<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T07:41:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாரிய விபத்திற்கு உள்ளான பேருந்து : இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-leaving-colombo-two-killed-1786431528"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-leaving-colombo-two-killed-1786431528</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று&amp;nbsp;மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாரிய விபத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்த விபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று&nbsp;மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாரிய விபத்திற்கு உள்ளாகியுள்ளது.</p><p>இந்த விபத்து இன்று(11.08.2026) அதிகாலை 1.30 மணிக்கு சம்பவித்துள்ளது.</p><h2>பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழப்பு</h2><p>பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியூடாக பயணித்த போது திடீரென வீதியைக் கடந்த மோட்டார்சைக்கிளுடன் மோதியதால் பாரிய விபத்து சம்பவித்ததுடன் பேருந்து வீதியை விட்டு வீதியோரமாக சென்று வாய்க்காலின் நடுவே அந்தரத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be4886b-d5fa-4aee-8bc9-798b65ace9b0/26-6a7acf53d375f.webp' /></p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T07:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து - பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-monarakala-fell-into-ditch-1786431650"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-monarakala-fell-into-ditch-1786431650</id>
            <summary type="text">மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11) செவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
பேருந்து வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f52c30-391e-417e-ba23-2ed8190c958a/26-6a7ad012c4fa0.webp' /></p><p>
</p><p>இந்த விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p> சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:28:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demands-removal-of-rs-50-tax-on-fuel-1786423127"></link>
            <id>https://tamilwin.com/article/demands-removal-of-rs-50-tax-on-fuel-1786423127</id>
            <summary type="text">எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை பெட்ரோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9cac7fd-a564-4ea4-b75f-cccdbc33156a/26-6a7ab79436248.webp' /></p><p>

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.</p><h2>பொதுமக்களுக்கு பெரும் சிரமம்</h2><p> </p><p>

அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள QR முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89360573-f688-4b78-b804-0f4fbfa7f741/26-6a7ab793800fe.webp' /></p><p>
</p><p>
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கட்டணம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
</p><p>
இதேவேளை, நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் உள்ள சினொபெக், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் போன்ற நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாமாங்கேஸ்வரர் ஆலய தேர் திருவிழா! விண்ணைப்பிளந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mamangeswara-temple-cultural-event-1786427847"></link>
            <id>https://tamilwin.com/article/mamangeswara-temple-cultural-event-1786427847</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் இன்று (11.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் இன்று (11.08.2026) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்
புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p>
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப
பூஜையும் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><h2>அருள்பாலித்த&nbsp;மாமாங்கேஸ்வரர்</h2><p>அதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்
'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி
மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2911c757-1899-4da3-bc3f-6ef2dccc913e/26-6a7ac2497625a.webp' /></p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட
இவ்வாலயத்தின் மஹோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p>
இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு,
பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத்
தொடர்ந்து சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க, அங்கு
விசேட பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்கள்
வடமிழுக்கத் தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d016fc92-991b-474a-b0a8-32e0dd4c1920/26-6a7ac24a7180a.webp' /></p><h2>ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவம்</h2><p>
</p><p>ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதுர்க்கடன்
தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமென்ற புகழினையும் உடையதாக
இம்மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகின்றது.
</p><p>
இவ்வாலயத்தின் ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவம் நாளை (12.08.2026) நண்பகல் வரலாற்றுச்
சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6388f0d5-b7c7-4eb1-9744-312ccc573656/26-6a7ac24b46b11.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a51c30d-8ff2-42f1-9bb7-397e4b8ab083/26-6a7ac24c1a983.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dbd06d7-3b8e-4dff-96c8-c8b45ba4f446/26-6a7ac24ce7be9.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427b72b3-b18d-4099-9861-1db802e269b6/26-6a7ac24dc0725.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9a1c06-ccb8-4604-9d71-491ad045dd19/26-6a7ac24e9857d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான செலவு பொருளாதார ரீதியில் பயனற்றது: தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-audit-office-sri-lanka-n-p-commission-1786427981"></link>
            <id>https://tamilwin.com/article/national-audit-office-sri-lanka-n-p-commission-1786427981</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கி வரும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காகக் கடந்த ஆண்டில் 6...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கி வரும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காகக் கடந்த ஆண்டில் 6 கோடி 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் இது பொருளாதார ரீதியில் பயனற்ற ஒரு செலவீனம் என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த வாடகைத் தொகையானது ஆண்டின் மொத்த வரவு-செலவுத் திட்டச் செலவில் சுமார் 30 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கடந்த ஆண்டில் செலுத்தப்பட்ட வாடகைப் பணம்</h2><p>தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள பண்டாரநாயக்க தேசிய அறக்கட்டளையின் கட்டிடமொன்றில் வருடாந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாடகைக்கு இயங்கி வருவதாகவும் 2025 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி ஆணைக்குழு அலுவலகம் இயங்கும் கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காக மாதமொன்றுக்கு 57 இலட்சத்து 162 ரூபா (ரூ. 57,00,162) செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>இதேவேளை ஆணைக்குழுவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் போதுமான மனித வளங்கள் இன்மையால் கடந்த ஆண்டில் இலங்கை பொலிஸைச் சேர்ந்த 30 அதிகாரிகள் அதன் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abd75b0-28e7-4c8a-b268-f2b594551a9f/26-6a7aba4f712df.webp' /></p><p>இலங்கை பொலிஸுக்கு எதிராகத் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 10,737 முறைப்பாடுகள் கிடைத்திருந்த பின்னணியில்இ பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் புலனாய்வு அதிகாரிகளாகப் பொலிஸ் அதிகாரிகளையே ஈடுபடுத்தியிருப்பதால் குறித்த விசாரணைகளைச் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>மொத்தமுள்ள 240 ஒழுக்காற்றுக் கோப்புகளில் 123 கோப்புகளுக்கு மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்இ மேலும் ஒழுக்காற்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டிய கோப்புகளின் எண்ணிக்கை 117 ஆக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>ஐந்து பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T06:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை நேர்ந்த கோர விபத்தில் தாயும் மகனும் பலி - ஆபத்தான நிலையில் குழந்தை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-die-in-accident-in-bakamuna-1786427686"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-die-in-accident-in-bakamuna-1786427686</id>
            <summary type="text">தம்புள்ள - மஹியங்கனை பிரதான வீதியில், தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ள - மஹியங்கனை பிரதான வீதியில், தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

இன்று அதிகாலை (11) நிகழ்ந்த இந்த விபத்தில் 63 வயதான தாயும், அவரது 43 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பேருந்து சாரதி கைது</h2><p>
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் ஒன்றரை வயது மகனும் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d2269c1-1b36-442d-bf22-4349bf3467ff/26-6a7ac3eb2965a.webp' /></p><p>

இவர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
பேருந்து கொழும்பிலிருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியில் திரும்பமுற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>

 இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் நெருக்கமான நாமல் - சரித் அபேசிங்கவின் நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் &#039;ஹரக் கட்டா&#039; என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
</p><p> 2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு</h2><p>அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர்&nbsp; காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில்&nbsp; இருக்கின்றன. </p><p>அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார். </p><p>அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f896b974-b264-43b2-a148-a97b84f2ea6e/26-6a7ac07410de3.webp' /></p><p>இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர். </p><p>நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. </p><p>அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன்.
நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். </p><p>எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7be6d4c-62aa-4dc0-9b6a-2f0e60fdf0f2/26-6a7ac074da87d.webp' /></p><p>2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.</p><p>நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான். </p><p>நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[90000ஐ கடந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை : 65 டெங்கு மரணங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-90-000-in-sri-lanka-1786427236"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-90-000-in-sri-lanka-1786427236</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306 ஆக உயர்ந்துள்ளது.

 

தற்போது வரை நாடு முழுவதும் 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
 

தற்போது வரை நாடு முழுவதும் 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளிகளின் இறப்பு வீதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
</p><h2>மாவட்ட ரீதியில் அதிகளவிலான பாதிப்பு</h2><p>
 

ஆண்டின் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c338f39b-a26b-427a-adbf-1c3b005fae6a/26-6a7abfd0c8f38.webp' /></p><p>
 

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 4,959 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

மொத்த நோயாளர்களில் 52.96 சதவீதம், அதாவது 47,824 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். </p><p>

 

தென் மாகாணத்தில் 13,361 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,027 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>அத்துடன், மாவட்ட ரீதியில் அதிகளவிலான பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 19,204 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

கொழும்பு மாவட்டத்தில் 17,955 நோயாளர்களும், கண்டியில் 6,413 நோயாளர்களும், மாத்தறையில் 5,971 நோயாளர்களும், களுத்துறையில் 5,871 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளிகாவத்தையில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141</id>
            <summary type="text">புதிய இணைப்புமாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் போதைப்பொருள் கும்பல் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் போதைப்பொருள் கும்பல் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11) பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
</p><p>
இதில் பாதாள உலகத்தலைவர் காஞ்சிபானி இம்ரானின் இம்ரானின் தந்தையின் சகோதரரின் மகனான 54 வயதான முகமது அஸ்மி மொஹிதீன் உயிரிழந்திருந்தார்.</p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மாளிகாவத்தையில் உள்ள சங்கராஜ மாவத்தை பகுதியில் நீண்ட காலமாக இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் என்றும், இவர் மீது பாதாள உலகக்குற்றங்களில் தொடர்பு இல்லை என்றும் பொலிஸ் கூறுகின்றது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><p>இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11)&nbsp; மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>விசாரணையில் வெளியான காரணம்&nbsp;</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத்தலைவன் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என தெரியவந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7d0b40-25ad-423c-88f5-2aa95c9aea63/26-6a7a85702488a.webp' /></p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 54 வயதானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.&nbsp;</p><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><h2>சிசிடிவி காட்சி வெளியீடு</h2><p>அண்மையில் இரத்மலானை பகுதியில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய சகா ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p>&nbsp;அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கமராவிலும் இந்த துப்பாக்கிச்சூடு பதிவாகியுள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர்&nbsp; நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்தியப் பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் பெற்ற பிரதேச சபை உத்தியோகத்தர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-sabha-official-arrested-accepting-bribe-1786425216"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-sabha-official-arrested-accepting-bribe-1786425216</id>
            <summary type="text">அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப
உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்
பேரில் இலஞ்ச அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப
உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்
பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்
அதிகாரிகளால்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>

பொறிவைத்து பிடிபட்ட சம்பவம்
</h2><p>
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து
செயற்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், திட்டமிடப்பட்ட பொறிமுறையைப்
பயன்படுத்தி குறித்த உத்தியோகத்தர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே அவரை
கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d8712bf-90dc-44e3-8d99-8150e2f94884/26-6a7ab5066a293.webp' /></p><p>கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில்
வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீதான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி
மன்றங்களிலும் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் பல அரச
உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடித்த கலவரம்! எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/psychiatrist-s-advice-to-reduce-inmates-violence-1786420346"></link>
            <id>https://tamilwin.com/article/psychiatrist-s-advice-to-reduce-inmates-violence-1786420346</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் மோசமான நடத்தையை குறைப்பதற்காக, மனநல மருத்துவர்களின் சேவைகளை அடிக்கடி பெறுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

கடந்த மாதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் மோசமான நடத்தையை குறைப்பதற்காக, மனநல மருத்துவர்களின் சேவைகளை அடிக்கடி பெறுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறை உட்பட ஐந்து சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த கலவரங்கள் காரணமாக ரூ. 255 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>சிறைகளில் வெடித்த கலவரம்</h2><p>இதற்கமைய, சட்டத்துறையில் தாமதங்களை தவிர்ப்பதற்காக, 2007ஆம் ஆண்டின் புனர்வாழ்வுச் சட்டத் திருத்த மசோதா எண் 54-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துமாறும், ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி அச்செயல்முறையை விரைவுபடுத்துமாறும் நீதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf7e16e-0f6d-4ad8-b60a-37866eeb0ec7/26-6a7ab3448406a.webp' />&nbsp;</p><p>
நீர்கொழும்பு, மஹர, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் வெடித்த கலவரத்தில் பத்து சிறை அதிகாரிகளும் 25 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

இதற்கமைய, மேலும் 100 க்கும் மேற்பட்ட கைதிகளும் சிறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிஸ்ஸங்க சேனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nissan-senadhipathi-bribery-commission-1786423335"></link>
            <id>https://tamilwin.com/article/nissan-senadhipathi-bribery-commission-1786423335</id>
            <summary type="text">அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நிசங்க சேனாதிபதி, இன்று காலை (11) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.&amp;nbsp;

கிரிஷ் பரிவர்த்தனை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நிசங்க சேனாதிபதி, இன்று காலை (11) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.&nbsp;</p><p>

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்ச ஆணையம் நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கையை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>குறித்த பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என கூறப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e5a9e7-66c9-4b41-b432-dc179135b65f/26-6a7ab0d5b3b12.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தில் திடீர் சோதனை: 4000 மீட்டர் தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/checking-at-kanthalay-banned-nylon-nets-recovery-1786423634"></link>
            <id>https://tamilwin.com/article/checking-at-kanthalay-banned-nylon-nets-recovery-1786423634</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் குளத்தில் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் குளத்தில் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்
அடிப்படையில், சுமார் 4000 மீட்டர் நீளமான நைலோன் மீன்பிடி வலைகளை கந்தளாய்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>இது தொடர்பான விசேட சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை</h2><p> </p><p>நேற்று மாலை கந்தளாய் குளப் பகுதியில் தடை செய்யப்பட்ட நைலோன் வலைகளைப்
பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய்
பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8829e2b7-c9b3-45b0-bebf-4905e06a1161/26-6a7aae670b1ec.webp' /></p><p>

இதனையடுத்து, கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர்
லக்மால் விஜேரத்னவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் பொலிஸ்
நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழுவினர் கந்தளாய் குளப் பகுதியில் விசேட
சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><h2>மீட்கப்பட்ட வலைகள்</h2><p>
</p><p>
இதன்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த சுமார் 4000 மீற்றர் நீளமான
தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுக்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a39ffd-9901-49d6-a8ad-2a5cdee84176/26-6a7aae67cbf0c.webp' /></p><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட வலைகள் இன்றைய தினம் (11.08.2026) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e488fff-f2c5-4c2c-863b-30df190fe00c/26-6a7aae6897c95.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313dd6f6-cc73-4c42-bf00-459a11eb693e/26-6a7aae696adec.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/error-in-the-computer-in-department-of-immigration-1786417770"></link>
            <id>https://tamilwin.com/article/error-in-the-computer-in-department-of-immigration-1786417770</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு&amp;nbsp; சரிசெய்யப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு&nbsp; சரிசெய்யப்பட்டுள்ளது.</p><p>

செயலிழந்த கணினி அமைப்பு இயல்பு நிலைக்கு சரிசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்</p><p>கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் காரணமாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பயண ஆவணங்களை விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த கோளாறு காரணமாக அவசரமாக பயண ஆவணங்கள் தேவைப்படும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.</p><h2><b>

ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் </b></h2><p>அத்துடன், ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை வழங்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2bfdab-5d46-401f-9bec-02b92ce483da/26-6a7a9668770cc.webp' /></p><p>திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவு மூலம், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய இரண்டின் கீழும் கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த பெப்ரவரி மாதமும் இதேபோன்று கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டு, பின்னர் அது வழமைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-11T04:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற சொகுசு கார் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-car-crashes-two-pedestrians-hospitalized-1786422044"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-car-crashes-two-pedestrians-hospitalized-1786422044</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச்சென்ற சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச்சென்ற சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சாரதி கைது</h2><p>வஸ்கடுவ-காலி வீதியில், கார் எதிர் திசைப் பாதைக்குள் விலகிச்சென்று, மூன்று பாதசாரிகள் மீது மோதி, இரண்டு சாலை எல்லை கம்பங்களை உடைத்துக்கொண்டு சாலையிலிருந்து விலகிச்சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25aa423b-94e4-4e61-813a-4ba121f70e3f/26-6a7aa6c2b00ea.webp' />&nbsp;</p><p>

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இதனையடுத்து சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T04:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-threat-eliminated-1786419640"></link>
            <id>https://tamilwin.com/article/flood-threat-eliminated-1786419640</id>
            <summary type="text">தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அதிகபட்ச மழைவீழ்ச்சி</h2><p> 

இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று (11.08.2026) முற்பகல் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல்நிலைப் படுகை பகுதிகளிலேயே பதிவாகியுள்ளது.</p><p>

அங்கு பதிவான மழைவீழ்ச்சி சுமார் 20 மில்லிமீற்றர் அளவை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed76281d-f56c-49a1-8736-a7e0ea4934d2/26-6a7aa32d99ebe.webp' /></p><h2>ஆற்று நீர்மட்டம்</h2><p> </p><p>நேற்றைய தினம் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் மழை பெய்த போதிலும், அப்பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. </p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
</p><p>
மழைவீழ்ச்சி இவ்வாறு குறைந்துள்ளதன் காரணமாக நாட்டில் உள்ள எந்தவொரு ஆற்றின் நீர்மட்டமும் விரைவாக உயரவில்லை என்பதுடன், வெள்ள அபாய நிலையும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T04:22:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தெய்வாதீனமாக தடுத்த காவலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-accident-avoided-by-gatekeeper-1786419268"></link>
            <id>https://tamilwin.com/article/train-accident-avoided-by-gatekeeper-1786419268</id>
            <summary type="text">அனுராதபுரம் - தஹியாயகம சந்திக்கு அருகில் தொடருந்து கடவை இயங்காமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தொடருந்து&amp;nbsp; கடவை காவலாளியின் சாதுரியமான செயலால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - தஹியாயகம சந்திக்கு அருகில் தொடருந்து கடவை இயங்காமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தொடருந்து&nbsp; கடவை காவலாளியின் சாதுரியமான செயலால் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.</p><p> கெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரஜரட்ட தொடருந்து நேற்று பிற்பகல் அனுராதபுரம் புதிய நகர் தொடருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. </p><p> இதன்போது தொடருந்து கடவை இயங்காததன் காரணமாக, மக்களும் வாகனங்களும் தொடருந்து பாதையைக் கடந்து இருபுறமும் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b> சாரதிக்கு எச்சரிக்கை</b></h2><p>எனினும், அந்தச் நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த தொடருந்து கடவை காவலாளி உடனடியாகச் செயற்பட்டு, தொடருந்து சாரதிக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தொடருந்து பாதையைக் கடந்து கொண்டிருந்த வாகனங்களையும் பொதுமக்களையும் எச்சரித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7883a48-86c9-4c05-a24a-a17478f62982/26-6a7aa129780df.webp' /></p><p>அதற்கமைய, எந்தவித ஆபத்துமின்றி தொடருந்து பாதையைக் கடப்பதற்கு வாகனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர், ரயிலில் பாதுகாப்பாக இயக்கப்பட்டுள்ளது. </p><p>தொடருந்து கடவைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தொடருந்து கடவை இயங்காமல் போனதாக தொடருந்து கடவை காவலாளி தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-11T04:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையால் தடுக்கப்பட்ட நியமனம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-employees-complained-1786419123"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-employees-complained-1786419123</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக்
காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக்
காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>எனவே, வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஐந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

சட்டத்தரணி முபாறக் அஸ்ஸம் வழிகாட்டலில், குறித்த முறைப்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார
அதிகாரியையும் சட்டத்தரணி அஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோர்
நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.</p><h3>முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு&nbsp;</h3><p>
</p><p>
எனினும், குறித்த சந்திப்பின் போது, நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான
சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d988ad4-e316-4bf4-8f05-601b50f7eae0/26-6a7a9d4789352.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட
ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக
மீறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி அஸ்ஸம் ஊடகங்களிடம்
பேசுகையில்,

"நாளை அல்லது நாளை மறுதினம், குறித்த அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான
வைத்திய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் அனுப்பப்படும் என
எதிர்பார்கிறோம். </p><p>அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும்,
விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் நம்புகிறோம்" என்றார். இதன்போது சட்டத்தரணி முஅஸ்ஸமுடன் சட்டத்தரணி ருடானி சாஹிரும்
பிரசன்னமாகியிருந்தார்.
</p><p>
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்,
இவ்விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல்
செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T03:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் அதிரடியால் சிக்கப்போகும் பலர்! உண்மையை அம்பலப்படுத்தினால் தப்பிக்க வழிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்த திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச்சட்டத்தை திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_aAwLUS6Hes" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T03:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கையில் மலேசியாவில் சிக்கிய ரத்மலானை சைமா - பேராதெனிய பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101"></link>
            <id>https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ரத்மலானை சைமா மேலதிக விசாரணைகளுக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் நேற்றிரவு (10) பேராதெனிய பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>சிவப்பு எச்சரிக்கை விடுப்பு</h2><p>
</p><p>
மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் ஆதரவுடன் சமீபத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94537af-41f0-4f3c-ad48-82be6cd18503/26-6a7a9436ba18d.webp' /></p><p>

இதன்போது அவருடன் இருந்த ரத்மலானை பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு, மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகநபர், ரத்மலானையை சேர்ந்த 41 வயதானவர் ஆவார். இவர், 2014-ஆம் ஆண்டில் பேராதெனிய பொலிஸ் பிரிவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் கடத்தி காயப்படுத்தியமை மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக்கொன்ற ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவாளி ஆவார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அதன்படி, கேள்விக்குட்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
இதற்கிடையில், மலேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேகநபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T03:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டும்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-to-increase-amid-fuel-shortages-1786417090"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-to-increase-amid-fuel-shortages-1786417090</id>
            <summary type="text">எரிபொருள் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயரக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America - BoFA) எச்சரித்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயரக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America - BoFA) எச்சரித்துள்ளது.</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது குறித்த உடன்பாடு எட்டப்படாவிட்டால் இந்நிலைமை தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராத சூழலிலும், உலகின் மிக முக்கியமான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதை போருக்கு முந்தைய நிலையை அடையாமல் இருக்கும் பின்னணியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கடுமையான பற்றாக்குறை&nbsp;</h2><p>

போருக்கு முன்னர் தினமும் 140 கப்பல்கள் வரை ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த நிலையில், தற்போது தினமும் 5 முதல் 10 கப்பல்கள் மட்டுமே பயணிப்பதாக பேங்க் ஒஃப் அமெரிக்காவின் சரக்கு மற்றும் வழித்தோன்றல்கள் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் பிரான்சிஸ்கோ பிளான்ச் (Francisco Blanch) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f310af91-5e92-49d5-8ca3-0e003b057f74/26-6a7a93d63e78e.webp' /></p><p> தற்போது சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியே கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதால், உலகளாவிய எரிபொருள் சந்தையை ஸ்திரப்படுத்த தினமும் 80 முதல் 100 கப்பல்கள் வரை தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

தற்போது தேவையான அளவு கச்சா எண்ணெய் பயன்பாட்டில் உள்ளபோதிலும், டீசல், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு சந்தைகளில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்த பிரான்சிஸ்கோ பிளான்ச், எரிசக்தி சந்தையின் முடிவுப் பொருட்களில் (final products) தற்போது தீவிரமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T03:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-by-his-daughter-in-law-1786413452"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-by-his-daughter-in-law-1786413452</id>
            <summary type="text">மாத்தளை மாவட்டத்தில் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். காயங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தளை மாவட்டத்தில் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக லக்கல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த கிடைத்துள்ளது.</p><p> உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.&nbsp;எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு</b></h2><p>உயிரிழந்தவர் மா ஓய, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b6b824-2d81-4db8-9433-3d721d8363de/26-6a7a88db426a6.webp' /></p><p>உயிரிழந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T02:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flocking-to-sri-lanka-1786414899"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flocking-to-sri-lanka-1786414899</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.



...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>


சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது மொத்தத்தில் 18% ஆகும்.</p><h2>சுற்றுலாப்பயணிகள் வருகை</h2><p>



மேலும், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b4910a-9a9e-494f-836b-7c1aec0be543/26-6a7a890ea3bf1.webp' />&nbsp;</p><p>


மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 06 வரை சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 1,386,228 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>


அவர்களில், 346,057 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 135,323 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்துள்ளனர் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T02:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெள்ள அபாய நிலை நீங்கியுள்ளது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-levels-decreasing-1786414138"></link>
            <id>https://tamilwin.com/article/flood-levels-decreasing-1786414138</id>
            <summary type="text">நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று காலை தெரிவித்துள்ளார்.</p><p>
அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி 20 மில்லிமீட்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நேற்று மழை பதிவாகியிருந்த போதிலும், அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி குறைந்த அளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீட்டருக்கும் குறைந்த அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>மழைவீழ்ச்சி குறைந்துள்ளமையினால் நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு எவ்வித வெள்ள அபாயமும் உருவாகவில்லை என எல்.எஸ்.சூரியபண்டார மேலும் உறுதிப்படுத்தினார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T02:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rupees-value-has-been-increased-1786412608"></link>
            <id>https://tamilwin.com/article/rupees-value-has-been-increased-1786412608</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, சமீப காலத்தில் ரூபாய் வீழ்ச்சியடையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p> 

அதற்கமைய, சமீப காலத்தில் ரூபாய் வீழ்ச்சியடையும் வேகம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>

சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பு நேற்று 340 ரூபாய் என்ற குறியீட்டிற்கு கீழே சரிந்துள்ளது.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">இலங்கை ரூபாவின் பெறுமதி</b></p><p>இது சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட பணவியல், நிதி முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளுக்கு பின்னர் மாற்றம் ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc168dc-2a58-48e0-817f-aeff853e9985/26-6a7a80f4966db.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா் 7.8 சதவீதம் மதிப்பு இழந்துள்ளது.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமையினால் வெளித்துறையில் தொடரும் அழுத்தம் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.</p><p> 

இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாண மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் நேற்று முறையே 330.88 மற்றும் 339.94 ரூபாயாக காணப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை இதன் மதிப்புகள் 331.01 மற்றும் 340.15 ரூபாயாக பதிவு செய்யப்பட்டன.
</p><p>
இதனால், டொலரின் விற்பனை விலை நேற்று, ஜுலை 08ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக 340 ரூபாய் என்ற நிலைக்குக் கீழே சரிந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-11T01:55:16+00:00</updated>
        </entry>
    </feed>
