<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T08:33:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் - உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549"></link>
            <id>https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549</id>
            <summary type="text">வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர்,
தனது மனைவிக்கு 1000 ரூபாய் பெறுமதியான வெள்ளையாகும் முகப்பூச்சு ஒன்றை வாங்கி
கொடுத்துள்ளார். 

எனினும் மனைவி அதனை பூசவில்லை. </p><p>இதனால் கோபமுற்ற கணவர்
மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.</p><h2>

9 நாட்கள் உயிருடன் இருந்த குடும்பஸ்தர்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தம்பி முறையானவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியை பறிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ மூட்டப்பட்டு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bde6eb-d0e1-4c96-a5cd-1f9eee5c9857/26-6a8ff344f1739.webp' /></p><p> 

இதன்போது விரைந்து செயற்பட்ட அவருடைய உறவினர்கள், இளைஞரை மீட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் 9 நாட்களின்
பின் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T08:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை தொடர் முடக்கம் - தற்காலிக பாதை அமைக்க ஈரான் அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556"></link>
            <id>https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
</p><p>
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில்
அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய
தாக்குதல்களுடன் ஆரம்பித்த போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய்
மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாளிப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை
வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பாதை முடங்கியுள்ளது.
</p><h2>
பொருளாதார ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா</h2><p>
இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் பொருட்டு கூட்டுத்
தற்காலிகப் பாதையொன்றை அமைப்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை
அகற்றுவது குறித்தும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db83750-d0d7-41f5-9839-03ae99754945/26-6a8feea0044bf.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும்
திட்டம் அமெரிக்காவிடம் இல்லை என்றும், பொருளாதார ரீதியிலான அழுத்தங்களையே
தீவிரப்படுத்த அமெரிக்கா முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதன் ஒரு பகுதியாக ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள்
மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு
எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், அமெரிக்கா - ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை
வழியூடான பயணம் இன்னும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,"22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும்.</p><p> அவ்வாறு நடத்தப்பட்டால் மக்கள் அதனை நிச்சயம் தோற்கடிப்பார்கள்.</p><h2>ஆதரவாளர்கள் மத்தியில்</h2><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தாங்கள் தோல்வியடைவோம் என்பது அரசுக்கு
நன்றாகத் தெரியும் என்பதாலேயே தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9810fb-76b2-4ed5-82db-5d7bd08abeda/26-6a8fe8fec47b0.webp' /></p><p>

அன்று இருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று இருக்கும் கட்சிக்கும்
இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.</p><p> இதனால் அவர்களின் சொந்த ஆதரவாளர்கள்
மத்தியிலேயே தற்போது பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது.
</p><p>
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு
வரும் போராட்டங்களின் பின்னணியில் தற்போதைய அரசே செயற்பட்டு வருகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T07:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசியப் பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yala-national-park-temporarily-closed-1787812370"></link>
            <id>https://tamilwin.com/article/yala-national-park-temporarily-closed-1787812370</id>
            <summary type="text">யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டியுள்ள அபகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அதன் பிரகாரம் யால தேசியப் பூங்காவின் தொகுதி 1 மற்றும் 2 ஆகியவை தற்போதைக்கு எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படவுள்ளது.
</p><h2>வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம்</h2><p>எதிர்வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை யால தேசியப் பூங்கா பொதுமக்களுக்குத் தற்காலிகமாக மூடப்படும் என்று வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069f68bc-b143-4b1b-8957-4a320187007c/26-6a8fdfcaee573.webp' /></p><p>
விலங்குகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T06:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கந்தனை காண குவியும் பக்தர்கள் - சிறப்பாக நடந்து முடிந்த 10ஆம் நாள் மஞ்சத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-devotees-gather-to-see-kanthan-1787813558"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-devotees-gather-to-see-kanthan-1787813558</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 நாள் நிகழ்வுகள் நேற்று(26.08.2026) சிறப்பாக நடந்து முடிந்தது. 

நல்லூர் கந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 நாள் நிகழ்வுகள் நேற்று(26.08.2026) சிறப்பாக நடந்து முடிந்தது. </p><p>

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜைகள் இடம்பெறுவது வழக்கம்.
</p><h2>
சிறப்பாக நடந்த 10ஆம் நாள் கொண்டாட்டம்</h2><p>
இதற்கமைய நேற்றைய தினம், மஞ்சத் திருவிழா வெகு சிறப்பாக, பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9cd01a-fb68-4160-b1e5-6bc75617a22a/26-6a8fdf228a232.webp' /></p><p> </p><p>

சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி, கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப்
பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமார சுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி
அருள் பாலித்துள்ளார்.</p><p> 

இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்
பாலித்த காட்சியினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff09afa2-dcd8-456f-ac98-31e971e33105/26-6a8fdf2381e63.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8012db2e-7c2b-4fe3-aed2-7fc3f3293315/26-6a8fdf24572c9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f681cd5b-6887-476e-8aed-083d494ced78/26-6a8fdf568f582.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் டிரக்டர் மோதி 7 வயது சிறுமி உயிரிழப்பு - சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-year-old-girl-dies-after-being-hit-by-tractor-1787812171"></link>
            <id>https://tamilwin.com/article/7-year-old-girl-dies-after-being-hit-by-tractor-1787812171</id>
            <summary type="text">மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை
வீதி ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை
வீதி ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(25.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


டிரக்டர் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><h2> 

7 வயது சிறுமி உயிரிழப்பு</h2><p>
விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமியே இந்தச் சம்பவத்தில்
பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389c2153-4467-4b42-b031-67ea7dc5e64f/26-6a8fd9c51e718.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய 32 வயதுடைய டிரக்டரின் சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் குறித்து அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் சோகம் : கோர விபத்தில் இளம் தாய் - பிறந்த குழந்தை உட்பட மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343"></link>
            <id>https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343</id>
            <summary type="text">அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p>

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்ட விபத்தில், இவ்வாறு 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் ஒரு பாட்டி, அவரது மகள் மற்றும் பிறந்து 10 நாட்களான குழந்தை ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2><b>

கோர விபத்து</b></h2><p>சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு குழந்தை சென்று கொண்டிருந்த போது, ​​இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47ae5cb9-afad-407b-9fcf-2f7b6debb289/26-6a8fd6ee63fde.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் பதவிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>

விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mhT43bDUsNQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டைதீவு படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவு : கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/36th-anniversary-of-the-mandaitivu-massacre-1787809080"></link>
            <id>https://tamilwin.com/article/36th-anniversary-of-the-mandaitivu-massacre-1787809080</id>
            <summary type="text">1990களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36ஆவது
ஆண்டு நினைவு நாள் நேற்று(26.08.2026) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக
அனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36ஆவது
ஆண்டு நினைவு நாள் நேற்று(26.08.2026) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது.
</p><p>
36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில்
நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள்
ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.
</p><h2>படுகொலை செய்யப்பட்ட ஒருவரது தாயார்</h2><p>
தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்
நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை
செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து
நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a916eab-356c-489f-a95b-055e44256aa5/26-6a8fd364c4ec8.webp' /></p><p>தொடர்ந்து அருட்தந்தை வசந்தன் மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன்
ஆகியோரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்விவேந்தல்
நடைபெற்றது.
</p><p>இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும்
படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும்
வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.</p><h2>புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்று</h2><p>இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில்
இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.

இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர்
ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffad327c-5808-4e15-98ad-aa85d221e926/26-6a8fd365a2b61.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான்
சாட்சி.

அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர்
மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.</p><p>&nbsp;அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு.

இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T06:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hambantota-port-vehicles-will-sale-on-auction-1787809937"></link>
            <id>https://tamilwin.com/article/hambantota-port-vehicles-will-sale-on-auction-1787809937</id>
            <summary type="text">&amp;nbsp;அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்து, சுங்க வரி மற்றும் களஞ்சியக் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இது குறித்து இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
</p><p>வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் சுங்க வரி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுங்கத் திணைக்களத்தின் மொத்த இலக்கான 190.2 பில்லியன் ரூபாயில் இதுவரை 176.7 பில்லியன் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 13 பில்லியன் ரூபாயை வரும் நாட்களில் ஈட்ட முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84501924-0550-4a00-bc08-e38d739972a9/26-6a8fd093681de.webp' /></p><p>
</p><p>வாகன வரி வருவாய் குறைந்ததையடுத்து, கூடுதல் கட்டணத்தை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வாகன இறக்குமதி மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>செலாவணி வீத உயர்வு வாகனங்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,000-க்கும் அதிகமான வாகனங்கள் சுமார் மூன்று மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளன. சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ், இந்த வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்து சுங்க வரியை முதன்மையாக வசூலிக்கவும், பின்னர் துறைமுகத்திற்கான களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்தவும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>
விற்பனைக்குப் பின்னர் ஏதேனும் பணம் மீதம் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்குத் திருப்பி வழங்கவும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவ்விவகாரம் தொடர்பாக இறக்குமதியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HKQDQbfk26E" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T05:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு வலை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951"></link>
            <id>https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951</id>
            <summary type="text">முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாசிக் தற்பொழுது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>பாசிக்கிடம், பல கோடி ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.</p><h2>கடந்த அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்</h2><p>
ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது வெளிவந்த அதிர்ச்சித் தகவல்களின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a668adef-7429-4b00-837e-77d516c92c25/26-6a8fd8ec69dbc.webp' /></p><p>
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரண்டு முன்னாள் பெண் அமைச்சர்கள், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பல பிரபல அரசியல்வாதிகள் அடங்குவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>குறிப்பிட்ட 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசாரப் பணிகளின் போது ஷிரான் பாசிக் அவ்வப்போது பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
மேலும், கடந்த அரசாங்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஷிரான் பாசிக்கு சட்டவிரோதமாக நிலங்களை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p> இந்த உதவிகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள்</h2><p>
</p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாகவே இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாகப் பணத்தைச் செலவிட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0721e2-2180-4908-a9d0-f99b6642eb79/26-6a8fccbc714b1.webp' /></p><p>
</p><p>ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், தொடர்பு வைத்துக்கொண்டு பணம் மற்றும் பலதரப்பட்ட சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் குறித்தும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837"></link>
            <id>https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்கள்</h2><p>
</p><p>
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குப்
புறப்படத் தயாராக இருந்த 19 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83715aec-e40e-4633-a8d0-28c37ddb8d9a/26-6a8fc86f634ff.webp' /></p><p>
விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் தங்கத்தை நூதனமான முறையில் மறைத்து வைத்து
கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.</p><p> இதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள 19
சந்தேகநபர்களையும் ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் அர்ஜுன மகேந்திரன் - அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168"></link>
            <id>https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168</id>
            <summary type="text">சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார். </p><p>
சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.</p><h2>அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கை</h2><p>
</p><p>அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்ட பூர்வமான தடைகள் உள்ளன. ஆனால், சாத்தியமான அனைத்து சட்டபூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6903a2d5-9764-4055-9e4c-9bde99259417/26-6a8fc1d93c549.webp' /></p><p>அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p> 
இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் 'நாடுகடத்தல் சட்டத்தின்' கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது. </p><p>
மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். </p><p>
அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் 'மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்' இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>39பேரின் இருப்பிடங்கள்</h2><p> </p><p>
இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரிடமிருந்து மொத்தம் 236 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார். </p><p>
இவற்றில் 110 சிவப்பு எச்சரிக்கைகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b46739b-6c9f-4a3f-8710-8f16a8949e7e/26-6a8fca9351651.webp' /></p><p> </p><p>
தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேரிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார். </p><p>இதில் 39 பேரின் இருப்பிடங்களை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.</p><p> 
அத்துடன், தேடப்பட்டு வரும் மேலும் ஒரு நபர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787803305"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787803305</id>
            <summary type="text">நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><h2>வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமை</h2><p>

ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் செயற்படும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176ebc4b-bb3e-4b6e-95da-4dc7bc59a530/26-6a8fbc5bcf56b.webp' /></p><p>

எவ்வாறாயினும், நேபாளத்தைப் பாதித்துள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமையினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p style="margin-left: 25px;">
</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wvWuHH4caIg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T04:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதி ஆலய தேர்த்திருவிழா - Live]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selva-sannidhi-temple-charitable-festival-1787801178"></link>
            <id>https://tamilwin.com/article/selva-sannidhi-temple-charitable-festival-1787801178</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்று(27.08.2026) நடைபெற்று வருகின்றது.
 இன்று (27...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்று(27.08.2026) நடைபெற்று வருகின்றது.
</p><p> </p><p>இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்றது.</p><h2>நாளை தீர்த்தத் திருவிழா&nbsp;</h2><p>செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8hRJ7eieL2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வென்னப்புவவில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-tragically-dies-hit-train-in-wennappuwa-1787800121"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-tragically-dies-hit-train-in-wennappuwa-1787800121</id>
            <summary type="text">வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று(26.08.2026) மாலை இடம்பெற்ற
கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர்
ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று(26.08.2026) மாலை இடம்பெற்ற
கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர்
ஒருவர் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்து கடந்து
செல்வதற்காக, அந்த தொடருந்து கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக
மூடப்பட்டிருந்தது. </p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, தனது
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க ஒருவர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/031af470-2c0e-417b-ad76-f02310131054/26-6a8faddbbe92f.webp' /></p><p>

கண் இமைக்கும் நேரத்தில் வந்த தொடருந்தில் அவர் நேரடியாக மோதியதில், பலத்த
காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>

விபத்தில் உயிரிழந்தவர் குளியாப்பிட்டி பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55
வயதுடைய ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இவர் வைக்கால் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும்
வேலைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த விபத்து தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் விடுதலைக்காக 500 கோடி! கசிந்துள்ள தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704</id>
            <summary type="text">இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உறுதி செய்வதற்கும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்கும் சுமார் 5000 மில்லியன் ரூபாய் (500 கோடி) நிதி தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
இந்த மூலங்களின் தகவல்படி, கொழும்பு தரப்பில் இந்த பணத்தை நிர்வகிப்பதாகவும், புலனாய்வாளர்களை அந்த வலையமைப்புடன் தொடர்புபடுத்தும் துபாயை தளமாகக் கொண்டியங்கும் முகமது சித்தீக்கிற்கு கீழ் செயற்படுவோரே நிதி கையாளுபவர்களாவர்.</p><h2>நிதி வழங்கப்படும் மூலங்கள்</h2><p>அடையாளம் கண்டு கொள்வதற்காக அந்த மூலங்கள் குறியீட்டப் பெயரான "சாண்ட்ரா" என்ற ஒரு பெண்ணைப் பற்றி தெரிவித்துள்ளனர். </p><p>அவர் பாசிக்கின் நீண்டகால தொடர்பாளராகவும், இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்பவராகவும் விவரிக்கப்படுகிறார். ஆரம்பக்கட்ட மூல தகவல்களின்படி அவரது வயது சுமார் 42 என்றும், அவர் திருமணம் ஆகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இருப்பினும் அவரது உண்மையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மற்றும் பாசிக்கின் பொது பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது. </p><p>மேலும் மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் எந்தவொரு கட்டணத்திற்கும் வழக்கை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24092ce1-7a92-4824-955a-68310798e613/26-6a8f895accc96.webp' /></p><p>இதில் "பிடிகல" என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது .தற்போதைய நிதி போதுமானதாக இல்லை என்றால், துபாயில் இருந்து கூடுதல் பணத்தை அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>மேற்கூறிய இலஞ்சக் குற்றச்சாட்டுகள் எதுவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.இவை எதிர்தரப்பு மூலங்களுக்கு உட்படுத்தப்பட்டவை, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளாக அல்லாமல்,எதிர்வு கூறப்படும் குற்றச்சாட்டுகளாகவே 
முன்வைக்கப்படுகின்றன.
</p><h2>
பாசிக் ஏற்கனவே ஒப்புக்கொண்டது என்ன</h2><p>
அண்மையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் படி, பாசிக் பொரலஸ்கமுவ பகுதியில் இரண்டு வீடுகளின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அதேபோல், தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடலோரப் பகுதிகளில் உள்ள ஐந்து ஹோட்டல்களின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அவை அவரது சொந்த பெயரில் இல்லை நண்பர்களின் பெயர்கள் மூலமாகவே முதலீடு செய்ததாக அவர் கூறுகிறார்.
</p><p>கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகம் அவரது முழு சொத்து விவரங்களை தேடுவதை இன்னும் முடிக்கவில்லை. அவர் தற்போது புலனாய்வுக் குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார், மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் அரச புலனாய்வு சேவையும் ஆதரவையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் இருந்து செயற்படும் ஆபத்தான குழுக்கள் - விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-photos-of-women-online-urgent-warning-1787797194"></link>
            <id>https://tamilwin.com/article/private-photos-of-women-online-urgent-warning-1787797194</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்</h2><p>இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c897bf-9803-4fbd-bdcb-1486cb31b241/26-6a8fa3b9be9cf.webp' /></p><p>இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. 

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T02:43:30+00:00</updated>
        </entry>
    </feed>
