<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-16T00:13:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786826234"></link>
            <id>https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786826234</id>
            <summary type="text">முல்லைத்தீவு- கொக்கிளாய் பகுதி ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- கொக்கிளாய் பகுதி ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.</p><p>கொக்கிளாய் வீதியில்
பயணித்துக்கொண்டிருந்தவேளை கொக்குளாய் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கைது</h2><p>&nbsp;கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கொக்குளாய் பொலிஸ்
நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f43f4dd5-5fe2-48a9-a536-2083b2262a9e/26-6a80ffcb09792.webp' /></p><p>மேலும், சந்தேகநபர்களை நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் சர்ச்சையாகியுள்ள கல்முனை வைத்தியசாலை விவகாரம்..! களத்தில் குதித்த ஹிஸ்புல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சீருடையையே அணிய வேண்டும் என்பதே விதி எனவும், இது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலை நிர்வாகத்தின் செயற்பாடு இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அவர் கடுமையான கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
எனினும், இந்த விவகாரத்தை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல்வாதிகள் பெரிதுபடுத்துவதாகவும், இதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
</p><p>
இதனிடையே, வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும், வெளியிலிருந்து சிலர் இந்த விவகாரத்தைத் தூண்டிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-YQkEN0IDc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின அழிப்புக்கான சாட்சிகளே செம்மணி எலும்புக்கூடுகள்..! அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786835789"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786835789</id>
            <summary type="text">சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இவ்வாறு குடும்பங்கள் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அழிப்பே இனவழிப்பு என்பதனை உறுதிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>செம்மணிப் புதைகுழி</h2><p>

நேற்றையதினம்(15) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குறித்த அறிக்கையில்,
</p><p>

தமிழர்கள் இலங்கையில் 1956ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட பேரினவாதத்தால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். 

இதனைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த உறவுகள், தமிழ்ப் புத்திஜீவிகள் ஆகியோர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உரக்கச் சொல்லி வருகின்றனர்.</p><p>

அதற்கான சாட்சியங்களாக, செம்மணிப் புதைகுழியில் இருந்து கண்கூடான சாட்சியங்களாக எலும்புக்கூடுகள் அகழ அகழ வெளிவந்து கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb218e2-0f0e-45b7-b700-0c2c712c3ac6/26-6a80f5d3cef58.webp' /></p><p> 

இதுவரை 539 எலும்புக்கூடுகள் தமிழின அழிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர், குமரர், தாய், தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக் கருவியான இராணுவத்தின் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர். அதனை எலும்புக்கூடுகள் பேசாமல் பேசுகின்றன.
</p><p>
பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் கூட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இனவழிப்பில் இருந்து தப்ப முடியவில்லை.

இலங்கையில் 1956ஆம் ஆண்டு தமிழின அழிப்பு, இக்கினியாகலையில் பேரினவாதக் குண்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 அதில் 157 அப்பாவித் தமிழர்கள் பேரினவாதக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.</p><h2>அப்பாவித் தமிழர்கள்</h2><p> </p><p>அதற்கான நீதி வழங்கப்படாததால், அடுத்து 1958ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழின அழிப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளாக இடம்பெற்றன.

அவற்றை பேரினவாத அரசு கண்டுகொள்ளவில்லை. </p><p>1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை தமிழினப் படுகொலைக்கான ‘கறுப்பு ஜூலை’ என தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். அதில் 3,000 முதல் 5,000 வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9a7258-9d0f-49c4-9833-18bdc936dabb/26-6a80f5d49dade.webp' /></p><p>

1983ஆம் ஆண்டு முதல் தமிழின அழிப்பு என்பது தொடர்ச்சியான நிகழ்வாகி, 2009 மே 18ஆம் திகதி வரை தீவிரமாக நடைபெற்றது.

அதன் பின்னரும் கலாசார, வரலாற்று மற்றும் உணர்வு ரீதியான அழிப்புகள் தொடர்கின்றன.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய தமிழ் மக்களுக்கு முதற்கட்ட பதிலாக செம்மணி சிந்துபாத்தி புதைகுழி கண்களைத் திறக்க வைத்துள்ளது.</p><p> இதேபோல் பல புதைகுழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளும் எலும்புக்கூடுகளாக எமது இதயக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மைலந்தனை, வீரமுனை, உடும்பன்குளம், மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருகோணமலை போன்ற இடங்களில் பல புதைகுழிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.</p><p>

சட்டம் சமமாகச் செயற்படுமாயின், இப்புதைகுழிகளை அறிவியல் பூர்வமாக இலகுவாகக் கண்டறிய முடியும்.</p><h2>அரச பயங்கரவாதம்</h2><p>
</p><p>
தொல்லியல் அகழ்வுகள் மூலம் கலாசாரத் திரிபுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், மனிதப் புதைகுழிகளைக் கண்டறியும் விடயத்தில் காட்டப்படும் ஆர்வம் மிகமிகக் குறைவாகவே உள்ளது. </p><p>இதனை அரசு முறையாக முன்னெடுத்து, சட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இதனைச் செய்தால் இனவழிப்பு, அரச பயங்கரவாதம் என்பவற்றுக்கான கோரமான முகங்கள் வெளியில் தெரிந்துவிடும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, தமது அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பதை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.</p><p>செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்து, முந்தைய அரசாங்கங்களின் முகத்திரையைக் கிழிக்க முன்வர வேண்டும்.

அதன் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். மேலும், கடந்த கால அரசாங்கங்களின் கோரமான முகங்களை வெளிக்காட்டவும் முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08285f08-7e1d-42c5-bac3-7293e86d1c20/26-6a80f5d54ea20.webp' /></p><p>

ஜே.வி.பி. முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலை தொடர்பாக, அவரது மகன் நீதியைத் தேட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.</p><p>

யூகோஸ்லாவியாவை ஆட்சி செய்த ஸ்லோபோடான் மிலோசவிக் என்ற ஜனாதிபதி, தனது இனத்தைச் சேர்ந்த சேர்பியப் படையினரைக் கொண்டு சிறுபான்மை குரோஷியர்களை இனவழிப்புக்கும், பெண்களைப் பாலியல் துர்நடத்தைக்கும் உள்ளாக்கினார்.உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.</p><p>
பின்னர் சர்வதேசத் தலையீட்டின் மூலம் குரோஷியர்களுக்கு நீதியின் பார்வையில் நியாயம் கிடைத்தது. </p><p>குற்றம் செய்த ஜனாதிபதி மற்றும் தளபதிகள் பாரிய தண்டனைகளைப் பெற்றனர்.

இவையெல்லாம் சிந்திக்க வேண்டிய படிப்பினைகளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கின் தொலைபேசியில் ஈரான் தாக்குதல் காணொளிகள்..! கிடைக்கப்பெற்றுள்ள பகீர் வாக்குமூலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185"></link>
            <id>https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185</id>
            <summary type="text">நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>

அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

ஷிரான் பாசிக் தனது ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில், துபாயில் இருந்தபோது ஈரானுடன் தொடர்புடைய தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
துபாயில் உள்ள பிரபலமான, மிகப்பெரிய வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்தபோது, அந்நாட்டு பொலிஸார் தன்னை சோதனை செய்ததாக பாசிக் முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில், ஈரானிலிருந்து துபாய், ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னணியில் தன்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், விசாரணை அதிகாரிகளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அவரது கையடக்கத் தொலைபேசியை துபாய் பொலிஸார் பரிசோதித்தபோது, ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அதில் இருந்ததாகவும், அதன் பின்னரே தான் கைது செய்யப்பட்டதாகவும் பாசிக் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையிலும், துபாய் பொலிஸார் தன்னிடம் ஈரான் தொடர்புகள் குறித்து தினமும் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mB0MsAFzV9E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் வலையில் சிக்கிய ஸ்பைடர் வுமன்..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spider-woman-caught-with-ice-drug-1786824855"></link>
            <id>https://tamilwin.com/article/spider-woman-caught-with-ice-drug-1786824855</id>
            <summary type="text">நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் &#039;ஸ்பைடர் வுமன்&#039; (சிலந்தி பெண்) என
அழைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் 'ஸ்பைடர் வுமன்' (சிலந்தி பெண்) என
அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் அதிரடியாகக் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய
வேளை, அவரை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>போதைப்பொருள் விநியோகம்</h2><p>

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு&nbsp; கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (13) மாலை
சாய்ந்தமருது பொலிஸாரினால் விசேட சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6ddb0cc-f90f-456a-ba7d-397e4b1a0238/26-6a80cc4b6664c.webp' /></p><p>
</p><p>இதன்போது, கல்முனை புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 2310
மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 40 வயதுடைய 1 பிள்ளையின் தாயான
இந்த சந்தேகநபர் பொலிஸாரின் சுருக்குப் பொறியில் சிக்கினார்.
</p><p>
கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்டகாலமாக போதைப்பொருள்
விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>விளக்கமறியல்</h2><p> </p><p>பொலிஸார் சோதனையிட வரும்
சந்தர்ப்பங்களில், வீடுகளின் மாடிகளில் இருந்து ஏனைய மாடிகளுக்கு லாவகமாகப்
பாய்ந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையினாலேயே இவருக்கு
மக்கள் 'ஸ்பைடர் வுமன்' எனப் பெயரிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1feb10-bd22-4ba6-b317-d73c2719d8c7/26-6a80cc4c66f11.webp' /></p><p>
</p><p>
இம்முறை பெண் பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று,
நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே கால் உடைந்த நிலையிலிருந்த இவரைச் சுற்றி
வளைத்துக் கைது செய்துள்ளனர்.</p><p> இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில்
கைதான இவர், கல்முனை தலைமையக பொலிஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கியதாக பொலிஸ்
உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின்
மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி
ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்தசோதனை நடத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T20:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125"></link>
            <id>https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125</id>
            <summary type="text">ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, அது ஈரானுக்குச் சொந்தமானதாகவே உள்ளது தொடர்ந்து ஈரானுக்கே சொந்தமானதாக இருக்கும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாதி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த அவர், “ஒரு ட்வீட் மூலமாகவோ, விமானந்தாங்கிக் கப்பல் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரசார உரையின் மூலமாகவோ ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற முடியாது” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், ஈரான் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத வரை, ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை ஈரான் தொடர்ந்து அமல்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eca50a7-7690-426a-a44b-346781b58de7/26-6a8090721f46a.webp' /></p><p>
</p><p>

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு “முழுமையான கட்டுப்பாடு” இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

“நாம் இதை தொடர்ந்து வைத்திருப்போம் என்று நினைக்கிறேன்.</p><p> எங்கள் கடற்படை முற்றுகை ‘இரும்புச் சுவர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

 இதை ஈரான் எதுவும் செய்ய முடியாது” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஈரான் இராணுவம் ட்ரம்பின் கூற்றை “பொய் மற்றும் கட்டுக்கதைகள்” என்று மறுத்துள்ளது.</p><h2>ட்ரம்பிற்கு பதிலடி</h2><p>

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் முழுமையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் ஆயுதப்படைகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பு இல்லாமல் எந்தவொரு வர்த்தகக் கப்பல் அல்லது எண்ணெய் கப்பலும் இந்த நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7315299c-b144-4f58-848a-a9b121f959b0/26-6a809072e693c.webp' /></p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா “மிகப்பெரிய தவறான கணக்கீட்டை” மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்பின் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கருத்து நகைச்சுவையாக கூறப்பட்டது என்று பின்னர் விளக்கம் அளித்ததாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதலின் முக்கிய பதற்றப் பகுதியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T20:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் 30 இல் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-on-august-30-1786818028"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-on-august-30-1786818028</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக
வடக்கு-கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக
வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.</p><p>

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு -
கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா
மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இவ்வாறு தெரிவித்தார். </p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி
வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை
வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>ஐ.நா மனித உரிமைகள் பேரவை</h2><p> காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான
போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce052efa-cc3a-43ad-a945-2e834fa215a3/26-6a80b265c7025.webp' /></p><p> காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல
அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும்
சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி
கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர்
இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>கலந்துரையாடல்</h2><p>
</p><p>
இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும்
முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை
அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44a3efbf-3951-4cce-8ce9-786a3b2243fc/26-6a80b26502555.webp' /></p><p>
</p><p>
அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி
உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்
இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஓகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர்
கேட்டுக் கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கிச் சூடு: படுகாயமடைந்தவர் சற்றுமுன்னர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353</id>
            <summary type="text">மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (15) இரவு சுமார் 9.50 மணியளவில், ஹுலுதாகொட வீதியில் உள்ள வீடொன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9513a-1bf2-4ebf-bf7a-41e46678ff3c/26-6a80ad5f9c637.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.[</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-15T18:18:12+00:00</updated>
        </entry>
    </feed>
