<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T12:11:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி லிமினி கலந்து கொண்டால் அரசியலில் ஏற்படப்போகும் அதிரடி திருப்பம்..! திடீரென சிஐடிக்கு முக்கிய முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-wife-files-complaint-1788864277"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-wife-files-complaint-1788864277</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.</p><p> 

நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ச்சியாக அநாகரிகமான அவதூறுப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்து அதற்கு எதிராக கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.</p><p>

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (08) சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே நாமல் ராஜபக்‌ச ரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்தோம்.

தற்போது அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4181a81-d66e-4ecf-956d-62d7e48b35c4/26-6a9ff30e2fd1e.webp' /></p><p> </p><p>

தேசிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் நாமல் ராஜபக்‌ச இல்லாத குறையை நிவர்த்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச, ஷிரந்தி ராஜபக்‌ச, கோட்டாபய ராஜபக்‌ச, நாமல் ராஜபக்‌சவின் சகோதரர்கள் மற்றும் நாமல் ராஜபக்‌சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச உள்ளிட்ட பலரை களமிறக்குமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p><p>

குறிப்பாக நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து வலுவாக எழுகிறது. கடந்த காலங்களில் நாமல் ராஜபக்‌சவுடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரது ஆளுமை, மொழிவளம் மற்றும் வணிக அறிவு என்பவற்றை மக்கள் அவதானித்த காரணத்தினாலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>அவதூறு பரப்பல்</h2><p>
</p><p>
ஒரு நாட்டின் தலைவரின் மனைவி மக்கள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆளுமையும் திறமையும் அவரிடம் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல் கும்பல், எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e2b1af-dab1-423a-b4b0-cba99e2b0f6f/26-6a9ff30edc9d8.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, அவரது தந்தை திலக் வீரசிங்க மற்றும் அவரது வியாபாரங்களை இலக்கு வைத்து பாரிய அசத்திய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். திலக் வீரசிங்க என்பவர் திறமையான, நேர்மையான, குணநலன் மிக்க, நாட்டிற்குப் புகழைத் தேடிக்கொடுத்த ஒரு வர்த்தகர் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
</p><p>
நாட்டின் தலைவர்களின் குடும்பங்களை இலக்கு வைத்து இவ்வாறு சேறுபூசும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளோம். 

பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறுகளையும் இழிவான செயற்பாடுகளையும் தடுப்பதற்கான அவசியமான சட்டத் திருத்தங்கள் நாமல் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவரப்படும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியின் முக்கிய தளங்களை நோக்கி ஏவப்பட்ட பாரிய ஏவுகணைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthi-attacks-on-saudi-arabia-73-injured-1788865229"></link>
            <id>https://tamilwin.com/article/houthi-attacks-on-saudi-arabia-73-injured-1788865229</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய தளங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய தளங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><h2>&nbsp;73 பேர் காயம்&nbsp;</h2><p>
</p><p>
தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் கமிஸ் முஷைத் பகுதியிலுள்ள விமானப்படை தளம், அப்ஹா, நஜ்ரான் மற்றும் ஜஸான் பகுதியிலுள்ள சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd8828a-a662-44e9-8427-ad158f33b50b/26-6a9ff0c916920.webp' /></p><p>
</p><p>
இத்தாக்குதல்களில் எண்ணெய் ஆலைகள் தீப்பிடித்து எரிந்ததோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>ஊடகக் கட்டுப்பாடுகள் காரணமாக சேதங்கள் தொடர்பான புகைப்படங்கள் உடனடியாக வெளியாகாத போதிலும், எல்லைப் பகுதியில் சவூதியின் டிரக்குகள் மீதான தாக்குதல் காட்சிகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788865362"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788865362</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இன்று (08.09.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (08.09.2026) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0031db3-ddb3-4c11-be62-6cd9df5e75ba/26-6a9ff0447531e.webp' /></p><p> </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T11:25:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[51.37 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து நாட்டினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-thai-nationals-arrested-at-bia-1788865379"></link>
            <id>https://tamilwin.com/article/two-thai-nationals-arrested-at-bia-1788865379</id>
            <summary type="text">பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் ரூபாய் 51.37 மில்லியன்
மதிப்புள்ள குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் ரூபாய் 51.37 மில்லியன்
மதிப்புள்ள குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து
நாட்டினரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது
செய்துள்ளனர்.</p><p>
பேங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் நேற்று திங்கட்கிழமை
(07) வந்திறங்கிய பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போதே
இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.</p><h2>போத்தல்களில் மறைத்து வைப்பு..&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட 39 வயதான நபரின் பயணப் பையிலிருந்த 8 பிளாஸ்டிக்
போத்தல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.224 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு
ரூ. 22.24 மில்லியன்) மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94e6c4e2-264a-4121-88f4-73c9cdc39890/26-6a9febe773c4c.webp' /></p><p>
</p><p>
அதேபோன்று, 23 வயதான மற்றொரு நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 8 பிளாஸ்டிக்
போத்தல்களில் மறைக்கப்பட்டிருந்த 2.272 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு ரூ. 22.72
மில்லியன்) மற்றும் அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641
கிராம் ஹஷிஷ் (மதிப்பு ரூ. 6.41 மில்லியன்) கைப்பற்றப்பட்டன.</p><p>

அத்துடன் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட 5.137 கிலோ போதைப் பொருட்களுடனும்,
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB)
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பில் சூதாட்ட மறைமுக விளம்பரங்கள் - ஆய்வாளர் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863079"></link>
            <id>https://tamilwin.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863079</id>
            <summary type="text">இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்களின் விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படுவது
குறித்து சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவர் சஞ்சனா ஹட்டோட்டுவா கேள்வி
எழுப்பியுள்ளார்.
</p><p>இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சங்கள்
அடங்கிய 5 காணொளிகளில், '1xBAT' நிறுவனத்தின் சின்னம் சுமார் 14 நிமிடங்கள்
இடம்பெற்றுள்ளது. </p><p>Galle போட்டிகளையும் சேர்த்து 10 காணொளிகளில் சுமார் 25
நிமிடங்கள் இந்த விளம்பரம் காட்டப்பட்டுள்ளது.</p><h2>விளம்பரங்கள் காட்சிப்படுத்தல்</h2><p>

இந்த நிலையில் விக்கெட்டுக்குப் பின்னால் உள்ள விளம்பரப் பாய், எல்லை விளம்பரங்கள் மற்றும் பார்வைத் திரைகள் மூலமாக 1xBAT, Parimatch Sports மற்றும் batbricks7 போன்ற
வெளிநாட்டுச் சூதாட்டப் பின்னணி கொண்ட முத்திரைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77791b2-0129-4c33-a86f-5b22ae9b0027/26-6a9fe5d102eb9.webp' /></p><p>

அத்துடன் 1xbet.com போன்ற தளங்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தடை செய்துள்ள நிலையிலும், 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை
ஆணையச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுவது
சட்டம் அமுலாக்கத்தின் பலவீனத்தைக் காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்.
</p><p>
இதனிடையே "இலங்கையின் எல்லைக்குள் நடைபெறும் போட்டிகளில் சூதாட்ட விளம்பரங்களை
அனுமதிப்பதில்லை" என ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்னர் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சேர்க்கைக்கு இலஞ்சம்: பாடசாலை அதிபர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-admission-principal-arrested-swift-action-1788863854"></link>
            <id>https://tamilwin.com/article/student-admission-principal-arrested-swift-action-1788863854</id>
            <summary type="text">காலி, உணவட்டுன - ரூமசலா பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரண்டு
மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, உணவட்டுன - ரூமசலா பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரண்டு
மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(7.9.2026) இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>2026-ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் இரு
குழந்தைகளைச் சேர்ப்பதற்காக, அஹங்கமவைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஆரம்பத்தில்
ரூ. 600,000 கேட்டுள்ளார்.</p><h2>கைது</h2><p>
</p><p>
இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தத் தொகை ரூ. 3,00,000 ஆகக்
குறைக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 1,50,000 அதிபரால்
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

மேலும் மீதிப் பணத்தைக் கேட்டுத் தொடர்ந்து வற்புறுத்திய அதிபர், பணத்தைத்
தராவிட்டால் குழந்தைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுவதாக மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b2b19b2-019b-4b97-acc6-1cd401023ea4/26-6a9fe74433ea2.webp' /></p><p>
</p><p>
அத்துடன் பாதிக்கப்பட்ட தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், ஹபரடுவ
பகுதியிலுள்ள பிரபல கடையில் வைத்து ரூ. 2,50,000 இலஞ்சப் பணத்தைப்
பெற்றுக்கொண்டபோது அதிபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
</p><p>
மேலும் சந்தேக நபரான அதிபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனைவியை போன்று நாமலின் மனைவிக்கும் கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/planned-to-use-namal-s-wife-for-political-games-1788858330"></link>
            <id>https://tamilwin.com/article/planned-to-use-namal-s-wife-for-political-games-1788858330</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவிக்கு அழுத்தம் பிரயோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவிக்கு அழுத்தம் பிரயோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடாத்தப்படும் விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவிற்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் மனைக்கு வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம், போன்ற அழுத்தம், நாமலின் மனைவிக்கும் பிரயோகிக்க முயற்சிகள் இடம்பெற்றுள்ளது. </p><p>

எதிர்வரும் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் நாமல் ராஜபக்சவின் மனைவியைப் பிரசார உத்தியாக கலந்துகொள்ள செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

நாமலின் மனைவிக்கு அழுத்தம் </b></h2><p>அதற்காக திஸக்குட்டியாராச்சி உள்ளிட்ட குழுவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுஜன கட்சி மேலும் வங்குரோத்து அடைந்துள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16420f9a-bc72-4b59-9c9e-d30145452019/26-6a9fe734667da.webp' /></p><p>சுரேஷ் சலேயின் மனைவியும் மகனும் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு நடுவழியில் கைவிடப்பட்டுள்ள விதம் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T10:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136"></link>
            <id>https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 ஊழல் விசாரணை ஆணைக்குழு</b></h2><p>இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfd58f6-158c-4e64-823d-ac4ede5572a9/26-6a9f8af8dc64c.webp' /></p><p>மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:</p><p>

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h3><b>மேலதிக அழுத்தம்</b></h3><p>அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0a2a5b-4255-4bb7-b1ca-8e82989806c3/26-6a9f8c13865f4.webp' /></p><p>வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:39:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-case-defendants-written-submission-1788862619"></link>
            <id>https://tamilwin.com/article/easter-case-defendants-written-submission-1788862619</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 23,270 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 24 பிரதிவாதிகள்&amp;nbsp;கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 23,270 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 24 பிரதிவாதிகள்&nbsp;கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>
இதன்படி, வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22 அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.</p><h2>இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>
நீதிபதிகளான&nbsp;நவரத்ன மராசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் அமர்வின் முன் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7767c2f9-3563-411a-8324-8033387b3a7a/26-6a9fe35e835fd.webp' /></p><p>இந்த வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
நௌபர் மௌலவி உட்பட இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து வந்த நாமல்! நாடாளுமன்றத்தில் பேசிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275</id>
            <summary type="text">அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>சிறையில் இருக்கும் கைதிகளின் மனித உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், சுதந்திரம் மட்டுமே பறிக்கப்பட வேண்டுமே தவிர, மனித கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.</p><h2>பொருளாதாரக் கொள்கைகள்</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான தோல்விகளை விமர்சித்து, மக்கள் நலனுக்கான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கூறினார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எல் நினோ
காலநிலைத் தாக்கத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559efa07-746a-4fca-a9c2-5fbbd6f67c7a/26-6a9ff42cd1483.webp' /></p><p> </p><p>ஆனால்,
விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களையும் உதவிகளையும்
இந்த அரசு வழங்கத் தவறிவிட்டது.</p><p>

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
ஆனால், அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது தெரியவில்லை.
அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் என
அரசு அறிவித்தது. அது வழங்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p> எனவே, தயவுசெய்து
நேபாளத்தை ஏமாற்றிவிட வேண்டாம். இது சர்வதேச மட்டத்தில் நமது நாட்டுக்கு
நல்லதல்ல.

சுகாதாரத்துறையை மேம்படுத்துவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள்
சக்தி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வைத்தியசாலைகளில்
மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது.</p><p>

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முறையான தலையீடுகளை அரசு
மேற்கொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், தற்போது வைத்தியசாலைக்குச்
செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர். கிராமப்புற மக்கள் முழுமையாக அரச
வைத்தியசாலைகளையே நம்பியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4d5d48-0b3e-41a4-9fd7-ebdf3f889a57/26-6a9ff42c1c63f.webp' /></p><p>எனவே, கொத்தமல்லி குடித்துவிட்டு வீட்டில் இருக்குமாறு கூறுவதற்கு
ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் கிடையாது. டெங்கு நோயாளர்களும் கொத்தமல்லி
குடித்துவிட்டுத் தூங்க முடியுமா. </p><p>கொத்தமல்லி குடிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நோயாளிகளுக்கு
வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் அடிப்படை உரிமை இருக்க வேண்டும்.
</p><p>
கதைகளைக் கூறி இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் கட்டடங்களின் இரண்டாம் மாடிக்கு அடிக்கல் நாட்டுங்கள் அல்லது
மலசலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுங்கள். </p><p>ஆனால், முதற்கட்டமாகக் கொத்தமல்லி
விலையைக் குறைக்கவும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை
எடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-Pq_K_SNvY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><b>மேலதிக தகவல்-ராகேஷ்</b></p>]]></content>
            <updated>2026-09-08T10:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதியின் முன்மொழிவிற்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-transform-units-to-in-gov-institutions-1788861079"></link>
            <id>https://tamilwin.com/article/digital-transform-units-to-in-gov-institutions-1788861079</id>
            <summary type="text">அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.
</p><p>
2025 அக்டோபர் 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025 - 2030, அரச நிறுவனங்களுக்குள் துறைசார் டிஜிட்டல் மாற்றத்தை மேற்பார்வையிடுவதற்கும், தேசிய டிஜிட்டல் பொதுமுறை முயற்சிக்கு இணங்குவதற்கும் வலுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு தேவை என்பதை அடையாளம் கண்டுள்ளது.</p><h2>டிஜிட்டல் மாற்று நடவடிக்கை</h2><p>
</p><p>
அதற்கேற்ப, டிஜிட்டல் மாற்று நடவடிக்கைகளை திறம்பட நிர்வகித்து ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் டிஜிட்டல் மாற்று அலகு ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டது.</p><p>

கவ்டெக் இலங்கை (தனியார்) நிறுவனம் இந்த அலகுகளை நிறுவி செயல்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் ஏற்பாடுகளை விவரிக்கும் டிஜிட்டல் மாற்று அலகு குறிப்புச் சட்டகத்தை தயாரித்துள்ளது.

இந்த சட்டகத்தின் கீழ், ஒவ்வொரு டிஜிட்டல் மாற்று அலகின் தலைவராக ஒரு முதன்மை டிஜிட்டல் அதிகாரி நியமிக்கப்படுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea65c9a-fa4f-4091-8a7e-59f6a71ab332/26-6a9fe1087684d.webp' /></p><h2>அமைச்சரவை அனுமதி</h2><p> </p><p>அவர் அந்தந்த நிறுவனத்தின் தலைவருக்கு நேரடியாக அறிக்கை செய்வார்.

இந்த அலகுகள், நிறுவன கட்டமைப்பு , தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு, இடைச்செயல்பாடு மற்றும் பிற டிஜிட்டல் மாற்று தொடர்பான விடயங்களில் கவ்டெக் இலங்கையிடமிருந்து சிறப்பு நிபுணத்துவத்தையும் ஆலோசனை ஆதரவையும் பெற அரச நிறுவனங்களுக்கு வழிவகுக்கும்.</p><p>

டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித - யானை மோதலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-urge-department-wildlife-immediate-action-1788862232"></link>
            <id>https://tamilwin.com/article/public-urge-department-wildlife-immediate-action-1788862232</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு
ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு
ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்
வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும்
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள விவசாய நிலங்கள், மக்கள் குடியிருப்புகள்
மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை நோக்கி இரவு நேரங்களில் காட்டு
யானைகள் ஊடுருவுகின்றன. </p><p>இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை
முன்னெடுக்க முடியாமலும், பொதுமக்கள் இரவு வேளைகளில் வீடுகளை விட்டு வெளியேற
முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><h2>தடுப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>


யானைகள் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து வருவதால் மனித
உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4780cf6b-d92f-41fb-80e0-da55f83050bb/26-6a9fe10a18798.webp' /></p><p>
</p><p>எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் சம்பவிப்பதற்கு முன்னர் வனஜீவராசிகள்
பாதுகாப்புத் திணைக்களம் தலையிட்டுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எனப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நேரடியாக வருகை தந்து
நிலமையை ஆராய்ந்து, யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க நிரந்தரமான நடைமுறைச்
செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.</p><p>யானைகள் வழமையாக நடமாடும் பாதைகள்
மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் இடங்களைக் கண்டறிந்து முறையான
கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.</p><p>அவசர காலங்களில் பொதுமக்கள்
உடனடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் அவசர உதவிப் பிரிவையும்
கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும்.</p><p>

"மனித உயிரிழப்புகள் அல்லது பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை
எடுப்பதை விட, அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வதே முக்கியமானது" எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098"></link>
            <id>https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098</id>
            <summary type="text">மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார
சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, அப்பகுதியில் காணப்படும் கால்வாய்களில் பொலித்தீன் மற்றும் ஏனைய
கழிவுகள் தேங்கி உள்ளதால், மழை நீர் உள்ளிட்ட நீர் முறையாக ஓட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதற்கான சூழல்
உருவாகியுள்ளது டன், டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
அதேவேளை, குறித்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் சில வியாபாரிகளால் அதிகளவான
பொலித்தீன் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும், முறையான கழிவு
முகாமைத்துவம் இல்லாதமையே இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67e13916-9c63-4796-a005-e95ff6c49be3/26-6a9fdbb936633.webp' /></p><p>
</p><p>
நேற்றைய தினம் தற்காலிகமாக குறித்த வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும்
நிரந்தரமாக குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு முன்பு இவ்வாறான சுகாதார சீர்கேடு
ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரணியை குழப்பும் நோக்கில் நாமலின் திடீர் கைது! களமிறங்கும் மகிந்த - ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990"></link>
            <id>https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
</p><p>
 ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>நாமல் ராஜபக்ச கைது விவகாரம்&nbsp;</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3624758-0cf3-4fd9-bf15-4ba1f90be91d/26-6a9fd960c3311.webp' />&nbsp;</p><p>

எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், நடைபெறவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ஐ.தே.க. விமர்சிப்பது இரட்டை வேட அரசியல்! நிருக்ச குமார சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808</id>
            <summary type="text">நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக் கட்சி விமர்சித்து அறிக்கை வெளியிடுவது அவர்களின் இரட்டை வேடத்தையும்
வெட்கக்கேடான அரசியலையும் வெளிப்படுத்துவதாக 'ஒருமித்த எதிர்க்கட்சியின்' இணை
அழைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்தார்.</p><p>

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரள
ஆகியோர் சட்டத்தையும் பொலிஸையும் தம்வசம் வைத்திருந்த நல்லாட்சி காலத்தில்,
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்
மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><h2>வீழ்ச்சியடைந்த ஐதேக</h2><p>ஆனால், தற்போது அந்தக்
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுகளும் சட்ட நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்படும் போது, ஐக்கிய தேசியக் கட்சி அதை விமர்சித்து அறிக்கை
வெளியிடுவது முற்றிலும் முரண்பாடானது.
</p><p>
முன்னர் நாட்டின் பிரதான சக்தியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது
தனது வாக்கு வங்கியை 2 சதவீதத்துக்கும் குறைவாக இழந்து பெரும்
வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a39e51-1126-404e-804a-4441ef46e50e/26-6a9fd806ce0d4.webp' /></p><p> </p><p>இவ்வாறான கொள்கையற்ற இரட்டை வேட அரசியலாலேயே அந்தக்
கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதுடன், தற்போது அக்கட்சியில்
இருக்கும் எஞ்சிய உறுப்பினர்கள் கூட வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஆதரவாளர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடியே ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுவந்தனர். </p><p>அவ்வாறு போராடிய ஆதரவாளர்களுக்கு இன்று வரை நீதி
கிடைக்கவில்லை. நாட்டைக் சூறையாடிய ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துச் செயற்படும்
ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருமித்த எதிர்க்கட்சி
தொடர்ந்து கண்டிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-pole-snapped-and-fell-onto-a-lorry-trinco-1788858610"></link>
            <id>https://tamilwin.com/article/electric-pole-snapped-and-fell-onto-a-lorry-trinco-1788858610</id>
            <summary type="text">கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இடம்பெற்ற விபத்தில், உயர்
அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது
விழுந்ததால் பரபரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இடம்பெற்ற விபத்தில், உயர்
அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது
விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>&nbsp;குறித்த விபத்தானது இன்று (08.9.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி, முன்னால்
நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் எரிவாயு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் வாகனத்தின்
பின்னால் மோதியுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, விபத்தைத் தவிர்ப்பதற்காக சீமெந்து லொறியின் சாரதி மேற்கொண்ட
முயற்சியின்போது, லொறி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/146060a2-a494-46dd-84bd-9de3d26ba7c6/26-6a9fd4634c66b.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பாரிய உயர் அழுத்த மின் கம்பமொன்று முறிந்து, பின்னால் வந்த
மற்றுமொரு லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது விழுந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remand-for-ampitiya-thero-until-the-11th-1788857371"></link>
            <id>https://tamilwin.com/article/remand-for-ampitiya-thero-until-the-11th-1788857371</id>
            <summary type="text">மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும்
11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும்
11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள்
பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த உத்தியோகத்தர்களின்
கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால்
நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.</p><h2>நீதிமன்றில் முன்னிலை..&nbsp;</h2><p>இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுமனரத்ன தேரர்
இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7384fb8-c04b-4305-af5b-2a1855519309/26-6a9fcd503d1eb.webp' /></p><p>இந்நிலையில், நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் அ.தர்சினி முன்னிலையில் இவ்வழக்கு
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G6qSX55IYH8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>அரச அலுவலகம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச அதிகாரிகளுக்கு
அச்சுறுத்தல் விடுத்தமை,அரச கடமையினை ஆற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தியமை போன்ற
குற்றச்சாட்டுகள் தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><b><i>மேலதிக தகவல் - பவன்</i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T08:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த - ரணிலை நெருங்கும் சிக்கல்.. முக்கிய சாட்சிகளின் மர்ம மரணங்கள் - ஐநா வெளியிடும் அதிரடி அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-mahinda-ciaboc-united-nation-today-summit-1788854711"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-mahinda-ciaboc-united-nation-today-summit-1788854711</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான சிறப்பு அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான சிறப்பு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>குறித்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இலங்கையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டச் சீர்திருத்தங்கள், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் விசாரணைகள் ஆகியவை வேகமெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இருப்பினும், இவற்றின் அமலாக்கம் இன்னும் சீரற்ற நிலையிலேயே தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் அந்த அறிக்கையில், "இந்நிலைமையில், அரசாங்கம் தனது 2026 நல்லாட்சி செயல்திட்டத்தை (Governance Action Plan) வெளியிட்டுள்ளது.</p><h2>எயார்பஸ் விவகாரம்..&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இதில் பொதுப் பயன்பாட்டு உரிமையாளர் பதிவேட்டை நிறுவுதல், பொதுக் கொள்முதல் சட்டத்தை இயற்றுதல் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) செயற்பாடுகளை பிராந்திய அலுவலகங்கள் ஊடாக பரவலாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44f0b078-7f41-47f3-a1e5-c0193843ee86/26-6a9fc938b8f5b.webp' /></p><p>
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உள்ளடக்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் CIABOC புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.
</p><p>
அத்துடன், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகள் குறித்த விசாரணைகளும், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
எவ்வாறாயினும், இந்த உயர்மட்ட ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவங்கள், குற்றவாளிகளைக் கண்டறிவதிலும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதிலும் பெரும் பின்னடைவையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7pnpSNVXoig" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு! நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாக நாடாளுமன்றில் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prices-of-essential-commodities-high-in-sathosa-1788853502"></link>
            <id>https://tamilwin.com/article/prices-of-essential-commodities-high-in-sathosa-1788853502</id>
            <summary type="text">சதொசவில் ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொசவில் ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) அவர் மேலும் தெரிவிக்கையில்,

சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுகிறது.</p><h2>ஏமாற்றத்துடன் திரும்பும் நுகர்வோர்</h2><p>

சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளன.
</p><p>
தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
</p><p>
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04914546-41da-464a-999e-681d68d0d10d/26-6a9fc744b37a3.webp' /></p><h2>பொருள் தட்டுப்பாடு</h2><p>
</p><p>
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p>

அத்துடன் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T08:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து அழைத்த பெண் - இலங்கையில் பெண் உட்பட இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-lady-cheated-by-foreign-lady-1788841936"></link>
            <id>https://tamilwin.com/article/old-lady-cheated-by-foreign-lady-1788841936</id>
            <summary type="text">களுத்துறையில் பரிசு ஒன்றை அனுப்புவதாக கூறி, 65 வயது மூதாட்டி மற்றும் அவரது 16 வயது பேரன் ஏமாற்றப்பட்டுள்ளனர். இருவரையும் ஏமாற்றி 8 லட்சத்து 88 ஆயிரம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறையில் பரிசு ஒன்றை அனுப்புவதாக கூறி, 65 வயது மூதாட்டி மற்றும் அவரது 16 வயது பேரன் ஏமாற்றப்பட்டுள்ளனர்.</p><p> இருவரையும் ஏமாற்றி 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கணக்கில் வரவு வைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>தெற்கு களுத்துறை, மெனெரிதென்ன பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.</p><p> </p><h2><b> இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி</b></h2><p>தனது 16 வயது பேரனின் தொலைபேசிக்கு கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10be2010-13f1-4a25-9b46-9d572f08bad5/26-6a9fc66cedd4c.webp' /></p><p>தான் வைத்தியர் எனவும், கணவர் இறந்ததன் பின்னர் சொத்துக்களை மாமனார் பலவந்தமாக பறித்துக்கொள்ள முயல்வதால் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>வழக்கினை வெல்வதற்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரியுள்ளார். </p><p>அத்துடன், பேரனுக்கு பரிசொன்றை அனுப்புவதாகவும் தெரிவித்ததாக வயோதிபெண் பொலிஸாரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>வழக்கில் வெற்றி பெற்றமைக்கான தகவலுடன் நீதிமன்றத்திற்கு அருகில் எடுத்த புகைப்படமொன்றையும் மோசடி செய்த பெண் அனுப்பியுள்ளார்.</p><p> </p><h3><b>பரிசுப் பெட்டி</b></h3><p>பெப்ரவரி 16 ஆம் திகதி கடிகாரம், உடைகள், கையடக்கத் தொலைபேசி, வாசனைத் திரவியம், பாதணிகள், மடிக்கணினி போன்ற பரிசுப் பொருட்களின் புகைப்படங்களையும் அனுப்பியு்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f26849-d2b6-4876-a9ec-64418667bcfc/26-6a9fc66da20dc.webp' /></p><p>17 ஆம் திகதி பரிசுப் பெட்டி தபாலில் அனுப்பப்பட்டுள்ளதால் அதற்காக 98 ஆயிரம் ரூபா பணத்தை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார். </p><p>பின்னர் இலங்கையர் ஒருவர் விமான நிலையத்திலிருந்து தொடர்புகொண்டு 98 ஆயிரம் ரூபாவை அனுப்புமாறு கூறி வங்கிக் கணக்கிலக்கத்தைக் கொடுத்துள்ளார். </p><p>இதன்போது நாங்கள் அப்பணத்தை அனுப்பினோம். பின்னர் பரிசுப் பெட்டியின் எடை அதிகமாக இருப்பதால் மேலும் 1.5 இலட்சம் ரூபாவை வைப்புச் செய்யுமாறு கூறியுள்ளனர். </p><p>இவ்வாறு பல தடவைகள் தொடர்பு கொண்டு 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.</p><p> தாங்கள் இந்தப் பணத்தை அயல் வீட்டு பெண்ணொருவரிடம் வீடொன்றினை விற்றுப் பெற்ற பணமாகும். </p><p>மீண்டும் கடந்த வாரம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கூறியபோது, மேலதிகமாகப் பணம் இல்லை எனக் கூறியதாக பாதிக்கப்பட்ட வயோதிப பெண் குறிப்பிட்டுள்ளார். </p><p>களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T08:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் இலங்கையில் கடுமையாக நடைமுறைக்கு வரும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eat-belt-rule-on-expressways-from-september-19-1788851075"></link>
            <id>https://tamilwin.com/article/eat-belt-rule-on-expressways-from-september-19-1788851075</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வாகனங்களில் ஆசனப்பட்டி</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விதி ஓராண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சில பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஆசனப்பட்டி பொருத்தப்படாததால், நடைமுறை காரணங்களால் அதன் அமலாக்கம் தாமதமானது.
</p><p>
ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், செப்டெம்பர் 19 முதல் இந்த விதியைக் கடுமையாக நடைமுறைப்படுத்த நாங்கள் இப்போது முடிவு செய்துள்ளோம்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை வான்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acef53b3-b083-43fc-baee-281616e99356/26-6a9fbb4e646e8.webp' /></p><h2>சாலைத் தகுதிச் சோதனை</h2><p>
</p><p>
அத்துடன் பேருந்துகள் மற்றும் வான்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களும், இந்த ஆண்டின் இறுதி முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை அல்லது 5000 கிலோமீட்டர் பயணித்த பிறகு சாலைத் தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நல்ல ஓட்டும் நிலையில் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். 

பிரேக் மற்றும் டயர் பிரச்சினைகள் உட்பட வான்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளால் சில பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதை நாங்கள் கவனித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dioTgMmnp-g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மனைவியின் ஜாதகத்தில் ராஜயோகம் - ராஜபக்சர்களை நிலைகுலைய வைத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. </p><p>

அதில் முக்கியமானதாக நாமல் ராஜபக்சவின் மனைவி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதிகளவில் பேசப்பட்ட வந்த நிலையில், அதனை நாமலின் ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது. </p><p>

நாமல் மற்றும் அவரது மனைவி தொடர்பிலான செய்திகள் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> </p><h2><b>

லிமினி ராஜபக்சவின் ஜாதகம் </b></h2><p>சமூக வலைத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நாமல் ராஜபக்ச சுகயீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9622954d-3bcf-4cdd-b4cd-634de6ecedc9/26-6a9ec2abbad22.webp' /></p><p>அத்துடன், மற்றுமொரு பேஸ்புக் பக்கம் ஊடாகப் பரவிய பதிவில், நாமல் ராஜபக்சவின் இடத்தை நிரப்புவதற்காக அவரது மனைவி லிமினி ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுரராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் மேடையில் ஏறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>

மற்றுமொரு செய்தி இணையத்தளம், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவிகளான சிறிமா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைப் போல பலத்தன்மை வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் அவரது வருகை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. 

இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்படும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குறித்த தகவல்கள் முழுமையாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரச்சாரங்கள் என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்துகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:35:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞரொருவர் கொடூரமாக அடித்து தீயிட்டு எரித்துக்கொலை! சவப்பெட்டியில் மறைக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/friend-killed-and-burned-after-drinking-alcohol-1788850598"></link>
            <id>https://tamilwin.com/article/friend-killed-and-burned-after-drinking-alcohol-1788850598</id>
            <summary type="text">கண்டி - தலத்துவோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - தலத்துவோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று காலை (8) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலத்துவோயா பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், பவ்லானா கிராமத்தை சேர்ந்த முதியன்செலகே சாந்த சஞ்சய பண்டார (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு&nbsp;</h2><p>
</p><p>
தனது அண்ணனை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், அவரது தம்பி தலத்துவோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a0ce4f-a837-447d-8dd5-20582a36810f/26-6a9fb9f44ac19.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து அவர் கடைசியாக சந்தித்த இரண்டு நண்பர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்த கொலை குறித்த தகவலை பொலிஸ் கண்டறிந்துள்ளது.</p><p>

மது அருந்திவிட்டு தங்கள் நண்பரை கொலை செய்த பின்னர், உடலை எரித்து வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, சவப்பெட்டியில் வைத்து வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்று (8) நீதித்துறை விசாரணை நடைபெற உள்ளது. </p><p>

இச்சம்பவம் குறித்து தலத்துவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து கவலையடையும் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/great-need-cultured-people-on-social-media-harini-1788850843"></link>
            <id>https://tamilwin.com/article/great-need-cultured-people-on-social-media-harini-1788850843</id>
            <summary type="text">சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சிறுவர்கள், பெண்கள் மற்றும்
நிர்க்கதியானவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்களைப்
பார்க்கும்போது, ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சிறுவர்கள், பெண்கள் மற்றும்
நிர்க்கதியானவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்களைப்
பார்க்கும்போது, ஒரு பண்பாடான மனிதனின் தேவை தெளிவாகப் புலப்படுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
கம்பஹா நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று(07.09.2026) நடைபெற்ற 'கம்பஹா இலக்கிய விழாவில்'
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டும்
பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல. மாறாக, இலக்கியப்
படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை
ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே
பண்பாடான மனிதராவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf1a24c-a318-4571-b533-3eda13a84b45/26-6a9fb9618a6d6.webp' /></p><p>அத்தகைய மாற்றத்தையும் உணர்வுபூர்வமான தன்மையையும் கொண்ட
மனிதரால் வேறு எந்தவொரு நபருக்கும் அவமதிப்போ, மனவேதனையோ அல்லது அவமரியாதையோ
ஏற்படாது.</p><p>'பண்பாடான பிரஜையொன்றைக் கண்டடைதல்' என்ற இக்கருப்பொருள் மிகவும்
காலத்துக்கேற்றதாகும். </p><p>நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பல்,
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல்
ஆகியவற்றுக்கு இணையாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பண்பாடான மனிதனை
உருவாக்குவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
</p><p>
மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத்
தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும்
முக்கியமானவையாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவாவில் இலங்கை பற்றிய அறிக்கை உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203"></link>
            <id>https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><h2>உரிய தீர்மானம்..&nbsp;</h2><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமான இந்தக் கூட்டத் தொடரில்
மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், அது இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு, இன்று ஆணையாளர் வோல்கர்
துர்க்கினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13382cbb-b35f-4ab7-97d8-88871efb12da/26-6a9fb24d91e24.webp' /></p><p>

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று வோல்கர் துர்க் தனது அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், மனித உரிமைகள்
பேரவையின் உறுப்பு நாடுகள் இந்த அறிக்கையைப் பரிசீலித்து, உரிய தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:00:54+00:00</updated>
        </entry>
    </feed>
