<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-26T21:20:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுக்கு இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-media-photographer-shanmugalingam-surendran-1785097832"></link>
            <id>https://tamilwin.com/article/senior-media-photographer-shanmugalingam-surendran-1785097832</id>
            <summary type="text">மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட
உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட
உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும்
ஆழ்ந்த வேதனையையும் தருகின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள
இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
</p><p>
அதில், "சுமார் 40 வருடங்களுக்கு மேலாகச் சண்முகலிங்கம் சுரேந்திரன் பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளராகக் கடமையாற்றி, அண்மையில் தனது உடல்நிலை
காரணமாக ஓய்வு பெற்றிருந்த நிலையிலேயே, தனது 69 ஆவது வயதில் திருகோணமலையில் நேற்று காலமானார்.
</p><p>
திருகோணமலை, சாம்பல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சுரேந்திரன், கொழும்பு
மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டே தனது புகைப்பட ஊடகப் பணியைச் செவ்வனே ஆற்றி
வந்தார்.</p><p></p><h2>பூதவுடல் நல்லடக்கம்&nbsp;</h2><p>

ஊடகத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டது முதல் தனது இறுதிமூச்சு வரை ஊடகப் பணியை
உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் எவ்வாறிருக்க
வேண்டும் என்பதற்கு அவர் சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7463538d-4806-4cd1-8f9b-d85592676069/26-6a6672ba3abaa.webp' /></p><p>
</p><p>
தனது புகைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்த சுரேந்திரன்,
தான் பணிபுரிந்த ஊடகத்தின் மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை
முன்னெடுத்தவர். யுத்த காலச் சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால்மிக்க
காலகட்டங்களில் கூட ஊடக நேர்மை தவறாமல் அயராது பணியில் ஈடுபட்டார்.
</p><p>
தனது துணிச்சலான, தனித்துவமான புகைப்படப் பணியின் மூலம் தமிழ் ஊடகங்களில்
தனிமதிப்பும் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடமும் பிடித்திருந்த
சுரேந்திரனின் மறைவு, தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் ஊடகவியலாளர்
ஒன்றியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக உள்ளது. </p><p>அன்னாரின் இழப்பால்
துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்,
அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்." - என்று அதில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10
மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை என்ற
முகவரியில் நடைபெற்று, சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்
செய்யப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:49:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைளை தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-decides-political-actions-sajith-1785098488"></link>
            <id>https://tamilwin.com/article/government-decides-political-actions-sajith-1785098488</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக அவருக்கு எதிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

அதன் ஒரு கட்டமாக அவருக்கு எதிரான முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
</p><p>
அதன் மூலம் 'நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமாக செயற்பட முயற்சித்தால் இதுதான் உங்களுக்கு நடக்கும்...' என்று சஜித்துக்கு ஒரு சமிக்ஞையை விடுக்க அரசாங்கம் நாட்டம் கொண்டுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டு&nbsp;</h2><p> 2015-2019 நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பாக 3 விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/299e85b1-9a61-44dc-adb7-252d58c2ea7d/26-6a66724068bd3.webp' /></p><p> </p><p>அவற்றில் ஒன்று, சஜித்தின் பாரியார் ஜலனி பிரேமதாசவுக்குச் சொந்தமான அழகுநிலையத்தில் பணியாற்ற வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முக்கியமானது.
</p><p>
இது தொடர்பாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட 'சிவப்பு சமிக்ஞை' காரணமாக விசாரணை அப்படியே இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
தற்போது குறித்த விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கத் தரப்பு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a228cccc-ec9e-4fba-a1d8-b586f43d620d/26-6a667241171e4.webp' /></p><p>

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு எதிராக கடந்த 23ம் திகதி எதிர்க்கட்சியின் சகல தலைவர்களையும் தனது அலுவலகத்தில் ஒன்றுகூட்டிய எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடு அரசாங்கத்துக்கு ஆழ்ந்த மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.</p><p> அதன் காரணமாகவே சஜித் பிரேமதாசவுக்கு எதிரான விசாரணைகளை தூசுதட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T20:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் தேர்வு முறைகள் குறித்து முக்கிய நடவடிக்கை.. மோடி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-modi-task-force-exam-under-infosys-co-founder-1785093931"></link>
            <id>https://tamilwin.com/article/pm-modi-task-force-exam-under-infosys-co-founder-1785093931</id>
            <summary type="text">இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், "மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>புதிய சட்டம்..&nbsp;</h2><p> </p><p>இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான சட்டப் பிரிவுகளுடன் கூடிய புதிய சட்டத்தைக் கொண்டுவரும் திசையிலும் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc66099e-f4af-40f1-aab3-a933871b6617/26-6a6665d6ef11f.webp' /></p><p>
</p><p>
எனினும், நாம் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகளவில் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.</p><p>இதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநரான நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:54:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனம் நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kavadi-dance-removed-dondra-vishnu-perahera-1785090319"></link>
            <id>https://tamilwin.com/article/kavadi-dance-removed-dondra-vishnu-perahera-1785090319</id>
            <summary type="text">இரண்டு பாதாள உலகக்கும்பல்களின் மோதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்கம் செய்யுமாறு பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு பாதாள உலகக்கும்பல்களின் மோதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்கம் செய்யுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>&nbsp;தெவிநுவரவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் 769வது வருடாந்திர எசல மகா பெரஹெர விரைவில் நடத்தப்படவுள்ளது.</p><p>

இந்நிலையில் குறித்த பெரஹெரவில் காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பரிந்துரைத்துள்ளார்.</p><p></p><h2>காவடி நடனம் நீக்கம்</h2><p>
</p><p>
ஜூலை 25 ம் திகதியிட்ட கடிதத்தில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய இந்த உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவுறுத்தலின் பேரில், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே- ஆரச்சிகே திலின மதுசங்க ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட காவடி பெரஹெர அம்சத்தை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894ee7d7-bb9a-40e0-87b4-d2df9f8ddcd1/26-6a66630ccc1d0.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் பிரதானி, அரச புலனாய்வு சேவை, பொலிஸ் விசேட பணியகம் மற்றும் தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வழங்கிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785078684"></link>
            <id>https://tamilwin.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785078684</id>
            <summary type="text">ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து வெடித்துள்ளதாக ஈரானின் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த டாங்கர் ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்த கடல் வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற பின்னர் கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>

எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா, எந்தக் கப்பல் தொடர்புடையது, சேதத்தின் அளவு என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
கடந்த ஜூன் 26ஆம் திகதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் இராணுவம் நிர்ணயித்த பாதைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688255a9-64c8-4479-9858-436dd1f1bd55/26-6a662c7e8ab6d.webp' /></p><p>
</p><p>
ஈரானின் Mehr செய்தி நிறுவனம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதன் காரணமாகவே கப்பல் கடற்படை கண்ணிவெடியில் சிக்கியதாக தெரிவித்துள்ளது.</p><p>
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>இராணுவ எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜூலை 8ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்து, அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.</p><p>

இதற்கு முன்னதாக வியாழக்கிழமை, ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் அனுமதியற்ற பாதையை பயன்படுத்த முயன்றதாகக் கூறப்படும் மூன்று எண்ணெய் டாங்கர்களை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554776c8-54c0-4bb8-b2c4-1e115014be5c/26-6a662c7f38777.webp' /></p><p>
</p><p>
அதில், ஒரு டாங்கர் வெடிகுண்டில் சிக்கி தீப்பற்றியதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு கப்பல்களும் திரும்பிச் சென்றதாகவும் IRGC தெரிவித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தக் கப்பலும் இதேபோன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
</p><p>
மேலும், ஜூலை 14ஆம் திகதி, இராணுவ எச்சரிக்கையைப் புறக்கணித்து, தங்களது வழிகாட்டி (Navigation) அமைப்புகளை அணைத்துவிட்டு, கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட பாதைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் டாங்கர்களை IRGC தாக்கி செயலிழக்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஜெலென்ஸ்கிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-iranian-ship-caspian-sea-iran-warn-zelensky-1785092047"></link>
            <id>https://tamilwin.com/article/attack-iranian-ship-caspian-sea-iran-warn-zelensky-1785092047</id>
            <summary type="text">கெஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரடி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
</p><p>
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இத்தாக்குதலானது ஐ.நா சாசனத்தின் வெளிப்படையான மீறல் என்றும், ஐரோப்பாவைப் போருக்குள் இழுக்க இஸ்ரேலின் தூண்டுதலால் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு&nbsp;&nbsp;</h2><p> </p><p>அத்துடன் கியீவில் உள்ளவரால் செய்யப்பட்ட இந்தச் செயலை பதிலடி கொடுக்காமல் விட்டுவிட முடியாது என ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடனான உரையாடலில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7386c330-7ed0-4c8f-ba14-e019de594103/26-6a665958c3a0e.webp' /></p><p>
</p><p>
ஈரானில் இருந்து ரஷ்யாவிற்கு இராணுவ தளபாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட தடை விதிக்கப்பட்ட கப்பல்களை இலக்கு வைத்து கெஸ்பியன் கடலில் தாக்குதல் நடத்தியதை உக்ரைன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Zelenskyy has attacked an Iranian commercial vessel, killing a sailor. A blatant UN Charter violation done at Israel&#39;s behest to drag Europe into its war. <br><br>In calls with EU High Rep Kallas and FM Lavrov, made clear that what the freeloader in Kyiv did CANNOT GO UNANSWERED.</p>&mdash; Seyed Abbas Araghchi (@araghchi) <a href="https://x.com/araghchi/status/2081406217486778612?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இத்தாக்குதலில் மேலும் ஒரு மாலுமி காயமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரக அதிகாரியை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், ரஷ்யா - உக்ரைன் மோதலில் தாம் நடுநிலை வகிப்பதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவி.. சந்தேகம் வெளியிடும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-girl-trying-to-kill-herself-bogawantalawa-1785085195"></link>
            <id>https://tamilwin.com/article/school-girl-trying-to-kill-herself-bogawantalawa-1785085195</id>
            <summary type="text">பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ( 27...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்று ( 27.07.2026) பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து தெரிய வருகையில், பொகவந்தலாவை - மோரா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.</p><p></p><h2>மரணத்தில் சந்தேகம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bea4cf3-6332-455d-8b66-2680b8a4c9e5/26-6a6650b6d74e5.webp' /></p><p>
</p><p>
மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

இது குறித்து பொகவந்தலாவை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.
</p><p>
எனினும், மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-cooperates-with-the-country-s-dengue-1785084239"></link>
            <id>https://tamilwin.com/article/us-cooperates-with-the-country-s-dengue-1785084239</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.</p><p> 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.</p><p> 

தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.</p><p></p><h2>நிதியுதவி</h2><p> </p><p>

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d029987-d97c-4f80-92a1-9139749de2c8/26-6a664d4bb279d.webp' /></p><p> </p><p>

இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு டெங்கு தொடர்ந்து ஒரு தீவிர சவாலாக இருந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், இந்தக் கூட்டாண்மையானது உடனடி நோயெதிர்ப்புத் திறன்களையும் நீண்டகால பொதுச் சுகாதாரத் திறன்களையும் வலுப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:09:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sub-inspector-suspended-for-arguing-with-public-1785087448"></link>
            <id>https://tamilwin.com/article/sub-inspector-suspended-for-arguing-with-public-1785087448</id>
            <summary type="text">பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
</p><p>
கடந்த 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p></p><h2>பணி இடைநீக்கம்</h2><p>

சீருடையில் இருந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடமையில் இருந்தபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் நடந்து கொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8366004b-3836-42b7-af78-ed70f5312f8c/26-6a66481579f19.webp' /></p><p>
</p><p>
குறித்த உத்தியோகத்தரின் இத்தகைய செயல் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கும், அரச சேவைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தாபன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற ஒழுங்கீனமான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபடுவதைக் சகித்துக் கொள்ள முடியாது என இலங்கை பொலிஸ் திணைக்களம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T17:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் எச்சரிக்கும் நெதன்யாகூ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-warns-iran-1785084756"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-warns-iran-1785084756</id>
            <summary type="text">ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மீதோ அல்லது தங்களது நட்பு நாடுகள் மீதோ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
</p><p>இஸ்ரேல் மீதோ அல்லது தங்களது நட்பு நாடுகள் மீதோ நேரடியாகவோ அல்லது பிற அமைப்புகள் மூலமாகவோ ஈரானால் தொடுக்கப்படும் எந்தவொரு தாக்குதலும் ஒரு "பயங்கரமான தவறு" ஆக அமையும் என்றும், அதற்கு "மிக மிகக் கடுமையான" பதிலடி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa38a06c-2973-459e-b1ec-5c9604292bb8/26-6a663b55a1218.webp' /></p><p>
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் ஈரானிய அரசு வீழ வேண்டும் அல்லது "பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவதையும்" சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீது "தாக்குதல் நடத்துவதையும்" ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.</p><p>
உடன்படிக்கை மூலமாகவோ அல்லது அது இல்லாமலோ ஈரானின் அணுசக்தி திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
</p><p>மேலும், சவுதி அரேபியாவுடனான தூதரக உறவை முறைப்படுத்துவதற்கு பதிலாக, சவுதிக்கு ராணுவ அணுசக்தி திட்டத்திற்குப் பதில் 'சிவிலியன்' அணுசக்தி திட்டத்தை அனுமதிக்கும் டிரம்பின் நிபந்தனையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இஸ்ரேல் எல்லைப்பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை 8 முதல் 13 கிலோமீட்டர் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்த சுமார் 1,50,000 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளில் 94 சதவீதத்தை இஸ்ரேலியப் படைகள் அழித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கான புதிய முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>
இதன்படி, லெபனான் அரசு ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், இஸ்ரேல் லெபனானிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் எனகுறிப்பிட்டுள்ளார்.</p><p>
எனினும் லெபனான் இராணுவத்தால் அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை "பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனவும், அதற்கு ஒரு வாய்ப்பளிக்க இஸ்ரேல் தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
தற்போது லெபனானின் சுமார் 6 சதவீத நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கு தீவிரமடைந்துள்ள தாக்குதல்களில் 4,000-க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-26T16:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் வெப்பநிலை.. கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hot-weather-affects-agricultural-lands-1785083423"></link>
            <id>https://tamilwin.com/article/hot-weather-affects-agricultural-lands-1785083423</id>
            <summary type="text">எல் நினோ நிகழ்வால் ஏற்பட்டுள்ள வெப்பமான மற்றும் வறண்ட வானிலையின் காரணமாக, தீவின் பல பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களும் விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ நிகழ்வால் ஏற்பட்டுள்ள வெப்பமான மற்றும் வறண்ட வானிலையின் காரணமாக, தீவின் பல பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களும் விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் குளங்கள் கூட வற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கை தற்போது எல் நினோ நிலையை எதிர்கொண்டு வருகிறது, மேலும் இந்த நிலை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் கணித்துள்ளது.</p><p>

2026ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலகட்டத்தில் மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வதற்கு 81 வீத வாய்ப்பு இருப்பதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஜூலை 13 அன்று அறிவித்தது.</p><p></p><p>

</p><h2>ஈரப்பதமான வானிலை</h2><p>இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவுகிறது. மேலும், வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று பிற்பகலில் பல பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b0734d-bb50-47df-aa8a-4c3513801eff/26-6a663b4e68207.webp' /></p><p>

வறண்ட வானிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது, மேலும் அதன் பயன்பாட்டு நீர் கொள்ளளவு தற்போது 35.14 வீதமாக குறைந்துள்ளது.</p><p>
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி, விக்டோரியா ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யவில்லை.

இதற்கிடையில், வறண்ட வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல குளங்கள் வற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கந்தலே, அக்போபுரா மற்றும் வான் ஏலா பகுதிகளில் உள்ள குளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அக்குகளிலிருந்து நீர் பெற்று சாகுபடி செய்து வந்த நெல் சாகுபடியை விவசாயிகள் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
அதேபோல், வெப்பமான வானிலை காரணமாக, அனுராதபுரம் மற்றும் இளையபட்டு பகுதிகளில் மாங்காய், கத்தரிக்காய் மற்றும் மிளகாய் உள்ளிட்ட பயிர் சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாததால் தங்களது விவசாய நிலங்கள் வறண்டு மறைந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்: றஜீவன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/point-pedro-headland-will-be-developed-tourist-1785080957"></link>
            <id>https://tamilwin.com/article/point-pedro-headland-will-be-developed-tourist-1785080957</id>
            <summary type="text">பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி
செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி
தெரிவித்துள்ளார்.

அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி
செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி
தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் இன்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும் அதனை
ஆண்டிய பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நான், வடக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் விவேகானந்தன் அவர்களுடன் இணைந்து பருத்தித்துறை முனைப்பகுதிக்கு நேரில் கள
ஆய்வை மேற்கொண்டோம்.</p><p></p><h2>அபிவிருத்தித் திட்டங்கள்</h2><p>
</p><p>இந்தப் பகுதி இயற்கை எழில், கடற்கரைச் சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை
வெகுவாக ஈர்க்கக்கூடிய தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால், வடக்கு
மாகாணத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உருவெடுக்கும் மிகுந்த
வாய்ப்பைக் கொண்டுள்ளது.
</p><p>
இதனை முன்னிட்டு, சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,
பருத்தித்துறை முனைப்பகுதியை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்ய
நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db56a9ab-0e21-49c1-9a14-c27527e21a04/26-6a663869a58d4.webp' /></p><p>
</p><p>அத்துடன், சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
பொதுக் கழிப்பறையும் விரைவில் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக
கையளிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
</p><p>
வடக்கின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் இவ்வாறான
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டின் உலகின் மிக பாதுகாப்பான தீவுகள்: முதலிடத்தில் உள்ள தீவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-safest-islands-2026-rankings-released-touris-1785078831"></link>
            <id>https://tamilwin.com/article/world-safest-islands-2026-rankings-released-touris-1785078831</id>
            <summary type="text">பிரபல சுற்றுலா வழிகாட்டி அமைப்பான &#039;டிராவல் ஒஃப் பாத்&#039;, 2026-ஆம் ஆண்டில்
சுற்றுலா பயணிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய உலகின் மிக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சுற்றுலா வழிகாட்டி அமைப்பான 'டிராவல் ஒஃப் பாத்', 2026-ஆம் ஆண்டில்
சுற்றுலா பயணிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய உலகின் மிக
பாதுகாப்பான தீவுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
</p><p>
பயணிகளின் நேரடி அனுபவக் கருத்துக்கள், மிகக் குறைந்த குற்ற விகிதம், வலுவான
உள்கட்டமைப்பு மற்றும் புயல் ஆபத்துகள் இல்லாத புவியியல் அமைப்பு ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>
</p><p>
இந்த ஆய்வில் 100-க்கு 98 புள்ளிகளைப் பெற்று கரீபியன் பிராந்தியத்தில் உள்ள
அரூபா தீவு உலகின் மிக பாதுகாப்பான தீவாக முதலிடத்தைப் பிடித்து சாதனை
படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bf457df-8382-46ee-b153-59b77bb5f83b/26-6a66287fa4052.webp' /></p><p>
</p><p>
இந்தத் தரவரிசையில் 94 புள்ளிகளுடன் கேமன் தீவுகள் இரண்டாம் இடத்தையும், 93
புள்ளிகளுடன் அங்குயிலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p>

ஐரோப்பிய கண்டத்திலிருந்து மால்டா தீவு 91 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப்
பெற்றுள்ள நிலையில், நெதர்லாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள போனைர் மற்றும் சபா
தீவுகள் தலா 90 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>
</p><p>
மேலும், பிரித்தானியாவின் ஐல் ஒஃப் மேன், மான்ட்செரட், பார்படோஸ் மற்றும்
தாய்லாந்தின் புக்கெட் ஆகிய தீவுகளும் 2026-ஆம் ஆண்டின் பாதுகாப்பான 10
தீவுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e425b9b-f9bb-4209-b11e-f76e573dd9ab/26-6a6628805a001.webp' /></p><p>

வலுவான சட்ட அமுலாக்கம், சுற்றுலா பயணிகளுக்கான சிறப்புப் பாதுகாப்பு
நடவடிக்கைகள் மற்றும் புயல் மண்டலங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் இயற்கைச்
சூழல் ஆகியவையே இத்தீவுகள் முதன்மை பெற முக்கியக் காரணங்களாகச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>
அமைதியான சூழலில் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு
இந்த 2026 தரவரிசைப் பட்டியல் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T15:32:25+00:00</updated>
        </entry>
    </feed>
