<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T05:13:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்வாழ்வு மையத்திற்காக தரப்பட்ட காணியில் கட்டடம் அமைத்துத் தருமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-abusers-use-more-than-alcohol-abusers-1788150592"></link>
            <id>https://tamilwin.com/article/drug-abusers-use-more-than-alcohol-abusers-1788150592</id>
            <summary type="text">மது பாவனையாளர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளதாக விமோசனா புனர்வாழ்வு இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார். 

அத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மது பாவனையாளர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளதாக விமோசனா புனர்வாழ்வு இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன் இவர்களின் புனர்வாழ்விற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட காணியில் கட்டடமொன்றை அமைத்து தர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

மட்டு. ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (30.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>போதை பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்திலே மது, போதைப்பொருள் பாவனை என்பது மிகவும் அதிகரித்து கொண்டு வருகிறது. நாடளாவிய ரீதியிலே நாங்கள் புனர்வாழ்வு சேவையைச் செய்து அதிகமான வெற்றியையும் கண்டிருக்கிறோம். </p><p>

தற்போது நாங்கள் ஒரு வாடகை இடத்திலேயே இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். எங்களிடம் குணமடைந்தவர்கள் இலங்கையில் அத்தனை மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். 

எனவே எங்களுக்கு அரசாங்கம் ஒரு ஏக்கர் காணியைத் தந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f15d9d6b-10e0-4710-9224-491075a78ff9/26-6a950bd397302.webp' /></p><h2>கட்டடம் தேவை</h2><p> </p><p>அதில் நான் கட்டடம் ஒன்றை அமைத்து இந்தச் சேவையை மேலும் திறம்படச் செய்ய எண்ணியுள்ளேன். 

எனினும் இப்போது நான் வாடகைக்கு இருக்கும் இடத்தை உரிமையாளர்களுக்கு அந்தக் கட்டடம் தேவைப்படுவதால் நாங்கள் இன்னும் ஒரு இடத்திற்கு நகர வேண்டிய தேவை உள்ளதால், இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்து நாங்கள் செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. </p><p>

ஆகவே அரசாங்கத்தால் எங்களுக்குத் தரப்பட்ட அந்தக் காணியில் எங்களுக்கு புதியதொரு கட்டடத்தை அமைத்துத் தந்தால் இலகுவாக இருக்கும். இதனை ஜனாதிபதிக்கும் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-31T05:07:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் சிகிரியாவில் தோண்டப்பட்ட நிலம்! அரசு இலச்சினை வாகனத்துடன் சிக்கிய மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/treasure-excavated-sigiriya-three-arrested-1788150355"></link>
            <id>https://tamilwin.com/article/treasure-excavated-sigiriya-three-arrested-1788150355</id>
            <summary type="text">சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,
நடு இரவில் ஹேமர் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,
நடு இரவில் ஹேமர் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூவர்
சந்தேகத்தின் பேரில் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சிகிரியா வனவிலங்கு அலுவலகப் பிரதானியும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளருமான
எஸ்.எஸ்.மலிந்தவுக்குக் கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில், சிகிரியா
சரணாலயப் பகுதிக்குள் வனவிலங்கு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.</p><h2>மூவர் கைது&nbsp;</h2><p>
</p><p>
குறித்த பகுதியில் தேசிய நீர் வழங்கல் வாரியத்துக்குச் சொந்தமானது என குறிப்பிடும் அரசு இலச்சினை பொறிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று
நிறுத்தப்பட்டிருந்ததை கண்ட அதிகாரிகள், நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த
மூவரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d7eafc-a838-4e43-a849-95b08c85e0ad/26-6a9506cd7197e.webp' /></p><p>
</p><p>
தாம் நீர் இணைப்பு வழங்குவதற்காகவே தோண்டுவதாக அவர்கள் தெரிவித்த போதிலும்,
நள்ளிரவு வேளையில் அது தொடர்பில் சரியான பதிலளிக்க தவறியுள்ளனர்.</p><p>இதனையடுத்து, பாறைகளைத் துளையிடும் ஹேமர் இயந்திரம் மற்றும்
அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள் கைப்பற்றப்பட்டன.</p><h2>&nbsp;நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தம்புள்ளை நீர் வழங்கல் வாரியத்தில்
பணிபுரிபவர்கள் என்றும், மற்றவர் அந்த நிலத்தின் உரிமையாளர் என்றும் வனவிலங்கு
கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கைப்பற்றப்பட்ட ஹேமர் இயந்திரத்தின் முனை தேய்ந்திருப்பதைக் கொண்டு, இவர்கள்
இதற்கு முன்னரும் வேறொரு இடத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று திங்கட்கிழமை தம்புள்ளை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T04:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருள் சூழ்ந்த சிறைச்சாலைகளாக அரச அலுவலகங்கள்! இலங்கையில் நடைமுறைக்கு வரப்போகும் திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-institutions-for-peoples-bimal-1788149169"></link>
            <id>https://tamilwin.com/article/government-institutions-for-peoples-bimal-1788149169</id>
            <summary type="text">அரச அலுவலகங்கள் ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகுகின்றவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அலுவலகங்கள் ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகுகின்றவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டுமென பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரச நிறுவனங்களின் அமைப்பு</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பழைய சுவர்களால் சூழப்பட்ட, இருள் சூழ்ந்த சிறைச்சாலைகள் போன்ற அமைப்பிலிருந்து அரச அலுவலகங்கள் வெளியேற வேண்டும். 

எனினும் அலுவலகங்களின் அளவு என்பது அதிகாரிகளின் பதவியைக் காட்டுவதாக இருக்கக்கூடாது. </p><p>ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் அரச நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கு சொந்தமானவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7681135-aed3-4fc3-bfd5-d8f23170c2ab/26-6a9501ed28744.webp' /></p><h2>முழுமையாக நடைமுறைக்கு வரும் திட்டங்கள்</h2><p> 

அத்துடன், பத்தரமுல்லை செத்சிர்றிபாய வளாகத்தின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத் திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிடும்.

இதனால், கோப்புகளை சேமித்து வைப்பதற்கான பெரிய அலமாரிகளுக்குப் பதிலாக இக்கட்டடம் ஒரு நவீன காகிதமற்ற மையமாக செயற்படும்.
</p><p>
வெவ்வேறு இடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களால் ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் தீர்மானம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T04:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கிய பெண், இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு - சிறுவனை தொடர்ந்து தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852"></link>
            <id>https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852</id>
            <summary type="text">எப்பமுல்லா, பமுனுகம கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>எப்பமுல்லா, பமுனுகம கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. </p><p>

உயிரிழந்தவர்கள் 35 வயதுப் பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் என தெரியவந்துள்ளது.</p><p><b>

முதல் இணைப்பு</b></p><p>கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.</p><p> பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பமுனுபுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இவ்வாறு காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>பொலிஸார் மேலதிக விசாரணை</b></h2><p>குறித்த நால்வரும் ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff7b1ec7-8dc9-4c3b-ae18-04695229343c/26-6a94e62469f37.webp' /></p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். </p><p>பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-31T04:18:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்களில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! மகிழ்ச்சியில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-party-mocked-mahinda-namal-is-proud-1788148852"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-party-mocked-mahinda-namal-is-proud-1788148852</id>
            <summary type="text">அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கடுமையான
முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தை காக்கும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கடுமையான
முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தை காக்கும் முதன்மை மையங்கள் என தங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளதையிட்டு தாம் மகிழ்ச்சியடைகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய
அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
லுணுகம்வெஹர பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்கள்</h2><p>
</p><p>
"2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்தங்கிய நிலையிலிருந்த அம்பாந்தோட்டை
மாவட்டத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, அது மகிந்த
ராஜபக்சவுக்கு அம்புல் தியல் கொண்டு செல்வதற்காகவே என எதிர்த்தரப்பினரால்
ஏளனம் செய்யப்பட்டது. ஆனால், இன்று அதே நெடுஞ்சாலையில் வாகனங்கள் நெரிசலாகப்
பயணிப்பதைக் காணமுடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8788fc4-3e58-4ec5-8ba8-2685fcf7d04a/26-6a950047d7ad0.webp' /></p><p> </p><p>மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம்,
கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் உமா ஓயா போன்ற திட்டங்களை அன்று
எதிர்த்தவர்களே இன்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவை அவசியம் என்று
ஒப்புக்கொள்கின்றார்கள்.
</p><p>
எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. </p><p>வறட்சியால் நீர்நிலைகள் வற்றியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக
அரசு எதிர்க்கட்சியையும் ராஜபக்சர்களையும் குறை கூறிக்கொண்டிருந்ததே தவிர,
நீர்நிலைகளைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><h2>மக்கள் மீது கடுமையான வரிச்சுமை</h2><p>
</p><p>
மேலும், அறுவடைக்காலத்தில் அரிசி மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதால்
உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>சேனைப் பயிர்ச்செய்கைக்கு அனுமதி
மறுக்கப்படுகின்றது.

ஆட்சியைப் பிடித்த நாள் முதல் மக்கள் மீது கடுமையான வரிச்சுமையைச் சுமத்தி
அரசு துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ab0dc6-7319-4d26-9a30-a97b016c6b9c/26-6a9500488dd76.webp' />&nbsp;</p><p> மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள்
விலையேற்றத்துக்குக் காரணங்களைக் கூறும் அரசு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி
செய்த நிறுவனங்களுக்கு எதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துறைமுக மற்றும் நிதி அமைச்சுசார் முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள்
நிலவுகின்றன.
</p><p>
தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்களித்துவிட்டு,
இன்று வேலை கேட்டுச் செல்லும் இளைஞர்களை அரசு விரட்டியடிக்கின்றது.

பொதுவாகக் காலப்போக்கில் தான் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படும்.</p><p> ஆனால்
இந்த அரசுக்கோ ஆட்சிக் கட்டிலில் ஏறிய நாளிலிருந்தே மக்களைப் பிடிக்காமல்
போய்விட்டது.

இனியாவது பொய் கூறுவதையும் மக்களை ஏமாற்றுவதையும் அரசு நிறுத்திவிட்டு,
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>
மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து
முன்நின்று போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T04:17:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் மக்கள் செல்வாக்கில் கடும் வீழ்ச்சி! திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-public-influence-tissa-attanayake-warns-1788146303"></link>
            <id>https://tamilwin.com/article/decline-public-influence-tissa-attanayake-warns-1788146303</id>
            <summary type="text">இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு
50 சதவீதத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு
50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>அரசின் மீதான மக்களின் செல்வாக்கு</h2><p>

"ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட
வாக்குறுதிகள், ஊழலற்ற நிர்வாகம், முறைமை மாற்றம் மற்றும் எரிபொருள்,
மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசால்
நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7347e1d8-a432-4a6e-bfb9-4e7e055d82ae/26-6a94f81dd59d1.webp' /></p><p>
</p><p>
சமீபத்திய 'வெரிடே ரிசர்ச்' ஆய்வறிக்கையின்படி, அரசின் மீதான மக்களின்
செல்வாக்கு 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதுடன்,
பொருளாதாரத்தைக் கையாள்வது குறித்த நம்பிக்கை 40 சதவீதத்துக்கும் கீழே
வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே 22ஆவது அரசமைப்புத் திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது என்று அரசு கூறுவது அப்பட்டமான பொய்.</p><p>

நாட்டின் நிலுவையிலுள்ள வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை நீதிவான்
நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே உள்ளனவே தவிர உயர்
நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்ல. தன் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஒரு நீதித்துறை அமைப்பை உருவாக்கவே அரசு
முயல்கின்றது.</p><h2>உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்&nbsp;</h2><p>இதற்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான
மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த காலத்தில் நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயன்ற எந்தவொரு அரசும்
நீதிமன்றத்திடமிருந்து தக்க பதிலடியையே பெற்றுள்ளன என்ற வரலாற்றை இந்த அரசு
நினைவில்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be15a3d9-859a-494d-838c-0483d7c875b7/26-6a94f81e8f736.webp' /></p><p>

மக்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசு,
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
22ஆவது திருத்தம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்
ஓடிய நீதி அமைச்சர், "எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. அரசுடன்
விளையாட வேண்டாம்" என கூறி தனது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>
அதிகார மமதையில் இந்தத் திருத்தத்தைப் பலவந்தமாக நிறைவேற்ற முயன்றாலும்
இறுதியில் மக்கள் முன்னிலையில் அரசால் தலைநிமிர்ந்து நிற்க முடியாது." -
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T03:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணாநாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T03:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் ரணில்! தென்னிலங்கையில் அரசியில் திடீர் திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajiths-party-to-rejoin-again-1788145652"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajiths-party-to-rejoin-again-1788145652</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் பலமாக உள்ள அநுர அரசாங்கத்திற்கு எதிராக வெற்றியை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியூகங்களை அமைத்து வருகிறார். 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் பலமாக உள்ள அநுர அரசாங்கத்திற்கு எதிராக வெற்றியை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியூகங்களை அமைத்து வருகிறார். </p><p>

அதற்கமைய எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டணியாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.</p><h2><b> 

ரணில் - சஜித் கட்சிகள்</b></h2><p>தற்போது அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f206aa99-dd72-482a-accc-1406df3e8f10/26-6a94f2fd08211.webp' /></p><p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
“<b><i>அடுத்த தேர்தலுக்கு நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தே செல்லவுள்ளோம். அது இப்போது தீர்மானிக்கப்பட்டு விட்டது.

உரிய நேரத்தை பின்னர் அறிவிப்போம். ஒரு கூட்டணியாகவே செயற்படும். ஐக்கிய தேசிய கட்சியும் நாமும் இணைந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை நாட்டின் மக்கள் அறிவார்கள் என</i></b> ” என ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-31T03:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையில் இஷாரா செவ்வந்தியின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ishara-sewwandi-s-current-situation-1788144530"></link>
            <id>https://tamilwin.com/article/ishara-sewwandi-s-current-situation-1788144530</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதற்கமைய, குறித்த சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு தனிச் சிறையில் அவர் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>
</p><h2><b>
செவ்வந்தியின் பரிதான நிலை</b></h2><p>அத்துடன், கனேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய தொடர்புடைய சிலரும் ஆண் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edce5b01-52b8-460a-b1ab-4afa7578c740/26-6a94ee4cce7f4.webp' /></p><p>எனினும், இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டாலும், சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே இவ்வாறான விசேடமான இடம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வழமையாக கைதிகள் காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்கள் மீண்டும் மாலை 4 மணியளவில் தான் அறைகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். </p><p> 

எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட எந்தவொரு கைதிக்கும் இந்த வசதி கிடைக்காது.
</p><p>
இஷாரா செவ்வந்தி காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவார். காலை உணவளிக்கப்பட்ட பின் மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னர் சிறைக் கூண்டிலேயே தங்க வைக்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h3><b>

தீவிர கண்காணிப்பு</b></h3><p>அவர் மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவது மதிய உணவு வழங்குவதற்காக 15 நிமிடங்களுக்கு மாத்திரமே ஆகும். 

சிறைச்சாலையில் உணவு சமைத்துப் பரிமாறும் நேரத்திலேயே இஷாரா செவ்வந்தி இவ்வாறு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ad1385-c230-4c66-b921-14d5c9b44212/26-6a94ee4d8512b.webp' /></p><p>மீண்டும் சிறைக் கூண்டில் வைக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இரவு உணவு வழங்குவதற்காகவே மாலை 4 மணிக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்.

இது தவிர, காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் தினசரி 30 நிமிடங்கள் இஷாரா செவ்வந்தி வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>

உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது. அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு சந்தேகநபருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>

அண்மையில் குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார். அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையானது இஷாரா செவ்வந்தியின் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.</p><p>

அது நடைமுறையிலுள்ள சிறைச்சாலைச் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு கைதியும் மாதத்திற்கு இருமுறை சிறைச்சாலை ஊடாக தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளனர். </p><p>சம்பந்தப்பட்ட கைதி அது தொடர்பிலான கோரிக்கையை முதலில் சிறைச்சாலையிடம் முன்வைக்க வேண்டும்.
</p><p>
அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே கால அவகாசம் கிடைக்கும் என சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p>]]></content>
            <updated>2026-08-31T03:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/90-million-without-students-for-the-git-exam-1788140275"></link>
            <id>https://tamilwin.com/article/90-million-without-students-for-the-git-exam-1788140275</id>
            <summary type="text">க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு (GIT) விண்ணப்பித்திருந்த கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்கு வருகை தரவில்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு (GIT) விண்ணப்பித்திருந்த கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாக 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வீணடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆண்டு செயல்திட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மூன்று முறை&nbsp;நடத்தப்பட்ட&nbsp;பரீட்சை</h2><p> </p><p>

பொதுத் தகவல் தொழில்நுட்ப பாட பரீட்சை 2019 முதல் 2024 வரை ஆறு ஆண்டுகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b146199-351b-451e-8909-cc08f3d2e0be/26-6a94e99ecfbf0.webp' /></p><p>
இந்த பரீட்சை மூன்று முறை நடத்தப்பட்ட நிலையில், க.பொ.த உயர் தர பரீட்சைக்கு வந்த மாணவர்களில் 36 சதவீதம் பேர் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களில் 42 சதவீதம் பேர் பரீட்சைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பரீட்சையை நடத்துவதற்காக பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் அடையப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>

பரீட்சை நடத்தப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும், மதிப்பீட்டுச் செலவுகள் நீங்கலாக, விண்ணப்பித்து வராத மாணவர்களுக்காக பல கோடி ரூபாய் வீணாக செலவிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T02:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548"></link>
            <id>https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><h2>மின் கசிவு</h2><p>இன்று போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da1739c-f050-4de6-a457-181f5f01a781/26-6a94d0d9e17e3.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T02:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டதாரி யுவதியை கடத்திய காதலன்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென்ற காதலனை கைது செய்ய&nbsp;இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சந்தேகநபரான, அப்பெண்ணின் காதலனை கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>காரை நோக்கி துப்பாக்கிச்சூடு&nbsp;</h2><p>இதன்படி, நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef91a40b-06a5-4d9f-a16f-a17c54976805/26-6a94e063840a2.webp' /></p><p>
</p><p>
எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே&nbsp; யுவதியின் காதலனால் கடத்தப்பட்டமை தெரியவந்திருந்தது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வெளியான காரணம்</span></p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>இதன்படி, சந்தேகநபரை , கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>இச்சம்பவம் தொடர்பாக குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அரியணை ஏற துடிக்கும் ராஜபக்ச அணி.. ரில்வின் சில்வாவின் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764</id>
            <summary type="text">பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க
மாட்டார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா
தெரிவித்தார்.
</p><p>
சிறந்த திட்டமிடலுடன் தற்போதைய அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
என்றும், வெளியகத் தாக்கங்களினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள்
தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் உருவாக்கிய தேசிய மக்கள் சக்தி
அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது.</p><h2>பொருளாதார நிலை&nbsp;</h2><p> </p><p>எனினும், சகல
வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம்.

வங்குரோத்து நிலையடைந்து வீழ்ச்சியடைந்த அரச கட்டமைப்புடனான அரசையே ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8d6caa-bd83-4343-9ef5-fb5b163bf94a/26-6a94cd3e60e93.webp' /></p><p>
</p><p>
கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாளக் குழுக்களுக்கும் அரச
அனுசரணை வழங்கப்பட்டிருந்ததுடன் செல்வந்தர்கள் எவ்வித அச்சமுமின்றி ஊழல்,
மோசடிகளில் ஈடுபட்டனர்.
</p><p>
தற்போது அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக
ஆக்கப்பட்டுள்ளது. பிரபுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த
விசேட சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக
ஒன்றிணைந்துள்ளனர்.</p><p> ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அது அவர்களின்
தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினை அல்ல.

அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஒருசில தரப்பினரிடம் குறைபாடுகள் காணப்படுவதை
அவதானிக்க முடிகின்றது.</p><p> கடந்த கால மோசடியான நிர்வாகக்மைப்புக்குப்
பழக்கப்பட்டவர்கள் குறித்தும் நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:46:33+00:00</updated>
        </entry>
    </feed>
