<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-08T05:23:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கதி - துயரத்தில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-student-dies-1786166423"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-student-dies-1786166423</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயிலும் மாணவியொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(06....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயிலும் மாணவியொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

27 வயதில் உயிரிழப்பு</h2><p>
இவ்வாறு உயிரிழந்த மாணவி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பயிலும் நிரோஷினி என்றும் அவருக்கு தற்போது 27 வயது என்றும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edc93e2-50a2-4c09-8e8e-494bfb1553ae/26-6a76bcc835bc4.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி
மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கற்ற சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:21:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்! பொதுமக்களுக்கான விசேட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786160763"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786160763</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இன்றைய தினத்திற்கான (08.08.2026) காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> </p><p>

அதன்படி, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p>
குறித்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4323414-fcaf-42a8-a2bc-4706b6a63ccb/26-6a76b8f542f24.webp' /></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்</h2><p>
</p><p>
வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T05:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scolarship-exam-in-sri-lanka-1786162126"></link>
            <id>https://tamilwin.com/article/scolarship-exam-in-sri-lanka-1786162126</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என&amp;nbsp;பரீட்சைகள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என&nbsp;பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம்</h2><p>
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள 2723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 294089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 220366 விண்ணப்பதாரர்களும், தமிழ் மொழியில் 73723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர்.</p><p>இப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/457c3aff-8959-4697-b130-5800f4a63d03/26-6a76b2216bd2e.webp' /></p><p> </p><p>

பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாணவர்களின் மன ஒருமைப்பாட்டைப் பேணி, கவனத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்குத் தொடங்கி காலை 10.45 மணிக்கு நிறைவடையும்.</p><h2>அறிவுறுத்தல்</h2><p> 

அதன்பின் கிடைக்கும் சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணி நேர காலம் முதல் வினாத்தாளுக்காக ஒதுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0360b0d4-0f9f-4b49-af44-3dec0164ef59/26-6a76b222242b6.webp' /></p><p>
</p><p>
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாக குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கைது செய்யப்பட்ட சொகுசு பேருந்து உரிமையாளர் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-bus-owner-arrested-vavuniya-court-orders-1786161865"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-bus-owner-arrested-vavuniya-court-orders-1786161865</id>
            <summary type="text">வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொகுசு
பேருந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொகுசு
பேருந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்த
நிலையில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டிருந்தார். </p><p>அதன் பின் குறித்த பேருந்து சேவையின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம்
வழங்குவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டிருந்தார்.</p><h2>போக்குவரத்து நடவடிக்கைகளின் போது</h2><p>

இந்நிலையில் குறித்த பேருந்து உரிமையாளரை புதன்கிழமை (05.08.2026) வவுனியா மாவட்ட
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில அவர் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டதுடன், சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ca0034-15a1-4db5-9dfd-1dd016b63c9c/26-6a76b3b0d08ca.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பில் குறிதத சொகுசு பேரூந்தின உரிமையாளர்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

புளியங்குளததில் ஏற்பட்ட விபத்து சம்பவம் துர்திஸ்டவசமானது. ஏற்றுக் கொள்ள
முடியாத ஒன்று. </p><p>போக்குவரத்து நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் எதிர்பாரதவை.
இருந்த போதும் அன்றைய சம்பவம் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாதவை. </p><p>குறித்த
பேருந்து விபத்தால் மரணித்த குடும்பஸ்தரின் இழப்பை எம்மால் ஏற்றுக் கொள்ள
முடியாது. இதற்காக நாம் மனம் வருந்துவதுடன அவர்களின் குடும்பத்திற்கு எமது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கான தேவையான சில
உதவிகளையும் நாம் செய்திருந்திருந்தோம்.</p><p>எனினும், விபத்தின் போது எமது சொகுசு பேரூந்தை செலுத்திய சாரதியின் தவறை எமது
பணிக்குழு கவனம் செலுத்த தவறியுள்ளனர்.</p><p> இந்த தவறுக்கு வருந்துவதுடன், நாம்
ஒன்று, இரண்டு வருடமல்ல. 30 வருடங்களுக்கு மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டு
வருகின்றோம் . ஒரு நாள் கூட எமது பேரூந்தில் இருந்து எந்தவித சட்டவிரோதமான
எதுவித செயற்பாடுகளும், இதுவரையில் இடம்பெறவில்லை. </p><p>அவ்வளவு தூரம் மக்களுக்கான
சேவையை நாம் நிதானமாகவும், கவனமாகவும் முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
</p><h2>பல ஆயிரக்கணக்கான பயணிகள்&nbsp;</h2><p>தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் எமது
சேவையைப் பெறுகின்றார்கள். குறித்த சம்பவத்தை வைத்து என் மீதும், எமது சேவை மீதும் சிலர் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9944ee0-dbf9-4490-8388-a5bba7efc34c/26-6a76b1b7070b9.webp' /></p><p>ஆனால் துரதிஸ்ட வசமாக இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் அதற்கு பொறுப்பான
எனது நிறுவன உத்தியோகத்தர் கவனயின்மை தொடர்பில் மனம் வருந்துவதுடன், இவ்வாறான
சம்பவங்கள் இடம்பெறாத வகையில் எமது சேவையை உறுதிப்படுத்தி எதிர் காலத்தில்
முன்னெடுப்போம் எனத் தெரிவிப்பதுடன், எமது நிறுவனத்தின் மக்கள் சேவை இன்னும்
வீரியத்துடனும் பலத்துடனும மக்களது நம்பிக்கை குறையாத வகையில தொடரும். </p><p>எமது
சேவை மீது மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. அதற்கேற்ப எமது சேவை தொடரும்.</p><p>

இவ்விபத்துக்கு பின்னர் எமது நிறுவனத்தின் மீது கருசனை கொண்டு பலர்
நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் முகநூல் மூலமும் தொடப்பு கொண்டு நிலமைகளை
விசாரித்து ஆலோசனைகள் வழங்கியிருந்தனர்.</p><p> அனைவருக்கும் எமது நன்றியை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:42:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் - கொழும்புக்கு இடையில் மேம்படுத்தப்பட்ட நேரடி விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141"></link>
            <id>https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141</id>
            <summary type="text">சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>

 2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான குளிர்கால அட்டவணையின் போது வாரத்திற்கு 3 விமான சேவைகளாக விரிவுபடுத்தவுள்ளது.</p><p> இது கடந்த குளிர்காலப் பருவத்தில் வழங்கப்பட்ட வாரத்திற்கு 2 முறை என்ற சேவையிலிருந்து அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><b> பருவகாலத்தின் முதல் விமானம்</b></h2><p>அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட அட்டவணையானது சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையேயான பயணத்திற்கான அதிகரித்துவரும் தேவையை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c536398-8284-4314-bda9-407b3e70725f/26-6a76b2387061f.webp' /></p><p>பருவகாலத்தின் முதல் விமானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று சூரிச்சிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், இந்த சேவைகள் 2027ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.</p><p> </p><h3><b>விமான சேவைகள்</b></h3><p>கொழும்பில் இருந்து சூரிச்சுக்கான விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994d18c5-0c91-46e2-bf3c-c4ea0d0362b6/26-6a76b23920486.webp' /></p><p>இந்த அதிகரிப்பு இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வான்வழி இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அத்துடன், குளிர்காலப் பயணப் பருவத்தில் பயணிகளுக்குக் கூடுதல் பயணத் தெரிவுகளையும் இது வழங்கும். </p><p>மேலும், லுப்தான்சா குழுமத்தின் மூலம் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல இடங்களுக்குச் செல்வதற்கான வசதியான இணைப்புகளையும் சூரிச் விமான நிலையம்&nbsp; வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-08-08T04:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-passenger-arrested-in-bia-1786162249"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-passenger-arrested-in-bia-1786162249</id>
            <summary type="text">இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட் தொகையை நாட்டுக்கு கொண்டு வந்த சந்தேக நபர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய, நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் நபர் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>ப்ளை டுபாய் விமான சேவை</b></h2><p>அவர் இன்று அதிகாலை 04.00 மணியளவில் டுபாயில் இருந்து ப்ளை டுபாய் விமான சேவையின் FZ-569 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d6f42a-3f07-4ca1-95c2-840903453315/26-6a76add84b4b5.webp' /></p><p>குறித்த நபர் கொண்டு வந்த 2 பயணப் பைகளுக்குள் இருந்து பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட Top Gun வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். </p><p>அதற்கமைய, சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-08T04:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தபால் துறையை நவீனமயப்படுத்த அரசு விசேட திட்டம் - ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-special-to-modernize-postal-sector-1786161780"></link>
            <id>https://tamilwin.com/article/government-special-to-modernize-postal-sector-1786161780</id>
            <summary type="text">இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்றுள்ளது. </p><p>

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஜூலை 09 ஆம் திகதி சுகாதார மற்றும்
வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவு - செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின்
போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, தபால் திணைக்களத்தை
நவீனமயமாக்குவதில் நிலவும் தற்போதைய சிக்கல்களைக் கண்டறிவதையும், தபால் சேவையை
மிகவும் செயற்திறனான மற்றும் இலாபகரமான சேவையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள்
மற்றும் ஆற்றல்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல்
இடம்பெற்றுள்ளது.</p><h2>

நவீனமயமாக்கப்படும் தபால் சேவை</h2><p> 

தற்பொழுது தபால் திணைக்களம் வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து
நிதிச் சேவைகள், சம்பிரதாய தபால் சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகிய
மூன்று பிரதான வழிகளில் தனது சேவைகளை வழங்குவதாக தபால் மா அதிபர் எஸ். ஆர்.
டப்ளியூ. எம். ஆர். பி. சத்குமார இங்கு சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f018e4-1dd2-478b-ab55-959781f38275/26-6a76aac3e1362.webp' /></p><p>
</p><p>
பொருள்கள் விநியோகத்திற்கான பெரும் சாத்தியக்கூறும் சந்தை வாய்ப்பும் தற்போது
உருவாகியுள்ளது என்றும், சந்தை வாய்ப்புகளில் 10-15 வீத பங்களிக்கும் அந்தச்
சேவைகளை விரைவாக விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றும் தபால் மா அதிபர் இங்கு
தெரிவித்தார்.
</p><p>
குறிப்பாக அதற்கு, வர்த்தக முடிவுகளை எடுக்கும் திறனை அதிகரித்தல், இலாபகரமான
சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற
மறுசீரமைப்பு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தபால் மா
அதிபர், இந்த நோக்கத்திற்காக திறைசேரியுடன் இணைந்து தற்போது ஆய்வு
நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>

உலக தபால் சேவை, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, நவீன
விடயங்களுடன், தன்னை மாற்றிக்கொண்டு அபிவிருத்தியில் முன்னேறியுள்ளது என்று
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c21879d-c866-41c1-81ee-08b431efb0db/26-6a76aac4caa02.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f54b9f88-ad27-48c3-8095-a553b3c6ab08/26-6a76aac59d676.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:05:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcyclists-most-common-fatalities-road-accident-1786156289"></link>
            <id>https://tamilwin.com/article/motorcyclists-most-common-fatalities-road-accident-1786156289</id>
            <summary type="text">வீதி விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களிலேயே நிகழ்கின்றன என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கூறியுள்ளது. 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீதி விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களிலேயே நிகழ்கின்றன என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கூறியுள்ளது. </p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன, தகுந்த தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>2025 ஆம் ஆண்டில்</h2><p>

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகமும், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான மனோஜ் ரணகலா, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை 1,626 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df555df1-d40d-420d-8c58-65432d13c127/26-6a76a2e9877a9.webp' /></p><p>2025 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 1,585 என்ற எண்ணிக்கையை விட இது அதிகம் என்றும் மனோஜ் ரணகல கூறியுள்ளார்.</p><p>

இந்த காலகட்டத்தில் 749 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 ஓட்டுநர்களும் அடங்குவர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T03:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214"></link>
            <id>https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214</id>
            <summary type="text">பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

இந்த பதற்றம் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

வெளிப்புறத்திலிருந்து ஒரு தரப்பினரால் சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றமையினால் மோதல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2><b>குற்றக் கும்பல்</b></h2><p>இதன்போது சில கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் கொண்ட குழுவினர் சிறைக் கதவை உடைத்து வெளியே வந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8f69bd9-37d1-4b9a-8dc9-b65d967a3be4/26-6a760b0dbde35.webp' /></p><p>அவர்களில் பெரும்பான்மையினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கொஸ்மல்லி என்பவரின் ஆதரவாளர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குழுவினர் சிறைச்சாலை வாயிலின் ஊடாக வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இதன் போது, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்தக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். </p><p>கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 35 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது. </p><h3><b>உயிரிழந்த கைது</b></h3><p>அவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை, நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உள்ளிட்ட பல கொலைகளுடன் தொடர்புடையர் ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06deaf0c-b270-4512-88ca-bea34c24d349/26-6a760aa4089a8.webp' /></p><p>மேலும், ஹோமாகம ஹந்தயா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் ஒப்பந்தத் துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும் செயற்பட்டுள்ளார். </p><p>குற்றவாளிக்கு எதிராக காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p> அத்துடன், கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்துநராக முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்பட்டவரும் இவராகும். </p><p>சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைகளுக்காகச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.<br><br><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 


</p>]]></content>
            <updated>2026-08-08T03:03:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொண்டாட்ட நிகழ்வின் போது பயங்கரம் - மூன்று பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-fire-in-party-3-arrested-in-colombo-1786155374"></link>
            <id>https://tamilwin.com/article/gun-fire-in-party-3-arrested-in-colombo-1786155374</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் கொண்டாட்ட நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் கொண்டாட்ட நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கடந்த 23ஆம் திகதி வத்தளை, கதிறான பல்லியவத்தை பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இரவு நேரத்தில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. </p><p>

காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2><b>

சந்தேகநபர்கள் கைது</b></h2><p>மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d93768-e426-4e09-a757-49da7cfb684a/26-6a76934fa5851.webp' /></p><p>சந்தேகநபர்கள் 26, 35 மற்றும் 36 வயதுடைய ஜிந்துபிட்டிய, மாத்தளை மற்றும் கடுகன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரை ஓட்டிய வாகன ஓட்டுநராகும். மற்றொரு சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனவும், மற்றைய சந்தேகநபர் குற்றவாளிகளுக்குத் தலைமறைவாக இருக்க உதவியவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T02:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷானி அபேசேகர பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shani-abeysekara-promoted-to-rank-of-dig-1786153818"></link>
            <id>https://tamilwin.com/article/shani-abeysekara-promoted-to-rank-of-dig-1786153818</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
</p><p>
நிர்வாக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சமீபத்தில் ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்வு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
</p><p>
சம்பந்தப்பட்ட உத்தரவு மே 13 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணையகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
</p><h2>11 மாதங்கள் விளக்கமறியல்</h2><p>சம்பந்தப்பட்ட உத்தரவின்படி, இந்தப் பதவி உயர்வுகளை ஆகஸ்ட் 25 முதல் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டதுடன், அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை இழந்த அனைத்துச் சம்பள தொகையையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0917946b-48ab-4fb8-8f16-485739ceab8d/26-6a768e9dd45c9.webp' /></p><p>2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
</p><p>
பின்னர் அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்ட ஷானி அபேசேகர, சுற்றறிக்கை 3/2018 இன் விதிகளுக்கு இணங்க மீண்டும் நியமிக்கப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T02:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து பதற்றமான சூழ்நிலை - பின்னணி குறித்து வெளியான புலனாய்வு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/organized-team-behind-the-prison-riot-1786153725"></link>
            <id>https://tamilwin.com/article/organized-team-behind-the-prison-riot-1786153725</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
நாட்டின் ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் எனப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.</p><p> 

எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களில் கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேனை ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h2><b>

கைதிகள் பலி
</b></h2><p>இந்த அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe349fc-550a-45fb-a30f-10fb81354dd1/26-6a768e34dd1a3.webp' /></p><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் மதிலுக்கு வெளியில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றதையடுத்து, கைதிகளுக்கு இடையே முதன்முதலில் பதற்றம் ஆரம்பமானது.</p><p>அது அடுத்த நாளும் தொடர்ந்தது.

அடுத்து குருவிட்ட சிறைச்சாலையிலும் கைதிகளுக்கு இடையே கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.</p><h3><b> சிறைச்சாலைக்கு இடமாற்றம் </b></h3><p>ஆத்திரமடைந்த கைதிகள் அங்கிருந்த மருத்துவமனை மற்றும் பல கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5143927-9676-4837-9a0e-4f2549c6037d/26-6a768e3593f68.webp' /></p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கும் அதிகமான கைதிகளுக்கு இடவசதிகள் போதாது எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.</p><p> 
 
நீர்கொழும்பு பல்லன்சேனை சிறைச்சாலையிலும் காலை உணவு வழங்குவதற்காகச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது, போதைப்பொருள் தகராறைக் அடிப்படையாகக் கொண்டு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-08T02:02:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறை வன்முறை: அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/recent-violent-incidents-at-magazine-prison-1786152877"></link>
            <id>https://tamilwin.com/article/recent-violent-incidents-at-magazine-prison-1786152877</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்திற்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
</p><p>
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரள&nbsp; குறித்த கடிதத்தை எழுதியுள்ளார்.</p><p></p><h2>மெகசின் சிறைச்சாலை</h2><p>எதிர்வரும் ஒகஸ்ட் 18, ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36a1473c-425a-4c89-b662-e5bdbe440d8f/26-6a768a4dc984e.webp' /></p><p>
</p><p>
கடந்த வியாழக்கிழமை இரவு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி கவலை தெரிவித்துள்ளது. </p><p>மேலும், சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் ஒரு அவசரச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பதவியில் இருந்த காலத்தில் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின்கீழே அகில விராஜ் காரியவாசம் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து&nbsp;வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T01:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! அன்றே எச்சரித்த மகிந்த..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-prision-attacks-tamil-videos-1786148605"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-prision-attacks-tamil-videos-1786148605</id>
            <summary type="text">இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீர்கொழும்பு, மெகசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

நீர்கொழும்பு, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லஞ்சேனை போன்ற பல சிறைச்சாலைகளில் கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
கைதிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது, தங்களின் வழக்கு விசாரணைகளுக்கான அரச பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக தயாரித்து வழங்குவதாகும்.</p><p>இதில் உள்ள தாமதமே இந்த கலவரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p>

 இது திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கைதிகள் அமைதியாக இருக்குமாறும், அறிக்கைகளை விரைவுபடுத்த தேவையான பணியாளர்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.</p><p>

 சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முப்படையினரின் கண்காணிப்பில் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுப்பப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, 'ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன' என்று குறிப்பிட்டதையே தற்போதைய குழப்பங்களுக்குத் தொடக்கமாகப் பலர் கருதுகின்றனர். </p><p>

மேலும், அரசாங்கத்தின் மீதான சட்ட ஒழுங்கு குறித்து சர்வதேச மட்டத்தில் அவப்பெயரை ஏற்படுத்தவும், தற்போதைய அரசை வீழ்த்தவும் இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...&nbsp;&nbsp;</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Tk5kWeUYsfw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T01:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக் கலவரங்கள் அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியே! ஜானக வக்கும்புர சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prison-news-tamil-1786151869"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prison-news-tamil-1786151869</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடங்கி நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும்
பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழல், தற்போதைய அரசின் முழுமையான
நிர்வாகத் தோல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடங்கி நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும்
பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழல், தற்போதைய அரசின் முழுமையான
நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று(7) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிச் செயலகத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>எதிர்க்கட்சிகள் மீது பழி</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய துறையைக் கூட
முறையாக நிர்வகிக்கத் திறமையற்ற அரசு, எழும் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான
தீர்வுகளைக் காண்பதை விடுத்து, வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும்
போக்கைக் கடைப்பிடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b94ba30b-ae55-4d8a-bde8-61fcef8b54ac/26-6a7685c9f3d00.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராகச் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னணியில், திறமையற்ற ஒரு
அமைச்சரைக் காப்பாற்ற முற்பட்டதன் விளைவைத்தான் இன்று ஒட்டுமொத்த நாடும்
அனுபவித்து வருகின்றது.</p><p></p><h2>பாதாள உலகக் குழுக்கள்</h2><p>
</p><p>
சிறைச்சாலைகளுக்குள் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோத
ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாக, சிறைச்சாலைத்துறை
அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்திலும் பாதுகாப்பற்ற
சூழலிலும் நாளாந்தம் வாழ்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7753068a-9680-4c95-8b64-9e5308e336d0/26-6a7685caa6a8b.webp' /></p><p>
</p><p>
சிறைக்குள் அரங்கேறும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை வெளிநாட்டுச் சதி
என்றோ அல்லது மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி மூடி மறைத்துவிட முடியாது. </p><p>இது
அரசின் நேரடி இயலாமையையும் நிர்வாகத் திறனின்மையையுமே உலகுக்குப்
பறைசாற்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.<br><br><br><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-08T01:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நடைபெறவுள்ளது புலமைப்பரிசில் பரீட்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-examinations-to-proceed-as-scheduled-1786150862"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-examinations-to-proceed-as-scheduled-1786150862</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை(9) ஞாயிற்றுக்கிழமை
நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை(9) ஞாயிற்றுக்கிழமை
நடைபெறவுள்ளது.
</p><p>
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலையங்களில் இந்தப்
பரீட்சை இடம்பெறவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி
லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;புலமைப்பரிசில் பரீட்சை</h2><p>

இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 2
இலட்சத்து 94 ஆயிரத்து 89 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a90b5d31-6e85-47c9-b13e-e3acbb8d348f/26-6a7681410a2c9.webp' /></p><p>இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T01:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prision-attack-news-1786149953"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prision-attack-news-1786149953</id>
            <summary type="text">சிறைச்சாலைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு தரப்பினர்
திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்த
பொதுமக்கள் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு தரப்பினர்
திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்த
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,
ஆயினும் இந்த மோதல்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித
அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் உறுதியளித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(7) நடைபெற்ற அமர்வின்போது,
சிறைச்சாலைகளில் தொடரும் மோதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>புலனாய்வுத் தகவல்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான மோதல்கள் தற்போது மஹர, வெலிக்கடை
மகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளுக்கும் கட்டம் கட்டமாக
விரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6b7329-7ea2-43af-807f-c79fb4ab850a/26-6a767e6dc674c.webp' /></p><p> </p><p>கிடைக்கப் பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்கள் மற்றும்
அறிக்கைகளின்படி, இவை யாவும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்பதுடன், சிறைச்சாலைக்
கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் சதியோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த
மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் 40 பேர்
ஒன்றிணைந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். உடனடியாக
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கைகள்&nbsp;</h2><p> </p><p>எனினும்,
இச்சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 13
பேர் காயமடைந்து இரத்தினபுரி சிறைச்சாலை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febbd868-59dc-4418-8ca8-8d16bf1bb0ba/26-6a767e6e78069.webp' /></p><p> </p><p>சிறைச்சாலைகளில் மோதல்களைக் கட்டுப்படுத்தும்
அதேவேளை, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.

பல்லன்சேன சிறைச்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவுக்காக
வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் கட்டடத்தின் மீது ஏறிப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>

சிறைச்சாலைகளில் தொடரும் இத்தகைய அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்தவும்,
கட்டமைப்பைப் பாதுகாக்கவுமான கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:55:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைகாலத் தடை நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stay-extended-on-vavuniya-mayor-s-removal-1786145253"></link>
            <id>https://tamilwin.com/article/stay-extended-on-vavuniya-mayor-s-removal-1786145253</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைகால
தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன்
வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைகால
தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன்
விவாதங்களை எழுத்து மூல சமர்பணமாக வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம்&nbsp; உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது நேற்று(07.08.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்</h2><p>
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் மீண்டும் ஒரு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இது
தொடர்பாக வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afdf27c9-d529-416b-a25a-bcc029575db0/26-6a766d52d05c7.webp' /></p><p>

ஆரம்ப கட்டத்தில் நாங்கள் எடுத்திருந்த இடைக்கால தடையினை நீக்குமாறு
பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை அணைக்கப்பட்டிருந்தது. </p><p>அந்த ஆட்சேபனைக்கு
நாங்கள் மறு ஆட்சேபனையினை&nbsp; ஓகஸ்ட் 6ஆம் திகதி அணைத்திருந்தோம். அந்த விடயம்
தொடர்பாக மன்றில் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>இடைக்காலத் தடை</h2><p>
</p><p>
இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது சம்பந்தமாக மட்டுமே
விவாதம் இடம்பெற்றிருக்கிறது. நாள் முழுவதும் இந்த விவாதம் இடம்பெற்று,
இறுதியில் எங்களுடைய விவாதங்களினை எழுத்து மூல சமர்ப்பணமாக, மன்றுக்கு
வழங்குமாறு மன்று பணித்திருக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfd1b1e-07af-455f-8192-0b4c4e9a2532/26-6a766d5382798.webp' /></p><p>அதனை இந்த மாதம் 28 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நாங்கள்
அலுவலகத்திலே தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு செப்டம்பர் மாதம் 9 ஆம்
திகதி இடைக்கால தடை தொடர்பான உத்தரவை நீதிமன்றம் வழங்கும். </p><p>அதன் பின்னர் தான்
பிரதான வழக்கு இடம்பெறும். அத்துடன் செப்டம்பர் 9 ஆம் திகதி வரைக்கும் ஏற்கனவே
வழங்கப்பட்டிருக்கின்ற இடைக்காலத் தடைக்கட்டளை மன்றால்
நீடிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிளாஸ்டிக் உணவுப் பொதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pudukudiyirupu-end-plastic-food-package-1786142071"></link>
            <id>https://tamilwin.com/article/pudukudiyirupu-end-plastic-food-package-1786142071</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பில் அனைத்து உணவகங்களிலும் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து, இயற்கையான பொருட்களின் பாவணையை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பில் அனைத்து உணவகங்களிலும் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து, இயற்கையான பொருட்களின் பாவணையை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p>

இந்தக் கலந்துரையாடலானது நேற்றைய தினம்(07.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இயற்கையான பொருட்களின் பாவணை</h2><p> </p><p>

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பரிமாறல் முறைகளின் அவசியம் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது, அடுத்த ஒரு மாத காலத்திற்குள் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57dd30af-940a-4b0a-a927-a13437cc6776/26-6a76635ab2a7f.webp' /></p><p> </p><p>இந்த முயற்சிக்கு உணவக உரிமையாளர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பசுமையான புதுக்குடியிருப்பை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து இயற்கை நட்பு நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b076cd01-339d-49ef-9e9c-032661a9cc3c/26-6a76635b7e284.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சிறைகளையே நிர்வகிக்க முடியாத அரசால் ஒட்டுமொத்த நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும் - சுஜீவ சேனசிங்க எம்.பி. கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-can-a-government-manage-the-country-prisons-1786145568"></link>
            <id>https://tamilwin.com/article/how-can-a-government-manage-the-country-prisons-1786145568</id>
            <summary type="text">தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின்
சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று
ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின்
சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று(7) வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி தலைமைச் செயலகத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசின் மறைமுகச் சதித்திட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"சிறைக்குள் இருக்கும் கைதிகளையோ அல்லது சிறைச்சாலை அமைப்பைக் கூட முறையாக
நிர்வாகிக்க முடியாத தற்போதைய அரசால், ஒட்டுமொத்த நாட்டையும் அதன் மக்களையும்
எவ்வாறு பாதுகாத்துச் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என்பதை மக்கள் இப்போதாவது
புரிந்துகொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d8c19c-9ce8-4f43-a53f-36a93847c5ed/26-6a766e24098d5.webp' /></p><p>

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இத்தகைய வன்முறைகளும் மோதல்களும் இடம்பெறுவது
வெறும் நிர்வாகத் திறமையின்மையா அல்லது இதன் பின்னணியில் அரசின் மறைமுகச்
சதித்திட்டம் எதுவும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்கி, அதைக் காரணம் காட்டி அவசரகாலச் சட்டத்தை
நீட்டிப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டுவதற்கும் அரசே
இவ்வாறான சூழல்களைப் பயன்படுத்துகின்றதா என்ற கோணத்திலும் கேள்விகள்
எழுகின்றன.</p><p></p><h2>சட்ட ஒழுங்கு மீறல்கள்</h2><p>
</p><p>
சிறைச்சாலைகளில் இத்தனை சட்ட ஒழுங்கு மீறல்களும் அசம்பாவிதங்களும் நடந்தேறிய
பின்னரும், அதற்குப் பொறுப்பான துறைசார் அமைச்சர் தனது பதவியை&nbsp; விலகல் செய்யாமல் தொடர்ந்து நீடிப்பது பெரும் கேள்வியை எழுப்புகின்றது.
</p><p>
அமைச்சர் பதவி விலகாமல் இருப்பதன் மூலம், சிறைச்சாலைக்குள் நடக்கும் இத்தகைய
மோதல்கள் அவருடைய முழு அறிவோடும் விருப்பத்தோடும் தான் நடக்கின்றனவோ என்ற
எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b8e956-66bf-4dcd-8c34-d14b6789f12e/26-6a766e24ae659.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களோ அல்லது வழக்கு விசாரணை முடிவடையாமல் பிணை
மறுக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களோ, சிறை வளாகத்துக்குள்ளேயே
மரணமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்தான சூழல் நிலவுவது நாட்டின் சட்டத்தின்
ஆட்சிக்கும் நீதித்துறைக்கும் விழுந்த பேரிடியாகும்.
</p><p>
தவறு செய்தவர்களுக்குச் சட்டப்படி நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டுமே தவிர,
சிறைச்சாலைகளுக்குள்ளேயே அவர்களுக்கு மறைமுக மரண தண்டனை கிடைக்கும் நிலைமை
உருவாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தனது உண்மையான நிலையை நாட்டுக்குத்
தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p><br></p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-07T23:45:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசை கடுமையாக சாடிய எதிர்கட்சித் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879"></link>
            <id>https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்ற விசேட கூற்றொன்றை முன்வைத்து
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தேசிய பாதுகாப்புக்கு&nbsp;அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கயைில், "யார் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தாலும், தற்போதைய சிறைச்சாலை மோதல்களும்
அசம்பாவிதங்களும் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.</p><p>

சிறைச்சாலைகளில் இடம்பெறும் தொடர் அசம்பாவிதங்களைக் அடிப்படையாகக் கொண்டே நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நாங்கள்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7672ad0e-ca8d-42bf-aeb4-c9acd8fdbd39/26-6a7667c857c1f.webp' /></p><p> </p><p>எனினும், அந்த வாக்கெடுப்பில்
அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு
அரசு தன் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது.
</p><p>
ஆனால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹர
சிறைச்சாலையிலும், தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும், தற்போது
குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்துப் பிரச்சினைகள்
வெடித்துள்ளன.
</p><p>
எனவே, இந்த விவகாரத்தில் அரசு எவ்வித அலட்சியமுமின்றி உடனடியாகக் கடுமையான
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:33:31+00:00</updated>
        </entry>
    </feed>
