<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T19:35:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675"></link>
            <id>https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது</p><p>குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20)முற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் உயர் அதிகாரிகள்
கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.</p><p></p><h2>ஆலோசனை&nbsp;</h2><p> </p><p>குறிப்பாக, சிறைச்சாலை வசதிகளை நவீனமயப்படுத்துதல் மற்றும்
அவற்றை விரிவுபடுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளால்
முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து ஜனாதிபதி விரிவாகக்
கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfcff50-cf24-4843-a473-4ef371b127d2/26-6a5e6ef43b538.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்திப்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்
(ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்
செயலாளர் அயேஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த
குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை
முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்துமாறு
ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலையில் கருணாவுடன் சென்ற பெண் யார்..! - நான்காவது கோடீஸ்வரரான மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p> பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பிரியந்த ஜயகொடி, "எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.</p><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>யார் அந்த பெண்? என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கூட்டணியின் பின்னணியில் பரபரப்பு! கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய இரகசிய பேச்சுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042</id>
            <summary type="text">தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.இந்தநிலையிலே, ரணில் விக்ரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.</p><p>இந்தநிலையிலே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச ஆகியோர் தங்களது அரசியல் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் பரந்த கூட்டணிகளை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு, ஐக்கியதேசியக்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இரு தரப்பினரின் தலைமைத்துவத்திலும் அதற்கான ஆர்வம் மந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குழுஅமைப்பு, செயலாளர் பதவி, பொருளாளர் நியமனம் போன்ற விடயங்களில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>புதிய கூட்டணியின் பின்னணி தொடர்பான விடயங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m2EEUQnaLBg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் இலக்கு வைக்கப்படும் சுரேஷ் சலே! சி.டி.விக்ரமரத்னவின் சாட்சிகளை அழிக்கும் மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள ராணுவ ஆய்வாளர் அரூஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

இதில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மிக முக்கியமானது.
</p><p>
சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கும் இதே போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஒரு சிறை கலவரத்தை உருவாக்கி அவரைத் தாக்குவதோ அல்லது படுகொலை செய்வதோ இலகுவாகச் செய்யப்படலாம்.
</p><p>
மரணமடைந்தவர்கள் எவரும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை என்றும், அவர்களது மரணங்களுக்கு முன் குடும்பப் பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
</p><p>

அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இவ்வாறான கொலைகள் ஒரு 'கொலை கலாச்சாரத்தை' மீண்டும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விசாரணைகளை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறது என்பதில்தான் இந்த வழக்குகளின் வெற்றி தங்கியுள்ளது. </p><p>

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், விசாரணைகள் மர்மமாகவே முடிந்துவிடும் என குறிப்பிட்டார்.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D49rkYHSU6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜி.ஐ.டி (GIT) பரீட்சை முடிவுகள் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/git-exam-results-released-1784569201"></link>
            <id>https://tamilwin.com/article/git-exam-results-released-1784569201</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான முடிவுகளை இலங்கைத் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்யை தினம் (20 ஜூலை)&amp;nbsp; இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான முடிவுகளை இலங்கைத் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p>இன்யை தினம் (20 ஜூலை)&nbsp; இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
இப்பரீட்சைக்காக 199,598 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 200,235 பேர் விண்ணப்பித்திருந்தனர். </p><p>
அவர்களில் 147,407 பரீட்சார்த்திகள் தோற்றிய இப்பரீட்சையானது, 325 ஒருங்கிணைப்பு மையங்களின் ஒத்துழைப்புடன் 1,669 பரீட்சை மையங்களில் நடாத்தப்பட்டது.
</p><p> பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை (Index Number) உள்ளீடு செய்து, www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகப் பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
</p><p>பரீட்சார்த்திகள் ஜூலை 23, 2026 முதல் ஆன்லைன் பரீட்சை இணையதளம் வழியாகத் தங்களது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.</p><p>
அதேபோல, பாடசாலைகளும் கல்வி அதிகாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி பரீட்சை முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
பரீட்சார்த்திகள் மேலும் தகவல்களைப் பெற பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி உதவி இலக்கம் (Hotline) அல்லது பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் கிளையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/france-denounces-extremely-serious-1784568763"></link>
            <id>https://tamilwin.com/article/france-denounces-extremely-serious-1784568763</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறைபிடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
இச்சம்பவத்திற்கு ஈரானுக்குக் கடுமையான "விளைவுகள்" ஏற்படும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ழான்-நோயல் பரோ எச்சரித்துள்ளார். 
ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. </p><p>தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ராஜதந்திரப் பாதுகாப்பை முற்றிலும் மீறி, ஈரானியப் பாதுகாப்புப் படையினர் "மிகக் கடுமையான அச்சுறுத்தல் நடவடிக்கையில்" ஈடுபட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> 
எவ்விதக் காரணமும் இன்றி இரண்டு ஊழியர்களும் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அவர்களில் ஒருவர் மீது உடலளவிலான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
பின்னர் விடுவிக்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாகத் தூதரகத்திற்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் அடுத்த சில மணிநேரங்களில் பிரான்ஸ் திரும்பவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb5ab7f-527f-4dde-9880-ebe07921989b/26-6a5e5bbf70a1f.webp' /></p><p> </p><p>
பாதிக்கப்பட்ட அந்த இரு ஊழியர்களும் ஈரானியக் கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் பிரான்ஸின் திட்டங்களைப் பராமரித்து வந்தவர்கள் என்பதால், இந்தத் தாக்குதல் நடவடிக்கை மேலும் அதிர்ச்சியளிப்பதாக அமைச்சர் பரோ சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
இச்சம்பவம் குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு பகிரங்கக் கருத்தையும் வெளியிடவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-members-of-the-finance-commission-appointment-1784567148"></link>
            <id>https://tamilwin.com/article/new-members-of-the-finance-commission-appointment-1784567148</id>
            <summary type="text">நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர்.
அனீஸ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர்.
அனீஸ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>நியமனக் கடிதங்கள்</h2><p>
</p><p>இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்
குமாநாயக்க, இன்று(20.7.2026)பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து
அவர்களிடம் வழங்கி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51929d4-919d-4622-9557-e0755365848c/26-6a5e59ff2d74b.webp' /></p><p>

நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து
ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-threatens-more-attacks-on-iran-1784568316"></link>
            <id>https://tamilwin.com/article/trump-threatens-more-attacks-on-iran-1784568316</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும்போது அவர் எந்த வகையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும்போது அவர் எந்த வகையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
</p><p>இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
அமெரிக்காவில் இருக்கும் வரை இஸ்ரேல் பிரதமர் எந்த வடிவத்திலும், எந்த சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என உறுதியளித்து பதிவிட்டுள்ளார்.
</p><p>எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதன்யாகு அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்.</p><p></p><h2>நேரடி உத்தரவு&nbsp;</h2><p>
அந்த சந்தர்ப்பத்தில் அவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நகர அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்திருந்தார். </p><p>
இந்நிலையிலேயே டொனால்ட் ட்ரம்ப் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f874a121-a154-48e0-9982-9533b3e86dd7/26-6a5e5a0302aa5.webp' /></p><p>
</p><p>இதேவேளை, ஒவ்வொரு முறை ஈரான் ஒரு அமெரிக்கப் போர் வீரரைக் கொல்லும்போதும், அதற்கான விலையை அவர்கள் பல மடங்கு அதிகமாகச் செலுத்துவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p> இந்த நேரடி உத்தரவு பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் டானியல் கேன் மற்றும் அனைத்து இராணுவத் தலைவர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி: கொழும்பில் தேசிய செயலமர்வு இன்று ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/efforts-govt-national-workshop-colombo-1784567121"></link>
            <id>https://tamilwin.com/article/efforts-govt-national-workshop-colombo-1784567121</id>
            <summary type="text">அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு
செய்யப்பட்ட அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை
நுண்ணறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு
செய்யப்பட்ட அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை
நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு இன்று கொழும்பில்
ஆரம்பமாகியது.</p><p>

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வை, ஐக்கிய நாடுகள் பொருளாதார
மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள்
மற்றும் டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவு, அதன் அரச நிர்வாகம் தொடர்பான
செயற்திட்ட அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள்
அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.</p><p>
</p><p>
அரச துறையில் தரவுக் கட்டுப்பாடு, டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் செயற்கை
நுண்ணறிவைப் பொறுப்புடனும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவது குறித்து
சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதே இந்தச் செயலமர்வின் பிரதான
நோக்கமாகும்.</p><p></p><h2>கட்டுப்பாட்டுச் சட்டகம்..</h2><p>
</p><p>
குறிப்பாக, சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், தரவு
முகாமைத்துவம், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய அரச கட்டமைப்பு மற்றும் செயற்கை
நுண்ணறிவின் நெறிமுறை சார்ந்த பயன்பாடு குறித்து இதில் பரந்த அளவில் கவனம்
செலுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c40e1088-ea92-43f7-9a58-02a57b137ff3/26-6a5e59db7da60.webp' /></p><p>

மூன்று நாள் நிகழ்ச்சியில், தேசிய தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை
உருவாக்குதல், டிஜிட்டல் அரச சேவைகள், உற்பத்தித்திறன் சார்ந்த மற்றும் முகவர்
சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள்
விரிவாக ஆராயப்படும்.</p><p> விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழுச்
செயற்பாடுகள் மூலம் அரச அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். </p><p>இதன் மூலம்
இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், சான்றுகளின் அடிப்படையில்
தீர்மானங்களை எடுக்கும் கலாசாரத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும்
உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூடத்தில் கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-in-court-batti-1784564248"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-in-court-batti-1784564248</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட கைதி ஒருவர் நீதவான்
நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தவறான முடிவெடுக்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட கைதி ஒருவர் நீதவான்
நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தவறான முடிவெடுக்க முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த சம்பவமானது இன்றையதினம்(20.7.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p>திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக
குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.</p><p></p><h2>கைது</h2><p>இதனையடுத்து, வழக்கிற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்ற பிடியாணை
பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸார் கைது செய்து மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ஆம்திகதி முற்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db21f2a8-9c23-45ed-b0d0-e0440c5e12b3/26-6a5e54508652c.webp' /></p><p>இதனையடுத்து அவரை 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டதையடுத்து மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.</p><p>

இந்த குறித்த நபரை வழக்கு விசாரணைக்காக சம்பவ தினமான இன்று திங்கட்கிழமை (20)
காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால்
அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்.</p><p></p><h2>விசாரணை</h2><p>இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அந்த
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும் 3ம்
திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை
நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b837a00-a83a-441d-bbcb-97fb71679833/26-6a5e54513834b.webp' /></p><p>இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது
பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள்
வைத்து குறித்த கைதி தனது கழுத்தையும், கையையும் கூரிய கத்தியால் வெட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த நிலையில் படுகாயமடைந்து உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் இடத்துக்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர்
அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினின் உலகக் கிண்ண வெற்றி.. அமெரிக்கா - இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி - ஈரான் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-world-cup-victory-us-israel-iran-praises-1784565318"></link>
            <id>https://tamilwin.com/article/spain-world-cup-victory-us-israel-iran-praises-1784565318</id>
            <summary type="text">2026 - உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் பெற்ற வெற்றிக்கு
ஈரான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரே...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 - உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் பெற்ற வெற்றிக்கு
ஈரான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு
இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.</p><p>

காஸா மீதான இஸ்ரேலின் கொடூரமான போர் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல்
போர் ஆகியவற்றை ஸ்பெயின் அரசு கடுமையாகக் கண்டித்திருந்தது.</p><p>

இதன் காரணமாக, சமூக ஊடகங்களில் ஸ்பெயின் அணிக்கு உலகளவில் பெரும் ஆதரவு
பெருகியிருந்தது. மறுபுறம், இஸ்ரேலின் கொள்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஆர்ஜென்டினா
ஜனாதிபதி ஜேவியர் மிலிக்கு ஆதரவாக இஸ்ரேலிய அரசியல்வாதிகளும் கால்பந்து
இரசிகர்களும் ஆர்ஜென்டினாவை ஆதரித்தனர்.</p><p></p><h2>நாட்டின் சுதந்திரம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் ஆர்ஜென்டினாவை
வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5dbbdd0-c80e-48c9-953c-b2d26625b130/26-6a5e51782a632.webp' /></p><p>
</p><p>
இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி முகமது பாகர் கலிபாஃப் திங்கள்கிழமை அன்று
கூறியதாவது, "பாலஸ்தீன மக்களுக்காக ஸ்பெயின் வீரர்கள் குரல் கொடுத்ததும், ஈரானுக்கு
ஸ்பெயின் வழங்கிய ஆதரவும் அந்த அறிவுமிக்க, மரியாதைக்குரிய நாட்டின்
சுதந்திரத் தன்மையைக் காட்டுகிறது.
</p><p>
ஸ்பெயினின் இந்த வெற்றி அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, உலகில் சுதந்திரம்,
சுதந்திரமான சிந்தனை மற்றும் நீதியை விரும்பும் பல நாடுகளின் இதயங்களையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>"முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில்
பகாய் பேசுகையில், சமீபத்திய மாதங்களில் ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை மற்றும்
ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில் ஸ்பெயின் தேசிய அணியின் நடத்தையும், ஸ்பெயினின்
பொதுவான நிலைப்பாடும் மிகவும் மதிப்புமிக்கது" என்று பாராட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T16:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பயணத்தைத் ஒத்திவைக்க இந்தியக் குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022"></link>
            <id>https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022</id>
            <summary type="text">ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

மேலும், ஏற்கனவே ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அங்கு கிடைக்கக்கூடிய விமானச்
சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துப்
பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு
எண்ணெய் கப்பல்கள் "வெடித்துச் சிதறி" முடக்கப்பட்டதாக ஈரான் அறிவித்ததை
அடுத்து, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள்
அதிகரித்துள்ளன.</p><p></p><h2>தாக்குதல்கள்</h2><p>
</p><p>
இதன் பின்னணியில், திங்கட்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஒன்பதாவது
நாளாக ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4fe63bd-efe2-4e2f-9802-37e0b59a6a44/26-6a5e4168142b9.webp' /></p><p>

ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்தான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இந்தத்
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்குவகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான இந்த மோதல், சர்வதேச அளவில் எரிபொருள்
தட்டுப்பாடு மற்றும் பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் பயன்படுத்தும் அறிவியல் கையேடு குறித்து மறுஆய்வு செய்ய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-orders-used-by-judges-1784558946"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-orders-used-by-judges-1784558946</id>
            <summary type="text">பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல்
சென்டர்’ வழங்கும் அறிவியல் குறிப்புக் கையேடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு
அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல்
சென்டர்’ வழங்கும் அறிவியல் குறிப்புக் கையேடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.</p><p>

இந்த கையேட்டில் உள்ள "நம்பகத்தன்மையற்ற" தகவல்கள் நாட்டிற்கு "பெரிய
இழப்புகளை" ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இதுகுறித்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில்
வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நமது நாட்டின் மத்திய நீதிபதிகள் உண்மைகளையும் அறிவியலையும் பெற
தகுதியானவர்கள்; பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் மோசடிகளையோ அல்லது போலி
அறிவியலையோ அல்ல.</p><p></p><h2>விசாரணை</h2><p>

இந்த உண்மையின் அடிப்படையில், மத்திய அரசின் சஸ்பென்ஷன் மற்றும் விநியோகத்
தடை அதிகாரிகளை இந்த நடவடிக்கை குறித்து மறுஆய்வு செய்ய நான் உத்தரவிடுகிறேன்."

ட்ரம்பின் இந்த உத்தரவு எத்தகைய "நடவடிக்கை" அல்லது யாருடைய செயல்பாடுகள்
குறித்த விசாரணைக்கானது என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de964fb-f848-46e8-901b-32f3cd1e8d5b/26-6a5e3d66292b4.webp' /></p><p>
</p><p>
இது குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகையும் உடனடியாக முன்வரவில்லை.

முன்னதாக, அமெரிக்காவின் மத்திய நீதித்துறை, அறிவியல் சான்றுகள் குறித்த தனது
புதிய கையேட்டில் இருந்து பருவநிலை மாற்றம் தொடர்பான அத்தியாயத்தை
நீக்கியிருந்தது.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த அத்தியாயம் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக
இருப்பதாக குடியரசுக் கட்சி மாநில வழக்கறிஞர்கள் வாதிட்டதை அடுத்து இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c9cad9e-2ba6-4048-a9a5-7592279e26c4/26-6a5e3d66cbb98.webp' /></p><p>
நீதிமன்ற வழக்குகளில் சமர்ப்பிக்கப்படும் அறிவியல் சாட்சியங்களை மதிப்பீடு
செய்ய நீதிபதிகள் இத்தகைய கையேடுகளையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.</p><p>
கொலம்பியா சட்ட கல்லூரியை சேர்ந்த ஜெசிகா வென்ட்ஸ் மற்றும் ராட்லி ஹார்டன்
ஆகியோரால் எழுதப்பட்ட இந்த சர்ச்சைக்கரிய அத்தியாயம், நீதிபதிகளுக்கு பருவநிலை
அறிவியல் தொடர்பான வழக்குகளைக் கையாள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மர்மமான மரணம்! சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/for-inspector-general-police-rest-police-honours-1784556864"></link>
            <id>https://tamilwin.com/article/for-inspector-general-police-rest-police-honours-1784556864</id>
            <summary type="text">காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளன. 

முன்னாள் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளன. </p><p>

முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த 17 ஆம் திகதி காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p> </p><p>

அவரது மரணம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம்&nbsp; என சந்தேகிக்கப்படுவதுடன், தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

சி.டி.விக்ரமரத்னவின் சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/455e0262-d3a2-49ca-ac6c-1f4d8dd9c8a7/26-6a5e3607b8e5f.webp' /></p><p> </p><p>

நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன உயிரிழக்கும் போது 63 வயதாகும்.</p><p> 

1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> 

அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abd8168-e49e-41a3-bad8-3475fca64dbf/26-6a5e36086ab3e.webp' /></p><p> 

2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, சி.டி. விக்ரமரத்ன மேலும் சுமார் 8 மாதங்கள் பொலிஸ் மா அதிபர் பதவியில் பணியாற்றினார்.</p><p> 

எனினும் அவர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் பெரும் பரபரப்பு! நாடாளுமன்றம் முற்றுகை - பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845"></link>
            <id>https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845</id>
            <summary type="text">நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து இன்று (20) புது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டன.</p><p>

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தேசியத் தேர்வு முறையில் வெளிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><h2>டெல்லியில்&nbsp;பதற்றம்</h2><p>

ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினர்.</p><p>

பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் சிதறி ஓடியதுடன், சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0003c8be-e11f-4586-a478-3eb634ab82c5/26-6a5e17228a7f6.webp' /></p><p>
</p><p>
மே மாதத்தில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP), இந்தியாவின் கல்வி முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான அதிருப்தியை மையமாகக் கொண்டு அண்மைக் காலங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UlpTg2bKG2g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இந்தப் போராட்டம், CJP-க்கு ஆதரவாக 20 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்தது.
</p><p>
இதற்கிடையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மத்திய டெல்லியின் சில பகுதிகளில் அமலில் இருந்த தடையுத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>இணைய சேவைகள்&nbsp;நிறுத்தம்</h2><p>
</p><p>
அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக CJP-யின் இரண்டு பிரதிநிதிகள் மூத்த அமைச்சரொருவரைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்ததாக இயக்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, போராட்டத்தை ஒட்டி மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280812eb-bac0-4151-b311-a89f5e49cd8f/26-6a5e17236e89d.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.</p><p>போராட்டம் மிகத் தீவிரமடைந்து, மாணவர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில்களை நெருங்கியதை அடுத்து, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அனைத்து பாதுகாப்புக் கதவுகளும் அவசரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.</p><p> பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்குள் இருந்த மூத்த அரசு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><h2>பிரதமர் மோடி</h2><p>
</p><p>
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிக அருகில் திரண்டு முழக்கமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அவசரமாக வெளியேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965c1b5a-9c62-4311-b383-15f35286068f/26-6a5e17242a98f.webp' /></p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், மத்திய செயலகம் உள்ளிட்ட 5 முக்கிய டெல்லி மெட்ரோ தொடருந்து&nbsp; நிலையங்களின் நுழைவு வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.</p><p> நாடாளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பியதால் அவையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றப் பகுதி பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T14:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் - மொராக்கோ போட்டிகள்: ஹோட்டல் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் போர்த்துக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-morocco-matches-1784558076"></link>
            <id>https://tamilwin.com/article/spain-morocco-matches-1784558076</id>
            <summary type="text">ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக்
கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு
ஹோட்டல்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக்
கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு
ஹோட்டல்களின் படுக்கை வசதிகளை 60,000- ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.</p><p>

இது அந்நாட்டின் தற்போதைய மொத்த கொள்ளளவில் ஐந்தில் ஒரு பங்காகும் (20%) என்று
சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>

2030 -ல் உலகக் கிண்ணக் கால்பந்து&nbsp;</h2><p>

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் மூலம் கிடைக்கும் சர்வதேச கவனத்தைத் தன்
சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்காகப் பயன்படுத்த போர்த்துக்கல்
தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6a78e5-1b98-49c7-9fdd-b4c198343cce/26-6a5e3299ef3bf.webp' /></p><p> 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 7% பங்களிப்பை வழங்கும்
சுற்றுலாத்துறை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. </p><p>

2030 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, தொடருந்து சாலை, விமான நிலையங்கள்,
விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த
போர்த்துக்கல் அரசு 190 பில்லியன் திர்ஹம்களை (சுமார் 20 பில்லியன் டொலர்)
முதலீடு செய்துள்ளது. </p><h2>

நாட்டு வருமானத்தை பல மடங்கு உயர்த்த நடவடிக்கை</h2><p>
கடந்த நான்கு ஆண்டுகளில் 45,000 படுக்கை வசதிகளைக் கூட்டி, தற்போது
போர்த்துக்கல்லில் 3,00,000க்கும் அதிகமான ஹோட்டல் படுக்கை வசதிகள் உள்ளன.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து
ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக போர்த்துக்கல் பார்க்கப்படுகின்றது. </p><p> இதனை 2030க்குள் 26 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcca988f-bbef-4577-ac23-d844f745ccc5/26-6a5e329ac07b1.webp' /></p><p>
</p><p>
மேலும், சுற்றுலாத்துறை மூலமான வருவாய் 2025ஆம் ஆண்டு, 138 பில்லியன் திர்ஹம்களாக
இருந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் அதனை சாதனை அளவாக 161 பில்லியன் திர்ஹம்களை எட்டும் என அந்நாட்டின் மத்திய வங்கி கணித்துள்ளது.</p><p>

சீனா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை
அதிகரிப்பதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட போர்த்துக்கல்
திட்டமிட்டுள்ளது.</p><p>

மேலும், பாரம்பரிய சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க பிற
நகரங்களையும் கலாச்சாரம் மற்றும் வணிகப் பயணங்களுக்கான முக்கிய மையமாக மாற்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு உறுதியான ஆதரவு தொடரும்: பர்ன்ஹாம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelenskyy-support-burnham-confirmed-1784556610"></link>
            <id>https://tamilwin.com/article/zelenskyy-support-burnham-confirmed-1784556610</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு தாம் &quot;துணையாக இருப்பேன்&quot;
என்றும், தனது பிரதமரின் கீழ் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு &quot;உறுதியாக&quot;
தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு தாம் "துணையாக இருப்பேன்"
என்றும், தனது பிரதமரின் கீழ் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு "உறுதியாக"
தொடரும் என்றும் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.</p><p>

பதவியேற்ற பிறகு தாம் பேசவிருக்கும் முதல் சில வெளிநாட்டுத் தலைவர்களில்
ஜனாதிபதி ஸெலென்ஸ்கியும் ஒருவராக இருப்பார் என்று அவர் கூறினார்.
</p><p>
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனும் ஆரம்பத்திலேயே தொலைபேசி
வாயிலாக உரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆதரவு</h2><p>
</p><p>
"இவைதான் எனது முதல் அழைப்புகளாக இருக்கும். பிரித்தானியாவின் கொள்கையில் எந்த
மாற்றமும் இல்லை என்பதை இன்று பிற்பகுதியில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியிடம் நான்
மிகத் தெளிவாகத் தெரிவிப்பேன்," என்று அவர் கூறினார்.
</p><p>
அவர் மேலும் பேசுகையில், "கீர் ஸ்டார்மர் உக்ரைனை ஆதரித்ததுடன் மட்டுமின்றி,
தனிப்பட்ட முறையிலும் துணையாக நின்று ஒரு நம்பமுடியாத பணியைச் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d4a496-4caa-46b3-953f-f36f92aaf54b/26-6a5e2d7a1d346.webp' /></p><p>
</p><p>அவரைப் போலவே நானும் 100 சதவீதம் ஸெலென்ஸ்கிக்கு துணையாக இருப்பேன்.

அரசாங்கத்தில் பர்ன்ஹாமிற்கு வெளியுறவுக் கொள்கை சார்ந்த அனுபவம் குறைவாகவே
உள்ளது. </p><p>இருப்பினும், தாம் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை நிர்வகித்தபோது,
உக்ரைனிய மேயர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வெடித்த மோதல்: நீதி அமைச்சர் மீது அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-the-minister-of-justice-1784552940"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-the-minister-of-justice-1784552940</id>
            <summary type="text">

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை(21.07.2026) செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை(21.07.2026) செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. </p><p>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.</p><p></p><h2> 

நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படவில்லை என்றும், நீதி அமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தியற்றவை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. 

ஜூலை மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை(21) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) வரை நடைபெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2000c247-18a8-4631-84a0-8eda97c74508/26-6a5e2f0f2ec6e.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், நாளை பிரேரணையைச் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை கையளிக்க முடியாவிட்டால், இந்த நாடாளுமன்ற வாரத்துக்குள்ளேயே நிச்சயம் கையளிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை அவசரமானதாகக் கருதி, நாடாளுமன்றத்தில் விரைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை வலியுறுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்... மகிந்த தரப்பிலிருந்து NPP-க்கு ஆதரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-for-npp-from-mahinda-s-side-1784556246"></link>
            <id>https://tamilwin.com/article/support-for-npp-from-mahinda-s-side-1784556246</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றோம் என்றால் அதற்கான வேலைகளை செய்தவர் மகிந்த ராஜபக்ச என்றும், தற்போது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றோம் என்றால் அதற்கான வேலைகளை செய்தவர் மகிந்த ராஜபக்ச என்றும், தற்போது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அநுர என்றும் அக்குறணை பிரதேசம் அரசியல் செயற்பாட்டாளர் ரியாஷ் அகமர் தெரிவித்துள்ளார். </p><p>


லங்காசிறி ஊடகம் வழங்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

நான் மகிந்தவுடன் இணைந்து அரசியல் செய் வந்த பொழுது, எனக்கு சரியானதொரு வாய்ப்பு வழங்கப்படாமல் ஏமாற்றமே கிடைத்தது. </p><p> ஆகையால் மக்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன்.

இலங்கை நாட்டில் தற்போது மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மகிந்த தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82389b91-e09d-4dae-bee0-fe922168d538/26-6a5e2c00aa07d.webp' /></p><p> </p><p>அதே போன்று, அப்போதைய ஆட்சிகளில் நடந்த ஊழல் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டியவர் என்றால் அது அநுர தான். 

நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறும் பொழுது, மக்களுக்கு தேவையான அனைத்தையும் கலவரம் இல்லாமல் அநுர குமார திஸாநாயக்க செய்துக் கொண்டிருக்கிறார். </p><p>அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தான் நானும் நினைக்கின்றேன்.

ஒன்றும் இல்லாத அரசியல்வாதிகளை பற்றி நான் பேச விரும்பவில்லை. ராஜபக்சர்கள் ஆட்சிக் காலங்களில் ஊழல்வாதிகள் என்ற பெயரில் ஒரு சிலரே அகப்பட்டார்கள் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K6TyCteP91w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 உலகக் கிண்ணம் இலக்கு: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-world-cup-rohit-sharma-retirement-rumors-1784555095"></link>
            <id>https://tamilwin.com/article/2027-world-cup-rohit-sharma-retirement-rumors-1784555095</id>
            <summary type="text">தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள வதந்திகளை மறுத்துள்ள
முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, நாட்டுக்காக விளையாடி அணியின்
வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள வதந்திகளை மறுத்துள்ள
முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, நாட்டுக்காக விளையாடி அணியின்
வெற்றிக்கு பங்களிப்பது மட்டுமே தற்போது தனது ஒரே குறிக்கோள் என்று
தெரிவித்துள்ளார்.</p><p>

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், ரோஹித்
சர்மா 110 பந்துகளில் 138 ஓட்டங்கள் விளாசினார்.</p><p></p><p>
</p><h2>ரோஹித் சர்மா</h2><p>
இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த
இப்போட்டி ரோஹித்தின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்று பரவலாகப்
பேசப்பட்டது.
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே 39 வயதான ரோஹித் சர்மாவின் இந்த அறிக்கை
வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6cc8a49-a07f-4eb3-9a50-c413736ffca9/26-6a5e2ae2e276f.webp' /></p><p>
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும்
2027 ஐசிசி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக ரோஹித் ஏற்கனவே
பலமுறை தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்த ரோஹித்தின் ஃபார்ம்
குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சதம் அதற்கு முற்றுப்புள்ளி
வைத்துள்ளது.</p><p>

எனினும், இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறது.</p><p></p><h2>இந்திய அணி</h2><p>

இதுகுறித்து பிசிசிஐ (BCCI) இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் ரோஹித் சர்மா
கூறியிருப்பதாவது:
"பேட்டிங் செய்வது, களமிறங்கி விளையாடுவது, எனது நாட்டை மற்றும் அணியை
பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே எனது வேலை.
</p><p>
கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதல் எனக்கு இதுதான் சொல்லிக்
கொடுக்கப்பட்டுள்ளது, அதைத்தான் நான் தொடர்ந்து செய்யப் போகிறேன்.

நான் அறிமுகமான காலத்தில் இருந்தே என்னைச் சுற்றி இந்த சலசலப்புகள் (Noise)
இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

நான் விளையாடும் வரை இது இருக்கத்தான் செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbecbff-de72-42c2-aaf1-a43e4e776cb9/26-6a5e2ae3ab1af.webp' /></p><p> </p><p>எனவே, இதைப் பற்றி நான்
கவலைப்படுவதில்லை. களத்தில் நான் என்ன செய்கிறேன், அணியின் வெற்றிக்கு
எப்படிப் பங்களிக்கிறேன் என்பது மட்டுமே முக்கியம்.

சலசலப்புகள் இருக்கட்டும், அது இல்லையென்றால் சுவாரஸ்யமே இருக்காது."
</p><p>இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் சிறப்பான சதத்தையும் மீறி, இந்திய அணி
தோல்வியைத் தழுவி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது.

அடுத்ததாக, இந்திய அணி ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட
டி20 தொடரில் பங்கேற்கிறது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி
விளையாட உள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய கதவுகள் திறப்பு: அமெரிக்கக் கனவை கைவிடும் இந்திய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-students-abandoning-american-dream-1784555597"></link>
            <id>https://tamilwin.com/article/indian-students-abandoning-american-dream-1784555597</id>
            <summary type="text">இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த &#039;அமெரிக்கக் கனவு&#039; மெல்லக்
குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத்
திருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த 'அமெரிக்கக் கனவு' மெல்லக்
குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத்
திருப்பத் தொடங்கியுள்ளனர்.</p><p>

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைக்
கடுமையாக்கியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்திய மாணவர்களுக்கான
புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.
</p><p>
சென்னை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களின்
கூற்றுப்படி, அமெரிக்கா மற்றும் கனடாவை விட ஐரோப்பிய நாடுகளில் கல்விச் செலவு
50% முதல் 80% வரை குறைவாக இருப்பதுவே இதற்கு முக்கியக் காரணமாகும்.</p><p></p><h2>மாணவர்களுக்கான விசா</h2><p>

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு
மாணவர்களுக்கான விசா கால அளவை அமெரிக்க அரசு அண்மையில் குறைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78c25db-58fc-45b2-bfdc-62ca2f6aa52c/26-6a5e2aaf3c4a3.webp' /></p><p>

இதனால், இந்தியாவிலிருந்து கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின்
எண்ணிக்கை 2023-ல் 9 இலட்சமாக இருந்த நிலையில், 2025-ல் 6 இலட்சமாகக்
குறைந்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்தான இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக
ஒப்பந்தம், இந்திய மாணவர்கள் மற்றும் திறமையாளர்கள் விசா பெறுவதை
எளிதாக்கியுள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய ஒன்றியம்</h2><p> படிப்பை முடித்த பிறகு அங்கு வேலை செய்வதற்கான தெளிவான
வழிகளையும் இது உருவாக்கியுள்ளது.

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் தொழிலாளர்
பற்றாக்குறையை ஈடுகட்ட, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியத் திறமையாளர்களை வரவேற்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af1f9a14-d5af-4bee-a5af-fb58812c4261/26-6a5e2aafe3ab7.webp' /></p><p>
</p><p>
கல்வி ஆலோசகர்களின் கணிப்புப்படி, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில்
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 60% முதல்
70% வரை உயரக்கூடும்.</p><p>

பொறியியல் படிப்புக்கு ஜெர்மனி, சிறந்த வாழ்க்கை முறைக்கு நெதர்லாந்து,
குறைந்த கட்டண ஆராய்ச்சிப் படிப்புகளுக்குப் போர்த்துக்கல் மற்றும்
முகாமைத்துவ படிப்புகளுக்குப் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்திய மாணவர்கள் அதிகம்
தேர்வு செய்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வு பணிகள்! சிறுவர்களுடைய என்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784553495"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784553495</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(20.7.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(20.7.2026) நடைபெற்றது.</p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
நேற்றைய தினம்(19) உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை
சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203a4536-e600-4e0e-81bd-b88ace009841/26-6a5e2356bd2c0.webp' /></p><p>
</p><p>
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட
நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T13:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-pays-tribute-to-former-igp-1784552212"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-pays-tribute-to-former-igp-1784552212</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ இன்றைய தினம்(20.07.2026) நேரில் சென்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ இன்றைய தினம்(20.07.2026) நேரில் சென்று இறுதி அஞ்சலி
செலுத்தியுள்ளார்.
</p><p>
இதன்போது அன்னாரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும்
கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி</h2><p>அத்துடன் முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சேவைகளையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bab90e5-e5f1-4544-b954-d8172af2af19/26-6a5e24893a5f2.webp' /></p><p>இந்தநிலையில்,&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது குறித்த இறுதி நீதிமருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T13:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chairman-eastern-transport-authority-1784553289"></link>
            <id>https://tamilwin.com/article/new-chairman-eastern-transport-authority-1784553289</id>
            <summary type="text">கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக, காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக, காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று(20.07.2026)இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><h2> புதிய தவிசாளர் நியமனம்</h2><p>

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் அமைந்துள்ள வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த புதிய தவிசாளர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>இதன்போது,&nbsp; அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்துள்ளதுடன், மாகாணத்தின் போக்குவரத்து நிலவரங்கள் தொடர்பில் முதற்கட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ad2cb5-76b2-4b54-9c92-7fe2005472a2/26-6a5e219a9e5cb.webp' /></p><p> </p><p>

பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த புதிய தவிசாளர் பிர்தௌஸ் நளீமி,</p><p>கிழக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மேலும் வினைத்திறனானதாகவும், மக்களுக்கு அசௌகரியங்களற்ற பாதுகாப்புமிக்க சேவையாகவும் மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய திட்டங்களை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளராகவும், சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றி வரும் பிர்தௌஸ் நளீமி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-20T13:36:31+00:00</updated>
        </entry>
    </feed>
