<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T18:28:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதி இளஞ்செழியனின் 1998 - முடிவுகளால் 2026இல் மீண்டும் அதிரும் செம்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346</id>
            <summary type="text">செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில்,&nbsp;&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட பல உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,&nbsp;செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் ஆய்வு நடவடிக்கைகளை பார்வையிட சென்றிருந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் இந்த அவலத்திற்கு சர்வதேச நீதி கோரி நிற்கின்றனர். இவ்வாறிருக்கையில் இந்த உயர்மட்ட அதிகாரிகளின் வருகை நீதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை இங்கு எழுப்புகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JyFA36TF8eY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் போதைப்பொருள் கும்பல்.. இலங்கையில் பணச் சலவை - அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999"></link>
            <id>https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&amp;nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&amp;nbsp;இந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இவற்றில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LONAVRmADOc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294"></link>
            <id>https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294</id>
            <summary type="text">தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளார்.</p><p> </p><p>நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் கையில் கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர், தனது சகோதரனைக் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>பலத்த வெட்டுக்காயங்கள்&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டில் உள்ள கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05919402-8018-4b7f-83cd-b9a293e0f504/26-6a60f27c765bd.webp' /></p><p>ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p> </p><p>குறித்த சந்தேகநபரே பாதிக்கப்பட்ட நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T16:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பிரான்சில் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681</id>
            <summary type="text">மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
</p><p>
திங்கட்கிழமை மாலை இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பிற்கான
சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எப்ஸ்டீனுடன் தொடர்பு</h2><p>
</p><p>
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல்
சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b94f81c-51b6-4e25-80eb-ea4dd9b29973/26-6a60e489156e3.webp' /></p><p>
</p><p>
பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட்
மறுத்திருந்தார்.
</p><p>
இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில்,
"டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பிரான்சில் உயிரிழப்பு</h2><p>
</p><p>
மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும்
தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eb80e58-d984-48bb-aa73-9882d1b6051a/26-6a60e489e505e.webp' /></p><p>
</p><p>பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர்
சியாட் ஆவார்.</p><p>

இதற்கு முன்னர், 2020இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல்
என்பவர் 2022ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தூக்கிட்டுத் தவறான முடிவெடுத்து கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இலங்கை நபர் வலையில் சிக்கிய பெண்..! 7 இலங்கையர்கள் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680"></link>
            <id>https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680</id>
            <summary type="text">மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழிலாளராக சுரண்டியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் ஒருவரை மலேசிய குடிவரவு திணைக்களம் கைது செய்துள்ளது.</p><p>

பொதுமக்கள் அளித்த முறைப்பாடு மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மலேசியாவில் கைது</h2><p>

இலங்கைப் பெண் ஒருவர் தனது முதலாளியால் தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய இலங்கை நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 21 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2acc6286-7f92-4170-a0de-eec645540ec4/26-6a60d4fc7d23a.webp' /></p><p> </p><p>

இவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மலேசிய குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்துக் சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>7 இலங்கையர்கள்</h2><p>
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் குறித்த பெண் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், அந்தப் பெண் எந்தவித சம்பளமும் வழங்கப்படாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதுடன், போதுமான உணவும் வழங்கப்படவில்லை. </p><p>

அவரது சுதந்திரமான நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்காக உடல் ரீதியான வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b0b23b5-f286-4557-b230-df46b7ee0862/26-6a60d4fd2dbed.webp' /></p><p>

மலேசியப் பிரஜையை திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக வருகை அனுமதிப்பத்திரம் (Long-Term Social Visit Pass) பெற்றுள்ள சந்தேகநபர், மனிதக் கடத்தல் மற்றும் குடியேறியவர்களை கடத்தல் தடுப்பு சட்டம் (ATIPSOM) பிரிவு 12 மற்றும் 1959/63 குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தொழிலாளர் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என மலேசிய குடிவரவு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தொழில்நுட்பங்களில் 'கில் ஸ்விட்ச்' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க தூதுவர்களுக்கு ரூபியோ உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489"></link>
            <id>https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489</id>
            <summary type="text">அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் &#039;கில் ஸ்விட்ச்&#039; (Kill...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் 'கில் ஸ்விட்ச்' (Kill
Switch) வசதி இருப்பதாக வெளியாகும் தகவல்களை மறுக்குமாறு, அந்நாட்டின்
வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உலகெங்கிலும் உள்ள அமெரிக்க
தூதுவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் முன்னணி ஏஐ மாதிரிகளுக்கான
வெளிநாட்டுப் பயன்பாட்டு அணுகலை அமெரிக்க அரசு தற்காலிகமாகத் தடை செய்ததைத்
தொடர்ந்து, சர்வதேச அளவில் எழுந்த பலத்த எதிர்ப்புகளையும் கவலைகளையும்
தணிக்கும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தத் தூதரக நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.</p><p></p><h2>கில் ஸ்விட்ச்' பேச்சு</h2><p>

அமெரிக்க அரசு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரகசிய வழிகாட்டுதலில்,
அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக விற்பனை செய்யவும்,
பிற நாடுகள் சொந்தமாக "ஏஐ இறையாண்மை" அல்லது "டிஜிட்டல் இறையாண்மை" என்ற
பெயரில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்
தடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f5d97e-d5f4-40ae-bdb6-206a492fab51/26-6a60de67a9f1e.webp' /></p><p>
</p><p>
தொழில்நுட்பப் பாதுகாப்பு காரணங்களுக்காக 30 நாட்கள் சோதனைக்குட்படுத்துவது
என்பது 'கில் ஸ்விட்ச்' அல்லது அரசின் 'மாய பொத்தான்' (Magic button) கிடையாது
என்றும், அமெரிக்க கொள்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் செய்திகள்
பரப்பப்படுவதாகவும் தூதுவர்கள் வாயிலாக அமெரிக்கா தெளிவுபடுத்த முயல்கிறது.</p><p>

இருப்பினும், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வழங்கப்பட்ட
தொழில்நுட்ப அணுகலைத் துண்டித்துவிடும் என்ற அச்சம் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளும் ஆசிய நாடுகளும் அமெரிக்க தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பத்தைக்
குறைத்து, சொந்தமாகத் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்க தீவிரம் காட்டி
வருகின்றன.</p><p>அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளைப் பயன்படுத்தி பிற நாடுகளைக்
கட்டுப்படுத்த நினைப்பதே, இத்தகைய நம்பிக்கையின்மைக்கு முக்கியக் காரணம் என
சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503</id>
            <summary type="text">வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரியளவிலான முறைகேடுகள்</h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519db4b7-f595-4db2-8995-cbf8183fe716/26-6a6051d1a9cbc.webp' /></p><p>
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிக குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
</p><p>
எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி குற்றம்சாட்டிள்ளார்.</p><h2>சொகுசு வாகனங்கள் இறக்குமதி</h2><p>இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03021692-38f3-49f4-a5c0-5f9b08956d59/26-6a6051d273187.webp' /></p><p>
இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mp0jpPJOagE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி..! கைது செய்ய ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில்,</p><p>

 சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தின் (ICC) பிடியாணையைச் சுட்டிக்காட்டி நெதன்யாகுவை ஒரு போர்க்
குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a549f32-cd45-4dc4-a54a-dcbaced98317/26-6a60d3b3893e0.webp' /></p><p>

இருப்பினும், கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் பேசிய மேயர் மம்தானி, சட்டப் பிரிவுகளின்படி நெதன்யாகுவை
கைதுசெய்யும் அதிகாரம் நியூயோர்க் நகரத்திற்கு இல்லை என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p></p><p><b>You may like this..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LLojYHAHDjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா புதிய கட்டுமானத்தால் தமிழர்களுக்கு வரப்போகும் புதிய சிக்கல் - தமிழரசுக் கட்சி உறுப்பினர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanyaya-new-construction-1784729338"></link>
            <id>https://tamilwin.com/article/kanyaya-new-construction-1784729338</id>
            <summary type="text">இலங்கை நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசாங்கம் தற்போது கடந்த கால அரசியல் தலைவர்கள் போன்று நடந்தக் கொள்வது வறுத்தமளிக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசாங்கம் தற்போது கடந்த கால அரசியல் தலைவர்கள் போன்று நடந்தக் கொள்வது வறுத்தமளிக்கின்றது என்றும் அரசை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார். </p><p>




திருகோணமலை மாவட்ட கன்னியா
வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(22.07.2026) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2> 




புதிய கட்டுமானத்தால் வரும் புதிய சிக்கல்</h2><p>

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

எமது அடையாளம், கலாசாரம், வரலாறு ஆகியவற்றை அழிக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்படும் போதெல்லாம், எமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப்
பாதுகாத்து வந்த தமிழர் பாரம்பரியமும் வரலாற்றுச் செல்வமும் நினைவுக்கு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f63f30-3348-4e3e-aed1-733b91112ca7/26-6a60cf6d84fb0.webp' /></p><p>
</p><p>
அந்த மரபையும், அதற்கான அறிவையும், அதனுடன் தொடர்புடைய எமது
நிலங்களையும் பாதுகாத்து, வருங்காலத்தில் எமது பிள்ளைகள் மற்றும்
பேரப்பிள்ளைகளிடம் ஒப்படைப்பது எமது பொறுப்பாகும்.
</p><p>
கன்னியா வெந்நீரூற்றுகள் தொடர்பாக நான் கடந்த நேர்காணலில் கூறியதுபோன்று, எமது
சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதர சமூகங்களுடன் நாம் பரஸ்பர மரியாதையுடனும்
நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d262a6-eeff-4332-8174-1fdb56e072c0/26-6a60cfe1d327a.webp' /></p><p>

 அந்த நல்லுறவை எந்த அரசியல் நிகழ்ச்சி
நிரலும் அல்லது வெளிப்புற தலையீடும் சீர்குலைக்க வேண்டிய அவசியமில்லை, 
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் அது ஒருபோதும் நிகழக்கூடாது.</p><p>

ஒரு தமிழனாக, என் மக்களின் உரிமைகளையும், அவர்களின் வரலாறு, பண்பாடு மற்றும்
பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நீதியான குரலையும் நான் தொடர்ந்து
உயர்த்துவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:11:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு..! வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/came-to-serve-not-live-luxuriously-vavuniya-chief-1784726166"></link>
            <id>https://tamilwin.com/article/came-to-serve-not-live-luxuriously-vavuniya-chief-1784726166</id>
            <summary type="text">நான் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் குறிப்பிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடத்திய 
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சமூக வலைத்தளங்கள்</h2><p> </p><p>

அவர் மேலும் குறிப்பிடுக்கையில்,</p><p>

வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபையினுடைய செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை
பெற்று சமூக வலைத்தளங்களில் சில ஊடகங்கள் தவறான வழியிலே பிரசுரித்து
வருகின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில்
குறித்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம்.
</p><p>
குறிப்பாக எங்கள் மீது சொகுசு வாகன வாழ்க்கை வாழ்வதாக ஒரு குற்றச்சாட்டினை
மேற்கொண்டிருந்தனர். 

நாங்கள் சொகுசு வாகனம் ஒன்று வேண்டும் என கேள்வி கோரலினை
மேற்கொள்ளவில்லை. மாறாக சபையின் வேலைக்கு ஏற்ற வகையிலான வாகனத்தினையே கேட்டிருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34e9bc79-32d1-469d-8dd6-1b855993cb1b/26-6a60c5bfb0b36.webp' /></p><p>

ஆனால் ஒரு சில ஊடகங்கள், நாங்கள் சொகுசு வாழ்க்கை
வாழ்கின்றோம். சொகுசு வாகனத்தில் திரிகின்றோம் என்று தவறான வதந்திகளை பரப்பிக்
கொண்டிருக்கின்றார்கள்.&nbsp; </p><p>உண்மையிலேயே ஊடகம் என்பது நடுநிலைமையாக செயல்பட வேண்டும்.
நாங்கள் எப்பவுமே ஊடகங்களை மதிக்கின்றோம். ஒரு ஊடகம் சுயாதீனமாக
செய்திகளை பகிர வேண்டும்.

அதை தவிர்த்து எங்களிடத்தில் தான் எல்லாம் இருக்கிறது என செயற்படுகின்றன.</p><p></p><h2>1 கோடி பெறுமதியான முன்பள்ளி&nbsp;</h2><p>&nbsp;வவுனியாவிலே எங்களுடைய சபை மட்டுமா இருக்கின்றது? எத்தனை சபை இருக்கின்றது?
அத்தனை சபைகளிலும் பிரச்சனை இல்லையா? அதனை ஆதாரத்துடன் நான் நிரூபிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.</p><p>
</p><p>அதேபோன்று இங்கே நடக்கின்ற அனைத்து வேலைகளும் நாங்கள் பகிரங்கமாகவும் சரியாகவும் செய்து கொண்டிருக்கின்றோம்.

நான் இங்கே 
25,000 ரூபாய் காசுக்கு உழைத்துக் கொண்டு போவதற்காக வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e099c36-9108-4d48-8bee-fbaae7890bce/26-6a60c5c061d44.webp' /></p><p> நான்
மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தான் வந்தேன். நான் இங்கே வருவதற்கு முன்
எங்களுடைய அறக்கட்டளை ஊடாக நிறைய சேவைகளை செய்து கொண்டிருந்தேன்.
</p><p>
உதாரணமாக, என்னுடைய சொந்த காணிக்குள்
1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான முன்பள்ளி ஒன்றை கட்டி வருகின்றேன்.
ஐந்தாம் திகதி அதனை பிரம்மாண்டமாக திறந்து வைக்க இருக்கின்றோம்.
</p><p>
இதேவேளை நாங்கள் வருவதற்கு முன்னர் சபையினுடைய வருமானம் 86 மில்லியனாக
இருந்தது. 2026 ஆம் ஆண்டில் 113 மில்லியன்
ரூபாயினை ஈட்ட எதிர்பார்க்கின்றோம்.</p><p></p><h2>மக்களுடைய வரிப்பணம்</h2><p>
</p><p>
நாம் மக்களுடைய வரிப்பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு இங்கு
வரவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரச சுற்று நிரூபத்திற்கு ஏற்ப 20
வீதமான பணத்தினை எங்களுடைய சொந்த வருமானத்தில் இருந்து இங்கு பணி செய்கின்ற
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நாங்கள் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.</p><p>
</p><p>

குறிப்பாக
எங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தகவல்களை
வழங்குவதற்காக அனுமதி அவர்களுக்கு இருக்கின்றது. நிச்சயமாக வழங்கலாம். ஆனால், ஆளுநருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் எங்களுடைய சபையின் நிதி மோசடி
செய்யப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a467fa7-e845-4e86-9702-a74da86c7e8d/26-6a60c5bf0b67d.webp' /></p><p> நாங்கள் பாரிய அளவில் நிதி மோசடி செய்திருக்கின்றோம்
என மக்கள் குறைகூறுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இம்முறைப்பாட்டை
மேற்கொண்டவர் ஒரு தனிநபராவார். </p><p>இந்த நடவடிக்கையானது எங்களை பழிவாங்குவதற்காகவும்
எங்களுடைய செயல்பாடுகளை முடக்குவதற்காகவும் மேற்கொண்ட ஒரு செயலாகும்.
</p><p>


மேலும், நான் சபையின் தலைவராக பொறுப்பேற்ற போது எத்தனை கல்குவாரிகளுக்குரிய
அனுமதிகள் வழங்கப்பட்டது என்று கேட்டிருந்தார்.</p><h2>&nbsp;வீதி புனரமைப்பு&nbsp;</h2><p> நாங்கள் அது தொடர்பான
விபரங்களை வழங்கியிருந்தோம். ஆனால் இந்த அனுமதியின் ஊடாக வருகின்ற வருமானத்தை
வைத்து நாங்கள் வீதிகளை புனரமைப்பு செய்கின்றோம். எங்களுக்கு வீதிகளை
புனரமைப்பு செய்வதற்கு வருகின்ற நிதி போதாது.</p><p>
குறிப்பாக, அந்த கல்குவாரியினுடைய உரிமையாளர்களே அந்த வீதிகளை எங்களுடன்
கலந்துரையாடி செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2a8f5e-8635-4ff6-97eb-5db37ff3d047/26-6a60c5be466db.webp' /></p><p> இதுவரைக்கும்
ஓமந்தையினுடைய வீதி மட்டும் தான் ஒரு பிரச்சனையாக காணப்பட்டது. அதையும் நான்
நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடி இருந்தேன்.</p><p>தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக என்னுடன்
பேசுங்கள், தயவு செய்து வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபை என்கின்ற பெயரை
இழிவுபடுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-22T13:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு..! அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345"></link>
            <id>https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நிதிக்கழு முன் முன்னிலையாகி சாட்சியமளித்த அவர், பாதுகாப்புத் துறைக்காகக் கோரப்பட்டுள்ள 1.5 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில்,
ஈரான் போருக்காக மட்டும் கிட்டத்தட்ட 70 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

கடந்த மே மாதம் அமெரிக்க நிர்வாகம் அறிவித்த 29 பில்லியன் டொலரை விட தற்போதைய செலவு கணக்கீடு 8 பில்லியன் டொலர் அதிகமாகும்.
</p><p>
இதேவேளையில், ஆற்றல் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்காவிற்கு
ஏற்படும் மறைமுக செலவு 150 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் என மூடிஸ்
அனலிடிக்ஸ் கணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3bb5092-8972-45c9-a35f-86d626ce29c7/26-6a60c7bb7471b.webp' /></p><p>
போரினால் அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்புகளில் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதாகவும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு
அமைப்புகளின் உற்பத்தியை விரைவுப்படுத்த கூடுதல் நிதி தேவை என்றும் ஹெக்செத்
வலியுறுத்தியுள்ளார்.
</p><h2>
தொடர் தாக்குதலுக்கான இருப்பு பற்றாக்குறை</h2><p>

கடந்த வாரம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான்
மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 

அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்
மற்றும் அணுசக்தி தொடர்பான “பிகேக்ஸ் மவுண்டன்” பகுதி மீது கடும் தாக்குதல்
நடத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adce2bb-7bf4-4f20-b70f-2743a5b8d5d4/26-6a60c7bc3a42b.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்த பிரம்மாண்டமான நிதி
கோரிக்கை தெளிவற்றதாக இருப்பதாக ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கேள்விகளை
எழுப்பியுள்ளனர்.</p><p>

ஈரானும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தொடர்ந்து பதிலடித்
தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டாலினைச் சந்தித்தார் சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-met-mk-stalin-1784726321"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-met-mk-stalin-1784726321</id>
            <summary type="text">தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின்
முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக்
கலந்துரையாடினார்.
</p><p>
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் விசேடமாக தமிழகத்தில் ஏதிலிகளாக இருக்கும்
இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த பல திட்டங்களையும், டித்வா புயல்
சமயத்தில் இலங்கை மக்களுக்குத் தமிழக மக்கள் சார்பில் அனுப்பிய உதவிகளையும்
இந்தச் சந்திப்பின்போது சுமந்திரன் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று 04 என்புக் கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-skeletons-identified-in-semmani-today-1784726135"></link>
            <id>https://tamilwin.com/article/04-skeletons-identified-in-semmani-today-1784726135</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(22.07.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(22.07.2026) நடைபெற்றது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம் 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்</h2><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,&nbsp; 455 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e3eb22-41fc-4de9-bf15-3a10e9eb1759/26-6a60c41ea25cf.webp' /></p><p>
அதேவேளை இன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட
குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட
நிபுணர் குழுவினருடன் அகழ்வுப்பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என
சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf303aa-6c82-493d-978d-ff854bbab53b/26-6a60c41fc16de.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6a92b7-91e7-434f-b988-b20f122a7076/26-6a60c420a1a14.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348805be-7b85-4686-87a0-105c24d623d1/26-6a60c4217f65b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் வார்த்தைகளில் திருப்தி இல்லை..! காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-word-unsatisfactory-says-missing-persons-leader-1784721537"></link>
            <id>https://tamilwin.com/article/eu-word-unsatisfactory-says-missing-persons-leader-1784721537</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்றையதினம்(22.07.2026) ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து
மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பிரச்சினைகளுக்கான தீர்வு&nbsp;</h2><p>அவர் மேலும்
தெரிவிக்கையில்,
</p><p>
எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தங்களால் முடியுமா என்று கூற
முடியாது. தங்களால் இயன்றவரை எங்களுக்காக வேலை
செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce9dca9-af60-4d51-a809-e78fca185c5c/26-6a60b8af3c48f.webp' /></p><p>இங்கே நடந்தது
இனப்படுகொலைதான் என்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும், சர்வதேசத்தின் ஊடான
நீதி விசாரணை தான் எங்களுக்கும் வேண்டும். </p><p>உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக
விசாரணைகளையோ, OMP அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.</p><p></p><h2>சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
நாங்கள் எத்தனையோ ஆணை குழுக்களை சந்தித்துள்ளோம், எத்தனையோ ஆட்சியாளர்களை
சந்தித்துள்ளோம். இவை எல்லாவற்றையும் கடந்து தான் நாங்கள் சர்வதேச
விசாரணையை கோரியுள்ளோம். </p><p>சர்வதேசம் மீது உள்ள நம்பிக்கையில் தான் நாங்கள் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9d29a7-4f82-4e61-bcd8-406731917ba8/26-6a60b8afe2523.webp' /></p><p> </p><p>அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். கொடூர
யுத்தத்தின் பின்னர் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை
சர்வதேசம்தான் விசாரணை செய்ய வேண்டும். </p><p>கொலையாளிகள் ஒருபோதும் எமக்குத்
தீர்வினை தர மாட்டார்கள். அவர்கள் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்
நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நடைப்பெறுகின்ற குற்றச்செயல்களில் அரசுக்கும் தொடர்புள்ளது! சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-involved-ongoing-crimes-alleges-premachandran-1784719528"></link>
            <id>https://tamilwin.com/article/govt-involved-ongoing-crimes-alleges-premachandran-1784719528</id>
            <summary type="text">நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் செம்மணிப் படுகொலை ஆகிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில் அதனைத்
திசை திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் செம்மணிப் படுகொலை ஆகிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில் அதனைத்
திசை திருப்புவதற்காகவே புத்தர் கோயிலைக் கட்டுகிறார்களோ என சந்தேகம் எழுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நம்பிக்கையில்லாத் தீர்மானம்</h2><p>
</p><p>
அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்(20.07.2026) நீதி
அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பேரவைத்தலைவரிடம்
கையளிக்கப்பட்டது. </p><p>அது ஒருபக்கம் இருக்க, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தூதுவர்கள் இன்று(22.07.2026) செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea092b9-2018-4153-bd05-9081d38471f8/26-6a60aef79c1bb.webp' /></p><p>
</p><p>
அங்கு 450ற்கும் மேற்பட்ட
உடலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்றில் ஒரு
புத்தர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது உண்மை வெளிப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை மூடிமறைப்பதற்கான ஒரு செயலை செய்வதாகவே தோன்றுகிறது.
</p><p>
ஏற்கனவே
கன்னியா விடயத்தைப் பொறுத்தவரையில், 
அங்கு கட்டுமானங்கள் எதுவும் செய்யக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><h2>புத்தர் கோயில்&nbsp;</h2><p>
</p><p>அங்கு ஒரு புத்தர் கோயில் கட்டுவதற்காக நேற்றைய தினம்(21) அடிக்கல் நாட்டும்
நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இதனை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே
இருந்த நீதிமன்ற ஆணைகளுக்கு அப்பாற்பட்டுச் சென்று, இராணுவமோ அல்லது புத்த
பிக்குகளோ இதனை தங்களுடைய விருப்பத்திற்குச் செய்கிறார்களா, இல்லை அரசாங்கத்தினுடைய
வழிகாட்டுதலின்படி இவை நடைபெறுகிறதா என்றொரு கேள்வி
எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd3195c-8ed9-4aaf-881b-33793666897f/26-6a60aef84bff0.webp' /></p><p>
</p><p>
இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென்று நேற்றைய தினம்(21) அதைக் கட்ட
வேண்டிய ஒரு தேவை ஏன் ஏற்பட்டது? 

அத்துடன் செம்மணிப் புதைகுழி தொடர்பாகவும் ஒரு பன்னாட்டு நீதி
கோரப்படுகிறது. </p><p>அரசாங்கம் நிச்சயமாக அதற்கு ஒரு தீர்வைக் கொண்டுவர மாட்டாது.
ஏனென்றால் இந்த அரசாங்கத்திற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 25 நாட்கள் கடலில் மிதந்த புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு: 140க்கும் மேற்பட்டோர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-mauritania-140-dead-refugee-boat-sinks-1784724826"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-mauritania-140-dead-refugee-boat-sinks-1784724826</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி அகதிகள் மற்றும்
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் தத்தளித்ததில், 140க்கும்
மேற்பட்டோர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி அகதிகள் மற்றும்
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் தத்தளித்ததில், 140க்கும்
மேற்பட்டோர் உயிரிழந்தும் மாயமாகியும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள்
முகமை தெரிவித்துள்ளது.
</p><p>
தி கம்பியாவின் பாஃபுலோட்டோ பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த நடுக்கடல் படகு,
எரிபொருள் தீர்ந்ததால் சுமார் 25 நாட்கள் கடலிலேயே மிதந்து தத்தளித்துள்ளது.</p><p></p><h2>&nbsp;கடற்பகுதியில் சோகம்</h2><p>
</p><p>
ஜூலை 18 அன்று மவுரித்தேனியாவின் நௌதிபூ துறைமுகத்தை வந்தடைந்த போது, அதில் 38
பேர் மட்டுமே உயிருடனும் பலரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

உயிர்தப்பியவர்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து
தவிக்கும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60d0f59-0717-4169-b72a-c7da61b928d8/26-6a60c1a340bd1.webp' /></p><p>
</p><p>உயிரிழந்தவர்கள் அனைவரும் சஹாரா ஆபிரிக்கப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மவுரித்தேனியக் கடலோரக் காவல் படையின் தகவலின்படி, 160 பயணிகளுடன் புறப்பட்ட
இந்த படகில் 122 பேரைக் காணவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை 14 முதல் 18 வரை மவுரித்தேனியா கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மூன்று
வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகளில் 387 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும்,
இந்த பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>140க்கும் மேற்பட்டோர் பலி</h2><p>
</p><p>
ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கேனரி தீவுகளை அடையும் இந்த
அட்லாண்டிக் கடல் பாதை, உலகிலேயே மிகவும் அபாயகரமான புலம்பெயர்வுப் பாதைகளில்
ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
தகுதியற்ற மற்றும் அதிக கூட்ட நெரிசல் கொண்ட படகுகளில் நீண்ட தூரம் பயணிப்பதே
அதிக அளவிலான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb81fae3-96e1-48df-89d0-3a1cc768530f/26-6a60c1a3e5c82.webp' /></p><p>
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் மவுரித்தேனிய அரசு எடுத்து வரும் கடுமையான
நடவடிக்கை காரணமாக, பெரும்பாலான அகதிகள் நீண்ட மற்றும் அதிக ஆபத்தான
கடல்பாதைகளைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
</p><p>
இளைஞர்கள் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்க கல்வி மற்றும்
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய ஐரோப்பிய ஒன்றியத் தூதர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-ambassador-strained-relations-in-semmani-1784724570"></link>
            <id>https://tamilwin.com/article/eu-ambassador-strained-relations-in-semmani-1784724570</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி,
நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,
வலிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி,
நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில்
சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.
</p><p>இதன்போது&nbsp;ஐரோப்பிய ஒன்றியத் தூதர்&nbsp;செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>தூதுவர்களிடம் கோரிக்கை மனு</h2><p>
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு
வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, இன்று புதன்கிழமை
முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி,
பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய
ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் என 8 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m8woVZt9kng" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தூதுவர்களின் வருகையையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கத்தினரும் சிவில் அமைப்புக்களும் இணைந்து செம்மணி - சித்துப்பாத்தி
மயானத்துக்கு முன்னால் ஏ - 9 வீதியோரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
</p><p>
இதன்போது, போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற தூதுவர்கள் குழுவினர்,
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயான வாயிலில் வைத்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
</p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ உறவினர்களை
ஆரத்தழுவிக் கண்கலங்கியமையுடன், அவர்களின் கோரிக்கைகளையும் கவனமாகக்
செவிமடுத்தார்.</p><p> தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் சார்பில்
தூதுவர்களிடம் கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாவிற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிரந்தரத் தடை விதிக்கப்படலாமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-for-visa-applicants-1784724005"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-for-visa-applicants-1784724005</id>
            <summary type="text">அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிவிப்பில் மேலும்,</p><p>
சிறிய குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா மறுப்புக்கு வழிவகுக்கும். தூதரக அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணி விபரங்கள் இருப்பதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be2417d-a7c4-43a1-8ec2-d92bf9ae5cee/26-6a60bf5068866.webp' /></p><h2>உண்மையை மட்டுமே வழங்க வேண்டும்</h2><p>
</p><p>
அத்துடன் விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழுமையான உண்மையை மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
பொய்யான தகவல்களை அளித்தால் எதிர்காலப் பயணங்கள் நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Criminal convictions can permanently bar you from entering the United States. Even minor offenses can trigger visa denials. Consular officers have access to your criminal background and will discover past violations or arrests. Tell the truth on your application and in your… <a href="https://t.co/wpDQdIFLEn">pic.twitter.com/wpDQdIFLEn</a></p>&mdash; U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) <a href="https://x.com/USEmbSL/status/2079819083093053869?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்று அருகே புதிய கட்டுமானம் - விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த தொல்பொருள் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-construction-near-kaniya-hot-spring-1784725247"></link>
            <id>https://tamilwin.com/article/new-construction-near-kaniya-hot-spring-1784725247</id>
            <summary type="text">திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது
தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அந்த இடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது
தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அந்த இடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வுகள் இன்று(22.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார இதில் முதன்மை
விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டு வைத்துள்ளார்.</p><p></p><p> 

அத்துடன், வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுஷ்டானம் வழங்கி வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f565a5c9-6cbe-4085-adb2-ed615576aef3/26-6a60bf841db02.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம
சேவகர், இஸ்லாமிய மத குரு மற்றும் துறைசார் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். </p><h2>

வரலாற்றுப் பின்னணியும் காணி உரிமையாளரின் வாதமும்</h2><p>
சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ்மொழி மூலம், தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த
கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டது என்று வரலாறுகள்
கூறுகின்றன. </p><p>

அதன் பின்னர் அந்த இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்
பிள்ளையார் கோயில் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தப்பட்டுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1005437725610145%2F&show_text=true&width=476&t=0" width="476" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>இந்தக் காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது எனக்
குறிப்பிடும் உரிமையாளரான கோகிலவதனி கணேஷ் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p> 


கடந்த 2002 ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய நாம் முயன்றபோது
அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் நான் தொல்பொருள்
திணைக்களத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்தேன்.</p><p> 

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் அந்த இடத்தில் எந்தக் கட்டுமானங்களும்
அமைக்கக் கூடாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார் என்றார். 

எனினும், தற்போது நீதிமன்ற உத்தரவையும் மீறி குறித்த இடத்தில் கட்டுமான
வேலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. </p><h2>



தொல்பொருள் திணைக்களத்தின் விளக்கம்</h2><p>
அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் உள்ள புராதன அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்து, அந்தப் புராதன
கட்டுமானத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது
என திருகோணமலை மாவட்ட தொல்பொருள்
திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல. இலங்கையின்
புராதன தொல்பொருள் இடமொன்றை பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dbfc07-bbc9-4397-95a6-f4b37827f555/26-6a60bf8608363.webp' /></p><p> </p><p>இதற்குச் சிலர்
இன, மத சாயங்களைப்பூச நினைக்கின்றனர். அது அவ்வாறான ஒன்றல்ல.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் 1,000 தொல்லியல் பகுதிகளைப்
பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவர பிரதேச
செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள
சோழர்காலத்தைச் சேர்ந்த ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும்
வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
</p><p>
 எனவே, தொல்லியல் திணைக்களம் மத,
இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd895a6b-9a3a-46be-b3ca-8f8252e47c87/26-6a60bf853645c.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்! 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-passport-hits-highest-ranking-in-decade-1784722276"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-passport-hits-highest-ranking-in-decade-1784722276</id>
            <summary type="text">இலங்கை கடவுச்சீட்டின் (Passport) தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடவுச்சீட்டின் (Passport) தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி, உலக நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் அல்லது சென்ற இடத்திலேயே விசா (Visa on Arrival) பெற்றுக்கொண்டு 39 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கை கடவுச்சீட்டு</h2><p>
</p><p>

Henley Passport Index என்பது உலக நாடுகளின் கடவுச்சீட்டு வலிமையை அளவிடும் முக்கியமான தரவரிசைகளில் ஒன்றாகும்.</p><p>

இந்த தரவரிசை, முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.

இந்த தரவரிசை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b959f164-3217-4cd3-a16a-0d6896b3b3c2/26-6a60b86ad37f7.webp' /></p><p>
</p><p>
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை பெற்றுள்ள சிறந்த தரவரிசை இதுவாகும்.</p><p>

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
</p><p>
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலங்கை 96ஆவது இடத்திலும், 2023 ஆம் ஆண்டு 100ஆவது இடத்திலும், 2022 ஆம் ஆண்டு 102ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது.

2026 ஆம் ஆண்டின் 94ஆவது இடம், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை பெற்றுள்ள சிறந்த நிலையாகும்.</p><p></p><h2>மிக உயர்ந்த தரவரிசை</h2><p>

2017 ஆம் ஆண்டு இலங்கை 95ஆவது இடத்தில் இருந்தது.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு 99ஆவது இடத்துக்கு சரிந்த இலங்கை, 2019 ஆம் ஆண்டு 96ஆவது இடத்துக்கு முன்னேறியது.
</p><p>
2020 ஆம் ஆண்டு 97ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது.

2021 ஆம் ஆண்டின் 107ஆவது இடத்திலிருந்து தற்போது 2026 ஆம் ஆண்டு 94ஆவது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cea7a7e-3916-4966-981f-f6e000d8b6c9/26-6a60b86bbd357.webp' /></p><p>
அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை கடவுச்சீட்டின் தரம் 13 இடங்கள் உயர்ந்துள்ளது.
</p><p>

இலங்கையின் இந்த முன்னேற்றத்துக்கு, அதிகரித்து வரும் சர்வதேச தொடர்புகள், சுற்றுலா வளர்ச்சி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் பல நாடுகளுடனான நல்லுறவுகள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
</p><p>
இலங்கையின் இந்த முன்னேற்றம், நாட்டின் சர்வதேச தொடர்புகள் மற்றும் உலக நாடுகளுடனான நம்பிக்கை அதிகரித்து வருவதற்கான ஒரு சாதகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு அளிப்பது பாராட்டத்தக்கது - ஆளுநர் நா.வேதநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-business-1784722517"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-business-1784722517</id>
            <summary type="text">எமது பிரதேசத்தை சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின்
உற்பத்தி பொருட்களை, கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நேரடியாகக்
கொள்வனவு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது பிரதேசத்தை சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின்
உற்பத்தி பொருட்களை, கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நேரடியாகக்
கொள்வனவு செய்வதற்குரிய வணிக இணைப்பை ஏற்படுத்தும் இலங்கை தேசிய
ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
</p><p>
இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச்
சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண
மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (22.07.2026) நடைபெற்றது. </p><p>இந்த கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட
உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>உற்பத்திகளுக்கான உரிய விலை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை
என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை
கிடைப்பதில்லை. விவசாயம் மற்றும் கடல்வளம் என்பன எமது மாகாணத்தின் தனிப்பெரும்
வளங்களாக உள்ளபோதிலும், விவசாய உற்பத்திகளைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது
அவற்றை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ போதிய
வசதிகள் இங்கு இல்லை.</p><p> இவ்வாறானதொரு பின்னணியில், சந்தைப்படுத்தலில் எமது
உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண இத்தகைய வணிக
இணைப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்ந்தும் அதே நிலையிலேயே
தேங்கி நிற்காமல், அவர்கள் வளர்ச்சி கண்டு ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க
வேண்டும். அதற்காக எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு
நாம் தயாராக உள்ளோம். </p><p>முயற்சியாளர்களும் இந்த இலக்கை முழுமூச்சாகக் கொண்டு
தங்களது பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதி
செய்வதற்கான செயன்முறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. இது தொடர்பில் உரிய திணைக்களங்களின் சாதகமான ஒருங்கிணைப்பும்
எமக்குக் கிடைத்து வருகின்றது.</p><p></p><h2>கைத்தொழில் பேட்டைகளை நிறுவுதல்</h2><p> </p><p>சாத்தியமானளவு மிக விரைவில் இது நடைமுறைக்கு
வரும்.

நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகச் சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சியாளர்களே திகழ்கின்றனர். எமது வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம்
மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் இவர்களுக்கான பிரத்தியேக கைத்தொழில்
பேட்டைகள் இல்லை. சில தினங்களுக்கு முன்னர் இங்கு வருகைதந்திருந்த கைத்தொழில்
மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க
அபயசிங்கவிடம் இது தொடர்பில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். </p><p>அவர் ஏனைய
மாவட்டங்களிலும் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வளர்த்தெடுக்கும் பணிகளை நாம்
தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம். இவ்வாறான வணிக இணைப்பு
முயற்சிகள் நிச்சயமாக அவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் எனத்
தெரிவித்தார்.</p><p>

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், இலங்கை தேசிய
ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கௌசல் ராஜபக்ச, கைத்தொழில்
அபிவிருத்திச் சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.சிவகெங்காதரன், இந்தியத்
துணைத்தூதரக அதிகாரி, கைத்தொழில் முயற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தக
சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:34:57+00:00</updated>
        </entry>
    </feed>
