<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-18T20:18:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம்! 940 குற்றச்சாட்டுகளையும் மறுத்த நவுஃபர் மௌலவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-zahran-naufar-moulavi-1787078982"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-zahran-naufar-moulavi-1787078982</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.அதனை செய்தது&amp;nbsp;சஹ்ரான் தான் என நவுஃபர் மௌலவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் ஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.அதனை செய்தது&nbsp;சஹ்ரான் தான் என நவுஃபர் மௌலவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில், முக்கிய பிரதிவாதியான நவுஃபர் மௌலவி தனது தற்காப்பு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p>
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் இணைந்து தாம் ஈஸ்டர் தாக்குதலை சதி செய்ததாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள&nbsp;940 குற்றச்சாட்டுகளையும்&nbsp;நவுஃபர் மௌலவி மறுத்துள்ளார்.</p><p>ஈஸ்டர் தாக்குதல் சதியுடன் தன்னை இணைக்கும் நேரடி ஆதாரம் இல்லை என வாதம்
இறுதியில், தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுதலை செய்யுமாறு நவுஃபர் மௌலவி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NSwNngp8TV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T19:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று நீதிமன்றங்களின் பிடியில் சிக்கிய பிள்ளையான் - சுற்றிவளைக்கப்பட்ட சகாக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543</id>
            <summary type="text">பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;

கிழக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கில் தற்போது அவருக்கான தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல முக்கிய ஆதாரங்களும் அவரின் சகாக்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.</p><p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் காணொளி மூலமாக நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னிலைபடுத்தப்பட்ட போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.&nbsp;</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XjU_g5Y62II" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள்: இம்ரான் எம் பி முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-prevailing-in-the-postal-service-1787067062"></link>
            <id>https://tamilwin.com/article/issues-prevailing-in-the-postal-service-1787067062</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.</p><p>கோரிக்கைகள் பின்வருமாறு, மாவட்டத்தில் உள்ள பல தபால் அலுவலகங்களில், அப்பகுதியின் அஞ்சல் அட்டைகளின்
எண்ணிக்கைக்கும் சேவை வழங்கும் இடத்திற்கு ஏற்ப போதுமான தபால்காரர்கள்
மற்றும் அஞ்சல் விநியோகப் பணியாளர்கள் குறைவு. </p><p>இதனால் பொதுமக்களுக்கு
வழங்கப்படும் அஞ்சல் சேவையில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே, ஒவ்வொரு தபால்
அலுவலகத்தின் பணிகளுக்கு ஏற்ப தேவையான மனிதவளத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.</p><h2>நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல்
தற்போது தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த
அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a35ebc-2bca-4f4f-b305-d9b7c1fb9046/26-6a84b3655a970.webp' /></p><p> </p><p>அவர்களின் சேவை
அனுபவத்தையும் தகுதியையும் கருத்திற்கொண்டு, அவர்களை நிரந்தர சேவையில்
இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம்
தெளிவுபடுத்த வேண்டும்.
</p><p>
தபால் அலுவலகக் கட்டிடங்களின் அபிவிருத்தி
திருகோணமலை மாவட்டத்தில் பல தபால் அலுவலகங்களின் கட்டிடங்கள் பழமையான நிலையில்
காணப்படுகின்றன.</p><h2>தபால் விநியோகம்</h2><p> </p><p>பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்ற நவீன வசதிகளுடன்
இக்கட்டிடங்களைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதா என்பதும்
கேள்வியாக முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e66f0c2-a756-4bbb-b6e8-2ff1d38795f7/26-6a84b3662ce08.webp' /></p><p>
</p><p>
தபால் விநியோகத்திற்கான போக்குவரத்து வசதிகள்
இன்றைய காலத்திற்கேற்பவும், சேவையை விரைவுபடுத்தும் வகையிலும், தேவையான
ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அல்லது பொருத்தமான போக்குவரத்து வசதிகளை
வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் நாடாளுமன்றத்தில்
சுட்டிக்காட்டப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவப்பட்ட பாரிய இரு ஏவுகணைகள்.. தாக்குதலுக்கு முன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-phone-call-before-iran-attack-on-uae-1787075642"></link>
            <id>https://tamilwin.com/article/trump-phone-call-before-iran-attack-on-uae-1787075642</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை&nbsp;</h2><p> </p><p>இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cae606-4e8f-44fc-b79e-f5c31ae0cd5a/26-6a849e29de7d4.webp' /></p><p>மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.</p><p> ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் – கித்துளுத்த பகுதியில் தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tipper-truck-catches-fire-in-the-kanthalai-1787076182"></link>
            <id>https://tamilwin.com/article/tipper-truck-catches-fire-in-the-kanthalai-1787076182</id>
            <summary type="text">கல் ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துளுத்த பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல் ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துளுத்த பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று (18) பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த குறித்த கனரக வாகனம், கந்தளாய் மகாவலி கங்கைப்
பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தீப்பரவல்</h2><p>
</p><p>
கித்துளுத்து தேவாலயத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்திய சாரதி
வழிபாட்டிற்காக தேவாலயத்திற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, கனரக வாகனத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கல் ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfa6a3a7-a1c6-4acd-a1af-3df2962b3c27/26-6a849e590940e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தீயை
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அமீரகத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-missiles-launched-from-iran-uae-1787074317"></link>
            <id>https://tamilwin.com/article/two-missiles-launched-from-iran-uae-1787074317</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.ஈரான் தனது தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.</p><p>ஈரான் தனது தாக்குதல் சார்ந்த இராணுவக் கோட்பாட்டை செயல்படுத்த தொடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஏவுகணை தாக்குதல்</h2><p>இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d56ce57-65b6-4c81-9579-69f9b4eed968/26-6a849b76b5fcc.webp' /></p><p> இதில் முதலாவது நாட்டின் கடல் எல்லைக்கு வெளியே விழுந்த நிலையில், இரண்டாவது கடல் எல்லைக்குள் விழுந்துள்ளது என்று அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:51:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - ராஜபக்சர்களுக்கு நெருக்கடியாகும் இரகசிய விசாரணைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-investigation-1787064282"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-investigation-1787064282</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்குவதுமே தற்போதைய காலத்தின் தேவை என்று மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிழகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
தற்போதைய இலங்கை அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் தீவிரமாக கையாள்கின்றது.
</p><p>
உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கில் ராஜபக்சர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசாங்கம் அதில் கவனம் செலுத்துகின்றது.
</p><p>
ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அல்லது காணாமல் போனோர் விவகாரங்களில் மௌனம் காக்கின்றது.
</p><p> 
இலங்கையின் இனவாதக் கட்டமைப்பிலிருந்து அரசு விடுபடத் தயாராக இல்லை. </p><p>

எனவே, தமிழர்களுக்கு நீதிகிடைக்க உள்ளக விசாரணைகளை விட சர்வதேச பொறிமுறை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீடு மட்டுமே சிறந்த வழியாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/68d9IKM59Us" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T16:36:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2028இல் அநுர அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சிக்கல்.. ரணில் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economy-ranil-warns-1787068190"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economy-ranil-warns-1787068190</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2028ஆம் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
2028ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், நாட்டில் 15 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் கையிருப்பு இருக்கும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், அது நிறைவேறினால், மேலும் 6 பில்லியன் டொலர் திரட்டப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, அந்த 6 பில்லியன் டொலரைத் திரட்டுவதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>கடுமையான நெருக்கடி&nbsp;</h2><p>மேலும், "நாங்கள் வெளியேறியபோது, ​​பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 6 பில்லியன் டொலரை சேமித்தோம். இந்தப் பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210cb5e3-79c6-4def-ab0c-215639c8c8e4/26-6a8484568dfbc.webp' /></p><p>2028க்குப் பிறகு நாம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். 2028க்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த, நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 15 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது, ​​​​6 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது.&nbsp;</p><p> இன்றிலிருந்து நாம் 8 பில்லியன் டொலரை சேமிக்க வேண்டும். இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் இருக்கும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.</p><p>சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027இன் இறுதியில் முடிவடையும். நாம் சர்வதேச நாணய நிதியத்தில் தொடர்ந்து இணைந்திருப்போமா இல்லையா? அரசாங்கத்தின் திட்டம் என்ன?

இந்த நாட்டில் உள்ள பிரதான பிரச்சினை, நாம் மீண்டும் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவோம் என்பதுதான்.</p><p> அரசியலமைப்பைத் திருத்தி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதா வேண்டாமா? என்பது இல்லை, நமது கவனம் இங்கேதான் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T16:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/british-person-dies-in-sri-lanka-1787024856"></link>
            <id>https://tamilwin.com/article/british-person-dies-in-sri-lanka-1787024856</id>
            <summary type="text">மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்கு தெரிவித்துள்ளனர். </p><p>

இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p> </p><h2><b>சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>சடலம் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் காலணிகள், தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/064eb03c-13b6-4c25-a7ec-41a1db3bb7a6/26-6a847d6b34a2b.webp' /></p><p>குறித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் 52 வயதுடைய கர்தெரா ஒய்தப் எனப்படும் பிரித்தானிய பிரஜை என தெரியவந்துள்ளது. </p><p>

அவர் வருகை தந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
</p><h3><b>
 பொலிஸார்&nbsp;விசாரணை</b></h3><p>வாடகை அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு விகாரைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d83b5b0-1f9d-4082-b668-549dde795091/26-6a847d6bdb79c.webp' /></p><p>குறித்த வெளிநாட்டவரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப சோதனைகளில் தெரியவந்துள்ளது.</p><p> வெளிநாட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-18T15:43:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பலசரக்குக் கடை பூட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grocery-store-sealed-due-to-unhygienic-conditions-1787063772"></link>
            <id>https://tamilwin.com/article/grocery-store-sealed-due-to-unhygienic-conditions-1787063772</id>
            <summary type="text">மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக்
கடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக்
கடை ஒன்று பூட்டப்பட்டுள்ளது.</p><p>களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று (18.08.2026 ) அதிரடியாகப் பூட்டப்பட்டுள்ளது.</p><p>
மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள்
இணைந்து மேற்கொண்ட களப் பரிசோதனையின் போது, குறித்த பலசரக்குக் கடையில்
கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>

அதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரப் பரிசோதகரால் இன்று களுவாஞ்சிகுடி
நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711c8a69-d935-4c31-8623-aa7a8c7babcc/26-6a84733b5041f.webp' /></p><p>
</p><p>
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கடை உரிமையாளரை 03 இலட்சம் ரூபாய்
சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், இனங்காணப்பட்ட அனைத்து சுகாதாரக்
குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை உடனடி நடைமுறைக்கு
வரும் வகையில் பூட்டி வைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சுகாதாரப் பிரிவினரால்
முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள், அப்பகுதி வியாபாரிகள்
மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T15:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/non-governmental-organization-employees-protest-1787064583"></link>
            <id>https://tamilwin.com/article/non-governmental-organization-employees-protest-1787064583</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனம் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவு (L.D.-0.6/2026) தற்போதைய வடிவில்
நிறைவேற்றப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனம் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவு (L.D.-0.6/2026) தற்போதைய வடிவில்
நிறைவேற்றப்படக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, நேற்று(17.08.2026) முல்லைத்தீவு மாவட்ட
செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
</p><p>

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட சமூக
அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T14:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்புக்கூடுகளின் எண்ணிக்கை - இன்றும் புதிதாக 10 கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-skeletons-is-increasing-day-by-day-1787061346"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-skeletons-is-increasing-day-by-day-1787061346</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ள.

இந்த நடவடிக்கை மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ள.
</p><p>
இந்த நடவடிக்கை மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>

8 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு</h2><p>
இதன்போது, 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில், 08 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39cb163-7828-4611-87ab-6be19f52a704/26-6a84653c61b72.webp' /></p><p>
</p><p>

இதுவரையில், செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு
பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f649ce0-4527-4e43-8772-8c6f2e669268/26-6a84653d75115.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39902bf3-6c00-40a3-933c-dd9c535b08b5/26-6a84653e4ef5d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa555fa-5e78-47dd-b45c-49e9edb4f1b8/26-6a84653f266a6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T14:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missile-attack-on-ship-in-strait-of-hormuz-1787061756"></link>
            <id>https://tamilwin.com/article/missile-attack-on-ship-in-strait-of-hormuz-1787061756</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று
இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று
இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் கப்பலின் இயந்திரப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன்,
ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று(18) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கப்பலின்
பாதுகாப்பு அதிகாரி UKMTO அமைப்புக்குத் தகவல் வழங்கியுள்ளார்.</p><h2>தீவிர விசாரணை</h2><p> அதனையடுத்து,
எஞ்சிய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஓமான் கடலோரப் பாதுகாப்புப்
படையினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c9a932-211a-467e-8313-15f2fc154cce/26-6a8467270a4d9.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதலினால் இதுவரை எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படவில்லை
எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது
குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அப்பகுதியினூடாகப் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன்
செயல்படுமாறும், சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் தென்படின் உடனடியாகத்
தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T14:29:30+00:00</updated>
        </entry>
    </feed>
