<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-11T20:45:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் மகிந்த - கோட்டாபய வைத்தியசாலையில்! சுரேஸ் சலே உடைத்த பரம இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET ஸ்கேனர் கருவியை வழங்குவதாகக் கூறி, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக நிதி திரட்டப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில், சிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>
அவரது உடல்நிலை காரணமாக விசாரணைகளில் இருந்து விலகி இருக்கிறாரா அல்லது உண்மையான உடல்நலப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p>

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் அடுத்த கட்டமாக விசாரணைகள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
எனவே அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உண்மையான காரணங்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்ட சக்திகள் தொடர்பிலும் சுரேஸ் சலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இது தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CP_Y7qU4Swk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குகளை வாங்கினார்கள்… வாக்குறுதிகளை மறந்தார்கள்! சஜித் சரமாரி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-hparliment-speech-1789156597"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-hparliment-speech-1789156597</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் நாட்டின் 9 மாகாணங்களிலும் பொய்ப் பிரசாரப் பயணத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் 9 மாகாணங்களிலும் பொய்ப் பிரசாரப் பயணத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புகளின்போது, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்களின் உரிமைகள்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு பணியையும் செய்யவில்லை எனவும், இந்த இரண்டு ஆண்டுகளும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட காலமாகவே அமைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

மருதமடு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பாடசாலைகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa788ad4-58dd-41d6-8d18-6745c74014f3/26-6aa4611e2e629.webp' /></p><p>
</p><p>
ஒலுவில் துறைமுகம், திருக்கோவில் மற்றும் கதிரவெளி பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அரசாங்கம் இதுவரை உரிய பதிலை வழங்கவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
திருக்கோவில், பனங்காடு மற்றும் நாவிதன்வெளி வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>

கித்துல்உறுகாமம் நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாக 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு உதவிகள் கிடைக்கத் தயாராக இருந்தும் அந்தத் திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

வாழைச்சேனை காகித ஆலையில் முன்னர் சுமார் 4 ஆயிரம் பேர் பணியாற்றிய நிலையில், தற்போது 250 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f49772-8a59-4336-8489-bf1916b471ac/26-6aa4611ed8db9.webp' /></p><p>
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட அபிவிருத்தி வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கனிம மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மல்வத்து ஓயா திட்டத்தின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், நிலம், இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான முறையான பொறிமுறையையும் அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இதனிடையே, பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் தொடர்பான கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரும் பிரேரணைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்களின் நலனை கருத்திற்கொண்டு இனியாவது அரசாங்கம் இவ்வாறான பிரேரணைகளை முன்வைத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T20:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டோம்! – ஈரான் ஜனாதிபதி அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-israel-want-to-bully-us-but-we-won-t-kneel-1789155591"></link>
            <id>https://tamilwin.com/article/us-israel-want-to-bully-us-but-we-won-t-kneel-1789155591</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஈரான் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p>

BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பெசெஷ்கியான், இந்திய மதத் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார்.</p><h2>&nbsp;புதிய வாய்ப்புகள்</h2><p> </p><p>அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே கலாசாரம், தொழில்நுட்பம், வர்த்தகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a73c92-0a3a-46c9-b9c8-bc3c59e9b2cc/26-6aa45af422a59.webp' /></p><p>
</p><p>
இந்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியாவுடனான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஈரான் தயாராக இருப்பதாகக் கூறினார்.
</p><p>
இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பெசெஷ்கியான், ஈரானை அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார். 

பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் அவர் கண்டித்தார்.</p><h2>இருமுறை சந்திப்பு</h2><p>
</p><p>
மேலும், ஈரான் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

இதற்கிடையில், பிரதமர் மோடியும் மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce462c98-d719-4c36-ac62-92efe8dc95cd/26-6aa45af4cf0a5.webp' /></p><p>

பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
</p><p>
மேலும், கடல் வழிச் சுதந்திரம், வர்த்தகம் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மோடி மற்றும் பெசெஷ்கியான் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T19:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விரிவுரையாளரின் அநாகரிக பேச்சால் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031"></link>
            <id>https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031</id>
            <summary type="text">யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிர்வாகம் நடவடிக்கை</span></p><p>குறித்த மாணவி கல்லூரி கழகம் ஒன்றின் செயற்பாட்டிற்காக சென்றிருந்த நிலையில் அந்த விடுதிக்கு பொறுப்பான பெண் விரிவுரையாளர் எங்கு சென்று வருகிறாய்? என மாணவியை கேட்டுள்ளார்.
</p><p>
 அதற்கு தனது கழக செயற்பாட்டுக்கு கழகத் தலைவர் அழைத்ததன் காரணமாக சென்று வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07f295d0-63d1-4df4-acb5-a06409b3e3bc/26-6aa42c836e316.webp' /></p><p> </p><p>


உடனே குறித்த விரிவுரையாளர் அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார்.

அதனைதொடர்ந்து மாணவி எழுத்து மூலம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியருக்கிறார். </p><p>

ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை காரணமாக மனவிரக்தி அடைந்து தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் சக மாணவிகளால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>
மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853"></link>
            <id>https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் இன்று(11.9.2026) அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது
அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச்
சாய்ந்துள்ளது.</p><h2>போராட்டங்கள்</h2><p>
</p><p>
மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி
முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80506689-03c6-456d-b966-6cc5cbcba32e/26-6aa436e83461f.webp' /></p><p>
</p><p>
மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும்
தோல்வியிலேயே முடியும்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க
முடியாது.</p><h2>முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல்
காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1f7e81-29f3-43e9-abdc-740f3cb41f35/26-6aa436e8dcfd9.webp' /></p><p>

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள்
மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
</p><p>
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப்
பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப்
பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384"></link>
            <id>https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384</id>
            <summary type="text">அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் சட்ட செயலாளர் ரஜித லக்மால் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"22ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும்
சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் உள்ளது.</p><p>நாட்டினுடைய பிரதான நிறைவேற்று
அதிகாரியான ஜனாதிபதி மேடைகளில் ஏறி 'தீர்ப்பு வந்தவுடன் அதனை மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்' எனக் கூறுவது நீதிமன்றத்தின் மீது
விடுக்கப்படும் நேரடி அழுத்தமாகும்.</p><h2>அத்தியாவசிய மருந்துகள்&nbsp;</h2><p>

எழுதப்படாத ஒரு தீர்ப்பு குறித்து நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசுவது
ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இன்று நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகளில்
நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால்,
ஜனாதிபதியோ மக்கள் வினோதத்துக்காக மருத்துவமனைக்குச் செல்கின்றார்.</p><p>வீடுகளிலேயே கொத்தமல்லி குடித்துவிட்டு இருக்குமாறும் கூறுகின்றார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைக்கவே ஜனாதிபதி இவ்வாறு
கூறுகின்றாரா. இதன் காரணமாகவே மக்கள் அவரை இன்று 'கொத்தமல்லி ஜனாதிபதி' என
விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9694d6c-bf9f-454d-b095-5a40ec5c6d3b/26-6aa432ca14b01.webp' /></p><p>
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், 2025 ஜனவரி மாதம் இடம்பெற்ற
கொள்கலன் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தம் வசமிருந்தும் அதனை
வெளிப்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
</p><p>
போலி கலாநிதி பட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சபாநாயகர்
மீதோ அல்லது நிலக்கரி கொள்முதல் ஊழல்கள் மீதோ இதுவரை எவ்வித முறையான
விசாரணைகளும் நடத்தப்படவில்லை.</p><h2>அரச போலிப் பேரணி</h2><p>ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை
இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்கள், இன்று அப்பாவி மக்களுக்கு எதிராக
அதே சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb89da7-330f-4f52-9bf1-a343971e57e7/26-6aa432cabd10d.webp' /></p><p>
</p><p>
மக்களின் அதிருப்தியையும் சரிந்துவரும் செல்வாக்கையும் மறைக்கவே பஸ்கள் மூலம்
ஆட்களைத் திரட்டி அரசு போலிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.</p><p>

இந்த அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகு
மக்களால் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சியாக நின்று
மக்களுக்கான ஜனநாயகப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து
முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772"></link>
            <id>https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களினால் 06 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே பதிவாகியுள்ளன. 
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் பின்னணி</h2><p>
</p><p>இதன்காரணமாக, பாதாள உலகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படைகளின் உதவியைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில், தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் கதவை அடையாளம் தெரியாத நபர் தட்டியுள்ளார். </p><p>வீட்டார் கதவைத் திறந்ததும் அந்நபர் கைக்குண்டை வீட்டிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 வயதுடைய கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதுடைய சகோதரரான துமிந்த கீஹான் ஆகிய இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ea34e-213d-4db0-905c-cfee39a99058/26-6aa42ec60c3a0.webp' /></p><p>
</p><p>இச்சிறுவர்களின் தந்தையான 55 வயதுடைய நளின் துசாந்த பெரேரா என்பவரின் காலில் காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இவர் மீது எவ்வித குற்றவியல் பின்னணியோ குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் உறவினர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "படவிட்ட அசாங்க" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனின் நெருங்கிய சகாக்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><h2>விசாரணைகள்</h2><p> 
நேற்று முன்தினம் களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது படவிட்ட அசாங்கவின் சகாக்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தாக்குதல் நடத்தியவர் இலக்கை மாற்றி, தவறுதலாக இச்சிறுவர்களின் வீட்டின் மீது குண்டை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0203a34-7e85-4344-ba5d-cda7eee17aa3/26-6aa4348c25f6a.webp' /></p><p> </p><p>
இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p> மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயம் இல்லாவிட்டால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! அரசிடம் சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132"></link>
            <id>https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பறிப்பதுடன் நாட்டின் இறைமையை மீறும் செயலாகும் எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(11) வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;சஜித் வலியுறுத்து</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே மாகாண சபைகள் தேர்தல் முறைமை
தொடர்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் குழுவின் கால அவகாசத்தை
எந்தக் காரணம் கொண்டும் நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். </p><p>கால
அவகாசத்தை நீடிப்பது என்பது மக்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும் வாய்ப்பை
முற்றாக இழக்கச் செய்வதாகும்.

இவ்வேளையில் நிகழ வேண்டியது இந்தக் குழுவின் கால அவகாசத்தை நீட்டிப்பதல்ல,
மாறாக மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d70e99ca-fdb8-4ba5-861f-baed402e0a62/26-6aa423feee81a.webp' /></p><p> </p><p>அரசுக்கு மக்கள் மத்தியில்
பயம் இல்லாவிட்டால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு
கேட்டுக்கொள்கிறேன். புதிய முறைமை தாமதமானால், குறைந்தபட்சம் பழைய முறையின்
கீழாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்.</p><p>

மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைப்பதற்காக இந்தக் குழுவின் கால
அவகாசத்தை நீடிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது</p><p>
நாட்டு மக்களின் இறைமையை இது கடுமையாக மீறுவதால், ஜனநாயகத்துக்கு எதிரான இந்த
நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LVliSlgYppE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T15:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளத்திற்கு சென்ற வயோதிபர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-attacked-by-a-wild-elephant-1789138829"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-attacked-by-a-wild-elephant-1789138829</id>
            <summary type="text">குருநாகல்- ஹுதலியாவ குளத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(9) இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்- ஹுதலியாவ குளத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(9) இடம்பெற்றுள்ளதாக கோட்டவெஹெர
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மெல்லகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபரே இந்தத் தாக்குதலில்
உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்படி வயோதிபர் இரவு நேரத்தில் குளத்துப் பகுதிக்குச் சென்ற போது வீதியில்
நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3339febb-955d-4b98-88d0-57a5145028ce/26-6aa41e0861027.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக
நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் கோட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T15:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஆபத்தான நடவடிக்கை - அதிகாரிகளை மிரள வைத்துள்ள செயற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-activity-through-postal-service-1789139434"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-activity-through-postal-service-1789139434</id>
            <summary type="text">இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்து, அவற்றை உள்நாட்டில் வளர்க்கும் புதிய ஆபத்தான போக்கு ஒன்று அடையாளம் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்து, அவற்றை உள்நாட்டில் வளர்க்கும் புதிய ஆபத்தான போக்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் இலங்கைச் சுங்கம் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டுவருவதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வழிகளுக்குப் பதிலாக புதிய வழிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். </p><h2><b> 

விசாரணைகளில் முக்கிய தகவல்கள்</b></h2><p>இந்த கடத்தல் முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுவதாக சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b10a4fed-093a-4864-89d6-37beeb116bf6/26-6aa41d36c785a.webp' /></p><p>சுங்கத் தரவுகளுக்கு அமைய, கடந்த சில மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முக்கிய தகவல்கள் தெரியவந்ததுள்ளது.
</p><p>
அதற்கமைய, தாய்லாந்தில் அல்லது அவுஸ்திரேலியா ஊடாகச் செல்லும் பயணிகளால் இலங்கைக்குப் போதைப்பொருட்கள் இரகசியமாகக் கொண்டுவரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், இந்த மாதத்தில் மட்டும் அதிகாரிகள் முற்றிலும் வேறுபட்ட வழிகளால் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நான்கு போதைப்பொருள் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
ஒரு சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மடகாஸ்கரிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அத்துடன், மற்றைய இரண்டு சந்தர்ப்பங்கள் பிரித்தானியாவிற்கும், மற்றொரு சந்தர்ப்பம் இத்தாலிக்கும் தொடர்புடையவை என சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.</p><h3><b> 

கூரியர் பொதிகள்</b></h3><p>இந்த வழிகள் சுங்கத்தினரால் முன்னர் அடையாளம் காணப்பட்ட முறைகளை விட மிகவும் வேறுபட்டவை என்பதுடன், கடத்தல்காரர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகப் போக்குவரத்து வழிகளைத் வேண்டுமென்றே மாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44bad1b-84f7-4b43-b67a-949880df0027/26-6aa41d377a527.webp' /></p><p>சமீபகாலச் சம்பவங்களுடன் தொடர்புடைய வகையில் அதிகாரிகள் சுமார் நான்கு கிலோகிராம் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்யும் சம்பவங்கள் வெளிவருவது குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>

இலங்கையின் காலநிலைக்கேற்ப இந்தத் தாவரங்கள் வளரக்கூடும் என்பதால், அந்த விதைகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லாமல் உள்நாட்டில் பயிரிடும் நோக்கத்திலேயெ கொண்டு வரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-11T15:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆளுநர் அநுர அரசின் ஆளுநரா ஹிஸ்புல்லாவின் ஆளுநரா..! எழும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர் கி. வதனகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஆளுநர் மற்றும் தவிசாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.</p><p>

அவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகளைப் போன்று அல்லாமல், வேறு சில தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
அதேபோன்று, மேலதிக கல்வி நடவடிக்கைகளைக்கூட ஆசிரியர்கள் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை தற்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4eZuwiThywg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T15:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-pound-inflationary-environment-1789138076"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-pound-inflationary-environment-1789138076</id>
            <summary type="text">டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை
எதிர்கொள்ளும்போது
ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a08ada4-95cb-430a-acff-5889acb3c9db/26-6aa4149d3d807.webp' /></p><p>டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை
எதிர்கொள்ளும்போது
ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன. </p><p>எனினும், இவற்றில் எது அதிக கண்டிப்பான கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் GBPUSD-இன் விலை
நிர்ணயிக்கப்படவில்லை. </p><p>ஒவ்வொரு வங்கியும் உண்மையில்
மேற்கொள்ள வேண்டிய டிரேட்-ஓஃப் அடிப்படையிலேயே இதன் விலை
நிர்ணயிக்கப்படுகிறது.
</p><p>GBPUSD ஆனது வர்த்தக விலைபோலச் செயல்பட மறுத்து, 2026-ஆம்
ஆண்டின் பெரும்பகுதியைச் செலவு செய்தது. ஃபெடரல் ரிசர்வ் மற்றும்
பாங்க் ஒஃப் இங்லண்ட் (BoE) ஆகியவை ஒரே மாதிரியான கொள்கைப்
பரப்பில் செயல்படுவதால், வழக்கமாக இவற்றை ஒரே நோக்கை
நோக்கிக் கொண்டுசெல்லும் விளைவு இடைவெளி, தற்போது
அவ்வளவு தீர்க்கமானதாக இல்லை.
</p><p>வித்தியாசம் குறுகும்போது, அந்த ஜோடியானது தமது நிலையைவிட,
தமது விலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில்
வர்த்தகமாகிறது. ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 16 அன்று
முடிவெடுக்கிறது, அதைத் தொடர்ந்து பாங்க் ஒஃப் இங்லண்ட்
செப்டம்பர் 17 அன்று முடிவெடுக்கிறது, இதன்மூலம் ஒரே நாளில்
இரண்டு எதிர்வினைச் செயல்பாடுகள் ஒன்றாகவே அமைகின்றன.
</p><p>ஓர் எதிர்வினைச் செயல்பாடு என்பது ஒரு வங்கி எதைக் காண்கிறது
என்பதையும் அது எதைச் செய்கிறது என்பதையும் இணைக்கும்
விதியாகும். </p><p>மேலும், இரண்டு வங்கிகளும் பணவீக்கத்தை
வளர்ச்சியுடன் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, அவை ஒரே மாதிரியான எண்களை வெளியிட்டாலும்,
எதிர்மாறான செய்திகளை அனுப்பக்கூடும்.</p><h2><b>US தரப்பு சமன்பாடு</b></h2><p>US தரப்பைப் பொறுத்தவரை, பணவீக்கம் பரவலாகக் குறைகிறதா
அல்லது ஒட்டுமொத்த நிலையில் மட்டுமா என்பதைச் சந்தை
உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. </p><p>முக்கியமாக எரிசக்திச்
சந்தைகளால் ஏற்படும் பலவீனமான CPI பதிவை, உள்நாட்டு விலை
அழுத்தத்தின் தெளிவான சமிக்ஞைகளில் ஒன்றாகத் திகழும் முக்கியச்
சேவைகளில் ஏற்படும் நீடித்தகாலத் தளர்விலிருந்து முற்றிலும்
மாறுபட்ட விதத்தில் புரிந்துகொள்ளலாம்.
</p><p>அந்த வேறுபாடு ஃபெடரல் ரிசர்வுக்கு முக்கியமானது. ஒட்டுமொத்தப்
பணவீக்கம் தணிந்து, அதே சமயம் சேவைத் துறைப் பணவீக்கம்
மாற்றமின்றி நீடித்தால், பணவீக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது
என்பதற்கு ஒரேயொரு தரவை ஆதாரமாகக் கருதுவதற்கு மத்திய
வங்கி தயக்கம் காட்டக்கூடும். </p><p>தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட
தகவல்கள், ஃபெடரல் ரிசர்வின் பரந்த பணவீக்க நிலைப்பாட்டை
மாற்றுவதற்கு பலவீனமான பொருளாதாரத் தரவுகள் போதுமானதா
என்பதில் சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
</p><p>செப்ரம்பர் மாதக் கூட்டத்தில் புதிய பொருளாதாரக் கணிப்புகளின்
சுருக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், 'டாட் பிளாட்'
வரைபடமும் சந்தையின் முக்கியக் கவனத்திற்கு உள்ளாகும். </p><p>USD
வர்த்தகர்களுக்கு, வட்டி வீத முடிவைப் போலவே, கணிப்புகளும்
உண்மையான விளைவு வீதப் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கலாம். உண்மையான விளைவு வீதங்கள் உயர்ந்த
நிலையிலேயே நீடித்தால், புதிய வட்டி வீத மாற்றம் இல்லாமலேயே
டொலர் ஆதரவைப் பெற முடியும்.</p><h2>UK தரப்பு</h2><p>GBP வர்த்தகர்களுக்கு UK அதே பிரச்சனையின் வேறொரு வடிவத்தை
அளிக்கிறது. பணவீக்கம் முந்தைய அழுத்தத்திலிருந்து தணிந்துள்ளது,
ஆனால் சேவைத் துறையின் பணவீக்கமும் ஊதிய வளர்ச்சியும் பாங்க்
ஒஃப் இங்லண்ட் உடைய முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப்
பங்கு வகிக்கின்றன. </p><p>தொழிலாளர் சந்தை தளர்வதற்கான

அறிகுறிகளைக் காட்டியுள்ளது, ஆனாலும் உள்நாட்டுப் பணவீக்க
அழுத்தம் முழுமையாக அதைப் பின்பற்றவில்லை.
வாக்குப் பிளவே பல விஷயங்களை எடுத்துரைக்கிறது. </p><p>வட்டி விகித
உயர்வை ஆதரிக்கும் சிறுபான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு
தற்போதைய நிலையைத் தொடர்வது என்பது, அனைவரும்
ஒருமனதாகத் தற்போதைய நிலையைத் தொடர்வதிலிருந்து
வித்தியாசமானது. </p><p>GBP வர்த்தகர்களுக்கு, சமிக்ஞை என்பது வங்கி வீதம்
மட்டுமல்ல, MPC உறுப்பினர்களில் அதிகமானோர் நீடித்த பணவீக்கம்
குறித்துக் கவலைப்படுகிறார்களா அல்லது வளர்ச்சி அபாயம் குறித்துக்
கவலைப்படுகிறார்களா என்பதும்தான்.</p><h2>விலகுதல் அளவீடு</h2><p>இரு வங்கிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில்
இருப்பதால், ஒன்றையொன்று பொறுத்து எந்த வங்கியின் எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறதோ, அதைப் பொறுத்தே இந்த ஜோடியின்
நகர்வு அமைய வாய்ப்புள்ளது.</p><p> நான்கு சேர்க்கைகள் இந்தக் கணிப்பை
வடிவமைக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விலை இலக்கைக்
காட்டிலும் உறுதிப்படுத்தும் சமிக்ஞையைக் கொண்டுள்ளது.
• கண்டிப்பான நிலைபாடுடைய ஃபெடரல் ரிசர்வ், மென்மையான
அணுகுமுறையுடைய BoE. ஒரு மென்மையான UK சேவைத்
துறையின் சரிவுக்கு எதிராகக் காணப்படும் ஓர் உறுதியான
புள்ளிவிபரம், டொலருக்குச் சாதகமான மறைமுக இடைவெளியை
விரிவுபடுத்துகிறது. </p><p>உறுதிப்படுத்தல் என்பது ஒட்டுமொத்த வீதத்தில்
இல்லை, மாறாக நிலையான பொருளாதாரக் குறியீட்டிலும் (SEP)
மற்றும் உண்மையான விளைவு வீதங்கள் நிலைத்திருப்பதிலுமே
உள்ளது.
</p><p>• மென்மையான அணுகுமுறையுடைய ஃபெடரல் ரிசர்வ், கண்டிப்பான
நிலைப்பாடுடைய BoE. தொடர்ந்து கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கும், வட்டி விகிதத்தை அதிகரிக்க விரும்பும் UK
சிறுபிரிவினருக்கு எதிராக, US உடைய முக்கியச் சேவைத்

துறையின் சந்தை நிலவரம் சற்று தணிந்திருப்பது,
ஸ்ரெர்லிங்கிற்குச் சாதகமாகச் சமநிலையைச் சாய்க்கிறது. MPC
வாக்குப் பிளவையும் UK சேவைகள் பணவீக்கத்தையும்
கவனியுங்கள்.
</p><p>• இரண்டுமே கண்டிப்பானவை. தொடர்பான செய்தி பெரிதாக
மாறாததால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போது இந்த ஜோடி ஒரு
குறிப்பிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்கிறது; நிலைப்பாடும்
தொனியுமே இந்த ஏற்ற இறக்கங்களை இயக்குகின்றன.
</p><p>• இரண்டுமே மென்மையான அணுகுமுறையுடையவை. தளர்வை
நோக்கிய ஒரு பகிரப்பட்ட சூழல் மையம், குறிப்பிட்ட நாணய
இணையை மட்டும் பாதிக்காமல், பரந்த இடர் நாட்டம் மற்றும் DXY
வழியாகவே டொலர் தரப்பின் நகர்வைச் செய்ய முனைகிறது.
</p><p><b><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a></b> நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூக நிபுணரான லி சிங் கான்
குறிப்பிடுவது போல, “வட்டிவீத இடைவெளி கிட்டத்தட்ட இல்லாத
அளவுக்குக் குறையும்போது, சந்தையானது முடிவை வைத்து வர்த்தகம்
செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்வினைச் செயல்பாட்டை வைத்து
வர்த்தகம் செய்யத் தொடங்கும். </p><p>இந்த ஜோடி, எந்தக் குழு கடினமான
டிரேட்-ஓஃபை எதிர்கொள்கிறது என்பதன் அடிப்படையிலேயே
செயல்படுகிறது; எந்தக் குழு அதிக கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல.”
பணவீக்கம் தொடர்பான ஒரேயொரு எதிர்பாராத நிகழ்வு இந்த
ஜோடியை ஓர் அமர்வுக்கு அனுப்புகிறது.</p><p>ஆனால் கணிப்புகளில்
ஏற்படும் மாற்றம், வாக்குப் பிளவு அல்லது உண்மையான விளைவு
வீதப் பாதை ஆகியவை பொதுவாக நிலையாக இருக்கும். சதவீதக்
கோட்டைவிட மூன்று சரிபார்ப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை:
</p><p>• முடிவை மட்டும் படிக்காமல், முன்கணிப்புகளையும் படியுங்கள்.
சதவீதம் பெரும்பாலும் முன்கூட்டியே பெருமளவில்
மதிப்பிடப்பட்டுவிடுவதால், செப்ரம்பர் மாதப் புள்ளிவிபரமும்
உண்மையான-விளைவு வீதப் பாதையும், பிரதான செய்தியில்வரும் ஒட்டுமொத்த நகர்வைவிட டொலர் தரப்பின் போக்கைப்
பற்றி அதிகமாகக் கூறுகின்றன.
</p><p>• வாக்குப் பிளவை எடைபோடுங்கள். பாங்க் ஒஃப் இங்லண்டில்
நீடித்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும் வட்டி விகிதத்தை
உயர்த்த விரும்பும் சிறு பிரிவினர், வட்டி விகிதம் மாறாமல்
இருப்பதைக் காட்டிலும் சந்தைக்கு மிக வலுவான கொள்கை
சமிக்ஞையை வழங்குகிறது.
</p><p>• ஆற்றலைச் சேவைகளிலிருந்து பிரியுங்கள். எரிபொருள் விலை
வீழ்ச்சியால் ஏற்படும், மந்தமான சந்தை நிலவரமும், உள்நாட்டு
அழுத்தம் தணிவதும் ஒன்றல்ல. எனவே, சேவைகள் மற்றும்
ஊதியக் குறியீடுகள் இருபுறமும் இந்த நீடித்த நிலைத்தன்மைக்கான
சமிக்ஞையை அளிக்கின்றன.</p><p>
ஒரு முழுமையான கொள்கையைக் கருத்தில் கொண்டு
நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்
வர்த்தகர் அந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் தெளிவாகச் செயல்பட
முடிந்தால் மட்டுமே, அதனால் பலன் கிடைக்கும்.</p><p> அதிக தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியீட்டின்போது, காணப்பட்ட விலைக்கும்
பூர்த்தி செய்யப்பட்ட விலைக்கும் இடையிலான இடைவெளி
அதிகரிக்கக்கூடும், குறிப்பாகப் பணப்புழக்கம் விரைவாக மாறும்
சமயங்களில் இது நிகழலாம். இறுக்கமான செல்லாத நிலை அளவில்
செயல்படும் ஒரு வர்த்தகருக்கு, அந்த இடைவெளியானது, அந்த
வர்த்தகம் அதன் அசல் திட்டத்திற்கு இன்னும் பொருந்துகிறதா
என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.
</p><p>பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், <b><a href="https://www.exness.com/">Exness</a></b><a> </a>முக்கியத்துவம்
பெறுகிறது. இரண்டு மத்திய வங்கிகளின் முடிவுகளால் உருவாகும்
ஒரு GBPUSD வர்த்தகத்தில், நல்ல வர்த்தகச் சூழல்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன. </p><p>ஏனெனில், வர்த்தகர் ஒரே ஒரு நாணய ஜோடியை
மட்டும் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் டொலர் தரப்பின் போக்கு,
ஸ்ரெர்லிங் மீதான அழுத்தம், வட்டிவீத எதிர்பார்ப்புகள், உண்மையானவிளைவு வட்டிவீதங்கள் மற்றும் ஒவ்வொரு கொள்கைச்
சமிக்ஞைக்கும் சந்தையின் எதிர்வினை ஆகியவற்றை ஆராய்ந்து
வருகின்றனர். </p><p>விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக
இருந்தாலோ, செயலாக்கம் சீரற்றதாகத் தோன்றினாலோ, தளக்
கருவிகள் சிக்கலை அதிகரித்தாலோ அல்லது இடர் சூழல் தெளிவாக
இல்லாவிட்டாலோ, வர்த்தகர் உண்மையான அமைப்பிலிருந்து
பிரதிபலிக்காத தேவையற்றவற்றைப் பிரித்தறிய வேண்டியிருக்கும்.</p><p>
நல்ல சூழ்நிலைகள் இருப்பதே கொள்கை நிலைப்பாட்டைச்
சரிசெய்துவிடாது. அந்த முடிவு சூழ்நிலைத் திட்டத்தின் அடிப்படையில்
எடுக்கப்பட்டதா அல்லது நிகழ்வின் அழுத்தத்தின் காரணமாக
எடுக்கப்பட்டதா என்பதை மதிப்பாய்வு செய்வதை அவை
எளிதாக்குகின்றன.
</p><p><b><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a></b> ரெர்மினல் இங்கும் ஒரு நடைமுறைப் பங்கைச்
செயலாற்றுகிறது, ஏனெனில் GBPUSD-ஐக் கண்காணிக்கும் ஒரு
வர்த்தகர், அதே நேரத்தில் DXY, தொடர்புடைய FX ஜோடிகள், தங்கம்,
குறியீட்டெண்கள் மற்றும் வட்டிவீத உணர்திறன் கொண்ட பிற
சொத்துகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.</p><p> இதன் மல்ரி-
சார்ட்டிங் அம்சம், பல்வேறு கருவிகளை அருகருகே பார்க்க
அனுமதிப்பதால், ஒரு நகர்வு ஸ்ரெர்லிங்கிற்கு மட்டுமே உரியதா
அல்லது டொலரின் பரந்த எதிர்வினையின் ஒரு பகுதியா என்பதை
வர்த்தகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். </p><p>அதே பணிச்சூழல்
சார்ட்டிங், செயல்படுத்துதல், நிலை மேலாண்மை மற்றும் கணக்குக்
கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வலைத்தளம் மற்றும் மொபைல்
தளங்கள் வாயிலாக ஒன்றிணைத்து, சந்தை வேகமாக நகரும்போது,
​​வர்த்தகர்கள் தங்கள் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையை
வர்த்தக நடவடிக்கையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.</p><p>
இடர் கட்டுப்பாடு முக்கியமானது, ஏனெனில் ஒரே நாளில் எடுக்கப்படும்
இரண்டு மத்திய வங்கி முடிவுகள், தொடர்புடைய வர்த்தக நிலைகளில்
இலாப வரம்பு அழுத்தத்தை உருவாக்கக்கூடும். </p><p>ஒரு வர்த்தகர், தான்

ஒரு குறிப்பிட்ட GBPUSD வர்த்தக நிலையை நிர்வகிப்பதாக
நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் அந்த நிலை, டொலரின் பரந்த
வலிமை, ஸ்ரெர்லிங்கின் மறுவிலையிடல் மற்றும் யென்னின்
உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். </p><p>திறந்த
வர்த்தக நிலைகள், இலாபம், கணக்கு நிலை மற்றும் வெளிப்பாடு
ஆகியவற்றின் மீதான தெளிவான பார்வை, முடிவெடுப்பதை நிகழ்வின்
தீவிரத்தன்மையிலிருந்து வர்த்தகத்தின் தீவிரத்தன்மைக்கு மாற்ற
உதவுகிறது.
</p><p>
கான் கூறுவது போல், “லேபிள் என்பது சந்தை ஏற்கனவே விலை
நிர்ணயம் செய்த ஒரு பகுதியாகும்.” சார்புச் சான்றுகள், கணிப்புகள்,
வாக்குப் பிளவு மற்றும் சேவைகளின் நிலவரம் ஆகியவற்றில்தான்
சாதகம் உள்ளது, ஏனெனில் எந்த எதிர்வினைச் சார்பு நகர்கிறது
என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.
</p><p>சார்புச் சான்றுகள் லேபிள்களை வெல்கின்றன
ஒரு வங்கியைக் கண்டிப்பானது என்றும் மற்றொன்றை மென்மையான
போக்குடையது என்றும் கூறுவது எளிதில் கணிக்கக்கூடிய ஒன்றாகும்,
மேலும் அது பொதுவாக ஏற்கனவே விலையில் பிரதிபலிக்கப்பட்ட
ஒன்றாகவும் இருக்கிறது.</p><p> மற்றொன்றை விட எந்த எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறது என்பதே மிகவும் பயனுள்ள
கேள்வியாகும், ஏனெனில் பூச்சியத்திற்கு அருகிலுள்ள வட்டிவீத
இடைவெளி, அந்தச் சார்பு நகர்வையே GBPUSD-இன் முக்கிய உந்து
சக்தியாக ஆக்குகிறது. </p><p>அதே செப்ரம்பர் மாத முடிவு, கணிப்புகள்
மற்றும் அதைச் சுற்றியுள்ள வாக்குப் பிளவைப் பொறுத்து, அந்த
ஜோடிக்கு ஆதரவளிக்கலாம் அல்லது அதன் மீது அழுத்தத்தை
ஏற்படுத்தலாம். எனவே, தரவுகள் வெளிவருவதற்கு முன்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லேபிளைவிட, சூழல் ஒழுங்குமுறை ஒரு
வர்த்தகருக்குச் சிறந்த பலனைத் தருகிறது.


</p>]]></content>
            <updated>2026-09-11T14:51:14+00:00</updated>
        </entry>
    </feed>
