<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T19:34:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதி இளஞ்செழியனின் 1998 - முடிவுகளால் 2026இல் மீண்டும் அதிரும் செம்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346</id>
            <summary type="text">செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில்,&nbsp;&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட பல உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,&nbsp;செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் ஆய்வு நடவடிக்கைகளை பார்வையிட சென்றிருந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் இந்த அவலத்திற்கு சர்வதேச நீதி கோரி நிற்கின்றனர். இவ்வாறிருக்கையில் இந்த உயர்மட்ட அதிகாரிகளின் வருகை நீதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை இங்கு எழுப்புகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JyFA36TF8eY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் போதைப்பொருள் கும்பல்.. இலங்கையில் பணச் சலவை - அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999"></link>
            <id>https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&amp;nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&amp;nbsp;இந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இவற்றில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LONAVRmADOc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294"></link>
            <id>https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294</id>
            <summary type="text">தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளார்.</p><p> </p><p>நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் கையில் கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர், தனது சகோதரனைக் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>பலத்த வெட்டுக்காயங்கள்&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டில் உள்ள கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05919402-8018-4b7f-83cd-b9a293e0f504/26-6a60f27c765bd.webp' /></p><p>ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p> </p><p>குறித்த சந்தேகநபரே பாதிக்கப்பட்ட நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T16:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பிரான்சில் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681</id>
            <summary type="text">மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
</p><p>
திங்கட்கிழமை மாலை இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பிற்கான
சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எப்ஸ்டீனுடன் தொடர்பு</h2><p>
</p><p>
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல்
சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b94f81c-51b6-4e25-80eb-ea4dd9b29973/26-6a60e489156e3.webp' /></p><p>
</p><p>
பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட்
மறுத்திருந்தார்.
</p><p>
இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில்,
"டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பிரான்சில் உயிரிழப்பு</h2><p>
</p><p>
மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும்
தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eb80e58-d984-48bb-aa73-9882d1b6051a/26-6a60e489e505e.webp' /></p><p>
</p><p>பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர்
சியாட் ஆவார்.</p><p>

இதற்கு முன்னர், 2020இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல்
என்பவர் 2022ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தூக்கிட்டுத் தவறான முடிவெடுத்து கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இலங்கை நபர் வலையில் சிக்கிய பெண்..! 7 இலங்கையர்கள் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680"></link>
            <id>https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680</id>
            <summary type="text">மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழிலாளராக சுரண்டியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் ஒருவரை மலேசிய குடிவரவு திணைக்களம் கைது செய்துள்ளது.</p><p>

பொதுமக்கள் அளித்த முறைப்பாடு மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மலேசியாவில் கைது</h2><p>

இலங்கைப் பெண் ஒருவர் தனது முதலாளியால் தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய இலங்கை நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 21 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2acc6286-7f92-4170-a0de-eec645540ec4/26-6a60d4fc7d23a.webp' /></p><p> </p><p>

இவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மலேசிய குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்துக் சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>7 இலங்கையர்கள்</h2><p>
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் குறித்த பெண் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், அந்தப் பெண் எந்தவித சம்பளமும் வழங்கப்படாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதுடன், போதுமான உணவும் வழங்கப்படவில்லை. </p><p>

அவரது சுதந்திரமான நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்காக உடல் ரீதியான வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b0b23b5-f286-4557-b230-df46b7ee0862/26-6a60d4fd2dbed.webp' /></p><p>

மலேசியப் பிரஜையை திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக வருகை அனுமதிப்பத்திரம் (Long-Term Social Visit Pass) பெற்றுள்ள சந்தேகநபர், மனிதக் கடத்தல் மற்றும் குடியேறியவர்களை கடத்தல் தடுப்பு சட்டம் (ATIPSOM) பிரிவு 12 மற்றும் 1959/63 குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தொழிலாளர் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என மலேசிய குடிவரவு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தொழில்நுட்பங்களில் 'கில் ஸ்விட்ச்' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க தூதுவர்களுக்கு ரூபியோ உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489"></link>
            <id>https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489</id>
            <summary type="text">அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் &#039;கில் ஸ்விட்ச்&#039; (Kill...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் 'கில் ஸ்விட்ச்' (Kill
Switch) வசதி இருப்பதாக வெளியாகும் தகவல்களை மறுக்குமாறு, அந்நாட்டின்
வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உலகெங்கிலும் உள்ள அமெரிக்க
தூதுவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் முன்னணி ஏஐ மாதிரிகளுக்கான
வெளிநாட்டுப் பயன்பாட்டு அணுகலை அமெரிக்க அரசு தற்காலிகமாகத் தடை செய்ததைத்
தொடர்ந்து, சர்வதேச அளவில் எழுந்த பலத்த எதிர்ப்புகளையும் கவலைகளையும்
தணிக்கும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தத் தூதரக நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.</p><p></p><h2>கில் ஸ்விட்ச்' பேச்சு</h2><p>

அமெரிக்க அரசு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரகசிய வழிகாட்டுதலில்,
அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக விற்பனை செய்யவும்,
பிற நாடுகள் சொந்தமாக "ஏஐ இறையாண்மை" அல்லது "டிஜிட்டல் இறையாண்மை" என்ற
பெயரில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்
தடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f5d97e-d5f4-40ae-bdb6-206a492fab51/26-6a60de67a9f1e.webp' /></p><p>
</p><p>
தொழில்நுட்பப் பாதுகாப்பு காரணங்களுக்காக 30 நாட்கள் சோதனைக்குட்படுத்துவது
என்பது 'கில் ஸ்விட்ச்' அல்லது அரசின் 'மாய பொத்தான்' (Magic button) கிடையாது
என்றும், அமெரிக்க கொள்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் செய்திகள்
பரப்பப்படுவதாகவும் தூதுவர்கள் வாயிலாக அமெரிக்கா தெளிவுபடுத்த முயல்கிறது.</p><p>

இருப்பினும், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வழங்கப்பட்ட
தொழில்நுட்ப அணுகலைத் துண்டித்துவிடும் என்ற அச்சம் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளும் ஆசிய நாடுகளும் அமெரிக்க தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பத்தைக்
குறைத்து, சொந்தமாகத் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்க தீவிரம் காட்டி
வருகின்றன.</p><p>அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளைப் பயன்படுத்தி பிற நாடுகளைக்
கட்டுப்படுத்த நினைப்பதே, இத்தகைய நம்பிக்கையின்மைக்கு முக்கியக் காரணம் என
சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503</id>
            <summary type="text">வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரியளவிலான முறைகேடுகள்</h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519db4b7-f595-4db2-8995-cbf8183fe716/26-6a6051d1a9cbc.webp' /></p><p>
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிக குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
</p><p>
எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி குற்றம்சாட்டிள்ளார்.</p><h2>சொகுசு வாகனங்கள் இறக்குமதி</h2><p>இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03021692-38f3-49f4-a5c0-5f9b08956d59/26-6a6051d273187.webp' /></p><p>
இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mp0jpPJOagE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி..! கைது செய்ய ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில்,</p><p>

 சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தின் (ICC) பிடியாணையைச் சுட்டிக்காட்டி நெதன்யாகுவை ஒரு போர்க்
குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a549f32-cd45-4dc4-a54a-dcbaced98317/26-6a60d3b3893e0.webp' /></p><p>

இருப்பினும், கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் பேசிய மேயர் மம்தானி, சட்டப் பிரிவுகளின்படி நெதன்யாகுவை
கைதுசெய்யும் அதிகாரம் நியூயோர்க் நகரத்திற்கு இல்லை என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p></p><p><b>You may like this..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LLojYHAHDjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா புதிய கட்டுமானத்தால் தமிழர்களுக்கு வரப்போகும் புதிய சிக்கல் - தமிழரசுக் கட்சி உறுப்பினர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanyaya-new-construction-1784729338"></link>
            <id>https://tamilwin.com/article/kanyaya-new-construction-1784729338</id>
            <summary type="text">இலங்கை நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசாங்கம் தற்போது கடந்த கால அரசியல் தலைவர்கள் போன்று நடந்தக் கொள்வது வறுத்தமளிக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசாங்கம் தற்போது கடந்த கால அரசியல் தலைவர்கள் போன்று நடந்தக் கொள்வது வறுத்தமளிக்கின்றது என்றும் அரசை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார். </p><p>




திருகோணமலை மாவட்ட கன்னியா
வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(22.07.2026) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2> 




புதிய கட்டுமானத்தால் வரும் புதிய சிக்கல்</h2><p>

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

எமது அடையாளம், கலாசாரம், வரலாறு ஆகியவற்றை அழிக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்படும் போதெல்லாம், எமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப்
பாதுகாத்து வந்த தமிழர் பாரம்பரியமும் வரலாற்றுச் செல்வமும் நினைவுக்கு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f63f30-3348-4e3e-aed1-733b91112ca7/26-6a60cf6d84fb0.webp' /></p><p>
</p><p>
அந்த மரபையும், அதற்கான அறிவையும், அதனுடன் தொடர்புடைய எமது
நிலங்களையும் பாதுகாத்து, வருங்காலத்தில் எமது பிள்ளைகள் மற்றும்
பேரப்பிள்ளைகளிடம் ஒப்படைப்பது எமது பொறுப்பாகும்.
</p><p>
கன்னியா வெந்நீரூற்றுகள் தொடர்பாக நான் கடந்த நேர்காணலில் கூறியதுபோன்று, எமது
சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதர சமூகங்களுடன் நாம் பரஸ்பர மரியாதையுடனும்
நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d262a6-eeff-4332-8174-1fdb56e072c0/26-6a60cfe1d327a.webp' /></p><p>

 அந்த நல்லுறவை எந்த அரசியல் நிகழ்ச்சி
நிரலும் அல்லது வெளிப்புற தலையீடும் சீர்குலைக்க வேண்டிய அவசியமில்லை, 
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் அது ஒருபோதும் நிகழக்கூடாது.</p><p>

ஒரு தமிழனாக, என் மக்களின் உரிமைகளையும், அவர்களின் வரலாறு, பண்பாடு மற்றும்
பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நீதியான குரலையும் நான் தொடர்ந்து
உயர்த்துவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:11:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு..! வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/came-to-serve-not-live-luxuriously-vavuniya-chief-1784726166"></link>
            <id>https://tamilwin.com/article/came-to-serve-not-live-luxuriously-vavuniya-chief-1784726166</id>
            <summary type="text">நான் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் குறிப்பிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடத்திய 
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சமூக வலைத்தளங்கள்</h2><p> </p><p>

அவர் மேலும் குறிப்பிடுக்கையில்,</p><p>

வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபையினுடைய செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை
பெற்று சமூக வலைத்தளங்களில் சில ஊடகங்கள் தவறான வழியிலே பிரசுரித்து
வருகின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில்
குறித்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம்.
</p><p>
குறிப்பாக எங்கள் மீது சொகுசு வாகன வாழ்க்கை வாழ்வதாக ஒரு குற்றச்சாட்டினை
மேற்கொண்டிருந்தனர். 

நாங்கள் சொகுசு வாகனம் ஒன்று வேண்டும் என கேள்வி கோரலினை
மேற்கொள்ளவில்லை. மாறாக சபையின் வேலைக்கு ஏற்ற வகையிலான வாகனத்தினையே கேட்டிருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34e9bc79-32d1-469d-8dd6-1b855993cb1b/26-6a60c5bfb0b36.webp' /></p><p>

ஆனால் ஒரு சில ஊடகங்கள், நாங்கள் சொகுசு வாழ்க்கை
வாழ்கின்றோம். சொகுசு வாகனத்தில் திரிகின்றோம் என்று தவறான வதந்திகளை பரப்பிக்
கொண்டிருக்கின்றார்கள்.&nbsp; </p><p>உண்மையிலேயே ஊடகம் என்பது நடுநிலைமையாக செயல்பட வேண்டும்.
நாங்கள் எப்பவுமே ஊடகங்களை மதிக்கின்றோம். ஒரு ஊடகம் சுயாதீனமாக
செய்திகளை பகிர வேண்டும்.

அதை தவிர்த்து எங்களிடத்தில் தான் எல்லாம் இருக்கிறது என செயற்படுகின்றன.</p><p></p><h2>1 கோடி பெறுமதியான முன்பள்ளி&nbsp;</h2><p>&nbsp;வவுனியாவிலே எங்களுடைய சபை மட்டுமா இருக்கின்றது? எத்தனை சபை இருக்கின்றது?
அத்தனை சபைகளிலும் பிரச்சனை இல்லையா? அதனை ஆதாரத்துடன் நான் நிரூபிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.</p><p>
</p><p>அதேபோன்று இங்கே நடக்கின்ற அனைத்து வேலைகளும் நாங்கள் பகிரங்கமாகவும் சரியாகவும் செய்து கொண்டிருக்கின்றோம்.

நான் இங்கே 
25,000 ரூபாய் காசுக்கு உழைத்துக் கொண்டு போவதற்காக வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e099c36-9108-4d48-8bee-fbaae7890bce/26-6a60c5c061d44.webp' /></p><p> நான்
மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தான் வந்தேன். நான் இங்கே வருவதற்கு முன்
எங்களுடைய அறக்கட்டளை ஊடாக நிறைய சேவைகளை செய்து கொண்டிருந்தேன்.
</p><p>
உதாரணமாக, என்னுடைய சொந்த காணிக்குள்
1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான முன்பள்ளி ஒன்றை கட்டி வருகின்றேன்.
ஐந்தாம் திகதி அதனை பிரம்மாண்டமாக திறந்து வைக்க இருக்கின்றோம்.
</p><p>
இதேவேளை நாங்கள் வருவதற்கு முன்னர் சபையினுடைய வருமானம் 86 மில்லியனாக
இருந்தது. 2026 ஆம் ஆண்டில் 113 மில்லியன்
ரூபாயினை ஈட்ட எதிர்பார்க்கின்றோம்.</p><p></p><h2>மக்களுடைய வரிப்பணம்</h2><p>
</p><p>
நாம் மக்களுடைய வரிப்பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு இங்கு
வரவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரச சுற்று நிரூபத்திற்கு ஏற்ப 20
வீதமான பணத்தினை எங்களுடைய சொந்த வருமானத்தில் இருந்து இங்கு பணி செய்கின்ற
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நாங்கள் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.</p><p>
</p><p>

குறிப்பாக
எங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தகவல்களை
வழங்குவதற்காக அனுமதி அவர்களுக்கு இருக்கின்றது. நிச்சயமாக வழங்கலாம். ஆனால், ஆளுநருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் எங்களுடைய சபையின் நிதி மோசடி
செய்யப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a467fa7-e845-4e86-9702-a74da86c7e8d/26-6a60c5bf0b67d.webp' /></p><p> நாங்கள் பாரிய அளவில் நிதி மோசடி செய்திருக்கின்றோம்
என மக்கள் குறைகூறுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இம்முறைப்பாட்டை
மேற்கொண்டவர் ஒரு தனிநபராவார். </p><p>இந்த நடவடிக்கையானது எங்களை பழிவாங்குவதற்காகவும்
எங்களுடைய செயல்பாடுகளை முடக்குவதற்காகவும் மேற்கொண்ட ஒரு செயலாகும்.
</p><p>


மேலும், நான் சபையின் தலைவராக பொறுப்பேற்ற போது எத்தனை கல்குவாரிகளுக்குரிய
அனுமதிகள் வழங்கப்பட்டது என்று கேட்டிருந்தார்.</p><h2>&nbsp;வீதி புனரமைப்பு&nbsp;</h2><p> நாங்கள் அது தொடர்பான
விபரங்களை வழங்கியிருந்தோம். ஆனால் இந்த அனுமதியின் ஊடாக வருகின்ற வருமானத்தை
வைத்து நாங்கள் வீதிகளை புனரமைப்பு செய்கின்றோம். எங்களுக்கு வீதிகளை
புனரமைப்பு செய்வதற்கு வருகின்ற நிதி போதாது.</p><p>
குறிப்பாக, அந்த கல்குவாரியினுடைய உரிமையாளர்களே அந்த வீதிகளை எங்களுடன்
கலந்துரையாடி செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2a8f5e-8635-4ff6-97eb-5db37ff3d047/26-6a60c5be466db.webp' /></p><p> இதுவரைக்கும்
ஓமந்தையினுடைய வீதி மட்டும் தான் ஒரு பிரச்சனையாக காணப்பட்டது. அதையும் நான்
நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடி இருந்தேன்.</p><p>தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக என்னுடன்
பேசுங்கள், தயவு செய்து வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபை என்கின்ற பெயரை
இழிவுபடுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-22T13:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு..! அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345"></link>
            <id>https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நிதிக்கழு முன் முன்னிலையாகி சாட்சியமளித்த அவர், பாதுகாப்புத் துறைக்காகக் கோரப்பட்டுள்ள 1.5 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில்,
ஈரான் போருக்காக மட்டும் கிட்டத்தட்ட 70 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

கடந்த மே மாதம் அமெரிக்க நிர்வாகம் அறிவித்த 29 பில்லியன் டொலரை விட தற்போதைய செலவு கணக்கீடு 8 பில்லியன் டொலர் அதிகமாகும்.
</p><p>
இதேவேளையில், ஆற்றல் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்காவிற்கு
ஏற்படும் மறைமுக செலவு 150 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் என மூடிஸ்
அனலிடிக்ஸ் கணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3bb5092-8972-45c9-a35f-86d626ce29c7/26-6a60c7bb7471b.webp' /></p><p>
போரினால் அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்புகளில் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதாகவும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு
அமைப்புகளின் உற்பத்தியை விரைவுப்படுத்த கூடுதல் நிதி தேவை என்றும் ஹெக்செத்
வலியுறுத்தியுள்ளார்.
</p><h2>
தொடர் தாக்குதலுக்கான இருப்பு பற்றாக்குறை</h2><p>

கடந்த வாரம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான்
மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 

அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்
மற்றும் அணுசக்தி தொடர்பான “பிகேக்ஸ் மவுண்டன்” பகுதி மீது கடும் தாக்குதல்
நடத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adce2bb-7bf4-4f20-b70f-2743a5b8d5d4/26-6a60c7bc3a42b.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்த பிரம்மாண்டமான நிதி
கோரிக்கை தெளிவற்றதாக இருப்பதாக ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கேள்விகளை
எழுப்பியுள்ளனர்.</p><p>

ஈரானும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தொடர்ந்து பதிலடித்
தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டாலினைச் சந்தித்தார் சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-met-mk-stalin-1784726321"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-met-mk-stalin-1784726321</id>
            <summary type="text">தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின்
முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக்
கலந்துரையாடினார்.
</p><p>
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் விசேடமாக தமிழகத்தில் ஏதிலிகளாக இருக்கும்
இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த பல திட்டங்களையும், டித்வா புயல்
சமயத்தில் இலங்கை மக்களுக்குத் தமிழக மக்கள் சார்பில் அனுப்பிய உதவிகளையும்
இந்தச் சந்திப்பின்போது சுமந்திரன் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:31:24+00:00</updated>
        </entry>
    </feed>
