<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-29T08:22:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் டொலர்கள் தேவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573</id>
            <summary type="text">வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே இன்று(29.08.2026) தெரிவித்துள்ளார்.</p><p>இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமமான செலவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>4-5 பில்லியன் டொலர்கள் தேவை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; ஆரம்பகட்ட மதிப்பீடு 4-5 பில்லியன் டொலர்களுக்கு இடையில் உள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தேவைப்பட்டதை விட மிகக் குறைவான தொகையே நமக்குத் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>பனிப்பாறை சரிவினால், இமயமலை நதி அமைப்புகள் வழியாக பாறை, பனி, மண் மற்றும் சிதைவுகளின் ஒரு மாபெரும் வெள்ளம் பாய்ந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cbf6d0a-6900-44b6-b19f-e3405a9d797a/26-6a92882d0afab.webp' /></p><p>இதில் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர்&nbsp; காணாமல் போயுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான பேரழிவான, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு செலவிடப்பட்ட 9 பில்லியன் டொலரை விட, புனரமைப்புக்கான செலவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மின் திட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[P8A12EU ]&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம்! செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் ஏற்படவுள்ள தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கையில் வளிமண்டலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மழைப்பொழிவு</h2><p> 

மேலும் தெரிவிக்கையில், 

தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918a0d9e-2897-41dd-bff5-c05f7d873f99/26-6a928bf334ce9.webp' /></p><p> </p><p>

அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்த பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது.</p><h2>புவி வெப்பமடைதல்</h2><p> 

படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. </p><p>

புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. </p><p>இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபான உரிமத்தில் பல மில்லியன் ரூபாய் ஊழல்..! ரணிலின் உறவினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&amp;nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மகாவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>ரணிலின் சகோதரரின் மகன்</h2><p>
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சய மகாவத்த இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். </p><p>

நாட்டில் மதுபான உற்பத்தி உரிமங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும், தற்போது 13 உரிமங்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e1fc4-a333-4086-bbf3-a473d80cdf49/26-6a928b18192b7.webp' /></p><p> 

இவ்வாறான பெறுமதிமிக்க உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக பெருமளவு நிதி முதலீடு தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் உறவினருக்கு இவ்வாறான உரிமம் வழங்கப்பட்டமை, இதன் பின்னணியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும் எனவும் மகாவத்த தெரிவித்தார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வாரத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நெருங்கிய தொடர்பு</h2><p>
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரஞ்சன் குமாரவும் கலந்துகொண்டார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அவர் விமர்சித்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a66e42a-7f9c-4ac1-bd74-3782e1efea05/26-6a928b18eb92e.webp' /></p><p>
</p><p>
மேலும், மாஃபியா உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.</p><p> 

அவர்கள் மீது இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நிரஞ்சன் குமார கேள்வி எழுப்பினார்.
</p><p>
இந்த ஊழல் மற்றும் திறமையின்மை குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-instructions-government-servants-1787969617"></link>
            <id>https://tamilwin.com/article/important-instructions-government-servants-1787969617</id>
            <summary type="text">அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
சில அரச அலுவலகங்கள், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அதிகாரத்தையும் பதவியையும் வெளிக்காட்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்க நிலை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அரச அலுவலக அமைப்பில் மாற்றம்</h2><p>

பழைய சுவர்களாலும் சிறைச்சாலைகள் போன்று சூழப்பட்ட இருண்ட அலுவலக அமைப்பிலிருந்து அரசத்துறை உடனடியாக வெளியே வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa0cde7a-b1ef-469f-b7ed-e642016d75b5/26-6a92885782d39.webp' />&nbsp;</p><p>

தற்போது தாம் பயன்படுத்தும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அலுவலகம் கூட ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவுக்கு பெரியதாக உள்ளது என்றும், இதுபோன்ற விசாலமான அலுவலக அறைகளின் கட்டுமானம் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அலுவலக இடம் என்பது பதவியின் அதிகாரத்தை வெளிக்காட்டும் இடமல்ல என்றும், உண்மையான தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்கு தங்கள் ஆளுமையை வெளிப்படுத்த பெரிய அலுவலக அறைகளோ விலையுயர்ந்த தளபாடங்களோ தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
</p><p>
எனவே, அரச அலுவலக அமைப்பானது, அவர்கள் ஒரு குழுவாக எளிதாக இணைந்து பணியாற்றக்கூடிய 'பணிநிலைய' (workstation) மாதிரிக்கு மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், ஒரே அமைச்சகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடப்பதால் ஆளுகையும் அரச சேவையும் கடினமாகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-lippella-gs-office-renovation-1787985208"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-lippella-gs-office-renovation-1787985208</id>
            <summary type="text">பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு, புதிய புகைப்பட பிரதி இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் ஊடாக, குறித்த கிராம சேவகர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் மாத்திரமன்றி, பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனாளர்களும் புகைப்பட பிரதி சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மக்களின் அடிப்படை தேவைகள்</h2><p>


குறித்த பகுதியிலுள்ள மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆவணங்களின் புகைப்பட
பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, கிராம சேவகர் அலுவலகங்களில் இருந்து சுமார்
இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டிய நிலை
காணப்படுகிறது.
</p><p>

இதன்மூலம் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய ஆவணங்களை பிரதியெடுப்பதற்காக
நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், கிராம சேவகர்
அலுவலகத்தின் ஊடான மக்கள் சேவையும் மேலும் துரிதப்படுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bb5e8c-e4aa-49fc-8e7a-f9455b24c9ac/26-6a927fae67aee.webp' /></p><p>இதேவேளை, என்போல்ட் பகுதியில் சுமார் 60 வருட காலமாக மின்சார வசதியின்றி
இருளில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பம் ஒன்றிற்கும் இந்த நிகழ்வின் போது
இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் வாழ்க்கை
தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e470e54-7165-43d7-b453-9907001dfb0d/26-6a927faf63d41.webp' /></p><p>இந்த நிகழ்வில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் அகஸ்டின் இரவீந்திரன், செயலாளர்
பத்மநாதன் கிருபாகரன், மலையக இணைப்பாளர் ஜெ. பத்மநாதன் கிருபாகரன், வாழ்வியல்
அமைப்பின் உறுப்பினர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை, ரா. ரூபரத்தனகுமார் லிந்துலை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பரில் போராட்டம் - நகரபிதா பகிரங்க அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-september-call-for-public-1787982827"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-september-call-for-public-1787982827</id>
            <summary type="text">யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகரசபை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகரசபையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.</p><p>
இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ்
போல்&nbsp;நேற்றைய தினம் (28.08.2026) பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வின் போது&nbsp;பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>கவனவீர்ப்புப் போராட்டம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுக சந்தியிலிருந்து செப்டெம்பர் 1ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பேரணி, பருத்தித்துறை
பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும்.</p><p>
பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்குத் தடையாகவும், நகரத்தின் புராதன
சின்னங்கள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக
அகற்றக் கோரி இந்த இரண்டாவது கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675ac03c-6686-4d92-bb75-b6fca139aabc/26-6a92760a24536.webp' /></p><p>

அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் தரப்பினர்,
வர்த்தகர்கள், கடற்றொழில் சங்கங்கள்
மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு
வழங்குமாறு&nbsp; கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய
மக்கள் சக்தி உறுப்பினர்களை தவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்
கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும்
சுயேச்சைக் குழு (ஊசி) ஆகியவை முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-regarding-lrc-lands-in-mannar-1787982969"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-regarding-lrc-lands-in-mannar-1787982969</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள
காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.&amp;nbsp;கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள
காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (28.08.2026) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்
இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மேலதிக அரசாங்க
அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை தலைவர்கள், திணைக்கள
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f631288-ffc5-4808-9cba-62077f475315/26-6a927d6950f0f.webp' /></p><h2>காணிகள் மற்றும் நிலங்கள் அடாத்தாக கையகப்படுத்தல்</h2><p>
</p><p>
இதன்போது, பொதுமக்களுக்கும் மத ஸ்தலங்களுக்கும் சொந்தமான காணிகள் மற்றும்
நிலங்கள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
</p><p>
குறிப்பாக, பொதுமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் சொந்தமானதாக காணப்படும்
LRC காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பில்
கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.</p><p>
</p><p>
மேலும் சோழ மண்டல குளம் பகுதியில் காணிகள் பயனாளிகளுக்கு வழங்குவது,
சாளம்பன் - நெடுங்குளம் பகுதியில் பயனாளிகளுக்கான காணி வழங்கல், தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/780a366c-e1ac-4bec-a1f7-cb4d97742632/26-6a927d6ab2782.webp' /></p><h2>வர்த்தமானி அறிவித்தல்கள்</h2><p>
</p><p>
மேலும், மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழு வுக்கு சொந்தமான
காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அளவீட்டுத் திட்டங்கள்
தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
காணிப் பிரச்சினை களுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து குறித்தும்
கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b376b56-3bdc-4c20-9b72-cc315db5c814/26-6a927d6c1ffaa.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனிமவள அகழ்வின் சுற்றுநிரூபங்களில் புதிய மாற்றங்கள்! மன்னாரில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-mineral-exploration-plan-to-start-in-september-1787980803"></link>
            <id>https://tamilwin.com/article/new-mineral-exploration-plan-to-start-in-september-1787980803</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில்&amp;nbsp; கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பின் புதிய சுற்றுநிரூபத்தின் நடைமுறைகள்
குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில்&nbsp; கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பின் புதிய சுற்றுநிரூபத்தின் நடைமுறைகள்
குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கலந்துரையாடலானது நேற்று (28.08.2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><h2>புதிய சுற்றுநிரூபம்</h2><p>

கனிம வளங்களை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கடந்த
காலங்களில் நடைமுறையில் இருந்த சுற்றுநிரூபங்களில் பல்வேறு மாற்றங்கள்
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, கருங்கல், கிரவல் மற்றும் மணல் அகழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்ட
பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு புதிய நிபந்தனைகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8026ed-59e7-4f83-b4c1-bd71720ea827/26-6a9271155dbe9.webp' /></p><p>அதன்படி, எதிர்காலத்தில் கனிம வள அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை
வழங்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான சிறப்புக் குழுவின்
அனுமதியும் பெறப்பட வேண்டும் என புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
புதிய சுற்றுநிருபம் இலக்கம் 26/1298/110/046, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
6ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் அதிகளவிலான
அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வீடமைப்புத்
திட்டங்கள், வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு
கருங்கல், கிரவல் மற்றும் மணல் போன்ற கனிம வளப் பொருட்கள் அதிகளவில்
தேவைப்படுகின்றன.</p><h2>கனிம வளங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள்</h2><p>
</p><p>
எனினும், குறித்த கனிம வளங்களை உரிய காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதில்
ஏற்படும் தாமதம் காரணமாக பல அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைவை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இதனைக் கருத்தில் கொண்டு, கனிம வளங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான
நடைமுறைகள் இலகுபடுத்த பட்டுள்ளதுடன், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட
தினத்திலிருந்து 45 நாட்களுக்குள் அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் என
புதிய சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec71cae7-81b9-4182-80f6-fd89725d3bd9/26-6a92711644aca.webp' /></p><p>அதேவேளை, சட்டவிரோதமான கனிமவள அகழ்வை கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றுநிரூபத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இதன்போது அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு லண்டனில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-london-to-international-day-disappeared-1787975946"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-london-to-international-day-disappeared-1787975946</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள
இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள
இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த போராட்டமானது&nbsp;சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ் மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (28.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி&nbsp;</h2><p>
ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிட்டன்
அரசு இந்த விகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், காணாமல்
ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c2af93-5fef-4f54-8c08-4b603c81ee39/26-6a925bfe4880c.webp' /></p><p>இதன்போது சர்வதேச நாடுகளின் கவனம் தேவை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன்
நிற்கின்றோம், உண்மை, நீதி மற்றும் மாண்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும்
கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி
மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவினால் ஈரானுக்கு தொடரும் அச்சுறுத்தல்! இலங்கையிடம் பாதுகாப்பு கோரி உள்நுழைந்துள்ள 20 கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-ships-seeks-safety-from-sri-lanka-1787971924"></link>
            <id>https://tamilwin.com/article/iran-ships-seeks-safety-from-sri-lanka-1787971924</id>
            <summary type="text">ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இலங்கையின் கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் சுமார் 13இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக TankerTrackers இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">ஈரானிய கப்பல்கள்</b></p><p>ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20d3929-6383-4f98-af0a-5b1cc6956df9/26-6a924fff201c9.webp' />&nbsp;&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>அதற்கமைய ஈரானிய கொடியுடன் கூடிய 13 எண்ணெய் தாங்கி கப்பல்கள் உட்பட மேலும் சில ஈரானிய கப்பல்கள் இலங்கையின் சர்வதேச கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த கப்பல்கள் மீண்டும் ஈரானிய துறைகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கையை அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக டேங்கர்ட்ரேக்கர்ஸ் இணை நிறுவனர் சமீர் மதானி தெரிவித்துள்ளார்.</p><p>

எனினும் இந்தக் கப்பல்களுக்கு இலங்கை அரசாங்கம் எந்தவொரு வசதிகளையோ அல்லது உதவிகளையோ வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>


அமெரிக்காவின் அச்சுறுத்தல்</b></h3><p>ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எனினும் இலங்கையின் கடற்பரப்பை தாண்டி, சர்வதேச கடலில் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றுக்காக பொறுப்பை நாடு ஏற்காது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af853996-a096-4b87-8efe-cda2bb30676b/26-6a924fffd227f.webp' /></p><p>அமெரிக்க போர்க்கப்பல்களின் தடை காரணமாக, கடந்த ஜூலை இரண்டாம் வாரத்திற்கு பின்னர் ஈரானின் கார்க் தீவிலிருந்து மத்திய கிழக்கு பகுதிக்கு வெளியே உள்ள எந்தவொரு இலக்குக்கும் எண்ணெய் ஏற்றப்படவில்லை.
</p><p>
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க கடற்படைத் தடையினால் 20 இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஈரான் துறைமுகங்களை நோக்கி வந்த 75 க்கும் மேற்பட்ட சர்வதேச கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-29T06:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு திடீரென சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bribery-commission-raids-ravi-s-house-1787983316"></link>
            <id>https://tamilwin.com/article/bribery-commission-raids-ravi-s-house-1787983316</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.
நாடாளுமன்ற வீதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.</p><p>
நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு இன்று (29) அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. 

</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் முன்னிலையாக தவறியதால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திராவின் முதலமைச்சரை சந்தித்தார் இலங்கையின் பிரதி உயர் ஆணையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-high-commissioner-meets-andhra-pradesh-cm-1787976517"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-high-commissioner-meets-andhra-pradesh-cm-1787976517</id>
            <summary type="text">இலங்கையின் பிரதி உயர் ஆணையர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன், ஆந்திரப் பிரதேசத்தின்&amp;nbsp;முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரதி உயர் ஆணையர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன், ஆந்திரப் பிரதேசத்தின்&nbsp;முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.</p><p>குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (28.08.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த சந்திப்பின் போது, ​​சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு, புனித யாத்திரை சுற்றுலா மற்றும் தொழில் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
வர்த்தக சமூகங்களுக்கு இடையே அதிக ஈடுபாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதன் மூலமும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதி உயர் ஆணையர் எடுத்துரைத்தார்.</p><p>
</p><p>
ஆடை மற்றும் ஜவுளித் துறையில் முதலீட்டிற்கான ஒரு இடமாக ஆந்திரப் பிரதேசத்தின் திறனை எடுத்துரைத்த மாண்புமிகு முதலமைச்சர், மேலும் பல இலங்கை ஆடை மற்றும் துணி நிறுவனங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் தங்கள் செயல்பாடுகளை நிறுவி விரிவுபடுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
</p><p>
இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையே மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், நெருங்கிய கலாச்சார உறவுகளை வளர்ப்பதற்கும் பங்களிக்கும் வகையில், புனித யாத்திரை மற்றும் கலாச்சார சுற்றுலாவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் இந்தக் கலந்துரையாடல்கள் எடுத்துக்காட்டின.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T05:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முக்கிய துறைகளுக்கு கனடாவின் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு உதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-offer-technical-investment-aid-sri-lanka-1787977359"></link>
            <id>https://tamilwin.com/article/canada-offer-technical-investment-aid-sri-lanka-1787977359</id>
            <summary type="text">இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு கனடாவின் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குவது தொடர்பில் இருதரப்பு கலந்துரையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு கனடாவின் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குவது தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று நேற்று(28.08.2026) நடைபெற்றுள்ளது.</p><p>இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.</p><h2>புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்</h2><p>

இந்தச் சந்திப்பில், இலங்கையின் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், துறைமுகத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c3c7a9-c6ec-4576-8180-1ddb5e2ced56/26-6a92649a0eec5.webp' /></p><p>திருகோணமலையில் உள்ள 61 எண்ணெய் தொட்டிகளில் 24 தொட்டிகளை மீள பயன்படுத்துவதன்&nbsp; மூலம் எரிபொருள் சேமிப்பு மற்றும் கடல்வழி எரிபொருள் விநியோக வசதிகளை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம், பயிற்சி மற்றும் நவீன உபகரணங்களை வழங்கவும், வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் கனடா தயாராக இருப்பதாக உயர் ஸ்தானிகர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T05:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/snack-prices-also-increase-1787980035"></link>
            <id>https://tamilwin.com/article/snack-prices-also-increase-1787980035</id>
            <summary type="text">சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இதன்படி, பரோட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதன்படி, பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட&nbsp;&nbsp;சிற்றுண்டிகளின்&nbsp;விலை&nbsp;அதிகரிக்கப்படவுள்ளன.</p><h2>கோதுமை மா விலை அதிகரிப்பு</h2><p>இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில்&nbsp;ப்ரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை&nbsp; 17 ரூபாவினால் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648e1c25-2d50-4838-9686-32d5e9976498/26-6a926f06c7e46.webp' /></p><p>இதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T05:36:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும் - ஜனாதிபதி அநுர தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-kumar-statement-about-sri-lankan-refugees-1787978645"></link>
            <id>https://tamilwin.com/article/anura-kumar-statement-about-sri-lankan-refugees-1787978645</id>
            <summary type="text">கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும்
மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு
கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும்
மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு
கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>
2023ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை
ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை,
கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட
'நவோதயாபுரம்' வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில்
நேற்று (28.08.2026) கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
மலையக மக்கள் எமது சகோதர மக்கள் என்ற வகையில் இந்த நாட்டின் பூரண உரிமைகளையும், வாழ்க்கையையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களின் பிள்ளைகளுக்கும் உரித்தாக்குவது
நியாயமற்றது என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.</p><h2>அமைச்சரவையில் தீர்மானம்</h2><p>
</p><p>
கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும்
மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு
கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae95c492-8cef-4043-bc83-1dcedf49e274/26-6a9268a338c02.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை
வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன்
ஒப்பந்தங்களைச் செய்யும்போது மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான
பிரிவுகளை அந்த ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.
</p><p>
நமது நாட்டின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை
இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான பொறுப்புகளை வகிக்கும் அனைத்து
நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து, முழுமையான
அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான
சட்டத்தை இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
குறிப்பிட்டார்.</p><p>
பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்த இந்தக் குடும்பங்களுக்கு
பாதுகாப்பான வீடு, தமக்கென்று இடம் மற்றும் கௌரவமான வாழ்க்கையை உரித்தாக்கும்
நோக்கத்துடன் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு
இணங்க இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40582811-88d1-4893-b345-b6eb7959c06c/26-6a9268a41202f.webp' /></p><p>
</p><p>
10 பேர்சஸ் காணி மற்றும் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட முழுமையான 50 வீடுகள்
இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு படுக்கையறைகள்,
வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை ஆகியவற்றைக் கொண்ட இந்த ஒவ்வொரு வீட்டின்
செலவும் சுமார் 32 லட்சம் ரூபாவாகும்.</p><h2>பொருட்கள் வழங்க நடவடிக்கை</h2><p> அத்துடன், புதிய வீடுகளில் குடியேறும்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட சுமார்
175,000 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பத்து பயனாளிகளுக்கு அடையாள ரீதியாக வீடுகளின் திறப்புகள் மற்றும் உரிமைப்
பத்திரங்கள் வழங்குவது ஜனாதிபதி தலைமையில் இங்கு இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7a3beb-ef9c-4655-81e0-d9f20fc7585e/26-6a9268a4d93b3.webp' /></p><p>
</p><p>
மேலும், 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின்
ஹல்துமுல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில்
நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப்
பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
</p><p>
'நவோதயாபுரம்' வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதில் காணிகளை செப்பனிடுதல் முதல்
வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுதல், வீடுகளை உறுதியாக நிர்மாணிக்கும் பணிகள்
முடியும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி
வழங்கிய தீவிர மற்றும் சிறப்பான பங்களிப்பைக் பாராட்டி, இராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும்
ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.</p><h2>பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்</h2><p>

வீட்டுப் பயனாளிக் குடும்பங்களின் நன்றியைத் தெரிவிக்கும் வகையில்
ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b0d52c-7193-4931-a55e-003a0af20774/26-6a9268a5b3d8d.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில்,

''இன்றைய தினம் இந்தப் பிரதேச மக்களுக்கு ஒரு விசேடமான ஒரு நாளாக அமையும் என
நான் நினைக்கின்றேன். இருநூறு வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டின்
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக வருகை தந்த இந்த மலையக மக்கள் எமது
சொந்த இலங்கைச் சமூகத்தின் ஒரு அங்கமாவார்கள். அவர்கள் எங்கிருந்து
வந்தார்கள், எப்போது வந்தார்கள் என்பது முக்கியமல்ல.அது வரலாறு.
</p><p>
ஆனால் இன்று எமது நாட்டில் பிறந்து, எமது நாட்டின் பொருளாதாரத்தில்
பங்கெடுத்து, இந்த மண்ணில் பிணைந்து வாழும் இந்த மக்கள் எமது நாட்டின் விசேட
உரிமைகளைக் கொண்ட ஒரு மக்களாவர். இருநூறு வருடங்களுக்கும் மேலான காலமாக,
அவர்களுக்குத் சொந்தமாக ஒரு நிலத்துண்டு கூட இல்லாத, இந்தத் தாய்நாட்டில்
உரிமையற்ற ஒரு சமூகமாகவே வாழ்கிறார்கள். தமக்கென்று ஒரு வீடு கூட இல்லாத
மக்கள் அவர்கள்.எமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் குறைந்தபட்சம் ஐந்து
அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என நாங்கள்
நினைக்கின்றோம்.</p><p>வாழுவதற்கொரு வீடு, வருமான வழி, பிள்ளைகளுக்கான கல்வி,
ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் மன அமைதி என்பன அவையாகும்.
ஆனால் நாம் இந்த மக்களிடம் கேட்டால், அவர்களின் முகங்களைப் பார்த்தால்,
அவர்களின் துன்பங்களுக்குச் செவிசாய்த்தால், இந்த ஐந்து விடயங்களில் எத்தனை
விடயங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன?எனவே தற்போதைய எமது அரசாங்கத்தின்
சவாலும், எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும் என்னவென்றால், இந்த அனைத்து
மக்களுக்கும் தேவையான அந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதே
ஆகும்.அதற்காக நாங்கள் பல வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்'' என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f61b97e-67a2-440b-a436-a053cc09f030/26-6a9268a69078d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T05:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-people-power-government-cabinet-changes-1787978893"></link>
            <id>https://tamilwin.com/article/national-people-power-government-cabinet-changes-1787978893</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் விரைவில் மாற்றமொன்று நடைபெறவுள்ளதாக பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் விரைவில் மாற்றமொன்று நடைபெறவுள்ளதாக பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
</p><p>
அதன் பிரகாரம் தற்போதைக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தெரியவந்துள்ளது.</p><h2>சில அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அதேநேரம் அமைச்சர் விஜித ஹேரத் கட்சியின் மூத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கும் முக்கியமான அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e1305c-9a31-4ccb-8f2d-418906e28786/26-6a9265c33834f.webp' /></p><p>

அதற்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.</p><p>அத்துடன், கிழக்கு மாகாணத்தின் தேசியப் பட்டியல் முஸ்லிம் அரசியல்வாதியொருக்கும், வடமாகாணத்தின் தமிழ் இளம் அரசியல்வாதியொருவருக்கும் பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை அண்மித்ததாக குறித்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T04:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து கட்டண கொடுப்பனவு முறையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-bus-payment-system-1787976971"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-bus-payment-system-1787976971</id>
            <summary type="text">போக்குவரத்து துறையின் சவால்களை வெல்வதற்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து துறையின் சவால்களை வெல்வதற்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். </p><p>கடந்த காலத்தில் நெடுஞ்சாலைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டாலும் போக்குவரத்து துறையின் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. </p><p>எனவே பொதுப் போக்குவரத்து துறையை ஈர்ப்புமிக்கதாக மாற்றுவது அரசாங்கத்தின் இலக்கு என பிரதியமைச்சர் கூறினார். </p><h2><b>பண அட்டைகள்</b></h2><p>அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7128ed3-95ec-47c8-8bcb-7f09d67f8e5a/26-6a9262119d9c6.webp' /></p><p>பேருந்துகளில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை இலங்கை போக்குவரத்து சபையோ, தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களோ முறையாக பெறாமல் இருப்பது சிக்கலாகும்.</p><p> எதிர்காலத்தில் பண அட்டைகள் மூலம் டிக்கெட் கட்டணங்களை செலுத்தக்கூடிய முறை நடைமுறைக்கு பட்சத்தில்&nbsp; இந்த நெருக்கடிக்கு தீர்வு காணாமல் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இலங்கை போக்குவரத்து சபையை முறையாக கட்டியெழுப்புவதற்கு, சேவைக்கான நிலவும் இடங்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-29T04:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயென நினைத்து சிலையை சுற்றித்திரிந்த இளம் காட்டு யானை! பதிவான நெகிழ்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-surrounds-statue-thinking-it-is-mother-1787977593"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-surrounds-statue-thinking-it-is-mother-1787977593</id>
            <summary type="text">பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலை அருகே நேற்று காலை காட்டு யானை ஒன்று
சுற்றித்திரிந்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலை அருகே நேற்று காலை காட்டு யானை ஒன்று
சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கட்டுமானப்பணியில் உள்ள அந்த யானை சிலைக்கு அருகில் வந்த இளம் காட்டு யானை
ஒன்று, அங்கிருந்து நகர மறுத்து பல மணி நேரமாகச் சிலையைச் சுற்றிச்சுற்றி
வந்துள்ளது.</p><h2>பரிதாபமான நடத்தை&nbsp;</h2><p>
</p><p>
கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழி தவறி வந்த இந்த இளம்
யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின் உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது
தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து
நின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee1e4381-d93f-49a7-971d-c3243c65f642/26-6a925f7bce59e.webp' /></p><p>
</p><p>
யானையின் இந்த விசித்திரமான மற்றும் பரிதாபமான நடத்தையை கண்ட அப்பகுதி
மக்களும் அவ்வழியாக சென்ற பயணிகளும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T04:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/petitions-have-been-filed-22nd-amendment-bill-1787975962"></link>
            <id>https://tamilwin.com/article/petitions-have-been-filed-22nd-amendment-bill-1787975962</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில்
இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில்
இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.
</p><p>
வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22ஆவது திருத்தச்
சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் நேற்று (28.08.2026) மேலும் மூன்று இடையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>இடையீட்டு மனு தாக்கல்</h2><p>

நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர, ஓய்வூதியலாளர்களின்
உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே.சரத் லால் பெரேரா
மற்றும் சட்டத்தரணி ஜானக அதிகாரி ஆகியோர் இடையீட்டு மனுக்களைத் தாக்கல்
செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c9c45a8-7189-4a61-8a59-fc16e0ba57cf/26-6a925dc7c99b0.webp' /></p><p>

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சட்ட ரீதியாகவே நாடாளுமன்றத்துக்குச்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தின்
பெரும்பான்மை ஊடாக நிறைவேற்றலாம் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியும்
மனுதாரர்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்
நிபுணராராச்சி 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முதலாவது இடையீட்டு
மனுவைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T04:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wheat-flour-price-increases-1787976080"></link>
            <id>https://tamilwin.com/article/wheat-flour-price-increases-1787976080</id>
            <summary type="text">கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;ப்ரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ப்ரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை இவ்வாறு அதிகரித்துள்ளது.</p><h2>இன்று முதல் நடைமுறை</h2><p>இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>அதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவு விலையை 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T04:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபை தேர்தல் விரைவில்..! தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-election-should-held-soon-ec-chairman-1787973292"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-election-should-held-soon-ec-chairman-1787973292</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த
வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த
வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க
தெரிவித்துள்ளார்.
</p><p>
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப்
பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மாகாணசபை தேர்தல்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில்
தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளது.</p><p>பல ஆண்டுகளாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். இது தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e3ac6fa-404e-4856-9660-dbbfcbd92437/26-6a92537c2d03b.webp' /></p><p>குறிப்பாக,
பழைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்தலாம் என சட்டமா அதிபர்
திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாக எமது யோசனைகளும்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் தொடர்ந்தும் இயங்குவது
ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது என்பதால், செயற்குழு பரிந்துரைகளை
விரைவில் ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.</p><h2>இளைஞர் பிரதிநிதித்துவம்</h2><p>
</p><p>
மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள்
ஆணைக்குழுவிடம் நேரடியாகக் கிடையாது. 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல்
முறைமையின் அம்சங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினாலேயே எந்த
முறையில் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் நீடிக்கின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315f4148-b29f-4430-8524-61a354cdd2c1/26-6a92537b5b470.webp' /></p><p>எனவே,
நாடாளுமன்றத்தின் ஊடாகவே இதற்கான உறுதியான தீர்மானம் எட்டப்பட வேண்டும்.

செயற்குழு முன்வைத்த பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்களைக்
கருத்தில்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய யோசனைகளை வழங்கியுள்ளது.</p><p> தற்போது
அவதானம் செலுத்தப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்தும் மேலதிக
யோசனைகளை முன்வைக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி! எதிர்க்கட்சித் தலைவர் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-president-1787975378"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-president-1787975378</id>
            <summary type="text">மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தை பெற்றுவிட்டு, மீண்டும்
பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தை பெற்றுவிட்டு, மீண்டும்
பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர சீனிபுர பகுதியில் நேற்று (28.08.2026) நடைபெற்ற விவசாயிகளின்
பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதன்போது, தான் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்
நிர்மாணித்த நெல் களஞ்சியசாலையையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d3a2e2-fa0b-40ba-a3a6-2a06e3773b39/26-6a9256d46e0c6.webp' /></p><h2>ஜனாதிபதி பிரஸ்தாபித்த விடயம்</h2><p>
</p><p>இந்த சந்தர்ப்பத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த தேர்தல்களுக்கு முன்பு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அமைச்சர்கள்
வயல்வெளிகளுக்குச் சென்று நெற்கதிர்களைக் கடித்துக் கொண்டு, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகப் பிரஸ்தாபித்தனர். </p><p>ஆனால், இன்று
ஒரு கிலோகிராம் நெல் 120 ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்படுகின்றது. விவசாயத்துறை
அமைச்சரே ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகின்றது எனத்
தெரிவித்துள்ள நிலையில், விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு 17 ரூபா நட்டம்
ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83f2b03c-9673-4ca8-b6f5-c65f6971ca4e/26-6a9256d529725.webp' /></p><p>
</p><p>
நெல்லைக் கொள்வனவு செய்வதாகக் கூறினாலும், தற்சமயம் ஈர நெல் 85 ரூபாவுக்கும்,
காய்ந்த நெல் 100 ரூபாவுக்கும் அரசு வெறும் 2 முதல் 3 சதவீத அளவிலேயே கொள்வனவு
செய்கின்றது. எஞ்சிய நெல்லைக் கொள்வனவு செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி
ஆலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>
</p><p>
நாட்டின் தேவைக்கு அதிகமாக அரிசி உற்பத்தி செய்யப்படும் நிலையில், கடந்த
இரண்டு ஆண்டுகளில் 3 இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி
வெளிநாடுகளிலிருந்து இறக்கமதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு
அரிசி இறக்குமதியை எதிர்த்துப் பேசியவர்கள், இன்று அதனைச் செய்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a46f02-4dce-4cc0-8390-b53e8f23a2d7/26-6a9256d5dbdbe.webp' /></p><p>
</p><p>
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் 30 முதல் 40 சதவீதமான மக்கள்
வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அஸ்வெசும உதவித் திட்டம் வெட்டப்பட்டு
வருகின்றது.

அரசு மக்களுக்குப் பொய் சொல்வதை விடுத்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து,
வரிச் சுமையைத் தளர்த்தி மக்களுக்கு உண்மையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1017ab7f-5dfc-4766-8988-2aaddf556c6b/26-6a9256d694df1.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:51:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்! அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-implement-22nd-amendment-minister-samantha-1787971378"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-implement-22nd-amendment-minister-samantha-1787971378</id>
            <summary type="text">இலங்கையில் 22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று(28.08.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22ஆவது திருத்தச் சட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் சட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்
வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு
அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது. </p><p>ஆனால், தற்போதைய ஆட்சியில் பெரியவர்,
சிறியவர் அல்லது பணக்காரர் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும்
சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be5fb34-544e-47aa-a36e-3b24dfea48c0/26-6a924dbae33c2.webp' /></p><p>

சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுவதன் காரணமாகவே, பழைய ஊழல்வாதிகளும்
குற்றவாளிகளும் அச்சமடைந்து 22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கூச்சலிட்டு
வருகின்றனர். </p><p>நீதிமன்ற சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலையை
மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்தத் திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>
</p><p>
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக வரலாற்று ரீதியாக மிக அதிகமான நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 2026ஆம் ஆண்டில் மூலதனச்
செலவினங்களுக்காக 1.3 டிரில்லியன் ரூபாவும், அடுத்த ஆண்டில் 2 டிரில்லியன்
ரூபாவும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d8aec3-912b-45aa-95bc-3a24a6f23871/26-6a924dbb95974.webp' /></p><p>இதன் மூலம்
வீடுகள், வீதிகள், பாடசாலைகள் மற்றும் குளங்கள் அமைக்கும் பணிகள்
வேகமாக்கப்படும்.

கடந்த காலத்தில் போதைப்பொருள், பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் ஊழல் போன்றவையே
ஊக்குவிக்கப்பட்டன.</p><p> ஆனால், தற்போதைய அரசு அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டி வருவதால், கட்சி பேதங்களை கடந்து நாட்டின் எதிர்கால
சந்ததியினரின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிராபத்தை தடுக்க 21 தொழிலதிபர்கள்'பஸ் லலித்'துக்கு கொடுத்த கோடிக்கணக்கான பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892"></link>
            <id>https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892</id>
            <summary type="text">&amp;nbsp;டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>
இருப்பினும் 'பஸ் லலித்' மீதான பயம் காரணமாக இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்</h2><p>தனது சகபாடிகளை பயன்படுத்தி பஸ் லலித் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட 5 துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அந்தத் துப்பாக்கிகளைக் கண்டறிவதற்காகப் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df2ba03-314e-4d5e-aaf3-8d1939416dc1/26-6a9251069862c.webp' /></p><p>வர்த்தகர்கள் கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுள்ளதாகவும் ஒரு நபர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில் 'பஸ் லலித்' என்பவர் தனது சகபாடிகளை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். </p><p>குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுக்குவின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டலில் அப்பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brothers-fight-2-killed-1787970066"></link>
            <id>https://tamilwin.com/article/brothers-fight-2-killed-1787970066</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிலங்கையில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

காலி பொலிஸ் பிரிவின் கல்வலா பகுதியில் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிலங்கையில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். </p><p>

காலி பொலிஸ் பிரிவின் கல்வலா பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>இரு குழுக்களுக்கு இடையில் மோதல்</b></h2><p>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக காலி பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் காலி பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>
பழைய பகை காரணமாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது என இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66d199ce-7ea1-495e-a76e-577685b3593e/26-6a9245ec0209e.webp' /></p><p>மேலும், இந்த மோதலில் காயமடைந்த மேலும் இருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, வலவத்தை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T03:27:29+00:00</updated>
        </entry>
    </feed>
