<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T06:38:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசாரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கொடுத்த சலுகை! இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313"></link>
            <id>https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இன்று (10.09.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன&nbsp;</h2><p>
 

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43cb4fc-f2ab-45c5-96b8-21ddbc9583ba/26-6aa248a136726.webp' /></p><p>
</p><p>
 

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை அடுத்து, ஞானசார தேரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
</p><p>இந்நிலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிலைநிறுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:56:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அவரின் தந்தை திலக் வீரசிங்க சொன்ன பரபரப்பான கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323"></link>
            <id>https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை எனவும் லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை எனவும் லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின் மாமனார் பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளிதளம் ஒன்றுக்கு இன்று (10.06.2026) வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
</p><h2>
</h2><p></p><h2>லிமினி தந்தைக்கு சொன்னது</h2><p>நான் லிமினியிடம் கேட்டபோது அவர் அப்படி ஆயத்தமாக இல்லை என்று சொன்னார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. எங்கள் நிலைமை என்னவென்றால் இது எங்கிருந்து வெளியே வருகிறது? லிமினி 12ஆம் திகதி அநுராதபுர மேடையில் ஏறமாட்டார்.
எனக்குத் தெரிந்தவரையில் இல்லை.</p><p>இன்று வரை அவர் ஏறுவாரா என்பது எனக்குத் தெரியாது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. லிமினி நாமலை விட்டுவிட்டு மேடையில் ஏறி அரசியலில் மேலே வரப் போகிறாரா? என்பது சாத்தியமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9360d246-97a0-48d1-a9ac-0138d2998974/26-6aa244bde0050.webp' /></p><p>ஆனால் இப்போது எங்களது கடமை என்னவென்றால் நாமலைப் பார்த்துக் கொள்வது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது. அதுதான் லிமினியின் கடமை. நாமலும் அவரின் பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள்.</p><p>எங்கள் வீட்டில் இருந்து தான் உணவு அனுப்புகிறோம். 
வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் தான் சமைக்கிறார்கள். 
2029 ஜனாதிபதி வேட்பாளர் எனது மகள் லிமினி என குறிப்பிடுகிறார்கள்.</p><p>எனக்குத் தெரியாது. மற்றொன்றுஇ நான் அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடக்கவில்லை. இது எங்கிருந்து இந்த அளவுக்கு வெளியே வந்தது என்பதுதான் கேள்வி என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T05:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடி செய்த எவரையும் சிறையில் காணவில்லை! சிறைச்சாலையில் கண்ட காட்சியை வெளிப்படுத்திய சமிந்த விஜேசிறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-fraudster-not-found-prison-chaminda-wijesiri-1789019182"></link>
            <id>https://tamilwin.com/article/the-fraudster-not-found-prison-chaminda-wijesiri-1789019182</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்கு தானே குழி தோண்டிக்
கொள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்கு தானே குழி தோண்டிக்
கொள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.</p><p>இந்த திருத்தத்தால் நாடும் எதிர்க்கட்சிகளும்
அழியும் அபாயம் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள்
தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில்
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மத்திய வங்கி பிணைமுறி மோசடி&nbsp;</span></h2><p>

"நான் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி நபரை காணவில்லை. சிறை முழுவதும் தேடியும் அவர் இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb5d8f1-8cfc-4c74-a45a-155d0093743b/26-6aa2442fe1c23.webp' /></p><p> </p><p>உகண்டாவில் பணத்தை
வைத்திருந்ததாக கூறப்பட்டவரோ அல்லது வெள்ளைப்பூடு, சீனி மற்றும்
கடவுச்சீட்டு மோசடிகளுடன் தொடர்புடையவர்களோ எவரையும் சிறையில் காணவில்லை.
அனைவரும் வெளியில் தான் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கின்றார்கள்.
</p><p>
போரை வென்று, அதிக காலத்துக்கு ஆட்சியில் இருக்க முயன்றவர்கள் 2022ஆம் ஆண்டில்
மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். </p><p>மக்களுக்குப் பொருத்தமில்லாமல் ஆட்சியைத்
தக்கவைக்க முயன்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டது. அதேபோன்று,
தற்போதைய அரசு தனது இருப்புக்காகவே 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வருகின்றது.இது அரசு தனக்குத் தானே தோண்டிக் கொள்ளும் குழியாகும்.</p><h2>பொதுமன்னிப்பு நிறுத்தம்</h2><p>

தேசிய பண்டிகைக் காலங்களில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பொதுமன்னிப்பு
வழங்குவது இந்த அரசு வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4363948-4278-4a30-99be-7093baf582fa/26-6aa244309bc36.webp' /></p><p> இதனால் குற்றம்
செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டாலும், சில காரணங்களுக்காக அவர்கள்
விடுதலை பெறும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவது அநீதியாகும்.
</p><p>
இதேவேளை, 70 வயதுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இருக்கின்றனர். அவர்கள்
நடக்கக்கூடிய முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரும் துன்பங்களை
அனுபவிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p> 18 வயதில் வந்த
இளைஞர், புனர்வாழ்வு பெற்று வெளியில் விடப்படாமல் 54 வயதில் சிறையிலேயே
உயிரிழந்த சம்பவத்தை நான் சிறையில் அவதானித்தேன். இவ்வாறான விடயங்களில்
மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தனுக்கு இன்று தீர்த்த திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-temple-s-annual-theertha-festival-1789018100"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-temple-s-annual-theertha-festival-1789018100</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தீர்த்த திருவிழா
இன்றையதினம்(10.09.2026) காலை நடைபெற்றது.

கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தீர்த்த திருவிழா
இன்றையதினம்(10.09.2026) காலை நடைபெற்றது.</p><p>

கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று
வரும் நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப
பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து தீர்த்த திருவிழா இடம்பெற்றது.</p><h2>பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்</h2><p>
தீர்த்த திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை
தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e3da83-bfdb-46e8-bc12-a2e0ba7543e0/26-6aa243405dad7.webp' /></p><p>
காவடிகள், பிரதட்டைகள், கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது
நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:43:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கொண்ட ரஞ்சி சிக்கியது எப்படி..! பெருந்தொகை தங்கம் தொடர்பில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-s-life-style-1789012666"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-s-life-style-1789012666</id>
            <summary type="text">டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>
</p><h2><b>
பாதுகாப்பு பிரிவினரால் கைது</b></h2><p>அத்துடன், அங்கு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a830c3-b4e2-4371-b37c-76020047ba93/26-6aa23df00f5c5.webp' /></p><p>ரஞ்சித் குமார அல்லது கொண்ட ரஞ்சி கடந்த மார்ச் 29ஆம் திகதி இரவு 7 மணியளவில் ஈரான், டுபாய் மீது தொடுத்த வான்வழித் தாக்குதல்களைத் தனது கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். </p><p>அதனை நண்பர்கள் மூவருக்கு அனுப்பியமையால் டுபாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த காணொளிக் காட்சிகள் பரிமாறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர்.</p><p>

கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த 17 பவுண் எடையுள்ள 2 தங்க மாலைகள், 18,000 திர்ஹம் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை சாதாரண பயணிகள் விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.</p><p>
</p><h3><b>
கோல்டன் விசா</b></h3><p>அத்துடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad23be0-d4d2-4079-89f8-85416bb2fef6/26-6aa23ef12929e.webp' /></p><p>ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது, முன்னொரு சந்தர்ப்பத்தில் டுபாயிலிருந்து இத்தாலிக்கு தப்பியோட முயன்ற போது சர்வதேச பொலிஸார் ஊடாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவிப்பின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p>

அங்கு ஒரு வாரம் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்து, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தனது கடவுச்சீட்டையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், அங்குப் பிணை கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது சகாக்கள் குழுவுடன் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளார்.</p><p>

கொண்ட ரஞ்சி அங்கு தண்ணீர் போத்தல் விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதோடு, அதனால் அவர் கோல்டன் விசா ஒன்றையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 </p>]]></content>
            <updated>2026-09-10T05:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய கொலை - நாற்காலியில் கட்டப்பட்டு மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brutal-murder-heard-from-ratnapura-1789015894"></link>
            <id>https://tamilwin.com/article/brutal-murder-heard-from-ratnapura-1789015894</id>
            <summary type="text">இரத்தினபுரி - கட்டலியன்பல்ல&amp;nbsp; பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இந்த கொலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - கட்டலியன்பல்ல&nbsp; பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p>இந்த கொலை நேற்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>உயிரிழந்த நபர் நாற்காலியில் கட்டப்பட்டு, தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> இரத்தினபுரி , கஹங்கம, கட்டலியன்பல்லவை சேர்ந்த 61 வயதான ஹல்பவலகே குலரத்னா என்பவரே இவ்வாறு&nbsp; உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db0cea9-b466-46d3-9ec3-b2946ea35333/26-6aa23d0acc155.webp' /></p><p>கொலை நடந்த வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயது நபர், கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.</p><p>

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், கொலை நடந்த வீட்டை பராமரித்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியாக சிக்கப்போகும் ராஜபக்சர்கள்! கைது குறித்து தகவல் அறிந்த குடும்பம் - அரசியலுக்கும் அஸ்த்தமனமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksas-have-no-place-in-sri-lanka-anymore-1789014439"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksas-have-no-place-in-sri-lanka-anymore-1789014439</id>
            <summary type="text">

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ''ராஜபக்ச குடும்பத்தில் ஒவ்வொருவரும் தான் செய்த மோசடிகளை நன்கு அறிவர். அதனால்தான்&nbsp; தமது கைது குறித்து பதற்றமடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்'' எனவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><h2>அரசியலில் வாய்ப்பில்லை</h2><p> 

ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்து தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வந்தமை, தனது கைது குறித்து அவர் நன்கு அறிந்திருந்தமையே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd3f9b5-1079-41f2-9f50-af05b885f74e/26-6aa23b9b54a85.webp' /></p><p> </p><p>

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும். எனினும், தனது கைது குறித்து பிரசாரம் செய்த நாமல் என்ன காரணத்திற்காக தான் கைது செய்யப்படப் போகின்றோம் என்பதை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியதில்லை. </p><p>

ஏனைய ராஜபக்சர்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் தங்களுடைய கைதுகளைப் பற்றி பேசுகின்றார்கள். </p><p>

அநுராதபுரத்தில் அல்ல நாட்டில் எந்த இடத்தில் பேரணிகளை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b0c218-5762-4e6d-b340-dcd5bb974049/26-6aa23b9c21ddf.webp' /></p><p> </p><p>

நாமல் ராஜபக்ச வந்ததால் ஆதரவு இரட்டிப்பாகும் என்று கூறுவதெல்லாம் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றது. ராஜபக்சர்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் ஒருபோதும் இடமில்லை.
</p><p>
தங்களுடைய குற்றங்களையும், மோசடிகளையும் மறைப்பதற்காகவே மீண்டும் மக்கள் கூட்டங்களை ராஜபக்சர்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
செப்டெம்பர் 12 அல்ல 13,14,15 ஆகிய எந்த திகதிகளிலும் கூட்டங்களை நடத்தினாலும் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UOn5fvFKd8Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 


</p>]]></content>
            <updated>2026-09-10T05:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியை அறிமுகப்படுத்தியது Apple]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-iphone-duo-1789014561"></link>
            <id>https://tamilwin.com/article/apple-iphone-duo-1789014561</id>
            <summary type="text">தனது வரலாற்றில் Apple நிறுவனம் முதன்முறையாக iPhone Duo எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் குப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது வரலாற்றில் Apple நிறுவனம் முதன்முறையாக iPhone Duo எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
கலிபோர்னியாவின் குப்பெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜோப்ஸ் அரங்கில் நடைபெற்ற Apple event நிகழ்வில் புதிய பிரதம நிறைவேற்று ஜோன் டெர்னஸ் தலைமையில் இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு&nbsp;</h2><p>
இந்த புதிய மடிக்கும் கைபேசியின் வெளிப்புறத் திரை 5.4 அங்குலமாகவும், விரித்தவுடன் ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரியதான 7.6 அங்குலத் திரையைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">This iPhone duo animation <a href="https://t.co/y7NftWpyXS">pic.twitter.com/y7NftWpyXS</a></p>&mdash; Marques Brownlee (@MKBHD) <a href="https://x.com/MKBHD/status/2097782855141335144?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும், இதில் iPad சாதனத்தில் பயன்படுத்தப்படும் Apple Pencil ஸ்டைலஸைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டொலர்களில் தொடங்குகிறது. இதன் முன்பதிவுகள் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் விமானப்படை தளபதி FCIDயில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roshan-gunathilaka-summoned-by-fcid-1789013094"></link>
            <id>https://tamilwin.com/article/roshan-gunathilaka-summoned-by-fcid-1789013094</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.இன்று காலை 9.30 ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>இன்று காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க முன்னிலையாகியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இன்று (10) காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.&nbsp; </p><p>மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள்&nbsp; தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-arrest-in-dubai-cid-investigation-1789008974"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-arrest-in-dubai-cid-investigation-1789008974</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க&nbsp; விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.</p><p> </p><p>

'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><h2>பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர்&nbsp;</h2><p>
</p><p>
கொண்ட ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573437c6-0f0e-412a-85e8-ca199e3f7b26/26-6aa22b707e490.webp' /></p><p>

கோல்டன் விசா’ வசதியின் அடிப்படையில் டுபாயில் தங்கியிருந்தபோது, ​​அவர் இலங்கையில் கொலை, மிரட்டிப்பணம் பறித்தல், மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களை செய்துள்ளதுடன், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
இவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்பது குறித்து அந்நாட்டின் பொலிஸ் அல்லது அரசாங்கமோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>

குடிவரவு மற்றும் குடியகல்வு&nbsp; அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p><h2>டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா</h2><p>
</p><p>டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா பெற்றிருந்ததால், கொண்டா ரஞ்சிக்கு நாட்டின் சட்டங்களிலிருந்து ஓரளவு விலக்கு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d4e8d9-2cce-4c8b-bbc9-f2ee61dc2c14/26-6aa22b7132042.webp' /></p><p>

டுபாயில் பெரும் தொகையை முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தங்க விசாக்களை, கொண்ட ரஞ்சி பல ஆண்டுகளாக பெற்று வந்துள்ளார்.

 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை அணிவது கொண்ட ரஞ்சியின் பழக்கமாக இருந்துள்ளது.
</p><p>
 பத்து விரல்களிலும் மோதிரங்கள், பல கிலோ எடை கொண்ட தங்க நெக்லஸ்கள், மற்றும் மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளையல்கள் அணியும் பழக்கம் கொண்ட ரஞ்சிக்கு இருந்துள்ளது.
</p><p>
இவர் தனது தங்க நகைகள், ஆடம்பர வாழ்க்கை காரணமாக, பாதாள உலகக் கும்பல்களிடையே பிரபலமான நபராக இருந்துள்ளார்.

அவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதுடன், அவர் சில காலமாக இலங்கைக்குப் பல்வேறு போதைப்பொருட்களைக் கடத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் கூறுகிறது.
</p><p>
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p>&nbsp; </p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக மீன்வள அமர்வில் இலங்கை முன்வைத்த முக்கிய முன்மொழிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/key-proposals-regarding-sri-lanka-s-fisheries-1789010650"></link>
            <id>https://tamilwin.com/article/key-proposals-regarding-sri-lanka-s-fisheries-1789010650</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில்
நடைபெற்று வரும் மீன்வளக் குழுவின் 37ஆவது அமர்வில் (COFI37), இலங்கை தனது
தேசிய மீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில்
நடைபெற்று வரும் மீன்வளக் குழுவின் 37ஆவது அமர்வில் (COFI37), இலங்கை தனது
தேசிய மீன்வளக் கொள்கை முன்னுரிமைகள், கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவம்,
சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய மீன்வள
ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
</p><p>
இத்தாலியின் ரோம் நகரில் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை
நடைபெறும் இந்த முக்கிய சர்வதேச அமர்வில், உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ்
உயிரின வளர்ப்பின் நிலைமை தொடர்பான SOFIA 2026 அறிக்கை, சட்டவிரோத,
அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடியை
கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் தணிப்பு
நடவடிக்கைகள், சிறிய அளவிலான மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு
ஆதரவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன.</p><h2>நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்</h2><p>

இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச கலந்துகொண்டு, இலங்கையின்
மீன்வளத்துறையின் தற்போதைய நிலை, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடுகளையும் முக்கிய
கருத்துக்களையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a901a7cf-fa9c-48ff-8a0b-cd1b6bf144db/26-6aa2279228024.webp' /></p><p>அத்துடன், வங்காள விரிகுடா அரசுகளுக்கிடையேயான அமைப்பான BOBP-IGO-வின் தலைமைப்
பொறுப்பிலும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, இந்தியா, பங்களாதேஷ்
மற்றும் மாலைத்தீவுகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிராந்திய மீன்வள
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p>வளரும் நாடுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை
நவீனமயப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் முக்கிய பங்காற்றுவதாக செயலாளர்
பீ.கே. கோலித்த கமல் ஜினதாச சுட்டிக்காட்டினார். </p><p>மீன்வளத் தரவுகளை அறிவியல்
ரீதியாகச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் அவற்றின் அடிப்படையில்
கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.</p><h2>சுமார் 800 முன்னணி பிரதிநிதிகள் பங்கேற்றனர்</h2><p>இதனிடையே, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த
வேண்டியது அவசியம் என இலங்கை வலியுறுத்தியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5dcbead-ae01-4129-acc3-5eba0b3a37ba/26-6aa22793418b3.webp' /></p><p>துறைமுக நாடுகளின் நடவடிக்கைகள்
தொடர்பான சர்வதேச ஒப்பந்தமான Port State Measures Agreement (PSMA)-இல் இலங்கை
இணைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், IUU மீன்பிடியை
கட்டுப்படுத்துவதற்கான நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேலும்
வலுப்படுத்தப்பட வேண்டும் என செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச
தெரிவித்தார்.</p><p>உலகளாவிய மீன்வளத் துறையின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில்
அறிவியல் அடிப்படையிலான தரவு, நவீன தொழில்நுட்பம், பிராந்திய ஒத்துழைப்பு
மற்றும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு ஆகியவை ஒன்றோடொன்று
இணைந்த அணுகுமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என செயலாளர்
பீ.கே. கோலித்த கமல் ஜினதாச COFI37 அமர்வில் வலியுறுத்தினார்.</p><p>இந்த அமர்வில் உலகின் 130 நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள்,
ஆய்வாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள்
மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 800 முன்னணி பிரதிநிதிகள்
பங்கேற்றுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T03:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவிற்கு எதிரான கைது ஆதாரங்கள் - பெரும் குழப்பத்தில் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pohottuwa-doubts-the-evidence-against-namal-1789005419"></link>
            <id>https://tamilwin.com/article/pohottuwa-doubts-the-evidence-against-namal-1789005419</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சட்டத்தரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாமல் ராஜபக்சவின் கைது ஆதாரங்கள்&nbsp;</h2><p>நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக தற்போதைய அரசாங்கம் ஊழல் ஒழிப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd1d877-e98b-4273-a345-a99315827bf9/26-6aa2128a754a2.webp' />&nbsp;</p><p>இதன் காரணமாக தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளில் முன்வைக்கப்பட்ட சான்றுகளை நம்ப முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T03:54:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 மில்லியன் டொலர் மோசடியில் சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/business-man-arrested-for-fund-transfer-1789010800"></link>
            <id>https://tamilwin.com/article/business-man-arrested-for-fund-transfer-1789010800</id>
            <summary type="text">கொழும்பு, மருதானை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொருட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, மருதானை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>2023 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையின் கீழ் 80 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.</p><p>
</p><h2><b>
தொழிலதிபர்&nbsp;கைது</b></h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/656cac77-a8ae-4fbf-ba26-ff16b9dec511/26-6aa225a77b316.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T03:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் சஜித் விசேட சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maintaining-close-relations-between-two-countries-1789008929"></link>
            <id>https://tamilwin.com/article/maintaining-close-relations-between-two-countries-1789008929</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில்
நடைபெற்றது.</p><p>

இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும்
பன்முகத் தொடர்புகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>அத்துடன் பரஸ்பர
நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம்
குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
</p><h2>இரு நாட்டு மக்களுக்கு</h2><p>
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாசார மற்றும்
மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச, இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான, பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான
உறவைப் பேணுவதன் அவசியத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec78647f-e804-4911-83a0-82e0405528b6/26-6aa21e2d8f913.webp' /></p><p>இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவ வேண்டிய அமைதி, பாதுகாப்பு, நிலையான
தன்மை மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய அபிவிருத்தி
மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்
தொடர்பாகவும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
</p><p>
பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின்
அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான மற்றும் பரஸ்பர
நன்மை பயக்கக்கூடிய உறவைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை
எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
</p><p>
மேலும், அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் மூலம் இரு
நாட்டு மக்களுக்கிடையேயான நட்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T03:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bomb-attack-on-dheiwala-office-1789008766"></link>
            <id>https://tamilwin.com/article/bomb-attack-on-dheiwala-office-1789008766</id>
            <summary type="text">தெஹிவளை, களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை, களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
களுபோவில பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நண்பரின் வீட்டின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>நேற்று இரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>சந்தேகநபர்கள் தப்பியோட்டம்&nbsp;</h2><p>
</p><p>சந்தேகநபர்கள் கைக்குண்டை வீட்டின் பிரதான வாயிலுக்குள் வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nAB5BrhLJHM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் முன்பக்க இரண்டு ஜன்னல்களுக்கும் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677605dc-70f8-4995-8320-b209b46b98db/26-6aa23130e87bf.webp' /></p><p>
</p><p>தாக்குதலுக்கு இலக்கான வீட்டில் வசிக்கும் தரிது ரவிஷான் என்பவர், 'திசாநாயக்க முதியான்சேலாகே அவிஷ்க ஏஷான்' எனும் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் நண்பர் எனவும், அந்த போதைப்பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>சம்பவம் இடம்பெற்ற போது 56 வயதான பெண் ஒருவர் மட்டுமே வீட்டில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>இச்சம்பவம் தொடர்பில் கொஹுவளை பொலிஸ் நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T02:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-home-loan-scheme-for-to-work-abroad-1789006678"></link>
            <id>https://tamilwin.com/article/new-home-loan-scheme-for-to-work-abroad-1789006678</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, &#039;எதெர த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் நேற்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.</p><h2>சலுகை வட்டியில் கடன்&nbsp;</h2><p>
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7794b1c7-3262-4cc6-9017-3a52125f9139/26-6aa21971cffba.webp' /></p><p>
</p><p>
இந்த கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச்செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன், கடன்களுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச்செலுத்தப்படவுள்ளது.</p><h2>விண்ணப்பிக்கும் முறை&nbsp;</h2><p>
</p><p>
அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T02:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை கோர விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து - 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-minneriya-22-hospitalized-1789003819"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-minneriya-22-hospitalized-1789003819</id>
            <summary type="text">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த விபத்து இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> 

மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c2b9c0-19cc-4c7c-8ed8-0d88abcad480/26-6aa20af5ed447.webp' /></p><p> </p><p>பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T01:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு: கட்டாயமாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031"></link>
            <id>https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத காலப்பகுதி வரை தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்து மூலப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் முன்னர் எக்காரணம் கொண்டும் செய்முறைப் பரீட்சைக்கு அனுமதி வழங்க முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>மூன்று மாத கால அவகாசம்</h2><p>மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7b921d-f5f1-4b31-ac99-e8c0d7747275/26-6aa20518c9247.webp' /></p><p>
</p><p>சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை எழுதப்பட்ட நாளில் இருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமே பயிற்சி பெறுவதற்காகவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பரீட்சைக்குத் தோற்றிய நாளில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் வரை குறித்த தற்காலிக பயிற்சி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, எழுத்து மூலப் பரீட்சை எழுதிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பதாரர் ஒருவர் வெளிநாடு செல்வாராயின், அவர் மீண்டும் ஒன்றரை வருட காலப்பகுதி முடிவடைவதற்குள் இலங்கைக்கு வருகை தந்து, செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றி மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T01:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963"></link>
            <id>https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தின் போது, அரசாங்கம் கூறுவது போன்று சிறிய மற்றும் முக்கியத்துவமற்ற சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்கள் முன் அரசாங்கம் மறைக்கும் உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் எவை என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b4eb78-e19f-414a-9a8a-24121cb3ae87/26-6aa1f53548cb0.webp' /></p><p>
</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, மாணவர் படைப்பிரிவு பயிற்சி பரிமாற்றம், பாதுகாப்பு பல்கலைக்கழக ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பராமரிப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>எனினும், இத்தகைய சிறிய ஒப்பந்தங்கள் பொதுவாக அமைச்சரவை மட்டத்திலான கீழ்நிலை அதிகாரிகளால் கையெழுத்திடப்படுபவை என புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வரலாற்றுப் பின்னணியை நினைவுபடுத்திய ஜயகொட, இதற்கு முன்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது 38 ஆண்டுகளுக்கு முன்னரே என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கடும் பதற்றமான சூழ்நிலையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>எனவே, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது, பாடசாலை மாணவர்களின் காடெட் பயிற்சி அல்லது துப்பாக்கி பராமரிப்பு பற்றி பேசுவதற்காக என அரசாங்கம் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவில் மேற்கொண்ட விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் அல்லது 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களின் பிரதிகள் இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>
அக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக மாற்றுவது குறித்து கலந்துரையாடவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்வதாக புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே உண்மையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட ரகசிய உடன்பாடுகள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உண்மையான ஒப்பந்தங்கள் எவை என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் வெளியிடப்படும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243"></link>
            <id>https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய நோய்களுக்கு உள்ளாகும் மக்களின் வயதுப் பிரிவு சுமார் 40 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கண்டி தேசிய வைத்தியசாலையின் இதயநோய் மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கையில் கடந்த காலங்களில் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கே இதய நோய்கள் அதிகம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது 40 வயதுடையவர்கள் மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c6f087-99ac-42a7-b450-a0b64a45dc48/26-6aa1fa39a7310.webp' /></p><p>
</p><p>ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்களாயின், இதய நோய் ஏற்படுவதற்கு முன்னரே வைத்தியர்களால் தகுந்த முடிவுகளுக்கு வர முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஆனால் பெரும்பாலானோர் இதய நோய் தாக்கிய பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>இதய நோய் ஏற்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p> கொழும்பு, குருணாகல், கண்டி, கராப்பிட்டிய, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்: போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877"></link>
            <id>https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877</id>
            <summary type="text">இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர்&nbsp; ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.</p><h2>கவனயீர்ப்பு பேரணி</h2><p>

பருத்தித்துறை நகரில் தபால் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் நகரசபைக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c7381a7-178a-44e2-968f-b633416a0f88/26-6aa1ff4d7e435.webp' /></p><p>
</p><p>
மேலும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்படை முகாம் மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்தும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.</p><p>

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகவுள்ளது.</p><h2>போராட்டத்திற்கு அழைப்பு</h2><p>
</p><p>
பேரணி பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை நடைபெறும். அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக மனு ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f345ec-077d-4526-82e8-0864749af8d6/26-6aa1ff4e6ddfa.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டத்திற்கு என்பிபி தவிர்ந்த பருத்தித்துறை நகரசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜெயகோபி குறிப்பிட்டார்.
</p><p>
எனவே, பருத்தித்துறை மக்களின் பூர்வீக காணிகளை மீட்டெடுக்கும் இந்தப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:41+00:00</updated>
        </entry>
    </feed>
