<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T23:46:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை தாக்குதலின் பின்னணி! இறுதியில் உண்மை வெளிவரும்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/truth-behind-dehiwala-attack-will-be-revealed-1789341888"></link>
            <id>https://tamilwin.com/article/truth-behind-dehiwala-attack-will-be-revealed-1789341888</id>
            <summary type="text">கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற
கருத்தைத் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற
கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப்
பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். </p><p>இந்த வார இறுதியினுள் இந்தச்
சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><h2>தெஹிவளை தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ சங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள
வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில்
இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தமையுடன், அவர்களின் தந்தையும் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a8236a9-5f41-42c4-9fae-87c679b1d9bc/26-6aa732d7d85aa.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைக்குண்டுகளுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட
பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளனவா என
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><span style="color: inherit;">அவர் மேலும் தெரிவிக்கையில்,</span></p><h2>தீவிர விசாரணை&nbsp;&nbsp;</h2><p><span style="color: inherit;">

"தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</span></p><p>எனவே, இப்போதே உடனடியாக எந்தவொரு
முடிவுக்குவும் வந்துவிட முடியாது. அத்தோடு, இந்தச் சம்பவத்தைக் காரணம் காட்டி
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்றும் கூற
முடியாது.

விசாரணைகளின் முழுமையான முடிவிலேயே சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa686b3-4d27-400f-8132-ba65e5b682c6/26-6aa732d8942db.webp' /></p><p>
</p><p>இந்த வார இறுதியினுள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை
அறிந்துகொள்ளலாம்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ்
விசாரணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தக் குற்றச் செயலுக்கான
உண்மையான காரணம் விரைவில் வெளிக்கொணரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T23:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு! திடீரென தலைமறைவான ஞானசார தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gnanasara-thero-has-been-in-hiding-since-friday-1789340559"></link>
            <id>https://tamilwin.com/article/gnanasara-thero-has-been-in-hiding-since-friday-1789340559</id>
            <summary type="text">பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுபல சேனா (BBS) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
</p><h2>&nbsp;ஞானசார தேரர்</h2><p>
அவர் தனது சிறைவாழ்க்கையில் சுமார் ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது முதல் பொதுமன்னிப்பு வழங்கப்படும் காலம் வரை ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் காவியுடையில் சாதாரண விளக்கமறியல் கைதி போன்றே சகல வசதிகளுடன் காலம் கழித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfc7893-b72a-49df-a53d-f1a93c7f40a1/26-6aa72f16ca6ac.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான நிலையில்தான் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>
இந்நிலையில் குறித்த மனுவிசாரணையின் இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கிய பொது மன்னிப்பு தன்னிச்சையானது என்றும், அது பொது நம்பிக்கையையும் இயற்கை நீதியின் கோட்பாடுகளையும் மீறுவதாகவும் தீர்ப்பளித்தது.</p><h2>&nbsp;தலைமறைவு</h2><p>

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து ஞானசார தேரர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>அவரது தண்டனையின் மீதமுள்ள ஆறு ஆண்டுகளை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகஇ ராஜகிரிய, நாவலவில் உள்ள விகாரைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92949f1d-1e20-4cb5-9923-f4ea4f50a0fe/26-6aa72f177ca3b.webp' /></p><p>

எனினும் ஞானசார தேரர் விகாரையில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரது மெய்ப்பாதுகாவலர் உள்ளிட்ட எவருக்கும் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
</p><p>
தனது தண்டனையில் ஒன்பது மாதங்களை மட்டுமே அனுபவித்திருந்த ஞானசார தேரர், தற்போது தனது அசல் ஆறு ஆண்டு தண்டனையின் பெரும்பகுதியை அனுபவிக்கும் நிலையை எதிர்கொள்கிறார்.</p><p> இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T23:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணியில் சிக்கிய இரகசிய காணொளிகள்! மகிந்தவை காப்பாற்றும் மர்ம தாயத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208</id>
            <summary type="text">அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் மது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
மேலும், பேரணி முடிந்த பின்னர் பலர் மதுபோதையில் இருக்கும் விதத்தில் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.</p><p>


இந்தநிலையில்,
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில், அவர் கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் மர்மமான கோல் தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
பொது நிகழ்வுகளில் மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் இந்தப் பொருள், தங்க முலாம் பூசப்பட்ட கோல் அல்லது செங்கோல் போன்ற வடிவத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பொருள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. </p><p>

குறிப்பாக, இது அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் சில தரப்பினரால் கூறப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அரசியல் முடிவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்றதாகவும் பல ஆண்டுகளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அவரது கைகளில் காணப்படும் பல்வேறு மோதிரங்கள், தாயத்துக்கள் உள்ளிட்டவையும் இதனுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் சிரேஸ்ர ஊடகவியலாளர் தமிழரசு&nbsp; செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்&nbsp; ...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601"></link>
            <id>https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601</id>
            <summary type="text">2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை வெளிவராததாகக் கூறப்படும் பல்வேறு தகவல்களை ஊடகவியலாளர் நீராஜ் டேவிட் வெளியிட்டுள்ளார்.</p><p>

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், நற்கருணை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
</p><p>
இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், வழிபாட்டுத் தலத்தையே இலக்காகத் தேர்ந்தெடுத்ததன் ஊடாக பொதுமக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், இந்தப் படுகொலைக்கு கருணா குழுவினர் மாத்திரமே காரணம் என பொதுவாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமது தகவல்களின் அடிப்படையில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் தொடர்புபட்டிருந்ததாக நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, கருணா குழு, ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு இதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தேவாலயத்தின் வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் நள்ளிரவுத் திருப்பலி நடைபெறும் நேரம் உள்ளிட்ட விடயங்களை அறிந்துகொள்வதற்காக கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட மூவர் அந்தக் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்தப் படுகொலைக்கான தயாரிப்புகள் மற்றும் அதில் பங்கேற்றதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில், அக்குழுவில் பணியாற்றிய ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருந்து தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தப் படுகொலை தொடர்பான மேலும் பல நேரடி அனுபவங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் வெளியிடவுள்ளதாகவும் நீரஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துவருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mf5NlT3f33E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! அழகுசாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997"></link>
            <id>https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997</id>
            <summary type="text">அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள், விற்பனை விலை குறிப்பிடப்படாத நறுமணப் பொருட்கள் மற்றும் உரிய விபரங்களற்ற பூச்சு வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு</h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 5) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77923b9-1fbd-4800-bff5-9523c9e35d9a/26-6aa697b9d2a12.webp' /></p><p> </p><p>

உச்ச சில்லறை விலை குறிப்பிடப்படாமல் நறுமணப் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான அழகுசாதன பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உரிய உற்பத்தி விபரங்களன்றி அழகுசாதனப் பொருட்களை காட்சிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்திற்கு எதிராகச் சுமத்தப்பட்டன.</p><h2>அபராதம் விதிப்பு</h2><p> 

அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது, குற்றச்சாட்டுகள் மூன்றையும் குறித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
மேலும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் கொள்வனவு செய்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் கவனத்தை ஈர்க்கும் ஹோர்முஸ் – ஈரானின் அதிரடி நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-unlikely-to-give-up-control-strait-of-hormuz-1789329532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-unlikely-to-give-up-control-strait-of-hormuz-1789329532</id>
            <summary type="text">ஈரான் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரும், முன்னாள் அமெரிக்க இராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரும், முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியுமான அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

மத்திய கிழக்கு நிறுவகத்தின் உறுப்பினரான அலன் ஐர், அல் ஜசீராவிடம் கருத்து தெரிவிக்கையில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் தனது முக்கிய மூலோபாய தடுப்பு நடவடிக்கையாகக் கருதத் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் தடுப்பதே ஈரான் தலைமையின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதைச் செய்வதற்கான ஒரே வழியாகவே நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் பார்க்கிறது. </p><p>எனவே, பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுக்கக்கூடிய ஒரு விடயமாக அதை ஈரான் கருதாது” என அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த விரும்பினால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் குறுகிய காலத்திலாவது ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஒரு நடைமுறை நிலையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476c1e-a675-4c7d-843e-9f2b924bf70d/26-6aa7007ee0a2b.webp' /></p><p>
</p><p>
மேலும், இராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது வாஷிங்டனில் இருந்து விலகி வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்கை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

தேவையான அளவிலான இராஜதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்கா “விருப்பமும் திறனும் அற்ற நிலையில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:03:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை தட்டிச் சென்ற இந்திய மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-vs-sri-lanka-live-womens-asia-cup-2026-final-1789322581"></link>
            <id>https://tamilwin.com/article/india-vs-sri-lanka-live-womens-asia-cup-2026-final-1789322581</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

துபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p>

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.</p><h2>&nbsp;இந்திய அணி</h2><p>

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.</p><p>

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைச்சதங்களைப் பதிவு செய்தனர்.

ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a3f0703-5e7b-4fc6-8324-a0aeb92df66d/26-6aa6e7f3d973a.webp' /></p><p> </p><p>இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 129 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினர்.</p><p>

இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளிகளில் வீழ்த்தப்பட்ட நிலையில், இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><h2>ஆசியக் கிண்ண வரலாறு</h2><p>
</p><p>
இதன் காரணமாக இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் போனதுடன், 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

இதன் மூலம் மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
</p><p>
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்திருந்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி குறிப்பிடத்தக்க மீள்வெற்றியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4acad18-cffd-47f9-a374-2edfc989f2df/26-6aa6e7f48ebec.webp' /></p><p>

மேலும், இறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்த ஷபாலி வர்மா, மகளிர் T20 ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார். அவர் வெறும் 24 பந்துகளில் அரைச்சதத்தை எட்டினார்.
</p><p>
அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் சிறப்பான பந்துவீச்சுடன் இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, ஆசியக் கிண்ணத்தை கம்பீரமாகக் கைப்பற்றியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T18:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் எனத் தெரிவித்துள்ளார் .</p><p>லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அரச வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்திருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், நியாயமான கைதுகளை தாம் வரவேற்பதாகவும், பக்கச்சார்பான பழிவாங்கும் கைதுகள் இடம்பெறுமான இருந்தால் நிச்சயமாக எதிர்த்து நிற்போம் எனவும் அவர் கூறினார்.</p><p>மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துகளைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BbNQPnS1qrA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:48:52+00:00</updated>
        </entry>
    </feed>
