<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T17:29:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால் ட்ரம்ப் வெளியிட்ட வரைபடப் பதிவால் சர்ச்சை: ஐஸ்லாந்து கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635</id>
            <summary type="text">அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் தூதுவரை அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தனது அதிருப்தியைத்
தெரிவித்துள்ளது.
</p><p>
டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட
வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய
அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கொடியால்
மூடப்பட்டு 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என பெயரிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வரைபடப் பதிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வரும்
கருத்துக்கள் ஏற்கனவே வாஷிங்டன் மற்றும் டென்மார்க் இடையே ராஜதந்திர
பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>கண்டனம்</h2><p>
</p><p>
கிரீன்லாந்து மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக மாற விரும்பவில்லை என
டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ffe90c-4b3c-4080-8f17-442eb62384fb/26-6aa0422149055.webp' /></p><p>

ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில
மணிநேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p>

எனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையோ அல்லது தூதரகங்களோ
உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நாமல் ராஜபக்சவுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பூஜை வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446"></link>
            <id>https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.</p><p>
இன்று (8.9.2026) புன்னைச்சோலை காளி கோயில் மாவட்ட அமைப்பாளர்
சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.</p><h2>விசேட ஆசீர்வாத பூஜை</h2><p>
</p><p>இது தொடர்பில் மாவட்ட அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் பயணிக்க
உள்ள அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு பூராகவும் அனைத்து மத
தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதத்தை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef6e7f1-9ce9-4b4c-a34d-a0a4b41f2718/26-6aa038d8c2f24.webp' /></p><p> அதன்
பிரகாரம் இன்று மட்டு புன்னைச்சோலை காளி கோயில் இந்த விசேட ஆசீர்வாத பூஜையை
இன்று ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141</id>
            <summary type="text">எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரின் விபரங்கள் இன்றைய நிலையில் வெளிவந்துள்ளது.
</p><p>எயார்பஸ் ஊழல் தொடர்பில் முதன் முதலில் தகவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஊடகவியலாளருமான ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணம்.
</p><p>இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் ராஜபக்சர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தான் ரஜீவ பிரகாஷ் ஜயவீர. அவர் எவ்வாறு இறந்தார் என்ற பதிவுகள் இல்லை. </p><h2>
</h2><p></p><h2>முதன் முதலில் இதை வெளிப்படுத்தியவர்</h2><p>பின்னர் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது என வழக்கு முடிக்கப்பட்டது.மற்றையது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம். </p><p>இவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் அநேகர் அறிவர்.ஆனால் நாடே அறியாமல் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த நபர்இ இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் ராஜபக்சர்களின் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1476e2e-2420-4e81-912a-ecbc47f9d61a/26-6aa03b84a5daa.webp' /></p><p> </p><p>இவர் சிரந்தி ராஜபக்சவிற்கு எதிரான 'சிரிலிய' வழக்கு 'சில் ரெதி' (தானம் வழங்கும் வெள்ளை புடவை) நிதி மோசடி வழக்குகளில் அரசு சார்பில் முன்னிலையானவர். இவர்தான். மேலும் லிட்ரோ எரிவாயு வழக்கு - மிக் விமான கொள்வனவு வழக்குகள் போன்றவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து 
வாதாடியவர்.
</p><p>2019 இல் ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைச் சிறையில் அடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அலரிமாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவிலிருந்து இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கொண்டே சம்பளம் பெற்றார் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. </p><h2>
அறிப்படாத இரு மரணங்கள்</h2><p>ஊடகங்களில் அதைப் பரப்பி இவரன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். மறுபுறம் ராஜபக்சர்களின் ஆதரவாளர்களுக்கு நடந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இவரை ஒரு பிரதிவாதியாக அனுப்பி முடக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முடக்கினர்.
</p><p>அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் இவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். திடீரென உயிரிழப்பது நடக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் இக்காலத்தில் திடீரென இறப்பது என்பது படுகொலை செய்யப்படுவதற்கான ஒரு விசேட அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f41c91-cf8f-4880-b5ec-8213f7a76535/26-6aa03b8644647.webp' /></p><p> </p><p>
கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜயநாயக்கவின் நிறுவனத்திற்கு 2.5 பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.அந்தக் கணக்கிலிருந்து மூன்று இடங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>
சேபிள் விஷன் (Sable Vision) - அது நிமால் பெரேராவிற்குச் சொந்தமான சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம். அடுத்து எஸ்.எல். எக்ரோ (SL Agro) - அதுவும் சிங்கப்பூரில் உள்ள ஒரு கணக்கு.</p><h2>உயிரிழப்பு</h2><p>மற்றொன்று நேரடியாகக் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலிய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு மூன்று இடங்களுக்குப் பணம் சென்றுள்ளது.
எஸ்.எல். எக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் யோஹன் விஜயநாயக்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9987a4-97e0-4de3-8f69-d4af650aa248/26-6aa03b8592877.webp' /></p><p> </p><p>இந்த நபரை யாருக்கும் தெரியாது.ஆனால் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்.
இந்த நபரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொரோனா தொற்றினால் இறந்ததாக முத்திரைக் குத்தப்பட்டு பிரேதப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை.
</p><p>இவர் 27 வயது இளைஞர். எனவே 27 வயது நபர் திடீரென உயிரிழப்பது சந்தேகத்திற்குரியது அங்கும் ஒரு மர்மம் உள்ளது.</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருள்காட்சி வழங்கிய வேல் பெருமான் – நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சப்பரத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை மாலை சப்பர திருவிழா நடைபெற்றது.
</p><p>
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது.</p><h2>சப்பரத் திருவிழா</h2><p> இன்றைய தினம் மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று ,
தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி ,
சப்பர திருவிழா இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b3f504-dd53-467b-8fe5-62ca1c0a5c6e/26-6aa036b8ed0bd.webp' /></p><p>
</p><p>
நாளைய தினம்(9) புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி
,தொடர்ந்து ஆறுமுக சுவாமி காலை 07 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு
அருட்காட்சியளிப்பார்.
</p><p>
தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்ச கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின்
அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடுவார்கள்.

காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது
நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814</id>
            <summary type="text">போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கிடையிலான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது (6.9.2026) இடம்பெற்றது.</p><p>
இந்நிகழ்வில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் நலன்புரிச் சங்க நிர்வாகிகள் மற்றும் போராளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</p><h2>கருத்துப் பரிமாற்றங்கள்</h2><p>குறிப்பாக, எமது மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி மற்றும் ஜனநாயக அரசியல் தொடர்பான முக்கியமான விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4c07b2-095f-40ae-bc1b-44942feec3d2/26-6aa02f89db5f3.webp' /></p><p>
</p><p>முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, ஒற்றுமையுடனும் ஜனநாயக வழியிலும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>போராளிகளின் நலனையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னிறுத்திய இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T15:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114</id>
            <summary type="text">கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்தோடு, காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001</id>
            <summary type="text">நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&amp;nbsp;குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&nbsp;</p><p>குறிப்பாக, அரகலய போராட்டத்தின் போது, பலரின் முகம் மக்கள் மனதில் அதிகம் பதிந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்திலும் சரி பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களிலும் சரி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டங்களிலும் சரி ஒரே நபர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.&nbsp;</p><p>இது உண்மையில், சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்பதோடு இதன் பின்னணி குறித்து பல கேள்விகளும் எமக்கு எழுகின்றன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தகவர்களில் ஒருவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில், இன்று கலந்து கொண்டு&nbsp;ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-S-MtjcXCDU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:04:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் டித்வா வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400"></link>
            <id>https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400</id>
            <summary type="text">&amp;nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவசரத் தேவை குறித்து தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
</p><p>
டித்வா வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,138 முழுமையாக
சேதமடைந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற சேதமடைந்த வீடுகளின்
கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, அத்துடன் மீள்குடியேற்ற
வீட்டுத்திட்டங்களும் தற்போது மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றன.</p><p> இந்த திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்வதற்கு போதுமான
தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை.

இருப்பினும், தற்போதைய தொழில்நுட்ப பணியாளர் நிலைமை மிகவும் போதாததாக உள்ளது.
</p><p>தற்போது, மாவட்டத்தில் ஒரு (01) தொழில்நுட்ப அலுவலர் மற்றும் நான்கு (04)
தொழில்நுட்ப உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். </p><p>அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்
தொகுதிக்கு எதிராக, தொழில்நுட்ப அலுவலர்களுக்கு ஏழு (07) வெற்றிடங்களும்,
தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு நான்கு (04) வெற்றிடங்களும் உள்ளன.</p><p>

இந்த நிலைமை வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாக பாதித்து,
திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் மாவட்ட வீட்டு இலக்குகளை அடைவதை பாதகமாக
பாதிக்கலாம்.</p><p>

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் டித்வா வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதன்
அவசரத்தை கருத்தில் கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு போதுமான தொழில்நுட்ப
அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை உடனடியாக நியமிக்க / நிலைநிறுத்த
தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தங்கள் தலையீட்டை அன்புடன் கோருகிறேன்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T14:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் வெளியானது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267</id>
            <summary type="text">ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.

இதனை தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.
</p><p>
இதனை தற்போது இரசிகர்கள் கண்டு மகிழலாம்.</p><p>குறித்த பாடலானது, தேனிசை தென்றல் தேவாவினால் பாடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்களும் தமது படைப்புக்களை வழங்கியுள்ளனர்.</p><p>
போராட்டம் திரைப்படத்தின், "சோறு தான் முக்கியம்” என்ற இந்தப் பாடல் பலரை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tFxiDagMXuo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T14:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028</id>
            <summary type="text">இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.</p><p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்தும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று
நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்தார்.
</p><p>
விசேட விமானத்தில் இன்று(8.9.2026) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண
ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><h2>ஜனாதிபதியுடன் சந்திப்பு</h2><p>

எதிர்வரும் 10 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள்
மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் மூத்த
அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c215f8d8-61d3-40f9-8af0-8812d2486138/26-6aa012fedc177.webp' /></p><p>&nbsp;பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் அவர்
சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136"></link>
            <id>https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 ஊழல் விசாரணை ஆணைக்குழு</b></h2><p>இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfd58f6-158c-4e64-823d-ac4ede5572a9/26-6a9f8af8dc64c.webp' /></p><p>மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:</p><p>

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h3><b>மேலதிக அழுத்தம்</b></h3><p>அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0a2a5b-4255-4bb7-b1ca-8e82989806c3/26-6a9f8c13865f4.webp' /></p><p>வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekar-met-anandasangari-kilinochchi-1788871041"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekar-met-anandasangari-kilinochchi-1788871041</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சந்தித்து கலந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சந்தித்து கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்முரையாடலானது இன்றையதினம்(8) தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>

இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர்
அன்புடன் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும்
கேட்டறிந்துகொண்டார்.</p><h2>தற்போதைய நிலைமை</h2><p>
</p><p>
இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ba5b7f-e142-406c-8b4d-f7c9d0d8e8ca/26-6aa007d619b39.webp' /></p><p>
</p><p>
நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து அவருடன்
கலந்துரையாடியமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-the-country-s-official-reserve-assets-1788868164"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-the-country-s-official-reserve-assets-1788868164</id>
            <summary type="text">நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><h2>நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம்</h2><p>


கடந்த ஜூலை மாத இறுதியில் 6,600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த நிலையிலேயே இந்த நீடித்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa41b6ce-dae4-40d8-94f2-eee63758fefe/26-6a9ffc326e3b1.webp' /></p><p>


சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த நிதியும் இந்த மொத்தக் கையிருப்பில் உள்ளடங்கியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XsEcQGgNk0o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்காக ரணிலுடன் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம்.. அம்பலப்படுத்தும் அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-case-since-ranil-gov-vijitha-herath-1788867274"></link>
            <id>https://tamilwin.com/article/namal-case-since-ranil-gov-vijitha-herath-1788867274</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்பட்டது அல்ல என்றும், அது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்பட்டது அல்ல என்றும், அது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெளிவுபடுத்தினார்.</p><p>

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்பதை வலியுறுத்திக் கூறினார்.</p><h2>ரணில் ஆட்சிக்காலம்&nbsp;</h2><p>

"இது நாங்கள் தொடர்ந்த வழக்கு அல்ல. இது முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58dab58-eb7c-4c51-8bd8-444dd8d35aa2/26-6a9ffb688b0fb.webp' /></p><p> அவர் இதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது," என்று ஹேரத் கூறினார்.

முந்தைய அரசாங்கம் இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளையோ மேற்கொள்ளத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், இதனை "அவர்களுக்கு இடையிலான ஒரு உடன்பாடு" என்றும் வர்ணித்தார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதும், இதற்கு முன் கவனிக்கப்படாமல் இருந்த அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:14:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-year-old-boy-dies-1788868499"></link>
            <id>https://tamilwin.com/article/six-year-old-boy-dies-1788868499</id>
            <summary type="text">பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாலம் அமைப்பு பணிகளின் மேற்பார்வையாளரான தொழிநுட்ப உதவியாளரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற மதுஞ்சலா கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 6ஆம் கட்டை நெடியமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழியொன்றுக்குள் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.</p><h2>சிறுவர் உயிரிழப்பு</h2><p>
</p><p>
6ஆம் கட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் தரம் ஒன்றைச் சேர்ந்த நாகராசா நவதீபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57c7be92-ea6f-4a7b-97b6-a1f0a2410abb/26-6a9ffb4cbadc9.webp' /></p><p>
</p><p>
குறித்த பாலம் 6 கட்டைப்பிரதேசத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் பாலம் அடைப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. இப்பாலத்திலத்திற்கு அருகில் பாரிய குழி தோண்டப்பட்டுள்ளது.</p><p> அக்குழியில் நான்கரை அடி நீர் உள்ளது.

அக்குழியினை பார்வையிட்ட சிறுவன் கால் சறுகி உள்ளே விழுந்துள்ளார். அதிலிருந்து சற்றுநேரத்தில் சிறுவனின் தயார் சிறுவனைத் தேடிச் சென்ற வேளை குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.</p><h2>கடும் கண்டனம்</h2><p>
</p><p>
சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் தோண்டப்பட்ட குழிகள் உள்ள பிரதேசத்தில் அபாய அடையாளங்கள் எதுவும் இடவில்லையென பொது மக்கள் கவலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e666f14-9462-4606-ae75-7eb243fd89e3/26-6a9ffb4d89266.webp' /></p><p>
</p><p>
குறித்த பாலம் நிர்மாணிக்கும் இடத்தில் அபாய அறிவிப்புக்கள் தொடர்பான பதாகைகள் எதுவும் இடப்படவில்லை என்பதனால் மேற்பார்வையாளர் ஆயித்தியமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
</p><p>
இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் குறித்த தொழிநுட்ப உதவியாளர் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:11:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி லிமினி கலந்து கொண்டால் அரசியலில் ஏற்படப்போகும் அதிரடி திருப்பம்..! திடீரென சிஐடிக்கு முக்கிய முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-wife-files-complaint-1788864277"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-wife-files-complaint-1788864277</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.</p><p> 

நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ச்சியாக அநாகரிகமான அவதூறுப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்து அதற்கு எதிராக கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.</p><p>

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (08) சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே நாமல் ராஜபக்‌ச ரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்தோம்.

தற்போது அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4181a81-d66e-4ecf-956d-62d7e48b35c4/26-6a9ff30e2fd1e.webp' /></p><p> </p><p>

தேசிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் நாமல் ராஜபக்‌ச இல்லாத குறையை நிவர்த்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச, ஷிரந்தி ராஜபக்‌ச, கோட்டாபய ராஜபக்‌ச, நாமல் ராஜபக்‌சவின் சகோதரர்கள் மற்றும் நாமல் ராஜபக்‌சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச உள்ளிட்ட பலரை களமிறக்குமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p><p>

குறிப்பாக நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து வலுவாக எழுகிறது. கடந்த காலங்களில் நாமல் ராஜபக்‌சவுடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரது ஆளுமை, மொழிவளம் மற்றும் வணிக அறிவு என்பவற்றை மக்கள் அவதானித்த காரணத்தினாலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>அவதூறு பரப்பல்</h2><p>
</p><p>
ஒரு நாட்டின் தலைவரின் மனைவி மக்கள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆளுமையும் திறமையும் அவரிடம் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல் கும்பல், எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e2b1af-dab1-423a-b4b0-cba99e2b0f6f/26-6a9ff30edc9d8.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, அவரது தந்தை திலக் வீரசிங்க மற்றும் அவரது வியாபாரங்களை இலக்கு வைத்து பாரிய அசத்திய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். திலக் வீரசிங்க என்பவர் திறமையான, நேர்மையான, குணநலன் மிக்க, நாட்டிற்குப் புகழைத் தேடிக்கொடுத்த ஒரு வர்த்தகர் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
</p><p>
நாட்டின் தலைவர்களின் குடும்பங்களை இலக்கு வைத்து இவ்வாறு சேறுபூசும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளோம். 

பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறுகளையும் இழிவான செயற்பாடுகளையும் தடுப்பதற்கான அவசியமான சட்டத் திருத்தங்கள் நாமல் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவரப்படும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:38:50+00:00</updated>
        </entry>
    </feed>
