<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-26T03:27:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-drop-in-passport-supply-srilanka-1785035391"></link>
            <id>https://tamilwin.com/article/massive-drop-in-passport-supply-srilanka-1785035391</id>
            <summary type="text">கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன....</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>விநியோகிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள்</h2><p> கடந்த ஜனவரியில் 65,351 கடவுச்சீட்டுகளும், பெப்ரவரியில் 54,161 கடவுச்சீட்டுகளும், மார்ச்சில் 50,356 கடவுச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4056a50-1e9c-4cea-9630-efabe38dad6a/26-6a657a8244aff.webp' /></p><p>

அதன்படி, இந்த காலாண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 169,868 ஆகும்.

எனினும், 2025 ஜனவரியில் 53,216, பெப்ரவரயில் 74,402 மற்றும் மார்ச்சில் 77,128 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, குறித்த காலாண்டில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 204,746 ஆகும்.</p><p>

அதன்படி, முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டு விநியோகம் சுமார் 34,878 அளவில் குறைந்துள்ளது.</p><p>

அதிலும் குறிப்பாக ஜனவரி மாதத்தைத் தவிர, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த கடவுச்சீட்டு வழங்கல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.</p><p> பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட ஸ்திரத்தன்மையே கடவுச்சீட்டு வழங்கல்களில் குறைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
அதே போன்று 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது, நாட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்துள்ளது என்றும் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/703d4886-01e7-4d3c-bff3-90e8d479e063/26-6a657a82edf89.webp' /></p><p>
</p><p>
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை 609,446 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>சமீபத்திய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட ஆண்டுகள் 2022 மற்றும் 2023 ஆகும். </p><p>இந்த ஆண்டுகளில், முறையே 911,757 மற்றும் 908,722 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இருப்பினும், 2024-ல் இது 586,970 ஆகக் குறைந்திருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்லன்வில துப்பாக்கிச்சூடு! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477</id>
            <summary type="text">கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.மோட்டார் சைக்கிளில் வந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகமொன்றின் முன்னால் நின்றிருந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">திட்டமிட்ட கும்பல் மோதல்&nbsp;</span></p><p>துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f427b786-8cb4-46bd-9732-357602b8eaca/26-6a6573a616a49.webp' />&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கும்பல் மோதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனவும் அவரது எதிர்த்தரப்பினரால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>இரண்டு சந்தேகநபர்களும் கைது&nbsp;</h2><p>கடந்த சில காலமாக கொஸ் மல்லி எனப்படும் பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டுள்ள படோவிட்ட அசங்க மற்றும் சண்டோ பிரிவினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a576dabb-424f-46d0-a58c-304d03f60d6e/26-6a6573a6bae40.webp' /></p><p>இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளை கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவத்தையடுத்து பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில்,இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T02:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலைமை மோசமடையலாம்..! காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-issued-regarding-the-dengu-fever-1785030287"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-issued-regarding-the-dengu-fever-1785030287</id>
            <summary type="text">காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பெற்றோரை வலியுறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர்.</p><p>கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp; அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>டெங்கு காய்ச்சல் பாதித்த 50 குழந்தைகள்</h2><p>குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என்று பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adddc8e8-cb7d-4fe1-9d2a-784a3f89b538/26-6a656e7a65e75.webp' /></p><p>
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது சுமார் 50 டெங்கு காய்ச்சல் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் சுமார் கால் பகுதியினர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும், நிலைமை மோசமடைந்தால், வைத்தியசாலையின் கொள்ளளவுப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.
</p><p>
எனவே, தங்கள் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெறுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், வீட்டில் தங்கி சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான நேரத்தை வீணடிப்பதாகும் , சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால், எங்களுக்கு இடவசதிப் பற்றாக்குறை ஏற்படலாம். தூர பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வருவதில் ஏற்படும் தாமதங்களால் பல மரணங்கள் நிகழ்கின்றன.</p><h2>டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை</h2><p>24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a38443-8f88-4345-8641-74f9f55edfe5/26-6a656e7b16f52.webp' /></p><p>இதற்கிடையில், நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினசரி கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கிறது.</p><p>
மேலும், இதுவரை நிகழ்ந்துள்ள 61 டெங்கு மரணங்களில், 47 பேர் பெண்கள் என்றும் வைத்திய நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
</p><p>கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுர, காலி, குருநாகல், கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். </p><p>எனவே, சிக்கல்களின்றி நோயை குணப்படுத்த, பொதுமக்கள் மருத்துவ ஆலோசனையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என&nbsp;அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T02:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா திங்கட்கிழமை அமைச்சரவையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retirement-age-of-judges-1785021767"></link>
            <id>https://tamilwin.com/article/retirement-age-of-judges-1785021767</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
</p><p>
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை, திங்கட்கிழமை (27) அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கான இறுதி முடிவு நேற்று முன்தினம் இரவு (24) எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் கருத்துக் கணிப்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு (24) பெலவத்தை ஜே.வி.பி. தலைமையகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.</p><p>

ஜேவிபி-யின் உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலில், எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கத் தயார் நிலையுடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேலும் தாமதமின்றி கொண்டுவர வேண்டும் என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36db0c52-ca3a-4ccf-8652-af8d62f51670/26-6a6568c68aa45.webp' /></p><p>அப்போது, ​​அடுத்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் குறித்த திருத்த மசோதாவைக் கொண்டுவருவது பொருத்தமாக இருக்காதா என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>பிரதம நீதியரசர் ​​ஓய்வுபெற்ற பிறகு யாரையும் நம்ப முடியாது என்று அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>

அதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும். </p><p>வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22வது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e00fd709-ada3-4a12-b514-4f14251d38b8/26-6a6568c5d219b.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். </p><p>உச்ச நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும்.</p><p>

அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது. </p><p>அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreigner-arrested-in-colombo-1785029475"></link>
            <id>https://tamilwin.com/article/foreigner-arrested-in-colombo-1785029475</id>
            <summary type="text">கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,&nbsp; கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட&nbsp; ஒரு உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a882c3-aea2-4b84-9616-d3441a030bc1/26-6a656693b94d7.webp' /></p><p>அவரிடம் இருந்து, 36,200 சட்டவிரோத சிகரெட்டுக்கள் மற்றும் ஒரு வாடகைக் கார் உள்ளிட்டவற்றை பொலிஸார்&nbsp; பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;</p><p>30 வயதுடைய மலேசிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322"></link>
            <id>https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322</id>
            <summary type="text">இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. </p><p>

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்த பாரிய மோசடி நடவடிக்கையில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீட்கப்பட்ட&nbsp; பணம் மற்றும் கார்&nbsp;</h2><p> </p><p>

இந்த பாரிய அளவிலான நிதி மோசடியின் ஊடாக, நாட்டின் 21 முன்னணி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றில் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குநராக நடித்து இந்த மோசடியை வழிநடத்தியதாக தெரிவித்து பெஸ்ஸி முகமது என்ற சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d312f-70d6-47b1-8e6f-1bdef142ea2c/26-6a65620200cda.webp' /></p><p> </p><p>

குறித்த நபரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு பணம் மற்றும், 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார், தங்கப் பொருட்கள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகளில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

எனினும், அந்த பணத்தை கொண்டு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தபொருட்களும் சுங்கப்பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரிந்தது ராஜபக்ச இராச்சியம்! கண்ணாடி முன்னால் நின்று மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து &#039;&#039;தெங் செபத&#039;&#039;(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து ''தெங் செபத''(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தயாராக இருங்கள்..</h2><p>

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், </p><p>

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ab1e82-725f-472d-8c30-7c93d572cd2e/26-6a65593936de4.webp' /></p><p> </p><p>

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் நாட்டை சீரழித்தனர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>பல அக்கிரமங்களை செய்தமை, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களானமை உள்ளிட்ட செயல்களை மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>

எனவே, உங்களுடைய அக்கிரமங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கான காலம் உருவாகியிருக்கின்றது. 

இன்னும் சிறிது காலத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும். எனினும், மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edfd4fc1-3a36-4cfe-a4d0-04dd6c48f848/26-6a655939db153.webp' /></p><p> </p><p>ராஜபக்ச குடும்பத்தில் மேலிருந்து கீழ் வரை, குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இதனால்தான் மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்தி, புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
</p><p>
மக்களின் பக்கமே எமது ஆதரவு இருக்கும். எனவே, உங்களுடைய பொருட்களெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.</p><p> எப்போதும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T00:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தமிழ்க் கட்சியினரும் ஜனாதிபதி அநுரவுடன் 3 ஆம் திகதி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-tamil-party-members-to-meet-with-president-1785022653"></link>
            <id>https://tamilwin.com/article/6-tamil-party-members-to-meet-with-president-1785022653</id>
            <summary type="text">தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>&nbsp;ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு&nbsp;</h2><p>
</p><p>
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூன்று பேர் என்ற அடிப்படையில் 18 தலைவர்கள்
வரையில் இந்தச் சந்திப்பில் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5b4c93-5fa9-4adf-92b5-5e0016439c0e/26-6a6548bf341f6.webp' /></p><p>
</p><p>
இந்த ஆறு கட்சிகளின் பொது மேடையின் சார்பில் அவற்றின் இணைப்பாளர் ஜனாதிபதியின் செயலாளருக்கு மேற்படி சந்திப்புக்கான
கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார் என்றும், அதற்கான பதிலை
ஜனாதிபதியின் செயலாளர் நேற்று உடனடியாகவே இணைப்பாளருக்கு வழங்கினார் என்றும்
ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்தப் பதிலிலேயே மேற்படி ஆகஸ்ட் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி
செயலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக
அறியவந்தது.</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T23:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953"></link>
            <id>https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.</p><p> 

திருட்டு சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர்.</p><p></p><h2><b> திருட்டு சம்பவங்கள்</b></h2><p>இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df7e02-9b25-4915-9e6f-9a6e150aaba7/26-6a64bead2c331.webp' /></p><p>இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>
வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b> 

முக்கியமான வழிமுறை</b></h3><p>பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02b0380-35fd-486b-816a-3bc2f934b4e0/26-6a64beadf3bf9.webp' /></p><p>திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T23:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுப் பொய் : பிரேம்நாத் சி தொலவத்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/false-allegations-against-the-bar-association-1785017749"></link>
            <id>https://tamilwin.com/article/false-allegations-against-the-bar-association-1785017749</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும்
கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும்
பொய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும்
கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும்
பொய்யானவை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த, தைரியமிருந்தால்
இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து பகிரங்கமாகக் கூறுமாறும்
சவால் விடுத்தார்.
</p><p>
கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முன்மொழிவுக்கு இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.</p><p></p><h2>நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறை</h2><p>
</p><p>இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் ஒன்றைப்
போட்டுக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப்
போட்டியிடுவதற்காகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு
செயற்படுகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் நாடாளுமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
</p><p>
இத்தகையக் கூற்றுக்கள் மிகவும் வேடிக்கையானவை. நீதியரசர்களின் பதவிக் காலத்தை
அதிகரிக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. மாறாக, களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட
பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சட்டச் சமூகமும்
ஒன்றிணைந்தே இதற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8738a75d-2428-4bb1-b3d1-1b809834d304/26-6a65359776ea8.webp' /></p><p>
</p><p>
அத்துடன், அரசின் இந்தத் தீர்மானத்துக்கு நீதிபதிகள் சங்கமும்
உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளது. </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவே எதிர்ப்பை வெளியிடுகின்றார்
என்றால், நீதிபதிகள் சங்கத்தில் உள்ள எந்த நீதிபதி பதவி விலகி மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிடப் போகின்றார்?

நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைப் பரப்பாமல்,
இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு நான்
சவால் விடுக்கின்றேன்.</p><p> இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிராந்திய சட்டத்தரணிகள்
சங்கங்கள் மற்றும் சர்வதேச சுயாதீன அமைப்புகள் அனைத்தும் அரசியல்
உள்நோக்கத்துக்காக அன்றி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறைச்
சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவே குரல் கொடுத்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T22:16:02+00:00</updated>
        </entry>
    </feed>
