<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-25T04:17:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-died-in-prison-is-back-to-family-turmoil-1787626701"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-died-in-prison-is-back-to-family-turmoil-1787626701</id>
            <summary type="text">வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உயிருடன் வீட்டிற்கு வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
</p><p>
குருநாகல் – கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸாரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரியைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம்</span></p><p>

இந்த நிலையில், இறந்ததாக கூறப்பட்டவர் தனது இறுதிக்கிரியைக்கு உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08494541-c85f-401c-8fd5-7079137dd622/26-6a8d107bcbf81.webp' />&nbsp;</p><p>
</p><p>
கோகோபன்குளம், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் நேற்று (24) திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளார். </p><p>

கிராமம் முழுவதும் இறுதிக்கிரியைக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, இறுதிச்சடங்கு மற்றும் தகனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், கீர்த்திசேன உயிருடன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளமை குழப்பத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
சிறைச்சாலை மற்றும் அதிகாரிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு சுற்றுலா சென்ற சிறுமி பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-year-old-girl-dies-in-relative-s-house-1787628706"></link>
            <id>https://tamilwin.com/article/3-year-old-girl-dies-in-relative-s-house-1787628706</id>
            <summary type="text">கம்பளை, புப்புரெஸ்ஸ - டெல்டாவத்தை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற மூன்று வயது சிறுமி உயிரழந்துள்ளார்.

 தண்ணீர் என நினைத்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை, புப்புரெஸ்ஸ - டெல்டாவத்தை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற மூன்று வயது சிறுமி உயிரழந்துள்ளார்.
</p><p>
 தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த பசுப்பால் பதப்படுத்தப் பயன்படும் இரசாயனக் திரவத்தை பருகியதால் சிறுமி உயிரிழந்துள்ளார். </p><p> 

கம்பளை, வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>சிறுமி பரிதாபமாக பலி</b></h2><p>வவுனியா, செட்டிக்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட தினேஷ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1345cf-06b7-4566-a621-7433b18cec3b/26-6a8d0f742c978.webp' /></p><p>சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட பலர் டெல்டாவத்தையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். </p><p>வவுனியாவிலிருந்து சென்ற&nbsp; குழுவினர் நேற்று பகல் குளித்துவிட்டு, மாலையில் வீட்டின் வெளிப்பகுதியில் நின்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர்.
</p><p>
இதன் போதே இந்தச் சிறுமி வீட்டுக்குள் சென்று ஜன்னல் மீது வைக்கப்பட்டிருந்த குறித்த திரவத்தை குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
</p>]]></content>
            <updated>2026-08-25T03:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆபத்தான நபர்..! பல மணிநேரம் வாக்குமூலமும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு&amp;nbsp; இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரண்டாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு&nbsp; இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a308715-8608-40cc-9d1a-30e14ad34a72/26-6a8d0d80e07ee.webp' />&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கமைய, இன்று காலை சுமார் 5:20 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><h2>சர்வதேச சிவப்பு எச்சரிக்கை</h2><p>
 

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்'&nbsp; சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின்&nbsp; (Red Notice)&nbsp;கீழ் அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2d9aad6-3b14-4d61-9e24-fc79b8557ae1/26-6a8cf56936664.webp' /></p><p>தற்போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்.</p><p>களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பிடியாணை உத்தரவு</span></p><p>
</p><p>
 

 சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0721702-a7f6-4ea4-a304-7d6a2f978ef7/26-6a8cfd7e8f94c.webp' /></p><p>
</p><p>
 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கையும் பெறப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733"></link>
            <id>https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>10 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
உயிரிழந்த கைதிகளுக்கும் நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும், இது தொடர்பான கோரிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84f14a6-2838-4fcf-850f-25c001544b21/26-6a8d08db6c920.webp' /></p><p>
இந்த சம்பவம் சிறைச்சாலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், நெரிசல், உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. </p><p>
இதனைத் தொடர்ந்து மஹர, கொழும்பு நியூ மெகசின், குருவிற்ற மற்றும் பள்ளன்சேனை ஆகிய சிறைச்சாலைகளிலும் அசம்பாவிதங்கள் பதிவாகியிருந்தன.
</p><p>சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.</p><p>
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலனை மேம்படுத்துதல், அவர்களின் தொழில்முறை பயிற்சி மற்றும் புலனாய்வுத் திறன்களை அதிகரித்தல் மற்றும் பொலிஸ் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியன தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T03:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் கடும் வெப்பநிலை! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461"></link>
            <id>https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் (25) செம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
இதன்படி இன்றைய தினம் (25) செம்மஞ்சள் மட்டத்திலான அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2>எச்சரிக்கை மட்டத்தில் வெப்பம்</h2><p>இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0504e2b-8e29-4ab7-aa26-21735394c08b/26-6a8d07c7115f8.webp' /></p><p>இதேவேளை, பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீரென நீர் விநியோகம் துண்டிப்பு - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-cut-in-colombo-and-gampaha-districts-1787622955"></link>
            <id>https://tamilwin.com/article/water-cut-in-colombo-and-gampaha-districts-1787622955</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம்&amp;nbsp;தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.களனி கங்கையிலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம்&nbsp;தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவிப்பு</h2><p>பாதுகாப்பு காரணங்களுக்க, அம்பத்தலை மற்றும் களனி தென்கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c465e5a-0d4d-4a34-bae6-fe050f22c0f4/26-6a8cfa74ba897.webp' /></p><p>
 

நீர் விநியோகத்தை சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T02:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்! வெளியாகவுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-visits-lanka-1787622490"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-visits-lanka-1787622490</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த விஜயம் தொடர்பான அதிகாரபூர்வ திகதிகள் அறிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
</p><p>இந்த விஜயம் தொடர்பான அதிகாரபூர்வ திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்த விஜயம் அமையவுள்ளது.</p><h2>விஜயத்தின் முதன்மை நோக்கம்</h2><p>
</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/238864c0-40d5-4035-a0ac-bf13e45f30ae/26-6a8cf46361e55.webp' /></p><p>
இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.</p><p>
கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்தான இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாக ஆய்வுக் செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp; </p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T01:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் டொலர் பொருளாதார இலக்கு!- பிரதி அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475</id>
            <summary type="text">அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
என...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> "பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத்திறனையும் சுய சிந்தனையையும்
முடக்கியுள்ள நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்குத் தீர்வு காணும்
புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது.</p><h2>பொருளாதார மறுமலர்ச்சி&nbsp;</h2><p>
</p><p>
முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.

எனவே, தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க
உணர்வுடன் சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் வழிவகுக்கும் வகையில்
மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் பணிச்சுமையைக்
குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், 19ஆம்
நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப
வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது என தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574089a4-085b-4ef4-a200-746630a2bd65/26-6a8ceb969c961.webp' /></p><p>

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக்
குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட
முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், இலங்கை
இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக
உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.</p><p>

உள்நாட்டுத் தொழில்முனைவோர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல்,
சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு தரும்
வணிக உத்திகளை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை இளைஞர்களுக்குத் தேவையான
அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் பிரதி அமைச்சர்
சதுரங்க அபேசிங்க மேலும் உறுதியளித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T01:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732"></link>
            <id>https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732</id>
            <summary type="text">இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் &#039;ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

இதற்கமைய வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் 'ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.</p><p> 

இதற்கமைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் விமான பயணிகள் குடிவரவு கவுன்ட்டர்களில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்&nbsp; (Boarding Pass) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் விடுத்துள்ளது.</p><h2><b> 

ஈ-போர்டிங் பாஸ்</b></h2><p>புதிய நடைமுறையின் கீழ் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களுக்கு பதிலாக, கையடக்க தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்களில் உள்ள ஈ-போர்டிங் பாஸ்களையும் குடிவரவு கவுண்டர்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be7ecb5-9405-4414-b968-f5def711eae7/26-6a8c5d9f0d848.webp' /></p><p>அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ் மூலம் முத்திரை குத்தப்படுவதால் விமான பயணிகளுக்கு நேர விரயம் ஏற்படுவதுடன் தாமதங்களும் ஏற்படுகிறன. </p><p>

இந்நிலையில் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறையால் அந்த குறைபாடு தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3><b> 

குடியேற்ற முத்திரை</b></h3><p>அதேவேளை பயணிகள் விரும்பினால் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அவற்றில் குடியேற்ற முத்திரை குத்தப்பட மாட்டாது.
</p><p>
இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-24T23:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் : நாமல் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/to-protect-the-independence-of-the-judiciary-1787612661"></link>
            <id>https://tamilwin.com/article/to-protect-the-independence-of-the-judiciary-1787612661</id>
            <summary type="text">சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து,
நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக
நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து,
நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்
தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>&nbsp;"அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதும்,
குறிப்பிட்ட சிலரைக் கைது செய்யப்போவதாகக் கூறுவதும் நீதித்துறையின்
சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, நீதித்துறையின்
கௌரவத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர்,
வாக்குறுதியளித்தபடி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்களை விநியோகிக்கவோ,
நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கவோ அரசாங்கத்தால் முடியவில்லை
எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/204bea86-36e1-4457-9bd9-810c9644f914/26-6a8ccdf782ba9.webp' /></p><p>
</p><p>
மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத்
திட்டங்களை முறையான திட்டமிடலின்றிச் செயற்படுத்துவதில் அரசாங்கம்
தோல்வியடைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற விசாரணைகள் குறிப்பிட்ட நபர்களை
இலக்குவைத்து பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்
சாட்டினார்.
</p><p>
நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி
நிலைமை குறித்துப் பேசிய அவர், குடிநீர்த் பற்றாக்குறை மற்றும் விவசாய
நிலங்களுக்கான நீர் மேலாண்மை தொடர்பில் அரசாங்கம் அலட்சியப் போக்குடன்
செயற்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p>

அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க முற்படுவதை நிறுத்திவிட்டு, மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் நாமல்
ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T23:04:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள்! சலேவின் தாயார் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் எனக் கோரி, அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>அத்தோடு, தனது மகன் தொடர்பான எந்தவொரு விசாரணைணையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.</p><p>மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்திப்பதற்கான அனுமதியினை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>&nbsp;இந்தக் கடிதத்தின் பின்னணி என்ன, சுரேஷ் சலேவின் தாயார் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZJlN94HPz_M" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T22:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-visits-jaffna-today-1787604357"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-visits-jaffna-today-1787604357</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.யாழ். மாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.</p><p>யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய
அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு
நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார்.</p><h2>வன்முறைகள்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>
நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர்
உயிரிழந்தனர்.</p><p> இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப்
பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7676931a-0b2c-438a-a728-a4709c183f03/26-6a8cad86df293.webp' /></p>]]></content>
            <updated>2026-08-24T22:20:18+00:00</updated>
        </entry>
    </feed>
