<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-28T22:24:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;மெலானியா ட்ரம்ப்பை எங்கே கொல்வது&quot; ஈரானின் அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/where-kill-melania-trump-video-threat-iran-warning-1785262248"></link>
            <id>https://tamilwin.com/article/where-kill-melania-trump-video-threat-iran-warning-1785262248</id>
            <summary type="text">ஈரானில் வெளியான காணொளியில் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மகன் பாரன் ட்ரம்பை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

&quot;Where ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் வெளியான காணொளியில் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மகன் பாரன் ட்ரம்பை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
"Where to Kill Melania" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் காணொளியில், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் நியூயோர்க் நகரில் பயணிக்கும் காட்சிகள், அவர் வழக்கமாகச் செல்லும் இடங்கள் மற்றும் ஷாப்பிங் செய்யும் ஆடம்பர கடைகள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>எங்களுக்காக காத்திரு</h2><p>
</p><p>
அந்தக் காணொளியில், மெலனியா ட்ரம்ப் வாங்கும் ஆடைகளில் நரம்பு நச்சுப் பொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்ற வகையிலான குறிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Where and how is Melania Trump reachable?<br><br>The information used in this video, regarding Melania&#39;s movements and the types of operations, comes from several anonymous security networks. <a href="https://t.co/AOM7S2gx4v">pic.twitter.com/AOM7S2gx4v</a></p>&mdash; Tasnim News Agency (@Tasnimnews_EN) <a href="https://x.com/Tasnimnews_EN/status/2082053796633497972?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
காணொளியின் இறுதியில், "இது ஆரம்பம் மட்டுமே. பாரன் ட்ரம்ப், எங்களுக்காக காத்திரு" என்ற எச்சரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், மெலனியா ட்ரம்ப் மற்றும் பாரன் ட்ரம்புக்கு அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) 24 மணி நேர பாதுகாப்பு வழங்கி வருகிறது.</p><p> 

மேலும், வெள்ளை மாளிகை, நியூயோர்க் ட்ரம்ப் டவர், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப் மற்றும் புளோரிடாவின் மார்அ-லாகோ உள்ளிட்ட ட்ரம்ப் குடும்பத்தின் அனைத்து முக்கிய சொத்துகளும் கடுமையான பாதுகாப்பின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;எச்சரிக்கை வாசகங்கள்</h2><p>

இதனுடன், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளிலும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து பழிவாங்கும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c3c94e9-78db-4b8c-8ba8-768f46686805/26-6a692572dc025.webp' /></p><p>
இந்நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், தாம் இன்னும் ஈரானின் முக்கிய இலக்காக இருப்பதாக நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தமக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்கூட்டியே உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 ஆண்டு கால சட்டப் போராட்டத்தை முடிக்க ஜோன்சன் நிறுவனம் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnson-johnson-agrees-to-end-10-year-legal-battle-1785250671"></link>
            <id>https://tamilwin.com/article/johnson-johnson-agrees-to-end-10-year-legal-battle-1785250671</id>
            <summary type="text">ஜோன்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட டால்க் தயாரிப்புகளைப்
பயன்படுத்தியதால் சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட
பல்லாயிரக்கணக்கான வழக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோன்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட டால்க் தயாரிப்புகளைப்
பயன்படுத்தியதால் சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட
பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிக்க, அந்த நிறுவனம் 5.5 பில்லியன் டொலர்
(சுமார் ₹46,000 கோடிக்கு மேல்) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த சட்டப் போராட்டம்
முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>இழப்பீட்டுத் தொகை&nbsp;</h2><p>
</p><p>
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில மற்றும் கூட்டாட்சி நீதிமன்றங்களில்
நிலுவையில் உள்ள சுமார் 76,000 வழக்குகள் தீர்த்து வைக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124bc73d-14f3-4a0c-b767-3f8a5427f955/26-6a692472b980f.webp' /></p><p>
</p><p>
இதில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து,
இழப்பீட்டுத் தொகை 7 பில்லியன் டொலர் அல்லது அதற்கு மேலாகக் கூட உயரக்கூடும்
என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முதற்கட்டமாக, J&amp;J நிறுவனம் 2027-இல் $3 பில்லியன் தொகையையும், மீதியை
2028-இல் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியாவதற்கு 95%
மனுதாரர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.</p><p></p><h2>சோள மாவு அடிப்படையிலான பவுடர்</h2><p>

அதேவேளையில், தங்களது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், புற்றுநோயை
உண்டாக்கவில்லை என்றும் J&amp;J நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bacfad0-62c7-42ec-a771-c14f1b4ad8a6/26-6a69247216388.webp' /></p><p>வழக்கு விசாரணைகளில் தங்களுக்கு வெற்றி பெற நம்பிக்கை இருந்தபோதிலும்,
நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய மருந்துகள்
மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த
ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக நிறுவனத்தின் சட்டப் பிரிவு துணைத் தலைவர்
எரிக் ஹாஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஜோன்சன் &amp; ஜோன்சன் நிறுவனம் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் டால்க்
அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்திவிட்டு, சோள மாவு அடிப்படையிலான
பவுடர்களை விற்பனை செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக சிக்கிய சுரேஷ் சலே..! இந்தியாவில் செய்த இரகசிய மோசடிகள் அம்பலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-linked-to-alleged-india-scam-claims-1785265667"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-linked-to-alleged-india-scam-claims-1785265667</id>
            <summary type="text">சுரேஷ் சாலேவை விசாரிக்கின்ற குற்றத்தடுப்புப் பிரிவினுடைய பணிப்பாளர் சானி அபயசேகரவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கோரி நீதி மன்றத்திலே மனு ஒன்று த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சாலேவை விசாரிக்கின்ற குற்றத்தடுப்புப் பிரிவினுடைய பணிப்பாளர் சானி அபயசேகரவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கோரி நீதி மன்றத்திலே மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் முதன் முறையாக அடிப்படை ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தது மட்டுமல்லாமல் சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளை திணரடித்த சம்பவம் நீதிமன்றத்திலே இடம் பெற்றிருந்தது.</p><p>

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் நீதிமன்றத்திலே சுரேஷ் சாலேவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்த வேளை, சுரேஷ் சாலே 64 பக்கங்கள் இருக்கக்கூடிய கடவுச்சீட்டில் பல பக்கங்களை கிழித்திருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
</p><p>
அத்துடன் ”மனுதாரர் தரப்பு தூய்மையான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை. மிக மோசமாக அணுகி இருக்கிறார்கள். இதில் பல பொய்கள் இருக்கின்றன. இதனை நீதிமன்றம் ஒரு போதும் கருத்தில் எடுக்கக் கூடாது. இவர்களுடைய அனைத்து வாதத்திறமைகளும் போலிகளால் நிரம்பப்பட்டவை” என அவர் நீதிமன்றத்தில் கடுமையான வாதத்தை முன்வைத்திருந்தார்.
</p><p>
மேலும் ஜூன் 11ஆம் திகதி குறித்த வழக்கானது நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 5 அறிக்கைகள் நீதிமன்ற கவனத்திற்கு எடுத்த வரப்பட்டதாகவும் சுதர்சனி ஹேரத் கூறியுள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்த மேலும் பல ஆதாரபூர்வமான வாதங்களை ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvS71qDw2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 5 மாதக் குழந்தைக்கு நிகழ்ந்த அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-month-baby-dies-swing-pole-breaks-and-falls-1785267269"></link>
            <id>https://tamilwin.com/article/5-month-baby-dies-swing-pole-breaks-and-falls-1785267269</id>
            <summary type="text">வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான்
கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான்
கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. </p><p>குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த போது
எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த குழந்தை</h2><p>இதில் படுகாயமடைந்த ஐந்து
மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd02c597-8846-44f8-a114-8d99ae63b815/26-6a6906e2d7a27.webp' /></p><p>உயிரிழந்த குழந்தையின்
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் காணிகளை மீளக் கையளியுங்கள்! தையிட்டியில் காணி உரிமையாளர்களின் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landowners-protest-demanding-located-in-tahiti-1785262687"></link>
            <id>https://tamilwin.com/article/landowners-protest-demanding-located-in-tahiti-1785262687</id>
            <summary type="text">தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி
காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி
காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார்
காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி
உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><h2>&nbsp;சட்டவிரோத விகாரை</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்றைய தினம்(28) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள போராட்டம் நாளைய
தினம்(29) புதன்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்களும் போராட்டத்தை
முன்னெடுக்கவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T19:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/75th-anniversary-of-the-un-refugee-convention-1785256700"></link>
            <id>https://tamilwin.com/article/75th-anniversary-of-the-un-refugee-convention-1785256700</id>
            <summary type="text">இரண்டாம் உலகப் போரின் பேரழிவுகளுக்குப் பிறகு, போர் மற்றும் அடக்குமுறைகளில்
இருந்து தப்பிப் பிழைக்கும் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டாம் உலகப் போரின் பேரழிவுகளுக்குப் பிறகு, போர் மற்றும் அடக்குமுறைகளில்
இருந்து தப்பிப் பிழைக்கும் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட
1951-ஆம் ஆண்டின் ஐ.நா. அகதிகள் ஒப்பந்தம் தனது 75ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது.
</p><p>
உலகளவில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
ஒப்பந்தம், சர்வதேச அளவில் தஞ்சம் கோருபவர்களின் உரிமைகளை உறுதிசெய்கிறது.</p><p></p><h2>ஐ.நா அகதிகள் ஒப்பந்தம்</h2><p>
</p><p>
எனினும், தற்போது உலகம் முழுவதும் 4.1 கோடிக்கும் அதிகமான மக்கள் கட்டாயமாக
இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய கொள்கைகள் மற்றும் பல்வேறு
நாடுகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஒப்பந்தத்தின் மீதான மதிப்பு சவாலுக்கு
உள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5704505f-4748-4f2f-9597-e69072e65fe4/26-6a68dfac31ccb.webp' /></p><p>இந்தச் சூழலில், இந்த ஒப்பந்தம் மூலம் பயனடைந்த மற்றும் இன்னும் பாதுகாப்பற்ற
சூழலில் வாழும் 6 அகதிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>
மனித உரிமைகள் வழக்கறிஞரான ஹுவான் கார்லோஸ் ஆர்சே, நிக்கரகுவா அரசின்
அடக்குமுறைகளில் இருந்து தப்பி கோஸ்டாரிகாவிற்குச் சென்று, பின்னர் ஐ.நா.
உதவியுடன் ஸ்பெயினில் தஞ்சம் புகுந்து பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து
வருகிறார்.</p><p></p><h2>இரண்டாம் உலகப் போர்</h2><p>
</p><p>
சூடான் உள்நாட்டுப் போரினால் பெற்றோரால் எகிப்திற்கு அகதியாகக் கொண்டு
செல்லப்பட்ட வென்யென் கேப்ரியல், பின்னர் அமெரிக்காவில் குடியேறி பிரபல NBA
கூடைப்பந்து வீரராகவும், ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தூதுவராகவும்
உயர்ந்துள்ளார்.</p><p>

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களிடம் இருந்து தப்பிக்கக் குகையில் பிறந்த
ஹெர்ஷல் க்ரீன்பிளாட், போருக்குப் பின் அமெரிக்காவில் குடியேறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee95c541-94c1-4fed-b88e-3ff5cc47a0c6/26-6a68dfacd677a.webp' /></p><p>அக்காலத்தில் அகதிகளுக்குக் கிடைத்த ஆதரவு தற்காலத்தில் குறையும் சூழல்
குறித்து இவர் கவலை தெரிவிக்கிறார்.
சையத் ஆலம்
மியான்மர் இராணுவத்தின் இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பி வங்கதேச
அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.</p><p> </p><p>வங்கதேசம் இந்த ஐ.நா.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், வன்முறைகளும் இயற்கைப் பேரிடர்களும் நிறைந்த
முகாம்களிலேயே இன்றும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்.</p><p></p><h2>நாடுகடத்தாமை கொள்கை</h2><p>
</p><p>
1948 போரில் பாலஸ்தீனத்தில் இருந்து தப்பி லெபனான் சென்ற ஹுஸ்னியா அகமத்
கோஸ்லான், 70 ஆண்டுகளுக்கும் மேலாக லெபனான் முகாமிலேயே கல்வியறிவு மற்றும்
முறையான சட்டப் பாதுகாப்பு இன்றி வாழ்ந்து வருகிறார்.
</p><p>
சிரியாப் போரிலிருந்து தப்பி, கடலில் மூழ்கிய படகை நீந்தியே கரைசேர்த்து
ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த யுஸ்ரா மார்டினி, பின்னர் ஒலிம்பிக் போட்டியில்
பங்கேற்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a560ffd1-8c86-41af-955f-3039b2edcc44/26-6a68dfad87ff0.webp' /></p><p>தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் தனது தாய்நாட்டின்
மறுசீரமைப்பிற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டால் அவருக்குப்
பேராபத்து ஏற்படும் பட்சத்தில், அவரைப் பலவந்தமாகத் திருப்பி அனுப்பக் கூடாது
என்ற 'நாடுகடத்தாமை' கொள்கையே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாகும்.
</p><p>
உலகளவில் 130-க்கும் மேற்பட்ட ஆயுத மோதல்கள் நிலவும் இன்றைய சூழலில், அகதிகள்
பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமை
ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T19:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெறும் சீனத் தூதுவர் சஜித்துடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-meets-outgoing-chinese-ambassador-1785258295"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-meets-outgoing-chinese-ambassador-1785258295</id>
            <summary type="text">தனது சேவைக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டைவிட்டுப் பிரியாவிடை
பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், நாடாளுமன்ற
எதிர்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சேவைக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டைவிட்டுப் பிரியாவிடை
பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், நாடாளுமன்ற
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்பானது நேற்று(27.07.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைப்பெற்றள்ளது.</p><p></p><h2>இருதரப்பு உறவுகள்</h2><p>
தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர
உறவுகளை மேலும் வலுப்படுத்தச் சீனத் தூதுவர் ஆற்றிய பங்களிப்புக்காக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக்கொண்டதுடன், அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற
வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f482a801-e12e-4d86-ac0c-75f8e830c470/26-6a68e8e105ecd.webp' /></p><p>இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினரும் நீண்டகால இருதரப்பு உறவுகள்,
பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள், வர்த்தகம், அபிவிருத்தி உதவிகள் மற்றும்
எதிர்காலத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவுகளைத்
தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.</p><p>இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே எப்போதுமொரு ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர
நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தையும்
எதிர்க்கட்சித் தலைவர் இந்தச் சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:48:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் விவகாரத்தால் தூக்கத்தை இழந்த மகிந்த குடும்பம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121"></link>
            <id>https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
</p><p>
இந்தநிலையில், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் இன்னும் கோட்டாபய ராஜபக்ச நியமித்த நீதிபதிகள் இருப்பதால், வயது நீட்டிப்பு மூலம் அரசியல் பழிவாங்கல் நடக்கும் என்ற வாதத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் தெரிவித்தார்.</p><p>


லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளில் 7 பேரை கோட்டாபய ராஜபக்சவும், 5 பேரை அநுர குமார திஸாநாயக்கவும் நியமித்துள்ளனர்.
</p><p>
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை நாமல் ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சார்ந்தவை என்பதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசப்படுகிறது.</p><p>

இலங்கையில் 11 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறையின் பெரும் சவாலாக உள்ளது. 

ஓய்வு வயதை நீட்டிப்பதால் மட்டும் இந்தச் சிக்கல் தீர்ந்துவிடாது; நிர்வாக மட்டத்திலிருந்தே நீதித்துறையைச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/g8EqX1Vihpc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் ஓய்வு வயது விவகாரம்: அநுரவுக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/letter-from-the-jaffna-bar-association-1785260326"></link>
            <id>https://tamilwin.com/article/letter-from-the-jaffna-bar-association-1785260326</id>
            <summary type="text">மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில்
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை
செய்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில்
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை
செய்து கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் சிறிலங்கா அரச
தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.</p><p>

மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில்
அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக
வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் தனது
கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது</h2><p> </p><p>இது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் அநுர குமார
திசாநாயக்கவுக்கு, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும்
செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் (28.07.2026) கடிதம் ஒன்று அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f8b2273-7b24-41db-b76b-056cfb5dfebb/26-6a68ecd074af8.webp' /></p><p>

கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும்
பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு விரிவான
முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்துவதற்கு கொள்கை அளவில் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம்
எதிரப்பைக் கொண்டிருக்கவில்லை என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது,
நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ
அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ
பார்க்கப்படும் சூழலை உருவாக்கக் கூடாது என்பதில் தாங்கள் தீவிர கவனம்
செலுத்துவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள்</h2><p> </p><p>நீதித்துறையின் சுயாதீனத்தையும்,
நீதித்துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு
இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராமல் இருப்பது இன்றியமையாததாகும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42e661b-d267-4f6d-b69f-af6cedf6526e/26-6a68ecd1269e2.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து, புதிய
அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை
உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க முடியும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள்
சங்கம் கருதுகிறது.</p><p> குறுகிய அல்லது குறிப்பிட்ட நோக்கம் கருதிய அரசியலமைப்புச்
சீர்திருத்தங்கள், அரசியலமைப்புவாதத்திற்கான மரியாதையைக் குறைப்பதுடன்,
மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும்
பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும்
முயற்சிகளை அரச தலைவர் மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் என
யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரும் குழந்தைகளும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thousands-children-and-guardian-arrested-in-the-us-1785253425"></link>
            <id>https://tamilwin.com/article/thousands-children-and-guardian-arrested-in-the-us-1785253425</id>
            <summary type="text">அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்கப் பிரிவிற்கு(ICE) அகதிகள் மறுவாழ்வு அலுவலகம் (ORR) பகிர்ந்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில், 12,000-க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்கப் பிரிவிற்கு(ICE) அகதிகள் மறுவாழ்வு அலுவலகம் (ORR) பகிர்ந்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில், 12,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரும் அவர்களது குழந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்ட பிரத்யேக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> அமெரிக்க எல்லையைத் தனியாகக் கடக்கும் சிறுவர்களைப் பராமரித்து, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ORR மேற்கொண்டு வருகிறது.&nbsp;</p><p></p><h2>சிறுவர் பராமரிமரிப்பு</h2><p>
கடந்த காலங்களில், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் தகவல்கள்
குடிவரவுச் சட்ட நடைமுறையாக்கப் பிரிவினரிடமிருந்து தனித்து வைக்கப்பட்டிருந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee56a087-de1d-4c17-bb89-9d26b83513e5/26-6a68d945acd6c.webp' /></p><p>இருப்பினும், ஜனவரி 2025 முதல், ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் அவர்தம்
குடும்பத்தினர் தொடர்பான 4,60,000-க்கும் மேற்பட்ட குறிப்புகளை ORR அமைப்பு
ICE-க்கு வழங்கியுள்ளது.
</p><p>
இந்தக் கொள்கை மாற்றத்தின் காரணமாக, குழந்தைகளைத் தங்களோடு சேர்க்க முனையும்
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பலர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை</h2><p>
</p><p>
மேலும், கடுமையான கைரேகை மற்றும் பின்னணிப் பரிசோதனைகள் காரணமாக, சிறுவர்கள்
அரசுப் பராமரிப்பு மையங்களில் தங்கியிருக்கும் சராசரிக் காலம் 30 நாட்களில்
இருந்து 194 நாட்களாகப் பல மடங்கு அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8984d30-fe16-4f62-9f86-8de72b1ad0a9/26-6a68d9465d08e.webp' /></p><p>பாதுகாப்பற்றச் சூழலில் இருக்கும் சிறுவர்களை மீட்டெடுக்கவே இத்தகைய கூடுதல்
சோதனைகள் நடத்தப்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தரப்பில்
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>என்றபோதிலும், குழந்தைகள் நலத் திட்டத்தை அரசாங்கம்
நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்காக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மனித உரிமை
வழக்கறிஞர்களும், முன்னாள் அதிகாரிகளும் கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013"></link>
            <id>https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமது முதலாவது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அரச புலமைப்பரிசில் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

அதன்கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு உயர்ந்தபட்சம் 20 மில்லியன் ரூபாய் வீதம், பட்டப்படிப்பின் முழுமையான நான்கு ஆண்டுகளுக்கும் உயர்ந்தபட்சம் 80 மில்லியன் நிதி அரசால் வழங்கப்படவுள்ளது. </p><p></p><h2>வெளிநாட்டு நாணய கொடுப்பனவு</h2><p>

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர (உயர்தரப்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முப்பது மாணவர்கள் இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518f2b0c-94e9-4f0a-8194-5cb8cde83cd7/26-6a689cdd6596c.webp' /></p><p>

எஞ்சிய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்கு அனுப்புவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பிரதானமாக வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கை ரூபாய் எதிர்பாராத வகையில் பணப்பெறுமதி குறைவடைந்தமையால் மாணவர்கள் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய ஒருசில கொடுப்பனவுகளுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதியளவாக இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 அதனால், செலாவணி விகிதம் உறுதிப்பாட்டை எட்டும் வரைக்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை செலாவணி விகிதத்திற்கு சீராக்கல் கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:25:19+00:00</updated>
        </entry>
    </feed>
