<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T11:14:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் 80வது சுதந்திர முன்னிட்டு யாழில் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-in-jaffna-of-india-independence-day-1786780996"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-in-jaffna-of-india-independence-day-1786780996</id>
            <summary type="text">இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம்(15.08.2028) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய
தேசியக்கொடி ஏற்றப்பட்டு,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம்(15.08.2028) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய
தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம், கச்சேரி - நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்
தூதுவரின் வாசஸ்தலத்தில் காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத்
தூதர் சாய் முரளி ஏற்றி வைத்துள்ளார்.</p><h2>கொடி ஏற்றம்</h2><p>
</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின்
வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்துள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள்,
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99988bda-8d74-4dfc-acaf-7e9d37f50281/26-6a80308e39d40.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98f49b3-4d27-4b89-8652-fab580937e1e/26-6a80308f1b102.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 இலட்சம் செலவில் பாதை புனரமைப்பு பணி நிறைவு - பொதுமக்கள் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotagala-errington-colony-main-road-reconstruction-1786787658"></link>
            <id>https://tamilwin.com/article/kotagala-errington-colony-main-road-reconstruction-1786787658</id>
            <summary type="text">கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும்
பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் போட்டு புனரமைப்பதற்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும்
பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் போட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும் இந்த பிரதான வீதி, கடந்த பல
வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படாத நிலையில், குன்றும் குழியுமாக
காணப்பட்டு வந்தது.</p><h2>வீதி புனரமைப்பு</h2><p> </p><p>இதனால் இந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், பாடசாலை
மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி
வந்தனர்.</p><p>

குறிப்பாக மழைக்காலங்களில் வீதியில் நீர் தேங்குவதுடன், குழிகள் மேலும்
பெரிதாகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாகவும் மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0630d38-bf3f-497c-8985-37da71bf9d20/26-6a803c6ccbf61.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த
முக்கியமான வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக
விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வீதியை கொங்கிறீட் இட்டு புனரமைக்கும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 15ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி
யாகுல மேரி தலைமையில் நடைபெற்றது.</p><h2>நிரந்தரத் தீர்வு</h2><p>
</p><p>
இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் எரிங்டன் பகுதியில் நேரடியாக வசிக்கும்
சுமார் 300 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், ரொப்கில், எரிங்டன் உள்ளிட்ட அதனை
அண்டிய பல பகுதிகளைச் சேர்ந்த மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களும் இதன் மூலம்
பயனடையவுள்ளனர்.
</p><p>
பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், அவசர மருத்துவ
சேவைகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் அன்றாட
பயணங்களுக்கும் இந்த வீதி புனரமைப்பு பெரும் உதவியாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc39a747-d0c4-41fb-9c35-78250d2af5c9/26-6a803c6da5591.webp' /></p><p>

நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வீதிக்கு நிரந்தரத் தீர்வொன்று
கிடைத்துள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யாகுல மேரி, வட்டார
உறுப்பினர் அமித ஆனந்த, பிரஜாசக்தி தலைவர் சுனில் வீரசிங்க, குடாஓயா வட்டார
பிரஜாசக்தி தலைவர் லோகநாதன், அமைப்பாளர் கிருஸ்ணன் சசிகுமார் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை வினாத்தாள் முறைகேடுகள் விவகாரம்! ஆரம்பமான சிஐடி விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-level-question-paper-incident-cid-investigations-1786788429"></link>
            <id>https://tamilwin.com/article/a-level-question-paper-incident-cid-investigations-1786788429</id>
            <summary type="text">&amp;nbsp;அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
</p><h2>வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டுள்ள விவகாரம்</h2><p>
குறித்த மையத்தில் வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் எந்த வினாத்தாள்களும் கசிந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20a51c8-8b51-4b56-bfcc-53e29ba84475/26-6a8044948bf5e.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், பொலிஸாரும் விசாரணையை நடத்தியுள்ளன. </p><p>

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T10:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் எங்கள் கண்மணிகள் நாடகம் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmaniyil-engal-kanmanigal-drama-1786776840"></link>
            <id>https://tamilwin.com/article/chemmaniyil-engal-kanmanigal-drama-1786776840</id>
            <summary type="text">செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த
தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்
” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த
தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்
” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p>செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதாக இந்த நாடகம் அமைந்துள்ளது.</p><h2>செம்மணியில் எங்கள் கண்மணிகள்</h2><p>

கலைப்புலவர் ஜெயம் ஜெகனின் எழுத்துரு, பாடல் வரிகள் மற்றும்
நெறியாள்கையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடகம், அரங்கத்திற்குள்
மட்டுப்படுத்தப்படாமல் மக்களோடு மக்களாகவும், மாணவர்களிடம் நேரடியாகவும்
கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
</p><p>
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்
மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் மக்களினதும்,
மாணவர்களினதும் பார்வைக்காக நாடக ஆற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/381eafab-6c7e-4416-8ad4-add17d2d4b80/26-6a800f4a38db5.webp' /></p><p>
</p><p>
சுமார் 30 நிமிடங்கள் கொண்ட இந்த நாடகம், செம்மணியில் இடம்பெற்ற கொடூர
சம்பவங்களை மையப்படுத்தி, அன்றைய மக்களின் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கையில்
இருந்து படிப்படியாக இடம்பெற்ற இராணுவ ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும்
மனித உரிமை மீறல்களை காட்சிப்படுத்துகின்றது. </p><p>

பாடசாலை மாணவர்கள் மற்றும்
வீதியில் பயணித்தவர்கள் காணாமலாக்கப்பட்டமை, பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான
பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி
அலைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் வேதனைகள் போன்ற பல்வேறு சம்பவங்கள்
நாடகத்தில் உணர்வு பூர்வமாக எடுத்துக்காட்டப்படுகின்றன.</p><p>
</p><p>
மேலும் செம்மணியை வெறுமனே ஒரு மயானமாக பார்க்க முடியாது என்றும், அது
புதைகுழிகளையும் அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் தாங்கி நிற்கும்
இடம் என்பதையும் வலியுறுத்தும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை நெகிழச்
செய்கின்றன.</p><h2>நீதிக்கான கோரிக்கை</h2><p>
</p><p>
இந்த நாடகம் சிங்கள சகோதரர்களிடமும் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதுடன்
சர்வதேச சமூகத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும் தலையீட்டின் ஊடாக உண்மையும்
நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் நிறைவடைகின்றது.
</p><p>
இதுவரை 40இற்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டுள்ளது.
நாடகத்தை பார்வையிட்ட பலரும் காட்சிகளின் உணர்வு பூர்வமான தன்மையால் கண்ணீர்
மல்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083b408c-8209-42f7-8182-f3618ac42d13/26-6a800f4962fda.webp' /></p><p>
</p><p>
ஜெயம் நாடக கல்லூரியின் ஒழுங்கமைப்பில் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வரும்
இந்த நாடகத்தில் மொத்தமாக 15 நடிகர்கள் பங்கேற்கின்றனர். எழுச்சிப்
பாடலாசிரியர் செல்லக்குட்டி இசையமைத்துள்ளார். 
தபேலா இசையில் ந.நவதர்சன்
பங்களித்துள்ளார்.</p><p>

செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளின் உண்மையையும், அவர்களுக்கான நீதிக்கான
கோரிக்கையையும் அடுத்த தலைமுறைக்கும் உலக சமூகத்திற்கும் கொண்டு செல்லும் ஒரு
கலை வடிவிலான போராட்டக் குரலாகவே “செம்மணியில் எங்கள் கண்மணிகள்” நாடகம்
வடமாகாணம் முழுவதும் தொடர்ந்து பயணித்து வருகின்றது.</p><p>
11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தெருவெளி நாடகமானது செம்மணியில் நீதியின் ஓலம்
நிறுவுபெறும் 17ஆம் திகதி இறுதி நாளில் செம்மணியில் இடம்பெறவுள்ளதுடன் 20 ஆம்
திகதி வரை இந்த நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆண், பெண் கலைஞர்கள் இணைந்து இந்த துணிச்சலாக
நாடகத்தை அரங்கேற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833</id>
            <summary type="text">இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p>இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்த நீடிப்பு காட்சியக விலைகளை கணிசமாக உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அதன்படி, ஒரு சுசுகி வேகன் ஆர் சுமார் 500,000 ரூபா, ஒரு டொயோட்டா ரைஸ் 1 மில்லியன் ரூபா, ஒரு ஹோண்டா வெசல் 1.5 - 2 மில்லியன் ரூபா, ஒரு டொயோட்டா பிராடோ 3 மில்லியன் ரூபா, ஒரு லேண்ட் குரூசர் 5 மில்லியன் ரூபா மற்றும் ஒரு டபுள் கேப் 2 - 2.5 மில்லியன் ரூபா வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>விலை அதிகரிப்பு..&nbsp;</h2><p>அதேநேரம், தற்போது காட்சியகங்களில் உள்ள வாகனங்கள், மே 15இற்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், அவற்றுக்கு கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349a5195-c2ea-4a28-9b06-e3269c347098/26-6a8041b8cdde7.webp' /></p><p>
இருப்பினும், மே 15இற்குப் பிறகு திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

"கூடுதல் கட்டணம் நீட்டிக்கப்படாது என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் பல்வேறு காரணங்களால் அது தொடரப்பட்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, வாகன விலைகளில் மேலும் உயர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்" என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவர், "இதுவரை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் 90 வீத கூடுதல் கட்டணத்திற்கு உட்படாத கடன் கடிதங்களின் கீழ் இருந்தன.&nbsp;</p><p>ஆனால் இப்போது புதிய வரியின் கீழ் வரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:46:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25-க்கு மேல் வெற்றிடங்கள்..! பரீட்சைக்கான தீர்வை நம்பி காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374"></link>
            <id>https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள்
கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விண்ணப்பதாரர்களுக்கான பதில்</h2><p>மாறாக, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பரீட்சாதிகளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96dfef27-c9d0-4694-8bad-546a40dc1367/26-6a80434804db6.webp' /></p><p>


இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம்
கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட
2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை
மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட
சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

25-க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்</h2><p>
கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய
மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன்,
இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். </p><p>

தற்போது வரை கிழக்கு மாகாணத்தில்
மொத்தமாக 25க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம்
செலுத்தி இந்த போட்டிப் பரீட்சையை விரைவில் நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவில் சேகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகளின் தகவல்கள்! கசிந்த இரகசிய குரல் பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884</id>
            <summary type="text">சிறைச்சாலை அதிகாரிகளை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் புதிய மெகசின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை அதிகாரிகளை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த முகமட் அஸ்மான் ஷெரிப்டீன் என்பவரின் நெருங்கிய சகா ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மீட்கப்பட்டுள்ள குரல் பதிவுகள்&nbsp;</h2><p>கடந்த ஆண்டு தெஹிவளை, வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அஸ்மானின் மோட்டார் சைக்கிள் சாரதியாகவும் இவர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c47077a-0508-487f-bdfe-df7a48e41dfb/26-6a7fb35e2c12c.webp' /></p><p> </p><p>
அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் கைப்பேசியைப் பொலிஸார் பரிசோதித்தபோது, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "கொஸ் மல்லி" என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் அவர் பேசிய பல குரல் பதிவுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அந்த உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றிச் சேகரிக்கப்பட்ட விபரங்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இச்சம்பவம் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T10:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்புக்கு அமைச்சர் உடனடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-takes-immediate-action-to-pirates-1786787979"></link>
            <id>https://tamilwin.com/article/minister-takes-immediate-action-to-pirates-1786787979</id>
            <summary type="text">&amp;nbsp;கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை மாவட்ட மீன்வள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>


இதன்போது, ​​மாவட்டத்தின் கடற்றொழிலை மேம்படுத்துவது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் விரிவான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>

 அதில், பங்கேற்ற மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள், தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தொழில்ரீதியான பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.</p><h2>

கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்</h2><p>

 ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அத்தகைய நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்கவும் அமைச்சகம் ஒரு உடனடி மற்றும் நிரந்தரத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/309d966c-713f-458f-883a-4ed539f7ed60/26-6a803cd2093e4.webp' /></p><p> </p><p>

ஒலுவில் துறைமுகத்தை ஒரு முழுமையான மீன்வளத் துறைமுகமாக வகைப்படுத்தவும், துறைமுகத்தில் தேங்கியுள்ள மணலை அகற்றி மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு துறைமுகத்தை மேம்படுத்தவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. </p><p>

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசித்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் உடனடித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் திடீரென விபத்துக்குள்ளான கப்பல்.. மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில்! ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450"></link>
            <id>https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&amp;nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>ஒருவரை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான டோரா கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b> டோரா கப்பல் விபத்து</b></h3><p>கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9819d73f-de27-4990-bed9-b880d246717c/26-6a801c8b90507.webp' /></p><p>அதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Mi-17 மற்றும் பெல் 412 ஆகிய உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-15T09:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364</id>
            <summary type="text">&amp;nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&amp;nbsp;ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&nbsp;ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் (CID) உள்ளன.</p><p>பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு மூன்றாவது முறையாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நடவடிக்கை எடுக்குமாறு CID க்கு நேரடி அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன.</p><h2>புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p> </p><p>இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் பதிநாயக்க ஆகியோர் இத்தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கண்டுபிடிக்கவில்லை என்றது. </p><p>ஆனால், அதைவிடவும் பாரதூரமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலைக்கு முன்னர் கொழும்பின் பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய புள்ளியான கட்டளையிடும் பதவிகளை வகித்த இவர்கள் இருவரும், தாக்குதலை தடுத்திருக்கக்கூடிய கட்டமைப்பு சார்ந்த புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் செயல்பாடற்று இருந்துள்ளனர்.
</p><h2>
</h2><p></p><p>அக்காலத்தில் கொழும்பு - வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தென்னகோனின் நடத்தை குறித்து ஆணைக்குழு அறிக்கையில், கட்டளைச் சங்கிலி எவ்வாறு செயலிழந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. </p><p>சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க என்பவரால் விரிவான புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டு தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. </p><p>உடல் பரிசோதனைகள், வாகனச் சோதனைகள், வாகன நிறுத்துமிடக் கட்டுப்பாடுகள் மற்றும் தேவாலயங்களைச் சுற்றி சாதாரண உடையில் பொலிஸாரைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துதல் ஆகியவை அந்த உத்தரவுகளில் அடங்கும்.</p><h2>உத்தரவுகளை செயல்படுத்திய அதிகாரி</h2><p>
</p><p>இவற்றில் எதுவுமே களமட்டத்தை வந்தடையவில்லை. தென்னகோன் தனது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த உத்தரவுகளை அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அவரது மேசை கோப்பிலேயே பார்வையிடாமல் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் நாடு முழுவதையும் விழிப்புடன் வைத்திருந்த நேரத்தில், தென்னகோனின் உத்தியோகபூர்வ தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957c0f5d-2e71-46ab-a31c-33f4169fe033/26-6a802e574fd75.webp' /></p><p> </p><p>அவர் தனது குடும்பத்தினருடன் கிழக்குக் கடற்கரை ஓய்வு விடுதி ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நேரடி தேசிய பாதுகாப்பு நெருக்கடியின் போது ஒரு கட்டளை அதிகாரி தொடர்பில் இல்லாமல் இருப்பது, விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியபடி, முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமையாகும்.
</p><p>மேலும் அப்போதைய கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த பதிநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டும் பாரதூரமானதே.தாக்குதலுக்கு முன்னர் சில மணிநேரங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு அவருக்கும் தெளிவான எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அவரும் அலட்சியப் போக்கிலே இருந்துள்ளார்.</p><p> அப்போது கொழும்பு - தெற்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பாதுகாப்புத் திட்டத்தை அப்படியே செயல்படுத்தியிருந்தார்.</p><p>அதிகாரிகளைப் பணியில் அமர்த்துதல், தெஹிவளை உட்பட தனது அதிகாரப் எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளை நடத்துதல் மூலம் அவரது பிரிவில் அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டன.&nbsp; &nbsp;</p><h2>ஆணைக்குழுவின் பரிந்துரைகள்</h2><p> </p><p>தாக்குதலினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தடுத்திருக்க முடியும் என்பதற்கு ஆணைக்குழுவிற்கு கிடைத்த தெளிவான சான்று இதுவாகும்.</p><p>
தேசபந்து தென்னகோன் - புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமை, பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை, அல்லது அதிகாரிகளைப் பணியில் அமர்த்தத் தவறியமை - முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றவியல் அலட்சியம் குறித்து வழக்குத் தொடுப்பதற்கான விசாரணையை நடத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லலித் பதிநாயக்கவுக்கும் குறித்த பரிந்துரைகளையே விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da39d5e-3ce2-4ea4-89d1-22cc92f69dc4/26-6a802e569f93b.webp' /></p><p> சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஆதாரங்களின்படி, இரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளை தொடங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் முறையான அறிவுறுத்தல்கள் CIDக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டுள்ளன.</p><p>இரண்டு முறையும் கோப்பு முன்னோக்கி நகரவில்லை.
முன்னாள் CID பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க - தென்னகோன் மற்றும் பதிநாயக்க ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அவரது மேற்பார்வை காலத்தில் விசாரணைகளை தாமதப்படுத்துவதில் அவரது பங்கும் இருந்தது CID ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T09:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய - ரணில் ஆட்சிக் காலங்களில் நடந்த சதி.. அம்பலப்படுத்திய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-political-meetings-government-money-1786779442"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-political-meetings-government-money-1786779442</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவொரு திட்டத்தையும் நிறைவு செய்யாமல் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புத் திட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார மீதான வழக்கு விசாரணையின் போது இது தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சுகீஸ்வர பண்டாரவை நீதிமன்றத்தில்&nbsp; முன்னிலைபடுத்திய போது, மத்திய குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த தகவலை கொழும்பு மேலதிக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><h2>அரசியல் கூட்டங்கள்</h2><p>2022 ஜூலை 14 முதல் 2024 டிசம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சம்பளம் மற்றும் படிகளைப் பெற்று, அந்த நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக&nbsp;சுகீஸ்வர பண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195bb142-870d-4500-8e19-cddba8b2558d/26-6a802e6468e39.webp' /></p><p>சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மேலதிக முன்னேற்ற அறிக்கையையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சமர்ப்பித்துள்ளது.
</p><p>
குறித்த நிதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புத் திட்டப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் நபர்களிடம் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்திற்கு மீண்டும் அறிவிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் நிறைவு பெற்ற ஆவணித் திருவிழா - மடு அன்னையின் ஆசிர்வாதத்திற்காக திரண்ட பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-of-mother-madu-1786783160"></link>
            <id>https://tamilwin.com/article/festival-of-mother-madu-1786783160</id>
            <summary type="text">
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2026) 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;மன்னார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2026) 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. &nbsp;</p><p>மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் இந்த திருப்பலி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோரும் திருப்பலியில் இணைந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
</p><h2>
10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள்</h2><p>
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a6817b-54e6-46d9-9192-a1416b095454/26-6a8029d6ccc9a.webp' /></p><p>
</p><p>
இதேவேளை், நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா நடந்து முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077496bf-a5a0-4405-adb2-d63a6c9cedcc/26-6a8029d798bbf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8270e06-6f7f-45ce-b6ea-cda9b7223ae2/26-6a8029d874774.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T08:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் CCIBயில் ஷிரான் பாசிக்..! சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் &quot;ஷிரான் பாசிக்&quot; என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் "ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நேற்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபருடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நபர்களும் விசாரணைக்காக பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச்சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c09c02-5390-416e-850e-e0e47814360e/26-6a7fcf5b6905f.webp' /></p><p>இந்நிலையில், ஈரான்-அமெரிக்கப் போரின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்க ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபர் மே 26 அன்று டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.</p><p>சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம் / தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lmxEkperTlA" width="640" height="360" class="note-video-clip"></iframe>

</p>]]></content>
            <updated>2026-08-15T08:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்குலான கடற்பரப்பில் விபத்து - 11 பேர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eleven-peoplestricken-vessel-rescued-1786781036"></link>
            <id>https://tamilwin.com/article/eleven-peoplestricken-vessel-rescued-1786781036</id>
            <summary type="text">அங்குலான அருகே கடலில் டோரா என்ற கடற்படைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலான அருகே கடலில் டோரா என்ற கடற்படைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உதவிக்கு சென்ற இலங்கை விமானப்படை</span></p><p>
 கடற்படை விடுத்த அறிவிப்பின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்க இலங்கை விமானப்படையும் உதவி செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/710c2dca-9506-4877-a5af-46118cb900e4/26-6a802171d877d.webp' /></p><p>இதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படையின் MI 17 ரக ஹெலிகாப்டரும், பெல் 412 ரக விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரியான்ஏர் விமான பயணத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு! புலனாய்வாளர்கள் வெளியிட்ட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ntsb-passenger-dragged-out-after-window-breaks-1786770191"></link>
            <id>https://tamilwin.com/article/ntsb-passenger-dragged-out-after-window-breaks-1786770191</id>
            <summary type="text">கடந்த மாதம் ரியான்ஏர் விமானப் பயணத்தின் போது உடைந்த என்ஜின் விசிறி பிளேடில் உலோக சோர்வுக்கான ஆதாரங்களை அமெரிக்க விமான பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த மாதம் ரியான்ஏர் விமானப் பயணத்தின் போது உடைந்த என்ஜின் விசிறி பிளேடில் உலோக சோர்வுக்கான ஆதாரங்களை அமெரிக்க விமான பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>இதன்போது, ​​விமானத்தின் உள்ளே பாகங்கள் சிதறி, ஜன்னலை உடைத்துள்ளன. அந்த ஜன்னலின் திறப்பிற்குள் பயணி ஒருவர் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து விமானத்திற்குள் இருந்த மருத்துவர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.</p><h2>தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்&nbsp;</h2><p>
</p><p>
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தனது பூர்வாங்க அறிக்கையில், உடைந்த பிளேடின் பரப்பில் சுமார் 37 சதவீதம், சோர்வுடன் ஒத்துப்போகும் அம்சங்களை காட்டியதாக கூறியுள்ளது.
</p><p>
புலனாய்வாளர்கள், பிளேடின் அடிப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் சேதத்தைக் கண்டறிந்துள்ளதுடன் தொடர்ச்சியான அழுத்தத்தால் ஏற்பட்ட உயர்-வீச்சு சோர்வின் அறிகுறிகள கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c9f228-345c-41ac-b6c4-d6206270a320/26-6a80025e297c5.webp' /></p><p> </p><p>இந்த செயலிழப்பிற்கான மூல காரணத்தை அந்த அமைப்பு இன்னும் கண்டறியவில்லை.

ஜூலை 10 அன்று நடந்த இந்த சம்பவம், ரியான்ஏரின் துணை நிறுவனமான மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில் நிகழ்ந்துள்ளது. </p><p>இந்த விமானம் கிரீஸின் தெசலோனிகியிலிருந்து ஜெர்மனி - மெம்மிங்கனுக்கு பயணித்துக் கொண்டிருந்தது.

NTSBஇன் தகவலின்படி, விமானம் 16,000 அடி (4,877 மீட்டர்) உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, ​​விமானிகளுக்கு வலது இன்ஜினில் இருந்து அதிகளவான அதிர்வு வந்துள்ளது.</p><h2>உடைந்த இன்ஜினின் துண்டுகள்</h2><p> </p><p>

அதிர்வு வேகமாக அதிகரித்த பிறகு, விமானக் குழுவினர் ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டுள்ளனர். இதனையடுத்து கேபினில் அழுத்தம் குறைந்துள்ளது.</p><p>

இன்ஜினின் துண்டுகள் விமானத்தின் உடற்பகுதியில் மோதி கேபினுக்குள் புகுந்து, 11ஆவது வரிசையில் இருந்த ஜன்னலை உடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d672669f-f789-49a6-a41a-7ce4827a0c3a/26-6a80025d58050.webp' /></p><p>
</p><p>
உதவிக்கான அழைப்புகளுக்கு பதிலளித்த ஒரு விமானப் பணிப்பெண், 11F இருக்கையில் இருந்த 61 வயது பயணி ஒருவர், உடைந்த ஜன்னல் திறப்பில் பாதியளவு சிக்கியிருப்பதைக் கண்டுள்ளார். </p><p>பயணிகள் அந்த நபரை மீண்டும் உள்ளே இழுத்து வந்துள்ளனர்.

அந்தப் பயணிக்கு கழுத்து மற்றும் தோள்பட்டையில் காயங்களும், உராய்வினால் ஏற்பட்ட தீக்காயங்களும் ஏற்பட்டிருந்தன.</p><h2>பறவைகளின் இறகுகள்</h2><p> விமானம் தெசலோனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​விமானத்தில் இருந்த ஒரு மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.</p><p> 

அத்துடன் பயணிகள் சமையலறையில் இருந்த ஒரு உலோகப் பெட்டியை கொண்டு அந்தத் திறப்பை அடைக்க முயன்றனர்.

விசாரணையாளர்கள் இன்ஜினின் பல பகுதிகளில் இறகுகளையும் பறவையின் எச்சங்களையும் கண்டறிந்துள்ளனர், ஆனால் பறவை மோதியதால் பிளேடு உடைந்ததா என்பதை NTSB இன்னும் உறுதி செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd70cd2-572a-457b-b065-682cac24ed39/26-6a8000d6d2289.webp' /></p><p>

பராமரிப்பு பதிவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்த இயந்திரம் நான்கு முறை பறவைகளால் மோதப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவற்றில் இரண்டு மோதல்களுக்குப் பிறகு பறவைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

நவம்பர் 2025 மற்றும் மே 2026 இல் இயந்திரத்தின் விசிறி இறக்கைகளுக்கு மீயொலி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் எந்த சேதமும் கண்டறியப்படவில்லை என்றாலும் NTSB-யின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T08:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwaraeliya-robbery-police-seek-public-assistance-1786778338"></link>
            <id>https://tamilwin.com/article/nuwaraeliya-robbery-police-seek-public-assistance-1786778338</id>
            <summary type="text">நுவரெலியாவில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயற்சித்த சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயற்சித்த சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
</p><p>
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்துத்திருடும் நோக்கில் 14 ஆம் திகதி இரவு விற்பனையகத்திற்கு சந்தேகநபர் வருகை தந்துள்ளார்.</p><h2>&nbsp;பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ள&nbsp;பொலிஸார் </h2><p>
</p><p>
இதன்போது கதவிலிருந்த பூட்டை திறந்து உள்ளே நுழைவதற்கு நீண்ட நேரமாக தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் முயற்சி தோல்வியடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf30a07-8055-4732-8a8d-5b4e109c9823/26-6a803af7802c5.webp' /></p><p>
இதனையடுத்து அவர் அங்கிருந்து சென்றுள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா அமைப்பில் பதிவாகியுள்ளன.</p><p>
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
சிசிரிவி காணொளிப் பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T08:13:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்கள் மீதான இனபடுகொலைக்கு இதுவே சான்று..! மண்ணுக்குள் புதைந்த முன்னாள் ஆட்சியாளர்களின் கோர முகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sakthivel-s-criticism-chemmani-in-jaffna-1786779754"></link>
            <id>https://tamilwin.com/article/sakthivel-s-criticism-chemmani-in-jaffna-1786779754</id>
            <summary type="text">செம்மணி சமூகப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு
எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதுடன்,
தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி சமூகப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு
எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதுடன்,
தமிழர் தாயக மக்களை அரசியல் நீதிக்கான மக்கள் சக்தியாக உருவெடுக்கச்
செய்துள்ளதாக அருட்தந்தை மா. சத்திவேல்
தெரிவித்துள்ளார்.</p><p>

அவரால் இன்று(15.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>500-ஐ தாண்டும் மனித என்புக்கூடுகள்</h2><p>

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
இலங்கையின் சமூக புதைகுழி வரலாற்றில் செம்மணி சமூக புதைகுழி இதுவரை
அகழ்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் அடிப்படையில் தென்னாசியாவின் இரண்டாவது
இடத்தை பிடித்துள்ளது மட்டுமல்ல தமிழர் தாயகத்தில் ஆற்ற முடியாத வேதனை மிகுந்த
அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c3bc814-aab9-4239-998e-3c36b0995134/26-6a801aef6f8a8.webp' /></p><p>
</p><p>
இது இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலையின் அகோரத்தினை சர்வதேசத்துக்கு
உணர்த்தி உள்ளதோடு தமிழர் தாயக மக்களை அரசியல் நீதி கோரிக்கைக்கான மக்கள்
சக்தியாக உருவெடுக்கவும் வழி வகுத்துள்ளது. </p><p> 

இதற்கு முகம் கொடுக்க முடியாத
சிங்கள பௌத்த பேரினவாதம் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையினை மூடி
மறைக்க தமிழர்கள் மீதான தாக்குதல்களை தீவிரபடுத்த தெற்கின் மக்களை அணி
திரட்டுவதாகவே தோன்றுகின்றது. </p><p>இதற்கு தாயக செயலணியின் "நீதியின் ஓலம்" பதிலாக
அமையும் என்றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை என உறுதி செய்து தமிழர்கள் ஏற்கும் நீதியை நிலை நாட்ட அடுத்த கட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.</p><p>

இதுவரை செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள உடலகங்களின் எச்சங்கள்
தனித்தனியாகவும், குவியல்களாகவும், தாய்மார் குழந்தைகளை அரவணைத்தவாறும்,
தலைகள் இன்றியும், உடல் சிதைக்கப்பட்ட நிலை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் 550 அதிகமான
எலும்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து அகழப்படுமாயின் இதன் எண்ணிக்கை
ஆச்சரியத்தை மட்டுமல்ல இலங்கையின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய தமிழருக்கு
எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தையும் உலகிற்கு உணர்த்தி நிற்கும்.</p><h2>தமிழர்கள் மீதான இனபடுகொலை</h2><p>

தமிழர்களைப் பொறுத்தவரையில் படையினர் எந்தெந்த படைத்தளங்களில் இருந்து அகழ
முடியாது எனக் கூறுகின்றனரோ, எந்தெந்த படைத்தளங்களை அகற்ற முடியாது எனக்
கூறுவதோடு அதனை விஸ்தரிப்பதற்கும் முயற்சி எடுக்கின்றனரோ அந்த
படைத்தளங்களிலும்,பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் கட்டப்பட்ட விகாரைகள்
அமைந்துள்ள நிலங்களிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p>
</p><p>
 ஏனெனில்
அங்கெல்லாம் சித்திரவதைக்கு உட்படுத்தி இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்கள்
மர்மமான முறையில் புதைக்கப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் தமிழர்கள்
மத்தியிலே நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10e8dbea-ad14-4d0e-9029-1b76bf0f304f/26-6a801af024e51.webp' /></p><p>
</p><p>
தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அற்ற நிலையில் சமூக
புதைகுழிகளின் அகழ்வு பணியில் இருந்து நீதிமன்ற கட்டளையின்படி எச்சங்களை
பாதுகாத்தல், ஆய்வுகள், தீர்வுகள் என்பன வரை தமிழர்களின் நம்பிக்கையை ஏற்கும்
சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு செயற்பாடுகள் அவசியம் என
வலியுறுத்துகின்றோம்.</p><p>

இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் செம்மணியை மையப்படுத்தி அரசியல் போராட்டம்
கூர்மை அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாதம்
தமிழர்களை குற்றவாளிகளாக்கும் செயற்பாட்டுக்காக அணி திரள்வதையும் காணக்
கூடியதாக உள்ளது. அதற்கு தற்போதைய அரசாங்கமும் துணை நிற்பதாகவே தோன்றுகின்றது.</p><h2>செம்மணி அகழ்வு பணிகள் முன்னெடுப்பு</h2><p>
</p><p>
இனவாதியும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் சிங்களவர்களின் வரிப்பணத்திலேயே
செம்மணி அகழ்வுபணிகள் நடக்கின்றன.</p><p> அவர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவே
செயல்படுகின்றனர்" எனும் தொனியில் பேசி அடிமட்ட சிங்களவர்களை தமிழர்களுக்கு
எதிராக தூண்டுகையில் இன்னும் ஒரு அமைப்பு ஊடக சந்திப்பு ஒன்றில் வடக்கு
கிழக்கில் தமிழர்கள் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட
இடங்களில் பௌத்த அடையாளங்களை எல்லாம் அழிக்கின்றார்கள் குற்றம் சுமத்துவதையும்
காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035d27cd-f7e9-4fef-9f6c-dcaf1aaf9608/26-6a801af0c8e2b.webp' /></p><p>
</p><p>
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை மீட்புக்கான போராட்டம் தமிழர்களால் தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அரசாங்கத்தோடு பல சுற்று பேச்சு
வார்த்தைகள் நடத்தியும் தீர்வின்றி தொடர்கையில் மேய்ச்சல் தரை
சிங்களவர்களுக்கே உரியது என தெற்கை உசுப்பேத்தும் செயல்பாடும் இன்னொரு பக்கம்
நடந்து கொண்டிருக்கின்றது.</p><p>

அடுத்ததாக யுத்த காலத்தில் உயிர் பாதுகாப்பு கருதி கடல் வழியாக தப்பிச் சென்று
இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தோரை இலங்கை அரசாங்கம் எத்தகைய முன் ஆயத்தம்
இன்றி இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கையில் இதற்கு எதிராகவும் குரல்
கொடுக்கும் பேரினவாதிகள் வடக்கிலே சிங்களர்களை குடியேற்ற வேண்டும் என் கோசம்
எழுப்புவதையும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.</p><h2>தையிட்டி விகாரை பாதை அமைப்பு</h2><p>

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையில் பாதை அமைப்பது தொடர்பில் பொலிசார்
கோரிய தடை உத்தரவினை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் நீதிமன்றத்தை
அவமதிக்கும் வகையில் தெற்கில் இயங்கும் தேசிய பாரம்பரிய உரிமைகள் பாதுகாப்பு
மையம் என்ற அமைப்பு கருத்து தெரிவித்த வருவதையும் சிங்கள மக்களை தமிழர்களுக்கு
எதிராக தூண்டுவதையும் சமூக ஊடகங்களில் பார்க்கக் கூடியதாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7a7031-c184-48c0-a978-2f14e860e0de/26-6a801af178e0f.webp' /></p><p>
</p><p>
தெற்கில் இயங்கும் தமிழர் விரோத இனவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய
நாடுகள் மனித உரிமை பேரவையின் கொழும்பு பணிமனையில் மனு ஒன்றை கையளித்தப்
பின்னர் தையிட்டி சட்டவிரோத விகாரை விடயமாகவும், செம்மணி அகழ்வு
சம்பந்தமாகவும் பிழையான தகவல்களை வழங்கி தமிழர்களுக்கு எதிரான கோபத்தினை
சிங்கள மத்தியில் தூண்டி எண்ணெய் ஊற்றுவதை சமூக ஊடங்களிலே அறியக் கூடியதாகவும்
உள்ளது.
</p><p>
எத்தகைய இனவாத செயற்பாடுகளுக்கும் எங்களுடைய அரசாங்கத்தில் இடமில்லை என்று
கூறுகின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த
பேரினவாதிகளுக்கு பயந்து தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான உண்மை நிலையையும்
வெளிபடுத்தாது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையும் பெற்றுக் கொடுக்காது
காலத்தை இழுத்தடிப்பதும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு துணை போகும்
செயலாகவே நாம் கருதுகின்றோம்.</p><p>

தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் ஓரணியில் திரண்டு வடக்கு கிழக்கு
தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இதன் அபாயத்தை
உணர்ந்து தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல்
கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதற்கான நீதிக் குரலே செம்மணியில்
ஒலிக்கின்றது என்பதை உணர்ந்து நீதியின் ஓலத்தில் பங்கு பற்றுவதுடன் தேசியம்
காக்கும் அரசியல் செயற்பாட்டிலும் தொடர்ந்து இயங்க முன்வர வேண்டும் என்று
வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T07:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eath-quake-1786756934"></link>
            <id>https://tamilwin.com/article/eath-quake-1786756934</id>
            <summary type="text">புதிய இணைப்புஇந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.&amp;nbsp;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த சம்பவத்தால் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மூன்றாம் இணைப்பு</span></p><p>இந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>இன்று காலை (15) இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.&nbsp;&nbsp;</p><p>
</p><p>அதன்படி, தேசிய புவியியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. </p><p>
இதனால் பல கட்டடங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 5:58 மணியளவில் புளோரெஸ் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb44d17-3aba-449b-b65d-c5adca40d765/26-6a7fdb372c54a.webp' /></p><p>கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திற்கு வட-வடமேற்கே 68 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.</p><p>முதல் அதிர்வைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டு மேலதிக சேதங்களை உருவாக்கியுள்ளன.
</p><p>கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு நுசா தெங்காரா, தெற்கு சுலாவேசி மற்றும் தென்கிழக்கு சுலாவேசி ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இந்தோனேசியாவின் வானிலை, காலநிலையியல் மற்றும் புவிப்பௌதிகவியல் முகவர் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>பொதுமக்கள் கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>
கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக உயர்ந்த நிலப்பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கம் புளோரெஸ் தீவின் பெரும்பகுதியில் உணரப்பட்டது. கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தின் சிக்கா பகுதியில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. </p><p>
சேதமடைந்த கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ மதிப்பீடுகளை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.</p><p>
இதேவேளை, இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T07:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிடிவாதம் பிடிக்கும் அநுர அரசாங்கம்.. நாமல் விடுத்த பகிரங்க சவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-1786777697"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-1786777697</id>
            <summary type="text">நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>மேலும், "உள்நாட்டுச் சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் மற்றும் கொமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கம் இந்த தீர்மானத்தில் பிடிவாதமாக இருக்கின்றது.&nbsp;</p><p></p><h2>காணாமல் போன நிதி..&nbsp;</h2><p>நீதித்துறை வெற்றிடங்களை அல்லது பிரச்சினைகளை, அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதாலோ அல்லது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாலோ ஒருபோதும் தீர்த்துவிட முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb4736f-9c37-4c58-90e8-de4bee496202/26-6a801488c2b2d.webp' /></p><p>
அத்துடன், சுங்கத்தில் கொள்கலன்கள் காணாமல் போனமை மற்றும் நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதியின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊடுருவல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை.</p><p>அது மாத்திரமன்றி, மகாநாயக்க தேரர்கள் எழுப்பிய கேள்விகளுக்குக் கூட ஜனாதிபதி இன்னும் உரிய பதிலளிக்கவில்லை.&nbsp;</p><p>அரசாங்கம் தனது சுய தேவைகளுக்காகவும் அரசியல் நிலைப்புத்தன்மைக்காகவும் நாட்டின் நீதித்துறை அமைப்பையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T07:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்திற்கு வழிவகுக்கும் தீவிரமான நிலை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
</p><p>
நிலவும் கடும் வெப்பத்தால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்றும், எனவே அதிக தண்ணீர் அருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, ஒரு சராசரி வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><h2>மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தகவல்</h2><p>
</p><p>
மேலும், குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும்போது, ​​பெற்றோர்கள் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd7f89e-e08f-4a29-b3ca-7a3255962d18/26-6a800dce2234a.webp' /></p><p>

நீண்ட காலமாக போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், தண்ணீர் அருந்தாமல் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவது, சுற்றுலா செல்வது போன்றவை வெப்பத்தாக்கம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தீவிரமான நிலை என்றும் கூறியுள்ளார்.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>

எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் எடுத்துச்செல்லுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d82994-edd9-429d-86f2-d331cc5fd952/26-6a800dcec7b13.webp' /></p><p>
</p><p>
 இந்த காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரும் சுத்தமான உணவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>
குழந்தைகளுக்கு இனிப்புப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவங்களைக் குடிக்கக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள்.. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்து எழுப்பப்படும் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-namal-karunaratna-speech-1786774896"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-namal-karunaratna-speech-1786774896</id>
            <summary type="text">நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்களும் இருக்கும்போது, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நீதித்துறை நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்களும் இருக்கும்போது, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நீதித்துறை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதில் என்ன தவறு உள்ளது எனப் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>&nbsp;80 வயதைக் கடந்தவர்கள்..&nbsp;</h2><p>சட்டங்களை இயற்றும் இடமாக நாடாளுமன்றமும், அச்சட்டங்களை நடைமுறைபடுத்தும் இடமாக நீதித்துறையும் திகழ்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00855b70-acae-4ebb-9ee1-2100b61d1922/26-6a800d706e31c.webp' /></p><p> நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு சட்டங்களை உருவாக்குபவர்கள் பலர் இருப்பதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>அவ்வாறிருக்கையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விவகாரத்தை எதற்காக ஒரு பெரிய பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்றும் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:55:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் - பகிரங்கப்படுத்தும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-must-intervene-immediately-1786775672"></link>
            <id>https://tamilwin.com/article/government-must-intervene-immediately-1786775672</id>
            <summary type="text">அங்கவீனமுற்ற படை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து இருவேறு விதமாக நடத்தப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் இந்த குறைப்பாட்டிற்கு அரசாங்கம் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்கவீனமுற்ற படை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து இருவேறு விதமாக நடத்தப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் இந்த குறைப்பாட்டிற்கு அரசாங்கம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>&nbsp;அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் 


பிரேமதாசவின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(15.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கலந்துரையாடலில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இராணுவ வீரர்களுக்கான உரிமை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>நாட்டைக் காப்பாற்றுவதற்காக தமது அவயவங்கள் மற்றும் இன்னுயிரைத் தியாகம் செய்த நமது நாட்டின் வீரம் செறிந்த படை வீரர் சமூகம், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை பாதுகாப்பதில் மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f52fee9-2bea-4d45-aff0-0b839bad0fd9/26-6a800cb2c696f.webp' /></p><p> </p><p>

அவர்களுக்குச் செலுத்தக்கூடிய உச்சக்கட்ட நன்றிக்கடனைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால்,&nbsp; இராணுவ வீரர்களின் பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என்றார்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T06:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500</id>
            <summary type="text">&amp;nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாக மோசடி</h2><p>

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fea9e1-0448-4cc3-b7ad-c6f3aebb45e6/26-6a7ff15f69cf5.webp' /></p><p>
</p><p>
குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்</h2><p>

இவர்கள் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b9c0ad-09e2-42f7-b4ed-5cd708d1b3f1/26-6a7ff1603bb64.webp' /></p><p>
</p><p>
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை நம்பவைக்கின்றமை தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. </p><p>

இதேவேளை, ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp; </p><p>எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

&nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை: உலகறியச் செய்த வைத்தியர்களின் சிறப்பான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/achievement-at-trincomalee-hospital-1786771245"></link>
            <id>https://tamilwin.com/article/achievement-at-trincomalee-hospital-1786771245</id>
            <summary type="text">திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்






திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்






திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சிகிச்சை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 52 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">3 கிலோ 100 கிராம் சிறுநீரகக் கல் மீட்பு</span></p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த நபர் திருகோணமலை பகுதியில் வசித்து வருபவர் என்றும் 
சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட கல் 3 கிலோ 100 கிராம் எடையுடையது என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15477e24-ae55-4f8f-84b0-65c3ec120353/26-6a7fff8f78095.webp' /></p><p>
</p><p>
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>


இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p>

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா..! முப்படையினர் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8000-police-and-tri-forces-kandy-esala-perahera-1786771062"></link>
            <id>https://tamilwin.com/article/8000-police-and-tri-forces-kandy-esala-perahera-1786771062</id>
            <summary type="text">
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக முப்படைகளை சேர்ந்த சுமார் 8,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக முப்படைகளை சேர்ந்த சுமார் 8,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>

அதற்கேற்ப, 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், 1,200 முப்படை உறுப்பினர்கள் மற்றும் 29 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>14 இடங்களில் வீதி தடைகள்&nbsp;</h2><p>
</p><p>
கண்டி எசல பெரஹரா நிகழ்வு ஆகஸ்ட் 18 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca58f50d-8eba-4280-b47b-13c2e9eb646d/26-6a7fffd1d8758.webp' /></p><p>
இதேவேளை, பாதுகாப்பிற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், பெரஹராவின் போது 14 இடங்களில் வீதி தடைகள் அமைக்கப்படும் என்றும்,&nbsp;13 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:57:49+00:00</updated>
        </entry>
    </feed>
