<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-07T04:20:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினிக்குப் பதில் கோட்டாபயவை களமிறக்க மொட்டுக் கட்சி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-replaces-limini-1788750677"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-replaces-limini-1788750677</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வர மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வர மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>
இலங்கையின் முப்படைகள், அவர்களின் குடும்பத்தார் மட்டுமன்றி பெரும்பான்மை இன சிந்தனைக் கொண்ட சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தனி செல்வாக்கொன்று உள்ளது.</p><h2>மீண்டும் கோட்டாபய&nbsp;</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியில் குறித்த பிரிவின் வாக்குகள் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருந்தன.</p><p>

இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது அதனை மீண்டும் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34630ec-e281-4d11-9381-78234873537a/26-6a9e385eef912.webp' /></p><p>
</p><p>
அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதரபுரத்தில் ஆரம்பமாகவுள்ள மொட்டுக்கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி தொடக்கம் ஏனைய முக்கிய நிகழ்வுகளில் கோட்டாபய ராஜபக்சவை கலந்து கொள்ள வைக்கும் தீர்மானத்தை மொட்டுக் கட்சி மேற்கொண்டுள்ளது.
</p><p>
அதே நேரம் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க, ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவர் என்ற வகையில் அவர் அரசியல் களத்தில் பிரபலம் பெறுவதை ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கிய சக்திகள் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T04:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையரொருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-at-international-airport-1788753288"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-at-international-airport-1788753288</id>
            <summary type="text">இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக பறவைகளை கடத்த முயன்ற இலங்கை நாட்டவர்
ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் பான்டென் (Ba...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக பறவைகளை கடத்த முயன்ற இலங்கை நாட்டவர்
ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

இவர் பான்டென் (Banten) பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையதில் வைத்தே கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><h2>தீவிரப்படுத்தியுள்ள விசாரணை</h2><p>
</p><p>
சூட்கேஸினுள் 15 சிறிய பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 அரிய வகை
பறவைகள், இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf35dca3-743c-49d4-b3c9-25226df89ab9/26-6a9e36bb39028.webp' />&nbsp;</p><p>

இதேவேளை கைப்பற்றப்பட்ட பறவைகளில் சில வகைகள் இந்தோனேசிய வனவிலங்கு
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட அரிய உயிரினங்களாகும்.</p><p>

தற்போது இந்தோனேசிய தனிமைப்படுத்தல் அலுவலகமும், இயற்கை வளப்பாதுகாப்பு
முகமையும் இணைந்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளன.</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-important-notice-to-passengers-1788749283"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-important-notice-to-passengers-1788749283</id>
            <summary type="text">லண்டனிலிருந்து 4 ஆம் திகதி புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 504 இல் பயணித்த பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனிலிருந்து 4 ஆம் திகதி புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 504 இல் பயணித்த பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விமானம், 5 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில்,விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமானோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் விளைவாக, சில பயணிகளால் இருக்கைகள் இல்லாமல் ஹீத்ரோவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு பயணிக்க முடியவில்லை என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள்</h2><p>
</p><p>
சில பயணிகளை 4 ஆம் திகதி விமானத்தில் ஏற வேண்டாம் என்றும், 5 ஆம் திகதி பயணிக்குமாறும் அவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்திருந்ததாக பயணிகள் கூறியுள்ளனர்.</p><p>பயணிகள் தாங்கள் பதிவு செய்த உணவிற்குப் பதிலாக வேறு உணவு வழங்கப்பட்டதாகவும் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b702c4-63b2-4196-83da-0c79242f9fdb/26-6a9e301f727ab.webp' /></p><h2>பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>இது தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன தகவல் தொடர்பு தலைவர் தீபால் பெரேரா விளக்கமளிக்கையில்,</p><p>
''வழக்கமாக, எந்தவொரு விமானத்திலும் அளவுக்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். அத்தகைய நேரங்களில், நாங்கள் அந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் அடுத்த நாள் பயணிக்க விரும்பினால், அதற்கான சிறப்பு வசதிகளை வழங்குகிறோம்.

யாராவது ஏதேனும் காரணத்திற்காக பயணிக்க நேர்ந்தால், நாங்கள் நிச்சயமாக அவர்களை அனுப்பி வைப்போம்.</p><p> உணவைப் பொறுத்தவரை, பயணிகளின் தேவைக்கேற்ப மிக உயர்ந்த தரத்தில் நாங்கள் அதை வழங்குகிறோம். 

ஆனால் ஏதேனும் சிக்கல் இருந்தால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவர்களிடம் கூறுகின்றோம்.</p><p>

பயணிகளுக்கு தண்ணீர் போத்தல் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு, பயணச்சீட்டு எண் மற்றும் விமான எண்ணை குறிப்பிட்டு முறைப்பாடு அளிக்கலாம். அங்கு, நாங்கள் அந்த பயணிகளின் முறைப்பாடுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T03:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் விலை குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-price-increased-1788750081"></link>
            <id>https://tamilwin.com/article/tea-price-increased-1788750081</id>
            <summary type="text">லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமையைக் கருத்திற்கொண்டு, ப்ளேன் தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமையைக் கருத்திற்கொண்டு, ப்ளேன் தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன்படி, உணவகங்களில் தற்போது விற்கப்படும் விலையிலிருந்து 5 ரூபா குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ப்ளேன் தேநீரின் தற்போதைய விலை: 40 – 50 ரூபாவாகவும், பால் தேநீரின் தற்போதைய விலை: 100 – 120 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e39e65-a267-4c4f-90a9-870bcd47af3e/26-6a9e29030cdc6.webp' /></p><p>
</p><p>தேநீருக்கென தனியாகக் கட்டுப்பாட்டு விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், உணவகங்களில் விற்கப்படும் தற்போதைய விலையிலிருந்து 5 ரூபாவைக் குறைக்குமாறு அனைத்து உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், எதிர்காலத்தில் உணவு மூலப்பொருட்களின் விலைகள் குறையுமாயின், உணவக உணவுகளின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T03:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிடம் சிக்கியுள்ள ராஜபக்சர்களின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் - கலக்கத்தில் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345"></link>
            <id>https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

ராஜபக்சர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்த நபர்களில் ஒருவராக நிமல் பெரேரா உள்ளமையே இதற்கு காரணமாகும். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்வதற்கு முக்கிய காரணமாக நிமல் பெரேரா வழங்கிய சாட்சியமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>

அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம்</b></h2><p>இந்நிலையில் ராஜபக்சர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1661bc46-a360-48fd-968b-5b625e6a7a50/26-6a9e20793047c.webp' /></p><p>ஒரு காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராகவும் அவர்களது அனைத்து நிதி நடவடிக்கைகளையும் கையாண்டவராக நிமல் பெரேரா உள்ளார்.
</p><p>
நிமல் பெரேரா என்பவர் ராஜபக்சர்களின் அனைத்து இருண்ட இரகசியங்கள், மறைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அனைத்தையும் அறிந்த தனித்துவமான நபராகும்.</p><p> 

அவர் தற்போது அவுஸ்திரேலியாவின் தீவிர பாதுகாப்பின் மத்தியில வசித்து வருவதுடன், நாமலுக்கு எதிராக தீர்க்கமான 2 சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>

நிமல் பெரேராவின் இந்தத் தீர்க்கமான நடவடிக்கையுடன் அவரைக் எப்படியாவது மௌனிக்க செய்ய சர்வதேச நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h3><b>

 சர்வதேச நடவடிக்கை</b></h3><p>நாமல் ராஜபக்சவின் மற்றுமொரு மிக நெருங்கிய நண்பரான தற்போது மெல்பர்னில் வசிக்கும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியாக செயற்படும் இந்திக கருணாஜீவ ஊடாக நிமல் பெரேராவுக்கு கடுமையான அழுத்தங்களைக் பிரயோகிக்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13922e2-2fb4-4ed6-9b95-f9d9a4190f03/26-6a9e2358c3d14.webp' /></p><p>ராஜபக்சர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சியத்தையும் வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டு நிமல் பெரேராவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பல அனுப்பப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையில் நிமல் பெரேராவிடம் இருந்து நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் மட்ட விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிய வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T03:07:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து நாமல் எழுதிய அவசர கடிதம்..! தீவிர ஆலோசனையில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-letter-to-the-secretary-general-parliament-1788747220"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-letter-to-the-secretary-general-parliament-1788747220</id>
            <summary type="text">

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிற்கு கடிதமொன்றினை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்த கடிதம் இன்று (7) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>சட்டரீதியான தடை&nbsp;</h2><p> </p><p>

நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு சட்டரீதியான தடை ஏதுமில்லை என சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64006fd1-d3c7-4b73-99b9-1c69de5789a5/26-6a9e2271115a1.webp' /></p><p>

நாடாளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க்கிழமை (08) முதல் 11ஆம் திகதி வரை கூடவிருக்கின்றது.</p><p> 

 எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்த அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p>





</p>]]></content>
            <updated>2026-09-07T02:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் நாமலுக்கு ஆபத்து - அநுர அரசு எடுத்துள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-security-for-namal-rajapaksa-1788743426"></link>
            <id>https://tamilwin.com/article/special-security-for-namal-rajapaksa-1788743426</id>
            <summary type="text">
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.
</p><p>
அதற்காக முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் வேறு சிலருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 தனி சிறை</b></h2><p>எனினும் அவரது பாதுகாப்பிற்காக தனி சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ed66e5-78a6-4f18-99ea-5a6d2d8aa6c6/26-6a9e10ed02bc4.webp' /></p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவின் நலம் விசாரிப்பதற்காக அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் வருகை தந்ததாகவும் பல்லேதென்ன மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறையில் உள்ள நாமல் கொலை செய்யப்படலாம் என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-07T02:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழித்தடங்களில் திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-routes-to-be-changed-1788745131"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-routes-to-be-changed-1788745131</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள எரிமலை மீண்டும் செயல்பட தொடங்கியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, நேற்றிரவு (07) இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மாற்றப்பட்டுள்ள பல விமானங்கள்</h2><p>இதற்கிடையில், அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் பறக்கும் மத்திய கிழக்கு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான பல விமானங்களும் மாற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51d29d7-0fcc-4f09-9eca-929608e097db/26-6a9e1cddc3449.webp' /></p><p>இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள அனக் கிரகடாவ் எரிமலை மீண்டும் செயல்பட தொடங்கியதன் காரணமாக, ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களில் விமானச்சேவைகளை நிறுத்திவைக்க இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் சிலிக்கா கலந்த பாறைத்துண்டுகள் வானத்தின் பரந்த பகுதியில் பரவுவதால், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
</p><p>
இந்த நிலைமையைக்கருத்தில் கொண்டு, இலங்கைக்கு கீழே, எரிமலைக்கு மேற்கே உள்ள பரந்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு இந்தோனேசிய விமான போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T02:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி - 4 வயது சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-kid-dies-in-sri-lanka-1788744037"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-kid-dies-in-sri-lanka-1788744037</id>
            <summary type="text">வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் குவைத் நாட்டைச் சேர்ந்த அம்மார் எனப்படும் நான்கு வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. </p><p>சிறுவனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் அவர்கள் குவைத்தில் வசித்து வந்துள்ளனர்.</p><p> </p><h2><b>திருமண நிகழ்வு</b></h2><p>இந்த நிலையில் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கை வந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573c57a3-e8e9-4279-a17d-2b69c0a27efd/26-6a9e18b1b084b.webp' /></p><p>கடந்த வாரம் குறித்த நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் மீண்டும் குவைத் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இதன் போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p> வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன், வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றிற்குச் சென்று பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் சிறிய வலையின் உதவியுடன் மீன்பிடிக்க முயன்றுள்ளார்.</p><p> இதன்போது அவர் தவறுதலாக ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் எனப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><h3><b> சிறுவன் பலி</b></h3><p>சிறுவன் வீட்டில் இல்லாததால் பதற்றமடைந்த உறவினர்களும் அயலவர்களும் சுற்றுப்புறத்தைத் தேடியபோது, ​​சிறுவனின் சடலம் ஆற்றில் மிதப்பதாக தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcfbae40-d406-4c2e-a396-00cf17263134/26-6a9e187219200.webp' /></p><p>உடனடியாக சிறுவனை வெலிகம மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p> பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சடலம் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T01:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்கள்! அமைச்சரின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dont-share-the-defense-information-to-others-1788744525"></link>
            <id>https://tamilwin.com/article/dont-share-the-defense-information-to-others-1788744525</id>
            <summary type="text">பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்களை கசியவிட வேண்டாம் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நிறுவப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்களை கசியவிட வேண்டாம் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
</p><p>நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் பெறப்படும் தகவல்களை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>அரசாங்கம் சிறப்பு கவனம்&nbsp;</h2><p>
</p><p>நாட்டில் சமூக பொலிஸ் சேவையை மேலும் பலப்படுத்துவதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3932bcd6-86d1-4def-8059-672e0c4302dc/26-6a9e134f5e148.webp' /></p><p>
</p><p>பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் கூடியபோதே இது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்கும் பொலிஸாரின் பணிகளுக்கு பொதுமக்களின் ஆதரவை அதிகளவில் பெற்றுக்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்!மேலும் இரு ஐஸ் போதைபொருள் கொள்கலன்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspected-ice-drug-consignment-found-1788743842"></link>
            <id>https://tamilwin.com/article/suspected-ice-drug-consignment-found-1788743842</id>
            <summary type="text">&amp;nbsp;ஐஸ் போதை பொருள் கொள்கலன் தகவல் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துக்குவுக்கு அமெரிக்க புலனாய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐஸ் போதை பொருள் கொள்கலன் தகவல் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துக்குவுக்கு அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது. </p><p>அமெரிக்க புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளன.
</p><p>இந்த கொள்கலன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் விடுதியொன்றில் தங்கியிருந்த மூன்று பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டனர்.
</p><h2>
</h2><p></p><h2>கடத்தல் வலையமைப்பின் தொடர்புகள்</h2><p>பாகிஸ்தானியர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. </p><p>அதில் ஒன்று ஏற்கனவே சுங்கப் பரிசோதனையில் உள்ளது; மற்றொன்று கப்பல் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளது. அவை இரண்டையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த கைதுகளின் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதில் 'அங்கொட பியந்த' அல்லது 'கார்கோ பியன்' ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. </p><p>ஆனால், தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் மூலம் இவர்கள் யாருக்கும் இதில் நேரடித் தொடர்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ead8ec-719d-40f6-b9db-d6bf6bb822b3/26-6a9e10d630976.webp' /></p><p>இருப்பினும், இந்த பாகிஸ்தானியர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு, இலங்கையிலுள்ள வர்த்தகர்களுடன் இணைந்து செய்யும் வியாபாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த இரண்டு கொள்கலன்களையும் கொண்டுவந்துள்ளனர் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு உள்ளது. </p><p>அந்த இரண்டு கொள்கலன்களையும் விடுவித்துக்கொள்வதற்காகவே இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்துள்ளனர்.

இங்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தங்களது கடமையை சரியாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட பணியகத்தால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம்</h2><p>கடந்த மாதம் 18 ஆம் திகதி இதற்கான நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டபோதிலும், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. </p><p>பின்னர் இரண்டாவது தடவையாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவர்கள் சோதனையை மேற்கொண்டுள்ளனர். ஆனால், முதல் நீதிமன்ற உத்தரவு நிராகரிக்கப்பட்ட விபரத்தை உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கோ அல்லது ஏனைய பிரிவுகளுக்கோ அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இந்த விசாரணையை மெதுவாகச் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் ஆரம்பத்தில் இருந்தே இந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தது. </p><p>சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்து, இந்த கொள்கலன்களை எக்காரணம் கொண்டும் வெளியே விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. </p><p>ஆனால், அதைத் திறப்பதற்கு நீதிமன்ற உத்தரவு தேவைப்பட்டதாலும், சுங்கப் பகுதியினரின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருந்ததாலுமே தாமதம் ஏற்பட்டது.
</p><p>
அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் ஈரான், ஆப்கானிஸ்தான், பலுகிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரமாக இருக்கும் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளனர்.
</p><p>
பாகிஸ்தானியர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. </p><p>அதில் ஒன்று ஏற்கனவே சுங்கப் பரிசோதனையில் உள்ளது; மற்றொன்று கப்பல் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளது. அவை இரண்டையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த கடத்தலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு நேரடியாக ஈடுபட்டுள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் வெறும் இறக்குமதி செய்யும் வர்த்தகப் பங்காளிகள் மட்டுமே. பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது இன்னும் வெளிவரவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தை தொடரும் விசாரணைகள்! மீண்டும் சிக்கலில் சிக்கிய ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755"></link>
            <id>https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சிரிலிய சவிய அமைப்பு, PET Scan இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தேசிய சேமிப்பு வங்கியும் குறித்த திட்டத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>நிதி திரட்டு</h2><p>

இந்த விவகாரம் தொடர்பில், அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cea927d-8f5b-4c4c-aad9-681e6664965a/26-6a9e0311221a5.webp' /></p><p>
</p><p>
எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட PET Scan இயந்திரம், சிரிலிய சவிய அமைப்பினால் கொள்வனவு செய்யப்படவில்லை என்றும், அது சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால், சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட PET Scan இயந்திரத்தை கொள்வனவு செய்வதாகக் கூறி நிதி திரட்டப்பட்டதன் மூலம் மோசடி ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048</id>
            <summary type="text">அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல் கொடுக்கும் குழுக்களைத் தடுக்கும் சக்தி தமக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p> இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8503ccc2-047e-4a7f-898d-0fec97ec10de/26-6a9e0d89d65a2.webp' /></p><p>
தேசிய மக்கள் சக்திக்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக முன்வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனவும், அரசாங்கம் எவரையும் அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னார்வ அடிப்படையில் அரசாங்கத்தின் சார்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவேரை மதிப்பதாகவும் பாராட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவர்கள் பணத்திற்காக எழுதுபவர்களோ, கூலிக்குச் சேறுபூசுபவர்களோ அல்லது பணத்திற்காகக் கருத்துகளைப் பதிவிடுபவர்களோ அல்லர். தமது இயக்கத்திற்காகத் தன்னார்வமாக முன்வரும் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தன்னார்வமாக உழைக்கும் இத்தகைய படைகள் தானாகவே உருவாகின்றன எனவும் இவ்வாறான படைகளே முற்போக்கு மக்கள் இயக்கங்களைப் பாதுகாக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
பிற எந்தவொரு சக்தியையும் விட, முற்போக்கு மக்கள் இயக்கங்கள் மூலம் தானாகவே உருவாகும் பரந்த மக்கள் சக்தியே மிகவும் வலிமையானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அத்தகைய சக்தி உருவாகுவது நல்லதே தவிர, அதைத் தடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விசா விதியில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247"></link>
            <id>https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247</id>
            <summary type="text">இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.</p><p>

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15, 2026 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்கு
விசா இன்றி பயணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இலங்கை பயணிகள்</h2><p>

மேலும் செப்டம்பர் 15 முதல் தாய்லாந்து செல்லும் அனைத்து இலங்கை பயணிகளும்
புறப்படுவதற்கு முன்பே உரிய விசாவைப் பெற வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d795e6-5e5c-4d98-92dc-473aa47289bf/26-6a9e0b9b51252.webp' /></p><p>

அத்துடன் விசா விண்ணப்பங்களையும் அதற்கான கட்டணங்களையும் தாய்லாந்தின்
அதிகாரப்பூர்வ இணையவழி e-Visa முறைமை மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>

இதேவேளை கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் நேரில் சமர்ப்பிக்கப்படும் விசா
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது.</p><h2>&nbsp;விசா இரத்து</h2><p>
</p><p>
எனவே செப்டம்பர் 15-க்கு முன்னர் ஏற்கனவே உள்ள விசா விலக்கு முறையின் கீழ்
தாய்லாந்திற்குள் நுழையும் பயணிகள், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் வரை
தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05c0b24-9742-4ffb-8adb-9a2f5e2d25f9/26-6a9e0b9c1e27f.webp' /></p><p>

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர
ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரச அமைச்சரவை இந்த முடிவை
எடுத்துள்ளது.
</p><p>
இது குறித்த "புதிய விசா நடவடிக்கைகள்" பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி!மெல்பேர்ன் நகரில் நடந்த அதிர்ச்சிக்கும் சம்பவங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.</p><p>தொழிலதிபர் நிமல் பெரேராவை நாமல் தொடர்பில் சாட்சியமளிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவிலும் பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்</h2><p>

நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார். </p><p>ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. </p><p>கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
</p><p>
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e69677-6fbf-4574-a2f3-3c5249c9250c/26-6a9e0b09be350.webp' /></p><p>இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். </p><p>அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி</h2><p>நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb41ded-a7b0-4a56-a30e-b9be7029fe66/26-6a9e0b0a80c15.webp' /></p><p>எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் 10 கைதிகளுடன் நாமல்! அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 இந்த கைது நடவடிக்கை மட்டுமல்லாது, 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் குரூப் (Krrish Group) தொடர்பான 70 மில்லியன் ரூபா வழக்கு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
</p><p>
இந்த வழக்குகள் அனைத்தும் நல்லாட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதும் அதன் பணிகளைத் தொடர்கிறது.

தற்போதைய சூழலில், நாமல் ராஜபக்சவுக்கு உடனடியாக பிணை கிடைப்பது கடினம் போன்று காணப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் 10 கைதிகளுடன் தங்கியிருக்கிறார்.அவருக்கு சிறைச்சாலைக்குள் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p>

மேலும், அவர் எந்தவிதமான நோய் பாதிப்புகளும் இன்றி நலமாக இருப்பதாக சிறைச்சாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>

 இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:56:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக போர்சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம், மக்கள் மீது திணிக்கவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339"></link>
            <id>https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339</id>
            <summary type="text">உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 பேருவளையில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>
 பேருவளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>70 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழிக்கப்பட்ட ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நீண்டதும் சவாலானதுமான ஒரு பயணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/562fe399-63f6-42ab-9384-60300a8d7cd5/26-6a9e0ac940c7f.webp' /></p><p>
எனினும், உலகில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் மக்களுக்கு அதன் சுமை தெரியாத வகையில் செயற்பட தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>இதனால் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்த அனுமதிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>வேறு அரசாங்கம் இருந்திருந்தால், இந்தப் போரைச் சாட்டாக வைத்து பெரிய சூதாட்டம் நடத்தி, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை எனக் கூறி விலைகளை உயர்த்தியிருப்பார்கள். மக்கள் மீண்டும் வரிசைகளில் நின்றிருப்பார்கள். </p><p>ஆனால், நமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்படவில்லை. மாறாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை படிப்படியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் போன்ற சவால்களின் போதும் அரசாங்கம் மிகவும் திறம்பட தலையிட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>உலகில் நிலவும் போரின் தாக்கம் கூட மக்களுக்குத் தெரியாத வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய சாதனை என ரில்வின் சில்வா மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T00:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/schools-to-reopen-from-tomorrow-1788741297"></link>
            <id>https://tamilwin.com/article/schools-to-reopen-from-tomorrow-1788741297</id>
            <summary type="text">அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(7) முதல் ஆரம்பமாகவுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(7) முதல் ஆரம்பமாகவுள்ளன.
</p><p>
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.</p><h2>மீண்டும் திறப்பு</h2><p>
</p><p>
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5055e311-f52f-4397-bbe7-dcd195d7c573/26-6a9e07e5ee7fe.webp' /></p><p>

இதற்கான பரீட்சை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரும்பப் பெறமாட்டோம்… நிறைவேற்றியே தீருவோம்! 22ஆவது திருத்தம் குறித்து அநுர அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-22nd-amendment-will-certainly-be-passed-anura-1788737974"></link>
            <id>https://tamilwin.com/article/the-22nd-amendment-will-certainly-be-passed-anura-1788737974</id>
            <summary type="text">&amp;nbsp;உத்தேச 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்
பெறப்போவதில்லை என்றும், அது கட்டாயம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்றும்
ஜனாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உத்தேச 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்
பெறப்போவதில்லை என்றும், அது கட்டாயம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்றும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் அறிவித்துள்ளார்.
</p><p>
களுத்துறை - புளத்சிங்கள பகுதியில் நேற்று(6) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>22ஆவது அரசமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>
இந்த அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று ஊடகச்
செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>இந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் அது நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மேற்படி கூட்டத்தில் உறுதிபடக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

"நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47a5aec-4e36-41f7-ad8f-bf9ca3327ceb/26-6a9dfbc60d263.webp' /></p><p> அதற்காகத் தேவையான
அரசமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம். நாங்கள் பயமின்றி முன்னோக்கிச்
செல்வோம். அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில்
இருந்தவர்கள் அச்சமடைவார்கள். தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள். உலக
அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள்.</p><p>

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களை மக்களுக்காகவே
எடுக்கின்றோம். எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப்
பெறமாட்டோம்.
</p><p>
22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். பத்திரிகைகளில் 18ஆம்
திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். தீர்ப்பு
கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம்.

இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T23:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கப்பலில் இந்தியா சென்ற 13 பேருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/13-sri-lankans-returning-india-through-kks-port-1788736610"></link>
            <id>https://tamilwin.com/article/13-sri-lankans-returning-india-through-kks-port-1788736610</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் 13 பேர் மீது இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><h2>காங்கேசன்துறை துறைமுகம்</h2><p>

இதனையடுத்து, குறித்த 13 பேரிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fee09373-4631-4bea-b924-466322a1698d/26-6a9df6760ddbf.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த 13 பேரும் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
காங்கேசன்துறை பொலிஸார், குறித்த 13 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T23:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் மர்மமாக செத்து கரையொதுங்கும் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/washing-ashore-hundreds-thousands-dead-small-fish-1788730981"></link>
            <id>https://tamilwin.com/article/washing-ashore-hundreds-thousands-dead-small-fish-1788730981</id>
            <summary type="text">முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக
லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி
மக்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக
லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

தற்போது நிலவும் அதிக வெப்பநிலையின் காரணமாகவே இவ்வாறு மீன்கள் பெருமளவில்
உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><h2>லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்&nbsp;</h2><p>
</p><p>
மாத்தளன் சிறுகடல் கடற்கரைப் பகுதியில் சிலாப்பி, நெத்தலி, மணலை, சூடை, காரல்
உள்ளிட்ட பல்வேறு வகையான சிறிய மீன்குஞ்சுகளே அதிகளவில் இறந்து
கரையொதுங்கியுள்ளன.
</p><p>
அத்துடன், கடற்கரைப் பகுதியில் உப்பு உறைந்து படிந்த நிலையில் காணப்படுவதும்
அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ff9414-e6ce-4726-bdf3-b08b51db4a7f/26-6a9ddf61cbec5.webp' /></p><p>
லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் கரையோரத்தில் இறந்து கிடப்பதை பார்வையிடுவதற்காக
மக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதுடன் சிலர் கரையொதுங்கிய மீன்குஞ்சுகளை
அள்ளிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. </p><p>எனினும், மீன்களின் திடீர்
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:23:18+00:00</updated>
        </entry>
    </feed>
