<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T05:23:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும்! ஆளுநர் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-development-projects-completed-due-time-1788324736"></link>
            <id>https://tamilwin.com/article/northern-development-projects-completed-due-time-1788324736</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின்
முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள்
நிறைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின்
முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள்
நிறைவு செய்வதுடன் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட
நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என்று வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின்
செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள்
ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(01.09.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள&nbsp;</h2><p>
இந்தக் கலந்துரையாடலில் மாகாண சபையால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட
வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையைத் தயாரித்தல், இவ்வாண்டில்
நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்
மற்றும் அவற்றை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள்
தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d7de8a2-e67f-4b50-a6c1-810408e3f87f/26-6a97b259e4089.webp' /></p><p>மேலும், நிரல் அமைச்சுக்களினால் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் மேலதிக நிதியை
உரிய நோக்கத்துக்காகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p> திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்
காணப்படும் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட மனிதவள மற்றும் நடைமுறைச்
சவால்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள
வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><h2>கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்</h2><p>இதன்போது, பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் கீழ் பணியாற்றும் கள
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலையங்கள் மற்றும் அவர்களின் பணிகளை
மேலும் ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d725311-452c-45f8-9344-0eb96b164bb9/26-6a97b25acf235.webp' /></p><p> </p><p>கள மட்டத்தில்
அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களின் கண்காணிப்பு
மற்றும் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகள் குறித்து
கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p>இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப்
பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்தின் ஊடாக தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசு முயற்சி! எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-attempts-the-22nd-amendment-1788324914"></link>
            <id>https://tamilwin.com/article/government-attempts-the-22nd-amendment-1788324914</id>
            <summary type="text">ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு, தற்போது
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிக்கவும்,
நீதிமன்றத்தின் சுயா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு, தற்போது
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிக்கவும்,
நீதிமன்றத்தின் சுயாதீனத்துக் குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் அரசு
முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைச் சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட
மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது, நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>22ஆவது திருத்த&nbsp;நடைமுறை</h2><p>
</p><p>
"உலகளாவிய நடைமுறைகளை ஆராயும்போது, 22ஆவது திருத்தமானது அனைத்து வகையிலும்
நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழிப்பதாக அமைகின்றது.</p><p> பொதுநலவாய நாடுகள்
சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இதனால் நீதித்துறைக்குப் பாரிய
பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e0b21b-18f7-494e-a0bb-4a9f22402201/26-6a97ae1d8ac4c.webp' /></p><p>

தற்போதைய அரசு தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாட்டில் ஒற்றைக் கட்சி
ஆட்சியை நிறுவுவதற்கும், இளைஞர் கழகத் தேர்தல்கள் மற்றும் சிவில் பாதுகாப்புச்
குழு நியமனங்கள் முதற்கொண்டு ஜனநாயகத்தை முடக்குவதற்கும் இந்தத்
திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு
இடையேயான சமநிலையைப் பாதிக்கச் செய்யும் இந்த 22ஆவது திருத்தம்
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம்
நிறைவேற்றப்படாமல், கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.</p><p>

நாட்டில் தொழில் துறைகள் வீழ்ச்சியடைதல், வேலையின்மை அதிகரிப்பு போன்ற பல
பாரிய பிரச்சினைகள் நிலவும்போது, அரசிடம் உள்ள ஒரே தேசிய வேலைத்திட்டம்
நகைச்சுவையான தீர்வுகளை வழங்குவது மட்டுமே.

அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் அரசமைப்புத் திருத்தமே தற்போது அவசியமானது என்றார்.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u4Zq0eyUb5E" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-02T05:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்.ஜி.ஓ. சட்டமூலம் - 22ஆவது திருத்தம் - ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ngo-bill-22nd-amendment-clothing-rights-discussed-1788325215"></link>
            <id>https://tamilwin.com/article/ngo-bill-22nd-amendment-clothing-rights-discussed-1788325215</id>
            <summary type="text">அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாசார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான
விடயங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாசார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான
விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கல்முனை ஆசாத் பிளாசாவில்
இடம்பெற்றது.</p><p>

வைத்தியர் சட்டத்தரணி வை.எல்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற
இக்கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக
ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும்
முன்வைத்தனர்.
</p><p>
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம், 22ஆவது
அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் உதவி சுகாதார ஊழியர்களின் கலாச்சார
ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டமை ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில்
இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது முஸ்லிம் சமூகம் பகடைக்காயாகப்
பயன்படுத்தப்பட்டு, அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடுமையான பாதிப்புகள்
ஏற்படுத்தப்பட்டதைப் போன்று, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இப்புதிய
சட்டமூலங்கள் மற்றும் சம்பவங்கள் ஊடாகவும் எதிர்காலத்தில் முஸ்லிம்
சமூகத்திற்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா
என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட்டது.
</p><p>
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் என்.ஜி.ஓ. சட்டமூலத்தின் சாதக, பாதக
அம்சங்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. </p><p>குறிப்பாக,
முஸ்லிம்களின் சமய மற்றும் கலாச்சார நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட சமூக
அமைப்புகளின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இச்சட்ட ஏற்பாடுகள் எத்தகைய
தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p>

அதேவேளை, முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தமது சமய, கலாச்சார
அடையாளங்களின் அடிப்படையில் ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு
நிரந்தரமான சட்ட ரீதியான தீர்வு அவசியம் என்றும் கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இக்கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள்
விரிவாக முன்வைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும்
நலன்களையும் பாதுகாப்பதற்கு ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க சமூகத் தலைமைகள்
உருவாக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களில்
சமூகத்திற்குத் தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது</p>]]></content>
            <updated>2026-09-02T05:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை எவரும் ஏற்கமாட்டர்! ரஜீவ் அமரசூரிய தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-rajiv-amarasuriya-s-statement-1788322768"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-rajiv-amarasuriya-s-statement-1788322768</id>
            <summary type="text">&amp;nbsp;நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்கள் எவரும்
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என்று
இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்கள் எவரும்
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என்று
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின்
தீர்மானத்துக்குத் தங்களது சங்கம் ஆரம்பத்தில் இருந்தே கொள்கை ரீதியான
எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><h2>22ஆவது திருத்த சட்டமூலத்தின் உள்ளடக்கம்&nbsp;</h2><p>
</p><p>
"அரசமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலத்தின் உள்ளடக்கம் மக்களின்
இறையாட்சியுடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதால், இது குறித்துத் தீர்மானம்
எடுக்கும் முழு உரிமை மக்களுக்கே உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fd96977-83ed-46cd-8c3e-b9aa3eb8d30e/26-6a97a8595c0c4.webp' /></p><p>
</p><p>
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் இந்த தீர்மானத்தை அரசு உடனடியாக
மக்கள் வாக்கெடுப்புக்கு விட வேண்டும்.
</p><p>
அரச உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல தரப்பினரும் இந்தத் திருத்தத்தின்
பாரதூரத்தன்மையைச் சுட்டிக்காட்டித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அரசின் நிலைப்பாடு ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதால்
இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T04:38:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலையிடம் சிக்கிய 22 வயது இளைஞரின் சடலம் - பல மணிநேரம் மீட்க போராடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rescue-of-corpse-eaten-by-crocodiles-from-river-1788319694"></link>
            <id>https://tamilwin.com/article/rescue-of-corpse-eaten-by-crocodiles-from-river-1788319694</id>
            <summary type="text">கொழும்பு - பிலியந்தலை,கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பிலியந்தலை,கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் சாயுரபுர பகுதியை சேர்ந்த ஷெஹான் தாரகா (22) வயது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><h2>வரவழைக்கப்பட்டுள்ள&nbsp;வனவிலங்கு அதிகாரிகள்</h2><p>

கரடியானா குப்பைக்கிடங்கிற்கு முன்னால் உள்ள ஆற்றில், முதலையால் உண்ணப்பட்ட நிலையில் மிதந்த சடலத்தை பணியாளர்கள் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f216377e-f9b1-43ee-a43f-dab741ce6274/26-6a979f109b2d6.webp' /></p><p>

இதன்பின்னர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தபோது, ​​சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், உள்ளூர் மக்களுடன் இணைந்து இளைஞரின் உடலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலையின் பிடி தடையாக இருந்துள்ளது.</p><p>

இதனையடுத்து இளைஞரின் உடலை மீட்க வனவிலங்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:59:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817"></link>
            <id>https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உள் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c721d6c-d400-4d7e-a2f9-4e9cf9c7c71f/26-6a9793974ba40.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
45 வயதான சூலாபத்மேந்திர பிலியந்தல, தும்போவிலவில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில், 31 ஆம் திகதியன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த தொழிலதிபருடன் அவர் காதல் உறவில் இருந்ததாகவும், 30 ஆம் திகதி பத்தரமுல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்தை தொடர்ந்து, 31 ஆம் திகதி அதிகாலை பிலியந்தலவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்பின்னர் அங்கு அறையில் உறங்கச்சென்ற நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயன்றபோதும், அவர் பதிலளிக்காததால் 1990 ஆம்புலன்ஸ் அவசர சேவை வரவழைக்கப்பட்டுள்ளது.</p><h2>மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மற்றும் உயிரிழந்தவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
அதன்படி, மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc1f987-f062-44f4-856c-2d58d0b6c5cc/26-6a97939803488.webp' /></p><p>
</p><p>
கேஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை தெரிவித்த பின்னர், பதில் நீதவான் சம்பவ இடத்தையும் உடலையும் ஆய்வு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், களுபோவில போதனா வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
பிலியந்தல பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த குலசிங்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.&nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற இளம் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544"></link>
            <id>https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544</id>
            <summary type="text">
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 30 வயதுடைய பெண் நேற்று நண்பகல் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண்ணினால் அந்த குழந்தை நேற்றைய தினம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.</p><h2><b>கழிவறைக்குள் பிறந்த குழந்தை</b></h2><p>

பிரசவித்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலிருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல அந்த பெண் முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef86d06-4d73-4b7c-a549-785aa107dead/26-6a978c2aa3c5c.webp' /></p><p>சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து, பின்னர் அவரையும் குழந்தையும் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குழந்தை நல்ல உடல் நலத்தில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-02T03:04:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்தப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்தப் பகுதி ம் மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றையதினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a3e577e-5756-494a-8e88-687ff48045fa/26-6a978e800dd2c.webp' /></p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;தனிநபர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை உள்ளடக்கிய இந்த இறக்குமதி செலவினம், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 182 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது, ​​ஒரு மாதத்தில் சுமார் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><h2>வாகன இறக்குமதி&nbsp;செலவு </h2><p>

இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒட்டுமொத்த செலவு 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9a294e-9b5d-4fb2-bd50-6f158cdb650b/26-6a978a80a78fa.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இறக்குமதி செலவு 19.6 சதவீதம் அதிகரித்து, 2,251 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான மொத்த செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T02:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஒகஸ்ட் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

எனினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயில் ஓரளவு மதிப்பு உயர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><h2><b>

இலங்கை ரூபாவின் பெறுமதி</b></h2><p>இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகள் காரணமாக, சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்கலாக, மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தொகையானது 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94c21b0-aa63-481d-b23a-7e7c5cec3cea/26-6a9784693c170.webp' /></p><p>கடந்த ஜுலை மாதம் முடிவடைந்த நிலவரத்திற்கமைய, இந்த தொகை பதிவாகியுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கானது 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஜுலை மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
நடப்புக் கணக்கு தொடர்ச்சியாக இவ்வாறான பற்றாக்குறையைப் பதிவு செய்யும் நான்காவது மாதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-02T02:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110"></link>
            <id>https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110</id>
            <summary type="text">கொழும்பு&amp;nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&amp;nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு&nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களே இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>குறித்த&nbsp;முகவர் நிலையத்திற்கு 4 பேர் வந்திருந்த நிலையில் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1721cacd-d25b-4765-b29f-9c9701cdfdd0/26-6a97817496446.webp' /></p><p>சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T02:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 அரசியல் நயவஞ்சகத்தினால் எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
22 ஆவது அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல என முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> மாறாக எதிர்க்கட்சியின் சட்டத்தின் முன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்ற அச்சத்தினாலேயே இந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5441d28-04ee-4fbe-8f8a-74d8e3a33ac1/26-6a9782fcefc3a.webp' /></p><p>
</p><p>ஹட்டன் நகரில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அந்த முன்னணியின் இதனைத் தெரிவித்தனர்.</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதற்கு வழியமைத்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது மௌனம் காத்தவர்கள், (01) ஆம் திகதி 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் ‘சூப்பர்மேன்களாக’ தோற்றமளிக்க முயல்கின்றனர் எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>அன்று முழு நாடும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட போது எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினர், இன்று நீதிமன்றத்தை நாடுவது மக்களின் சுதந்திரத்திற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
ஜனநாயகம் அல்லது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தற்போதைய எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்வரும் சில மாதங்களுக்குள் இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே இத்தரப்பினர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வாறு செயற்படுவதாக சமீர பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T02:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு வரி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377"></link>
            <id>https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377</id>
            <summary type="text">அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. 

அதற்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. </p><p>

அதற்கமைய 57 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">வழக்கு தாக்கல்</b></p><p>உள்நாட்டு இறைவரி ஆணையாளர் 57 வழக்குகளையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்குத் தனித்தனியாகக் அனுப்பி வைத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/640065d8-b40a-444c-90c4-45efff97df12/26-6a978059f0512.webp' />&nbsp;</p><p>கொழும்பில் உள்ள தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களின் குழுவிற்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T01:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969</id>
            <summary type="text">பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>திரைப்பட நடிகராகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af2b6d0-18eb-4f02-af3c-8becbe2f1361/26-6a977d8a8d840.webp' /></p><p>
'சுபுன் சதக்', 'சந்துன் கஸே சமன் வெலக்', 'சிகுருலியா', 'அகாத சாகரயே' போன்ற பல காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்தார்.
</p><p>திரைப்படங்கள், தொலைக்காட்சி நாகடகங்கள், பாடல்கள் என பல்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள பிரியங்கர பெரேரா பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைகேடாக செயற்பட்ட உயர் அதிகாரியை பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394"></link>
            <id>https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394</id>
            <summary type="text">இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

சமகால அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகங்கள் அமைச்சராகப் பதவியேற்ற விஜித்த ஹேரத், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராக கணக ஹேமச்சந்திரவை நியமித்தார். </p><h2><b>பல குற்றச்சாட்டுகள்</b></h2><p>எனினும், திருகோணமலை துறைமுகத்திலிருந்த வழிகாட்டிப் படகை தவறாகப் பயன்படுத்தி 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் துறைமுக தொழிற்சங்கங்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc508ba-0c9b-434f-819c-d23da84fd9ef/26-6a977a9c48085.webp' /></p><p>இந்நிலையில் கணக ஹேமசந்திர பதிவியில் இருந்து நீக்க எடுத்த முடிவுக்கு துறைமுக கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. </p><p>

இத்தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட்ட நல்லதொரு தீர்மானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-02T01:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வா தூபி உடைப்பை கண்டிக்கின்றது தமிழரசுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964"></link>
            <id>https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;தமிழரசுக் கட்சி</h2><p>
</p><p>
"தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.</p><p>

தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை
விமர்சிப்பது கிடையாது.

அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக்
கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f665f3e-8438-46b4-9d32-d7f6ec3b2a66/26-6a97716084e6f.webp' /></p><p>
</p><p>
அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும்
ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள
முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே
அமைகின்றது. </p><p>எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி - சடலமாக கரையொதுங்கிய நால்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367"></link>
            <id>https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367</id>
            <summary type="text">கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சடலமானது நேற்றைய தினம்(01.09.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த&nbsp;&nbsp;4 பேர்</h2><p> இதன் மூலம் கடலில் அடித்துச்
செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட 4 பேர்
பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397db5f0-d22a-4a2a-8153-38609100a928/26-6a976de8baf0f.webp' /></p><p>நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலில் 35
வயதுடைய தாய் மற்றும் 4 வயது, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள்
மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று
செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படையினரும், அந்தப் பகுதி கடலோர
மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர
தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டே அனைத்துச் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பகுதியில் கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719"></link>
            <id>https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><p>
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று(01) யாழ்ப்பாணம்
இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><h2>வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமை</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; இந்த அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.</p><p>பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி
விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல், புதிய
அரசியலமைப்பு, போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணை கொடுத்து
வந்த அரசாங்கம் எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad3e96a-0ae1-484d-b5c4-541af1b4db64/26-6a97655372dd9.webp' /></p><p>அரசாங்கத்திற்கு உணரத்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை
மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி
பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p>

அத்துடன் இந்தப் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக
மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.</p><h2>உண்ணாவிரத போராட்டம்</h2><p>ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில்
தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2
வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p>

குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை
துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e2f0e9-3409-4fdd-9303-976689f3d292/26-6a976fc15378c.webp' /></p><p>

இந்தியா 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை
செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாணசபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை
தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.</p><p>

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவித கரிசனையும் காட்டாது
இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல்
துறை சார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை
7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பியங்கர ஜயரத்ன வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: நீளும் குற்றப்பட்டியல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124"></link>
            <id>https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 


ஸ்ரீலங்கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p> 


ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 330,000 ரூபா அரச பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

சுமார் 3,000 விசா அட்டைகளை அச்சிடுவதற்கு அதிகார சபையின் நிதியிலிருந்து 1,285,200 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை.</p><p>

அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விஹெனாபாம் நிறுவனத்திற்கு 360,000 ரூபாவையும், சிலாவ் என்எஸ்பி (NSP) கணக்கிற்கு 494,000 ரூபாவையும் அரச நிதியிலிருந்து செலுத்தச் செய்தமை.</p><p>

தனது தனிப்பட்ட செயலாளரை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையில் (Civil Aviation Authority) சட்டவிரோதமாக நியமித்து, அவருக்கு அரச நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கியமை.
</p><p>
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த டீலிங்கின் மூலம் கிடைத்த பணத்தில் 20 மில்லியன் ரூபா பியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அரச வாகனப் பயன்பாட்டில் விதிகளை மீறி, விசாரணை அறிக்கையின்படி 2,737,599 ரூபாவிற்கும் அதிகமான தொகையைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகச் செலவழித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில் நிகழ்ந்தவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பான முழுயைான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7PU8B3Mn1GA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும்.. நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(01.09.2026)நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22ஆவது திருத்தச் சட்டமூலம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,&nbsp; இந்தத் தீர்ப்பை வழங்கி நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு
உயர்நீதிமன்றத்துக்கு 3 வார கால அவகாசம் உள்ளது. </p><p>மனுக்களை விசாரிக்க எந்தெந்த
நீதியரசர்கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்
அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உண்டு.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f2d30b-ccff-4eb8-a99d-6d6d32330e7f/26-6a97687168c05.webp' /></p><p>வெளியாட்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப
நீதியரசர்களை நியமிக்குமாறு கோருவதற்குச் சட்டத்தில் இடமில்லை.

ஜனாதிபதி தலைமையில் தேசிய மக்கள் சக்தி நடத்தி வரும் மக்கள் பேரணிகளுக்கும்
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு விவகாரத்துக்கும்
எந்தவித தொடர்பும் இல்லை.
</p><p>
கடந்த டிசம்பர் மாதமே திட்டமிடப்பட்டுச் சீரற்ற காலநிலை காரணமாகத்
தள்ளிவைக்கப்பட்ட இக்கூட்டங்கள், கட்சியை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தவே
நடத்தப்படுகின்றன. மேலும், இதற்கான செலவுகளைக் கட்சியே ஏற்கின்றது. பொதுப்பணம்
பயன்படுத்தப்படவில்லை.</p><p>

22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க உரிமையுள்ள போதிலும்,
அதனைச் சாட்டாக வைத்து வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் நாட்டின்
அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளுமே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே,
நோயாளிகளை பிணையாக வைத்து இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை கிளப்பியுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயல் - இணையத்தில் பரவும் காணொளி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216</id>
            <summary type="text">மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்தி குழுவின் முடிவிற்கமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

இந்த அனுமதிகளைக் கோரி அலுவலகத்திற்குச் சென்ற தேரர், பணியகத்தின் பணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரியை மிரட்டிய காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் செயலுக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.</p><p>

 சட்டத்தை நிலைநாட்ட முயலும் அதிகாரியை அச்சுறுத்துவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.</p><p>

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறான சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதப் போக்குடைய கருத்துகளை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்ததா..! நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-official-information-yet-arrival-iranian-ships-1788300571"></link>
            <id>https://tamilwin.com/article/no-official-information-yet-arrival-iranian-ships-1788300571</id>
            <summary type="text">இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன
என்று கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அரசுக்கு உத்தியோகபூர்வ
அறிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன
என்று கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அரசுக்கு உத்தியோகபூர்வ
அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்
அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(1) நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்&nbsp;</h2><p>

அவர் மேலும் கூறுகையில்,
</p><p>இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை அண்மித்து ஈரானிய எண்ணெய்
தாங்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியிருந்த
போதிலும், இக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளமை குறித்து
இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c876c99-2552-44ee-aae4-56686664ddd3/26-6a976214afe36.webp' /></p><p> </p><p>இது குறித்து வெளிவிவகார
அமைச்சிடம் விசாரித்து உண்மைத் தன்மை வெளியிடப்படும்.</p><p>

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடுமையான போர்ப் பதற்றங்கள் நிலவினாலும்,
இலங்கை எப்போதுமே தனது நடுநிலைமையான இராஜதந்திர நிலைப்பாட்டையே பேணி
வருகின்றது.</p><h2>இலங்கையின் இறையாண்மை</h2><p>உலக நாடுகள் பிளவுபட்டு நிற்கும் வேளையிலும் எந்தவொரு பக்கமும் சாராமல், மனிதநேய அடிப்படையில் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இலங்கை செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c135ae-6fda-45e1-ad06-c1e371a02465/26-6a976215625f8.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்கு அருகில்
நங்கூரமிட்டுள்ளன என்று கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசு தீவிரமாகக்
கண்காணித்து வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ
தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், இந்தக் கப்பல்கள் இலங்கையின் இறையாண்மை எல்லைக்கு
வெளியே நிறுத்தப்பட்டுள்ளமையால் அவற்றுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும்,
அந்தக் கப்பல்களுக்கு எவ்வித வசதிகளோ சேவைகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்
தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:39:05+00:00</updated>
        </entry>
    </feed>
