<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T00:39:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/use-water-and-electricity-wisely-1784507276"></link>
            <id>https://tamilwin.com/article/use-water-and-electricity-wisely-1784507276</id>
            <summary type="text">நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் (பேரிடர் மற்றும் நீர் மேலாண்மை) எல். எஸ். சூரியபண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>தற்போது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 44% முதல் 45% வரையான அளவிலேயே காணப்படுகிறது எனவும் ஒக்டோபர் மாதளவில் பெரும்போக விவசாயப் பணிகளுக்காக நீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p> 'எல் நினோ'&nbsp; காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff98432-0466-4c8c-bd1e-44b2c84b9a66/26-6a5d6b8e1bdf6.webp' /></p><p>
ஒருவேளை எதிர்பார்த்தபடி மழை பெய்யாவிட்டால், தற்போதுள்ள நீரைக் கொண்டு நிலைமையை மேலாண்மை செய்வதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>
தென்மேற்கு பருவமழை வழக்கமான ஆண்டுகளைப் போல இம்முறை போதியளவு கிடைக்கவில்லை எனவும், சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் அது 10 முதல் 15 மில்லிமீட்டர் போன்ற மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T00:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலியான சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை பத்திரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officers-who-killed-in-riot-will-get-1784506700"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officers-who-killed-in-riot-will-get-1784506700</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அமைச்சரவை தீர்மானிக்கும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் சிறைச்சாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a09c4a-64af-4ecf-bfbb-6c51b7fa129b/26-6a5d694e4331d.webp' /></p><p> </p><p>
இந்த பயங்கர மோதலின் போது மேலும் சில அதிகாரிகளும், சுமார் 100 கைதிகளும் காயமடைந்ததுடன், 21 கைதிகளும் உயிரிழந்திருந்தனர்.
</p><p>இந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்கள் வழக்கமாக ஓய்வு பெறும் வயது வரை முழுமையான மாதச் சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அதன் பின்னர் உரிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருவதாக மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T00:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்சியின் நீண்ட நாள் கனவை கலைத்த 106ஆவது நிமிடம்.. கண்ணீருடன் முடிந்த இறுதிப்போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-argentina-dream-2026-world-cup-fifa-1784505100"></link>
            <id>https://tamilwin.com/article/messi-argentina-dream-2026-world-cup-fifa-1784505100</id>
            <summary type="text">ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.இந்நிலையில், உலகக் கோப்பையை வெற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.</p><p>இந்நிலையில், உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்று விடைபெற வேண்டும் என்ற லியோனல் மெஸ்சியின் நீண்ட நாள் கனவு கண்ணீரோடு முடிந்தது.&nbsp;</p><p>
கடந்த 2010ஆம் ஆண்டில், முதல் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்பெயின் அணி,16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை தன்வசமாக்கியுள்ளது. </p><p>தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்டினா, 1962இல் பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொண்ட முதல் நாடு என்ற பெருமையைப் பெற கடுமையாகப் போராடியது.</p><p></p><h2>106ஆவது நிமிடம்..&nbsp;</h2><p> </p><p>ஆனால், ஸ்பெயின் அணியின் அபார ஆட்டத்தால் ஆர்ஜென்டினாவின் கனவு தகர்ந்தது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகவும் பலம் வாய்ந்த ஆட்டத்தைக் கொண்ட ஆர்ஜென்டினா அணியால், இறுதிப் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ar" dir="rtl">دموع الوداع من الأفضل في التاريخ 🥹🥹🥹🥹 <a href="https://t.co/yJaL1GQHoP">pic.twitter.com/yJaL1GQHoP</a></p>&mdash; Messi World (@M10GOAT) <a href="https://x.com/M10GOAT/status/2078972536541376911?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>மறுபுறம், ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய ஸ்பெயின் அணி, ஆட்டத்தின் 106ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை உடைத்து கோல் அடித்தது. பெட்ரோ போரோ வழங்கிய பந்தை நிகோ வில்லியம்ஸ் கடத்த, அதனைப் பெற்ற பெரான் டோரஸ் மிக நேர்த்தியாக கோலாக மாற்றினார்.
</p><p>
இந்தத் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணி வெறும் இரண்டு கோல்களை மட்டுமே எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்துள்ளது. மேலும் 6 போட்டிகளில் ஒரு கோல் கூட வாங்காமல் தங்களது அபாரமான தடுப்பாட்ட வலிமையை நிரூபித்துள்ளது.</p><p></p><h2>உலகக் கோப்பைக் கனவு</h2><p> </p><p>இறுதிப் போட்டியின் கூடுதல் நேரத்திற்கு முன்பாக, ஆர்ஜென்டினாவின் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f927f9b3-15ae-4499-9bfc-e335aea72df7/26-6a5d67553fd2a.webp' /></p><p>
</p><p>ஆர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அடுத்தடுத்து பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.</p><p> நிகோ வில்லியம்ஸ் அடித்த கோல் ஒன்றை விஏஆர் (VAR) தொழில்நுட்பம் மறுத்தது. அதேபோல் பெரான் டோரஸ் அடித்த மற்றொரு கோலும் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது.</p><p>

ஆட்டத்தின் இறுதி நொடிகளில் லியோனல் மெஸ்சி தனது அசாத்திய திறமையால் மார்கோஸ் செனேசிக்கு ஒரு அருமையான பாஸ் கொடுத்தார்.</p><p> இருப்பினும், ஸ்பெயின் வீரர்கள் அதனைத் தடுத்து நிறுத்த, அர்ஜென்டினாவின் உலகக் கோப்பைக் கனவு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட, மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை பயணம் கண்ணீருடன் நிறைவடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போட்டிக்கு முன் நடந்த ட்ரம்ப் - ஸ்பெயின் பிரதமர் சந்திப்பு.. பேசுபொருளான புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-2026-football-trump-pedro-snchez-met-1784501564"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-2026-football-trump-pedro-snchez-met-1784501564</id>
            <summary type="text">2026 FIFA உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகிய இரு உலகத் தலைவர்களும் ஃபிஃபா தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 FIFA உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகிய இரு உலகத் தலைவர்களும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து சந்தித்துக் கொண்ட விசேட புகைப்படம் தற்பொழுது சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p><p>பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையில் கடுமையான இராஜதந்திர மோதல்கள் நிலவி வந்தன.</p><p></p><h2> இராஜதந்திர முரண்பாடுகள் </h2><p> இந்நிலையில் தற்போது, நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6922f41b-9e58-4259-a916-ae414f32b282/26-6a5d58498d5aa.webp' /></p><p> </p><p>சமீபத்திய மாதங்களாக நேட்டோ (NATO) பாதுகாப்புச் செலவினங்கள், ஈரான் விவகாரம் மற்றும் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பகிரங்கமாக இராஜதந்திர முரண்பாடுகள் நீடித்து வந்த சூழலில், இந்தச் சந்திப்பு அரங்கேறியுள்ளது.
​</p><p>கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ட்ரம்ப், ஸ்பெயினை ஒரு மோசமான நேட்டோ கூட்டாளி எனக் கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், உலகக் கிண்ண இறுதிப்போட்டி மேடையில் இரு தலைவர்களும் தங்களுக்கு இடையிலான அரசியல் மாற்றுக்கருத்துக்களைத் தாண்டி, விளையாட்டுத் தூதரகத்தின் ஒரு பகுதியாகக் கைகுலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். </p><p>உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னணியில் நிகழ்ந்த இந்தத் தலைவர்களின் சந்திப்பு, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T23:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களுக்கு பிறகு ஸ்பெயினின் அபார வெற்றி.. 2026 - FIFAவில் எதிர்பாராத திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-world-cup-2026-spain-argentina-zero-goals-1784499205"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-world-cup-2026-spain-argentina-zero-goals-1784499205</id>
            <summary type="text">2026 Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் 16 வருடங்களுக்கு பிறகு வெற்றியீட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் 16 வருடங்களுக்கு பிறகு வெற்றியீட்டியுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p>

4ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆர்ஜென்டினாவும், 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. </p><p>

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p></p><h2>Zero goals..&nbsp;</h2><p>

தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d45dc3-459c-4a58-92ba-cab1ff686e92/26-6a5d503ee8fab.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது ஆர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.</p><p> இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். </p><p>அதன் பிறகு ஆர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.</p><p>

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T23:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் வீட்டுத் தோட்டம் கொஞ்சம் கலைந்திருக்கட்டும் - பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு சுவாரசியமான அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/let-your-garden-be-little-messy-call-to-public-uk-1784496721"></link>
            <id>https://tamilwin.com/article/let-your-garden-be-little-messy-call-to-public-uk-1784496721</id>
            <summary type="text">பிரித்தானியாவில் இந்த ஆண்டு வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவில்
அதிகரிக்கும் (&quot;Bumper&quot; Year) வாய்ப்புள்ளதாக வனவிலங்கு தொண்டு நிறுவனம் ஒன்று
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் இந்த ஆண்டு வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவில்
அதிகரிக்கும் ("Bumper" Year) வாய்ப்புள்ளதாக வனவிலங்கு தொண்டு நிறுவனம் ஒன்று
தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளை எண்ணிப்
பதிவு செய்யும் வருடாந்திர பிரச்சாரத்தையும் அந்த அமைப்பு தொடங்கியுள்ளது.</p><p>

டோர்செட் பகுதியைத் தளமாகக் கொண்ட 'பட்டர்ஃபிளை கன்சர்வேஷன்' (Butterfly
Conservation) என்ற தொண்டு நிறுவனம், இந்த ஆண்டு நிலவிய வெப்பமான மற்றும்
வறண்ட வசந்த காலத்தின் காரணமாகப் பல வகையான வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை
ஏற்கனவே அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>Butterfly Conservation</h2><p>
</p><p>
இதையடுத்து, பொதுமக்களின் உதவியோடு வண்ணத்துப்பூச்சிகளைக் கணக்கெடுக்கும்
'பிக் பட்டர்ஃபிளை கவுண்ட் 2026' (Big Butterfly Count 2026) என்ற நிகழ்வை
ஜூலை 17 முதல் ஓகஸ்ட் 9 வரை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7ba1d0-a29c-435e-b128-04153a1d5cbb/26-6a5d689bda844.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு இடத்தை அர்ப்பணித்து, அங்கு தினமும் 15
நிமிடங்கள் வரை தென்படும் வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகளை
(Moths) எண்ணி, அதை செயலி (App) அல்லது இணையதளம் வழியாகப் பதிவு செய்யுமாறு
ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
</p><p>
1970களுக்குப் பிறகு காடுகள் அழிப்பு மற்றும் வாழ்விடங்கள் சீரழிந்ததால்
வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது.</p><p>

ஆனால், தற்போது புல்வெளிகளை இயற்கையாக வளரவிடும் 'நோ மோ மே' (No Mow May)
போன்ற விழிப்புணர்வு முயற்சிகளால் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக
சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொதுமக்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களை மிகத் தூய்மையாகப் பராமரிக்காமல்,
ஆங்காங்கே செடிகள் மற்றும் புற்களை இயற்கையாக வளரவிடுவதன் மூலமே
வண்ணத்துப்பூச்சிகள் தங்குவதற்கும், தேன் பருகுவதற்கும் ஏற்ற சிறந்த சூழலை
உருவாக்க முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T22:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறப்பிற்கு முன் சி.டி. விக்ரமரத்னவை மிரட்டியது யார் - நாமல் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-dig-cd-wickremarathna-death-namal-1784482747"></link>
            <id>https://tamilwin.com/article/former-dig-cd-wickremarathna-death-namal-1784482747</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா&amp;nbsp; அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.&amp;nbsp;இந்நிலையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா&nbsp; அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முதலில் தென்னிலங்கை ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இந்த சந்தேகம் எழுப்பப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், முதலில் பொலிஸார் தரப்பிலிருந்தும் உறுதியான ஒரு தகவல் வழங்கப்படவில்லை.&nbsp;</p><p>பின்னர்,&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அவரின் மரணம் தொடர்பில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-g3OhaSSGJY" width="640" height="360" class="note-video-clip"></iframe>\</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T21:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது அநுர அரசு! சஜித் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-is-moving-authoritarianism-1784494154"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-is-moving-authoritarianism-1784494154</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக
விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை
உருவாக்க முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக
விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை
உருவாக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p>

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று(19) நடாத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தாடல் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறுதெரிவித்தார்.</p><p>&nbsp;ஜனநாயகக் கட்டமைப்பானது
சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான
அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>அநுர அரசு</h2><p>

"நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கே ஜனநாயகம்
வலுப்பெறும். வரலாற்றில் மாக்னா கார்ட்டா முதல் நவீன கால சர்வதேச
இணக்கப்பாடுகள் வரை நீதித்துறையின் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால்,
இன்று உயர்மட்ட நீதித்துறை நியமனங்களைக் கூடச் செய்யாமல் அரசு நீதித்துறைக்கு
அழுத்தம் கொடுக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3cb9e3-3a5f-4f72-9da0-d61785f7b835/26-6a5d3bd5b9802.webp' /></p><p>மக்கள் நீதித்துறை மீதான
நம்பிக்கையை இழக்கும் சூழலை அரசு உருவாக்கி வருகின்றது.</p><p>
திசைகாட்டி அரசு மக்கள் ஆணையை அவமதிக்கின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித்
தலைவர், "ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார
திஸாநாயக்க தலைமையிலான அரசு, தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது.</p><p></p><h2>அழைப்பு&nbsp;</h2><p> </p><p>இந்த
ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிக்க வர்க்கம், நிறம் மற்றும் கட்சி
பேதங்களைக் கடந்து மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec97df7-1238-42c9-a996-bf2e958ef1fe/26-6a5d3bd668779.webp' /></p><p>
</p><p>
அரசின் இத்தகைய போக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் மற்றும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வர்த்தகச் சலுகைகளில்
எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
</p><p>
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய முயற்சிகளையும் மக்கள்
சக்தியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T21:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித கடத்தல் குற்றச்சாட்டுகள்: பிரபல சமூக ஊடக பிரபலங்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/59-charges-of-human-trafficking-2-arrested-1784492748"></link>
            <id>https://tamilwin.com/article/59-charges-of-human-trafficking-2-arrested-1784492748</id>
            <summary type="text">பிரபல சமூக ஊடக பிரபலங்களான சகோதரர்கள் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட்
ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, மனித க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சமூக ஊடக பிரபலங்களான சகோதரர்கள் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட்
ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

பாலியல் வன்கொடுமை, மனித கடத்தல் மற்றும் உடல் ரீதியான கடுமையான தாக்குதல்
உள்ளிட்ட 38 புதிய குற்றச்சாட்டுகளை பிரித்தானியா அதிகாரிகள் அவர்கள் மீது
பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையையும்
கொண்டுள்ள இந்த சகோதரர்களை, தங்கள் நாட்டில் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக
பிரித்தானியா அரசு தங்களை நோக்கி ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>

பிரித்தானியாவின் அரச வழக்குரைஞர் சேவை (CPS) வெளியிட்டுள்ள தகவலின்படி,
புதிதாக கண்டறியப்பட்ட 4 பாதிக்கப்பட்ட நபர்களின் ஆதாரங்களின் அடிப்படையில்
இந்த புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மூலம் இருவர் மீதும் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த
குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5eeeec-b371-4803-9873-8f980ed04a41/26-6a5d349feb1d9.webp' /></p><p>
</p><p>
2010 ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த குற்றங்கள்
நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது</h2><p>

அமெரிக்காவின் மியாமி நகரில் வைத்து 'யு.எஸ் மார்ஷல்ஸ்' அமைப்பால் இந்த
இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07340f1-6f6c-4d23-b692-a70b99a337aa/26-6a5d352de0ae6.webp' /></p><p>

தங்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் டேட் சகோதரர்கள் திட்டவட்டமாக
மறுத்துள்ளனர்.
</p><p>
2022 டிசம்பர் முதல் ரோமேனியா நாட்டிலும் இவர்கள் மீது மனித கடத்தல் மற்றும்
பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றவியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T20:41:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: வெளிவராத பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894"></link>
            <id>https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894</id>
            <summary type="text">அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு, தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் கூறினார்.</p><p>திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராக சம்பந்தனை தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சம்பந்தன் எவ்வாறு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாமல் மௌனமாக இருந்தாரோ அதே போலவே தற்போதைய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_-ZdApAFhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T20:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பை அவசரமாக சந்திக்கும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lebanese-president-joseph-aoun-meets-trump-israel-1784487185"></link>
            <id>https://tamilwin.com/article/lebanese-president-joseph-aoun-meets-trump-israel-1784487185</id>
            <summary type="text">லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும், ஈரான் ஆதரவு பெற்ற
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவை நிராயுதபாணியாக்கவும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன்
இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும், ஈரான் ஆதரவு பெற்ற
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவை நிராயுதபாணியாக்கவும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன்
இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை
வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கவுள்ளார்.
</p><p>
கடந்த 20 ஆண்டுகளில் லெபனான் நாட்டின் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு
அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.</p><p>

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் லெபனானில் இலட்சக்கணக்கான மக்கள்
இடம்பெயர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.</p><p></p><h2>முக்கிய கோரிக்கை..</h2><p>
</p><p>
ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை
அமுல்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தை வழங்குமாறு ஜனாதிபதி
டரம்பிடம் ஜனாதிபதி அவூன் கோரிக்கை வைக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/645ded2a-8241-4ada-a2a1-2368a59815d1/26-6a5d1d133c8ff.webp' /></p><p>
</p><p>
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான
எழுத்துப்பூர்வத் திட்டத்தையும் அவர் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.</p><p>

லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்க ஜனாதிபதி டரம்பின் தலையீடே ஒரே தீர்வு
என்று லெபனான் அரசு நம்புகிறது.

முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி,
கடந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 வயதான ஜோசப் அவூன்,
ஈரானுக்காக லெபனான் அழிக்கப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் கடுமையாகச்
சாடினார்.
</p><p>
இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் ஹிஸ்புல்லா
ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், நாட்டின்
பாதுகாப்பைக் கருதி அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.</p><p>

இந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில்
நிலவும் பதற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து குறிவைக்கப்பட்ட அமெரிக்க இலக்குகள்.. ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gulf-attacks-middle-east-on-high-alert-1784486293"></link>
            <id>https://tamilwin.com/article/gulf-attacks-middle-east-on-high-alert-1784486293</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் உச்சக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. </p><p>இந்நிலையில், குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் கேம்ப் உதாரி வெடிபொருள் களஞ்சியம், அலி அல் சலேம் விமானத் தளத்திலுள்ள பேட்ரியட் அமைப்பு மற்றும் வான் கண்காணிப்பு ரேடார் ஆகியவற்றை ஈரான் இலக்கு வைத்துள்ளது.&nbsp;</p><p>தற்கொலைத் தாக்குதல் நடத்தும் காமிகாஸே டிரோன்கள் (Kamikaze Drones) மூலம் அவற்றின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>குவைத்தில் உள்ள தளங்கள்..&nbsp;&nbsp;</h2><p> </p><p>அமெரிக்க இராணுவ முகாம்களைக் கொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், இந்த மாத மோதல்கள் வெடித்தது முதற்கொண்டு ஈரானின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc7230c-9ea5-4d3f-b135-f5141059bb41/26-6a5d1b37e44a4.webp' /></p><p>
</p><p>
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையம், அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> இந்த புதிய மோதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானை பழிவாங்கும் நோக்கில் அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. </p><p>கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிய முப்படைகளால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராகப் செயற்பட்ட போது, இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு வீரர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-shooting-incidents-in-sl-1784485143"></link>
            <id>https://tamilwin.com/article/18-shooting-incidents-in-sl-1784485143</id>
            <summary type="text">நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p> 

கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. </p><p>

இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>தீவிர சோதனை</h2><p>சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்கான தீவிர சோதனைகளும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcce2f45-838d-49d7-a195-1ea8adfdb68d/26-6a5d1c91b97b7.webp' /></p><p>இலங்கையில் அண்மைக் காலங்களில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான போட்டிகளுடன் தொடர்புடையவையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T18:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தளங்களை தரைமட்டமாக்கிய ஈரான்.. மீண்டும் வெடிக்கும் மத்திய கிழக்கு போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-conflict-two-us-soldiers-killed-jordan-1784484408"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-conflict-two-us-soldiers-killed-jordan-1784484408</id>
            <summary type="text">ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும், ஒருவர் காணாமல் போயுமுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும், ஒருவர் காணாமல் போயுமுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p> ஈரானின் தென்மேற்கு நகரான தர்கோவைனில் கட்டுமானப் பணியில் இருந்த அணுமின் நிலையம் மற்றும் கெஷ்ம் தீவு ஆகியவற்றின் மீது அமெரிக்கா, இரவு நேரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p> அதேவேளை குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையம் மீதும் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜோர்தான் வெளியிட்ட தகவல்&nbsp;</h2><p>

இதற்கிடையில், இன்று ஈரானால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை ஜோர்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன், நான்காவது ஏவுகணை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் விழுந்ததாக ஜோர்தான் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b25a6e0-058b-464c-9fb5-fcf6585a18ed/26-6a5d141226d60.webp' /></p><p>அத்துடன், ஜோர்தானின் அகபா துறைமுகம் இலக்கு வைக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p> இந்த நியாயமற்ற மற்றும் அப்பட்டமான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ள ஜோர்தான் வெளிவிவகார அமைச்சு, நாட்டின் பாதுகாப்பு என்பது மீற முடியாத ஒரு சிவப்புக் கோடு என எச்சரித்து, அம்மானில் உள்ள ஈரானிய தூதரை நேரில் அழைத்து கண்டனம் வெளியிட்டுள்ளது.</p><p>

கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஆரம்பகட்ட போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே அது முறிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T18:50:57+00:00</updated>
        </entry>
    </feed>
