<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-11T13:44:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை நோக்கி நகரும் சூறாவளி! அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cyclone-paavi-moving-towards-china-1783775034"></link>
            <id>https://tamilwin.com/article/cyclone-paavi-moving-towards-china-1783775034</id>
            <summary type="text">தீவிர சூறாவளி சீனாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதைத் தொடர்ந்து,
அங்குள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவசர
அவசரமாகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிர சூறாவளி சீனாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதைத் தொடர்ந்து,
அங்குள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவசர
அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

ஜப்பான் மற்றும் தாய்வான் நாடுகளைக் கடந்து வந்துள்ள இந்தச் சூறாவளி, தற்போது
சற்றே பலவீனமடைந்திருந்தாலும், அதன் மேகக்கூட்டங்கள் அதிகப்படியான
ஈரப்பதத்தைக் கொண்டுள்ளதால் பெருமழை மற்றும் கடுமையான பாதிப்புகளை
ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் இருந்து 5
இலட்சத்திற்கும் அதிகமான மக்களும், அண்டை மாகாணமான புஜியானில் (Fujian)
இருந்து 1 இலட்சம் மக்களும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இந்தச் சூறாவளி நாளை(12.7.2026)அதிகாலையில் சீனாவின் மக்கள் அடர்த்தி மிகுந்த
வென்ஜோவ் நகருக்கு அருகில் கரையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e40729-8271-4049-b375-a7ba53b37e5c/26-6a5245a1a409a.webp' /></p><p>

இதனால் சீன தேசிய வானிலை மையம் இரண்டாவது மிக உயர்ந்த 'ஒரஞ்சு' எச்சரிக்கையை
விடுத்துள்ளது.
</p><p>
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் படகுப்
போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும்
குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தற்காப்பு நடவடிக்கை</h2><p>ஏற்கனவே 'மேசாக்' புயலின் தாக்கத்தில் இருந்து மீளாத சீனாவிற்கு, இந்த 'பாவி'
சூறாவளி மேலும் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b89859c-abd7-4053-b8ad-f937ce830ff5/26-6a5245a0f186a.webp' /></p><p>

தற்காப்பு நடவடிக்கையாகப் பல்லாயிரக்கணக்கான மீட்புப் படையினர் தற்போது தயார்
நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T13:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு! 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் - ட்ரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-continues-trump-warning-1783770720"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-continues-trump-warning-1783770720</id>
            <summary type="text">ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்கமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. </p><p>

இதனை தொடர்ந்து, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p> 

தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய ஈரான் அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டால், உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இராணுவத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள்</h2><p> 

மேலும், ஒரு வருட காலத்திற்குள் ஈரானை முழுமையாக அழிக்க அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் எச்சரித்துள்ளார். </p><p>

அண்மையில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கத்தார் மற்றும் சவூதி அரேபிய எண்ணெய் டாங்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும் பிராந்தியத்தில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. </p><p>

இந்த மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p> இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர ஈரான் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் போர்நிறுத்தம் என்பது இனி கிடையாது என்பதைத் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21089c22-838f-450e-92a3-a1e562fdd2c4/26-6a5233f0d9e1a.webp' /></p><h2>கடுமையான அச்சுறுத்தல்</h2><p> அமெரிக்காவின் இந்த கடுமையான அச்சுறுத்தல்களுக்கு ஈரானும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வொஷிங்டனின் மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது என்றும், அமெரிக்கா தங்களுக்குத் துரோகம் இழைத்தால் முழு அளவிலான பாதுகாப்பை மேற்கொள்ளத் தங்களது நாடு தயாராக இருப்பதாகவும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். </p><p>தற்போதைய சூழலில், பிராந்தியத்தில் மீண்டும் போர் மூள்வதைத் தவிர்க்கவும், ஸ்தம்பித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மூலம் தீவிர திரைமறைவு இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T13:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-ni-o-is-approaching-the-indian-ocean-1783773923"></link>
            <id>https://tamilwin.com/article/el-ni-o-is-approaching-the-indian-ocean-1783773923</id>
            <summary type="text">மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் ஜூலை தொடக்கம் ஒக்டோபர்
மாதம் வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் ஜூலை தொடக்கம் ஒக்டோபர்
மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்
துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;யாழ் கலட்டி வீதியில் அமைந்துள்ள மிலேனியம் தனியார்
விடுதியில் இன்று(11) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த
எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில்
சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது
அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>எல்நினோ</h2><p>
</p><p>


இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும்
மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0f3a9f-c3cc-44f1-ade4-4ab03a979857/26-6a523f618076e.webp' /></p><p>

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத் தீவு
மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை
ஏற்படுத்தும்.
</p><p>


நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக
வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற
கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.
</p><p>
ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்சியையும் ஏற்படுத்தும்.</p><p></p><h2>&nbsp;அதிகமான வறட்சி</h2><p>



இருந்தாலும் இந்த தாள முக்கங்கள் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்
பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப்
பகுதியில் அதிக வறட்சியே நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6aa071-6e10-4937-bcfd-e2c1964037d5/26-6a523f625e26e.webp' /></p><p>

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர்
முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற
நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என
அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி
சிறிரங்கன் யாழ் மாவட்ட கடத்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்
அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ
ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T13:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கடுமையாகவுள்ள வரி அறவிடல் செயற்பாடுகள்! சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsh-tax-collection-measures-in-sri-lanka-imf-1783771221"></link>
            <id>https://tamilwin.com/article/harsh-tax-collection-measures-in-sri-lanka-imf-1783771221</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வரி அறவிடல் செயற்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வரி அறவிடல் செயற்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித் திட்டம் 2027-மார்ச்சில் முடிவடைய உள்ளது. </p><p>இந்தக் காலக்கெடுவுக்குள் நாட்டின் வரி நிர்வாகத்தை முழுமையாகச் சீர்திருத்துமாறு இலங்கையின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் சபைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதித் துறை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியம்</h2><p>
</p><p>
அதன் பிரகாரம் வரி விகிதங்களை மாற்றுவதற்குப் பதிலாக, வரி ஏய்ப்பாளர்களையும் வணிகங்களையும் டிஜிட்டல் முறையில் சிக்க வைப்பதே ஒரே தீர்வு என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e81f24f-c5f8-40d6-8d16-a352b00b86fe/26-6a5232c3989ab.webp' /></p><p> அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் சுங்கத்திணைக்களமும் கைகோர்த்துச் செயற்படவுள்ளன.</p><p>

இலங்கையில் பிரதான வரி அறவிடல் நிறுவனங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதுதான் இதுவரை இருந்த மிகப்பெரிய பலவீனம் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>சுங்க நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
அதன் காரணமாக இனிவரும் காலங்களில் சுங்க மோசடி மற்றும் வரி ஏய்ப்பைத்&nbsp; தடுக்க பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d41814a-6961-40a1-b3a5-6d92eafdac0f/26-6a5232c447459.webp' /></p><p>
</p><p>மேலும் காகிதமில்லா சுங்க நடவடிக்கைகள் மற்றும் ஒரு புதிய கலால் வரி முகாமைத்துவ அமைப்பு என்பனவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T12:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைத் தண்டிக்கவே பிரதம நீதியரசருக்குப் பதவி நீடிப்பு! ஜனாதிபதி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-chief-justice-tenure-solely-punish-1783771884"></link>
            <id>https://tamilwin.com/article/extension-chief-justice-tenure-solely-punish-1783771884</id>
            <summary type="text">இலஞ்சம், ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை தண்டிப்பதற்கு பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்திருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம், ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை தண்டிப்பதற்கு பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாக தெரிய வந்துள்ளது.</p><p>

ஜனாதிபதிக்கு நெருக்கமான தேசிய மக்கள் சக்தியின் முக்கிய சட்டத்தரணிகள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியபோது இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி வலியுறுத்தல்</h2><p>
</p><p>
அதன்போது பிரதம நீதியரசருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் பதவி நீடிப்பு வழங்க ஜனாதிபதி அனுரகுமார மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி குறித்து தேசிய மக்கள் சக்தியின் முக்கிய சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f9b1d2-be40-4cbf-9d08-64b8ca183f3c/26-6a5234116a527.webp' /></p><p>
</p><p>
எனினும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தவறுகளுக்குத் தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பதாயின் அதற்கு பிரதம நீதியரசர் தொடர்ந்தும் பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன் அவ்வாறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தண்டிக்கப்படாது போனால் அடுத்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுத் தளம் குறைந்துவிடும் என்பதும் ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T12:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதலை கலவரமாக்கிய அரசியல் சதி: விசாரணைகளில் திகைக்க வைக்கும் தகவல்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1783771451"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1783771451</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்தான கதை ஒன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது பயங்கரமான அரசியல் சாதித்திட்டம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்தான கதை ஒன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது பயங்கரமான அரசியல் சாதித்திட்டம் என்பது ஆரம்ப நிலை விவாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கலவரத்தை தூண்ட சிங்கள தேசியவாதத்தை தூக்கி பிடித்துக் கொண்டு அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சி சம்பந்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், இதற்கு சம்பந்தப்பட்ட தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு தகவல்களை பகிரங்கப்படுத்த முடியாது. ஏனெனில், இவை இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அவை மேலதிக விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பிரதான விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவங்களின் பின்னணியிலுள்ள தகவல்கள்,</p><p></p><h2>இரு அதிகாரிகளின் நேரடித் தலையீடு</h2><p>இந்த கலவரத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளின் நேரடித் தலையீடு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரால் இது குறித்த விபரங்கள் அமைச்சருக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கும் (CID) ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><p>

முதலாவது அதிகாரியான ஜெயிலர் 2016 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு சிறையிலிருந்த, தற்போது எதிர்க்கட்சியின் முக்கிய கட்சியொன்றின் முக்கிய பதவி வகிக்கும் அரசியல்வாதி ஒருவருக்கு சிறைக்குள் பணிவிடை செய்தவராவார். </p><p>பின்னர் இவருக்கு பதவியுயர்வும் கிடைத்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை உணவு வரிசைக்கு அருகில், முதல் நாள் மோதலுடன் தொடர்புடைய கைதி ஒருவரை எந்தவொரு காரணமும் இன்றி கன்னத்தில் அறைந்துள்ளார். </p><p>முதல் நாள் இரவு தணிந்திருந்த பதற்றத்தை, திட்டமிட்ட சதியின் அடிப்படையில் மீண்டும் தூண்டுவதற்காகவே இவ்வாறு செய்தார் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.
</p><p>
இதையடுத்தே சிறைச்சாலை விசேட படையினர் (பந்த பொலிஸ்) மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின்ன் உடனேயே, அந்த அதிகாரி சிறைச்சாலையை விட்டு வெளியேறி, தனது குடும்பத்தினருடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் வெளியேறியுள்ளதாகத் தெரியவருகிறது.
</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04dcece-915d-452b-a00f-bcacfcbc1bd5/26-6a52313deaa28.webp' /></p><p>சிறைச்சாலை விசேட படையினர் (பந்த பொலிஸ்) இந்த பிரிவு கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் ஓய்வுப் பெற்ற முப்படையினரை கொண்டு அமைக்கப்பட்டதாகும்.</p><p>இவர்கள் தான் சிறைச்சாலைகளில் திடீர் சோதனைகளில் ஈடுபடுபவர்கள்.
15 அதிகாரிகளை கொண்ட குறித்த பந்த பொலிஸின் கட்டளை அதிகாரி குழுவை இரு பிரிவுகளாகப் பிரித்து சிறைச்சாலை உள்ளே செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.
</p><p>"இந்த நேரத்தில் உள்ளே அனுப்புவது பைத்தியக்காரத்தனம், எங்களை வானத்தை நோக்கி சுட அனுமதியுங்கள்" என ஏனைய அதிகாரிகள் கோரிய போதிலும், இவர் அதற்கு அனுமதி மறுத்துள்ளார். </p><p>அப்போது வானத்தை நோக்கிச் சுட்டிருந்தால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கக்கூடிய வாய்ப்பை இவர் தவிர்த்துள்ளார்.
</p><p>
இறுதியில் அந்த இளம் அதிகாரிகளை மரணத்தின் விளிம்பிற்குள் தள்ளிவிட்டு இவர் வெளியே வந்து தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று, ஆடைகளை மாற்றி வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு வெளியே நின்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>
கட்டமைப்பின் வீழ்ச்சியும் அரசியல் சதியும்</h2><p>இந்த இரு காரணிகளுடன் இதன் பின்னணியில் பாரிய அரசியல் சதி உள்ளதா என்ற சந்தேகம் வலுக்கிறது. தற்போது பல அரச நிறுவனங்களில் ஊழல் அதிகாரிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்க செயலாற்றி வருவதைக் காண முடிகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6333b399-f3e7-4460-bd58-e9c11ad40941/26-6a52313ea006c.webp' /></p><p>சிறைச்சாலைத் திணைக்களமும் அதில் ஒன்றாகும்.

தற்போதைய நீதி அமைச்சர் தீர்க்கமான அல்லது சுயாதீனமான முடிவுகளை எடுக்கும் ஒருவர் அல்ல என்பதால், சிறைச்சாலை கட்டமைப்பு இன்னும் அங்குள்ள சில ஊழல் அதிகாரிகளின் விருப்பப்படியே இயங்குகிறது. சிறைச்சாலைத் துறை இன்னும் அரசியல் சாக்கடையாகவே காணப்படுகிறது.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T12:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதலீடுகளை திரும்பப்பெறத் தொடங்கியுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-investors-started-withdrawing-investments-1783769431"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-investors-started-withdrawing-investments-1783769431</id>
            <summary type="text">இலங்கையின் பங்கு மற்றும் அரசாங்கக் கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் போக்கு அண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பங்கு மற்றும் அரசாங்கக் கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் போக்கு அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>

அவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்துச் சென்றதால், இந்த ஆண்டுக்கான மொத்த நிகர வெளிநாட்டு மூலதன வெளியேற்றம் தற்போது 30 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது.
</p><p>
கொழும்புப் பங்குச் சந்தையிலிருந்து இந்த ஆண்டு இதுவரை (ஆண்டுத் தொடக்கத்திலிருந்து) நிகர வெளிநாட்டு வெளியேற்றம் 25 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.</p><p></p><h2>முதலீடு</h2><p> </p><p>தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விற்பனைச் சரிவு காரணமாக பங்குச் சந்தையின் வேகம் குறைந்துள்ளது.</p><p>

இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பிணைமுறிப்பத்திரங்களிலிருந்து நிகரமாக 13.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (அல்லது 5 பில்லியன் ரூபாவுக்கும் மேல்) அதிகமான தொகையை விற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d75e7a-3c1c-4d11-927b-39c07046892e/26-6a522c02a6563.webp' /></p><p>

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், டொலரின் மதிப்பைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இயல்பாகவே தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர். </p><p>உலகளாவிய அரசியல் அமைதியின்மை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவுகள் காரணமாக, சர்வதேச நிதி முதலீட்டாளர்கள் பலவீனமான சந்தைகளிலிருந்து விலகி, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதும் இதற்கு ஒரு காரணமாகும் என்று தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T11:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகளவானோர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/84-percent-of-people-in-donate-their-eyes-1783768009"></link>
            <id>https://tamilwin.com/article/84-percent-of-people-in-donate-their-eyes-1783768009</id>
            <summary type="text">இலங்கை மக்களில் 84 சதவீதம் பேர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தேசிய கண் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களில் 84 சதவீதம் பேர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.</p><p>

தேசிய கண் வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 17,000 கண் வில்லைகளை 12,000 நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளமை குறித்தும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
வெளிநாடுகளின் கோரிக்கைகளையும் கணக்கில் கொண்டு, 4,000 முதல் 5,000 வரையிலான கண் வில்லைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b68c1bcf-49fa-4ee7-9489-1d43899e3fe3/26-6a522532535d5.webp' /></p><p>
தேசிய கண் வங்கி ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகச் செயல்படுகிறது. மேலும், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிற ஆசிய மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து கண் மாற்று உறுப்புகளுக்கு அதிக கோரிக்கை உள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregularities-on-the-kilinochchi-vavuniya-route-1783768068"></link>
            <id>https://tamilwin.com/article/irregularities-on-the-kilinochchi-vavuniya-route-1783768068</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா
வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான
நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா
வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த பேருந்து சேவைகள் தொடர்பிலும், பயணிகளுடனான தகாத நடத்தைகள்
தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், அதிகார சபை இது குறித்து எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த பேருந்துக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>

சாரதி மீது சட்ட நடவடிக்கை</h2><p>

கடந்த 30.06.2026 அன்று குறித்த பேருந்தின் சேவையின்போது பயணிகளுக்கு ஏற்பட்ட
அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசேட
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c51d06-120c-4608-b3e7-54f82733cc2e/26-6a5224b6d498d.webp' /></p><p>
</p><p>
இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றங்கள், 

அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு ஏற்பச் சேவையில் ஈடுபடாமை. அனுமதிக்கப்பட்ட
கட்டணத்தை விடப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை. வழித்தட அனுமதிப்
பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பாதையைத் தவிர்த்து வேறு பாதையில் சேவையில்
ஈடுபட்டமை. பேருந்தில் பயணித்த பயணிகளுடன் முரண்படும் வகையில் தகாத முறையில்
நடந்துகொண்டமை.</p><p> 

மேற்குறிப்பிட்ட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து,
உரிய தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தினத்தில் பணியாற்றிய சாரதி
மற்றும் நடத்துனருக்கு 7 நாட்களுக்குப் பணித்தடையும் (வேலை நிறுத்தம்)
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில்
01.07.2026 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பேருந்துக்கான
கடுமையான நிபந்தனைகளுடனான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><h2>


விதிமுறைகள்</h2><p>

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் காலை 9.20 மணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
தரித்து நின்று, ஓட்டுதல் குறிப்புத் தாளைப் பதிவுசெய்து காலை 9.50க்குப்
பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும்.</p><p>

இதேவேளை, காலை 9.55க்குக் கிளிநொச்சி
பொது மருத்துவமனையிலுள்ள நேரக்கணிப்பாளர் நிலையத்தைக் கடந்து, காலை 11.30க்கு
வவுனியா பேருந்து நிலையத்தைச் சென்றடைய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40fe0578-fbaa-4567-8edd-49655582fcb5/26-6a5224b7ad4c8.webp' /></p><p> </p><p>

வவுனியாவிலிருந்து
திரும்பும் பயணத்தின்போது, பிற்பகல் 4.15க்கு வவுனியா பேருந்து நிலையத்தில்
ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நின்று ஓட்டுதல் தாளைப் பதிவுசெய்து,
4.45க்குப் புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு வெளித்தரிப்பிடத்திலிருந்து
கிளிநொச்சி நோக்கிப் பயணிக்க வேண்டும்.
</p><p>
 மேலும், பேருந்தில் பணியாற்றும்
சாரதி, நடத்துனர்களின் பெயர் விவரங்கள் வழித்தட அனுமதிப் பத்திரத்தில்
கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் தமது தொழில்
அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><h2>


பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>
பொதுப் போக்குவரத்தில் பணியாற்றும் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும்
வகையிலும், அதிகார சபையின் விதிகளுக்கு அமைவாகவும் சுய ஒழுக்கத்துடன் பணியாற்ற
வேண்டும் எனக் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81bbfc59-0b2f-4101-8867-d964cb25da16/26-6a5224b85c42c.webp' /></p><p>
</p><p>
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும்
சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமுமின்றி
முறைப்பாடு செய்ய முடியும். </p><p>

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த
ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற
வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-committee-appointed-to-assess-1783766289"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-committee-appointed-to-assess-1783766289</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது, சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது, சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மோதல் சம்பவம் தொடர்பில் தனியான விசாரணையை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>சிறைச்சாலை மோதல்</h2><p>
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11fec91e-873f-4d1a-aab1-c9bdb5778525/26-6a522081444be.webp' /></p><p>

மேலும், இந்த மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உடனடியாக பதவி உயர்வும், அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T10:52:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜுன் மாதத்தில் அந்நியச் செலாவணி வரத்து குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-in-foreign-exchange-inflows-in-june-1783762737"></link>
            <id>https://tamilwin.com/article/decline-in-foreign-exchange-inflows-in-june-1783762737</id>
            <summary type="text">கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய மொத்த அந்நியச் செலாவணி 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று தெரியவந்துள்ளது.</p><p>மத்திய வங்கியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 847 மில்லியன் டொலர் கிடைத்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 152 மில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது.</p><p></p><h2>வீழ்ச்சி</h2><p>
</p><p>
2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த மொத்த வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 23.2 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31cf1266-195b-471e-b07f-bacd751a5f50/26-6a52104193a98.webp' /></p><p>

மேலும், 2026 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.</p><p>

2025 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானத்தை 169.5 மில்லியன் டொலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானத்திலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T10:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரகாலக் கடன் மோசடி - தனிப்பட்ட விவரங்களை திருடி மிரட்டும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-loan-scam-1783764550"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-loan-scam-1783764550</id>
            <summary type="text">அவசரகாலக் கடன்களைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசரகாலக் கடன்களைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கணினி அவசரகால உதவி மன்றம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. </p><p>

மேலும், எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால், 101 என்ற எண்ணிற்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவசரகாலக் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறும் செய்திகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.</p><p></p><h2>

கடன் தருவதாக மோசடி</h2><p>
சில நிறுவனங்கள் ரூ. 5,000 முதல் ரூ. 1,50,000 வரையிலான அவசரகாலக் கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அதிலும் சில நிறுவனங்கள் ரூ. 5,00,000 வரை கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். </p><p>

"இந்தக் கடன்களைப் பெற எந்த ஆவணங்களும் தேவையில்லை. சாட்சியாளர் தேவையில்லை." என நிபந்தனைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

இது போன்ற மோசடி நிறுவனங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5e84cb-c0e1-4886-a2f2-ad296b27ce76/26-6a5216d1d07d9.webp' /></p><p> 

கடன் பெற எந்த ஆவணங்களும் தேவையில்லை என்றபோதிலும், கடன் விண்ணப்பதாரரை அந்த நிறுவனங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்து தகவல்களை உள்ளிடுமாறு கேட்டு, அவர்கள் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
</p><p>
அவர்கள் அந்த இணைப்பைக் கிளிக் செய்தவுடன், மோசடிக்காரர்களின் இலக்காகி விடுகிறார்கள். அவர்கள் அந்த இணைப்பு வழியாக ஒரு ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல் (RAT) என்ற கருவியை அனுப்புகிறார்கள்.
</p><p>
அந்த RAT மொபைல் ஃபோனுக்குள் நுழைந்தவுடன், அது ஃபோனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறது.
</p><h2>

தனிப்பட்ட விவரங்களை திருடும் கும்பல்</h2><p>
இந்த நிலையில், இதன் மூலம் அவர்களால் மொபைல் ஃபோனில் உள்ள புகைப்படங்கள், லேபிள்கள், நண்பர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உட்பட அனைத்துத் தகவல்களையும் அணுக முடிகிறது.
</p><p>
சில சமயங்களில், ஒரு .apk செயலி நுழைந்தால், நிலைமை இன்னும் மோசமாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27fb4432-6ff5-4335-ad63-4e49a95213df/26-6a5216d2ab5c0.webp' /></p><p>
</p><p>
கடன் வழங்கிய பிறகு, மோசடிக்காரர்கள் அவர்களை மேலும் கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள், மேலும் கடன் தொகை திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும் போது, ​​அவர்கள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கத் தொடங்குகிறார்கள்.</p><p>

செலுத்த வேண்டிய வட்டியும், பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளும் கடுமையாக உள்ளன, மேலும் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத கடன் வாங்குபவர்கள் பல்வேறு முறைகேடுகளைச் சந்திக்க நேரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; </p><p>&nbsp; &nbsp;</p><p></p><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T10:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடமைப்பு அதிகார சபை மீதான பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409</id>
            <summary type="text">அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலத்தில் பெரும் தொகையை இழந்துள்ளதாக பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்ற குழு (கோப்) கண்டறிந்துள்ளது.</p><p>

கொழும்பின் மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள கடைகளின் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாதது மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரி வசூலிப்பது குறித்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கோப் குழுவின் முன் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இந்தத் தகவல் வெளிப்பட்டது.</p><p></p><h2>கோப் குழு விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது, கோப் குழுவின் தலைவர் மருத்துவர் நிஷாந்த சமரவீர பல விடயங்களை கண்டறிந்துள்ளார்.
</p><p>
மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள 113 கடைகள், டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வாடகை மீதியைச் செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d43d25-1fdd-4ae5-92b1-08a2fc046212/26-6a51edad69992.webp' /></p><p>
</p><p>
மேலும், 2 கடைகள் 100 ரூபாவுக்கும் குறைவான வாடகைக்கும், மற்ற 37 கடைகள் 100 முதல் 1,000 ரூபா வரையிலான வாடகைக்கும் விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
மேலும் 38 கடைகள் 1,000 முதல் 5,000 ரூபா வரையிலான வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், 52 கடைகளின் குத்தகை ஒப்பந்தக் காலம் முடிந்து 1 முதல் 35 ஆண்டுகள் வரை நீண்ட காலம் ஆகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>இது ஒரு பெரும் குற்றம்</h2><p>

இதற்குப் பதிலளித்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பொது முகாமையாளர் அஜித் நந்தன குமார, குறித்த கடைகளின் வாடகைதாரர்கள் 1980-களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை உடனடியாகத் திருத்திப் புதுப்பிக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

'வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வருடத்தின் 365 நாட்களும் நிலத்தை தானமாக வழங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d069fa-be4d-4122-8d6d-4d7dc8698865/26-6a51edae1ff3f.webp' /></p><p> </p><p>இது ஒரு பெரும் குற்றம்...' என்று கோப் குழு விசாரணையில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
குத்தகை ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கத் தவறியதற்கான காரணங்களை விளக்கிய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அனுராத கிரலவெல்ல, இதற்கான முழுப் பழியையும் அதிகாரிகள் மீது சுமத்த முடியாது என்று குறிப்பிட்டார்.</p><p></p><h2>பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்</h2><p>

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p>அரசியல் அழுத்தங்கள், பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆகியவையே அவை என அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15be06c5-4109-415c-b61c-36771a4daad6/26-6a51edaec0baf.webp' /></p><p>

இவ்வாறு மோசடியாகச் செயல்பட்ட சில ஊழல் அதிகாரிகளின் சேவைகளைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அனுராத கிரலவெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T10:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் ஆலோசகர்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்திய இம்ரான் மஹ்ரூப் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-mahroof-mp-statement-1783761602"></link>
            <id>https://tamilwin.com/article/imran-mahroof-mp-statement-1783761602</id>
            <summary type="text">ஆசிரியர் ஆலோசகர்கள்&amp;nbsp;பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியர் ஆலோசகர்கள்&nbsp;பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாடாளுமன்ற அமர்வில் நேற்றுமுன்தினம்(09.07.2026) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் தெரிவிக்கையில்,</p><p>
இலங்கையின் கல்வித் துறையில் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும்,
ஆசிரியர்களுக்குப் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் வழிகாட்டல்களை
வழங்குவதிலும் ஆசிரியர் ஆலோசகர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.</p><p></p><p> </p><p>எனினும்,
நீண்டகாலமாக இந்தச் சேவையில் உள்ளவர்கள் பல்வேறு முறையற்ற நிர்வாகப்
பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு
வருகின்றனர்.
</p><p>
1. 2182/36 (2020.07.01) ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி
உருவாக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையைச் (SLTAS) சேர்ந்த
உத்தியோகத்தர்களின் சேவை தொடர்பாக பின்வரும் தகவல் வெளிப்படுத்தப்படல்
தொடர்பாக வர்த்தமானி 2182/36 இன்படி மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை 4471 ஆகும்.
தற்போது இச்சேவையிலுள்ள மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை எத்தனை? கிழக்கு
மாகாணத்திற்கு சிங்களம் தமிழ் மொழி உட்பட 466 இதில்
தற்போதுசேவையிலுள்ளவர்களின் எண்ணிக்கை எத்தனை?</p><p>

2. ஏன் இதுவரை இச்சேவைக்கான போட்டிப்பரீட்சைகள் நடாத்தப்படவில்லை?
</p><p>
3. 10/2025 இன்படி பதவி நிலை உத்தியோகத்தர்கள் மட்டத்தலுள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களுக்கான வரப்பிரசாதங்கள் என்ன ? இவர்களின் பதவிக்கான அடிப்படை
சம்பளம் மற்றும் சம்பள உயர்ச்சியின் முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b45dce95-f065-459e-b2e4-4deb4219f2c6/26-6a5211e9e4fa5.webp' /></p><p>

4. முன்னோடி வேலைத்திட்டத்தின் படி பாடசாலை தரிசிப்பினை மேற்கொள்ளும்
இவர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு நாடுபூராக மாறுபட்டுக் காணப்படுகின்றமை
ஏன்?</p><p>

5. 10/2026 இன் படி இவர்களுக்கு மோட்டார் போக்குவரத்து கொடுப்பனவு தொடர்பாக
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா?
</p><p>
6. SLTAS-I இன் பின்னர் இச்சேவையைச்சேர்ந்தவர்கள் மூப்பு அடிப்படையில் கல்வி
நிருவாக சேவைப்பரீட்சைக்கு தோற்ற முடியுமா?
</p><p>
7. இவர்களுக்கான சம்பளம் தேசிய நிதி ஒதுக்கீட்டின்படி வழங்கப்படுகின்றதா
அல்லது மாகாண நிதியிலிருந்து வழங்கப்படுகின்றதா?
</p><p>
8. இவர்களுக்கான இடமாற்றம் வலயங்களுக்கிடையில் இடம்பெறுமா அல்லது வலயத்தின்
கோட்டங்களுக்கிடையில் இடம்பெறுமா?
</p><p>
9. ⁠SLTAS-II இல் 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்களுக்கு
SLTAS-I கான பதவி உயர்வு இன்னும் ஏன் வழங்கப்படவில்லை?
</p><p>
10. இவர்களின் நிர்வாக செயற்பாடு மேற்கொள்ளப்படுவது மத்திய கல்வி அமைச்சா?
அல்லது மாகாண கல்வி அமைச்சா? ஆசிரியர் ஆலோசகர் சேவையிலுள்ள இந்தப் பிரச்சினைகள் காரணமாக ஒட்டுமொத்த
பாடசாலைக் கல்வி மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள்
பாதிக்கப்படுகின்றன.</p><p> எனவே, கல்வி அமைச்சர் என்ற ரீதியில் தாங்கள் இதில்
உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பாக
சிறந்த தீர்வொன்றை வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் கேட்டுகொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இளைஞர் பலி - தாய் படுகாயம்.. தப்பியோடிய சாரதி வவுனியாவில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516"></link>
            <id>https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516</id>
            <summary type="text">
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
82 பாதுகாப்பு கமெராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், மாரவில தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
நேருக்கு நேர் மோதி விபத்து</b></h2><p>கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b027737d-21c1-4dbd-9f63-3c7b7d62f53c/26-6a51a75c1c0a2.webp' /></p><p>இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அத்துடன், அவருடன் பின்னால் பயணித்த அவரது தாயார் பலத்த காயங்களுடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். </p><p>விபத்து இடம்பெற்றவுடன், டிப்பர் வாகனத்தை நிறுத்தாது அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அந்த வாகனத்தை கைப்பற்ற விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
</p><h3><b>
சாரதி கைது</b></h3><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியில் வசித்து வந்த ரித்ம பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cd1af6-4118-4794-8f06-88fb40bb4bcc/26-6a51a75cbfc6f.webp' /></p><p>உயிரிழந்தவர் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என தெரியவந்துள்ளதுடன், அவரது தந்தையும் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் இலக்கத் தகடுகளில் இலக்கங்கள் தெளிவாக இருக்கவில்லை. </p><p>82 பாதுகாப்பு கமெராக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, பல பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் பயணித்த பாதையை அவதானித்து, வவுனியாவில் மறைந்திருந்த சாரதியை கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T09:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்கு மத்தியில் நீதிச் சேவை சங்கத் தலைவர் பசன் அமரசேன பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magistrate-pasan-amarasena-steps-down-1783760589"></link>
            <id>https://tamilwin.com/article/magistrate-pasan-amarasena-steps-down-1783760589</id>
            <summary type="text">நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இன்று(11.07.2026) நடைபெறவிருந்த நீதிச் சேவை சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு ஏற்பட்ட சர்ச்சையே அவரது பதவி விலகலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.</p><p></p><h2>பதவி விலகல்</h2><p>

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடவும், உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று(11) விசேட பொதுச் சபை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.</p><p>

இந்த நிலையில், தனது பதவி விலகல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து சங்க உறுப்பினர்களுக்கு தலைவர் பசன் அமரசேன அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f4508d-7607-4a6c-aaab-48c509ad8770/26-6a520aa387e12.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
இதற்கிடையில், திட்டமிட்டபடி நீதிச் சேவை சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆரம்பமானதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/growth-opportunities-in-the-tourism-sector-batti-1783758753"></link>
            <id>https://tamilwin.com/article/growth-opportunities-in-the-tourism-sector-batti-1783758753</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி
வாய்ப்புகளை ஆராயும் வகையில் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள்
மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி
வாய்ப்புகளை ஆராயும் வகையில் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள்
மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர்.</p><p>
மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டின்
இலங்கைக்கான தூதுவர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>இதன் போது, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்க உள்ள அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும்
தெளிவுபடுத்தியிருந்தனர்.</p><p></p><h2>அபிவிருத்தி திட்டங்கள்&nbsp;</h2><p>
மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள
சுற்றுலா தளங்கள் மற்றும் அவை தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி
திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1227445e-e82b-4a11-b17a-801290223e48/26-6a520a698ea34.webp' /></p><p>அத்துடன் மாநகர சபையின் செயல்பாடுகள்
குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையினை கட்டியெழுப்பும்
வேலைத்திட்டங்களுக்கான உதவிகளை வழங்குமாறும் இதன்போது மாநகரசபை முதல்வரினால்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p>&nbsp;ஒவ்வொரு நாட்டு தூதுவரிடமும் ஒவ்வொரு
அபிவிருத்தி திட்டத்திற்கான முன்மொழிவு அறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் - எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1783758698"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1783758698</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்தொழிலாளர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்தொழிலாளர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக&nbsp;மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.</p><p>இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய
நடவடிக்கையை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரிடம் பல்வேறு தடவைகள்
கோரிக்கைகளை முன் வைத்துள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று (11.07.2026) மதியம்
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சட்டவிரோத மீன்பிடி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகள், அதேபோன்று
அண்மையில் இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை எல்லையைக் கடந்து எமது இறங்குதுறை
வரைக்கும், அதாவது&nbsp;கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்கும் இடம் வரைக்கும் வந்த விடயங்களை
நான் இந்த ஊடக வாயிலாக உரிய தரப்புக்கு தெரிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பை
ஏற்பாடு செய்திருக்கின்றேன்.</p><p></p><p>

குறிப்பாக, இந்த சட்டவிரோத மீன்பிடி முறைகள். இது தொடர்பாக பல விடயங்கள்
மன்னார் மாவட்டத்திலும் வடக்கிலே காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்திலே
தொடர்ச்சியாக இது காணப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாக காலப்பகுதிகளிலே இந்தத் தொழில்
முறைகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. </p><p>குறிப்பாக, இலங்கை கடற்தொழிலாளர்கள்
குறிப்பாக வட பகுதி கடற்தொழிலாளர்கள் குறிப்பிட்ட தூரம் கடலுக்குச் சென்று மீன்
பிடிக்கக் கூடிய அனுமதியை கடற்படையும் வழங்கியிருந்தது.

இருந்தபோதிலும், அந்தப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான
அனைத்து கடல் உணவுகளையும் அறுவடை செய்து, அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தைக்
கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அன்றைய காலப்பகுதியிலே அவர்கள் செய்து வந்தார்கள்.</p><p>

2009க்கு பின்னர் யுத்தம் நிறைவுக்குப் பின்னர் படிப்படியாக அரசாங்கம்
வேண்டிய தூரம் சென்று கடலில் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று அந்த சூனியப்
பிரதேசங்களை அகற்றிய பிறகு, இந்தத் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் எல்லை
தாண்டியதாக இருக்கிறது.

டைனமட், சுருக்குவலை, இழுவைப் படகுகள் அதேபோன்று தங்கூசி கொண்டு தொழில்
பிடிக்கும் முறைகள், அவ்வாறான 14 வகையான தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும்
இப்போது இந்த வடக்கு கடற்பரப்பிலும் அதேபோன்று மன்னார்
மாவட்டத்திலும் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது.
</p><p>
இதை நாங்கள் தடுப்பதற்கும் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மன்னார் மாவட்டத்தில்
எங்களுக்குள்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மீன்பிடி கிராமங்கள், தோறும்
இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்களை தங்களது வாழ்வாதாரம் என்று கூறிக்கொண்டு
செய்து வருகிறார்கள்.

நாங்கள் கிராமங்களைக் குறிப்பிடப்பட்டாலும், குறிப்பிடாவிட்டாலும்
உண்மையிலேயே யார் யார் என்ன தொழில் செய்கிறார் என்று அந்தந்த கிராமங்களுக்கு
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6a4636-101c-4246-a811-3fc4b7412737/26-6a520997054c1.webp' /></p><h2>எழுகின்ற கேள்வி</h2><p> </p><p>எனவே, இதில் நான் குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது
இந்த விடயத்தில் ஒருவரைக் குறிப்பிடவோ நான் இந்த ஊடக சந்திப்பை செய்யவில்லை.

இந்தத் தொழில்கள்... நாங்கள் தலைவர்கள் பல்வேறுபட்ட கூட்டங்களிலே பங்கு
பெற்றுகின்றோம், பல மாகாண கூட்டங்களிலும் நாங்கள் பங்கு பெற்றிருக்கிறோம்.

ஆனால் குறிப்பாக, மன்னார் மாவட்டம் தொடர்ந்து பேசும்போது எங்களுக்கு சில
விடயங்களை அங்கு பேசும்போது நாங்கள் தடுப்பதா அல்லது மௌனமாக இருப்பதா என்ற
கேள்வியும் எழுகின்றது.
</p><p>
இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு
கட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களாக இருக்கட்டும் அல்லது பல அரசியல்
தரப்புகளைச் சந்தித்து நாங்கள் மனுக்குடுத்த விடயங்கள் போன்ற பல விடயங்கள்,
பேசிய விடயங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன.

ஆனால் அவை அனைத்துமே பலனற்று, இன்று வரை நாங்கள் 2009ல் எப்போது கலைக்கத்
துவங்கினோமோ இந்த விடயத்தை, அப்போதிலிருந்து இன்று வரைக்கும் அந்த விஷயத்தைத்
தான் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். </p><p>எனவே, ஒரு விடயமும் தீர்ந்ததாக இல்லை. பல
அரசுகள் வந்து போய்விட்டன.

தற்போது கூட புதிய கடற்றொழில் அமைச்சர் பல்வேறுபட்ட கருத்துக்களைக்
கூறுகின்றார். அவரை நாங்கள் பல தடவை சந்தித்து விட்டோம்.

கடந்த அரசாங்கங்களில் இருந்த கடற்றொழில் அமைச்சரை விட இப்போது இருக்கின்ற
அமைச்சரை அமைச்சர் பொறுப்பெடுத்து ஒன்றரை வருடங்களிலே அவரை 15 தடவைக்கு மேல்
நாங்கள் சந்தித்து எங்களது பிரச்சினைகளை வலியுறுத்தி, இந்த விடயங்களைத்
தீர்த்து தாருங்கள் என்று.</p><p></p><p>
</p><p>
ஒரு இணக்கமான செயல்பாட்டுடன் நாங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள
அமைச்சரிடம் அணுகினாலும், அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை
நிறுத்தலாம், இதை நிறுத்தலாம் , உங்களுடைய அபிப்பிராயம் என்ன, என்று
கேட்டுப் பெறுகிறாரே தவிர, எதுவுமே அவர் செய்வதாக இல்லை.

எனவே, இந்த விடயத்திலே கடந்த கால அரசாங்கம் செய்த தவறை தான் இப்போது
இருக்கின்ற அரசாங்கம் செய்து வருகிறது. எந்தச் சட்டவிரோத மீன் பிடியும் இங்கு
நின்றபாடில்லை.
</p><p>
குறிப்பாக, உள்ளூர் இழுவைப்படகு தொடர்பாக 2020-லே புத்தளத்தில் ஒரு வழக்கொன்று
தாக்கல் செய்யப்பட்டது, சமூக கடல் சூழல் சார்ந்த ஒரு அமைப்பினால் அங்கு
வழக்குத் தாக்கல் பட்டு 23 பேர் இந்த வழக்கு போனது.

ஆனால், இறுதியில் அந்த 23 பேரும் "நாங்கள் அவ்வாறான தொழிலைச் செய்யவில்லை"
என்று சொன்னார்கள். திணைக்களமும் "நாங்கள் அவ்வாறான தொழிலுக்கு அனுமதி
வழங்கவில்லை" என்று சொன்னார்கள்.எனவே சட்டவிரோத மீன்பிடி தொழிலை நிறுத்த எந்த
தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T09:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடிக்கையாளர் போர்வையில் கடைக்குள் நுழைந்த பெண் - தமிழர் பகுதியில் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-jewelry-store-in-batticaloa-1783759788"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-jewelry-store-in-batticaloa-1783759788</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தங்க நகைக்கடையொன்றில் மிகவும் நுணுக்கமான முறையில் காப்பு ஒன்றை திருடிய பெண் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தங்க நகைக்கடையொன்றில் மிகவும் நுணுக்கமான முறையில் காப்பு ஒன்றை திருடிய பெண் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்(10.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>


தங்க காப்புடன் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>

களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் கடந்த 
2026.06.04 அன்று தங்க நகை கொள்வனவு செய்வதற்காக குறித்த பெண் கடைக்கு வந்துள்ளார். </p><p>

இதன்போது, ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்க காப்பு ஒன்றை நுணுக்கமான முறையில் திருடிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a84ec29-c06f-43ff-a92d-0136d4bee51e/26-6a5204423f992.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடையின் உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நேற்று10) களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் முன்னாள் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2> 



45 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி</h2><p>

இதன்போது அவரிடம் இருந்த தங்க காப்பு மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் தங்க நகையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4615da3-67b3-4d43-9656-1b79eee4eb51/26-6a520443265ac.webp' /></p><p> </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 45 வயதுடை அம்பாறை பிரதேசத்தை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> 

இந்த நிலையில், வெளியிடங்களில் இருந்து வருகை தருபவர்களிடம் சற்று அவதானமாக இருக்குமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபானம் கடத்திய 60 வயதுடைய ஒருவர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arreste-smuggling-150-liters-illicit-liquor-1783758794"></link>
            <id>https://tamilwin.com/article/person-arreste-smuggling-150-liters-illicit-liquor-1783758794</id>
            <summary type="text">கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரையம்பதி பகுதிக்கு காஞ்சிரம்குடா வாவி வழியாக மீன்பிடி தோணியில் கசிப்பை கடத்திச் செல்ல முயன்ற 60 வயதுடைய ஒருவரை, 150 லீற்றர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரையம்பதி பகுதிக்கு காஞ்சிரம்குடா வாவி வழியாக மீன்பிடி தோணியில் கசிப்பை கடத்திச் செல்ல முயன்ற 60 வயதுடைய ஒருவரை, 150 லீற்றர்&nbsp; சட்டவிரோத மதுபானத்துடன் நேற்றையதினம் (10) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>ஒருவர் கைது</h2><p>
</p><p>
இந்த நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிகாலை சுமார் 4.00 மணியளவில் காஞ்சிரம்குடா வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
</p><p>
அப்போது, மீன்பிடி தோணியில் கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட 150 லீற்றர் கசிப்பை பொலிஸார் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1731074b-7299-4e29-879b-8ef871dd8a7a/26-6a5201ce0b8b4.webp' /></p><p>

மேலும், ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், கசிப்பு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி தோணியையும் மீட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T08:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் - நெருக்கடியில் திணறும் இலங்கை பொருளாதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-problem-1783757828"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-problem-1783757828</id>
            <summary type="text">வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தற்போது நாட்டில் வாகனத் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் வரி வருமானம் குறையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு பின்னர், வாகன இறக்குமதிக் கொள்கையை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p> </p><h2>


கூடுதல் கட்டணங்கள் விதிக்க முடியாது..</h2><p>
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி, கூடுதல் கட்டணங்களை விதிக்க முடியாது என்றாலும், அரசாங்கம் இந்தக் கூடுதல் கட்டணங்களை நீக்கினால் சந்தையில் மற்றொரு அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>

கடந்த காலத்தில் இருந்த வலுவான வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாலும், இறக்குமதியாளர்களும் தேவையான எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்துவிட்டதாலும், வாகனப் பதிவுகள் படிப்படியாகக் குறையும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebb2100-9adc-44ec-8dcb-f2ab3ab89094/26-6a51fe9e18597.webp' /></p><p> 

இதன் விளைவாக, வாகன இறக்குமதி வரி வருவாய் கடந்த ஆண்டின் அளவை எட்டாது. 

வாகனங்கள் மீது ஏற்கனவே 150% மற்றும் 200% போன்ற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வரிகளை மேலும் விதிப்பது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டிய 
தனநாத் பெர்னாண்டோ, ஒரே பிரிவினர் மீது தொடர்ந்து வரிகளை விதித்து அரசு செலவினங்களைச் சுரண்டாமல், அவற்றை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். </p><p>

மேலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் வரி வருவாயை ஓரளவிற்கு அதிகரிக்க முடியும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி வலுவான சமிஞ்சையை சந்தைக்கு வழங்கும் என்றும் பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> 






</p>]]></content>
            <updated>2026-07-11T08:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் மஹாவலி கங்கையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-in-muttur-boy-drowns-mahaweli-river-1783756834"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-in-muttur-boy-drowns-mahaweli-river-1783756834</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில்
மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன்&amp;nbsp; பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில்
மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன்&nbsp; பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; இன்று(11.7.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த சிறுவன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஆற்றங்கரைப் பகுதிக்கு
சமையல் தேவைக்காகச் சென்றுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, ஆற்றில் குளிப்பதற்காக சிறுவன் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக
நீரில் மூழ்கி அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும்
அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்கப் போராடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8a0ad6-4c24-4cd5-8ac5-cc8a29b60f7c/26-6a51fc18b9127.webp' /></p><p> </p><p>எனினும், சிறுவனை
உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது.

நீண்ட தேடுதலின் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக
மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p> இந்தச் சம்பவம் குறித்து
மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T08:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இலங்கை குடும்பம் ஒன்றை கடத்த முயற்சித்த கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-family-caught-in-thai-airport-passport-1783747483"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-family-caught-in-thai-airport-passport-1783747483</id>
            <summary type="text">தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குடும்பம் ஒன்றை கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

மலேசிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குடும்பம் ஒன்றை கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி கடத்த முயற்சித்த சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
இந்த இலங்கை குடும்பத்தினர் ஆரம்பத்தில் தங்களது சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்துள்ளனர்.</p><h2><b>

மலேசிய கடவுச்சீட்டு</b></h2><p>பின்னர் தரைமார்க்கமாக மலேசியாவுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்து வந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04558575-5842-4b13-95db-e8f23e4d3dc2/26-6a51f8da8b069.webp' /></p><p>அவர்கள், 2 பிள்ளைகளுக்கு தான் தாய் என்று பொய்யாகக் கூறிக்கொண்ட மலேசியப் பெண் ஒருவருடன் கஜகஸ்தான் செல்ல முயற்சித்துள்ளனர்.</p><p>
எனினும் அவர்களது பயண ஆவணங்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்த விமான சேவை அதிகாரிகள், அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துள்ளனர்.</p><p> </p><h3><b>

தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் </b></h3><p>இதனால் தங்களது பயணத் திட்டத்தை மியான்மருக்கு மாற்றிய குறித்த குழுவினர், இது குறித்து குடிவரவு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c1c03b-80ec-4e2f-a04a-3f4aff5ce417/26-6a51f8db394d8.webp' /></p><p>மியான்மரிலிருந்து டொன் முவாங் சர்வதேச விமான நிலையம் வழியாக கஜகஸ்தான் செல்ல முயன்ற போது, தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தலையிட்டு அவர்களைக் கைது செய்தனர்.</p><p>

இலங்கை பெண்ணும் மூத்த பிள்ளைகளும் மற்றவர்களுக்கு சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதும், இளைய பிள்ளை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. 
<br><br><b><i>You may like This..</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pgGAnL_-b9g" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-11T08:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் - ஜனாதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-program-soon-those-displaced-during-the-war-1783756518"></link>
            <id>https://tamilwin.com/article/new-program-soon-those-displaced-during-the-war-1783756518</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இதனடிப்படையில், மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பில் தற்போதைக்கு அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கில் இடம்பெயர்ந்து இன்னும் சொந்த இடங்களுக்குத் திரும்பாத ஆயிரம் பேரளவிலான தமிழ்க் குடும்பங்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்கள் அல்லது அண்மித்த பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
இஸ்லாமியர்களை மீள்குடியேற்ற திட்டம்</h2><p>
எனினும் வடக்கில் இருந்து இடம்பெயர்க்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் இன்று வரை புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை மீளக்குடியமர்த்துவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54eca472-0d38-46a0-8ffb-e4ca4f896e2f/26-6a51f6e826dd1.webp' /></p><p> 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் அவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியர்களின் காணிகளில் கடந்த பல வருடங்களாக குடியிருக்கும் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளனர். </p><p>

இதேவேளை, நிர்வாகப் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் பாகுபாடு காரணமாக இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்கும் செயற்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் தொடர்ந்தும் புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தற்காலிக குடியிருப்புகளில் போதிய வருமானம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளின்றி தவித்து வருவதாக வடக்கு இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-injured-after-a-pickup-truck-collided-bridge-1783755813"></link>
            <id>https://tamilwin.com/article/man-injured-after-a-pickup-truck-collided-bridge-1783755813</id>
            <summary type="text">முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது&amp;nbsp;இன்று(11.072026) அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று(11.072026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><p>யாழ்ப்பாணம் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா கப்ரக வாகனம் பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவு சென்று கொண்டிருந்தபோது
வெளிகண்டல் பகுதியில் அதி வேகட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன்
மோதுண்டு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின்
உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c84faa72-4062-45d4-99e0-c22ef670cbe9/26-6a51f6e50b81f.webp' /></p><p> குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T07:56:14+00:00</updated>
        </entry>
    </feed>
