<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T14:34:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04)&nbsp;காணொளி&nbsp;மூலம் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>ஐந்து கொலைகள்</h2><p>இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f32ac1b-e2cc-430b-b0f2-4b2d22e2b8c5/26-6a71bd24dce80.webp' /></p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தது.
</p><p>


இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர் மீது, கல்லடி பகுதியில் நடந்த ஐந்து கொலைகள் மற்றும் நிலத்தகராறு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை செய்யப்பட்ட சம்பவம், ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>2025ஆம் ஏப்ரல், பயங்கரவாத
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் 2025 நவம்பர் மாதம், காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரையும் சிஜடியினர் கைது செய்தனர்.</p><h2>அதிகாரிகளின் சோதனை</h2><p>

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளில் தொடர்பு இருப்பதாக, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜீன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09de7a47-ed1d-4e97-973c-0834e9ed14da/26-6a71c926b9c9b.webp' /></p><p>இந்நிலையில் குறித்த வழக்கு இன்று&nbsp; (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக
நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (Zoom)
முன்னிலைபடுத்தப்பட்டனர்.</p><p>

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பபடுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>எனவே, உணவை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்
73 வயதான அவரது தாயார் சுகயீனமடைந்துள்ளதாகவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தருமாறும் கோரினார்.&nbsp;</p><p>இதன்போது, நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறை உள்ளதோ அதை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-04T14:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284</id>
            <summary type="text">முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேது அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>முன்னாள் சிறைச்சாலை ஆணையர் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒரு நிரந்தர ஆணையரை நியமிப்பது சாத்தியமில்லை என்று கூறினார்.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்..&nbsp;</h2><p>

மாறாக, அந்தப் பணியைக் கவனித்துக்கொள்ள ஒருவரை நியமிக்கலாம் என்றும், அதன்படி அந்த நோக்கத்திற்காக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f156908-a4cc-4965-8f1c-27fd67b88aae/26-6a71d59666cad.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஆணையாளர் தொடர்பான விசாரணைகள் முடிந்த பிறகு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

அதன்படி, முன்னாள் ஆணையாளர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், ஒரு புதிய ஆணையாளiu நியமிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணைகளில் அவர் எப்படியாவது விடுவிக்கப்பட்டால், அவரை மீண்டும் பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு.. பெருமளவு நீர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409</id>
            <summary type="text">நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கருதி அதன் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர்
தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக
பெய்துவரும் தொடர் மழையினால் நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கு நீர்வரத்து
திடீரென அதிகரித்தமை காரணமாக வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும்,
அணையின் பாதுகாப்பைக் கருதி, நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர்
நிரம்பியதால் குறித்த வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர்
வெளியேற்றப்படுகிறது.</p><p></p><h2>உரிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p><span style="font-size: 14px;">ஞாயிற்றுக்கிழமை இரவு&nbsp;</span>(02)&nbsp;<span style="font-size: 14px;">நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும்
ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி இரத்து செய்யப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5149069e-0b45-460b-9afb-22575c529c56/26-6a71ed766f17c.webp' /></p><p>
நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் அடர்ந்த பனி
மூட்டம் காரணமாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி
நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில்
செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என பொறுப்பான
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நுவரெலியாவில்
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c0811-281e-483f-a7c1-13ce787bd197/26-6a71ed7775961.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f4d7bf-cb21-4de7-b582-8d9803e4149d/26-6a71ed784a46e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-04T14:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940"></link>
            <id>https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940</id>
            <summary type="text">செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2
என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு
தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a578f1-db59-4860-89ca-feeed94553df/26-6a71e89a836a0.webp' /></p><p>

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என
இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 483 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06c5ee5-e60e-4276-8f86-d4ba9512dbf6/26-6a71e89b62965.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8feb38e1-47d6-4022-bae3-f706b46529e9/26-6a71e89c39fb3.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி அமைச்சின் அலட்சியப் போக்கை எதிர்த்து ஆசிரியர் - அதிபர் கூட்டமைப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/teacher-principal-federation-protest-1785847024"></link>
            <id>https://tamilwin.com/article/teacher-principal-federation-protest-1785847024</id>
            <summary type="text">கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், இலவசக்
கல்வியைப் பாதுகாக்கவும் வலியுறுத்தியும், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், இலவசக்
கல்வியைப் பாதுகாக்கவும் வலியுறுத்தியும், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்
கூட்டமைப்பு சார்பில், கொழும்பு - பத்தரமுல்லையிலுள்ள 'இசுருபாய' கல்வி
அமைச்சுக்கு முன்பாக இன்று (08.04.2026) கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசின் தற்போதைய கல்விப் போக்கையும் கல்விச்
சீர்திருத்தங்களையும் கடுமையாகச் சாடினார்.
</p><p>
கல்வி சீர்திருத்தங்கள், பரீட்சை முறை மாற்றம் மற்றும் புதிய கல்வித்
திட்டங்கள் குறித்துக் கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் மேடைக்கு மேடைப்
பேசினாலும், நடைமுறையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி வெறும் காலத்தைக்
கடத்தும் தந்திரங்களையே அரசாங்கம் கையாள்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p></p><p>
</p><p>
மேலும், அரசாங்கம் படிப்படியாக இலவசக் கல்வியைச் சீரழித்து, கல்வித் துறையைத்
தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்றும், மறுபுறம் அரச
பல்கலைக்கழகங்களில் கல்வித் துறையில் பட்டம் பெற்ற 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
</p><p>
எனவே, இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், கல்வித் துறையின்
தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுப் போராட
வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
</p><p>
இந்தப் போராட்டத்தின் போது, பாடத்திட்டத் தொகுதிகள் மற்றும் பதவி உயர்வுகளில்
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கக் கோரிப்
பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd454b2-6573-457c-bd9a-5f91d7c72931/26-6a71e2e881127.webp' /></p><h2>'மொடியூல்' சிக்கல்களுக்குத் தீர்வு</h2><p>

'மொடியூல்' முறையினால் பாதிக்கப்பட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முடியாத
ஆசிரியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
</p><p>அத்துடன், அவர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் பகுதி
அளவில் மொடியூல்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களை எஞ்சிய தடைகளில் இருந்து
விடுவிக்க வேண்டும். </p><h2>நிபந்தனையற்ற பதவி உயர்வு</h2><p>
கடந்த 30.06.2025 வரை நிபந்தனையுடன் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு
முந்தைய தரநிலைத் தடைகளில் இருந்து விலக்களிக்க வேண்டும்.</p><h2>மறுமதிப்பீடுகளுக்குத் தடை</h2><p></p><h2> </h2><p>ஏற்கனவே மொடியூல்களைப் பூர்த்தி செய்து எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறவுள்ள
ஆசிரியர்களை மீண்டும் மீண்டும் மதிப்பீடுகளுக்கு அல்லது பரீட்சைகளுக்கு
உட்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். </p><h2>புதிய மொடியூல் உள்ளடக்கம்</h2><p>
புதிய மொடியூல்களின் உள்ளடக்கங்களை உடனடியாக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66350fa-6c7b-4fe0-a60a-e2093253987d/26-6a71e2e96ee7d.webp' /></p><p>
</p><p>
கல்வி அமைச்சு ஆசிரியர்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளுக்கு உடனடியாகச்
செவிசாய்க்கத் தவறினால், வரும் நாள்களில் இந்தப் போராட்டங்கள் மேலும்
தீவிரமடையும் என்று ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்
பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் தொடர்ந்து இடம்பெறும் மின்தடை: மின் பாவனையாளர்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/power-outages-in-mannar-electricity-consumer-1785848902"></link>
            <id>https://tamilwin.com/article/power-outages-in-mannar-electricity-consumer-1785848902</id>
            <summary type="text">மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி
மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி
மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அடிக்கடி மின் தடை காரணமாக எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்
தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து
வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக சீரான மின் விநியோகம் இடம் பெற்று வந்த
நிலையில் தற்போது தொடர்ச்சியாக இரவு பகல் பாராது மின்தடை ஏற்பட்டு வருகிறது.</p><p></p><h2>மின்தடை</h2><p>
</p><p>
திடீர் திடீர் என இரவு பகல் பாராது மின்தடை ஏற்படுவதால் மின் பாவனையாளர்களின் மின் உபகரணங்கள் சேதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>மேலும் கடந்த காலங்களில் பரீட்சை காலம் நெருங்கு கின்ற போது மன்னாரில்
அடிக்கடி மின் தடை ஏற்படுவதை போன்று தற்போது புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
உயர் தர பரீட்சை நெருங்கும் காலப்பகுதியில் குறித்த மின்தடை இடம் பெற்று
வருவதாக மின் பாவனையாளர்களும்,மாணவர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1465099-7d84-49e2-aae8-8fd85b022134/26-6a71e5510c4ab.webp' /></p><p>
</p><p>
குறித்த மின் தடை தொடர்பாக மன்னார் மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வடக்கிற்கு
பொறுப்பான மின்சார சபை அதிகாரிகள் உரிய பதிலை வழங்குவதில்லை என
பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உரிய அதிகாரிகள் குறித்த விடையத்தில் கவனம்
செலுத்தி அடிக்கடி ஏற்படும் மின் தடையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-discussion-tourism-sector-held-in-jaffna-1785848119"></link>
            <id>https://tamilwin.com/article/important-discussion-tourism-sector-held-in-jaffna-1785848119</id>
            <summary type="text">சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் பங்கேற்புடன் யாழில்
சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று(04.08.2026) இடம்பெற்றது.

யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் பங்கேற்புடன் யாழில்
சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று(04.08.2026) இடம்பெற்றது.
</p><p>
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், றஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியக
தலைவர் ஜெ.விவேகானந்தன் உள்ளிட்ட சுற்றுலா துறைசார்ந்த அதிகாரிகள், சுற்றுலா
பொலிஸார், முதலீட்டாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம்</h2><p>இதன்போது சுற்றுலா துறைசார்ந்த நிலவும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டு அது பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும்
ஆராயப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8133c11b-c5f0-4db1-85c7-9ddea5fb2f58/26-6a71e3a261964.webp' /></p><p>
காரைநகர் கசூரீனா கடற்கரை, நெடுந்தீவு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம்
செய்த பிரதி அமைச்சர் அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்
எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்களையும் ஆராய்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf5b760a-25c1-4e42-9bd4-ff3551b8853b/26-6a71e3a33b65e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-holiday-1785846703"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-holiday-1785846703</id>
            <summary type="text">நாளையதினம் (05), ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையதினம் (05), ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.</p><p>

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோசமான வானிலை</h2><p>இது தொடர்பில் இன்று&nbsp;ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6fed54-771b-4b8b-ada0-5b241fb2b63e/26-6a71dfb418b79.webp' /></p><p>மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இருப்பினும்,&nbsp;ஹட்டன் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக,&nbsp;ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டையில் யானை தாக்கி உணவக ஊழியர் ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/injured-attacked-by-elephant-in-hambantota-1785846832"></link>
            <id>https://tamilwin.com/article/injured-attacked-by-elephant-in-hambantota-1785846832</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(03.08.2026) மாலை இடம்பெற்ற காட்டு
யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(03.08.2026) மாலை இடம்பெற்ற காட்டு
யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>

அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையின் உணவக ஊழியர் ஒருவரே இவ்வாறு யானையின்
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
</p><p></p><h2>சம்பவம் தொடர்பான விசாரணை</h2><p>
அவர் மற்றொரு நபருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தபோதே
இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2c0de2-1ed6-4fb2-8b56-10caf19934da/26-6a71df3e8193c.webp' /></p><p> இதன்போது, அவருடன் சென்ற மற்றைய நபர்
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளார்.</p><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாந்தோட்டை போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று
வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca55a440-7ee6-4e71-bb69-7c4b47b1d976/26-6a71df3f5280c.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை வனஜீவராசிகள்
திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:47:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pradhusas</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-bundles-of-kerala-cannabis-arrested-in-mannar-1785847246"></link>
            <id>https://tamilwin.com/article/man-bundles-of-kerala-cannabis-arrested-in-mannar-1785847246</id>
            <summary type="text">மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p>
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று(3) மாலை விரைந்து செயல்பட்ட பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதன் போது குறித்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான
9 கிலோ 400 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியதோடு சந்தேக நபர்
ஒருவரையும் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c2e38dd-a111-4e49-baf7-99947cef0369/26-6a71dedd97e05.webp' /></p><p>

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு மீதான விசாரணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808</id>
            <summary type="text">தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால
மனுக்கள் மீதான பரிசீலனை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(04.08.2026) ஆரம்பமானது.
</p><p>
இதன்போது, குறித்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த 'தேசஹிதைஷி தேசிய
இயக்கம்' மற்றும் 'தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்' ஆகிய அமைப்புக்களின்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது ஆரம்ப வாதங்களை
முன்வைத்தனர்.</p><p></p><h2>இடைக்கால மனு</h2><p>இரு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் கவனத்தில் கொண்ட மேன்முறையீட்டு
நீதிமன்றம், இந்த இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8a756a-27ba-4a51-8589-21b5f7c97d94/26-6a71dadd9b758.webp' /></p><p>

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலேயின்
மனைவியும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் மற்றும் ஹேமசிறியின் மரண தண்டனையால் ஆபத்தில் இருந்து தப்பித்த சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024"></link>
            <id>https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை தப்பிக்க&nbsp; வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என சிவில் செயற்பாட்டாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்&nbsp; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>உண்மையைக் கண்டறிக..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>போதியளவான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8807a0a8-3052-4e00-9ba8-d771b60b8cb3/26-6a71b54840c89.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக சூழ்ச்சி செய்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் ஆதரவாக செயல்பட்ட&nbsp; அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.&nbsp;</p><p>உண்மையைக் கண்டறிந்து தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467a3ad1-2bd6-41c4-bc19-a5ba382b96c0/26-6a71b5490d19e.webp' /></p><p>எனினும், பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கு மாத்திரம் தண்டனை வழங்கிவிட்டு தொடர்புடைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை இந்த அரசாங்கம் தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.&nbsp;</p><p>ஏனெனில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னர் விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான சில உயர் அதிகாரிகளிடமே மீண்டும் தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது&nbsp; இந்த வழக்கின் நடுநிலைத்தன்மையைப் பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457</id>
            <summary type="text">சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (04.08.2026) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், 2018ஆம்
ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டமானது இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.</p><h2>வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும்</h2><p></p><p>தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா
வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது
வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான மிகுதி பணத்தை வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர்
தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employees-pension-salary-issues-1785844238"></link>
            <id>https://tamilwin.com/article/government-employees-pension-salary-issues-1785844238</id>
            <summary type="text">அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது. </p><p>இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.</p><p></p><h2>ஆணைக்குழு</h2><p>
</p><p>
ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் செயல்படும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a84e8fe-3db2-45e7-86f0-7543ec5aa060/26-6a71d9f54ae51.webp' /></p><p>
</p><p>
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகே ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு</h2><p>
</p><p>
நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரச அதிகாரிகளுக்குப் பெரும் பங்கு உள்ளதால், அரசு சேவையைப் பலப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அரச சேவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2947d7ae-a093-4fb6-91c3-d98d1abc2177/26-6a71d9f5f25e4.webp' /></p><p>
</p><p>
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்த போதிலும், அதற்கான விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

அரச சேவையின் ஒரு துறையிலுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை மட்டும் ஆராய்ந்து தீர்க்க முயன்றால், அது மற்றொரு துறையிலுள்ள ஊழியர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்ற அனுபவம் உள்ளது என்றும்</p><p>அத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து முழு அரச சேவைக்கும் பொருந்தக்கூடிய விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விபத்தில் பறிபோன முதியவரின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-in-jaffna-accident-1785841796"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-in-jaffna-accident-1785841796</id>
            <summary type="text">காரைநகரில் நேற்றிரவு(03.08.2026) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>காரைநகரில் நேற்றிரவு(03.08.2026) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த
குமாரன் மகேந்திரலிங்கம் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் நேற்றிரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில்
சென்று கொண்டிருந்தபோது அவ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளானது வேகக்
கட்டுப்பாட்டை மீறி முதியவர் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644a0561-f46c-4ba5-ae9c-6739463a9e3b/26-6a71ccaca1944.webp' /></p><p>இருப்பினும் முதியவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத
நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார். </p><p>பின்னர் அவரது சடலமானது காரைநகர்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
</p><p>
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது குறித்து விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு தற்காலிக தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/temporary-stay-statues-for-kuttimani-thangathurai-1785841319"></link>
            <id>https://tamilwin.com/article/temporary-stay-statues-for-kuttimani-thangathurai-1785841319</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு நாளை(5.8.2026) வரை பரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு நாளை(5.8.2026) வரை பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.</p><p>

கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43 வது
நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த காணியில் சிலை வைப்பதற்குரிய
ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் கடந்த 22/07/2026 அன்று முன்னாள்
வல்வெட்டிதுறை நகரசபை உப தவிசாளர் சதீஸை கைது செய்து நீதிமன்றில்
முற்படுத்தியிருந்த நிலையில் இன்றுவரை குட்டிமணி தங்கதுரை ஆகியோறுக்கு சிலை
வைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு நீதிமன்றில் எடுத்துக்
கொள்ளப்பட்டது.</p><p></p><h2>தற்காலிக தடை</h2><p> </p><p>அரச சட்டத்தரணியால் புலனாய்வு அறிக்கை
சமர்ப்பிற்பதற்கு காலம் கோரப்பட்ட நிலையில் நாளைய தினம் வரை வழக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் நாளை வரை தற்காலிக தடை
விதிக்கபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857c8cba-2020-469f-98df-59f9b52d2abb/26-6a71cc38b11a6.webp' /></p><p>
</p><p>மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட்ட ஐந்து
சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் குற்றம்
சாட்டப்பட்ட கந்தசாமி சதீஸ் சார்பில் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.</p><p>

இதேவேளை&nbsp;சதீஷுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்
ஞானேந்திரன், சமூக ஆர்வலர் S.கஜந்தன்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பொறுப்பாளர் ஈசன், கிளிநொச்சி
மாவட்ட செயலாளர் க.கணேசகுமாரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் இலக்கைத் தாண்டிய சிறுபோக நெற்செய்கை - ஆளுநர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-cultivation-target-in-the-north-exceeded-1785838175"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-cultivation-target-in-the-north-exceeded-1785838175</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட
இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின்
வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட
இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின்
வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில்
மூன்றாம் போகச்செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>சிறுபோகத்தில் இலக்கிடப்பட்ட பரப்பளவை விட
அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன்,
கிடைக்கப்பெற்றுள்ள நீர்வளத்தை அறிவியல் அடிப்படையில் முகாமைத்துவம் செய்து
மூன்றாம் போகச் செய்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க
முன்னேற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நவீன பயிரிடல் முறைகள்</h2><p>வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று
(04.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில்
நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de388c9a-8959-43a3-b52a-c954db2b2c93/26-6a71c10b5dc67.webp' /></p><p>இக்கூட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும்
திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள்,
நிதி மற்றும் பௌதிக முன்னேற்றங்கள் என்பன விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன்,
எதிர்கால செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.</p><p>

2026ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வடக்கு மாகாணத்தில் 37,961 ஹெக்டேயர்
பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,
38,405 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இலக்கு
விஞ்சப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் சுமார் 156,326 மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>நெல் உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் நாற்று மாற்று நெற்செய்கை
முறை, பராசூட் நாற்று நடவு முறை உள்ளிட்ட நவீன பயிரிடல் முறைகள்
விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், நெற்செய்கைத் திட்டங்களும்
பல மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>நீர்விநியோக முகாமைத்துவம்</h2><p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது,
நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் இருப்பு, நீர்விநியோக முகாமைத்துவம்
மற்றும் விவசாயிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கலந்தாலோசனைகளின்
அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மூன்றாம் போகச் செய்கை வன்னேரிக்குளத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ff40c9-f740-45ab-94ba-e2d45e7669b9/26-6a71c10a7fbdb.webp' /></p><p>விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள சில செயற்றிட்டங்கள்
தற்போது முழுமையான இயங்குநிலையை எட்டாதிருப்பது தொடர்பிலும் விரிவாக
ஆராயப்பட்டது.</p><p>அவற்றை விரைவாக மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டு வருவதற்கான
சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான பரிந்துரைகளை மத்திய விவசாய
அமைச்சுக்கு சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர்
பணிப்புரை வழங்கினார்.&nbsp;</p><p>மேலும், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து அம்மாச்சி
உணவகங்களிலும் ஒரே தரமான நடைமுறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். </p><p>குறிப்பாக, பொலித்தீன் மற்றும்
பிளாஸ்ரிக் பயன்பாட்டை முற்றாகக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த
மாற்று பயன்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இதேவேளை, விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம்
மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான
பெரும்பாலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவடையும்
என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய
அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, திட்டமிடல், பொறியியல்
மற்றும் நிர்வாகம்), நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத்
திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், விவசாயத் திணைக்களத்தின் மேலதிக
மாகாணப் பணிப்பாளர், காணித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட மட்ட
பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பலர்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் பெரும் பாதிப்பு: 5 பேர் பலி - ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-weather-major-damage-nuwara-eliya-1785837313"></link>
            <id>https://tamilwin.com/article/severe-weather-major-damage-nuwara-eliya-1785837313</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று
(04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று
(04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்
தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 5 பேர்
உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து
சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
கினிகத்தேனை, மொரஹேன கிராமப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>அதேபோன்று, அம்பகமுவ பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வெள்ள நீரில் மூழ்கி
காணாமல் போயுள்ளார்.</p><p></p><h2>கடுமையான பாதிப்புக்கள்..&nbsp;</h2><p>

பாதிக்கப்பட்ட மக்களிலிருந்து 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் உடனடி
பாதுகாப்பு நடவடிக்கையாக 20 இடைத்தங்கல் நலன்புரி மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3eb7786-839e-4e5f-b0c4-affb3501968e/26-6a71c247c75f3.webp' /></p><p> </p><p>இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய நிவாரண
உதவிகளை வழங்கும் பணிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
</p><p>
இந்த சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மாவட்டத்தில் 2 வீடுகள்
முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், அவிசாவளை
- ஹட்டன் - நுவரெலியா வீதியின் 66 ஆம் கிலோமீற்றர் பகுதி, லக்ஷபான -
பொல்பிட்டிய வீதி, டன்சினன் - பூண்டுலோயா வீதி மற்றும் டிக்கோயா பகுதியில்
உள்ள வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><p>

தற்போது இவ்வீதிகளைச் சீரமைத்து, போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக்
கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p> அதேவேளை, கொத்மலை -
பனம்ஹம்மன வீதியில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு நிமித்தம்
அவ்வீதி போக்குவரத்திற்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகம்
மேலும் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் முயற்சி - நிபந்தனையுடன் முடிவுற்ற வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-law-to-incorporate-schools-national-schools-1785835012"></link>
            <id>https://tamilwin.com/article/no-law-to-incorporate-schools-national-schools-1785835012</id>
            <summary type="text">ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து
கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து
கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் அதன் துணைச்
செயலாளராகிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட
வழக்கு வெற்றி பெற்றுள்ளது.
</p><p>
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி மாகாணங்களுக்கு
ஒதுக்கப்பட்ட விடயமாகும். </p><p>எனினும் யுத்த காலங்களில் மத்திய கல்வி அமைச்சு
அரசியல் யாப்புக்கு முரணாக இலங்கை முழுவதிலும் ஏறத்தாழ 350 வரையிலான
பாடசாலைகளையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் 20 பாடசாலைகளையும் அமைச்சரவைப்
பத்திரம் மற்றும் நிர்வாக வழிமுறைகள் மூலம் தேசிய பாடசாலை என்ற பெயரில் தனது
ஆளுமையின்கீழ் கொண்டு வந்திருந்தது.
</p><p>
மைத்திரிபால சிறிசேனவின் தலமையிலான ஆட்சியின்கீழ் மகிந்த ராஜபக்சவைப்
பிரதமராகக் கொண்டு நடைபெற்ற ஐம்பது நாள் ஆட்சியில் டலஸ் அழகப்பெருமா கல்வி,
அமைச்சராக இருந்தார்.</p><p></p><h2>தேசிய பாடசாலை</h2><p> </p><p>அவர் ஏற்கனவே தேசியப் பாடசாலை என்ற பெயரில் செயற்பட்டு
வந்த 350 வரையிலான பாடசாலைகளுக்கு மேலதிகமான 650 வரையிலான பாடசாலைகளை
உள்ளீர்த்து நாடு தழுவிய வகையில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற
பெயரில் மாகாணங்களிடமிருந்து கபளீகரம் செய்து மத்திய கல்வி அமைச்சின்
கட்டுப்பாட்டில் செயற்படுத்தும் நோக்குடன் ஆயிரம் தேசிய பாடசாலைத் திட்டத்தை
அறிவித்தார். </p><p>அவரைத் தொடர்ந்து கல்வி அமைச்சர்களாகச் செயற்பட்ட ஜி.எல்.பீரிஸ்
மற்றும் தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
தீவிரமாகச் செயற்பட்டனர்.</p><p>
</p><p>
இந்தத் திட்டம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணத்திற்கு வழங்கப்பட்ட
அதிகாரத்தை மீறும் செயல். எனவே இத்திட்டமானது அரசியல் யாப்புக்கு முரணானதும்
சட்டவிரோதமானதுமாகும். </p><p>எனவே இத்திட்டம் செயற்படுத்தப்படாமல் தடை
செய்யவேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் கல்வி அமைச்சரான
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 2022ஆம் ஆண்டு வைகாசி (மே) மாதத்தில் வழக்குத்
தாக்கல் செய்திருந்தார். </p><p>நீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடையுத்தரவு வழங்க
மறுத்தது. ஆனால் வழக்கை ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கில் மத்திய கல்வி அமைச்சர் அவரது செயலாளர் உட்பட பதினாறு பேர்
பிரதிவாதிகளாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தனர். பிரதிவாதிகள் சார்பில்
முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி தனது தரப்பு வாதம் 6168 எதனையும்
முன்வைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ba6130-870c-4666-b791-cf3546fd0fff/26-6a71c06f801e5.webp' /></p><p> </p><p>மாறாக இத்திட்டத்தினைச் செயற்படுத்துவார்களா இல்லையா என்பது
பற்றி அமைச்சரிடம் பேசிப் பதில் சொல்ல கால அவகாசம் வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு
அமர்விலும் கால இழுத்தடிப்பையே செய்து வந்தார்.
</p><p>
இந்நிலையில் 18.08.2023 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனைத்து மாகாண ஆளுநர்களின்
செயலாளர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கு மத்திய
கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டது. </p><p>இதில் ஆயிரம்
பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் பட்டியலிலுள்ள பாடசாலைகளில் ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட (கபளீகரம் செய்யப்பட்ட) பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய
பாடசாலைகளின் தேசிய பாடசாலை என்ற பெயர்ப் பலகைகளை அகற்றும்படியும்
அப்பாடசாலைகளின் அதிபர்கள் தேசிய பாடசாலை என்ற பதவி முத்திரையோ கடிதத் தலைப்போ
பயன்படுத்தக் கூடாது என்றும் இதனை
நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தி இருந்தது. </p><p>மேலும் சுற்றறிக்கையில்
இப்பாடசாலைகள் தொடர்ந்தும் மாகாணக் கல்வி நிர்வாகத்தின் கீழேயே இயங்கும்
எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் கணிசமான பாடசாலைகள் இவற்றைச்
செயற்படுத்தத் தவறியமையால் அவற்றை விரைந்து செயற்படுத்துமாறு 20.02.2024
திகதியிட்ட நினைவூட்டல் கடிதம் மத்திய கல்வி அமைச்சினால் அனைத்து மாகாண கல்வி
நிர்வாக தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p></p><p>
</p><p>
இச்சுற்றறிக்கை மூலம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதற்கு முன்னர் தேசிய
பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும்
தொடர்ந்தும் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என்பது
நிர்வாக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
</p><p>
ஆனால் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்படாமல் கால இழுத்தடிப்பே தொடர்ந்தும்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏறத்தாழ 3 வருடங்கள்
களித்து 23.05.2025இல் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர்
ஜெனரல் நீதிமன்றத்தில்

“குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம்
இல்லை..." என சட்டமா அதிபர் அறிவுறுத்தி உள்ளார் என ஒப்புதலளித்தார். </p><p>ஆயிரம்
பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டம் அரசியல் யாப்பிற்கு
விரோதமானதும், FLL விரோதமானதுமாகும் என்பதே வழக்கின் அடிப்படையாகும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை என்பதைச் சட்டமா அதிபர்
ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இவ்வழக்கை கைவாங்குமாறு (வாபஸ் பெறுமாறு) இரண்டு
நீதிபதிகள் கொண்ட இம்மன்று வழக்காளியின் சட்டத்தரணியிடம் கோரியது.
</p><p>
எனினும் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்துக்கு முரணாக நாடாளுமன்றத்தில் கல்வி
அமைச்சர் "இவ்வாயிரம் பாடசாலைகளை மீண்டும் மாகாண சபைகளிடம் கையளிக்கும்
உத்தேசம் இல்லை” என கருத்து வெளியிட்டமை நீதிமன்றத்திற்குச்
சமர்ப்பிக்கப்பட்டது. சில மாதங்கள் களித்து மத்திய கல்வி அமைச்சு ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர எவற்றையும் சுவீகரிக்கும் உத்தேசம் இல்லை
என்ற எழுத்து மூல அறிவித்தலை சட்டமா அதிபரூடாக நீதிமன்றத்திற்கு
சமர்ப்பித்தது. </p><p>எனவே,</p><p>1. பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு தனது
நிர்வாகத்தின் கீழ் எடுப்பதற்கு சட்டம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதன்
அடிப்படையிலும்,</p><p>
2. வழக்குத் தாக்கல் செய்ய முன்னர் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனையவை
சுவீகரிக்கப்படும் உத்தேசம் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சு மேன்முறையீட்டு
நீதிமன்றத்திற்களித்த உறுதிப்பாட்டையும் கருத்திற் கொண்டு.
</p><p>
3. பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு எடுத்துக்
கொள்வதற்குச் சட்டம் இல்லை என்றால் வழக்குத் தொடுப்பதற்கு முன்னர்
சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளும் சட்டவிரோதமானவேயே. </p><p>எனவே அவை மீண்டும் மாகாண
நிர்வாகத்திற்குரியதாக விடுவிக்கப்பட வேண்டும் என புதிய வழக்கைத் தொடுப்பதன்
மூலமே சாத்தியம் என்பதாலும் அல்லது அரசியல் ரீதியில் மீளப்பெறப்படலாம் என்ற
இரு வழிகளே உள்ள யதார்த்தத்தின் அடிப்படையிலும்

அவசியமேற்படின் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் புதிதாக வழக்குத் தொடரப்படும்
என்ற நிபந்தனையுடன் வழக்கு முடிவுற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b4b7ca-8be8-480b-ab26-a774b79395be/26-6a71c0703b64d.webp' /></p><h2>போராட்டத்தின் முதல்படி</h2><p>
</p><p>
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் மத்திய அரசால் பறிக்கப்பட்ட
மாகாண அதிகாரங்களை மீளப்பெறும் போராட்டத்தின் முதற்படியான இச்சட்டப்
போராட்டத்தின் முடிவுகளின் முக்கியத்துவம் :
</p><p>
1. பாடசாலைகளை மத்திய அரசு உள்ளீர்ப்பதற்கு சட்டம் இல்லை. எனவே தேசிய பாடசாலை
என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு பாடசாலைகளை எடுத்தமை மற்றும் எடுக்க
முயற்சிப்பது சட்டவிரோதமானது என்பது நிரூபிக்கப்பட்டது.
</p><p>
2. மத்திய கல்வி அமைச்சு நாடு தழுவிய வகையில் கையகப்படுத்த முனைந்த ஏறத்தாழ
அறுநூற்றி ஐம்பது வரையான பாடசாலைகளும் குறிப்பாக வடக்கு மாகாணத்திலிருந்து
எடுக்க முனைந்த நாற்பத்தியெட்டு பாடசாலைகளும் மத்திய அரசால் பறிக்கப்படாமல்
தடுக்கப்பட்டிருக்கிறது.
</p><p>
3. வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னர் கையகப்படுத்தப்பட்டு இன்று தேசிய
பாடசாலை 61601 மத்திய நிர்வாகத்தின்கீழ் இயங்கும் பாடசாலைகளும் சட்டவிரோதமாகவே
கையகப்படுத்தப்பட்டவை. சட்டப்படி அவையும் மாகாண நிர்வாகத்திடம் கையாளிக்கப்பட
வேண்டியவை என்பதற்கான சட்டரீதியான சான்று நிறுவப்பட்டுள்ளது.</p><p>

4. இது வரை காலம் மாகாணத்திற்கு உரித்தான ஆனால் மத்திய அமைச்சர்களால்
கையகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை.</p><p></p><p> </p><p>அரசியல் யாப்பிற்கு
விரோதமானவை அவை சம்பந்தப் அமைச்சர்களால் மாகாண நிர்காகத்திற்கு மீண்டும்
கையளிக்கப்பட வேண்டும் என்பதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.</p><p>

இவ்வழக்கைத் தாக்கல் செய்வதில் உதவிய அனைவருக்கும் குறிப்பாக இவ்வழக்கில்
முன்னிலையாகி வாதாடியா சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன் அவரது கனிஸ்ட
சட்டத்தரணி லக்ஸ்மணன் மற்றும் வழக்கைப் பதிவு செய்தலுட்பட்ட நிர்வாக ரீதியாக
விடயங்களை கையாண்ட சட்டத்தரணி ரட்ணவேல் மற்றும் அவரது சட்டக்கு
ழுவினர்க்கும் இந்த இடத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-04T10:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் வெடித்த மோதல் - உறவினர்களுக்கு கைதிகளிடமிருந்து சென்ற அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-mahara-prison-relative-protest-1785821883"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-mahara-prison-relative-protest-1785821883</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் கைதிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசிகள் மூலம் நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் கைதிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசிகள் மூலம் நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

சிறையின் முற்பகுதிக்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, அவர்களை பயன்படுத்தி போராட்டத்தை நடத்த கைதிகள் திட்டமிட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சிறையின் நிர்வாக பணிகள் கட்டுப்பாட்டில்&nbsp;</h2><p>
</p><p>
மஹர சிறைச்சாலையில் கைபேசிகள் மிகவும் சாதாரணமாகிவிட்டதாகவும், பழைய கைதிகள் கைபேசிகளை புதிய கைதிகளுக்கு அதிக விலைக்கு அழைப்புகளை மேற்கொள்ள கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b72316-419e-410c-ad10-96871f279d7e/26-6a71be2375448.webp' /></p><p>
</p><p>
கைபேசிகளில் இருந்து அழைப்புகளை மேற்கொள்வதற்காக செலுத்தப்படும் பணம், பழைய கைதிகளால் வழங்கப்பட்ட கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மேலும், சிறை வட்டாரங்களின்படி, மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், சிறையின் பெரும்பாலான நிர்வாக பணிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>

மஹர சிறையில் கைதிகளிடையே கைபேசி பயன்பாடு குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சில சிறை அதிகாரிகள் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கைதிகளுக்குக் கைபேசிகளை வழங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மான் பூங்காவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-tourists-flock-to-the-trinco-deer-park-1785837416"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-tourists-flock-to-the-trinco-deer-park-1785837416</id>
            <summary type="text">திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் மான் பூங்காவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் மான் பூங்காவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதனால் சுற்றுலாத் துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை
மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.</p><p>
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான்
பூங்காவும் சான்று பகிர்கின்றன. இதனால் மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது
ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும்.</p><p></p><h2>சுற்றுலாத்துறை விருத்தி</h2><p>
</p><p>குறித்த மான் பூங்கா தொடக்கம் திருகோணமலை கோணேஸ்வரா கோயில் கோட்டை பகுதி,
திருகோணமலை பஸ் நிலையம் என பல இடங்களிலும் குறித்த மான் இனங்கள்
காணப்படுகிறது.</p><p> இதனை பாதுகாக்க பொலித்தீன் பை உள்ளிட்ட சூழலில் மான்கள் உண்ண
பொருத்தமற்ற உணவு பண்டங்களை உண்ணாமல் அதிலிருந்து பாதுகாக்க சூழலை சுத்தமாக
பேணப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da5e6725-7c12-4e00-85f5-22cb9e9bdb24/26-6a71ba23e5f67.webp' /></p><p>மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார்
நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இது போன்ற விடயங்களை மக்கள்
மத்தியில் விழிப்பூட்ட வேண்டும்.</p><p> இதன் மூலம் மேலும் உள்நாட்டு வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என
எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண பாடசாலைகள் மீண்டும் திறப்பு! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087</id>
            <summary type="text">புதிய இணைப்புமோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது</p><p>பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள்,
நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று (4) மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தொடரும் சீரற்ற காலநிலை</h2><p>மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கண்டி மற்றும் நுவரெலியா
மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a3a188-04e4-4aaf-a9c9-98aba9a75616/26-6a715944eea49.webp' />&nbsp;</p><p>மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப்
பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட
மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள்
மீட்கப்பட்டன.</p><h2>மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி</h2><p>
</p><p>
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச்
சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e394e94-5897-42d7-bf41-3f200b0390c7/26-6a715945d0d6c.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581
குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு
சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண்
ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து
வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:11:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627</id>
            <summary type="text">புதிய இணைப்புதமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைதினையடுத்து 
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டததை கட்டுப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைதினையடுத்து 
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டததை கட்டுப்படுத்த அனைத்து முக்கிய நகரங்களிலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதற்கமைய, தலைமைச் செயலகம், அண்ணா அறிவாலயம், மெரினா கடற்கரை, நீலாங்கரை மற்றும் முக்கியத் தலைவர்களின் இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவர தடுப்பு வாகனங்கள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசும் சிறப்பு வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்</h2><p>
</p><p>
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9704d7-f715-4329-854a-b42066832c20/26-6a71947f611db.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக பதற்றத்தினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் பெருமளவு ஆதரவாளர்கள் குவிந்துள்ளதுடன், பெரும் பரபரப்பு நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p><p> </p><p>இந்த நிலையில் உதயநிதியின் நீலாங்கரை வீட்டை சுற்றி காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dklXminqMT4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-people-gone-employment-increased-1785834555"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-people-gone-employment-increased-1785834555</id>
            <summary type="text">இந்த ஆண்டின்&amp;nbsp; ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின்&nbsp; ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>

இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.</p><p>இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>வெளிநாட்டு வருவாய்&nbsp;</h2><p> </p><p>

இதற்கமைய, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe989bb-3fc5-415c-b09c-1d46549a219f/26-6a71af87db9bc.webp' /></p><p> 

அத்துடன், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமான பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன. </p><p>

இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/house-arrest-proposed-alternative-to-ease-prison-1785834829"></link>
            <id>https://tamilwin.com/article/house-arrest-proposed-alternative-to-ease-prison-1785834829</id>
            <summary type="text">சிறைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் தண்டனை பெற்றவர்களையும் வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
</p><p>
 

மாற்று நீதிமன்றக் காவலாக வீட்டுக் காவலுக்கான விதிகளை நிறுவுவதற்காக அமைச்சரவையால் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட வரைவாளர் ஒரு மசோதாவைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
</p><p></p><h2>சிறை அமைப்பு மீதான அழுத்தம்</h2><p>
 

2025 ஜூன் 23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவை மேலும் ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd4ed22-781a-434a-b5d9-fcf9d1c4ca1b/26-6a71b1e4a166e.webp' /></p><p>

 

மறுஆய்வுச் செயல்பாட்டின் போது, ​​முன்மொழியப்பட்ட மசோதாவில் சேர்க்கப்பட வேண்டிய கூடுதல் விதிகள் அடையாளம் காணப்பட்டன. </p><p>அதன்படி, தேவையான விதிகளை இணைத்து வரைவை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்கான அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
 

முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமானது, பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலைப் பயன்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதோடு, நீதித்துறை மேற்பார்வையை உறுதிசெய்து நாட்டின் சிறை அமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:08+00:00</updated>
        </entry>
    </feed>
