<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-21T05:55:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் வைத்தியசாலையில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-kandy-road-vavniya-bus-accident-1784612632"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-kandy-road-vavniya-bus-accident-1784612632</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p>
இன்று காலை (21) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து, முன்னால் வீதியில் வலதுபுறம் திரும்பிக்கொண்டிருந்த லொறியொன்றின் பின்பகுதியில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c12d25e-0892-4b3c-b26d-ce43ee1d10ca/26-6a5f071a5ce3e.webp' /></p><p>இந்த விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி சிகிச்சைக்காக கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மேலதிக மாவட்ட செயலாளராக தேவரதன் கடமையேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assumes-duties-as-vavuniya-additional-ds-1784611815"></link>
            <id>https://tamilwin.com/article/assumes-duties-as-vavuniya-additional-ds-1784611815</id>
            <summary type="text">வவுனியா மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராக (காணி) பா.தேவரதன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.&amp;nbsp;அவர் நேற்றைய தினம் (20.07) உத்தியோகபூர்வமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராக (காணி) பா.தேவரதன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.&nbsp;</p><p>அவர் நேற்றைய தினம் (20.07) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p>

வவுனியா மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) கடமையாற்றிய
ந.கமலதாசன் மேலதிக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், காணிக்
கிளையின் மேலதிக மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.</p><p></p><h2>கடமை பொறுப்பேற்பு</h2><p>
</p><p>
குறித்த பதவிக்கே கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளராக
கடமையாற்றிய பா.தேவரதன் நியமிக்கப்பட்டு, கடமைகளை பொறுப்பேற்றுக்
கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:41:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் மர்ம மரணங்கள்! கோட்டாபயவிடம் ஆலோசனை பெற வேண்டிய நிலையில் அநுர..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-death-of-prominent-figures-in-sri-lanka-1784609447"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-death-of-prominent-figures-in-sri-lanka-1784609447</id>
            <summary type="text">டெங்கு நோய்த் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு நோய்த் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மேலும், தற்போது நாட்டில் அடுத்தடுத்து நிகழும் முக்கியஸ்தர்களின் மர்ம மரணங்கள் தொடர்பான உண்மையை இந்த அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் சாகர காரிவசம் குற்றம் சுமத்தினார்.&nbsp;</p><p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>கோட்டாபயவிடம் ஆலோசனை&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>தற்போது நாட்டில் டெங்கு தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்றது.&nbsp; வருடத்தின் இதுவரையான நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 53 வரையில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4503edf8-5acd-4520-aee7-de1165773fb1/26-6a5f02a287d89.webp' /></p><p>கொழும்பு நகரம் இன்று கழிவகற்றல் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. வீதிகள் எங்கும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.&nbsp; உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தின் தோல்வியே இவற்றிற்கு காரணம்.&nbsp;</p><p>முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் டெங்கு நோய்த் தொற்று மற்றும் கோவிட் பெருந்தொற்று என்பன சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டன.&nbsp;</p><p>எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க&nbsp; நோய்க்கட்டுப்படுத்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.&nbsp;</p><h2>மர்ம மரணங்கள்&nbsp;</h2><p> </p><p>இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பலர் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63212926-1006-4ad5-9ad9-ace7dd0a9957/26-6a5f02a33819f.webp' /></p><p>கபில சந்திரசேன மற்றும் திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான சாட்சியாளராக இருந்த ரங்க ராஜபக்ச உள்ளிட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இவ்வாறான நிலையில், தற்போது முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்திருக்கின்றார்.&nbsp;</p><p>இது தொடர்பான சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைக் காரணம் நாட்டுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/olCv1zeEMpY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து - அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ள கரும்புகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083</id>
            <summary type="text">ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> 

தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீயணைப்பு பிரிவினர் அழைப்பு</h2><p>இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0193f6a-d83e-44f0-b29f-e75eaf0aead2/26-6a5f02b47a61c.webp' /></p><p>தீ தொடர்ந்து பரவி வருவதாகவும், தீயை அணைக்க கோட்டை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியில் செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-advisory-issued-to-08-districts-today-1784610589"></link>
            <id>https://tamilwin.com/article/heat-advisory-issued-to-08-districts-today-1784610589</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அந்த வகையில் கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>அந்த வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை</h2><p> கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக போதுமானளவு தண்ணீர் அருந்துதல், வெப்பமான நேரங்களில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>அத்துடன் வெயில் அதிகமாகவுள்ள பகல் நேரப்பகுதியில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள வாகனங்கள்! சிக்கலில் இறக்குமதியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784600524"></link>
            <id>https://tamilwin.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784600524</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணங்கள் காரணமாக இறக்குமதியாளர்கள் இறக்குமதி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணங்கள் காரணமாக இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1000 சொகுசு கார்களை விடுவிக்காமல் இருப்பதாக இலங்கை சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>மறு ஏற்றுமதிக்கான வாகனங்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இவை மறு ஏற்றுமதி மற்றும் போர் காரணமாக துபாய் போன்ற நாடுகளுக்கு அனுப்ப முடியாததால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை இறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112903cf-0a1d-4eda-b514-48e716e65a83/26-6a5f006573a28.webp' /></p><p><span style="font-size: 14px;">இதேவேளை, மறுஏற்றுமதிக்காக&nbsp;</span>அம்பாந்தோட்டை<span style="font-size: 14px;">க்கு வரும் வாகனங்களும் தடுத்துவைப்பு கட்டண சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</span></p><p>
கடந்த சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்து அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தியிருந்த, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை விடுவிக்க முயன்றபோது, ​​இலங்கை இறக்குமதியாளர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட&nbsp;நிர்வாகம் </h2><p>
</p><p>
இந்த தடுத்துவைப்பு கட்டணத்துடன், வாகனத்தின் விலை தற்போது 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும்,
வாகனத்தின் விலை அதன் உண்மையான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117bb654-9fd1-4fbb-977e-a84bae7b047c/26-6a5f0066495a8.webp' /></p><p>
</p><p>
அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணம் காரணமாக வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை இறக்குமதியாளர் பலர் கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகம் ஒரு சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-with-ice-drugs-ampara-1784609984"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-with-ice-drugs-ampara-1784609984</id>
            <summary type="text">அம்பாறை உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் &#039;ஐஸ்&#039;
போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று(21) காலை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் 'ஐஸ்'
போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று(21) காலை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைதான சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை மூலம்
சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 39000 ரூபா,ஒரு மின்னணு தராசு மற்றும்
ஒரு கைபேசி இதர பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக&nbsp;</h2><p>
</p><p>
சந்தேகநபரின் வீடு உகண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. எனினும்
அவர் மாலிகா தென்ன பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த
போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5848c49-ff86-413e-a7a1-b99d58b09eac/26-6a5efffed821b.webp' /></p><p>கைது செய்யப்பட்டவர் ஒரு தீவிர போதைப்பொருள் அடிமை எனவும் இவருடைய தந்தை ஒரு
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உகண பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இச்சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர்
சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார
கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் உள்ளிட்ட
விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
அத்துடன் உகண பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொறுப்பதிகாரி சுமித் குணவர்தன
தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டாளருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ceremony-of-kuttimani-and-thangadurai-court-order-1784609303"></link>
            <id>https://tamilwin.com/article/ceremony-of-kuttimani-and-thangadurai-court-order-1784609303</id>
            <summary type="text">குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவினை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ்,
நேற்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவினை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ்,
நேற்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்
(ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி
ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா&nbsp; ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.</p><p></p><h2>உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள்&nbsp;</h2><p>வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து
வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fabd20f-83bc-4963-b295-7d5d10686359/26-6a5efa18c81ad.webp' /></p><p>இதன்போது, ஏற்பாட்டுக்குழுவில்
ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ்,
பொலிஸாரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை
மீளுருவாக்கம் செய்ய முற்பட்டார் என குற்றம்சுமத்தப்பட்டு அவர் கைது
செய்யப்பட்டிருந்தார்.</p><p>இதனையடுத்து அவர், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை நீதிவான் பிணையில் விடுவித்து நாளை
புதன்கிழமை வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.</p><h2>ஏற்பாடுகளுக்கும் தடை</h2><p> </p><p>அதேவேளை, நாளை வரை உருவச்சிலை திறப்பு
விழா ஏற்பாடுகளுக்கும் நீதிவான் தடை விதித்துள்ளார்.</p><p>1983 ஆம் ஆண்டு ஜூலை வன்முறையின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல்
கைதிகள் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டமை இலங்கை
வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாகும். இந்த வரலாற்று நிகழ்வை முன்னிறுத்தி
முன்னெடுக்கப்படும் சிலை திறப்பு விழா ஏற்பாடுகளால் தற்போது பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p>.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T04:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/application-period-for-gce-ol-examination-1784607462"></link>
            <id>https://tamilwin.com/article/application-period-for-gce-ol-examination-1784607462</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.அதன்படி பரீட்சைக்கு விண...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.</p><p>அதன்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>தேசிய அடையாள அட்டை</h2><p>
</p><p>
தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
விண்ணப்பதாரர்கள் பரீட்சை அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a69c7b1-c950-4a6b-82e9-d74bb2e49218/26-6a5ef9ca96663.webp' /></p><h2>இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது&nbsp;</h2><p>
</p><p>
எந்த காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அல்லது சந்தேகங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் மற்றும் 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணிவிருந்தால் தேர்தலை உடனே நடத்துங்கள்! அரசுக்கு கம்மன்பில பகிரங்க சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/election-immediately-gammanpila-s-open-challenge-1784607057"></link>
            <id>https://tamilwin.com/article/election-immediately-gammanpila-s-open-challenge-1784607057</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம்
உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள
அறிக்கை முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம்
உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள
அறிக்கை முற்றிலும் போலியானது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று(20.07.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>அரசின் வாக்கு வங்கி சடுதியாக வீழ்ச்சி</h2><p>
இது குறித்து உதய கம்மன்பில மேலும் கூறுகையில், "22 மில்லியன் மக்கள் தொகையைக்
கொண்ட இலங்கையில், வெறும் 1240 பேரை மட்டும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த
ஆய்வு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2769ae9-fa44-426a-b265-7f34d7ee0e6d/26-6a5ef4b1b4d0c.webp' /></p><p>தேசிய அளவில்
பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு விடயத்தை இவ்வளவு சிறிய மாதிரி அளவுடன் மதிப்பீடு
செய்வது ஏற்புடையதல்ல" என்று சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி குறித்த தரவுகளை அவர் முன்வைத்தார்.
</p><p>
*2024 ஜனாதிபதித் தேர்தல்: 42வீத வாக்குகள்.</p><p>
* பொதுத்தேர்தல்: 62வீத வாக்குகள்.
</p><p>* 2025 மே மாத உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 43வீத வாக்குகள்.&nbsp;</p><p>ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள்ளேயே அரசின் வாக்கு வங்கி சடுதியாக
வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரப் பாதிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு
உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில், இத்தகைய சாதகமான
அறிக்கையை வெளியிடுவது நகைப்புக்குரியது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்து உரையாற்றிய அவர், "ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்
இந்த அமைப்பு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் தீர்ப்பு வெளியாகும், மக்கள்
சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-arrest-gota-syas-chameera-1784596663"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-arrest-gota-syas-chameera-1784596663</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என &#039;ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்&#039; அழைப்பாளர் சமீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என 'ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்' அழைப்பாளர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார். </p><p>
உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடத்தப்பட்ட கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மை சதி தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்கள்</h2><p>
இந்தச் சதித்திட்டம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்களை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69025692-d9b2-4384-a687-3208eedff0f9/26-6a5ec8b960034.webp' /></p><p>
</p><p>ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களைச் சுற்றியுள்ள குழுவினரும் பாதாள உலகக் குழுவைப் போல் செயற்பட்டு, கூலிப்படையினரைப் பயன்படுத்தி விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைக் பகடைக்காயாகப் பயன்படுத்தி, 'தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்' எனக் கூறிக்கொண்டு கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றினார். இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
பிணங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பது முழு நாட்டுக்குமே இப்போது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சீரழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி&nbsp;</h2><p>
</p><p>சிங்கள பௌத்த அடையாளத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட பெருமளவிலான மோசடிகளும் குற்றங்களும் தற்போது அம்பலமாகி வருகின்றன. </p><p>உண்மையான பௌத்தர்கள் இத்தகைய கொடூர அரசியலுக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de89fcf-aa0d-4a82-84fc-e3e0204448d9/26-6a5eef3574974.webp' /></p><p>
</p><p>மதத் தலைவர்களைக் கூட ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த சீரழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் இந்த விசாரணைகளை மேலும் தாமதிக்காமல் உடனடியாகச் செயற்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதை மேலும் ஓரிரு மாதங்களுக்கு இழுத்தடிக்க வேண்டாம் எனவும் இந்த சதித்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3800-ids-returned-to-the-department-1784604345"></link>
            <id>https://tamilwin.com/article/3800-ids-returned-to-the-department-1784604345</id>
            <summary type="text">கடந்த ஒரு வருட காலத்தில் தபால்கள் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 3,800 என தேசிய கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஒரு வருட காலத்தில் தபால்கள் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 3,800 என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. </p><p>

குறித்த தொகையில் 2,433 அடையாள அட்டைகள் 2005 ஆம் ஆண்டில் பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு சொந்தமானவையாகும். </p><p>

இது சதவீத அடிப்படையில் 64 சதவீதமாகும். குறித்த விண்ணப்பதாரர்கள் 2005 ஆம் ஆண்டில் பிறந்திருந்த போதிலும், அவர்கள் 2020 ஆம் ஆண்டிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

தேசிய அடையாள அட்டை</b></h2><p>தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு திணைக்களம் 4 வருட காலத்தை எடுத்துக் கொண்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eadc792-cda4-46bf-8148-deca89195cfc/26-6a5eefaaf21c3.webp' /></p><p>அந்தக் காலப்பகுதியில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட முகவரி மாறியமை, விண்ணப்பதாரர் வெளிநாடு சென்றமை, உயிரிழந்தமை மற்றும் முகவரிகள் பிழையாக குறிக்கப்பட்டிருந்தமை போன்ற காரணங்களால் அடையாள அட்டைகள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.</p><p> </p><h3><b>

தேசிய கணக்காய்வு அலுவலகம் </b></h3><p>தேசிய அடையாள அட்டை அச்சிடும் போது ஏற்பட்ட பிழைகள் மற்றும் புதிய அடையாள அட்டைகளை வழங்கும் போது பழைய அடையாள அட்டைகளை மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/383a5d8c-e936-4fa7-ad7e-a2e9f0180977/26-6a5eefaba2b43.webp' /></p><p>இந்த சந்தர்ப்பங்களில் சேகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டளவில் 6 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. </p><p>

இவ்வாறு சேரும் அடையாள அட்டைகளை அழிப்பதற்கான முறையான செயற்திறன்மிக்க பொறிமுறை திணைக்களத்திடம் இல்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-21T04:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் மற்றும் சிறுவர் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-discussion-at-the-presidential-office-1784605308"></link>
            <id>https://tamilwin.com/article/important-discussion-at-the-presidential-office-1784605308</id>
            <summary type="text">மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட
வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட
வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு -
செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</p><p>ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20.07.2026) ஜனாதிபதி அலுவலகத்தில்
நடைபெற்றது.
</p><p></p><h2>மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம்</h2><p>
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம்,
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய
செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றினால் 2026 ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம்
குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab23fb1f-61e6-42bb-bc08-612d135bc3c5/26-6a5eed0e10d96.webp' /></p><p>மேலும், 2026 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ்
நடைமுறைப்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்களான நிறுவனப் பராமரிப்பு மற்றும்
பாதுகாவலர் உரிமை, தெருவோரச் சிறுவர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவு,
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதி வழங்கும் திட்டம்,
முன்பள்ளிச் சிறுவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், முன்பள்ளி
ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்
முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.</p><p>கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுக் கொடுப்பனவை வெறும்
மற்றொரு பண உதவித் திட்டமாக அன்றி, அதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கமான
கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, உரிய
மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை
ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும், 'டித்வா' சூறாவளியால் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக
மாதாந்தக் கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் இதன்போது
மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அந்தக் கொடுப்பனவை உரிய சிறுவர்களுக்கு
விரைவாக வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:59:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் பதற்றம்! குவைத்துக்கான விமான சேவைகள் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-temporarily-stop-flights-kuwait-1784604225"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-temporarily-stop-flights-kuwait-1784604225</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக தகவல்களுக்கு</h2><p> </p><p>

இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c31694-034c-40f5-a406-c4253c9ad34b/26-6a5eea61ca9c6.webp' /></p><p> 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதனை தவிர்த்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என பயணிகளுக்கு&nbsp;அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவாவில் இலங்கைக்கு பேராபத்து! அரசுக்கு ஜி.எல். பீரிஸ் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-danger-in-geneva-gl-peiris-warns-1784602385"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-danger-in-geneva-gl-peiris-warns-1784602385</id>
            <summary type="text">&quot;உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை
நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின்
போக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>"உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை
நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின்
போக்கு, இலங்கையின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பிக்கையை சீர்குலைத்து
ஜெனிவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>பதவிக்கால நீட்டிப்பைக்கோரும் அரசு&nbsp;</h2><p>

"எந்தவொரு ஜனநாயக நாடும் இத்தகைய அரசமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு
முன்னர் பொதுமக்களின் கருத்தைக் கோரும். ஐக்கிய இராச்சியத்தில் இத்தகைய ஒரு
விடயத்துக்காக 18 மாத காலத்துக்குள் 1,200 கருத்துக்கள் பெறப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc09e43-a1fa-4268-bda2-41024a72a4ba/26-6a5ee4d33cffb.webp' /></p><p> </p><p>ஆனால்,
எமது நாட்டில் அரசு எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி இதனைச் செய்கின்றது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி பதவிக்கால நீட்டிப்பைக் கோரும் அரசு,
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நான்கு வீதம்
வீதம் வெற்றிடங்களை ஏன் நிரப்பவில்லை?</p><p> இந்த வெற்றிடங்களை நிரப்பாமல்
வைத்திருப்பதன் மூலம் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை அரசே
சீர்குலைக்கின்றது.</p><p>

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து விசேட விசாரணைப் பொறிமுறையை
உருவாக்கியுள்ள நிலையில், உள்நாட்டு நீதித்துறை வலுவாக இருப்பதே நாட்டுக்குப்
பலம். ஆனால், இன்று நீதித்துறை அப்பட்டமாக அரசியலாக்கப்படுவதால், அது சர்வதேச
மட்டத்தில் நாட்டின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.</p><h2>சர்வதேச நெருக்கடி</h2><p>
</p><p>
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில்,
இந்த விவகாரங்கள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f6d8a56-c7c9-4a15-a536-c9c02f3ff553/26-6a5ee4d3e66ca.webp' /></p><p> </p><p>தனிநபர் நன்மைக்காக
அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முழு நாட்டையும் சர்வதேச
நெருக்கடிக்குள் தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><p>

சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பதவிக்கால
நீடிப்புக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும், அரசு அவற்றைக் காது
கொடுத்துக் கேட்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி செல்லும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்! யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-union-delegation-to-visit-semmani-1784603157"></link>
            <id>https://tamilwin.com/article/european-union-delegation-to-visit-semmani-1784603157</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு,
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு,
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்
நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில்
நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. </p><p></p><h2>நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில்</h2><p>இந்த விண்ணப்பத்தை நேற்று(20) திங்கட்கிழமை பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான
அனுமதியை வழங்கியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef493fe-dc9a-48fd-9e8c-8d2551fc6f73/26-6a5ee4062cc05.webp' /></p><p>
நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர்
நாளையதினம் புதன்கிழமை காலை 9 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப்
பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-sarath-fonseka-gotabaya-rajapaksa-1784601471"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-sarath-fonseka-gotabaya-rajapaksa-1784601471</id>
            <summary type="text">நான் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத்துறையில் இருந்த கபில ஹெந்தவித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,0...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத்துறையில் இருந்த கபில ஹெந்தவித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,000 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக தனக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்கள்,</p><p>சலேவின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கு 9,000 மட்டும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் நடக்கும் முறையை வைத்து நான் ஒரு ஆய்வு செய்தேன்.</p><h2>

</h2><p></p><h2>தனியாக செய்த ஆய்வு</h2><p>கிழக்கில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற ஊகிப்பு, தாக்குதல் வியூகம் , எந்தப் பக்கத்தைப் பாதுகாத்துத் தாக்குகிறார்கள், பங்கர்களை எப்பக்கத்தில் அமைத்துக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதை நன்கு ஆய்வு செய்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3cd7dc-3b8b-43c3-8c3e-27c0b0593904/26-6a5edb8207668.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>யாழ்ப்பாணம் முகமாலையில் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள். இப்படி நான் கணக்கிட்டுப் பார்த்தபோது, இது நிச்சயமாக 30,000-க்கும் அதிகம் என்று எனக்குப் புரிந்தது. </p><p>இந்த 9,000 அல்லது 10,000 பேரைக் கொண்டு இவர்களுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்த முடியாது. குறைந்தபட்சம் 30,000 பேராவது இருக்க வேண்டும் என்பதுதான் எனது கணிப்பு. </p><p>சிறிது காலம் கழித்து இக்பால் அதாஸ் என்ற புலனாய்வு ஊடகவியலாளர் 
அக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 பேர் இருப்பதாக ஒரு கட்டுரை எழுதினார். </p><p>அப்போது தான் நான் இதுதான் சரியான எண்ணிக்கை என்று தெரிந்து கொண்டேன். எனவே இவர்களால் எந்தப் பயனும் இல்லை, பொய் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.</p><h2>கொழும்பில் உளவுத்தகவல் கூட்டம்</h2><p>தமிழீழ விடுதலைப்புலிகள் என்ன செய்கிறது என்று கூடத்தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தைப் பற்றிய புரிதலும் இல்லை. அதனால் தான் நான் ஹெந்த விதாரன- சுரேஷ் சலேவை நீக்கினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5cf9dc-0a76-4ec9-9b3a-ec37fbfa054f/26-6a5ee1683c247.webp' /></p><p>இதன்பின்னர் கோட்டாபய ராஜபக்ச இவர்களைச் சேர்த்துக் கொண்டு, கொழும்பில் உளவுத் தகவல் கூட்டம் என்று நடத்தி, கொழும்பு உளவு வேலையை கோட்டாபய தான் ஹெந்தவிதாரன மற்றும் சலேவுடன் இணைந்து தனியாக ஒரு குழுவை அமைத்துச் செயற்பட்டார்.
</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகப் போரிட்டு உன்னதமான சேவை செய்த, சிறந்த உளவுத்துறைத் தலைவர் என்று தானே சொல்கிறார்கள்?
</p><p>இவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு உன்னதமான சேவை செய்தவர்கள். ஈழம் போரின் நான்காம் கட்ட நடவடிக்கைக்கு அவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T03:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோழியால் நேர்ந்த விபரீதம் - தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-attacked-father-for-chicken-1784600944"></link>
            <id>https://tamilwin.com/article/son-attacked-father-for-chicken-1784600944</id>
            <summary type="text">நுவரெலியா, லிந்துலை பகுதியில் மகன் ஒருவர், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமைந்துள்ளார்.

கோழியைக் கொன்று இறைச்சிக்காக உட்கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, லிந்துலை பகுதியில் மகன் ஒருவர், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமைந்துள்ளார்.</p><p>

கோழியைக் கொன்று இறைச்சிக்காக உட்கொண்டதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார். </p><p>

சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2><b>

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்</b></h2><p>இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் லிந்துலை, மவுஸ்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15f3d1d4-cf15-4847-aede-2e424dfe5215/26-6a5edb12890e9.webp' /></p><p>குறித்த நபரால் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்று கொல்லப்பட்டு இறைச்சிக்காக உட்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இதனால் கோபமடைந்த மகன் தந்தையுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான தந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
தாக்குதலை நடத்திய மகன் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-21T02:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-the-public-dengu-symptoms-1784599535"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-the-public-dengu-symptoms-1784599535</id>
            <summary type="text">டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.</p><p>இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,00 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்</h2><p>அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f489772-afea-4b34-b2c4-cdee184fbd1d/26-6a5ed73d6375d.webp' /></p><p>இந்நிலையில், டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்கள் மற்றும் மூட்டுகளில் தீவிர வலி, குமட்டல், வாந்தி மற்றும் தோலில் தடிப்புகள் தென்படுமாயின்&nbsp;உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த டெங்கு அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p>
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T02:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர வைக்கும் வெளிநாட்டு பொறிக்குள் சிக்கப் போகும் ராஜபக்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-team-is-in-australia-to-arrest-nimal-perera-1784598913"></link>
            <id>https://tamilwin.com/article/cid-team-is-in-australia-to-arrest-nimal-perera-1784598913</id>
            <summary type="text">வெளிநாடு சென்று ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரங்களை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமகால அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. 

இலங்கை அரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடு சென்று ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரங்களை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமகால அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.</p><p> </p><p>

இலங்கை அரசுக்கு சொந்தமான பல மில்லியன் டொலர் பெறுமதியான பணம், வெளிநாடுகளில் பல்வேறு பினாமி பெயர்களில் ராஜபக்சர்கள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. </p><p>

இது குறித்து தீவிர விசாரணைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டு வருவதுடன், அதனை நாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.</p><p> </p><h2><b>

பெருந்தொகை டொலர்</b></h2><p>பிரித்தானியா, டுபாய் உட்பட பல நாடுகளில் ராஜபக்சர்களுக்கு சொந்தமான பெருமளவு சொத்துக்கள் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b98ece-3605-44a8-97e0-d6e41bb84301/26-6a5ee4af0abea.webp' /></p><p>இவ்வாறான நிலையில் உகண்டாவில் தாம் பெருந்தொகை டொலர்களை பதுக்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. </p><p>இதேவேளை, அதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு தொடர்புடைய நபர்களின் தகவல்களை பெறுவதற்கு கூட்டு சிறப்புப் பொலிஸ் குழு ஒன்றை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><h3><b>
2 மில்லியன் அமெரிக்க டொலர்</b></h3><p>2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்பஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.</p><p><span style="color: inherit;">இதன் போது, ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றதாக தகவல்கள் வெளியானது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fccb61e-a3e5-47a8-83ef-f418a3ace2fe/26-6a5ed4d2cca5b.webp' /></p><p>இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

எயார்பஸ் இலஞ்சப் பரிவர்த்தனையின் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கணக்கின் உரிமையாளரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கான சாட்சியங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த இலஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>
</p><h3><b>
 நீதிமன்றங்களால் பிடியாணை</b></h3><p>இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வர் சமீந்திர ராஜபக்ச ஆகிய சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
</p><p>
அத்துடன், அவர்களுக்கு தற்போது கொழும் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p> 

புரூணை நாட்டில் போலி நிறுவனம் ஒன்றை நிறுவி, புகழ்பெற்ற ஐரோப்பிய விமான நிறுவனத்திடம் இருந்து 1,454,645.54 யூரோக்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-21T02:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527"></link>
            <id>https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527</id>
            <summary type="text">பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>காதலியான இளம் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கோனாபினிவல பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

காதல் தொடர்பு</b></h2><p>அலுபோமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளம் பெண், சந்தேக நபருடன் சுமார் மூன்று ஆண்டுகள் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f591d4f-be07-49f7-8c79-b9112a5be852/26-6a5ed03a646a0.webp' /></p><p>அப்போது தமக்கிடையேயான தகாத காட்சிகள் அடங்கிய வீடியோவை, சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரில் இருந்த போலியான பேஸ்புக் கணக்கு மூலம் தனது தோழிக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 பின்னர் அந்த முறைப்பாட்டை மீளப் பெறுமாறும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட வீடியோவை முழுமையாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் எனவும் கான்ஸ்டபிள் தமக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகப் பெண் கூறியுள்ளார்.</p><p> 

இதனைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> சந்தேக நபரான கான்ஸ்டபிள் பொலிஸ் நிலையத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடமிருந்தும் விசாரித்து தகவல்கள் பெறப்பட்டன.</p><p> </p><h3><b> தண்டனைச் சட்டக்கோவை</b></h3><p>இதன்போது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 486 பிரிவுகளின் கீழ் பாலியல் செயற்பாடு மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea331ad-539e-447b-be82-1f84dbb04320/26-6a5ed03b21c57.webp' /></p><p>எப்படியிருப்பினும், சம்பந்தப்பட்ட வீடியோ பெண்ணின் விருப்பத்தின் பேரில் அவரது சொந்த கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இதன் காரணமாக, இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T01:50:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நச்சு இரசாயனங்களை பயன்படுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்கள் - கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stop-fruit-ripening-by-using-toxic-chemicals-1784597610"></link>
            <id>https://tamilwin.com/article/stop-fruit-ripening-by-using-toxic-chemicals-1784597610</id>
            <summary type="text">பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை&nbsp;</h2><p>
</p><p>
வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பப்பாளி பழங்களில் இதுபோன்றவற்றிற்கு நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது என்று அமைச்சர்&nbsp;கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d04d4f-3666-444d-9dae-83cd779bcbfe/26-6a5ed03554900.webp' /></p><p> அத்தகைய நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் சோதனை நடத்துவதே அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னரும் வர்த்தகர்கள் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தினால், இது தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalist-threatened-by-army-commanders-security-1784597255"></link>
            <id>https://tamilwin.com/article/journalist-threatened-by-army-commanders-security-1784597255</id>
            <summary type="text">ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான துன்புறுத்தல்கள் தொடர்பாக உடனடியாக தலையிடுமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
</p><p>
அச்சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தினசரி ஆங்கில பத்திரிகையின் இணையத்தள ஆசிரியரான லஹிரு தொலொஸ்வல ஜூலை 15 ஆம் திகதி தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் காரில் தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,</p><p> இராணுவத் தளபதியின் பாதுகாப்பு வாகனத் தொடரணியைச் சேர்ந்த லேண்ட் குரூஸர் வாகனம் ஒன்று அவர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது. </p><h2>


</h2><p></p><h2>அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்</h2><p>அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பவத்தை காணொளி பதிவு செய்ய முயன்றபோது கொமாண்டோ அதிகாரி ஒருவர் அவரைப் அச்சுறுத்தி காணொளி பதிவை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். </p><p>இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அச்சந்தர்ப்பத்தில் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முற்றபட்டபோது அங்கு சுமார் 30 இராணுவ அதிகாரிகள் வருகை தந்து அவர் முறைப்பாடு செய்வதைத் தடுத்துள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் தொலொஸ்வல பயமுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார்.</p><p>
இறுதியில் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்ட போதிலும் அழுத்தங்கள் காரணமாக அது மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரது தொலைபேசியில் இருந்த காணொளி சாட்சியங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d2b0b04-1285-4d48-84d6-ab5243edb063/26-6a5ecb092e023.webp' /></p><p>சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இந்த பயங்கர அனுபவம் காரணமாக லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் மன உளைச்சலில் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோருவது யாதெனில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக முறையான விசாரணையை ஆரம்பித்து கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கான சுற்றுலா வீசாவை உடனடியாக இடைநிறுத்திய நாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/taiwan-suspends-tourist-visa-1784595574"></link>
            <id>https://tamilwin.com/article/taiwan-suspends-tourist-visa-1784595574</id>
            <summary type="text">இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா விண்ணப்பங்களை ஏற்பதை தாய்வான் அரசாங்கம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
தாய்வான் வெளியுறவு அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா விண்ணப்பங்களை ஏற்பதை தாய்வான் அரசாங்கம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
</p><p>தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா வீசாக்கள் நிறுத்தம்</h2><p>
</p><p>சுற்றுலா வீசாக்கள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இலங்கைப் பிரஜைகள் பின்வரும் குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தொடர்ந்து வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6f5df72-5441-4bcc-866f-361019bba531/26-6a5ec47cbb87d.webp' /></p><p>
தாய்வான் அரசாங்க அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள், கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற நடவடிக்கைகள், குடும்ப உறுப்பினர்களைப் பார்ப்பதற்கான பயணம் (மூன்றாம் நிலை உறவினர்கள் வரை), வர்த்தகம் மற்றும் வணிக நோக்கங்கள், தாய்வானில் உள்ள கப்பல்களில் பணியாளர்களாகச் சேருதல் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லுதல் போன்ற காரணிகளுக்கான வீசா கோரி விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் உள்ள 'தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம்' அல்லது சிங்கப்பூரில் உள்ள 'தைபே பிரதிநிதித்துவ அலுவலகம்' மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.</p><h2>பிணையாளரின் உத்தரவாத கடிதம்&nbsp;</h2><p>
</p><p>தாய்வானில் உள்ள பிணையாளரின் உத்தரவாதக் கடிதம் மற்றும் அவரது தாய்வான் தேசிய அடையாள அட்டை நகல், விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு முதன்மைப் பக்க நகல், குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதற்கான பொலிஸ் சான்றிதழ், பயணச் செலவுகளை மேற்கொள்ளப் போதுமான நிதி வசதி உள்ளதற்கான ஆதாரம், தாய்வானில் தங்குவதற்கான முன்பதிவு சான்று மற்றும் திரும்பும் விமான பயணச்சீட்டு ஆகிய ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பித்து வீசாவிற்காக விண்ணப்பம் செய்ய முயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியாகத் தயாரித்து வைத்துக்கொள்ளுமாறு தாய்வான் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:59:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தன விக்ரமரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சம்பவம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>அத்தோடு சானி அபேசேக்கர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சார்பாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல முக்கிய சம்பவங்களுக்கு முக்கிய சாட்சியாளர் என்பதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். </p><p>ஆனால், அவர் பிரதான சாட்சியாளராக இருப்பது மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பலமான சாட்சியாளராக சந்தன விக்கிரமரத்ன விளங்குகின்றார்.
</p><h2>

</h2><p></p><h2>தேசபந்துவுக்கு எதிரான சாட்சி</h2><p>தேசபந்து தென்னகோன் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறுவதற்கான பலமான சாட்சியத்தை சந்தன விக்ரமரத்னவே குறிப்பிடுகிறார்.</p><p>அவர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளித்துள்ளார்.

அதேபோன்று ஷானி அபேசேகர ஆட்சி மாறிய உடனேயே, 2019 நவம்பர் 20 ஆம் திகதி, பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியவர் சந்தன விக்ரமரத்னவே. </p><p>அவர் அவ்வாறு நீக்குமாறு கோரும் அளவுக்கு, அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யாரின் பேச்சைக் கேட்டு இவ்வாறு மாற்றினார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் சரியான தீர்மானத்தை எடுக்கவில்லை. </p><p></p><p>அவர் தனது அதிகாரிகளின் பக்கம் நிற்கவில்லை. 
ஷானி போன்றவர்களை மாற்றினாலும், இறுதியில் ஷானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு முக்கிய பங்காற்றினார்.
</p><p>
இறுதியில் ஷானியின் பதவியுயர்வுக்கு பரிந்துரைத்தவர்களில் சந்தன விக்ரமரத்னவும் ஒருவர். ஆனால் இன்னமும் ஷானிக்குப் பதவியுயர்வு கிடைக்கவில்லை.
</p><p>
அதேபோன்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து ஓய்வுபெற்ற ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்ட சம்பவம். அச்சம்பவம் நடந்த போது சந்தன விக்ரமரத்னவே பொலிஸ் மா அதிபராக இருந்தார். </p><p>ரவி செனவிரத்னவை பொலிஸார் கைது செய்துவிட்டனர் என்பதை அறிந்து, அது தொடர்பாக அவர் பொலிஸாரிடம் விசாரணை நடத்துகின்றார். </p><p>ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும், பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
</p><h2>
சானி- ரவிக்கு செய்த உதவி</h2><p>அதன் பின்னர் பொலிஸ் மா அதிபர் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெறுகின்றார். இது பிணையில் செல்லக்கூடிய குற்றம் என்று சட்டப் பிரிவு கூறுகிறது. </p><p>அதற்கமைய, இது பிணையில் செல்லக்கூடிய குற்றமாக இருந்தபோதிலும், தேஷபந்து உள்ளிட்ட குழுவினர் வேறு ஒரு சக்தியினால் அவரைச் சிறையிலடைக்கவே முயற்சிக்கின்றனர் என்பதைப் பொலிஸ் மா அதிபர் சந்தன புரிந்துகொள்கிறார்.
</p><p>
பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு உடனடியாக அறிவுறுத்துகின்றார். ஆனால், பொலிஸ் மா அதிபர் கூறியதைக் கூட கேட்காமல், பொலிஸ் பிணை வழங்காமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ரவி செனவிரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b8ed6e-17cd-4346-8fe7-9d456c4e0d94/26-6a5ec22502c6e.webp' /></p><p>இது தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறிப்புகளைக் கூட எழுதியிருந்தார். இவ்வாறாக அவர் பல்வேறு விடயங்களில் பல வழிகளில் தலையிட்டிருந்தார். </p><p>அது நன்மை தீமை இரு பக்கங்களையும் கொண்டுள்ளது. 
அவர் மரணமடைந்த சந்தர்ப்பத்தில், அவருடைய அனைத்துத் தவறுகளையும் பேசுவதை விட, அவர் பொலிஸில் ஆற்றிய பங்களிப்பைப் பேசுவது மிகவும் முக்கியமானதாகும்.
</p><p>
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் தேஷபந்துவின் சம்பவத்தில் அவர் ஒரு பலமான சாட்சியாளராக இருக்கின்றார். இவ்வாறானதொரு பலமான சாட்சியாளரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். </p><p>அவருடைய மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:55:38+00:00</updated>
        </entry>
    </feed>
