<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-27T07:18:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 கோடி ரூபா மோசடி வழக்கு- முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார மகனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-s-son-granted-bail-1785134666"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-s-son-granted-bail-1785134666</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டார&amp;nbsp; உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டார&nbsp; உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(27.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

பிணையில் செல்ல அனுமதி</h2><p>பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள், இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04de9f05-2141-44c2-b070-6cb66c05cdd7/26-6a66fffa6c5f0.webp' /></p><p> </p><p> 

நீதிபதி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதோடு, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதிக்கப்பட்டுள்ளது. </p><p> 

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பண்டார உட்பட இந்தக் குழுவினர் கடந்த ஜூலை 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-27T06:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள்- இறக்குமதியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-to-importers-1785133995"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-to-importers-1785133995</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1,025 இற்கும் மேற்பட்ட
வாகனங்கள், இறக்குமதியாளர்களால் இதுவரை விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1,025 இற்கும் மேற்பட்ட
வாகனங்கள், இறக்குமதியாளர்களால் இதுவரை விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

துறைமுகத்தில் தேங்கியுள்ள இந்த வாகனங்களில் சுமார் 625 வாகனங்கள் நாட்டுக்கு
இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகியுள்ளதுடன், மொத்தமாக உள்ள
1,025 வாகனங்களும் 3 மாதங்களுக்கும் மேலாகத் துறைமுகத்திலேயே முடங்கிக்
கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

இறக்கமதியாளர்களின் சொந்த காரணங்கள்</h2><p>

இருப்பினும், இந்த வாகனங்கள் மீது சுங்க விதிகளின்படி, எந்தவித சுங்கக் குற்றப்
பதிவுகளும் இல்லை என்றும், சுங்கத் திணைக்களத்தால் இவை தடுப்பில்
வைக்கப்படவில்லை என்றும் இலங்கைச் சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன
புஞ்சிஹேவா தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896d509c-febf-46c3-bda5-425562d09a8d/26-6a66fd8ce1de7.webp' /></p><p>

"சந்தைத் தேவைக் குறைவு மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட இறக்குமதியாளர்களின்
சொந்தக் காரணங்களினாலேயே இவை விடுவிக்கப்படாமல் உள்ளன.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலவும்
இந்த காலகட்டத்தில், பெரும் தொகையைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்
விடுவிக்கப்படாமல் துறைமுக இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது நாட்டின்
பொருளாதாரத்திற்கும் துறைமுக வருவாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
</p><h2>

ஏல விற்பனை செய்ய நடவடிக்கை</h2><p>
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், துறைமுகத்துக்கு வந்து
ஒரு மாத காலத்துக்குள் உரிய வரிகளைச் செலுத்தி விடுவிக்கப்படாத பொருள்களை ஏலம்
மூலமாகவோ அல்லது டெண்டர் கோரியோ விற்பனை செய்யச் சுங்கத்துக்கு முழு அதிகாரம்
உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2aeec40-d84a-4bbc-9e7d-bf1e0aefc1b9/26-6a66fd8d9dff3.webp' /></p><p> 

அதன் அடிப்படையில், இந்த வாகனங்களை எதிர்காலத்தில் ஏலத்தில் விற்பனை செய்து,
அரசுக்குச் சேர வேண்டிய வரிகள் மற்றும் துறைமுகக் களஞ்சியக் கட்டணங்களை
அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>
 அவ்வாறு விற்பனை செய்த பின்னர் எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அது சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும்.
</p><p>
இருப்பினும், தகுந்த மற்றும் நியாயமான காரணங்களால் வாகனங்களை உடனடியாக
விடுவிக்க முடியாமல் போனதாக இறக்குமதியாளர்கள் சுங்கத்திடம் கோரிக்கை
முன்வைத்தால், அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்குச் சலுகை
அளிக்கப்படும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:42:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் விமான பணிப்பெண்ணாக முயற்சித்த பெண் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-death-of-a-young-woman-1785127997"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-death-of-a-young-woman-1785127997</id>
            <summary type="text">பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். 

விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.</p><p> 

விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதியே இவ்வாறு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உறவினர்கள் கவலை&nbsp;</h2><p> 

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வந்த ஒடித்யா சுவாச கோளாறு காரணமாக, கடந்த 21ஆம் திகதி மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a14ffb-b552-4725-99f0-966f02d82936/26-6a66e86059bdb.webp' /></p><p> 

இளம் அழகியான ஒடித்யா, சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p>

இதற்கு முன்னரும் பல முறை ஒடித்யாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், சிகிச்சைகளின் பின்னர் அவர் குணமடைந்தாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6063daa2-4174-418f-bca9-cc2e2f7d79c3/26-6a66e85f03b8e.webp' /></p><p>
</p><p>
எனினும், கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 

திடீரென அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒடித்யா, அடுத்த அரை மணி நேரத்திற்குள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b62100b6-df7e-46c8-88d8-ebefed9893f1/26-6a66e85faab68.webp' /></p><p> </p><p>

அவருடைய தந்தை விஜேசேகர ஒரு தொழிலதிபர் எனவும், 16 மற்றும் 13 வயதுகளையுடைய இரு சகோதரிகள் ஒடித்யாவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

விமானப் பணிப்பெண்ணாக வருவதே ஒடித்யாவின் கனவு எனவும், மிக விரைவில் இந்த உலக வாழ்க்கைக்கு&nbsp;ஒடித்யா விடை கொடுத்ததை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் உறவினர்கள் கண்ணீரோடு தெரிவித்துள்னர்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Fc16mdTjifY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன் - ரவிகரன் எம்.பி ஆதங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raviharan-statement-about-tamil-prisoners-1785130876"></link>
            <id>https://tamilwin.com/article/raviharan-statement-about-tamil-prisoners-1785130876</id>
            <summary type="text">சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம், இனி எவ்வாறு
கேட்பது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம், இனி எவ்வாறு
கேட்பது என தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த சனிக்கிழமை (25.07.2026) தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிள் படுகொலை
பொது நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>இலங்கையர் தின கொண்டாட்டம் தொடர்பான கலந்துரையாடல்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழரசு கட்சியை சேர்ந்த நான்கு
பேரை கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.
</p><p>
குறித்த கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது இரு கரம்
கூப்பி கேட்டோம். தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள். அதிலும் இலங்கையர்
தினத்தில் விடுதலை செய்தால் சந்தோசமடைவோம் எனவும் கூறினோம் ஆனால் நடக்கவில்லை.</p><p></p><p>
</p><p>
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசி இருக்கிறோம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை தொடர்பான வலியுறுத்தல்</span></h2><p>
</p><p>
அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாது தமிழ்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி
இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe864d0-dcf0-4ac4-9b09-55d3638fd583/26-6a66f6caabecd.webp' /></p><p> ஆனால் நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.

தற்போது சிறையில் 10 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களின் விபரம்
அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள்.</p><p>
என்னால் முயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசி
இருக்கிறேன்.

அகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம்
கூப்பி விடுவியுங்கள் என கேட்டு விட்டேன் வேறு எவ்வாறு கேட்பது என எனக்கு
தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T06:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் தளம்பல் நிலை! இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1785129633"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1785129633</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மீண்டும் எரிபொருளின் விலை கடந்த நாட்களில் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்வது குறித்த இப்போது அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மீண்டும் எரிபொருளின் விலை கடந்த நாட்களில் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்வது குறித்த இப்போது அறிவிக்க முடியாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த மாதம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள உள்ள நிலையில், இறுதி நாட்களில் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே இலங்கையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆகஸ்ட் மாத விலைத் திருத்தம்&nbsp;</h2><p> </p><p>

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்திற்கான விலைத் திருத்தம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை ஏற்ற இறக்கங்களோடு பதிவாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd79918c-afa7-4575-bee1-da195400976f/26-6a66f35684755.webp' /></p><p> </p><p> 

இந்த நிச்சயமற்ற சூழல் காரணமாக, மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. </p><p>

இந்த மாதம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று தினங்கள் இருக்கின்ற நிலையல், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றதா, குறைவடைகின்றதா என்பதைப் பொறுத்தே இலங்கையில் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:59:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கனேடியப் பிரஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kattunayake-airport-canadian-arrested-1785129993"></link>
            <id>https://tamilwin.com/article/kattunayake-airport-canadian-arrested-1785129993</id>
            <summary type="text">கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகச் சட்டவிரோதமான
முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் &#039;ஹசீஸ்&#039;
போதைப்பொருளுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகச் சட்டவிரோதமான
முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்'
போதைப்பொருளுடன் கனேடியப் பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை நேற்று(26.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதற்கட்ட விசாரணை முன்னெடுப்பு</h2><p>

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தைப் பெறுமதி 200 மில்லியன்
ரூபாவுக்கும் அதிகம் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த மேற்படி சந்தேகநபரின் நடத்தை மற்றும்
பயணப் பொதிகள் மீது சந்தேகமுற்ற விமான நிலைய சுங்க அதிகாரிகள், அவரது
உடைமைகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4733c46-9054-493c-8c3a-4e0a877e6ae7/26-6a66f0dc95c52.webp' /></p><p> </p><p>இதன்போதே பயணப் பொதிகளுக்குள்
நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் ஹசீஸ்
போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட கனேடிய நாட்டவரிடம் சுங்கப் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர். </p><p>இந்தப் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் சர்வதேச
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா மற்றும் இலங்கையில்
உள்ள எவருக்கு விநியோகிப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும்
தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம்
ஒப்படைக்கப்படவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egg-price-to-be-increase-1785129371"></link>
            <id>https://tamilwin.com/article/egg-price-to-be-increase-1785129371</id>
            <summary type="text">இலங்கையில் முட்டைகள் இன்று முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்காச் சோளத் தட்டுப்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முட்டைகள் இன்று முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

மக்காச் சோளத் தட்டுப்பாடு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக முட்டை உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
அதற்கமைய, விலையை அதிகரிக்காமல் கைத்தொழிலை மேலும் தொடர முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><h2><b>முட்டையின் விலை</b></h2><p>

ஏனைய விலங்குத் தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4137cce6-3993-42e6-a4fa-65ef7156d17b/26-6a66eff66ec2b.webp' /></p><p>வெள்ளை முட்டையின் மொத்த விற்பனை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் மொத்த விற்பனை விலை 44 ரூபாவாகவும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
</p><p>
சில பிரதேசங்களில் முட்டையின் சில்லறை விலை தற்போது 50 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T05:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-warns-people-1785115985"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-warns-people-1785115985</id>
            <summary type="text">&amp;nbsp;விவசாயத் திட்டங்கள் என்ற பெயரிலான முதலீடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக விவசாயத் திட்டங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;விவசாயத் திட்டங்கள் என்ற பெயரிலான முதலீடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
அண்மைக்காலமாக விவசாயத் திட்டங்கள் என்ற போர்வையில் பொதுமக்களிடம் இருந்து நிதி மற்றும் வைப்புகளைப் பெறும் மோசடி வியாபாரங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இவ்வாறான திட்டங்களில் பெரும்பாலானவை சட்டவிரோதமான முறையில் வைப்புகளைப் பெறும் திட்டங்கள் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c109d5-5550-4cb8-8c4c-a263eb27a63c/26-6a66b55759d9c.webp' /></p><p>
</p><p>இது தொடர்பாக மத்திய வங்கியின் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைப் பிரிவு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.
</p><p>ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ விவசாயத் திட்டத்தைக் காண்பித்து பொதுமக்களிடம் பணம் கோரினால், அதற்கு மாதந்தோறும் ஒரு தொகையையோ அல்லது திட்டத்தின் முடிவில் பெரும் லாபத்தையோ தருவதாகக் கூறினால், அது சட்டவிரோத வைப்புச் சேகரிப்பாகவே கருதப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>ஒருவர் தனது சொந்தப் பணத்தில் விவசாயத் திட்டம் செய்து முன்னேறுவதில் எந்தத் தடையும் இல்லை என்றாலும், பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று இவ்வாறான தொழில்களை நடத்துவது சிக்கலானது என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>இவ்வாறான பல திட்டங்கள் 'பிரமிட்' மோசடிகளின் தன்மையைக் கொண்டுள்ளன. இதில் புதிதாகச் சேர்பவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, பழைய உறுப்பினர்களுக்குச் செலுத்தும் முறையே பின்பற்றப்படுகிறது.
</p><p>இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும், ஏற்கனவே இதுபோன்ற இடங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தால், அவற்றை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>ஒருவேளை அந்த நிறுவனங்கள் பணத்தைத் திரும்பத் தரத் தயங்கினால், அது குறித்து உடனடியாக மத்திய வங்கியில் முறைப்பாடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
 இவ்வாறான முறைப்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய வங்கி தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத வியாபாரங்களை விளம்பரப்படுத்துவது தொடர்பாக ஊடக நிறுவனங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சில தொலைக்காட்சி நாலைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரங்களை ஏற்றுக்கொள்ளும் போது, அந்த நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் அனுமதி உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது ஊடகங்களின் நன்னடத்தை சார்ந்த மற்றும் சட்டப்பூர்வமான கடமையாகும் என தெரிவித்துள்ளார்.
</p><p>நிதிச் சட்டச் விதிகளின்படி, மத்திய வங்கியின் அனுமதியின்றி வைப்புகளைப் பெறுவது தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவது குற்றமாகலாம் என ஆளுனர் தெரிவித்துள்ளார்.</p><p>
சில விளம்பரங்கள் மேலோட்டமாக விவசாயத் திட்டத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாலும், அதில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளும் போது மக்கள் பணத்தை வைப்பு செய்யவே தூண்டப்படுகிறார்கள். எனவே இவ்வாறான விளம்பரங்களை வெளியிடும் போது மிகவும் கவனமாக இருக்குமாறும், அவற்றின் உண்மையான நோக்கத்தைக் கண்டறியுமாறும் ஆளுநர் அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
அப்பாவி மக்களின் பணம் இதுபோன்ற மோசடி வியாபாரங்களில் சிக்கி அழியாமல் தடுப்பதற்குப் பொதுமக்களும் ஊடகங்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T05:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்குகளில் இருந்து தப்பிக்க ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் - சமீர பெரேரா கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unity-just-to-escape-from-lawsuits-sameera-perera-1785126901"></link>
            <id>https://tamilwin.com/article/unity-just-to-escape-from-lawsuits-sameera-perera-1785126901</id>
            <summary type="text">இலங்கை மக்கள் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச்
சந்தித்த காலத்தில் ஒன்றாக இணையாத எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போது தங்களைப்
பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்கள் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச்
சந்தித்த காலத்தில் ஒன்றாக இணையாத எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போது தங்களைப்
பாதுகாத்துக் கொள்ளவே ஒன்று கூடுகின்றன என்று இடதுசாரி மையத்தின் அழைப்பாளர்
சமீர பெரேரா கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை மக்கள்
எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அவசியப் பொருள்களுக்காக நீண்ட
வரிசைகளில் நின்று கடும் துன்பங்களை எதிர்கொண்டனர். </p><p></p><h2>எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்</h2><p>மாணவர்கள் ஓட்டோக்களில்
அமர்ந்து வீட்டுப்பாடங்களைச் செய்யும் அளவுக்கு நாட்டின் நிலைமை மிகவும்
மோசமாக இருந்தது. ஆனால், அந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்காகக் குரல்
கொடுக்கவோ அல்லது ஒன்றாக இணைந்து செயற்படவோ இந்த அரசியல்வாதிகள் முன்வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c86daa93-fdf8-4301-b79a-eabba9a61f2a/26-6a66e6bce4b62.webp' /></p><p>

தற்போது எதிர்க்கட்சியினர் திடீரென ஒன்றுகூடுவது மக்களின் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்காக அல்ல. மாறாகத் தங்களின் சுய அரசியல் நலன்களைப்
பாதுகாப்பதற்காகவே ஆகும்.</p><p>அண்மையில் இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்
கலந்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்ட நடவடிக்கை மற்றும்
சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். </p><p>அந்தக் கூட்டத்தில்
பங்கேற்றவர்களில் பாதிப்பேர் சிறை செல்லும் கட்டத்தில் உள்ளவர்கள். இவர்கள்
அனைவரும் அடுத்த மாதம் சிறையில்தான் மீண்டும் சந்திக்க நேரிடும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடிய முக்கியஸ்தர்கள்: சர்வசன வாக்கெடுப்பு கட்டாயம் - சூடுபிடிக்கும் நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-athanayake-statement-about-judges-retirement-1785125228"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-athanayake-statement-about-judges-retirement-1785125228</id>
            <summary type="text">இந்த அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்கின்றது
என&amp;nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்கின்றது
என&nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இவ்வாறான திருத்தங்களுக்கு முன் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளதால், அரசாங்கம் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் கட்டாயமாகச்
சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தனிநபர் சார்ந்த அரசமைப்புத்
திருத்தத்துக்குச் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நாட்டில்
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே மேடையில்
இணைந்துள்ளன.</p><h2>ஜனநாயகத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க உட்படச்
சகல எதிர்க்கட்சிகளின் அனைத்துக் குழுக்களும் ஒன்றுகூடின. ஜனநாயகத்துக்கு
ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதுமே
இதன் நோக்கமாகும்.</p><p></p><p> ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து
செயற்படுவதைக் கண்டு அரசு பயந்துள்ளது. பொதுவான தேசிய நலன் சார்ந்த
விஷயங்களில் இணைந்து செயற்படச் சிவில் அமைப்புகளையும் இணைத்து விசேட குழு
ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது.
</p><p>
உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை அதிகரிப்பது வழக்குத் தாமதங்களைத் தடுப்பதற்காக என்ற அரசின் வாதம்
தவறானது. நீதிமன்றச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் வெற்றிடங்களை
நிரப்புவதுமே சரியான வழியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f578bcbc-9af2-4a1d-8a3a-b842bc29f2e0/26-6a66dceb7aac2.webp' /></p><h2>ரணில் விக்ரமசிங்க யோசனை</h2><p> </p><p>இது குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை
அமைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனை
முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர
முயல்கின்றது. முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் இவ்வாறான தனிநபர்
சார்ந்த திருத்தங்களுக்குச் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>எனவே, அரசு இந்தத் திருத்தத்தைக்
கொண்டுவந்தால் கட்டாயமாகச் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்புக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
எதிர்ப்புத் தெரிவிப்பதைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தி நாடா ளுமன்ற
உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்திச் சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவருக்கு எதிராக அவதூறு பரப்பியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த தேசிய தேர்தலில் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறதா மொட்டு கட்சி..! சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasdam-statement-1785123831"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasdam-statement-1785123831</id>
            <summary type="text">எதிர்காலத்தில் தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, ஐக்கிய தேசியக்
கட்சியுடனோ அல்லது வேறு எந்தத் தேசியக் கட்சியுடனோ எந்தவிதக் கூட்டணியும்
அமைக்கப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, ஐக்கிய தேசியக்
கட்சியுடனோ அல்லது வேறு எந்தத் தேசியக் கட்சியுடனோ எந்தவிதக் கூட்டணியும்
அமைக்கப் போவதில்லை என&nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அத்துடன் தனித்தே போட்டியிடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று (26.07.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசில் பொலிஸ் திணைக்களம், குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல்
மயப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைப் பேச்சாளர்கள்
இந்த அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கூறும் விடயம்</h2><p> </p><p>அத்துடன்,
சட்டமா அதிபர் திணைக்களத்தை அரசியல் மயப்படுத்தவும் அரசு முயற்சிக்கின்றது.

சுயாதீன அரச நிறுவனங்களைக் கைப்பற்றி, அதன் ஊடாக அரச நிர்வாகக் கட்டமைப்பைத்
தமக்கு ஏற்றவாறு செயற்படுத்த முனைவது முறையற்றது. 'அரசைக் கைப்பற்றிவிட்டோம்,
ஆனால் அரச அதிகாரத்தை இன்னும் முழுமையாகக் கைப்பற்றவில்லை' என்று தேசிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது இதன் வெளிப்பாடாகும்.</p><p></p><p>
</p><p>
பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடித்து, அவர்களைத்
தன்பக்கம் ஈர்த்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்புக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க அரசு முயற்சிக்கின்றது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது
நீதித்துறையைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முயற்சிக்கவில்லை.
நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5e44148-a8e4-43bc-9de8-25c9e5393e20/26-6a66d8af8c29b.webp' /></p><h2>கொள்கை வேறுபாடுகள்</h2><p>
</p><p>
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நாங்கள்
தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இது அரசியலுக்கு
அப்பாற்பட்டது. இதற்கமைவாகவே தற்போது சகல எதிர்க்கட்சிகளுடனும்
ஒன்றிணைந்துள்ளோம். இதுவொரு அரசியல் கூட்டணியல்ல. ஏனெனில், ஒவ்வொரு
கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சி பெற்றுள்ளது
என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால், எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. </p><p>இவ்வாறான அறிக்கைகள் மீது
எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.
அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை அறிவதற்கு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள்
அறிக்கை வெளியிடத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தினால்,
மக்கள் தமது சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவார்கள். அப்போது ஜனாதிபதி மீது
மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் உண்மையான தரத்தை விளங்கிக் கொள்ளலாம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 முதல் 30 ஆண்டுகளுக்கு சர்வாதிகார ஆட்சியை தொடரவே அரசு திட்டம் - நாமல் எம்.பியின் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-plan-continue-dictatorial-rule-20-to-30-years-1785123870"></link>
            <id>https://tamilwin.com/article/govt-plan-continue-dictatorial-rule-20-to-30-years-1785123870</id>
            <summary type="text">எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா
சங்கத்தினரை அடக்கி, தமது சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது
ஆண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா
சங்கத்தினரை அடக்கி, தமது சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது
ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசின் உண்மையான
திட்டமாகும் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
கொழும்பு, ஹோமாகம பகுதியில் நேற்று(26.07.2026) நடைபெற்ற விசேட மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
</p><p></p><h2>நீதிமன்ற நெருக்கடிகளைத் தீர்க்க</h2><p>மேலும் உரையாற்றுகையில்,&nbsp;"அதிகாரத்துக்கு வரும்போது மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறிய அரசு, இன்று அடக்குமுறையையே பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c500b8c9-d55b-4ac0-b52e-d6d35ade3f95/26-6a66d7c3a5a50.webp' /></p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதித்துறைச் சிக்கல்கள் குறித்துக் குரல்
எழுப்பும்போது, அரசு அச்சுறுத்தல்களிலும் சேறு பூசும் நடவடிக்கைகளிலும்
ஈடுபடுகின்றது.</p><p> பொலிஸ் திணைக்களத்தைத் தனது அரசியல் கட்சி அலுவலகத்தின்
கிளையாக மாற்றியிருப்பதால் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை.
</p><p>
அதேபோல், உரப் பிரச்சினைக்காகப் போராடிய விவசாயிகளைச் சட்டவிரோத மதுபான
உற்பத்தியாளர்கள் என்றும், சுகாதாரச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டிய
மருத்துவர்களைத் திருடர்கள் என்றும் இழிவுபடுத்திய அரசு, மகா
சங்கத்தினருக்கும் ஆன்மீகத் தலைவர்களுக்கும் எதிராகச் சோடிக்கப்பட்ட
குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.</p><p>மறுபுறம், அரசால் போஷிக்கப்படும் பாதாள உலகக் குற்றக்குழுக்கள் சுதந்திரமாக
உலா வருகின்றன. கடந்த 48 மணிநேரத்தில் பல இடங்களில் துப்பாக்கிச்சூட்டுச்
சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் எதிர்க்கட்சிகளை அடக்குவதிலேயே குறியாக உள்ளார்.</p><p>
நாடாளுமன்ற விவாதங்களின் போது நீதிமன்ற நெருக்கடிகளைத் தீர்ப்பதை விடுத்து,
ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துவதையுமே ஆளும் கட்சியினர்
முதன்மைப்படுத்தினர்.</p><h2>நாடாளுமன்ற நிதிக்குழு</h2><p>பெருந்தோட்ட வர்த்தகர்களுக்கும் பெரும் தொழிலதிபர்களுக்கும் வரிச் சலுகைகளை
வழங்கிவிட்டு, கிராமப்புற எளிய மக்கள் மீது அரசு அதிக வரிகளைச்
சுமத்துகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93329cfe-8f72-4a4d-abda-24c34383ac05/26-6a66d7c45b7e7.webp' /></p><p>அண்மையில் 'ஹெக்கர்' ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறப்படும்
நிதி இழப்பு விவகாரத்தில், நாடாளுமன்ற நிதிக்குழுவின் முன்னிலையில் இலங்கை
மத்திய வங்கியும் நிதி அமைச்சும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொண்டன.</p><p>
இறுதியில் இந்த இழப்பையும் மக்கள் மீதே சுமத்தத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையைப் பராமரிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அமர்த்தப்பட்டுப்
பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றது. </p><p>மருத்துவமனைகளில் மருந்துப்
பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியுறுவதுடன், தேசிய மக்கள் சக்தியின்
கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சரியாகச் செயற்படாததால் டெங்கு
நோயும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இவ்வாறு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள்,
சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி, தமது
சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசின் உண்மையான திட்டமாகும்.&nbsp;</p><p>எனவே, அரசின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கும், நீதித்துறையின் சுயாதீனத்தைச்
சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக அனைத்து மக்களும் வலுவான அரசியல்
சக்தியாக அணிதிரள வேண்டும்" என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து தண்டவாளத்தில் உறங்கிய முதியவர் : திருமலையில் அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-sleeping-on-train-tracks-incident-in-trinco-1785120762"></link>
            <id>https://tamilwin.com/article/man-sleeping-on-train-tracks-incident-in-trinco-1785120762</id>
            <summary type="text">மதுபோதையில் தொடருந்து தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த
முதியவர் ஒருவர், தொடருந்தில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுபோதையில் தொடருந்து தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த
முதியவர் ஒருவர், தொடருந்தில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் நேற்று இரவு(26.07.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
திருகோணமலையிலிருந்து இரவு 7.40 மணிக்குக் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தொடருந்து பயணப்பட்டுக்கொண்டிருந்தபோதே, தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபர்
விபத்துக்குள்ளாகியுள்ளார்.
</p><p>
இதில் படுகாயமடைந்தவர் 65 வயதுடைய எம்.ராஸிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/709513d7-9966-4499-9ff6-e00839556180/26-6a66d0cb40781.webp' /></p><p>அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்
தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T03:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் - சகோதரன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-dies-in-an-accident-1785117920"></link>
            <id>https://tamilwin.com/article/two-dies-in-an-accident-1785117920</id>
            <summary type="text">மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மகியங்கனை - பதியதலாவ வீதியில் தம்பான 54ஆம் மைல்கல் பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
கணவன், சகோதரன் பலி</b></h2><p>விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணம் செய்த இளைஞரும் உயிரிழந்துள்ளதாக மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d253018-9c47-4813-9a6b-b06feb6d4349/26-6a66bf6ef31af.webp' /></p><p>மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான 31 வயதுடைய திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும், அவரது மனைவியின் தம்பியான 23 வயதுடைய இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இரண்டு மரணங்கள் தொடர்பிலான மரண விசாரணைகள், மகியங்கனை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.
</p><p>
உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். பல்கலைக்கழகத்தில் கடந்த&nbsp; 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த இருவரும் சென்ற நிலையில்&nbsp; விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T02:55:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு பரவல் : 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-outbreak-increasing-patients-81-thousand-1785118709"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-outbreak-increasing-patients-81-thousand-1785118709</id>
            <summary type="text">இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.
நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை 8...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.
</p><p>நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
</p><p>
இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு
நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு
கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>
நாடு முழுவதும் இவ்வருடம் இதுவரை 81 ஆயிரத்து 511 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். அத்துடன் 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d22c6738-e222-4e1f-ad9f-c95bb88db400/26-6a66c6282a6ff.webp' /></p><p>
கடந்த ஜூன் மாதம் 21 ஆயிரத்து 537 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில்,
இம்மாதத்தில் கடந்த 25 நாள்களில் மாத்திரம் 26 ஆயிரத்து 136 நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர்.
</p><p>
டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி
பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>மாகாணங்கள் வாரியாகப் பார்க்கும்போது, மேல் மாகாணத்தில் 43 ஆயிரத்து 132
(52.92 சதவீதம்) நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 329 (15.13
சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், கம்பஹா (17,280), கொழும்பு (16,213), மாத்தறை (5,608), கண்டி (5,581),
களுத்துறை (5,335), இரத்தினபுரி (4,551), காலி (4,499), குருநாகல் (2,265)
உள்ளிட்ட மாவட்டங்களிலும், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும்
(3,315) தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் டெங்கு காய்ச்சலால்
பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று
வைத்திய நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.</p><h2>உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு</h2><p>இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் தென்படுமாயின் உடனடியாகத்
தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa95444-f965-4c80-a300-1496c3eb0721/26-6a66c628d416f.webp' /></p><p>மேலும், குழந்தைகளுக்கு 24 மணித்தியாளங்கள் காய்ச்சல் தென்படுமாயின்
தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதாரப் பிரிவு
எச்சரித்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்போடு,
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அதிகாரிகள்
உள்ளிட்ட சுகாதாரத் துறையினரால் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. </p><p>ஆகையால், பொதுமக்கள் இந்நாள்களில் தமது சமூகப் பொறுப்பை
உணர்ந்து, சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு
வாய்ப்பளிக்காது தூய்மையாகப் பேணுவதோடு, நோய் பரவல் தொடர்பிலும் அவதானத்துடன்
செயற்படுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T02:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட நாமல் - அதிமுக்கிய அரசியல்வாதிகளுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-secret-indian-visit-1785115590"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-secret-indian-visit-1785115590</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு மிகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
</p><p>
கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரைத் தவிர, வேறு யாருக்கும் இந்தப் பயணம் குறித்துத் தெரிவிக்கவில்லை. </p><p>

இந்தியாவுக்கு சென்ற நாமல், ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளைச் சந்தித்துள்ளார்.</p><p></p><p> </p><h2><b>

இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு</b></h2><p>இதன்போது நாமலுக்காக பிரத்யேகமாக சைவ இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4b2948-59d5-49b3-917c-a0ca97ce6852/26-6a66b8212a4fc.webp' /></p><p>எனினும் நாமல் சந்தித்துக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்தியாவில் ஒரே ஒரு நாள் மட்டும் தங்கியிருந்த நாமல், மறுநாள் இரவே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T02:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jelly-fish-attack-in-panadura-sea-area-1785116943"></link>
            <id>https://tamilwin.com/article/jelly-fish-attack-in-panadura-sea-area-1785116943</id>
            <summary type="text">பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்களால் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்களால் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2><b>

ஜெல்லி மீன்கள்</b></h2><p>காயமடைந்தவர்களில் சிலர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42034cf7-929c-4cd6-8c8e-1ab1ee4ec333/26-6a66bb25ddc9a.webp' /></p><p>சிறிய அளவிலான 300 இற்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் நேற்றைய தினம் பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.</p><p> 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது அவை பட்டதன் காரணமாக காயமடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

இத்தகைய சூழ்நிலை காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T01:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர் – பிரதீப்குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105"></link>
            <id>https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்க்கட்சியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனும் தற்போதைய அரசாங்கத்துடனுமே நிற்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47cbd9e8-fc6f-48cb-8cff-f155664c4fc3/26-6a66b1e2aaf45.webp' /></p><p>
</p><p>அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து எதிர்க்கட்சி முற்றிலும் அரசியல் ரீதியாக நலிவடைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது என தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பலமானதொரு எதிர்க்கட்சியை உருவாக்கவே முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று எதிர்க்கட்சியைச் சுற்றி சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களே சூழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள் எனவும், குறிப்பாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் அரசாங்கத்துக்கே ஆதரவாக உள்ளனர் எனவும் பிரதி அமைச்சர் பிரதீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T01:18:31+00:00</updated>
        </entry>
    </feed>
