<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-02T17:33:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hormuz-will-not-return-to-pre-war-situation-1785690309"></link>
            <id>https://tamilwin.com/article/hormuz-will-not-return-to-pre-war-situation-1785690309</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
&#039;ஹோர்முஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
</p><p>'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழிப்பாதை இனி ஒருபோதும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஓமனுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தைக்கும், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் அல்லது மூடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205cf024-e1ab-459f-88f1-403f4aa6d896/26-6a6f78ca01110.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீதான கடற்படை முற்றுகை காரணமாகவே இந்த நீரிணை மூடப்பட்டது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
ஓமனுடனான பேச்சுவார்த்தை இருதரப்பு சார்ந்தது. </p><p>ஈரானின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான விவாதங்கள் புதியவை அல்ல; அவை நீண்டகாலமாகவே நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
</p><p>நாட்டின் நலன்கள் மற்றும் கரிசனைகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமியக் குடியரசான ஈரான் செயல்படுகிறது எனவும் மற்றவர்களின் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்குப் பயந்து ஈரான் தனது முடிவை மாற்றிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.
</p><p>ஊடகங்களின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஈரான் தனது உறுதியான நிலைப்பாடுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று இஸ்மாயில் பாகாயி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T17:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வெடித்த மஹர சிறைச்சாலை வன்முறை.. நீதி அமைச்சு எழுப்பும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rganized-element-may-be-behind-mahara-prison-1785688948"></link>
            <id>https://tamilwin.com/article/rganized-element-may-be-behind-mahara-prison-1785688948</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் நிலவும் அதிகளவிலான இடநெருக்கடியும் ஒரு காரணியாக இருக்கலாம் என்ற போதிலும் சதித் திட்டம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.</p><p> 
முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த மோதல் கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் வன்முறையைத் தூண்டுவதற்கு வெளியில் உள்ள ஏதேனும் சக்திகள் பின்னணியில் இயங்கியுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் விசாரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>போதைப்பொருள் புழக்கம்</h2><p>
போதைப்பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக சிறைகளுக்குள் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதுவே கைதிகளிடையே அதிருப்தியையும் இந்த வன்முறையையும் தூண்டியிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b69d3045-e8bb-4b89-ba04-9c0a9baf73d8/26-6a6f7375ce182.webp' /></p><p>
சிறைகளில் உள்ள நெரிசலை மட்டுமே இதற்குக் காரணமாகக் கூறிவிட முடியாது என்றாலும், அதனைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களுக்குப் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துதல் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல் போன்ற சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது சுமார் 23,000 கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட அமலாக்கத்தின் மூலம் மட்டுமே போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும், சமூக அளவில் போதைப்பொருளுக்கான தேவைக் குறைப்பைக் கொண்டுவர சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பு அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மஹர சிறை வன்முறையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 கைதிகள் உடனடியாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடக்க வாய்ப்பில்லை என்பதால், வெளிச்சதிகளின் பங்களிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T17:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு ட்ரம்பை சவூதி அரேபியா தூண்டியிருக்கலாம் - அமெரிக்கப் பேராசிரியர் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-encouraged-trump-negotiate-iran-1785688192"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-encouraged-trump-negotiate-iran-1785688192</id>
            <summary type="text">அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரைக் கட்டுப்படுத்தும்
இராஜதந்திர முயற்சிகளில் கட்டார், பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுடன் சவூதி
அரேபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரைக் கட்டுப்படுத்தும்
இராஜதந்திர முயற்சிகளில் கட்டார், பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுடன் சவூதி
அரேபியாவும் நேரடியாகக் களம் இறங்கியிருப்பது ஒரு முக்கியமான
திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>முக்கியமான தேவை</h2><p>
</p><p>
சவூதி அரேபியா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிடம் தனிப்பட்ட முறையில்
பேசியதன் காரணமாகவே, அவர் போருக்குப் பதிலாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கான
சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கியிருக்கலாம் என அமெரிக்காவின்
விஸ்கான்சின்-ஈக்ளேர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்லின் ஹார்டிங்கர்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a87b075-215b-455f-be1d-5a749d0746ed/26-6a6f72c87c731.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கின் மூத்த தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முன்னின்று
பொறுப்பேற்பதற்கு சவூதி அரேபியாவின் இந்த முயற்சி வழிவகுத்துள்ளது.</p><p>

பதற்றமான சூழல் நிலவியபோதிலும் இரு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான
வார்த்தைகளைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவதே தற்போதைய
இராஜதந்திரத்தின் மிக முக்கியமான தேவையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T16:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-opposition-in-srilanka-now-1785687632"></link>
            <id>https://tamilwin.com/article/no-opposition-in-srilanka-now-1785687632</id>
            <summary type="text">நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது என விவசாய அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது என விவசாய அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு வாய்ப்புகள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நாட்டு மக்களுக்கு இது பெரும் அதிர்ஷ்டம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>எதிர்க்கட்சியினர் மீண்டும் பழைய அரசியலை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் எனினும் அது நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99070fbe-a1bb-49dd-91bf-b25c83292d7a/26-6a6f6e5289fe2.webp' /></p><p>
நாட்டில் எதிர்க்கட்சிகள் இல்லாத காரணத்தினால் சில ஊடக நிறுவனங்கள் தங்களை எதிர்க்கட்சிகளாக மாற்றிக் கொள்ள முனைகின்றன என தெரிவித்துள்ளார்.</p><p>
அவ்வாறான சூழ்நிலையில் வங்குரோத்து அடைந்த அரசியல் கட்சிகளின் குணாதிசயங்கள் ஊடகங்களில் ஊடாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்க்கட்சிகளின் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்த முனைந்து ஊடகங்கள் வங்குரோத்து அடைந்து விடும் என்பதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
பழைய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை சில ஊடக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>பழைய அரசியல் கலாச்சாரத்தின் கோரமுகம் அந்த துர்நாற்றம் சில ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>மக்களினால் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஊடகங்களின் ஊடாக மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன ஆனால் அது அவ்வாறு நடக்காது எனவும் பொய்களை ஜோடனை செய்து வெளிப்படுத்த முடியுமே தவிர அரசியல் ரீதியாக வெற்றியடைய முடியாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T16:31:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-festival-historic-sri-mamangeswarar-temple-1785685650"></link>
            <id>https://tamilwin.com/article/annual-festival-historic-sri-mamangeswarar-temple-1785685650</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை(3) கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை(3) கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று(2) மாலை கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு
நடைபெற்றது.
</p><p>மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட கிழக்கிலங்கையின்
வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்
வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார்
ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று பாரம்பரிய கலாசார கலைஞர்களின் பவனியுடன்
கொடிச்சீலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>தமிழர்களின் வரலாறு</h2><p>
</p><p>இலங்கையில் தமிழர்களின் வரலாற்றினை உலகுக்கு எடுக்காட்டும் மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தில் இராம பிரான் வழிபாடுகளை மேற்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/927b6bee-6516-4afe-8703-39cd7553141d/26-6a6f6994a3c9a.webp' /></p><p>
</p><p>இராமபிரானால் தண்டம் ஊன்றி உருவாக்கப்பட்ட தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.
அதில் உயிர்நீர்த்தவர்களுக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றும் ஆடிஅமாவாசை
தீர்த்தமாடும் தீர்த்தக்கரையாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.
</p><p>நாளை காலை விசேட பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12.00மணியளவில் கொடியேற்ற
நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p>
பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 11ஆம் திகதி தேர்
உற்சவம் நடைபெறவுள்ளதுடன் 12ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்
நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T16:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு - சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320</id>
            <summary type="text">&amp;nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p> சிறைச்சாலைகளில் நெரிசல் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஒரு கைதி தடுத்து வைக்கப்பட வேண்டிய இடத்தில் நான்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f76077-89fd-4423-bfe6-eae59e568db2/26-6a6f654a78a0b.webp' /></p><p>
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் தொடர்பில் வருத்தத்தை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையிலோ அல்லது வேறு விதமான மோதல்கள் வெடிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T15:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நீடிக்கும் கடும் வறட்சி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605</id>
            <summary type="text">பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாம் பிராட்ஷா
எச்சரித்துள்ளார்.</p><p>

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வேல்ஸ் முழுவதிலும் வறட்சி
நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்குக்
குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த ஆண்டு கோதுமை மற்றும் ஓட்ஸ் விளைச்சல் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புல் வளராததால் கால்நடை வளர்ப்போர்
குளிர்காலத்திற்கான தீவனங்களை இப்போதே பயன்படுத்தும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளதாகவும் பிராட்ஷா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நிதியுதவி</h2><p>
</p><p>
மேலும், காய்கறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால்,
உள்நாட்டு உணவு உற்பத்தி குறைந்து, விளைச்சல் செலவும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec006e8e-ff21-4b53-89ea-412b12ccdaae/26-6a6f5aaf3a3ad.webp' /></p><p>
</p><p>
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால்,
மழைநீரைச் சேமிக்க புதிய நீர்த்தேக்கங்களைக் கட்ட அரசு நிதியுதவியும்
வரிவிலக்குகளும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>தீவிர வெப்ப அலை</h2><p>

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 8 சதவீத மழையே பெய்துள்ளது. இது
1911-ஆம் ஆண்டில் பதிவான குறைந்தபட்ச மழைப்பொழிவு சாதனையை விடவும் மிகக்
குறைவானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d33b088-43dd-4b95-8a7d-a3b7f66eb94e/26-6a6f5aafe4fc6.webp' /></p><p>
</p><p>
பிரித்தானியா மட்டுமன்றி இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர
வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், உணவுப்
பொருட்கள் விநியோகமும் பெரும் சவாலாக மாறியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T15:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742</id>
            <summary type="text">&amp;nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை தெற்கு பெருவின் சொகோஸ் பகுதியில் நடந்துள்ளதாக
அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
'எரோடியானா' என்ற உள்ளூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான 'செஸ்னா கேரவன்
C-208' ரக சிறிய விமானம், பிஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்
சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a33046-449c-435f-834a-72a14799b11f/26-6a6f5cf2b02e7.webp' /></p><p>

இதில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.</p><p>

மதியம் 1:00 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர நிலை குறித்து
தகவல் தெரிவித்த சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டு, விமானம்
தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.</p><p></p><h2>வறண்ட வானிலை</h2><p>
</p><p>
விபத்து நடந்தவுடன் தீயணைப்பு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு
விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அதில் இருந்தவர்களைக்
காப்பாற்ற முடியாமல் போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa24f144-f42c-4b98-b291-2142ca03ea3a/26-6a6f5cf36e283.webp' /></p><p>
</p><p>
காற்று வீச்சு மற்றும் வறண்ட வானிலை காரணமாக இவ்விபத்து நிகழ்ந்ததா அல்லது
வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து பெரு நாட்டின்
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T15:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-1785682203"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-1785682203</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை
சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை
சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இன்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


போதைப்பொருள் வர்த்தகர் கைது</h2><p>
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dd4a982-ff39-4b36-9c81-a3732d6c2fbd/26-6a6f59711e6d8.webp' /></p><p> </p><p>

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ்
போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி, நிறுத்தல் தராசு மற்றும்
பிளாஸ்டிக் குழாய்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில்
தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே! – அனல் பறக்கும் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785681236"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785681236</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

"இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே!" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விவாதத்தில், இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வாதிட்டு வருகின்றனர்.
</p><p>
விரிவுரையாளர் சிவகுருநாதன் கேசவன் நடுவராக இந்த விவாதத்தை வழிநடத்தி வருகிறார்.
</p><p>
இன்றைய தலைமுறையின் இன அடையாளம், மொழி, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று, நிகழ்வை நேரலையில் பார்வையிட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1H-rlmymT6I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T14:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பதவி காலத்தில் அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691"></link>
            <id>https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அநுரகுமார உள்ளிட்ட தரப்பினர் ஊழல் ஒழிப்பு தொடர்பான ஏதோ ஒரு அமைப்பில் அங்கம் வகித்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊழலை ஒழிக்க பதவிக்கு வந்த பூஜித்</h2><p>ஊழல்களை ஒழிப்பதற்கு எங்களுக்கு இந்த பொலிஸ்மா அதிபர் தான் தேவை என்று பூஜித் ஜயசுதந்தரவை, அநுரகுமாரா தரப்பினரே பரிந்துரை செய்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p>ரணில் விக்ரமசிங்கவை வீதியில் கண்டால் இதனை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62bf550e-4abf-4df3-b0b7-74765578b098/26-6a6efd44e7907.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்கவே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>தமக்கு பூஜித் ஜயசுந்தரவடன் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும், பூஜித் பொாலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய காலப்பகுதியில் போலி கடவுச்சீட்டு விவகாரம் ஒன்றில் தம்மை சிக்கவைத்தனர்.</p><p>இருப்பினும், அந்த குற்றச்சாட்டுகளில் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருந்ததாகவும், அதனால் அவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T13:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றிலேயே இல்லாத உச்சக்கட்ட வெப்பம்: தென்கொரியாவில் 42.5 பாகை செல்சியஸ் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-korea-records-42-5-degrees-celsius-1785677538"></link>
            <id>https://tamilwin.com/article/south-korea-records-42-5-degrees-celsius-1785677538</id>
            <summary type="text">தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி
வருகிறது. அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக,
தென்கிழக்கு நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி
வருகிறது. </p><p>அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக,
தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42.5 பாகை செல்சியஸ்
வெப்பம் பதிவாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

கொரியா வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, யாங்சான் நகரில் தொடர்ச்சியாக
ஐந்தாவது நாளாக வெப்பம் 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளது.</p><p></p><h2>வெப்ப அலை எச்சரிக்கை</h2><p>

இதன் காரணமாக நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் அவசரகால வெப்ப அலை
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2765d76-c222-4bc9-91c3-290ff5c88686/26-6a6f4ba9493ba.webp' /></p><p> </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கொரியாவில் வெப்ப
அலை நாட்களின் சராசரி எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 19
நாட்களாக உயர்ந்துள்ளது.
</p><p>
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்பத்திற்கு
முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தீவிர வெப்பநிலை தென்கொரியாவுடன் மட்டும் நிற்காமல் உலகம் முழுவதும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p><h2>கடும் வறட்சி</h2><p> </p><p>அண்டை நாடான ஜப்பானின் 30 மாகாணங்களில்
'வெப்ப' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2213289-f475-4b01-b076-1d1f61ebc6ef/26-6a6f4ba9f0f2c.webp' /></p><p>
</p><p>
அதேபோல், ஐரோப்பிய நாடுகளான கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய
நாடுகளில் கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் காட்டுத்தீ வேகமாகப்
பரவி வருகிறது.
</p><p>
வட ஆபிரிக்க நாடுகளான துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் அமெரிக்காவின்
மேற்குப் பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக மக்கள்
பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:52:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676091"></link>
            <id>https://tamilwin.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676091</id>
            <summary type="text">அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>வறட்சியான வானிலை</h2><p> 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e698f07c-10dc-42bd-8399-9fdd008eb70f/26-6a6f4515a73aa.webp' /></p><p> </p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p> 

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcfe3a6c-db8f-4bba-be08-d212fbf637e9/26-6a6f451690c3b.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவிகளுக்குத் தொந்தரவு செய்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harassment-of-tuition-students-youths-arrested-1785672346"></link>
            <id>https://tamilwin.com/article/harassment-of-tuition-students-youths-arrested-1785672346</id>
            <summary type="text">தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில்
பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து
விதிகளை மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில்
பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து
விதிகளை மீறி பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8
மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள
நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விசேட அதிரடி நடவடிக்கை</h2><p>

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி
ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
நிசாந்த பிரதீப் குமார, போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்தன
ஆகியோர் தலைமையில் இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5490694e-32c2-4697-ba32-ab311ffeafe9/26-6a6f3c2f2a63c.webp' /></p><p>

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின்
அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப்,</p><p></p><h2>&nbsp;புகைப்பட ஆதாரங்கள்</h2><p>
</p><p>
"பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்
நபர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை பொதுமக்கள் உடனடியாக
பொலிஸாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும்
பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>

சம்மாந்துறையை ஒழுக்கமும் சட்டமும் நிலவும் பாதுகாப்பான சமூகமாக மாற்றுவதே
எமது நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c29d8d76-f5da-4496-ad5f-10d85b6c330b/26-6a6f3c3021673.webp' /></p><p> இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும்.</p><p>"

மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம்
மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும்
இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:51:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய பயணிகள் படகில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-on-indonesian-passenger-boat-5-dead-1785673418"></link>
            <id>https://tamilwin.com/article/fire-on-indonesian-passenger-boat-5-dead-1785673418</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் மதுரா தீவு கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள்
படகு ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் மதுரா தீவு கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள்
படகு ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேரைக்
காணவில்லை என்றும் அந்நாட்டின் தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படை மையம்
அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், கடலில்
தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p>

எனினும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும்
உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abd84666-60e9-4d97-986c-7e22fc9ef8ba/26-6a6f3a56535bf.webp' /></p><p>
</p><p>
தீ விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவராத நிலையில், இது
குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:39:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் பொலிஸ் அதிகாரி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/theft-inside-the-police-station-1785673626"></link>
            <id>https://tamilwin.com/article/theft-inside-the-police-station-1785673626</id>
            <summary type="text">இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் பொலிஸ் விசேட
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் பொலிஸ் விசேட
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பெண் பொலிஸ் அதிகாரி சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal
Audit) போதே இந்த நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. </p><h2>

 2 இலட்சம் ரூபாய் கையாடல் செய்த அதிகாரி</h2><p>
</p><p>
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒலிபெருக்கி அனுமதி பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம்
பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ்
அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f4d027b-ac2f-45a9-a478-3c48a6adf2e3/26-6a6f3815d99e5.webp' /></p><p>
எனினும், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வந்த பணத்தை சந்தேகநபரான பெண் பொலிஸ்
அதிகாரி உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளமை தணிக்கை
அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அம்பாறை பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியான உதவி பொலிஸ் அதிகாரி(1) சம்பத்
விக்ரமரத்னவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>


அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட
குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:31:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒபெக் பிளஸ் அமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opec-plans-to-increase-crude-oil-production-1785669663"></link>
            <id>https://tamilwin.com/article/opec-plans-to-increase-crude-oil-production-1785669663</id>
            <summary type="text">பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான &#039;ஒபெக் பிளஸ்&#039; எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் முதல் நாளொன்றுக்கு சுமார் 1,88,000 பெரல்கள் வரை மசகு
எண்ணெய் உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான 'ஒபெக் பிளஸ்' எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் முதல் நாளொன்றுக்கு சுமார் 1,88,000 பெரல்கள் வரை மசகு
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்த உற்பத்திக் கூட்டலுக்குப் பிறகு, இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கு
உற்பத்தியை மேலும் உயர்த்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக், குவைத், அல்ஜீரியா, கஜகஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய
7 முக்கிய உறுப்பு நாடுகள் இந்த உற்பத்திக் குறைப்புத் திரும்பப்பெறும்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><h2>மசகு எண்ணெய் உற்பத்தி</h2><p>
</p><p>
ஈரானிய மற்றும் உக்ரைன் போர் காரணமாகக் வளைகுடா பகுதிகள், ரஷ்யா மற்றும்
கஜகஸ்தானில் இருந்து ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-ஆம்
ஆண்டு அறிவிக்கப்பட்ட தன்னார்வ உற்பத்திக் குறைப்பை நிறைவு செய்யும் வகையில்
இந்த நடவடிக்கை அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d26aff6-7385-4337-87c6-11971af79e7f/26-6a6f2da39add6.webp' /></p><p>
</p><p>
அடுத்த கட்டமாக உறுப்பு நாடுகளின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை மதிப்பாய்வு
செய்யும் பணியில் ஒபெக் பிளஸ் ஈடுபட்டுள்ளது.</p><p>

ஈராக் போன்ற சில உறுப்பு நாடுகள் தங்களின் உயர் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப
அதிக ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்து வருவதால், உற்பத்தியைப்
பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வரை இந்தத் தற்காலிக
இடைநிறுத்தம் தொடரும் எனக் கூறப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை - எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-cameras-introduced-to-catch-road-violations-1785671214"></link>
            <id>https://tamilwin.com/article/ai-cameras-introduced-to-catch-road-violations-1785671214</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p>மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இது குறித்து இன்றைய தினம் (02.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>துல்லியமாக அடையாளம்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.
</p><p>
வழக்கமான கமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.
</p><p>

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c02016f-3578-4a63-b3df-378ba79978bb/26-6a6f3168db5af.webp' /></p><h2>நடவடிக்கை</h2><p>இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. </p><p>45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[104 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் - உறவினர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/104-mahara-prisoners-transferred-to-7-prisons-1785669880"></link>
            <id>https://tamilwin.com/article/104-mahara-prisoners-transferred-to-7-prisons-1785669880</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கமைய, தும்பறை, வெலிக்கடை, புஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


கைதிகள் இடமாற்றம்</h2><p>
மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e797be19-aac7-4cee-8cfc-d48e26d00d47/26-6a6f2ab39a2d2.webp' /></p><p>

மேலும், புனரமைப்பு பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான பார்வையாளர்கள் காட்சி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
</p><p>
நேற்று(01.08.2026) பிற்பகல் மஹர சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட அமைதியின்மையை சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-02T11:34:33+00:00</updated>
        </entry>
    </feed>
