<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T14:45:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

இந்த துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இந்த துப்பாக்கிச்சூடு தற்போது பிரான்ஸில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான குடு அஞ்சு என்பவரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அண்மையில் குடு அஞ்சுவின் நெருங்கிய நபர் ஒருவர் இரத்மலானை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h2><b>

துப்பாக்கி சூடு</b></h2><p>இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b6613f-9ec6-4ce8-b1f0-a5db6fe45ba7/26-6a79e3a216e66.webp' /></p><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து பிற்பகல் 1.30 மணியளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர். </p><p> 

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விதம் அருகிலுள்ள கட்டடமொன்றின் சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T14:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச -சரித் அபேசிங்க ஆகியொருக்கிடைலான நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் &#039;ஹரக் கட்டா&#039; என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
</p><p> 2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005-இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு</h2><p>அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர்&nbsp; காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில்&nbsp; இருக்கின்றன. </p><p>அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார். </p><p>அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439c6cae-2804-485a-a932-5363c9d24a0a/26-6a79d2a977344.webp' /></p><p>இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர். </p><p>நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. </p><p>அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன்.
நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். </p><p>எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477d1bdc-e96c-493c-8ea5-b798600afc49/26-6a79d2aa28255.webp' /></p><p>2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.</p><p>நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான். </p><p>நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T13:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுப்பு; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisons-department-information-1786366668"></link>
            <id>https://tamilwin.com/article/prisons-department-information-1786366668</id>
            <summary type="text">தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.நீதிமன்றத்தினால் உத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>விரிவாக கலந்துரையாடப்பட்ட விடயம்</h2><p>
நாட்டில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87349493-72c0-49f8-a45f-e4e4626573a8/26-6a79d31820c03.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
</p><p>போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள்</h2><p> </p><p>இதற்குத் தேவையான அதிகாரிகளைச் சேவையில் இணைத்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1890ca-495a-438f-947e-e5940b503f4f/26-6a79d318cb977.webp' /></p><p>
</p><p>
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்குச் சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p> 

புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் திறமையான முறையில் முன்னெடுப்பதற்குச் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T13:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை.. அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-penalty-drug-crimes-government-decision-1786367709"></link>
            <id>https://tamilwin.com/article/death-penalty-drug-crimes-government-decision-1786367709</id>
            <summary type="text">போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற “ரதம ஏகத” தேசிய செயல்பாடுகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p> </p><p>இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள் பொருளாதாரம், சுற்றுலாத் துறை மற்றும் சமூகச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.&nbsp;</p><h2>மிகக் கடுமையான நடவடிக்கை..&nbsp; &nbsp;</h2><p>அத்துடன், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6acda245-eaec-4673-9278-225447f3b734/26-6a79d11c4b2d8.webp' /></p><p>இதன்போது, போதைப்பொருள் நெருக்கடியைக் கையாள்வதிலும், போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த பொதுமக்களின் மனப்பான்மையில் மாற்றத்தை ஊக்குவிப்பதிலும், மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் அதிகப்படியான ஈடுபாட்டிற்கு ஜனாதிபதி திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.</p><p>
</p><p>
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது. இந்தத் திருத்தங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>எனவே, இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அரசிதழில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தீவிர பணியில் அதிகாரிகள்</h2><p>

அரசுப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைச் செயலாக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர், இது போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa43308-8306-484b-a48b-7e29de2a9a50/26-6a79d11d0cc44.webp' /></p><p> </p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 6,414 பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை 5 கிராமுக்கும் குறைவானவை மற்றும் 10 கிராமுக்கும் குறைவானவை என அவற்றின் அளவுகளுக்கு ஏற்ப வகைப்படுத்துவதற்கான ஒரு முறையை நிறுவுமாறும், மேலும் முறைப்பாடுகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்கள் உடனடியாக நீதிமன்றங்களில் முன்னிலைடுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
</p><p>
அரசுப் பகுப்பாய்வாளர் துறையின் திறன் மற்றும் வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான ஆதாரங்களைப் பரிசீலிப்பதற்கு ஆதரவளிக்க, கடற்படையின் உதவியும் பெறப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெசின் சிறையில் உயிரிழந்த கைதி.. அதிகாரிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cause-death-inmate-borella-magazine-prison-1786363577"></link>
            <id>https://tamilwin.com/article/cause-death-inmate-borella-magazine-prison-1786363577</id>
            <summary type="text">பொரளை - மெசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை - மெசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். </p><p>ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் அஸ்மன் ஜெரால்டின் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.&nbsp;</p><h2>ஏற்பட்ட மோதல்..&nbsp;</h2><p>
கடந்த 6ஆம் திகதி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து குறித்த கைதி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5456cf-c4a4-452a-bb9d-589e82065616/26-6a79ca7dd3f5e.webp' /></p><p>இதன் பின்னர், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேலதிக சட்ட வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 8ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
</p><p>தொடர்ந்து, சடலம் மத்தேகொட பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உறவினர்கள், சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதலின் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T12:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862</id>
            <summary type="text">உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் அரசாங்கங்களைச் சேர்ந்த பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லை என்ற ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.</p><p> </p><h2><b>தீர்ப்பிற்கு எதிராக மேன்முறை</b></h2><p>அதனைத் தொடர்ந்து, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657d2885-8e73-41f0-ab04-81e9a7af64a0/26-6a7979da45060.webp' /></p><p>அத்துடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளரின் கையெழுத்துடனும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>அதற்கமைய, குறித்த நிபந்தனையின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்பட்ட மகிந்த ராஜபக்சவின் சொத்து வழக்கு, கோட்டாபய ராஜபக்சவின் சொத்து வழக்கு, பஸில் ராஜபக்சவின் 5 சொத்து வழக்குகள், நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரின் 3 வழக்குகள், ரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு ஒன்று, கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்று உள்ளிட்ட பல வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே ஆணையாளரின் கையெழுத்துடன் வழக்கு தொடரப்பட்டமை காரணமாக அவை வாபஸ் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T12:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்போகும் முக்கிய மைல்கல் - வட மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/company-to-be-established-in-the-northern-province-1786358355"></link>
            <id>https://tamilwin.com/article/company-to-be-established-in-the-northern-province-1786358355</id>
            <summary type="text">வட மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு
கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine
Lanka)...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு
கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine
Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைவதாக&nbsp;வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>

வட மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும்
ஏற்றுமதியாளர்களுக்கு உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளபாடச் சேவைகளை
நெருக்கமாகக் கொண்டு வரும் இந்த முயற்சி, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு
புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம் தனது யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தை இன்று
(10.08.2026) யாழ்ப்பாணம், கண்டி வீதியில் அமைந்துள்ள தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில், வடக்கு
ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தது.
</p><p>
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dea3f6cb-d529-4f83-8106-893a64593a90/26-6a79bbe9b91a1.webp' /></p><h2>வட மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் காங்கேசன்துறை துறைமுகத்தின்
மீளுருவாக்கமும் அதனூடான கப்பற் போக்குவரத்து வளர்ச்சியும் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாணத்தில்
உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப்
பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு
செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் இந்நிறுவனத்தின் வருகை குறிப்பிடத்தக்க
பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக
திருகோணமலை மற்றும் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்படவுள்ள நேரடி பொருட்கள்
கப்பற் போக்குவரத்து சேவை, வடக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய
பரிமாணத்தை ஏற்படுத்தும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e82d0ea-c8ab-4a68-af99-83d83d60900d/26-6a79bbea91706.webp' /></p><p> </p><p>இதன்மூலம்
பொருட்களை குறுகிய காலத்திலும் குறைந்த செலவிலும் கொண்டு செல்லும் வாய்ப்பு
உருவாகுவதுடன், வர்த்தகர்களின் செயற்பாட்டுத் திறனும் மேம்படும் என்றார்.</p><p>

யாழ்ப்பாணத்தில் களஞ்சியசாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் மற்றும்
தளபாட மையங்களை அமைக்கும் நிறுவனத்தின் திட்டம் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு
பெரும் நன்மையை வழங்கும். குறிப்பாக மாம்பழம், முருங்கை மற்றும் ஏனைய பழங்கள்,
காய்கறிகள் போன்ற விரைவில் பழுதடையக்கூடிய விளைபொருட்களை குளிரூட்டப்பட்ட
கொள்கலன்களில் பாதுகாத்து, சந்தை விலை உயர்ந்த காலத்தில் விற்பனை செய்வதற்கான
வாய்ப்பு இதன்மூலம் உருவாகும் என்பதுடன், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும்
குறைக்க முடியும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><h2>தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும்</h2><p>

இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இனி
கொழும்பு துறைமுகத்தைச் சாராமல் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரடியாக
வந்தடையும் சூழல் உருவானால், போக்குவரத்து நேரம், கையாளும் செலவு மற்றும்
தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f307a18-8bea-4f01-87a1-70a663425629/26-6a79bbeb6b9a3.webp' /></p><p> </p><p>அதேவேளை, வணிகர்களின் முதலீட்டுச்
சுழற்சியும் விரைவடைவதன் மூலம் அதன் நன்மைகள் பொதுமக்களையும் சென்றடையும்.

ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம், கப்பல் முகவர் சேவைகள், பொருட்கள்
போக்குவரத்து சேவைகள், தளபாட முகாமைத்துவம், கப்பல் மற்றும் விமான வழி
பொருட்கள் கையாளல், கொள்கலன் சேவைகள், சுங்க அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு
சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை யாழ்ப்பாணத்திலிருந்தே வழங்கவுள்ளது.
</p><p>
இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய
நாடுகளில் நிறுவனம் கொண்டுள்ள வலையமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்தின் வர்த்தகத்
தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும்,
காங்கேசன்துறை துறைமுகத்தை மையமாகக் கொண்ட பிராந்திய வர்த்தக வளர்ச்சியை
ஊக்குவிப்பதற்கும், வடக்கு மாகாணத்தை சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும்
தளபாட வலையமைப்புடன் மேலும் வலுவாக இணைப்பதற்கும் இக்கிளை அலுவலகத்தின்
ஆரம்பம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a530a231-24b8-4658-ad1a-dc36dae69453/26-6a79bbec4178f.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு ஏற்றுமதியாளர்
சம்மேளனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனத்தின்
முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், வர்த்தக மற்றும்
தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T12:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் பெண் ஊழியர்களைத் தாக்கிய மர்ம நபர்கள் - மனம் திறந்த பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/richa-integrated-farm-s-food-festival-suspended-1786363244"></link>
            <id>https://tamilwin.com/article/richa-integrated-farm-s-food-festival-suspended-1786363244</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் நடைபெறவிருந்த மாபெரும் உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதற்கான காரணத்தை, நிர்வாகத் தலைவர் கந்தைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் நடைபெறவிருந்த மாபெரும் உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதற்கான காரணத்தை, நிர்வாகத் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மாபெரும் உணவுத் திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டு, ஊடகங்கள் வாயிலாகவும் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. </p><p>

இதன்படி, கடந்த 7, 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நான்கு நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவிருந்தது. எனினும், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, குறித்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>

உணவுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட பணம் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த குழப்ப நிலையை ஏற்படுத்தியவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை றீச்சா பண்ணையின் நிர்வாகத் தலைவர் கந்தையா பாஸ்கரன் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7ZhC4P7s_AA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyn_c6u3fNU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T12:01:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலேசியாவில் பதுங்கியிருந்த கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-s-close-friend-arrested-1786362378"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-s-close-friend-arrested-1786362378</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபரான தனுஷ்க கௌசல்யா எனப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபரான தனுஷ்க கௌசல்யா எனப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நடவடிக்கை இன்று(10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, மூன்று சந்தேகநபர்களும் இன்று மாலை சுமார் 4.28 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL315 மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
</p><h2>
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள்</h2><p>

சந்தேகநபர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக பொலிஸ் உதவி கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவொன்று மலேசியாவுக்கு பயணம் செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998ead46-efc1-4bcc-a2c7-9dd718e15d3c/26-6a79ba5538821.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மேலும், குறித்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

இலங்கை மற்றும் மலேசிய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, இந்த மூன்று சந்தேகநபர்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்தத் திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-10T11:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் - ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை.. அதிருப்தியில் மெல்கம் ரஞ்சித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-inquires-are-going-well-1786360265"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-inquires-are-going-well-1786360265</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.</p><p>
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்துத் திருப்தியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அதேநேரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலில் கொழும்பு பேராயர் இல்லம் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><h2>&nbsp;ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்</h2><p>அதன்படி, தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முறையான விசாரணைகள் குறித்து கொழும்பு மறைமாவட்டம் பூரண திருப்தியடைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a35b5e-3f6a-4b2d-8ba0-e3e81cc132e3/26-6a79b1cb9b583.webp' /></p><p> </p><p>
இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் அதற்கு உதவி செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணை அறிக்கை அல்லது விசாரணைச் செயல்முறைகள் தொடர்பில் எழும் புதிய தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசின் மீது நம்பிக்கை&nbsp;</h2><p> 
மேலும், இத்தகைய கொடூரமான குற்றங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் தடுப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி விதிகளின் 2267ஆம் பிரிவின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தைப் பாதிக்கும் செயலாகும் என்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/004bc176-0594-4a2b-b08d-3e25b9fa0581/26-6a79b1cae49bb.webp' /></p><p>
அமைதியான சூழலில் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஒருபோதும் உடன்பட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், இலங்கை நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை முழுமையாக நம்புவதாகவும், நீதிமன்றங்களின் முடிவுகளில் தலையிடுவது தமது நோக்கமல்ல என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>கத்தோலிக்கக் கோட்பாடுகளின்படி, மனித உயிரைப் பாதுகாப்பதும், சட்டப்பூர்வமான நீதி அமைப்பின் மூலம் சமூக அமைதியையும் நீதியையும் உறுதிப்படுத்துவதே சரியான வழிமுறையாகும் என அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T11:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு மீண்டும் விளக்கமறியல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ishara-chevwanthi-appears-court-1786358946"></link>
            <id>https://tamilwin.com/article/ishara-chevwanthi-appears-court-1786358946</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் முக்கிய சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இவர் மீது, சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980ce20d-6e94-44bd-a3f5-6cb92ed89b2f/26-6a79af6a45fb5.webp' /></p><p> தலைமறைவாக இருந்த அவர், 2025 ஒக்டோபரில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் மீண்டும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WN2N0yCjLcg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் கனமழையால் பிரதான வீதிகள் தாழிறக்கம் - மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-maskelia-main-road-1786359503"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-maskelia-main-road-1786359503</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் மஸ்கெலியா
பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் மஸ்கெலியா
பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல
இடங்களில் புதிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வனராஜா தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகாமையில் வீதியின் ஒரு பகுதி பாரியளவில் தாழிறங்கியுள்ளது.</p><h2>

வீதி தாழிறக்கம்</h2><p>
கடந்த காலங்களில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் தாக்கத்தின் போதும் இந்தப்
பகுதியில் வீதி பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போதைய
சீரற்ற காலநிலையால் அதே பகுதியில் மீண்டும் பாரியளவில் வீதி தாழிறக்கம்
ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c6298ec-3249-48c6-a566-63c22a851017/26-6a79af4f3b093.webp' /></p><p>
</p><p>
இதனுடன், வீதியின் பல பகுதிகளில் புதிதாக வெடிப்புகள் மற்றும் சிறியளவிலான
பிளவுகள் ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வூட் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, மண்ணுக்குள் நீர் தேங்கி, வீதியின் கீழ்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, இந்த தாழிறக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><h2>
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
குறிப்பாக, மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும்
தொடருமானால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீதி தாழிறக்கம் மேலும் அதிகரிப்பதுடன், புதிதாக பல இடங்களிலும் வீதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d75a8ab-3da9-4549-94f1-89060cc66d6d/26-6a79af501d858.webp' /></p><p>

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதி, மஸ்கெலியா, நோர்வூட் உள்ளிட்ட பல பகுதிகளை
இணைக்கும் முக்கிய போக்குவரத்து பாதையாக காணப்படுவதால், வீதியில் ஏற்படும்
இவ்வாறான பாதிப்புகள் அன்றாட போக்குவரத்துக்கும் பொதுமக்களின்
பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
</p><p>
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு
செய்து, வீதி மேலும் தாழிறங்குவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்துவரும் நிலையில், வீதியில் பயணிக்கும் வாகன
சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், குறிப்பாக வீதியில் புதிதாக
ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மற்றும் தாழிறங்கிய பகுதிகளுக்கு அருகில் வாகனங்களை செலுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்கள்
அறிவுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72cff87d-8d4d-451b-a683-05aa0e72f7ac/26-6a79af50e63a4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8f28e3-ebc6-48da-996c-87f97fab7604/26-6a79af51b77d8.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11th-world-tamil-studies-conference-in-next-year-1786358180"></link>
            <id>https://tamilwin.com/article/11th-world-tamil-studies-conference-in-next-year-1786358180</id>
            <summary type="text">11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும்,
தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று(09.08.2026) நடைபெற்றபோது,
அதில் கலந்துகொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
</p><h2>தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டது</h2><p>
இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவில்
கோலாலம்பூரிலும், நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6182eb73-9f07-49ea-b75f-ac7fe7736ac2/26-6a79ab8ed0701.webp' /></p><p>உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான
தனிநாயகம் அடிகளார் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பங்குபற்றிய இறுதி
மாநாடாகவும் இதுவே அமைந்தது.</p><p>யாழ். குடா நாடே விழாக் கோலம் பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக
அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். </p><p>இம் மாநாட்டின் இறுதி
நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும்
வரலாற்றில் பதிவாகியிருந்தது.
</p><p>
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்காவின்
சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. இந்நிலையிலேயே 11ஆவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் 2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-assistance-in-arresting-death-row-inmate-1786356396"></link>
            <id>https://tamilwin.com/article/public-assistance-in-arresting-death-row-inmate-1786356396</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டில் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவில் வசிக்கும் ஒரு பெண்ணைத் தாக்கி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டில் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவில் வசிக்கும் ஒரு பெண்ணைத் தாக்கி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய, பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது.
</p><p>
நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>ஏதேனும் தகவல் தெரிந்தால்</h2><p>
பொலிஸாாரால் தேடப்படும் குற்றவாளி, ரணேபுர தேவகே ரணுக எரண்ட விஜேதுங்க என்ற 38 வயதுடைய ஆண் ஆவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa5ed06-3da7-4f72-967f-40a9bdd6aa52/26-6a79a7cab3546.webp' /></p><p>
அவரது முகவரி: எண் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம.
</p><p>
குற்றவாளி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் பொறுப்பதிகாரியை 071 859 1604 என்ற எண்ணிலோ அல்லது குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை 071 962 7561 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டை உடைத்து திருட்டு - விசாரணையில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/burglary-breaks-into-locked-house-in-tamil-area-1786357310"></link>
            <id>https://tamilwin.com/article/burglary-breaks-into-locked-house-in-tamil-area-1786357310</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரதிதிபுரம் கிராமத்தில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் வீடு ஒன்றைய உடைத்து திருடிய இருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரதிதிபுரம் கிராமத்தில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் வீடு ஒன்றைய உடைத்து திருடிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது, பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். </p><h2>

இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 கடந்த 7ஆம் திகதி போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களும் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5522c426-c6d0-4002-8a97-0a8afa2d6368/26-6a79a6c65882c.webp' /></p><p> 

இதன்போது, 125 ஆயிரம் ரூபாய் பணம், 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2> 


நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை</h2><p>
புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலீஸ் பரிசோதகர் சிறீவன்ச,பொலீஸ்
சாயன்ட் 45555 அஜித் 88582 ஜெனன் உள்ளிட்டவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக
நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் 80 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியை, 8 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3006d85b-acc2-473f-a920-91b2f9b86645/26-6a79a6c72f252.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரில் ஒருவர் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட பின்னர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805"></link>
            <id>https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805</id>
            <summary type="text">புதிய இணைப்புபயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த
சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக, கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு
சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.</p><p>

இன்று பொதுமக்கள் தினமாக இருப்பதால், கிராம உத்தியோகத்தர்களின்
சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 10 முதல் 15
கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
எனினும், கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்ததால், அவர்களுடன் தொடர்புடைய எந்தவொரு சேவையும் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a812a8d-5fd8-4d7f-9697-c217e10c34f8/26-6a79a05f7028e.webp' /></p><p>
</p><p>இதனால், தூரப் பகுதிகளில் இருந்து அதிகளவு பணம் செலவிட்டு போக்குவரத்து
வசதிகளைப் பெற்றுக்கொண்டு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடனும் அதிருப்தியுடனும்
வீடு திரும்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p> 

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். </p><h2>எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவு</h2><p>கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747f02ad-a45f-4d2f-9929-b5a307fb7dc1/26-6a79334733501.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85392ddc-afff-49a6-8b6f-1b42ba3ad31d/26-6a79a061263e2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd78784e-c712-4e7a-bc8f-ca4af3364e82/26-6a79a0620241b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:59:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய பீடாதிபதி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வு இன்று(10.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p> 


முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக
பீடச்சபைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 15 வாக்குகளால்
முன்னிலை பெற்றுப் பேராசிரியர் பி. பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

பதவிக் காலம் நிறைவு</h2><p>
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் ந.கெங்காதரனின் பதவிக்காலம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க,
பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) படி புதிய பீடாதிபதியைத் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85b699b0-c358-428f-bf0b-03a8075caeab/26-6a79a05c9cb02.webp' /></p><p> 

இந்த நிலையில், இன்று(10) காலை இடம்பெற்ற தெரிவுக் கூட்டத்தில் பேராசிரியர்
பி. பிரதீப்காந் எதிர்வரும் 15.08.2026 முதல் செயற்படும் வகையில்
பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>


இந்த விடயம் தொடர்பில், தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

கைதியாக இருக்கும் 38 தமிழக கடற்றொழிலாளர்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


38 தமிழக கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர். அதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குகிறார்கள்.
</p><p>
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல்
கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e070edf-b8b4-4463-83e8-a692f5365fc0/26-6a799e3e03a27.webp' /></p><p>



நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த
உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.</p><h2>

தமிழக முதல்வரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>
இந்த நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/045b30ee-fe58-468e-97b8-8194dc1bc0e1/26-6a799e3ee37a0.webp' /></p><p>
</p><p>
மேலும் இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு
கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.


இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகள் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
</p><p>

எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவு துறை
அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக கடற்றொழிலாளர்களை மீட்டு அவர்கள் குடும்பங்களிடம்
சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்காலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-died-accident-in-the-mullivaikkal-area-1786353158"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-died-accident-in-the-mullivaikkal-area-1786353158</id>
            <summary type="text">முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p> 

இந்த விபத்து நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>பொாலிஸார் விசாரணை</h2><p>இந்த விபத்தில் 6ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 18 வயதுடைய மதிமாறன் பிறைசுடர் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a344ea-9f10-4e6a-a48d-132bd7962edc/26-6a799c480c540.webp' /></p><p>காயமடைந்த மற்றைய நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொாலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா.. சிசிடிவியில் கிக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-maligawatte-police-report-1786350613"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-maligawatte-police-report-1786350613</id>
            <summary type="text">புதிய இணைப்புமாளிகாவத்தையில் சற்று முன்னர் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<h3><span style="color: inherit; font-size: 1.5rem;">புதிய இணைப்பு</span></h3><p>மாளிகாவத்தையில் சற்று முன்னர் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியமை காணொளியில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த நபர், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G2Dp-v_fuic" width="640" height="360" class="note-video-clip"></iframe><span style="color: inherit; font-size: 1.5rem;"><br></span></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மூன்றாம் இணைப்பு&nbsp; &nbsp;</span></p><p>மாளிகாவத்தையில் உள்ள பிசிசி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரானின் மாமா என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cef8f80-3cc3-4741-8d77-82d56d392378/26-6a799a30ab5f9.webp' /></p><h3><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு&nbsp;</span></h3><p>மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h3>முதலாம் இணைப்பு&nbsp;</h3><p>கொழும்பு - மாளிகாவத்தை பிசிசி பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p><p><b style="">YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9TZ74vr3KG8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-10T09:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்லும் நாட்களை எண்ணும் முன்னாள் அரசியல்வாதிகள்..! சுனில் ஹந்துன்னெத்தி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245</id>
            <summary type="text">குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p>
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின்படி, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>மத்திய வங்கி பிணைமுறி மோசடி&nbsp;</h2><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8fa630-b57b-46e6-8485-3b48f47e0087/26-6a797637cc413.webp' /></p><p>
அரச அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல்களும் மோசடிகளும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுத் தண்டிக்கப்படுவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டு, அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றால் எதிர்கட்சியினர் உண்மையிலேயே மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறைக்கு&nbsp; செல்லும் வாய்ப்பு அதிகம்&nbsp;</h2><p>
</p><p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதைத் திருத்துவது தொடர்பான எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p> ஏனெனில் அது அவர்களுக்கு ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d676aa97-b6e7-4952-ad56-62a6d6b347f0/26-6a797637277b6.webp' /></p><p> </p><p>ஆனால் இங்கு நடப்பது நாட்டிற்கு அழிவல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். சட்டம் நடுநிலையாகச் செயல்படும் போது, தாங்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பயமே அவர்களின் இந்த எதிர்ப்பிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் முழுப் பொறுப்பேற்கும் என்றும், இத்தகைய சட்டத் திருத்தங்களின் மூலம் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் வலுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:09:39+00:00</updated>
        </entry>
    </feed>
