<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-04T11:17:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கைது பின்னணி! மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-arrested-namal-rajapaksa-investigation-1788517954"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-arrested-namal-rajapaksa-investigation-1788517954</id>
            <summary type="text">கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஒப்பந்த ஊழல் மோசடி தொடர்பான நீண்ட வாக்குமூலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஒப்பந்த ஊழல் மோசடி தொடர்பான நீண்ட வாக்குமூலத்தின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இன்று காலை (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><h2>ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த மோசடி</h2><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/186a077c-dd0e-4fa7-9b6b-c15575d602a8/26-6a9aa89851952.webp' />&nbsp;</p><p> </p><p>

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். </p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.&nbsp;</p><p>இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணை</h2><p>இதற்கிடையில், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6150d8-3b57-448e-8528-ec4ff4a9a091/26-6a9aa8990489a.webp' /></p><p>
மேலும், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதற்காக, பிரான்ஸ் ஏர்பஸ் தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாட்டிற்கு வருகை தந்து ஆணைக்குழுவின் முன்பும் வாக்குமூலங்களை அளித்திருந்தது.</p><p>

இத்தகைய பின்னணியில், ஏர்பஸ் ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணையை தொடர்ந்து நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; </p><p>எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்வனவு ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (CIABOC) 2013 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T11:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் - எதிர்வாதத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-bill-to-the-constitution-1788519493"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-bill-to-the-constitution-1788519493</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான
விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான
விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுநலவாய 
நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதே சமயம் இந்தச் சட்ட மூலம் தொடர்பான விசாரணைகளின் போது அரசுத் தரப்பின் வாதத்துக்கு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் எதிர்த்துப் பதில் வாதம் செய்வதற்கு இடமேயளிக்காமல் விசாரணையை முடித்துக் கொண்டமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.</p><p>

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு , அரசமைப்பின் 22ஆவது
திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றில் பிரசனமாகியிருந்தார்.</p><p>

இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடனும் தாம் கலந்துரையாடினார் என்று அவர் கூறினார்.
</p><h2>

அதிருப்தி வெளியிட்ட சட்டத்தரணிகள்</h2><p>

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p> 

 நீதித்துறையின் சுதந்திரத்துக்கு
இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது
சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b72b559-6f9c-42da-aba2-b6b01abeba54/26-6a9aa6367c781.webp' /></p><p>


முக்கியமான அரசமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பூரண
ஆயத்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p>

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட
ஸ்டீவன் திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் கேள்வியெழுப்ப தயார்.</p><p>

இந்த விசாரணைகளின் போது அரசு தரப்பினால் நேற்று முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு
மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் பதில் வாதம் செய்ய வாய்ப்பு
அளிக்கப்படவில்லை.</p><p> 

நேற்றுமுன்தினம், மாலை 5:30 மணியோடு இந்த வழக்கு விசாரணைகளை
முடிவுறுத்துவதாக அறிவித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் எதிர்வாதம் ஏதேனும் இருக்குமாயின் அவற்றை நேற்று(03) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்னர்
உயர்நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யும்படி கூறி விசாரணையை
முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
</p><p>
உயர்நீதிமன்ற ஆயத்தின் இந்த முடிவை பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்
விசனத்துடன் விமர்சித்தார்.

வழமையாக இது போன்ற முக்கிய விடயங்களில் மனுதாரர் தரப்பின் பதில் வாதம் முக்கிய
விவகாரமாகக் கருதப்படும். அதற்கு வாய்ப்பளிக்க மறுத்தமை கவலைக்குரியது என்றார்.</p><h2>&nbsp;22ஆவது திருத்தச் சட்டமூலம்</h2><p>
இதேவேளை, அரசால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின்
22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம்(02) நிறைவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45249746-7d11-4ff0-9c0e-549b09f08e6e/26-6a9aa637430ea.webp' /></p><p>
</p><p>
அந்தச் சட்டமூலத்தின் அரசமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை
நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றம்
அறிவித்தது.
</p><p>
அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்
சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இரண்டு
நாள்களாக இடம்பெற்றிருந்தது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சசூரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர,
சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட
உயர்நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p>

இதற்கமைய, 22ஆவது திருத்ததைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 79
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 41 மனுக்கள் இணைய வழி மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. </p><p>அரசமைப்பு
திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய
எண்ணிக்கை இதுவேயாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;இதற்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் (2016இல் இருமுறையும் 2017இல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, தற்போது மீண்டும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுப்பதுடன், இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p></p><h2>முதல் கைது..&nbsp;</h2><p>
</p><p>
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus A330 மற்றும் A350) விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604d05b3-6e4f-4f36-a4c8-3b78d150f6d8/26-6a9aa36c3625f.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் போது ராஜபக்ச குடும்பத்தினர் 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐந்து மணி நேர விசாரணையின் பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் முன்னரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், எந்தவொரு சுயாதீன விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
</p><p>
நாமல் ராஜபக்ச முதன்முதலில் 2016 ஜூலை 11 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (FCID) கைது செய்யப்பட்டார். </p><p>கொழும்பு கோட்டையில் முன்மொழியப்பட்ட 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பரக் கட்டிடத் திட்டத்துடன் தொடர்புடையதாக, ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலகட்டத்தில் சுமார் 480,000 அமெரிக்க டொலர்) தவறாகப் பயன்படுத்தி, அதைத் தன் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..&nbsp;</h2><p> </p><p>பசில் மற்றும் யோஷித ராஜபக்சவுக்குப் பிறகு இக்குடும்பத்தின் மூன்றாவது கைதான இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a7343-a31e-4f4c-838e-dc83659e3649/26-6a9aa36d0a978.webp' /></p><p> </p><p>மேலும், சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பின்னர், 2016 ஒகஸ்ட் 15 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார். </p><p>அங்கு, நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய 'கவர்ஸ் கோப்பரேஷன்' (Gowers Corporation) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 125 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 'ஹெலோ கோப்' (Hellocorp) நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்து பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்த வழக்கில் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் 2023 நவம்பரில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.</p><p></p><h2>வரலாற்றுச் சம்பவம்..&nbsp;</h2><p>
</p><p>
அவரது மூன்றாவது கைது நடவடிக்கை 2017 ஒக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90de9b21-127e-46f5-986b-b694c709170e/26-6a9aa36dbbfec.webp' /></p><p> </p><p>மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாகக் கூடுதல், கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இது நடந்தது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருடன் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர்.
</p><p>
பின்னர், 2025 ஜூலையில், மாலைதீவில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றதால் 2017 போராட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. எனினும், மறுநாள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அந்த பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ece776bd-1b15-4649-8f75-a3a0f6a649ec/26-6a9aa36e7c460.webp' /></p><p> </p><p>இவ்வாறிருக்கையில், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிகள் சேர்க்கையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பல பணமோசடி புகார்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான, 1986இல் பிறந்த நாமல் ராஜபக்சஈ முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் (2020 - 2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மிக இளைய வேட்பாளரும் ஆவார்.</p><p> தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும். 2015 முதல், மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கங்களின் கீழ் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MKWUl_Wo_0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-04T11:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு இந்தியத் தூதுவர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244"></link>
            <id>https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசிகளைப் பெற்றுள்ளார்.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க
தேரர்களுக்கு மரியாதை செலுத்தினார் என்றும், அவர்களின் ஆசிகளைப் பெற்றார்
என்றும் இந்தியத் தூதுவர் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா
அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்து அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு
விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7486d5b7-e5b4-4db4-8039-ec8c58651c81/26-6a9aa21002891.webp' /></p><p>

இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படும்,
திட்டமிடப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல இருதரப்புத் திட்டங்கள் குறித்தும்
அவர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15290aa-1fe4-4e7b-b9a8-456dd63dab04/26-6a9aa21102698.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலுக்கு சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195"></link>
            <id>https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195</id>
            <summary type="text">மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்று(4.9.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழில் சங்க தலைவர் மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச்
சேர்ந்த 48 வயதுடைய நபர் இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன்
பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும்
நீரில் மூழ்கினர்.
</p><p>
இதில் ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டது.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20ஆவது வாரத்திலும் தொடரும் மயிலிட்டி காணி உரிமைப் போராட்டம் - முன்வைக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035"></link>
            <id>https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035</id>
            <summary type="text">எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
பதில் சொல்!" என்ற உருக்கமான கோஷங்களுடன், மயிலிட்டி காணி இழந்த மக்கள் தமது
காணி உரிமைக்கான போராட்டத்தை இன்று 20ஆவது வாரமாகவும் தொடர்ந்துள்ளனர்.
</p><p>
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்தப்
போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>வாழ்க்கையில் மாற்றம் இல்லை</h2><p>

பல வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும்
தங்களின் நிலை குறித்து மனம் தளர்ந்த நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கள்,
அரசாங்கம் மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கவலை
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047d137f-09f5-4fbb-b8ab-57aedcf59abc/26-6a9a9e009aeec.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைத் தாண்டி, காணிகளை நடைமுறையில்
விடுவிப்பதற்கான நடவடிக்கையே தமக்குத் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h2>20ஆவது வாரப் போராட்டம்</h2><p>
</p><p>
தங்களது பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும் என்பதற்காகவும்,
முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் மீண்டும் வாழ்ந்து மடிய வேண்டும்
என்பதற்காகவுமே இந்த 20ஆவது வாரப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும்
மக்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.
</p><p>
தமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும், அரசும் தெளிவான பதிலை வழங்க
வேண்டும் என்றும் வலியுறுத்திய மக்கள், போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர
வேண்டும் என்பதைத் தாங்கள் தீர்மானிக்கவில்லை என்றும், காணிகளை எப்போது
விடுவிக்கின்றார்கள் என்பதுதான் அதனைத் தீர்மானிக்கும் என்றும் மேலும்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b055ec-e701-4df0-b76f-59855378e7e3/26-6a9a9e0181c58.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb811187-df33-44f8-9005-03406f9c3051/26-6a9a9e026de97.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T10:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்புப் பாதுகாப்பு குறித்து சஜித் வழங்கியுள்ள அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-talks-about-constitutional-protection-1788516452"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-talks-about-constitutional-protection-1788516452</id>
            <summary type="text">அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும்
சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப்
பார்வைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும்
சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப்
பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ வலியுறுத்தினார்.</p><p>

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரூவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற
சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசமைப்பு நிறுவனங்கள்
நம்பகத்தன்மையுடனும் சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய வகையில் நிறுவனக்
கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்பு சீர்திருத்தங்கள்
தற்போதைய அரசியல் தேவைகளுக்காக அல்லாமல், அதிகாரம் மாறும் சந்தர்ப்பத்தில் கூட
மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><h2>ஆட்சி முறை பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
சுயாதீன அரசமைப்புச் சார் நிறுவனங்களைப் பாதிக்கும் சீர்திருத்தங்களுக்குப்
போதுமான பாதுகாப்பு விதிகள், வெளிப்படைத்தன்மை மற்றும் அர்த்தமுள்ள பொதுமக்கள்
கலந்தாலோசனைகள் அவசியம் என்பதுடன், நீதித்துறையின் சுதந்திரம் என்பது
நீதிபதிகளின் சிறப்புரிமை அல்ல, மாறாக மக்களின் மற்றும் அரசமைப்பு ஆட்சி
முறையின் பாதுகாப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edcaf378-e474-4b83-bb5b-4b6a82c86942/26-6a9a9bf703796.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப்
பகிர்வு குறித்து விவாதிக்கும் போது பொதுநலவாயக் கோட்பாடுகளை முக்கியமான
சர்வதேச அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என அவதானிக்கப்பட்டதுடன், தற்போதைய
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்வாக்கு செலுத்தாமல் நீண்டகால அரசமைப்பு
சீர்திருத்தமாக விசேட அரசமைப்பு மீளாய்வுப் பொறிமுறை தேவையா என்பதைப்
பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட சிறப்புவாய்ந்த சுற்றாடல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது குறித்தும்
இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சுற்றாடல் நீதியை
வலுப்படுத்துவதற்கும் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய்ந்து பொருத்தமான
மாதிரியைத் தேர்ந்தெடுக்க விருப்பமும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..! பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நான்காம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>

இதனையடுத்து பல மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lUtyjGkX0qA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0103a55-c52f-43c9-bc3c-0cb3e650673b/26-6a9a99952ad37.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த சிறுத்தை - தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-employee-seriously-injured-leopard-attack-1788516016"></link>
            <id>https://tamilwin.com/article/female-employee-seriously-injured-leopard-attack-1788516016</id>
            <summary type="text">பொகவந்தலாவை பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவை பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் இன்று(04.09.2026) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.</p><p> 

 சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண் தொழிலாளி கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில், புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கை பகுதியில் தாக்கியுள்ளது.
</p><h2>
சிறுத்தை தாக்குதல்</h2><p>
சிறுத்தையின் தாக்குதலால் அந்த பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த
ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதையடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b75484-45c9-49c4-bb47-04fd99ff968c/26-6a9a972351189.webp' /></p><p>

தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e75b6e-a495-43e7-a933-05ef2f25df28/26-6a9a972434b2b.webp' /></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7LWdNCPVI2k" width="640" height="360" class="note-video-clip"></iframe><b></b></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட நாமல்.. ஆணைக்குழுவிற்கு முன் கண்ணீர் மல்க நிற்கும் ஆதரவாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-update-1788514338"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-update-1788514338</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க திரண்டுள்ளனர்.&amp;nbsp;இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க திரண்டுள்ளனர்.&nbsp;</p><p>இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், ஆணைக்குழு வளாகத்தில் கூடியுள்ள அவரின் ஆதரவாளர்கள், கண்ணீர் சிந்தி வருத்தம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், விசாரணைகளின் பின்னர்,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-injured-in-accident-involving-tipper-motorcycle-1788513475"></link>
            <id>https://tamilwin.com/article/2-injured-in-accident-involving-tipper-motorcycle-1788513475</id>
            <summary type="text">கனரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து இன்று(4.9.2026) முற்பகல் கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம்
பெற்றுள்ளது. </p><p>வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம்
கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து
இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>கணவன் மனைவி இருவரும் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa6b7b1e-2653-4bf3-8256-93cba97b6457/26-6a9a92736ceed.webp' /></p><p>
</p><p>
விபத்தில் படுகாயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாக
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் நீதிமன்றின் இரகசிய தீர்மானம் ஜனாதிபதிக்கு.. வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anti-corruption-bill-supreme-court-to-president-1788510148"></link>
            <id>https://tamilwin.com/article/anti-corruption-bill-supreme-court-to-president-1788510148</id>
            <summary type="text">அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஊழல் தடுப்புத் திருத்த சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஊழல் தடுப்புத் திருத்த சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், அதன் அரசியலமைப்புச் சாத்தியக்கூறு குறித்த தனது இரகசிய வியாக்கியானத்தை சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த சட்டமூலத்தை எதிர்த்து 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.&nbsp;</p><p>நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, மஹிந்த சமரவர்தன மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டது.</p><h2>விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்..&nbsp;</h2><p>
</p><p>
இன்று (04) வாய்மொழி வாதங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏதேனும் எழுத்துப்பூர்வமான சமர்ப்பிப்புகளைச் செய்ய விரும்பினால், அவற்றை நண்பகல் 12.00 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2bc3685-1307-4f32-818f-591f894dca3f/26-6a9a8ad8245e0.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, அம்மசோதாவின் அரசியலமைப்புச் சாத்தியக்கூறு குறித்த உயர் நீதிமன்றத்தின் இரகசிய வியாக்கியானம் எதிர்காலத்தில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஊடகச் சட்ட மன்றம் (Media Law Forum) மற்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை (Transparency International Sri Lanka) உள்ளிட்ட 15 தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்த்து மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
திருத்தப்பட்ட இந்த சட்டமூலம் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைப்பதாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் அம்மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
அதற்கிணங்க, குறித்த சட்டமூலத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு (referendum) மூலம் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vYm5XRE_Gx4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-04T09:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளது: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-us-president-trump-1788512418"></link>
            <id>https://tamilwin.com/article/britain-us-president-trump-1788512418</id>
            <summary type="text">பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளதாகக் எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றங்கள்
மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளதாகக் எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றங்கள்
மற்றும் அதிகப்படியான எரிபொருள் செலவினங்கள் குறித்து தனது கடும் கவலையை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைப்
பகிர்ந்துள்ளார்.
</p><p>
மன்னர் சார்லஸ் மீது தாம் மிகுந்த மரியாதையும் நேசமும் வைத்திருப்பதாகக்
குறிப்பிட்ட ட்ரம்ப், பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தலைமையிலான பிரித்தானிய
அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.</p><h2>சட்டவிரோதக் குடியேற்றங்கள்</h2><p>
</p><p>
உலகளவில் இருந்து மக்கள் தங்குதடையின்றி நாட்டுக்குள் நுழைவதைக்
கட்டுப்படுத்தத் தவறினால், பிரித்தானியா என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என
அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7f592d-910b-4612-bcbb-af077bece139/26-6a9a8b3580265.webp' /></p><p>
</p><p>
அத்துடன், காலநிலை மாற்றக் கொள்கைகள் காரணமாக பிரித்தானியாவில் ஆற்றல்
செலவுகள் இயல்பான அளவை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக
உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
இருப்பினும், சட்டவிரோத படகு வருகைகள் மற்றும் மனித கடத்தல் கும்பல்களுக்கு
எதிராக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக பிரித்தானியாவுக்கான
சட்டவிரோதக் குடியேற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பிரித்தானிய அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:11:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசிடம் புதிய அறிக்கை ஊடாக ஐ.நா. மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-council-request-sl-government-1788509818"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-council-request-sl-government-1788509818</id>
            <summary type="text">மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம்
மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும்
செயற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம்
மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும்
செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை கோரியுள்ளது.</p><p>

ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப் பகுதியை உள்ளடக்கிய இந்த
அறிக்கை ஊழலை எதிர்கொள்ளல், அரசியல் படுகொலைகள் தொடர்பாக உயர்மட்ட கைதுகள்
மற்றும் புலன்விசாரணைகள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும்
2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் என்பனவை தொடர்பான நடவடிக்கைகளை
கவனத்தில் எடுக்கின்றது. </p><p>இதே காலப்பகுதியில் இலங்கை டித்வா சூறாவளி மற்றும்
உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட சவால்களையும்
எதிர்கொண்டது.</p><h2>நடவடிக்கை</h2><p>

நீண்ட கால சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பான உறுதிமொழி
அளித்திருந்தாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும்
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது என்றும், அது எதேச்சதிகார
கைதுகளுக்கும் குற்றச்சாட்டின்றிய தடுத்துவைப்புக்களுக்கும் கொண்டு செல்லும்
என்றும் அறிக்கை கூறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d78637d9-daa1-49a8-a28a-f282a5c43ec0/26-6a9a85e09ca5a.webp' /></p><p>இலங்கை தனது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைத்
தீவிரப்படுத்துமாறும் குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது
தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்தச் சட்டத்தை
பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதித்தல் மற்றும் அதன் கீழ்
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் ஆணையாளர் வலியுறுத்தினார்.</p><h2>மனித உரிமை மீறல்கள்</h2><p>
</p><p>
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான
நபர்கள், அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையான முறையில் கையாளப்பட்டுத்
தீர்க்கப்படும் வரை, அரசு, பாதுகாப்புத்துறை அல்லது இராஜதந்திரப் பணிகளில்
உள்ள உயர் பதவிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/930bb76a-7ed6-45dd-982a-a39ce9ef96f7/26-6a9a85e1512bf.webp' /></p><p>


பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் முயற்சிகளுக்கும், இராணுவத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கும் அரசு ஆதரவளிக்க வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:49:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதிகம சூட்டியின் மில்லியன் கணக்கான சொத்துக்கள் அதிகாரிகளால் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mithikama-sooti-s-rs-15-million-assets-frozen-1788510175"></link>
            <id>https://tamilwin.com/article/mithikama-sooti-s-rs-15-million-assets-frozen-1788510175</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபாத் மதுசங்க,“மிதிகம சூட்டி” என அழைக்கப்படுபவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபாத் மதுசங்க,“மிதிகம சூட்டி” என அழைக்கப்படுபவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சட்டவிரோத சொத்துக்கள் தடை&nbsp;</span></p><p>


அதன்படி, வெலிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீட்டை பயன்படுத்துதல், உரிமை மாற்றம் செய்தல் அல்லது விற்பனை செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5914f233-6fab-4784-9b33-f10ad1a59a25/26-6a9a83816f8b7.webp' /></p><p>



குறித்த வீடும் அது அமைந்துள்ள காணியும் சேர்த்து சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சொத்தை இனிமேல் பயன்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் - ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commissioner-us-federal-maritime-commission-1788510237"></link>
            <id>https://tamilwin.com/article/commissioner-us-federal-maritime-commission-1788510237</id>
            <summary type="text">அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலுள்ள
சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலுள்ள
சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம்
மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பை
மேம்படுத்துவதற்காக, அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர்
லோரா டிபெல்லா மற்றும் அதன் ஆணையாளரான ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ளனர்.</p><p>

தமது விஜயத்தின் போது, இலங்கை அரச மற்றும் கடல்சார் துறையிலுள்ள சிரேஷ்ட
தலைவர்களுடன் தலைவர் டிபெல்லா மற்றும் ஆணையாளர் ஹார்வி ஆகியோர் சந்திப்புகளை
மேற்கொள்வர்.
</p><p>
எட்டாவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் ஏற்பாட்டில் மாநாட்டில் டிபெல்லா
உரையாற்றுவதுடன், அதன் குழுவொன்றில் ஆணையாளர் ஹார்வி பணியாற்றுவார்.</p><h2>இலங்கையின் வகிபாகம்</h2><p>

“உலகெங்கிலுமுள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் கொள்கலன்களில் 80
சதவீதத்துக்கும் அதிகமானவை கொழும்பினூடாக பயணிப்பதானது, இந்து
சமுத்திரத்தினூடாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்தின் மையத்தில் இலங்கை
கொண்டிருக்கும் வகிபாகத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக விளங்குகின்றது”
என்று அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மயர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20c7538-890c-4b6a-b5cf-777e1df3d184/26-6a9a83ed6835e.webp' /></p><p>
</p><p>
“தலைவர் டிபெல்லாவின் விஜயமானது, அந்தப் பங்கின் முக்கியத்துவத்தை
அங்கீகரிப்பதுடன், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்த முக்கிய
வர்த்தகத்தைத் தடையின்றி நடைபெறச் செய்யும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடனான
எமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகின்றது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான கப்பல் போக்குவரத்தானது, அமெரிக்க
வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றது, பிராந்தியத்தின் ஒரு கேந்திர
மையமாக இலங்கையின் நிலையைப் பலப்படுத்துகின்றது மற்றும் எமது இரு
பொருளாதாரங்களின் செழிப்புக்கும் உதவி செய்கின்றது” என்றும் அவர் மேலும்
கூறினார்.</p><p>

1961ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவானது,
அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக
அமெரிக்க சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்குப்
பொறுப்பான சமஷ்டி அரசின் ஒரு சுயாதீன முகவரமைப்பாகும்.</p><h2>சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு</h2><p>
</p><p>
போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நம்பகமான ஒரு சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக்
கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கப்பற் போக்குவரத்துத் துறையிலுள்ள நியாயமற்ற
அல்லது ஏமாற்றும் நடைமுறைகளிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும்
அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழு பணியாற்றுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f03bad-e179-45cf-ab4f-078a9ec71bcf/26-6a9a83ee219ec.webp' /></p><p>

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால்
பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவுக்கு டிபெல்லா
தலைமை தாங்கி வழிநடத்துகின்றார்.</p><p>

2026ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால்
பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் ஆணையாளராக
ரொபர்ட் ஹார்வி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-04T08:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து தொடரிலிருந்து குசல் மெண்டிஸ் - பினுரா விலகல்: இலங்கை அணிக்கு இரட்டை பின்னடைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kusal-mendis-binura-withdraw-from-england-series-1788510026"></link>
            <id>https://tamilwin.com/article/kusal-mendis-binura-withdraw-from-england-series-1788510026</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்படி, இலங்கை அணியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்படி, இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் ஏற்பட்ட காரணமாக தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர்.</p><p> 

​2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைநார் (Hamstring) காயமும், பினுரா பெர்னாண்டோவுக்கு முதுகுப் பகுதியில் காயமும் ஏற்பட்டுள்ளது. </p><h2>

தொடரிலிருந்து விலகிய இரு போட்டியாளர்கள்</h2><p>
இந்த நிலையில் காயமடைந்த இரு வீரர்களும் தொடர் உடற்தகுதி மறுவாழ்வு சிகிச்சையில்
(Rehabilitation) ஈடுபட்டு வரும் நிலையில், இப்போட்டித் தொடருக்குள் அவர்களால்
முழுமையாகக் குணமடையாமல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் தொடரில் இருந்து காயமடைந்த இருவரும் விளையாட முடியாது என 
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e33b8ff1-2861-4e72-b023-e1ef73233963/26-6a9a7fa25312e.webp' /></p><p>இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அறிவிப்பின்படி, ​குசல் மெண்டிஸ்க்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும், ​பினுரா பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான்
மதுஷங்கவும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும் ​, ​குசல் மெண்டிஸ் இந்த தொடரில் பங்கேற்காததால், இங்கிலாந்துக்கு எதிரான T20I
தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.</p><p> 

 இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 3 போட்டிகள்
கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T08:22:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகிறார் நாமல்..! ஜேவிபியிடமிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு பறந்த அவசர தகவல் - அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788506324"></link>
            <id>https://tamilwin.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788506324</id>
            <summary type="text">நாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணி எவ்வித தடையுமின்றி வெற்றிகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணி எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்தார். </p><p>

இன்று (04.09.2026) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் நாமல் ராஜபக்ச முன்னிலையான போது, ​​வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>இருமடங்கு மக்களைக் கொண்டு வருவோம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கைது செய்யப்பட்டால், நாங்கள் அநுராதபுரத்திற்கு இருமடங்கு மக்களைக் கொண்டு வருவோம். அவரைக் கைது செய்யும் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது.

ஜனாதிபதிக்கும் இந்த வார இறுதியில் ஒரு கூட்டம் உள்ளது. </p><p>ஆனால், மக்களிடம் சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை. அவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளைக் கட்டியதாகக் கூற வேண்டுமா? அல்லது ரொட்டி மாவு மற்றும் பால் பவுடரின் விலைகளைக் குறைத்ததாகக் கூற வேண்டுமா?</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vYm5XRE_Gx4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கேலி செய்யும் ஒரு முயற்சி</span></p><p> </p><p>

சொல்வதற்கு எதுவும் இல்லாததால், இது நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைக் கேலி செய்யும் ஒரு முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன் நாமல் ராஜபக்சவின் கைதுக்கு பிறகு, கிராம அளவில் பட்டாசுகளை வெடித்தும், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களைக் காட்சிப்படுத்தியும் கொண்டாட்டங்களுக்குத் தயாராகுமாறு ஜே.வி.பி தனது கட்சி உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/522b7865-4447-41d2-b1bf-85c0270a22bc/26-6a9a7ea15daf2.webp' />&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியில் வராத ஏதோ ஒரு பெரிய குற்றம்! தான் கைது செய்யப்படப் போகும் திகதியை நன்கு அறிந்துள்ள நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788505916"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788505916</id>
            <summary type="text">தான் எப்போது சிறைக்கு செல்வேன் என்று நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் எப்போது சிறைக்கு செல்வேன் என்று நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தான் 12ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்படுவேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் எமக்குத் தொடர்பில்லை.</p><h2>பதற்றத்தில் நாமல்&nbsp;</h2><p> </p><p>

தான் எப்போது கைது செய்யப்படுவேன் என்பது குறித்து நாமல் ராஜபக்சதான் நன்கு அறிந்திருப்பார்.
</p><p>
நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்திற்கு முழுமையாகத் தெரியாது. அவர் தொடர்பான ஒரு சில குற்றச்செயல்கள் குறித்தே நாம் அறிவோம்.

அவற்றுள் சில குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7A33NpQdXfI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்த வழக்குகளுக்காக அவர் 12ஆம் திகதிக்கு முன்னர் சிறைக்குச் செல்வாரா, அல்லது எமக்கோ, நீதிமன்றத்திற்கோ தெரியாத வேறு ஏதேனும் பாரிய குற்றச்செயல் தொடர்பில் அவர் கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது.</p><p>

கடந்த கால குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும்போது, நாங்கள் அனைவரும் அறிந்த பல குற்றச்செயல்களைத் தாண்டி, வெளியில் தெரியாத பல குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவருகின்றன.
</p><p>
அவை, கடந்த கால குற்றங்களை விட பாரதூரமானதாகவும் இருக்கலாம், அதைவிட சிறியதாகவும் இருக்கலாம்.

எனவே, அந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தான்&nbsp; அதனுடைய பாரதூரம் தெரியும். எத்தனைக் குற்றங்களை தாங்கள் இழைத்துள்ளோம் என்ற வரையறை அவர்களுக்குத் தெரியும்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mH60g12E-yA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>எனவே ஒவ்வொன்றாக தற்போது வெளிவரும் போது அவர்கள் குழப்பமடைகின்றார்கள். 

இதுதான் தற்போது நாமல் ராஜபக்சவுக்கும் நேர்ந்துள்ளது. </p><p>எம்மைவிட, நீதிமன்றத்தை விட&nbsp; அவருடைய குற்றங்கள் நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும். அவர் செய்த குற்றங்களுக்கு சிறைக்குச் செல்வது குறித்து அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்.
</p><p> 

12ஆம் திகதிக்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரா தாம் கைது செய்யப்படப் போகிறோம் என்பது குறித்து அரசாங்கத்தை விட நாமல் ராஜபக்ச நன்கு அறிவார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09008cb1-f7d4-4769-97bf-b2fe88908687/26-6a9a7275aca56.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T08:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-for-drought-affected-farmers-money-1788506852"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-for-drought-affected-farmers-money-1788506852</id>
            <summary type="text">வறட்சியால் பாதிக்கப்பட்ட&amp;nbsp; விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (04.09.2026) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறட்சியால் பாதிக்கப்பட்ட&nbsp; விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (04.09.2026) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை இன்று வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>வறண்ட காலநிலை</h2><p>
</p><p>
வறண்ட காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d628c34-fb88-4c5d-b0c7-092fd1997178/26-6a9a77bcd68be.webp' /></p><p>இதற்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு குறித்து மக்கள் கேள்வி: நாமல் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-slams-npp-1788508615"></link>
            <id>https://tamilwin.com/article/namal-slams-npp-1788508615</id>
            <summary type="text">நாட்டில் பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக் குழுவில் முன்னிலையான போது அவர் இந்த விடயங்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>தமது தலைவிதியை ஆளும் கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>நீதிமன்றம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை விடவும் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குகள் தொடர்பான மற்றும் விசாரணைகள் தொடர்பான தகவல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தமக்கு எதிராக சாட்சிகள் புனையப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை கைது செய்தாலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் நடத்தப்படும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24e42ca-94d9-41e8-8f0d-3e2c973eb0d9/26-6a9a79ca273d6.webp' /></p><p>
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விவசாயிகளுக்காக களம் இறங்கி போராடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தாம் எந்தவிதமான குற்றத்தையும் இழைக்கவில்லை எனவும் அதனால் சுயாதீனமான விசாரணைகளுக்கு முகம் கொடுக்க எந்த நேரத்திலும் அஞ்ச போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதப் புதைகுழிகளில் மீட்கப்படும் என்புகள்: அறிவியல் அடையாளம் அவசியம்..! பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statement-issued-by-british-tamil-association-1788506698"></link>
            <id>https://tamilwin.com/article/statement-issued-by-british-tamil-association-1788506698</id>
            <summary type="text">மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் என்புகளை அறிவியல் ரீதியாக
அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை
எடுக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் என்புகளை அறிவியல் ரீதியாக
அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. </p><p>


இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2> 

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கோரிக்கை</h2><p>
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>


இலங்கையின் நீண்டகால ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் கைது
செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம்
சரணடைந்தவர்கள் அல்லது அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிக் கொணர்வது இனியும் தாமதிக்க
முடியாத அவசரக் கடமையாகும்.
</p><p>
கிடைக்கப் பெறும் ஆவணங்கள், சர்வதேச அமைப்புகளின் பதிவுகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் இலங்கையின் காணாமல் போனோர்
அலுவலகத்தின் (OMP) தரவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, போரின்
இறுதிக் கட்டத்துடன் தொடர்புடைய காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,000க்கும்
அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db54c752-4792-47e4-b303-a88d30edd8d4/26-6a9a74e8ec261.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியலை
உடனடியாக வெளியிடுவது நீதிக்கான தேடலின் அத்தியாவசியமான முதல் படியாகும்.
</p><p>
இந்தச் செயல்முறை, இக்குற்றங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக்
கண்டறிவதற்கும், குற்றவாளிகளை
அடையாளம் காண்பதற்கும், நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், உறவினர்கள்
தங்கள் இறுதி மரியாதையைக் கண்ணியமான முறையில் செலுத்துவதற்கும் முதல் படியாக
அமையும்.</p><h2>விவரங்களை சரிப்பார்க்க தளவுத்தளம்</h2><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்கள், காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட திகதிகள்,
சரணடைந்த இடங்கள், கடைசியாகக் காணப்பட்ட இடங்கள் மற்றும் இரத்த உறவினர்களின்
தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, சரிபார்க்கக் கூடிய
தரவுத்தளமாக உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.</p><p>


 மனித என்புகளை அடையாளம் காண்பதில் இனியும் தாமதம் கூடாது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் தொடர்ந்து
கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ba3459-bb98-4743-8de5-82806055a8fc/26-6a9a74e9b14d6.webp' /></p><p> </p><p>

இவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் வாய்ப்பை வழங்கக் கூடிய முக்கியமான தடயவியல் ஆதாரங்களாகும்.
</p><p>
ஒவ்வொரு மனித என்புகளையும் அறிவியல் ரீதியாக அடையாளம் காண்பதற்கு,

காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியல்

இரத்த உறவினர்களிடமிருந்து பெறப்படும் DNA மாதிரிகள்

பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும் மனித என்புகளில் இருந்து பெறப்படும் DNA
மாதிரிகள்

சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடயவியல் நடைமுறைகள் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.</p><h2>

இறுதி மரியாதைக்காக கொடுக்கப்பட வேண்டிய மனித எச்சங்கள்</h2><p>

ஒரு மனித எச்சம் அடையாளம் காணப்படுவது வெறும் அறிவியல் செயல்முறை அல்ல. அது
ஒரு குடும்பத்திற்கு பல தசாப்தங்களாக மறுக்கப்பட்ட உண்மையை வழங்கும் நீதிச்
செயல்முறையாகும்.
</p><p>
அடையாளம் காணப்பட்டவர்களின் உடல் எச்சங்களை அவர்களின் குடும்பங்களிடம்
கண்ணியத்துடன் ஒப்படைத்து, அவர்கள் விரும்பும் மத மற்றும் கலாசார மரபுகளின்படி
இறுதி மரியாதை செலுத்துவதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.&nbsp;</p><h2>கிடைக்கப்பெறும் ஆவணங்கள் என்ன கூறுகின்றன</h2><h4>
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC)</h4><p>


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பதிவுகளின்படி, 2011 டிசம்பர் 31 நிலவரப்படி
இலங்கையில் 15,780 பேரைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதில் பெரும்பான்மையினர் ஆண்கள் என்றும், 1,494 குழந்தைகள் மற்றும் 754
பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கியிருந்ததாக அந்தக் காலகட்டத்தின் ICRC தரவுகள்
குறிப்பிடுகின்றன. </p><p>

136 நபர்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து
வைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

மேலும், ஐ.சி.ஆர்.சி (ICRC) அமைப்பு முந்தைய ஆண்டில்
17,741 சிறைக் கைதிகளைச் சென்று பார்வையிட்டிருந்தது.</p><h4>

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (AHRC)</h4><p>

2012 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் 15,780 காணாமல் போனோர் தொடர்பான
எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d04ad15f-b2b1-48c2-af9e-c342d6212878/26-6a9a74ea69e89.webp' /></p><p>
</p><h4>

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (AI)</h4><p>

இலங்கை, உலகில் அதிகளவிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற
நாடுகளில் ஒன்றாகும். 1980களின் பிற்பகுதியிலிருந்து 60,000 முதல் 100,000
வரையிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகள் நிலுவையில்
உள்ளன.

இந்த சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையைக் கருத்திற் கொண்டு,
இலங்கையில் நீதி மறுக்கப்பட்டதற்கான சான்றுகளுக்குப் பஞ்சமில்லை என அம்னெஸ்டி
இன்டர்நேஷனல் (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது.
</p><h4>



காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுக்கள்</h4><p>

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக் குழுக்களுக்கு 18,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததாக 2014ஆம் ஆண்டில்
தெரிவிக்கப்பட்டது.</p><h4>


இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகம் (OMP)</h4><p>இலங்கையில் 17,000 காணாமல் போனோர் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில்
பெரும்பாலானவை சிறிலங்கா - விடுதலை புலிகள் (LTTE) போருடன் தொடர்புடையவை.</p><h4>


இலங்கை காணாமல்போன ஆட்களைப் பற்றிய அலுவலகம் (OMP)</h4><p>எங்களது தரவுத் தளத்தில் 23,352 வழக்குகள் கையாளப்பட்டு வருகின்றன" என்று
ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச
தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தலைவரான மகேஷ் கட்டுலந்த கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். </p><p>

இரட்டிப்பாகப் பதிவானவை மற்றும் போரில்
காணாமல் போன இராணுவத்தினரின் (missing in action) கோப்புகளை நீக்கிய பின்னர்,
தற்போது 16,966 காணாமல் போனோர் வழக்குகள் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
</p><p>
அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, 1,00,000க்கும் அதிகமான மனித உயிர்களைப்
பலி வாங்கிய
போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சுமார் 20,000 பேர் காணாமல் போயுள்ளதாகக்
கருதப்படுகின்றது.</p><h4>




பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)</h4><p>

நம்பகமான ஆவணச் சான்றுகளின் அடிப்படையில், போரின் இறுதிக் கட்டத்தில் கைது
செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 18,000க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்
உறவுகள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களிற்கு என்ன நடந்ததது என்பதைத்
தெளிவுபடுத்துமாறும் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஒரு தசாப்தத்திற்கும்
மேலாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.</p><h2>சர்வதேச சமூகத்திற்கான உடனடி கோரிக்கைகள்</h2><p>
01. முழுமையான பெயர்ப் பட்டியலை வெளியிடுதல்: சிறிலங்கா அரசும் ஏனைய
பங்குதாரர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல், காணாமல்
ஆக்கப்பட்ட திகதிகள் மற்றும் இரத்த உறவினர்களை தொடர்பு கொள்ளும் விபரங்கள்
அடங்கிய விரிவான பட்டியலை வெளியிடுவதற்கு சர்வதேச சமூகம் அவர்கள் மீது
அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.</p><p>

02. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்: பாதிக்கப்பட்ட அனைவரினதும்
மேற்குறித்த விபரங்கள் 1) ஒரே விரிவான *பொது தரவுத்தளத்தில் (centralised
database) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யவும், 2) தம்மிடம் கைவசம் உள்ள
பட்டியல்களை ஐ.நா (UN) நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்பகமான
முழுமையான பெயர் பட்டியலை விரைவாக வெளிக் கொண்டு வருவதற்கு அனைவரையும் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60734200-b7d3-489e-9ccf-dbcfe68e82b4/26-6a9a74eb1ce04.webp' /></p><p>
</p><p>
03. சர்வதேச டி.என்.ஏ தரவு வங்கி - பொது தரவுத்தளம் (centralised database):
செம்மணியில்
கண்டெடுக்கப்பட்ட 583 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பிற இடங்களில்
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை, டி.என்.ஏ தரவு வங்கியைக் கொண்டு விரைவாக
அடையாளம் காண மேற்படி பொது தரவுத்தளம் (centralised database)
வழிவகுக்கும்.
</p><p>
 இந்தப் பட்டியல் இல்லையெனில், இந்த மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்து விடும்.
</p><p>
சர்வதேச மேற்பார்வையின் கீழ் டி.என்.ஏ தரவு வங்கியை நிறுவுதல், இலங்கையிலும்
மற்றும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் DNA ஒப்பீட்டு
மாதிரிகளை (reference
samples) சேகரித்தல், மனித எச்சங்களிலிருந்து பெறப்படும் DNA மாதிரிகளுடன் இவை
ஒப்பிடப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறை வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும்
மேற்கொள்ளப்பட வேண்டும். 

DNA ஒப்பீட்டுச் செயல்பாட்டை (DNA matching process) ஐக்கிய
இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றில்
மேற்காள்ளுதல்.
</p><p>
04. டி.என்.ஏ சேகரிப்பிற்கான அனுமதி: குற்றங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து
சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எலும்புக்கூடுகள் மற்றும் பிற உடல்
எச்சங்களுடன் ஒப்பீடு செய்வதற்கும், டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிப்பதற்கும்
இலங்கை அரசு ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு
நாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும்.</p><p>
05. தடயவியல் நிபுணர்களைப் பணியமர்த்துதல் (Forensic Experts Deployment): மினசோட்டா
நெறிமுறை (Minnesota Protocol) மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத்
தரநிலைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை உறுதி செய்வதற்காக, கண்டறியப்பட்ட
அனைத்து மனிதப் புதைகுழி இடங்களுக்கும் அங்கீகாரம் பெற்ற தடயவியல்
மானுடவியலாளர்கள் (Forensic Anthropologists), நோயியல் நிபுணர்கள்
(Pathologists) மற்றும் சட்ட நிபுணர்களை உடனடியாகப் பணியமர்த்துதல்.
</p><p>
06. புவிசார் மற்றும் செயற்கைக்கோள் பகுப்பாய்வு (Geospatial &amp; Satellite Analysis)
: மோதல் காலம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய காலப் பகுதிகளைச் சேர்ந்த, அறியப்பட்ட
மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி இடங்களிலும் செயற்கைக்கோள்
படத் தொகுப்பு மற்றும் புவிசார் பகுப்பாய்வை மேற்காள்ளுதல்.</p><p>
</p><p>
07. மனிதப் புதைகுழிகளின் பாதுகாப்பும் உடனடி அகழ்வாராய்ச்சியும்: உடனடியான
அகழாய்வுபணிகளை (Immediate Excavations) மண்டைதீவு மற்றும் சாட்சிகளின்
வாக்குமூலங்கள், தடயவியல் சான்றுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்ட பிற இடங்கள்
உட்பட மனித புதைகுழிகள் கண்டறியப்பட்ட அனைத்து இடங்களிலும் உடனடியாகத் அகழ்வு
பணிகளைத் தொடங்குதல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eea105f-c55c-492c-88aa-d21213d75660/26-6a9a74ebc6f52.webp' /></p><p>
</p><p>
08. சான்றுகளைப் பாதுகாத்தல் (Evidence Protection): சான்றுகள் அழிக்கப்படுவதையோ
மாற்றப்படுவதையோ தடுக்கும் வகையில் அனைத்து தடயவியல் சான்றுகளையும் சம்பவ
இடங்களையும் (குற்றவியல் இடங்கள்) பாதுகாத்து பராமரித்தல்.</p><p>

09. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்பு (Victim Family Involvement)
: அனைத்து விசாரணைச் செயல்பாடுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான
பங்கேற்பை உறுதிசெய்தல். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் வெறும் தகவல்
பெறுபவர்களாக அல்லாமல், விசாரணை மற்றும் அடையாளம் காணும் செயல்முறையின்
முக்கிய பங்குதாரர்களாக கருதப்பட வேண்டும்.
</p><p>
மேலும் அவர்களுக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல், DNA பரிசோதனை
முடிவுகள், மனித எச்சங்களின் அடையாளம் தொடர்பான தகவல், சட்ட உதவி, உளவியல்
மற்றும் சமூக ஆதரவு வழங்கப்பட வேண்டும்.</p><p></p><p>

10. தடையற்ற மேற்பார்வை (Unrestricted Oversight): அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச
தரநிலைகளுக்கு அமைவாக, அடையாளங் காணும் செயல்பாட்டில் ஈடுவதற்கு சர்வதேச
தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு முழுமையான, தடையற்ற
அனுமதியை வழங்குதல். அவர்களுக்கு ஆவணங்கள், தரவுத்தளங்கள், புதைகுழி இடங்கள்
மற்றும் தடயவியல் ஆதாரங்களுக்கு முழுமையான தடையற்ற அணுகல் வழங்கப்பட வேண்டும்.</p><p>

11. காலக்கெடுவுடன் கூடிய வெளிப்படையான அறிக்கையிடல்: பாதிக்கப்பட்டவர்களை
அடையாளம் காணுவது குறித்த முன்னேற்றம், குற்றங்கள் இழைக்கப்பட்ட
விவரங்கள், அடையாளம்
காணப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கட்டளைச் சங்கிலி (chain of command) ஆகியவை
குறித்து வெளிப்படையான அறிக்கையிடலை உறுதி செய்ய அவ்வப்போது அறிக்கைகளை
வெளியிடுதல். அதில் எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர்
அடையாளம் காணப்பட்டுள்ளனர், எத்தனை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன, எத்தனை
DNA ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எத்தனை குடும்பங்களுக்கு முடிவுகள்
அறிவிக்கப்பட்டன என்பது போன்ற தகவல்கள் குறித்த இடைவெளிகளில் பொதுமக்களுக்கு
வெளியிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9852aa58-5334-4f54-883c-a35f3a3223ab/26-6a9a74ec78738.webp' /></p><p>
</p><p>
12. பொறுப்புக்கூறல் (Accountability): வலிந்து காணாமல் ஆக்குதல் என்பது ஒரு
குடும்பத்தின் தனிப்பட்ட துயரம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளையும் சட்டத்தின்
ஆட்சியையும் அடிப்படையாகத் தாக்கும் ஒரு தீவிரமான குற்றமாகும்.

 எனவே, விசாரணைகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அறியும் முயற்சியில் மட்டுமே முடிவடையக்
கூடாது. கட்டளைப் பொறுப்பு (command responsibility), நிறுவனப் பொறுப்பு
(institutional
responsibility) மற்றும் அரச பொறுப்பு (state responsibility) குறித்து
விசாரணை நடத்துதல் என தொடர் நடவடிக்கை தேவை.
</p><p>
13. உடல் எச்சங்களை உறவினரிடம் கையளித்தல்: தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்களை
அவர்களின் இரத்த உறவினர்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்வதுடன், குடும்பங்கள்
தங்களது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்கும், இறுதிச் சடங்குகளைக் கண்ணியமான
முறையில் நிறைவேற்றுவதற்கும் அனுமதித்தல்.

காலம் மிகவும் முக்கியமானது. நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த
செயல்பாடுகளைத் தாமதப்படுத்துவதே தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகளின் நீண்ட
கால உத்தியாகும்.</p><p>தற்காலிக விசாரணைக் குழுக்கள் அமைத்தல், மற்றும் உறுப்பு
நாடுகள், பிராந்திய அமைப்புகள் (ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை), உலக வங்கி, சர்வதேச
நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் போலி
வாக்குறுதிகள் மூலம், ஐ.நா அமைப்புகளின் அழுத்தத்தைத் தணிப்பதே இந்தத்
தாமதத்தின் நோக்கமாகும்.

எனவே, இலங்கை தெளிவான முடிவுகளை வெளிப்படுத்துவதை உறுதி செய்ய, குறிப்பிட்ட
காலக் கெடுவுடன் கூடிய நடைமுறைத் திட்டத்தை சர்வதேச சமூகம் வகுக்க வேண்டும்.</p><h2>சர்வதேச சமூகத்திற்கான அழைப்பு</h2><p>
பல தசாப்தங்களாக உண்மைக்காகக் காத்திருக்கும் குடும்பங்களை மேலும்
காத்திருக்கச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

தற்காலிக ஆணைக்
குழுக்களும், எதிர்கால
நடவடிக்கைகள் குறித்த வெறுமனே வாக்குறுதிகளும் இனிப் போதாது. </p><p>அளவிடக் கூடிய
முடிவுகள், தெளிவான காலக்கெடுக்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு என்பனவே
தற்போதைய அவசிய தேவைகளாகும்.
</p><p>
ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற
சர்வதேச அமைப்புகள், இலங்கை அரசாங்கத்துடனான இராஜதந்திர, பொருளாதார மற்றும்
நிதி நிறுவனங்கள் சார்ந்த ஈடுபாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முதன்மை நிபந்தனைகளாக முன்னிறுத்த வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8688363d-6334-4606-9932-8e7a3ed87105/26-6a9a74ed2b33e.webp' /></p><h2>எமது முதன்மை முன்னுரிமைகள்</h2><p>
01. குற்றவியல் நீதி (Criminal Justice): இலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் OSLAP உட்பட
நீதிச் செயல்பாடுகளில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதையும், சர்வதேச
குற்றவியல் நீதி முறைமைக்கு (international criminal justice mechanism)
உடன்படுவதையும்
உறுதிசெய்தல்.
</p><p>
02. மீண்டும் நிகழாமை (Non-Recurrence): உரிய அதிகாரப் பகிர்வு, தமிழ்
தேசத்திற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் மற்றும் தமிழ் மக்களின் நியாயமான
அபிலாசைகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வைப்
உறுதிப்படுத்துதல்.</p><p>

03.இழப்பீடுகள் (Reparations): தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறிய,
வெளியேற்றப்பட்ட
தமிழர்களை உடனடியாக மீளக் குடியேற்றுவதற்கும் விரும்புவோரின் முழு
சம்மதத்துடன் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கும் உடனடி நடவடிக்கைகளை
எடுத்தல்,&nbsp; போரினால்
பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மறுசீரமைத்து, வடக்கு-கிழக்கு பிராந்தியத்தை தீவின்
ஏனைய பகுதிகளுக்கு இணையான நிலைக்குக் கொண்டு வருதல்.
</p><p>
வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலம்,
வாழ்வாதாரம், சமூக உட்கட்டமைப்பு மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு தொடர்பான
பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களில் பலர் பல ஆண்டுகளாகத் தங்களது
அன்புக்குரியவர்களின் நிலை குறித்து எந்த உறுதியான தகவலும் இன்றி வாழ்ந்து
வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><h2>நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது..</h2><p>

ஒவ்வொரு ஆண்டும் தாமதமாகும் போது, சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள்
இழக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், வயதான பெற்றோர்கள் தங்களது
பிள்ளைகளின் உண்மையான நிலையை அறியாமலேயே இறந்து போகும் நிலையும் தொடர்கிறது.
</p><p>
இனி ஒரு குடும்பமும் “என் அன்புக்குரியவர் எங்கே?” என்ற கேள்வியுடன் வாழ
வேண்டிய நிலை ஏற்படக் கூடாது.
</p><p>
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவது உட்பட,
உண்மை, அடையாளம் காணுதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்து
நடவடிக்கைகளுக்கும் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய சர்வதேச கண்காணிப்பு
செயல்திட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
</p><p>
உண்மை மறைக்கப்படக்கூடாது, பெயர்கள் மறைக்கப்படக்கூடாது, சான்றுகள்
அழிக்கப்படக்கூடாது, நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தில் பிரபல அரசியல்வாதிகள்! ஆபத்தான நபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093</id>
            <summary type="text">சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பினை பேணி, அவரிடமிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் சலுகைகளை பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><h2>சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி</h2><p>
இதன் ஒரு கட்டமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடமும் நேற்று (03) சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0706cd95-c4ac-453a-a79b-ba506fce6f83/26-6a9a743ecd8f2.webp' />&nbsp;</p><p>

ஷிரான் பாசிக் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளை கடற்கரையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கான சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவர் முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது குறித்த ஹோட்டல் கட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.</p><h2>பல அரசியல்வாதிகளிடம் விசாரணை</h2><p> 

ஹோட்டல் கட்டப்பட்ட நேரத்தில் பிரதி அமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோ, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>இதேவேளை, தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவிடமும் மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு (CCID) (01) திகதி சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததது.</p><p>
இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் வறட்சி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-people-affected-by-drought-sl-1788504639"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-people-affected-by-drought-sl-1788504639</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 96,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, வறட்சியான காலநிலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 96,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. </p><p>அத்தோடு, வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வறட்சி</span></p><p> </p><p>

மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99057cc4-86be-4ffe-ad1c-8d043040b63b/26-6a9a6d9b74bbc.webp' /></p><p> </p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளில் கடுமையான சோதனைகள்.. பெற்றோருக்கு விரைவில் கிடைக்கவுள்ள கருவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-investigations-at-schools-police-igp-1788504576"></link>
            <id>https://tamilwin.com/article/drug-investigations-at-schools-police-igp-1788504576</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><p>இதில் பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> அத்துடன், பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>பரிசோதனை கருவிகள்</h2><p>போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் விரைவுப் பரிசோதனை கருவிகளை (Drug-testing kits) மக்களுக்கு இலகுவாகக் கிடைக்கச் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76980a23-dbed-45bb-946b-3d7fa19b5c42/26-6a9a6d2081196.webp' /></p><p> </p><p>முதற்கட்டமாக சந்தைகளுக்கும், நீண்டகாலத் திட்டமாக உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமும் இக்கருவிகளை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. </p><p>பெற்றோர் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைத் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:06:03+00:00</updated>
        </entry>
    </feed>
