<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-26T21:23:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவகத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பி. வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electricity-rates-theevagam-epdp-insists-1787760961"></link>
            <id>https://tamilwin.com/article/electricity-rates-theevagam-epdp-insists-1787760961</id>
            <summary type="text">தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
வலியுறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
வலியுறுத்தியுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் இன்று (26.08.2026)
முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை&nbsp; தெரிவித்தார்.</p><p>

இதன்போது அவர், "நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இந்திய அரசாங்கத்தின்
உதவியுடன் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள்
கடந்த அரசாங்க காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.</p><p>

குறிப்பாக அதற்கான நடவடிக்கைகளில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தாவும் முக்கிய பங்காற்றியிருந்தார்.</p><h2>உரிய நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில்
இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்த டக்ளஸ் தேவானந்தா, தீவகங்களில்
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் இணைப்புக் கட்டமைப்புடன்
இணைக்க வேண்டிய அவசியம் இல்லாமையால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த
தீவுகளின் மக்களுக்கே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுவகவும்,
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e176ab1-ab96-4e1b-8034-b360f9cf9b3f/26-6a8f12eed5839.webp' /></p><p>
</p><p>
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தீவக மக்கள் பொருளாதார
ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதை கருத்தில்
கொண்டு, இந்திய உதவியுடன் அமைக்கப்படும் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளில்
இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு,
சம்பந்தப்பட்ட தீவக மக்களுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற
கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.</p><p>

இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய அமைச்சரவையும் சாதகமான இணக்கத்தை
வெளிப்படுத்தியிருந்ததாக சுட்டிக்காடிய ஸ்ரீகாந், கடந்த அரசாங்க காலத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து,
நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்" எனவும்
வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென ஏற்பட்ட கோர அனர்த்தம் - 150ஐ தாண்டிய உயிரிழிப்புக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flood-death-toll-increased-157-1787771151"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flood-death-toll-increased-157-1787771151</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>பலி எண்ணிக்கை&nbsp;</h2><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 157 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> முன்னதாக, இந்த வெள்ளப்பெருக்கில் 100 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரிகளால் தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b129e7d0-2645-4741-b70a-58c821176fe8/26-6a8f3aa3bc0b7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T20:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் பொய் கூறும் சலே! நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-easter-attacks-investigation-cid-1787769941"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-easter-attacks-investigation-cid-1787769941</id>
            <summary type="text">அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது பொய்க் கூறியதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சுரேஷ் சலே, வழக்கை திசை திருப்பும் வகையில் செயற்படுவதாகவும்&nbsp;சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p>சலே, விசாரணைகளுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்றும், தனது இலத்திரனியல் சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்க மறுப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.&nbsp;</p><p>இவ்விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WeSldGG7Nfs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T19:01:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திருவிழாவில் நடந்தது என்ன! ஆலயங்கள் மீது விரைவில் அரசின் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873</id>
            <summary type="text">அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&amp;nbsp;தமிழ் கலாசாரத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் மக்களின் மற்றும் இந்து மதத்தின் மகத்துவத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கையில் உள்ள ஆலயங்களில் முக்கிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அரச தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jfUbfFv5RGU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T18:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை கதிகலங்க வைத்த பிரதம நீதியரசருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/preethi-padman-surasena-gotabaya-rajapaksa-1787761959"></link>
            <id>https://tamilwin.com/article/preethi-padman-surasena-gotabaya-rajapaksa-1787761959</id>
            <summary type="text">நாட்டின் பிரதம நீதியரசர்கள் மற்றும் ஏனைய நீதிபதிகளின் ஓய்வு வயதினை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பிரதம நீதியரசர்கள் மற்றும் ஏனைய நீதிபதிகளின் ஓய்வு வயதினை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாடு உள்ளது என்பது தொடர்பில் எமக்கு பல்வேறு கேள்விகள் எழ தான் செய்கின்றன.&nbsp;</p><p>இருப்பினும், பொதுவாகவே, இலங்கை நீதித்துறை மீது தமிழ் மக்களிடையே அதிருப்தி தான் உள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.&nbsp;</p><p>இது ஒரு புறம் இருக்க, அரசியலமைப்பின் 22வது சட்டமூல திருத்தம், சில நேர்மையான அதிகாரிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பினை வழங்கிய&nbsp;இலங்கையின் 49வது பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேனவுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G_hNcKSeXR4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T17:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economy-is-getting-good-track-says-cb-1787764996"></link>
            <id>https://tamilwin.com/article/economy-is-getting-good-track-says-cb-1787764996</id>
            <summary type="text">நாட்டின் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார மற்றும் செலுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
கடுமையான பொருளாதார மற்றும் செலுத்துகைச் சமநிலை நெருக்கடிக்குப் பின்னர், இலங்கை பொருளாதாரம் மிக வேகமாக மீட்சியடைந்து நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டும் நிலைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c541d0fb-0d70-4f66-b75d-5e085ae26ecc/26-6a8f2105a862e.webp' /></p><p>
குறுகிய காலத்தில் இத்தகைய வேகமான பொருளாதார நிலையை அடைய முடிந்தது ஒரு சிறப்பான சாதனையாகும் எனவும், இத்தகைய நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியமை, அந்நியச் செலாவணி இருப்பை மீளக் கட்டியெழுப்பியமை மற்றும் அரசாங்கக் கடன்களை மறுசீரமைத்தமை ஆகியவற்றின் மூலம் நாட்டின் பேரியல் பொருளாதார உறுதித்தன்மை தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் இறையாண்மை கடனளவீட்டை மேலும் உயர்த்தும் நோக்கில், உலகின் மூன்று பிரதான சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனங்களுடனும் தற்போது தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T17:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இன, மத மோதல்களுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-room-for-any-communal-or-religious-conflict-1787764226"></link>
            <id>https://tamilwin.com/article/no-room-for-any-communal-or-religious-conflict-1787764226</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் இன ரீதியான அல்லது மத ரீதியான மோதல்களுக்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
எந்தவொரு வடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் இன ரீதியான அல்லது மத ரீதியான மோதல்களுக்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
</p><p>எந்தவொரு வடிவத்திலான இன அல்லது மத முரண்பாடுகளும் மீண்டும் உருவாவதற்குத் தமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
நீண்டகால இன முரண்பாடுகளால் இலங்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் வாழும் அனைவரும் இத்தகைய அழிவுகரமான சம்பவங்களால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5100bb-6907-4c35-b631-2f0e7b4ead10/26-6a8f1e088190b.webp' /></p><p>
இனிவரும் காலங்களில் நாட்டில் இன அல்லது மத மோதல்களுக்குச் சிறிதும் இடம் இருக்காது என தாம் உறுதியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வெவ்வேறு விதமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகப் கடந்த காலத்தில் நிலவி வந்த சமூகக் கருத்தை மாற்றி, நாட்டின் மறுசீரமைப்பின் அடிப்படை அங்கமாக "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டை அரசு உறுதி செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பொதுமக்கள் தங்களின் முக்கியமான அரசுப் பணிகளையும் பரிவர்த்தனைகளையும் வீடுகளிலிருந்தே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு இன்னும் ஓராண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>இது பொதுச்சேவை சீர்திருத்தத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், அரசுச் சேவையை மேலும் ஈர்ப்புமிக்க தொழிலாக மாற்ற உதவும் என தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம், மக்களுக்கு விரைவாக நீதி வழங்குவதும், நீதியின் மூலம் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதும் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p> அரசால் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. முடிவுகள் அனைத்தும் அனைத்துக் கோணங்களிலும் ஆராயப்பட்ட பின்னரே எடுக்கப்படும் என்பதால், மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளைச் சிறிய எதிர்ப்புகளுக்காக அரசு திரும்பப் பெறாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இக்கருத்துகளை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T17:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் வெளியிடும் இலங்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fm-vijitha-herath-expresses-solidarity-with-nepal-1787763419"></link>
            <id>https://tamilwin.com/article/fm-vijitha-herath-expresses-solidarity-with-nepal-1787763419</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாள மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாள மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். </p><p>
இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் விஜித ஹேரத் பதிவொன்றை இட்டுள்ளார்.</p><p>
நேபாளத்தில் நிலவும் பேரழிவுச் சூழ்நிலை குறித்துத் தாம் மிகுந்த வேதனையடைவதாகவும், இந்த இயற்கைச் சீற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0fd9848-3250-4dc2-8774-91a597f3cc2b/26-6a8f1addc4662.webp' /></p><p> 
வெள்ளப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நேபாள அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பான முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.</p><p> 
இந்தச் சவாலான சூழ்நிலையிலிருந்து நேபாள மக்கள் மீண்டு வர, இலங்கை அரசும் அதன் மக்களும் நேபாள அரசுடனும் மக்களுடனும் முழுமையான ஆதரவுடன் துணைநிற்பார்கள் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T16:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய அரசு நிறுவனங்கள் மீது சீன ஹேக்கிங் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-say-chinese-hackers-broke-justice-dep-nasa-1787762995"></link>
            <id>https://tamilwin.com/article/us-say-chinese-hackers-broke-justice-dep-nasa-1787762995</id>
            <summary type="text">அமெரிக்க நீதித் துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட பல முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க நீதித் துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட பல முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. </p><p>
அமெரிக்க நீதித் துறை, சக்திவளத் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்கா, தென் கொரியாவைச் சேர்ந்த நான்கு தனியார் நிறுவனங்கள் இந்த இணைய ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஹேக்கர்கள் பயன்படுத்தி வந்த 'க்யூஸ்கேன்' மற்றும் 'க்யூடிரூட்டர்' ஆகிய இரு ஹேக்கிங் தளங்களின் இணையக் கட்டுப்பாட்டு டொமைன்களை அமெரிக்க நீதித் துறை கைப்பற்றி முடக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12e8155-c8dd-4603-bf70-bc0180be75c1/26-6a8f193557c88.webp' /></p><p>
</p><p>குறைந்தது 2018-ஆம் ஆண்டு முதல் உலகளாவிய அளவில் இந்த ஊடுருவல்கள் நடந்துள்ள நிலையில், இத்தளங்களைச் சீனாவைச் சேர்ந்த 'நாஞ்சிங் சின்ஜியூவே நெட்வொர்க் டெக்னாலஜி' என்ற நிறுவனம் இயக்கி வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. </p><p>
மேலும், சீனாவின் உளவு அமைப்பு மற்றும் 'மக்கள் விடுதலை இராணுவம்' ஆகியன உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் முதன்மை வாடிக்கையாளர்களாக இருந்து செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
சீன அரசு அமைப்புகளின் சார்பாக இதுபோன்ற பல நவீன இணைய ஊடுருவல்களைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களே முன்னின்று நடத்துவதாகச் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>
இதேவேளை,, இக்குற்றச்சாட்டுகள் குறித்து வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் தங்களுக்குப் பங்கில்லை என்றே சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T16:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க இணங்கிய மெட்டா! வரலாற்று சிறப்பு மிக்க வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meta-reaches-18-billion-of-settlements-1787762207"></link>
            <id>https://tamilwin.com/article/meta-reaches-18-billion-of-settlements-1787762207</id>
            <summary type="text">&amp;nbsp;ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, மெட்டா நிறுவனம் சுமார் 1,800 கோடி அமெரிக்க டாலர் வரை பெருந்தொகை இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.</p><p> 
சமூக வலைத்தளங்களால் சிறார்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு, மெட்டா நிறுவனத்தின் இந்த இணக்கத்தின் மூலம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>
இந்த இமாலய இழப்பீட்டுத் தொகையில் 17.6 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் 48 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பிரித்து வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342bb22a-17c9-4a03-b12a-40f7736720be/26-6a8f16215b4ee.webp' /></p><p> </p><p>
இதில் கலிபோர்னியா மாநிலம் அதிகபட்சமாக 2.2 பில்லியன் டொலரையும், நியூயார்க் மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள் தலா 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையையும் இழப்பீடாகப் பெறுகின்றன.
</p><p> இது தவிர, 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' தரவு கசிவு விவகாரம் தொடர்பான வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 459 மில்லியன் டொலரை மெட்டா தனியாகச் செலுத்துகிறது. </p><p>
மெட்டா நிறுவனம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள இந்த மொத்த இழப்பீட்டுத் தொகையானது, அந்நிறுவனத்தின் 3 முதல் 4 மாதகால முழு லாபத்திற்கு இணையான பெருந்தொகையாகும்.
பெருந்தொகை இழப்பீட்டைத் தவிர்த்து, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்களது தளங்களின் செயல்பாடுகளில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மெட்டா சம்மதித்துள்ளது.
</p><p>இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிறார்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும், பெற்றோர் அனுமதியின்றி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சமூக வலைத்தளங்களால் சிறார்களுக்கு ஏற்படும் பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரித் தொடரப்பட்ட இந்தத் தொடர் வழக்குகளில், தன் மீதான தவறை நீதிமன்றத்தில் மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.</p><p> 
எனினும், பல அமெரிக்க மாநிலங்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் சூழலில், வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர இந்த பிரம்மாண்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க மெட்டா முன்வந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T16:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்தை உலுக்கிய திடீர் வெள்ளப்பெருக்கு.. இலங்கையர்களின் நிலை குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-flood-in-nepal-sri-lankans-in-nepal-1787759223"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-flood-in-nepal-sri-lankans-in-nepal-1787759223</id>
            <summary type="text">சீனா மற்றும் திபெத் எல்லைகளுக்கு அருகிலுள்ள நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் திபெத் எல்லைகளுக்கு அருகிலுள்ள நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இதுவரை இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று அதன் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் 85 முதல் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எல்லைக்கு அருகில் பாயும் போட்கோஷி ஆற்றில் பனி உருகியதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிகளவு நீர் பாய்ந்ததால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>85 முதல் 100 இலங்கையர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனி திடீரென உருகுவதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

இந்த வெள்ளப்பெருக்கினால் போட் கோஷி ஆற்றுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை முற்றிலும் நீரில் மூழ்கியதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசாங்கக் கட்டிடம் ஒன்றும் முற்றாக அழிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a41095a-4c40-4f2a-a623-f15d84ea0839/26-6a8f0c6f31c49.webp' /></p><p>

நேபாள எல்லையிலுள்ள பனிப்பாறையிலிருந்து பனிக்கட்டிகளும் பாறைகளும் சரிந்து விழுந்து, போட் கோஷி ஆற்றின் கிளையாறான லெண்டே கோலா ஆற்றை அடைத்ததால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கீழ்நோக்கி நீர் சீறிப் பாய்ந்தது.
</p><p>
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு உள்கட்டமைப்புகள், வீதிகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்களை அழித்துள்ளது.
</p><p>
கூடுதலாக, பக்கத்திலுள்ள திபெத்தின் கிராங் மாகாணத்தில் கடுமையான சேறு சரிவுகளும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இருப்பினும், இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T15:58:26+00:00</updated>
        </entry>
    </feed>
