<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-17T08:23:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் தொடருந்து மோதி இளைஞர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-accident-today-1786954237"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-accident-today-1786954237</id>
            <summary type="text">வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர்
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர்
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இன்று(17)
காலை தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>

விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய
பிரியந்தன் என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7c3a7d-4c9b-4830-af80-5638ecddffbb/26-6a82c3fb0d6a5.webp' /></p><p>

குறித்த இளைஞர் தாண்டிக்குளம் புகையிரத பாதையைக் கடக்க முயன்றபோதோ அல்லது
பாதைக்கு அருகில் நின்றபோதோ இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச்
சந்தேகிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வவுனியா பொலிஸார் உடனடியாக விரைந்து உடலைக்
கைப்பற்றியதுடன், விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், இது கவனக்குறைவால்
நடந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T08:22:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து மாயமான பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்! பிரபல தனியார் வங்கி மேலாளர்கள் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-arrests-four-bank-managers-us-dollars-fraud-1786953965"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-arrests-four-bank-managers-us-dollars-fraud-1786953965</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>விசாரணைகளில் வெளியான தகவல்&nbsp;</h2><p> </p><p>

சந்தேகநபர்கள் நான்கு பேரும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c0516f-3bd9-4c63-a3f7-da0904ee4284/26-6a82c3500df52.webp' />&nbsp;</p><p> </p><p>

இலங்கையில் இவ்வாறானதொரு கைது நடவடிக்கை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த மோசடியை நடத்திய முக்கிய சந்தேகநபரால், நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T08:16:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காளி கோயிலை இடித்த ஹிஸ்புல்லா! சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில் குண்டு வெடிப்பு - குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஈரோஸ் அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-secretary-general-prabhakaran-statement-1786946696"></link>
            <id>https://tamilwin.com/article/eros-secretary-general-prabhakaran-statement-1786946696</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள்
நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது, இந்த அரசாங்கம் 20
வருடங்களுக்கு நீடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள்
நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது, இந்த அரசாங்கம் 20
வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது என&nbsp;ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பில் நேற்றைய தினம் (16.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட
போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலஞ்ச ஊழல், கொலை கலாச்சாரம் அற்ற நிர்வாக அலகு
இந்த நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க
முடியாது. இந்த அரசு 20 வருடத்துக்கு நீடிக்கும் என்பது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் கல்முனை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் ஆடை விவகாரத்தில் சுகாதார சுற்றுநிருபங்களின் படியே செயல்பட்டுள்ளார். இதை சில அரசியல்வாதிகள் பூதாகரமாக்கி கலாச்சாரப்
பிரச்சினையாக திசை திருப்பி தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்த முற்சிக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9a9e70b-1f28-4f7b-85d1-902a8e84c014/26-6a82c0be0c308.webp' /></p><p>வைத்தியர் சுகுணன் பதவி விலகக்
கோர முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் யார்?

இதை சில அடிவருடிகள் மற்றும் சிறைக்கு செல்லவுள்ளவர்கள் தங்களை
பாதுகாப்பற்கு இந்த அரசாங்கத்தை கைப்பற்ற இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு
இருக்கின்றனர்.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>எனவே இந்த இருவருக்கும் எந்தத் தகுதியும்
இல்லை. வைத்தியர் சுகுணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும்
ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த கால ஆட்சியாளர்களுடன் சேர்ந்து ஓட்டமாவடியில்
தமிழ் மக்களின் காளி கோயிலை இடித்து மீன் சந்தை, பள்ளிவாசல் கட்டியதுடன், தனது
அதிகாரத்தை வைத்து நீதவானை இடமாற்றம் செய்தமை, ஏறாவூர் ஐயங்கேணியில் சுப்பிரமணியம் சிவானந்தராஜாவிக்கு சொந்தமான தனியார்
காணியான 26 ஏக்கர் காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தி பள்ளிவாசல் அமைத்து
முஸ்லிம் மக்களை குடியேறியதுடன், புனானையில் தமிழர்களின் 500 ஏக்கர் காணியை
கையகப்படுத்தி பல்கலைக்கழகம் அமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515eac19-cba5-456c-b12d-b5db01bd73e2/26-6a82c0bf0128f.webp' /></p><p> </p><p>இந்த மோசடிகள் தொடர்பாக புலனாய்வு
பிரிவினர் விசாரணை செய்து வெளி கொண்டு வரவேண்டும்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை, ஹிஸ்புல்லா
சந்தித்துள்ளார். இருவருக்கும் என்ன தொடர்பு? சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில்
குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸில்
முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. </p><p>எனவே இது தொடர்பாக
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க
வேண்டும்.

ஹிஸ்புல்லா மற்றும் அவரது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கமும்
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஈரோஸ் கட்சி
சட்டத்தின் ஊடாக உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T08:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரகரி ஏரியில் நடந்த விபத்து..! சிறுவர்களின் உயிரைக்காத்த கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/navy-rescues-children-accident-gregory-lake-1786952645"></link>
            <id>https://tamilwin.com/article/navy-rescues-children-accident-gregory-lake-1786952645</id>
            <summary type="text">நுவரெலியா கிரிகரி ஏரியில் ஜெட்ஸ்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 11 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களை இலங்கை கடற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா கிரிகரி ஏரியில் ஜெட்ஸ்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 11 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று (16) கிரிகரி ஏரியில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது.</p><h2>உயிர்காக்கும் பணி</h2><p>
</p><p>
கிரிகரி ஏரியில் உயிர்காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் Rapid Response Rescue and Relief Unit (4RU) பிரிவைச் சேர்ந்த கடற்படையினர், சம்பவத்தை நேரில் கண்டு உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf49f94-7c1c-40bc-8745-0aea2f6b9f71/26-6a82bf557fd15.webp' /></p><p>
</p><p>
இதன்போது, நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இரு சிறுவர்களையும் கடற்படையினர் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மீட்பு நடவடிக்கையின் பின்னர், இரு சிறுவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T08:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இலக்கு! பதிவான புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2026-tax-revenue-target-collected-1786951570"></link>
            <id>https://tamilwin.com/article/2026-tax-revenue-target-collected-1786951570</id>
            <summary type="text">&amp;nbsp;2026 ஆம் ஆண்டிற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் சுமார் 61 சதவீதம் வசூலிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2026 ஆம் ஆண்டிற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் சுமார் 61 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வரி வருவாய் வசூல் சுமார் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட வரி வருவாய் இலக்கினை முழுமையாக அடைய முடியும் என்று திணைக்களம் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.</p><h2>&nbsp;தனிநபர் வருமான வரிக்கோப்புகள்</h2><p>
</p><p>
இதற்கிடையில், வரி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a919707f-84e3-4660-81dc-54442becf2db/26-6a82bc11546b3.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, 1.2 மில்லியன் அல்லது சுமார் 1.2 மில்லியன் தனிநபர் வருமான வரிக்கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த எண்ணிக்கையில், தாமாக முன்வந்து வரி செலுத்தப்பதிவு செய்தவர்கள் மற்றும் கட்டாயப் பதிவு மூலம் பதிவு செய்தவர்கள் ஆகிய இருவரும் அடங்குவர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
130,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது வரி செலுத்த பதிவு செய்துள்ளதாகவும், ஏனையோர் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவிக்கின்றது.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p></p><p>You may Like This..<br><br><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dOP7G_ppj1Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:46:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக இயங்கி வந்த விடுதி முற்றுகை..! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massage-parlor-raided-05-people-arrested-1786950330"></link>
            <id>https://tamilwin.com/article/massage-parlor-raided-05-people-arrested-1786950330</id>
            <summary type="text">மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோதமான விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், அதன் மேலாளர் உட்பட ஐவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோதமான விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், அதன் மேலாளர் உட்பட ஐவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை கடவத்தை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>

கைது செய்யப்பட்ட பெண்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஒருவரிடம் இருந்து 5,000 ரூபாய் கட்டணமாக அறவிட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், சந்தேகநபர்களான பெண்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14734c9-0e66-4fb6-914f-417e423ccc8f/26-6a82b836a0fca.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளிடம் இருந்து 33000 தொன் நெல் கொள்வனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddymarketing-purchases-33-666-metric-tons-paddy-1786949329"></link>
            <id>https://tamilwin.com/article/paddymarketing-purchases-33-666-metric-tons-paddy-1786949329</id>
            <summary type="text">நெல் கொள்வனவுச் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 33,666 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல் கொள்வனவுச் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 33,666 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். </p><p>

இதில் அதிகளவான நெல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். </p><h2>நெல் கொள்வனவு செய்யும் பணிகள்</h2><p>

கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cd6840-6db7-4f7a-97db-38d32bb733c5/26-6a82b447222ba.webp' /></p><p>

பல பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள போதிலும், பொலன்னறுவை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியை பதவியில் இருந்து போக விடமாட்டோம்..! முஜிபுர் ரஹ்மான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mujiber-slams-npp-government-1786950523"></link>
            <id>https://tamilwin.com/article/mujiber-slams-npp-government-1786950523</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருந்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவரை இடையில் போக விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஜனாதிபதி அளித்த வாக்குறுதி</h2><p>
</p><p>எல்லாவற்றையும் விட்டுச் செல்வதாக ஜனாதிபதி அண்மையில் கூறியது வேறு அர்த்தத்தில் ஆகும் எனவும் அவர் பதவியை விட்டு விலகுவதாக அர்த்தப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8bab84-876b-4b48-9fd8-69bbf0c14458/26-6a82b37d6caea.webp' /></p><p>
</p><p>கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்தபோது திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களையே முன்னோக்கி கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.</p><h2>முஜிபுர் ரஹ்மான்</h2><p>
</p><p>சர்வதேச நாணய நிதியம், மேற்குலக நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு இந்த அரசாங்கம் அடிபணிந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78150406-61cf-4563-8d51-12dca56ba3ff/26-6a82b6d4bfb35.webp' /></p><p>
எனவே எங்களால் செய்ய முடியாதவற்றை இவர்களைக் கொண்டேனும் இந்த நாட்டு மக்களுக்கு செய்து கொள்ள வேண்டும் எனவே இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம் அவ்வாறு இவர்களைப் போக விட முடியாது எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-in-north-protest-against-voice-recording-1786949888"></link>
            <id>https://tamilwin.com/article/people-in-north-protest-against-voice-recording-1786949888</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த
அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த
அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(17.08.2026) வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.</p><h2>


சர்ச்சையை தூண்டிய குரல் பதிவு</h2><p>
வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில்,
வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத
கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக
ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f6a8007-8643-40ab-9e4c-230735daa619/26-6a82b23734af4.webp' /></p><p>
</p><p>
குறித்த ஒலிப்பதிவில் , உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து ,
அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி
உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.</p><h2>

நேரில் சந்தித்த எம்.பி</h2><p>

இந்த நிலையில், சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண அபிவிருத்தி
உத்தியோகஸ்தர்கள் , வடமாகாண சபையின் முன்பாக
கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17e5b111-c474-42ba-b7e1-818e879881d6/26-6a82b2381d19a.webp' /></p><p>

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து , அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.
</p><p>
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக
ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f396c7-60ec-49fb-ac36-ee1f99fa172c/26-6a82b238eb95b.webp' /></p><p></p><p></p><h2><b>வவுனியாவில் திரண்ட போராட்டக்காரர்கள்</b></h2><p>

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு எதிராக
வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில்
ஈடுபட்டதுடன், கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இந்த போராட்டமானது, வவுனியா மாவட்டசெயலகம் முன்பாக இன்று (17.08.2026) காலை 
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>


குறித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
கைதடியில் உள்ள வடமாகாண சபை அலுவலகத்தின் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றை
மேற்கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98332a7-5f8a-443d-ad47-ebcf8bc96215/26-6a82b8da5c0c8.webp' /></p><p> 

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் வவுனியாவிலும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><h2>

ஆதங்கத்தை கொட்டிய அதிகாரிகள்</h2><p>
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,
</p><p>"வட மாகாணத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கக் கூடியவர்கள், அபிவிருத்தி
உத்தியோகத்தர்களை மிகவும் தரக்குறைவாக, இழிவான வார்த்தைப் பிரயோகங்களை
பயன்படுத்தி பாரிய களங்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை
செய்திருக்கிறார்கள்.</p><p>

அரச சேவையில் இருந்து கொண்டே அந்த கட்டமைப்பிற்குள் இருக்கின்ற இன்னுமொரு
சேவையினை மலினப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். </p><p>இதற்கு எமது கண்டனத்தை
தெரிவிப்பதுடன் உடனடியாக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்" என்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0928be70-1514-4851-a745-93910e95d975/26-6a82b8db7709b.webp' /></p><p>
</p><p>

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச சேவையில் பதவியை விட பரஸ்பர மரியாதையே
முக்கியம், சேவையில் அவமதிப்பு வேண்டாம், நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா
போன்ற வாசகங்களை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
</p><p>
இதேவேளை, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் மாவட்ட அரச அதிபர் பீ. ஏ. சரத்சந்திரவிடம் கையளித்துள்ளனர்.&nbsp;</p><p><b><i>மேலதிக தகவல் - திலிபன்</i></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிதாக வீடுகளை நிர்மாணிப்போர் அவதானம் - விளம்பர மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-of-online-building-material-scams-1786949016"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-of-online-building-material-scams-1786949016</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்கள் ஊடாக கட்டடப்பொருட்களை விற்பனை செய்வதாகக்கூறி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்கள் ஊடாக கட்டடப்பொருட்களை விற்பனை செய்வதாகக்கூறி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
கூரைத்தகடுகள், சிமெந்து மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களை சந்தை விலையை விட கணிசமாக குறைந்த விலைக்கு தருவதாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.</p><h2>போலியாக பணப்பரிவர்த்தனை&nbsp;</h2><p> 

குறித்த பொருட்களை சந்தேகநபர்கள் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதாக வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள வியாபாரியை தொடர்புகொண்டு, அந்த பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக போலியாக பணப்பரிவர்த்தனை செய்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1beafc29-18a6-45f9-b6a4-fbdc456fac7a/26-6a82b1c29177a.webp' /></p><p>இதனையடுத்து பொருட்கள் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு வந்ததும் சாரதி பணம் கேட்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் அறிவதாகவும் கூறப்படுகின்றது.</p><p>

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. </p><p>

 சமூக வலைத்தளங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது விற்பனையாளர்களின் அடையாளம் மற்றும் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்..! முன்னெடுக்கப்பட்டுள்ள கவனஈர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-protest-today-1786945803"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-protest-today-1786945803</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரத்தினை
பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான
பிரசாரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரத்தினை
பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான
பிரசாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல்
மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை
அவமதிப்பை எதிர்த்து இன்று (17) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை 6 தொழில்
சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக சிற்றூழியர்களின் சங்கத்தினரால்
நடாத்தப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;சிற்றூழியர்களின் உடைவிவகாரம்</h2><p>
</p><p>
அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிவந்துவரும்
நிலையில் சுகாதார அமைச்சினால் 06-08-2026அன்று சிலர் நியமனங்களைப்பெற்று
வைத்தியசாலைக்குவந்த சுகாதார சிற்றூழியர்கள் சிலர் சீருடை தொடர்பில்
ஏற்படுத்திய குழப்பங்களை சில சக்திகள் இனவாத ரீதியில் முன்னெடுக்கும்
செயற்பாடுகளை கண்டித்தும் அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தகோரியும் இதன்போது
கோசங்கள் எழுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05684751-6668-4afb-a23e-e0965a20fadb/26-6a82a266c3240.webp' /></p><p>
</p><p>
இதன்போது சீருடையின்றி வருபவர்களை கடமைக்கு அனுமதிக்காதே,சமூக வலைத்தளங்களே
எங்களைக்கொல்லதே,அனைவருக்கும் பொதுவான சீரூடையை அணிய அனுமதியுங்கள்,சீருடை
தொடர்பான சுற்றுநிரூபத்தினை உடன் அமுல்படுத்து,வைத்தியசாலைக்கு எதிராக
அவதூருகளை பரப்பாதீர்கள் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை, நிர்வாகத்திற்கு கட்டுப்படாத
புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள், சட்டம் கலாச்சார உடையை
அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள்,சகல மதத்தவருக்கும்
சீருடை விலக்கை தாருங்கள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தேசிய ரீதியில்
போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br><br><b><i>மேலதிக தகவல் - குமார்</i></b></p>]]></content>
            <updated>2026-08-17T06:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை அவுஸ்திரேலியாவாக மாற்றுவோம்..! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/handunneththi-vows-transform-sri-lanka-australia-1786947371"></link>
            <id>https://tamilwin.com/article/handunneththi-vows-transform-sri-lanka-australia-1786947371</id>
            <summary type="text">சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் அவுஸ்திரேலியாவைப் போன்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற்றப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் அவுஸ்திரேலியாவைப் போன்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற்றப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
</p><p>
மெல்பேர்னில் நடைபெற்ற Sri Lankan Entrepreneurs’ Night 2026 நிகழ்வில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>சுதந்திரமான வாழ்க்கை</h2><p>
</p><p>
“இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள். நாம் பேசும் மொழி வேறுபட்டாலும், ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். கல்வி, தொழில் அல்லது சுதந்திரமான வாழ்க்கைக்காக நீங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a30210-2091-4573-8468-03aec696952d/26-6a82adf998ef7.webp' /></p><p>
</p><p>
 உங்களுடனும் எங்களுக்கு வாக்களித்த 18 மில்லியன் மக்களுடனும் இணைந்து, குறுகிய காலத்திற்குள் இலங்கையை அவுஸ்திரேலியாவைப் போன்ற நாடாக மாற்றுவோம் என நான் உறுதியளிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எதிர்கால தலைமுறையினர் சுதந்திரமாக கல்வி கற்கவும் வாழவும், அனைவருக்கும் சமமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வகையிலும், மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை உருவாக்குவதே நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொருளாதார சவால்</h2><p>
</p><p>
இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வலுவான உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33175ab9-8e22-40de-a581-5dfdca0531b2/26-6a82adfa59817.webp' /></p><p>

ஊழலற்ற, முதலீட்டுக்கு உகந்த மற்றும் வெளிப்படையான புதிய பொருளாதார சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தொழில் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல இலங்கை தொழில் முனைவோர் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>

அவுஸ்திரேலியா–இலங்கை வர்த்தக மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மெல்பேர்னில் உள்ள The Grandeur மண்டபத்தில் நடைபெற்றது.</p><p> இலங்கையின் மெல்பேர்ன் கொன்சல் ஜெனரல் பிரதீபா சாரம், அவுஸ்திரேலிய பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:46:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211"></link>
            <id>https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக்குநர் டாக்டர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். </p><p>

பாடசாலை விடுமுறை நாட்களில் பட்டம் விடும் விபத்துகள் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போதெல்லாம் நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, குழந்தைகளிடையே பட்டம் விடுவது பிரபலமாகியுள்ளது. 

கவனக்குறைவாக பட்டம் விடுவது கடுமையான காயங்களையும், உயிருக்கே ஆபத்தான காயங்களையும் கூட ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59137caa-b808-4342-aa34-02253749769c/26-6a82aa5e4e3f1.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும்போது கீழே விழ நேரிடலாம். குழுக்களாகப் பட்டம் விடும்போது மோதல்கள் மற்றும் கீழே விழுவதால் விபத்துகள் ஏற்படலாம். 

உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>பட்டத்தின் நூல்கள் மின் கம்பிகளுடன் தொடர்பு கொண்டால், அந்த நூல் வழியாக மின்சாரம் நபருக்குப் பாயக்கூடும். 

இத்தகைய மின் அதிர்ச்சிகள், கைகள், புஜங்கள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c457d2-384a-494c-a8fe-7a2e2d1af23b/26-6a82aa5f06b23.webp' /></p><p>
</p><p>
சில சமயங்களில், சேதமடைந்த உடல் பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

மேலும், மின் கம்பிகள் உள்ள பகுதிகளில் குழந்தைகள் பட்டம் விடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பெரியவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் மின்சாரத்தைக் கடத்தும் நூல்கள் உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374"></link>
            <id>https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9edf12ea-4af4-4199-99c1-ce805f485e53/26-6a82a9ea4b213.webp' /></p><p></p><p><br><br><b><i>you may like this..</i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VfItXARcOtE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கஞ்சிபானி இம்ரான்! அநுர அரசு அம்பலப்படுத்தும் இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816</id>
            <summary type="text">இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது இத்தாலியில் உள்ள அவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன்டர்போல் பிடியாணை&nbsp;</h2><p>
</p><p>
அதற்கமைய, இன்டர்போல் பிடியாணையின் கீழ் தேடப்பட்டுவரும் 58 குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
“கஞ்சிப்பானி இம்ரான் முந்தைய மகிந்தவின் ஆட்சியின் போது அரசியல் பிரமுகர்கள் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் பல நபர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார். </p><p>இது அந்தக்காலகட்டத்தில் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403f5d07-bc81-43bc-b06b-49893e28903f/26-6a82a47b01293.webp' /></p><p>
</p><p>
இன்டர்போல் பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டுவந்த பல முக்கிய பாதாள உலக மற்றும் வர்த்தகக் குற்றவாளிகள் உட்பட 58 ஆபத்தான குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
</p><p>
பெரும் குற்றவியல் வலையமைப்பின் தலைவர்களை அரசாங்கம் தற்போது குறிவைத்து அவற்றை அகற்றி வருகின்றது. </p><p>இந்த முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாரிய முயற்சி தேவைப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>
 </p>]]></content>
            <updated>2026-08-17T06:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 ஆண்டுகளில் 1000இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1178-inmates-have-escaped-from-prisons-1786944922"></link>
            <id>https://tamilwin.com/article/1178-inmates-have-escaped-from-prisons-1786944922</id>
            <summary type="text">கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>அறிக்கையின்படி, 2019இல் 153 கைதிகளும், 2020இல் 110 பேரும், 2021இல் 103 பேரும், 2022இல் 231 பேரும், 2023இல் 207 பேரும், 2024இல் 188 பேரும், 2025இல் 186 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க</h2><p>இன்றுவரை சுமார் 474 கைதிகள் மீண்டும் பிடிபட்டுள்ள நிலையில், 734 பேர் சுதந்திரமாக நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6927a1-3f84-414b-8774-63aee9d65299/26-6a82a483cfc19.webp' /></p><p>சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு உறுதியளித்துள்ளது. </p><p>அதன்படி, 22வது திருத்தம் இயற்றப்பட்ட பிறகு மாகாணங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றம் செயல்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,000 ரூபாவினால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-rate-today-sri-lanka-1786946345"></link>
            <id>https://tamilwin.com/article/gold-rate-today-sri-lanka-1786946345</id>
            <summary type="text">கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
</p><p>
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 351,500.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.</p><h2>தங்க விலை</h2><p> </p><p>இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01fb80c1-9d83-4ad0-a4be-131ff7c926d3/26-6a82a5a1626f0.webp' /></p><p> 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p> 

இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T06:09:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிப்படியாக வழமைக்கு திரும்பும் காலநிலை! நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flocking-to-nuwara-eliya-1786941028"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flocking-to-nuwara-eliya-1786941028</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில்
விழுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில்
விழுந்தமை உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டதுடன், மக்களின் அன்றாட
இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறையும் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருந்த
நிலையில், தற்போது காலநிலை படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதையடுத்து,
நுவரெலியாவை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை
அதிகரித்துள்ளது.</p><h2>நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, டெவோன் மற்றும் சென்கிளயார் நீர்வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக
பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அப்பகுதிகளில்
அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf01730-5f74-4eaf-9a48-b140afb4d4b3/26-6a82a2d491f15.webp' /></p><p>
இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இம்முறை அதிகளவான
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக
சுற்றுலா விடுதி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>நடைபாதை வியாபார நடவடிக்கை</h2><p>
</p><p>
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நீண்ட நாட்களாக மந்தநிலையில்
காணப்பட்ட நடைபாதை வியாபார நடவடிக்கைகளும் மீண்டும் சூடுபிடித்துள்ளதாக
வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b06daf37-7452-4700-ab8c-b1959d589f30/26-6a82a2d57868c.webp' /></p><p>

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்படியாக மீண்டு வரும்
நுவரெலியா மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவது
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கும் புதிய நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctors-leaving-the-country-srilanka-1786942372"></link>
            <id>https://tamilwin.com/article/doctors-leaving-the-country-srilanka-1786942372</id>
            <summary type="text">நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>

வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பில் நேற்றைய தினம் (16.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் நிபுணத்துவ வைத்தியர்களுக்கான வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியலைச் சுகாதார அமைச்சு வெளியிடத் தவறியுள்ளமையால், நிபுணத்துவ வைத்தியர்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425f408d-5573-4a4c-905c-2a94fff2df05/26-6a82a18dc21d1.webp' /></p><p> 

வெளிப்புறத் தலையீடுகள் இன்றி டிஜிட்டல் முறையில் தானாகவே இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வழியிருந்தும், பல்வேறு தரப்பினரின் செல்வாக்கால் இது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
</p><p>
அத்துடன், வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T05:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை பிடிப்பதற்காக நீதியரசர்களின் வயதெல்லை அதிகரிக்கப்படவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fsp-slams-npp-govt-1786944171"></link>
            <id>https://tamilwin.com/article/fsp-slams-npp-govt-1786944171</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வாதம் ஏற்புடையதல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வாதம் ஏற்புடையதல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் எவ்வித வழக்குகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>கள்வர்களை பிடிப்பதற்காக இந்த சட்டத்தை சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக அரசாங்க தரப்பு கூறி வருகின்றது என்ற போதிலும் உண்மையில் ராஜபக்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எவ்வித வழக்குகளும் கிடையாது எனவும் எனவே அரசாங்கத்தின் வாதம் பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406cbfb9-d878-4063-97e4-b12af2695d71/26-6a829aad52398.webp' /></p><p>
</p><p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் காரணிகள் முன்னுக்குப் பின் முரணானவை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>நீதிமன்ற வழக்குகளின் நிலுவை எண்ணிக்கையை குறைப்பதற்காக ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுவதாக கூறும் அரசாங்கத்தின் வாதமும் பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> வழக்கு நிலுவை எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்ப வேண்டுமே தவிர ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தற்பொழுது நீதவான் மற்றும் மேல் நீதிமன்றங்களில் கடமையாற்றும் நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் 80 வீதமானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p>
எனவே வயதெல்லையை நீடிக்க வேண்டிய அவசரமான அவசியம் கிடையாது என சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வரும் நீதவான்&nbsp; நீதிமன்றங்களின் நீதவான்களது ஓய்வு பெறும் வயது தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
குறிப்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பனவற்றில் தலா நான்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>உச்ச நீதிமன்றத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்த போதும் இதுவரையில் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சுமார் 200 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
நீதவான் நீதிமன்றங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட நீதவான்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>எனவே அரசாங்கம் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து பதவி வெற்றிகளை நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மாறாக நீதி அரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிக்க அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்வது பயனற்றது என புபுது ஜாகொட சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T05:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம்! 7 பேர் பலி - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bihar-temple-stampede-death-1786942813"></link>
            <id>https://tamilwin.com/article/bihar-temple-stampede-death-1786942813</id>
            <summary type="text">இந்தியாவின் -&amp;nbsp;பீகாரில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை (17) சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் -&nbsp;பீகாரில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இன்று அதிகாலை (17) சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நிலையில், கோவில் வளாகத்தில் மின்சார கம்பியொன்று அறுந்து விழுந்ததால், மக்கள் அச்சத்தில் ஓடியபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><h2>கூட்ட நெரிசல்&nbsp;</h2><p>இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348064fd-6430-44eb-ba34-38fad31f6f32/26-6a829846e9190.webp' /></p><p>
இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>உயிரிழந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 3 பேரை&nbsp;அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், பீகார் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:13:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தனுக்கு இன்று கொடியேற்றம் - LIVE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-flag-hoisting-1786942777"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-flag-hoisting-1786942777</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று(17.08.2026) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று(17.08.2026) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.</p><p>இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10
மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p>கொடியேற்ற நாளான இன்று முதல் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மீக பக்திப் பெருக்குடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HJtV8sHdAL0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் - விலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1786938878"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1786938878</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் எர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, காப்புறுதி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தற்போதைய செலவுகளை ஆய்வு செய்த பின், அரசாங்கத்திடம் புதிய மானியத்தை கோருவதற்கோ அல்லது எரிபொருள் விலையை திருத்துவது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a682ff-9014-4020-b33f-ae94e7969e0e/26-6a828b3b84ee1.webp' /></p><h2>முழுமையான மீளாய்வு</h2><p> </p><p>

இது தொடர்பான முழுமையான மீளாய்வு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் பெற்றுக் கொள்வது அல்லது நஷ்டத்தை ஈடுசெய்ய விலையை திருத்துவது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது. </p><p>

கடைசியாக ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2faee7-0a9e-403d-8db1-05c4525f1b3c/26-6a828b3c7a51c.webp' /></p><h2>எரிபொருள் விலைகள் அதிகரிப்பு</h2><p> </p><p>

இதேவேளை, மேற்கு ஆசியப் போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். </p><p>

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் அதிகரித்துள்ள காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் பாரிய சவாலாக மாறியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T04:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-prices-of-vehicles-1786937857"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-prices-of-vehicles-1786937857</id>
            <summary type="text">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்படி, வாகனங்களின் விலை ரூ. 1.5 முதல் 5 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வாகனங்களின் விலை அதிகரிக்கும் அபாயம்</h2><p>
</p><p>
1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வாகனங்கள் மீதான கூடுதல் கட்டணத்தை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், டிசம்பர் 31 வரையிலான நீட்டிப்பு வாகனங்களின் விலையை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15dfbb5a-6345-4b47-8c63-c642ee7cc855/26-6a828c2fa90de.webp' />&nbsp; &nbsp;</p><p>
அதன்படி, மே 15 ஆம் திகதிக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்தார்.
</p><p>
வாகன இறக்குமதிக்காக மே 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களில் மேலிருப்பு (overdraft) வசதி சேர்க்கப்படவில்லை என்றும், பல வாகன விற்பனை நிலையங்கள் தற்போது மேற்கூறிய திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருவதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.</p><p>இதற்கமைய, மே 15 ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ஒரு வெகன் ஆர் (Wagon R) வகை காரின் விலை 5 இலட்சமும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் (Toyota RAIZE) காரின் விலை 10 இலட்சத்திலும், வெசல் (Vessel) வகை காரின் விலை 15 முதல் 20 இலட்சம் வரையிலும், ஒரு பிராடோ (Prado) ஜீப்பின் விலை 30 இலட்சத்திலும்,ஒரு லேண்ட் குரூசரின் (Land Cruiser) விலை சுமார் 50 இலட்சத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

அதன்படி, ஒரு யாரிஸ் எக்ஸ் கிரேடு (YARIs X GRADE) காரின் விலை எதிர்காலத்தில் ரூ. 10.5 மில்லியனாகவும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் ஹைப்ரிட் (Toyota RAIZE hybrid) காரின் விலை ரூ. 15.5 மில்லியனாகவும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>வாகன விலைகளை அடிக்கடி மாற்றாமல், பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டால், வாகன விலை ஏற்ற இறக்கங்களை தடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T04:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-and-son-dies-in-an-accident-1786938871"></link>
            <id>https://tamilwin.com/article/father-and-son-dies-in-an-accident-1786938871</id>
            <summary type="text">புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தனது மகனுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. </p><h2><b>

மரணத்திற்கான காரணம்</b></h2><p>மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c56e340-2bc1-4093-8fb7-50499f65ea28/26-6a82874b3e827.webp' /></p><p>இதனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்தவர்கள் துஸ்மந்த ரோஹண என்ற மீனவரும், அவரது மகனான ரவீன் கனிஷ்க என்ற 6 வயது பாடசாலை மாணவனும் என தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த சிறுவன் கந்தக்குளிய குடாவ புனித செபஸ்தியார் பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T04:00:18+00:00</updated>
        </entry>
    </feed>
