<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-30T03:34:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649"></link>
            <id>https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவினால் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b861472-8b59-44d8-a895-acba8c660619/26-6a93a3eb377e9.webp' /></p><p> 
இதன்போது பரிசோதிக்கப்பட்ட 56 முக்கிய அம்சங்களில், 46 அம்சங்களில் உயர் மட்டத்திலான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>சைபர் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து முக்கியமான ரகசியத் தகவல்களைத் திருடுதல், நாடாளுமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதள உள்ளடக்கங்களைச் சிதைத்து நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற ஆபத்துகள் நிலவுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் உடனடியாகத் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T03:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashwesuma-payment-for-new-beneficiaries-1788060466"></link>
            <id>https://tamilwin.com/article/ashwesuma-payment-for-new-beneficiaries-1788060466</id>
            <summary type="text">அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.
சமூகநலன்புரி சேவைகள் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.</p><p>
சமூகநலன்புரி சேவைகள் திணைக்களம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><h2>மூன்றாம் கட்ட பயனாளிகளின் தெரிவு</h2><p>
</p><p>
அஸ்வெசும கொடுப்பனவுக்கான மூன்றாம் கட்ட பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8de9d98a-63df-4b40-913c-9030bb93240e/26-6a93a334c7d81.webp' /></p><p>
</p><p>
அதன்போது அடையாளம் காணப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கான கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் பரவும் தகவல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palma-milk-yogurt-price-1788054406"></link>
            <id>https://tamilwin.com/article/palma-milk-yogurt-price-1788054406</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கமளித்துள்ளது. </p><p>

முக்கிய செய்தி என குறிப்பிட்டு, பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>இவை உண்மைக்கு புறம்பானவை என்றும், அவ்வாறான செய்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர்வதை தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1029140-4007-4fde-8aa3-52ef58897d8a/26-6a9397ea35538.webp' />&nbsp;</p><p>இவ்வாறான&nbsp; போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படவும், சந்தையில் தவறான புரிதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

எனவே, சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக்கட்டா வாய்திறந்தால் இலங்கை அரசியல் வரலாறே தலைகீழாக மாறும்!முன்னாள் அமைச்சர் பெற்றுக் கொண்ட 5 கோடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112"></link>
            <id>https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் முன்னாள் அமைச்சரோ அல்லது அவரது செயலாளரோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>டுபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான மிதிகம ருவன் அளித்த வாக்குமூலத்திலேயே இது வெளிவந்துள்ளது. </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பணம் கைமாறப்பட்ட விதம்</span></p><p>
"அமைச்சரிடம் சொல்லி இந்த வேலையை முடித்துக்கொள்ளலாம், அவர் ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்" எனக்கூறி இந்த பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0a7ab5-1e91-4a39-bfc0-d9c2ebdf9289/26-6a9392327fb09.webp' /></p><p>ஆனால், பணம் பெற்றபோது அந்த நபர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை என்றும், ஜனாதிபதியுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், இது முன்னாள் அமைச்சருக்கு தெரிந்தே நடந்ததா அல்லது அவருக்கு தெரியாமல் நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>மிதிகம ருவன் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி ஆகியோரிடம்&nbsp;தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள "பணம் கேட்கிறார்கள், பணத்தைக் கொடுங்கள்" என்று கூறியவர் ஹரக் கட்டா என்பதும் தெரியவந்துள்ளது.</p><h2>பின்னணியில் நடந்த&nbsp;உண்மைகள்</h2><p> குற்றப்புலனாய்வுத்துறையின் காவலில் இருந்தபோது, அங்கிருந்த தொலைபேசியை பயன்படுத்த ஒரு அழைப்பிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முறைப்பாடுகளும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26701233-523e-4902-bf48-5327ba511d1e/26-6a93a1017cfc2.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் நதுன் சிந்தகவே முக்கிய சாட்சி என்றும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் எதுவும் பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>எனவே, ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் இலங்கை வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும், பின்னணியில் நடந்த உண்மைகள், இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்றும்&nbsp;தெரிவிக்கப்படுகிறது</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T02:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த இளம் யுவதியை கடத்த முயன்றவர், அப்பெண்ணின் காதலரே என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸ் அவசர அழைப்பு</h2><p>நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a6f085-9f02-4328-8995-52d3484801be/26-6a9391783fcd0.webp' /></p><p> இந்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><p>நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

&nbsp;&nbsp;</p><p>இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிழலயில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>கடத்தப்பட்டமைக்கான காரணம்</h2><p>அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த யுவதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29b89631-0285-42e8-83be-f6c5e15df985/26-6a939178e5051.webp' /></p><p>அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், மாத்தறையில் உள்ள வெலிகம மற்றும் மிடிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக யுவதி தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>யுவதியை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட யுவதி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p>


குறித்த கார் கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞருக்கு சொந்தமானது எனவும், அந்த காரை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவுக்கு ஓட்டிச்சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T02:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளைஞர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913"></link>
            <id>https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம், பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய
இளைஞர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;&nbsp;</h2><p> </p><p>இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d17fd2c-fb70-4275-aaf2-e21f327395db/26-6a937eacc4739.webp' /></p><p>
தம்பலகாமம் பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள
திருகோணமலை - கண்டி பிரதான வீதியிலேயே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
மேற்படி இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கிச்
சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் இன்று மாபெரும் சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.
</p><p>
மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம்
மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை
நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின்
நினைவுபடுத்தலோடு கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா
கலையரங்கைச் சென்றடையவுள்ளது.</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், காணாமல் போனோர்
விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a204ea-5f66-4452-ba35-3df80ff64581/26-6a937b41b6aac.webp' /></p><p>

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்
கட்சிகள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவைத்
தெரிவித்துள்ளனர்.</p><p>

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாளுவதற்கோ
அல்லது நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகளும்
இல்லை என்பதால், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலுவாக
வலியுறுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:41:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு - சஜித் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-blames-anura-government-1788034982"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-blames-anura-government-1788034982</id>
            <summary type="text">தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் கலந்துகொண்ட சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய கலந்துரையாடலை அடுத்து,
அரசு இந்த இரு தரப்பினரையும் கண்டி 'சஹஸ் உயன' பகுதிக்கு அழைத்து கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது.</p><h2>அரசின் வாக்குறுதி&nbsp;</h2><p> </p><p>இருப்பினும், அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677fe9b9-9ce4-412f-a455-70f2f8ec4f4f/26-6a933fa789227.webp' /></p><p>
</p><p>
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை 'சமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள்' எனப் பெயர் மாற்றுவதை மட்டுமே அரசு செய்துள்ளது. மார்ச்
மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது
இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p>
தேர்தல் சமயங்களில் இவர்களை நெறிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன
சூரிய ஆரச்சியும் இந்த இரு தரப்பினரையும் ஏமாற்றியுள்ளார்.
</p><p>
அரசு இவர்களை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே
மறக்காது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத்
தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:32:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் ரவி கருணாநாயக்க - பெயரை மாற்றிக்கொண்டு அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-karunanayake-arjuna-mahendran-cid-1788027210"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-karunanayake-arjuna-mahendran-cid-1788027210</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.பல முறை விசாரணைக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.</p><p>பல முறை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அதிகாரிகள் வீட்டிற்கே அவரை தேடிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
</p><p>
நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு நேற்று (29) அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் முன்னிலையாக தவறியதால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.</p><p>இதேநேரம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான&nbsp;அர்ஜுன மகேந்திரன்&nbsp;சிங்கப்பூரில் பெயரை மாற்றி தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2ez6PO9vbeA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலகாரணம்! வெளியிடப்படாத பல சர்ச்சைகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.பூஜித் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.</p><p>பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கடமை தவறியமை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுமானால் சட்டமா அதிபர் திணைக்களத்தின்அலட்சிய போக்குக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவற்றை நாம் கேள்விக்குட்படுத்தக் கூடாதா? என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் மயிர்க் கூச்செறியும் தகவல் ஒன்றை அவர் வெளியி்ட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்ட தகவல்கள்..
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரிடம் கோரப்பட்ட ஆலோசனை</h2><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக் கோரி அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான மேற்பார்வையும் ஆர்வமும் காட்டவில்லை என்பதை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஆராய்ந்தது அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு:
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 2017 ஜூன் 07 திகதியிட்ட கடிதம் மூலம் C18/2017 எனும் கோப்பைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. </p><p>அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபரிடம் கேட்டுக் கொண்ட ஆலோசனையானது: "தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்ய முடியுமா மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?" என்பதாகும்.
</p><p>அப்போது அந்தப் துறைக்கு பொறுப்பான மேற்பார்வை அதிகாரியாக இருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி அசாத் நவாமிக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b2fb36-e143-4932-a9d4-840ccc352878/26-6a92d348e1528.webp' /></p><p>ஆனால் 15 ஜூன் 2017 ஆகும் போதே இந்தக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அசாத் நவாமி அதை அராய்ந்து பார்க்குமாறு அரச சட்டத்தரணி மலிக் அஸீசுக்கு குறிப்பொன்றை இட்டு பாரப்படுத்தியுள்ளார்.
</p><p>மீண்டும் (TID) 2018 ஜூன் 14 ஆம் திகதியிட்ட குறுந்தகடு (CD) மற்றும் மற்றொரு ஆவணத் தொகுப்பை அனுப்பும் வரை இந்தக் கோப்பு குறித்து எந்தவொரு கவனமும் செலுத்தப்பட்டதாக குறிப்பில்லை. </p><p>அப்படியானால், 15 ஜூன் 2017 அன்று கிடைத்த கோப்பு, 14 ஜூன் 2018 வரை எந்தவொரு கவனமும் செலுத்தப்படாமல் இருந்துள்ளது என்பது விசாரணை ஆணைக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>
மேலும் அரச சட்டத்தரணி மலிக் அஸீஸ் (TID)யால் அனுப்பப்பட்ட கோப்புக்கு முதலாவது குறிப்பு 12 மார்ச் 2019 அன்றே இடப்பட்டுள்ளது. </p><h2>தாமதத்திற்கான காரணங்கள்</h2><p>அதற்குள் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைத்து ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. 
இந்த அத்தியாயத்தைப் படிக்க முடியாதவர்களுக்காகவே நான் இதனைக் கூறுகிறேன்: </p><p>இந்தக் கோப்பைக் கையாள்வதில் அரச சட்டத்தரணி அஸீஸ் தரப்பில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களிலிருந்து தெரியவருகிறது.</p><p><span style="color: inherit;">அரச சட்டத்தரணி அஸீஸின் சாட்சியம் மற்றும் ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களைக் கருத்திற்கொண்டு,அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவிற்குப் (Public Service Commission) பரிந்துரைக்கப்பட்டுள்து.</span></p><p>அதேபோல், C18/2017 கோப்பை அஸீஸிடம் ஒப்படைத்த பிறகு அக்கோப்பு தனக்குக் கிடைக்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாமி கூறுகிறார். </p><p>ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இக்கோப்பு பற்றி அவர் அறிந்துள்ளாராம். 
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆரம்பக்கட்ட தாமதத்தை நாம் ஈஸ்டர் விசாரணையில் எங்குமே காணவில்லை.
</p><p>தாக்குதல் நடப்பதற்கு முன்னரே நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அந்த நபர்களைக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஆலோசனை கேட்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் முக்கிய விருது பெற்ற ஈராக்கிய முன்னாள் அமைச்சரின் அமெரிக்க விசா இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-iraqi-minister-us-visa-revoked-1788035257"></link>
            <id>https://tamilwin.com/article/former-iraqi-minister-us-visa-revoked-1788035257</id>
            <summary type="text">ஈராக்கின் முன்னாள் நிதி அமைச்சரான தாயிஃப் சாமி முகமது அல்-ஷகார்ஜியை
அமெரிக்கக் கூட்டாட்சிப் புலனாய்வுப் பணியகம் (FBI) பயங்கரவாதக் கண்காணிப்புப்
பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கின் முன்னாள் நிதி அமைச்சரான தாயிஃப் சாமி முகமது அல்-ஷகார்ஜியை
அமெரிக்கக் கூட்டாட்சிப் புலனாய்வுப் பணியகம் (FBI) பயங்கரவாதக் கண்காணிப்புப்
பட்டியலில் சேர்த்துள்ளதைத் தொடர்ந்து, அவரது அமெரிக்க விசாவை அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களம் இரத்து செய்துள்ளது.</p><p>

அவர் தற்போது அமெரிக்காவில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள்,
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளனர்.</p><h2>முக்கிய விருது..&nbsp;</h2><p>
</p><p>
ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாலின சமத்துவப் பணிகளுக்காக கடந்த நான்கு
ஆண்டுகளுக்கு முன்னர் (2022 இல்) அமெரிக்காவால் 'சர்வதேசத் தைரியமிக்க பெண்'
விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒருவருக்கு, தற்போது விசா இரத்து
செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a81e9d6-54a1-447d-beb8-b7513d2abf08/26-6a9340bac0047.webp' /></p><p>

ஈராக்கின் நிதியமைச்சராகப் பணியாற்றிய தாயிஃப் சாமி, நாட்டின் வரவு செலவுத்
திட்ட ஊழல்களைத் தடுத்தமைக்காக 'இரும்புப் பெண்மணி' என அழைக்கப்பட்ட போதிலும்,
ஈராக்கிய நிதி அமைப்பின் மூலம் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு வழிவகுத்ததாக
அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
</p><p>
இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள
முன்னாள் நிதியமைச்சர் தாயிஃப் சாமி, பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில்
தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை எனக்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:50:46+00:00</updated>
        </entry>
    </feed>
