<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T20:58:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவை திணறடித்த நீதிமன்றம் - தமிழ் எம்பிக்களுக்கு அநுர அரசு விடுக்கும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-court-tamil-mps-anura-govnt-1784916092"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-court-tamil-mps-anura-govnt-1784916092</id>
            <summary type="text">நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.&amp;nbsp;இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p> </p><p> 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.</p><p>ஆனால், இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன் கூறினார்.&nbsp;</p><p>எனவே, அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, ​​அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0SEwM9rO9g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T19:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற 317 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பெருள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cocaine-worth-317-million-smuggled-to-europe-1784918535"></link>
            <id>https://tamilwin.com/article/cocaine-worth-317-million-smuggled-to-europe-1784918535</id>
            <summary type="text">மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார்
$317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல்
செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார்
$317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல்
செய்துள்ளனர்.
</p><p>
இது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாகும்.</p><p>

தலைநகர் மன்ரோவியாவிற்கு கிழக்கே உள்ள டுவாசோன் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில்
சோதனை நடத்திய காவல்துறையினர், 3,971 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளைக்
கைப்பற்றினர்.</p><p></p><h2>இருவர் கைது&nbsp;</h2><p>

அட்டைப்பெட்டிகள் மற்றும் பயணப் பைகளில் 'கோகோ' மற்றும் 'போஸைடான்' எனக்
குறியிடப்பட்டு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்
ஸ்பெயின் மற்றும் கொலம்பியா நாடுகளின் கடவுச்சீட்டுகளையும், மற்றொருவர்
செர்பிய நாட்டின் கடவுச்சீட்டையும் வைத்துள்ளனர்.</p><p>
</p><p>
தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு கொக்கைன் கடத்துவதற்குப்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒரு முக்கிய
இடைத்தாவளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5710e7ca-ee91-46e9-bcd8-93bf8de3623f/26-6a63bf4fe60a7.webp' /></p><p>
</p><p>
கடந்த மாதமும் மன்ரோவியா விமான நிலையத்தில் $19 மில்லியன் மதிப்பிலான கொக்கைன்
பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது உலக அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களின் பாதைகளை மாற்றி,
பெருமளவிலான போதைப்பொருட்களை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சேமித்து வைத்து
கடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு
அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T19:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயகத்தில் 200 உயிர்களை காப்பாற்றிய கனேடிய தொண்டு நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299"></link>
            <id>https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299</id>
            <summary type="text">கனடாவை வாழ்விடமாக கொண்ட பாடகர் செந்தில் குமரன் தனது நிவாரண அமைப்பின் ஊடாக பாடல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் ஊடாகவும், அங்குள்ள கனடா கந்தசுவாமி ஆலய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவை வாழ்விடமாக கொண்ட பாடகர் செந்தில் குமரன் தனது நிவாரண அமைப்பின் ஊடாக பாடல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் ஊடாகவும், அங்குள்ள கனடா கந்தசுவாமி ஆலயத்தில் பக்தர்கள் வழுங்கும் நிதியூடாகவும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்து வருகின்றார்.</p><p>அதன்படி, இலங்கையில் தமிழர் தாயகமெங்கும் அரசாங்க மருத்துவமனைகளின் பணி புரியும் இதயநோய் நிபுணர்களான வைத்தியர்கள் லஷ்மன், குருபரன், அருள்நிதி, ரகுநாதன், அரவிந்தன், ஜெரால்டு, ஜெயகாந்தன், விநோதன், ஹார்திக், போன்றோர் ஊடாக அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடையாளபடுத்துகின்ற நோயாளிகளுக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து அவர்களின் உயிர்களை காப்பாற்றி வருகிறார்.</p><p></p><h2>200ஆவது சத்திர சிகிச்சை</h2><p> இந்த உதவியில் பயனடைந்தோர் முழுவதும் சிறு பிள்ளைகள் மற்றும் இளம் குடும்பஸ்தர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 200ஆவது சத்திர சிகிச்சை, மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த வசந்தி அமல்ராஜுக்கு நடைபெற்று முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16c5a763-17d2-48fc-959b-386ef6165eb2/26-6a63aef7a6d50.webp' /></p><p>
</p><p>இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இலங்கையில் உள்ள பிரபலமான சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் காந்திஜி, மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் லுஷாந்த இருதய நோய் நிபுணர்கள் மற்றும் அவர்களுடன் இயங்கும் வைத்திய குழு, செந்தில் குமரனின் வேண்டுகோளை ஏற்று, தங்கள் நேரத்தை இலவசமாக வழங்கிட்டு இப்பணியில் அவருடன் சேர்ந்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள். </p><p>கொழும்பிலுள்ள லங்கா மருத்துவமனையும் இவர் ஊடாக வரும் அனைத்து சிகிச்சைகளுக்கும் சிறப்பு கட்டணத்தை வழங்கி உதவி புரிகின்றனர்.
</p><p>இதய சத்திர சிகிச்சைகள் மட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு தேவைப்பட்ட நான்கு கோடி மதிப்புள்ள இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம், மூன்று கோடி செலவில் மல்லாவி மற்றும் முல்லைத்தீவில் குருதி&nbsp;சுத்திகரிப்பு நிலையங்கள், அவரச இதய நோய் பிரிவு என்று மக்களுக்கு அவசியம் தேவைப்படும் மருத்துவ கட்டுமானங்களையும் கருவிகளையும் ஸ்தாபித்து இந்த நிறுவனம் பெரும் சேவையாற்றி வருகிறது.&nbsp;</p><p> செந்தில் குமரன், தான் சேர்க்கும் நூறு வீதமான நிதியினை இச்சேவைகளுக்கு வழங்கி, முழு நிதி விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட்டு வெளிப்படை தன்மையுடன் இயங்குவதால் அவருக்கு கனடா மட்டுமல்லாது புலம் பெயர் மக்களின் பெரும் ஆதரவு இருப்பதனை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு: தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/skeleton-wearing-a-raincoat-semmani-request-1784912174"></link>
            <id>https://tamilwin.com/article/skeleton-wearing-a-raincoat-semmani-request-1784912174</id>
            <summary type="text">செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம்(23.7.2026) அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம்(23.7.2026) அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.
</p><p>
அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள்
தெரிந்திருந்தால், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி
வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு இன்றைய தினம்
அகழ்ந்து எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p> </p><p>அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற
பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/502298fe-4c24-441d-a4da-ff96650935f8/26-6a63993068598.webp' /></p><p>குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் ,
அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் , நீதிமன்ற பதிவாளருக்கோ , சட்டத்தரணி
ஊடாக நீதிமன்றுக்கோ , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.</p><p>அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள்
சில வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

இந்த வாக்குமூலத்தின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மருமகன் தொடர்பில் வெளியிட்ட தகவல், அவரின் மருமகன் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகவுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RdSZsItywV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்காது எனது வீட்டில் துண்டித்தது ஏன் என கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7c2482-add6-4ea3-ac98-fd7e86f2b596/26-6a639ddab658c.webp' /></p><p> </p><p>
இம்மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> 
விசாரணையின் போது கருத்துக்களைக் கவனத்திற் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இலங்கை மின்சார சபை (CEB) தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதால், அதற்குப் பதிலாக உருவாகியுள்ள பதிலீட்டு நிறுவனத்தை இம்மனுவின் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதற்கு மனுதாரர் தரப்பிற்கு அனுமதி வழங்கியது. </p><p>
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 04-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p>
சட்டத்தரணி விஜித குமார என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழா 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 முதல் 15 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் நடைபெற்றது.</p><p> 
இந்த விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு ரூபா சுமார் 26.8 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட வேண்டியிருந்தது. </p><p>
செப்டம்பர் 12 முதல் 15 வரை வீராக்கெட்டிய இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பாதுகாப்பு விளக்குகள் வழங்குமாறு அப்போதைய மின்சக்தி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p> 
இதற்கமைய மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான கட்டணத்தை ராஜபக்‌ச குடும்பத்தினர் செலுத்துவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், நீண்டகாலமாக அத்தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.</p><p> 
எதிர்மனுதாரர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இலவசமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மின்சார சபையின் இந்த பாரபட்சமான செயல்பாடு, அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
இதேவேளை, மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழாவிற்கான நிலுவையில் இருந்த மின்சாரக் கட்டணத்தைத் தாம் செலுத்திவிட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரிச்சுமையால் திணறும் மக்கள்! அரசுக்கு ஆபத்தாகும் எதிர்காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214"></link>
            <id>https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214</id>
            <summary type="text">இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, நாட்டுமக்கள் மீது கடுமையான வரிச்சுமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வரிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தரும் போது இலங்கை பொருளாதாரம் மேம்பாடு அடைவதும் அதன்பிறகு நீண்ட காலத்தில்&nbsp;சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தந்ததால் எந்த விதமான பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் ஒரு ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், இந்த அரசாங்கம் மட்டுமல்ல, கடந்த கால அரசாங்கங்களும் நீண்ட காலத்தில் மிகப்பெரிய நன்மையை இலங்கைக்கு கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wSySGE4DOZE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T17:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா மற்றும் ரஷ்யாவிற்கு டிரம்ப் விடுக்கும் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457"></link>
            <id>https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையில் தற்பொழுது நடைபெற்று வரும் போரில் சீனாவோ அல்லது ரஷ்யாவோ பங்கேற்கவில்லை என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அந்த நாடுகள் இதில் தலையிட்டால் அது அவர்களுக்கு "மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca82ed2-f194-45d2-915c-e556069fbe42/26-6a63966325f74.webp' /></p><p> </p><p>
இது குறித்து தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடனான பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
சீனாவின் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஈரானுக்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை என ஜனாதிபதி ஷி ஜின்பிங் தம்மிடம் உறுதியளித்தார் எனவும் இதில் சீன நிறுவனங்களும் அடங்கும்எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதேபோல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப் போவதில்லை என் கூறியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>
சிலவேளகைளில் சீனாவோ அல்லது இதில் ஈடுபட்டால், அது அவர்களுக்கு மிகவும் மோசமானதாக முடியும். நிச்சயம் அது அவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவரைக் இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தது.</p><p> 
இப்போரின் தொடக்கத்தில் வளைகுடா பகுதியில் உள்ள சி.ஐ.ஏ மையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு, ரஷ்யா இலக்கு தொடர்பான தகவல்களையோ அல்லது ட்ரோன் தொழில்நுட்பங்களையோ வழங்கி உதவியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.</p><p> 
எனினும், இது குறித்த அறிக்கைக்கு கருத்து தெரிவிக்க ரஷ்ய அரசாங்கம் மறுத்துவிட்டது. 
ஈரானுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய உதவியதற்காக ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:44:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு சொந்தமான காட்டு பகுதிக்குள் அத்துமீறிய நடவடிக்கை.. 9 பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633"></link>
            <id>https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு
நடைபெற்று வரும் நிலையில் எவரும் செல்வதற்கு அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>அதிகாரிகளுக்கு&nbsp;இடையூறு </h2><p>இந்நிலையில், அத்துமீறி கட்டட அபிவிருத்தி
நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக வனவள திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22fe2ee1-6e33-42db-bfdb-c264c9709172/26-6a6395a316260.webp' /></p><p>இதன்போது, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக சிறப்பு
அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுள்ளனர்.&nbsp;</p><p>இதனை அடுத்து 09 சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டு, பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேக நபர்களை கிளிநொச்சி
மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான்
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூறாண்டுகள் பழைமையான புதிருக்கு விடை - இரண்டு சீனர்கள் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658"></link>
            <id>https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658</id>
            <summary type="text">கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 35 வயதான ஹோங் வாங்கி மற்றும் 37 வயதான யு டெங் ஆகிய
இருவருக்கும் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.</p><p>

100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடினமான கணிதப்
புதிர்களுக்குத் தீர்வு கண்டதற்காக இவர்களுக்கு இந்த உயரிய விருது
கிடைத்துள்ளது.</p><p></p><h2>உலகளாவிய கணித வல்லுநர்கள்</h2><p>

இதில் ஹோங்வாங்கி, 1917இல் ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி காக்கியா
முன்வைத்த காக்கியா ஊசிப் புதிருக்கு முப்பரிமாண அடிப்படையில் விடை
கண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedcce3f-8001-421e-b791-22d3ec9c77a9/26-6a63917a2e5ea.webp' /></p><p>

ஃபீல்ட்ஸ் மெடல் விருதைப் பெறும் வரலாற்றின் 3ஆவது பெண்மணி என்ற பெருமையை
ஹாங் வாங்கி பெற்றுள்ளதால், இச்சாதனை சீனாவில் பெரும் கொண்டாட்டமாக
மாறியுள்ளது.
</p><p>
6சீனாவில் பிறந்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் உயர்கல்வி கற்ற இவ்விரு
பேராசிரியர்களுக்கும் உலகளாவிய கணித வல்லுநர்கள் தங்களது வாழ்த்துகளைத்
தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-those-massacred-black-july-1983-1784906685"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-those-massacred-black-july-1983-1784906685</id>
            <summary type="text">1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(24) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(24) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.</p><p>

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்ற
நினைவேந்தல் நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணிகளை அடக்குவதை விட்டு குற்றங்களைக் கட்டுப்படுத்துங்கள்! நாமல் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curb-opposition-crimes-namal-mp-government-1784905278"></link>
            <id>https://tamilwin.com/article/curb-opposition-crimes-namal-mp-government-1784905278</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது
என&amp;nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது
என&nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.</p><p>பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(24.7.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு,&nbsp; எதிரணிகளை அடக்குவதை விட்டு நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாதாள
உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>முறையான விசாரணை</h2><p>எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விடுத்து,
முறையான விசாரணைகளை நடத்துமாறு அரசிடம் வலியுறுத்திய அவர், விவசாயிகள்,
மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/709eb8df-ba62-442b-8151-fb71f173fe28/26-6a63833ded34a.webp' /></p><p>
</p><p>நாட்டின் எதிர்கால அரசியலுக்கு இளைஞர் தலைமுறையின் பங்களிப்பு மிக அவசியமானது
என்று குறிப்பிட்ட அவர், அதற்கமைய தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி மட்டத்தில் புதிய
இளைஞர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை மோசமானவர் என கூறிய மகிந்த! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglasdevananda-exclusive-interview-video-tamil-1784905211"></link>
            <id>https://tamilwin.com/article/douglasdevananda-exclusive-interview-video-tamil-1784905211</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட தான் மோசமானவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை சில சந்தர்ப்பங்களில் கூறுவார் என ஈழ மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட தான் மோசமானவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை சில சந்தர்ப்பங்களில் கூறுவார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.</p><p>


எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

தமிழ் கைதிகளின் கோரிக்கையை ஏற்று, விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கச் சென்றபோது தான் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p>

இந்தத் தாக்குதல் மிகவும் திட்டமிட்டுக் கொலை செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
தான் எப்போதுமே தமிழ் மக்களின் நலன்களையே முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாகவும், அதிகாரத்தில் இருப்பது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவிர சுயநலத்திற்காக அல்ல.

சிறைச்சாலைக்குள் சிறிய கற்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தக் தாக்குதல் நடத்தப்பட்டது.
</p><p>
 இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறைச்சாலை நிர்வாகத்தின் சில அதிகாரிகளின் பங்கு இருந்திருக்கலாம் என்றும், தன்னை உள்ளே வைத்து மரணமடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RL2gNI_wZM0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:14:08+00:00</updated>
        </entry>
    </feed>
