<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-31T17:27:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுதந்தர - ஹேமசிறி பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-jayasudantara-prison-hemasiri-fernando-1785515975"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-jayasudantara-prison-hemasiri-fernando-1785515975</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2>மரண தண்டனை&nbsp;</h2><p>ஈஸ்டர் ஞாயிறன்று நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக, இருவருக்கும் கொழும்பு நிரந்தர மூவர் உயர் நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் இன்று (31) மரண தண்டனை விதித்தனர்.</p><p>இந்நிலையில், இருவரும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b64c72-1ef2-4930-bf05-3494fd58ab1d/26-6a6cd52a587ac.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T16:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து எல்லை மோதல்: 20000இற்கும் அதிகமான கம்போடிய மக்கள் வீடு திரும்ப முடியாது துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thai-border-clash-leave-20-000-cambodians-stranded-1785511714"></link>
            <id>https://tamilwin.com/article/thai-border-clash-leave-20-000-cambodians-stranded-1785511714</id>
            <summary type="text">தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற
மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற
மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதாக
ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

கம்போடியாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆய்வு செய்யச் சென்ற ஐ.நா
சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ், அந்நாட்டின் தலைநகர் புனோம் பென்னில்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.</p><p></p><h2>கம்போடிய மக்கள்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த ஆண்டின் இறுதியில் எல்லைப் பகுதியில் சுமார் 6,50,000 மக்கள்
இடம்பெயர்ந்த நிலையில், பெரும்பான்மையானோர் திரும்பினாலும் 20,000க்கும்
அதிகமானோர் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவுவதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ea2e8c-a71f-42eb-a796-de9da36dc7b8/26-6a6cc05dc7557.webp' /></p><p>சில நகரங்கள் மற்றும் கிராமங்களை தாய்லாந்து இராணுவத்தினர் இன்னமும் தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிய அவர், ஆயுத மோதல்களால் இடம்பெயர்ந்த
மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது சர்வதேச சட்டப்படி அவர்களின் உரிமை
என்றும், தாய்லாந்தும் கம்போடியாவும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை
விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

அதேவேளையில், கம்போடிய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லை என்றும்,
இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தப்படியே செயல்படுவதாகவும் தாய்லாந்து தெரிவித்து
வருகிறது.</p><p> எல்லை மூடல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வர்த்தகமும் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கம்போடியாவில் அதிகரித்து வரும் இணைய மோசடி மையங்கள் பெரும் மனித
உரிமைச் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகள்
மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் ஐ.நா பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் மலையேற்றப் பகுதியில் பனிச்சரிவு: 10 பேர் மாயம்! நால்வர் சடலமாக கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/avalanche-in-pakistan-trekking-area-1785511106"></link>
            <id>https://tamilwin.com/article/avalanche-in-pakistan-trekking-area-1785511106</id>
            <summary type="text">பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான &#039;பிராட் பீக்&#039; பகுதியில்
ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான 'பிராட் பீக்' பகுதியில்
ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர்
நிர்மல் புர்ஜா உட்பட 10 வீரர்கள் மாயமாகியுள்ளனர்.</p><p> தீவிர தேடுதல்
வேட்டைக்குத் பிறகு 4 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><h2>பிராட் பீக் மலை</h2><p>
</p><p>
பிரபல நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான "14 Peaks: Nothing Is Impossible" மூலம்
உலகப் புகழ்பெற்ற 43 வயதான நிர்மல் புர்ஜா, உலகின் மிக உயரமான 14
சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் ஏறி உலக சாதனை படைத்தவர் ஆவார்.
</p><p>
நேற்று நண்பகல் வேளையில் 8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக் மலையில் சுமார்
6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு
ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb93e9f-19dd-40c7-916a-02f268cca9d4/26-6a6cbd8741625.webp' /></p><p>மாயமான 10 பேரில் நேபாளம், பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய
நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் அடங்குவர்.</p><p>இதில் 6 பேர் நேபாளத்தைச்
சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தான் இராணுவத்தின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறப்புத் தேடுதல்
குழுவினர் கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பில் தீவிர
மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்களில் இருவரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள
நிலையில், நிர்மல் புர்ஜா உட்பட மாயமான எஞ்சிய 6 வீரர்களை மீட்க பாகிஸ்தான்
அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைவரின் மூத்த ஆலோசகர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-president-s-senior-advisor-resigns-1785510388"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-president-s-senior-advisor-resigns-1785510388</id>
            <summary type="text">&amp;nbsp;FIFA தலைவர் ஜியானி
இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கர்லோஸ் கோர்டேரோ உடனடியாகத் தனது பதவி விலகியுள்ளார்.
FIFA உலகக் கிண்ணம் மற்றும் பிற தொடர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;FIFA தலைவர் ஜியானி
இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கர்லோஸ் கோர்டேரோ உடனடியாகத் தனது பதவி விலகியுள்ளார்.</p><p>
FIFA உலகக் கிண்ணம் மற்றும் பிற தொடர்களை நடத்த 'FIFA Forward Enterprise'
என்ற 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள துணை நிறுவனத்தை உருவாக்கி, அதில் 20
சதவீத பங்கை தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்க FIFA திட்டமிட்டுள்ளது.</p><p></p><h2>FIFA தலைவர் பதவி விலகல்</h2><p>
</p><p>
இந்தத் திட்டத்திற்கு செப்டெம்பர் 19-க்குள் அனுமதி அளிக்கும் ஒவ்வொரு
உறுப்பினர் சங்கத்திற்கும் தலா 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என
இன்ஃபான்டினோ அறிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் அமெரிக்க சாக்கர் சம்மேளன துணைத் தலைவரான கர்லோஸ் கோர்டேரோ, இது
கால்பந்து விளையாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்கும் மோசமான ஒப்பந்தம் எனக்
கூறி பதவி விலகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ecbc1d5-bd40-45d4-ba6b-26feee778619/26-6a6cbb4345783.webp' /></p><p>

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) இத்திட்டத்திற்கு மிகக் கடுமையான
எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

FIFA விளையாட்டின் ஆன்மாவை விற்பனை செய்ய முயல்வதாகக் கூறி, உலகக் கிண்ணம்
உள்ளிட்ட FIFA தொடர்களைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.</p><p>

இதேபோல் வட அமெரிக்க மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்புகளும் (AFC)
இத்திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையிலும், 211 உறுப்பினர் சங்கங்களின்
ஜனநாயகப்பூர்வ வாக்களிப்பு மூலமே முடிவு எடுக்கப்படும் என FIFA
தெரிவித்துள்ளது.</p><p>
மேலும், நாங்கள் கால்பந்தையோ அல்லது உலகக் கிண்ணத்தையோ விற்பனை செய்யவில்லை
என்றும், விளையாட்டின் வணிக வாய்ப்புகளை உலக அளவில் மேம்படுத்தவே முயல்கிறோம்
என்றும் FIFA தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191</id>
            <summary type="text">மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&amp;nbsp;வைத்தியசாலையில் அனுமதி&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&nbsp;</p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec199fe-dd52-44ff-bec7-4c1d7ce45f62/26-6a6cc879f0e7b.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p> 

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-outbreak-intensifies-in-congo-1785509880"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-outbreak-intensifies-in-congo-1785509880</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, உலக
வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலை என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, உலக
வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலை என தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் மீறி
பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p>

தற்போது வரை கொங்கோவில் எபோலா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,532 ஆக
உயர்ந்துள்ளதுடன், 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பாதிப்பு</h2><p>அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட உண்மையான பாதிப்பு
எண்ணிக்கை 4 மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு
எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/699d923d-f204-4c87-8b9d-a87325986083/26-6a6cbed20b5e0.webp' /></p><p>
</p><p>போதுமான நிதி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாமை, வாகனப் பற்றாக்குறை
மற்றும் உள்நாட்டு ஆயுதக் குழுக்களின் மோதல்கள் காரணமாக சில பகுதிகளை அணுக
முடியாமை ஆகியவை நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T15:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லையை மீறி வேறு நாட்டிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்! பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/60-000-migrants-arrive-in-ceuta-spanish-1785510507"></link>
            <id>https://tamilwin.com/article/60-000-migrants-arrive-in-ceuta-spanish-1785510507</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அந்த நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இந்த பயணத்தின் போது குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஸ்பெயினின் மற்றொரு தனித்தீவான மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த வருகை அதிகரித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத நடவடிக்கை</h2><p> </p><p>அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த நிலைமையை ஒரு "தாக்குதல்" என்று விவரித்துள்ளதுடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae81a0f-0381-4d0c-9a54-7b843303f3f9/26-6a6cbd308383a.webp' /></p><p>சட்டவிரோதமாக நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கு மொராக்கோ அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்</p><p>கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக இப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T15:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-overturns-in-algeria-25-killed-in-accident-1785508659"></link>
            <id>https://tamilwin.com/article/bus-overturns-in-algeria-25-killed-in-accident-1785508659</id>
            <summary type="text">அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக&amp;nbsp;அந்த நாட்டின் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக&nbsp;அந்த நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், 44 பேர்
படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக
அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அல்ஜீரியப் பிரதமர் சிஃபி கிரீப்
காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பூமெர்டெஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு
நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.</p><p></p><h2>விசாரணை</h2><p>

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகள் தீவிரமாக
வழங்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4507cad2-0f17-4507-b6b9-3b3b66317fd5/26-6a6cb33515063.webp' /></p><p>
</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-first-sentence-of-the-easter-sunday-attack-1785502005"></link>
            <id>https://tamilwin.com/article/the-first-sentence-of-the-easter-sunday-attack-1785502005</id>
            <summary type="text">இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான&amp;nbsp; நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான&nbsp; நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது. </p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும்&nbsp; கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31.07.2026) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>கடந்த 2019ஆம் ஆண்டு&nbsp; ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட மிக மிலேச்சத்தனமாக கொடூர தாக்குதல் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்.&nbsp;</p><p></p><h2>அரசியல் மாற்றத்திற்கான தாக்குதல்</h2><p>ஆரம்பத்தில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாளடைவில் இது இலங்கையின் ஒரு சாராரின் அரசியல் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற வாதம் வலுப்பெற்றது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தது. அந்த ஆட்சி இடைநடுவே கவிழ்ந்து போக அடுத்ததாக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ddbe68c-cdf5-4e10-8f23-aae5001db469/26-6a6cb44f6d49a.webp' /></p><p>இப்படி வந்த அரசாங்கங்களிடத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மையான&nbsp; சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த ஆட்சிகளின் போது இது தொடர்பான விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்றன.&nbsp;</p><p>எனினும், 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கத்திடமும் இதே கோரிக்கையை மக்கள் முன்வைத்ததோடு, அநுர தரப்பும் இது தொடர்பில் மிகத் தீவிரமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.</p><p>இதன் அடிப்படையில், ஆட்சிக்கு வந்தபின்னர் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp; தொடர்பான விசாரணைகளை அநுர அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியது.&nbsp;&nbsp;</p><p>இதன் தொடர்ச்சியாக,&nbsp; முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மிக முக்கியத் தலைகளின் பெயர்கள் வெளிவந்தன.</p><h2>அம்பலத்தப்படுத்தப்பட்ட சூத்திரதாரிகள்&nbsp;</h2><p> </p><p>இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், அரச புலனாய்வு சேவைகளின் முன்னாள்&nbsp; பணிப்பாளர் சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோர் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது அரசாங்கம்.&nbsp;&nbsp;</p><p>இதில், சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏலவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக,&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a12853-fd70-4b19-9e2e-52ed30f1c7d9/26-6a6cb4501f373.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, ராஜபக்ச விசுவாசிகளான தென்னிலங்கையின் காலாவதியான பல அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும்&nbsp; போராடியும் ஓய்ந்து போயினர்.&nbsp; கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பயணத் தடையின் பின்னரே இந்த எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன.&nbsp;</p><p>எனினும், விசாரணைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அநுர அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்ததுடன், தொடர் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><h2>இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்</h2><p>இப்படியான நிலையில் தான்,&nbsp; உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த 7 வருடங்களின் பின்னர் இன்று அவருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> எனவே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக அடுத்து கைது செய்யப்படப் போகின்ற, தண்டனை விதிக்கப்படப்போகின்ற முக்கிய புள்ளிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.&nbsp;</p><p>அதேசமயம், அண்மையில்,&nbsp; முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தின் பின்னர் ஒரு சில தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c30e685-380a-4785-8a04-7fc7b48ae7ad/26-6a6cb450c9a90.webp' /></p><p> </p><p>குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.&nbsp; </p><p>அந்தக்கூட்டத்தில், சுரேஷ் சலே, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைப்பது தொடர்பில் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><h2>ஆசாத் மௌலானா வெளியிட்ட&nbsp; தகவல்</h2><p>இந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசிகள் என்பதோடு,&nbsp; சுரேஷ் சலே,&nbsp; கோட்டாபய ராஜபக்ச நினைப்பதை மாத்திரம் செய்யக்கூடிய ஒருவராக இருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இடையிலான&nbsp; நெருக்கம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். கோட்டாபய ராஜபக்ச ஒரு கட்டளையிட்டால் அதற்கு மறுப்பேச்சின்றி சுரேஷ் சலே அந்தக் கட்டளையை செய்து முடிப்பார் என சரத் பொன்சேகா&nbsp; குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ca5785-3492-454a-919e-d6a084fb01a3/26-6a6cb4517aa8d.webp' /></p><p>அது மாத்திரமல்ல, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு பிரதானமாக தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வந்தவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்.</p><p>இதன்போது, பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய ஆசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தார்.&nbsp;&nbsp;</p><p>அதனடிப்படையில், ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் ஆசாத் மௌலானாவைத் தேடிச் சென்ற இலங்கை&nbsp; குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரிடம்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டதிலும், ராஜபக்ச குடும்பத்திற்கும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்த பல தகவல்கள் வெளியாகியிருந்தன.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நடுக்கத்தில் ராஜபக்சர்கள்</span></h2><p>இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp; நடந்து முடிந்த பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை,&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,&nbsp; முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும்,&nbsp; கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர்&nbsp; பிள்ளையானை விடுவிப்பது தொடர்பான உத்தரவாதம் ஒன்றை அவரிடம் வழங்கிவிட்டு வந்ததாகவும் ஆசாத் மௌலானாவிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளிவந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e651ce-a27e-48de-afaa-4324fedb2bf9/26-6a6cb4522d03b.webp' /></p><p>இப்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளின் முடிவுகளை எந்தக் கோணத்தில் வைத்துப் பார்த்தாலும் அது ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கின்றது.</p><p> இழந்த ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்தி, மக்களின் உயிரைக் கேடயமாக வைத்து ஆட்சியைப் பிடித்ததாக&nbsp; கோட்டாபய ராஜபக்ச தரப்பு மீது அரசியல்வாதிகளும், மக்களும் என குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்த விசாரணைகளின் தொடர்ச்சி ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கும் நிலையில்,&nbsp; அடுத்து கைது செய்யப்படப் போவது யார்? என்ற கேள்வி எழுகின்றது.&nbsp; பொறுத்திருந்து பார்க்கலாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகள் யார்..?? ராஜபக்சர்கள் தப்புவார்களா..??&nbsp; அடுத்தடுத்த தண்டனைகள் உறுதியாகுமா என்பதை..&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785507297"></link>
            <id>https://tamilwin.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785507297</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பு</h2><p>கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da702191-badf-46d6-8dce-1355440f5c0c/26-6a6caeb1dd789.webp' /></p><p> </p><p>
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக, உளவுத்துறை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. </p><p>
இவ்வழக்கில், உத்தியோகபூர்வ கடமைகளைப் புறக்கணித்து உயிரிழப்புகளுக்குத் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. </p><p>
இதனைத்தொடர்ந்து, அதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்: கண்டுகொள்ளாமல் சென்ற ஊடகப் பிரதி அமைச்சர் - எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalists-protest-in-jaffna-1785506646"></link>
            <id>https://tamilwin.com/article/journalists-protest-in-jaffna-1785506646</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர் சென்று க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. </p><p>


ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
</p><h2>
போராட்டக்காரர்களை கண்டுக் கொள்ளாத பிரதி அமைச்சர்</h2><p>
இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e9e3d7-4de1-4e9a-afdf-44b1ccdb0d14/26-6a6cac095d6aa.webp' /></p><p>
</p><p>
மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி
பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.</p><p>

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7520469-f026-4102-af28-e6b866be9ddf/26-6a6cac0a4b815.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd83f3cd-43f5-4095-9d46-4b3d3b55e5d4/26-6a6cac0b1d5c7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T14:07:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-nadu-manohar-s-murder-history-1785505763"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-nadu-manohar-s-murder-history-1785505763</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஆரையம்பதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (தமிழ்நாடு மனோகர்) படுகொலைக்கு பின்னால் பிள்ளையான் இல்லை என்றும், இதன் பின்னணியில் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - ஆரையம்பதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (தமிழ்நாடு மனோகர்) படுகொலைக்கு பின்னால் பிள்ளையான் இல்லை என்றும், இதன் பின்னணியில் ஒரு கும்பலின் சதி இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாடு மனோகர் ஒரு தமிழ் பற்றாளர் என்பதுடன், காத்தான்குடி இஸ்லாமியர்களுக்கு எதிராக அக்காலப்பகுதியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p> 

இந்நிலையில், அவர் தனது வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் இருந்தபோது, அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த இளைஞர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார். </p><p>

அதன் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>
எனினும், தமிழ்நாடு மனோகரின் படுகொலைக்கு பிள்ளையான் காரணம் இல்லை என்றும், இதன் பின்னணியில் இஸ்லாமியர்களை உள்ளடக்கிய ஒரு கும்பல் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

தமிழ்நாடு மனோகரின் படுகொலை மற்றும் அவர் முன்னெடுத்த சமூகப் பணிகள் தொடர்பான விடயங்களை மேலும் ஆழமாக ஆராய்கிறது “உண்மைகள்” நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UaGkXMiTPO0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் விவகாரம் - கொழும்பில் இளைஞர் மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-for-stabbing-youth-in-kadawatha-1785503333"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-for-stabbing-youth-in-kadawatha-1785503333</id>
            <summary type="text">கொழும்பு - கடவத்தை பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்கள் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கடவத்தை பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்கள் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கொழும்பு - கடவத்தை பகுதியினை சேர்ந்த 17 வயது இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.</p><p></p><h2>பலத்த கத்திக்குத்து காயம்</h2><p>
</p><p>
இதன்போது கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் இருந்த இளைஞரை அப்பகுதியிலிருந்த மக்கள் மீட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99a21bb6-1c36-4fb9-bcaf-1c72c8320a0d/26-6a6ca425f1d69.webp' />&nbsp;</p><p>

குறித்த இளைஞர், தனது வீட்டின் பின்புறம் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கத்திக்குத்து நடத்தியதாக சந்தேகப்படும் இளைஞரையும், அவருடன் வந்த மேலும் இரண்டு இளைஞர்களையும் கடவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இந்த சம்பவம் காதல் விவகாரத்தினால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2be5d68-1174-454f-9fb4-62753308d6bb/26-6a6ca426a68b4.webp' /></p><p>

சந்தேகநபர்களில் ஒரு இளைஞரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T13:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு அன்னையின் ஆவணித் திருவிழா குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-regarding-the-aavani-festival-madhu-1785503109"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-regarding-the-aavani-festival-madhu-1785503109</id>
            <summary type="text">எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா
தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று (31) இடம்பெற்றது.மருதமடு அன்னையின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா
தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று (31) இடம்பெற்றது.</p><p>மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் அதனை தொடர்ந்து 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது. </p><p>இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவிற்கு வருகை தர உள்ள தோடு,எதிர்வரும் மடு அன்னையின் திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை என்பதினாலும் இம்முறை பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளார்கள் என்பதன் அடிப்படையில் அனைத்து வித ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.</p><p></p><h2>உரிய நடவடிக்கை</h2><p> </p><p>குறிப்பாக சுகாதாரம் , மருத்துவம், சாரணர் சேவை,கழிவு அகற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் , மின்சாரம், உணவு மற்றும் கடைகள் , போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p> இதன் போது கலந்து கொண்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு மடு திருத்தலத்தில் 2 ஆவது கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba222cec-fcc2-4a0d-8549-64eece4cc254/26-6a6ca0520098d.webp' /></p><p>
</p><p>
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த
கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து
நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை
எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
மேலும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச சபைகளின் செயலாளர்கள்,தவிசாளர்கள்,திணைக்கள
தலைவர்கள்,கடற்படை ,இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள் ,வைத்தியர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உளவுத்துறை எச்சரிக்கைகளை புறக்கணித்த குற்றம் : 854 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியான பூஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-jayasundara-from-sri-lanka-1785501518"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-jayasundara-from-sri-lanka-1785501518</id>
            <summary type="text">நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பின்படி இன்று(31) மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
</p><p>
1960ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி குருநாகலில் பிறந்த பூஜித், இப்பாகமுவ மத்தியப் பாடசாலை மற்றும் கண்டியில் உள்ள தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற பின்னர், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
</p><p></p><h2>முன்கூட்டிய உளவுத்துறை எச்சரிக்கைகள்</h2><p>
பூஜித்1985ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸ் பரீட்சையில் உதவி பொலிஸ் கண்காணிப்பாளராக (ASP) சேர்ந்து, தனது 35 ஆண்டு காலப் பணியில் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5287e66e-a84e-42da-8038-8951bb135805/26-6a6c9c2f502e3.webp' /></p><p>2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பு சபையால் அவர் 34ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
</p><p>
இலங்கையின் வரலாற்றில் மிக இருண்ட காலகட்டங்களில் ஒன்றான, 2019 ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்புகளின் போது ஜயசுந்தர பொலிஸ் தலைவராகப் பணியாற்றினார். </p><p>

அத்தாக்குதல்களில் 260இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். </p><p>தாக்குதல்கள் குறித்த முன்கூட்டிய உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்த போதிலும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினார்களா என்பது குறித்துப் பின்னர் விசாரணைகள் கவனம் செலுத்தின.
</p><p>
தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜயசுந்தராவை பதவி விலகுமாறு உத்தரவிட்டார். அவர் மறுத்ததால், 2019 ஏப்ரலில் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவருக்குப் பதிலாக பதில் பொலிஸ்மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.</p><h2>854 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்து</h2><p>பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான உளவுத் தகவல்களைப் பகிர்வதில் ஏற்பட்ட தோல்விகளே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று ஜயசுந்தர தொடர்ந்து கூறிவந்தார்.</p><p>

பின்னர் அவர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுடன் கைது செய்யப்பட்டு, தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd831a2a-d6d4-4a94-9e27-348986a120ba/26-6a6c9c3014f61.webp' /></p><p>
 2022இல், அவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அழைக்கப்படாமலேயே, வழக்கறிஞர் மன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும், தலைமை வழக்கறிஞர் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். </p><p>அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம், அந்த விடுவிப்பு சட்டப்படி குறைபாடுடையது என்று தீர்ப்பளித்து, விசாரணையைத் தொடர உத்தரவிட்டது.
</p><p>
2026, ஜூலை 31 அன்று, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு, பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம், பூஜித் ஜயசுந்தர மீது சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் ஏற்பட்ட குற்றவியல் அலட்சியம், கடமையில் இருந்து தவறியது மற்றும் மரணங்களுக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அரசுத் தரப்பு வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கவில்லை என்று கண்டறிந்த ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்.
</p><p>
ஜனவரி 2023இல், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக, அவர்களுக்கு ரூ.75 மில்லியனை தனிப்பட்ட முறையில் இழப்பீடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்டபடி அவர் முழுத் தொகையையும் செலுத்தி முடித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-accumulated-assets-worth-millions-seized-1785500021"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-accumulated-assets-worth-millions-seized-1785500021</id>
            <summary type="text">2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை 3,811 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை 3,811 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (31) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சட்டவிரோத சொத்துக்களை செயலிழக்க செய்ய நடவடிக்கைகள்</h2><p>

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc0dd34-0ce4-4d76-824a-733d7812cd3e/26-6a6c99eac410e.webp' /></p><p>

2025 ஆம் ஆண்டில் 1549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2026 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் 772 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசாங்கத்திடம் இருந்து பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், போதைப்பொருள் தொடர்பான 239,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>சொத்துக்கள் குறித்தும் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட 995 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 378 சந்தேகநபர்களின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/698a95d8-2881-4a30-a140-26dc826c124c/26-6a6c99eb7324d.webp' />&nbsp;</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3287 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கிடையில், கடந்த ஒன்பது மாதங்களில், பாதுகாப்புப்படையினரால் 2253 கிலோ 834 கிராம் ஹெரோயின், 2640 கிலோ 695 கிராம் ஐஸ் மற்றும் 293 கிலோ 732 கிராம் கொக்கைன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 102,116 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T12:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம்! மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினை - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-supply-and-drainage-board-new-projects-1785499580"></link>
            <id>https://tamilwin.com/article/water-supply-and-drainage-board-new-projects-1785499580</id>
            <summary type="text">தற்போதைய எல்நினோ காலநிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள
குடிநீர் பிரச்சினையை சீர்செய்யும் வகையில் புதிய திட்டங்களுக்கு இன்றைய தினம் (31....</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய எல்நினோ காலநிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள
குடிநீர் பிரச்சினையை சீர்செய்யும் வகையில் புதிய திட்டங்களுக்கு இன்றைய தினம் (31.07.2026) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு
அனுமதிகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதிகபட்சமான
தொகை இந்த ஆண்டே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சுமார்
5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி
விடயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.</p><p></p><h2>நிதி ஒதுக்கம்</h2><p> குறிப்பாக, இந்த 2026ஆம்
ஆண்டிற்கு நாம் 10,455 மில்லியன் ரூபா செலவில் 2573 திட்டங்களைச்
செயல்படுத்துகிறோம். சமீப காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்கத்தின் மூலம்
ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதித் தொகை இந்த ஆண்டிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p>அதில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 204
திட்டங்களுக்காக 60 மில்லியன் ரூபாயும், 10 பாலங்களுக்காக 243 மில்லியன்
ரூபாயும், 43 கிராமிய வீதிகளுக்காக 250 மில்லியன் ரூபாயும், பிரஜாசக்தி
திட்டத்தின் 127 பணிகளுக்காக 666 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், கடந்த ஆண்டு வீடற்றவர்களுக்கு 272 வீடுகளைக் கட்டித் தந்த நிலையில்,
இந்த ஆண்டு அதனை 521 ஆக உயர்த்தி, அதற்காக 1,064 மில்லியன் ரூபாயை
ஒதுக்கியுள்ளோம்.
சிறப்புத் திட்டமாக, கிராமப்புறங்களிலுள்ள சிறு தொழில்முனைவோருக்கும்
பெண்களுக்கும் தங்களது வீடுகளிலேயே பண்ணைகளை அமைத்துக் கொள்வதற்காக 19
மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அப்பண்ணைகள் மூலம் கிடைக்கும்
முட்டைகளை, அக்கிராமத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கு
வழங்கி கிராமப்புற பொருளாதாரத்தைச் சீரமைப்பதே இதன் நோக்கமாகும். இதுதவிர,
மாகாண சபையின் கீழ் 608 திட்டங்களுக்காக 2,699 மில்லியன் ரூபாயும், பல்வேறு
அமைச்சுக்கள் மூலம் 1,041 திட்டங்களுக்காக 4,528 மில்லியன் ரூபாயும், 15
வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்காக 804 மில்லியன் ரூபாயும்
ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தின்
தீர்மானத்தின்படி, பிரதான திட்டமாக கிரான் பாலத்தைக் கட்டுதல் உட்பட 5
பாலங்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களப்பில் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதன்
நீர்த்தேக்கப் பகுதியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f96d2d-3fa2-4680-8f90-73eed948ee7e/26-6a6c987f3808e.webp' /></p><h2>குழு நியமனம்</h2><p> </p><p>கடந்த 40
ஆண்டுகளாக இக் களப்பு தூய்மைப்படுத்தப்படாததால், சிறிய மழையின் போதும் பகுதி
வெள்ளத்தில் மூழ்குகிறது. இதற்கான வடிவமைப்புப் பணிகளை விவாதிக்க ஒரு குழுவும்
நியமிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார்
7000 மில்லியன் ரூபா மதிப்பிலான நமது திட்டங்கள் அனைத்தும் 100 வீதம்
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.</p><p> இதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும்
தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நன்றிகள்.
இருப்பினும், வனப்பகுதி எல்லைப் பிரச்சினை மற்றும் அதற்குரிய போதிய வளங்கள்
இல்லாத நிலை இன்னமும் நிலுவையில் உள்ளது. </p><p>மேலும், 96 கிலோமீட்டர் தூரத்திற்கு
யானை வேலி அமைக்கும் பணியை இந்த ஆண்டிற்குள் முடிப்போம் என நம்புகிறோம்.
அதேபோல், மயிலத்தமடு பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலத்திற்காக ஒதுக்கப்பட்ட
1570 ஏக்கர் காணியை உறுதியாகப் பிரித்தளித்து, அதனை மகாவலி அதிகாரசபைக்கு
வழங்கி முறைப்படி அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத ஆக்கிரமிப்பு</h2><p>
</p><p>காணிகளின் உரிமை குறித்த சான்றுகளைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 15 வரை அளிக்கப்பட்ட
அவகாசத்திற்குப் பிறகு யாரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால், சட்டவிரோத
ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்
உரிமைகளை முறைப்படுத்தி வழங்குவது நமது பொறுப்பாகும்.
</p><p>வரவிருக்கும் 'எல் நினோ' சூழலால் மட்டக்களப்பில் குடிநீர் தட்டுப்பாடு
ஏற்படும் ஆபத்து உள்ளது. தற்போதே உன்னிச்சை மற்றும் வாழைச்சேனை சுத்திகரிப்பு
நிலையங்களின் கொள்ளளவு போதாமல் உள்ளது. </p><p>எனவே, கோரளைப்பற்று வடக்கு, வாகனேரி
குளம் மற்றும் போரதீவுப்பற்று பகுதியில் உள்ள ஹெமுத்துருவ குளம் ஆகியவற்றைப்
பயன்படுத்திப் புதிய குடிநீர்த் திட்டங்களைத் தொடங்குவதற்கும், அக் குளங்களில்
இருந்து நீரைப் பெற்று சுத்திகரித்து விநியோகிப்பதற்கும் நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபைக்கு இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T12:49:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mayilathamadu-madhavanai-issue-livestock-farmers-1785501067"></link>
            <id>https://tamilwin.com/article/mayilathamadu-madhavanai-issue-livestock-farmers-1785501067</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கான தீர்வினை விரைவாக பெற்றுக்கொடுக்க அபிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கான தீர்வினை விரைவாக பெற்றுக்கொடுக்க அபிவிருத்தி
மீளாய்வுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>இதன்போது நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு,மாதவனை பிரச்சினை
தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.</p><p>ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மகாவலி ஊடாக கால்நடைபண்ணையாளர்களுக்கு காணி
ஒதுக்கீடுசெய்வது தொடர்பில் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஆராயப்ப்பட்டது.</p><p></p><h2>வழக்கு தாக்கல்&nbsp;</h2><p>அத்துடன்
தற்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய
பயிர்ச்செய்கையாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் அத்துமீறிய பயிர்ச்செய்கையில்
ஈடுபடுவது குறித்து இங்கு பண்ணையாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66377049-0cb0-4eca-ad14-063ad56dedb3/26-6a6c9930b79a2.webp' /></p><p>
இதன்போது அவ்வாறான அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை ஒரு குறித்த
காலப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி கால்நடை பண்ணையாளர்களுக்கு காணிகளை
வழங்குவதற்கு நடவடிக்கைககள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
</p><p>குறிப்பாக வன இலாகாவினர் இந்த விடயங்களில் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும்
பட்டிப்பளை,மயிலத்தமடு போன்ற பகுதிகளில் காடுகளை வெட்டி அத்துமீறிய
பயிர்ச்செய்ககைளை முன்னெடுக்கும்போது அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பது
இல்லையெனவும் சாதாரண நபர்கள் இவ்வாறு செய்தால் வழக்குகளை தாக்கல் செய்வதாகவும்
இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T12:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-sentenced-to-death-1785499072"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-sentenced-to-death-1785499072</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.&amp;nbsp;உயிர்த்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>போதுமான உளவுத் தகவல்கள் இருந்தபோதிலும், தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட இருவர் மீதான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p>பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய விசேட நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.&nbsp;</p><p>அமர்வின் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே மற்றும் நீதிபதி திலகரத்ன பண்டார ஆகியோர், பூஜித் ஜெயசுந்தர மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8d22de-d493-4e43-a522-631c1d6a042e/26-6a6c8fea0a1b0.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>அதே நேரத்தில், குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று நீதிபதி விராஜ் வீரசூரிய குறிப்பிட்டார்.
</p><p>
அமர்வின் பெரும்பான்மை முடிவின்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித மீது&nbsp; சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.
</p><p>பயங்கரவாதத் தாக்குதல் குறித்த போதுமான உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்தபோதிலும், கடமையில் இருந்த பொலிஸ் மா அதிபர்&nbsp; தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது, இதனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்தமை, மற்றும் அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.</p><p>மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகள் தற்போது நடந்து வரும் நிலையில், அவர் தொடர்பான தீர்ப்பு சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணி திடீரென உயிரிழப்பு! பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-who-was-staying-at-the-hotel-died-suddenly-1785497980"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-who-was-staying-at-the-hotel-died-suddenly-1785497980</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வைத்தியர் ஒருவர் திடீரென உடல்நலம் மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வைத்தியர் ஒருவர் திடீரென உடல்நலம் மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சுவிட்சர்லாந்திலிருந்து தனது மனைவி மற்றும் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மகள்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் வெளியிட்ட தகவல்&nbsp;</h2><p>
</p><p>
சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஹல்துமுல்லவின் கலுபஹான பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென உடல்நலம் மோசமடைந்து தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45ba7eb7-7ae7-49c6-9499-92af7658031b/26-6a6c8e6518bf3.webp' />&nbsp;</p><p>

​​சுவிட்சர்லாந்தினை சேர்ந்த சௌத்ரி ராபின் ஹாக் (54) என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>

இவர்கள் நாட்டை சுற்றி பார்ப்பதற்காக ஹல்துமுல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T12:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தமிழர் பகுதிகளில் 615 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-operations-to-free-the-lands-1785498311"></link>
            <id>https://tamilwin.com/article/army-operations-to-free-the-lands-1785498311</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>


முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள
காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(31.07.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த கூட்டமானது, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. </p><h2>

9,480 ஏக்கர் காணிகள் விடுவிப்பு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும்
முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் ஏற்படும் அசாதாரண
மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர்
களப்பணியாற்றுகின்றனர். </p><p> போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4222a576-a76c-491a-a484-2fb0147eae52/26-6a6c8c5279b84.webp' /></p><p> 

எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.</p><p> தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.</p><p></p><p> </p><h2>

3 குடும்பங்களுக்கு சொந்தமான காணி ஆக்கிரமிப்பு</h2><p>
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக்குளத்தில் காணி
விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. </p><p>இராணுவ முகாமின் வேலியை 10
மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான
ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இதனைச் சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43a9710-7200-47d2-844f-70821173ad64/26-6a6c8c539c19f.webp' /></p><p>
</p><p>
திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள்
பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர்
ஏற்றுக்கொண்டார். </p><p>

மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை
விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில்,
கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.</p><h2>

கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுப்பு</h2><p>
கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதியமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியிலுள்ள
காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.
</p><p>
வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில்
கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். வட்டுவாகல் பகுதியில்
பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d746ac-21c6-44da-980c-31d3dbd3edd1/26-6a6c8c5473d00.webp' /></p><p>

கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில்
மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து
தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப்
பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின்
சிரேஷ்ட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள்,
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும்
பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21d3896-c90a-4c81-a5a8-a8e3968f00f3/26-6a6c8c554c3a7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:52:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம்: வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-for-ancestral-lands-seized-army-1785496940"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-for-ancestral-lands-seized-army-1785496940</id>
            <summary type="text">​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால்
அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை
அரசின் ஏவுதலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால்
அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை
அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள்
குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

​</p><p>இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல்
ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத
மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>பூர்வீகக் காணி</h2><p>

​இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று,
அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும்
அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254a3f55-5a19-421d-93a8-55e4fbbee600/26-6a6c8b217dd09.webp' /></p><p>இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி
விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர்
அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான
போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.

​</p><p>எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று
போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும்
என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T11:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817</id>
            <summary type="text">புதிய இணைப்புமாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.</p><p>அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 495 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று(31.07.2026) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது</p><p>இதற்கமைய, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் எரிபொருள் விலைகள் தொடர்பிர் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விலை சூத்திரம்</h2><p>

இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3ba711-9496-4cdf-98ce-6205d4e3706c/26-6a6c15ea15077.webp' /></p><p>
</p><p>இதன்படி, ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 89.69 டொலராகவும், ஒரு பரல் WTI கச்சா எண்ணெய்யின் விலை 84.5 டெலராகவும் பதிவாகியுள்ளது.</p><p>எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OI5qZw5OcBY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-31T11:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமாக இயங்கிய ஒரு பிரிவு தொடர்பில் எவ்வித நீதி நடவடிக்கைகளும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>
இந்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை மற்றும் அச்சுறுத்தல் -தாக்குதல்- பயமுறுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட இராணு அதிகாரிகள் இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையில் சுதந்திரமாக நாட்டில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இவ்வாறான ஒரு பிரிவு இயங்குவதை அரசாங்கம் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. </p><h2>


</h2><p></p><h2>புலனாய்வு பிரிவில் இயங்கிய இரகசிய குழு</h2><p>இந்த குழுவுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது யார் என்பது மட்டுமல்ல அந்த உத்தரவுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்கள் தொடர்ந்தும் தவிர்த்தது ஏன் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.
</p><p>எந்தவொரு மேற்பார்வைக் குழுவிற்கும் பொறுப்புக்கூறக் கடமைப்படாத, பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிக்கு மட்டுமே பொறுப்புக்கூறும் ஒரு பிரிவாக இரகசியமாக இயங்கியது. இந்தப் பிரிவின் நேரடிப் தளபதியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>அரச புலனாய்வுச் சேவையுடன் (SIS) இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகளில், செயற்பாட்டுத் திறமையை விட இரகசியத்தைப் பேணுதல் மற்றும் அரசாங்கத்திற்கு, குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட விசுவாசத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34408139-fe84-4878-9788-14779a862bd6/26-6a6bf5f3eff6b.webp' /></p><p>இந்தப் பிரிவு கொஹுவல இராணுவ முகாமில் நிறுவப்பட்டிருந்தது. இந்த உறுப்பினர்கள் சாதாரண இராணுவத்தினரிடமிருந்து தனித்து வாழ்ந்ததுடன், தனி உணவு மற்றும் வசதிகளைப் பெற்று, சாதாரண இராணுவ ஒழுக்கம் மற்றும் பரிசோதனைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.
</p><p>2009 ஆண்டளவில் போர் இறுதிப் கட்டத்தை எட்டியிருந்ததால், இந்தப் பிரிவு யுத்த களத்திற்காகக் கட்டியெழுப்பப்படவில்லை மாறாக ஏனைய உட்புற அடக்குமுறை நடவடிக்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது.
</p><p>கண்ணுக்குத் தெரியாமல் தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம்.....
ஒரு சாதாரண குற்றக் கும்பலிலிருந்து இந்தப் பிரிவை வேறுபடுத்துவது, ஆயுதமேந்திய உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி கொழும்பு நகரத்திற்குள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிக்கலான ஒருங்கிணைப்பு அமைப்பாகும்.
</p><p>கண்காணிப்பு கெமராக்களில் சிக்காமல் இருக்க போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திய வெள்ளை நிற வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியுள்ளனர்.
</p><h2>ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள்</h2><p>பல ஆண்டுகளாகச் செயற்பட்ட இந்தப் பிரிவின் தாக்குதல்களில் ஒரே மாதிரியான முறைமை காணப்பட்டது. இரவு வேளையில் வெள்ளை வேன்களில் வருதல், T-56 துப்பாக்கிகளைக் காட்டி ஊடகர்களை அச்சுறுத்தல் மற்றும் இறுதியில் பெற்றோல் ஊற்றி ஊடக நிறுவனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி அழித்தல்.
</p><p>2009 ஜனவரி 6 அதிகாலை 2:30 மணிக்கு தெபானமவில் அமைந்துள்ள சிரச TV ஒளிபரப்பு மையத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுவெடிப்பு சம்பவம். </p><p>உளவுத்துறையின் உட்புற தகவல்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் கூற்றுகளின்படி, இது அரசாங்கத்தின் அனுசரணையுடன், அரச நிதியில் இயங்கிய ஒரு இரகசியப் பிரிவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce27932-adc4-4ca4-b51e-a25f61eed5a3/26-6a6bf5f4a36db.webp' /></p><p>2010 ஜூலை 29 சியத TV கங்காராமய 12 பேரடங்கிய கும்பல் வந்து, ஊழியர்களுக்குத் துப்பாக்கிகளைக் காட்டி முழங்காலிடச் செய்து, ஒளிபரப்பு உபகரணங்களுக்குப் பெற்றோல் இட்டு நிறுவனத்தையும் தீயிட்டுக் கொளுத்தியது.
</p><p>2011 ஜனவரி 11 லங்கா ஈ நியூஸ் மாலபே 6 பேரடங்கிய கும்பல் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவின் வளாகத்திற்குள் நுழைந்து, கணினி அமைப்புகள் மற்றும் 7,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஆவணக் காப்பகத்தைத் தீயிட்டு அழித்தது.
</p><h2>படுகொலைகள், கடத்தல்கள்</h2><p>
லசந்த விக்கிரமதுங்க: 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் படுகொலை. பிரகீத் எக்னலிகொட கடத்தல். MBC/MTV செய்தி முகாமையாளர் செவோன் டேனியல் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகப் பிரிவுகளின் தலையீட்டின் பேரில் தப்பினார். </p><p>லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 5 மாத தீவிர கண்காணிப்புக்குப் பிறகு ஐக்கிய இராச்சியத்திற்குத் தப்பிச் சென்றார். இந்த குழுவினர் சாதாரண இராணுவச் சம்பளத்திற்கு மேலதிகமாக பல சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p>இந்தத் தாக்குதல்கள் இருளில் நடந்த ஏதேச்சையான சம்பவங்கள் அல்ல, அரச நிதியில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பதால், குற்றப் புலனாய்வுத் துறை (CID), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. </p><p>ஆனால் கேள்வி என்னவென்றால், இலங்கையின் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்றாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துமா என்பதாகும்.</p><p>&nbsp;&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pPKciR9T474" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T11:28:00+00:00</updated>
        </entry>
    </feed>
