<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-07T15:25:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனை: மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல் - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586"></link>
            <id>https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586</id>
            <summary type="text">யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(06.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2> 



மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல்</h2><p>

சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில்,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7f45fb1-f50c-4c7f-9540-6f71436b60c0/26-6a9ecf589f5e4.webp' /></p><p> </p><p>

இதன் அடிப்படையில், குறித்த பகுதியை நேற்று(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர்.</p><p>

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த நிலையில், குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன், விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; </p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான நபர் - நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கொலை சம்பவம் தெஹிவளை ஓபன் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியில் இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளார். </p><p>

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் உறவினரான பூத களுவா என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

குத்தி கொலை</b></h2><p>நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உறக்கத்தில் இருந்த களுவா மீது கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7321441-bbe1-4e71-b2ea-c6cc96912148/26-6a9eca660dd26.webp' /></p><p>படுகாயம் அடைந்த களுவா, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jaiQIN4g2fs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கூடும் நாடாளுமன்றம் - நாமலின் கோரிக்கையை ஏற்ற அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248"></link>
            <id>https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248</id>
            <summary type="text">புதிய இணைப்புஎதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.
</p><p>
குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p>

இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d2640a-6529-4038-b850-e74d42007f3b/26-6a9ec357be6b5.webp' /></p><p>
</p><p>
இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற அமர்வுகள்..&nbsp;</h2><p>
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை பொதுஜன பெரமுன விடுத்த இந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கை, தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6864ee0e-bf63-453b-8acc-53fea132c400/26-6a9ea6a95bc25.webp' /></p><p>

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MSY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uEYkPlSoXv8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லை! முக்கிய சேவைகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-more-trips-govt-offices-anura-kumara-says-1788786027"></link>
            <id>https://tamilwin.com/article/no-more-trips-govt-offices-anura-kumara-says-1788786027</id>
            <summary type="text">நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதற்காக அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் 4G அலைவரிசை சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய சேவைகள்..&nbsp;</h2><p>
இதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், காணி உரிமப் பத்திரப் பரிவர்த்தனைகள் மற்றும் வாகன வருமான உரிமங்களைப் பெறுதல் உள்ளிட்ட முக்கிய அரச சேவைகள் அனைத்தும் இணையவழியில் (Online) மாற்றப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109770d1-49d9-4992-958d-d4b97744f153/26-6a9eba3d1beda.webp' /></p><p> </p><p>மேலும், நாடு முழுவதும் 4G வலையமைப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 புதிய 4G கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதில் 250 கோபுரங்களின் பணிகள் அடுத்த ஆண்டிலேயே நிறைவுசெய்யப்படவுள்ளன. </p><p>நெடுஞ்சாலைகள் மற்றும் தொடருந்து மின்மயமாக்கல் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு அங்கமாகவே இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qb6I0-FcAr4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய கூடாரங்களுக்குள் கூட்டங்களை நடத்தும் நிலையில் அநுர அரசு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-govt-holding-meetings-inside-small-tents-1788783376"></link>
            <id>https://tamilwin.com/article/anura-govt-holding-meetings-inside-small-tents-1788783376</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசு, ஆட்சியைப்
பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் மக்கள் ஆதரவை இழந்து, ஒரு
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசு, ஆட்சியைப்
பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் மக்கள் ஆதரவை இழந்து, ஒரு
சிறிய கூடாரத்துக்குள் கூட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித்
தலைமையகத்தில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பொருளாதார நிவாரண அறிவிப்புகள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"புளத்சிங்ஹலவில் ஆரம்பிக்கப்பட்ட அரசின் முதலாவது பேரணியில் நாற்காலிகளை
இடைவெளிவிட்டுப் போட்டு ஒரு சிறிய கூடாரத்துக்குள்ளேயே கூட்டம்
நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5327b2d3-e392-4d73-a1c2-8ce28738d796/26-6a9eb691be1eb.webp' /></p><p> ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில்
பிரம்மாண்ட கூட்டங்களை நடத்திய இவர்கள், தற்போது 1,800 முதல் 2,000 பேருக்கு
மேல் சேர்க்க முடியாத ஒரு கூடாரத்துக்குள் கூட்டத்தை நடத்திவிட்டு மக்கள்
கூட்டம் வந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.</p><p>அரசின் வீழ்ச்சியையும் மக்கள் ஆதரவு இன்மையையுமே இது வெளிச்சம் போட்டுக்
காட்டுகின்றது.
</p><p>
இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த மக்கள் ஜனாதிபதியிடமிருந்து ஏதேனும்
பொருளாதார நிவாரண அறிவிப்புகள் வரும் எனப் பெரிதும் எதிர்பார்த்தனர்.</p><p>எனினும்,
'திருடர்களைப் பிடிப்போம்' என்ற பழைய கதைகளையே மீண்டும் கேட்க
வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.</p><h2>எதிர்க்கட்சி ஒருபோதும் பயப்படாது</h2><p> </p><p>முன்பெல்லாம்
ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு உற்சாகமாக ஆரவாரம் செய்த மக்கள், தற்போது
கைதட்டுவதற்குக் கூட முன்வரவில்லை. அமைப்பாளர்களே கேட்டுக்கொண்ட பின்னரே
கைதட்டும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1554a1-3d8e-4554-af70-bf478314fc4a/26-6a9ebabdc4c20.webp' /></p><p>நாட்டில் மக்கள் குடிநீரின்றியும் உணவின்றியும் தவிக்கும் சூழலில், தங்களின்
மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு வேலை செய்யாமல், இவ்வாறான
கூட்டங்களுக்குப் பணத்தை வீணடிப்பதை விடுத்து மக்களுக்குக் குடிதண்ணீர்
போத்தல்களையாவது வழங்கியிருக்கலாம். </p><p>அரசின் அடக்குமுறைக்கும்
அச்சுறுத்தல்களுக்கும் எதிர்க்கட்சி ஒருபோதும் பயப்படாது.
</p><p>
அரசுக்கு உண்மையான மக்கள் பலத்தைக் காட்டுவதற்காக, எதிர்வரும் 12ஆம் திகதி
அனுராதபுரத்தில் சிறிய கூடாரங்களுக்குள் அல்லாமல், மைதானங்கள் மற்றும் வீதிகள்
அடங்கலாக மக்கள் வெள்ளத்துடன் பிரம்மாண்டமான பேரணியை நடத்தித் காட்டவுள்ளோம்.
</p><p>அதில் கலந்து கொள்ளுமாறு நாட்டின் முற்போக்குவாத மக்களுக்கு அழைப்பு
விடுக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_Sofoe8xtQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:23:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியில் இலங்கை - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861</id>
            <summary type="text">இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர
அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாமல் ராஜபக்ச தனக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து
கொள்கின்றார்.</p><p> இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்களும், கேமன்
தீவுகளில் நடைபெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல்
ராஜபக்ச இணைந்து இருக்கும் புகைப்படங்களும் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.
</p><h2>
கப்பம் பெறும் ஊழல்வாதிகள்</h2><p>
கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில்
ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில
போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b81c9f-fc88-44e6-998c-fb372ca9f59f/26-6a9eb91841043.webp' /></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி, நாட்டுக்காகப் பெறப்பட்ட
கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது
தெளிவாகின்றது.
</p><p>
 எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன
நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். ஜே.வி.பி. இந்தியாவுக்கு முன் மண்டியிட்டுள்ளது என்று விமல் வீரவன்ச கூறுவது
அறியாமையாகும். </p><h2>

எரிபொருள் வாங்க டொலர் இன்மை...</h2><p>

நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை
உருவாக்கி, நாட்டை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியது
யார்?</p><p> தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டுக் குள் கொண்டுவந்து
நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு
அறிந்து வைத்துள்ளனர். 

இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயாராக இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98606de4-a1af-4d06-9285-5e738fb24868/26-6a9eb91915988.webp' /></p><p>
</p><p>
மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த
ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. </p><p>தற்போது சட்டமா
அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி
மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விவகாரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள&nbsp;விசாரணை </h2><p> 

இந்நிலையில், அஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச உதவியுடன் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c6952-b27e-4958-b1f2-cdfa9fd9fee8/26-6a9e584c51a7b.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கணக்கு விவரங்கள் போன்றவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
</p><p>
மேலும், விசாரணையின் போது, ​​நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் எயார்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>சந்தேகநபர்களுக்கு திறந்த பிடியாணை&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28650489-31c3-4f75-b672-3e511daf1bb2/26-6a9e584d02872.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து நாட்டிற்கு திரும்பக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த விசாரணையில், மற்றொரு சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கேள்விக்குட்பட்ட எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க எயார்பஸ் தாய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அதன்படி, விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எயார்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 3 முறை அந்நாட்டிற்குச் சென்று 4 வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T12:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026: பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-appeals-1788784682"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-appeals-1788784682</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மீதான மேல்முறையீடுகளை ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மீதான மேல்முறையீடுகளை ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை இன்று(07.09.2026) முதல் இடம்பெறும் என்றும் ஆணையாளர் நாயகம், ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
மாணவர்களுக்கான வாய்ப்பு</h2><p>
இதற்கமைய, இன்று முதல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை இதற்கான முறையீடுகளை செய்யலாம் என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb1d2e9-9c9f-4823-9e49-0e25ca3bae17/26-6a9eb36dbc073.webp' /></p><p> 

இந்த விடயத்தை முற்றிலும் இணையவழியில் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p> 

சம்பந்தப்பட்ட பரீட்சை, மாணவர் பயிலும் பாடசாலையின் முதல்வர், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk/index.php/slogin" target="_blank"><b>https://onlineexams.gov.lk</b></a>] என்ற இணையதளத்தில் உள்ள பாடசாலை உள்நுழைவில் (<a href="https://onlineexams.gov.lk/index.php/login" target="_blank">SCHOOL LOGIN</a>) உள்நுழைந்து இந்த மேல்முறையீட்டுக் கோரிக்கைகளை சமர்பிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 







 </p>]]></content>
            <updated>2026-09-07T12:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைதால் Gen Z தலைமுறை ஆத்திரமடைந்தார்களா..! ரணிலின் கருத்தை நிராகரித்த முக்கியஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437"></link>
            <id>https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டதால் 'Gen Z' தலைமுறையினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>மக்களிடம் பேச இதுவே காரணம்</h2><p>
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் 'Gen Z' தலைமுறையினர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p>பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டுவர பிற்போக்கு சக்திகள் சதி செய்தால் மட்டுமே 'Gen Z' தலைமுறையினர் அதற்கு எதிராகக் கொதித்தெழுவார்கள் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03576b35-0132-4882-8724-f343c38a70bf/26-6a9eafa7362dc.webp' /></p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு இளைஞர் தலைமுறையினரிடம் எதிர்ப்பில்லை என்றும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கே அது தொடர்பில் எதிர்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்ச மீதான விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்திடம் நன்மையும் தீமையும் ஆகிய இரு பக்கங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒருவித குழப்ப நிலையை உணர்ந்ததாலேயே தேசிய மக்கள் சக்தி மக்கள் பேரணிகளை நடத்தத் தீர்மானித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d76a1daa-16fe-4602-b6d9-c63c59dc9881/26-6a9eafa7de73a.webp' /></p><p>நாமல் ராஜபக்‌ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரதான காரணியாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனினும், நாமல் சிறையிலிருப்பது அந்த பேரணியைச் வெற்றிபெறச் செய்ய அவர்களுக்கு ஒருவகையில் உதவியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.</p><p>
அரசாங்கம் தற்போது அடிமட்ட அழுத்தத்தை உணர்ந்துள்ளதாலேயே மீண்டும் மக்களிடம் சென்று உரையாடலைத் தொடங்கத் தீர்மானித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டி சுட்டுவிட்டதென்று அடுப்பை தகர்க்க முனையும் ஈழத்தமிழர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eela-tamilar-recent-activity-1788776895"></link>
            <id>https://tamilwin.com/article/eela-tamilar-recent-activity-1788776895</id>
            <summary type="text">இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக போராடும் ஈழத் தமிழினம் தமது மனவிருப்புக்கு ஏற்றவாறோ, எழுந்த மாத்திரத்திலோ தமக்குரிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக போராடும் ஈழத் தமிழினம் தமது மனவிருப்புக்கு ஏற்றவாறோ, எழுந்த மாத்திரத்திலோ தமக்குரிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்க முடியாது.</p><p> அதேபோலவே உலகம் தழுவிய அரசியலில் உலகளாவிய ஆதரவைப் பெற பொருத்தமானதும், பிராந்திய சக்திகளினாலும், சர்வதேச வல்லமை வாய்ந்த சக்திகளாலும் விரும்பக்கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையை புவிசார் அமைப்பிடம் சார்ந்தும், அண்டை நாடுகள் சார்ந்தும், பிராந்தியம் சார்ந்தும் மிகக்கவனமாக ஆராய்ந்தே வெளியுறவுக் கொள்கையை வகுக்கவேண்டும். </p><p>

அவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையில் ஒரு வெளியுறவுக்கொள்கை வகுக்கப்பட்டால் மாத்திரமே ஈழத் தமிழர்களை தேசியஇனம் என் அடையாளப்படுத்த முடியும்.</p><h2>ஈழத் தமிழர்களின் விடுதலை</h2><p> தேசியஇனம் என்பதற்கு அந்த இனம் உலகம் தழுவிய அரசியலில் சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணவும், அதனை வளர்த்துச் செல்லும் அரசியல் இராஜதந்திர முதிர்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. </p><p>சரியான வெளியுறவுக் கொள்கையை வகுக்க தவறின் ஈழத்தமிழர் தேசிய இனம் தகுதியையும் இழந்து விடுவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதவக்கூடிய உறவுகளை இனம் கண்டு உறவாடுவதுதான் வெளியுறவு கொள்கை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5a2871-3d86-4884-828c-2a685caa8d25/26-6a9e9702e4427.webp' /></p><p>இங்கே சாத்தியங்களின்&nbsp;அடிப்படையில் சாத்தியப்பாடானவற்றை அணுகி சாத்தியப்படுத்தும் வித்தைதான் இராஜதந்திரம். </p><p>ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களுடைய வெளியுறவுக் கொள்கையில் புவிசார் அமைப்பிடம் மிக முக்கியத்துவமானது.</p><p> அதனடிப்படையில்தான் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் தாயகநிலத்தின் அமைவிடத்தை மாற்ற முடியாது. இந்த புவியியல் அமைவிடத்தை வைத்துக்கொண்டு பிராந்தியம், சர்வதேசம் என்ற அடிப்படையில் எவற்றை மேம்படுத்த முடியுமோ அவற்றை மட்டுமே மேம்படுத்த முடியும்.</p><p> அவ்வாறு படிப்படியாக மேம்படுத்தியே மேல்நிலைக்குச் சொல்ல முடியும். அதை விடுத்து மனம் போனபோக்கில், மனவிருப்புகளின் அடிப்படையில், ஏட்டிக்கு போட்டியான வெளியுறவுக் கொள்கையோ, சர்வதேச உறவுகளையோ கட்டு வளர்க்க முடியாது. </p><p>இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டுதான் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகளும், தனி நபர்களும், நலன்விரும்பிகளும், அறிஞர்களும் செயற்பட வேண்டும்.</p><p>

 சிங்கமும், புலியும் வாழும் காட்டில்தான் மான்களும், முயல்களும், குரங்குகளும், சிறு விலங்குகளும் வாழ்கின்றன. பாம்புகள் உள்ள பற்றைகளில்தான் தவளைகளும், பூச்சிகளும், புழுக்களும் வாழ்கின்றன. </p><p>ஆயினும் அவையவை தமக்குரிய பாதுகாப்பு எல்லைக்குள் இருந்து கொண்டு தம்மை தற்காத்து வாழ்கின்றன. இந்த அடிப்படை விலங்கியல் அறிவை பார்த்தாவது ஈழத்தமிழர்கள் தமக்குரிய இருப்பை, தமக்குரிய பாதையை, தமக்குரிய பாதுகாப்பை வடிவமைக்க வேண்டும். </p><p>காட்டில் சிங்கம், புலி இருப்பதற்காக மான்களும், முயல்களும் காட்டைவிட்டு வெளியேறுவதில்லை. கடலிலே திமிங்கலம் இருக்கின்றது என்பதற்காக கடல் உள்ள மீன்கள் எல்லாம் தரைக்கு படையெடுப்பதில்லை.</p><h2>பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகள்</h2><p>அவ்வாறே எதிரிகளும், நண்பர்களும், துரோகிகளும், கயவர்களும் நிறைந்த இந்த சர்வதேசத்தில் அவரவர் தமக்குரிய பாதுகாப்பை அறிவார்ந்து வகுத்துக்கொள்வது வாழ்விற்கு வழிசமைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83d9206d-5567-40b0-9524-649cffccf923/26-6a9e9703a7f24.webp' /></p><p>அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது. ஆயினும் அரசியலுக்கு புவிசார் அமைவிடம் மிக முக்கியமானது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் யார் நிரந்தர நண்பன்? யார் எதிரி? யார் பகைவன்? யார் தற்காலிக பகைவன்? யார் அரைவழி நண்பர் என்பதை தீர்மானிக்க வேண்டும். </p><p>அதுவே அரசியல் இராஜதந்திர அறிவின் முதிர்ச்சியை வெளிக்காட்டுவதாக அமையும்.</p><p>

ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருக்கும் நிலையில் தமிழர்களுக்கு இழைக்கப்பபட்ட மிகப்பெரும் மனித பேரவலமும், இனப்படுகொலையும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அரசியல் தளத்தை தந்துள்ளது. அதனை பயன்படுத்தி சர்வதேச ஆதரவை பெறக்கூடிய சாத்தியமான சூழல் உண்டுதான்.</p><p> ஆயினும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று ஆசிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. </p><p>அதேநேரம் அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளும், பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் இந்த நாடுகளில் அந்த அமைப்பு இயங்குவதற்கு தடை ஏற்பட்டுவிட்டது. </p><p>இந்தத்தடை என்பது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கு என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் இந்த பயங்கரவாத பட்டியல் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான தமிழீழ மக்களுக்கான தடையாகவே நடைமுறையில் செயற்படுகிறது.&nbsp; </p><h2>சர்வதேச அரசியல் நகர்வுகள்</h2><p>இத்தடை புலம்பெயர்ந்த தேசங்களில் ஒரு ஜனநாயக வழி போராட்டங்களை நடத்துவதற்கும், சர்வதேச அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் பெரும் இடைஞ்சலாக உள்ளது. </p><p>அவற்றைத் தாண்டியும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அரசியலில் தமக்கான வகிவாகத்தை வகிக்கிறார்கள்தான். ஆயினும் புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருக்கும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7340e09d-02e6-4ea3-a005-cde28690bd9d/26-6a9ea105c2e5f.webp' /></p><p>அவர்களால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் கடந்த 17 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு நாட்டில் ஈழத்தமிழருக்கான ஆதரவை பெறமுடியவில்லை. </p><p>அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஏதாவது ஒரு நாட்டில்கூட நீக்க முடியவில்லை. அத்தோடு ஐ.நா மற்றும் சர்வதேச அரசியலில் நீண்ட காலமாக தமிழர்களுக்கு சார்பான பெரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த முடியவில்லை. </p><p>இது ஈழத்தமிழர்களின் புலம்பெயர் கொள்ளளவுக்கு ஏற்றளவு அவர்களுடைய அரசறிவியல் முதிர்ச்சியும், சர்வதேச செல்வாக்கின் அடைவிள் அளவும் பின்தங்கியுள்ளதையே காட்டுகிறது. </p><p>


இத்தகைய சூழலில் தற்போது ஹொங்கொங்கில் உள்ள The Chinese University of Hong Kong (CUHK)ன் சட்ட பீட பேராசிரியர் அலெக்ஸ் கிரீன் (Faculty of Law Professor Alex Green) தலைமையில், நாடுகடந்த தமிழீழ அரசுடன்(TGTE) இணைந்து “இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை(postdoctoral research project) மேற்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது. </p><p>அதில் ஆய்வாவளர் தகுதிநிலையாக</p><p>
1)History அல்லது Public International Law-ல் PhD பெற்றவராக இருக்க வேண்டும்.</p><p>2)இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான பின்னணி விரும்பத்தக்கது.
</p><p>3)வரலாற்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
</p><p>4)Legal மற்றும் policy briefs எழுதுவதில் பங்கேற்க வேண்டும்.
</p><p>5)சர்வதேச academic publications-க்கு ஆய்வுகளைத் தயாரிக்க வேண்டும்.
</p><p>6)TGTE மற்றும் பிற project stakeholders உடன் பணியாற்ற வேண்டும்.
</p><p>7)ஆரம்ப நியமனம் ஆறு மாதங்கள்; Hong Kongஇல் நேரடியாகப் பணியாற்ற வேண்டும் என தமிழீழ சுயாதீன அரசு தொடர்பான ஆய்வாளர்களுக்கான அடிப்படை தகுதி அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>தனியான தமிழரசு உருவாகுவதற்கு</h2><p>
இந்த CUHK ஆய்வு உண்மையில் என்ன? என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586ff65f-bb73-4104-a246-f9677e32d0ad/26-6a9ea1069f712.webp' /></p><p>இந்த ஆய்வின் பொருள், இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாவதைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் மற்றும் சர்வதேச சட்ட விவாதங்கள், புதிய அரசை உருவாக்குவதற்கு எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக(objective academic assessment) ஆராய்வதாகவும், கொங்கொங் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பாகவும் இது உள்ளது.
</p><p>
இந்த ஆய்வின் மையக் கேள்வி ஒரு தனியான தமிழரசு உருவாகுவதற்கான சர்வதேச சட்ட மற்றும் அரசியல் அடித்தளம் என்ன? என்பதாக இருக்கிறது. </p><p>பேராசிரியர் அலெக்ஸ் கிரீன், எழுதிய அரசியல் சமூகமாக அரசுரிமை: சர்வதேசச் சட்டமும் புதிய நாடுகளின் தோற்றமும், என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்,2024.(Statehood as Political Community: International Law and the Emergence of New States,&nbsp;Cambridge University Press, 2024.) நூலில் கிரீன் முன்வைக்கும் முக்கியக் கோட்பாடு, புதிய அரசு உருவாகுவதற்கு வெறும் பிரதேசம்(territory), மக்கள் தொகை,(population), அரசாங்கம்(government) போன்ற பாரம்பரிய அளவுகோல்கள் மட்டும் போதாது.</p><p> அது ஒரு “உண்மையான அரசியல் சமூகம்”(“genuine political community”)ஆக இருக்க வேண்டும் என்றும், அந்த அரசியல் சமூகத்தின் உருவாக்கம் தனிநபர்களின் அரசியல் நடவடிக்கை(political action) அறம் நெறிமுறை சார்ந்த முக்கியத்துவத்துடன் (ethical importance) ஒத்துப்போக வேண்டும் என்றும் வாதிடுகிறது. </p><p>அவர் இதனை அரசு உருவாக்கம் குறித்த குரோஷியனின் கோட்பாடு(Grotian theory of state creation)எனக் குறிப்பிடுகிறார். </p><p>அரசியல் சமூகம், சர்வதேச சட்டம், மற்றும் புதிய அரசுகளின் எழுச்சித் தத்துவார்த்த கட்டமைப்பை உருவாக்கிய அவர் அதனை இலங்கைத்தீவிற்குள் தமிழீழ தனியரசு உருவாக்கத்திற்கு தனது தத்துவத்தை பயன்படுத்தி பரீட்சித்துப்பார்க்க முனைவது நல்ல விடயம்தான்.</p><p>ஆனால் சீனப் பல்கலைக்கழகமும்(CUHK) சட்டப் பேராசிரியர் அலெக்ஸ் கிரீன்(Alex Green), TGTEயும் அணைந்து மேற்கொள்ளப்போவதாக குறிப்பிடப்படும் சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாக்கத்திற்கு தற்போதைய அரசியல் மற்றும் எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை(legal challenges) குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக ஆய்வு செய்வதற்காக இந்த சீனப் பல்கலைக்கழகம்(CUHK) ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? என்ற முக்கிய விழிப்புணர்வுக் கேள்வி எழுகிறது. </p><p>அத்தோடு பிரித்தானியாவில் University College London, University of York, University of Cambridge, London School of Economics and Political Science போன்ற பிரசித்திபெற்ற international-law மற்றும் political-theory academic institutions இருக்கின்றபோதும் இந்த குறிப்பிட்ட ஆய்வு பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலுள்ள, New York University, Harvard University, Yale University, Columbia University&nbsp;போன்றவற்றிலோ, கனடாவில் உள்ள University of Toronto, McGill University, University of British Columbia போன்ற பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களிலோ நடத்தப்படாமல் Hong Kongல் உள்ள CUHK ல் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன? </p><p>இதற்கான விடையைத் தேடி அறிவுசார்ந்தும், அரசியல்த் தத்துவவியல் சார்ந்தம் சிந்திப்பது அவசியம்.
</p><p>
இத்தகைய ஆய்வென்றை செய்யமுன்வந்ததற்காக CUHK தமிழீழத்தை ஆதரிக்க முடிவு செய்துவிட்டது என்று ஈழத்தமிழர் எண்ணுவது வடிகட்டிய முட்டாள்த்தனமாகும். </p><h2>சீனா அரசுடன் இலங்கை அரசு</h2><p>இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அதிகாரப்பூர்வ CUHK அறிவிப்பு இதனை சார்பற்ற கல்விசார் மதிப்பீடு(objective academic assessment ) என்றுதான் வரையறுக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23fa8bc-41b1-4110-8787-8ad38d3a0e00/26-6a9ea2c8b731d.webp' /></p><p>அதே நேரத்தில், “சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று தமிழீழ அரசுரிமை குறித்து TGTE உடன் இணைந்து ஆய்வு செய்கிறது” என்பது முற்றிலும் புவிசார் அரசியல் முரண்பாட்டைக்(geopolitical contradiction) கொண்டுள்ளது என்பதனால் இது குறித்த ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது அவசியமானது.</p><p> அதைவிடுத்த இதனை ஆகா ஓகோ எனப் புழகாங்கிதமடைவது ஈழத்தமிழர் தமக்கான பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதாகவே அமையும்.
</p><p>
சீனா அரசு இலங்கை அரசுடன் நீண்டகால நெருக்க உறவை கொண்டுள்ளது, சீனா பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்து மாறாத பாரம்பரிய நிலைப்பாட்டை கொண்டது. </p><p>அதேசமயம Hong Kong சீனாவின் இறையாண்மைக்குட்பட்டது. ஆனால் இந்த CUHK என்ற பல்கலைக்கழகம் தனித்தமிழ் அரசு குறித்த கல்வி ஆராய்ச்சியை TGTE என்ற சுதந்திர தமிழிழ அரசை ஸ்தாபிக்க முனையும் அமைப்புடன் இணைந்து&nbsp;செயல்படுகிறது என்பது விசித்திரம்தான். </p><p>இவற்றை ஒன்றாக இணைத்து ஆராய்ந்தால் இது ஒரு சாதாரண பல்கலைக்கழக ஆய்வைத் தாண்டி சர்வதேசச் சட்டம் + சுயநிர்ணய உரிமை + அரச அங்கீகாரம் + சீனா-இலங்கை புவிசார் அரசியல் + நாடுகடந்த தமிழரசியல்(international law + self-determination + statehood + China–Sri Lanka geopolitics + transnational Tamil politics) ஆகியவற்றின் தொகுப்பாக மாறுவது ஈழத்தமிழர் அரசியல் தற்கொலைக்கு தாயரிவிட்டார்கள் என்பதையே வெளிக்காட்டும்.
</p><p>
இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் இந்துசமுத்திரத்தின் அரசியல் பெரும் கொதிநிலையை அடைந்திருக்கிறது. ம</p><p>த்திய கிழக்கு யுத்தமும், இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ச்சியும், அதற்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் இந்தியாவின் கடல்சார் விஸ்தரிப்புகளும், அமெரிக்க கடற்படையின் இந்து சமுத்திர மேலாதிக்க நடவடிக்கைகள் என ஒரு புதிய மாற்றத்தை நோக்கி இந்துசமுத்திர அரசியல் நகர்கிறது. </p><p>இந்நிலையில் ஈழவிடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகள் யாருடன் கூட்டுச் சேர்வது? என்பது மிகமுக்கியமானது. சட்டி சுட்டு விட்டது என்பதற்காக அடுப்பை தகர்க்க முடியாது, தகர்க்கவும் கூடாது.</p><p> கடந்தால கசப்பான அனுபவங்கள் நிகழ்கால கூட்டிணைவிற்கு தடையாக இருக்கக் கூடாது. </p><p>இதனை ஜப்பானின் அமெரிக்க தொடர்பான வெளியுறவுக் கொள்கையிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கைத்தீவின் இருப்பிடம் இந்தியா உபகண்டத்திற்கு நெருக்கமாக அமைந்திருப்பதனால் அது எப்போதும் இந்திய பாதுகாப்பு வலயத்துக்குள் அகப்பட்ள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். </p><p>இந்நிலையில் இருந்து யாரை எதிர்ப்பது? யாரை நண்பனாக்குவது? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இந்தியாவை நாம் நண்பனாக்காவிட்டாலும்&nbsp;பரவாயில்லை ஆனால் பகைவனாக்ககூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.</p><p> இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கும், அதனுடைய பிராந்திய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் ஈழத்தமிழர்கள் ஈடுபடக்கூடாது.</p><h2>17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்கள்</h2><p>
</p><p>
சீனாவைப் பொறுத்தளவில் அது இலங்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்ட நாடு என்ற அடிப்படையிலும், அது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு கடல் நகரத்தையும் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவில் எந்த விரிசலும் ஏற்படப்போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d558befb-2cfa-45c5-ab84-0189d90c1162/26-6a9ea3f61c9f9.webp' /></p><p>இந்நிலையில் ஈழத் தமிழர்கள் சீனாவை நண்பனாக்க முடியும் என்றால் அதற்கான மூலோபாயம் என்ன? இலங்கை அரசு சீனாவுக்கு கொடுக்கின்ற நலன்களை விட ஈழத்தமிழர்களால் ஏதேனும் பெரிய நலன்களை இன்றைய நிலையில் சீனாவுக்கு கொடுக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை. </p><p>

அதேபோல போராட்ட காலத்தில் விடுதலைப் போராட்டம் சீனாவுடன் கொண்டிருந்த இரகசிய பின்கதவு உறவே இந்து சமுத்திரத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி புதைத்து விட்டது என்ற உண்மையை நாம் தெரிந்து அதனை உணர்ந்து கொள்ள வேண்டும். </p><p>அதேபோன்ற ஒரு தவறை இனியும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் சீனாவுடன் உறவை வளர்ப்பது என்பது அரிதிலும் அரிது என்பது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. ஆகவே சீனாவை எதிர்ப்பதை விட சீனாவை ஈழத்தமிழர்கள் தவிர்ப்பதே அவர்களுடைய எதிர்கால நலனுக்கு உகந்தது.</p><p>ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான ஐ.நா மனித உரிமை அவையிலன் தீர்மானங்களை சீனா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. </p><p>அத்தோடு ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை அது உள்நாட்டு பிரச்சினை என்றும், அது இலங்கையின் இறையாண்மைக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் சீனா சொல்கிறது.</p><p> கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்களுக்குள் எந்த ஒரு தமிழர்களையும் ஈழத்தமிழர் பிரச்சினை சார்ந்து பேசுவதற்கு உள்ளே அனுமதிக்கவில்லை என்ற கசப்பான உண்மையை இங்கு பதிவு செய்வது அவசியமானது.</p><p>

இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதில் உள்ள சர்வதேச சட்ட முறைமைகள் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்ய சீன பல்கலைக்கழகம் முன்வந்தால் அந்த ஆய்வுக்கு தமிழீழ விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர் அமைப்புக்கள் இணைத்து செய்யப்படக்கூடாது.</p><p> இதனை சுயாதீனமானவர்கள் மேற்கொள்ள வேண்டுமே தவிர் அமைப்புக்கள் சீனப் பல்கலைக்கழகங்களுன் இணைந்து செயல்படுவது மிகமிக ஆபத்தமான நிலைக்கே ஈழத்தமிழர்களை கொண்டு செல்லும். </p><p>அமைப்புகள் இணைகின்றபோது ஈழ விடுதலை அமைப்புகள் சீனாவுடன் கூட்டிச்சேர்கின்றன என்ற சர்வதேச பார்வை ஒன்று தோன்றும். அது ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்குலகத்தையும், இந்தியாவையும் ஓரணியில் நிற்க வைக்கும்.</p><h2>தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம்</h2><p> </p><p>வெறும் ஒரு பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுசரணையாக நிற்பதன் மூலம் மேற்குலக சீற்றத்தையும் அழுத்தத்தையும் தமிழர்களுக்கு எதிராக திருப்பிவிடும் சூழலையே அது தோற்றுவிக்கும். </p><p>இதனை தமிழர் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதுமட்டுமல்ல ஈழத் தமிழருடைய வேணாவாவாக தமிழ் ஈழத் தனியரசை அமைப்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aabdb241-ec4f-445d-8b04-59b0e2f7c76d/26-6a9ea686989c8.webp' /></p><p> </p><p>இத்தகைய இலட்சியத்தை கொண்டிருக்கிறபோது சீனப் பல்கலைக்கழகம் ஒன்று&nbsp;“இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை அறிவிப்பு செய்கின்றபோது அதனை நோக்கி ஏராளமான தமிழிழ விரும்பிகளும், தேச நிர்மாணிகளும், கல்விமான்களும் செல்லவர்.</p><p> அவர்களை இலங்கை அரசு இனங்காண்பது இலகுவாகிவிடும். அத்தோடு இந்த ஆய்வு எந்தப் பலனையும் இறுதியில் தராத பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அனைவரும் விரக்தி அடைந்து தமிழீழ விடுதலை என்ற அந்த இலட்சிய பாதையில் இருந்து விலகிச் செல்வதற்கும் அது வழிவகுக்கும். </p><p>

நான்கு நுாற்றாண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம் இனியும் அடிக்கடி தோல்விகளை சந்திக்கக் கூடாது. </p><p>நாம் தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் தோல்வியை நோக்கியே பயணப்படுகிறோம் என்பதே அர்த்தமாகும். </p><p>ஆகவே முரண்பட்ட சர்வதேச விவகாரங்களில் மிக நிதானமாகவும், பொருத்தமானதாகவும் ஈழத் தமிழர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா".</p><p>
</p><p>
</p><p>
</p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T11:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 தேர்தலில் மூன்று வேட்பாளர்கள்.. நாமலை சந்தித்த பின் கம்மன்பில சர்ச்சை கருத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-prison-udhaya-gammanpila-1788778486"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-prison-udhaya-gammanpila-1788778486</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நலன் விசாரிப்பதற்காக, இன்றையதினம், பிவித்துறு ஹெல உறுமய கட்சியின்&amp;nbsp; தலைவர் உதய கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நலன் விசாரிப்பதற்காக, இன்றையதினம், பிவித்துறு ஹெல உறுமய கட்சியின்&nbsp; தலைவர் உதய கம்மன்பில சென்றுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளை கடுமையாக ஒடுக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். </p><p>மேலும்,

"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார குணரத்ன, அநுர குமார திசாநாயக்க மற்றும் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் ஆகியோர் மட்டுமே வேட்பாளர்களாக எஞ்சியிருப்பார்கள் என்று அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.</p><h2>2029 ஜனாதிபதித் தேர்தல்..&nbsp;</h2><p> </p><p>எதிர்கட்சியினரைக் கைது செய்து, அனைவரையும் சிறையிலடைத்து, 2029 ஜனாதிபதித் தேர்தலை ஒருவரே போட்டியிடும் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஒரு கொடூரமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfb3330-391a-4b7b-9f03-05ae6a8e7320/26-6a9e9f58d1e7b.webp' /></p><p> கட்சி வேறுபாடின்றி வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு மக்கள் திரள்வதைப் பார்த்தாலே இந்த நாட்டின் மக்கள் தங்களுக்கு எந்தளவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள முடியும்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JZbs3EfG_eI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>இப்போது நாம் இந்த முறைமையிலேயே சென்றால், தேர்தல் மிகவும் ஜனநாயகப்பூர்வமானதாகி விடும். சிலர் சொல்வது போல் நாங்கள் சர்வஜன வாக்கெடுப்பு பற்றிப் பேசவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34517835-2c7c-4468-bf52-9666b4fa214f/26-6a9ea0086f950.webp' /></p><p> </p><p>தங்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வேட்பாளர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்துவிட்டு, தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவரையும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டில் கைது செய்து 2029 ஜனாதிபதித் தேர்தலை ஒருவர் மாத்திரம் போட்டியிடும் பந்தயமாக மாற்றவே இவர்கள் முயல்கிறார்கள் என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.</p><p>எதிர்க்கட்சியில் உள்ள சிலர், 'அவர்களைச் சிறையில் அடைத்தாலும் நம்மை விட்டுவிட்டார்கள், அவர்களைப் பற்றி நாம் பேசுவது தவறு' என்று நினைக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T11:29:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களுக்கான ஜனநாயகம் - புதிய ஆரம்பத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-democratic-political-journey-1788780103"></link>
            <id>https://tamilwin.com/article/new-democratic-political-journey-1788780103</id>
            <summary type="text">முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை”
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ. ஆனந்தவர்மன்(அரவிந்தன்)
தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை”
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ. ஆனந்தவர்மன்(அரவிந்தன்)
தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள்</h2><p>
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல்
இலக்குகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக முன்னெடுப்பதற்காக “தாயக அரசியல் துறை” என்ற புதிய ஜனநாயக மக்கள் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் வழியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப்
போராடிய முன்னாள் போராளிகள், தமது வரலாற்று அனுபவங்களையும் அரசியல்
உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலத்தில் ஜனநாயக அரசியலை தமது
அரசியல் கருவியாகக் கொண்டு மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு
தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe0d58c-65fb-4182-8eae-e180fbb44b61/26-6a9e9fb23d0b4.webp' /></p><p>
</p><p>
இது கடந்த காலத்தை மறுப்பதற்கான முயற்சி அல்ல. மாறாக, கடந்த கால
அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஜனநாயக
வழியில் முன்னெடுக்கும் புதிய அரசியல் பாதையின் தொடக்கமாகும்.</p><p>

மக்கள் மயமான அரசியல் இயக்கம்
தாயக அரசியல் துறை முன்னாள் போராளிகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும்
அமைப்பாக இல்லாமல், தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும்
மக்கள் மயமான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்படும்.
</p><h2>
தமிழர்களின் பலத்தை நிலை நாட்டும் அமைப்பு</h2><p>
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்,
கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட
அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து, மக்களின் அரசியல் பங்கேற்பை
வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
</p><p>
எமது அரசியல் அடித்தளம் தாயகம் – தன்னாட்சி – சுயநிர்ணயம் – தமிழ் தேசியம் ஆகும்.
</p><p>
தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை
பாதுகாப்பதுடன், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான
தீர்வுகளை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கு தாயக அரசியல் துறை செயற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd81c98f-9396-4b9d-a3d6-a7ad6ebb3983/26-6a9e9fb2e4ab7.webp' /></p><p>
</p><p>
மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக பங்கேற்பை மாற்றத்திற்கான முக்கிய
கருவியாகக் கொண்டு, எதிர்காலத்தில் தேர்தல் அரசியலிலும் பங்கேற்று,
மக்களிடமிருந்து நேரடியான அரசியல் ஆணையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும்.</p><p>

புதிய தலைமுறைக்கான புதிய அரசியல் பாதை “ஆயுதப் போராட்டத்தின் வழியில் நின்ற
நாம், இனி ஜனநாயக அரசியலை ஆயுதமாகக் கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்போம்.”
எமது அரசியல் பயணம் எந்தவொரு தனிநபரின் அதிகாரத்திற்காகவும் அல்ல. </p><p>அது தமிழ்
மக்களின் உரிமைகள், கண்ணியம், அரசியல் பங்கேற்பு மற்றும் எதிர்கால
தலைமுறைகளின் நல்வாழ்வை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
</p><p>
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்காக
அர்ப்பணிப்புடன் செயலாற்ற விரும்பும் அனைவரையும் இந்தப் புதிய அரசியல்
பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மக்களே எமது பலம், ஜனநாயகமே எமது வழி, அரசியலே எமது ஆயுதம், என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910</id>
            <summary type="text">புதிய இணைப்புமட்டக்களப்பு&amp;nbsp;பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாளை(08.09.2026) வரை விளக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மட்டக்களப்பு&nbsp;பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாளை(08.09.2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="font-size: 14px;">கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.</span></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G6qSX55IYH8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>02.09.2026 ஆம் திகதி ஏற்பட்ட சர்ச்சை..&nbsp;&nbsp;</h2><p>அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார் என்ற செய்தி (02.09.2026) <a href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216" target="_blank"><b>எமது தளத்தில்</b></a> செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டிருந்தது.</p><p>குறித்த திகதியில்&nbsp;மட்டக்களப்பு பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவும், கைது செய்யவும் தயக்கம் காட்டிய நிலையில் எமது தளத்தில் செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இந்த சூழலில் எமது தளத்தில் வெளியான குறித்த&nbsp;காணொளியை அடிப்படையாக வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:52:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 மில்லியன் மதிப்புள்ள பறவைகள் கடத்தல்: 4 பேர் கைது - படகும் வானும் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/smuggling-birds-10-million-4-arrested-seized-1788776859"></link>
            <id>https://tamilwin.com/article/smuggling-birds-10-million-4-arrested-seized-1788776859</id>
            <summary type="text">கல்பிட்டிய கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சிறப்பு பொலிஸ் சோதனையின் போது, கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தி
வரப்பட்டதாகச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்பிட்டிய கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சிறப்பு பொலிஸ் சோதனையின் போது, கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தி
வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 புறாக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் நேரடி
வழிகாட்டலின் கீழ், சிறப்பு பொலிஸ் படையொன்றினால் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.</p><h3>சட்ட நடவடிக்கை&nbsp;</h3><p>

அத்துடன் பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களில் பயன்படுத்துவதற்காகவே
இந்தப் புறாக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப்
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15659dfd-0314-49ac-8c0a-ab8497172b6d/26-6a9e93085cd80.webp' /></p><p>

இந்த நிலையில் புறாக்களுடன் சேர்த்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக
நம்பப்படும் ஒரு படகு, அதன் இயந்திரம் மற்றும் ஒரு வேன் ஆகியவையும்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

மேலும் கைப்பற்றப்பட்ட ஒரு புறாவின் மதிப்பு சுமார் ரூ. 50,000 என
மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து புறாக்களின் மொத்த மதிப்பு
ஏறத்தாழ ரூ. 10 மில்லியன் (1 கோடி) ஆகும்.
</p><p>
இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் மாவனெல்ல பகுதியைச்
சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கல்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்
தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்
படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F20xksitT9g" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T10:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி! மெல்பேர்னில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா, இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா, இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.</p><p>நாமல் ராஜபக்ச தொடர்பில் தொழிலதிபர் நிமல் பெரேரா சாட்சியமளிப்பதை தடுக்கும் வகையிலான பாரிய முயற்சியொன்று அவுஸ்திரேலியாவில் வைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><h2>நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்</h2><p>

நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார். </p><p>ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. </p><p>கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
</p><p>
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e69677-6fbf-4574-a2f3-3c5249c9250c/26-6a9e0b09be350.webp' /></p><p>இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். </p><p>அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி</h2><p>நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56632e9d-bf35-47e9-8230-97aaa301f9f6/26-6a9e748514acb.webp' /></p><p>எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mkaUQ8XHnLc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T10:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நாமல்.. நாளை ஹரிணி..! நிமல் பெரேராவுக்கு அரசின் சக்திவாய்ந்த அமைச்சருடன் தொடர்பு - எழுந்துள்ள புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-nimal-perera-npp-government-1788772770"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-nimal-perera-npp-government-1788772770</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் நிமல் பெரேரா ஒரு ஊழல்வாதி என்றும், தற்போதைய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரே அவரது வியாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் நிமல் பெரேரா ஒரு ஊழல்வாதி என்றும், தற்போதைய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரே அவரது வியாபார பங்குதாரர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p> நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p> நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒரேயொரு சாட்சியான நிமல் பெரேரா, தனது சாட்சியத்தை பலமுறை மாற்றியுள்ளதாகவும், சாட்சியின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அமைச்சரின் பங்குதாரர்..&nbsp;</h2><p>மேலும் அவர் கூறுகையில், "அரசாங்கத்தின் சக்திவாய்ந்த ஒரு அமைச்சரும் நிமல் பெரேராவும் இணைந்து மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாடான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fe20ff-4cf5-4de1-85a0-1223e6be8d6d/26-6a9e8b4580553.webp' /></p><p> ஆரம்பத்தில் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் கூறியவர்கள், பின்னர் ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை என்றும், அதன் பின்னர் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.</p><p> </p><p>பணம் வழங்கப்பட்ட நாள், நேரம் அல்லது அது இலங்கை வந்தடைந்த விதம் குறித்து எந்த ஆதாரமும் இல்லை. </p><p>இந்நிலையில்தான், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவின் போது, நிமல் பெரேரா ஒரு பொய்சாட்சி என பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4864ca-a220-4d8e-aaf8-d1566526bd2e/26-6a9e8b4646931.webp' /></p><p>தற்போது அரசாங்கத்திற்கு எதிரானவர்களை ஒடுக்க இத்தகைய நபர்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது.

நாளை பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது திருத்தச்சட்டத்திற்கு எதிராகத் தனது மனசாட்சிப்படி செயல்பட்டால், பணத்தை நாமலுக்கு அல்ல ஹரிணிக்கே கொடுத்ததாக நிமல் பெரேரா கூறுவார்” என சானக்க விமர்சித்துள்ளார். </p><p>மேலும், அரசாங்கம் தனக்கு எதிரான குரல்களை ஒடுக்கவும், நெல் கொள்முதல் விலை மற்றும் ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும் முற்படுகிறது. </p><p>எனினும், விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து நமால் ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியை எந்த அடக்குமுறையாலும் தடுக்க முடியாது என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ராஜபக்சக்களோ இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பயப்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315</id>
            <summary type="text">விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - துண...</summary>
            <content type="html"><![CDATA[<p>விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>
முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் கடந்த 04.09.2026 அன்று சைக்கிளில்
பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது எதிரே அதி வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியதில்
இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி நேற்றையதினம் (06.09.2026) உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>விபத்தில் படுகாயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக
தெரிவிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16aeea49-a153-4abd-b845-36e6ac3e3373/26-6a9e8d9288077.webp' /></p><p>இந்நிலையில், அவரது மரணம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JNLjT9Oh6Aw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள்! அதிகாரிகளிடம் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>அதன்படி, கடத்தல்காரர்களில் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய, காந்திசபுர பகுதியில் உள்ள ஏக்கர் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், அதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
</p><p>
மேலும், மற்றொரு கடத்தல்காரருக்கு எம்பிலிப்பிட்டிய, நியூ டவுன் பகுதியில் உள்ள 23.7 பேர்ச் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாட்டை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a5749b-b929-4b59-adcd-19202279c873/26-6a9e8b2f44bd7.webp' /></p><p>

இந்த கடத்தல்காரர்கள் தங்களின் நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் இந்த சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர புதிய முயற்சி - இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-effort-to-end-corruption-crimes-1788774511"></link>
            <id>https://tamilwin.com/article/new-effort-to-end-corruption-crimes-1788774511</id>
            <summary type="text">ஊழல் மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக
எங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக
எங்களுடன் இளைஞர் யுவதிகள் கைகோர்க்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில்
ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் அங்குராப்பணம் நேற்று(06.09.2026)
பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p>

அதன் தலைவராக ஓய்வு
பெற்ற கிராம உத்தியோகத்தர் முத்துலிங்கம் செயலாளர் ஜேம்ஸ் ரூபசேன, பிரதி
தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார்
நியமிக்கப்பட்டனர்.</p><p>

 இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அமைப்பின் நோக்கம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாவட்டத்தில் ஊழல், மோசடி, போதைப்பொருள் வியாபாரம், தொடர்பாக முக்கியமாக
இருக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையின் அடிப்படையில் இந்த
அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

எனவே பொது மக்கள் இந்த ஊழல் தொடர்பாக எங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு வெகு
விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளோம். </p><p>இதில் எந்த விதமான அரசியல் சார்ந்த
அரசியல் செயற்பாடுகளும் இல்லை, இது முற்று முழுதாக அரசியலுக்கு அப்பாற்பட்டு
மக்களின் நலன் சார்ந்த ஒரு ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தி உரிய அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு வந்து ஊழலை தடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23963da5-71a5-4131-82c7-a0cb89eaa163/26-6a9e88c8bc59a.webp' /></p><p>

இன்று இந்த அமைப்பு உருவாக்கி தினமான நேற்று(06) அரச
திணைக்களங்கள் விடுமுறை நாளில் வன பரிபாலன சபை அரச வாகனத்தை எடுத்துக்கொண்டு
மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடுவில் அமைந்துள்ள ஒரு
தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்டு இருவர் நடந்து கொண்ட விதம் உயிராபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது.</p><p> 


எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது மதுபோதைக்கு
பயன்படுத்திய இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறோம்.
</p><h2>
ஊழல் குற்றங்களை குறைக்க நடவடிக்கை</h2><p>

இவ்வாறு அரச வாகனத்தை மக்கள் வரிப்பணத்தில் அதற்கு எரிபொருளை நிரப்பி அரச
வாகனத்தில் மதுபானங்களை கொள்வனவு செய்து அரச சொத்தை வீணடித்து வரும் இவ்வாறான
சில அரச திணைக்கள ஊழல் மோசடி, அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்யும்
உத்தியோகத்தர்கள் தொடர்பாக வெளி கொண்டு வருவதன் மூலம் இந்த மோசடிகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p><p>&nbsp;இன்று மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240b60b5-0449-4236-b839-b36316c33cfd/26-6a9e88c99276e.webp' /></p><p> </p><p>
அதேவேளை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும்
பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலைக்குள் நுழையும்போது சோதனையிடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளது.
</p><p>
எனவே இலங்கையை ஒரு ஊழல் மோசடி போதைப் பொருள் அற்ற தூய்மையான நாடாக
கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு
அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் உங்கள்
பிரதேசத்தில் நடக்கும் ஊழல், மோசடி மற்றும் போதை வியாபாரம் போன்ற சட்டவிரோதமான
செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை தந்து உதவினால் நாங்கள் பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத் தருவோம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் எங்களுடன் கைகோர்க்கலாம் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிடுக்கு பிடியில் சிக்கியுள்ள நாமலின் பின்னணி! திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-bus-case-proven-in-int-court-1788774281"></link>
            <id>https://tamilwin.com/article/air-bus-case-proven-in-int-court-1788774281</id>
            <summary type="text">எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பிலான பல முக்கிய தகவல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன்...</summary>
            <content type="html"><![CDATA[<div>எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பிலான பல முக்கிய தகவல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
</div><div><br></div><div>ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் சவப்பெட்டிக்கு ஆணி அடித்த சம்பவமாக இந்த ஊழல் மோசடியை சுட்டிக்காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div>
</div><h2>லண்டன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்</h2><div>லண்டன் நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div> </div><div><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef6ee1f-0563-4f43-955b-96d7032329ba/26-6a9e878b56f53.webp' /></div><div><br></div><div>எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்....</div><div><br></div><div>
 இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் விமானங்களை விற்பனை செய்யும் போது இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
</div><div><br></div><div>எயார் பாஸ் நிறுவனமானது மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது கையூட்டல் கொடுக்கப்பட்டமை லண்டன் மேல் நீதிமன்ற விசாரணைகளில் நிரூபிகக்ப்பட்டுள்ளது.</div><div><br></div><div>
</div><div>இந்த விசாரணைகள் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டது.
ஏர்பஸ் கொள்வனவு செய்த போது 16 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.</div><div><br></div><div>
</div><div>2016 ஆம் ஆண்டு இந்த கொடுக்கல் வாங்கல்களை ரத்து செய்வதற்காக நட்டஈடாக 110 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
</div><div><br></div><div>இந்த இரண்டு நடவடிக்கைகளின் போதும் ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஏயார்பஸ் கொள்வனவின் போதும் மோசடி இடம் பெற்றுள்ளது அதேபோன்று இந்த கொள்வனவை ரத்து செய்யும்போதும் மோசடி இடம் பெற்றுள்ளது.
</div><div><br></div><h2>சர்வதேச நீதிமன்றங்களில் மோசடி குறித்து விசாரணை</h2><div>இந்த கொடுக்கல் வாங்கல்களின் மூலமே நாட்டின் விமான சேவை நிறுவனம் வீழ்ச்சி அடைந்தது.
ஆசியாவின் மிகவும் பழமையான ஓர் விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கருதப்படுகின்றது.</div><div><br></div><div> எனவே இந்த மோசடிகளின் மூலம் இந்த விமான சேவை நிறுவனத்திற்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. இது தேசிய ரீதியான ஓர் குற்றச் செயலாக கருதப்பட வேண்டும்.</div><div><br></div><div>இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒன்று, இரண்டு பேருக்கு மட்டுமல்லாமல் தொடர்புடைய சகலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் இது சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அம்பலமான விடயமாகும். எனவே இதை நாம் பழிவாங்கல்கள் மேற்கொள்கிறோம் என குற்றம் சுமத்த முடியாது.</div><div><br></div><div>
சர்வதேச நீதிமன்றங்களில் இந்த ஊழல் மோசடி குறித்து வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட, பிரான்ஸ் நிறுவனம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கையில் சாட்சியமளித்துள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div></div><div><br></div><div></div>]]></content>
            <updated>2026-09-07T09:44:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்டும் ஸ்கேனருடன் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-hands-with-a-treasure-hunting-scanner-1788771911"></link>
            <id>https://tamilwin.com/article/five-hands-with-a-treasure-hunting-scanner-1788771911</id>
            <summary type="text">முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து சந்தேக
நபர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து சந்தேக
நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(06.09.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நெலுக்குளம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d5c65b7-c80a-49bc-8b15-5d0b06b24f6e/26-6a9e830578207.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும்
ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களை இன்று(07.09.2026) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:26:31+00:00</updated>
        </entry>
    </feed>
