<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T22:37:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நீண்டகாலமாக கால்நடைகளை திருடி வந்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-thief-in-batticaloa-1788368428"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-thief-in-batticaloa-1788368428</id>
            <summary type="text">மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆடு ஒன்றை கடத்திச் சென்ற காத்தான்குடி
பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆடு ஒன்றை கடத்திச் சென்ற காத்தான்குடி
பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(01.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை&nbsp;</h2><p>

கடந்த மாதம் 18ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதி ஓரமாக
மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை குறித்த நபர்&nbsp; சிறிய ரக வான் ஒன்றில் கடத்திச்
சென்றுள்ளார்.</p><p>

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்
சிசிடிவி கெமரா மூலம் ஆடு கடத்தப்பட்ட வாகனத்தினை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e51e54-4a24-4419-91ef-9b447d926886/26-6a985d11d5564.webp' /></p><p>பின்னர் பொலிஸார் சம்பவ தினமான நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை
காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதுடன் ஆட்டை கடத்த பயன்படுத்திய சிறிய ரக வானையும்
மீட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு மற்றும் மாடுகளை
திருடி வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.</p><p>

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக&nbsp; குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T22:31:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகள் செய்த அதே வேலையை தான் அநுரவும் செய்கிறார்! எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-does-same-former-president-batti-cordinator-1788366846"></link>
            <id>https://tamilwin.com/article/anura-does-same-former-president-batti-cordinator-1788366846</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோர் செய்த அதே வேலையைத்தான்
இன்று ஜனாதிபதி அநுரவும் செய்கிறார் என முன்னணி சோஷிஸக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோர் செய்த அதே வேலையைத்தான்
இன்று ஜனாதிபதி அநுரவும் செய்கிறார் என முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம்
கிருபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(02.09.2026) மட்டக்களப்பில் 22வது திருத்தச் சட்டத்துக்கு&nbsp;எதிர்ப்பு தெரிவித்து&nbsp;துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையை அடுத்து&nbsp;ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; உயர் நீதிமன்றத்தில் உள்ள 65 வயதுடைய நீதியரசர்களை 67 வயது வரை நீடிப்பதற்கு
22வது அரசியல் அமைப்பு தொடர்பாக புதிய ஒரு சட்டத்தை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு
முன்னர் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p>

இந்த சட்டம் கொண்டுவருவதற்கு காரணம் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்
இருக்கின்றமைய என தேசிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மேல் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்றங்களில் தான்
கூடுதலான வழக்குகள் இருக்கிறது என சாதாரண மனிதர்களுக்கும் கூட தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2295d6b-0442-4556-9ff8-aa675e371116/26-6a98545494822.webp' /></p><p> இந்த நிலையில் நீதியரசர்களை 2 வருடம் நீடிப்பதை கொண்டு வரும் செயலைப் போன்று அன்று ஜே.ஆர்.
ஜெயவர்த்தன&nbsp; அவருடைய நண்பரான நெவில் சமரகோன் என்ற சட்டத்தரணியை
நீதியரசராக மாற்றினார்.
</p><p>
அவ்வாறே சந்திரக்கா ஜனாதிபதியாக வந்ததும் சட்ட ஆலோசகராக இருந்த மார்க்
பெர்னாண்டோ நிறுத்திவிட்டு அவரது நண்பரான சரத் டி சில்வா என்ற மிக மோசமான
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியவரை நீதியரசராக மாற்றினார்.
</p><p>
நீதியரசராக இருந்த சிரானி பண்டாரநாயக்காவை ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் தாங்கள்
சொன்னதை செய்யவில்லை என்று அவரை நீக்கிவிட்டு அவர்களுக்கு சாதகமானவரை
நீதியரசராக கொண்டு வந்தார்கள் அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி நடக்கப்போவது வேறு...அமெரிக்காவுக்கு எதிராக ஈரானின் அடுத்த அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-warns-us-of-new-strategy-in-war-1788383904"></link>
            <id>https://tamilwin.com/article/iran-warns-us-of-new-strategy-in-war-1788383904</id>
            <summary type="text">ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “புதிய உத்தியை” முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தனது X பதிவில், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளார்.
</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
ஈரானின் புதிய போர்க்கள உத்தி, இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் அடித்தளத்தை சிதைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய, பெரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec25851c-986d-46a6-934f-edfdba9d0885/26-6a98958627de4.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை பதிக்க ஈரான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஈரான் தரப்பில் இருந்து இதற்குப் பதிலடி வழங்கப்பட்டால், அதைவிட மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>ஈரான் பதிலடி&nbsp;</h2><p>

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகமும், ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீதும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.</p><p>

இதனிடையே, அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fa" dir="rtl">با این دست و پا زدن‌ها، نه تنها از قعر جهنمی که برای خود ساخته‌اید بیرون نخواهید آمد، بلکه به زودی خواهید دید راهبرد جدید ایران در میدان جنگ، دیپلماسی و مقابله با محاصره اقتصادی، بنیان‌‌تان را درهم خواهد شکست.</p>&mdash; محسن رضایی (@ir_rezaee) <a href="https://x.com/ir_rezaee/status/2095106961394077902?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கின் தன்னாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தானின் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
“தற்காப்புக்கான இயல்பான உரிமையின் அடிப்படையிலேயே” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்கா தமது பிராந்தியத்திலிருந்து இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி நாடுகளையும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முக்கியஸ்தர் வீடு ஒன்றிற்கு உதவி தேடிச் சென்ற 3 தாய்மார்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296"></link>
            <id>https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
</p><p>

இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு வடக்கிலுள்ள முக்கிய கட்சியொன்று கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.</p><p>

இதனால் இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவி அ. அமலநாயகி இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தினார்.
</p><p>


அதாவது குறித்த கட்சியை நேரில் சென்று அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்று முழுவதாக மறுப்பதாக அமலநாயகி குறிப்பிட்டார்.</p><p>

கட்சியின் முக்கியஸ்தர் வீட்டிற்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்ற நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.மீண்டும் ஒகஸ்ட் மாதமளவில்&nbsp; சென்று நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த முக்கியஸ்தர் வெளியில் சென்றுள்ளார் என்ற பதிலே கிடைத்தது.</p><p>

எனவே அழைப்பிதழை மட்டுமே கொடுத்து விட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1VkU2Km2zbg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T20:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயல்களுக்கு வைத்த தீயால் புகைமூட்டம் – மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/smoke-from-field-fires-motorcycle-accident-1788370953"></link>
            <id>https://tamilwin.com/article/smoke-from-field-fires-motorcycle-accident-1788370953</id>
            <summary type="text">கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தானது நேற்று(02.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த விபத்தானது நேற்று(02.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து</h2><p>
</p><p>
காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
படுகாயமடைந்த பெண் மற்றும் மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e686c394-79a9-4461-b4f5-17b4de7d8bd5/26-6a9861ce72994.webp' /></p><p>அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் வயல்களில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்ததால்
ஏற்பட்ட புகைமண்டலம் காரணமாக வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு
எதிரே வந்த வாகனங்கள் தென்படாமல் விபத்து ஏற்பட்டதாக கந்தளாய் பொலிஸார்
தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T20:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்நிறுத்தம் நடைமுறையில்... காஸாவில் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 1,300க்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/900-people-death-ceasefire-was-announced-in-gaza-1788375893"></link>
            <id>https://tamilwin.com/article/900-people-death-ceasefire-was-announced-in-gaza-1788375893</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு
வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு
வந்தபோதிலும், காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன.</p><p>

இந்த ஆண்டில் மட்டும் காஸாவில் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>போர்நிறுத்தம்&nbsp;</h2><p>

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 1,300க்கும் அதிகமான
பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்; இதில் 301 சிறுவர்களும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57eda5d0-3fc1-4a44-92cc-a9e250a5597d/26-6a987771e42e3.webp' /></p><p>

குறிப்பாக, ஏப்ரல் முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் மாதம்தோறும்
100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் மட்டும் 21 சிறுவர்கள் உட்பட 152 பேர் பலியாகியுள்ளனர்.
</p><h2>&nbsp;வான்வழித் தாக்குதல்</h2><p>
கடற்கரை உணவகம், அகதிகள் முகாம்கள் மற்றும் இறுதி ஊர்வலங்கள் மீது நடத்தப்பட்ட
ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் காணொளிகளை ஆய்வு செய்து பிபிசி
உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fffce18-878f-47e2-ab44-51b60a708db3/26-6a9877729bcb6.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, தற்காப்புக்காகவும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்காகவுமே தாங்கள்
செயல்படுவதாகவும், பொதுமக்கள் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்
இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.
</p><p>
போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், காஸாவில் தொடரும்
இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அமைதி முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக
அமைந்துள்ளன என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T19:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றினால் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3000-people-have-died-from-ebola-in-congo-1788372716"></link>
            <id>https://tamilwin.com/article/3000-people-have-died-from-ebola-in-congo-1788372716</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம்
உத்தியோகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம்
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த எபோலா
தொற்று, கொங்கோ வரலாற்றில் பதிவான மிக மோசமான நோய்த்தொற்று பேரழிவாக
மாறியுள்ளது.</p><h2>எபோலா&nbsp;வைரஸ் தொற்று</h2><p>

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 6,186 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த மே மாதம் இதுரி(Ituri) மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட
இந்தத் தொற்று, தற்போது நாட்டின் ஆறு மாகாணங்களுக்குப் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5ecbbc-f481-45b7-855f-a7a36966a448/26-6a98717850eb3.webp' /></p><p>
</p><p>
'பண்டிபுக்யோ' (Bundibugyo) எனப்படும் இந்த எபோலா வகைக்கு இதுவரை
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை
என்பது சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
</p><p>
சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பின்மை மற்றும்
கிராமப்புற மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாகவே இந்தத் தொற்றைக்
கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், எபோலாவினால் உயிரிழப்பவர்களில் சுமார் 60 சதவீதமானோர் வைத்தியசாலைகளுக்கு வெளியே மரணிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T19:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து சென்றடைந்த அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-aircraft-arrives-thailand-after-286-days-1788371774"></link>
            <id>https://tamilwin.com/article/us-aircraft-arrives-thailand-after-286-days-1788371774</id>
            <summary type="text">சுமார் 286 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமான தாங்கி போர்க்கப்பல், ஓய்வு மற்றும்
பராமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 286 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமான தாங்கி போர்க்கப்பல், ஓய்வு மற்றும்
பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தாய்லாந்தின் லாம் சபாங் துறைமுகத்தைச்
சென்றடைந்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற ஈரானுக்கு எதிரான போரின் போது, கடற்படை
முற்றுகை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்தப்போர்க்கப்பல் முக்கிய
பங்காற்றியுள்ளது.</p><h2>அமைதி வழி ஓய்வு நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்தப் போர்க்கப்பல்,
நவீன கடற்படை வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாகக் கடலில் பயணித்து
புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
சுமார் 5,000 கடற்படை மற்றும் கடல்சார் வீரர்களைக் கொண்ட இந்தப் போர்க்கப்பலின்
ஊழியர்களுக்கு ஓய்வளிக்கும் வகையிலேயே தாய்லாந்தில் இந்த 5 நாட்கள் தங்குமிடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>1954ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நெருங்கிய ஒப்பந்த கூட்டாளியாக தாய்லாந்து விளங்கி வரும் நிலையில், வழக்கமான அமைதி வழி ஓய்வு நடவடிக்கைகளுக்காகவே இந்தக் கப்பல் வருகை தந்துள்ளதாக தாய்லாந்து அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bee31be8-35d0-4d19-92de-1971b55d3580/26-6a9865824dd7f.webp' /></p><p>

நீண்டகாலப் போர்ப் பயிற்சியின் காரணமாக கப்பலின் வெளிப்பகுதி துருப்பிடித்த
நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் தளத்தில் அதிநவீன எஃப்-35 (F-35) போர்
விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினரின் இந்த வருகை காரணமாக, அருகில்
உள்ள பட்டாயா சுற்றுலா நகரத்தின் உள்ளூர் வியாபாரம் மற்றும் பொருளாதார
நடவடிக்கைகளில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேநேரம், படையினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில ஆபத்தான
விளையாட்டுகளுக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணிகளும்
பலப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:48:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122"></link>
            <id>https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.
</p><p>யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>அகில இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>
</p><p>மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197570-8255-44dd-94e8-86061f262ff9/26-6a986c8f2f563.webp' /></p><p>2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று(2) வெளியானமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்: ட்ரம்பின் அதிரடி பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565"></link>
            <id>https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
“இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ‘ட்ரம்ப் நீரிணை’ என மாற்றலாமா? அமெரிக்காவைப் போலவே இதுவும் முன்னெப்போதையும் விட சூடாக இருக்கும்!” என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117202132375758936/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

முன்னதாகவும் இந்த நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-salambaikulam-in-vavuniya-one-dead-1788369257"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-salambaikulam-in-vavuniya-one-dead-1788369257</id>
            <summary type="text">வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில்
ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில்
ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம்
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இன்று (02.09) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
வவுனிய, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக வீதியோரத்தில்
அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், பிறிதொருவர் சோளம்
வாங்கிக் கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக்
கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d6f662-95de-4117-b99d-81cac140d159/26-6a985dd9ec5ca.webp' /></p><p>விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு
வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும், சோளம் வாங்கிய
நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரகீம் மஜீத் ( வயது 31) என்பவரே
பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T17:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மனித உரிமை மீறல் வழக்குகள்: அரசின் நடவடிக்கையில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243"></link>
            <id>https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை
செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி
உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>நீதியை நிலைநாட்டல்</h2><p>
</p><p>
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும்
தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு,
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, 11
இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள்
போன்றவற்றில் சில வரம்புக்குட்பட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>என்றபோதிலும்,
மூத்த அதிகாரிகள் தொடர்புபட்ட மற்றைய முக்கிய வழக்குகளில் (உதாரணமாக, 17
உதவிப் பணியாளர்கள் படுகொலை மற்றும் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்)
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c8418c-d1ce-48d3-9a3d-04d852e2f00d/26-6a984cf79d288.webp' /></p><p>
</p><p>
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability
Project திட்டத்தை தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளாததுடன், சுயாதீனமாக வழக்குத்
தொடரும் அமைப்பையும் இதுவரையில் நிறுவவில்லை.
</p><p>
பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து,
உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு
விரைவுபடுத்த வேண்டும்.
</p><p>
நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டைச் செயற்பாடுகள் மூலம்
வெளிப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உயர் ஆணையாளரும் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை வலியுறுத்த வேண்டும்&nbsp; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T17:01:13+00:00</updated>
        </entry>
    </feed>
