<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T03:47:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/error-in-the-computer-in-department-of-immigration-1786417770"></link>
            <id>https://tamilwin.com/article/error-in-the-computer-in-department-of-immigration-1786417770</id>
            <summary type="text">கடவுச்சீட்டுகள் வழங்குவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடவுச்சீட்டுகள் வழங்குவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணமாகும்.
</p><p>
மேலும், தொழில்நுட்ப சிக்கலை விரைவில் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2bfdab-5d46-401f-9bec-02b92ce483da/26-6a7a9668770cc.webp' /></p><p>அண்மைக்காலமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T03:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்த திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச்சட்டத்தை திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T03:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கையில் மலேசியாவில் சிக்கிய ரத்மலானை சைமா - பேராதெனிய பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101"></link>
            <id>https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ரத்மலானை சைமா மேலதிக விசாரணைகளுக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் நேற்றிரவு (10) பேராதெனிய பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>சிவப்பு எச்சரிக்கை விடுப்பு</h2><p>
</p><p>
மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் ஆதரவுடன் சமீபத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94537af-41f0-4f3c-ad48-82be6cd18503/26-6a7a9436ba18d.webp' /></p><p>

இதன்போது அவருடன் இருந்த ரத்மலானை பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு, மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகநபர், ரத்மலானையை சேர்ந்த 41 வயதானவர் ஆவார். இவர், 2014-ஆம் ஆண்டில் பேராதெனிய பொலிஸ் பிரிவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் கடத்தி காயப்படுத்தியமை மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக்கொன்ற ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவாளி ஆவார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அதன்படி, கேள்விக்குட்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
இதற்கிடையில், மலேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேகநபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T03:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டும்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-to-increase-amid-fuel-shortages-1786417090"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-to-increase-amid-fuel-shortages-1786417090</id>
            <summary type="text">எரிபொருள் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயரக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America - BoFA) எச்சரித்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயரக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America - BoFA) எச்சரித்துள்ளது.</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது குறித்த உடன்பாடு எட்டப்படாவிட்டால் இந்நிலைமை தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராத சூழலிலும், உலகின் மிக முக்கியமான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதை போருக்கு முந்தைய நிலையை அடையாமல் இருக்கும் பின்னணியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கடுமையான பற்றாக்குறை&nbsp;</h2><p>

போருக்கு முன்னர் தினமும் 140 கப்பல்கள் வரை ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த நிலையில், தற்போது தினமும் 5 முதல் 10 கப்பல்கள் மட்டுமே பயணிப்பதாக பேங்க் ஒஃப் அமெரிக்காவின் சரக்கு மற்றும் வழித்தோன்றல்கள் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் பிரான்சிஸ்கோ பிளான்ச் (Francisco Blanch) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f310af91-5e92-49d5-8ca3-0e003b057f74/26-6a7a93d63e78e.webp' /></p><p> தற்போது சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியே கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதால், உலகளாவிய எரிபொருள் சந்தையை ஸ்திரப்படுத்த தினமும் 80 முதல் 100 கப்பல்கள் வரை தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

தற்போது தேவையான அளவு கச்சா எண்ணெய் பயன்பாட்டில் உள்ளபோதிலும், டீசல், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு சந்தைகளில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்த பிரான்சிஸ்கோ பிளான்ச், எரிசக்தி சந்தையின் முடிவுப் பொருட்களில் (final products) தற்போது தீவிரமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T03:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-by-his-daughter-in-law-1786413452"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-by-his-daughter-in-law-1786413452</id>
            <summary type="text">மாத்தளை மாவட்டத்தில் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். காயங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தளை மாவட்டத்தில் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக லக்கல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த கிடைத்துள்ளது.</p><p> உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.&nbsp;எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு</b></h2><p>உயிரிழந்தவர் மா ஓய, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b6b824-2d81-4db8-9433-3d721d8363de/26-6a7a88db426a6.webp' /></p><p>உயிரிழந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T02:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flocking-to-sri-lanka-1786414899"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flocking-to-sri-lanka-1786414899</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.



...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>


சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது மொத்தத்தில் 18% ஆகும்.</p><h2>சுற்றுலாப்பயணிகள் வருகை</h2><p>



மேலும், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b4910a-9a9e-494f-836b-7c1aec0be543/26-6a7a890ea3bf1.webp' />&nbsp;</p><p>


மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 06 வரை சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 1,386,228 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>


அவர்களில், 346,057 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 135,323 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்துள்ளனர் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T02:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட முக்கிய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141</id>
            <summary type="text">மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><p>இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11)&nbsp; மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>விசாரணையில் வெளியான காரணம்&nbsp;</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத்தலைவன் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என தெரியவந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7d0b40-25ad-423c-88f5-2aa95c9aea63/26-6a7a85702488a.webp' /></p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 54 வயதானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.&nbsp;</p><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><h2>சிசிடிவி காட்சி வெளியீடு</h2><p>அண்மையில் இரத்மலானை பகுதியில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய சகா ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p>&nbsp;அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கமராவிலும் இந்த துப்பாக்கிச்சூடு பதிவாகியுள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர்&nbsp; நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்தியப் பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T02:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெள்ள அபாய நிலை நீங்கியுள்ளது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-levels-decreasing-1786414138"></link>
            <id>https://tamilwin.com/article/flood-levels-decreasing-1786414138</id>
            <summary type="text">நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று காலை தெரிவித்துள்ளார்.</p><p>
அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி 20 மில்லிமீட்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நேற்று மழை பதிவாகியிருந்த போதிலும், அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி குறைந்த அளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீட்டருக்கும் குறைந்த அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>மழைவீழ்ச்சி குறைந்துள்ளமையினால் நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு எவ்வித வெள்ள அபாயமும் உருவாகவில்லை என எல்.எஸ்.சூரியபண்டார மேலும் உறுதிப்படுத்தினார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T02:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rupees-value-has-been-increased-1786412608"></link>
            <id>https://tamilwin.com/article/rupees-value-has-been-increased-1786412608</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, சமீப காலத்தில் ரூபாய் வீழ்ச்சியடையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p> 

அதற்கமைய, சமீப காலத்தில் ரூபாய் வீழ்ச்சியடையும் வேகம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>

சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பு நேற்று 340 ரூபாய் என்ற குறியீட்டிற்கு கீழே சரிந்துள்ளது.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">இலங்கை ரூபாவின் பெறுமதி</b></p><p>இது சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட பணவியல், நிதி முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளுக்கு பின்னர் மாற்றம் ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc168dc-2a58-48e0-817f-aeff853e9985/26-6a7a80f4966db.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா் 7.8 சதவீதம் மதிப்பு இழந்துள்ளது.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமையினால் வெளித்துறையில் தொடரும் அழுத்தம் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.</p><p> 

இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாண மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் நேற்று முறையே 330.88 மற்றும் 339.94 ரூபாயாக காணப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை இதன் மதிப்புகள் 331.01 மற்றும் 340.15 ரூபாயாக பதிவு செய்யப்பட்டன.
</p><p>
இதனால், டொலரின் விற்பனை விலை நேற்று, ஜுலை 08ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக 340 ரூபாய் என்ற நிலைக்குக் கீழே சரிந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-11T01:55:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது என கோரி பல்கலைக்கழக மாணவன் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-univercity-student-files-case-1786412588"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-univercity-student-files-case-1786412588</id>
            <summary type="text">&amp;nbsp;பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவன் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff056e6-c645-4654-b4e0-9b2ce1bd73d8/26-6a7a7e2dc2acb.webp' /></p><p>
</p><p>பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மற்றொரு மாணவர் மூலம் தன்னிடம் கோரிய 80,000 ரூபாய் பணத்தை வழங்க மறுத்ததால், பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தாம் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்டதாக அந்த மாணவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
திட்டமிட்ட அடிப்படையில் தாம் உள்ளிட்ட சில மாணவர்கள் பரீட்சையில் தோல்வியடையச் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இவ்வாறான பின்னணியில் மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல், முதற்கட்டத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட மாணவர்கள் சிலர் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>பரீட்சை முறைக்கேடு</h2><p>
மேலும் இறுதிப் பரீட்சையில் சித்தியெய்தவில்லை என அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட சில மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
</p><p>ஆரம்பத்தில் சித்தி எய்தவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல் எவ்வாறு சித்தியடைந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் வினவிய போதிலும், அதற்கு இதுவரை தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இதன் மூலம் ஏதோவொரு பரீட்சை முறைக்கேடு இடம்பெற்றுள்ளமை புலப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தினால் நடத்தப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் டிப்ளமோ பாடநெறியை (2022/2023) பயின்ற மனுதாரர் சார்பில், சட்டத்தரணி தனோஷா பெரேரா மூலம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T01:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதில் பயனில்லை - சம்பிக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-need-to-extend-pension-age-of-judges-1786409627"></link>
            <id>https://tamilwin.com/article/no-need-to-extend-pension-age-of-judges-1786409627</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை எனவும் இது ஒரு பயனற்ற தீர்மானம் எனவும் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை எனவும் இது ஒரு பயனற்ற தீர்மானம் எனவும் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
</p><p>தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி காரணமாக, வரும் ஆண்டுகளில் சட்டம் மற்றும் மருத்துவம் உட்பட அனைத்துத் துறைகளும் பாரிய மாற்றங்களைச் சந்திக்கவுள்ள நிலையில் இந்த தீர்மானம் பயனற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தற்போதைய அரசியல் தலைமைத்துவம் பழைய கருத்தியல்களைக் கொண்ட ‘நியன்டர்தால்’ மனநிலையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e90c0e21-07af-4ff4-834c-3fff56338733/26-6a7a729d01dc1.webp' /></p><p>
எலோன் மாஸ்க் போன்ற உலகளாவிய முன்னணி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுவது போல், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் அனைத்துச் செயல்பாடுகளும் தரவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கும் என தெரிவித்துள்ளார்.
</p><p>இத்தகையதொரு நவீன யுகத்தில், பழைய மூத்த தலைமுறையினரை முன்னோக்கி கொண்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தற்போதைய அரசியல்வாதிகள் 'ஹோமோ சேப்பியன்ஸ்' தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட அல்லர் எனக் குறிப்பிட்ட அவர், பழைய ஸ்டாலினிச பாணியிலான ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதே அவர்களின் ஒரே இலக்காகும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்துக் கொள்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p> அதற்கான முதல் படிநிலை ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அந்த நோக்கத்தை அடைவதற்காக, தமக்கு சவாலாக விளங்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களைச் சிறையில் அடைத்து எதிர்க்கட்சியை முற்றிலுமாக அடக்குவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T00:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்தது என்ன...! அம்பலமாகும் சிசிரிவி காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-issue-baskaran-kandiah-speech-1786409122"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-issue-baskaran-kandiah-speech-1786409122</id>
            <summary type="text">நான்கு நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட அட்சய பாத்திரம்&#039; றீச்சாவின் உணவுத்திருவிழா, எதிர்பாராத விதமாக மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் தற்காலிகமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான்கு நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட அட்சய பாத்திரம்' றீச்சாவின் உணவுத்திருவிழா, எதிர்பாராத விதமாக மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
விழாவில் திருப்தியடையாத அல்லது உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்கள், தங்களின் பற்றுச்சீட்டு அல்லது டோக்கன் சீட்டுகளை சமர்ப்பித்தால் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வின் போது திட்டமிட்டே சிலர் குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும், ஊழியர்களைத் தாக்கியதாகவும் றீச்சா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இதற்கான ஆதாரமாக சிசிடிவி (CCTV) காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

 பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரும் அதே வேளையில், ஊழியர்களை அநாகரிகமாக நடத்துவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T00:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழா சர்ச்சை..! பேசுபொருளாகியுள்ள பெரியவரின் கருத்து...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-issue-1786408399"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-issue-1786408399</id>
            <summary type="text">றீச்சா உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உணவுப் பற்றாக்குறை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.


எதிர்பாராத மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உணவுப் பற்றாக்குறை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
</p><p>

எதிர்பாராத மக்கள் கூட்டம் காரணமாகவே நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டதாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இந்தச் சம்பவத்தை ஒரு தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.</p><p>


குறிப்பாக றீச்சா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இதனைத் திட்டமிட்டு விமர்சிப்பதாகவும் கூறப்படுகின்றது.
</p><p>
எனினும், நிகழ்விற்குச் சென்ற பல பொதுமக்கள், நிர்வாகம் செய்த ஏற்பாடுகள் மற்றும் சூழலைப் புரிந்துகொண்டு பொறுமையுடன் செயல்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
</p><p>

இந்தநிலையில் றீச்சா உணவுத்திருவிழாவிற்கு வந்த பெரியவர் ஒருவர் தெரிவித்த கருத்தும் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் குறித்து பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gtcyFGqXIVY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T00:37:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்கு இல்லாமல் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி! ஏன் இந்தச் சிறப்புச் சலுகை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488"></link>
            <id>https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது கைவிலங்கு இடப்படுவது வழக்கம்.</p><p>

ஆனால், இஷாரா செவ்வந்தி கைவிலங்கு இன்றி, ஆடம்பரமான தோற்றத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி சி.ஐ.டி (CID) காவலில் இருந்தபோது அவருக்கு கேக் வெட்டியது மற்றும் பிஸ்கட் வழங்கியது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.</p><p> 

அந்தச் சம்பவங்களின் போது சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

 இவருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன, இவருக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பது போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். </p><p>இதற்கான முறையான விளக்கத்தை பொலிஸ் தரப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் #NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9zirngiDydA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணி! தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தொழிலதிபர்களை குறிவைப்பது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191</id>
            <summary type="text">வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

இந்தநிலையில்,&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்தநிலையில்,'இந்திரன்' மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்றோர் முன்னெடுத்த நிகழ்வுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்மமான விமர்சனங்கள், தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இலங்கையில் மிகக் குறைவாகவே உள்ளது.

 பொருளாதார ரீதியாக வடக்கும் கிழக்கும் வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்கான திரைமறைவுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.</p><p>

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அரசியல் உறுதித்தன்மை (Political Stability) அங்கு இல்லாததே முதலீடுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம் .

ஊழல் மற்றும் தவறான குழுக்களின் அச்சுறுத்தல்களை அரசு கண்டுகொள்ளாமல் விடுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது.
</p><p>
13-வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால், பொலிஸார் மற்றும் காணி அதிகாரங்கள் அடங்கிய உண்மையான அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
</p><p>
 தமிழகம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் போல, வடக்கிலும் கிழக்கிலும் ஊழலற்ற அரசியல் கலாச்சாரம் மற்றும் புதிய தலைமைத்துவ மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YEoM2J-B56w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:16:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையை சேதப்படுத்திய கைதிகளே சீரமைத்துள்ளனர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-repair-roofs-they-damaged-on-aug-8-1786404269"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-repair-roofs-they-damaged-on-aug-8-1786404269</id>
            <summary type="text">குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின்போது, சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின்போது, சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மோதலின்போது கைதிகள் கட்டிடங்களின் கூரைத் தகடுகளை அகற்றி, அவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>சேதமடைந்த சிறைச்சாலை</h2><p>

கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

எனினும், கூரைகள் சேதமடைந்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் பெய்த கடும் மழையால் கைதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிறை அறைகளுக்குள்ளேயே மழையில் நனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3236b846-63cc-4460-b210-5199c4b0f036/26-6a7a5e1b190bb.webp' /></p><p>
இதையடுத்து, பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் தலையீட்டில், கூரைகளை சீரமைப்பதற்குத் தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
பின்னர், கூரைகளை சேதப்படுத்திய கைதிகளே முன்வந்து, கடந்த 8ஆம் திகதி சேதமடைந்த கூரைகளை மீண்டும் அமைத்து சீரமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T23:45:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-held-in-kandawala-divisional-secretariat-1786403495"></link>
            <id>https://tamilwin.com/article/protest-held-in-kandawala-divisional-secretariat-1786403495</id>
            <summary type="text">கிளிநொச்சி மாட்டத்தில் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கு உரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாட்டத்தில் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கு உரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம்
முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>
</p><p>
உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த மக்களே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதன்போது தமது கோரிக்கை அடங்கிய மனுவும் கண்டாவளை பிரதேச செயலாளர்
தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69fbe05c-e09f-43cc-9f2b-7d961a45ec6e/26-6a7a5ca284881.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T23:36:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் குழப்பம் விளைவிக்க பிரான்சில் இருந்து சென்ற உத்தரவு - சிக்கியது பெரும் ஆதாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119</id>
            <summary type="text">றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் இந்த உணவுத் திருவிழாவிற்காக பெரும் உழைப்பைச் செலுத்திய நிலையில், எதிர்பாராத மக்கள் கூட்டத்தால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. </p><p>

இருப்பினும், உணவுத் திருவிழாவின் தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட குழுவின் திட்டமிட்ட வன்முறை மற்றும் குழப்பங்கள் தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த உணவுத் திருவிழாவைத் திட்டமிட்டு முறியடிக்க, பிரான்சிலிருந்து சில உத்தரவுகள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இது குறித்து சில குரல் பதிவுகள் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், எதிர்பாராத நெருக்கடியாலும் ஏற்பட்ட சிரமங்களுக்கு கந்தையா பாஸ்கரன் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
</p><p>
 மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார் .

 திருவிழா நடந்த இடத்தில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
</p><p>கந்தையா பாஸ்கரன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்றும், அவர் தனது மண்ணின் மீதான பற்றுதலாலேயே இத்தகைய முதலீடுகளைச் செய்கிறார்.
</p><p> 
இந்த&nbsp;உணவுத் திருவிழா, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்பட்ட முயற்சியாகும் எனினும், சில விசமிகளின் குறுக்கீடுகளால் அது பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T23:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுப்பதற்காக தடுப்பு வலைகள் வழங்கும் நிகழ்வு தமிழர் பகுதிகளில் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-areas-launch-fish-fry-barrier-net-project-1786402769"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-areas-launch-fish-fry-barrier-net-project-1786402769</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட
நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன்
குஞ்சுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட
நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன்
குஞ்சுகள் நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில்
தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த நிகழ்வானது பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு
விரிவாக்க அலுவலகத்தில், யாழ்–கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கருணாநாதன் இளங்குமரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><h2>தடுப்பு வலைகள்</h2><p>
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களில்
மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளங்களில் நீர்மட்டம்
அதிகரித்து வான்பாயும் காலப்பகுதிகளில், நீருடன் சேர்ந்து மீன் குஞ்சுகள்
வெளியேறிச் செல்வதால் மீன்வள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.</p><p>
இதனைத் தடுக்கும் நோக்கில், குளங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச்
செல்லும் இடங்களில் பொருத்துவதற்காக இந்த தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebe8e2a-e753-462d-8618-20dc2966dffe/26-6a7a5924a35d5.webp' /></p><p>இதன் மூலம் குளங்களில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளைப் பாதுகாத்து,
எதிர்காலத்தில் மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களுக்கு
மொத்தமாக 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தடுப்பு
வலைத் தொகுதியினதும் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அமைச்சின் இணைப்பாளர் வல்லிபுரம்
அற்புதராசா, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலக அதிகாரிகள்
மற்றும் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச்
சேர்ந்த மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-10T23:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பேருந்து - டிப்பர் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-tipper-accident-passengers-luckily-escaped-1786394133"></link>
            <id>https://tamilwin.com/article/bus-tipper-accident-passengers-luckily-escaped-1786394133</id>
            <summary type="text">திருகோணமலையில் இருந்து புல்மோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் மணல்
ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி&amp;nbsp; விபத்து
ஒன்று சம்பவித்துள்ளது.குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் இருந்து புல்மோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் மணல்
ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி&nbsp; விபத்து
ஒன்று சம்பவித்துள்ளது.</p><p>குறித்த விபத்து நேற்று(10.08.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>வாகன விபத்து</h2><p>
</p><p>
குறித்த&nbsp;பேருந்து புடவைக்கட்டு பகுதியில் பயணிகளை இறக்கி
கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த மணல் ஏற்றிய வந்த டிப்பர் வாகனம்
கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதியுள்ளது.
</p><p>
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், எவருக்கும் காயங்கள் எதுவுமின்றி தெய்வாதீனமாக அனைவரும்&nbsp; உயிர் தப்பியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f434b7-be91-4b6d-a524-f4e46d5f8611/26-6a7a37acb52c3.webp' /></p><p>எனினும், மோதிய வேகத்தில் பேருந்தின் பின் பகுதியும், டிப்பர் வாகனத்தின்
முன் பகுதியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.</p><p>

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த புல்மோட்டைப் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T23:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்மாந்துறையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு: மாடுகளுடன் சிக்கிய கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-smuggled-cows-in-a-car-1786388486"></link>
            <id>https://tamilwin.com/article/gang-smuggled-cows-in-a-car-1786388486</id>
            <summary type="text">சம்மாந்துறை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக்
கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகளை ஆகியவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக்
கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகளை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

இந்த சுற்றிவளைப்பானது நேற்றைய தினம்(10.08.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p><h2>திருட்டுச் சம்பவம்</h2><p>
</p><p>
சம்மாந்துறையில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி
காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலை கைது செய்வதற்காக சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f15533c-6f73-4851-a4ab-67c25a953f65/26-6a7a24149264c.webp' /></p><p>இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவர் அங்கிருந்து
தப்பியோடியுள்ளனர்.</p><p>

இருப்பினும், தப்பியோடிய சந்தேக நபர்கள் இருவரினதும்
அடையாளங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அவர்களை விரைவாக கைது செய்வதற்கான
தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகால ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-dealers-involved-in-heroin-sales-arrested-1786390280"></link>
            <id>https://tamilwin.com/article/2-dealers-involved-in-heroin-sales-arrested-1786390280</id>
            <summary type="text">நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சாய்ந்தமருது
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சாய்ந்தமருது
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(10.08.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>கைது செய்யப்படோர்</h2><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே
கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய
இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து
2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின்
போதைப்பொருட்களுடன், போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக
நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586b4425-1026-4886-b32a-4a13e6c626fe/26-6a7a3435b3de6.webp' /></p><p>அத்துடன் இந்தக் கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால்
திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும்
கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப்
பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச -சரித் அபேசிங்க ஆகியொருக்கிடைலான நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் &#039;ஹரக் கட்டா&#039; என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
</p><p> 2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005-இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு</h2><p>அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர்&nbsp; காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில்&nbsp; இருக்கின்றன. </p><p>அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார். </p><p>அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439c6cae-2804-485a-a932-5363c9d24a0a/26-6a79d2a977344.webp' /></p><p>இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர். </p><p>நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. </p><p>அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன்.
நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். </p><p>எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477d1bdc-e96c-493c-8ea5-b798600afc49/26-6a79d2aa28255.webp' /></p><p>2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.</p><p>நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான். </p><p>நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:52:32+00:00</updated>
        </entry>
    </feed>
