<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T16:38:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல கிரிக்கெட் வீரர் தில்ஷான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/t-m-dilshan-lodges-complaint-1787848353"></link>
            <id>https://tamilwin.com/article/t-m-dilshan-lodges-complaint-1787848353</id>
            <summary type="text">இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி மற்றும் அவதூறு பதிவுகளுக்கு எதிராக நடவடிக்க எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>நாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய சேவையின் மூலம் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தில்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998f8ae5-33b7-462d-be70-8b2cdd0ac6ba/26-6a9066a2935b8.webp' /></p><p>அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் இந்த முறைப்பாட்டைப் அவர் பதிவுசெய்துள்ளார்.</p><p>
தனது பெயரை எதிர்மறைப் பிரசாரங்களிலிருந்து மீட்டெடுக்க நியாயமான மற்றும் விரைவான விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அல்லது விளம்பரத்துக்காகப் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புணர்வுடன் செயல்படுமாறும் சமூக வலைதளப் பயனர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>அவதூறான பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு எதிராகத் தனது வழக்கறிஞர்கள் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், தனக்கு ஏற்பட்ட சேதத்திற்குச் சட்டரீதியான தீர்வுகளைப் பெறவுள்ளதாகவும் தில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T16:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தத்திற்கு ஓரு மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கும் இலங்கை அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-announces-us-1-million-humanitarian-aid-1787847488"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-announces-us-1-million-humanitarian-aid-1787847488</id>
            <summary type="text">வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
நேபாளத்தில் வெள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.</p><p>
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் மற்றும் பெருமளவிலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன. </p><p>
நேபாளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியுதவியை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f13efb0-d75b-4505-b1e9-b52b0bb3e637/26-6a9063462de02.webp' /></p><p>
இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொதுமக்களின் துயரங்கள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்க தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். 
குறிப்பாக, அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் நேபாள மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.</p><p>
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவே இந்த உதவி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>இதேவேளை, இலங்கை வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளி விவகார அமைச்சர் சிசிர் கனாலுடன் தொலைபேசியில் உரையாடி, இலங்கையின் இரங்கலையும், நேபாளத்திற்கான முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருப்பதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்கான வழிகளை இலங்கை தொடர்ந்து ஆராயும் என வெளி விவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T16:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீப் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் மூவர் ஸ்தலத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-killed-three-wheeler-jeep-collision-1787846377"></link>
            <id>https://tamilwin.com/article/three-killed-three-wheeler-jeep-collision-1787846377</id>
            <summary type="text">கெப்பித்திகொல்லாவை அருகே இன்று (27) காலை ஜீப் ரக வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெப்பித்திகொல்லாவை அருகே இன்று (27) காலை ஜீப் ரக வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
கெப்பித்திகொல்லாவை - மதவாச்சி பிரதான வீதியில் கோனமரியாவை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கெப்பித்திகொல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bee5cb4-7bde-4149-bbc6-4fc9bb591b36/26-6a905ffd84214.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தில் பதவிய பகுதியைச் சேர்ந்த பாட்டி, அவரது மகள் மற்றும் 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் துயர விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை இதற்காக தான்! பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaturanga-abesinga-statement-1787844901"></link>
            <id>https://tamilwin.com/article/chaturanga-abesinga-statement-1787844901</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது
பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என&amp;nbsp;அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது
பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என&nbsp;அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தேவைப்பட்டால் புதிய சட்டங்களை இயற்றியாவது அல்லது இருக்கும் சட்டங்களை
மாற்றியமைத்தாவது ஒரு முழுமையான 'முறைமை மாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும்
என்பதற்காகவே வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>வரலாற்று சிறப்புமிக்க ஆணை</h2><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், மக்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆணையை மூன்று பிரதான காரணங்களுக்காக
வழங்கியுள்ளனர்.</p><p> முதலாவதாக, பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிப் பிள்ளைகள்
நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது, இரண்டாவதாக, சட்டம் மற்றும்
நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவது, மூன்றாவதாக, வங்குரோத்தான பொருளாதாரத்தை
மீட்டு முன்னோக்கிச் செல்வது என்பனவாகும்.
</p><p>
நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்வாதிகள், பெரும் தொழில்
உரிமையாளர்கள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகள் உட்பட அனைவரும் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டு, சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை தற்போது
உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a01abe2-e337-45e7-b7b7-044fd32f0850/26-6a905dbe597f6.webp' /></p><h2>இலங்கையின் பொருளாதாரம்</h2><p>
</p><p>
முற்றிலும் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஆசிய
பிராந்தியத்திலேயே மிகவும் வலுவான பொருளாதாரமாக மாற்றப்பட்டுள்ளதுடன்,
அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்த நாடு தற்போது நேர்மறையான நிலைக்கு
மீண்டெழுந்துள்ளது.
</p><p>
போக்குவரத்து, கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதித் துறைகளிலும்
தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருவதால், மக்கள் எதிர்பார்த்த முறைமை
மாற்றத்தின் பெரும்பகுதியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கம் வெற்றிகரமாக
நிறைவேற்றியுள்ளது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை இழந்த கே.வி.தவராசாவுக்கு கொழும்பில் காத்திருந்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140"></link>
            <id>https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140</id>
            <summary type="text">40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

சாதாரண மனிதராக இருந்த என்னை கொழும்பிற்கு அழைத்து வந்து, இவ்வளவு பெரிய சட்டத்தரணியாக மாற்றியவர் என்னுடைய துணைவியார் தான். சுமார் 40 ஆண்டுகளாக எனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்து வந்தார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் எங்களுடன் அலுவலகத்தில் பணியாற்றிய இளம் பெண் சட்டத்தரணி ஒருவரால் 60 கோப்புகள் திருடப்பட்டன. அதேபோன்று, இந்த விடயம் தொடர்பில் விசாரித்தபோது, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் பேசினார்கள்.
</p><p>
அதன் பின்னர், தற்போது என்னுடன் இருப்பவர்களை வைத்துத்தான் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியை தொடர்ந்து வருகின்றேன்.</p><p>

மேலும், மாயமான கோப்புகள் காரணமாக ஏராளமான வழக்குகள் இன்றுவரை நிலுவையில் உள்ளதாகவும் அறிய முடிகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களையும், அனுபவங்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fSE6JfGxUrU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:48:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்! அமைச்சர் பிமல் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-wimal-ratnayake-statement-1787841578"></link>
            <id>https://tamilwin.com/article/minister-wimal-ratnayake-statement-1787841578</id>
            <summary type="text">யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கமே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

யாழில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (26.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>நிதி கிடைத்துமே அபிவிருத்தியில் தாமதம்</h2><p> </p><p>

“காங்கேசன்துறை முகாம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை அபிவிருத்தி செய்ய பின் நிற்கிறது” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை பணத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87efae7a-9bbf-4b70-b4ce-72c9166bf5be/26-6a90555334e71.webp' /></p><h2>அரசாங்கமே முடிவு செய்யும்</h2><p> </p><p>

அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம். ஆனால் எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்.</p><p> 

மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று காட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது. அபிவிருத்தி தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787836321"></link>
            <id>https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787836321</id>
            <summary type="text">சில பகுதிகளில் நாளை (28.08.2026) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் &#039;எச்சரிக்கை&#039; நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில பகுதிகளில் நாளை (28.08.2026) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இலங்கையில் நேற்றைய தினம் (26.08.2026) மிக உயர்ந்த வெப்பநிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெப்பநிலை 36.7°C ஆகப் பதிவாகியுள்ளது.&nbsp;திருகோணமலை மாவட்டத்தில் வெப்பநிலை 36.4°C ஆகவும், பொலன்னறுவையில் 36°C ஆகவும் பதிவானது.

</p><h2>உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்</h2><p>
</p><p>இதற்கிடையில், நாளை முதல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையைப் பொறுத்தவரை சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/889aa84f-b5b3-477f-953d-ff0021c08306/26-6a90417fed620.webp' /></p><p>
</p><p>
நாளை மதியம் 12:11 மணிக்கு, கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர் கோவில் ஆகிய நகரங்களுக்கு நேர் மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மி.மீக்கு மேல் கணிசமான கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-provide-trincomalee-oil-tankers-1787838818"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-provide-trincomalee-oil-tankers-1787838818</id>
            <summary type="text">திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுதொடர்பான தகவல்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமார அறிவித்துள்ளார்.
</p><p>
திருகோணமலை எண்ணெய் தாங்கி மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பராமரிக்கப்படாமல் 29 தாங்கிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் தாங்கிகளை மறுசீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
பெற்றோலிய டேர்மினல் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 61 தாங்களில் 29 தாங்கிகள் முறையாக பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82de097-b749-492f-bd9b-d51017c57ddc/26-6a90421fcac44.webp' /></p><p>
</p><h2>
விண்ணப்பங்கள் கோரல் நடவடிக்கை</h2><p>
இந்த 29 தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன, வெகுவிரைவில் அந்த பணிகள் நிறைவுப்படுத்தப்படும்.
</p><p>
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்புக்கு அமைவாக 2 தாங்கிகள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன. 

3 தாங்கிகள் தற்போது புனரமைக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றன. </p><p>இவை அனைத்தும் வெகுவிரைவில் நிறைவுப்படுத்தப்படும்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இருந்து உச்ச பயனை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் அதற்குரிய ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மறைமாவட்ட முன்னாள் பொதுப்பணிப்பாளர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reverend-father-arulanandan-devadasan-passes-away-1787837916"></link>
            <id>https://tamilwin.com/article/reverend-father-arulanandan-devadasan-passes-away-1787837916</id>
            <summary type="text">மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பொதுப்பணிப்பாளர் அருட்தந்தை அருளானந்தன் தேவதாசன் காலமானார்.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் விகார் ஜெனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பொதுப்பணிப்பாளர் அருட்தந்தை அருளானந்தன் தேவதாசன் காலமானார்.</p><p>

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் விகார் ஜெனரல் ஆகப் பணியாற்றிய மொன்சிஞ்ஞோர் அருளானந்தன் தேவதாசன், இன்று(27.08.2026) அமைதியாக இறைவனடி சேர்ந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
இரங்கல் தெரிவிக்கும் மக்கள்</h2><p>
நீண்டகாலமாக குருத்துவப் பணியாற்றிய அவர், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் நிர்வாகம், ஆன்மிக வழிகாட்டல் மற்றும் சமூகப் பணிகளில் முக்கிய பங்காற்றியவராக நினைவுகூரப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e9c5bd-fe80-4c97-89c3-5a59a590ae0a/26-6a903e432333c.webp' /></p><p> 

மக்களுடன் அன்பாகப் பழகிய ஆன்மிக மேய்ப்பராகவும், கருணைமிக்க தலைவராகவும், நெருக்கடியான காலங்களில் அமைதியாக வழிகாட்டிய ஆலோசகராகவும் அவர் திகழ்ந்தார்.</p><p>

அவரது தன்னலமற்ற இறைபணி, ஆழமான விசுவாசம், எளிமையான அணுகுமுறை மற்றும் சமூகத்திற்குச் செய்த சேவைகள் மட்டக்களப்பு மறைமாவட்ட மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் என இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T13:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் முற்றாக ஸ்தம்பித்துள்ளது இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும் ஏமாந்து இன்று முழு சமூகமும் முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளது என்றார்.
</p><p>
அநுராதபுரத்தில்
நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட
வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>கடுமையான அசௌகரியம்</h2><p>

விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், தொழிலாளிகள், தொழில்முனைவோர்கள், குழந்தைகள், பெண்கள்
உள்ளிட்ட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியத்துக்கும் பீதிக்கும்
ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c048c68-9f87-426a-9a49-e8b48e2dbe66/26-6a9034459e75e.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரகாரம் முப்பது நாள்கள்
ஒரு நபர் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதுமானதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் இதுபோன்ற பொய்யான தரவுகளை அடிப்படையாகக் கொண்டே
அமைந்துள்ளன.</p><h2>நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் நெல் ஒரு கிலோகிராமிற்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக்
கூறிவிட்டு, தற்போது 120 ரூபாவே வழங்கப்படுகின்றது. ஆனால், நெல் ஒரு கிலோகிராமிற்கு உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே நாடாளுமன்றத்தில்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb38665e-b256-4a3c-9124-9eb0ad081fd6/26-6a9034468a5bb.webp' /></p><p>
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும்
விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக கார்
வழங்குதல் போன்ற எவைகளுமே இதுவரை அரசால் நிறைவேற்றப்படவில்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9111f859-6486-4306-ae70-70e8a01b0d61/26-6a90344764d82.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ecde4d-1ee8-40c6-b8d5-77f663665fc8/26-6a9034483f76a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-devanandha-statement-about-disappeared-1787834164"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-devanandha-statement-about-disappeared-1787834164</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும்
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈழ
மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும்
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
காணாமல்போன உறவுகளின் வலியையும் வேதனையையும் உணர்ந்து அனைவரும் பொறுப்புடன்
செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முகம் கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தமக்கு
மிகுந்த வேதனையளிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><h2>எதிர்பார்ப்புகள் சுமக்கிறோம்</h2><p>

காணாமல்போனவர்களின் உறவுகள் நீண்டகாலமாகத் தங்களது அன்பானவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை அறிய முடியாமல், பல்வேறு இன்னல்களையும் எதிர்பார்ப்புகளையும்
சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றமையை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c3c6a9c-6a9a-441d-96ae-d15b06fbbbac/26-6a902f3690e33.webp' /></p><p>

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாக அடையாளம்
கண்டு, எந்தவித பாரபட்சமுமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே
தமது உறுதியான நிலைப்பாடு என்றார்.</p><p>

தாமும் காணாமல்போனவர்களின் உறவுகளைப் போன்றே வலிகளை உணர்ந்தவர் என்ற
அடிப்படையில், அவர்களின் உணர்வுகளையும் வேதனைகளையும் முழுமையாகப்
புரிந்துகொண்டு, உரிய தரப்பினர் அவர்களுக்கு நீதி வழங்க முன்வர வேண்டும்
என்றும் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் - உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549"></link>
            <id>https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549</id>
            <summary type="text">வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர்,
தனது மனைவிக்கு 1000 ரூபாய் பெறுமதியான வெள்ளையாகும் முகப்பூச்சு ஒன்றை வாங்கி
கொடுத்துள்ளார். 

எனினும் மனைவி அதனை பூசவில்லை. </p><p>இதனால் கோபமுற்ற கணவர்
மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.</p><h2>

9 நாட்கள் உயிருடன் இருந்த குடும்பஸ்தர்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தம்பி முறையானவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியை பறிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ மூட்டப்பட்டு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bde6eb-d0e1-4c96-a5cd-1f9eee5c9857/26-6a8ff344f1739.webp' /></p><p> 

இதன்போது விரைந்து செயற்பட்ட அவருடைய உறவினர்கள், இளைஞரை மீட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் 9 நாட்களின்
பின் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yHt2Ja-4HYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T12:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-harshana-nanayakkara-s-promise-1787830787"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-harshana-nanayakkara-s-promise-1787830787</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில்
அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக
இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில்
அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக
இரத்து செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பயங்கரவாதத் தடைச் சட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில், கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்
சட்டம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85288d0-4751-43d6-8ef6-a04009381e44/26-6a902a3a67f0b.webp' /></p><p> </p><p>நாட்டின் வரலாற்று ரீதியான பல
முரண்பாடுகளுக்கு இந்த சட்டமே பிரதான காரணியாக அமைந்துள்ளது.

இதன் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான குறைபாடுகள் தேசிய மற்றும் சர்வதேச
மட்டங்களில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>

ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச்
செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, தேசிய மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சரவை அங்கீகாரம்</h2><p> இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழுவின் முதனிலைச்
சட்ட வரைவின் அடிப்படையில், 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்'
எனும் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபர்
அனுமதி அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037e3d63-89b9-4193-a116-d50429c9c037/26-6a902a3b3b177.webp' /></p><p> </p><p>வெகுவிரைவில் இது வர்த்தமானி அறிவித்தலில்
பிரசுரிக்கப்பட்டு, முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும்.
</p><p>
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும்
பூகோள பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கருத்தில்கொண்டு, புதிய சட்டத்தை
உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பினரும் வழங்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிரையை தாக்கிய இளைஞர் அதிரடி கைது - குதிரையேற்றக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-for-attacking-horse-1787832927"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-for-attacking-horse-1787832927</id>
            <summary type="text">நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே ஒரு குதிரைக்குட்டியைத் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் உள்ள கிரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே ஒரு குதிரைக்குட்டியைத் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே குதிரைச் சவாரிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குதிரைக்குட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
</p><p>
இந்த காணொளி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>
இதற்கமைய, குதிரையின் மீது தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது இளைஞர் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

குதிரையை தாக்கிய இளைஞர் கைது</h2><p>

 அவர் நுவரெலியாவில் உள்ள ஸ்திரபெட்டா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இந்த மாதம் 28ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09dba731-470c-4a51-a907-34ccf6b06018/26-6a902aff31177.webp' /></p><p>
</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக கிரிகோரி ஏரிக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் துறைக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகள் மீது எந்தவிதமான கொடுமையும் இழைக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான குதிரையேற்றம் போன்ற செயல்பாடுகள் இலங்கையின் சுற்றுலா ஈர்ப்பின் ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், விலங்குகள் மீதான கொடுமைச் சம்பவங்கள் இலங்கையின் சுற்றுலாப் பிம்பத்தையும் சேதப்படுத்தும் என்று குறிப்பிடுகின்றனர்.
</p><h2>
குதிரையேற்றக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், கிரிகோரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில், பரிந்துரைக்கப்பட்ட உரிமங்களின் கீழ் குதிரையேற்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள குதிரையேற்றக்காரர்களும் இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/084d42fd-72db-49c4-8dc1-f8767caf8ec7/26-6a902b001bbaf.webp' /></p><p>

சட்டப்பூர்வமாக குதிரையேற்ற சேவையை இயக்குவதன் மூலம் தாங்கள் சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பதாகவும், ஒருவர் விலங்கை வன்முறையாகத் தாக்கியதன் காரணமாக அனைத்து குதிரையேற்றக்காரர்களும் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவது நியாயமற்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
</p><p>
உரிமம் பெற்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து குதிரையேற்றக்காரர்களுக்கும் விலங்குகளின் ஆரோக்கியம், உணவு, ஓய்வு நேரங்கள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான தெளிவான தரநிலைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்துடன், நேற்று(26.08.2026) நாட்டைத் தாக்கிய திடீர் வெள்ளத்தின் பின்னர், நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
</p><p>
காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீன நாட்டவர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

இதற்கிடையில், திபெத்தில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் புவியியல் இருப்பிடம் காரணமாக மீட்புப் பணிகள் சிக்கலாகியுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>அபாயம் இருப்பதாக</h2><p>
காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0078d0ef-4ae2-45b3-bb6a-023b71c2141f/26-6a900eb12e96e.webp' /></p><p>
இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநரான பசந்த ராஜ், இன்று அல்லது நாளை "இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள்" ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>அதிக மழைப்பொழிவு இல்லை, ஆனால் மண்சரிவு ஏற்படக்கூடும். அவர்கள் இமயமலை ஆபத்துக்களைக் கண்காணித்து வருவதாகவும், இங்கு காலநிலை மாற்றம் உண்மையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gh9SC8_v0ms" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T12:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஹரால்ட்டின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு - அவசரமாக நாடு திரும்பிய மதத்தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672</id>
            <summary type="text">நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று(2...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று(27.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் ஹரால்ட், 1991 ஆம் ஆண்டு முதல்
நோர்வேயின் தலைவராக கடமையாற்றி வருகிறார்.
</p><p>
மன்னரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இளவரசர் ஹாகோன் மற்றும் அரசி சோன்யா
ஆகியோர் தமது அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
பதவியை துறக்க மறுப்பு</h2><p>
மன்னர் சிகிச்சை பெற்று வரும் ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அரச குடும்ப
உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் பதற்றமான சூழல்
நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5c004c-2026-45ce-b880-9a740b6eec08/26-6a9025d3c05a3.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமை காரணமாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே தனது ஜெர்மனிக்கான
பயணத்தை இரத்துச் செய்துள்ளதுடன், மன்னருக்கும் அரச குடும்பத்தினருக்கும்
ஒட்டுமொத்த தேசத்தினதும் பிரார்த்தனைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நோர்வே நாடாளுமன்ற சபாநாயகர் தனது ஐஸ்லாந்து பயணத்தை பாதியிலேயே
கைவிட்டு நாடு திரும்பியுள்ளதுடன், ரோம் நகருக்கு விஜயம் செய்திருந்த நோர்வே
மதத்தலைவர்களும் அவசரமாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
</p><p>
தனது வயது முதிர்வு காரணமாக உத்தியோகபூர்வ செயற்பாடுகளை குறைத்துக்கொண்ட
போதிலும், நாட்டின் மீதான தனது உறுதிமொழி ஆயுட்காலம் வரை நீடிக்கும் எனக் கூறி
மன்னர் ஹரால்ட் தனது பதவியை துறக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியாவுக்கு படையெடுக்கும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/domestic-tourists-to-nuwara-eliya-1787831063"></link>
            <id>https://tamilwin.com/article/domestic-tourists-to-nuwara-eliya-1787831063</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு, நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில்
நுவரெலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு, நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில்
நுவரெலியாவை நோக்கி வருகை தருகின்றனர்.</p><p>

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்
பரீட்சையின் பல பாடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாத இறுதியில் கிடைத்துள்ள
நீண்ட விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக பெருமளவானோர் சுற்றுலா
பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.</p><p>

குறிப்பாக நேற்றும் இன்றும்(27) நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தந்த உள்நாட்டு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் நுவரெலியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான டெவோன் மற்றும்
சென்கிளையார் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில்
திரண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8423151-859f-49e5-9853-76b1d9437bde/26-6a9023721488c.webp' /></p><p>
</p><p>
நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசிப்பதற்கும், இயற்கை எழிலை கண்டு மகிழ்வதற்கும்
வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால், அப்பகுதிகளில் உள்ள பார்வையாளர் மையங்கள்
மற்றும் நடைபாதைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.
</p><h2>
சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்</h2><p>
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால்,
பிரதான வீதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது
வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.</p><p>

நுவரெலியாவின் குளிர்ச்சியான காலநிலை, இயற்கை எழில் மற்றும் நீர்வீழ்ச்சிகளை
பார்வையிடும் ஆர்வம் காரணமாக, இந்த விடுமுறைக் காலத்தில் மேலும் அதிகளவான
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16e975de-d3a4-4c30-9fd1-681d978fd199/26-6a9023731b6bb.webp' /></p><p>

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நுவரெலியாவைச் சூழவுள்ள
பகுதிகளில் சிறு வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன.
</p><p>
குறிப்பாக நடைபாதை வியாபாரிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள்
மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை விற்பனை செய்து
வருகின்றனர்.

இதனால், நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்திருந்த சிறு
வியாபாரிகளுக்கும் இந்த விடுமுறைக் காலம் ஓரளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும்
வாய்ப்பாக அமைந்துள்ளது.
</p><h2>

களைகட்டும் நுவரெலியா</h2><p>
இதேவேளை, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், சுற்றுலாத் தலங்களில்
சுகாதாரம், போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய
முறையில் பேண வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b39c48-2c5f-4caf-8eb5-972b8779a54e/26-6a902373e6232.webp' /></p><p>
</p><p>
மொத்தத்தில், பாடசாலை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு
நுவரெலியா தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டியுள்ளது.
</p><p>
இயற்கையின் அழகை ரசிப்பதற்காக நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் இந்த
சுற்றுலாப் பயணிகளின் வருகையால், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சிறு
வியாபாரிகளுக்கும் புத்துயிர் கிடைத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள் - விவசாயிகள் விடுத்துள்ள அவசரக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crops-wilt-due-to-lack-of-water-1787830474"></link>
            <id>https://tamilwin.com/article/crops-wilt-due-to-lack-of-water-1787830474</id>
            <summary type="text">அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுகஸ்துகிலிய ஈத்துள் வெட்டுனுவேவ
பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, விவசாய நிலங்கள்
அனைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுகஸ்துகிலிய ஈத்துள் வெட்டுனுவேவ
பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, விவசாய நிலங்கள்
அனைத்தும் நீரின்றிக் காய்ந்து விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்த கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும்
நிலையில், 400 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

தற்போதைய சிறுபோகச் சாகுபடி காலத்தில் பயிரிடப்பட்ட
நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் வந்த நிலையில், குளங்களில் போதுமான நீர்
இல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. </p><h2>

பயிர் கருகும் நிலை</h2><p>
இந்த நிலை தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், </p><p> 

"நாங்கள் மிகவும் நம்பி இந்தச் சிறுபோக வேளாண்மையை மேற்கொண்டோம். தற்போது
பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்குத் தயாராகும் நிலையில் நீர் இல்லாமல் கருகி
வருகின்றன. 

எமது பகுதிக்கு அருகில் சுமார் 9 குளங்கள் உள்ளன. அதிகாரிகளும்
சம்பந்தப்பட்ட நிருவாகமும் அக்கறையெடுத்து அக்குளங்களில் இருந்து எமது விவசாய
நிலங்களுக்குத் தேவையான நீரைத் திறந்துவிட்டிருந்தால், இன்று எங்களுக்கு இந்த
அளவுக்குப் பாதிப்பும் நஷ்டமும் ஏற்பட்டிருக்காது" என்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ea7f0f1-e782-42f1-b7df-c1be94559965/26-6a902113de06f.webp' /></p><p>


மாதக்கணக்கில் உழைத்து, கடன் வாங்கிச் செய்த விவசாயம் பயிர் அறுவடைக்காலத்தில்
நீரின்றிக் கருகி வருவதைப் பார்த்து விவசாயிகள் செய்வதறியாது திகைத்து
நிற்கின்றனர். </p><p>

எனவே, சம்பந்தப்பட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசனத்துறை
அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, அருகில் உள்ள குளங்களில் இருந்து நீரினைத்
திறந்துவிட்டுப் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி
விவசாயிகள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் விழும் வரை காத்திருக்காமல் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி அறைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-rajakaruna-statement-about-government-1787829046"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-rajakaruna-statement-about-government-1787829046</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.</p><p>

கம்பஹாவில் நேற்றைய தினம் (26.08.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு
உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனநாயகப் போராட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசை மாற்ற வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும், அதனை
யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச்
சாத்தியமற்றது. ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.
</p><p>
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல்,
நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ef54d-4dc8-44fc-8887-9d4edd2af24d/26-6a901f2c1dc0c.webp' /></p><h2>அவல நிலை</h2><p> </p><p>இதனால்
இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல்மயமாக்குவதன்
மூலம், வடகொரியாவை போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகார போக்கை நோக்கி அரசாங்கம் நகர முற்படுகின்றது.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட
முடியாமல், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின்
உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
</p><p>
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும், சர்வாதிகார
ஆட்சியை வீழ்த்தவும் பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட
வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T11:27:55+00:00</updated>
        </entry>
    </feed>
