<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-19T16:17:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு.. அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மோடியின் நெருங்கிய நண்பர்</h2><p>தனது 'X' தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் மோடி, இலங்கையின் உயரிய சிவில் விருதான ஸ்ரீலங்கா ரத்னாவை ஏற்றுக்கொண்டவர் என்பதோடு இலங்கையின் நீண்டகால நண்பராகவும் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12841f69-88ca-4726-8436-19aacd55933f/26-6aae4672a6f19.webp' /></p><p>
</p><p>மேலும், "உங்கள் நண்பரும் ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசரக் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு வருமாறு நான் வலியுறுத்துகிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவதற்காக, இளவரசர் சல்மானிடம் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டுப் பேசுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">&lt;Appeal to President&gt; I urge President <a href="https://x.com/anuradisanayake?ref_src=twsrc%5Etfw">@anuradisanayake</a> to bring <a href="https://x.com/hashtag/Anojan_Sivarasa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Anojan_Sivarasa</a>’s desperate plight to the urgent attention of your friend, recipient of &quot;SriLanka Rathna&quot; Prime Minister Narendra Modi. <br><br>Given PM Modi’s close ties with Saudi Prime Minister and Crown Prince… <a href="https://t.co/4wFbn1RoZh">pic.twitter.com/4wFbn1RoZh</a></p>&mdash; Mano Ganesan (@ManoGanesan) <a href="https://x.com/ManoGanesan/status/2101198855983509724?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UlxAFBUeGpA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><b><i>You may Like this...</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e7LboISYa4M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-19T16:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251</id>
            <summary type="text">கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய 62 வயதான சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய சிறுவன் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கையர் கைது</b></h2><p>பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>சந்தேக நபரான இலங்கையர் மீது தகாத வகையில் செயற்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>

குறித்த நபரால் எவராது பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-19T15:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-in-a-van-with-ice-drugs-and-cash-1789830868"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-in-a-van-with-ice-drugs-and-cash-1789830868</id>
            <summary type="text">சம்மாந்துறைப் பகுதியில் நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகையான &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன்&amp;nbsp; கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறைப் பகுதியில் நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகையான 'ஐஸ்' போதைப்பொருளுடன்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று
(18) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில்
வைத்து அவர் பயணித்த வானுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருளும்,
போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்
பணத்தொகையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e088c9-1771-4486-8301-b7f5ec26ad68/26-6aaea7844ce1a.webp' /></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்துக்கு எதிரான பரந்துபட்ட கூட்டணி! ரணில் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-broad-anti-government-alliance-1789829960"></link>
            <id>https://tamilwin.com/article/a-broad-anti-government-alliance-1789829960</id>
            <summary type="text">ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.
</p><p>
இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கான உத்தேச தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.</p><h2>பிரதான நோக்கம்&nbsp;</h2><p>கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்களை இலகுபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f3c3b8-7426-4aca-8573-ebfda1f41522/26-6aaea566b2eeb.webp' /></p><p>
</p><p>
குறித்த ஆவணம் ஐக்கிய தேசியக் கட்சிக்காக மாத்திரம் தயாரிக்கப்படவில்லை எனவும், பெலவத்தையைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
பொதுவான தேசிய வேலைத்திட்டமொன்றின் ஊடாக அரசியல் கட்சிகளிடையே சாத்தியமான பரந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீடுகளை ஊக்குவித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:08:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-lifts-economic-sanctions-on-eritrea-1789829714"></link>
            <id>https://tamilwin.com/article/us-lifts-economic-sanctions-on-eritrea-1789829714</id>
            <summary type="text">செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும்
நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
நீக்குவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும்
நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
2021 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால்
எரித்திரியாவின் ஆளும் கட்சி மற்றும் இராணுவத்தைக் இலக்குவைத்து இந்தத் தடைகள்
விதிக்கப்பட்டிருந்தன.
</p><p>
எத்தியோப்பியாவின் திக்ரே (Tigray) பிராந்திய மோதலின் போது எரித்திரியப்
படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே
இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.</p><h2>நியாயமற்ற தடை</h2><p>
</p><p>
செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சையாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து
வரும் நிலையிலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்ட சூழலிலும், செங்கடலின் உபாய
முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள எரித்திரியாவின் அமைவிடம்
அமெரிக்காவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846a258-2de9-4582-b071-ca1d5a0cdd4c/26-6aaea2545d7d7.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், எரித்திரியா மீது பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 'தேசிய அவசரகால
நிலை' முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை எரித்திரிய அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன்,
தங்களது நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நியாயமற்ற தடைகளை
நீக்கியமைக்காக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்திற்குத் தனது நன்றியையும்
தெரிவித்துக் கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை சந்தையில் நடக்கும் அநீதி..! பாதிப்படையும் வியாபாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vendors-allege-unfair-treatment-valvettithurai-1789827141"></link>
            <id>https://tamilwin.com/article/vendors-allege-unfair-treatment-valvettithurai-1789827141</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி இடம்பெறுவதாக சந்தை வியாபாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று(19) ஊடகங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி இடம்பெறுவதாக சந்தை வியாபாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், </p><p>கடந்த பல வருடங்களாக 220 ரூபாவாக இருந்த நில வாடகை திடீரென 1,420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>&nbsp;மரக்கறி சந்தையில் அநீதி</h2><p>

நில வாடகை அதிகரிப்பு தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு பல தடவைகள் எழுத்துமூலம் அறிவித்த போதிலும், தமது தரப்பு நியாயத்தை சபை கவனத்தில் கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
</p><p>
மேலும், தாம் வரி செலுத்தவில்லை எனக் கூறி, தமது வியாபாரப் பொருட்களை நகர சபையினர் சில நாட்களுக்கு முன்னர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தமது வருமானத்திற்கு ஏற்ற வகையில் குறைந்த பரப்பளவிலான இடத்தை வாடகைக்கு பெற்று அதற்கான வரியை செலுத்துவதற்கு தாம் தயாராக இருந்ததாகவும், குறைந்த நிலப்பரப்பை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2822341561468230%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
சந்தை குத்தகைதாரர் தம்மிடமிருந்து வரியைப் பெற மறுத்ததாகவும், அதேவேளை தாம் வரி செலுத்தவில்லை என நகர சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரி குறிப்பிட்டார்.
</p><p>
தமது வியாபாரப் பொருட்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, தற்போது எந்தவித தொழிலும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உபதவிசாளரிடம் கருத்து கோரப்பட்டபோது, தாம் தற்போது தொலைவில் இருப்பதால் உடனடியாக பதிலளிக்க முடியாது எனவும், பிறிதொரு நாளில் பதில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T14:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு வார்த்தைக்காக ஒரு உயிரைப் பறிக்காதீர்கள்..! அனோஜனுக்காக சவுதியிடம் சஜித் உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/premadasa-urges-saudi-arabia-1789825027"></link>
            <id>https://tamilwin.com/article/premadasa-urges-saudi-arabia-1789825027</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

சமூக வலைத்தளமான எக்ஸில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><h2>மரண தண்டனை</h2><p>
</p><p>
ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிரைப் பறிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அனோஜனுக்கு கருணை வழங்குவதற்கான வாய்ப்பை சவுதி அதிகாரிகள் திறந்துவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதத்தை, அவமதிப்பாகக் கருதப்படும் ஒரு வார்த்தையால் அழிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A man’s life should not be taken for a word.<br><br>If the reported death sentence against Sri Lankan migrant worker Anojan Sivarasa is confirmed, I hope Saudi Arabia will show the mercy that lies at the heart of every great faith.<br><br>A religion that has endured for centuries cannot be… <a href="https://t.co/LPsXdzyED0">https://t.co/LPsXdzyED0</a></p>&mdash; Sajith Premadasa (@sajithpremadasa) <a href="https://x.com/sajithpremadasa/status/2101279904252014604?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
ஒரு வார்த்தைக்கு பதிலாக ஒருவரின் உயிரைப் பறிப்பதிலேயே ஒரு மதத்தின் வலிமை தங்கியிருக்கக் கூடாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், ஒவ்வொரு சிறந்த மதத்தின் அடிப்படையிலும் காணப்படும் கருணையை சவுதி அரேபியா வெளிப்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய ட்ரம்ப் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-bans-media-outlets-entering-white-house-1789823552"></link>
            <id>https://tamilwin.com/article/trump-bans-media-outlets-entering-white-house-1789823552</id>
            <summary type="text">தங்களுக்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி CNN, MS NOW
மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி
சேகரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்களுக்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி CNN, MS NOW
மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி
சேகரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் தடை விதித்துள்ளார்.
</p><p>
தமது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி
ட்ரம்ப், குறித்த ஊடகங்கள் தமது நிர்வாகத்தைப் பற்றித் தொடர்ந்து உண்மைக்குப்
புறம்பான செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

அத்துடன் The New York Times மற்றும் The Washington Post ஆகிய ஊடகங்களும்
பொய்ச் செய்திகளையே வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள அவர், வரும் நாட்களில்
மேலும் பல ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.</p><h2>நேரடித் தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
ட்ரம்பின் இந்த தீர்மானத்திற்குக் குறித்த ஊடக நிறுவனங்களும் ஊடகப்
பாதுகாப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
</p><p>
அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள
செய்தி சேகரிக்கும் அடிப்படை உரிமையை அரசோ அல்லது அதிபரோ முடக்க முடியாது
எனவும், இந்தத் தடையை சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாகவும் CNN மற்றும்
Politico நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651f775d-43fe-41d4-8161-60ec776a19bd/26-6aae8d7309f01.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் படி, ஊடகவியலாளர்களின் செய்திகளின் உள்ளடக்கத்தைக் காரணம்
காட்டி வெள்ளை மாளிகைக்கான அணுகலைத் தன்னிச்சையாக மறுக்க முடியாது என 1977 ஆம்
ஆண்டைய நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த நடவடிக்கை சுதந்திரமான ஊடகவியலின் மீதான நேரடித்
தாக்குதல் என தேசிய பிரஸ் கிளப் உட்படப் பல அமைப்புகள்
கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி சிறையில் உள்ள அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-release-of-sivarasa-anojan-1789820969"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-release-of-sivarasa-anojan-1789820969</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் மற்றும் தூக்குக் கயிற்றின் உருவம் உள்ளிட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.</p><h2>கவனயீர்ப்புப் போராட்டம்</h2><p>
</p><p>
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போராட்டத்தின் பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே சிவராசா அனோஜன் தற்போதைய சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f80c4a-2790-4f72-b662-200b1bfe5717/26-6aae89ed4b01c.webp' /></p><p>
</p><p>
எனவே, இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் கருத்திற்கொண்டு, சிவராசா அனோஜனை விடுதலை செய்து அவர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து நிம்மதியாக வாழ்வதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
மேலும், அனோஜனின் குடும்பத்தின் நிலைமையையும் கருத்திற்கொண்டு, அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1050596304470167%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனக் குழு பங்கேற்க விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-delegation-at-the-un-meeting-1789821450"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-delegation-at-the-un-meeting-1789821450</id>
            <summary type="text">ஐ.நா தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடத்தும் நாடு என்ற ரீதியில் தனக்குள்ள
கடமைகளைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடத்தும் நாடு என்ற ரீதியில் தனக்குள்ள
கடமைகளைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என
ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர சேவையின் பேச்சாளர் அன்வர் எல் அனூனி
தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எதிர்வரும் பொதுச் சபைக்
கூட்டத்தொடரில் பதிவுசெய்யப்பட்ட காணொளி செய்தி மூலமாக உரையாற்றுவதற்கு ஐ.நா
பொதுச் சபை அண்மையில் வாக்களித்து அனுமதியளித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நாவின் பணிகளில் பாலஸ்தீனம்
முழுமையாகப் பங்கேற்பதைப் பாதிக்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ
குட்டேரஸும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.</p><h2>விசா தடை</h2><p>
</p><p>
பாலஸ்தீன அதிகாரசபையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) அமைதி முயற்சிகளை
சீர்குலைப்பதாகக் குற்றம்சாட்டியே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த விசா தடையை
நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b0dc360-7d0b-4efa-ad9d-95e309e8bda3/26-6aae87e810759.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பாலஸ்தீன அரசுக்கான சர்வதேச அங்கீகாரத்தை வலியுறுத்தவும்
இரு-நாட்டுத் தீர்வை மீண்டும் முன்னெடுக்கவும் இம்முறை காணொளி வாயிலாக
ஜனாதிபதி அப்பாஸ் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:02:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி இளவரசரின் இராஜகீய மன்னிப்பு.. அனோஜனை காப்பாற்ற இருக்கும் வழி சாத்தியமாகுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sivarasa-anojan-death-sentence-saudi-arabia-law-1789813237"></link>
            <id>https://tamilwin.com/article/sivarasa-anojan-death-sentence-saudi-arabia-law-1789813237</id>
            <summary type="text">சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டமுறையான ஷரியாவின் (Sharia) அடிப்படையிலேயே தனது நீதித்துறையைச் செயல்படுத்துவதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டமுறையான ஷரியாவின் (Sharia) அடிப்படையிலேயே தனது நீதித்துறையைச் செயல்படுத்துவதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அதன்படி, அங்கு மரண தண்டனையானது பிரதானமாக மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. </p><p>முதலாவதாக, 'கிசாஸ்' (Qisas) எனும் பழிக்குப்பழி சட்டத்தில், நீதியின் கீழ் திட்டமிடப்பட்ட கொலைக் குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது; இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை (Diyya) பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிக்க முடியும்.</p><h2>சவூதி அரேபிய சட்டம்..&nbsp;&nbsp;</h2><p>இரண்டாவதாக, 'ஹதுத்' (Hudud) பிரிவின் கீழ் மத நூல்களில் வரையறுக்கப்பட்ட தேசத்துரோகம், மதம் மாறுதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c9bd40d-4e35-4a1e-8532-230de916b83a/26-6aae837a9912a.webp' /></p><p> </p><p>மூன்றாவதாக, 'தஸீர்' (Tazir) எனும் நீதிபதிகளின் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவின் கீழ் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் மத நிந்தனை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு பிரதானமாக வாள் மூலம் தலை துண்டித்தல் முறையிலேயே தண்டனை நிறைவேற்றப்படுகிறது.</p><p>இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்தார்.</p><p> சமூக வலைத்தளத்தில் அவர் இட்ட பின்னனூட்டலில், இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கருத்து ஒன்றை வெளியிட்ட, நிலையில் இவ்விவகாரம் பேசுபொருளானதுடன் கடும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானது.&nbsp;</p><p>அவர் உடனடியாக அக்கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரிய போதிலும், அது தொடர்பாக சவூதி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>இளவரசரின் சிறப்பு அதிகாரம்&nbsp;</h2><p> இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கின் ஆரம்ப விசாரணையில் அல்-அஹ்சா (Al-Ahsa) நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315a44a3-5f1f-465d-8b29-d84a1045825d/26-6aae837c2559f.webp' /></p><p> எனினும், மேல்முறையீட்டின் போது இந்தத் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>சவூதி சட்டப்படி, மத நிந்தனை தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மன்னிப்பு வழங்க முடியாது என்றாலும், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரமான 'இராஜகீய மன்னிப்பு' (Royal Clemency) மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்ற மேன்முறையீட்டின் மூலமாகவோ தண்டனையைக் குறைக்க முடியும்.</p><p><i>(இராஜகீய மன்னிப்பு (Royal Pardon / Presidential Pardon) என்பது ஒரு நாட்டின் தலைவர் (அரசர் அல்லது ஜனாதிபதி) தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைப்பது அல்லது முழுமையாக இரத்து செய்வது ஆகும்.)</i></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f1067c0-f57d-451f-b5bc-1832cfecdc1f/26-6aae837b6ac5a.webp' /></p><p> </p><p>தற்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனடியாக தலையிட்டு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>அனோஜனின் குடும்பத்தினரும் தங்களது மகனை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை அரசு சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. </p><p>

இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.</p><h2><b> 

பினாமி பெயரில் கொள்வனவு </b></h2><p>இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0871032-92f8-4b6c-8c0f-4f64fcdd5803/26-6aae017a78504.webp' /></p><p>பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h3><p>ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a1401d-930e-4f55-a585-93ab83425fd8/26-6aae017b2dadd.webp' /></p><p>அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திலீபனின் நினைவிடத்தில் பொலிஸாரால் அகற்றப்பட்ட ஒலிபெருக்கி.. கஜேந்திரகுமார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thiyaga-theebam-thileepan-police-gajendrakumar-1789818783"></link>
            <id>https://tamilwin.com/article/thiyaga-theebam-thileepan-police-gajendrakumar-1789818783</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், "இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருடன் பேசினேன்.
</p><p>தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலியமைப்பை, பொலிஸாரின் அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்தினால் பொலிஸார் அகற்றியுள்ளதாக அவரிடம் தெரிவித்தேன்.</p><h2>புலனாய்வுத் தகவல் அறிக்கை</h2><p>
</p><p>நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவின் உறுப்பினர்கள், ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி எழுத்துமூலமான கோரிக்கையுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சென்றபோது, தலைமையக ஆய்வாளர் அங்கு இல்லை என்றும், விண்ணப்பத்தை இன்று சமர்ப்பிக்குமாறும் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid0JEtmSaHCtjXKFnVPEHEDpvWn5bCdfZJCc6kQiZ4anASNXEpVjUjGwxJm3FvcM3YUl%26id%3D61567246753629&show_text=true&width=500" width="500" height="584" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
இன்று மீண்டும் ஏற்பாட்டாளர்கள் எழுத்துமூலமான கோரிக்கையுடன் பொலிஸாரிடம் சென்றபோதும், அதனை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.</p><p>
இதையடுத்து பொலிஸ் அத்தியட்சகர், தலைமையக ஆய்வாளருடன் தாம் பேசுவதாகவும், ஏற்பாட்டாளர்களை மீண்டும் அனுமதி கோருமாறு அறிவுறுத்துவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3372be04-1775-4e36-90a1-48b0d1c87d8a/26-6aae7b2f02581.webp' /></p><p>
சில நிமிடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையக ஆய்வாளர், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி ஏற்பாட்டாளர்களை விண்ணப்பிக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
</p><p>எனினும், புலனாய்வுத் தகவல் அறிக்கை (Intelligence Report) பெறப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pY41Cfrr46c" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b><br></p>]]></content>
            <updated>2026-09-19T12:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: கல்வி அமைச்சு அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gaza-school-ministry-of-education-s-urgent-appeal-1789818917"></link>
            <id>https://tamilwin.com/article/gaza-school-ministry-of-education-s-urgent-appeal-1789818917</id>
            <summary type="text">காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும்
பாதுகாப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும்
பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் காசா கல்வி
அமைச்சு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
காசா மீதான போரை உடனடியாக நிறுத்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையின் மூலம்
வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>புதிய கல்வி ஆண்டு</h2><p>
புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று (19.9) ஆரம்பமாகியுள்ள
நிலையில், சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர
ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e221c4da-eceb-484d-adc9-9a44f0045306/26-6aae7a6f694c8.webp' /></p><p>
</p><p>
இவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் தற்காலிக கற்றல் மையங்கள் மற்றும்
மீதமுள்ள பாடசாலைக் கட்டிடங்களிலேயே தங்களது கல்வியைத் தொடர்கின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பிற்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/join-together-on-the-24th-sajith-premadasa-s-call-1789817517"></link>
            <id>https://tamilwin.com/article/join-together-on-the-24th-sajith-premadasa-s-call-1789817517</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியும் அரசாங்கத்தின்
பெரும்பான்மையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியும் அரசாங்கத்தின்
பெரும்பான்மையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கைத்
தோற்கடிக்க எதிர்வரும் 24ஆம் திகதி காலை கொழும்பு - பொல்துவ சந்தியில்
ஒன்றிணையுமாறும் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இளம் பெண் சட்டத்தரணிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (18.09.2026) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனநாயகத்துக்கு மரண அடி</h2><p>நாட்டின் ஜனநாயக முறையானது சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும்
நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் அவற்றுக்கிடையிலான
தடைகள் மற்றும் சமன்பாடுகளின் அடிப்படையிலேயே பாதுகாக்கப்படுகின்றது என்று
குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய 22ஆவது திருத்தச் சட்டம் மூலம்
இந்த ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9b3739-af62-452f-99f3-0e42c81730f7/26-6aae7545a836c.webp' /></p><p>
</p><p>
நிறைவேற்று அதிகாரத் தூணின் ஜனாதிபதியும் பெரும்பான்மைப் பலம் கொண்ட
சட்டவாக்கமும் நாட்டின் நீதி அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, நீதிமன்றத்தை
நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக்கும் கீழ்தரமான முயற்சியில் அரசு
ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
மேலும், அரசமைப்பின் 3, 4, 83, 107 ஆம் பிரிவுகளின்படி, சர்வஜன வாக்கெடுப்பு
இன்றி 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாயின் அது மக்களின் இறையாண்மையையும்
வாக்களிக்கும் உரிமையையும் மீறும் செயலாகும் என்றார்.</p><h2>உள்நாட்டு அடிமைத்துவ யுகம்</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தீர்வு, ஊழல் மற்றும்
மோசடிகளுக்குத் தண்டனை போன்ற கோஷங்களை முன்னிறுத்தி, நீதிமன்றத்தின்
சுதந்திரத்தை இல்லாது செய்து நாட்டில் தனிக்கட்சி ஆட்சியை ஸ்தாபிக்க அரசு
முயல்கின்றது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, இதன் மூலம் ஜே.வி.பி. தவிர வேறு
எவருக்கும் அரசியல் சுதந்திரமோ, பேச்சுரிமையோ இல்லாத நிலையை ஏற்படுத்தி,
மக்களை அரசின் நிரந்தர அடிமைகளாக்கும் உள்நாட்டு அடிமைத்துவ யுகத்தை நோக்கி
அரசு நகர்வதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62ea2268-af15-4716-beab-b870f7564597/26-6aae754773792.webp' /></p><p>
</p><p>
நாட்டில் வறுமை அதிகரித்து, வாழ்க்கைச் செலவு உயர்ந்து, நேரடி வெளிநாட்டு
முதலீடுகள் குறைந்துள்ள இந்தச் சூழலில், 2027 ஆம் ஆண்டு ஐ.எம்.எவ். ஒப்பந்தம்
நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றுக்கான தீர்வாகத்தான் 22 ஆவது திருத்தச்
சட்டம் அமைந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

எனவே, தனிக்கட்சி ஆட்சியை நோக்கிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத்
தோற்கடிப்பதற்காக, எதிர்வரும் 24 ஆம் திகதி காலை கொழும்பு - பொல்துவ சந்தியில்
நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர்
கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6707fc89-bb1c-41be-b173-21b61f349fb7/26-6aae7546a0273.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T11:43:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விடயத்தில் ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojanan-facing-the-death-penalty-in-saudi-arabia-1789817047"></link>
            <id>https://tamilwin.com/article/anojanan-facing-the-death-penalty-in-saudi-arabia-1789817047</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட ரீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஒரு நாட்டின் இறையாண்மையையும் சட்டத்தையும் மதிக்கும் அதேவேளை, தமது நாட்டுப் பிரஜை ஒருவரை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிவராசா அனோஜன்&nbsp;</h2><p>
</p><p>அம்பாறை, நார்ப்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 15ஆம் திகதி சவுதி நீதிமன்றமொன்றினால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வாய்மொழியாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c084dc-c3ed-4dcd-ade0-753fe1317490/26-6aae7433aeec7.webp' /></p><p>எனினும், மரண தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துமூல நீதிமன்றத் தீர்ப்பு இதுவரை இலங்கைத் தூதரகத்துக்கு கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
இந்த எழுத்துமூல தீர்ப்பை உடனடியாகப் பெற்றுக்கொள்வது அவசியம் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.</p><p> தீர்ப்பின் சட்ட அடிப்படையை சரியாக ஆராய்ந்து, சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைய அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ரிசானா நபீக்கின் சம்பவம்</h2><p>
</p><p>&nbsp;அனோஜன் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் அந்தப் பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதனை நீக்கி, பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் சவுதி அதிகாரிகளிடம் தண்டனையை தளர்த்துமாறு அல்லது அரச மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க முடியும் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி, உயர்மட்ட அரச மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8ff83e-62d8-4b5a-884f-20c84f1a2aed/26-6aae74347db3d.webp' /></p><p>

அத்துடன், இந்த விடயத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா, வெளிநாடுகளில் கடுமையான சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு ஆரம்பம் முதலே முறையான சட்ட ஆலோசனையும் இராஜதந்திர பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.</p><p>

சரியான சட்ட ஆலோசனை, நம்பகமான சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் துல்லியமான மொழிபெயர்ப்பு ஆகியவை இல்லாததால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் வேதனையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, தற்போதுள்ள இராஜதந்திர பொறிமுறையின் ஊடாக அனோஜனுக்கு தேவையான அதிகபட்ச தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாமர சம்பத்திடம் சிறீதரன் எம்பி விடுத்த சவால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sritharan-mp-responds-to-blames-on-him-1789817600"></link>
            <id>https://tamilwin.com/article/sritharan-mp-responds-to-blames-on-him-1789817600</id>
            <summary type="text">அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக
ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக
ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.&nbsp;</p><p> கிளிநொச்சியில்
நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே
இதனை குறிப்பிட்டார்.</p><p>இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
​</p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..&nbsp;</h2><p>தம் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை
நிரூபிக்குமாறு சாமர சம்பத்திடம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்தேன், இதுவரை எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/351f8739-5d5f-4ce5-975d-3c6ded079655/26-6aae74bf6cebb.webp' /></p><p>ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நாட்டின்
பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்குத்
தமிழரசு கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும்.
​</p><p>போதைப்பொருள் மற்றும் மதுப்
பயன்பாட்டினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்களும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p> வன்முறைகள் அதிகரித்துள்ளன, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுபான சாலைகளை மூடும்
நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம்.&nbsp;</p><p>இந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை, அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போது முதலமைச்சர் வேட்பாளர்
குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-saudi-case-anura-h-m-m-harees-1789815836"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-saudi-case-anura-h-m-m-harees-1789815836</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜனின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி அவரது
விடுதலைக்காக ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜனின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி அவரது
விடுதலைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாகத் தலையிட்டு உச்சகட்ட
இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க
அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "எஸ். அனோஜன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையர்கள் அனைவருக்கும்
கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. </p><p>குறிப்பாக, அவரது தாயார் தனது
மகனின் நிலை தொடர்பில் அனுபவித்து வரும் வேதனையும் கண்ணீரும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் அனோஜன் கருத்து வெளியிட்ட விடயத்தில் அவர்
மன்னிப்பு கோரியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அனோஜனின் விடுதலை</h2><p> </p><p>ஒரு மனிதர் தனது தவறை
உணர்ந்து மன்னிப்பு கோரும் நிலையில், இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமை,
சமாதானம், மன்னிப்பு, கருணை மற்றும் மனிதாபிமானம் போன்ற அடிப்படைப் பண்புகளை
இந்த விடயத்தில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4dd2c8b-6663-4ec5-8317-16a9a6881755/26-6aae73637a10f.webp' /></p><p>

இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி நேரடியாகத் தலையிட முன்வர வேண்டும்.
குறிப்பாக, இலங்கை அரசு தற்போது கட்டியெழுப்பி வரும் சமூக நல்லிணக்கத்தை
மேலும் வலுப்படுத்தும் வகையில், அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபிய அரசுடன்
உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
</p><p>
நாட்டிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விடயத்தில்
கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றிணைந்து ஜனாதிபதியையும், வெளிநாட்டலுவல்கள்
அமைச்சரையும் சந்திக்க வேண்டும். </p><p>அனோஜனின் விடுதலைக்காக அரசு மேற்கொள்ள
வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடமும், வெளிவிவகார
அமைச்சரிடமும் நேரடியாக வலியுறுத்த வேண்டும்.
</p><p>
அத்துடன், சவூதி அரேபிய அதிகாரிகளுடனான பேச்சுகளில் மன்னிப்பு கோரும் நடைமுறை,
சட்ட ரீதியான வாய்ப்புகள் மற்றும் இராஜதந்திர ரீதியான சாத்தியங்கள்
அனைத்தையும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><h2>உயர்மட்ட பேச்சு</h2><p>
</p><p>
தனது பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிரஜை என்ற அடிப்படையிலும், ஒரு இலங்கையர் என்ற
அடிப்படையிலும், சகோதரர் அனோஜன் விடுதலை பெற்று தனது தாயாரையும்
குடும்பத்தினரையும் சந்திப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என
எதிர்பார்க்கின்றேன்.</p><p>

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இந்த விடயத்தில்
உச்சகட்ட கரிசனையுடன் செயற்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a547fef5-7ec5-4466-adcb-28ea0badc1d8/26-6aae7364391b3.webp' /></p><p> </p><p>சவூதி அரேபிய அரசுடனும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடனும் தொடர்ந்து உயர்மட்ட பேச்சுகளை நடத்தி, அனோஜனுக்கு மன்னிப்பு
கிடைத்து அவரது தண்டனை நீக்கப்பட்டு விடுதலை பெறுவதற்கான அனைத்து
சாத்தியங்களையும் ஆராய வேண்டும்.</p><p>
எனவே, ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும்
அதிகாரிகளை ஒருங்கிணைத்து, சவூதி அரேபிய அரசுடன் உச்சக்கட்ட இராஜதந்திர
முயற்சிகளை முன்னெடுத்து, சகோதரர் எஸ். அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்குத்
திரும்புவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் எச்.எம்.எம். ஹரீஸ்
மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரம்.. காவலில் அடைக்கப்பட்ட 37 சுரங்கத் தொழிலாளர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-detained-miners-die-in-nigeria-1789816208"></link>
            <id>https://tamilwin.com/article/37-detained-miners-die-in-nigeria-1789816208</id>
            <summary type="text">நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி
எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 37...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி
எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 37
சுரங்கத் தொழிலாளர்கள், காவலில் இருந்தபோது உயிரிழந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,
அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நைஜர் மாநிலத்தின் தலைநகரான மின்னா (Minna) பகுதியில், 'நைஜீரியா பாதுகாப்பு
மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு' (NSCDC) அதிகாரிகள் சட்டவிரோத தங்கச்
சுரங்கங்களுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு NSCDC-ன் சிறை முகாமில் அடைக்கப்பட்டனர்.</p><h2>வெடித்த போராட்டம்..&nbsp;</h2><p>
</p><p>
அவ்வாறு காவலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களில் 37 பேர் அடுத்தடுத்து
உயிரிழந்தனர்.

சிறை முகாமில் ஏற்பட்ட எதிர்பாராத நோய் பரவல் காரணமாகவே தொழிலாளர்கள்
உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f24b6c3-c964-471f-a0cb-401c0a3c8e63/26-6aae6f84b258d.webp' /></p><p>

ஆனால் போதிய காற்றோட்டம் இல்லாத சிறிய சிறை அறையில் (Overcrowded cell),
அளவுக்கு அதிகமான நபர்களை அடைத்து வைத்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே இந்த
மரணங்களுக்குக் காரணம் எனத் தப்பிய தொழிலாளர்களும் உறவினர்களும் குற்றம்
சாட்டியுள்ளனர்.</p><p>

தொழிலாளர்களின் மரண செய்தி பரவியதைத் தொடர்ந்து, நீதி கேட்கும் ஆயிரக்கணக்கான
மக்கள் மின்னா நகரின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை
வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இந்த மோதலில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணைகள்
தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த நிலையில் மின்னா பகுதியில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க நைஜர் மாநில
ஆளுநர் உமர் பாகோ (Umar Bago) உடனடியாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவைப்
பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதேவேளை அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, NSCDC கொமாண்டண்ட் சுபெரு சியாக்கா
அனிவியே (Suberu Siaka Aniviye) உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தொழிலாளர்களின் மரணம் குறித்து விரிவான உயர்நிலை விசாரணை நடத்த மாநில
அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவலிங்கத்தை அவமதித்தவர் வீட்டிலிருக்கையில் அனோஜனுக்கு தலை துண்டிப்பு தண்டனை - சிறீதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362</id>
            <summary type="text">சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். </p><p>

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் இன்று (19.09.2026 கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
</p><p>
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அனோஜன் விவகாரம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அனோஜனுடைய தலையை துண்டிப்பதை பற்றி ஒரு நாடு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. எங்களோடு பிறந்த ஒரு மனிதன், உங்களுடைய சகோதரன் உயிரோடு வருவானா அல்லது அவனது உடல் தான் வருமா நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற சிக்கல் நீடிக்கிறது. </p><p>நேற்று காலை கூட அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேசியிருந்தேன். ஜனாதிபதியினுடைய செயலாளரோடும் போசியிருந்தேன். இந்த விடயம் தொடர்பில் உங்களது அதீத கவனமும் அந்த உயிரை காப்பாற்றுகின்ற விடயமும் ஒரு அரசுக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38423397-8319-4c0c-85ac-17eb3543cfef/26-6aae6e9a8b399.webp' /></p><p> </p><p>யாரோ ஒருவர் ஊர்வலம் போகும்போது நாயைக் கொண்டு போனார்கள். அதற்கு சுப்பிரமணி என பெயரையும் வைத்து விட்டார்கள். தெருவில் நின்ற ஒருவர் அதனை காலால் தட்டி விட்டார். அதனை எங்களுடைய ஆட்களே பெரிதுபடுத்தினார்கள். அதற்கு நிறைய விமர்சனங்களை எழுதினார்கள்.</p><h2>தண்டனை</h2><p> </p><p>இந்த நிலையில் அந்த மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதினார். பொறுக்க முடியாத அனோஜன் அல்லாஹ்வை பற்றி கீழ்த்தரமாக எழுதினார். </p><p>இரண்டுமே பொருத்தமில்லாத ஒன்று தான். எழுதக்கூடாது தான். ஆனால் அவர் எழுதினார். இவர் பதில் எழுதினார். இவருக்கு தலை போகிறது. ஆனால் அவர் வீட்டில் இருக்கப்போகிறார். </p><p>அனோஜனின் பதிவை மொழி பெயர்த்து கொடுத்தவர் ஒரு தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர். அனோஜனுக்கு தண்டனை கிடைப்பதற்கு காரணம் இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற இந்த சகோதரர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனப் பதிவு தொடர்பான பிரச்சினையா..! இதோ முறைப்பாடு செய்ய புதிய வழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-whatsapp-hotline-for-motor-vehicle-complaints-1789815381"></link>
            <id>https://tamilwin.com/article/new-whatsapp-hotline-for-motor-vehicle-complaints-1789815381</id>
            <summary type="text">வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக புதிய வட்ஸ்அப் சேவையொன்றை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவையின் ஊடாக, பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை எழுத்துமூலம் 074 245 3300 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.</p><h2>இந்தப் புதிய சேவை</h2><p>
</p><p>
வாகனப் பதிவில் ஏற்படும் தாமதங்கள், முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், வாகனங்களின் செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பொது இடையூறுகள் தொடர்பிலும் முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a499a9a-d22a-4b31-a518-de202fb673eb/26-6aae6d0869918.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாகத் திணைக்களத்திடம் தெரிவித்து, அவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வு அல்லது பதில் வழங்குவதற்கான வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கிய 3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் மாயம் - இருவரின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-drown-in-water-and-missing-1789814820"></link>
            <id>https://tamilwin.com/article/4-drown-in-water-and-missing-1789814820</id>
            <summary type="text">கம்பஹா,&amp;nbsp; படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ​​3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா,&nbsp; படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ​​3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. </p><p> 

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p>
ஒரு ஆணின் உடலமும் ஒரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>3 இளம் பெண்கள் மற்றும் பதின்ம வயது இளைஞன் அடங்கிய குழுவினர் மா ஓயா ஆற்றில் குளிக்க சென்றிருந்தனர். </p><h2><b>

இளம் பெண்கள்</b></h2><p>அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9fe00a-e6d7-4b8f-83e5-ec2803771b98/26-6aae6ad2071be.webp' /></p><p>அவர்களில் ஒரு இளம் பெண் நீரில் மூழ்கத் தொடங்கிய போது, ​​அவரை மீட்க முயன்ற ஏனைய மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

காணாமல்&nbsp; போனவர்களை
&nbsp;தேடும் பணியை உள்ளூர் மக்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T10:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்ட இளைஞன் பரிதாப மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-falling-off-motorcycle-police-jaffna-1789812288"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-falling-off-motorcycle-police-jaffna-1789812288</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்
ஒருவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்தபோது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்
ஒருவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்தபோது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று(19.9.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே
இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல உணவகம் ஒன்றில் பணிபுரியும் இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcb1f59-ee42-4056-b662-004ea001a1af/26-6aae648f356cf.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் அனுஸ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-of-thiyagatheepam-thileepan-1789813934"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-of-thiyagatheepam-thileepan-1789813934</id>
            <summary type="text">தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள்
நினைவேந்தல் பருத்திதுறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள்
நினைவேந்தல் பருத்திதுறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>பருத்துத்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இன்று (19.09.2026) காலை இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.</p><p>

இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை நகரசபை
உறுப்பினர்கள், அரசியல் செயற்பாடாளர்கள், என பலரும் கலந்துகொண்டு மலர்
அணிவித்து மலர் அஞ்சலி செய்தும் நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84912769-4720-436f-a4b0-5b9b14a0e4ff/26-6aae6637e4cb9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trouble-for-politicians-families-fleeing-country-1789810544"></link>
            <id>https://tamilwin.com/article/trouble-for-politicians-families-fleeing-country-1789810544</id>
            <summary type="text">


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அல்லது பிற அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அல்லது பிற அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>உளவுத்துறை அமைப்புகளுக்கு அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.</p><h2>பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சி</h2><p>
</p><p>
பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் நபர்களை இந்த அமைப்பு கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d3e589-5c11-4b8c-b6e1-77888e1eedb3/26-6aae61c06ac53.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்தவும் விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர், வெளிநாடு சென்று திரும்பத்தவறிய பல அரசியல்வாதிகளை உளவு அமைப்புகள் தற்போது விசாரித்து வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
</p><p>
 இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
</p><p>
அவர்களது விடுதலை சட்டப்பூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:26:22+00:00</updated>
        </entry>
    </feed>
