<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T11:18:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண் வர்த்தகர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-arrested-with-narcotics-worth-5-crore-1788950298"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-arrested-with-narcotics-worth-5-crore-1788950298</id>
            <summary type="text">இலங்கை பெண் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெண் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். </p><p>விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை இன்று (09) காலை கைது செய்துள்ளனர்.</p><p>சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. </p><p>

இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a02279-d176-4897-ac9d-aaa0d00c05d7/26-6aa13e77c0920.webp' /></p><p> 

சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையில் தனது கைது குறித்து பேச மறுத்த நாமல்.. வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728"></link>
            <id>https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&nbsp;</p><p>இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தனது அண்மைய கைது குறித்து பேசுவதைத் தவா்த்துக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்தார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற நடைமுறை</h2><p>இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுகொட, நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கவும், வளாகத்திற்கு தீ வைக்கவும் முயன்ற வரலாற்றைக் கொண்ட சில அரசாங்க உறுப்பினர்களைப் போல் அல்லாமல், நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa60ecf8-dda5-43a4-b07f-b7addc54b7bd/26-6aa13de7f2b69.webp' /></p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்தும் நீதித்துறையின் நடத்தை குறித்தும் பேசுவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்த நீதித்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

இவ்விடயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இது குறித்து கருத்துத் தெரிவிக்காமல் தவிர்த்ததன் மூலம் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக மதுகொட மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு - தும்பங்கேணி பகுதியில் யானையொன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788951051"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788951051</id>
            <summary type="text">மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் இன்று (09.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது யானை வீடொன்றின் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக் கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளது.</p><h2>அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண்கள்</h2><p>
</p><p>
அக்காலப்பகுதியில் வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், உள்ளே தனிமையில் இருந்த பெண்கள் யானையைக் கண்டு பீதியடைந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தவாறு தப்பியோடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec85fe87-e566-44bc-9228-4954f544d792/26-6aa13b6640148.webp' /></p><p> </p><p>

பெண்களைத் துரத்திவிட்டு வீட்டினுள் புகுந்த காட்டுயானை, அங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 10இற்கும் மேற்பட்ட நெல் மூடைகளை கிழித்து துவசம் செய்துள்ளது.</p><h2>யானைகளின் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாகவே காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் கிராம மக்கள், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக
வேதனை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a08a04b-447b-403a-8cab-943756738545/26-6aa13b67310c5.webp' /></p><p>
</p><p>
எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈட்டினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a9affe-ba07-4e5e-b35a-61cb29651a3f/26-6aa13b68043c6.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7e2aaf-d2b9-450f-b464-c7884e3bcff5/26-6aa13b68cb0b2.webp' />&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visit-of-indian-naval-ship-ins-udaygiri-to-colombo-1788948000"></link>
            <id>https://tamilwin.com/article/visit-of-indian-naval-ship-ins-udaygiri-to-colombo-1788948000</id>
            <summary type="text">இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த்
போர்க்கப்பலான &#039;INS Udaygiri&#039;, மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்வதற்காக நேற்று(08.09...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த்
போர்க்கப்பலான 'INS Udaygiri', மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்வதற்காக நேற்று(08.09.2026) கொழும்பை வந்தடைந்தது.
</p><p>இக்கப்பலின் விஜயம், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்துடன்
ஒருங்கிணைந்துள்ளது.</p><h2>விஜயத்தின் நோக்கம்</h2><p>இலங்கை கடற்படையுடன் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும்
Mobile Training Team மூலம் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதன் ஊடாக இருதரப்பு
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். </p><p>மேலும், இலங்கை கடற்படை மற்றும்
இலங்கை விமானப்படைக்குத் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள்/உபகரணங்களுக்கான
உதிரிப் பாகங்களையும் இக்கப்பல் கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feed754c-7169-4ff3-9107-b3c1cdd833ce/26-6aa136dc2d81f.webp' /></p><p>கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் விகாஸ் சூட், இலங்கை கடற்படையின் மேற்கு
கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை
உத்தியோகபூர்வமாகச் சந்திக்க உள்ளார். </p><p>இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சரின் விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கைப் பிரமுகர்களை வரவேற்கும் வகையில்
கப்பலில் வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:42:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/atm-machines-for-persons-with-disabilities-1788949702"></link>
            <id>https://tamilwin.com/article/atm-machines-for-persons-with-disabilities-1788949702</id>
            <summary type="text">இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக&amp;nbsp;பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக&nbsp;பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர அறிவித்துள்ளார்.</p><p>அந்த வகையில், பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாட்டின் அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மற்றவர்களின் உதவியின்றி சேவைகளை சுயமாக முன்னெடுத்தல்</h2><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2fec3c1-034e-448f-ab95-f750ddcf7760/26-6aa137e1f248a.webp' /></p><p>அத்துடன், இந்த நவீன வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றவர்களின் உதவியின்றி தங்களது வங்கிச் சேவைகளைத் தாங்களே சுயமாகவும் எளிதாகவும் மேற்கொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் 5 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-tsunami-warning-towers-mullaitivu-non-functional-1788948764"></link>
            <id>https://tamilwin.com/article/5-tsunami-warning-towers-mullaitivu-non-functional-1788948764</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்படும்
சந்தர்ப்பங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக
அமைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்படும்
சந்தர்ப்பங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக
அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் பெரும்பாலானவை தற்போது
செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>முல்லைத்தீவு மாவட்டம் 71 கிலோமீட்டர் கடற்கரை பிரதேசமாக காணப்படுகின்றது. கடற்கரையை அன்றி பல கடற்றொழில் குடும்பங்கள் பல விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வரும்
பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றன.</p><h2>மாற்று நடவடிக்கை</h2><p>மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 5 கோபுரங்கள்
செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்,

அவசரகாலங்களில் மக்களை விரைவாக எச்சரிப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் மற்றும்
கோபுரங்களை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என மக்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfa05c8c-55bb-4082-80a5-892b18ec9961/26-6aa1337dc8548.webp' /></p><p>
</p><p>இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்து முகாமை
பிரிவு அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:32:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவசமாக கிடைத்த மென்பொருளுக்கு 88 இலட்சம் செலவிட்ட தேசிய குருதி வங்கி.. இடம்பெற்றுள்ள பாரிய நிதிமோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-blood-bank-88-lakh-massive-fraud-1788943812"></link>
            <id>https://tamilwin.com/article/national-blood-bank-88-lakh-massive-fraud-1788943812</id>
            <summary type="text">தேசிய குருதி வங்கியில் மென்பொருள் கொள்வனவு என்ற பேரில் சுமார் 88 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய குருதி வங்கியில் மென்பொருள் கொள்வனவு என்ற பேரில் சுமார் 88 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தேசிய குருதிமாற்று மையத்திடம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நோயாளிகளுக்கு எவ்வளவு இரத்தம் வழங்கப்பட்டது என்பதை அறிய தரவுத்தளமொன்று இருக்கவில்லை.
</p><p>
இதன் காரணமாக, கொடையாளர்களிடமிருந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சேகரிக்கப்பட்ட குருதி 45 நாட்களில் காலாவதியான பிறகு, அதிக அளவு குருதி வீணாக்கப்பட்டது.</p><p>அதன்போது இருவகையான கடுமையான குற்றங்கள் அதில் உள்ளடங்கியிருந்தன. முதலாவது, நன்னோக்குடன் கொடையாளர்களால் வழங்கப்பட்ட இரத்தம் காலாவதியாகிவிட்டது என்ற காரணத்திற்காக, அதை அறியாமலேயே வீணாக்கியது.</p><h2>புதிய கணினி மென்பொருள்&nbsp;</h2><p> இரண்டாவது, கொடையாளர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, அதை நோயாளிக்குக் கொடுப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்காக பொட்டலமிட்டு, அதைப் பாதுகாப்பதற்காக பெரும் பணம் செலவழிக்கப்பட்டு, பின்னர் 45 நாட்களில் காலாவதியாகி விட்டது என்ற காரணத்திற்காக வீணாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a414db93-ecbb-47af-bee9-e3806d84ee1e/26-6aa133f1ce53f.webp' /></p><p>
</p><p>
மேற்கண்ட குற்றவியல் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட மருத்துவர் புஷ்பிக டி சில்வா என்ற இளம் மருத்துவர், பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து, மேற்கூறிய ஏறக்குறைய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு புதிய கணினி மென்பொருள் அமைப்பை உருவாக்கியிருந்தார்.
</p><p>
அந்த இளம் மருத்துவர், தனது புலமைசார் சொத்துரிமைகளைக் கூடப் பாதுகாக்காமல், அந்த மென்பொருள் அமைப்பை தேசிய குருதிமாற்று மையத்திற்கு இலவசமாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
</p><p>
மேற்கண்ட மென்பொருள் அமைப்பை உருவாக்குவதற்கு முன்பு, மருத்துவர்புஷ்பிக ஒரு டச்சு கடன் உதவித் திட்டத்தின் கீழ் அத்தகைய மென்பொருள் அமைப்பை உருவாக்க மற்றொரு நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியிருந்தார். </p><p>ஆனால் அந்த மென்பொருள் அமைப்பு உருவாக்கம் முடிக்கப்படாமலேயே கைவிடப்பட்டுள்ளது. அதற்காக யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பன குறித்து இதுவரை விசாரணைகள் நடத்தப்படவில்லை.</p><p></p><h2>தொடர்ச்சியான சேவை</h2><p>இதற்கிடையே மருத்துவர் புஷ்பிகவின் மென்பொருள் கண்டுபிடிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு உலக இரத்த தான தினத்தில் பிரதமர் ஊடாக மருத்துவர் புஷ்பிகவுக்கு ஒரு விருதும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65167364-bba9-4e78-a58b-246e93616681/26-6aa1343937388.webp' /></p><p> </p><p>அன்று முதல், மருத்துவர் புஷ்பிக டி சில்வாவால் உருவாக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு, இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள இரத்த மையங்களுடன் ஒருங்கிணைந்து, தேவைக்கேற்ப இரத்த தானங்களைப் பெற்று வருகிறது. அது பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகிறது.
</p><p>
இவ்வாறான பின்னணியில் மருத்துவர் புஷ்பிகவால் உருவாக்கப்பட்டு, இன்றும் எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் அமைப்பிற்கு ஏதேனும் மேம்படுத்தல் தேவைப்பட்டால், அதனை மருத்துவர் புஷ்பிகவே செய்து பராமரிப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள மென்பொருள் அமைப்பை ஒரு தனியார் நிறுவனம் மூலம் மீண்டும் கொள்வனவு செய்வதற்கு தேசிய குருதிமாற்று மைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>

அதற்காக பொதுமக்களின் வரிப்பணம் சுமார் 88 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி குறித்து சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு பிணை கிடைக்க வாய்ப்பில்லையாம்..! புலம்பும் ராஜபக்ச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294"></link>
            <id>https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294</id>
            <summary type="text">

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினரை முடக்கும் செயற்பாட்டில் இந்த அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.</p><h2>நாமலுக்குப் பிணை இல்லையா..</h2><p> </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்தச் சட்டத்தின் கீழ் 46 பேரைக் கைது செய்து வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f890b86-fcc9-47cf-87a8-99154173ea33/26-6aa131ca5f45e.webp' /></p><p>

இலங்கையில் நீதித்துறைச் சுயாதீனம் மீறப்படுவது மற்றும் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளன.
</p><p>
அரசாங்கம் தனது ஜனநாயக விரோதப் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால், சர்வதேச அளவில் இலங்கை கடுமையான எச்சரிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-09T10:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவிய நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-driver-ishara-sewwandi-flee-to-india-remanded-1788947683"></link>
            <id>https://tamilwin.com/article/boat-driver-ishara-sewwandi-flee-to-india-remanded-1788947683</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல படகு வழங்கி உதவிய நபரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல படகு வழங்கி உதவிய நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, சந்தேகநபரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் 47 ஆவது சந்தேகநபர் </h2><p>

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேகநபரான ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் ‘பலசி’என்பவரை கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca02d80b-cfe6-43d2-8827-999a50fe6878/26-6aa133b7465d6.webp' /></p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47 ஆவது சந்தேகநபராக பெயரிடப்படுவார் என்று கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சந்தேகநபர் தெரிந்தே ஏற்பாடு செய்ததாகவும், செவ்வந்தி இந்தியா வந்தடைந்த பிறகு, படகில் ஆதாரமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அவர் அழித்துவிட்டதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற சந்தேகநபர் உதவியுள்ளதாகவும், இந்தியாவுக்கு செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்ததாகவும் தெரியவந்ததாக குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.</p><h2>தடுப்புக்காவல் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
இஷாரா செவ்வந்தி சுமார் 10 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b17432-2768-4735-ad13-0913e7feb74c/26-6aa133b7ec6e2.webp' /></p><p> 

கடந்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p> 

இதன்போது, கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவந்தவர் இஷாரா செவ்வந்தி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த கொலைக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933</id>
            <summary type="text">தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே இன்றையதினம்(9)&nbsp; மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தலவாக்கலை சுமன பாடசாலைக்கு அருகாமையில் குறித்த நபருடைய கைப்பை ஒன்று
கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளனர்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று காலை முதல்
மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலின் பின்னர், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து குறித்த நபரின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73bbae00-8256-4e22-a197-1324acc5fa55/26-6aa12e88e792d.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், பிரேதப்
பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><h2>விசாரணை</h2><p>

இதேவேளை, குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு
ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748956f9-f2f1-4e6b-af76-bc1914cc742e/26-6aa12e89ac98f.webp' /></p><p>பிரேதப் பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம்
தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180"></link>
            <id>https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.&nbsp;</p><p>இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர், தற்போது இப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.</p><p>
2024ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த விபுல் மிஸ்ரா, விமானப் பொறியியல் மற்றும் சிரேஷ்ட விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்டவராவார்.</p><h2>முக்கிய பதவிகள்..&nbsp;</h2><p> </p><p>இதற்கு முன்னர், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகியவற்றில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e94ef0-1019-453f-ad08-6dbda721871b/26-6aa129227fb9a.webp' /></p><p>
</p><p>
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு முக்கிய மறுசீரமைப்பு கட்டத்திற்குள் நுழைய ஆயத்தமாகி வரும் முக்கியமானதொரு சூழலில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிஸ்ரவின் இந்நியமனம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினை : நிரந்தரத் தீர்வை முன்னெடுக்க தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161"></link>
            <id>https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161</id>
            <summary type="text">சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை
உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், குறித்த பகுதியில்
நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக பொருத்தமான குளங்களையும்
உடனடியாகத் தூர்வாருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><h2>வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கு</h2><p>
சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில்
காணப்படும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்
ஆளுநர் செயலகத்தில் நேற்று(08.09.2026) முன்னெடுக்கப்பட்ட
கலந்துரையாடலின் போது இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e72cecc-b2fa-4108-9165-31e7ad2b2846/26-6aa12579af60f.webp' /></p><p>
வெள்ளநீர் இயற்கையாகச் சென்று தேங்கக்கூடிய வகையில் நீர்வழிகளைச்
சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து
பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களைத்
தூர்வாருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கான இந்நடவடிக்கைகள்
தாமதமின்றி ஆரம்பிக்கப்பட்டு, தேவையான மேலதிக நடவடிக்கைகளும் நிலைமைகளின்
அடிப்படையில் தொடர்ந்து அடுத்தகட்டமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பான வழக்கு, நேற்று (08) நீர்கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பொலிசார் குறித்த அறிவித்தலை சமர்ப்பித்துள்ளனர்.
</p><p>
அதன் பிரகாரம் இந்த மாதம் 2ஆம் தேதி நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மாணிக்க ஹேன பொது மயானத்தில் இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில்இ இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேக நபர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அவர்களை அடையாளம் காண்பதற்காக, மூடிய ஆடைகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு சிறை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1f1b1e-bc2b-40ab-8f32-6d5af78c3024/26-6aa127c01c196.webp' /></p><p>
</p><p>
மேலும், இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறத்தாழ 2200 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு ஆதாரங்களாகக் பொலிசாரின் காவலில் எடுக்கப்பட்டு அரசாங்க ரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிவியல் பூர்வமான தரவுகளுடன் புதிய தேசிய இளைஞர் கொள்கை: அமைச்சர் சுனில் குமார் கமகே அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255"></link>
            <id>https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255</id>
            <summary type="text">இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள்
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே தெரிவித்தார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(8.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் எந்தவொரு துறையிலும் உணர்திறன் மிக்க, அபிவிருத்தியடைந்த தேசியக்
கொள்கைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.</p><h2>சமூக அபிவிருத்தி</h2><p> எனவே, அரசு என்ற ரீதியில் இளைஞர்களின்
முன்னேற்றத்துக்காகப் பொறுப்புக்கூறக்கூடிய, அறிவியல் பூர்வமான கொள்கை ஒன்றை
உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
</p><p>
அரசின் கொள்கைப் பிரகடனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே, இளைஞர்
சமுதாயத்துக்கான புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் பணிகள் முறைப்படி
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf90e9c-fb00-4510-9050-2bdf27eb52a1/26-6aa122add149c.webp' /></p><p>
</p><p>
புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக, இளைஞர்கள்
எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில் 9 முக்கிய
துறைகளின் கீழ் ஆராய்ச்சிப் பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெறுமனே கொள்கைகளை அறிவிக்காமல், பெறப்படும் இந்த ஆராய்ச்சிப் பத்திரங்களின்
முடிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய இளைஞர்
கொள்கை தயாரிக்கப்படும்.
</p><p>
இளைஞர் சமுதாயத்தின் மறைந்திருக்கும் திறன்களை முறையாக அடையாளம் கண்டு,
நாட்டின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அவர்களைத் தீவிரப்
பங்காளிகளாக்குவதே இந்தத் தேசிய மாநாட்டின் முதன்மை நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்! கைபேசியில் உள்ள இரகசிய தரவுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (09) மீண்டும் தொடங்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த உண்மைகளை கூடுதல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c615cb3-09cb-417c-af69-20b988f18787/26-6aa1062f762c6.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட கைபேசியின் தரவுகள் தொடர்பாக முந்தைய நாள் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு, ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவத்தில் காலஞ்சென்ற சந்தேகநபரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை</h2><p>
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரேதப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது.</p><p>இந்த வழக்கை அக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-6UFFQLSCYg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-09T09:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தின் பின்னடைவு - நாடாளுமன்றில் மஞ்சுள சுரவீர சரமாரியாக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807"></link>
            <id>https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான
மஞ்சுள சுரவீர, நாடாளுமன்றத்தில் நேற்று (08.09.2026) பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற ரீதியில்,
மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் சில கேள்விகளை முன்வைக்க
விரும்புவதாகத் தெரிவித்த அவர்,

குறைந்த கல்வியறிவு காணப்படும் மாவட்டம் எது?

குறைந்த அளவில் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட மாவட்டம் எது?

மந்தபோசணம் அதிகமாக காணப்படும் மாவட்டம் எது?

அரச சேவையாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேவையாற்ற வேண்டிய நிலை
காணப்படும் மாவட்டம் எது?

என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.</p><h2>சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள்</h2><p>
</p><p>
அத்துடன், சுத்தமான குடிநீரை குறைந்த அளவில் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும்
மக்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809bdf8d-8975-4851-aca9-8f67c3eb59e5/26-6aa11b7d323ce.webp' /></p><p>

நுவரெலியா மாவட்டம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இவ்வாறான அடிப்படைப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'எந்நாளும் 88, 89 பற்றி எழுதிக்கொண்டு வந்து அதனை மாத்திரம்
பேசிக்கொண்டிருப்பது போதாது' எனக் குறிப்பிட்ட மஞ்சுள சுரவீர, நாட்டின்
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் விழிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2>அணிதிரளும் மக்கள்</h2><p>
</p><p>
மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும்,
அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கு மக்கள் அணிதிரண்டு வருவதாகவும் அவர்
நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் அரச
சேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நீண்டகால தீர்வுகள் அவசியம் என
வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள்
எதிர்காலத்தில் எந்தளவுக்கு முன்னெடுக்கப்படுகின்றன என்பதே தற்போது கவனத்தை
ஈர்த்துள்ள விடயமாக உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் பெயரில் போலி விளம்பரங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-advertisements-in-the-name-police-police-warn-1788940954"></link>
            <id>https://tamilwin.com/article/fake-advertisements-in-the-name-police-police-warn-1788940954</id>
            <summary type="text">இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>பொலிஸ் திணைக்களத்தின் அறிவுறுத்தல்</h2><p>


இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்றும், போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f044e9-7402-4759-b326-8d5ed6876b6a/26-6aa115eda1b9b.webp' />&nbsp;</p><p>
</p><p>


இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் அல்லது அறிவித்தல்கள் உண்மையானவை அல்ல என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>


எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><p><b>&nbsp;YOU MAY LIKE THIS..&nbsp;&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/36KppViOQFg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-09T08:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது சர்வதேச அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661"></link>
            <id>https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
&#039;இலங்கைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
'இலங்கைக்கான முக்கிய குழு' வலியுறுத்தியுள்ளது.

​</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது கூட்டத்தொடரில்,
இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான தூதர் எலினோர் சாண்டர்ஸ் இங்கிலாந்து, கனடா,
மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளின் சார்பில் இந்த
கூட்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.

​​</p><h2>உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாடு</h2><p> </p><p>பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச தொழிலாளர்
அமைப்பின் (ILO) 190வது உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டதையும்,
மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாட்டையும் இந்த குழு
வரவேற்றுள்ளது.</p><p>

​அத்துடன் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல்
இருப்பது, கூட்டுக்குழிகள் கண்டறியப்படுவது, சிவில் சமூக அமைப்புகள் மற்றும்
ஊடகவியலாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த குழு பெரும்
கவலையை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31fcd8a-54e5-4b72-92fb-b2d1726cb403/26-6aa113eb7e491.webp' /></p><h2>வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்</h2><p>

பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறையை
முன்னெடுப்பது, நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தடுப்புக்காவல்
நிலையங்களில் மனித உரிமைகளைப் பேணுவது மற்றும் சுயாதீன நிறுவனங்களை
வலுப்படுத்துவது போன்ற சட்ட சீர்திருத்தங்களை உடனே மேற்கொள்ள இந்த அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

​</p><p>இதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மீண்டும்
சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அமைப்பல்ல : ஹர்ஷன சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295"></link>
            <id>https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295</id>
            <summary type="text">பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும் எனவும் நீதி மற்றும்
தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(08.09.2026) நடைபெற்ற அமர்வில், பொதுநலவாய
நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் வழமை போன்று பல விடயங்களைச் சபையில்
குறிப்பிடுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942d8a2c-a884-45dc-9569-0023c52e0aa4/26-6aa10fc84ef4d.webp' /></p><p> பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம்
தவறானது என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால், இது பொதுநலவாய
உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல,
மாறாக, தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும்.&nbsp;</p><p>இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இங்கு வந்து பல விடயங்களைக் குறிப்பிட்டுச்
சென்றுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை நாம் ஆராய
வேண்டும்.
</p><p>
இந்த அமைப்பின் தலைவர் என்னைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில்,
நானும் அதற்கு அனுமதியளித்திருந்தேன். எனினும், அன்றைய தினம் நான் கொழும்பில்
இல்லாத காரணத்தால் அவர் அந்தச் சந்திப்பை மறுத்துவிட்டார். </p><p>ஆகவே, இந்தச்
சங்கத்தின் நிலைப்பாட்டைப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ
நிலைப்பாடாக ஏற்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள்.. அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
</p><p>
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நேற்று (08) இத்தகவலை வெளியிட்டார்.
</p><p>
இக்கப்பல்கள் இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு 24 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.</p><h2>இலங்கைக்கு அருகில்..&nbsp;</h2><p>

இவற்றில் ஈரானிய கப்பல்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அடங்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c202b0-e6a8-4909-905b-bc5f5f97a2e3/26-6aa10cc2d90b0.webp' /></p><p>

இதுவரை எந்தவொரு கப்பலும் இலங்கையிடம் வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை என்றும், இலங்கை தரப்பிலிருந்து அவற்றுக்கு எந்தவித வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
இருப்பினும், கடற்படை தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949"></link>
            <id>https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949</id>
            <summary type="text">இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
</p><p>
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள்
திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியக் குழு ஆகியவை இணைந்து
67ஆவது முறையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.</p><h2>அரச விருதுகள்</h2><p>
</p><p>
2025ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய
எழுத்தாளர்களைப் பாராட்டி, 50 இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அரச விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ac28720-8e35-4be3-a138-bfac3424103c/26-6aa10cb22bdb0.webp' />&nbsp;</p><p>

இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றியமைக்காக, வாழ்க்கையில் ஒருமுறை
மட்டுமே வழங்கப்படுகின்ற உயரிய 'சாஹித்யரத்ன' கௌரவ விருதுகள் மூன்று மொழிப்
படைப்பாளிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டன.</p><p>

சிங்கள மொழிப் பிரிவில் பராக்கிரம கொடித்துவக்குக்கும், தமிழ் மொழிப் பிரிவில்
கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில்
பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.</p><h2>2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது</h2><p>
</p><p>
இதன்போது 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர்
மற்றும் மும்மொழிகளிலான 2026 இலக்கிய இதழ் ஆகியவை ஜனாதிபதியிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.</p><p>

மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள்
பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி
வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன்,
நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை பிச்சைக்காரருடன் ஒப்பிட்ட கம்மன்பில.. 800,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன் ஒப்பிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார். </p><p>அரசியல் விடயம் தொடர்பில் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பதுடன் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், அவ்வாறு பார்த்தால் நாமல் ராஜபக்ச ஒரு பிச்சைக்காரராகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான ஒப்பீட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>&nbsp;800,000 அமெரிக்க டொலர்..&nbsp;</h2><p> பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதற்கும் அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளதுடன், அரசியல்வாதிகள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவர் என்பதால் கம்மன்பிலவின் தர்க்கத்தையே கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9a91fe-b6c8-4f7f-a36b-e5a64a9fb301/26-6aa107e6076ed.webp' /></p><p> </p><p>அத்துடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் Gen Z தலைமுறையினர் ஆதரவாக இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படவில்லை மாறாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போதே தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த கம்மன்பில, தொழிலதிபர் நிமல் பெரேராவினால் நாமல் ராஜபக்சவுக்கு 800,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை எவ்வாறு தரகு எனக் கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>அத்துடன், நன்கொடைகளைப் பெறுவது சட்டவிரோதம் என்றால் வீதியிலுள்ள பிச்சைக்காரர் கூட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என வாதிட்டிருந்தமைக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
</p><p>
இன்று காலை (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476ebc-f478-4ebf-b383-16c7ad5cd7af/26-6aa107cf821fb.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! எண்ணெய் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019</id>
            <summary type="text">கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.​</p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்தானில் உள்ள ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.</p><h2>கப்பல்களை அப்புறப்படுத்துமாறு எச்சரிக்கை</h2><p>​ 

முன்னதாக, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களின் ஊழியர்களும், தங்கள் கப்பல்களை உடனடியாக அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்துமாறு IRGC எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d0e7bd-3399-44e2-ac59-0507791a4e6d/26-6aa10767430e5.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைவாய்ப்பு மாபியாவால் இஸ்ரேல் கனவுகள் கலைந்தன!- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734"></link>
            <id>https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734</id>
            <summary type="text">தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் செல்லும் இளைஞர்களின் கனவுகள் கலைந்துவிட்டன என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த
'இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரைச்'
சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இதற்குக்கூட நிர்மாணத் துறையைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பேருக்காக நான் குரல்
கொடுத்தேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் உட்கட்டமைப்புத்துறைக்கு எந்தவொரு
வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.</p><h2>திருத்திக் கொள்ள வேண்டிய பலவீனங்கள்</h2><p>வேலைகளுக்குச் செல்ல
எதிர்பார்த்திருப்போர் பொலிஸ் அறிக்கைகள் மற்றும் தகுதிப் பரிசோதனைகளைப்
பெற்றுக்கொண்டும் கூட அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
</p><p>தற்போது 560 பேர் இந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன், மேலும்
1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையில் காத்திருக்கின்றனர்.
</p><p>
அரசின் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும்போது 10 இலட்சம் ரூபா போன்ற
குறைவான தொகையே செலவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5968ee86-0ec0-4a5f-802e-2009306a5a1f/26-6aa10607b0b2b.webp' /></p><p> </p><p>ஆனால், தனியார் நிறுவனங்கள் ஊடாகச் செல்வதாயின் 35
இலட்சம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது. </p><p>இந்த வேலைத்திட்டத்தில் பாரிய
சுரண்டல்களும் சூறையாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த அநீதிக்கு எதிராக நான்
எப்போதும் முன்நிற்பதுடன், சபா பீடத்துக்குள்ளும் சென்று இந்தப் பிரச்சினைகளை
வலுவாக முன்வைப்பேன்.
</p><p>
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த
தற்போதைய அரசு, இந்தச் சுரண்டல் முறையை உடனடியாக ஒழித்து, 10 இலட்சம் ரூபா
செலவில் இஸ்ரேல் செல்லும் வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9467708-1145-4160-a204-458d3fa3fca4/26-6aa106086cd44.webp' /></p><p> பொய்
கூறும் அரசியலை நிறுத்திவிட்டு, இந்தப் பலவீனங்களை உடனடியாகத்
திருத்திக்கொள்ளுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்ட இடத்துக்கு நேரடியாக வருகை தந்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநீதிக்குள்ளாகி வேலைவாய்ப்பை
எதிர்பார்த்துக் காத்திருப்போரைச் சந்தித்து அவர்கள் முகங்கொடுத்துள்ள
பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:09:19+00:00</updated>
        </entry>
    </feed>
