<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-05T17:36:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர கூட்டத்தில் நாமல், மக்களிடம் கூறவிருந்த விடயங்களை கூறுவார் : விடுக்கப்படும் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614</id>
            <summary type="text">&amp;nbsp;எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாம் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாம் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பேரணியில் நாமல் ராஜபக்ச ஆற்றவிருந்த விசேட உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்துவார் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் செயல் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d783867-9047-49ec-a0a7-30c7c93888db/26-6a9c526fef0ad.webp' /></p><p>
</p><p>இந்த கைதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஊடகங்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
கடந்த காலத்தில் தமது அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவற்றை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒரு ஜனநாயக நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அநுராதபுரக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவின் மனைவி உரையாற்றுவார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள், வெறும் ஆதாரமற்ற வதந்திகளே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் எனவும் அநுராதபுரத்தில் மக்கள் முன் வைக்கவிருந்த அந்த சக்திவாய்ந்த உரையை அன்று பாராளுமன்றத்தில் நாட்டு மக்கள் முன் வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அதைப் பார்த்துக்கொண்டிருக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T17:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை சீண்டிய ஈரான் - அதிரடியாக பதிலடி கொடுத்த ட்ரம்ப் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-strikes-3-iranian-oil-tankers-tehran-targete-1788628287"></link>
            <id>https://tamilwin.com/article/us-strikes-3-iranian-oil-tankers-tehran-targete-1788628287</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>ஈரானின் பல தாக்குதல்கள்</h2><p>

அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலும் ஈரானின் பல தாக்குதல்களை வெற்றிகரமாகத் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதையடுத்து, Kharg தீவு மற்றும் Jask கடற்பகுதிக்கு அருகில் இருந்த M/T Downy மற்றும் M/T Stark 1 ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/Xo0Vj0t2AJ">https://t.co/Xo0Vj0t2AJ</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096231596449767452?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
மேலும், சரக்கு ஏற்றப்படாத மற்றொரு எண்ணெய் கப்பலும் ஓமன் வளைகுடாவில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மூன்று கப்பல்களும் IRGC மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிக்கும் இரகசிய எண்ணெய் வர்த்தக வலையமைப்புடன் தொடர்புடையவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல்</h2><p>
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361904fb-395f-4e74-9ba5-88de23a46c79/26-6a9c511cc6a69.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, Kharg தீவு அருகே அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றைத் தாக்கியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் ஈரானிய செய்தி நிறுவனமான Tasnim தெரிவித்துள்ளது.</p><p>

ஈரான் OPEC அமைப்பில் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளதுடன், அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளில் பெரும்பகுதி Kharg தீவு வழியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T17:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-taking-revenge-from-anyone-1788627948"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-taking-revenge-from-anyone-1788627948</id>
            <summary type="text">அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்கும், திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும் கிடைத்த மக்கள் ஆணையையே அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என என தெரிவித்துள்ளார்.
</p><p>தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/733c86a1-872f-421d-9270-11cb448d13b9/26-6a9c4bed893fa.webp' /></p><p>
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போது, அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகியமை அரசாங்கம் சட்டத்திற்கு அளிக்கும் மரியாதையைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
அமைச்சர் குமார ஜயகொடி 100% நிரபராதி என்பதில் முழு நம்பிக்கை உள்ளபோதிலும், சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவிட்டு சுயாதீனமாக விசாரணைகள் நடக்கவே அவர் பதவியிலிருந்து விலகினார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 160 உறுப்பினர்கள் மீதும் எந்தவித ஊழல் அல்லது குற்றச்சாட்டுகளும் கிடையாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T17:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069"></link>
            <id>https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>லாஃப்ஸ் எரிவாயு விலை</h2><p>

இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டிருந்தன.
</p><p>
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 4,965 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a881cf-98ba-47ec-9b1a-65a733d32633/26-6a9c471d93eb3.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 1,988 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, செப்டெம்பர் மாதத்திலும் குறித்த விலைகளிலேயே லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-05T16:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு! நாளை 2 பிரமாண்ட பேரணிகளில் உரையாற்றும் ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/second-anniversary-the-national-people-power-npp-1788624892"></link>
            <id>https://tamilwin.com/article/second-anniversary-the-national-people-power-npp-1788624892</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை( 6) இரண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை( 6) இரண்டு முக்கிய பொதுக்கூட்டங்களில்
கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் “நமது அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் — நாட்டிற்கு நல்லது” (අපේ
ආණ්ඩුවට වසර දෙකයි – රටට සුබයි) எனும் கருப்பொருளின் கீழ் இந்த பேரணிகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;2 பிரமாண்ட பேரணிகள்</h2><p>
</p><p>மேலும் இந்த கூட்டங்கள் முறையே
புலத்சிங்களவில் பிற்பகல் 2:00 மணி மணிக்கும்,
பேருவளையில் பிற்பகல் 3:30 மணி மணிக்கும் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4574c41a-2e90-4b12-b69a-f9402a2071e2/26-6a9c428135d05.webp' /></p><p>

அத்துடன் செப்டம்பர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க
வெற்றியைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள்
மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டங்களில் ஜனாதிபதி
விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளர்ச்சி அடையும் துருக்கியின் இராணுவத் திட்டம்: ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/europe-israel-india-at-risk-turkey-military-plan-1788620502"></link>
            <id>https://tamilwin.com/article/europe-israel-india-at-risk-turkey-military-plan-1788620502</id>
            <summary type="text">ஐரோப்பாவின் எல்லையில் மிக அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.அந்த இராணுவ சக்தி ஐரோப்பாவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் எல்லையில் மிக அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.</p><p>அந்த இராணுவ சக்தி ஐரோப்பாவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் அச்சுறுத்தும் படியாக உருவாகிக் கொண்டு இருக்கின்றது.அது வேறு எந்ந நாடுமல்ல துருக்கி.</p><p>ஒரு காலத்தில் முக்கிய ஆயுதங்களுக்காக துருக்கி வெளிநாடுகளை நம்பிக் கொண்டு இருந்தது.இன்று ட்ரோன்கள் முதல் நவீனக் கப்பல்கள் வரை தனக்கு தேவையாக ஆயுதங்களை தானே உருவாக்கும் வகையில் வேகமாக வளர்ந்து வருகின்றது.</p><p>துருக்கின் இந்த வளர்ச்சியை தடுக்க அல்லது சமாளிக்க ஐரோப்பாவும், இந்தியாவும், இஸ்ரேலும் என்ன செய்யப்போகின்றன என்பது தொடர்பான விரிவான தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SVpGhwMEKis" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T15:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/explosives-recovery-operations-in-the-palaly-area-1788621567"></link>
            <id>https://tamilwin.com/article/explosives-recovery-operations-in-the-palaly-area-1788621567</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பலாலி அந்தோனிபுரம் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது
கிணற்றினுள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு
சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdde7b98-b2b1-4fb9-a70e-5b23b1cb58ac/26-6a9c33e1c1379.webp' /></p><p>அத்துடன், கிணற்றினுள் காணப்படும் வெடி
பொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மல்லாக நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற
நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T15:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதினால் கதிகலங்கியுள்ள தென்னிலங்கை - அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p> 

நாமலின் கைது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை, சாதாரண சட்டச் செயல்முறைக்கு அப்பால் ஆழமான அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p> 

சட்டவாட்சிக்கும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் இடையிலான ஆழமாக கோடு இந்த கைதின் மூலம் தெளிவாக வெளிப்படுவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.</p><p></p><p>
</p><h2><b>
எதிர்கால அரசியல் </b></h2><p>எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக குறிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8505e1-6fc5-463f-9dc7-e73b6e8fbc64/26-6a9c23aceccf8.webp' /></p><p>இது தனிநபருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல எனவும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் வழங்கப்பட்ட ஒரு தீவிரமான செய்தியாகவும் இதனை பார்க்கப்படுகிறது. </p><p> 

இந்தக் கைது நடவடிக்கையின் முக்கிய அடிப்படை காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் பிரபல வணிகருமான நிமல் பெரேராவினால் வழங்கப்பட்ட சாட்சியமே பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது. </p><p> 

குற்றவியல் முறைப்பாட்டுச் கோவையின் 127 வது பிரிவின் கீழ் நீதவான் முன்னிலையில் இரகசியமாக வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் மிகமிக கடுமையானதாகக் கருதப்படுகிறது. </p><h3><b>

 பாரிய நிதிப் பரிமாற்றம்</b></h3><p>சிங்கப்பூரை சேர்ந்த சேப்ரே விஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கு ஊடாக 8 லட்சம் அமெரிக்க டொலர் நாமல் ராஜபக்சவிற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa6a93b-5c96-4389-940a-68ed9f685567/26-6a9c23adbaa1d.webp' /></p><p>இந்த பாரிய நிதிப் பரிமாற்றம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், இது நேரடியாக லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாற்றாக ஆணைக்குழுவினால் கருதப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-05T15:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடுத்த காசுக்கு மேல் கூவிய நாமலின் ஆதரவாளர்கள் - அநுர செய்வது அரசியல் பழிவாங்கலா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-anura-kumara-revenge-1788618359"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-anura-kumara-revenge-1788618359</id>
            <summary type="text">நேற்றைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து, நாமலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தனர்.&nbsp;</p><p>இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.&nbsp;</p><p>மேலும், அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முன் கூடிய ஆதரவாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு அவ்வாறு நடந்து கொண்டதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர், சிதம்பரம் கருணாநிதி குறிப்பிடுகின்றார்.&nbsp;</p><p>அவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் குறிப்பிட்டதாவது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5h_RMGWkyT4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள்.. வெளிநாடொன்றில் அவசரநிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731"></link>
            <id>https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731</id>
            <summary type="text">எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இந்தச் சூறாவளிகளால் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக ஹவாய் தீவுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>எல் நினோ</h2><p>

எல் நினோ காரணமாக இந்த ஆண்டில் சீனாவைப் பாதிக்கும் ஏழாவது சூறாவளியாகப் பெயரிடப்பட்டுள்ள 'சௌடல்' (Soudal) சூறாவளி, அந்நாட்டைக் கடுமையாகப் பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4ba4e2-e29f-49a4-a49d-efb61e93dc7f/26-6a9c24efdf4c6.webp' /></p><p>
</p><p>
எல் நினோ தாக்கத்தால் கொலம்பியாவில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள வீடுகளுக்குத் தண்ணீர் லொறிகள் (bowsers) மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கடந்த சில வாரங்களாக அங்குள்ள காடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவியுள்ளது.

உலகைப் பாதித்துள்ள எல் நினோ நிகழ்வு இலங்கையையும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல்.. அனுராதபுர பேரணி குறித்து மொட்டுக்கட்சி முக்கிய தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-anuradhapura-rally-mottu-party-1788616210"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-anuradhapura-rally-mottu-party-1788616210</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்றும், அவை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.</p><p>

நாட்டின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் நிறுவப்பட்டனவே தவிர, அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல என கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல்..&nbsp;</h2><p>
</p><p>சுயாதீன அரச நிறுவனங்களை அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கான கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முற்படுமானால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் தீவிர அச்சுறுத்தலாகும் என்றும், நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மதிப்பைக் கொண்டுள்ள அனைத்துக் குடிமக்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1224c936-14ca-4a34-b34b-188034401e7f/26-6a9c20275aff8.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி செப்டெம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>
இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் கிடைத்தமையினால், மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் நேரடி நோக்கத்துடனேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இருப்பினும், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி எதிர்பார்த்தபடி பாரிய வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளத்துக்குள் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து: இளைஞர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-has-died-after-a-tractor-overturned-1788613374"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-has-died-after-a-tractor-overturned-1788613374</id>
            <summary type="text">அனுராதபுரம்- ரம்பவெல குளக்கட்டில்
பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம்- ரம்பவெல குளக்கட்டில்
பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,&nbsp; குளக்கட்டில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது, உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அது குளக்கட்டிலிருந்து குளத்துக்குள் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
</p><p>இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த உழவு இயந்திர சாரதி உள்ளிட்ட
மூவர் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f490ced-e8f8-478c-929b-454dc31eeaa7/26-6a9c18a51a2a3.webp' /></p><p> </p><p>எனினும், அங்கு
சிகிச்சை பெற்று வந்த வெலிகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T13:36:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[300ஆவது நாளை எட்டும் நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. நேரலையில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513"></link>
            <id>https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513</id>
            <summary type="text">லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&amp;nbsp;இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, தற்போது சிறப்பு நேரலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&nbsp;</p><p>இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, தற்போது சிறப்பு நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.&nbsp;</p><p>இந்நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு மற்றும் ஊடகவியலாளர் டில்ஷானுடன் சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொண்டுள்ளார்.&nbsp;</p><p>நேரலையாக ஒளிபரப்பாகும் எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள நீங்களும் அழைக்கலாம்.&nbsp;</p><p><b>076 - 8246255 </b>என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அழைத்து உங்களது கேள்விகளை கேட்கலாம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VNz7RtIWc54" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-die-by-drowning-in-nanu-oya-1788610138"></link>
            <id>https://tamilwin.com/article/two-die-by-drowning-in-nanu-oya-1788610138</id>
            <summary type="text">நுவரெலியா- நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில்
குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா- நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில்
குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(5.9.2026) இடம்பெற்றது.</p><p>
</p><p>
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய இளைஞர் ஒருவரும் 23 வயது உடைய ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>உயிரிழப்புகள்</h2><p>குறித்த இருவரும் நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>

சடலங்களாக மீட்கப்பட்டுள்ளவர்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64b900d-c245-4545-9425-1fd293219b46/26-6a9c0af8972df.webp' /></p><p>
</p><p>
இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் கொல்லப்படலாம்..! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275"></link>
            <id>https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275</id>
            <summary type="text">சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இது தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. </p><p>

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இன்று (05.09.2026) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>சமூக வலைத்தள பிரச்சாரம்</h2><p>

சிறைச்சாலைக்குள் திட்டமிட்டுச் சலசலப்பை அல்லது கலவரத்தை உருவாக்கி நாமல் ராஜபக்‌சவைக் கொலை செய்வதற்கும், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கும் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் பிரசாரம் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c62d8d-cb52-40e5-a835-9ef6d160b101/26-6a9c07978477b.webp' /></p><p> </p><p>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட முன்னரும் இவ்வாறானதொரு பின்னணியே நிலவியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>
</p><p>
மேலும் இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
மேலும், இந்த சதித்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-year-old-child-died-in-kilonochchi-1788609583"></link>
            <id>https://tamilwin.com/article/one-year-old-child-died-in-kilonochchi-1788609583</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.&amp;nbsp; வீட்டு
முற்றத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.&nbsp;<br></p><p> வீட்டு
முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம்
வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.</p><h3>பொலிஸ் விசாரணை&nbsp;</h3><p>
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9c2a23-f51d-4a33-b38a-cae43bcb7ba6/26-6a9c060634fc4.webp' /></p><p>ரூபன் அனாமிகா என்ற
ஒன்றரை வயதுடைய குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. </p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவ இடத்திற்கு
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் வருகை
தந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி- பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121</id>
            <summary type="text">சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சௌடெல் சூறாவளி காரணமாகப் பெய்த கடும் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து, ஜியாங்சி
மாகாணத்தின் சுய்ச்சுவான் கவுண்டிக்கு உட்பட்ட கோபிங் நகரத்தில் இன்று(5.9.2026) அதிகாலை 4.00 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>

இந்த இயற்கை அசம்பாவிதத்தினால் அப்பகுதியிலுள்ள 12 வீடுகள் கடுமையான
சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், நிலச்சரிவுப் பாறைகள் மற்றும் மண்ணுக்குள்
10-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd30cd0-68a7-4280-b402-f8f375bf0478/26-6a9c0273defb8.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதுடன், காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசியாவில் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடாக இலங்கை! சிறைச்சாலைகளில் உள்ள சிக்கல்நிலை - அஜித் பி பெரேரா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவுபடுத்தப்பட மாட்டாது எனவும், ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் உண்மையான
நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி
பெரேரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணைகள்</h2><p>அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நீதித்துறையில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்திருப்பதாகக் கூறுவது
முற்றிலும் பொய்யானது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ அல்லது நீதிமன்ற
அமைப்புக் சட்டத்திலோ வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தக்கூடிய எந்தவொரு
திருத்தமும் செய்யப்படவில்லை.</p><p> நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்தியதால் வழக்குகள் விரைவாக முடியப் போவதில்லை.

உயர்நீதிமன்றத்தில் பதவி வெற்றிடங்கள் இருந்தபோதிலும், அனுபவமிக்க
மேன்முறையீட்டு நீதிமன்றச் சிரேஷ்ட நீதியரசர்களுக்கு உயர்நீதிமன்ற நியமனங்கள்
வழங்கப்படாமல் அவர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பாதுகாப்புத் துறையின் திறனை மேம்படுத்துவதற்கோ குற்றத் தடுப்புக்கோ அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசியாவிலேயே பாதுகாப்புத்
தரப்பிடம் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடுகளாக இலங்கையும்
ஆப்கானிஸ்தானும் மட்டுமே உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491e0624-e714-404b-afee-ac98ab5f5397/26-6a9c013bd2d4a.webp' /></p><h2>சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு நடவடிக்கைகள்</h2><p> பாதுகாப்புத் துறையிலுள்ள ஆயிரக்கணக்கான பதவி
வெற்றிடங்களை நிரப்பவும், அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உயர்த்தவும் அரசாங்கம் தவறிவிட்டதுடன், சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு
நடவடிக்கைகள் இல்லாததால் தண்டனை முடிந்து வருபவர்கள் மீண்டும் குற்றச்
செயல்களில் ஈடுபடும் சூழலே நிலவுகின்றது.
</p><p>
எளியவர்களாகக் காட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரச பிரதானிகளின் மாளிகைகள்
மற்றும் பெரும் சொத்து விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும்
ஊடகங்கள் அந்தத் தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தவே புதிய ஊழல் ஒழிப்புச்
சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>

வாக்குறுதியளித்தபடி அந்தச் சட்ட மூலத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல்
அப்படியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுப்பதற்குப்
பதிலாக ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் இந்தச் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி
முழுமையாக எதிர்க்கின்றது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நாமலுக்குப் பிணை..! மகனை சிறையில் சந்தித்த பின் மகிந்த வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.</p><p>

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.&nbsp;</p><p>
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ச இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல.</p><p>

இக்கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது, இச்சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த அவர், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><h2>கைது செய்யப்பட்ட நாமல்..&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச,&nbsp;நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4a1415-bb2c-439c-ae1a-af4ee6ce6d9d/26-6a9bf343325a2.webp' /></p><p>இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:40:41+00:00</updated>
        </entry>
    </feed>
