<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-29T03:27:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்! மற்றுமொரு பொலிஸ் அதிகாரி உயிர் மாய்ப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1785293966"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1785293966</id>
            <summary type="text">பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;பாணந்துறை, வலான ஊழல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>உயிர் மாய்ப்பு..</h2><p>இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a497ef73-2800-4b15-bb0c-ee8b307eae2f/26-6a6972136d997.webp' /></p><p>இதனையடுத்து,&nbsp; காயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துரை தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், அருக்கு வழங்கப்பட்டிருந்த டி 56 ரக துப்பாக்கியை வைத்த அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb610af-5ba3-4f70-803d-8ee460c1893d/26-6a69721472690.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T03:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலகு தவணையில் வீடு கட்ட காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! தனியார் நிறுவன பணிப்பாளர் ஒருவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-fraud-by-promising-to-build-house-1785292592"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-fraud-by-promising-to-build-house-1785292592</id>
            <summary type="text">இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பல்வேறு நபர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பல்வேறு நபர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய, தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
குறித்த சந்தேக நபர், இலகு தவணைக்கொடுப்பனவு முறையில் வீடுகளையும் காணிகளையும் வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் வாக்குறுதியளித்து, பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பாரியளவிலான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள் </h2><p>முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் சந்தேக நபர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ஆரம்பத்தில் வீடு மற்றும் காணியின் மொத்த மதிப்பில் 60 சதவீதத்தை முன்பணமாகப் பெற்றுள்ளார்.</p><p>

பணத்தைப் பெற்ற பிறகு, வாக்குறுதியளித்தபடி எந்த வீடும் கட்டப்படவில்லை. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் பணத்தைத் திரும்பக் கோரிய வாடிக்கையாளர்களுக்கு சந்தேக நபரால் வழங்கப்பட்ட காசோலைகளும் வங்கியில் போதிய பணமின்றி நிராகரிக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c8f54d-9772-40c0-a5bc-9a9417ece66a/26-6a696c40a68d7.webp' /></p><p>
</p><p>
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 புகார்களைப் பெற்றுள்ளது. </p><p>மேலும், இந்த மோசடியில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்ட மற்ற நபர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மிரிஹானா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நேற்று (28) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T02:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நபர் ஒருவர் கொடூரமாக கொலை - சகோதரியின் மகனின் வெறிச்செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நபர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் கம்பளை, கீரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><h2><b>

குடும்ப வன்முறை</b></h2><p>காயம் அடைந்த நபர் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாகக் கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13829db9-86d6-435d-9658-c6dbc49399da/26-6a6964f7a3745.webp' /></p><p>இந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, சகோதரியின் மகனால் கத்தியால் தாக்கி இந்தச் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T02:34:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்குகளைத் தாமதமின்றித் தீர்க்கவே நீதியரசர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு : நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-retirement-age-of-judges-1785289825"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-retirement-age-of-judges-1785289825</id>
            <summary type="text">தனிநபர் ஒருவரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசமைப்பு மற்றும் நீதித்துறை
அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிக்கவில்லை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனிநபர் ஒருவரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசமைப்பு மற்றும் நீதித்துறை
அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிக்கவில்லை
என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிகரிக்க வேண்டிய தேவை&nbsp;</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகாரத்தை மாகாண மட்டத்தில்
நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4dff80c-7020-4431-a7e9-4876f588edde/26-6a695c63331c5.webp' /></p><p>
</p><p>
குற்றவியல் தொடர்பில் முதல்நிலை நீதித்துறை அதிகாரம் கொண்ட மாகாண மேல்
நீதிமன்றங்கள் மற்றும் சிவில் மேன்முறையீட்டு அதிகாரம் கொண்ட சிவில்
மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அதிகளவிலான வழக்குகளைத்
தாமதமின்றித் தீர்ப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும்
அதிகரிக்க வேண்டியுள்ளது.
</p><p>
நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மாகாண மட்டத்தில்
மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற காரணங்களால்,
அந்நீதிமன்றங்களுக்கு அனுபவமிக்க மற்றும் புலமைமிக்க நீதியரசர்களின் சேவையைப்
பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நீதியரசர்களின் தற்போதைய சட்ட ரீதியான
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமையவே
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T01:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த செம்மணி..!அதிர்ச்சியளிக்கும் நீதியமைச்சரின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-srilanka-harshana-nanayakara-1785277529"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-srilanka-harshana-nanayakara-1785277529</id>
            <summary type="text">அமைச்சர் ஹர்சன நாணயக்கார வெளியிட்ட தகவல்களின்படி, செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பல கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமைச்சர் ஹர்சன நாணயக்கார வெளியிட்ட தகவல்களின்படி, செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரம் பல காலங்களாக பல்வேறு தரப்பினரின் (விடுதலைப் புலிகள், இந்திய அமைதிப்படை, துணை இராணுவக் குழுக்கள் மற்றும் இலங்கை இராணுவம்) கட்டுப்பாட்டில் இருந்ததால், குற்றவாளிகளைக் கண்டறிவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மரணங்களுக்கான காரணங்களை உறுதிப்படுத்த தடையவியல் மற்றும் DNA பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
 மரணங்களுக்கான காரணங்களை (இயற்கை மரணமா அல்லது வன்முறையா) தடயவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தும் பணி நடைபெறுகின்றது.</p><p> 

குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலைக்கு விசாரணை இன்னும் செல்லவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>&nbsp;இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது #NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LNAbK0VBHs4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தைச் சிறப்பித்த பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-graced-the-addi-vel-procession-in-colombo-1785284355"></link>
            <id>https://tamilwin.com/article/harini-graced-the-addi-vel-procession-in-colombo-1785284355</id>
            <summary type="text">கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று(28) செவ்வாய்க்கிழமை மாலையில் அலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று(28) செவ்வாய்க்கிழமை மாலையில் அலரி
மாளிகைக்கு முன்பாக வருகை தந்தது.</p><p> இதன்போது வேல் ஊர்வலத்துக்குப் பிரதமர்
அலுவலகத்தின் சார்பாகப் பூஜை வழிபாடுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட
இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அலரி மாளிகையிலிருந்து பாரம்பரிய மேளவாத்தியங்கள் முழங்கப் பிரதமர் வேல்
இரதத்தின் முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p></p><h2>&nbsp;ஆடி வேல் ஊர்வலம்</h2><p> </p><p>அங்கு வேல் இரதத்தில்
எழுந்தருளியிருந்த முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்குப் பிரதமர்
பழத்தட்டைப் பூஜையாகச் சமர்ப்பித்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்டுத் தெய்வ
ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, வேல் ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பிரதமரின் இந்தப்
பங்கேற்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை
போர்த்தித் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3390afa1-b9ed-4dd2-9f09-df438d20466d/26-6a6948ed533f7.webp' /></p><p>
</p><p>
கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலினால் வருடாந்தம் நடத்தப்படும் 152 ஆவது வேல் ஊர்வலமே இம்முறை
நடைபெறுகின்றது.</p><p> இந்த வருடாந்த ஆடி வேல் மகோற்சவமும் இரதோற்சவ விழாவும் 1874
ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் முடிவால் தலைகீழாக போகும் இலங்கையின் தலையெழுத்து! சிறைக்குச் செல்லப்போகும் பலர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-move-may-lead-to-major-prison-crackdown-1785283107"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-move-may-lead-to-major-prison-crackdown-1785283107</id>
            <summary type="text">தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து ஹர்ஷண நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாயப்புகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

நீதி அரசர்களின் ஓய்வூதிய விவகாரம் குறித்து நாமல் ராஜபக்ச கொழும்பில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில், </p><p> “ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதே அரசின் நோக்கமாகும். அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக நீதி அரசர்களின் பதவி காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்கு கிடையாது“ என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இது இவ்வாறிருக்க, அநுரவிற்கு வசதிகளை செய்து கொடுக்கச் சென்று எங்களுக்கு அழுது புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமல் வீரவன்சவின் சகோதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>
இதனையடுத்து இனிவரும் காலங்களில் நாட்டிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் எல்லாம் நீண்டகால குத்தகைக்கு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>

நாட்டில் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி..&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9BbR3RgpR6g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வூதிய வயதை மேலும் 5 ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் - சரத் பொன்சேகா வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chief-justice-retirement-age-issue-1785283023"></link>
            <id>https://tamilwin.com/article/chief-justice-retirement-age-issue-1785283023</id>
            <summary type="text">ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின்
மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள்
இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின்
மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள்
இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஓய்வூதிய வயது</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"பிரதம நீதியரசரைத் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க வேண்டும் என்றும்,
சட்டத்தரணிகளின் சேவைக் காலத்தை நீடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறும்
கருத்துக்களுக்கு நான் முழுமையாக உடன்படுகின்றேன்.</p><p>

நாட்டின் சாதாரண இராணுவ வீரர்கள் 20 ஆண்டுகள் சேவைக் காலத்துக்குப் பின்னர்
(சுமார் 45 வயதில்) ஓய்வுபெற வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d65dd6-91be-4c86-915c-926eafa19363/26-6a694393d21c6.webp' /></p><p> </p><p>அந்த வயதில்தான் அவர்களின்
பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதுடன், புதிதாக
வேறு ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வதும் அவர்களுக்குக் கடினமாகவுள்ளது. </p><p>அதேபோல,
இராணுவ அதிகாரிகள் 50 அல்லது 55 வயதிலும், அரச ஊழியர்கள் 60 வயதில்
ஓய்வுபெறும்போதும் அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றனர்.</p><p></p><h2>பழைய கலாசாரம்</h2><p>
</p><p>
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள்
முன்னோக்கி நகர்த்தினால், மக்களின் மன அழுத்தம் குறையும். மனிதர்களால்
தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற முடியும்.</p><p> அமெரிக்கா போன்ற நாடுகளில் 70 வயது
வரை கூட இராணுவத் தளபதிகளாகப் பணியாற்றுகின்றனர். சில நாடுகளில் நீதிபதிகள் 70
வயதிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9b9098-cfe7-4f82-b097-c5babb9779cc/26-6a69439482a11.webp' /></p><p> அப்படியிருக்கையில் நமது நாட்டு மக்களுக்கு
மட்டும் ஏன் இதில் தயக்கம் உள்ளது?

நான் இராணுவப் பணியிலிருந்து விலகி 20 ஆண்டுகள் ஆனாலும், எனது மூளை மற்றும்
உடல் உறுப்புகள் இன்னமும் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன.</p><p> இப்போது மீண்டும்
இராணுவப் பொறுப்பை வழங்கினாலும் அதைத் திறம்பட வழிநடத்த முடியும்.
இருப்பினும், நான் அதனை மீண்டும் பெறப்போவதில்லை. பழைய கலாசாரத்தில் சுகபோகமாக
வாழ்ந்தவர்களே இவ்வாறான சரியான திட்டங்களை விரும்புவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை கலாச்சாரத் தொடர்புடையவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - கந்திசாமி பிரபு எம்.பி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-prabhu-remove-those-linked-to-drug-culture-1785281646"></link>
            <id>https://tamilwin.com/article/mp-prabhu-remove-those-linked-to-drug-culture-1785281646</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கந்திசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(28.07.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்ற சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, வீடு அமைப்பதற்கென
நிதிகளை நாங்கள் பங்களித்துக் கொண்டு வருகின்றோம். </p><p>

அதேவேளை, வீதி வளர்ச்சி,
பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஏற்ற விதமான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான
மேம்பாடுகள், விவசாயம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கிராமங்களின் ஊடாக
வளர்ச்சி செய்யக்கூடிய மக்கள் சக்தித் திட்டங்கள், கடற்றொழிலாளர்களுக்கான வளர்ச்சித்
திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் என அனைத்து
விடயங்களுக்கும் தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதிகளை வழங்கி
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de2378c3-d7d8-4313-99c3-475e938d21ad/26-6a693d1274fa6.webp' /></p><p>
</p><p>
இதன் ஊடாக நமது பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினரும் தங்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள்
நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம். </p><p>

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
</p><p>
மக்கள்
அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக
எங்களுக்கு ஆணைதந்திருந்தார்கள்.</p><p> ஆனால், ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது,
இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக
முன்னெடுத்து வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் தேர்த் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-vadamaratchi-vinayakar-chariot-festival-1785280264"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-vadamaratchi-vinayakar-chariot-festival-1785280264</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்
திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.குறித்தத் திருவிழாவானது நேற்றைய தினம்(28.07.2026) வெரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்
திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.</p><p>குறித்தத் திருவிழாவானது நேற்றைய தினம்(28.07.2026) வெரு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2>தேர் திருவிழா</h2><p>அதிகாலை முதல் சிவாச்சாரியார்கள் ஓமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை
தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f6b861d-21b6-4d05-904d-7f272561a097/26-6a6937d934492.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து மூத்த விநாயகர்
தேரில் வலம் வந்தார்.

இதில் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து
கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.</p><h2>யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரி பூவற்கரை பிள்ளையார் தேர்</h2><p>

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய வருடாந்த பெருந்
திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவாகிய தேர் திருவிழா நேற்று(28.07.2026) சிறப்பாக
இடம்பெற்றுள்ளது.</p><p>அதி காலை முதல் சிவ அமிர்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஓமம்
வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள்
இடம்பெற்றுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dfbe9b2-fa33-4a3d-924a-e65cda1ad818/26-6a6937d8851ca.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து லட்சுமி, முருகப்பெருமான் முன்னே செல்ல
பூவக்கரை பிள்ளையார் பின்னாலே பெரும் தேரில் வலம் வந்தார்.</p><p>

இதில் வதிரி பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு
தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T23:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampara-district-coordination-committee-meeting-1785268334"></link>
            <id>https://tamilwin.com/article/ampara-district-coordination-committee-meeting-1785268334</id>
            <summary type="text">அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம்(28) நடைப்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு சலசலப்பான நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>நேற்றைய தினம்(28) நடைப்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு சலசலப்பான நிலை தோன்றியுள்ளது.</p><p></p><h2>திடீரென உருவான வாக்குவாதம்</h2><p>

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுக்கிடையில்
முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த
பியதிஸ்ஸவும் பங்கெடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c8be2c-aabc-4dbf-9602-42c166136bbd/26-6a690dae4550e.webp' /></p><p>கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நாமல் ஓயா தலைவர் அனில்
சுசந்த திடீரென எழுந்து முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது குற்றச்சாட்டுகளை
முன்வைத்துள்ளார்.</p><p>

இதனை அதாவுல்லாவின் ஆதரவாளர்களும் தரப்பினரும் கடுமையாக எதிர்த்ததை அடுத்து,
கூட்டத்தில் பெரும் குழப்பமும் காரசாரமான தர்க்கமும் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஆளுநரின் தலையீடு</h2><p>
</p><p>இதனை அடுத்து&nbsp;கோபமடைந்த கிழக்கு மாகாண
ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி,&nbsp;</p><p> "இங்கே யாரும் வன்முறையில் ஈடுபட முயல வேண்டாம். நாம் அனைவரும் இதனை ஒரு கண்ணியமான கூட்டமாக நடத்துவதற்கே
ஒத்துழைக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33ef1e0-daef-4da7-8dc2-f51a807a9899/26-6a690e9958b4c.webp' /></p><p>ஆளுநரின் இந்தத் தீர்க்கமான தலையீட்டையும் எச்சரிக்கையையும் தொடர்ந்து,
மண்டபத்தில் நிலவிய சலசலப்பு அடங்கி அமைதி திரும்பியுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் ஏனைய நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்ந்தும் நடைபெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வரி பரிசோதகர் பிணையில் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magistrate-orders-tax-inspector-to-go-4-bail-1785270414"></link>
            <id>https://tamilwin.com/article/magistrate-orders-tax-inspector-to-go-4-bail-1785270414</id>
            <summary type="text">வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்&amp;nbsp;வரி பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்&nbsp;வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்(28.07.2026) இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>இவர் கடந்த மாதம் சபை உறுப்பினர்கள் அமர்விற்காக சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த
போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி
உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில்
நடந்து கொண்டுள்ளார்.</p><p>இதனையடுத்து சபை உறுப்பினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்றைய தினம் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1f7507-0f80-487a-baf9-7c4bf54b39ac/26-6a692a72645a6.webp' /></p><p>

இந்த நிலையிலேயே நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெருமதியான 4 சரீர பிணையில்
செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>
இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபை
உத்தியோகாத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும்,
இதனான் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 கோடி அபராதம் - 5 வருடங்கள் ஜெயில்..! முகப்புத்தகத்ததால் அழிந்த வாழ்க்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/subramaniyan-dog-social-controversy-anojan-arrest-1785281040"></link>
            <id>https://tamilwin.com/article/subramaniyan-dog-social-controversy-anojan-arrest-1785281040</id>
            <summary type="text">இலங்கையில் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் மத ரீதியான மோதல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
</p><p>
இந்த விவகாரம் மத ரீதியான மோதல்களாக மாறியபோது, அனோஜன் தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்தார்.</p><p>

சவுதி அரேபியாவின் கடுமையான இணையவழி குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ், மதத்தைப் புண்படுத்தியதாகக் கூறி அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் (சுமார் 27 கோடி இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்தந்த நாட்டுச் சட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். </p><p>

தற்போது இலங்கை அரசாங்கம், தூதரகம் மூலம் அனோஜனின் தண்டனைக் குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KFyBlufwECs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி விட்டு தப்பிச் சென்றவர்! தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-hit-parked-vehicles-in-lindulai-and-fled-1785279517"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-hit-parked-vehicles-in-lindulai-and-fled-1785279517</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம், லிந்துலை பகுதியில் நேற்று (28) அதிகாலை இடம்பெற்ற வாகன
விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம், லிந்துலை பகுதியில் நேற்று (28) அதிகாலை இடம்பெற்ற வாகன
விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், லிந்துலை வீதியோரத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது போல்ரோ ரக வாகனம் ஒன்று மோதியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>தீவிர விசாரணை</h2><p>
எனினும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்தில் நிறுத்தப்படாமல்
அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் சிறிய ரக கார் ஒன்றும், சிறிய ரக வான் ஒன்றும், இரண்டு
மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449b5df6-61a6-42bc-ad6e-801abe12dd14/26-6a6937cf099c9.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் தகவல்களை திரட்டும் நோக்கில், குறித்த பகுதியில்
பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களின் காணொளிகளை ஆய்வு செய்து, விபத்தை
ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் வாகனத்தை அடையாளம் காணும்
நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு
வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T23:14:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;மெலானியா ட்ரம்ப்பை எங்கே கொல்வது&quot; ஈரானின் அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/where-kill-melania-trump-video-threat-iran-warning-1785262248"></link>
            <id>https://tamilwin.com/article/where-kill-melania-trump-video-threat-iran-warning-1785262248</id>
            <summary type="text">ஈரானில் வெளியான காணொளியில் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மகன் பாரன் ட்ரம்பை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

&quot;Where ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் வெளியான காணொளியில் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மகன் பாரன் ட்ரம்பை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
"Where to Kill Melania" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் காணொளியில், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் நியூயோர்க் நகரில் பயணிக்கும் காட்சிகள், அவர் வழக்கமாகச் செல்லும் இடங்கள் மற்றும் ஷாப்பிங் செய்யும் ஆடம்பர கடைகள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>எங்களுக்காக காத்திரு</h2><p>
</p><p>
அந்தக் காணொளியில், மெலனியா ட்ரம்ப் வாங்கும் ஆடைகளில் நரம்பு நச்சுப் பொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்ற வகையிலான குறிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Where and how is Melania Trump reachable?<br><br>The information used in this video, regarding Melania&#39;s movements and the types of operations, comes from several anonymous security networks. <a href="https://t.co/AOM7S2gx4v">pic.twitter.com/AOM7S2gx4v</a></p>&mdash; Tasnim News Agency (@Tasnimnews_EN) <a href="https://x.com/Tasnimnews_EN/status/2082053796633497972?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
காணொளியின் இறுதியில், "இது ஆரம்பம் மட்டுமே. பாரன் ட்ரம்ப், எங்களுக்காக காத்திரு" என்ற எச்சரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், மெலனியா ட்ரம்ப் மற்றும் பாரன் ட்ரம்புக்கு அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) 24 மணி நேர பாதுகாப்பு வழங்கி வருகிறது.</p><p> 

மேலும், வெள்ளை மாளிகை, நியூயோர்க் ட்ரம்ப் டவர், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப் மற்றும் புளோரிடாவின் மார்அ-லாகோ உள்ளிட்ட ட்ரம்ப் குடும்பத்தின் அனைத்து முக்கிய சொத்துகளும் கடுமையான பாதுகாப்பின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;எச்சரிக்கை வாசகங்கள்</h2><p>

இதனுடன், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளிலும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து பழிவாங்கும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c3c94e9-78db-4b8c-8ba8-768f46686805/26-6a692572dc025.webp' /></p><p>
இந்நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், தாம் இன்னும் ஈரானின் முக்கிய இலக்காக இருப்பதாக நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தமக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்கூட்டியே உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் விவகாரத்தால் தூக்கத்தை இழந்த மகிந்த குடும்பம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121"></link>
            <id>https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
</p><p>
இந்தநிலையில், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் இன்னும் கோட்டாபய ராஜபக்ச நியமித்த நீதிபதிகள் இருப்பதால், வயது நீட்டிப்பு மூலம் அரசியல் பழிவாங்கல் நடக்கும் என்ற வாதத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் தெரிவித்தார்.</p><p>


லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளில் 7 பேரை கோட்டாபய ராஜபக்சவும், 5 பேரை அநுர குமார திஸாநாயக்கவும் நியமித்துள்ளனர்.
</p><p>
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை நாமல் ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சார்ந்தவை என்பதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசப்படுகிறது.</p><p>

இலங்கையில் 11 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறையின் பெரும் சவாலாக உள்ளது. 

ஓய்வு வயதை நீட்டிப்பதால் மட்டும் இந்தச் சிக்கல் தீர்ந்துவிடாது; நிர்வாக மட்டத்திலிருந்தே நீதித்துறையைச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/g8EqX1Vihpc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:46:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 ஆண்டு கால சட்டப் போராட்டத்தை முடிக்க ஜோன்சன் நிறுவனம் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnson-johnson-agrees-to-end-10-year-legal-battle-1785250671"></link>
            <id>https://tamilwin.com/article/johnson-johnson-agrees-to-end-10-year-legal-battle-1785250671</id>
            <summary type="text">ஜோன்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட டால்க் தயாரிப்புகளைப்
பயன்படுத்தியதால் சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட
பல்லாயிரக்கணக்கான வழக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோன்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட டால்க் தயாரிப்புகளைப்
பயன்படுத்தியதால் சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட
பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிக்க, அந்த நிறுவனம் 5.5 பில்லியன் டொலர்
(சுமார் ₹46,000 கோடிக்கு மேல்) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த சட்டப் போராட்டம்
முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>இழப்பீட்டுத் தொகை&nbsp;</h2><p>
</p><p>
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில மற்றும் கூட்டாட்சி நீதிமன்றங்களில்
நிலுவையில் உள்ள சுமார் 76,000 வழக்குகள் தீர்த்து வைக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124bc73d-14f3-4a0c-b767-3f8a5427f955/26-6a692472b980f.webp' /></p><p>
</p><p>
இதில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து,
இழப்பீட்டுத் தொகை 7 பில்லியன் டொலர் அல்லது அதற்கு மேலாகக் கூட உயரக்கூடும்
என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முதற்கட்டமாக, J&amp;J நிறுவனம் 2027-இல் $3 பில்லியன் தொகையையும், மீதியை
2028-இல் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியாவதற்கு 95%
மனுதாரர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.</p><p></p><h2>சோள மாவு அடிப்படையிலான பவுடர்</h2><p>

அதேவேளையில், தங்களது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், புற்றுநோயை
உண்டாக்கவில்லை என்றும் J&amp;J நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bacfad0-62c7-42ec-a771-c14f1b4ad8a6/26-6a69247216388.webp' /></p><p>வழக்கு விசாரணைகளில் தங்களுக்கு வெற்றி பெற நம்பிக்கை இருந்தபோதிலும்,
நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய மருந்துகள்
மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த
ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக நிறுவனத்தின் சட்டப் பிரிவு துணைத் தலைவர்
எரிக் ஹாஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஜோன்சன் &amp; ஜோன்சன் நிறுவனம் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் டால்க்
அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்திவிட்டு, சோள மாவு அடிப்படையிலான
பவுடர்களை விற்பனை செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக சிக்கிய சுரேஷ் சலே..! இந்தியாவில் செய்த இரகசிய மோசடிகள் அம்பலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-linked-to-alleged-india-scam-claims-1785265667"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-linked-to-alleged-india-scam-claims-1785265667</id>
            <summary type="text">சுரேஷ் சாலேவை விசாரிக்கின்ற குற்றத்தடுப்புப் பிரிவினுடைய பணிப்பாளர் சானி அபயசேகரவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கோரி நீதி மன்றத்திலே மனு ஒன்று த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சாலேவை விசாரிக்கின்ற குற்றத்தடுப்புப் பிரிவினுடைய பணிப்பாளர் சானி அபயசேகரவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கோரி நீதி மன்றத்திலே மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் முதன் முறையாக அடிப்படை ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தது மட்டுமல்லாமல் சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளை திணரடித்த சம்பவம் நீதிமன்றத்திலே இடம் பெற்றிருந்தது.</p><p>

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் நீதிமன்றத்திலே சுரேஷ் சாலேவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்த வேளை, சுரேஷ் சாலே 64 பக்கங்கள் இருக்கக்கூடிய கடவுச்சீட்டில் பல பக்கங்களை கிழித்திருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
</p><p>
அத்துடன் ”மனுதாரர் தரப்பு தூய்மையான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை. மிக மோசமாக அணுகி இருக்கிறார்கள். இதில் பல பொய்கள் இருக்கின்றன. இதனை நீதிமன்றம் ஒரு போதும் கருத்தில் எடுக்கக் கூடாது. இவர்களுடைய அனைத்து வாதத்திறமைகளும் போலிகளால் நிரம்பப்பட்டவை” என அவர் நீதிமன்றத்தில் கடுமையான வாதத்தை முன்வைத்திருந்தார்.
</p><p>
மேலும் ஜூன் 11ஆம் திகதி குறித்த வழக்கானது நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 5 அறிக்கைகள் நீதிமன்ற கவனத்திற்கு எடுத்த வரப்பட்டதாகவும் சுதர்சனி ஹேரத் கூறியுள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்த மேலும் பல ஆதாரபூர்வமான வாதங்களை ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvS71qDw2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 5 மாதக் குழந்தைக்கு நிகழ்ந்த அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-month-baby-dies-swing-pole-breaks-and-falls-1785267269"></link>
            <id>https://tamilwin.com/article/5-month-baby-dies-swing-pole-breaks-and-falls-1785267269</id>
            <summary type="text">வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான்
கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான்
கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. </p><p>குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த போது
எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த குழந்தை</h2><p>இதில் படுகாயமடைந்த ஐந்து
மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f358d9-b8f4-4f7f-bcc6-f792c8ebdb0d/26-6a6949aa7ed3d.webp' /></p><p>உயிரிழந்த குழந்தையின்
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:32:26+00:00</updated>
        </entry>
    </feed>
