<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T17:45:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202</id>
            <summary type="text">எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனையடுத்து சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது.
</p><h2>நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d073db3d-8e5d-48c3-bff3-2ebf727477ed/26-6aa97e68032fe.webp' /></p><p>
தற்போதைக்கு குறித்த சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மிகவிரைவில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றின் இரகசியத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எப்படித் தெரிந்தது..! சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853"></link>
            <id>https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853</id>
            <summary type="text">&amp;nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><h2>22வது அரசியலமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் நீதித்துறைத் திருத்தச் சட்டமூலத்தையும் ஒன்றாகவே பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80c4ce2-2584-4464-b1e8-6463c75d53be/26-6aa96ed6c5c43.webp' /></p><p>
</p><p>இதன் மூலம் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்படுவதுடன், சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீடு மற்றும் சமநிலை முறையும் சீர்குலையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
மேலும், அரசியலமைப்பின் 3, 4, 83 மற்றும் 107 ஆகிய பிரிவுகளுடன் 22வது திருத்தத்தைப் பரிசீலிக்கும்போது, இது மக்களின் இறையாண்மையை பாதிக்குமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகலாம் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஜனநாயகத்தைச் சுருக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனக் குற்றம்சாட்டிய அவர், மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
எனவே, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அமைதியான போராட்டப் பேரணியில் இணைந்து ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க முன்வருமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் குறித்து சஜித்திடம் வாக்கு மூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்டவர்கள் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாப்பதாக தாம் முதலில் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bf080a2-54e3-49ba-8cc6-206d3f0cbcbb/26-6aa97c4983a1c.webp' /></p><p>
தமக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கூறியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடமும் வாக்கு மூலங்கள் பதியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே அறிந்திருந்தும், இராணுவப் புலனாய்வுத் துறையினர் அனைத்துத் தகவல்களையும் சதித்திட்டமாக மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
</p><p>மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையை ஓய்வு விடுதியாக மாற்றிக் கொண்டு ஓய்வெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த வழக்கு எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T17:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வெளியானது அவசர தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba170f6-14b3-4be5-9889-0abd3c681f31/26-6aa97b164cdd0.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவுக்கு வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் அதிரடி கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106</id>
            <summary type="text">தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள இளைஞர் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
கஞ்சாவை பயன்படுத்தி போதைப்பொருள் தயாரிப்பு</h2><p>
குறித்த இலங்கை இளைஞர்கள் குழு, கஞ்சாவை பயன்படுத்தி ஹஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eca14c0-d165-4e0d-93e5-01651f627e9b/26-6aa977f698c3e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தென்கொரியப் பொலிஸார் இளைஞர்கள் குழுவைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஹஷிஷ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டுவெடிப்பு: விசாரணையில் சிக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955"></link>
            <id>https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் பொலிஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை, தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>தெஹிவளை குண்டுத்தாக்குதல்</h2><p>இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்களின் தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.</p><p>தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வீடும், தாக்குதலுக்கு உள்ளான வீடும் ஒரே ஒரு சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்ததால், தவறுதலாக இந்த குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e4b3ef-bd2a-4719-bd5a-257825de39e8/26-6aa975591622a.webp' /></p><p>பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கொஸ் மல்லி” என்ற தனது உறவினர் மற்றும் போதிய வத்த பகுதியைச் சேர்ந்த “அவிஷ்கா” ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p>தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் கேரேஜ் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>விசாரணையில் வெளிவந்த இரகசியம்</h2><p> 
வாகனத்தைக் கேரேஜில் ஒப்படைத்த நபர் மற்றும் கேரேஜ் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
செப்டம்பர் 10 இரவு 9 மணியளவில், களுபோவில சரணங்கர வீதியைச் சேர்ந்த ஹிருத்ம ஷாஷ்மிக என்ற “ஹிரு மல்லி” மற்றும் தாக்குதலை நடத்திய மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்ற “மது” ஆகியோர் அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c30a4f8-6b98-405b-98b7-539292286b0d/26-6aa97559bff30.webp' /></p><p> </p><p>
மேலும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கண்டவல வீதியில் “ஜதுங்க பிரியந்த” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மது என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. </p><p>
தற்போது தாக்குதலை நடத்திய நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். 
இவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண் - அநுர அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262</id>
            <summary type="text">நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p> 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p> 

“<i><b>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</b></i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2><b>முதலாவது தமிழ்&nbsp;பெண்</b></h2><p>

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம், நோர்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தமிழ் பெண்ணாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76f8fff-057d-4be3-8f5d-3976bcf16d81/26-6aa9630584a9a.webp' /></p><p>கடந்த 11ஆம் திகதி தனது அமைச்சினை பொறுப்பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கைகள், அத்துடன் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
</p><p>
1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

பிரதான அமைச்சு பதவி</b></h3><p>தனது 19 வயது முதல் தொழிலாளர் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்த கம்சி, சமகாலத்தில் பிரதான அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ce473e-195f-4d51-8a97-825bb5037c46/26-6aa96306382ba.webp' /></p><p>ஒஸ்லோவின் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் ஒஸ்லோவின் துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர் என படிப்படியாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். </p><p>

இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் கம்சி குணரட்னம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-09-15T15:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் வேலையை தொடரும் நாமல்! பிள்ளையான் - கருணாவைத் தொடர்ந்து அர்ச்சுனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450"></link>
            <id>https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450</id>
            <summary type="text">
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச மாற்றியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்றையதினம்(15.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தடை செய்யப்பட்ட அமைப்பை பிரசாரம் செய்வது அவருக்கே நல்லதல்ல.</p><h2>அர்ச்சுனாவின் உறுதி மொழி&nbsp;</h2><p> 

ஏனெனில், தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் சார்பாக அவர் நாடாளுமன்றத்தில் செயற்பட மாட்டேன் என்றும், அரசுக்கு எதிராக சதி செய்யமாட்டேன் என்றும்&nbsp; உறுதி செய்திருக்கின்றார்.</p><p>

அதையும் மீறி, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று தொடர்பில் அவர் பிரசாரம் செய்வாரெனில் அது அவருக்குத்தான் நல்லதல்ல.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, அந்த மேடையில் இருந்தவன் என்ற வகையில், அர்ச்சுனா இராமநாதனின் அன்றைய முழு உரையிலும் நான் கண்டுகொண்ட விடயம், வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அவர் ஒரு முயற்சி செய்து வருகின்றார் என்பது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4d5294-e75e-4f1b-b4db-6fc0395549d2/26-6aa9046a5b4fc.webp' /></p><p> 

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சகோதரர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக, அதற்குரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதற்காக அர்ச்சுனா இராமநாதன் முயற்சி செய்து வருகின்றார்.</p><p>

இந்த நாட்டைப் பிரிக்க எண்ணுபவர்களுக்கு இந்த நடவடிக்கை கண்ணை குத்துகிறது போலும்.</p><p>

ஆனால், அர்ச்சுனாவின் கடந்த கால வரலாற்றையும், அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த விதத்தினையும் நோக்கும் போது, அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழும்.
</p><p>
நிச்சயமாக அவருடைய இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம், நாமல் ராஜபக்ச தான். வேறு யாரும் இல்லை.
அவர்தான் அர்ச்சுனாவை மாற்றியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89794755-dd61-4190-989e-d18612429dbe/26-6aa9046b230e7.webp' /></p><p>

அதேபோல, கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியைக் காட்டியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
ஆனால் ஒருபோதும் கருணாவோ, பிள்ளையானோ, ஆட்சி மாற்றத்தைக் கோரவோ, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றோ கோரியதில்லை.
</p><p>
இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. அந்த நிலையை எற்படுத்தியது நிச்சயமாக நாமல் ராஜபக்சதான். இது ஒரு பாரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-15T15:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரியம்மன் ஆலயத்திற்காக விறகு தேட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - 5 நாட்களுக்கு பின் வந்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736"></link>
            <id>https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக 41 இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.
</p><h2>
41 பேர் கைது</h2><p>
இதன்போது, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் 41 பேரும் கைது செய்யப்பட்டனர். 

அத்துடன், அவர்கள் ஏற்றி சென்ற பெட்டியுடனான இரண்டு உழவு
இயந்திரங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7831240b-6f3e-47b1-aa89-a4bb93132e3b/26-6aa966c369de0.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட அனைவரும் கந்தளாய் நீதவான் நீதிமன்றினால் சொந்த பிணையில்
கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றயதினம் (15/09/2026) குறித்த
வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் நீதவான் மன்றினால்
உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டது.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி நிருஷ்
ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T15:40:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பல்கலைக்கழகங்களில் கடுமையான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-shortage-of-lecturers-in-state-universities-1789484587"></link>
            <id>https://tamilwin.com/article/severe-shortage-of-lecturers-in-state-universities-1789484587</id>
            <summary type="text">இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் பல்கலைக்கழக பாடநெறிகளுக்கான மாணவர்களை சேர்ப்பதிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதனால் 2025 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதிலும் இந்தப் பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>அதிக வரி</h2><p>
</p><p>
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் பேராசிரியர் அருண வன்னிநாயக்க ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்பொது மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறைந்த சம்பளம், அதிக வரி மற்றும் குறைந்த சலுகைகள் காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் வெளிநாடுகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20e5676c-91d3-4f4f-91aa-0aec7cf4c983/26-6aa961fda1c5e.webp' /></p><p>
</p><p>
இதனால் ஓய்வு பெறும் அல்லது பணியை விட்டு விலகும் விரிவுரையாளர்களின் இடங்களை நிரப்புவதிலும் பல்கலைக்கழகங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தீர்க்க கல்வியாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 50 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும், வரிச்சுமையை குறைக்க வேண்டும் மற்றும் ஏனைய சலுகைகளை விரிவுப்படுத்த வேண்டும்.</p><h2>பல்கலைக்கழக முறைமை</h2><p>
</p><p>
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டது.
</p><p>
இதேவேளை, புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், முதலில் தற்போது உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c76619e5-d481-402c-bb76-f7c6abeed73d/26-6aa961fe57ad5.webp' /></p><p>

மேலும் விரிவுரையாளர் நியமனம் தொடர்பிலான இழுப்பறி நிலை தொடருமானால் அரச பல்கலைக்கழக முறைமை பாதிக்கப்படலாம் என்றும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T15:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ட்ரோன் தாக்குதல்: எாிபொருள் நிலையங்கள் இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937"></link>
            <id>https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937</id>
            <summary type="text">உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது.</p><p>அத்தோடு, குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தலைநகர் மேயர் விட்டாலி
க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இரு நாடுகளும் ஒன்றின் சக்திவள மையங்கள் மீது மற்றையது தாக்குதல்
நடத்துவதில்லை என உடன்பாடு கண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
அறிவித்த அடுத்த நாளே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அண்மைக்காலமாக உக்ரேனின் சக்திவள உள்கட்டமைப்புகளை இலக்குவைத்து வரும் ரஷ்யா,
தற்போது எாிபொருள் நிலையங்கள் மீதும் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, உக்ரேனும் பதிலடித் தாக்குதலாக ரஷ்யாவின் தாகன்ரொக் பகுதியிலுள்ள
மின்-வணிகக் களஞ்சியசாலை மற்றும் சமாரா பிராந்தியத்திலுள்ள தொழிற்துறை வளாகம்
என்பனவற்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a2f84e-5c99-4afc-91c5-f685d7c58ac9/26-6aa95c3ae7988.webp' /></p><p>

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளான போலந்து
மற்றும் லிதுவேனியா ஆகியன தமது வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் போர்
விமானங்களை அவசரமாக இயக்கின.
</p><p>
இதில் லிதுவேனியாவில் வான்வெளியை அண்மித்த ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானம்
சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116"></link>
            <id>https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.

குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.</p><p>

குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bd02c08-5ca2-4084-8777-a3bc92238ec5/26-6aa95356cd002.webp' /></p><p>&nbsp; வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில்
சந்தி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால்
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>

தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:17:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226"></link>
            <id>https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226</id>
            <summary type="text">
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்</b></h2><p>இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9f5234-11e3-44de-85b7-b7265395a1ef/26-6aa950c131178.webp' /></p><p>கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><h3><b>

பல கொலை குற்றச்சாட்டுக்கள்</b></h3><p>பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ce1d0-9da5-4f2f-9839-8d9747d7e295/26-6aa950c1e2283.webp' /></p><p>சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T14:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-foreign-tourists-has-crossed-sl-1789477212"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-foreign-tourists-has-crossed-sl-1789477212</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>
</p><p>
 

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1995a9-1f75-4b7e-9578-9b10c3d5b40d/26-6aa9458938bb6.webp' /></p><p>
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T13:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை- அளுத்தோயாவில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-shortage-of-drinking-water-aluthoya-1789474730"></link>
            <id>https://tamilwin.com/article/severe-shortage-of-drinking-water-aluthoya-1789474730</id>
            <summary type="text">திருகோணமலை- அளுத்தோயா கிராமப்
பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் அன்றாட
வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- அளுத்தோயா கிராமப்
பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் அன்றாட
வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் எதிர்கொள்ளும் இந்த அத்தியாவசியக் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்கும்
வகையில், ஹிங்குராக்கொட பிரதேச சபை மற்றும் ஹிங்குராக்கொட பிரதேச செயலகம்
இணைந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு 16,000 லீற்றர்
குடிநீரை இலவசமாக விநியோகித்து வருகின்றன.
</p><p>
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், "கிராமத்திலுள்ள கிணறுகள் அனைத்தும் முற்றிலும் வற்றிப்போயுள்ளதால்,
குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் ஏனைய அன்றாடத் தேவைகளுக்கும்
தண்ணீரின்றி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p><h2>கோரிக்கை&nbsp;</h2><p> </p><p>தற்போது பிரதேச
செயலகத்தின் மூலம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போசர் (Bowser)
வண்டிகள் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரையே மக்கள் நம்பியிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வறட்சியின் தாக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள சிறுதானியப் பயிர்கள்,
பழமரங்கள் மற்றும் விவசாயச் செய்கைகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2861d247-f835-41d9-a4a1-803b8b437440/26-6aa93d2478b12.webp' /></p><p> </p><p>இதனால்
கிராமவாசிகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அழிவடைந்த
மரங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளை மீண்டும் சீரமைக்க 5 முதல் 6 ஆண்டுகள் வரை
ஆகும்."
</p><p>
எனவே, விவசாயத்துறை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு
விஜயம் செய்து நிலமையை நேரில் ஆய்வு செய்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
உரிய இழப்பீடு/நிவாரணங்களையும், குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத்
தீர்வையும் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள்
உருக்கமான கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவைகளைப் பெறுவதில் 64.7% பேர் அதிருப்தி - ஆய்வில் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-service-in-trincomalee-district-1789474639"></link>
            <id>https://tamilwin.com/article/government-service-in-trincomalee-district-1789474639</id>
            <summary type="text">அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவிடப்படும் நேரம் தொடர்பாக
திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவிடப்படும் நேரம் தொடர்பாக
திருகோணமலை மாவட்டத்தில் 64.7 சதவீதமான மக்கள் அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளதாக மாற்றுக் கொள்கை நிலையம் (Alternative Policy Centre)
மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறும்போது பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி
அந்தச் சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் நோக்கில்
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையே
சேவைகளைப் பெறுவதில் நிலவும் அதிருப்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக
இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p><h2>நடத்தப்பட்டுள்ள ஆய்வு</h2><p>
</p><p>
மாற்றுக் கொள்கை நிலையத்தின் IFF நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட
“சாமானியனுக்கு மீண்டும்” என்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு
நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், சேருவில மற்றும் பதவிய
சிறீபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 530 பேரை உள்ளடக்கியதாக இந்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச செயலக அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட
பொதுமக்கள் அதிகளவில் சேவைகளைப் பெறும் அரச நிறுவனங்கள் ஆய்வுக்காகத்
தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் பணியாற்றும் அரச அதிகாரிகள், சிவில்
செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட
நேர்காணல்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><p> 2026 மார்ச் 1 முதல் ஜூன் 1
வரையிலான காலப்பகுதியில் முறையான பயிற்சி பெற்ற 23 ஆய்வாளர்களைப் பயன்படுத்தி
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834fcf54-c2f8-440c-9b4e-36891f393b76/26-6aa93e2fd10b9.webp' /></p><p>

சேவைகளைப் பெறுவதில் காணப்படும் சிரமங்கள், சேவையைப் பெறும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள், சேவையைப் பெறுவதற்காக செலவிட வேண்டிய நேரம் தொடர்பான திருப்தி,
சேவை வழங்கும்போது வித்தியாசமாக நடத்தப்படுகிறோமா என்பது, தமக்குத் தெரிந்த
மொழியில் சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும்
சிரமங்கள் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மாற்று
வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆய்வின் மூலம்
ஆராயப்பட்டுள்ளன.</p><h2>நடைமுறை ரீதியான தடைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறும்போது எதிர்கொள்ளும் நடைமுறை
ரீதியான தடைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

64.3% பேர் சேவைகளைப் பெறுவதில் சிரமம்

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலக
அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெறும்போது பல்வேறு சிரமங்களை
எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மொத்த பதிலளித்தவர்களில் 64.3 சதவீதமானோர் அரச சேவைகளைப் பெறுவது சிரமமாக
இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், 30.3 சதவீதமானோர் மாத்திரமே அந்தச்
செயற்பாடு இலகுவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற பலரும் அங்கு சேவை
வழங்கும் விதம் தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p> குறிப்பாக
வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறை, அக்கறையற்ற அணுகுமுறை
உள்ளிட்ட விடயங்கள் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

திருகோணமலை பெரிய வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக
அனுமதிக்கப்பட்ட 27 வயதான எஸ். திலக்ஷிகா, வைத்தியர்களின் மற்றும்
சம்பந்தப்பட்ட பிரிவின் பொறுப்பான வைத்திய அதிகாரியின் கவனக்குறைவு காரணமாக
தனது முதலாவது குழந்தையை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
சேவைகளைப் பெறுவதற்காக பலமுறை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் மேற்குறிப்பிட்ட அரச
நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதற்கு செலவிட வேண்டிய நேரம் தொடர்பாக
அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர், சேவைகளைப்
பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஒரே சேவையைப்
பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பலமுறை செல்ல வேண்டியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின்
எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிண்ணியா இலக்கம் 03, ஹிஜ்ரா வீதி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஹாப் மொஹமட்
என்பவர், கிண்ணியா பெரியவெளி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுப்
பாதையை அகற்றுவதற்கு கிண்ணியா பிரதேச செயலக அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை
எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f80bbcf3-d06b-402e-83db-21fdf88bac75/26-6aa93e2f1e208.webp' /></p><h2>சட்டவிரோத நடவடிக்கை</h2><p>
</p><p>
“எனது வயல் நிலத்தின் ஊடாக மணல் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் மற்றும்
டிப்பர் வாகனங்கள் உடனடியாகச் செல்வதை நிறுத்துமாறு கிண்ணியா பிரதேச செயலக
அலுவலகத்தில் பல சந்தர்ப்பங்களில் கூறினேன். ஆனால் அது தொடர்பாக எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை
செய்வதைவிட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிப்பதாகத்
தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணியாளர் பற்றாக்குறையும் மொழிப் பிரச்சினையும்

பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறச் செல்லும்போது எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய
பிரச்சினையாக பணியாளர் பற்றாக்குறை இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாமை, போதுமான எண்ணிக்கையில்
பணியாளர்கள் இல்லாமை மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகள் பொதுமக்களுக்கு
கடுமையான தடைகளாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதனுடன் தொடர்புடையதாக, உறவினர்களின் செல்வாக்கு மற்றும் போதுமான பௌதிக
வளங்கள் இல்லாமை ஆகியவையும் முக்கியமான பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூதூர் வெல்கட பகுதியைச் சேர்ந்த மங்களகாந்தி என்ற பெண் தனது கிராமம் தொடர்பான
பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.</p><p>

“யுத்த காலத்தில் எங்களுடைய கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் குடியேறியபோது எங்களுடைய பாரம்பரிய காணிகள் தொடர்பாக பல
பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய கிராமம் மற்றும் பாரம்பரிய காணிகள் தொடர்பாக
அரச அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்துள்ளோம். ஆனால் எங்களுடைய பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வு கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
42.2% பேர் வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிப்பு

ஆய்வில் பங்கேற்றவர்களில் 42.2 சதவீதமானோர், இன, மத, பாலினம், சமூக நிலை
மற்றும் ஏனைய அடையாளங்களின் அடிப்படையில் தாங்கள் வேறுபட்ட முறையில்
நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேறுபட்ட முறையில்
நடத்தப்பட்டதாகக் கூறியவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக
இருந்துள்ளது.
</p><p>
வெள்ளாமலை, கருமலுத்தட்டு பகுதியைச் சேர்ந்த அஹமட் ரஹீம் சன்ரூஸ் என்பவர் தனது
காணி தொடர்பான பிரச்சினையை எடுத்துரைத்துள்ளார்.</p><h2>மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை</h2><p>
</p><p>
“திருகோணமலை வெள்ளம்வெளி பகுதியில் கடலோரமாக அமைந்துள்ள காணி எங்களுடைய
பாரம்பரிய காணியாகும். அதற்கான பழைய உரிமை ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. ஆனால்
இராணுவத்தினர் அந்தக் காணியைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்தக்
காணிக்குள் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நாங்கள்
முஸ்லிம்கள் என்பதால்தான் இவ்வாறு நடத்தப்படுகிறோம் என நினைக்கிறோம்” என அவர்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/371a08ad-b9b4-431e-99f8-9448c7de13fa/26-6aa93e2e672f6.webp' /></p><p>
</p><p>
மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை

சேவைகளைப் பெறுவதற்கான அணுகல் மற்றும் காத்திருக்க வேண்டிய நேரம் தொடர்பாக
பொதுமக்கள் பரவலான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாலும், சேவை வழங்கலின் சில
குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பில் திருப்தி காணப்படுவதாகவும் ஆய்வில்
தெரியவந்துள்ளது.

குறிப்பாக மொழி தொடர்பான சேவைகள் குறித்து சாதகமான கருத்துக்கள் அதிகளவில்
பதிவாகியுள்ளன.
</p><p>
ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவீதமானோர் தங்களுக்கு தேவையான சேவைகளை தாம்
விரும்பும் மொழியில் பெற்றுக்கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, இருமொழி பேசக்கூடிய அதிகாரிகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் சில அரச
நிறுவனங்களில் கிடைப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த மகிந்த சேனாரத்ன என்பவர், “தற்போது பல
வைத்தியசாலைகளிலும் பிரதேச செயலக அலுவலகங்களிலும் எங்கள் மொழியில்
பணியாற்றக்கூடிய பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அதேபோன்று ஆவணங்கள் மற்றும் கடிதங்களுக்கு இருமொழிச் சேவையும்
வழங்கப்படுகிறது. பொலிஸ் நிலையங்களிலும் முன்பைவிட இந்த வசதி மேம்பட்டுள்ளது.
எனவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
முஸ்லிம் சமூகத்தினரின் அதிருப்தி தொடர்பில் அரசின் கவனம் அவசியம்

திருகோணமலை மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய விடயம்
என்னவெனில், அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதில் முஸ்லிம்
சமூகத்தினரிடையே அதிருப்தி நிலை ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாகும்.
</p><p>
திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம் மக்கள்
தொகை 46.5 சதவீதமாக உள்ளது.

இத்தகைய மக்கள் தொகை விகிதத்தைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் அரச சேவைகளைப்
பெறும்போது அதிருப்தியடையக் காரணமாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம்
உரிய கவனம் செலுத்த வேண்டியதுடன், மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களின் சேவை
வழங்கும் முழு நடைமுறையும் மேலும் முறையானதாகவும் திறமையானதாகவும் மாற்றப்பட
வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-reduce-number-g-c-e-ordinary-level-subjects-1789474838"></link>
            <id>https://tamilwin.com/article/plan-reduce-number-g-c-e-ordinary-level-subjects-1789474838</id>
            <summary type="text">எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>2027ஆம் ஆண்டு முதல்</h2><p>
புதிய பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான புதிய கற்றல் தொகுதிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011ac2fe-5640-4969-8963-6b058247902c/26-6aa93e15af2cf.webp' /></p><p>
</p><p>
2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><h2>புதிய கல்வி மறுசீரமைப்பு</h2><p>
</p><p>
இதன் ஆரம்பகட்டமாக தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் கற்றல் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486636d2-d4b5-492a-93ba-b07dc31ff13c/26-6aa93e1507845.webp' /></p><p>
</p><p>
புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
சிறுவயதுக் கல்வியை முறையான கட்டமைப்புக்குள் கொண்டு வரும் வகையில் தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் கீழ் முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டத் தயாரிப்பு, ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:46:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா இராமநாதன் எம்பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085"></link>
            <id>https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த உத்தரவு, பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கிடைத்த முறைப்பாடு</h2><p>

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32aee57f-0761-4f30-b632-821fceb40450/26-6aa8fa06ea4cf.webp' /></p><p>
</p><p>
செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியிருந்தார்.</p><p>

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான அரசியல் ஒப்பீட்டை முன்வைத்த அவர், தன்னை விடுதலைப் புலிகைளை சார்ந்தவர் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி இந்த விதியை மீற முடியாது! செப்டெம்பர் 20 முதல் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357"></link>
            <id>https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
</p><p>
வாகன உற்பத்தியாளர்களால் ஆசன பட்டி பொருத்தப்படாத ஆசனங்களுக்கு அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்யும் வகையில் வெளியிடப்பட்ட 2026 ஜூன் 17ஆம் திகதி இலக்கம் 2493/19 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.</p><h2>&nbsp;அதிவேக நெடுஞ்சாலை</h2><p>
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1717/14 கொண்ட மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, 2025 செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2455/29 கொண்ட வர்த்தமானி மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74e6a36f-5770-40f2-a746-635f59140777/26-6aa935da27088.webp' /></p><p>
இதனைத் தொடர்ந்து, ஆசன பட்டிகளை பொருத்துவதற்காக 3 மாத கால சலுகை வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த சலுகைக் காலம் 2025 டிசம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.</p><p>

எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இந்த சலுகைக் காலம் மீண்டும் 2026 மார்ச் 20ஆம் திகதி முதல் ஜூன் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்
மசகு எண்ணெய்யின் விலை இரு சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதன்மூலம், பிரெண்ட் ரகக் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை. 108.18 அமெரிக்க
டொலராக உயர்ந்துள்ளது.</p><h2>விநியோகத் தடை</h2><p>
</p><p>
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களால்
முன்னெடுக்கப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த
விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தாமல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதற்குச் சவூதி
அரேபியா பயன்படுத்தி வந்த பிரதான பாதையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a14193-a389-4458-ba4d-8b263cb1f97a/26-6aa9354407bfc.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் காரணமாகச் சர்வதேசச் சந்தைக்கான
சவூதியின் மசகு எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதப் பற்றாக்குறை ஏற்படும்
அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>பாதையைச் சீரமைக்கும் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
தற்போதைய சூழ்நிலையில், இந்தப் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடையச் சில
வாரங்கள் வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தும் கணிசமாகக்
குறைந்துள்ளதால், மத்திய கிழக்கில் நிலவும் இந்த தீவிரச் சூழல் தொடருமாயின்,
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய் 120 முதல்
130 டொலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதப்படுத்தப்பட்ட டின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-in-canned-fish-imports-1789472802"></link>
            <id>https://tamilwin.com/article/decline-in-canned-fish-imports-1789472802</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் பதப்படுத்தப்பட்ட டின் மீன் இறக்குமதி 99.8% அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் நடப்பு 2026ம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் பதப்படுத்தப்பட்ட டின் மீன் இறக்குமதி 99.8% அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அதன் பிரகாரம் நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் வெறும் 5.4 மெட்ரிக் தொன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டிற்கான பதப்படுத்தப்பட்ட மீன் இறக்குமதி 99.8% குறைந்துள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><h2>வீழ்ச்சி</h2><p>
கடந்த ஆண்டுகளின் புள்ளிவிபரங்களை நோக்கும்போது 2021இல் 8,758.1 மெட்ரிக் தொன்களும், 2022இல் 434.0 மெட்ரிக் தொன்களும், 2023இல் 7,904.4 மெட்ரிக் தொன்களும், 2024இல் 4,476.0 மெட்ரிக் தொன்களும் மற்றும் 2025இல் 601.1 மெட்ரிக் தொன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea070d55-f74f-460f-b52f-345a5ee23a11/26-6aa93312d578d.webp' /></p><p>

2025இல் தொடங்கிய இறக்குமதிகளின் சரிவுப் போக்கு தொடர்ந்ததுடன், 2026 ஜனவரி - மே மாதங்களில் அது 5.4 மெட்ரிக் தொன்களாகக் கடுமையாகச் சரிந்தது.
</p><p>
இறக்குமதி செய்யப்படும் அளவுகளில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட மீன்களின் அந்நியச் செலாவணிச் செலவும் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T11:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mayilathamadu-and-madhavanai-livestock-farmers-1789471297"></link>
            <id>https://tamilwin.com/article/mayilathamadu-and-madhavanai-livestock-farmers-1789471297</id>
            <summary type="text">மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை
வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின்
மூன்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை
வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின்
மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் (15.09.2026) சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடு, மாதவனை கால்நடை
பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக
முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படாத
நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும்
தொடர்ச்சியாக தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த
நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9905e7d-3d74-4689-9f28-23ed2a496d2d/26-6aa92f9cf1b0d.webp' /></p><p>
இந்த நிலையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு பூர்த்தி நாளையொட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் பண்ணையாளர்களினால்
முன்னெடுக்கப்பட்டது.</p><h2>போராட்டம்</h2><p>
இதன்போது மகாவலியே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், கால்நடைகளின் நிலத்தை
அபகரிக்காதே, கால்நடைகளின் மேய்ச்சல் நில அபகரிப்பினை தடுத்து
நிறுத்து, தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா? சட்டத்தினை சமமாக, ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன், மகாவலியே மௌனம்
காப்பது ஏன்? போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.</p><p>இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது துயரங்களை வெளிப்படுத்தும் வகையில்
அமைக்கப்பட்ட தமது வாடிகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் எரித்து மேற்கொள்ளும்
அடாவடித்தனங்களை குறிக்கும்வ கையில் அமைக்கப்பட்ட குடிசையொன்றை எரித்து
போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1ea38ee-1f2f-41eb-8c12-21623877538a/26-6aa92f9ddb662.webp' /></p><p>
</p><p>அதேபோன்று தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களை குறிக்கும் 1095
நாளைக்குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீப்பந்ததினை எரித்து போராட்டத்தினை
முன்னெடுத்ததுடன் ஒரு பண்ணையாளர் பாலை தலையில் ஊற்றி போராட்டத்தினை
முன்னெடுத்தார்.
</p><p>இதன்போது மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் மூன்று
ஆண்டுகளைக் கடந்து, 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும்,
தங்களுக்கான நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த மே மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது அளித்த
வாக்குறுதிகள் மற்றும் உத்தரவுகள் இன்னும் அதிகாரிகளால்
நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. </p><p>கடந்த 12ஆம் மற்றும்
13ஆம் திகதிகளில் மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாது போயுள்ள தோடு, உணவின்றி
மாடுகள் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93653a65-efbb-4b0a-8257-4ae4899c0cd0/26-6aa92f9ec5c8e.webp' /></p><h2>பொலிஸில் முறைப்பாடு</h2><p>
பண்ணையாளர்களின் வாடிகளுக்குள் சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள்
பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து
பொலிஸில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்
சுமத்துகின்றனர்.</p><p>சட்டம் இருவேறாகப் பிரயோகிக்கப்படுகிறது: தமிழ் மக்கள் அல்லது பண்ணையாளர்கள்
சிறு தவறு செய்தாலும் வனவளத் திணைக்களம் மூலம் உடனடியாகக் கைது செய்யப்படும்
நிலையில், மேய்ச்சல் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe9f8b6-f924-4373-8e3a-febb9044c71a/26-6aa92f9f9bb6d.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, இன்னும் 5 நாட்களுக்குள் சட்டவிரோத
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத்
தவறினால், தங்களது அறவழிப் போராட்டத்தைச் "சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக"
மாற்றப்போவதாகப் பண்ணையாளர்கள் பகிரங்க எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால்
பண்ணையாளர்கள் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமையே உருவாகும் என்றும்,
இதற்கு அரசாங்கமும் மகாவலி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும்
இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
இந்தபோராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களான
எஸ்.சிவயோகநாதன்,அருட்தந்தை லுக்காஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான புலனாய்வுத்துறையினர்களும்
குவிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c298c62-5e85-4bd4-a3e0-6d3a3c8e4f42/26-6aa92fa0742c0.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T11:47:32+00:00</updated>
        </entry>
    </feed>
