rem;">தலாம் இணைப்பு</span></h2><p>சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.</p><p>

இந்த சந்தேக நபர் நேற்று (18.08.2026) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><h2>இன்று நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக, சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு மூலம் சரிபார்க்கப்படாத பொய்த் தகவலைப் பரப்பிய குற்றத்திற்காக இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d596dd-6c85-4b06-86d0-59e3afe82e59/26-6a85262a1b8ae.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பெல்லன்விலவில் உள்ள பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஆவார்.
</p><p>
இந்தச் சந்தேக நபர் இன்று(19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p><p>மேலும், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T13:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றுடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-of-chemmani-human-grave-completed-1787145783"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-of-chemmani-human-grave-completed-1787145783</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்று(19.08.2026)
புதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்று(19.08.2026)
புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது.
</p><p>
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட
அகழ்வு பணிக்காக 54 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும்
நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f977c2-d419-420a-b91f-f3b1700852e5/26-6a85aed4e28ad.webp' /></p><p>
</p><p>
இதன் அடிப்படையில், இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு
பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை
அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T13:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் ஆட்சியில் நடந்த மோசடி - குற்றத்தை ஒப்புக் கொண்ட முக்கிய அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-trump-adviser-pleads-guilty-1787142654"></link>
            <id>https://tamilwin.com/article/former-trump-adviser-pleads-guilty-1787142654</id>
            <summary type="text">அமெரிக்காவின் தொற்றா நோய் தொடர்பான மூத்த நிபுணரான அந்தோனி பௌசியின் முன்னாள்
ஆலோசகர் ஒருவர், கோவிட்-19 தொற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிதியுதவிகள் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தொற்றா நோய் தொடர்பான மூத்த நிபுணரான அந்தோனி பௌசியின் முன்னாள்
ஆலோசகர் ஒருவர், கோவிட்-19 தொற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிதியுதவிகள் மற்றும்
அது தொடர்பான அரசாங்கப் பகிரங்க ஆவணங்களை மறைப்பதற்குச் சதி செய்தார் என்ற
குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் அலர்ஜி மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் மூத்த
அதிகாரியாகப் பணியாற்றிய 78 வயதான டேவிட் மோரன்ஸ் என்பவரே, மேரிலாந்திலுள்ள
கூட்டாட்சி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஐந்து வருட சிறைத்தண்டனை</span></p><p>
பொதுத்தகவல் சட்டங்களின் கீழ் கோரப்படும் ஆவணங்களை வழங்குவதைத் தவிர்க்கும்
வகையில், அரசாங்க உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளுக்குப் பதிலாகத் தனது
தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறியதாக இவர்
மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdd417fc-ba25-4921-b0a6-9eedcdab90d1/26-6a85a5b626db2.webp' /></p><p>

இந்தச் சதித்திட்டக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிர்வரும் நவம்பர் மாதம்
தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்படவுள்ளதுடன், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T12:46:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் மாணவர்களிடம் தகாத செயல்: பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phi-who-was-involved-in-inappropriate-activities-1787142370"></link>
            <id>https://tamilwin.com/article/phi-who-was-involved-in-inappropriate-activities-1787142370</id>
            <summary type="text">கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப்
பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இந்த தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>சுகாதாரப் பரிசோதனை</h2><p>
சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல ரீதியாகவும் மன
ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20ற்கும் மேற்பட்ட மாணவர்களின்
பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைப் பாடசாலை
அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56333a3b-3d2b-4597-82fe-2bc27a0b0a17/26-6a85a52abeed8.webp' /></p><p>
</p><p>
முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றையதினம் (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக்
கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

அதேவேளை,
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச்சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம்
அளிப்பதற்காக உடனடியாகச் சமூகமளிக்குமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.</p><h2>உடனடி நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபையின் 1929 என்ற அவசர அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0773067a-4a57-40d6-9240-7bdee475f95a/26-6a85a529cdfac.webp' /></p><p>

அதனடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட அதிகார சபை, கல்முனைத் தலைமையகப்
பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்டச் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினருக்கு
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின்
வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த
களுவாராய்ச்சி தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி
திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச்சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T12:46:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வருடங்களாக இலங்கை மக்களை மகிழ்வித்த ஒட்டகசிவிங்கி உயிரிழப்பு - இறக்கும் தருவாயில் செய்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/giraffe-dies-in-dehiwala-1787141618"></link>
            <id>https://tamilwin.com/article/giraffe-dies-in-dehiwala-1787141618</id>
            <summary type="text">தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று(18.08.2026) இரவு உயிரிழந்ததாக இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்காக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று(18.08.2026) இரவு உயிரிழந்ததாக இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
</p><h2>
ஆயுட்காலத்தை தாண்டி வாழ்ந்த ஒட்டகசிவிங்கி</h2><p>
மேற்படி அறிக்கையில், </p><p>

இறக்கும் தருவாயில் அந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஏறக்குறைய முப்பது வயது இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
காடுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20-25 ஆண்டுகள் ஆகும், மேலும் நன்கு நிர்வகிக்கப்படும் விலங்கியல் பூங்கா சூழலில் அவை நீண்ட காலம் வாழக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dece6196-d2c8-432b-a717-7b6de3ea65ac/26-6a859ecf05e68.webp' /></p><p>

அதன்படி, இந்த ஒட்டகச்சிவிங்கி நீண்ட காலம் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இறப்பதற்கு முன்பு இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு எந்தவொரு சிறப்பு மருத்துவ நிலையும் இருந்ததாகத் தெரிவிக்கப்படவில்லை. </p><h2>

மரணத்திற்கான காரணம்</h2><p>
மேலும் விலங்கின் வயதாவதால் ஏற்பட்ட ஒரு இயற்கையான நிலையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பிரேத பரிசோதனைகள் இன்று(19) நடத்தப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f005228-99ff-4908-9d85-963ef8b9c54c/26-6a859ecfaf36e.webp' /></p><p>
</p><p>
விலங்கு நலன், மரபணுப் பன்மையை பேணுதல் மற்றும் விலங்குப் பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுடன் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் விலங்குப் பரிமாற்றத் திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS..</i></b></p><hr><p><b><i><br></i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8FJx6wmoAJU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:18:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த மாதம் பயணிகள் ட்ரோன் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-test-passenger-drone-pilot-september-1787139054"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-test-passenger-drone-pilot-september-1787139054</id>
            <summary type="text">பயணிகள் ட்ரோன் சேவையை அடுத்த மாதம் சோதனை செய்ய இலங்கை தயாராகி வருகின்றது என்றும், ஆறு மாதங்களுக்குள் வணிகச் செயல்பாடுகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகள் ட்ரோன் சேவையை அடுத்த மாதம் சோதனை செய்ய இலங்கை தயாராகி வருகின்றது என்றும், ஆறு மாதங்களுக்குள் வணிகச் செயல்பாடுகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
</p><p>
ஆரம்பத் திட்டத்தின்படி, பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீட்டர் வரையிலான தூரத்திற்கு இயக்கப்படும், அதே நேரத்தில் சுற்றுலாத் தலங்களை நோக்கிய இரண்டு பறக்கும் பாதைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
</p><h2>ஆறு மாதங்களுக்குள் இலங்கையில்</h2><p>
முன்னோடித் திட்டத்தின் முதல் கட்டம், கொழும்பிலிருந்து தென்கடற்கரை நோக்கிய வழித்தடங்களிலும், கட்டுநாயக்க மற்றும் துறைமுக நகரத்திற்கு இடையேயான வழித்தடங்களிலும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d28b0d-45cd-4804-8314-1cc3fa04f9ae/26-6a859bbe98ce4.webp' /></p><p>
செப்டெம்பர் மாதத்தில் இரண்டு விமானங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என்றும், முன்னோட்டத் திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் வழித்தடத் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் கொடிதுவக்கு தெரிவித்தார்.</p><p>சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் ஒரு வழிமுறையாக இந்த முன்னெடுப்பு ஆராயப்பட்டு வரும் நிலையில், அவசரகால மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் அத்துடன் கடல்சார் மற்றும் கடற்படைத் தேவைகளுக்கான சாத்தியமான பயன்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே தேவைப்படுகிறது என்பது அவற்றின் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும் என்று பிரதி அமைச்சர் கூறினார்.
</p><p>
ஆரம்பகட்ட சோதனைகளைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் வணிக ரீதியான பயணிகள் ட்ரோன் சேவையை நிறுவ அரசாங்கம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T12:09:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியிடம் இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது- பணத்தை தேடிச் சென்ற இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officers-arrested-bribe-from-prisoner-1787139735"></link>
            <id>https://tamilwin.com/article/police-officers-arrested-bribe-from-prisoner-1787139735</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக
ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக
ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ்
அதிகாரிகளுக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(19.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்ட
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன்
மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் (91775) ஹசன் மௌலானா அனுஹர் ஆகிய இரு பொலிஸ்
அதிகாரிகளுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைதியிடம் இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது</span></p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை
வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரைச் சாய்ந்தமருது பொலிஸார் கைது
செய்தனர்.

 குறித்த சந்தேகநபர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb17d287-040c-4992-b3d0-76e87454d3a2/26-6a85980214b04.webp' /></p><p>
</p><p>
இதன்போது, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகக்
கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் பிரகலதன், போதைப்பொருள் வழக்கு தொடர்பில்
நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை (B-Report) மூலம் உண்மைகளைத் தெரிவிக்காமல்,
முறையான குற்றப்பத்திரிகை (Charge Sheet) மூலமாக மட்டுமே வழக்கைத் தாக்கல்
செய்வதற்கு ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாகச் சந்தேகநபரிடம் ரூ. 20,000
இலஞ்சமாகக் கேட்டுள்ளார்.
</p><p>
இந்த தொகையைச் செலுத்தச் சந்தேகநபர் சம்மதித்ததுடன், ஆகஸ்ட் 17 ஆம் திகதி பணத்தை
வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
</p><h2>
கையும் களவுமாக சிக்கிய பணம்</h2><p>
பணத்தைப் பெற்றுக்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பொலிஸ் பரிசோதகர்
பிரகலதன் பெரியநிலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகப் பணி
நிமித்தம் சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0545309f-d845-4c3d-9fff-10f010ec93cc/26-6a859802c6872.webp' /></p><p> </p><p>இதனால், அவரது அறிவுறுத்தலின் பேரில் பணத்தைப்
பெற்றுக்கொள்வதற்காகப் பொலிஸ் கொன்ஸ்டபிள் அனுஹார் அனுப்பப்பட்டார்.</p><p>

அப்போது அங்குத் தயாராக இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பணத்தைப்
பெற்றுக் கொண்ட கொன்ஸ்டபிளைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவரிடம்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகரும் கைது
செய்யப்பட்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட இவ்விரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இருவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T11:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787137409"></link>
            <id>https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787137409</id>
            <summary type="text">சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலவும் அதிக வெப்பமான வானிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

இது குறித்த அறிவிப்பில் மேலும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும்.</p><p>

சிறுவர்கள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8a236d-d1ab-49cc-894d-00c22844be9f/26-6a8596328dc1f.webp' /></p><h2>தவிர்க்க வேண்டிய விடயம்</h2><p> </p><p>

எனவே, பொதுமக்கள் குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், போதுமான அளவு நீர் அருந்துமாறும், இளநிற ஆடைகளை அணியுமாறும் சுகாதார அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T11:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வேகமாக பரவும் டெங்கு - குழந்தைகளுடன் மருத்துவமனை வருவோருக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instructions-issued-to-mothers-dengue-testing-1787132301"></link>
            <id>https://tamilwin.com/article/instructions-issued-to-mothers-dengue-testing-1787132301</id>
            <summary type="text">இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, இலங்கையின் மிகப்பெரிய இலவசக் குழந்தைகள் மருத்துவமனைக்கு (லேடி ரிட்ஜ்வே)குழந்தைகளுடன் வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, இலங்கையின் மிகப்பெரிய இலவசக் குழந்தைகள் மருத்துவமனைக்கு (லேடி ரிட்ஜ்வே)குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அதிகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தற்போது நிலவும் அசாதார நிலையை கருத்திற் கொண்டு தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><h2>மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுறுத்தல்</h2><p>
இதற்கமைய, தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும்போது, ​​பின்வரும் ஆவணங்களை உடன் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55d7357b-b81e-404c-b85e-bffc4ec9f4bf/26-6a8592d6d8351.webp' /></p><p> </p><ul><li>

தனிநபர் சுகாதார எண் (PHN) </li><li>

பார்கோடு அட்டை குழந்தையின் உடல்நலம் மற்றும் வளர்ச்சி குறிப்பேடு</li><li>

 எடை பதிவு புத்தகம் </li><li>மருந்து

 உணவு ஒவ்வாமை விவரங்கள் மருத்துவக் குறிப்பேடுகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் அட்டைகள்</li><li>


 நோய் கண்டறிதல் அட்டைகள்</li></ul><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Jd_ZhSEnn88" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி - நெருங்கிய நண்பரை காப்பாற்ற அறிக்கையை மறைத்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-major-fraud-in-the-customs-department-1787136436"></link>
            <id>https://tamilwin.com/article/another-major-fraud-in-the-customs-department-1787136436</id>
            <summary type="text">இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக நாடாளுமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
சுங்கத் திணைக்களத்தின் Red Channel ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 40 அடி கொள்கலன் ஒன்றை சோதனையிட்டபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.</p><h2>பெரிய மோசடி</h2><p>வாகன உதிரிப் பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகன இருக்கைகள் அடங்கியிருந்த அந்தக் கொள்கலனை முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் சோதனையிட்டு, எந்தவித பிரச்சினையும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்திருந்தன. </p><p>எனினும், சுங்கத் திணைக்களத்தின் மத்திய விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மூன்றாவது சோதனையின்போது 85 வகையான பொருட்கள் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9c80fc-1aa7-412e-b06c-6e200c0c972c/26-6a858fc10c1c9.webp' /></p><p>
</p><p>
அவற்றில் 45 வகையான பொருட்கள் சுங்கத் திணைக்களத்திடம் அறிவிக்கப்படாதவை எனவும், அவற்றின் கீழ் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 355 பொருட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

மேலும், இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாத 122 வாகன இருக்கைகளும், ரிம்களுடன் கூடிய 18 டயர்களும் அந்தக் கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><h2>ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்&nbsp;</h2><p>
</p><p>இந்த மோசடியில் தொடர்புடையவர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரி ஒருவர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் உயர் பதவியொன்றை வகிக்கும் ஜனாதிபதியின் நெருங்கிய நபர் எனவும் டி.வி. சானக குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36fd93be-d1ec-445d-afa7-a8ebd1961ba5/26-6a858fc0301cf.webp' /></p><p>

இது தொடர்பான புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், தனது நெருங்கிய நபரைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
</p><p>
இந்த ஊழல் தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும், நீதித்துறைக்கு கூட அழுத்தம் கொடுத்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.</p><p></p><p><br><br><b><i>You may Like this..</i></b></p><hr><p><b><i><br></i></b></p><hr><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MXXKGsRYzyI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T11:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் நான்கு சிறைச்சாலைகளை கட்டுக்குள் கொண்டு வந்த நீதி அமைச்சர் - களத்தில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-frequent-prison-clashes-1787137879"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-frequent-prison-clashes-1787137879</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிகழும் அசாதார நிலை குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கைதிகளின் நலனை உறுதிச் செய்யும் விதமாகவும் நீதி மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிகழும் அசாதார நிலை குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கைதிகளின் நலனை உறுதிச் செய்யும் விதமாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளார்.</p><p>

இந்த நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
சிறைச்சாலை மோதல்களை குறைக்கத் திட்டம்</h2><p>
இதற்கமைய, களுத்துறை சிறைச்சாலைக்கு சென்ற ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களுக்கு உரையாற்றுகையில்,
</p><p>
அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதையும் கைதிகளின் நலனை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, தீவில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு அமைப்பு நிறுவப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2c91b40-ae6d-4d4e-bcbe-ecaddbdb1ffc/26-6a858fdc2a394.webp' /></p><h2>


புதிய அமைப்பு</h2><p>
அரச அதிகாரிகளால் கூட்டாக நிறுவப்படும் இந்தக் கூட்டு அமைப்பு, பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மாதத்திற்கு ஒரு முறையாவது கூட வேண்டும்.
</p><p>
தீவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கூட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று களுத்துறை, காலி, புஸ்ஸா மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளை மையமாகக் கொண்டு பிராந்திய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்புடன் கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்றார்.
</p><p>
இந்த நடவடிக்கையில், களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE&nbsp; THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SIy1rIgwChI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-19T11:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/06-suspects-arrested-attempting-to-bribe-police-1787135224"></link>
            <id>https://tamilwin.com/article/06-suspects-arrested-attempting-to-bribe-police-1787135224</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில்
காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில்
காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>சந்தேக நபர்களான&nbsp;டிப்பர் வாகன சாரதிகள் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத மணலை கொண்டு செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை&nbsp;முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4cb9f8-ac54-417e-8fd1-86951a52550f/26-6a8589e9b37df.webp' /></p><p>இந்நிலையில் அவர்களின் ஐந்து
டிப்பர் வாகனங்களும் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறுபேரையும் இன்றைய தினம் நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9de3e2d-b2a1-43a7-885d-477a97222f3c/26-6a8589ea91104.webp' /></p><p> </p><p>குறித்த
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:56:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி விடுவிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/defense-ministry-statement-1787132008"></link>
            <id>https://tamilwin.com/article/defense-ministry-statement-1787132008</id>
            <summary type="text">கிளிநொச்சி - ஏ9 வீதி, காக்கா கடைச் சநதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும், கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - ஏ9 வீதி, காக்கா கடைச் சநதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும், கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர்
எழுதியிருந்தனர்.
</p><p>
இக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில்
கோரியிருந்தது.</p><h2>காணியையும் கட்டடத்தையும் பயன்படுத்தும் இராணுவத்தினர்</h2><p>அதற்கமைவாக பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி செயலகத்திற்கு
வழங்கிய பதிலில்

பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த காணியையும், கட்டடத்தையும்
விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிக்கையளித்துள்ளதாக
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P.
வீரசிங்க கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb0f73f-48c0-48dd-9011-8ed03b5f68d6/26-6a858c0e981d9.webp' /></p><p>

2009இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும்
கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். </p><p>இந்த
காணிக்கு ஒரு புறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு
விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும்
விடுவிக்கப்பட்ட நிலையில் ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரம் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாஸா எரிப்பு விவகாரம்: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராயக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-bodies-during-the-covid-19-period-included-1787134128"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-bodies-during-the-covid-19-period-included-1787134128</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>கோவிட் தொற்று காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மனித உரிமை மீறல்</h2><p>

இந்நிலையில், குறித்த பிரேரணையை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி, 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baac3fa2-7d2d-4644-81a4-f2841a118fac/26-6a85891038f22.webp' /></p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து இந்தக் கோரிக்கை கடிதத்தைக் கையளித்தனர்.
</p><p>
முன்னாள் அரசாங்கத்தின் காலத்தில், சுகாதார வழிகாட்டல்களை மீறியும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனை மனித உரிமை மீறலாகவும் அநீதியாகவும் சுட்டிக்காட்டியுள்ள கோரிக்கை கடிதம், இந்த விவகாரம் தொடர்பில் முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:44:42+00:00</updated>
        </entry>
    </feed>
