<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T05:24:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம் - மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226</id>
            <summary type="text">டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p> 

ஷிரான் பாசிக் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், சிலரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><h2><b>
கறுப்புப் பணம்</b></h2><p>அதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைக் குழுக்கள் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c81b70-feeb-45a3-97b1-4fd1f2d1dcfb/26-6aa0e808903fb.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் தனசிறி அமரதுங்க, ஷிரான் பாஸிக்கின் போதைப்பொருள் வர்த்தக மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை சட்டப்பூர்வ சொத்துகளாக மாற்ற உதவி செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் ஹோட்டல்களை அமைக்க ஷிரான் பாஸிக்கிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் அதிகாரிகளால் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p>
</p><h3><b>
அநுர அரசின் நடவடிக்கை</b></h3><p>ஷிரான் பாஸிக்கின் தொலைபேசி மற்றும் வங்கிப் பரிமாற்றங்களின் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408a329a-07ff-4b2b-bbd4-1c2937549901/26-6aa0e809441cc.webp' /></p><p>பாஸிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 3 முன்னணி அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் நாட்களில் நேரடியாக வாக்குமூலம் பெற விசாரணைக் குழுக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.</p><p>வெள்ளவத்தை முதல் தெஹிவளை, கல்கிஸ்ஸ கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஹோட்டல்களை நீக்கப் போவதாக சமகால அநுர அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T05:10:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபருக்கும் சிக்கல் - விசாரணைக்காக துரத்தும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஊவா கேப்பிட்டல் கூட்டுறவு வங்கியில் (Uva Capital Co-operative Bank) நிகழ்ந்த சில முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.</p><h2>வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை</h2><p>இருப்பினும், நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b493b23-2fc2-4a5f-9aed-e1b121ab73e6/26-6aa0cc527e26b.webp' /></p><p>இதற்கமைய, அவரை மற்றொரு திகதியில் மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்&nbsp;சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.</p><p>அவர் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T05:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டுபிரசுரம் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seeking-support-for-the-protest-against-the-army-1788928763"></link>
            <id>https://tamilwin.com/article/seeking-support-for-the-protest-against-the-army-1788928763</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம்
ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம்
ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் எதிர்வரும் 11.09.2026
அன்று இடம்பெறவுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகர பிதா
விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><h2>துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை</h2><p>அதன்படி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரி&nbsp;பருத்தித்துறை நகரில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a57f79ac-dd1d-4579-bc79-42e23d2969c2/26-6aa0e8510c271.webp' /></p><p>துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.</p><p>யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கழிந்தும் இதுவரை பருத்தித்துறை பிரதான
தபாலகம், மற்றும் பருத்தித்துறை நீதிமன்றம் ஆகியவற்றிற்கான காணிகள்
விடுவிக்கப்படாமையினாலேயே குறித்த மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:02:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச கைது விவகாரம்! மக்களை திசை திருப்பும் நடவடிக்கை - ரோஹித விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapksa-arrested-latest-update-1788928170"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapksa-arrested-latest-update-1788928170</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள
நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று
எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள
நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், </p><p>"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தே தற்போதைய
அரசு ஆட்சிக்கு வந்தது. எனினும், கடந்த இரண்டு வருடங்களில் மக்களின்
எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>நாமல் ராஜபக்சவின் கைது&nbsp; நடவடிக்கை&nbsp;</h2><p>

டீசல், பெட்ரோல் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசு வாக்குறுதி
அளித்திருந்த போதிலும், தற்போது அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>எரிபொருள் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன.
தேநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe3901a-2c56-4689-842c-225d9f4dcc80/26-6aa0e1ea1b17a.webp' /></p><p>
</p><p>
வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் விவசாயிகளுக்காக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியைத் தடுக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு
முயற்சிக்கிறது.</p><p> எனினும், இத்தகைய நடவடிக்கைகளால் திட்டமிட்டபடி மக்கள்
பேரணியைத் தடுத்துவிட முடியாது.

2015ஆம் ஆண்டிலும் அரச பலத்தை வெளிப்படுத்தித் தமக்கு மக்கள் ஆதரவு
இருப்பதாகக் காட்டிய அரசு இறுதியில் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தற்போதைய அரசு
நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் ஊடாக
எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிப்பது தற்காலிகமான நடவடிக்கையாகவே அமையும். அது
நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-sri-lankans-arrested-in-kuwait-1788928345"></link>
            <id>https://tamilwin.com/article/two-sri-lankans-arrested-in-kuwait-1788928345</id>
            <summary type="text">குவைத் நாட்டின் சல்மியா நகரில் போதைப் பொருட்களைத் தம் வசம் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் நாட்டின் சல்மியா நகரில் போதைப் பொருட்களைத் தம் வசம் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 37 போதைப் பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயற்சி</h2><p>
சம்பவம் தொடர்பில் குவைத் உ‌ள்துறை நேற்று (08|09|26) வெளியிட்டுள்ள செய்தியில், ஹவாலி ஆளுநரக பாதுகாப்பு பணியகத்தின் ரோந்துப்படை சார்பில், அப்பகுதியில் வழக்கமான சோதனை பணிகளை மேற்கொண்டிருந்த போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47fabec-03fc-4af2-8801-1af0ae5b3a2d/26-6aa0e15b8eb84.webp' /></p><p>

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இந்த இருவரையும் ஒரு திறந்த வெளியில் எதையோ தேண்டிக்கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.</p><p>இந்த விசாரணைக்காக பொலிஸார் அவர்களை அணுகியபோது ​​சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயன்ற போது பொலிஸார் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர்.</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>இதனைத்தொடர்ந்து இரு நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 37 பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>இவற்றில், முதல் நபரிடமிருந்து 27 பொதிகளும், இரண்டாவது நபரிடமிருந்து 10 பொதிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைக்காக இருவரும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் வீதியை விட்டு விலகி கார் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-veered-off-the-a9-road-1788926356"></link>
            <id>https://tamilwin.com/article/car-veered-off-the-a9-road-1788926356</id>
            <summary type="text">முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 

குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. </p><p>

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

விபத்தின் போது கார் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p> </p><p>

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da42966f-f5b9-47d1-892a-7cd198301bfd/26-6aa0e13cb2528.webp' /></p><p> </p><p>

ஏ9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் முன்னரும் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள்! நாமலை கடுமையாக விமர்சித்த ஆளுங்கட்சி எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ruling-party-mp-strongly-criticizes-namala-1788926009"></link>
            <id>https://tamilwin.com/article/ruling-party-mp-strongly-criticizes-namala-1788926009</id>
            <summary type="text">மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சிறையில் உள்ளவர்கள் இன்று
நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை
வழங்குவது வேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சிறையில் உள்ளவர்கள் இன்று
நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை
வழங்குவது வேடிக்கையாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தருவன் மதரசிங்ஹ தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோட்டார் வாகனக் கட்டளைச்
சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஊழல், மோசடி சம்பவங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள்</h2><p>
</p><p>
"ஊரில் உள்ளவர்கள் ஏதாவது குற்றச்செயலுக்காக சிறைக்குச்சென்றால்
வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள். பிறருடன் கதைக்கக்கூட மாட்டார்கள்.
ஆனால், நாடாளுமன்றத்தில் அவ்வாறான நிலைமையைக் காண முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33af6d67-ea48-446b-aa20-588d036a9ffb/26-6aa0dcb3eede1.webp' /></p><p>

ஊழல், மோசடி சம்பவங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் இன்று
நாடாளுமன்றத்துக்குள் வந்து பொருளாதார மேம்பாடு பற்றிக் கருத்துத்
தெரிவிக்கின்றார்கள்.</p><p> விவசாயிகளுக்கு உரம் இல்லை என்று கூறும் நாமல்
ராஜபக்ச தான், அன்று கழிவு உரத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை
அழிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தினார்.</p><h2>எயார்பஸ் கொள்வனவு விவகாரம்</h2><p>
</p><p>
அரசியல் பழிவாங்கலுக்காகவே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என்று
எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிடுகின்றார்.</p><p>

எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆஸ்திரேலியா,
பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்து
நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2c5ef24-e3a1-4be5-b671-63ad57ade278/26-6aa0dcb4a185a.webp' />&nbsp;</p><p> </p><p>100 மில்லியன் ரூபா இலஞ்சம்
பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் போதெல்லாம் அவர்களின் உடல்நலம் குறித்து வெளிநாட்டு
மருத்துவமனைகளே அறிக்கை சமர்ப்பிக்கின்றன.</p><p> நாட்டில் உள்ள அரச மருத்துவக்
கட்டமைப்பை வினைத்திறனாக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது இவர்கள்
அதற்கு எதிராகச் செயற்படுகின்றார்கள் என்றார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் ஜனநாயக அழிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் : சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-government-s-destruction-of-democracy-1788926422"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-government-s-destruction-of-democracy-1788926422</id>
            <summary type="text">அரசு விரைவாக ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை
மிக மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
எச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு விரைவாக ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை
மிக மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
எச்சரித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"காலையில் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசமைப்பின் 121ஆவது
பிரிவின் கீழ் கேள்வியொன்றை முன்வைத்த போதிலும், அது தொடர்பாகக் கருத்துக்களை
முன்வைக்க எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.</p><h2>அரசாங்கத்தின் மீது கடுமையான சாடல்&nbsp;</h2><p>
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின்
எண்ணிக்கை தொடர்பாகச் சபாநாயகர் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p> துலார
குணதிலக்க, சாந்த ஜயதிலக்க உள்ளிட்டோரும் இதற்கு எதிராக மனுத் தாக்கல்
செய்திருந்த போதிலும், திறந்த நீதிமன்றத்தில் அழைப்பு விடுக்கப்படாததால்
அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. </p><p>மனித உரிமைகளை மீறுவதற்காக
அல்லாமல், அவற்றைப் பாதுகாப்பதற்காகவே அரசு ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த மனுக்களுக்குச் செவிசாய்க்காமல் மனு நடைமுறை முழுமையடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6e0ed2-9da7-47a7-8453-f81ed1173240/26-6aa0d9d81e133.webp' /></p><p> </p><p>அதனைப்
பூர்த்தி செய்தே 22ஆவது திருத்தம் தொடர்பான அபிப்பிராயத்தை
நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

'அனைவரின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும்' என்ற கோட்பாட்டைப் பின்பற்ற
வேண்டும். </p><p>நெடுஞ்சாலைகளை அமைப்பது போல், அரசு அதிவேகமாக ஜனநாயகத்தை அழிக்கும்
நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.

சுதந்திரமான நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நேரடி வெளிநாட்டு முதலீடுகள்
நாட்டைவிட்டு வெளியேறிவிடும்.
</p><p>
நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குச் சர்வதேச நம்பிக்கை அவசியம். அந்த
நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காகப் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின்
தலைவர் ஸ்டீபன் திரூ இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, நீதி அமைச்சரையும்
செயலாளரையும் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அது வழங்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து இந்த அரசுக்கு எந்த
அறிவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d55e0ff3-56d7-4128-a5a8-7e8bb7b13259/26-6aa0d9d7699b5.webp' /></p><p>

22ஆவது திருத்தம் பரிசீலிக்கப்பட்டபோது அனைத்து மனுக்களுக்கும்
செவிசாய்க்கப்படவில்லை. ஒருவர் தனது சொந்த வழக்குக்குத் தானே அமர்ந்து முன்னிலையாக முடியாது என்பதால், இதற்கு முழுமையான அமர்வு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
</p><p>கௌரவமிக்க நீதிமன்றத்துக்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்புகளை நாம்
எதிர்க்கின்றோம்.

மேலும், சுகாதாரம் என்பது ஓர் அடிப்படை உரிமை என்றும், அதனைப் பலப்படுத்த
வேண்டும் என்றும் எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரஸ்தாபித்த தற்போதைய
ஜனாதிபதி, இப்போது தமக்குத் தோன்றியபடி மருத்துவமனைக்குச் செல்ல முடியாது
என்று கூறுகின்றார். மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடுகளே இதற்கு
முக்கியக் காரணமாகும்.</p><p>

'அஸ்வெசும' நிவாரணம் வெட்டப்படுவதுடன், நெல்லுக்குத் தருவதாகக் கூறிய 150
ரூபாய் உத்தரவாத விலையும் வழங்கப்படவில்லை. மாறாக 120 ரூபாவே வழங்கப்பட்டு
விவசாயிகளுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>பொய்களைக் கூறிக்கொண்டு
நாடு முழுவதும் செல்வதற்குப் பதிலாக, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கைப்
பிரகடனத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farewell-to-senior-dig-of-police-ajith-rohana-1788925754"></link>
            <id>https://tamilwin.com/article/farewell-to-senior-dig-of-police-ajith-rohana-1788925754</id>
            <summary type="text">வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகள் பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டாக்டர் அஜித் ரோஹண, தனது நீண்டகால சேவையை நிறைவு செய்யவுள்ளார்.
</p><p>
அவரது ஓய்வை முன்னிட்டு செப்டம்பர் 8ஆம் திகதி குருநாகல் வெலகெதர மைதானத்தில் பொலிஸ் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.</p><h2>&nbsp;கௌரவ கலாநிதிப் பட்டம்</h2><p> </p><p>அவரது அதிகாரப்பூர்வ ஓய்வு திகதி செப்டம்பர் 11,&nbsp; 2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
38 ஆண்டுகால சேவையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் DIG பதவிக்கு உயர்ந்த அதிகாரி என்ற சிறப்பையும் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b34804-1efd-4901-9a70-559cb8458b22/26-6aa0d73b8f6e9.webp' /></p><p>
</p><p>கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கியதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானார். </p><p>ஊரடங்கு,&nbsp; பயணக் கட்டுப்பாடுகள், பொலிஸ் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர் வழங்கிய விளக்கங்கள் மூலம் பொதுமக்களிடம் பரவலாக அறிமுகமானார்.
</p><p>
2020ஆம் ஆண்டு, பொதுச் சேவைக்கான அவரது பங்களிப்பை பாராட்டி கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-is-vasudeva-nanayakkara-statement-1788925213"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-is-vasudeva-nanayakkara-statement-1788925213</id>
            <summary type="text">&quot;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில்
எவ்வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில்
எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்
தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகளின்
இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் போலிப்பிரசாரங்கள்
பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,</p><h2>பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தல்</h2><p> "ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தாமல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற
முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவது சாதாரண சட்ட
நடைமுறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12f65a37-baaa-4702-a260-f47939f3b7dc/26-6aa0d5e7f221b.webp' /></p><p> </p><p>எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.

அந்தவகையில், நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும்
காணவில்லை.</p><p> சட்டத்தை நடைமுறைபடுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன்
கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்." - என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T03:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-regulations-for-passanger-vehicles-1788923865"></link>
            <id>https://tamilwin.com/article/new-regulations-for-passanger-vehicles-1788923865</id>
            <summary type="text">&amp;nbsp;பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது.
</p><p>பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் ஒவ்வொரு 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறையோ அல்லது 3 மாதங்களுக்குள்ளோ அடிப்படை வாகன தகுதிப் பரிசோதனை சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் வர்த்தமானி அறிவித்தல்</h2><p>இதற்கமைய, 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனத்தின் அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99ff6331-191b-46b2-a324-63cf2bf717da/26-6aa0cfdad1ce3.webp' /></p><p>
பயணிகள் பேருந்துகள், வேன்கள், பாடசாலை வேன்கள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் உட்பட பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், சொந்த பயன்பாட்டுக்கான தனிநபர் (தனியார்) வாகன உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
இந்த வாகனப் பரிசோதனையை பொதுவாக 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரையிலான கட்டணத்தில் செய்ய முடியும். </p><p>அண்மைக்காலமாக இடம்பெற்ற பல வீதி விபத்துக்களில் பயணிகள் பேருந்துகளின் பிரேக் (Brake) அமைப்பு முறையாகப் பராமரிக்கப்படாமையே காரணம் என்பது தெரியவந்துள்ளது.</p><h2>வாகன பரிசோதனை</h2><p> </p><p>
கடந்த கால விபத்து அறிக்கையொன்றில், பேருந்தின் ஒரு பக்க பிரேக் ஒரு வருடம் முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
</p><p>மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இத்தகைய கவனக்குறைவுகளால் பலரின் உயிர்கள் விபத்துக்களில் பறிபோகின்றன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மேலும், என்.வீ.க்யூ தகுதி பெற்ற தொழில்வல்லுநர்கள் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன பராமரிப்பு நிலையங்களில் இந்த வாகனப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் அத்தகைய தொழில்வல்லுநர்கள் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T03:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியினரால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T03:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் அழகனவன் தேரேறி அருள்பாலிக்கும் ஆனந்தக் காட்சி - LIVE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-festival-2026-1788923115"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-festival-2026-1788923115</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்றாகும்.

கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்றாகும்.</p><p>

கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் திருவிழா நாளையதினம்(10) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வருகின்றது. </p><p>

இந்த நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் தேர் ஏறி ஊர்வலம் வரும் நல்லூர் அழகனவன் அலங்காரக் கந்தனாய் புறப்பட்டு மக்களுக்கு காட்சியளித்துள்ளார். </p><p>

நேற்றையதினம் சப்பரத் திருவிழா நிறைவுற்ற நிலையில், இன்றையத் தேர்த்திருவிழாவின் பின்னர் நாளையதினம் தீர்த்தத் திருவிழாவும், கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.
</p><p>
நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ள நிலையில், புலம்பெயர் மக்களும் நல்லூரானை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6F36aLxtwjU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T03:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/futa-strike-on-today-1788922960"></link>
            <id>https://tamilwin.com/article/futa-strike-on-today-1788922960</id>
            <summary type="text">பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.இலங்கையில் அரச பல்கலைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.</p><p>இலங்கையில் அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் தீவிர பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நிலவும் நெருக்கடிகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை வழங்காத காரணத்தினால், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>புதிதாக 50 பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை குறித்தும் அவர் இங்கு கருத்து தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4e0472-5576-438e-a34b-64a261f9143c/26-6aa0cc523b368.webp' /></p><p> </p><p>
கல்வியை விரிவுபடுத்துவது ஒரு நேர்மறையான விடயம் என்ற போதிலும், தற்போதுள்ள 17 அரசு பல்கலைக்கழகங்களைக் கூட சீராகப் பராமரிக்க முடியாத சூழலில், புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
எனவே, தற்போதைய பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பாதுகாப்பதற்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>கடந்த வாரம் மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், அரசாங்கத்தின் மௌனப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சாருதத்த இலங்கசிங்க மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>

அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி</b></h2><p><i>“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா</i>..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc742a5-fa7d-4a50-9aef-2c48b5106ee2/26-6aa0c09b01f70.webp' /></p><p>“<i>சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது</i>” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><i>

வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே </i>என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T02:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு புதல்வர்களின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு தீர்மானித்துள்ளது. </p><p>

குறித்த இருவரும் மூன்று வர்த்தகர்களை பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><h2><b>

 ஊழல், மோசடி</b></h2><p>இந்த மோசடி தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4ce03ee-f5b5-4aa1-b6d8-09df23d45259/26-6aa0b586b8501.webp' /></p><p> 

முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்தப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஜாமுனி சமந்த துஷாரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-09T02:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் டீசல் நெருக்கடி! பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமென அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242"></link>
            <id>https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242</id>
            <summary type="text">லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
</p><p>
தற்போது, ​​பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 650 எரிபொருள் நிலையங்களில் மட்டுமே டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.</p><h2>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலைய விலைகள்&nbsp;</h2><p>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் விலைகள் குறைக்கப்படும்போது, ​​சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதே அளவிற்கு எரிபொருள் விலையை குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a349f9f7-11f9-45dc-ba26-6668951a77f1/26-6aa0bd9a74870.webp' /></p><p> </p><p>தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட அந்த தொகையை வழங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டு, நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. </p><p>இருப்பினும், ஒப்புக்கொண்டபடி அரசாங்கம் அந்த தொகையை வழங்கத்தவறியதே எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிலையங்கள், சினோபெக் நிறுவனத்திற்குச் சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்குச் சொந்தமான 100 எரிபொருள் நிலையங்கள் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் கடிதம்</h2><p>
</p><p>
இதற்கிடையில், லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம், லங்கா ஐஓசியின் நிர்வாக பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில்,</p><p>செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் விநியோகஸ்தர்களுக்கு ஆட்டோ டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சமீபத்திய முடிவு, போக்குவரத்து, தொழில்துறை, நகர கட்டுமானம் மற்றும் பிற அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்கனவே கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e783bb10-192b-4577-b65e-2130d228fd12/26-6aa0bd9b2931b.webp' /></p><p>
</p><p>
வாடிக்கையாளர்கள் ஏனைய விநியோகஸ்தர்களுக்கு மாறிவிட்டால், அவர்களின் வணிகத்தை மீண்டும் பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்றும், இவை விநியோக வலையமைப்பு மற்றும் டீசல் விற்பனையில் நீண்டகால பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, இது தொடர்பாக பொருத்தமான வழிமுறையை வகுக்குமாறு லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T02:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460</id>
            <summary type="text">அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>நாட்டின் டாலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்குப் பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3ed18-a99b-4c83-ac83-35cb07580736/26-6aa0b2ed679b3.webp' /></p><p>
நாடாளுமன்றத்தின் 1,500 ஊழியர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினாலே நாட்டின் பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>பேரணிகளுக்கு யாரைக் கொண்டு வந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால முறையான வேலைத்திட்டங்களே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>நாட்டின் டொலர்களைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசாங்கம் பேரணிகளை நடத்தி வருகின்ற போதிலும், பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பட்டினியால் தவித்து வருவதாக திலித் ஜயவீர மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க அம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2028 இல் இலங்கைக்கு ஆபத்தா.. நாமலை காப்பாற்ற புது வியூகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economy-crisis-namal-arrest-1788913753"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economy-crisis-namal-arrest-1788913753</id>
            <summary type="text">2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் (பொதுக்கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை) தற்போது நாடு இல்லை. இலங்கை ஒரு மீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் (பொதுக்கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை) தற்போது நாடு இல்லை. இலங்கை ஒரு மீட்சிப் பாதையில் நகர்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த 2028 ஆம் ஆண்டுக்கான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் பொருளாதார நிலை என்பது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்வதிலும், சட்டப்பூர்வமாக டொலர் வருமானத்தை ஈட்டுவதிலும், அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது.</p><p>

2027-2028 காலகட்டத்திற்குப் பிறகு, பழையபடி மானியங்களை வழங்குதல் அல்லது வரி வருமானத்தைக் குறைத்தல் போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு அரசு திரும்புவது மட்டுமே ஆபத்தை ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக சட்ட ரீதியான நடைமுறையாகும்.
</p><p>
எதிர்க்கட்சிகள் இதனை 'அரசியல் பழிவாங்கல்' என்று கூறுவது மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு இலகுவான முயற்சியே தவிர, அது சட்ட ரீதியான குற்றச்சாட்டு அல்ல என்று தெரிவித்தார்.</p><p>

இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UpUevpnIwz4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T00:34:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிக்கு இலஞ்சம் கொடுத்த நீதிமன்ற ஊழியர்! சரண குணவர்தன வழக்கில் ஏற்பட்ட திருப்பம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857"></link>
            <id>https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உதவி செய்வதாக கூறி ரூ. 750,000 இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று (08.09.2026) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எவ்வாறு இலஞ்சம் கொடுக்கப்பட்டது</span></p><p>மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் "மாதிவெல வீடுகள்" ஊழல் வழக்கே இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது. </p><p>

இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கியமான டிஜிட்டல் சான்றுகளும் புலனாய்வாளர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பரிமாறப்பட்ட செய்திகள் மற்றும் பணச் செலுத்தல்களை உறுதிப்படுத்தும் ரசீதுகளும் அடங்குவதாக கூறுகின்றனர்.
</p><p>
இங்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், வழக்கினை விசாரணை செய்யும் மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புப் பட்டுள்ளாரா என்பதில் இதுவரை எந்தவொரு சான்றும் வெளிவரவில்லை. இச்சம்பவம் குறித்து நீதிபதியே முறைப்பாடு செய்துள்ளார்.
</p><h2>
வழக்கின் பின்னணி
</h2><p>
2006-2007 காலப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பானது.
</p><p>
மாதிவெலவில் அமைந்துள்ள வீடு ஒன்றை அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வாடகைக்கு எடுக்கும் போது, அதன் உரிமையாளருக்கு ரூ. 1,980,000 (19.8 இலட்சம்) குத்தகை முன்பணத்தை சட்டவிரோதமாக விடுவிக்க சபையின் அதிகாரிகளைத் தூண்டியதன் மூலம் சரண குணவர்தன இலஞ்ச சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2022 இல் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
முறைப்பாட்டாளரின் சாட்சியங்களின்படி, அந்த வீடு சரண குணவர்தனவின் முன்னாள் மனைவியான குமாரி அபேவிக்ரம என்பவருக்குச் சொந்தமானது என்றும், பின்னர் அது வேறொருவருக்கு மாற்றப்பட்டு, அவரிடமிருந்து அபிவிருத்தி லொத்தரை் சபைக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3124f060-49c8-4eeb-a987-807ced4533bd/26-6aa0a8c35aafe.webp' /></p><p>2026 ஜூன் 9 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், நான்கு தனித்தனி வழக்குகளில் சரண குணவர்தனவைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். </p><p>18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்குப் பெயரளவில் 72 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவை ஒவ்வொரு வழக்கிற்குள்ளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தண்டனை 16 ஆண்டுகளாக மாறியது. </p><p>ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பிற்கு எதிராக சரண குணவர்தன 2026 ஜூலை 1 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு தனித்தனி மேன்முறையீடுகளைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய கப்பல்கள் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பறந்த செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598</id>
            <summary type="text">சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
</p><p>அமெரிக்க தூதரகத்தின் இந்த அறிவிப்பையடுத்து, இது குறித்து பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சுக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52da0fcc-1b9d-42a2-b5c3-1a0d39845b6b/26-6aa0a7bfc34a4.webp' /></p><p>
</p><p>குறிப்பிட்ட கப்பல்கள் பயணிக்கக்கூடிய பாதைகள் குறித்து இலங்கை கடற்படை தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.</p><p>
அந்தக் கப்பல்கள் எவையும் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்குள் நுழையவில்லை என அமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில், இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் இருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>இவற்றில் ஈரானியக் கொடி ஏந்திய கப்பல்களும், பிற வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் அடங்கும். எனினும், அவை எவையும் இலங்கையின் உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இக்கப்பல்கள் இலங்கை அரசாங்கத்திடம் எந்தவித வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை; அரசாங்கமும் அத்தகைய வசதிகள் எதையும் வழங்கவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பொதுவாக வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தங்கியிருப்பது சாதாரணமான ஒரு விடயமாகும்.
</p><p>குறித்த கப்பல்கள் குறித்துத் தொடர்ந்து அவதானம் செலுத்துவதைத் தவிர, அவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வேறு எந்தவித தலையீடுகளையோ அல்லது நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் தெளிவுபடுத்தினார்.&nbsp;&nbsp;</p><p>கடந்த மார்ச் மாதம் இலங்கையின் தென் கடற் பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்க கடற்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஈரானிய படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை விடுவிக்க சர்வதேசத்தின் அழுத்தமா..! ஜெனிவாவில் நாமலுக்காக ஒலித்த குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆதரவாளரான மிலிந்த ராஜபக்ச என்பவர் நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக ஐநா சபைக்கு சென்று உரையாற்றியுள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில், ஈழத் தமிழர் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் (ஐநா சபை) இலங்கையை விமர்சித்தபோது, ராஜபக்ச குடும்பத்தினர் அந்த அமைப்புகளைத் தாழ்வாகப் பேசி வந்தனர். </p><p>

ஆனால் தற்போது, நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக அதே ஐநா சபையை அவர்கள் நாடியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.</p><p>

ஒரு அரசியல்வாதியின் கைதுக்காக சர்வதேச மட்டத்தில் இவ்வளவு தூரம் சென்று குரல் கொடுப்பது, பொதுவான நீதிக்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே நடப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
</p><p>
ஜெனீவாவில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது, வெறும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலமே பேசும் வாய்ப்பைப் பெற்றதாகவும் அல்லது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு மேலோட்டமான செயலாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தவிடயங்கள் பற்றி கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sNebaLlHbak" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டும் – நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438"></link>
            <id>https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438</id>
            <summary type="text">லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் முன்னிலையில் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
</p><p>
நீதிமன்றத்தின் முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு என தனியான சட்டம் எதுவும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.
</p><p>நீதித்துறை நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஆணைக்குழுவிற்கு உள்ளது என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7344f7-cb96-4f3e-9076-82e41e282693/26-6aa0a337b48b2.webp' /></p><p>லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் துல்லியமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து, "மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன" என்று மட்டும் வெறுமனே குறிப்பிடுவதைத் தவிர்க்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் அல்லது சாட்சியங்களின் சுருக்க அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பாக ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும்போதே தலைமை நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இரு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, அவர்கள் முழு ஆணைக்குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே நீதிமன்றம் கருதுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பாகத் தேவையான சரியான தகவல்களையும் சான்றுகளையும் சமர்ப்பிக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>அவ்வாறு தகவல்கள் சாட்சியங்களை சமர்ப்பிக்காமல் இருக்கக் கூடாது என நீதவான் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T00:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் : மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-twist-revealed-in-the-court-of-appeal-1788853783"></link>
            <id>https://tamilwin.com/article/major-twist-revealed-in-the-court-of-appeal-1788853783</id>
            <summary type="text">கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு "உப பிரதேச செயலாளர்"
மட்டுமே தவிர, அவர் "பிரதேச செயலாளர்" அல்ல என்ற முக்கிய திருப்பம் திறந்த
நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர்
முன்னிலையில் நேற்று (07.09.2026) இக்கூட்டு மனுக்கள் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><h2>வழக்கின் விவரங்கள்</h2><p>கல்முனையன்ஸ் போரம் அமைப்பின் சார்பில் முபாரிஸ் எம். ஹனீபாவினால் தாக்கல்
செய்யப்பட்ட எழுத்தாணை மனுவுடன் (WRT/645/23), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தவராசா கலையரசனின் மனு (WRT/67/23) மற்றும் ஏ.எம். நஸீரின் மனு ((WRT/300/18)
ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33375bf-4462-4572-b410-7290e009988e/26-6aa0e8d346ebc.webp' /></p><p>கலையரசனின் மனுவில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகினர்.
</p><p>
மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரின்
வழிகாட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா முன்னிலையாகியிருந்த நிலையில்,
கலையரசனின் மனுவை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுமார் ஒரு
மணி நேரத்திற்கும் மேலாகத் தனது சட்ட வாதங்களை முன்வைத்தார்.&nbsp;</p><p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி
"பிரதேச செயலாளர்" அல்ல; மாறாக அவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" (ADS) மட்டுமே.
</p><p>எனவே, பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையோ அல்லது பதவிக்
குறியீடுகளையோ அவர் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என
மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>நீதிமன்றில் எட்டப்பட்ட திருப்பம்</h2><p>விசாரணையின் போது, 5ஆவது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம்
நிலைப்பாட்டைக் கேட்டறிந்தபோது, அவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" மட்டுமே
என்பதைத் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82949e69-b5f7-4b3b-ab05-75a7c04846ed/26-6aa0e8d42001c.webp' /></p><p>இதனைத்
தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்புச் சட்டத்தரணியும், இதுவே அரசின்
நிலைப்பாடும் ஆகும் என உறுதிப்படுத்தினார்.
</p><p>
அரச அதிகாரியாக இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக
முன்னிலையாகுவதிலிருந்து விலகியிருந்த நிலையில், அவர் தனக்காகத் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவரையே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
வழக்கின் இறுதி விவாதங்களுக்காக எதிர்வரும் 07.10.2026 மற்றும் 02.11.2026
ஆகிய தினங்களை நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.</p><p>வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள்
இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், “முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையான
கல்முனையின் எதிர்காலம் நீதிமன்றத்தின் கைகளில் தங்கியுள்ளமையினால்,
பொதுமக்கள் அனைவரும் இந்த விடயத்தில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும்” எனக்
கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:04:19+00:00</updated>
        </entry>
    </feed>
