<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-02T11:27:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சம் வந்திருக்கும் ! ஸ்ரீநேசன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sentences-imposed-former-official-srineesan-1785666126"></link>
            <id>https://tamilwin.com/article/death-sentences-imposed-former-official-srineesan-1785666126</id>
            <summary type="text">முன்னான் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் தொடர்பில் உயிர்த்த
ஞாயிறு தாக்குதலை இயக்கிய சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சம் வந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னான் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் தொடர்பில் உயிர்த்த
ஞாயிறு தாக்குதலை இயக்கிய சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சம் வந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மரண தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. நினைத்தால் வேதனை தான். இதனை நினைத்து அவரது குடும்பம்
மிகவும் வேதனைப்படுவார்கள். </p><p>ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின் போதும் 269 அப்பாவி பக்தர்கள்
கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500 இற்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுத்தவில்லை
என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p></p><h2>தண்டப்பணம்</h2><p> </p><p>ஆகவே ஒரு பக்கம்
அவரையும் அவரது குடும்பத்தையும் நினைத்து சற்று வேதனை பட்டாலும் 269 அப்பாவி
மக்கள் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது
கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் கடமையை சரிவர செய்யவில்லை அதன் காரணமாக அவருக்கு
மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec362f7-a59b-498a-b66e-664b03836ad4/26-6a6f2659d6809.webp' /></p><p>



இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு
இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏழரைக்
கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி
ரூபா தண்டப்பணம் செலுத்தியவர்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p> </p><p>இன்னும் ஒருவர் 10 கோடி தாண்ட பணம்
செலுத்தியவர் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி அவர் இப்போது
சிந்திப்பார் ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது
என சிந்திப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0a8f1c5-787a-4af6-afd6-200b115f2988/26-6a6f26592b59f.webp' /></p><p>
</p><p>


அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக
இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கலக்கம்.
தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான
வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. </p><p>இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான
முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல்
பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க
கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிச்டர் அளவில் 5.9 ஆகப் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-earthquake-in-new-zealand-1785667880"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-earthquake-in-new-zealand-1785667880</id>
            <summary type="text">நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று(2) ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று(2) ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜெர்மன்
புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நிலநடுக்கம்</h2><p>
</p><p>
இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில்
மையம் கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1146eb-f404-479a-9542-daab58fd629c/26-6a6f2342e0b8b.webp' /></p><p>
</p><p>
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள்
உடனடியாக வெளியாகவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-escapes-from-galle-prison-1785667930"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-escapes-from-galle-prison-1785667930</id>
            <summary type="text">காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(02.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்து. </p><p>

இவ்வாறு தப்பிச் சென்ற கைதி, அம்பலங்கொட, குளியாபிட்டிய, கலகொட பகுதியைச் சேர்ந்த அகம்போடி திலீபா சம்பத் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

சுவரை தாண்டி தப்பியோடிய கைதி</h2><p>
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர், கொள்ளை குற்றச்சாட்டுகளின் பேரில் பாலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகள் தொடர்பாக, அவர் ஜூன்(22) முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c022d8b0-b885-4798-8f97-d139ac75f0cb/26-6a6f2286164a2.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து, இன்று(02) காலை கைதிகள் பட்டியலைச் சரிபார்த்தபோது, ​​இந்தக் கைதி சிறையின் பாதுகாப்புச் சுவரைத் தாண்டி குதித்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>

மேலும், இந்த நபர் இதற்கு முன்னர் அங்குனகொலப்பலெஸ்ஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் சுவரைத் தாண்டி தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்கள் போன்று ஆட்சி செய்கின்றாரா அநுர..! காணி சுவீகரிப்புக்கு தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-struggle-for-land-acquisition-1785666821"></link>
            <id>https://tamilwin.com/article/continued-struggle-for-land-acquisition-1785666821</id>
            <summary type="text">ராஜபக்சர்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். </p><p>

வலிகாமம் - வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தி
ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின், முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2> 


காணி சுவீகரிப்பு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என ஆட்சிக்கு வந்த
அரசாங்கம் மக்களின் உரிமைகளை ஏற்க மறுக்கின்றது. தற்போது ஆட்சியில்
இருப்பவர்களும் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த ராஜபக்சர்களையோ அல்லது மாறி
மாறி ஆட்சிக்கு வந்த ஏனைய அரசாங்களையோ ஒத்ததாக தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6d7b2e-e9f4-4dfd-b48b-f1a5bb275a4d/26-6a6f1d65719f7.webp' /></p><p>
</p><p>
வசாவிளானில் அமையப் பெறும் இராணுவ வைத்தியசாலை பொதுமக்களின் காணிகளை இராணுவ அதிகாரங்களை பயன்படுத்தி அங்கு வாழ்ந்த பூர்வீக கிராம மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டு, அவர்களை வீடு இல்லாதவர்கள் போன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இந்நிலையில் தற்பொது அமைக்கப்பட்டு வரும் சட்டங்கள், ஒழுங்குவிதிகளுக்கு
புறம்பான இந்த இராணுவ வைத்தியசாலையை அகற்ற வேண்டும் என மாவட்ட
அபிவிருத்திக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை நானே வழிமொழிந்தேன்.
</p><p>இந்த விடயம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அறிக்கையிலும் எனது பெயரை
கோடிட்டுக்காட்டி சகல திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டது.</p><h2>

ஓய்வு தினங்களிலும் கட்டப்படும் கட்டிடங்கள்</h2><p>
ஆனால் போயா தினங்களில் கூட அங்கு வீரியமான முறையில் கட்டிடம்
அமைக்கப்படுகின்றது. ஆகவே இங்கே நடப்பவற்றை பார்க்கும் போது வாயால் 
அரசாங்கம் பலவற்றை பேசினாலும் செயலளவில் ராஜபக்சர்களை ஒத்ததாகவே
இருக்கின்றது. 

நாட்டில் இலஞ்சத்தினையும் ஊழலையும் ஒழிக்கின்றார்கள் அதனை நாம்
வரவேற்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5973345-95d4-4b1f-9511-a489177fb84f/26-6a6f1d6479195.webp' /></p><p>ஒரு இனத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அரச நடவடிக்கைகள், படுகொலைகள், இராணுவ மயமாக்கம் பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. </p><p>


இலங்கையில் வாழும் தமிழர்கள் என்றால் எதையும் செய்ய முடியும் என்ற சிங்கள பேரினவாத மனநிலை இன்றைய ஆட்சியாளர்களின் உள்ளங்களுக்குள்ளும் உள்ளதா எனக் கேள்வி எழுப்புகின்றோம்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-near-a-shopping-mall-in-the-us-1785666005"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-near-a-shopping-mall-in-the-us-1785666005</id>
            <summary type="text">அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள &#039;ட்வின் ஃபால்ஸ்&#039; நகரத்தில்
அமைந்திருக்கும் ஒரு பரபரப்பான வணிக வளாகப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்
சூட்டுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள 'ட்வின் ஃபால்ஸ்' நகரத்தில்
அமைந்திருக்கும் ஒரு பரபரப்பான வணிக வளாகப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததுடன்
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இடாஹோவின் ட்வின் ஃபால்ஸ் நகரில் உள்ள 'இன்-என்-அவுட் பர்கர்' உணவகம் அருகே
நேற்று(1) சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் இந்தத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
நகர செய்தித் தொடர்பாளர் ஜோஷ் பால்மர் மற்றும் பொலிஸ் தலைவர் மேத்யூ ஹிக்ஸ்
ஆகியோர் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும்,
இதனால் பொதுமக்களுக்கு இருந்த ஆபத்து முழுமையாக நீங்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4abe5d7e-5371-4b4c-b9b0-b0f775982ed3/26-6a6f1c7cc8078.webp' /></p><p>
</p><p>
தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தைக் கண்டறியவும், இந்தத் துப்பாக்கிச்
சூட்டிற்கான பின்னணி மற்றும் நோக்கத்தை ஆராயவும் பொலிஸார் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

இச்சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள
வீதிகளும், அருகில் இருந்த பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகளின் சோகமான முடிவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/twin-sisters-survive-in-jaffna-1785659418"></link>
            <id>https://tamilwin.com/article/twin-sisters-survive-in-jaffna-1785659418</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (01.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><h2>

இரட்டை சகோதரிகளின் சோகமான முடிவு</h2><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ வைத்து உயிரைமாய்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8385e44-6513-41c1-b3b0-06f5915134ad/26-6a6f039b41a14.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து இருவரையும் மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று (01) அதிகாலை உயிரிழந்துள்ளனர்.</p><p> 

“வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால்..” இவ்வாறு செய்ததாக அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-02T10:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறையில் வெடித்த கலவரம் - உயிரிழந்த கைதி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-information-deceased-prisoner-1785658582"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-information-deceased-prisoner-1785658582</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>கைதி தொடர்பில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
இந்நிலையில், வத்தளை- ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46651a23-a6c4-48bf-82da-28e4bd948056/26-6a6f1a0b48a0f.webp' /></p><p>
</p><p>
மோட்டார் சைக்கியொன்றினை திருடியமை மற்றும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

இதன்போது கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்துள்ளார்.</p><h2>பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து மஹர சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்து கைதிகளும் தற்போது அவரவர் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இருப்பினும், சிறையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T10:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக் கலவரத்தின் எதிரொலி..! பலப்படுத்தப்பட்டுள்ள முக்கிய சிறைகளின் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-tightened-at-prisons-islandwide-1785656657"></link>
            <id>https://tamilwin.com/article/security-tightened-at-prisons-islandwide-1785656657</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (SDIG) சஜீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (SDIG) சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (02) மஹர சிறையில் நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,

 வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய சிறைகளின் பாதுகாப்பிற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p></p><h2>சிறைகளின் பாதுகாப்பு</h2><p>

கலவரத்தின் போது ஏராளமான கைதிகள் சிறைச் சொத்துக்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f28eec7d-591d-45bc-9367-c0f799800626/26-6a6ef85e7eebc.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இன்று காலைக்குள், சிறைகள் திணைக்களம், இலங்கை பொலிஸ், விசேஷ செயலணி (STF), இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகள் மூலம் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
</p><p>
அடுத்த சில மணிநேரங்களில் சிறையை முழுமையாகப் பாதுகாக்கவும், அவ்விடத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iRkijW3LofU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளினதும் அதிகாரிகளினதும் உயிர்களுக்கு ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-is-big-threat-to-prisoners-says-namal-1785664281"></link>
            <id>https://tamilwin.com/article/there-is-big-threat-to-prisoners-says-namal-1785664281</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளது உயிர்களுக்கு பாரிய ஆபத்து நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளது உயிர்களுக்கு பாரிய ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம் பெற்ற கலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd0e0eea-ed74-433a-a295-7eaa84f3e1cf/26-6a6f131abc121.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலையில் இடம்பெற்ற இரண்டாவது வன்முறை சம்பவம் இது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>மிகக் குறுகிய காலத்தில் இரண்டாவது தடவையாக இவ்வாறான கலவரம் சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிறைச்சாலையில் போதியளவு பாதுகாப்பு இல்லை என குற்றம் சுமத்தி நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை முன் வைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பின் சுமார் 43 ஆயிரம் கைதிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு தெளிவாகவே போதிய அளவு வசதிகள் கிடையாது என தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் இன்னமும் பதவியில் அமர்த்தப்படவில்லை தற்பொழுது பதில் சிறைச்சாலை ஆணையாளர் ஒருவரே கடமைகளை மேற்பார்வை செய்து வருகின்றார் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஜனாதிபதியின் தேவைக்கு அமைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு பொருத்தமான அதிகாரியை இதுவரையில் நியமிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இந்த சிறைச்சாலை கட்டமைப்பில் பாரிய சமூகப் பிரச்சினை காணப்படுகின்றது, சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பாரதூரமான அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>அவ்வாறு செய்யத் தவறினால் இந்த நிலைமை பாரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T09:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொத்துவில்- பசறிச்சேனையில் ஊர் மக்களை வீதிக்கு விரட்டிய காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-rampages-in-pasarichenai-1785662100"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-rampages-in-pasarichenai-1785662100</id>
            <summary type="text">அம்பாறை- பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு(1.8.2026) புகுந்த
காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் அந்தப் பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு(1.8.2026) புகுந்த
காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் அந்தப் பகுதியில் பெரும் அச்சம் நிலவியது.
</p><p>
கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார்
ஒன்று திரண்டு வெளியேற்ற முயன்றபோது, யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால்
பொதுமக்கள் நாலா பக்கமும் தெறித்து ஓடினர். </p><p>எனினும், அதிர்ஷ்டவசமாகவும்
இறைவனின் அருளாலும் பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களோ உடைமைச் சேதங்களோ இன்றி
யானை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளது.</p><p></p><h2>அட்டகாசம்</h2><p>

கிராமத்துப் பகுதி இளைஞர்கள் துணிச்சலுடனும் மிகுந்த பொறுப்புடனும்
செயற்பட்டு, யானைக்கு எவ்வித ஆபத்தும் இன்றி அதனைப் பாதுகாப்பான முறையில்
காட்டுப் பகுதிக்குள் அனுப்புவதற்கு உதவினர்.
</p><p>
இது குறித்து அப்பகுதி முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் அதிகளவிலான யானைக்கூட்டங்கள் உலாவுவது
அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0556bed9-8aca-464f-a6ab-e177fad5a6f6/26-6a6f0ea106475.webp' /></p><p> </p><p>எனவே, பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக இரவு நேரங்களில்
தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். </p><p>ஒவ்வொருவரின்
உயிரும் பெறுமதியானது என்பதால், உயிர் அல்லது உடைமைச் சேதங்கள் ஏற்படாத
வகையில் மிகவும் அவதானத்துடன் பொறுப்பாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:39:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/take-action-against-former-ministers-homes-1785661307"></link>
            <id>https://tamilwin.com/article/take-action-against-former-ministers-homes-1785661307</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது, ​​ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முன்மொழிவுகள் மீளாய்வு</h2><p>

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது நிர்வாகத் துறை, உள்விவகாரத்துறை மற்றும் உள்ளூராட்சித் துறை ஆகியவற்றிற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ. 60,430.04 மில்லியன் மூலதனச் செலவினம் மற்றும் ரூ. 706,226.83 மில்லியன் தொடர் செலவினம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள், அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d8a442-9167-43e1-8399-5e074cf4d015/26-6a6f0dddd4855.webp' /></p><p>

பிராந்திய சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை அடையும் வகையில், பிராந்திய நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக உருமாற்றுவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iRkijW3LofU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-02T09:29:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொல்கொல்ல அணையின் வான் கதவுகள் திறப்பு! அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-spillway-gates-of-the-polgolla-dam-opened-1785659514"></link>
            <id>https://tamilwin.com/article/two-spillway-gates-of-the-polgolla-dam-opened-1785659514</id>
            <summary type="text">பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.அதன்படி, இன்றையதினம்(2.8.2026)&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, இன்றையதினம்(2.8.2026)&nbsp; இரண்டு வான் கதவுகளை தலா இரண்டு அடிகள் வீதம்&nbsp;திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p> </p><p>

இதன் மூலம் வினாடிக்கு 3,940 கனஅடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகப் பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டுப் பொறுப்புப் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f84a87-8e3a-49d5-9086-89b8ccb6160b/26-6a6f04d8857f2.webp' /></p><p> </p><p>

மகாவலி கங்கையின் கீழ்நோக்கிய தாழ்நிலப் பகுதிகள் மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், தேவைப்படின் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் வெடிக்கும் மோதல் - நிர்வாகத்தின் தவறே இது..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-clash-criticism-anura-government-1785661343"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-clash-criticism-anura-government-1785661343</id>
            <summary type="text">இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>அந்த அரசாங்கத்திற்கு நாட்டை அல்ல சிறைச்சாலையை கூட நிர்வாகம் செய்யக்கூடிய திறமை இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><h2>கைதிகள் அரசாங்கம் பொறுப்பு</h2><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>எனவே கைதிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd47e168-4788-4280-be59-5ff3ec24ee89/26-6a6f08045729c.webp' /></p><p>
</p><p>அவ்வாறு அரசாங்கத்திற்கு செய்ய முடியாவிட்டால் நாட்டின் பொறுப்பை வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் முதல் தடவையாக 11 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இவ்வாறான கலவரம் இடம் பெற்ற நிலையிலும் அரசாங்கம் ஏனைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்ய தவறி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பாக மஹர சிறைச்சாலையில் வன்முறை இடம்பெற்றமையை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>அரசாங்கத்திற்கு சிறைச்சாலை ஒன்றை நிர்வாகம் செய்யக்கூடிய திறன் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iRkijW3LofU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு - ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிவு - சிறீதரன் எம்.பி இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalist-arumugaraja-sabeswaran-passes-away-1785660321"></link>
            <id>https://tamilwin.com/article/journalist-arumugaraja-sabeswaran-passes-away-1785660321</id>
            <summary type="text">இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன
ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த
பத்திரிகையாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன
ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த
பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத்
துறைக்குப் பேரழிவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மூத்த பத்திரிகையாளர்&nbsp;</h2><p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

​</p><p>.இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட
போரின் பேரழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும், உயிராபத்தான
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி உலகிற்குத் துணிவுடன் கொண்டுவந்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2924d999-2a09-44e2-9fcd-f527325a83e0/26-6a6f073556859.webp' /></p><p>
</p><p>ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த அரசியல் தளத்தில் உறுதியோடு நின்று, தமது
பேனாவை ஆயுதமாக ஏந்தி களத்தில் நிற்கும் ஒரு செய்தியாளராகப் போராடியவர் அமரர்
சபேசன், ​ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சூழலிலும், அஞ்சாது களத்தில்
நின்று பணியாற்றியதோடு, யாழ். ஊடக அமையத்தின் தலைவராக இருந்து தமிழ்
ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல்
கொடுத்தவர். </p><p>தனது மும்மொழி ஆற்றலால் சர்வதேச ஊடகங்களுக்கும் ஈழத் தமிழர்களின்
அவலக் குரலைத் துல்லியமாகக் கடத்தியவர்.

​போர்க்காலத்திலும் அதன் பின்னரான நெருக்கடிகளிலும் தமிழ் மக்களின்
குரலாகவும், ஊடகத்துறைக்கே முதுகெலும்பாகவும் திகழ்ந்த ஒரு காத்திரமான ஆளுமையை
இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.</p><p> அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் தமிழ் பேசும்
மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

ஊடகப் போராளி சபேசன் அவர்களுக்கு எனது புகழஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அவரின்
பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும்
பகிர்ந்துகொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பதவி காலத்தில் அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691"></link>
            <id>https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அநுரகுமார உள்ளிட்ட தரப்பினர் ஊழல் ஒழிப்பு தொடர்பான ஏதோ ஒரு அமைப்பில் அங்கம் வகித்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊழலை ஒழிக்க பதவிக்கு வந்த பூஜித்</h2><p>ஊழல்களை ஒழிப்பதற்கு எங்களுக்கு இந்த பொலிஸ்மா அதிபர் தான் தேவை என்று பூஜித் ஜயசுதந்தரவை, அநுரகுமாரா தரப்பினரே பரிந்துரை செய்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p>ரணில் விக்ரமசிங்கவை வீதியில் கண்டால் இதனை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62bf550e-4abf-4df3-b0b7-74765578b098/26-6a6efd44e7907.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்கவே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>தமக்கு பூஜித் ஜயசுந்தரவடன் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும், பூஜித் பொாலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய காலப்பகுதியில் போலி கடவுச்சீட்டு விவகாரம் ஒன்றில் தம்மை சிக்கவைத்தனர்.</p><p>இருப்பினும், அந்த குற்றச்சாட்டுகளில் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருந்ததாகவும், அதனால் அவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-cant-administrate-prisons-1785659475"></link>
            <id>https://tamilwin.com/article/npp-cant-administrate-prisons-1785659475</id>
            <summary type="text">இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>அந்த அரசாங்கத்திற்கு நாட்டை அல்ல சிறைச்சாலையை கூட நிர்வாகம் செய்யக்கூடிய திறமை இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>எனவே கைதிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அவ்வாறு அரசாங்கத்திற்கு செய்ய முடியாவிட்டால் நாட்டின் பொறுப்பை வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் முதல் தடவையாக 11 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இவ்வாறான கலவரம் இடம் பெற்ற நிலையிலும் அரசாங்கம் ஏனைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்ய தவறி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பாக மஹர சிறைச்சாலையில் வன்முறை இடம் பெற்றமையை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>அரசாங்கத்திற்கு சிறைச்சாலை ஒன்றை நிர்வாகம் செய்யக்கூடிய திறன் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T08:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் வீடொன்றில் கைத்தொலைபேசி திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mobile-phone-stolen-while-charging-in-a-house-1785657676"></link>
            <id>https://tamilwin.com/article/mobile-phone-stolen-while-charging-in-a-house-1785657676</id>
            <summary type="text">அம்பாறை- நற்பிட்டிமுனை
பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய
குற்றச்சாட்டில் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

இச்சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- நற்பிட்டிமுனை
பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய
குற்றச்சாட்டில் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்
இன்று(2) முறைப்பாடு செய்திருந்தார்.</p><p>

குறித்த முறைப்பாட்டில், தனது வீட்டில் ரூபா 35,000 பெறுமதியான
கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு தனது தேவை நிமித்தம் வெளியே சென்று
திரும்பியபோது, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு தொலைபேசி களவாடப்பட்டு
இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>கைது</h2><p>
</p><p>
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த
வீட்டின் எதிர் வீட்டில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞனைச் சந்தேகத்தின்
பேரில் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78b0eab-a848-4fb7-862b-107222618ce3/26-6a6efcca37d1f.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர் திருடப்பட்ட கைத்தொலைபேசியைத் தனது உறவினர் ஒருவரின் வீட்டில்
மறைத்து வைத்திருந்த நிலையில், அதனை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். </p><p>அத்துடன்,
சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர்
என்பதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் இவர் மீது 7
குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd2711c8-ff10-41b1-aa68-95c4c95e9dac/26-6a6efccadc80e.webp' /></p><p>

சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்காகக் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊர்காவற்துறையில் சட்டவிரோதமாக ஆமைகளை வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-with-turtle-at-kayts-1785650562"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-with-turtle-at-kayts-1785650562</id>
            <summary type="text">ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்கூடல் பகுதியில்&amp;nbsp;ஆமைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் கைதாகியுள்ளார்.&amp;nbsp;குறித்த சம்பவம் நேற்றைய த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்கூடல் பகுதியில்&nbsp;ஆமைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் கைதாகியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்றைய தினம் (01.08.2026) பதிவாகியுள்ளது.</p><p>இதன்போது அவரிடமிருந்து ஆறு கடலாமைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>பிணையில் செல்ல அனுமதி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d4c955-0f07-4951-84ba-72db5884922e/26-6a6efb448e58a.webp' /></p><p>தொடர் விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை
பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:10:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றநிலை! பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269"></link>
            <id>https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269</id>
            <summary type="text">புதிய இணைப்புராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. </p><p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய, மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலை பதற்றநிலை காரணமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p>

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் நேற்று இரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62aecf3-f6bd-40a9-adca-9fc0d8455372/26-6a6eac1a4760d.webp' /></p><p>

இதன்படி, மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே அப்பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அருகிலிருக்கும் பொலிஸ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>மஹர சிறையில் நிலவிய பதற்றமான சூழல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அனைத்து கைதிகளையும் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக இடமாற்றப்படும் மஹர சிறைச்சாலை கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-inmates-from-mahara-prison-sent-to-boossa-1785654819"></link>
            <id>https://tamilwin.com/article/20-inmates-from-mahara-prison-sent-to-boossa-1785654819</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பல கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பல கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கமைய, மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு&nbsp;</h2><p>நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1d9b7a-7691-4c72-9d5c-17a7f0c14444/26-6a6ef55489346.webp' /></p><p>இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார். 
&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு சிறைச்சாலையினுள் நிலவிய சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸ் ஊரடங்கு உத்தரவு</h2><p>அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.</p><p>இதன்போது கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பாதுகாப்புத்தரப்பினர் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்திய நிலையில், மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 
&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T07:46:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/traffic-disrupted-nuwara-eliya-tree-fell-1785655418"></link>
            <id>https://tamilwin.com/article/traffic-disrupted-nuwara-eliya-tree-fell-1785655418</id>
            <summary type="text">&amp;nbsp;ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய
மரம் ஒன்று முறிந்து பேருந்து மீது விழுந்த சம்பவத்தால் சில மணி நேரம்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய
மரம் ஒன்று முறிந்து பேருந்து மீது விழுந்த சம்பவத்தால் சில மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
</p><p>திம்புல்லபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று(2.8.) காலை சுமார் 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக வீதியோரத்தில்
இருந்த பாரிய மரம் திடீரென முறிந்து, அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துரித நடவடிக்கை</h2><p>
</p><p>இந்தச் சம்பவத்தால் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து சில மணி
நேரம் முற்றாகத் தடைபட்டது. </p><p>பின்னர், பிரதேச மக்கள் துரிதமாக நடவடிக்கை
எடுத்து மரக்கிளைகளை அகற்றியதைத் தொடர்ந்து ஒரு வழிப் போக்குவரத்து ஏற்பாடு
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4cc6094-9e7a-44a0-b433-35ffb1851c5c/26-6a6ef4c8774d0.webp' /></p><p>
</p><p>அதன்பின்னர், தோட்ட நிர்வாகத்தினரும் பிரதேச மக்களும் இணைந்து மரத்தை
முழுமையாக வெட்டி அகற்றியதையடுத்து, வீதிப் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு
கொண்டுவரப்பட்டது.
</p><p>சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், மரம் விழுந்ததில் குறித்த
பஸ்ஸிற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம் - 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-protest-demanding-the-release-of-land-1785655571"></link>
            <id>https://tamilwin.com/article/another-protest-demanding-the-release-of-land-1785655571</id>
            <summary type="text">தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டமொன்றை இன்று(2) ஆரம்பித்துள்ளனர்.

வயாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டமொன்றை இன்று(2) ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
வயாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வயாவிளான் மக்கள்</h2><p>
</p><p>
40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பால் வெளியேறியிருந்த மக்கள் தமது வலிகளை
சுமந்தவாறு முன்னெடுத்திருந்த இந்த போராட்டத்தில்
அரசே! எங்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள்,
கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே தந்துவிடு என்ற வலுவான
கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a94cb53-e8cd-4d98-aba4-914e0d0dd6fc/26-6a6ef3eb9513b.webp' /></p><p>

பேரளவில் திரண்டுவந்து தமக்கான நீதியை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்தில்
சமூக அமைப்புகள் அரசியல்வாதிகள் என பலதரப்பினரது பிரசன்னத்துடன் விவசாய
நிலங்கள் பேசட்டும், சிதைந்துபோய் கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும்
நாம் வாழ்ந்த வரலாற்றைச் சாட்சி சொல்லட்டும், எமது நிலங்கள் எமக்கு
கிடைக்கப்பெற வேண்டும் என்ற கோசங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததனர்.</p><p>
கடந்த காலங்களில் விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை இந்த அரசு உடன்
விடுவிக்க வேண்டும் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியே நாம்
போராடுகின்றோமே தவிர எவருக்கும் எதிராக நாம் இந்த போராட்டத்தை
முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:39:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[டியன்சின் தமிழ் மகா வித்தியாலய மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tientsin-tmv-student-parliament-session-1785654585"></link>
            <id>https://tamilwin.com/article/tientsin-tmv-student-parliament-session-1785654585</id>
            <summary type="text">பொகவந்தலாவ - டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் நாடளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவ - டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் நாடளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.</p><p> 

கடந்த 31ஆம் திகதி இந்த மாணவர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. </p><p>

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும், ஜனநாயக ஆட்சி செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>எமது பாடசாலையை கோபுரத்தில் ஏற்றுவோம்</h2><p> 

இந்த அமர்வில் கலந்து கொண்ட மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் தங்களது பாடசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும், தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். </p><p>

அத்துடன், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் செயற்றிட்டத்தில் மாணவர் நாடாளுமன்றத்தின் முக்கிய பங்குகள், நாடாளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e85883d-6103-4633-bb6f-d20c09632df0/26-6a6ef1339326a.webp' /></p><p> </p><p>

அத்துடன், மாணவர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. </p><p>


இதன்போது, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, பாடசாலை அதிபர் பொன் பிரபாகரன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b999de8f-389e-4e17-9403-d0a57c0da849/26-6a6ef13568ef0.webp' /></p><p> </p><p>

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, சிறந்த பேச்சாற்றலும், ஆளுமையும் மிக்க சிறந்த மாணவர் நாடாளுமன்றத் தலைவர்களை சந்தித்தமைக் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். </p><p>

கடந்த நான்கு வருடங்களாக பாடசாலை மட்டத்தில் இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்த நிலையில், நோர்வூட் பிரதேச தவிசாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நாடாளுமன்ற அமர்வினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் டியன்சின் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefea13-150f-4141-845e-0d6c07a30054/26-6a6ef134872de.webp' /></p><p> </p><p>

104 வருட வரலாற்றைக் கொண்ட பொகவந்தலாவ டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம், இதுவரையான நாட்களில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பட்டதாரிகளையும் கல்விமான்களையும், சிறந்த எதிர்கால பிரஜைகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது. </p><p>

பொகவந்தலாவ - டியன்சின் நகரத்தை அண்மித்த பல தோட்டங்களிலும் இருக்கும் மாணவர்கள்,&nbsp; ஒரே கூரையின் கீழ் கல்வி கற்கும் பாடசாலையாக டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம் விளங்குவதுடன், கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட்டத் துறைகளிலும் பாடசாலை சிறந்து விளங்குகின்றது. </p><p>

அகில இலங்கை ரீதியில் நடைபெறும், போட்டிப் பரீட்சைகள், தமிழ்த் தினப் போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகளிலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி வரும் பாடசாலை மாணவர்கள், <b>“குன்றின் மேல் அமைந்துள்ள எமது பாடசாலையை கோபுரத்தில் ஏற்றுவோம்”</b> என்ற உயர் குறிக்கோளோடு மேல் நோக்கிப் பயணிக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:33:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்பின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/america-attack-on-iran-1785653688"></link>
            <id>https://tamilwin.com/article/america-attack-on-iran-1785653688</id>
            <summary type="text">ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சமூக வலைத்தள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><h2>நிபந்தனைக்கு உட்பட்டு தாக்குதல் ரத்து</h2><p>அதில் மேலும், இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> </p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117023461141824050/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/officials-ignore-school-building-verge-of-collapse-1785654239"></link>
            <id>https://tamilwin.com/article/officials-ignore-school-building-verge-of-collapse-1785654239</id>
            <summary type="text">திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். </p><p>இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே
குடைசாய்ந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு
அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை பழைய மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
</p><p>இந்தக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே
அருகாமையில் உள்ள மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம்
1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8d4bf3-ab2e-4b82-add8-4793af2d4d33/26-6a6eedb76ba62.webp' /></p><p>
</p><p>
எனவே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடசாலை மாணவர்களின் நலனை கொண்டு
குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:12:15+00:00</updated>
        </entry>
    </feed>
