<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-01T17:14:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனான் இராணுவத்திற்கு பயிற்சியளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-planning-new-mission-to-train-lebanese-1788282103"></link>
            <id>https://tamilwin.com/article/eu-planning-new-mission-to-train-lebanese-1788282103</id>
            <summary type="text">&amp;nbsp;லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார். </p><p>
ஐநா அமைதிப்படைக்கு மாற்றாகச் செயல்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல. </p><p>மாறாக, லெபனான் தனது நாட்டின் பாதுகாப்பைத் தானே உறுதிசெய்து கொள்வதற்கான திறனை அதிகரிப்பதே எங்கள் இலக்கு" என்று காஜா கலாஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813432b7-a10f-405e-8173-36c529798fc8/26-6a9704f8bb5e4.webp' /></p><p>இந்தச் சிறப்புப் பயிற்சியில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை முதன்மையாகச் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>1978 ஆம் ஆண்டு இஸ்ரேல், தெற்கு லெபனான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்டு, கடந்த 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஐநா அமைதிப்படையின் பணிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு வருகிறது.
</p><p>லெபனானின் ஆயுதப் படைகள் மற்றும் தனது சொந்தப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் லெபனான் அரசின் திறனை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். </p><p>
இதற்கான திட்டமிடல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய பேரவையின் முறையான ஒப்புதலுடன் இத்திட்டத்தைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
லெபனான் இராணுவம் மற்றும் அந்நாட்டின் பொலிஸ் படைகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கான இராணுவ மற்றும் சிவிலியன் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திர சேவைப் பிரிவு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T17:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா : IRGC இலக்குகள் மீது அதிரடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041"></link>
            <id>https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041</id>
            <summary type="text">ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (C...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.</p><h2>ஈரானில் உள்ள இலக்கு</h2><p> </p><p>இந்தத் தாக்குதல்கள் கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளன.&nbsp;</p><p>இன்று கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு, அமெரிக்கப் படைகள் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதலைத் தொடங்கின.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today at 12 p.m. ET, U.S. forces began striking Islamic Revolutionary Guard Corps (IRGC) targets in Iran. The strikes follow recent attempted attacks by the IRGC against commercial shipping in the Strait of Hormuz and against American service members deployed to the region.</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094826294466810366?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மீதும் IRGC சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என&nbsp; சென்ட்காம் பதிவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T17:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467"></link>
            <id>https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா வரவேற்ற போதிலும் அந்த போர்நிறுத்தம் நிலையற்றதாகவும் மிகவும் பலவீனமானதாகவும் காணப்படுவது நிரூபணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார். </p><p>
அதேவேளையில், ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de2a520-c5a6-44d1-9d66-53d5849b3962/26-6a97027cdd08d.webp' /></p><p>
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே புடின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>
இந்த மாநாட்டின் இடையே அவர் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>
கடந்த ஜூன் மாத மத்தியில், பாகிஸ்தான் மற்றும் கடார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, 60 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய போர்நிறுத்த நீடிப்பு அதில் வழங்கப்பட்டிருந்தது.</p><p> 
அந்த காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தற்போதைய போர்நிறுத்தச் சூழல் குறித்து ரஷ்ய அதிபர் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறையில் சட்டவிரோத விடுதி: பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் கடும் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-arises-coordination-committee-meeting-1788279136"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-arises-coordination-committee-meeting-1788279136</id>
            <summary type="text">வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச
ஒருங்கிணைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.
</p><p>வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை
அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதியானது வல்வெட்டித்துறை நகர சபை,
கரையோர பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, மது வரித்
திணைக்களம், போன்றவற்றின் சட்ட வரையறைக்குட்படாது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;சட்ட விரோத செயற்பாடுகள்</h2><p>கரையோர பாதுகாப்பு விதிகளை மீறி கடலுக்குள் கட்டிடங்கள்
அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டும்
இதுவரை துறை சார்ந்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீண்ட
விவாதம் இடம்பெற்றது.</p><p>தொடர்ச்சியாக குறித்த விடயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு
வருடத்துக்கு மேலாக விவாதிக்கப்படுவதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்றும், பலரும் குற்றம் சுமத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f216c0b-bea4-45cf-8375-12ce173603cf/26-6a96fdc99f490.webp' /></p><p>

இதேவேளை வல்லிபுர கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு 25
ஏக்கர் காணி வழங்கப்பட்டு அதில் சுற்றுலா கவர்ச்சி ஏற்படுத்தும் வகையில்
பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், குறித்த அமைவிடம்
தொடர்பிலும் நீண்ட விவாதம் ஏற்பட்ட நிலையில் பிரதேச மக்களுடன் இணைந்து இடங்களை
பார்வையிட்டு இந்திய முதலீட்டு திட்டத்தை அனுமதிப்பதா இல்லையா என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடமராட்சி வடக்கு
பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் காலை 9:45 மணியளவில் ஆரம்பமானது.</p><h2>ஒருங்கிணைப்பு குழு கூட்டம்</h2><p>
</p><p>மேலும் வீதி அமைத்தல் தொடர்பான அனுமதிகள், எல்லை நிர்ணயம் தொடர்பாக மவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கான அனுமதியும்,
பருத்தித்துறை அஞ்சல் திணைக்கள காணியிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற
வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது என்ற தீர்மானமும், நீதிமன்றத்திற்கு காணி
ஆனைவிழுந்தான் பகுதியில் வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்
மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6858bbb1-e6f7-47f9-856e-487036e35bdf/26-6a96fdcac400d.webp' /></p><p>
</p><p>
இன்றைய வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அரச
திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறையை நகர சபை தவிசாளர், செயலாளர்,
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர், செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை உப
தவிசாளர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், கிராமம் மட்ட
அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இராணுவம் காவல்துறை, கடற்படை
ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T16:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிப்பாறைகள் உருகுவதால் இமயமலைப் பிராந்தியத்திற்கு காத்திருக்கும் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-warns-sudden-glacial-lake-eruption-in-himalayas-1788275401"></link>
            <id>https://tamilwin.com/article/un-warns-sudden-glacial-lake-eruption-in-himalayas-1788275401</id>
            <summary type="text">இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா எச்சரித்துள்ளார்.</p><p>நேபாளத்தில் கடந்த வாரம் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>​இயற்கை அனர்த்தங்களை தடுத்தல்</h2><p>

காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால்,
நேபாளம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஆபத்தான நிலையிலுள்ள பனிப்பாறை
ஏரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், ஆற்றோரப் பகுதிகளில் வாழும்
மில்லியன் கணக்கிலான மக்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயத்தை
எதிர்நோக்கியுள்ளனர்.

​</p><p>இந்த அனர்த்தங்கள் நீர்மின் உற்பத்தித் திட்டங்களை அச்சுறுத்துவதுடன், ஆறுகளின்
கரையோரப் பகுதிகளை மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாற்றக்கூடும் என்றும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1423d5f-fe49-435a-ba2a-609571a813b6/26-6a96ecce9331e.webp' /></p><p>குறிப்பாக, நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்
நிர்மாணப்பணியில் இருந்த 15 பிரதான நீர்மின் நிலையங்கள் முற்றிலும்
சேதமடைந்துள்ளன.</p><p>

​இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் மீறி
இத்தகைய பேரழிவுகள் நிகழும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதனால்,
பாதிக்கப்பட்ட பிராந்திய மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்வது
தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.
அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T16:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856"></link>
            <id>https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆளும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
</p><p>
ஆளும் தொழிற்கட்சியின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து
விலகி சுமார் ஆறு வாரங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இந்த முடிவை
எடுத்துள்ளார்.</p><p>

தான் வகித்து வந்த லண்டன் ‘ஹோல்பர்ன் மற்றும் சென் பாங்க்ராஸ்’ தொகுதிக்கான
எம்.பி பதவியிலிருந்து விலகி, இனி சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம்
செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இராஜதந்திர நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சியைப் வரலாற்றுச்
சிறப்புமிக்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து பிரதமரான போதிலும்,
உள்நாட்டுக் கொள்கைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் மக்களின் ஆதரவு
வீழ்ச்சி காரணமாக அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb6db646-5936-4c47-8c24-17472f37e007/26-6a96e9af8e7fe.webp' /></p><p>

எனினும், பிரான்ஸ் மற்றும் சீனாவுடனான உறவுகளைச் சீரமைத்தல், உக்ரைனுக்கான
ஆதரவு மற்றும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்தல் போன்ற சர்வதேச விவகாரங்களில்
அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தன.
</p><p>
கெய்ர் ஸ்டார்மரைத் தொடர்ந்து அண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய
பிரதமராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T15:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF வெளியேற்றம்! அடுத்தடுத்து அநுர அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-government-will-take-drastic-decisions-1788274054"></link>
            <id>https://tamilwin.com/article/next-government-will-take-drastic-decisions-1788274054</id>
            <summary type="text">2028ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகக் கடுமையான ஆண்டாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகக் கடுமையான ஆண்டாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
</p><p>
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை கைப்பற்றுவதற்கு கடுமையாகப் போராடும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>IMF திட்டத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக இலங்கையில் பெரியளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, டிட்வா புயல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஜனாதிபதியால் நாட்டை வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும், வரிகளை குறைப்போம், சம்பள உயர்வுகளை வழங்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவை ஈடுபடும்.
</p><p>
அதேவேளை, ஜனாதிபதி நாட்டு மக்களிடம் இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலையும் ஏற்படலாம் என்றார். </p><p>இவ்வாறான பல்வேறு விடயங்களை உங்கள் கண்முன்னே கொண்டு வருகின்றது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K-gcvqPOo-E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T14:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-lecturers-to-protest-1788273876"></link>
            <id>https://tamilwin.com/article/university-lecturers-to-protest-1788273876</id>
            <summary type="text">அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். </p><p>
பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.</p><p> 
அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இல்லங்கசிங்க எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd318ce7-c18b-4ba9-8d34-0dceb1b6d886/26-6a96e4d568a2f.webp' /></p><p>
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் சிக்கல்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அவற்றுக்கான தீர்வு யோசனைகள் மற்றும் கடிதங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சாருதத்த இல்லங்கசிங்க தெரிவித்தார்.</p><p> 
எனினும், பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அல்லது முன்வைக்கப்பட்ட யோசனைகளையோ அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இந்தப் பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாகத் தீர்வு காணப்படாததன் காரணமாக, அரசுப் பல்கலைக்கழகங்களிலிருந்து கல்விப் பணியாளர்கள் பெருமளவில் வெளியேறி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>ஆண்டுக்கு சுமார் 25,000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட போது, 5,800 விரிவுரையாளர்கள் பணியில் இருந்தனர்.
ஆண்டு மாணவர் சேர்க்கை 45,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், சுமார் 1,000 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.
</p><p>சில கல்விப் பணிகளுக்கான பதவி வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரிவுரையாளர்கள் முன்வருவதில்லை.
</p><p>அரசுப் பல்கலைக்கழக அமைப்பின் வீழ்ச்சி என்பது நாட்டின் எதிர்காலத்தின் வீழ்ச்சியாகும் என சாருதத்த இல்லங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசி அலுத்துவிட்ட நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார். </p><p>அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும் எனவு, தேவைப்படின் போராட்டங்கள் மேலும் தீவிரமாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக தன்னை நினைத்த கே.பிக்கு கடும் பாதுகாப்பு! தென்னிலங்கையில் இருந்து கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422"></link>
            <id>https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422</id>
            <summary type="text">
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதாரத்தை சீரழித்த யுத்தம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

எமது நாடு விடுதலைப் புலிகளின் யுத்தத்திற்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது. ஆனால், 87 மற்றும் 88ஆம் ஆண்டுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக, எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d009302-99f0-40fe-8b56-77196dcd467d/26-6a96b59fdc24e.webp' /></p><p>
</p><p>
 ஆனால், இவ்வாறு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்திய யாருக்காவது வழக்குகள் இருக்கின்றதா? மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாருக்காவது வழக்கு இருக்கின்றதா என கேட்கின்றோம்.
</p><p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நான்தான் என சொல்லிக் கொண்ட குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக ஒரு வழக்கும் இல்லை. </p><p>

ஆனால், விடுதலைப் புலிகளின் சாதாரண உறுப்பினர்கள் சிலரே இன்று சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ModBCQZYHW4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-01T14:01:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயற்சிக்கின்றது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-slams-npp-over-22nd-ammendment-1788270865"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-slams-npp-over-22nd-ammendment-1788270865</id>
            <summary type="text">அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.</p><h2>ஜனநாயக முறையான நியமனங்கள்</h2><p>
தேசிய மக்கள் சக்தியா அரசாங்கமானது அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நகர்வுகளை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
</p><p>இதன் ஓர் பகுதியாகவே இளைஞர் மன்றங்கள் முதல் சிவில் பாதுகாப்பு கமிட்டி வரையில் ஜனநாயக முறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f046b123-9400-4414-8e25-ee9ab6c3f2bd/26-6a96d9129f2dd.webp' /></p><p>
அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் நீதிமன்றங்களின் சுயாதீன தன்மையை சிவைடையச் செய்வதற்கும் முயற்சிப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>உண்மையில் 22 ம் திருத்தச் சட்டமூலமானது தனி கட்சி ஆட்சி முறை ஒன்றை முன்னெடுக்கும் உள்நோக்கத்தை கொண்டதாக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் சவூதி அரேபியாவின் இரு பிரம்மாண்டக் கப்பல்கள் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-two-massive-saudi-arabian-ships-hormuz-1788268379"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-two-massive-saudi-arabian-ships-hormuz-1788268379</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியே சவூதி அரேபியாவின் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற இரு
பிரம்மாண்டக் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்
நடத்தப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியே சவூதி அரேபியாவின் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற இரு
பிரம்மாண்டக் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாகக் கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஓமான் கடற்பரப்பு எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து சில நிமிட வேறுபாட்டில்
இடம்பெற்ற இத்தாக்குதல்களில் சவூதி அரேபியக் கொடியுடனும் லைபீரியக்
கொடியுடனும் பயணித்த இரு கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
</p><p>
தலா 20 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற இக்கப்பல்களில்
இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எச்சரிக்கை</span></p><p>
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் மோதல் நிலை காரணமாக ஹோர்முஸ்
நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஓமான்
மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் முன்னெடுத்து வரும் சமரச பேச்சுவார்த்தைகளிலும்
இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/703b01c0-866b-4102-9577-ae66fee6b6c3/26-6a96d805997cc.webp' /></p><p>

இப்புதிய தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மேலதிகத்
தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும்
உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கையில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-who-went-to-bath-in-the-kalu-ganga-1788267563"></link>
            <id>https://tamilwin.com/article/youth-who-went-to-bath-in-the-kalu-ganga-1788267563</id>
            <summary type="text">களுத்துறை, ஹொரண - நாரகல பாலத்திற்கு அருகாமையிலுள்ள களு கங்கையில்
நீராடுவதற்காகச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவர், கங்கையில் குதித்து நீந்த
முயன்றபோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை, ஹொரண - நாரகல பாலத்திற்கு அருகாமையிலுள்ள களு கங்கையில்
நீராடுவதற்காகச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவர், கங்கையில் குதித்து நீந்த
முயன்றபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
</p><p>
அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு நண்பரும் நீரோட்டத்தில் சிக்கிப் போராடிப்
பின்னர் கரையேறியுள்ளார்.
</p><p>
இந்த விபத்தில் காணாமல்போனவர் யால பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என
அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>முதலைகளின் நடமாட்டம் அதிகம்</h2><p>

ஹொரண பொலிஸாருக்குத் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, பொலிஸ் கடற்படைப் பிரிவின்
உயிர்காப்புப் படையினர் களு கங்கையில் மாயமான இளைஞரைத் தேடும் பணியை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cfc95c-460e-4ea9-864b-f2106dc4a7c4/26-6a96d10bf12f3.webp' /></p><p>
குறிப்பிட்ட பகுதி கடுமையான நீரோட்டம் கொண்டதுடன் முதலைகளின் நடமாட்டமும்
அதிகமுள்ள பகுதியாகும் என்பதால், அச்சமடைந்த உள்ளூர் மக்களும் மாயமான இளைஞரின்
நண்பர்களும் நேற்றிரவு முழுவதும் கங்கைக் கரையில் தீ மூட்டி
காத்திருந்துள்ளனர்.
</p><p>
ஹொரண பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மனு தாக்கல் - பரபரப்பை ஏற்படுத்திய புதிய நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-litigation-in-us-courts-1788267881"></link>
            <id>https://tamilwin.com/article/drug-litigation-in-us-courts-1788267881</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தமக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
</p><p>
 தாம் ஒரு நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் தமக்கு சட்டப் பாதுகாப்பு உரிமையுள்ளதாகவும், அமெரிக்காவினால் தாம் கைதுசெய்யப்பட்ட விதம் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது எனவும் கூறி இந்த மனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளார். </p><p>

எனினும், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுரோவை வெனிசுவேலாவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பதாலும், கடந்தகால வரலாற்றுச் சட்டப் முன்னுதாரணங்களின் அடிப்படையிலும் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2> 

நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல்</h2><p>
அமெரிக்கச் சட்டங்களின்படி, ஒருவர் எவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார் என்பதைக் காட்டிலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையே விசாரிக்கப்படும் என்பதால் மதுரோவின் கோரிக்கை நிராகரிக்கப்படக் கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbcb5cfa-60a0-49aa-9650-65c3a26b3f42/26-6a96cf45d4a13.webp' /></p><p> 

இந்த கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-nepal-s-massive-floods-exceeds-1000-1788266925"></link>
            <id>https://tamilwin.com/article/death-nepal-s-massive-floods-exceeds-1000-1788266925</id>
            <summary type="text">நேபாளத்தின் இமயமலைப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பேரழிவுமிக்க பனிப்பாறை சரிவு
மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் இமயமலைப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பேரழிவுமிக்க பனிப்பாறை சரிவு
மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை
1,000 ஐக் கடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து,
நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள்
தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு
சேர்ப்பதற்கும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் தற்காலிக பாலங்கள்
அமைக்கப்பட்டு வருகின்றன.</p><h2>பேரழிவு</h2><p>

இந்த அனர்த்தத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதுடன், நீர்மின்
நிலைய சுரங்கப் பாதைகளுக்குள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்தும்
சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/636d93d7-ff56-4601-aa69-28b6cd5974e7/26-6a96cbcb5a30d.webp' /></p><p>
</p><p>
அவர்களை மீட்கும் பொருட்டு சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த
நிபுணத்துவ மீட்புக் குழுவினர் கனரக இயந்திரங்கள் மற்றும் உலங்குவானூர்திகளை பயன்படுத்தி தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
புவிவெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவே இத்தகைய
பேரழிவுக்கு முதன்மை காரணம் என சுட்டிக்காட்டியுள்ள நேபாள பிரதமர் பாலேந்திர
ஷா, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை
அரசாங்கம் முன்னுரிமையளித்துச் செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.ஊடகவியலாளரிடம் அரச ஊடக நிறுவனம் விளக்கம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/explanation-to-a-journalist-in-jaffna-1788266147"></link>
            <id>https://tamilwin.com/article/explanation-to-a-journalist-in-jaffna-1788266147</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை
சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவருக்கு அரச ஊடக நிறுவனம்
ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர்
பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய
அந்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை எமது ஊடகம் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனை தொடர்புகொண்டு கேட்ட நிலையில் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
</p><p>
மேலும் தான் கடிதம் மூலம் விளக்கத்தை வழங்கியுள்ளதாக எமக்கு சுட்டிகாட்டினார்.</p><p>
</p><h2>சமூக வலைத்தள செயற்பாடுகள் தொடர்பாக</h2><p>
அண்மையில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம்
செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி
அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு
வெளிப்படுத்தியமை, ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட
செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை
சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86aff05-6a6b-4403-9d94-9cae2a9c2d56/26-6a96ca488b455.webp' /></p><p>இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க
முடியும் என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய
முடியாது எனவும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி
அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி
அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள
கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.</p><p>அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் உள்ளிட்ட
விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை கண்காணித்து அது தொடர்பாக பகிரங்கமாக
எச்சரிக்கை விடும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு எல்லை
மீறியுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் கட்டாயம் போட்டியிடுவேன்..! முன்னாள் எம்.பி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-provincial-council-elections-i-contest-1788263777"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-provincial-council-elections-i-contest-1788263777</id>
            <summary type="text">கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் நானும் கட்டாயம் போட்டியிடுவேன் என&amp;nbsp; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;சீ.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று(...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் நானும் கட்டாயம் போட்டியிடுவேன் என&nbsp; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;சீ.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(01.09.2026) வாழைச்சேனையில் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தேர்தலில் வேட்பாளராக</h2><p>
</p><p>
பல்வேறு சமகால அரசியல், தொடர்பாக கருத்துக்களை கூறிய அவர் மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d7bdfc-4796-4033-a906-08ca72b2089a/26-6a96c226b6933.webp' /></p><p>

மாகாணசபை தேர்தல் நடத்தும் திகதி அறிவிப்பு, வேட்புமனு கோரல் அறிவிப்பு வருமானால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவதாகவும் அது இந்த ஆண்டில் நடைபெ வாய்புகள் இல்லை என குறிப்பிட்டார். </p><p>

அடுத்த ஆண்டு(2027) நடைபெறலாம் என எதிர்பார்க்கிறேன் </p><p>அப்படி நடந்தால் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாயம் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவேன். என்னை எவரும் தடுக்கமுடியாது எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரியும் அபாயம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-rockfalls-on-the-hatton-colombo-main-road-1788261062"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-rockfalls-on-the-hatton-colombo-main-road-1788261062</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் பிரதான வீதியில் சரிந்து விழும் கடும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>

கடந்த நாட்களில் கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த இடத்திலிருந்து பிரதான வீதிக்கு மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.</p><h2>கோரிக்கை</h2><p> 

பின்னர் வீதியில் சரிந்து விழுந்த மண்ணையும் பாறைகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், கீழே சரிந்து விழும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஏனைய பெரிய பாறைகளையும் மரங்களையும் அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d16e5d7-ab00-4565-9000-297cc2aebfc4/26-6a96c08e6ecc7.webp' /></p><p> </p><p>

தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த பரபரப்பான வீதியில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக, அச்சுறுத்தலாக உள்ள பாறைகளையும் மரங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு தலையிடுமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேவிபியினரின் ஆயுதக் கலவரங்களால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம் - துமிந்த திஸாநாயக்க கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/duminda-tissanayake-statement-1788260662"></link>
            <id>https://tamilwin.com/article/duminda-tissanayake-statement-1788260662</id>
            <summary type="text">இலங்கையின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜேவிபி நடத்திய ஆயுதக்
கலவரங்களால் பேருந்து தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு,
அபிவிருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜேவிபி நடத்திய ஆயுதக்
கலவரங்களால் பேருந்து தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு,
அபிவிருத்தித் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச்
சேதங்களே அதிகம் என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த
உண்மைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (01.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய
போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள், வழக்குகள் மற்றும்
அச்சுறுத்தல்கள் காரணமாகவே நாட்டில் வலுவான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி இயங்க முடியாத சூழல் நிலவுகின்றது.

அரசியல்வாதிகளுக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருப்பதால், அவர்கள் பயத்தில்
வெளியே வர முடியாத நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f053dc88-faf7-442d-8123-0d478a567228/26-6a96be1680610.webp' /></p><p> இருப்பினும் அரசின் இந்த
அழுத்தங்களுக்கு உள்ளாகும் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மிக
விரைவில் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபடுவர்.

1951 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி, தனது பெருமைமிக்க 75ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில்,
2026 செப்டெம்பர் 2ஆம் திகதி கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது.
</p><p>
கடந்த 76 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் நடக்கவில்லை எனத் தற்போதைய அரசு கூறுவது
முற்றிலும் தவறானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசுகள்
எட்டிய வரலாற்றுச் சாதனைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை இந்த மாநாட்டின்
மூலம் மக்களிடம் வெளிப்படுத்தவுள்ளோம்.</p><p>

மேலும், தற்போதைய அரசு பெருமையுடன் பேசும் கனிம எண்ணெய் மற்றும் எரிபொருள்
ஆராய்ச்சித் திட்டங்கள், காஸ் கண்டறிதல் மற்றும் மொரட்டுவையிலிருந்து போர்ட்
சிட்டி வரையிலான அதிவேகப் போக்குவரத்துப் பாதை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொழில்நுட்பங்கள்
கொண்டுவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் இறுதிப் கட்டங்களே தவிர, இந்த
அரசால் புதிதாகக் கொண்டுவரப்பட்டவை அல்ல.</p><h2>சர்வாதிகார நிர்வாகத்திற்கு தேவையான சூழல்</h2><p>
</p><p>
அரசால் முன்னெடுக்கப்படும் 22ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அது
தொடர்பான செயற்பாடுகள் ஆபத்தானவை. இவை ஒரு சர்வாதிகார நிர்வாகத்துக்குத்
தேவையான சூழலை உருவாக்கவே செய்யப்படுகின்றன. இவை அரசியல்வாதிகளுக்கு
மட்டுமல்லாது ஊடகங்கள், விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின்
சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மிகவும் ஆபத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/872bd9d7-af1f-4fe8-98e0-7605f7625be2/26-6a96be176f4f5.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நிதி அமைச்சு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள்
மற்றும் அறிக்கைகள் குறித்துப் பேசும் ஆட்சியாளர்கள், முதலில் தம்மை
நிரபராதிகள் என நிரூபிக்க வேண்டும்.

அத்துடன், முன்னாள் விடுதலைப்புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கே.பி. (குமரன்
பத்மநாதன்) வசம் கப்பல்களும் பெருமளவு பணமும் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில்,
அவர் எவ்வாறு சுதந்திரமாக நடமாடுகின்றார் என்பது குறித்து உடனடி விசாரணை
நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
</p><p>
நாட்டின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜே.வி.பி நடத்திய ஆயுதக் கலவரங்களால்
பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு, அபிவிருத்தித்
திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம்.
நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த உண்மைகளை ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலையாகாத பிள்ளையான் - சிறைச்சாலைக்கு சென்ற அழைப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332"></link>
            <id>https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332</id>
            <summary type="text">


மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>


</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவரை எதிர்வரும் செப்டம்பர் 15 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இது தொடர்பான வழக்கு இன்று(01.09.2026)&nbsp; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படல்</h2><p>


மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கின் 3ம் சந்தேக நபரான சி. சந்திரகாந்தன் பிள்ளையான் - முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெலிசர சிறைச்சாலையில் காணப்படும் இணையத்தடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையவழி மற்றும் வட்ஸ்அப் ஊடாக இணைக்கமுடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. </p><p>

 மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டிருந்தனர்.
</p><p>
இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த வழக்கு தொடர்பான தொடர்ச்சியான மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. </p><h2>
 
 

விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை</h2><p>
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.</p><p> இந்த வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f5fda2-ca4b-426e-ad07-daa53e4a038c/26-6a96bcf6499bd.webp' /></p><p> 

இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549"></link>
            <id>https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549</id>
            <summary type="text">நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

பறிமுதல் செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களிலும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறிப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df999720-aa59-4397-9468-1780882c7403/26-6a96bbe28cdcf.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில் 18, 19, 20 மற்றும் 22 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:51:37+00:00</updated>
        </entry>
    </feed>
