<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T12:07:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/helped-ishara-sevvanthi-flee-to-india-arrested-1788176712"></link>
            <id>https://tamilwin.com/article/helped-ishara-sevvanthi-flee-to-india-arrested-1788176712</id>
            <summary type="text">இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மன்னார்- இலுப்பைக்கடவை பொலிஸ் விசே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மன்னார்- இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, மன்னார் ஊடாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.</p><h2>கைது&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் 'பலசி' என்பவர் இன்று(31.8.2026) மன்னார், இலுப்பைக்கடவை அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ae58dd-6738-4a44-aadd-5242e3f254d7/26-6a956bb40dd20.webp' /></p><p>
</p><p>
இஷாரா செவ்வந்தி, இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல குறித்த நபர் படகு வழங்கி உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நகர்ப்புற நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-urban-consumer-inflation-increases-1788176978"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-urban-consumer-inflation-increases-1788176978</id>
            <summary type="text">கொழும்பு நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து இது தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த புள்ளிவிபரங்களுக்கு பிரகாரம் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.</p><h2>உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம்</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜூலை மாதத்தில் அது 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4287ed61-4e35-443c-9805-805d667e6c5c/26-6a956e1cd52f3.webp' /></p><p>

எனினும் உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் ஆகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>கடந்த ஜூலை மாதத்தில் குறித்த பிரிவின் பணவீக்க வீதம் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145"></link>
            <id>https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து &#039;ஐஸ்&#039; எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்திய கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><h2>கொள்கலனில் மறைத்து வைத்து</h2><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 'ஐஸ்' வகை போதைப்பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ef4001-4cde-4d21-b9a5-c2815eb59342/26-6a956ad6c1f0e.webp' /></p><p>

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பிணையில் செல்ல அனுமத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>இன்று(31.08.2026)&nbsp; புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே அவருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_pTsVaYPnmw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம்&nbsp;இணைப்பு</span></p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு,&nbsp; அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:48:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த தம்பலகாம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-trincomalee-1788171689"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-trincomalee-1788171689</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டம் இன்றைய தினம் (31.08.2026)
பிரதேச செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு
பூராகவும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக
தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff3f549-5c5b-4507-8da6-8a06feffd227/26-6a95681ab7b35.webp' /></p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்</h2><p>
</p><p>
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள
அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு,
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு 2027வரவு செலவு
திட்டத்தில் ரூபா 25000 இடைக்கால கொடுப்பனவு வழங்கு,

ஐந்து வருடங்களில் தரப் பதவி உயர்வு வழங்கு,பெறும் சம்பளம் ஒரு மாதத்திற்கே
போதாது எரிபொருள் கொடுப்பனவு எம்பிக்களுக்கு மட்டுமா போன்ற பல வாசகங்களை
ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இதன்போது நடை பவணியாக போராட்டத்தில்
ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சென்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef2bea0-5ff8-453a-b6bc-8dac83800660/26-6a95681b9c05e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76fdf27d-f7f4-40ee-9e4a-bf821239f728/26-6a95681d1a02c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bhaskaran-kandiah-meets-former-priest-in-person-1788175214"></link>
            <id>https://tamilwin.com/article/bhaskaran-kandiah-meets-former-priest-in-person-1788175214</id>
            <summary type="text">யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.</p><p>

இந்த சந்திப்பு இன்று (31.08.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கும்&nbsp; அருட்தந்தை இம்மானுவேல், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வராகவும், யாழ்ப்பாணம் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அத்துடன், உலகத் தமிழர் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குரலாகவும் சர்வதேச அளவில் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>

நாட்டை விட்டு வெளியேறிய இம்மானுவேல்</h2><p>
இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், 1997ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5dc20b-fbb6-424a-8352-828e3238edfb/26-6a9565b0c52b1.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து இங்கிலாந்து சென்ற அவர், அங்கு ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர் ஜெர்மனிக்குச் சென்று, மூன்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 2007ஆம் ஆண்டு வரை குருவாகப் பணியாற்றினார்.
</p><p>
அங்கு பணியாற்றிய காலத்திலும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுத்ததுடன், அவர்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து எடுத்துச் சென்றார்.
</p><h2>
ஈழ விடுதலைப் போராட்டம்</h2><p>
இதனையடுத்து, 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவராக அருட்தந்தை இம்மானுவேல் தெரிவுசெய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393e8925-4054-46a0-9e31-5686853e20e2/26-6a9565b19d22f.webp' /></p><p>
</p><p>
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் தமிழீழ தேசியத் தலைமையின் நிலைப்பாட்டுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும் சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அருட்தந்தை இம்மானுவேலை, தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c548eb8-ff9a-462b-87c9-980e84820182/26-6a9565b26e35c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b83abe78-594b-4f7b-b3ef-2c54de1cbb8a/26-6a9565b33fa91.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1615279-ecef-4ca3-9243-93758feb51bb/26-6a9565b40bd1f.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788175770"></link>
            <id>https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788175770</id>
            <summary type="text">கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதியில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் வீடொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதியில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் இடும் பணிகளுக்காக
நேற்று (30) மாலை சுமார் 5.30 மணியளவில் நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு
மோட்டார் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முஹம்மத் ராபிக் மொஹம்மத் ரிபாஸ்
என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>குண்டுகள் மீட்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ
இடத்துக்கு கிண்ணியா பொலிஸார் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டனர்.</p><p>

இந்நிலையில், இன்று (31) மாலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை –
சர்தாபுர விசேட அதிரடிப்படை அணியினர், குறித்த இரு மோட்டார் குண்டுகளையும்
பாதுகாப்பாக மீட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebef5e2-9518-45b0-a610-525c601f42d8/26-6a95659c0f7f7.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட குண்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இதேவேளை, குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது, 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பகுதியில் இராணுவ முகாம்
ஒன்று அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rise-in-colombo-consumer-inflation-1788172346"></link>
            <id>https://tamilwin.com/article/rise-in-colombo-consumer-inflation-1788172346</id>
            <summary type="text">கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக&amp;nbsp; தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக&nbsp; தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இன்று (31) வெளியிட்டுள்ள கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.</p><h2>பணவீக்கம் அதிகரிப்பு</h2><p>

 

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதுடன், ஜூலை மாதத்தில் அது 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc387455-9a65-4e24-afef-a72723e1767f/26-6a955f7725635.webp' /></p><p>
</p><p>
 

எவ்வாறாயினும், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் அவ்வீதம் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:09:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் : ஆராய உயர்நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-five-judge-1788172896"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-five-judge-1788172896</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுக்கான வயதெல்லையை அதிகரிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுக்கான வயதெல்லையை அதிகரிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கும், சட்டநடைமுறைகள் தொடர்பில் சபாநாயகருக்கு விளக்கமளிப்பதற்கும் குறித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
</p><h2>எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர்</h2><p>
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர, அசல வெங்கப்புலி, சம்பத் அபேகோன், கிஹான் குலதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/833113f4-e1f6-48af-9527-ecf55dd64aa6/26-6a955f5b1ed61.webp' /></p><p>
22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பான மனுக்களை பரிசீலித்து எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னதாக அவர்கள் தங்கள் தீர்ப்பை அறிவிக்கவுள்ளனனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:04:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788173259"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788173259</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (31.08.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.&amp;nbsp;கடந்த சனிக்கிழமை (29.08.2026) 24 கரட் தங்கம் பவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (31.08.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>கடந்த சனிக்கிழமை (29.08.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 378,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 1000 ரூபாயால் குறைந்து 377,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52c7804-d009-4690-a3aa-82cad9e9c2e1/26-6a955da360653.webp' /></p><p>
</p><p>இதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MEIcevs6kv4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-31T10:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக 10 பில்லியன் டொலரை கடந்த இலங்கையின் ஏற்றுமதி வருவாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-export-earnings-10-billion-1788169850"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-export-earnings-10-billion-1788169850</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.இது ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.</p><p>இது ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 10.437 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.</p><h2>ஆண்டின் முதல் ஏழு மாதங்களில்&nbsp;</h2><p>
</p><p>
 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க, ஜூலை 2026இல் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் குறித்த புள்ளிவிவரங்களை, இன்று (31.08.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0cf27d-4208-4023-ba00-fe0e94d01ecb/26-6a9557c303394.webp' /></p><p>
 

ஓர் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை 10.437 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் ஆடம்பர விடுதியில் பதுங்கியிருந்து நாட்டை உலுக்கிய பிரபல குற்றவாளி! அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-underworld-figures-return-to-the-srilanka-1788142649"></link>
            <id>https://tamilwin.com/article/9-underworld-figures-return-to-the-srilanka-1788142649</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்ட &#039;வெல்லே சாரங்கா&#039; என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்ட 'வெல்லே சாரங்கா' என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வழங்கிய உளவுத்தகவல்களின் அடிப்படையில் டுபாயில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் வைத்து டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில், வெல்லே சாரங்கா உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>இரகசியமாக போதைப்பொருட்களை அனுப்பும் நடவடிக்கை</h2><p>

இவர்கள் டுபாயில் பதுங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இலங்கைக்குள் போதைப்பொருட்களை இரகசியமாக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b60a63f9-fd72-4d93-be35-ad67e57efe84/26-6a9557e600975.webp' />&nbsp;</p><p>

மேலும், வெல்லே சாரங்கா மீது கொலை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>

மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள், பாதாள உலகத்தலைவரான லலித் கண்ணங்கராவை கைது செய்வதற்காக டுபாய்க்கு சென்று, அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இந்த நடவடிக்கையில் ​​மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், டுபாய் பொலிஸ் அதிகாரிகளுக்கு வெல்லே சாரங்கா என்ற பாதாள உலகத் தலைவர் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளனர்.</p><p>

அதன்படி, டுபாய் பொலிஸார் பல வாரங்களாக நடத்திய தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, டுபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த வெல்லே சாரங்கா உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நேரத்தில், இந்த குற்றவாளிகளிடமிருந்து கொக்கைன் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661e7bb7-d6be-40c6-b9ab-426792b96809/26-6a9557e6aac11.webp' /></p><p>
வெல்லே சாரங்கா ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருந்தபடியே பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>

ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடன் இணைந்து, போதைப்பொருட்களை இழுவைப் படகுகளில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பும் கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் தகராறு காரணமாக மோதரை பகுதியில் எவோனி சுதர்ஷனி பெர்னாண்டோ என்ற பெண்ணை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மட்டக்குளிய, கொட்டஹேன, மோதரை உள்ளிட்ட பல பகுதிகளில் பல கொலைகளை இயக்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

தற்போது டுபாய் பொலிஸ் காவலில் உள்ள வெல்லே சாரங்கா உள்ளிட்ட 9 குற்றவாளிகளை விரைவாக இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இலங்கை பொலிஸாருடன் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-crossed-1-5-million-in-sl-1788169654"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-crossed-1-5-million-in-sl-1788169654</id>
            <summary type="text">நாட்டிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான&amp;nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக&amp;nbsp;சுற்றுலா அபிவிருத்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான&nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக&nbsp;சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p>அதேவேளை, ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p>
</p><p>
 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0162704b-a72d-40f7-b6aa-2482332bb8d8/26-6a9552ec92c21.webp' /></p><p>
</p><p>
 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளனர் (18,197 பயணிகள்).

 

மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><h2>அதிகரிப்பு</h2><p>மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca490d8-a655-4f99-af37-f8942920502a/26-6a9552ed4d444.webp' /></p><p>அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><p>மேலும், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது பெப்ரவரி மாதத்திலாகும். (279,328 பயணிகள்).</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-1788170534"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-1788170534</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
</p><p>
பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.</p><p>

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட வினாவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்குறித்த கருத்தை ஊடகங்களுக்கு முன்வைத்திருந்தார்.</p><h2>யோசனை முன்வைப்பு</h2><p>
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளது.</p><p>

பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையான யோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவும் முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc1d08a-59c6-4724-b459-f0215d4d5866/26-6a9553187af46.webp' /></p><p>
</p><p>
முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான விடயமாகும்.</p><h2>தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம்</h2><p>
</p><p>
மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.
</p><p>
தேர்தல் முறைமை குறித்து நாடாளளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும்.

அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கோட்டாபய ராஜபக்சவின் பல்வேறு செயற்பாடுகளும் குறித்த பெண்ணின் ஆலோசனைகளுக்கு அமையவே இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. </p><p>அமைச்சரவை நியமனம், சில அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் அவரது ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் எவ்வாறு உறங்க வேண்டும் என்பதுகூட அந்தப் பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்படும் பெண், அனுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ‘ஞானக்கா’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஞானக்காவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டல் ஒன்று, அனுராதபுரத்தில் நுவரவெவ குளத்தை நிரப்பி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவல்களை ருஹுணு பல்கலைக்கழகத்தின்&nbsp; ஓய்வுநிலை விரிவுரையாளரும்,&nbsp; பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடகப் பணிப்பாளருமான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள்</h2><p>அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா? 
ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள்.</p><p>இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.
</p><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. </p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது. குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e05147e-9951-449f-825b-ac96a0430e30/26-6a954ad85b05f.webp' /></p><p>நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது. இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல.</p><p>ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது. 
கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது. அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன.ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது. அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தாக மாறியுள்ள பட்டங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-notice-to-kite-flyers-1788169264"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-notice-to-kite-flyers-1788169264</id>
            <summary type="text">&amp;nbsp;உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

குறித்த இடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
</p><p>
குறித்த இடங்களுக்கு அருகில் பட்டம் விடுவதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர கூறியுள்ளார்.
</p><p>
பட்டம் விடுவதால் ஏற்படும் மின் அதிர்ச்சிகளால் ஆழமான தீக்காயங்களுடன் நோயாளிகள் அதிகளவு அனுமதிக்கப்படுவதாக அறிக்கைகள் வந்துள்ளன.</p><h2>பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலைகளில் கடுமையான தீக்காயங்களுடன் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cf01b15-d26f-42be-bde5-dec06a621fe9/26-6a9551e818ab6.webp' /></p><p>

எனவே, பெரும்பாலான நேரங்களில், நாம் வாங்கும் நூல்கள் நீரில் நனைந்தாலோ அல்லது சில சமயங்களில் உலோகங்கள் கலந்து செய்யப்பட்ட மின்கடத்திகளாக செயற்படுகின்றன.
</p><p>
இவை உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் பட்டவுடன், அந்த நூல் வழியாக அதிக மின்சாரம் பாய்கிறது. இதன் காரணமாக திசுக்களும், இரத்த நாளங்கள், நரம்புகள் என அனைத்தும் தீக்காயமடைகின்றன.</p><p>

ஆகவே, பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் சில அரசியல்வாதிகளின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345</id>
            <summary type="text">

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

தற்போது நம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு மாத்திரமே காத்திருக்கின்றனர்.</p><h2>காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்&nbsp;</h2><p> </p><p>

வீடுகளில் கிளிகள், புறாக்கள் என செல்லப்பிராணிகளை மக்கள் கூடுகளில் வைத்து வளர்ப்பார்கள்.

அவை உணவு உண்ணும் போது அவற்றின் கூடுகளில் இருந்த உணவுகள் கீழே சிதறி விழும்.

இவ்வாறு விழும் உணவுகளுக்காகவே கூண்டுக்கு கீழே சிலப் பிராணிகள் காத்திருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f7eab-4c44-436b-a1b0-768b8cf40471/26-6a954f3c54010.webp' /></p><p> </p><p>அப்படித்தான் இன்று நம் நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சியும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக சந்தர்ப்பங்களை நோக்கிக் காத்திருக்கின்றனர்.</p><p> 

தற்போதைய வெள்ளை ஆடைகளை களைந்து, சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d7-8j-P_5fw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-31T09:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதவி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31.08.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு&nbsp;</h2><p>இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b15f362-bce9-4035-87cb-7094f2ff3e3d/26-6a955207d95d1.webp' /></p><p>

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/price-of-bread-to-increase-by-rs-10-from-midnight-1788167217"></link>
            <id>https://tamilwin.com/article/price-of-bread-to-increase-by-rs-10-from-midnight-1788167217</id>
            <summary type="text">450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த&amp;nbsp; விலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
</p><p>குறித்த&nbsp; விலை திருத்தம் இன்று(31.08.2026) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4338dfa-b63f-4d44-91a5-d71d9bef138e/26-6a954695bc877.webp' /></p><p>

கோதுமை மாவுக்கான விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372"></link>
            <id>https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானின் 'லராக்' தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை
ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்
அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 2.21 (2.51%) டொலராக உயர்ந்து தற்போது 90.31
ஆக பதிவாகியுள்ளது.</p><h2>எண்ணெய் விநியோகம்</h2><p>அமெரிக்க WTI மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 1.83 (2.19%) டொலராக உயர்ந்து தற்போது 85.23 டொலராக ஆக பதிவாகியுள்ளது.</p><p>

மேலும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் எதிர்வரும்
நாட்களில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6357fa47-6c4c-474f-9d29-562ea840f47d/26-6a9543c3b2141.webp' /></p><p>

கடந்த ஜூலைக்குப் பிறகு ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா நடத்திய முதல் நேரடித்
தாக்குதல் இதுவாகும். </p><p>ஈரானும் இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளதால் இரு
நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் 6ஆவது மாதமாகத் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளப் பேரழிவு: காணாமல் போனோர் எண்ணிக்கை 4247 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flash-flood-disaster-in-nepal-1788166437"></link>
            <id>https://tamilwin.com/article/flash-flood-disaster-in-nepal-1788166437</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன், இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது. </p><p>

அத்துடன், இதுவரை குறைந்தது 903 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2502 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
இதில் காணாமல் போன 4247 பேரில் 3655 பேர் நேபாள குடிமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>

இதேவேளை, 592 வெளிநாட்டினரைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39869a7a-c0d0-4a6e-8b6a-8f6cce14c356/26-6a9541642cabe.webp' /></p><p> </p><p>

காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கானோர் நேபாளத்தின் நீர்மின் நிலையங்களில்
பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர்.</p><p> வெள்ளம் சூழ்ந்தபோது இவர்கள் சிலர் சுரங்கங்களுக்குள் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
</p><p>
இந்த நிலையில், இது குறித்த சீன அரசு ஊடகங்களின் தகவல்படி, திபெத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/change-in-three-wheeler-fares-1788164089"></link>
            <id>https://tamilwin.com/article/change-in-three-wheeler-fares-1788164089</id>
            <summary type="text">எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்&amp;nbsp;முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்&nbsp;முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எரிபொருள் விலை திருத்தம்&nbsp;</span></p><p>நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45ab675a-0050-4443-aaf5-516f2c40704f/26-6a953c15687f4.webp' /></p><p>இதற்கமைய, அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p>இதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபாயும் அடங்கிய பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிடப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாவால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், முச்சக்கர வண்டி கட்டணங்களைக் முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதற்கமைய, சட்டபூர்வமான கட்டணத் திருத்தம் வரும் வரை,&nbsp; பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய 24 வருட சிறைத்தண்டனைக் கைதி : தீவிர நடவடிக்கையில் பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-to-24-years-in-prison-escapes-in-jaffna-1788164219"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-to-24-years-in-prison-escapes-in-jaffna-1788164219</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர
நடவடிக்கையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
</p><h2>சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கை</h2><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/291b2f04-a340-46d3-9518-37ba51e0187c/26-6a953b2e759d4.webp' /></p><p>
கைதி தப்பி சென்ற நிலையில் சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VgOna0Jso78" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-31T08:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் வீடொன்றை தாக்கிய கும்பல்: உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resignation-of-a-local-government-council-member-1788164554"></link>
            <id>https://tamilwin.com/article/resignation-of-a-local-government-council-member-1788164554</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட
குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச
சபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட
குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச
சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர்
பதவியில் இருந்து விலகியுள்ளார். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>


நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின்
மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><h2> 

பதவி விலகல்</h2><p>
இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f50df5c9-5f7a-4c7a-9a4a-b746974443c1/26-6a953b1467d3b.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக
அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி
பிடித்துள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், குறித்த நபர் தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகல் செய்வதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் நாய் இறைச்சி விற்பனை குறித்த தகவலுக்கு வெளியான விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dog-meat-sales-in-sainthamaruthu-1788161839"></link>
            <id>https://tamilwin.com/article/dog-meat-sales-in-sainthamaruthu-1788161839</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் &#039;நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக&#039; சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பிரதேசத்தில் 'நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக' சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்தன்மையும் இல்லை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ்
உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை
மேற்கொண்டனர்.</p><p>

இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><h2>சுகாதார நடைமுறை</h2><p> </p><p>குறித்த
இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட
கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை
கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7be27a7-bb7c-472c-bed8-21b6b8aa71a3/26-6a953a8d544d6.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக்
கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.
</p><p>
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில்
நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல்
செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>போலியான தகவல்</h2><p>
</p><p>
இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்
நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0baa15b-86cb-4c39-aea2-5fc66bc95eb6/26-6a953a8e07afa.webp' /></p><p>
</p><p>
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக
வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும்
கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:27:50+00:00</updated>
        </entry>
    </feed>
