<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-18T23:23:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் புதிய ஜனாதிபதி.. அநுரவுக்கு எதிராக கூடிய ஆறு கட்சிகளின் முடிவு என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rauf-hakeem-kalmunai-hospital-issue-1787082727"></link>
            <id>https://tamilwin.com/article/rauf-hakeem-kalmunai-hospital-issue-1787082727</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் ஊழியர்களில் சிலர் சீருடை அணியாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் ஊழியர்களில் சிலர் சீருடை அணியாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p> </p><p>நாட்டில் பேசுபொருளாகிய இவ்விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா நேரடியாகத் தலையிட்டிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் முன்னதாக&nbsp;ஹிஸ்புல்லா தொடர்பில் முன்வைத்திருந்த நையாண்டிக் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>நாட்டிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ற போதிலும், காத்தான்குடி பொறுத்த மட்டில்&nbsp;ஹிஸ்புல்லா தான் ஜனாதிபதி என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இது உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/C4qcoQhvYv8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T23:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களிடையே பரவும் கொடிய நோய்.. 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salmonella-pacteria-in-uk-1787086349"></link>
            <id>https://tamilwin.com/article/salmonella-pacteria-in-uk-1787086349</id>
            <summary type="text">பிரித்தானியாவில் சால்மொனெல்லா பெக்டீரியா தொற்று பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் சால்மொனெல்லா பெக்டீரியா தொற்று பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்தியமையினாலேயே இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.</p><h3>தீவிர சிகிச்சை</h3><p> </p><p>பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் கெஃபேக்கள் மற்றும் உணவகங்களில் உணவருந்தியவர்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0b6ab87-1a23-4865-81fb-994a4ce3f906/26-6a84c8c9ea847.webp' /></p><p> அதேவேளை, பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் அல்லது கோழி இறைச்சி இதற்கு காரணமல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த தொற்றின் காரணமாக இதுவரை மொத்தம் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 34 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இதில் இருவருக்கு இரத்தத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 1 வயதுக் குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T22:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினை விவகாரம்: வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-controversy-1787082183"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-controversy-1787082183</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினையை அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றி இனங்களிடையே பிரிவினைவாதத்தை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினையை அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றி இனங்களிடையே பிரிவினைவாதத்தை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான சீருடை விடயத்தில் சில அரசியல்வாதிகள்&nbsp; இனரீதியான சர்ச்சையை ஏற்படுத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு, சில வங்குரோத்து அரசியல்வாதிகள் நாட்டை பிரிவடைய செய்ய வேண்டும் என்றும் நாட்டின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்றும் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p>கல்முனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் சில அரசியல்வாதிகள் முகநுலில் தவறான பதிவுகளை வெளியிட்டு இனங்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_1pRnWV2G1s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T21:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம்! 940 குற்றச்சாட்டுகளையும் மறுத்த நவுஃபர் மௌலவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-zahran-naufar-moulavi-1787078982"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-zahran-naufar-moulavi-1787078982</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.அதனை செய்தது&amp;nbsp;சஹ்ரான் தான் என நவுஃபர் மௌலவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் ஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.அதனை செய்தது&nbsp;சஹ்ரான் தான் என நவுஃபர் மௌலவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில், முக்கிய பிரதிவாதியான நவுஃபர் மௌலவி தனது தற்காப்பு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p>
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் இணைந்து தாம் ஈஸ்டர் தாக்குதலை சதி செய்ததாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள&nbsp;940 குற்றச்சாட்டுகளையும்&nbsp;நவுஃபர் மௌலவி மறுத்துள்ளார்.</p><p>ஈஸ்டர் தாக்குதல் சதியுடன் தன்னை இணைக்கும் நேரடி ஆதாரம் இல்லை என வாதம்
இறுதியில், தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுதலை செய்யுமாறு நவுஃபர் மௌலவி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NSwNngp8TV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T19:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று நீதிமன்றங்களின் பிடியில் சிக்கிய பிள்ளையான் - சுற்றிவளைக்கப்பட்ட சகாக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543</id>
            <summary type="text">பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;

கிழக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கில் தற்போது அவருக்கான தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல முக்கிய ஆதாரங்களும் அவரின் சகாக்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.</p><p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் காணொளி மூலமாக நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னிலைபடுத்தப்பட்ட போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.&nbsp;</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XjU_g5Y62II" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள்: இம்ரான் எம் பி முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-prevailing-in-the-postal-service-1787067062"></link>
            <id>https://tamilwin.com/article/issues-prevailing-in-the-postal-service-1787067062</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.</p><p>கோரிக்கைகள் பின்வருமாறு, மாவட்டத்தில் உள்ள பல தபால் அலுவலகங்களில், அப்பகுதியின் அஞ்சல் அட்டைகளின்
எண்ணிக்கைக்கும் சேவை வழங்கும் இடத்திற்கு ஏற்ப போதுமான தபால்காரர்கள்
மற்றும் அஞ்சல் விநியோகப் பணியாளர்கள் குறைவு. </p><p>இதனால் பொதுமக்களுக்கு
வழங்கப்படும் அஞ்சல் சேவையில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே, ஒவ்வொரு தபால்
அலுவலகத்தின் பணிகளுக்கு ஏற்ப தேவையான மனிதவளத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.</p><h2>நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல்
தற்போது தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த
அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a35ebc-2bca-4f4f-b305-d9b7c1fb9046/26-6a84b3655a970.webp' /></p><p> </p><p>அவர்களின் சேவை
அனுபவத்தையும் தகுதியையும் கருத்திற்கொண்டு, அவர்களை நிரந்தர சேவையில்
இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம்
தெளிவுபடுத்த வேண்டும்.
</p><p>
தபால் அலுவலகக் கட்டிடங்களின் அபிவிருத்தி
திருகோணமலை மாவட்டத்தில் பல தபால் அலுவலகங்களின் கட்டிடங்கள் பழமையான நிலையில்
காணப்படுகின்றன.</p><h2>தபால் விநியோகம்</h2><p> </p><p>பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்ற நவீன வசதிகளுடன்
இக்கட்டிடங்களைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதா என்பதும்
கேள்வியாக முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e66f0c2-a756-4bbb-b6e8-2ff1d38795f7/26-6a84b3662ce08.webp' /></p><p>
</p><p>
தபால் விநியோகத்திற்கான போக்குவரத்து வசதிகள்
இன்றைய காலத்திற்கேற்பவும், சேவையை விரைவுபடுத்தும் வகையிலும், தேவையான
ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அல்லது பொருத்தமான போக்குவரத்து வசதிகளை
வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் நாடாளுமன்றத்தில்
சுட்டிக்காட்டப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவப்பட்ட பாரிய இரு ஏவுகணைகள்.. தாக்குதலுக்கு முன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-phone-call-before-iran-attack-on-uae-1787075642"></link>
            <id>https://tamilwin.com/article/trump-phone-call-before-iran-attack-on-uae-1787075642</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை&nbsp;</h2><p> </p><p>இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cae606-4e8f-44fc-b79e-f5c31ae0cd5a/26-6a849e29de7d4.webp' /></p><p>மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.</p><p> ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் – கித்துளுத்த பகுதியில் தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tipper-truck-catches-fire-in-the-kanthalai-1787076182"></link>
            <id>https://tamilwin.com/article/tipper-truck-catches-fire-in-the-kanthalai-1787076182</id>
            <summary type="text">கல் ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துளுத்த பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல் ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துளுத்த பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று (18) பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த குறித்த கனரக வாகனம், கந்தளாய் மகாவலி கங்கைப்
பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தீப்பரவல்</h2><p>
</p><p>
கித்துளுத்து தேவாலயத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்திய சாரதி
வழிபாட்டிற்காக தேவாலயத்திற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, கனரக வாகனத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கல் ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfa6a3a7-a1c6-4acd-a1af-3df2962b3c27/26-6a849e590940e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தீயை
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அமீரகத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-missiles-launched-from-iran-uae-1787074317"></link>
            <id>https://tamilwin.com/article/two-missiles-launched-from-iran-uae-1787074317</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.ஈரான் தனது தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.</p><p>ஈரான் தனது தாக்குதல் சார்ந்த இராணுவக் கோட்பாட்டை செயல்படுத்த தொடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஏவுகணை தாக்குதல்</h2><p>இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d56ce57-65b6-4c81-9579-69f9b4eed968/26-6a849b76b5fcc.webp' /></p><p> இதில் முதலாவது நாட்டின் கடல் எல்லைக்கு வெளியே விழுந்த நிலையில், இரண்டாவது கடல் எல்லைக்குள் விழுந்துள்ளது என்று அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:51:24+00:00</updated>
        </entry>
    </feed>
