<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T18:27:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் வீடு புகுந்து தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்கள்.. எழுந்துள்ள கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீதியை பெற்றுக்கொடுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நெல்லியடியில் வயதான ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரின் வீட்டின்
மீது தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தெற்கு மேற்கு மற்றும் நல்லூர் பிரதேச
சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் மேற்கொண்ட அடாவடித்தனமான
தாக்குதல் சமூகத்தில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நள்ளிரவில்
மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தச் சம்பவம் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளை மீண்டும்
நினைவூட்டுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a2cc14-2df8-4460-8d9c-64cc17fa0b95/26-6a95a2bea041d.webp' /></p><p>தற்போதைய ஆட்சியிலும் நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற
சம்பவங்கள் தொடர்கின்றன.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸார் எத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கும்
அடிபணியாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க
வேண்டும்.</p><p>

நாட்டின் ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு
வடக்கில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி
தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பானதுர நிலங்கவின் உறவினர் சுட்டுப் படுகொலை.. குடு சலிந்து குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புபயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>பயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முக்கிய சந்தேக நபரான&nbsp;பானதுர நிலங்கவின்&nbsp;மைத்துனர்&nbsp;திலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்ஷிதா என்ற "குடு சலிந்து" என்பவரின் குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2> </h2><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>களுத்துறை அருகே சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>வைத்தியசாலை அனுமதி</h2><p>

களுத்துறை மாவட்டத்தின் பயாகல அருகே கொஸ்ஹேன பிரதேசத்தில் குறித்த சம்பவம் இன்றிரவு பத்து மணியளவில் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவால் உலக நிதித் துறைக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-threatens-the-world-s-financial-system-1788195636"></link>
            <id>https://tamilwin.com/article/ai-threatens-the-world-s-financial-system-1788195636</id>
            <summary type="text">மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளினால் உலகளாவிய நிதி கட்டமைப்பிற்குப் பெரும் ஆபத்து இருப்பதாக நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெய்லி எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளினால் உலகளாவிய நிதி கட்டமைப்பிற்குப் பெரும் ஆபத்து இருப்பதாக நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்துள்ளார்.</p><p>
வடக்கு கரோலினாவின் அஷ்வில்லி நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டத்தை முன்னிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>
உலகளாவிய நிதி கட்டமைப்புகளின் மீது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் நடத்தக்கூடிய சைபர் தாக்குதல்களே தற்போதைய மிக அவசரமான அச்சுறுத்தலாகும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb10348-aee3-4a50-b801-b895b7bec79c/26-6a95b33661018.webp' /></p><p>
"மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் ஆபத்துகள் தேச எல்லைகளைக் கடந்தது" எனக் குறிப்பிட்டுள்ள பெய்லி, பல நாடுகளில் இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வெளியீட்டையும் கட்டுப்படுத்த முறையான வழிகாட்டுதல்கள் இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.
</p><p>கடந்த மாதம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சோதனை அளவிலான சில ஏஐ மாதிரிகள், பரிசோதனை எல்லையைத் தாண்டிச் சென்று மற்றொரு நிறுவனத்தின் கணினி அமைப்பை ஹேக் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>
இங்கிலாந்தின் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம் நடத்திய சோதனையில், எந்த்தோபிக் நிறுவனத்தின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரி போலியான அடையாளங்களைப் பயன்படுத்தித் தீங்கிழைக்கும் குறியீடுகளை கணினியில் புகுத்த முயன்றமை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>
ஆறாவது மாதமாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போரினால் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில் ஜி20 கூட்டம் கூடுகிறது.</p><p>
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சைபர் தாக்குதல்கள் தவிர, ஏஐ நிறுவனங்களின் மிதமிஞ்சிய சந்தை மதிப்பீடு மற்றும் அரசு-தனியார் துறைகளின் அதிகரித்து வரும் கடன் சுமை ஆகியவையும் நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு கூடுதல் அபாயங்களாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T17:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவனல்லையில் சிறிய ரக வான் - லொறி மோதி விபத்து.. நால்வர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/small-van-lorry-collision-accident-mawanella-1788192228"></link>
            <id>https://tamilwin.com/article/small-van-lorry-collision-accident-mawanella-1788192228</id>
            <summary type="text">மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

அரணாயக்கவிலிருந்து மாவனல்லை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனல்லையிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரி ஒன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

சம்பவம் இன்று (31) நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceb4308-3fac-4c46-8386-873381c94eb4/26-6a95add4e96a4.webp' /></p><p>
</p><p>
விபத்தின் போது வானில் பயணித்த நால்வரே காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, ஏனையவர்கள் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T16:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lionel-messi-announces-retirement-1788194107"></link>
            <id>https://tamilwin.com/article/lionel-messi-announces-retirement-1788194107</id>
            <summary type="text">அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p>
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த முடிவை எடுப்பது மிகவும் வேதனையாக இருந்தது, இன்னமும் மனதிற்குள் வலிக்கிறது.</p><p> ஆனால் விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்," என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c5299d-75a1-4626-b60d-756995419788/26-6a95ad3ccc5c2.webp' /></p><p>
2005ஆம் ஆண்டு அறிமுகமான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 125 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
</p><p>022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினா வெல்வதற்கு அணித் தலைவராக அணியை வழிநடத்தினார்.</p><p> மேலும், 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 'கோபா அமெரிக்கா' கிண்ணங்களையும் வென்று கொடுத்துள்ளார்.</p><p>
ஸ்பெயின் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியே அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி விளையாடிய கடைசிச் சர்வதேசப் போட்டியாகும்.
</p><p>அர்ஜென்டினா அணியில் புதிய தலைமுறை வீரர்கள் உருவாகி வருவதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காகச் சாதனை படைத்ததில் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
8 முறை 'பாலன் டி ஓர்' (Ballon d'Or) விருது வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் 'இன்டர் மயாமி' கழகத்திற்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T16:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூட்டப்பட்ட மகுடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566"></link>
            <id>https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
</p><h2>
முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த பட்டம்</h2><p>

மேலும்,'KGF' திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/234c8c3c-26a5-4a1a-a220-3e24ec839320/26-6a9590332cbe0.webp' /></p><p> 

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித மற்றும் டெய்சி பாட்டியின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-and-daisy-aachi-s-case-adjourned-again-1788188365"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-and-daisy-aachi-s-case-adjourned-again-1788188365</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்போது கருத்து தெரிவித்த அரச சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான ஒரு விடயம் குறித்து பிரதிவாதி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.</p><h2>விசாரணை</h2><p> </p><p>குறித்த மேன்முறையீடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அந்த திகதிக்குப் பின்னர் வரும் ஒரு திகதியில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48e3ff3-ecb2-4b71-828a-a1c907ff4232/26-6a959b305e6b6.webp' /></p><p>
</p><p>
முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, செப்டம்பர் 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பிரதிவாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 57 மில்லியன் ரூபாவை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T15:24:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாஸ்கரன் கந்தையா பங்கேற்பில் கோலாகலமாக நிறைவடைந்த கால்பந்தாட்ட போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/football-matchparticipation-of-bhaskaran-kandiah-1788184718"></link>
            <id>https://tamilwin.com/article/football-matchparticipation-of-bhaskaran-kandiah-1788184718</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி”&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி”&nbsp; கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த போட்டிகள்&nbsp; நேற்று(31.08.2026) தட்சனாமருதமடு ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
</p><h2>
மன்னாரில் இடம்பெற்ற கால்பந்தாட்டம்</h2><p>
இதற்கமைய, இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6956d17e-195d-4732-b6fd-16500dceddf3/26-6a958947eb51b.webp' /></p><p>
</p><p>
இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில், கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.</p><p>

இந்த கால்பந்தாட்டப் போட்டி நேற்று(31.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92917c66-9f5d-43f8-89c2-c357ba52a960/26-6a958948e3788.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a09e55-353e-4b07-9c29-45a1a855d5d7/26-6a958949c21fe.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் 693 குடும்பங்கள் - அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lack-of-transportation-facilities-in-kilinochchi-1788183602"></link>
            <id>https://tamilwin.com/article/lack-of-transportation-facilities-in-kilinochchi-1788183602</id>
            <summary type="text">கிளிநொச்சி - முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு
கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று(31.08.2026) கிளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு
கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த மனு இன்று(31.08.2026) கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கிளிநொச்சி - பூனகரி, நல்லூர் KN-59 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்களின்
நலன் கருதி, மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு புதிய பாதை கொத்தனி
அமைப்பினால் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) உத்தியோகபூர்வ கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c9e4d8-ad1c-4011-ae81-fce5af3bd435/26-6a95846d3dc0a.webp' /></p><p>
</p><p>
குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசதி குறைந்த 693 குடும்பங்கள் வசித்து வரும்
நிலையில், அங்குள்ள பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்
தங்களது தினசரி பயணங்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அவர்கள் பேருந்து சேவையை நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதித்த மூதூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muttur-divisional-secretariat-officers-protest-1788181706"></link>
            <id>https://tamilwin.com/article/muttur-divisional-secretariat-officers-protest-1788181706</id>
            <summary type="text">திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று(31.8.2026) பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.</p><h2>போராட்டம் </h2><p>
</p><p>
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு
பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக
தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d242737-318e-437c-8e1b-4475590b8176/26-6a9580dfa3a29.webp' /></p><p>
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள
அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட
அபிவிருத்தி உத்தியோகத்தர் களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு,
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு போன்ற பல விடயங்களை முன்வைத்து
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:38:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் - உலக உணவு உச்சி மாநாட்டில் சிறப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-visits-bhutan-address-world-food-summit-1788181212"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-visits-bhutan-address-world-food-summit-1788181212</id>
            <summary type="text">பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(31.08.2026) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(31.08.2026) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள 'உலக விழிப்புணர்வு உணவு
முறைமைகள்' உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர், அதில்
சிறப்புரை ஆற்றவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a792cbee-34cf-48aa-8f73-e2d32753b854/26-6a957ebc9fae1.webp' /></p><p>
அத்துடன், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து நிலையான உணவு
முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது
தொடர்பான பல உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் பிரதமர் ஹரிணி அமரசூரிய
கலந்து கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61fd6548-0d4a-4c69-b153-c44ad4c1e9f5/26-6a957ebda6ba6.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-by-15-federations-development-officers-1788178245"></link>
            <id>https://tamilwin.com/article/protest-by-15-federations-development-officers-1788178245</id>
            <summary type="text">பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15
கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு
போராட்டங்களை முன்னெடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15
கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு
போராட்டங்களை முன்னெடுத்தனர்.
</p><p>அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க
கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் சங்கம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. </p><p>நாடு முழுவதும் உள்ள பிரதேச
செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
தங்களது உரிமைகளுக்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.</p><h2>போராட்டம்&nbsp;</h2><p>
</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாகவும் போராட்டம் மதியம் 12:00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c4e0be-711a-422f-91a4-59e855bfb27a/26-6a957767d4b02.webp' /></p><p>
</p><p>கடந்த 27 வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்த கோரிக்கைகள்
தொடர்பிலான போராட்டங்கள் தொடர்கின்றன.</p><p> குறிப்பாக 1999ஆம் ஆண்டிலிருந்து
சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான
சேவைப் பிரமாணக் குறிப்பு இதுவரை இல்லாதது கவலையளிக்கும் விடயமாகவுள்ளதாக
இங்கு தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய 420கிலோ ஐஸ் போதைப்பொருள் : அதிரடியாக கைது செய்யப்பட்ட வர்த்தகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145"></link>
            <id>https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றுக்குள் இருந்து பாரியளவிலான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொழும்பைச் சேர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp; &nbsp;</h2><p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றுக்குள் இருந்து பாரியளவிலான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டவல்களைக் கொண்ட கொள்கலன் ஒன்றில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் கொழும்பு துறைமுகத்தில் இன்று(31.08.2026) திடீர்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
அதன்போது கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 420 கிலோ எடை கொண்ட 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><h2>கொள்கலனில் மறைத்து வைத்து</h2><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 'ஐஸ்' வகை போதைப்பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ef4001-4cde-4d21-b9a5-c2815eb59342/26-6a956ad6c1f0e.webp' /></p><p>

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:45:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கோட்டாபய ராஜபக்சவின் பல்வேறு செயற்பாடுகளும் குறித்த பெண்ணின் ஆலோசனைகளுக்கு அமையவே இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. </p><p>அமைச்சரவை நியமனம், சில அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் அவரது ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் எவ்வாறு உறங்க வேண்டும் என்பதுகூட அந்தப் பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்படும் பெண், அனுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ‘ஞானக்கா’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஞானக்காவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டல் ஒன்று, அனுராதபுரத்தில் நுவரவெவ குளத்தை நிரப்பி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவல்களை ருஹுணு பல்கலைக்கழகத்தின்&nbsp; ஓய்வுநிலை விரிவுரையாளரும்,&nbsp; பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடகப் பணிப்பாளருமான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள்</h2><p>அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா? 
ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள்.</p><p>இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.
</p><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. </p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது. குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e05147e-9951-449f-825b-ac96a0430e30/26-6a954ad85b05f.webp' /></p><p>நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது. இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல.</p><p>ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது. 
கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது. அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன.ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது. அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T12:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காகவே இந்த முயற்சி..! முன்னாள் பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-rajapaksa-denies-his-allegations-1788179983"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-rajapaksa-denies-his-allegations-1788179983</id>
            <summary type="text">பாரியளவில் எரிபொருள் பயன்பாட்டின் மூலம் அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரியளவில் எரிபொருள் பயன்பாட்டின் மூலம் அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தனது விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

எரிபொருள் பயன்பாடு</h2><p>
அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது, 

எரிபொருள் பயன்பாடு தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்துச் சரியான முறையில் ஆராயாமல், எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய மின்னணு ஊடகங்கள் வாயிலாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/321b5396-8c90-4470-a4e6-2870872175a9/26-6a9576d060a47.webp' /></p><p>

எனது பதவிக் காலத்தில் சட்டபூர்வமாகத் எனக்கு உரித்தான ஒதுக்கீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மட்டுமே எரிபொருள் பெறப்பட்டது. அது தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களும் அறிக்கைகளும் என்னிடம் உள்ளது.</p><p>

சரியான விசாரணை இன்றி ஊடகங்கள் முன் இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தத்திற்குரியது.
</p><h2>
ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கத் திட்டம்</h2><p>
பிரதி சபாநாயகராகக் கடமையாற்றுவதற்குப் பொருத்தமான உத்தியோகபூர்வ வாகனம் இல்லாததால், வெளியிலிருந்து வாடகை அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புத் எனக்கு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02bcb80a-238c-484d-b678-b81cac278838/26-6a9576d115725.webp' /></p><p>

அவ்வாறு வெளியிலிருந்து வாகனத்தைப் பெற்றிருந்தால் பெருந்தொகை பணம் செலவாகியிருக்கும் என்பதால், அந்த வாடகைக் கட்டணத்திற்காகச் செலவிடப்படவிருந்த பணத்தைச் சேமிக்கும் வகையில் நான் செயற்பட்டேன்.
</p><p>
முன்னாள் சபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்கள் தொடர்பில் காணப்பட்ட பாரம்பரியங்கள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே நான் பதவியில் செயற்பட்டேன். </p><p>எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை.

இதனிடையே, தற்போதைய அரசாங்கத்தில் பதவி வகிக்கும் மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் நான் நம்புகின்றேன் என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:43:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா தீவிரப்படுத்தும் பொருளாதாரத் தடை: ஈரானுக்கு புதிய நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intensifies-economic-sanctions-new-crisis-iran-1788178019"></link>
            <id>https://tamilwin.com/article/us-intensifies-economic-sanctions-new-crisis-iran-1788178019</id>
            <summary type="text">வொஷிங்டன் ஈரானைக் கட்டுப்படுத்த &quot;ஒபரேஷன் எகோனமிக் அவுட்காஸ்ட்&quot; என்ற தீவிர
பொருளாதாரத் தடை பிரசாரத்தை முடக்கிவிட்டுள்ளது.

ஈரானுக்கு நிதி உதவி வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வொஷிங்டன் ஈரானைக் கட்டுப்படுத்த "ஒபரேஷன் எகோனமிக் அவுட்காஸ்ட்" என்ற தீவிர
பொருளாதாரத் தடை பிரசாரத்தை முடக்கிவிட்டுள்ளது.
</p><p>
ஈரானுக்கு நிதி உதவி வழங்கி வரும் மற்றொரு வங்கி மீது இந்த வாரம் புதிய தடை
விதிக்கப்படும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட்
அறிவித்துள்ளார்.
</p><h2>ஜோர்தான் தளங்கள் மீதான ஏவுகணை வீச்சு</h2><p>
இந்த நிலையில் அண்மையில் எகிப்தின் 'பாங்க் மிஸ்ர்' வங்கியின் UAE கிளை
அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. </p><p>அதேபோன்று, ஈரானுடன்
வர்த்தகத்தில் ஈடுபடும் வங்கிகளை டொலர் அடிப்படையிலான உலகளாவிய நிதி அமைப்பில்
இருந்து முற்றிலுமாகத் துண்டிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c06e2cc-b3af-4f12-90ad-bb882fb145ba/26-6a9571f89c168.webp' /></p><p>

எனவே ஜி20 நிதித் தலைவர்கள் கூட்டத்தில் ஈரானுடனான வர்த்தகம் குறித்து சீன
பிரதிநிதிகளுடன் பேசவுள்ளதாகவும், தேவைப்பட்டால் சீனா மீதும் தடைகள் விதிக்க
அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும் இந்த தடைகள் முற்றிலும் தோல்வியடையும் என ஈரானின் நிதி அமைச்சர்
அலி மதனிசாதே கூறி நிராகரித்துள்ளார்.
</p><p>
இதேவேளை போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், லராக் தீவுத்
தாக்குதல் மற்றும் ஜோர்தான் தளங்கள் மீதான ஏவுகணை வீச்சு ஆகியவற்றால்
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:35:04+00:00</updated>
        </entry>
    </feed>
