<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-19T11:21:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவலிங்கத்தை அவமதித்தவர் வீட்டிலிருக்கையில் அனோஜனுக்கு தலை துண்டிப்பு தண்டனை - சிறீதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362</id>
            <summary type="text">சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். </p><p>

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் இன்று (19.09.2026 கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
</p><p>
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அனோஜன் விவகாரம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அனோஜனுடைய தலையை துண்டிப்பதை பற்றி ஒரு நாடு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. எங்களோடு பிறந்த ஒரு மனிதன், உங்களுடைய சகோதரன் உயிரோடு வருவானா அல்லது அவனது உடல் தான் வருமா நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற சிக்கல் நீடிக்கிறது. </p><p>நேற்று காலை கூட அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேசியிருந்தேன். ஜனாதிபதியினுடைய செயலாளரோடும் போசியிருந்தேன். இந்த விடயம் தொடர்பில் உங்களது அதீத கவனமும் அந்த உயிரை காப்பாற்றுகின்ற விடயமும் ஒரு அரசுக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38423397-8319-4c0c-85ac-17eb3543cfef/26-6aae6e9a8b399.webp' /></p><p> </p><p>யாரோ ஒருவர் ஊர்வலம் போகும்போது நாயைக் கொண்டு போனார்கள். அதற்கு சுப்பிரமணி என பெயரையும் வைத்து விட்டார்கள். தெருவில் நின்ற ஒருவர் அதனை காலால் தட்டி விட்டார். அதனை எங்களுடைய ஆட்களே பெரிதுபடுத்தினார்கள். அதற்கு நிறைய விமர்சனங்களை எழுதினார்கள்.</p><h2>தண்டனை</h2><p> </p><p>இந்த நிலையில் அந்த மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதினார். பொறுக்க முடியாத அனோஜன் அல்லாஹ்வை பற்றி கீழ்த்தரமாக எழுதினார். </p><p>இரண்டுமே பொருத்தமில்லாத ஒன்று தான். எழுதக்கூடாது தான். ஆனால் அவர் எழுதினார். இவர் பதில் எழுதினார். இவருக்கு தலை போகிறது. ஆனால் அவர் வீட்டில் இருக்கப்போகிறார். </p><p>அனோஜனின் பதிவை மொழி பெயர்த்து கொடுத்தவர் ஒரு தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர். அனோஜனுக்கு தண்டனை கிடைப்பதற்கு காரணம் இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற இந்த சகோதரர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனப் பதிவு தொடர்பான பிரச்சினையா..! இதோ முறைப்பாடு செய்ய புதிய வழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-whatsapp-hotline-for-motor-vehicle-complaints-1789815381"></link>
            <id>https://tamilwin.com/article/new-whatsapp-hotline-for-motor-vehicle-complaints-1789815381</id>
            <summary type="text">வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக புதிய வட்ஸ்அப் சேவையொன்றை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவையின் ஊடாக, பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை எழுத்துமூலம் 074 245 3300 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.</p><h2>இந்தப் புதிய சேவை</h2><p>
</p><p>
வாகனப் பதிவில் ஏற்படும் தாமதங்கள், முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், வாகனங்களின் செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பொது இடையூறுகள் தொடர்பிலும் முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a499a9a-d22a-4b31-a518-de202fb673eb/26-6aae6d0869918.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாகத் திணைக்களத்திடம் தெரிவித்து, அவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வு அல்லது பதில் வழங்குவதற்கான வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கிய 3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் மாயம் - இருவரின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-drown-in-water-and-missing-1789814820"></link>
            <id>https://tamilwin.com/article/4-drown-in-water-and-missing-1789814820</id>
            <summary type="text">கம்பஹா,&amp;nbsp; படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ​​3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா,&nbsp; படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ​​3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. </p><p> 

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p>
ஒரு ஆணின் உடலமும் ஒரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>3 இளம் பெண்கள் மற்றும் பதின்ம வயது இளைஞன் அடங்கிய குழுவினர் மா ஓயா ஆற்றில் குளிக்க சென்றிருந்தனர். </p><h2><b>

இளம் பெண்கள்</b></h2><p>அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9fe00a-e6d7-4b8f-83e5-ec2803771b98/26-6aae6ad2071be.webp' /></p><p>அவர்களில் ஒரு இளம் பெண் நீரில் மூழ்கத் தொடங்கிய போது, ​​அவரை மீட்க முயன்ற ஏனைய மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

காணாமல்&nbsp; போனவர்களை
&nbsp;தேடும் பணியை உள்ளூர் மக்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T10:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பொலிஸ் மறித்தபோது மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த இளைஞர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-falling-off-motorcycle-police-jaffna-1789812288"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-falling-off-motorcycle-police-jaffna-1789812288</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்
ஒருவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்தபோது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்
ஒருவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்தபோது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று(19.9.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே
இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல உணவகம் ஒன்றில் பணிபுரியும் இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcb1f59-ee42-4056-b662-004ea001a1af/26-6aae648f356cf.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் அனுஸ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-of-thiyagatheepam-thileepan-1789813934"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-of-thiyagatheepam-thileepan-1789813934</id>
            <summary type="text">தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள்
நினைவேந்தல் பருத்திதுறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள்
நினைவேந்தல் பருத்திதுறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>பருத்துத்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இன்று (19.09.2026) காலை இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.</p><p>

இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை நகரசபை
உறுப்பினர்கள், அரசியல் செயற்பாடாளர்கள், என பலரும் கலந்துகொண்டு மலர்
அணிவித்து மலர் அஞ்சலி செய்தும் நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84912769-4720-436f-a4b0-5b9b14a0e4ff/26-6aae6637e4cb9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trouble-for-politicians-families-fleeing-country-1789810544"></link>
            <id>https://tamilwin.com/article/trouble-for-politicians-families-fleeing-country-1789810544</id>
            <summary type="text">


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அல்லது பிற அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அல்லது பிற அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>உளவுத்துறை அமைப்புகளுக்கு அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.</p><h2>பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சி</h2><p>
</p><p>
பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் நபர்களை இந்த அமைப்பு கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d3e589-5c11-4b8c-b6e1-77888e1eedb3/26-6aae61c06ac53.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்தவும் விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர், வெளிநாடு சென்று திரும்பத்தவறிய பல அரசியல்வாதிகளை உளவு அமைப்புகள் தற்போது விசாரித்து வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
</p><p>
 இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
</p><p>
அவர்களது விடுதலை சட்டப்பூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:26:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டிபோட்ட மற்றுமொரு பாரிய பணமோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-states-fraud-1789794096"></link>
            <id>https://tamilwin.com/article/united-states-fraud-1789794096</id>
            <summary type="text">எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டிபோட்ட மேலுமொரு பாரிய பணமோசடி தொடர்பான தகவல்கள் சுவீடன் நாட்டிலிருந்து கசிந்துள்ளன. எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டிபோட்ட மேலுமொரு பாரிய பணமோசடி தொடர்பான தகவல்கள் சுவீடன் நாட்டிலிருந்து கசிந்துள்ளன. </p><p>எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரிக்க டொலர் இரண்டு மில்லியன். ஆனால் இதன் மதிப்பு அமெரிக்க டொலர் 54 மில்லியன் என்றும் கூறப்படுகின்றது.</p><p>இலங்கை ரூபாவில் சொல்ல முடியாத தொகை என்றும், இந்த மோசடி தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆரம்பிக்கப்பட்ட காலம்</span></p><p>இந்த மோசடியின் ஆரம்பம் 2008 இலிருந்து என்று தான் அறிக்கைகளில் உள்ளது. ஆனால் 2013 இலிருந்து இலங்கையில் உள்ள கணக்குகளுக்கு (Accounts) மில்லியன் கணக்கில் அமெரிக்க பணம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>&nbsp;&nbsp;</p><p>2013ல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலகட்டமாகும். அக்காலத்தில் இலங்கைக்கு வந்த CPCU என்னும் திட்டத்துடன் தொடர்புடைய பணம் என்றும் சொல்லப்படுகிறது.</p><p>இருப்பினும், அப்போது இலங்கையில் உள்ளவர்களுக்கு இது குறித்து பெரிய தெளிவு இருக்கவில்லை என்றும், இது தொடர்பில் 2019-இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு முறைப்பாட்டை B-அறிக்கையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1f0bae-19e2-48c1-8be2-4f6490e28946/26-6aae17322158a.webp' /></p><p>அதாவது FCID-இல் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார பாரிய அளவிலான ஊழல் ஒன்றைச்செய்துள்ளார் என்றும், இது தொடர்பாக முதன்முதலில் இலங்கை ஊடகங்களில் வெளிவந்த பெயர் தான் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards,).
</p><p>இந்த ரியன்ஷி எட்வர்ட் என்பவர் நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மைதானம், ரோயல் டர்ஃப் கிளப் (Royal Turf Club) 2012-இல் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார்.</p><p>அப்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தார்.
அதாவது அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது 2013-14 காலப்பகுதியில் வந்த இந்த பணம், இலங்கையில் உள்ள பலரின் கணக்குகளுக்கு வந்துள்ளது.</p><p>Ascension என்ற கணக்கும், ரெயான் எட்வர்ட்டின் மனைவி புண்யாவின் கணக்கும், அதைத் தொடர்ந்து மேகான்ஃபீல்ட் (Magonfield Construction) என்ற கணக்கும் மற்றும் மேலும் சில கணக்குகளும் வந்துள்ளது.</p><p> இந்த சம்பவத்தை அமெரிக்கா இலங்கைக்கு 2016 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கின்றது. ஏன் இந்த ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards பற்றிய விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
</p><h2>
</h2><h2>மோசடி மூடிமறைக்கப்பட்ட விதம்</h2><p>ரவி வைத்தியலங்கார என்ற ஊழல் அதிகாரி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, தனியாக கம்பனி ஒன்றை ஆரம்பித்து, FCID-இல் இருந்து அதனை பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாற்றியுள்ளார். </p><p>FCID-க்கு இவரை யார் கொண்டுவந்து போட்டது? இவருக்கு இங்கு வர யார் அனுமதி அளித்தது?
அதாவது 54 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பவம் எப்படி மூடிமறைக்கப்பட்டது? இவர் பணத்தை பெற்றுக்கொண்டு, மூடி மறைத்துள்ளார். </p><p>ஏனெனில் இது ரவி வைத்தியலங்காரவால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல. 
நல்லாட்சி அரசாங்கத்தில் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards- ரவி வைத்தியலங்காவை காப்பாற்றியது நவீன் திசாநாயக்க என்றும் கூறப்படுகிறது.</p><p>இந்த CPCU திட்டத்திற்காக 2016-இல் ரெயான் எட்வர்ட்டுடன் நவீன் திசாநாயக்க ஆகியோர் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72123656-8074-4e2e-abce-a3e6a460023d/26-6aae1732cd8cc.webp' /></p><p>ஏனெனில் 2016-இல் ரியன்ஷி எட்வர்ட்டிற்கு (Rienzie Edwards 30 வருடங்களுக்கு நுவரெலியா ரேஸ்கோர்ஸ் (Racecourse) மைதானத்தைக் குத்தகைக்கு விட திட்டமிட்டதே நவீன் திஸாநாயக்க ஆவார். </p><p>மேலும் நவீன் திசாநாயக்கதான் இந்த ரியன்ஷி எட்வர்ட்டின் பின்னணியில் இருந்து இவரை அரசியல் ரீதியாக பாதுகாத்த நபர்.
இப்போது அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.</p><p>இந்த வழக்குகளுக்கு அடிப்படையாக அமைந்த முக்கிய காரணங்களாக CPCU திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடம் (Investors) அதாவது அமெரிக்க குடிமக்களிடம் இருந்து என கூறப்படுகிறது. </p><p>
உலகத்தில் இல்லாத ஒரு திட்டத்தைக்காட்டி, இதில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க குடிமக்களிடம் பெறப்பட்ட பணம் என்றும் அமெரிக்க நீதிமன்றம் கூறுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நிச்சயமாக இதன் தகவல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் வாழும் பகுதிகளில் கொட்டப்படும் குப்பை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/garbage-dump-in-hatton-residential-area-protest-1789807762"></link>
            <id>https://tamilwin.com/article/garbage-dump-in-hatton-residential-area-protest-1789807762</id>
            <summary type="text">ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை
மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி
ஒன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை
மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி
ஒன்றில் கொண்டு சென்று, மீள்சுழற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை
நாட்டப்பட்டு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுநாளே இந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் ஒன்றுகூடிய மக்கள், தமது
எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><h2>போராட்டம்</h2><p>

'இயற்கை வளங்களை அழிக்க வேண்டாம்',
'ஹட்டன் குப்பைகளை ஹட்டனிலேயே கொட்டுங்கள்',
'ஹட்டன் குப்பை எங்களுக்கு வேண்டாம்'

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, மக்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0426e673-c18c-4ad1-b533-414b7167a6d0/26-6aae579064ee1.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று, குப்பை
மற்றும் கழிவுகளை கொண்டு சென்று கையாளுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள
இடத்திற்கு அருகில் ஒன்று கூடி, தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிப்பதாவது:

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள். நாட்டின் பொருளாதாரத்திற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக
உழைத்து வருகின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

எனினும், மக்கள் வாழும் இந்தப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் கூட
ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில், தற்போது அவர்களது குடியிருப்புகளுக்கு
அருகிலேயே குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும், குப்பை மீள்சுழற்சி
திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்
சுமத்தினர்.</p><p>மக்கள் வாழும் இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும்
அனுமதிக்கமாட்டோம்' என தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bc05db-08d0-4fe7-b8e4-3c34046efab8/26-6aae57913f8d0.webp' /></p><p>
</p><p>
ஹட்டன் நகரின் குப்பைகளை அகற்றுவதற்காக மக்கள் குடியிருப்புகள் இல்லாத பல
இடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் பொருத்தமான ஒரு இடத்தை தெரிவுசெய்து
குப்பை முகாமைத்துவத் திட்டத்தை முன்னெடுக்குமாறும் கோரிக்கை
விடுத்தனர்.</p><p>

இதேவேளை, குறித்த திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்புகள்
மற்றும் சுற்றுச்சூழல், குடிநீர் பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் குறித்து
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினை குறித்து தலையிட வேண்டும் எனவும் போராட்டத்தில்
ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T09:36:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - நியமிக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-attempts-to-reduce-anojan-s-sentence-1789809181"></link>
            <id>https://tamilwin.com/article/government-attempts-to-reduce-anojan-s-sentence-1789809181</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க அரசாங்கம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>சவூதி அரேபிய சட்ட விவகாரம்&nbsp;</h2><p>

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்துடன் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/464cb583-5a0d-4a2f-821f-8b9d406ee442/26-6aae56aa730e5.webp' /></p><p>

சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தலையிட்டுள்ளதாகவும், இதற்காக ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜெயதிஸ்ஸ மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>

சவூதி அரேபியாவில் தற்போதுள்ள சட்டத்தின்படி இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T09:32:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பா..! உண்மையை அம்பலப்படுத்திய ரிசாட் பதியுதீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-1789807660"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-1789807660</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டது...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டதுமில்லை, பேசியதுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><h2>உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும் தெரிவித்த ஒருவர், 

"உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவொரு
சம்பந்தமும் கிடையாது. </p><p>சஹ்ரானின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் சமூகமோ
அல்லது முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரித்தது கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637a978c-f5dd-48c8-bfda-76ea992233e5/26-6aae528cabc7d.webp' /></p><p> 

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும்
என்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக உள்ளது. 

இந்த பயங்கரவாதச் செயற்பாட்டினால்
பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஓர் அரசியல்வாதியாக நானும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்.</p><p>

நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு தேசியக் கட்சியின் தலைவராகவும் இருந்த
என்னைக் சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாகக் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.</p><h2>சூத்திரதாரி சஹ்ரான்</h2><p> 

சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கேன் அரசியல்
உள்நோக்கத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்
மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, சில
தமிழ் ஊடகங்கள் தமக்கு வேண்டியவாறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.</p><p>
சஹ்ரானுடன் எனக்கு எவ்விதப் தொடர்பும் இல்லை என்பதால், இவ்வாறான பொய்யான
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராகத் தயங்காமல் சட்ட நடவடிக்கை
எடுப்பேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5f6824-41f0-421d-8b94-f16a69366d1b/26-6aae528da23a8.webp' /></p><p>

உயிர்த்த தாக்குதல் குறித்து நேர்மையான மற்றும் சுயாதீனமான விசாரணைகள்
நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். </p><p>


பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நீதி கிடைக்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு முறையான விசாரணைக்கும் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்" என அவர் மேலும்
குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T09:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு.. அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மோடியின் நெருங்கிய நண்பர்</h2><p>தனது 'X' தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் மோடி, இலங்கையின் உயரிய சிவில் விருதான ஸ்ரீலங்கா ரத்னாவை ஏற்றுக்கொண்டவர் என்பதோடு இலங்கையின் நீண்டகால நண்பராகவும் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12841f69-88ca-4726-8436-19aacd55933f/26-6aae4672a6f19.webp' /></p><p>
</p><p>மேலும், "உங்கள் நண்பரும் ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசரக் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு வருமாறு நான் வலியுறுத்துகிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவதற்காக, இளவரசர் சல்மானிடம் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டுப் பேசுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">&lt;Appeal to President&gt; I urge President <a href="https://x.com/anuradisanayake?ref_src=twsrc%5Etfw">@anuradisanayake</a> to bring <a href="https://x.com/hashtag/Anojan_Sivarasa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Anojan_Sivarasa</a>’s desperate plight to the urgent attention of your friend, recipient of &quot;SriLanka Rathna&quot; Prime Minister Narendra Modi. <br><br>Given PM Modi’s close ties with Saudi Prime Minister and Crown Prince… <a href="https://t.co/4wFbn1RoZh">pic.twitter.com/4wFbn1RoZh</a></p>&mdash; Mano Ganesan (@ManoGanesan) <a href="https://x.com/ManoGanesan/status/2101198855983509724?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் அவசர தலையீடு: வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாட ரிசாட் எம்.பி முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-anojan-case-ssue-rishad-bathiudeen-speech-1789805713"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-anojan-case-ssue-rishad-bathiudeen-speech-1789805713</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி
தொடர்பில், வெளியுறவு அமைச்சருடன் நேரடியாகப் பேசுவதற்குத் தான் முயற்சித்ததாக
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி
தொடர்பில், வெளியுறவு அமைச்சருடன் நேரடியாகப் பேசுவதற்குத் தான் முயற்சித்ததாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக் கருத்தை முன்வைத்தார்.</p><p>

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

"சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் கல்முனை, நற்பிட்டிமுனை இளைஞர் அனோஜனின்
நிலைமை தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் உடனடியாகப் பேசுவதற்குத்
தொடர்பு கொண்டேன்.</p><h2>இராஜதந்திர நடவடிக்கை</h2><p> </p><p>எனினும், அவர் தற்போது உத்தியோகபூர்வ விஜயமாக
வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதால் அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dc12095-11e8-4776-9bc2-8c3e630fd5c3/26-6aae45b25d4a1.webp' /></p><p>

இருப்பினும், இப் பாரதூரமான விவகாரத்தில் இளைஞரின் உயிரைப் பாதுகாக்கும்
பொருட்டு இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T08:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானக்கடையில் கொள்ளை முயற்சி - துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றுள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-involving-a-shooting-in-trincomalee-1789801867"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-involving-a-shooting-in-trincomalee-1789801867</id>
            <summary type="text">திருகோணமலை – அநுராதபுர சந்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில்
கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அங்கிருந்த ஊழியர்களின் துரித
நடவடிக்கையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – அநுராதபுர சந்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில்
கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அங்கிருந்த ஊழியர்களின் துரித
நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என
சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
</p><p>
நேற்று (18) இரவு 9:45 அளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், பணத்தைத்
திருடித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.&nbsp;</p><p>
இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன்
கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df521e5b-46a8-423b-9dad-e73f44d45bd4/26-6aae45ccaf8e1.webp' /></p><h2>துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி</h2><p>

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த நபர், ஊழியர்களை நோக்கி
துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.</p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் மோட்டார்சைக்கிளில் அநுராதபுரம் வீதி
வழியாகத் தப்பிச் சென்றனர்.

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர்
தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து
இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T08:20:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம்! விருந்தின் போது வன்முறை - இருவர் மீது துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754"></link>
            <id>https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754</id>
            <summary type="text">கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விருந்தில் இரு தரப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விருந்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வாக்குவாதம் முற்றியுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b> 

துப்பாக்கி சூடு </b></h2><p>இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253d40eb-fec8-429d-b8ae-1eda7ed25f83/26-6aae28425bd35.webp' /></p><p>ஹோட்டல் ஊழியருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் உரிமை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T07:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-by-northern-province-veterinarians-1789803147"></link>
            <id>https://tamilwin.com/article/protest-by-northern-province-veterinarians-1789803147</id>
            <summary type="text">வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>இதன்போது, பெண் வைத்தியரகள் தமக்கு வாகன வசதிகள் வழங்கப்படாமையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினர்.</p><h2>மருந்து பற்றாக்குறை</h2><p>அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் மாகாண பணிப்பாளருக்கு அறிவித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1593132442609992%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>மேலும், மருந்து பற்றாக்குறை காணப்படுவதால் பணியாளர்களுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனவே தமக்கு சிறந்த மருந்துப் பொறிமுறை வேண்டும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T07:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-killed-in-van-motorcycle-collision-1789801526"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-killed-in-van-motorcycle-collision-1789801526</id>
            <summary type="text">நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம்
பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது&amp;nbsp;இன்று (19.09.2026) காலை இடம்பெற்றுள்ளது.

லிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம்
பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது&nbsp;இன்று (19.09.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
லிந்துலை பகுதியை சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>சாரதி கைது</h2><p>
</p><p>
தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர்
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து
நேர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799477ef-95ae-4c91-8567-50473be76803/26-6aae34fb1a8b5.webp' /></p><p>
</p><p>
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப்
பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து
சம்பவித்துள்ளது.
</p><p>
இவ்விபத்து தொடர்பில் 42 வயதான வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சம்பவம் தொடர்பில் நானுஓயா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T07:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கொடூரம்! தாயை காப்பாற்ற போராடிய மகன் - பலியான சகோதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-s-brother-dies-while-trying-to-save-mother-1789796227"></link>
            <id>https://tamilwin.com/article/son-s-brother-dies-while-trying-to-save-mother-1789796227</id>
            <summary type="text">அங்குருவடோட்ட - பெத்திகமுவ பகுதியில் இன்று அதிகாலை (19) நடந்த கூர்மையான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஹல்தோட்ட பகுதியை சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குருவடோட்ட - பெத்திகமுவ பகுதியில் இன்று அதிகாலை (19) நடந்த கூர்மையான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவத்தில் ஹல்தோட்ட பகுதியை சேர்ந்த 37 வயது நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர், போதைக்கு அடிமையானவர் என்றும், வீட்டில் அடிக்கடி சண்டைகளை ஏற்படுத்துபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>

நேற்று இரவு (18) உயிரிழந்தவர் தனது தாயை தாக்கியபோது, ​​தாயை காப்பாற்றும் முயற்சியில் அவரது 35 வயது தம்பி அரிவாளால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c1553a-5832-4688-8462-4f9166a05c9b/26-6aae2c6c69140.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் உயிரிழந்தவரால் தாக்கப்பட்ட தாய், காயங்களுடன் ஹொரன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி காயப்படுத்தியதாகவும், தந்தையும் ஹொரன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கந்தர்மட சந்தியில் விபத்து: ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-jaffna-kandarmadam-one-injured-1789800559"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-jaffna-kandarmadam-one-injured-1789800559</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற வீதி
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்றையதினம்(19.9.2026) இடம்பெற்றுள்ளது.

பலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற வீதி
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்றையதினம்(19.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார்
சைக்கிளும் ஓட்டுமட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில்
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ்.போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/243a3740-23ab-4196-bd57-e78ed7fdc163/26-6aae31448c0b0.webp' /></p><p>விபத்து தொடர்பில் யாழ்ப்பாண
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை அதிபர்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-rules-out-smart-boards-for-every-classroom-1789798797"></link>
            <id>https://tamilwin.com/article/harini-rules-out-smart-boards-for-every-classroom-1789798797</id>
            <summary type="text">ஒவ்வொரு வகுப்பறைக்கும் &#039;ஸ்மார்ட் போர்டுகள்&#039; (smart boards) வழங்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். 

நிகழ்வொன்றில் வைத்து அவர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) வழங்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். </p><p>

நிகழ்வொன்றில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வியின் அனைத்து நிலைகளிலும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) அவசியமில்லை என்பதால், ஒவ்வொரு வகுப்பறைக்கும் அவற்றை வழங்கப் போவதில்லை. </p><p>

குழந்தைகளுக்குப் பொருத்தமான வயதிலேயே தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் போர்டுகளை வாங்குவதற்காக பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><h2>பணம் வசூலிக்க வேண்டாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d876a3-265b-4568-aac7-3aed3e22a77c/26-6aae2e5136c13.webp' /></p><p>
</p><p>
அத்துடன் பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என்று தயவுசெய்து அதிபர்களிடம் கூறுங்கள். தேவையற்ற முறையில் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும். இது அடிமையாகும் நிலைக்குக்கூட வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
மேலும் தேவை மற்றும் வயதுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு திட்டமிட்ட முறையிலேயே ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கடலாமையுடன் கரை சேர்ந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-arrested-in-jaffna-with-two-sea-mines-1789796916"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-arrested-in-jaffna-with-two-sea-mines-1789796916</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் நபரொருவர் கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&amp;nbsp;குறித்த சம்பவம் இன்றைய தினம் (19.09.2026) இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் நபரொருவர் கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>குறித்த சம்பவம் இன்றைய தினம் (19.09.2026) இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது அவரிடமிருந்து இரண்டு
கடலமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>சேத்தான்குளம் பகுதியில் கடலாமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ்
குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b62351-8f40-44d2-8ac6-5025f5fc4a48/26-6aae269cc918a.webp' /></p><h2>பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள்</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள இரண்டு
ஆமைகள், ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகு என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள்
இரண்டையும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5502ae-1baf-4c3e-b97f-b1b699ed4c85/26-6aae269d93f0d.webp' /></p><p>விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான்
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையா! மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி தெரிவித்துள்ள கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/milinda-rajapaksha-namal-rajapaksa-1789797902"></link>
            <id>https://tamilwin.com/article/milinda-rajapaksha-namal-rajapaksa-1789797902</id>
            <summary type="text">மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு&amp;nbsp;விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்&amp;nbsp;நாமலை இரண்டு வருடம் சிறையில் அடைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு&nbsp;விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்&nbsp;நாமலை இரண்டு வருடம் சிறையில் அடைத்தாலும் பயமின்றி சிறையில் இருந்துவிட்டு வருவார் என மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>நாமல் ராஜபக்சவிற்கு 29ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாமலை இரண்டு வருடம் சிறையில் அடைத்தாலும்.அந்த இரண்டு ஆண்டைப் பயமின்றி சிறையில் இருந்துவிட்டு வருவார் என மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p>தென்னிலங்கை வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எந்த தடங்கல் வந்தாலும் நாம் இந்த மண்ணில் அரசியல் செய்வோம். சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, கெட்ட வார்த்தைகள் பேசி எமது அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது.</p><h2>
</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">அதிகாரத்தை கைப்பற்றும் எமது வழி</span></p><p>ஒரு பயங்கரவாத அமைப்புடன் நாம் அரசியல் செய்யவில்லை. எமது அரசியல் கிராமத்து மக்களுடன்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி -பாராளுமன்றத்தை விடப் பெரியது என்று கூறி பல விளையாட்டுகளில் பாடம் கற்றுக்கொண்ட மனிதர்கள் தான் நம்மிடம் இருக்கிறார்கள். </p><p>மகிந்த ராஜபக்ச இந்நாட்டின் மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்தபோதும் இரண்டு தவணைகளுடன் வீட்டிற்குச் சென்றார். கோட்டாபய ராஜபக்ச மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் வீட்டிற்குச் செல்ல நேரிட்டது. </p><p>அதனால் யாரும் இதில் 50, 60 ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க நிரந்தரக் குத்தகை எடுக்கவில்லை. மக்கள் தேவையான நேரத்தில் முடிவெடுப்பார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c81d47-366d-45fc-a335-2c73940a3c06/26-6aae26112774f.webp' /></p><p>ஆட்சியை கைப்பற்ற எந்தவொரு திட்டமும் தேவையில்லை.மக்களிடம் உண்மையைப் பேசினால் போதும்.வீடுகளுக்குத் தீவைத்து, பாராளுமன்றத்திற்குத் தீவைத்து, நீதிமன்றங்கள் மீது குண்டுவீசி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் நினைக்கலாம்.</p><p>எமது அரசியல் கட்சி ஒருபோதும் அவ்வாறு நினைத்ததில்லை. நாம் அதிகாரம் எடுப்பதற்கு ஒரே ஒரு வழியைத்தான் நினைக்கிறோம். </p><p>அதுதான் சரியான நேரத்தில் நியாயமான ஒரு தேர்தல் நடக்கும்போது, மக்கள் அத்தேர்தலுக்குச் சென்று வாக்களித்து, நாம் தேர்தலின் மூலம் வெற்றியடைவோம் என்பது மட்டுமே. அதற்கான அரசியல் செயல்பாட்டில்தான் நாம் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்க தரப்பிலிருந்து வசூலிக்க தவறிய பெருந்தொகை பணம்! வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-fail-to-collect-crores-rupees-dna-reports-1789795647"></link>
            <id>https://tamilwin.com/article/police-fail-to-collect-crores-rupees-dna-reports-1789795647</id>
            <summary type="text">இலங்கையில் டிஎன்ஏ அறிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களிலிருந்து வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாயை வசூலிக்க அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டிஎன்ஏ அறிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களிலிருந்து வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாயை வசூலிக்க அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
</p><p>
தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வசூலிக்க தவறிய பணம்&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் தடய அறிவியல் மற்றும் டிஎன்ஏ பிரிவு, டிஎன்ஏ அறிக்கை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38330478-aa9e-4802-a7f7-c771cdce7393/26-6aae24da29567.webp' /></p><p>

இதன்படி, 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அந்த அறிக்கைகளுக்காக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய தொகையை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T05:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளையில் சூரியஒளி மின்னுற்பத்திப் புரட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/solar-power-revolution-in-dambulla-1789795927"></link>
            <id>https://tamilwin.com/article/solar-power-revolution-in-dambulla-1789795927</id>
            <summary type="text">தம்புள்ளையில் அமைக்கப்பட்டள்ள 5 மெகாவொட் &#039;தியஜனனி&#039; மிதக்கும் சூரிய மின்நிலையம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் 10.5 ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளையில் அமைக்கப்பட்டள்ள 5 மெகாவொட் 'தியஜனனி' மிதக்கும் சூரிய மின்நிலையம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>

நீர்த்தேக்கத்தின் 10.5 ஏக்கர் நீர்ப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மின்னுற்பத்தி கட்டமைப்பின் ஊடாக 7,500 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கக் கூடியதாக இருப்பதுடன், ஆண்டொன்றுக்கு 6,440 மெட்ரிக் தொன் நச்சுப் புகை (Co₂) வெளியேற்றம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மெகாவொட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 'தியஜனனி' மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் நேற்று (18.09.2026) தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe22923-a1ff-4d34-a338-e2f9f30af33d/26-6aae20bc990fa.webp' /></p><h2>திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு</h2><p>
</p><p>
இத்திட்டத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 6,440 மெட்ரிக் தொன் கார்பன் டைஒக்சைடு (Co₂) வெளியேற்றத்தை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையின் மின்சார உற்பத்தியில் எரிபொருள் மீதான சார்பைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகளவில் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்தத் திட்டம் மற்றுமொரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பைப் பயன்படுத்தி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை மூலம் நிலப்பரப்பைப் பாதுகாத்துக்கொண்டே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313b79d9-4fc1-40c7-b144-02fb91f99076/26-6aae20bd92c27.webp' /></p><h2>நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு</h2><p>

டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை அடிப்படையாக கொண்ட மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் பெருமளவிலான நிதியை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவதற்கும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய திட்டங்கள் பங்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>அரசாங்கத்தின் நிலையான எரிசக்தி கொள்கையின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள 'தியஜனனி' திட்டம், இலங்கையின் மின்சார உற்பத்தித் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
</p><p>
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்களித்த தியஜனனி (தனியார்) நிறுவனம், எரிசக்தி அமைச்சு, இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்களித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287ae0bb-4095-4c0c-babf-12cc646fadfd/26-6aae20be674e9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T05:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756"></link>
            <id>https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் (Blue Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><h2>கைது உத்தரவு..&nbsp;</h2><p>இதனை&nbsp;பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3694b67-624d-4f00-9dfd-066cacec12ba/26-6aae0ac91dd09.webp' /></p><p> </p><p>வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட தேடப்படும் நபர்களின் அடையாளம், இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சட்ட அமலாக்க வழிமுறைகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.</p><p>சந்தேகநபர் ஒருவர் இருக்கும் நாடு அல்லது முகவரி தொடர்பில் தகவல்கள் அறியப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் திரட்டுவதற்காகவே இந்த நீல நிற அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும், எவ்வித அரசியல் தராதரமும் பாராது குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T05:28:23+00:00</updated>
        </entry>
    </feed>
