<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T05:39:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-drowns-while-fishing-1784525095"></link>
            <id>https://tamilwin.com/article/man-drowns-while-fishing-1784525095</id>
            <summary type="text">அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர்
நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர்
நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
அந்தர குளம் பகுதியில் உள்ள கற்குவியல்களுக்கு நடுவில் நீர் நிரம்பியிருந்த
பகுதியில், நேற்று(19.07.2026) மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> நீண்ட
நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத்
தேடிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3071361-23b8-40e6-867f-02f292a2a0ef/26-6a5db3ef390ab.webp' /></p><p> இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகப்
பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>சம்பவ இடத்துக்கு விரைந்த நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p> சடலம்
மீட்கப்பட்டபோது, அது மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்தது என்று
விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் அந்தர குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபராவார். இந்தச் சம்பவம் குறித்து நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T05:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-s-death-1784515899"></link>
            <id>https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-s-death-1784515899</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந்தித்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.டி.விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், </p><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன என்னுடைய மிக நெருங்கிய நண்பர். குறிப்பாக நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாகவும், நற்குணங்களுடன், அமைதியாகவும், சாந்தமானகவும் பணியாற்றினார்.</p><h2>
</h2><p></p><h2>சந்தித்து கலந்துரையாடிய விடயஙகள்</h2><p>அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் சில சமயங்களில் அரசியல் தலைவர்கள் பிளவுபட்டு பல்வேறு விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கொண்டு செல்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/487ced03-a716-4a0e-ab95-a4c06c157ca9/26-6a5d8d3d572c7.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>ஆனால், அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் யாரையும் கோபத்துக்கு உள்ளாக்கவில்லை என்பதோடு யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. அரகலய போராட்டக் காலத்தில் கூட மிக திறமையாக செயற்பட்டவர்.
</p><p>
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சுமார் இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் எனது மற்றொரு நண்பரான ரங்க கலன்சூரிய மற்றும் சில நண்பர்களுடன் சந்தித்து இரண்டு, மூன்று மணிநேரம் பல விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தோம். </p><p>பேச்சுவார்த்தை முடிந்து நான் போகும் போது, "சேர், நான் உங்களுடைய வீட்டுப் பக்கமும் வந்து போக வேண்டும், சும்மா ஒரு கோப்பி குடிப்போம்" என்று கூறினார்.

எனவே, அவருடைய இந்த மறைவு, இவ்வாறு நடக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.</p><h2>காரணம் என்ன </h2><p> </p><p>இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவரைச் சந்தித்து பல மணிநேரம் ஒன்றாக இருந்ததால், இந்தச் செய்தியைக் கேட்டதும் எனது மனதை மிக ஆழமாகப் பாதித்ததோடு பெரும் மன வேதனையைத் தந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d050d781-16e5-4811-8ed8-a9d7a12aaf5b/26-6a5dae899150d.webp' /></p><p>
எனவே, இந்தச் சம்பவம் எவ்வாறு நடந்தது, என்ன காரணம் என்று இன்னும் சொல்ல முடியாது. விசாரணைகளின் மூலமே அது தெரியவரும். </p><p>இவரைப் போன்ற முக்கியமான மனிதர்கள் அரச சேவைக்கும், பொலிஸ் துறைக்கும், ஏனைய சேவைகளுக்கும் மிகவும் முன்மாதிரியான ஒருவராவார். </p><p>
அவருடைய ஓய்வுக் காலத்தில் கூட அவரால் பணியாற்ற முடியும். 63 வயது என்பது ஒருவரின் சிறந்த அறிவும், முதிர்ச்சியும் அதிகரிக்கும் காலம், நன்றாகப் பணியாற்றக்கூடிய காலம். </p><p>ஆனால், அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் அவர் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

எனவே தனிப்பட்ட முறையிலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3dNaOe5-MUg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டையின் விலை இன்று முதல் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-today-1784523407"></link>
            <id>https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-today-1784523407</id>
            <summary type="text">முட்டையின் விலையை இன்று(20.07.2026) முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குருநாகல், குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முட்டையின் விலையை இன்று(20.07.2026) முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f440cf7-faae-46ee-8485-4ddae2031e9a/26-6a5dae123a5e6.webp' /></p><p>இதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T05:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம் - உலக சந்தையில் உச்சம்தொட்ட எண்ணெய் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-hit-record-highs-world-market-1784521588"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-hit-record-highs-world-market-1784521588</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.அதன்படி ஆசிய சந்தையில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.</p><p>அதன்படி ஆசிய சந்தையில் வர்த்தக நடவடிக்கையின் ஆரம்பத்தில் இன்று (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.</p><p>

அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 2.39% அதிகரித்து, தற்போது 84.46 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம்</h2><p>இதற்கமைய, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.75 அமெரிக்க டொலர் அதிகரித்து 90.85 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4903dada-e3f3-4539-92ac-5c71f8567afb/26-6a5da8ae3aea6.webp' /></p><p>இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.56 அமெரிக்க டொலர் அதிகரித்து 85.05 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மோதல்களால் எரிபொருள் விநியோகம் தடைபடக்கூடும் என்ற அபாயமே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகின்றது.</p><h2>வான்வழித்தாக்குதல்</h2><p>
மோதல்கள் தொடர்ந்து அதிகரித்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயரும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.</p><p>இதேவேளை, தொடர்ச்சியாக 9 ஆவது இரவாக ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பொலிஸார் அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-summons-journalist-in-vavuniya-1784519393"></link>
            <id>https://tamilwin.com/article/police-summons-journalist-in-vavuniya-1784519393</id>
            <summary type="text">வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரினால்&amp;nbsp; மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன்
செய்தி வெளியிட்ட ஊடகவியலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரினால்&nbsp; மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன்
செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை நெளுக்குளம் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பிரதேச சபையினால் நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றமை தொடர்பாக தொடர்ச்சியாக
வெளிக்கொண்டு வந்ததற்காக, தவிசாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின்
அடிப்படையில், 21.07.2026ஆம் திகதி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்
முன்னிலையாகுமாறு ஊடகவியலாளர் ஒருவருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>பொலிஸார் மூலம் நடவடிக்கை</h2><p>
பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, உண்மைகளை ஆவணங்களுடன்
வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக, தவிசாளர்
பொலிஸார் மூலம் நடவடிக்கை எடுக்க முயல்வது ஊடகங்களின் சுதந்திரத்தைப்
பறிக்கும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/938779cb-7c87-4f96-bb38-33e50243120c/26-6a5da5a8bf80a.webp' /></p><p>
</p><p>
தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக உண்மையை உரக்கச் சொல்லும்
ஊடகவியலாளர்களின் குரலை ஒடுக்க நினைக்கும் இச்செயல் வவுனியா அரசியல் மற்றும்
சமூக வட்டாரங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் சபை நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது
என்பது குறித்து ஊடகவியலாளர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட உத்தியோகபூர்வ
ஆவணங்களின்படி,&nbsp;</p><p>1. பகிரங்க டெண்டர் இன்றி ஆயுட்கால சிசிடிவி (CCTV) ஒப்பந்தம்!
</p><p>
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் எவ்வித பகிரங்க பத்திரிகை விளம்பரங்களோ
அல்லது திறந்த கேள்வி கோரல்களோ (Tenders) இன்றி, முற்றிலும் வாடகை
அடிப்படையில் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
</p><p>
ஒப்பந்த விபரம்: சபைக்குட்பட்ட முக்கிய 25 இடங்களில், ஒரு இடத்திற்கு தலா
இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம் 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
</p><p>
ஆயுட்கால ஒப்பந்தம்: இத்திட்டமானது ஆயுட்காலம் வரை (Lifetime Contract) என்ற
நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், கொடிகாமம் மீசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த
'Microwin Hi-End (Pvt) Ltd' என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>வாடகை மற்றும் இணையக் கட்டணம்</h2><p>விதிமுறை மீறல்: பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதற்கு
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும்,
இத்திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b3553c-19fd-4840-aaeb-5c29197af5a3/26-6a5da5a970796.webp' /></p><p>

நிதி விரயம்: ஒரு கேமராவுக்கான வாடகை மற்றும் இணையக் கட்டணம் உள்ளடங்கலாக
2,758 ரூபா வீதம், 50 கேமராக்களுக்கும் சேர்த்து மாதாந்த வாடகை கட்டணமாக
மொத்தம் 1,37,900 ரூபா சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
</p><p>
மக்களின் கேள்வி: தற்போது சந்தையில் சாதாரண ஒரு சிசிடிவி கேமராவின் விலை
30,000 ரூபா முதல் 35,000 ரூபா வரை விற்கப்படுகிறது. </p><p>இந்த மாதாந்த வாடகைத்
தொகையைக் கொண்டு, மாதமொன்றுக்கு தலா 4 புதிய கேமராக்கள் வீதம் சபை நிதியிலேயே
வாங்கியிருக்க முடியும். </p><p>சில மாதங்களிலேயே அவை சபையின் சொந்த சொத்தாக
மாறியிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மக்கள் பணம் வாடகை என்ற பெயரில்
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றது.</p><p>2. தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!
</p><p>
சபையிடம் ஏற்கனவே போதுமான வாகன வசதிகள் இருக்கும் போது, தற்போதைய தவிசாளர்
மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த
அடிப்படையில் பெற்றுள்ளார்.
</p><p>
ஏற்கனவே உள்ள வாகனங்கள்: அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு
'சிங்கிள் கப்' (Single Cab) வாகனமும், ஒரு முச்சக்கர வண்டியும் உள்ளன. </p><p>இது
தவிர அரசாங்க அதிபரினால் மற்றுமொரு 'டபிள் கப் பிக்கப்' (Double Cab Pickup)
வாகனமும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
புதிய சொகுசு வாகன ஒப்பந்தம்: இவ்வாறான நிலையில், புதிய டொயோட்டா பிக்கப் வாகனம் ஒன்றை மாதாந்த வாடகை 3,40,000 ரூபா (3000
கிலோமீட்டர் வரை) என்ற அடிப்படையில் ஓராண்டு காலப்பகுதிக்கு (2025.11.13 முதல்
2026.11.12 வரை) வாடகைக்கு அமர்த்தியுள்ளார். </p><p>நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத்
தாண்டினால் ஒரு கிலோமீட்டருக்கு 150 ரூபாய் மேலதிகக் கட்டணமாகும்.

செலவிடப்பட்ட தொகை: கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்த வாடகை
வாகனத்திற்காக 17,24,750 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த வாகன வாடகை ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விளம்பரமும் அல்லது கோரிக்கையும்
பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.</p><p> "அடிப்படைத் தேவைகளான
வீதிகள், வடிகால்கள் மற்றும் மின்விளக்குகளைச் சீரமைக்க நிதியில்லை என்று
கூறும் சபை, தவிசாளரின் தனிப்பட்ட தேவைக்கு மட்டும் மக்கள் பணத்தை வாரி
இறைப்பது மக்கள் பணத்தினை விரயமாக்கும் செயல் என மக்கள் விசனம்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>உத்தியோகபூர்வ கடிதம்</h2><p>3. வடமாகாண ஆளுநர் செயலகம் அதிரடி விசாரணைக்கு உத்தரவு!
</p><p>
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம்
செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும்
பொதுமக்கள் ஆதாரங்களுடன் வடமாகாண ஆளுநருக்குப் முறைப்பாட்டு கடிதம்
அனுப்பியிருந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf9cf68-7828-4de7-aaff-f523aa07f778/26-6a5da5aa25aca.webp' /></p><p>
இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஆளுநர்
செயலகம் உடனடியாகச் செயற்பட்டுள்ளது.</p><p>இதன்படி, 2026.05.29 அன்று ஆளுநர்
செயலகத்தினால் (கடித இலக்கம்: G/NPC/A4/LG/COM/VA/26/A/15) வடமாகாண
உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
அதில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து
உடனடியாக முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, பொருத்தமான சட்டப்பூர்வ மற்றும்
நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றினை மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய ஊடகவியலாளரின் ஊடக சுதந்திரத்தினை
முடக்கும் வகையிலேயே தவிசாளரின் இவ் நடவடிக்கை அமைந்துள்ளது</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/malaysian-arrested-in-katunayake-airport-1784517937"></link>
            <id>https://tamilwin.com/article/malaysian-arrested-in-katunayake-airport-1784517937</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெருந்தொகை போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பெருந்தொகை போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9 கோடி 8 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">போதைப்பொருள் தொகை</span></p><p>மலேசியாவில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed010ad2-a6a1-4444-9e0f-ef00873c94dd/26-6a5da392bef00.webp' />&nbsp;&nbsp;</p><p>

அவருக்கு 10,000 மலேசிய ரிங்கிட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> </p><p><span style="font-size: 14px;">இந்த போதைப்பொருளை மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கொள்வனவு செய்து பின்னர் அங்கிருந்து டுபாய்க்கு வந்து, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் காலை 09.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</span></p><h2>அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை&nbsp;<span style="font-size: 14px;"></span></h2><p>இதன்போது அவர் கொண்டு வந்த பைக்குள், சொக்லட் மற்றும் டொபி அடங்கிய 03 பைகளுக்குள் 1 கிலோகிராம் 816 கிராம் எடையுடைய இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் 92 மாத்திரைகளாக தயாரிக்கப்பட்டு, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது.</p><p>

சந்தேகநபரான விமானப் பயணியும் கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:27:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையாகும் சட்ட நடவடிக்கை - 4ஜி கமரா மூலம் இரகசியமாக கண்காணிக்கப்படும் நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cameras-will-be-installed-to-catch-litterers-1784517751"></link>
            <id>https://tamilwin.com/article/cameras-will-be-installed-to-catch-litterers-1784517751</id>
            <summary type="text">வீதிகளில் குப்பைகளை வீசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மற்றும் டெங்கு நோயை பரப்பும் வகையில் செயற்படும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீதிகளில் குப்பைகளை வீசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மற்றும் டெங்கு நோயை பரப்பும் வகையில் செயற்படும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
கெஸ்பேவ நகராட்சி மன்றம் இது தொடர்பிலான திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள ஒரு உள்ளாட்சி அமைப்பால் முதன்முறையாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், 4ஜி கமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;தனிநபர்களின் செயற்பாடு</h2><p>
</p><p>
மேலும், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தலைமை அலுவலகத்திலிருந்து கணினித்திரை மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3720399-e0ff-4e9d-b1f3-569aaa1b8af3/26-6a5da219bfa0c.webp' /></p><p>
</p><p>
குப்பைகளை பொது இடங்களில் வீசக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கெஸ்பேவா நகராட்சி மன்றம், பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களின் செயல்கள் தொடர்வதால் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலரி மாளிகையில் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் சாரணர் இயக்க விருது விழா - பிரதமர் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/girl-scouts-awards-ceremony-1784519469"></link>
            <id>https://tamilwin.com/article/girl-scouts-awards-ceremony-1784519469</id>
            <summary type="text">&quot;உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல.
பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே
ஆகும்&quot; என்று பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>"உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல.
பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே
ஆகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p><p>

இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தால் நேற்று அலரி மாளிகையில்
ஏற்பாடு செய்யப்பட்ட 'ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா'வில்
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>விருது விழா</h2><p>
</p><p>
சிறுமிகளின் ஒழுக்கம், நேர்மை மற்றும் சமூக அர்ப்பணிப்பைப் பாராட்டி, இம்முறை
விருது விழாவில் 338 ஜனாதிபதி விருதுகளும், 12 பிரதமர் விருதுகளும்
உள்ளடங்கலாக மொத்தம் 350 விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குப்
பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பிரதமர் நேரில் வழங்கி கௌரவித்தார்.</p><p> இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9dd61fb-bd7d-4d9a-b2ae-3db6a3d74b71/26-6a5d9b351223a.webp' /></p><p> "பெண் சாரணர் இயக்கத்தின் முக்கிய
வலிமையே பின்னணி எதுவாக இருந்தாலும் சகலருக்கும் சம வாய்ப்புகளை
வழங்குவதாகும். இன்று யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வந்து
கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான சம வாய்ப்புகள்
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p><p> சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இளம்
தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
மட்டுமன்றி, ஒழுக்கநெறி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட பிரஜைகளை
உருவாக்குவது இன்றியமையாதது. அதற்கு சாரணர் இயக்கம் ஆற்றி வரும் பங்களிப்பு
பாராட்டத்தக்கது.</p><p>
இலங்கையில் 1917ஆம் ஆண்டு கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட
பெண்கள் சாரணர் இயக்கம், இன்று ஏழு பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றது. </p><p>இதில்
ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த அங்கீகாரமாக 'ஜனாதிபதி விருது'
கருதப்படுகின்றது. பல்வேறு சவால்கள் மற்றும் பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு
செய்யும் சாரணர்களுக்கே இந்த உயரிய விருது வழங்கப்படுகின்றது.
</p><p>
இந்த நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல,
முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள், விருது பெற்ற
சாரணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T03:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவும் மனைவியும் வெளிநாடொன்றில் கலந்து கொண்ட திருமண நிகழ்வு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-limini-rajapaksa-1784518526"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-limini-rajapaksa-1784518526</id>
            <summary type="text">மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
</p><p>
அவர்கள் இருவரும் கடந்த வார ஆரம்பத்தில் முதன்முதலாக மாலைதீவை சென்றடைந்துள்ளனர். அது சாதாரண ஒரு விஜயம் அல்ல, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மாலைதீவில் நடந்த திருமண நிகழ்வு</h2><p>
மாலைதீவில் அமைந்துள்ள மிக ஆடம்பரமான உல்லாச விடுதியில் (Resort) ஒன்றில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான திருமண விழாவில் இலங்கையிலிருந்து விசேட விருந்தினர்களாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்திருந்தது.
</p><p>
ஆனாலும், இந்த விஜயம் அத்துடன் முடிவடையவில்லை. மாலைத்தீவு திருமண நிகழ்வு முடிந்த உடன், நாமல் ராஜபக்ச அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbf689e4-2e03-4d6c-8bb8-ac8cdb8076cc/26-6a5d9780d382a.webp' /></p><p>சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான கிழக்காசிய மாநாட்டில் (Global Economic Cooperation East Summit) உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
</p><p>
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் அங்கு விசேட உரை ஒன்றையும் ஆற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T03:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு : எதிர்க்கட்சியினருக்கு நீதி அமைச்சர் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-term-of-office-of-chief-justices-1784517329"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-term-of-office-of-chief-justices-1784517329</id>
            <summary type="text">பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து
அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும், இது
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து
அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும், இது
தொடர்பாக எதிர்க்கட்சியினரே சமூகத்தில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தி
வருகின்றனர் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ள
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு விவகாரம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய
கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்கள்</h2><p>மேலும் தெரிவித்ததாவது,&nbsp;"நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி குற்றம்
சுமத்துகின்றனர். </p><p>கடந்த காலங்களில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்கவின் வீட்டுக்குக் கல்லெறிந்தவர்களும், ஊழல், மோசடிக்
குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிப் பிணையில் இருப்பவர்களுமே இன்று நீதித்துறை
சுதந்திரம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0060e128-10f4-4e38-afc7-2e5ec5895232/26-6a5d977ad367b.webp' /></p><p>
கடந்த காலங்களைப் போன்று ஜனாதிபதி அல்லது பிரதமரின் தனிப்பட்ட
விருப்பத்துக்கமைய இனி நீதியரசர்களை நியமிக்க முடியாது. </p><p>அரசமைப்பு பேரவையின்
அனுமதியுடன் மாத்திரமே ஜனாதிபதியால் இந்த நியமனங்களை வழங்க முடியும்.
அதற்கமைய, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும்
வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>போலியான குற்றச்சாட்டை முன்வைத்து</h2><p>நீதித்துறையின் சேவையாளர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது குறித்து பல்வேறு
தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சாதக, பாதகக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள்
தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77b5f5b8-79e5-45ef-8837-ffb1cae386eb/26-6a5d977b894de.webp' /></p><p>இதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் தற்போது துரிதமாக விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p> இதனால்
ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும், படுகொலையாளிகளும் அச்சமடைந்து, தப்பித்துக்
கொள்வதற்காகவே 'நீதித்துறைக்கு அச்சுறுத்தல்' என்ற போலியான குற்றச்சாட்டை
முன்வைத்து ஒன்றிணைகின்றார்கள்.

திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்த அரசுக்குக் கிடையாது. </p><p>நாட்டில்
நீதித்துறை முழுச் சுதந்திரத்துடன் செயற்படுவதுடன் சட்டத்தின் ஆட்சியும்
பாதுகாக்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள்
தெளிவாக உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் மாத்திரமே தங்களின் கலக்கத்தால்
போராடி வருகின்றனர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T03:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-virus-in-more-dengue-patients-1784513138"></link>
            <id>https://tamilwin.com/article/new-virus-in-more-dengue-patients-1784513138</id>
            <summary type="text">புதிய இணைப்புநாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,044 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,044 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, நேற்று&nbsp;(19) 2,652 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளில் 88% பேர் டெங்கு 2 வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கண்ணங்கர கூறியுள்ளார்.</p><p></p><h2>டெங்கு 2 வைரஸ் வகை</h2><p>
</p><p>
டெங்கு 2 வைரஸ் வகைக்கு எதிரான மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525dd7c6-ad42-4f7a-937c-27b447104f94/26-6a5d927ba4f66.webp' /></p><p>

இந்த ஆண்டு நாட்டில் 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
டெங்கு நோய்த்தொற்றால் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 37 பேர் பெண்கள் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும், 19,943 டெங்கு நோய்த்தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>நோயாளிகள் அடையாளம்&nbsp;</h2><p> அதிகபட்சமாக, மேற்கு மாகாணத்தில் 39,667 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 11,610 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளிகளும், சபரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>

ஜூலை மாதத்தில், கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T03:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தொடரூந்தில் பாய்ந்த இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-dies-in-bambalapitiya-1784512239"></link>
            <id>https://tamilwin.com/article/man-dies-in-bambalapitiya-1784512239</id>
            <summary type="text">கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p> மருதானை நோக்கி சென்ற தொடரூந்தில் குறித்த நபர் மோதியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>பிரேத அறை</b></h2><p>இவ்வாறு உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35981eaa-f3f6-42d9-9d23-0f5c72b86a00/26-6a5d8fcdd002d.webp' /></p><p>உயிரிழந்த நபரின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>பம்பலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-20T03:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைச்சுவை தரப்பாக மாறிவிட்ட எதிர்க்கட்சியினர்! ஆளும் தரப்பு விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-become-a-comedy-troupe-ruling-party-1784515333"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-become-a-comedy-troupe-ruling-party-1784515333</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் தற்போது நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் என்றும்,
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கூட வெறும் நகைச்சுவை விடயங்களாக
மாற்றியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் தற்போது நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் என்றும்,
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கூட வெறும் நகைச்சுவை விடயங்களாக
மாற்றியுள்ளனர் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது
என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விடுத்து வரும்
கருத்துக்கள் குறித்து ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>வெறும் பிரேரணைகளைப் மட்டுமே பேசி</h2><p>இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது, "நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு நீதி அமைச்சர்
பொறுப்பேற்றுள்ளதுடன், அது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளக் குழுவும்
அமைக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/507619d9-fff6-47eb-9efa-8dc4b0e75ae1/26-6a5d8f0bdc45f.webp' /></p><p>இத்தகைய சூழலில், அந்தச் சம்பவத்தின் பின்னணியைக்
கண்டறியுமாறு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால்,
அவர்கள் அதற்குப் பதிலாக வெறும் பிரேரணைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர்.
</p><p>
இதற்கு முன்னரும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு
வரப்போவதாகக் கூறிவிட்டு, கடைசி வரை அதைச் சமர்ப்பிக்கவில்லை. </p><p>அவ்வாறே
தற்போதைய பிரேரணையும் வெறும் பேச்சுடன் முடிந்துவிடுமோ என்ற சந்தேகம்
எழுகின்றது. </p><p>எதிர்க்கட்சித் தரப்புக்கே தமது கட்சியின் மீதான நம்பிக்கை
குறைந்துள்ள ஒரு சூழலே இன்று உருவாகியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T02:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மீண்டும் நேரில் சந்திக்கும் ரணில் மற்றும் சஜித்..! முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-and-sajith-to-meet-again-colombo-1784515288"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-and-sajith-to-meet-again-colombo-1784515288</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும்
நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின்
பிரதிநிதிகளும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும்
நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின்
பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனை கூட்டமொன்று&nbsp;நடைபெறவுள்ளது.</p><p>எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டம் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு</h2><p>
</p><p>
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee17dbe4-8444-4ff4-99d2-8e2887a638e8/26-6a5d8adb299be.webp' /></p><p>
</p><p>
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய
தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர்
அலுவலகத்துக்கு செல்லவுள்ளார்.</p><p> சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர், அவரது அலுவலகத்துக்கு ரணில் விக்ரமசிங்க விஜயம்
செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வு</h2><p>
</p><p>
நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு,
அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை கூட்டுமாறு ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ச, எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தார். </p><p>அதனைத் தொடர்ந்து தொலைபேசி
ஊடாகவும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். </p><p>இதற்கிணங்க, எதிர்வரும்
வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நாமல் ராஜபக்‌சவும்
கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

அரசின் இந்த ஓய்வு வயது நீடிப்புத் திட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப்
பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதால், இது குறித்த பொதுவான
நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T02:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuing-controversial-deaths-request-fbi-help-1784512294"></link>
            <id>https://tamilwin.com/article/continuing-controversial-deaths-request-fbi-help-1784512294</id>
            <summary type="text">இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச
விசாரணைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச
விசாரணைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது
நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் தொடர்பில் சர்வதேச
விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளது.
</p><p>
அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த,
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சர்ச்சைக்குரிய உயிரிழப்புகள்</h2><p>

நாட்டில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர்,
இது குறித்துத் தனது கடும் சந்தேகங்களை வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50cadd64-f7b3-442c-b93b-5dd9bf165878/26-6a5d84721104b.webp' /></p><p>
</p><p>
"323 கொள்கலன் விவகாரத்தில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டான் பிரியசாத் மர்மமான
முறையில் உயிரிழந்தார்.</p><p> எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார். </p><p>2.5 மில்லியன் அமெரிக்க
டொலர் விவகாரத்தில் தொடர்புடைய திறைசேரி அதிகாரி ரங்க நிஷாந்த ராஜபக்‌ஷவின்
மரணத்திலும் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. </p><p>தற்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர்
உயிரிழந்துள்ளார். இவை அனைத்தையும் சாதாரண தற்கொலைச் சம்பவங்களாகக் கடந்துவிட
முடியாது." - என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>தொடர் மரணங்களின் பின்னணி</h2><p>
</p><p>"இத்தகைய தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர, தற்போதைய
அரசுக்குப் போதிய திறனோ அல்லது வலிமையோ இல்லை என்பது தெளிவாகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f8f6c6e-7f10-4b04-9993-05eea1a5ebcc/26-6a5d8472b4aa1.webp' /></p><p> எனவே,
இவற்றை முறையாக விசாரணை செய்வதற்கு எவ்.பி.ஐ. போன்ற சர்வதேச விசாரணை
அமைப்புகளின் உதவியை அரசு நாட வேண்டும்." - என்று கோரிக்கை விடுத்தார்.
</p><p>
கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைகளை எதிர்த்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,
தற்போது அதேபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளமை அரசியல் வட்டாரங்களில்
பேசுபொருளாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T02:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-gold-jewellery-loan-amont-increase-1784510794"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-gold-jewellery-loan-amont-increase-1784510794</id>
            <summary type="text">இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>நாட்டின் பொருளாதார பணவீக்கம்&nbsp;</h2><p>
</p><p>
2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bca91d0-3de0-4126-a99f-07fa83bbedcd/26-6a5d7d7b705f6.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.</p><p>

அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள் இல்லாமல் போய்விட்டதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.</p><p></p><h2>வாகனங்கள் விற்பனை&nbsp;</h2><p>பணவீக்கம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைச்செலவு காரணமாக, ஏராளமான இலங்கையர்கள் தங்களது தங்க நகைகளை விற்பனை செய்யவும் அடகு வைக்கவும் தூண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14cd672-d3c8-494b-a994-6d225fe0deac/26-6a5d7d7c22d6c.webp' /></p><p>
</p><p>
நாட்டில் விற்கப்பட்ட தங்கத்தின் சரியான அளவு (கிலோகிராம் அல்லது பவுண்டுகளில்) குறித்து மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பொருளாதார நெருக்கடியின் போது தங்க அடகு 356 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உலகளாவிய சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
இதற்கிடையில், பொருளாதாரப் பணவீக்கத்தின் காரணமாக, பல்வேறு வகையான கிட்டத்தட்ட பத்து இலட்சம் வாகனங்கள் பல்வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதையும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T02:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி - ஆபத்தான நிலையில் மேலும் இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-persons-killed-in-accident-1784510354"></link>
            <id>https://tamilwin.com/article/2-persons-killed-in-accident-1784510354</id>
            <summary type="text">தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 03.50 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று பிற்பகல் 03.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும், தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
கோர விபத்து</b></h2><p>விபத்து இடம்பெற்ற சமயத்தில் டிபென்டர் வாகனத்தில் ஐந்து பேரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட இருவர்களும் பயணம் செய்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/759c71d5-3d49-4ea3-b4e4-4fd510c7a68f/26-6a5d79e39f4c8.webp' /></p><p>விபத்தினால் டிபென்டரில் பயணித்த அனைவரும் மற்றும் லொறியில் இருந்த இருவரும் என மொத்தம் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். </p><p>இந்த நிலையில், அவர்களில் தற்போது இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரில் ஒருவர் டிபென்டர் வாகனத்தின் சாரதியான மாத்தறையை சேர்ந்த 37 வயதுடைய வேதமுல்ல கங்கானம்கே தினேஷ் உதயங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
மற்றைய நபர் அதில் பயணித்த 36 வயதுடைய மாத்தறையை சேர்ந்த எஸ்.எம்.வி. சுபாஷ் எனவும் தெரியவந்துள்ளது.</p><p>

காயமடைந்தவர்களில் மேலும் இருவரின் நிலைமை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில், விபத்துக்குள்ளான டிபென்டர் வாகனம் குறித்த இளைஞர் குழுவினால் ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுள்ளனர்.
</p><p>
விபத்தினால் டிபென்டர் வாகனத்திற்கும் லொறிக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண போட்டிகளில் வரலாறு படைத்தார் எம்பாப்பே!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mbappe-makes-world-cup-history-1784509470"></link>
            <id>https://tamilwin.com/article/mbappe-makes-world-cup-history-1784509470</id>
            <summary type="text">2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை &#039;கோல்டன் பூட்&#039; (Golden Boot...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><p>
இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே 10 கோல்களை அடித்து, லியோனல் மெஸ்ஸியுடனான கடுமையான போட்டியை முறியடித்து இவ்விருதைக் கைப்பற்றினார். </p><p>
இதற்கு முன்னர் 2022 கட்டார் உலகக் கிண்ண தொடரிலும் 8 கோல்களை அடித்து எம்பாப்பே கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார்.</p><p></p><h2>விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமை</h2><p> 
இதன் மூலம் அடுத்தடுத்த உலகக் கிண்ண தொடர்களில் இவ்விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
1970 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பின்னர், ஒற்றை உலகக் கிண்ணத் தொடரில் 10 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை 27 வயதான எம்பாப்பே பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4495fd-0f67-4163-98fb-1bbf142c56c2/26-6a5d742440139.webp' /></p><p> </p><p>
உலகக் கிண்ண வரலாற்றில் இவரை விட பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958 இல் 13 கோல்கள்) மற்றும் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் (1954 இல் 11 கோல்கள்) ஆகிய இருவர் மட்டுமே ஒரே தொடரில் அதிக கோல்களை அடித்துள்ளனர்.
</p><p>உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்களை அடித்த ஆண்கள் பிரிவின் சாதனையாளராக எம்பாப்பே (22 கோல்கள்) உருவெடுத்துள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியை (21 கோல்கள்) அவர் முந்தியுள்ளார்.</p><p>
சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பிரான்ஸ் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.</p><p> எனினும், இப்போட்டியில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து மெஸ்ஸியை விட முன்னிலை பெற்றார்.
</p><h2>உலகக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>முன்னதாக குழு நிலைப் போட்டிகளில் செனகல் மற்றும் ஈராக் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு கோல்களையும், 32 அணிகள் சுற்றில் சுவீடனுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்தார். தொடர்ந்து, பராகுவேக்கு எதிரான 16 அணிகள் சுற்றில் 70ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் வெற்றி கோலையும், காலிறுதியில் மொராக்கோவுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்திருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa6435c-2352-4ab7-88ce-7359b44e85c8/26-6a5d870b5fb41.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 39 வயதான லியோனல் மெஸ்ஸி ஹேட்ரிக் கோல் அடித்திருந்தால் எம்பாப்பேயை முந்தியிருக்கலாம், ஆனால் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.</p><p>மெஸ்ஸி இத்தொடரில் 8 போட்டிகளில் 8 கோல்களுடன் நிறைவு செய்தார்.
 இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் ஆகியோர் தலா 7 கோல்களையும், பிரான்ஸின் உஸ்மான் டெம்பேலே மற்றும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் ஆகியோர் தலா 6 கோல்களையும் அடித்து இத்தொடரை நிறைவு செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/use-water-and-electricity-wisely-1784507276"></link>
            <id>https://tamilwin.com/article/use-water-and-electricity-wisely-1784507276</id>
            <summary type="text">நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் (பேரிடர் மற்றும் நீர் மேலாண்மை) எல். எஸ். சூரியபண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>தற்போது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 44% முதல் 45% வரையான அளவிலேயே காணப்படுகிறது எனவும் ஒக்டோபர் மாதளவில் பெரும்போக விவசாயப் பணிகளுக்காக நீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>'எல் நினோ' காலநிலை</h2><p>
</p><p> 'எல் நினோ'&nbsp; காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff98432-0466-4c8c-bd1e-44b2c84b9a66/26-6a5d6b8e1bdf6.webp' /></p><p>
ஒருவேளை எதிர்பார்த்தபடி மழை பெய்யாவிட்டால், தற்போதுள்ள நீரைக் கொண்டு நிலைமையை மேலாண்மை செய்வதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>
தென்மேற்கு பருவமழை வழக்கமான ஆண்டுகளைப் போல இம்முறை போதியளவு கிடைக்கவில்லை எனவும், சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் அது 10 முதல் 15 மில்லிமீட்டர் போன்ற மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை பத்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officers-who-killed-in-riot-will-get-1784506700"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officers-who-killed-in-riot-will-get-1784506700</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அமைச்சரவை தீர்மானிக்கும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய வன்முறை</h2><p>
</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் சிறைச்சாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a09c4a-64af-4ecf-bfbb-6c51b7fa129b/26-6a5d694e4331d.webp' /></p><p> </p><p>
இந்த பயங்கர மோதலின் போது மேலும் சில அதிகாரிகளும், சுமார் 100 கைதிகளும் காயமடைந்ததுடன், 21 கைதிகளும் உயிரிழந்திருந்தனர்.
</p><p>இந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்கள் வழக்கமாக ஓய்வு பெறும் வயது வரை முழுமையான மாதச் சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அதன் பின்னர் உரிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருவதாக மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்சியின் நீண்ட நாள் கனவை கலைத்த 106ஆவது நிமிடம்.. கண்ணீருடன் முடிந்த இறுதிப்போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-argentina-dream-2026-world-cup-fifa-1784505100"></link>
            <id>https://tamilwin.com/article/messi-argentina-dream-2026-world-cup-fifa-1784505100</id>
            <summary type="text">ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.இந்நிலையில், உலகக் கோப்பையை வெற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.</p><p>இந்நிலையில், உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்று விடைபெற வேண்டும் என்ற லியோனல் மெஸ்சியின் நீண்ட நாள் கனவு கண்ணீரோடு முடிந்தது.&nbsp;</p><p>
கடந்த 2010ஆம் ஆண்டில், முதல் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்பெயின் அணி,16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை தன்வசமாக்கியுள்ளது. </p><p>தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்டினா, 1962இல் பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொண்ட முதல் நாடு என்ற பெருமையைப் பெற கடுமையாகப் போராடியது.</p><p></p><h2>106ஆவது நிமிடம்..&nbsp;</h2><p> </p><p>ஆனால், ஸ்பெயின் அணியின் அபார ஆட்டத்தால் ஆர்ஜென்டினாவின் கனவு தகர்ந்தது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகவும் பலம் வாய்ந்த ஆட்டத்தைக் கொண்ட ஆர்ஜென்டினா அணியால், இறுதிப் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ar" dir="rtl">دموع الوداع من الأفضل في التاريخ 🥹🥹🥹🥹 <a href="https://t.co/yJaL1GQHoP">pic.twitter.com/yJaL1GQHoP</a></p>&mdash; Messi World (@M10GOAT) <a href="https://x.com/M10GOAT/status/2078972536541376911?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>மறுபுறம், ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய ஸ்பெயின் அணி, ஆட்டத்தின் 106ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை உடைத்து கோல் அடித்தது. பெட்ரோ போரோ வழங்கிய பந்தை நிகோ வில்லியம்ஸ் கடத்த, அதனைப் பெற்ற பெரான் டோரஸ் மிக நேர்த்தியாக கோலாக மாற்றினார்.
</p><p>
இந்தத் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணி வெறும் இரண்டு கோல்களை மட்டுமே எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்துள்ளது. மேலும் 6 போட்டிகளில் ஒரு கோல் கூட வாங்காமல் தங்களது அபாரமான தடுப்பாட்ட வலிமையை நிரூபித்துள்ளது.</p><p></p><h2>உலகக் கோப்பைக் கனவு</h2><p> </p><p>இறுதிப் போட்டியின் கூடுதல் நேரத்திற்கு முன்பாக, ஆர்ஜென்டினாவின் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f927f9b3-15ae-4499-9bfc-e335aea72df7/26-6a5d67553fd2a.webp' /></p><p>
</p><p>ஆர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அடுத்தடுத்து பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.</p><p> நிகோ வில்லியம்ஸ் அடித்த கோல் ஒன்றை விஏஆர் (VAR) தொழில்நுட்பம் மறுத்தது. அதேபோல் பெரான் டோரஸ் அடித்த மற்றொரு கோலும் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது.</p><p>

ஆட்டத்தின் இறுதி நொடிகளில் லியோனல் மெஸ்சி தனது அசாத்திய திறமையால் மார்கோஸ் செனேசிக்கு ஒரு அருமையான பாஸ் கொடுத்தார்.</p><p> இருப்பினும், ஸ்பெயின் வீரர்கள் அதனைத் தடுத்து நிறுத்த, அர்ஜென்டினாவின் உலகக் கோப்பைக் கனவு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட, மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை பயணம் கண்ணீருடன் நிறைவடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:12:01+00:00</updated>
        </entry>
    </feed>
