<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T07:36:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு காருடன் கைது செய்யப்பட்ட இளம் தம்பதி - தனமல்வில பகுதியில் இருந்து கிடைத்த இரகசிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-couple-caught-smoking-driving-1786345478"></link>
            <id>https://tamilwin.com/article/young-couple-caught-smoking-driving-1786345478</id>
            <summary type="text">தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை, புத்தளம் - சிலாபம் வீதியில் பத்துலு ஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, தம்பதியினரின் சொகுசு காரில் 17 கிலோகிராம் மற்றும் 985 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. </p><h2>

இளம் தம்பதியினர் கைது</h2><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 26 வயது ஆணும், 22 வயது பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08dcd190-458d-4445-b144-79727a493258/26-6a797dc67ddcc.webp' /></p><p> 

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

பொலிஸாரால் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள், தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டது என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. </p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இளம் தம்பதியினர், இன்று(10.08.2026) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் - வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/results-of-scholarship-exam-1786345408"></link>
            <id>https://tamilwin.com/article/results-of-scholarship-exam-1786345408</id>
            <summary type="text">

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். </p><p>

இன்று காலை(10.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

 ஆகஸ்ட் 20 முதல் 25 வரை ..</h2><p>

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை ஆகஸ்ட் 20 முதல் 25 வரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00de3cd2-ce2d-4f13-863c-2540178e59d1/26-6a797a6790ff3.webp' /></p><p> </p><p>

இதேவேளை, இந்த ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 தேர்வு மையங்களில் நேற்று(09) இடம்பெற்றது. </p><p>

இந்த பரீட்சையில் 94,089 மாணவர்கள் பங்கேற்றதாகவும், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதியுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862</id>
            <summary type="text">உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் அரசாங்கங்களைச் சேர்ந்த பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லை என்ற ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.</p><p> </p><h2><b>தீர்ப்பிற்கு எதிராக மேன்முறை</b></h2><p>அதனைத் தொடர்ந்து, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657d2885-8e73-41f0-ab04-81e9a7af64a0/26-6a7979da45060.webp' /></p><p>அத்துடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளரின் கையெழுத்துடனும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>அதற்கமைய, குறித்த நிபந்தனையின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்பட்ட மகிந்த ராஜபக்சவின் சொத்து வழக்கு, கோட்டாபய ராஜபக்சவின் சொத்து வழக்கு, பஸில் ராஜபக்சவின் 5 சொத்து வழக்குகள், நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரின் 3 வழக்குகள், ரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு ஒன்று, கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்று உள்ளிட்ட பல வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே ஆணையாளரின் கையெழுத்துடன் வழக்கு தொடரப்பட்டமை காரணமாக அவை வாபஸ் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:12:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம் : சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைவு சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக</h2><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,&nbsp;வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தமது கட்சி தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1c5523-add8-48fc-9314-541b5c8b0bfa/26-6a7971eebcec2.webp' /></p><p>
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அரசியல் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து எமது சட்டத்தரணிகளுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்..! பரீட்சை ஆணையாளர் நாயகம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285"></link>
            <id>https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>இன்று(10.08.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>கடமையில் தவறும் ஊழியர்கள் மீது</h2><p> 
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆரம்பமானது. இது செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>இம்முறை 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 107,814 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பரீட்சை மண்டபங்களுக்குள் கைப்பேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் அல்லது குறிப்புகளை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dd71553-00b1-436a-972d-f6c93d768358/26-6a7977475851f.webp' /></p><p>மண்டபத்தினுள் பேசுதல், விடைத்தாள்களைப் பரிமாறிக்கொள்ளுதல் அல்லது இடையூறு விளைவித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு எதிராகப் பரீட்சை முடிவுகளை இடைநிறுத்துவது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>பரீட்சை கடமையிலுள்ள அதிகாரிகளில், மண்டப மேலதிகாரிகள் மற்றும் மேலதிக உதவி மேலதிகாரிகளுக்கு மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடமையில் தவறும் ஊழியர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுவரை சீற்றமான காலநிலை அல்லது அவசரச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அசாதாரண சூழ்நிலைகள் உருவானால் உடனடியாகச் செயல்பட அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அநுரவின் தீர்மானம்.. ஜி.எல். பீரிஸ் விடுத்த பகிரங்க சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-npp-government-g-l-peiris-1786342064"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-npp-government-g-l-peiris-1786342064</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை விரைவாக முடிப்பதற்கே என்ற அரசாங்கத்தின் கூற்றை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.</p><p>கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன்போது அவர், "அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடும் 1.1 மில்லியன் வழக்குகளில், மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் வெறும் 1 சதவீதம் மாத்திரமேயாகும்.</p><h2>1 வீத வழக்குகள்..&nbsp;</h2><p> </p><p>இந்த உண்மையைத் மறைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் அப்பட்டமான பொய்களைக் கூறி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a52a5d38-1ec7-4e7c-a16d-ad692ed73902/26-6a7974260f78f.webp' /></p><p> </p><p>மேலும், நீதிமன்ற வழக்குகளின் தாமதம் குறித்து அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 8 நீதிபதி இடங்களை இந்நேரம் நிரப்பியிருக்கும்.</p><p>அதனைச் செய்யாமல் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முற்படுவது அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p>
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. </p><p>அத்துடன் தலைமை நீதிபதி 67 வயதை அடைந்தவுடன் அல்லது 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்தின் திட்டம்..&nbsp;</h2><p> நீதித்துறையை நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே இந்த 22ஆவது திருத்தத்தின் உண்மையான நோக்கமாகும். இது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான முதற் படி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d29dfc-7d50-4c73-85bb-1a3cf67553c6/26-6a79772c3d7fe.webp' /></p><p>வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்தத் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேவேளை, நிலுவையில் உள்ள 1.1 மில்லியன் வழக்குகளில் சுமார் 96 சதவீதமானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே காணப்படுவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>அரசாங்கம் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளைப் புறந்தள்ளி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதே 22ஆவது திருத்தத்தின் மறைமுக நோக்கம் என குற்றம் சாட்டியுள்ள அவர், ஸ்டாலினிச பாணி நிர்வாகத்தை நிறுவ முனையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் எனச் சித்தரித்து அழிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T06:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களின் பரீட்சையில் தாமதம்: கேகாலை மாவட்ட பரீட்சை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kegala-scholarship-question-paper-issue-1786343819"></link>
            <id>https://tamilwin.com/article/kegala-scholarship-question-paper-issue-1786343819</id>
            <summary type="text">கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

புலமைப்பரிசில் பரீட்சை என்பது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பரீட்சை என்பதால், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிக்கு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பரீட்சை நிலையக் கண்காணிப்பாளரின் சம்பள உயர்வு</h2><p>

இதற்கிடையில், இந்த முறை உயர்தர பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6389c4e9-cb10-4312-9641-020d4f0ab40c/26-6a79746a97d4f.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பொறுப்புகளையும் தற்போதைய செலவுகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:49:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த சைக்கிள் திருட்டு! ஹெரோயினுடன் சிக்கிய சகோதரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-people-arrested-with-heroin-1786342796"></link>
            <id>https://tamilwin.com/article/four-people-arrested-with-heroin-1786342796</id>
            <summary type="text">கல்முனையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த சைக்கிள் திருட்டுகள்
தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு
அடிமையான இரு சகோதரர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த சைக்கிள் திருட்டுகள்
தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு
அடிமையான இரு சகோதரர்கள் உட்பட நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தியுள்ளனர்.</p><p>

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி
தலைமையில், பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ்
பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இச்சோதனை
நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.</p><h2>போதைப்பொருளுடன் சந்தேநபர்கள் கைது</h2><p>

பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத்
தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது, கல்முனைக்குடி
செய்லான் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய சகோதரர்கள் இருவர், 3 திருடப்பட்ட
சைக்கிள்கள் மற்றும் ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274d9166-d7f7-415c-9476-08b53306349d/26-6a7970c1adb16.webp' />&nbsp; &nbsp;</p><p>


கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருடிய 2
சைக்கிள்களை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரி
ஒருவரிடம் தலா 2400 ரூபாவுக்கு விற்றுள்ளமை தெரியவந்தது.</p><p>அதேபோல், கல்முனை
பகுதியில் வைத்து மற்றொரு சைக்கிளை 1700 ரூபாவுக்கு வாங்கிய நபரையும்
பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களையும் பொலிஸார் கல்முனை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T06:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்லும் நாட்களை எண்ணும் முன்னாள் அரசியல்வாதிகள்..! சுனில் ஹந்துன்னெத்தி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245</id>
            <summary type="text">குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p>
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின்படி, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>மத்திய வங்கி பிணைமுறி மோசடி&nbsp;</h2><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8fa630-b57b-46e6-8485-3b48f47e0087/26-6a797637cc413.webp' /></p><p>
அரச அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல்களும் மோசடிகளும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுத் தண்டிக்கப்படுவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டு, அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றால் எதிர்கட்சியினர் உண்மையிலேயே மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறைக்கு&nbsp; செல்லும் வாய்ப்பு அதிகம்&nbsp;</h2><p>
</p><p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதைத் திருத்துவது தொடர்பான எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p> ஏனெனில் அது அவர்களுக்கு ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d676aa97-b6e7-4952-ad56-62a6d6b347f0/26-6a797637277b6.webp' /></p><p> </p><p>ஆனால் இங்கு நடப்பது நாட்டிற்கு அழிவல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். சட்டம் நடுநிலையாகச் செயல்படும் போது, தாங்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பயமே அவர்களின் இந்த எதிர்ப்பிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் முழுப் பொறுப்பேற்கும் என்றும், இத்தகைய சட்டத் திருத்தங்களின் மூலம் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் வலுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-girl-assaulted-by-fathers-friend-1786343591"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-girl-assaulted-by-fathers-friend-1786343591</id>
            <summary type="text">நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 
40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 
40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். </p><p>

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

 
11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்</h2><p>

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா - தரணிக்குளம் பிரதேசத்தில்
தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண்
பிள்ளையை தவறான நடத்தைக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய
நபருக்கு, எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா
நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b56b7087-03dc-4590-b66d-699c1a7f14b0/26-6a79712d52d51.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த நபருக்கு எதிராக 2025 ஆம்
ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகிர்வு பத்திரம் வவுனியா மேல்
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p> 

இதனையடுத்து குறித்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தது.</p><h2> 

சாட்சியங்களில் உறுதிச் செய்யப்பட்ட குற்றம்</h2><p>
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில், அவருக்கு 
 எதிராக அரச சட்டத்தரணியினால் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன் அடிப்படையில், வழக்கு தொடுனர் தரப்பு குறித்த குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா,
குறித்த சந்தேக நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி
தீர்ப்பளித்துள்ளார்.</p><p>அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு
வழங்க வேண்டும் என்றும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்த
வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1671637-f3b8-43d9-9900-b3fbd001020f/26-6a79712e0f2f5.webp' />&nbsp; &nbsp;</p><p>
இந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டதரணி ஸ்ரீ.
சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார். </p><p>

இந்த நிலையில், வழக்கு நடவடிக்கையின் போது சந்தேக நபர்,தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், பெருகி வரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பனவே
குறித்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தனது, தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாணந்துறை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிர சோதனை - 22 வயது இளைஞர் கைது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-year-old-youth-arrested-in-panadura-apartment-1786342143"></link>
            <id>https://tamilwin.com/article/22-year-old-youth-arrested-in-panadura-apartment-1786342143</id>
            <summary type="text">பாணந்துறை - மொதரவிலாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், சட்டவிரோத போதைப்பொருட்களுடன் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை - மொதரவிலாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், சட்டவிரோத போதைப்பொருட்களுடன் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை, பாணந்துறையில் ஹொரானா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர் 22 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><h2>


22 வயது இளைஞர் கைது</h2><p>
அத்துடன், சந்தேக நபரிடமிருந்து 810 சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகளும், 2 இரும்பு வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f797a64-42b7-44dc-a790-b53be068d531/26-6a796bc1ce974.webp' /></p><p> </p><p>

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>

சந்தேக நபரும், அது தொடர்பான பொருட்களும் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு - பெண் உட்பட இருவர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-brewery-raid-1786341574"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-brewery-raid-1786341574</id>
            <summary type="text">அம்பாறை - பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப்
பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப்
பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.</p><p> 

இந்த நடவடிக்கையின் போது, ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்
இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.</p><h2>


சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்த பெண்</h2><p>
இதன்போது, 7,500 மி.லீ சட்டவிரோத மதுபானம், 148,000 மி.லீ கோடா, மதுபான 
உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செம்புச் சுருள்கள் மற்றும் பீப்பாய்கள் உள்ளிட்ட
பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ec2efc-8f94-4cfc-8443-09a0ebdb7f48/26-6a79694d276ea.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் குறித்த காட்டுப் பகுதியில் தற்காலிகமாக வசித்து
வந்தவர்கள் எனக் தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் ஆகஸ்ட் 20 ஆம்
திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி.. பதிவான வரலாற்றுச் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/400th-helicopter-air-ambulance-mission-1786339411"></link>
            <id>https://tamilwin.com/article/400th-helicopter-air-ambulance-mission-1786339411</id>
            <summary type="text">இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம், தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் (HEMS) சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம், தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் (HEMS) சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. </p><p>மட்டக்களப்பு - வாழைச்சேனை வைத்தியசாலையில் தீவிர இதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு அவசரமாக வான்வழியாகக் கொண்டு செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சாதாரண பயணங்களை விடவும் அவசர மருத்துவ ஹெலிகொப்டர் சேவைகள் மிகவும் துல்லியமான திட்டமிடலைக் கோருபவை. </p><h2>உடனடி வான்வழிப் பயணம்&nbsp;</h2><p>இந்நடவடிக்கையின் போது நோயாளியின் உடல்நிலை மிகவும் சீரற்ற நிலையை எட்டியதால், உடனடி வான்வழிப் பயணத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd68c53-3ea2-4bd3-8075-8a893a75986b/26-6a7966e20f997.webp' /></p><p>
நீண்டகால வான்வழி மருத்துவ நிபுணரின் வழிகாட்டலில்,&nbsp; வைத்தியசாலையின் அவசர மருத்துவக் குழுவினர் நோயாளியின் நிலைமையை தீவிரமாக கண்காணித்து நிலைப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், ஆண்டின் இக்காலப்பகுதியில் நிலவும் பலத்த கச்சான் காற்று மற்றும்&nbsp; சீரற்ற வானிலை போன்ற சவால்களுக்கு மத்தியிலும், சூரிய அஸ்தமனத்திற்கு முன் நோயாளியைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயமும் நிலவியுள்ளது.</p><p>நோயாளி நிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகல் 2:20 மணிக்கு கொழும்பிலிருந்து அனுபவமிக்க விமானி கெப்டன் அமல் வாகித் தலைமையில் ஹெலிகொப்டர் புறப்பட்டுள்ளது. </p><p>அதனை தொடர்ந்து, நோயாளிளை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/v0elkWac93Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப் - எண்ணெய் தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-to-put-economic-pressure-on-iran-1786341007"></link>
            <id>https://tamilwin.com/article/trump-to-put-economic-pressure-on-iran-1786341007</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ தாக்குதல் நடத்துவதை விட, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே சிறந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ தாக்குதல் நடத்துவதை விட, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே சிறந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p> 

ஈரானுடன் நடந்து வரும் மோதலில் அதிக பொறுமையுடன் குறைந்த அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><h2>

எண்ணெய் விலை அதிகரிப்பு</h2><p>
முக்கிய எண்ணெய் கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட எண்ணெய் தடையை நீக்கும் வரை கடல் வழியை திறக்க மாட்டோம் என்றும் ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491c4ca4-3196-40b0-a587-6d9eb3a6a4c8/26-6a7966be433dd.webp' /></p><p> </p><p>இதேவேளை, ஈரான் போரின் போது ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதால், உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் பென்டகன் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>

தெஹ்ரான் மீதான தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள ட்ரம்ப் முயன்று வருவதால், இந்த விவகாரம் அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் பலத்த மழை - வான்பாயும் மட்டத்தில் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/castlereagh-and-moussakallai-reservoirs-1786338928"></link>
            <id>https://tamilwin.com/article/castlereagh-and-moussakallai-reservoirs-1786338928</id>
            <summary type="text">காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் இன்று (10.08.2026) காலை வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் இன்று (10.08.2026) காலை வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

காசல்ரீ நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை எட்டியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 25 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e7721d-fe16-41e2-bef4-453e93fac0f1/26-6a79637755dfd.webp' /></p><p> 

அதேபோல் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை எட்டியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 29 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><h2>உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி</h2><p> </p><p>

இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதனைத் தொடர்ந்து கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமலாசுரேந்திர மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6523bb97-0c71-4815-a34c-c5bc139313aa/26-6a7963769ad83.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக மஸ்கெலியா ஓயா ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;பொலிஸ்மா அதிபர் க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் தெரிவிக்கப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (10.08.2026) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டார்.&nbsp;</p><h2>வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9800c54-49f4-41f5-bc89-631f5f5930b1/26-6a7960114cd7d.webp' /></p><p>

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9yppdAAjxog" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-10T05:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்கதியாக்கப்பட்ட தமிழ் மக்களை கண்டுகொள்ளாத அநுர அரசு - தொடர் போராட்டங்களுக்கு என்ன பதில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-rights-issue-of-the-tamil-people-1786339823"></link>
            <id>https://tamilwin.com/article/land-rights-issue-of-the-tamil-people-1786339823</id>
            <summary type="text">காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
ஊடகப்பேச்சாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

தொடர் காணி சுவீகரிப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும்
ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல்
நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
</p><p>
அதேபோன்று, காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டு வருடங்களாக, காத்திரமான
நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியை தமிழ் கட்சிகள் சந்தித்த போதும், காணி விடுவிப்பு தொடர்பில்
முக்கியமாக கூறியிருந்தோம். குறிப்பாக வடக்கு - கிழக்கில் முப்படைகளின்
வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், மலையக மக்களுக்கு காணி
பகிர்ந்தளித்து தொடர்பிலும் பேசினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d00c43a-fec6-4610-9898-44180743eed8/26-6a79630a8759f.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில், பலாலி, மயிலிட்டி, தையிட்டி போன்ற பிரதேச மக்களும்
முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடி
வருகின்றனர்.
</p><p>
அத்துடன், மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின்
பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதார நிலங்களை மீட்கத் தொடர்ந்து
போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக
எடுத்து கூறினோம்.
</p><p>
அதற்கு அவர்கள் முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என
அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன்
அடிப்படையில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளனர்.</p><h2>

மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசு</h2><p>

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தில் மாற்றமில்லை என
அரசாங்கம் கூறி வந்தாலும் , இரண்டு வருடங்களாக இதையே கூறி வருகின்றனர் இது
ஏற்புடையதில்லை

யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவுக்கு காணிகள்
விடுவிக்கப்படவில்லை. </p><p>ஒரு சில வீதிகளை மாத்திரமே விடுவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்களை
முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472793d9-d5f5-4815-b2e9-71fd3cc738f0/26-6a79630b47063.webp' /></p><p> </p><p>அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை

நாங்களும் போராட்ட களத்தில் நின்றவர்கள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்,
மக்களின் போராட்டங்களை,கண்டு கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் கோரிக்கைகளை
செவி சாய்க்காது இருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
</p><p>
நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் இல்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும் ,
செயலில் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கும் டெங்கு தொற்று : 09 நாட்களில் 4000இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-292-dengue-patients-as-of-august-9-1786335018"></link>
            <id>https://tamilwin.com/article/4-292-dengue-patients-as-of-august-9-1786335018</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 65 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 டெங்கு தொற்றாளர்களும், மே மாதத்தில் 8,590 டெங்கு தொற்றாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 டெங்கு தொற்றாளர்களும், மார்ச் மாதத்தில் 6,013 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><h2>அதிக அபாயம் உள்ள பிரிவுகள்</h2><p>
 ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 4,292 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p> 

நாட்டில் உள்ள மாகாணங்களிலேயே மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்புகளில் 52.93 சதவீதம், அதாவது 47,445 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66e501c-ecfb-4ba2-a876-eb0384be76cf/26-6a7957f0bbfb4.webp' /></p><p>மாவட்ட அளவில், மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதத்தினராக கம்பஹா மாவட்டம் திகழ்கிறது. இதுவே அதிகபட்ச நோயாளிகளின் எண்ணிக்கையாகும்.
</p><p>
கொழும்பு மாவட்டத்தில் இருந்து 17,765 நோயாளிகளும், கண்டியிலிருந்து 6,366 நோயாளிகளும், மாத்தறையிலிருந்து 5,953 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். </p><p> 

தற்போதைய இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் 119 அதிக அபாயம் உள்ள சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340"></link>
            <id>https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340</id>
            <summary type="text">ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறித்த தகவல்களை தர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த தகவல்களை தர்க்க ரீதியாக ஒப்புவித்து தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள்...
</p><p>தாஜுதீன் கொலை யோஷிதவில் தொடங்கியது. ஆனால், அந்த நேரத்தில் யோஷித இலங்கையில் இல்லை. பின்னர் அம்மா ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததாக குறிப்பிட்டனர். </p><p>அவரும் கொழும்பில் இருக்கவில்லை. 
அதற்குப் பிறகு கொழும்பில் இருக்கும் குடும்பத்தினர் யார் என்று பார்த்தார்கள். மஹிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிட முடியாது. அதனால் என் பெயரைப் போட்டார்கள்.</p><h2>

</h2><p></p><h2>சோடிக்கப்பட்ட சிசிரிவி (CCTV) காட்சிகள்&nbsp;</h2><p>
2015 ஆம் ஆண்டில் எனக்கு நினைவிருக்கும் வகையில் ஊடகங்களில் பெரியளவில் பேசப்பட்ட ஒரு விடயம் தான் அம்மாவின் 'சிரிலிய சவிய' சமூக சேவை அமைப்பிற்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டி ஒன்று தாஜுதீனின் காரை பின்தொடர்ந்ததாக வெளியான சிசிரிவி (CCTV) காட்சிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். </p><p>பின்னர் அந்த ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டதாகவும் அந்த ஜீப் வண்டியின் நிறம் பலமுறை மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நாட்டின் ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும் சிசிரிவி காட்சிகள் குறித்து பல நாடுகளிடம் அறிக்கை கோரப்பட்டது.</p><p>சமீபத்திய வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து சம்பவங்களின் சிசிரிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இப்போது இந்தக் காட்சிகள் இருந்தால், யாரோ ஒருவர் பின்னால் துரத்திச் சென்றார் என்று தெளிவாக சிசிரிவி இருந்தால், அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ இந்தக் காட்சிகளைத் தெளிவாக ஊடகங்களுக்கு முன்வைக்க முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e21a122-f33c-437a-8bba-6a06897c0013/26-6a7919bf0f102.webp' /></p><p>ஏன் செய்யவில்லை?
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதைச் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் இந்த விடயத்தைப் பேசும்போதும் கூட இந்த சிசிரிவி காட்சிகள் குறித்துக் குறிப்பிடப்படுவதில்லை.
</p><p>ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இறுதியில் தாஜுதீன் மோதிய வாகனம் வேறு ஒன்று என்றார்கள். ஆனால் இப்போது பின்னால் சென்ற வாகனம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால் பின்னால் சென்ற வாகனத்தைத் தேடும்போது இது சிக்கவில்லையா?
</p><p>ஆனால் அன்று அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நபர் இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அதாவது முதலில் குற்றச்சாட்டு சுமத்தியவர் இப்போது தான் சொன்னது பொய் என்று சொல்கிறார்.
</p><p>அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் இன்று ஊடகச் சந்திப்புகளில் சொல்கிறார்கள், அவை அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று. </p><p>ஏனென்றால் அவர்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள்.
இதெல்லாம் அரசியலுக்காக சோடிக்கப்பட்ட காரணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T04:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காலமான யாழ். ஊடகவியலாளரின் இறுதி சடங்குகள் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funeral-of-jaffna-journalist-passed-away-in-canada-1786336019"></link>
            <id>https://tamilwin.com/article/funeral-of-jaffna-journalist-passed-away-in-canada-1786336019</id>
            <summary type="text">கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. </p><p>

அத்துடன், இந்த இறுதி சடங்குகள் அனுஷ்டிப்பு கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில்
நடைபெறவுள்ளது.
</p><h2>
இறுதி சடங்குகள்</h2><p>
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள்
விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த
ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில், தனது
47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்

அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, நாளை மறுதினம்(12) புதன்கிழமை
அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe199fe-b158-4488-af91-e04617dd2205/26-6a79537e4ec06.webp' /></p><p> </p><p>

மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று, தகன கிரியைகளுக்காக
பூதவுடல், கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என
குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instructions-issued-to-al-examination-students-1786334628"></link>
            <id>https://tamilwin.com/article/instructions-issued-to-al-examination-students-1786334628</id>
            <summary type="text">துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று(10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காய...</summary>
            <content type="html"><![CDATA[<p>துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று(10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை
ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர்
இடைநிறுத்தப்பட்டிருந்தது. </p><p>

இதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள்
நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.</p><p></p><p>
</p><p>
பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைவாக, துணுக்காய் பிரதேச
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில்,
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும்
ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
</p><h2>
பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்</h2><p>

இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின்
பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e816342-641d-4ede-b6b9-82ee1904a04f/26-6a79504444913.webp' /></p><p>
பேருந்து புறப்படும் நேரங்கள்,
</p><p>
* காலை 6.00 மணி - துணுக்காய்
</p><p>* காலை 6.10 மணி - மல்லாவி
</p><p>* காலை 7.00 மணி - மாங்குளம்
</p><p>* காலை 7.10 மணி - மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்

மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும்
துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981d6f4b-a40d-4417-add2-4ae64d5fa503/26-6a795045363e0.webp' /></p><p>

இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர்
செல்லத்தம்பி திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்
உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p>

நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இந்த பேருந்து
சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, துணுக்காய் பிரதேச மக்களின்
போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:15:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-weather-warning-sri-lanka-1786331977"></link>
            <id>https://tamilwin.com/article/red-weather-warning-sri-lanka-1786331977</id>
            <summary type="text">நாட்டைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை 07.00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

அதன்படி, மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை அம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 கிலோமீட்டரைத் தாண்டக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d46bd3-dab9-4731-bc9a-b5b461ae6843/26-6a794e65db1c6.webp' /></p><p>மேலும் கடற்பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

எனவே, மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குக் கப்பல் பயணம் செய்ய வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்குத் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.</p><p>அதே நேரத்தில், அந்தக் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. 

இக்காரணத்தால், கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு்ள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T04:08:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் உற்சாகமாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gce-al-exam-in-upcountry-1786333760"></link>
            <id>https://tamilwin.com/article/gce-al-exam-in-upcountry-1786333760</id>
            <summary type="text">க.பொ.த உயர்தரப் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்
வவுனியா மாவட்டத்தில் இம்முறை 2630 பரீட்சார்த்திகள்
பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

வவுனியா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர்தரப் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்
வவுனியா மாவட்டத்தில் இம்முறை 2630 பரீட்சார்த்திகள்
பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
</p><p>
வவுனியா மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மொத்தப் பரீட்சார்த்திகளில்,
2018 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாகவும், 612 பேர் தனியார்
பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.
</p><p>
பரீட்சைகளை சீரான முறையில் நடத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 20 பரீட்சை
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 பரீட்சை இணைப்பு நிலையங்களும்
அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை அமைதியான முறையில் இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2662610a-e3a5-445d-a599-1dcb9b906a92/26-6a7975da2b4e9.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0de60f-2475-4fe2-9bbf-95689a41f190/26-6a7975db07b20.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b212f17-f258-4d72-ab7f-30f51bfd030d/26-6a7975dbd05dd.webp' /></p><p>வவுனியா செய்தி - திலீபன்</p><h2>மலையகம்</h2><p>க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் (10.08.2026) நாடளாவிய ரீதியில்
ஆரம்பமாகிறது.</p><p>இன்று ஆரம்பமாகும் இந்தப் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி
வரை நடைபெறவுள்ளதுடன், நாடு முழுவதும் 2532 பரீட்சை நிலையங்களில் பரீட்சை
நடைபெறவுள்ளது.
</p><p>
இம்முறை பரீட்சைக்கு பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனிப்பட்ட
விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் என மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள்
தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>சீரற்ற காலநிலை</h2><p>
</p><p>
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும்
மாணவர்கள், பரீட்சைக்கு தயாராக வேண்டிய சவால்களுக்கு மேலதிகமாக, தற்போது
நிலவும் சீரற்ற காலநிலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e39a21-62c7-478e-a8ea-16382891e59a/26-6a794d6b4c784.webp' /></p><p>

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து
வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிவு, வீதிகளில்
சேறும் சகதியும் மற்றும் பாறைகள் சரிந்து விழும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
</p><p>
குறிப்பாக ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கண்டி உள்ளிட்ட
பிரதான வீதிகளிலும், தோட்டப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் பல உள்வீதிகளிலும்
மழையின் தாக்கம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனால் தொலைதூர தோட்டப்புறங்களில் இருந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்ல
வேண்டிய மாணவர்கள் அதிகாலை நேரத்திலேயே தங்களது பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15808fa3-0e55-4348-9a89-3ea8014c597e/26-6a794d6c3bafd.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மலைப்பாங்கான பகுதிகளில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக காலை
நேரங்களில் வாகனங்களின் பார்வைத்திறன் குறைவடைவதுடன், வீதிகள் வழுக்கும்
தன்மையையும் கொண்டுள்ளன.
</p><p>
இதன் காரணமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன
சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>சவால் நிலைமை</h2><p>
</p><p>
குறிப்பாக தோட்டப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களை
அடைவதற்கு பொதுப் போக்குவரத்து சேவைகளையே பெரிதும் நம்பியிருக்க
வேண்டியுள்ளதால், மழை மற்றும் வீதி நிலைமைகளால் ஏற்படக்கூடிய தாமதம்
அவர்களுக்கு மேலதிக சவாலாக அமையக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61c55ca2-600a-413a-bd3d-23701683d239/26-6a794d6d0c312.webp' /></p><p>
</p><p>
எனவே, மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்தை கருத்தில் கொண்டு, வழக்கத்தை
விட முன்னதாகவே தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு பரீட்சை நிலையங்களை
சென்றடைவது பாதுகாப்பானதாகும்.
</p><p>
பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு
முன்னதாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய
அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு
போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்
என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>இதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்
வகையில், நுவரெலியா மாவட்டத்தின் அபாயம் காணப்படும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72b980e9-8b0c-4f0c-a271-a31adab24b11/26-6a794d6dde71a.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக மண்சரிவு அபாயம் காணப்படும் தோட்டப்புறங்கள், மலைச்சரிவுகள் மற்றும்
மழையினால் பாதிக்கப்படும் வீதிகளில் பரீட்சைக் காலப்பகுதியில் விசேட
கண்காணிப்பும், தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்
எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aedc71fe-a48b-42a8-ba72-43f4e7d08f47/26-6a794d6eb9317.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1952dd6-34ff-4de5-9bfb-1dddbbb6250f/26-6a794d6f8fe76.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T04:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் தம்பதி மீது அசிட் தாக்குதல் - கணவன் மரணம், ஆபத்தான நிலையில் மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/acid-attack-on-couple-husband-dead-1786332436"></link>
            <id>https://tamilwin.com/article/acid-attack-on-couple-husband-dead-1786332436</id>
            <summary type="text">காலியில் தம்பதியினர் மீது வீசப்பட்ட அசிட் தாக்குதலில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார். 

பிட்டிகல, ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலியில் தம்பதியினர் மீது வீசப்பட்ட அசிட் தாக்குதலில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார். </p><p>

பிட்டிகல, நியாகம, உடகங்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்லத் தயாரான போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான காரியவசம மாஜுவான கமகே நுவன் சுரங்க டயாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><h2><b>&nbsp;கணவன் மரணம்</b></h2><p> 

கடந்த முதலாம் திகதி இந்தத் தம்பதியினர் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த, உயிரிழந்தவரின் மனைவியான குமாரி எதித்சிங்க கொடித்துவக்கு என்ற 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6beeaf25-c3cf-48c6-97b1-178e98c3b738/26-6a7949f2d85db.webp' /></p><p>அசிட் தாக்குதலுக்கு இலக்கையான இந்தத் தம்பதி, தமது வீட்டிலிருந்து பிட்டிகல பிரதேசத்திலுள்ள நண்பரின் வீட்டிற்கு கடந்த முதலாம் திகதி இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். </p><p>

அந்த வீட்டில் சிறிது நேரம் தங்கியிருந்துவிட்டு தமது வீட்டிற்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற முயன்றபோதே அவர்கள் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தம்பதியினர் மீதான அசிட் தாக்குதல் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h3><b>மேலதிக சிகிச்சை</b></h3><p>அசிட் தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் முதலில் நியாகம, வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்னர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84cdb5d7-8a3d-409c-bf7c-e586e24f4928/26-6a794b721d4d0.webp' /></p><p>அங்கு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியினரில் கணவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p> 

தம்பதியினர் மீது அசிட் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, விசாரணைக்காக கைது செய்வதற்கான முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய இதுவரை இருவர் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சில சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>

தனிப்பட்ட பணத் தகராறே இந்த அசிட் தாக்குதலுக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T03:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை துப்பாக்கிச்சூடு: கைதான 23 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218"></link>
            <id>https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 

அத்துருகிரிய பொலிஸ் பிரிவின் ஹபரகட பகுதியில் உள்ள ஜெயவர்தனபுர சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால், சந்தேக நபர் நேற்று (10.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு</h2><p>

 

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e8f759-33e8-42c1-9eeb-a2c4d3f40317/26-6a793c9b7eede.webp' /></p><p>சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொலிஸாரின் தகவல்படி, சந்தேக நபர் ஹோமாகமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
 

தெஹிவலா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T02:52:08+00:00</updated>
        </entry>
    </feed>
