<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T00:17:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விவகாரத்தில் மக்களைத் திசைதிருப்பக் கூடாது..! சிறீதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786751324"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786751324</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நேற்று(14) நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ளார்.</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>

புதைகுழியைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35643df7-7f1a-417d-a287-1624cb19a44d/26-6a7fac66e1b41.webp' /></p><p>

“பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம். ஆனால், குழுக்கள் தங்களுக்குள் மோதி, யாரையும் கொண்டுவந்து புதைத்ததாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>

நாட்டின் நீதி அமைச்சர், மக்களைத் திசைதிருப்பும் வகையில் இவ்வாறான வார்த்தைகளை தெரிவிக்க கூடாது. தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போல இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானது. 

ஏனெனில், இங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்</h2><p> </p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண மண்ணில் 1995ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477e41a3-6715-47e6-b7e4-42bafc3cd108/26-6a7fac68a5487.webp' /></p><p> </p><p>இலங்கையின் கிரிசாந்தி கொலை வழக்கில் சாட்சியாக இருக்கின்ற சோமரத்ன ராஜபக்ச இதனைத் தெரிவித்திருக்கிறார். இப்போதும் தெரிவித்து வருகிறார்.

சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைத் தோண்ட வேண்டும்.அப்போதுதான் உண்மை வெளியில் வரும்.</p><p>

அந்த உண்மைகளை மறைப்பதற்காக எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு&nbsp; தேவையற்ற விடயம் போன்ற கதைகளைச் சொல்ல அமைச்சர் முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.<br><br><b><i>You may Like This..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mTXdy12Pjmc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-15T00:05:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய வரலாறு காணாத கனமழை: இதுவரையில் 8 பேர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/record-breaking-heavy-rains-hit-japan-8-dead-1786749867"></link>
            <id>https://tamilwin.com/article/record-breaking-heavy-rains-hit-japan-8-dead-1786749867</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டோக்கியோவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை
நீடித்து வருகிறது.

வழக்கமாக ஒகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை விட 3 மடங்கு அதிகமான மழை
வெறும் அரை நாளில் பதிவாகியுள்ளது.</p><h2>வரலாறு காணாத கனமழை</h2><p>
</p><p>
ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி
பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலும்
துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cb1d6b-38f6-45f6-b2c1-7428dc119931/26-6a7fa49969e6e.webp' /></p><p>

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களைப்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

அதேநேரம் தொடருந்து மற்றும் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நரிட்டா
சர்வதேச விமான நிலையத்தில் 7,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இரவு முழுவதும் விமான
நிலையத்திலேயே முடங்கினர்.</p><p>

மேலும், 1,800-க்கும் மேற்பட்டோர் அரச அலுவலகக் கட்டிடங்களில்
தஞ்சமடைந்துள்ளனர்.
</p><p>
ஆபத்தின் அளவை உணர்த்தும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது
நிலை 4 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம்
தொடர்ந்து நிலவுவதாகப் பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T23:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743553"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743553</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

நியூயோர்க் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பேசிய ட்ரம்ப், </p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>“ஈரானை தோற்கடித்த பின்னர், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்காவின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46f87b06-8d87-44b4-96be-d4fb6934a229/26-6a7f8c13682ed.webp' /></p><p>

உலகின் முக்கியமான எரிசக்தி மற்றும் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது.
</p><p>
 ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br><br><h6><b>You may Like This..<br><br><br></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mTXdy12Pjmc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></h6></p>]]></content>
            <updated>2026-08-14T21:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீனிய வீடுகள் முற்றுகை: நெதன்யாகுவுக்கு அமெரிக்கா அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-homes-in-the-west-bank-netanyahu-1786741027"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-homes-in-the-west-bank-netanyahu-1786741027</id>
            <summary type="text">இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஸ்ரா எனும் பாலஸ்தீனிய
கிராமத்தில் பாலஸ்தீனியர்களின் வீடுகளை தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்
முற்றுகையிட்டுள்ள ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஸ்ரா எனும் பாலஸ்தீனிய
கிராமத்தில் பாலஸ்தீனியர்களின் வீடுகளை தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்
முற்றுகையிட்டுள்ள சம்பவத்திற்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கக்
கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்து கடந்த ஒரு வாரமாகப்
பாலஸ்தீனியக் குடும்பங்களைச் சிறைபிடித்துள்ள இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கத்
தூதுவர் மைக் ஹக்கபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவு</h2><p>
</p><p>
அமெரிக்க குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியரின் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதால்
அமெரிக்கா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79eedf0b-9427-45b2-ad4b-403e3676780f/26-6a7f826128f27.webp' /></p><p>

எனினும் வரவிருக்கும் தேர்தலில் தீவிர வலதுசாரி வாக்காளர்களின் ஆதரவு தேவை
என்பதால் நெதன்யாகு இதுவரை இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம்
காத்து வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T21:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/association-of-relatives-of-the-disappeared-1786735105"></link>
            <id>https://tamilwin.com/article/association-of-relatives-of-the-disappeared-1786735105</id>
            <summary type="text">எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு–கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.</p><h2>&nbsp;சர்வதேச மாநாடு</h2><p>

இந்த மாநாடு தொடர்பாகவும், மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டுக்கு ஆதரவு கோரும் வகையிலும் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe299b9-0e04-42cf-85bf-bc194f27af6c/26-6a7f8653212c8.webp' /></p><p>
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.</p><p>

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>

இதன்போது முக்கியமான சில விடயங்கள் மற்றும் மாநாடு தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டன.</p><p>

அதேபோன்று, மாநாடு தொடர்பிலான ஆலோசனைகளும் பெறப்பட்டதுடன், மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் கோரப்பட்டது.</p><h2>தாய்மார்களின் வலி</h2><p>
</p><p>
இந்த சர்வதேச மாநாடு, உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்துள்ள தாய்மார்களின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்களுக்கு நேர்ந்தது வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் திட்டமிட்ட இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/534dcd71-c5b1-441e-91d7-1f2158e2552f/26-6a7f8653eff98.webp' /></p><p>
</p><p>
இந்த மாநாட்டில் அனைத்துச் சமூகங்களும் பங்கேற்று, தாய்மார்களின் வலிகளை உணர்த்தும் மாநாடாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிய நிலையில், 600-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.
</p><p>
அவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்து, 'அழிக்கப்பட்ட சாட்சியங்கள்' என்ற புத்தகத்தையும், இதுவரை காலமும் போராட்டங்களின்போது கையளிக்கப்பட்ட அறிக்கைகளைப் புத்தக வடிவிலும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>தமிழ் தேசியம்</h2><p>
</p><p>
அதேபோன்று, மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதில் குழு கலந்துரையாடல்கள், சிறப்புரைகள், கண்காட்சிகள், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0534ab86-dd6b-48f8-b8f2-31753ab04464/26-6a7f8654c64ce.webp' /></p><p>
</p><p>
இதற்கு சர்வதேச ரீதியிலும், வடக்கு–கிழக்கு சார்ந்த ரீதியிலும், தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
எமக்கு நடந்த இந்த அநியாயத்துக்கும் அநீதிக்கும் நீதி பெற்றுக்கொடுப்பதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு எமக்காகக் குரல்கொடுத்து, எமக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-14T21:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு - மகிந்த - கோட்டாபயவிற்கு கிடைக்குமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447"></link>
            <id>https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447</id>
            <summary type="text">2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
</p><p>
அந்தக் காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
</p><p>
செஞ்சோலை தாக்குதல் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்கள் வெளியிட்ட அறிக்கைகளில், இலங்கை வான்படையின் தாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், செஞ்சோலை வளாகம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என இலங்கை அரசாங்கம் அப்போது விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், தாக்குதலுக்குப் பின்னர் வெளியான புகைப்படங்களில், சிறுவயதுடைய மாணவிகள் சீருடைகளுடன் காணப்பட்டமை தொடர்பிலும் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்நிலையில், சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதுபோன்ற சூழலில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடந்தகால குற்றங்கள் மற்றும் அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சமூகத்திலும் நிலவி வருகிறது.</p><p>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும் செயற்படுவதாகத் தெரிவித்து வருகிறார்.
</p><p>
இவ்வாறான அரசியல் மாற்றங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாகப் பேசுகிறது ‘செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6_lUEKeR67Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T20:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொலை! விசாரணையில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536"></link>
            <id>https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536</id>
            <summary type="text">திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையிலே, குறித்த முகாமில் 6 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, இந்த முகாமில் 600 இற்கும் மேற்பட்டோர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>இது தொடர்பான விசாரணைகள் திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் சில கடற்படை அதிகாரிகளிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>குறித்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NyBr6WkHzr0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764"></link>
            <id>https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764</id>
            <summary type="text">அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நிராகரித்துள்ளார்.
</p><p>
அவர், கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய கிழக்கு</h2><p>
</p><p>
அமெரிக்காவின் USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. </p><p>

இது, USS Abraham Lincoln கப்பலில் நீண்டகாலப் பணியமர்த்தலால் வீரர்களின் மனநலம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

USS George Washington கடந்த வாரம் வியட்நாமின் டா நாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67258ffb-817a-4853-bca8-9e534969983d/26-6a7f562edebf1.webp' /></p><p> </p><p>

அதனுடன் ஒரு க்ரூஸர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலும் இணைந்துள்ளன. 

இந்தக் கப்பல்கள் சிங்கப்பூர் நீரிணையை கடந்து சென்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, Washington தற்போது மலாக்கா நீரிணையில் இருந்ததாகவும், இந்தியப் பெருங்கடலை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

USS Abraham Lincoln-க்கு மாற்றாக George Washington மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படலாம் என முன்னதாக Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது.</p><h2>போர்ச் சூழ்நிலை</h2><p>
</p><p>

பொதுவாக அமெரிக்க கடற்படை வீரர்களின் பணியமர்த்தல் காலம் 6 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும். ஆனால் போர் சூழ்நிலைகளில் அது நீட்டிக்கப்படலாம்.
</p><p>
USS Abraham Lincoln இந்த வாரத்துடன் 260 நாட்களுக்கும் மேலாக கடலில் உள்ளது.

 இது நவீன காலத்தில் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பணியமர்த்தல்களில் ஒன்றாகும்.</p><p>

இந்தக் கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், சிலர் கப்பலில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c289fdc-7bfe-4b92-8fc9-56650105dfdc/26-6a7f56300e8d6.webp' /></p><p>
</p><p>Lincoln கடந்த 2025 நவம்பர் 21ஆம் திகதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. 

2026 ஜனவரியில் மத்திய கிழக்கை சென்றடைந்தது. பின்னர் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.
</p><p>
போர்ச் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய விநியோக மையங்கள் பாதிக்கப்பட்டதால், கப்பலில் உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.</p><h2>பென்டகனிடம் பொறுப்புக்கூறல்</h2><p>
</p><p>
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், USS Lincoln கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகளை நிராகரித்துள்ளார்.</p><p>

நீண்டகாலப் பணியமர்த்தலிலும், குறைவான துறைமுகப் பயணங்களுடனும் கடலில் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4590c69a-de95-4a5e-b70c-eb2b9459866e/26-6a7f5630b5712.webp' /></p><p>
</p><p>
ஆனால் Navy Times மற்றும் Stars and Stripes உள்ளிட்ட இராணுவ செய்தி நிறுவனங்கள், கப்பலில் தற்கொலை முயற்சிகள் மற்றும் வீரர்களின் மனஉறுதி குறைந்து வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த விவகாரம் தொடர்பாக பல ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பென்டகனிடம் பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளனர்.
</p><p>
கனெக்டிகட் மாநில செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால், USS Lincoln-ன் நீண்டகாலப் பணியமர்த்தல் குறித்து கடற்படை தலைமையிடம் பல கேள்விகளுக்கு பதில் கோரியுள்ளார்.
</p><p>
அரிசோனா செனட்டரும் முன்னாள் மரைன் வீரருமான ரூபன் கலேகோ, கப்பலில் வீரர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;டொனால்ட் ட்ரம்ப்</h2><p>
</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9167c0b9-f39c-4fb8-811a-1450c61463bc/26-6a7f563168d27.webp' /></p><p>

ஈரானுடனான மோதல் சமீப வாரங்களில் ஓரளவு தணிந்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க கடற்படை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தப் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தெளிவான திட்டத்தை வெளியிடவில்லை. 

அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், அமெரிக்கா இந்த முற்றுகையை “காலவரையின்றி” தொடர முடியும் எனக் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T18:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் தற்போது தயாராகியுள்ளது.</p><p> 

இது தொடர்பில் அறிவிக்கும் கடிதம், இன்று (14.08.2026) குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு தனித் தனியாகப் பெயரிடப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு கையொழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில் பிரதிப் பணிப்பாளரின் இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளது.</p><h2>அறிவுறுத்தல்</h2><p> </p><p>சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faeb2ff6-5ecd-4f55-a0a1-716994fba032/26-6a7f5d7a40d5e.webp' /></p><p> </p><p>

'சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp; “கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி சுகாதார பணி உதவியாளராக எமது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தீர்கள். </p><p>

நீங்கள் கடமை பொறுப்பேற்ற அன்றைய தினத்திலேயே சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.</p><h2>ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p> </p><p>

எனினும், சுற்றுநிரூபத்தினை பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5cc10d-d609-4591-8558-2c3df6daaad8/26-6a7f5d7ae7888.webp' /></p><p> 

நீங்கள் அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் உட்பட்ட ஊழியர்கள் என்பது நினைவூட்டப்படுகின்றது. </p><p>

உடன் செயற்படும் வண்ணம் சுகாதார பணி உதவியாளர்களுக்குரிய சீருடை தொடர்பான சுற்றறிக்கையின் வழிகாட்டல்களை பின்பற்றி கடமைக்கு சமூகளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள். 

தவறும் பட்டசத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969"></link>
            <id>https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
 டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c589e4c9-cae1-48f4-b84b-680a083cb6f2/26-6a7f5f6277908.webp' /></p><p>
</p><p>
சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
</p><p>
தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T18:33:10+00:00</updated>
        </entry>
    </feed>
