<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-20T17:25:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரம் இருக்கும்போது தலைக்கனம் அதிகரிக்கும் : ரோஹித அபேகுணவர்தன எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296"></link>
            <id>https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296</id>
            <summary type="text">அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.</p><p>

தாங்கள் தவறு செய்தால் அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம்
கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், "அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம்
அதிகரிக்கின்றது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், 'நமக்கு என்ன
நடந்தது?' எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது.</p><p> அதிகாரம் இருக்கும் இடத்தில்
புத்தி இருப்பதில்லை, புத்தி வரும்போது கையில் அதிகாரம் இருப்பதில்லை" என்று
தெரிவித்தார்.</p><h2>வாய்ப்பு இல்லை</h2><p>
</p><p>
தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது
மண்ணெண்ணெய் ஊற்றியது போலத் துடிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும்
இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தமக்கு உண்டு என குறிப்பிட்டார்.
</p><p>
எதிர்காலத்தில் ஆளும் தரப்பினருக்கு அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத
நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9153530-9ce6-465a-bf58-f31445a7942b/26-6a8732f29d970.webp' /></p><p>

நாட்டில் நிலவும் வரிச்சுமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், சாதாரண
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று
உணவருந்தும்போது கூட அந்த உணவுக்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி
விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.</p><p> வியாபாரிகளுக்குச் செலுத்திய வரியை
மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளபோதிலும், சாதாரண நுகர்வோருக்கு அந்த
வாய்ப்பு இல்லை என்றார்.
</p><p>
வரிச்சுமையின் தாக்கம் காரணமாக மக்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்ட அவர்,
திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய
நிலைக்குச் சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று நகைச்சுவை கலந்த தொனியில்
தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T17:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை உயர்வு: நாமல் எம்.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774"></link>
            <id>https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>இன்றையதினம்(20.8.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளில்
செல்வாக்கு செலுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த
நடவடிக்கைக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>முறைப்பாடுகள்</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,

"16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை
அதிகரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4545d2f4-bfd7-4822-ad10-2ee84ac5f657/26-6a872d462966a.webp' /></p><p> எனினும், இது தொடர்பாக
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலை
நிலவுகின்றது.</p><p>தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் மற்றும்
கடற்றொழிலாளர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும்
சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/v9WLT_Ja8gI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மருந்துகளுக்கு தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும்
தட்டுப்பாடு நிலவுகின்றது எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84cacef-17b8-4684-a95d-0c2ea4b743cc/26-6a872d46d2370.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த
கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு உடனடியாகத்
தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511"></link>
            <id>https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511</id>
            <summary type="text">மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த
புதைகுழி முகாம் அமைந்துள்ள பகுதியில் அகழ்வுப்பணிகளை
முன்னெடுக்குமாறும் கடந்த ஆண்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில்&nbsp; நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து
குழந்தை வடிவேல் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.</p><p>

இதனடிப்படையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கடந்த
14ஆம் திகதி குற்றப்புலனாய்வுத்துறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த
நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக தன்னால் பாதுகாப்பு காரணங்களினால்
அங்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பில் இன்றைய தினம்
குற்றப்புலனாய்வுத்துறையினரால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>படுகொலை&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சத்துருக்கொண்டான் படுகொலை
நினைவேந்தல் குழு உறுப்பினர் தயாளகௌரி,சிவில் சிவில் சமூக செயற்பாட்டாளர்
கண்டுமணி லவகுகராசா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்
சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் ஆகியோரும்
வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2aaeac6-6f2b-46bb-84af-ee27d13473ca/26-6a87222d86a27.webp' /></p><p>
</p><p>வாக்குமூலம் வழங்கிய பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடக
சந்திப்பும் நடைபெற்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அதிடி சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646"></link>
            <id>https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646</id>
            <summary type="text">பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

2026 ஆம் ஆண்டின் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் லண்டன் முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

பெருந்தொகையானவர்கள் கைது</b></h2><p>உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிரித்தானியாவில் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான சோதனைகளின் எண்ணிக்கை 7,270 ஆக உயர்ந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d6e08b-9667-4b0b-9dbb-677d35188e6b/26-6a87168605130.webp' /></p><p>இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத அதிகரிப்பாகும். இச்சோதனைகள் மூலம் 4,756 கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஜூலைக்குப் பின்னரான மொத்தக் கைதுகளின் எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முழுவதும் குடிவரவு குற்றங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கூட்டுச் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: அகற்ற காலக்கெடு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி.
வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(20.08.2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
</p><h2>
கழிவுகளை அகற்ற நடவடிக்கை</h2><p>

இதன்போது, சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc65aee8-98e6-4812-8738-9880dfa9101f/26-6a871acd4a1fa.webp' /></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் எதிர்வரும்
13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் என்றும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றுமு் சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பு கூட்டத்தினை நடத்துவது என்றும்,
13ஆம் திகதிக்கு முன்னர், வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது
விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அன்றைய கூட்டத்தில்
தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:18:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை வைத்து மிரட்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டார் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090"></link>
            <id>https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார். </p><p>அத்தோடு, மோதலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பும்
மற்றுமொரு தரப்பை மிரட்டக்கூடாது என்றும் கட்டார் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எகிப்தின் எல் அலமைன் நகரில் நடைபெற்ற உயர் மட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர்
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p>
</p><p>
இந்த போரின் விளைவுகள் வளைகுடா பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலகளாவிய
ரீதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f99b2328-a57e-4279-b867-ddb409231811/26-6a87156ee753e.webp' /></p><p>நிலைமை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியமானது என்றும், இதில்
ஏற்படுத்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தமது நாடு
கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தின் இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371"></link>
            <id>https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371</id>
            <summary type="text">கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்கொடுப்புகளுமின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>பல்வேறு நெருக்கடி</h2><p>

நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநருடன் இடம்பெற்ற சந்திப்புக்கும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

தமது போராட்டத்தின் பிரதான கோரிக்கையான, குறித்த அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a81ffc1-2b97-4fc9-90ef-a5eba540706e/26-6a87122da7579.webp' /></p><p>

இதனை தமது சக உத்தியோகத்தர்கள், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>தொழிற்திணைக்களத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வடக்கு மாகாணம் முழுவதும் மாகாண மற்றும் மத்திய சேவைகளில் கடமையாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமது சங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி தமது செயற்பாடுகள் தொடரும் எனவும், போராட்டத்தின் இலக்கை அடைவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>முறையான அழைப்பு</h2><p>

இதேவேளை, நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்ட கலந்துரையாடலுக்கு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தமது போராட்டத்தையும் மலினப்படுத்தும் நோக்கில் பிரதான தொழிற்சங்கமான தங்களை தவிர்த்து பிறிதொரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc2b11a-e1ea-4297-8c0f-53c4184bdf1a/26-6a87122e5af31.webp' /></p><p>

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் முன்னெடுக்க மாட்டார் என தாம் நம்புவதாகவும், ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர்,</p><p> தமக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஆணித்தரமாக நம்புவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
“வாய்மையே வெல்லும்” என்ற நோக்குடன் தமது செயற்பாடுகள் தொடரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.</p><p> குறித்த கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி உதவி
ஆணையாளர், வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை முகாமையாளர், அரிசி ஆலை
உரிமையாளர்கள்,,பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர்கள் ,கமக்காரர்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.</p><p>கலந்துரையாடலின் போது

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாவட்ட
நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 2,600 மெட்ரிக்
தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>நெல் கொள்வனவு</h2><p>

இருப்பினும், மாவட்டத்தில் சுமார் 30,000 ஏக்கரில் விவசாயம்
மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் உற்பத்தியை நியாயமான விலையில்
விற்பனை செய்ய அரசாங்கத்தால் மீண்டும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி, மாவட்டத்தில் உள்ள தனியார் சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல்
கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695326bf-9a27-4776-9f07-2987ce57be92/26-6a8711f654c94.webp' /></p><p>
</p><p>கலந்துரையாடலில், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் 3 நெல்
ஆலை உரிமையாளர்களும், தனியார் தரப்பில் 8 நெல் ஆலை உரிமையாளர்களும்
பங்கேற்றிருந்தனர். </p><p>இவர்கள் ஊடாக விரைவாக நெல் கொள்வனவு செய்வதற்கான
ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், ஒவ்வொரு நெல் ஆலை உரிமையாளருக்கும் 25 மில்லியன் ரூபாய் கடன்
நிதியாக வழங்கப்பட்டு, விவசாயிகள் வசமுள்ள நெல் கொள்வனவு செய்யப்படும்.</p><p>இதன்
மூலம் மேலும் சுமார் 10,000 மெட்ரிக் தொன் நெல்லை விவசாயிகள் சந்தைப்படுத்த
முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-20T14:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரர் இருந்த விகாரையில் நடந்த துயரச் சம்பவம் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749</id>
            <summary type="text">நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம், இன்று(20.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு</h2><p>அத்துடன், நாவல சத்தர்ம ராஜமகா விகாரையில், கலகொடாத்தா ஞானசார தேரர் இருக்கிறார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75a2141-97ca-4388-bba9-fc6bcdee0e9c/26-6a870e3e41d32.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் வேளையில், இராஜகிரிய பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம் - அர்ச்சுனா எம்.பியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-my-last-parliamentary-speech-archuna-mp-1787231680"></link>
            <id>https://tamilwin.com/article/this-my-last-parliamentary-speech-archuna-mp-1787231680</id>
            <summary type="text">“இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(20) நாடாளுமன்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>“இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.</p><p>

இன்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>இறுதி நாடாளுமன்ற உரை</h2><p>

தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3d0c89-465b-4f0d-8833-6133733babba/26-6a870c489f51a.webp' /></p><p>நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையை கோரிய இராமநாதன் அர்ச்சுனா எம்.பி, இந்த உரை தனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை, சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத இரண்டு இனங்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்றன.</p><h2>தமிழ் மக்கள்</h2><p>

இன ரீதியாக வேறுபட்டிருந்தாலும், மொழி ரீதியாக இரு இனங்களும் ஒன்றிணைந்துள்ளன. எனினும், இந்த இரண்டு இனங்களையும் வேறுபடுத்தி ஆட்சி செய்வதே பெரும்பான்மை இனத்தின் பலமாக இருந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a27e3e-06e1-4538-bcbf-310e15f39cf7/26-6a870c47ec211.webp' /></p><p>
</p><p>காலம் காலமாக ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வேறுபடுத்தி ஆட்சி செய்வது பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரமாக இருந்து வருகின்றது.</p><p>

இதன் அடிப்படையில், தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காண்பதும், முஸ்லிம் மக்களை பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயமாகும் என இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் கோர விபத்து! மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/horrific-accident-in-gampaha-three-dead-1787235085"></link>
            <id>https://tamilwin.com/article/horrific-accident-in-gampaha-three-dead-1787235085</id>
            <summary type="text">கம்பஹா- மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியில் முச்சக்கரவண்டியும் காரும்&amp;nbsp;நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா- மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியில் முச்சக்கரவண்டியும் காரும்&nbsp;நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்று(19.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>புதிய கண்டி வீதியில் பியகமையிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வலது
புறமாகத் திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த காருடன் மோதி இந்தக் கோர விபத்து
இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு
சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
</p><p>
இவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி, 7 வயது சிறுமி மற்றும் அந்தச் சிறுமியின் தாயார்
ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aefa760-09f2-4698-8f48-7c9718d515ea/26-6a870b0f23b1e.webp' /></p><p>

உயிரிழந்த முச்சக்கரவண்டியின் சாரதி 69 வயதுடைய தெல்கொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும், உயிரிழந்த 39 வயது பெண் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகியோர்
சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய உயர்ஸ்தானிகர் -சிறீதரன் எம்.பி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-indian-high-commissioner-and-mp-sridharan-1787233065"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-indian-high-commissioner-and-mp-sridharan-1787233065</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று(19.8.2026) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்&nbsp; இடம்பெற்றது.
</p><p>
 இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.</p><h2>கலந்துரையாடல் </h2><p>கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b03f02a-e572-44c2-b4f4-10996f39fa1b/26-6a87072278295.webp' /></p><p>
</p><p>
நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p>

வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும் காங்கேசந்துறை&nbsp; துறைமுக திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மேலும் பல விடயங்கள் சார்ந்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடி வழக்கில் சிக்கிய அரச திணைக்கள அதிகாரி - நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-department-engineer-fraud-case-1787233495"></link>
            <id>https://tamilwin.com/article/government-department-engineer-fraud-case-1787233495</id>
            <summary type="text">வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 3.5 கோடி (35 மில்லியன்) ரூபாய்
பணத்தைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அரச
திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 3.5 கோடி (35 மில்லியன்) ரூபாய்
பணத்தைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அரச
திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(20.08.2026) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><h2>
14 நாட்கள் விளக்கமறியல்</h2><p>

வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a421ee31-31a7-4dd0-82b8-fc85c052bcac/26-6a8705a0f03a3.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் சில துறைகளுக்கு மேலும் கவனம் தேவை! வட மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-allocated-sufficient-funds-1787227136"></link>
            <id>https://tamilwin.com/article/government-allocated-sufficient-funds-1787227136</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில்
முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம்
செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார். </p><p>அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக்
காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும்
என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள்
மார்ட்டின் தெரிவித்தார்.
</p><p>
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான கனேடிய
உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இன்று
(20.08.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7679cd9-8292-4764-a2a4-23b08aecbeb5/26-6a8702fab3e1e.webp' /></p><h2>வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை</h2><p>
சந்திப்பின்போது ஆளுநர், உயர்ஸ்தானிகரை அன்புடன் வரவேற்று, வடக்கு மாகாணத்தின்
தற்போதைய நிலைமை மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி
நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
</p><p>
இதன்போது, டித்வா பேரிடருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான
நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் விரிவாக விளக்கமளித்தார்.
</p><p>பாதிப்புகளுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்கட்டுமானப் பணிகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அவற்றைத் தேவைக்கேற்ப
தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54b2581a-3b93-4205-a0e2-15ce59df486d/26-6a8702fb8e02e.webp' /></p><p>

டித்வா பேரிடர் காரணமாக வடக்கு மாகாணம் இழப்புகளை எதிர்கொண்டிருந்த போதிலும்,
மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் பலனாக இம்முறை
சிறுபோகத்தில் அதிகளவிலான நெல் விளைச்சலைப் பெற்றுள்ளதாக ஆளுநர்
சுட்டிக்காட்டினார். </p><p>அதிகரித்துள்ள நெல் உற்பத்தியை விவசாயிகளுக்கு
பொருளாதாரப் பயனாக மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு
தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள்</h2><p>
</p><p>
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்திகளை
மூலப்பொருட்களாக மாத்திரம் சந்தைப்படுத்தாமல், அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட
உற்பத்திகளாக மாற்றி சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் மற்றும்
வாய்ப்புகள் இன்னமும் போதியளவில் உருவாக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் ஆளுநர்
குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8de59efb-ac6b-4346-83a8-be45ecea3769/26-6a8702fc7a69d.webp' /></p><p> </p><p>இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதன் அவசியத்தையும் அவர்
வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான
முன்னேற்றங்களையும் ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். இவ்வலயங்கள்
மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் சமகால சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருதரப்பினரும் கருத்துக்களைப்
பரிமாறிக்கொண்டனர். </p><p>முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு, செம்மணி விவகாரம்,
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை
விடுவிக்கும் செயன்முறை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச
விமான நிலைய அபிவிருத்தி, நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்
உயர்ஸ்தானிகர் ஆளுநருடன் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615c2f2a-4a9a-4ace-a9b1-210fc43efa6e/26-6a8702fd4cc10.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு- மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் உடைத்து தங்க ஆபரணங்கள் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thief-arrested-stealing-gold-jewelry-in-mamangam-1787230312"></link>
            <id>https://tamilwin.com/article/thief-arrested-stealing-gold-jewelry-in-mamangam-1787230312</id>
            <summary type="text">மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த தங்க ஆபரணங்கைளை திருடிய சந்தேகநப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த தங்க ஆபரணங்கைளை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது அங்குள்ள அன்னதான மடத்திற்கு கடந்த 8ஆம் திகதி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று அதனை நிறுத்தி
வைத்து விட்டு மோட்டார் சைக்கிளின் சீற்றை திறந்து ஒருபவுண் தங்க சங்கிலி, ஒரு
கிராம் மோதிரம் மற்றும் 8 ஆயிரம் ரூபா பணத்தை வைத்து பூட்டிவிட்டு
மடத்துக்குள் சென்றுள்ளார்.</p><p>இதனையடுத்து குறித்த பெண் திரும்பி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிளின் சீற்றை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணம்
மற்றும் பணம் திருட்டு போயுள்ளதை கண்டு கொண்டார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட
விசாரணையில் அங்குள்ள சிசிரிவி கமரா மூலம் திருடனை அடையாளம் கண்டு
கொண்டதையடுத்து மாமாங்கம் முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய
திருடன் ஒருவரை கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29bdd699-6676-436d-832e-ee78578a7822/26-6a870144e0e12.webp' /></p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் திருடிய தங்க சங்கிலி புதைத்து வைத்திருந்த
பற்றை காட்டிற்கு சென்று தேடுதலில் ஈடுபட்ட போது அங்கு அது கிடைக்கவில்லை
எனவும் திருடிய பணத்தை செலவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.</p><p> குறித்த
நபர் ஏற்கனவே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுவர் எனவும் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு.தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகி நந்தா மாலினி காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renowned-singer-nanda-malini-has-passed-away-1787231746"></link>
            <id>https://tamilwin.com/article/renowned-singer-nanda-malini-has-passed-away-1787231746</id>
            <summary type="text">இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் காலமானார்.

நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் காலமானார்.
</p><p>
நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>நந்தா மாலினி</h2><p>
</p><p>
1943ஆம் ஆண்டு ஒகஸ்ட் 23ஆம் திகதி அளுத்கம, லெவந்துவ பகுதியில் பிறந்த நந்தா மாலினி, சிறு வயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fab6486-1ea6-493c-844d-f399fcdf4c13/26-6a8701a90dc02.webp' /></p><p> 

பல தசாப்தங்களாக இலங்கை இசைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைக்காக ஏராளமான விருதுகளையும் கௌரவங்களையும் நந்தா மாலினி பெற்றுள்ளார். </p><p>

சிறந்த மற்றும் பிரபலமான பாடகியாக 12 சரசவி விருதுகளையும் 10 ஜனாதிபதி விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.</p><h2>ஈடுசெய்ய முடியாத இழப்பு</h2><p>

இலங்கைக்கு வெளியேயும் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்த அவர் சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவு உள்ளிட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d61b8708-f4b5-4197-95ab-46dbf7b82aa2/26-6a8701a9b27ec.webp' /></p><p>

1988 டிசம்பர் 16ஆம் திகதி தனது 250ஆவது இசை நிகழ்ச்சியை நடத்திய அவர், 2010ஆம் ஆண்டு சிரச தொலைக்காட்சியுடன் இணைந்து நாடு முழுவதும் 25 நேரடி தனிநபர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.</p><p>

தனித்துவமான குரல் மற்றும் இசை பாணியால் பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களை வென்ற நந்தா மாலினியின் மறைவு, இலங்கை இசைத்துறைக்கும் அவரை நேசித்த எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை தாதியர்களின் சீருடை விவகாரம் : அவசர சந்திப்பை நடத்திய தமிழ் எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825</id>
            <summary type="text">சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். 
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். </p><p>
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>சுகாதார அமைச்சருடனான சந்திப்பு</h2><p>இந்த சந்திப்பின் போது வைத்தியசாலை தொடர்பாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p> அண்மையில் நடந்த சர்ச்சைக்குரிய சீருடை விவகாரத்தால் கல்முனை - வடக்கு வைத்தியசாலையில் இருந்து
புதிதாக நியமனம் பெற்ற இஸ்லாமிய உதவியாளர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்களின் இடத்திற்கு பதிலாக கல்முனை - வடக்கு வைத்தியசாலைக்கு ஆளணி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77d15660-1c49-4a9b-9419-32143b929862/26-6a86fd285fd67.webp' /></p><p>இதனை அமைச்சர் விரைவில் சீர் செய்வது தருவதாக உறுதியளித்துள்ளார். அடுத்ததாக புதிதாக நியமனம் பெற்ற தமிழ் வைத்தியசாலை உதவியாளர்கள் ஒரு குறுகிய ஆரம்ப பயிற்சிக்காக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.</p><p> அஸ்ரப் வைத்தியசாலை ஒரு இஸ்லாமிய ஆதிக்கம் கொண்ட வைத்தியசாலை. இப்போது தமிழ் பிள்ளைகள் அங்கு பயிற்சிக்கு செல்ல பயப்படுகிறார்கள். ஆதலால் தமிழ் பிள்ளைகளுக்கு வேறொரு இடத்தை தெரிவு செய்யுமாறு ஒரு கருத்து அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சீருடை பற்றிய சர்ச்சைகள்</h2><p> </p><p>இதனையடுத்து அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த இடத்தை தமிழ் பிள்ளைகளுக்கு மாற்றி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சீருடை விடயம் மதச்சார்பற்றதாகவும் மொழி சார்பற்றதாகவும் இனச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cb60a97-c340-44ef-86b6-911ea28b90e0/26-6a870dfecb5f7.webp' /></p><p>இலங்கையிலுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் மதத்துக்கேற்றவாறு மொழிக்கு ஏற்றவாறு இனத்துக்கேற்றவாறு சீருடை அணிவதில்லை. சீருடை ஆராய்வதற்கும் வடிவமைப்பதற்கும் ஒரு சிரேஷ்ட குழு அமைச்சு மட்டத்தில் இயங்கி வருகிறது.</p><p> சீருடை பற்றிய சர்ச்சைகள் எழும்பும் போது அதன் இறுதித் தீர்மானமே முற்றாகவும், முடிவானதுமாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் இலங்கையர்கள் இதை பிரித்து பார்க்க முடியாது. பிரித்துப் பார்க்கவும் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e2375-fd89-4e58-a616-604f97baa20f/26-6a866c6a095e4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரின் விகாரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajagiriya-gunshoot-1787230866"></link>
            <id>https://tamilwin.com/article/rajagiriya-gunshoot-1787230866</id>
            <summary type="text">ராஜகிரியவில் ஞானசார தேரரின் விகாரையான, ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜகிரியவில் ஞானசார தேரரின் விகாரையான, ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த அதிகாரி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத்திருக்கலாம்&nbsp; என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த பொலிஸ் அதிகாரி சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8920752-8c7d-4300-8770-9ea441a7143b/26-6a87071e29bfb.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p><br><br><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nja8X34VASA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:09:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு! செந்தில் தொண்டமான் - சிறிதரன் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-thondaman-sridharan-discuss-1787229750"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-thondaman-sridharan-discuss-1787229750</id>
            <summary type="text">தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p> இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி
தலைமையகத்தில் இன்று(20) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>

இக்கலந்துரையாடலின்போது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும்
தந்தை செல்வா ஆகியோருக்கிடையிலான நீண்டகால நட்புறவு நினைவுகூரப்பட்டது.</p><h2>சிரார்த்த தின நிகழ்வு</h2><p>
</p><p>
அத்துடன், இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை மற்றும்
வாக்குரிமையைப் பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக தந்தை செல்வா, சௌமியமூர்த்தி
தொண்டமானுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தமை உள்ளிட்ட
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும் செந்தில் தொண்டமான்
நினைவூட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d410332-d2e5-4330-b6d1-3f2da41e16ed/26-6a86f97acd776.webp' /></p><p>
</p><p>
மேலும், தந்தை செல்வாவின் நினைவைப் போற்றும் வகையில் மலையகத்தில் சிரார்த்த
தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக
மேற்கொள்ளும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T12:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோயிலில் கைவரிசையை காட்டிய குருக்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/theft-at-colombo-temple-1787229566"></link>
            <id>https://tamilwin.com/article/theft-at-colombo-temple-1787229566</id>
            <summary type="text">கொழும்பு - கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்
இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின்
தாராளமான தனிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்
இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின்
தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் அனைத்தும்
மீட்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில்,
தர்மகர்த்தாக்களான ஏ.எம்.ரி.தனநாயகம் 12.4 மில்லியன் ரூபாவையும், திருக்குமாரன் நடேசன் 12.4 மில்லியன் ரூபாவையும் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக
வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை முழுமையாக மீட்டுள்ளனர்.</p><p>

ஆலயத்தில் கடமையாற்றிய சதீஸ்குமார குருக்கள் என்பவரே நகைப்பெட்டகத்தின்
சாவியைப் பயன்படுத்தி இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்.</p><h2>


2 கோடிக்கும் மேல் திருட்டு</h2><p>
இவர் திருடிய நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள சி.டி.பி வங்கியில்
5,280,000 ரூபாவுக்கும், விமல் அடகு நிறுவனத்தில் 5,570,000 ரூபாவுக்கும்,
எஸ்.எம்.பி நிறுவனத்தில் 15,925,950 ரூபாவுக்கும் அடகு வைத்து, மொத்தமாகப்
பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/795e10da-e440-4410-aa05-b46f50c65d27/26-6a86f8153c1a9.webp' /></p><p>


கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே
இந்த திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. 

இதனையடுத்து, ஆலய நிர்வாகத்தினர்
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டனர்.
</p><p>

இந்த நிலையில், குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில்
விசாரணைக்கு வந்தபோது, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான சதீஸ்குமார குருக்களுக்கு
வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதிவான், அவரை உடனடியாகக் கைது செய்து
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T12:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்றத்துக்கு வருகை தராதமைக்கு அச்சுறுத்தலே காரணம்! சஜித் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyers-association-not-attending-parliament-1787227976"></link>
            <id>https://tamilwin.com/article/lawyers-association-not-attending-parliament-1787227976</id>
            <summary type="text">அரசின் அச்சுறுத்தல் பாணியிலான கருத்துத் தெரிவிப்புக்கள் காரணமாகவே இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தரவில்லை என்று
எதிர்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் அச்சுறுத்தல் பாணியிலான கருத்துத் தெரிவிப்புக்கள் காரணமாகவே இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தரவில்லை என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை
நியமிக்காமை தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின்
தலைவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பான சகல கடித ஆவணங்களையும் ஹன்சாட்
பதிவுகளில் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் இன்று சபையில் குறிப்பிட்டார்.</p><h2>ஊடகங்கள் வாயிலாக தவறான பிரசாரங்கள்</h2><p>
</p><p>
இது தொடர்பில் இதற்கு முன்னர் சபாநாயகருக்கும் சபை முதல்வருக்கும்
அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஊடகங்கள் வாயிலாகத் தவறான பிரசாரங்கள்
கொண்டு செல்லப்பட்டன என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39624379-9417-4091-95d1-e73cdfa2a276/26-6a86f3565340f.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இது தனது தனிப்பட்ட அழைப்பு அல்ல என்றும்,
தான் ஓர் இணைப்பாளராகவே செயற்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சபாநாயகர் ஊடாக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இதில் பங்கேற்க
வேண்டும் என்றே தான் வலியுறுத்தினார் என்றும், இதனை வேறு விதமாகத் தவறாகச்
சித்தரித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>அரச தரப்பினரின் நிலைப்பாடு</h2><p>

அரச தரப்பினரின் நிலைப்பாடு குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>"நேற்று நாடாளுமன்றத்தில் அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அச்சுறுத்தலான தொனியிலேயே உரையாற்றினர். அரசமைப்பின் ஊடாக கருத்துத்
தெரிவிக்கும் பேச்சுச் சுதந்திரம் இந்த நாட்டில் இல்லையா எனக் கேட்கின்றேன்.
அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை எந்தவொரு நபராலும் கட்டுப்படுத்த
முடியாது என்றார்.</p><p>

சட்டத்தரணிகள் சங்கம் வேறொரு நாளைக் கோரியுள்ள வேளையில், அரசுக்குச் சார்பான
ஊடகங்கள், சட்டத்தரணிகள் சங்கம் அதனை நிராகரித்துள்ளது என்று தவறான
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
எதிர்க்கட்சித் தலைவரைப் போன்றே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஒரு
பிரஜையாவார் என்றும், பிரஜைகளைச் சமமாக நடத்துவது அரசமைப்பின் மூலம்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qiT2Uau4Yk8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-20T12:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஹரக் கட்டா வழக்கு! தீவிரமான சட்டப்போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/can-harak-kata-be-detained-without-charges-1787223916"></link>
            <id>https://tamilwin.com/article/can-harak-kata-be-detained-without-charges-1787223916</id>
            <summary type="text">“ஹரக் கட்டா” மற்றும் பல குற்றவாளிகள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை&amp;nbsp; தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>“ஹரக் கட்டா” மற்றும் பல குற்றவாளிகள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை&nbsp; தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என்று தீர்ப்பளித்த சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதனை சட்டமா அதிபர் இன்று(20) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><h2>ஹரக் கட்டா</h2><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்ததாக உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹரக் கட்டா மற்றும் மேலும் நான்கு சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68404f64-d2b7-43ea-8406-77f9c2882042/26-6a86ef30ed6f9.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அரச தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, மேல் நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
</p><p>
 எனவே, இந்த வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச தரப்பு வலியுறுத்தியது.</p><p>

மேலும், சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் இனிமேல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.</p><h2>வெலிசர சிறைச்சாலை</h2><p>
</p><p>
எனினும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், கடந்த ஜூலை 30ஆம் திகதி, PTA சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95926ab9-ba10-4133-8963-4bb17c4674de/26-6a86ef31d0abf.webp' /></p><p>

அதனால், தற்போது மேல் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் குற்றப்பத்திரிகை எதுவும் இல்லை எனவும், இந்நிலையில் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை எனவும் அவர்கள் வாதிட்டனர்.
</p><p>
மேலும், ஹரக் கட்டா மற்றும் இணை சந்தேகநபரான மிடிகம ருவன் தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அல்லாமல் கடற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.</p><p>

Zoom ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஹரக் கட்டாவும், தாம் வெலிசர சிறைச்சாலையில் கடற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p> </p><p>

அங்கு தமக்கு அருகில் கடற்படை அதிகாரிகள் இருப்பதை காண்பிக்கும் வகையில், அவர் தனது கெமெராவை அவர்களை நோக்கித் திருப்பினார்.</p><p>

மேலும், பழைய தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது முழங்கால் பிரச்சினைக்காக தங்காலை ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், ஆனால் தற்போது வெலிசர சிறைச்சாலையில் தனக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b29ac740-a388-4812-a94c-5bbf2d10ba46/26-6a86ef32884f9.webp' /></p><p>

இதற்கு பதிலளித்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி, அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய சிறைச்சாலை வளாகங்களில் இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
</p><p>
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ராகல, முந்தைய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் ஏற்கனவே மேன்முறையீடு செய்துள்ளதால், இந்த நிலையில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதோ அல்லது அவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதோ பொருத்தமானதாக இருக்காது என தெரிவித்தார்.</p><h2>ஒத்திவைப்பு</h2><p>

சந்தேகநபர்கள் சார்பில் கோரப்படும் எந்தவொரு நிவாரணத்தையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோருமாறு நீதிபதி பாதுகாப்பு தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2037b308-76a4-4bf1-a5bf-cfb59bb90d49/26-6a86ef333ac56.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர்கள் விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டிருந்தால், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
</p><p>
அத்துடன், சந்தேகநபரின் உடல்நலப் பிரச்சினைக்கு தேவையான முறையான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>
இந்த வழக்கு செப்டம்பர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p></p><p></p><p>





</p>]]></content>
            <updated>2026-08-20T12:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் சர்ச்சை - இலங்கைக்கு கிடைத்துள்ள பேரதிஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-cargo-route-through-sri-lanka-1787219010"></link>
            <id>https://tamilwin.com/article/new-cargo-route-through-sri-lanka-1787219010</id>
            <summary type="text">இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதற்கமைய, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன லெம்போர்கினி ரகத்தைச் சேர்ந்த 14 சொகுசு கார்கள், இலங்கை ஊடாக டுபாய் மற்றும் கட்டார் நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.</p><p> </p><h2><b>

ஹோர்முஸ் நீரிணையில் சர்ச்சை</b></h2><p>இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக அந்த வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26d691b-7db7-42fc-8ddf-d72249e063bb/26-6a86d214f2cdf.webp' /></p><p>அங்கிருந்து 40 அடி நீளமுடைய 7 கொள்கலன்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. </p><p>

அதன் பின்னர், இந்த மோட்டார் வாகனங்கள் மிகப்பெரிய சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் கட்டாரின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த கார்கள் ஒவ்வொன்றின் குறைந்தபட்ச விலை இலங்கை நாணயத்தில் 50 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஸ்போர்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு காரின் விலை சுமார் 100 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இலங்கைக்கும் பொருளாதார ரீதியாக நன்மை</h2><p> </p><p>

இதன் மூலம் புதிய சரக்கு போக்குவரத்து பாதை காரணமாக இலங்கைக்கும் பொருளாதார ரீதியாக நன்மை ஏற்படும் நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73acb907-1f03-4606-9604-9c3872532db4/26-6a86ea385f449.webp' /></p><p> 

இந்த மோட்டார் வாகனங்களின் போக்குவரத்துப் பொறுப்பை டென்மார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது. இந்த மோட்டார் வாகனங்கள் சில நாட்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.</p><p> 

 இந்த மோட்டார் வாகனங்களை ஏற்றிய விமானம் இன்று டுபாய் மற்றும் தோஹா நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T11:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-korea-test-fires-10-missiles-us-south-korea-1787226347"></link>
            <id>https://tamilwin.com/article/north-korea-test-fires-10-missiles-us-south-korea-1787226347</id>
            <summary type="text">தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள்
நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள்
நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர
பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம்
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

பியாங்யாங் பகுதிக்கு கிழக்குக் கடலை நோக்கி இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக
தென்கொரியாவின் கூட்டுப் படைப் பிரதானிகள் தெரிவித்துள்ளனர். இவை சுமார் 300
கிலோமீட்டர் தூரம் பயணித்து விழுந்துள்ளன.</p><h2>&nbsp;10 ஏவுகணை</h2><p>

வடகொரியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தென்கொரியா அவசர பாதுகாப்பு
அமைச்சுக் கூட்டத்தைக் கூட்டி, இராணுவத்தைப் பூரண தயார் நிலையில் வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானங்களை
மீறும் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6029a55f-a630-46b4-a8cd-f95320abde2a/26-6a86ea1c7cf2c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன்
தூதரக உறவுகளை மீண்டும் ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி, பயிற்சிகளில்
அமெரிக்காவின் பங்களிப்பைக் குறைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா
மற்றும் தென்கொரிய கூட்டுப் பயிற்சிகள் வெள்ளிக்கிழமை முடிவடையவுள்ள
நிலையிலேயே வடகொரியா இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T11:50:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் முதலீடு மற்றும் விவசாயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் - கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-urges-canada-envoy-invest-north-agri-1787223935"></link>
            <id>https://tamilwin.com/article/governor-urges-canada-envoy-invest-north-agri-1787223935</id>
            <summary type="text">வட மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம்
செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம்
செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று(20.08.2026) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற 
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்
இஷேபிள் மார்ட்டினுக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><h2>டித்வா பேரிடர்</h2><p>


 வட மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன்,
தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள்
எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின்
குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதன்போது, டித்வா பேரிடருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான
நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் விரிவாக விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095764f4-48c4-4712-9bf0-181f2cfd0d85/26-6a86e3df125dc.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிப்புகளுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்கட்டுமானப் பணிகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியுள்ளதுடன் அவற்றை தேவைக்கேற்ப
தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
டித்வா பேரிடர் காரணமாக வட மாகாணம் இழப்புகளை எதிர்கொண்டிருந்த போதிலும்,
மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் பலனாக இந்தமுறை
சிறுபோகத்தில் அதிகளவிலான நெல் விளைச்சலை பெற்றுள்ளது. </p><p>


அதேவேளை, வட மாகாணத்தில் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்திகளை
மூலப்பொருட்களாக மாத்திரம் சந்தைப்படுத்தாமல், அவற்றை பெறுமதி சேர்க்கப்பட்ட
உற்பத்திகளாக மாற்றி சந்தைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் மற்றும்
வாய்ப்புகள் இன்னமும் போதியளவில் உருவாக்கப்படாத நிலை காணப்படுகிறது.</p><h2>புதிய தொழில் வாய்ப்புகள்&nbsp;</h2><p> </p><p>

இவ்வலயங்கள் மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் பங்களிக்கும்.</p><p>

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் செயன்முறை தொடர்பில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களுக்கு நேரில் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், அதன்
தொடர்ச்சியாக கொழும்பிலும் தொடர் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்
இடம்பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/787776a7-4ebf-4fa0-b701-7bd4dfc55e07/26-6a86e3e0aee5d.webp' /></p><p>


காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா – இலங்கை இடையிலான ஒப்பந்தம்
தயாரிக்கப்பட்டு வருவதுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இரண்டு
கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>

இதன்படி முதல்கட்டமாக விமான நிலைய முனையம் உள்ளிட்ட
உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அடுத்த
கட்டத்தில் ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
மேலும், கடந்த காலங்களில் விமான நிலைய விரிவாக்கத்துக்காகப்
பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப்
பின்னரும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>
இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாட்டுக்கு
வருவதற்கான சில தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி நாட்டுக்கு வந்து
செல்லக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.</p><p>

தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில நிறுவனங்களிலும் தீர்மானம்
மேற்கொள்ளும் உயர்நிலைப் பதவிகளிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச்
சேர்ந்தவர்கள் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6938dbf9-e129-410d-ae3e-e26d017247c1/26-6a86e3dfdd33d.webp' /></p><p> </p><p>

குறிப்பாக நிதி ஆணைக்குழு மற்றும்
பெறுகை நடைமுறைக் குழு போன்ற முக்கிய தேசிய அமைப்புகளில் இவ்வாறான
பிரதிநிதித்துவம் இடம்பெறுகிறது.
</p><p>
கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வட
மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். </p><p>முதலீடு, தொழில் முயற்சி, அறிவு மற்றும் தொழில்நுட்பப்
பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வட மாகாணத்தின் பொருளாதார
வளர்ச்சியில் பங்களிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்தச் சந்திப்பில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச்
செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T11:41:35+00:00</updated>
        </entry>
    </feed>
