<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T03:16:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் சஜித் விசேட சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maintaining-close-relations-between-two-countries-1789008929"></link>
            <id>https://tamilwin.com/article/maintaining-close-relations-between-two-countries-1789008929</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாசக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில்
நடைபெற்றது.</p><p>

இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும்
பன்முகத் தொடர்புகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>அத்துடன் பரஸ்பர
நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம்
குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
</p><h2>இரு நாட்டு மக்களுக்கு</h2><p>
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாசார மற்றும்
மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச, இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான, பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான
உறவைப் பேணுவதன் அவசியத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec78647f-e804-4911-83a0-82e0405528b6/26-6aa21e2d8f913.webp' /></p><p>இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவ வேண்டிய அமைதி, பாதுகாப்பு, நிலையான
தன்மை மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய அபிவிருத்தி
மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்
தொடர்பாகவும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
</p><p>
பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின்
அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான மற்றும் பரஸ்பர
நன்மை பயக்கக்கூடிய உறவைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை
எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
</p><p>
மேலும், அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் மூலம் இரு
நாட்டு மக்களுக்கிடையேயான நட்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T03:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bomb-attack-on-dheiwala-office-1789008766"></link>
            <id>https://tamilwin.com/article/bomb-attack-on-dheiwala-office-1789008766</id>
            <summary type="text">தெஹிவளை, களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை, களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
களுபோவில பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நண்பரின் வீட்டின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>நேற்று இரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கைக்குண்டை வீட்டின் பிரதான வாயிலுக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>
கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் முன்பக்க இரண்டு ஜன்னல்களுக்கும் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
</p><p>தாக்குதலுக்கு இலக்கான வீட்டில் வசிக்கும் தரிது ரவிஷான் என்பவர், 'திசாநாயக்க முதியான்சேலாகே அவிஷ்க ஏஷான்' எனும் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் நண்பர் எனவும், அந்த போதைப்பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>சம்பவம் இடம்பெற்ற போது 56 வயதான பெண் ஓருவர் மட்டுமே வீட்டில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>இச்சம்பவம் தொடர்பில் கொஹுவளை பொலிஸ் நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T02:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-home-loan-scheme-for-to-work-abroad-1789006678"></link>
            <id>https://tamilwin.com/article/new-home-loan-scheme-for-to-work-abroad-1789006678</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, &#039;எதெர த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் நேற்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.</p><h2>சலுகை வட்டியில் கடன்&nbsp;</h2><p>
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7794b1c7-3262-4cc6-9017-3a52125f9139/26-6aa21971cffba.webp' /></p><p>
</p><p>
இந்த கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச்செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன், கடன்களுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச்செலுத்தப்படவுள்ளது.</p><h2>விண்ணப்பிக்கும் முறை&nbsp;</h2><p>
</p><p>
அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T02:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவிற்கு எதிரான கைது ஆதாரங்கள் - பெரும் குழப்பத்தில் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pohottuwa-doubts-the-evidence-against-namal-1789005419"></link>
            <id>https://tamilwin.com/article/pohottuwa-doubts-the-evidence-against-namal-1789005419</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சட்டத்தரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாமல் ராஜபக்சவின் கைது ஆதாரங்கள்&nbsp;</h2><p>நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக தற்போதைய அரசாங்கம் ஊழல் ஒழிப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd1d877-e98b-4273-a345-a99315827bf9/26-6aa2128a754a2.webp' />&nbsp;</p><p>இதன் காரணமாக தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளில் முன்வைக்கப்பட்ட சான்றுகளை நம்ப முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T02:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை கோர விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து - 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-minneriya-22-hospitalized-1789003819"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-minneriya-22-hospitalized-1789003819</id>
            <summary type="text">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த விபத்து இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> 

மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c2b9c0-19cc-4c7c-8ed8-0d88abcad480/26-6aa20af5ed447.webp' /></p><p> </p><p>பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T01:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு: கட்டாயமாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031"></link>
            <id>https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத காலப்பகுதி வரை தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்து மூலப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் முன்னர் எக்காரணம் கொண்டும் செய்முறைப் பரீட்சைக்கு அனுமதி வழங்க முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7b921d-f5f1-4b31-ac99-e8c0d7747275/26-6aa20518c9247.webp' /></p><p>
</p><p>சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை எழுதப்பட்ட நாளில் இருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமே பயிற்சி பெறுவதற்காகவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பரீட்சைக்குத் தோற்றிய நாளில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் வரை குறித்த தற்காலிக பயிற்சி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, எழுத்து மூலப் பரீட்சை எழுதிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பதாரர் ஒருவர் வெளிநாடு செல்வாராயின், அவர் மீண்டும் ஒன்றரை வருட காலப்பகுதி முடிவடைவதற்குள் இலங்கைக்கு வருகை தந்து, செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றி மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963"></link>
            <id>https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தின் போது, அரசாங்கம் கூறுவது போன்று சிறிய மற்றும் முக்கியத்துவமற்ற சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்கள் முன் அரசாங்கம் மறைக்கும் உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் எவை என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b4eb78-e19f-414a-9a8a-24121cb3ae87/26-6aa1f53548cb0.webp' /></p><p>
</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, மாணவர் படைப்பிரிவு பயிற்சி பரிமாற்றம், பாதுகாப்பு பல்கலைக்கழக ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பராமரிப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>எனினும், இத்தகைய சிறிய ஒப்பந்தங்கள் பொதுவாக அமைச்சரவை மட்டத்திலான கீழ்நிலை அதிகாரிகளால் கையெழுத்திடப்படுபவை என புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வரலாற்றுப் பின்னணியை நினைவுபடுத்திய ஜயகொட, இதற்கு முன்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது 38 ஆண்டுகளுக்கு முன்னரே என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கடும் பதற்றமான சூழ்நிலையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>எனவே, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது, பாடசாலை மாணவர்களின் காடெட் பயிற்சி அல்லது துப்பாக்கி பராமரிப்பு பற்றி பேசுவதற்காக என அரசாங்கம் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவில் மேற்கொண்ட விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் அல்லது 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களின் பிரதிகள் இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>
அக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக மாற்றுவது குறித்து கலந்துரையாடவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்வதாக புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே உண்மையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட ரகசிய உடன்பாடுகள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உண்மையான ஒப்பந்தங்கள் எவை என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் வெளியிடப்படும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243"></link>
            <id>https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய நோய்களுக்கு உள்ளாகும் மக்களின் வயதுப் பிரிவு சுமார் 40 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கண்டி தேசிய வைத்தியசாலையின் இதயநோய் மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கையில் கடந்த காலங்களில் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கே இதய நோய்கள் அதிகம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது 40 வயதுடையவர்கள் மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c6f087-99ac-42a7-b450-a0b64a45dc48/26-6aa1fa39a7310.webp' /></p><p>
</p><p>ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்களாயின், இதய நோய் ஏற்படுவதற்கு முன்னரே வைத்தியர்களால் தகுந்த முடிவுகளுக்கு வர முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஆனால் பெரும்பாலானோர் இதய நோய் தாக்கிய பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>இதய நோய் ஏற்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p> கொழும்பு, குருணாகல், கண்டி, கராப்பிட்டிய, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்: போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877"></link>
            <id>https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877</id>
            <summary type="text">இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர்&nbsp; ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.</p><h2>கவனயீர்ப்பு பேரணி</h2><p>

பருத்தித்துறை நகரில் தபால் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் நகரசபைக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c7381a7-178a-44e2-968f-b633416a0f88/26-6aa1ff4d7e435.webp' /></p><p>
</p><p>
மேலும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்படை முகாம் மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்தும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.</p><p>

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகவுள்ளது.</p><h2>போராட்டத்திற்கு அழைப்பு</h2><p>
</p><p>
பேரணி பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை நடைபெறும். அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக மனு ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f345ec-077d-4526-82e8-0864749af8d6/26-6aa1ff4e6ddfa.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டத்திற்கு என்பிபி தவிர்ந்த பருத்தித்துறை நகரசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜெயகோபி குறிப்பிட்டார்.
</p><p>
எனவே, பருத்தித்துறை மக்களின் பூர்வீக காணிகளை மீட்டெடுக்கும் இந்தப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தில் நாமலே புலம்பிய இரகசியம்! இருவரை தீர்த்து கட்டிய மர்மம் - தப்பிய ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் மீதான வழக்குகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தன் மீதான வழக்குகள் சிக்கலானவை என்பதால், பிணை கிடைக்க குறைந்தது ஐந்து முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம் என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 சில சந்தர்ப்பங்களில் பிணை கிடைக்காமலும் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>


இந்தநிலையில், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முக்கிய சாட்சிகளாக கருதப்பட்ட கபில சந்திரசேன மற்றும் ஊடகவியலாளர் ரஜீவ் பிரகாஷ் ஜெயவீர ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிமல் பெரேரா முக்கிய சாட்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிமல் பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவர் இலங்கைக்கு திரும்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

நாமல் ராஜபக்ச எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>அவரது விடுதலை சட்ட நடவடிக்கைகளின் போக்கைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u2NuDGRtdR8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:37:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் - வெளிவரும் முக்கிய ஆவணங்கள்! ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக அதிரடி விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.</p><p>

குறித்த காணி தொடர்பான பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் உறுதி ஆவண இலக்கம் மற்றும் வரைபட இலக்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக காமந்த துஷார தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், குறித்த காணியில் 1918ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பங்களா தொடர்பான தகவல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்</p><p>.

இந்நிலையில், முறைப்பாட்டாளரான காமந்த துஷார தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த 135 ஏக்கர் காணி தொடர்பான விசாரணையை குற்றத்திலிருந்து உருவான சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PCID) முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/shVEUuotw3g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்ச - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061"></link>
            <id>https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த உத்தரவு நேற்றுமுன்தினம் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுரேஷ் சலே&nbsp;கைது</h2><p>
</p><p>
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய 6 பேருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக கடந்த ஜூலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe04cc62-c608-43bf-ab20-fe0bfddbb27d/26-6aa1f32e34c13.webp' /></p><p>
</p><p>
இதன்போது குறித்த 6 பேரும் தெரிவித்த சில கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விடயம் தொடர்பான முறைப்பாடு முதலில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>

இந்நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்கும்.

போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்தால், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டு அதன் பின்னர் வழக்கு விசாரணை நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db042f5-300b-4b66-9155-5815b47bd43b/26-6aa1f32f2ca40.webp' /></p><p>குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தங்கள் தரப்பு சாட்சிகளை முன்வைத்து, தங்களது நிலைப்பாட்டை விளக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
</p><p>
இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இடம்பெற்றதா இல்லையா என்பது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106</id>
            <summary type="text">நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
</p><p>சமூகச் சீரழிவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பாதுகாப்பற்ற நிலைமை முற்றாக ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக 
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865f556a-384f-4932-a5f4-cfcabf3fd79f/26-6aa1f1db99587.webp' /></p><p>
</p><p>அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அதனை தற்காலிகமாகவோ அல்லது நிறுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்தப் பயணம் முன்னோக்கியே செல்லும், ஒரு கணமேனும் தற்காலிகமாக நிறுத்தக்கூடிய ஒரு முற்றுப்புள்ளி, அல்லது ஒரு கால்புள்ளியை வைக்கக்கூடிய மட்டத்தில் நாடு இப்போது இல்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
</p><p>நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தி, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தற்போதுள்ள சாதகமான நிலையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T23:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிக் கிரியைக்கு சென்ற தாயும் மகனும் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. </p><p>

தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்விற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2><b>தாயும் மகனும் பலி</b></h2><p> 

இவ்வாறு உயிரிழந்தவர்கள், 47 வயதுடைய மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகனான 24 வயதுடைய நிகேஷ் ருவந்த தில்ஷன் என்பவர்களாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ebf32-8c1a-42c2-a69a-520e71e1e129/26-6aa187ff8745e.webp' /></p><p>உயிரிழந்த இளைஞன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது. </p><p>


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T23:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743"></link>
            <id>https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில்
இந்திய அரசு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்குப் பிரதமர் தனது பாராட்டுக்களைத்
தெரிவித்தார்.</p><h2>இலங்கை - இந்தியா</h2><p>

குறிப்பாக, 'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய
உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அனர்த்த நிவாரண உதவிகளுக்காக இந்தியா
'சாகர் பந்து நடவடிக்கை'யை ஆரம்பிக்கப்பட்டதையும் வரவேற்றார்.
</p><p>
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இராஜதந்திர மற்றும் பொருளாதார
ஒத்துழைப்புகளுக்கும் அப்பாலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5ebf43-aba5-448e-b0cb-1229fe4a3b4e/26-6aa1ee9f04abe.webp' /></p><p> </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால
நட்புறவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கலாசார, வரலாற்று மற்றும் சமயத்
தொடர்புகள் விளங்குகின்றன. வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி
உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மிக முக்கிய பங்காளியாகத் திகழ்கின்றது.</p><p>

பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால ஒத்துழைப்பைத்
தொடர்ந்து பேணி, மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற மற்றும் அரச துறைகள் உள்ளிட்ட திறன் அபிவிருத்தித் துறைகளில் இரு
நாடுகளும் ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p> </p><p>இது நிறுவன ரீதியான ஆற்றல்களைப்
பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை முன்னெடுப்பதற்கும் பங்களிப்புச்
செய்கின்றது என குறிப்பிட்டார்.</p><p>
சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன்
அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0d130b-fd8a-419c-b4fb-fe7f1ceeb659/26-6aa1ee9fb5448.webp' /></p><p> </p><p>அறிவுப் பரிமாற்றம்,
புத்தாக்கம் மற்றும் திறன் அபிவிருத்தியைப் பலப்படுத்துவதற்காக, இந்திய
தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற விசேட கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்
உட்பட இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கான
சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியப் பாதுகாப்பு
அமைச்சின் இணைச் செயலாளர் கலாநிதி அமித் தெலாங், இந்திய வெளியுறவு அமைச்சின்
இணைச் செயலாளர் பிரசன்னா ஸ்ரீவஸ்தவா, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,
பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் வாங்கியது லஞ்சமா நன்கொடையா! குழப்பத்தில் மகிந்த தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416"></link>
            <id>https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416</id>
            <summary type="text">நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் லஞ்சமா அல்லது நன்கொடையா என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், லஞ்சம் பெறுவதும் வழங்குவதும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பணத்தை முதலில் வழங்கியதாக கூறப்படும் நிமால் பெரேராவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கருதும் தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
மறுபுறம், நாமல் ராஜபக்ச தரப்பினர், குறித்த பணம் லஞ்சமாக பெறப்படவில்லை என்று உதயகம்மன்பில குறிப்பிடுகின்றார்.
</p><p>
இவ்விவகாரத்தில் பணம் வழங்கியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இரு தரப்பினரிடமும் சமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/25vMZicgGkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 18 Pro வந்துவிட்டது! Apple செய்த அதிரடி மாற்றங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-debuts-iphone-18-pro-and-iphone-18-pro-max-1788989510"></link>
            <id>https://tamilwin.com/article/apple-debuts-iphone-18-pro-and-iphone-18-pro-max-1788989510</id>
            <summary type="text">ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஐபோன்களில் கேமரா, செயல்திறன், பேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
புதிய ஐபோன்களில் கேமரா, செயல்திறன், பேட்டரி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் முக்கிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>புதிய அம்சங்கள்</h2><p> </p><p>2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட A20 Pro chip இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>புதிய thermal system மூலம் நீண்ட நேரம் அதிக செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்முறையாக ஐபோனின் 48MP Fusion Main Camera-வில் variable aperture வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meet iPhone 18 Pro and iPhone 18 Pro Max! We’ve made huge advancements to our camera (hello, variable aperture!), battery life, and performance, making this lineup our most powerful and intelligent yet. <a href="https://t.co/y1eeCB0O9O">pic.twitter.com/y1eeCB0O9O</a></p>&mdash; Greg Joswiak (@gregjoz) <a href="https://x.com/gregjoz/status/2097779754720178234?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் மூலம் வெளிச்சத்துக்கு ஏற்ப aperture தானாக மாறுவதுடன், பயனர்கள் கேமரா அமைப்புகளை கைமுறையாகவும் கட்டுப்படுத்த முடியும்.

புகைப்படங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும் Apple Reference Image தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக செய்தி புகைப்படக்காரர்கள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

புதிய மாதிரிகளில் iOS 27 மற்றும் புதிய Siri AI வசதியும் இடம்பெற்றுள்ளது.</p><h2>செப்டெம்பர்&nbsp; முதல்</h2><p> </p><p>குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களின் context-ஐ புரிந்துகொண்டு பயனர்களுக்கு உதவும் வகையில் Siri AI உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் beta பதிப்பாக வெளியாகிறது.</p><p>

iPhone 18 Pro-ன் eSIM-only பதிப்பு 36 மணி நேரம் வரையிலும், Pro Max 45 மணி நேரம் வரையிலும் video playback வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e2c595-96a0-470c-a246-2cde3739f55d/26-6aa1d48768f64.webp' /></p><p> </p><p>மேலும், சுமார் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

கருப்பு, வெள்ளி, Glacier மற்றும் புதிய Burgundy நிறங்களில் வெளியாகும் இந்த போன்களின் சேமிப்பு திறன் 256GB முதல் 2TB வரை உள்ளது.
</p><p>
அமெரிக்காவில் iPhone 18 Pro-ன் ஆரம்ப விலை 1,199 டொலர், Pro Max-ன் ஆரம்ப விலை 1,299 டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>செப்டெம்பர் 12 முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில், செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வருகின்றது என்று கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-09T22:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையில் தனது கைது குறித்து பேச மறுத்த நாமல்.. வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728"></link>
            <id>https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&nbsp;</p><p>இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தனது அண்மைய கைது குறித்து பேசுவதைத் தவா்த்துக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்தார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற நடைமுறை</h2><p>இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுகொட, நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கவும், வளாகத்திற்கு தீ வைக்கவும் முயன்ற வரலாற்றைக் கொண்ட சில அரசாங்க உறுப்பினர்களைப் போல் அல்லாமல், நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa60ecf8-dda5-43a4-b07f-b7addc54b7bd/26-6aa13de7f2b69.webp' /></p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்தும் நீதித்துறையின் நடத்தை குறித்தும் பேசுவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்த நீதித்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

இவ்விடயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இது குறித்து கருத்துத் தெரிவிக்காமல் தவிர்த்ததன் மூலம் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக மதுகொட மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6Kzmt4sOp9A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:17:38+00:00</updated>
        </entry>
    </feed>
