<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T19:49:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனைவி - பிள்ளைகள் எங்கே! அரசியல்வாதிகள் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399"></link>
            <id>https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.&nbsp;</p><p>அவர், சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அண்மையில் அவரின் குடும்பத்தினர் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.&nbsp;</p><p>&nbsp;சுரேஷ் சலே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகார்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் மனைவி ஊடக பரப்பில் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.&nbsp;</p><p>சலேவின் தாய் மற்றும் மகன் உட்பட அவரின் குடும்பத்தினர், ஊடகங்களுக்கு முன்னிலையில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்நதனர்.&nbsp;</p><p>இந்நிலையில், சமீப காலமாக அவர்களில் யாரும் பெரிதாக எவ்வித வெளிப்பாடுகளையும் முன்வைத்து வருவதில்லை. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்னும் கேள்வி எழும் அளவுக்கு அமைதியாக உள்ளனர்.&nbsp;</p><p>இதற்கான காரணம் தான் என்ன? இது தொடர்பில் பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T19:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஜனாதிபதி யார்! இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கூட்டணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351"></link>
            <id>https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.</p><p>இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.</p><p>பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>எதிர்வரும்&nbsp;ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b746TCSqv10" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்துவேனியா மீதான தாக்குதல் திட்டம் வெறும் கதை: குற்றச்சாட்டுகளை மறுத்தது ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996"></link>
            <id>https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996</id>
            <summary type="text">தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவிற்கு எதிராக தங்களை இராணுவமயமாக்கிக் கொள்வதற்காகவே லித்துவேனியா
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ரஷ்யா சாடியுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
முன்னதாகப் பேட்டியளித்த லித்துவேனியா ஜனாதிபதி கிட்டானஸ் நௌசேடா, தங்கள்
நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்
தங்களுக்கு உளவுத்துறைத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து
மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33976a57-9197-4e84-92ed-6ebde8a6f212/26-6a57d0bad9229.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின்
செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "மக்களை மூளைச்சலவை செய்து, நாட்டை
மேலும் இராணுவமயமாக்குவதற்காகப் பரப்பப்படும் அச்சுறுத்தல் கதைகளின் சமீபத்திய
வடிவமே இதுவாகும்.</p><p>

இந்த நோக்கத்தை அடைவதற்காக, அவர்கள் மற்றொரு நாட்டை - இந்தச் சூழலில் எங்களது
நாட்டை - எதிரியாகக் காட்ட வேண்டியுள்ளது.
</p><p>
இந்த சாக்கைப் பயன்படுத்தி பால்டிக் நாடுகளில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ
உள்கட்டமைப்புகளை அவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்” என்று
குற்றம் சாட்டினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடான் உள்நாட்டுப் போர்: கம் அரபிக் பசை வர்த்தகம் மூலம் நிதியுதவி - ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897</id>
            <summary type="text">சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் &#039;கம் அரபிக்&#039; எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் 'கம் அரபிக்' எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
முக்கிய நிதியாதாரமாக விளங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
</p><p>
உலகளாவிய சந்தையில் குளிர்பானங்கள், மருந்துப் பொருட்கள், சொக்லேட்டுகள்
மற்றும் அழகுசாதனப் பொருட்களில் நிலைநிறுத்தியாக மற்றும் அடர்த்தியாக்கியாக
இம்மூலப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
உலகளவில் தேவைப்படும் இந்த கம் அரபிக் பசையின் ஒட்டுமொத்த உற்பத்தியில்
சுமார் 80 விழுக்காட்டை சூடான் நாடே பூர்த்தி செய்து வருகிறது.
</p><p>
சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவப் பிரிவான விரைவு ஆதரவுப் படைக்கும்
(RSF) இடையே தொடரும் இந்த மோதலில், இரு தரப்புமே இந்த வர்த்தகத்தைக்
கட்டுப்படுத்தி தங்களின் இராணுவச் செயல்பாடுகளுக்கான நிதியைப் பெற்று
வருகின்றன.</p><p></p><h2>சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி</h2><p>
</p><p>
குறிப்பாக, RSF அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து
பெருமளவிலான கம் அரபிக் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்பட்டு, பின்னர்
அங்கிருந்து அந்த நாடுகளின் உள்ளூர் தயாரிப்புகள் போல போலியாக சர்வதேச
சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5039149c-5a9a-4c03-9574-ee4db188a64b/26-6a57cbf25cc4f.webp' /></p><p>
</p><p>
இதனால் இந்த மூலப்பொருட்களின் அசல் உற்பத்தி நாட்டைத் துல்லியமாகக் கண்டறிவது
உலகளாவிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>

இந்தப் போர்ச் சூழலால், கம் அரபிக் உற்பத்தி மற்றும் சேகரிப்பில் ஈடுபடும்
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதுகாப்பு
அச்சுறுத்தல்களையும், கொள்ளைச் சம்பவங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர்
துர்க், சர்வதேச நிறுவனங்கள் மோதலால் பாதிக்கப்பட்ட விநியோகச்
சங்கிலிகளிலிருந்து தங்களது மூலப்பொருட்களைப் பெறும்போது கூடுதல் பொறுப்புடன்
செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>

நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நடைமுறைகள் மூலம் மறைமுகமாக இந்த வன்முறைக்கும்
மனித உரிமை மீறல்களுக்கும் நிதியுதவி அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ய முறையான
சரிபார்ப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு தரகு கூட்டு! இளங்குமரன் எம்.பி. விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821</id>
            <summary type="text">தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் பேசும் கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிலர் கொழும்பில்
ஒன்றுகூடியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;மக்களின் தெளிவான சிந்தனை</h2><p> </p><p>இவர்கள் ஏன் தங்களின் சொந்தத்தாயகமான தமிழ்ப்
பிரதேசங்களில் கூட்டத்தை நடத்தவில்லை? இதற்கு முக்கிய காரணம், இவர்கள்
கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253ba125-4c9c-4e51-bbd4-d45f33e56a77/26-6a57bec809508.webp' /></p><p> </p><p>இவர்களின் பிள்ளைகள்
தென்பகுதியில் திருமணம் முடித்தவர்கள், கொழும்பிலேயே தங்கியிருப்பவர்கள்.

தென்பகுதியில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன்மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றார்கள். </p><p>அதற்கு, தமிழ் மக்களின்
பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தரகு வேலைகளைப் பார்க்கின்றார்கள்.
மக்கள் இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றார்கள்.</p><p> எனவே, இது மக்களுக்கான
கூட்டம் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகக் கூடியவர்களின் கூட்டம்.
</p><p>
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, வடக்கு மாகாணத்தில் ஒரு
கூட்டத்தைக் கூட நடத்தத் துணிவற்ற இவர்கள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களில்
சென்று கூடியிருப்பது வெட்கக்கேடான விடயமாகும்" என்று அவர் சாடினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது பகல் நேரத்திலும் அமெரிக்கா குண்டுமழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030"></link>
            <id>https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030</id>
            <summary type="text">தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p>90 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில்
அமைந்துள்ள மிக முக்கியமான கிரேட்டர் துன்ப் தீவில் உள்ள ஈரானின் ஏவுகணைத்
தளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா
தெரிவித்துள்ளது.</p><p>

பொதுவாக இரவு நேரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தற்போது
தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்து பகல் நேரத்திலும் குண்டுமழையைப் பொழிந்து
வருகிறது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
மறுபுறம், தென் ஈரானில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில்
30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 260-க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கியக்
குடிமைசார் உள்கட்டமைப்புகளை அடுத்த வாரத்தில் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாக
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a69497a-f362-49c1-8068-2c73869ebc78/26-6a57bd1863fd8.webp' /></p><p>
</p><p>
இது உலக அளவில் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்ற பெரும்
கவலையை உலக நாடுகளிடையே எழுப்பியுள்ளது.
</p><p>
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றிற்கு
இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025"></link>
            <id>https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாட்டைப் பாதுகாப்பதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தங்களது நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே தற்போதைய கவனம் முழுமையாக உள்ளது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார். </p><p>
அமெரிக்கா தனது சர்வதேச உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே, ஈரானும் தனது சர்வதேச கடமைகளை மதித்து நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2fee55-52ce-4834-b994-f70c63eda951/26-6a57b98e2fd8d.webp' /></p><p>வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி இது குறித்து மேலும் கூறியதாவது:
அமெரிக்கா தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை மட்டுமே எங்களது கடமைகளும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p> தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தங்களுக்குரிய பகுதியை நிறைவேற்ற அமெரிக்கா தவறியதை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் கீழான கடமைகளை ஈரானும் கைவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர்கள் தங்களது கடமைகளை மீறிய பின்னர், அதற்கு ஈடாக நாங்கள் எந்தெந்தப் பகுதிகளில் எங்களது கடமைகளைத் தவிர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் அவற்றைச் செயல்படுத்துவதை நிறுத்திக்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
</p><p>இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மீறி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>
தங்களது எண்ணெய் ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்தது மற்றும் புதிய தடைகளை விதித்தது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் மூலம் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அரசியல் கைதிகளுக்கான மரணதண்டனை நிறைவேற்றத்தில் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631"></link>
            <id>https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஈரான் மனித உரிமைகள்' என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4a93c1-35d2-472e-8e72-b834d5d0c8d8/26-6a57bbe958215.webp' /></p><p> </p><p>
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். </p><p>
அத்துடன், போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.</p><p>எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும், அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது. </p><p>
இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே, ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர சிறைக்குச் சென்றாலும் பெரும் ஆபத்து - யாரும் அறியாத திகில் நிமிடங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு &#039;தடைக்கல்லாக&#039; (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு 'தடைக்கல்லாக' (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். </p><p>

 பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து இவை இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வது பழைய அரசியல் சக்திகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அவர் கூறினார்.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு முதன்மையான காரணமாக, சிறைக்குள் தமது 'குட்டி ராஜ்ஜியத்தை' நடத்தி வந்த கும்பலுக்கும், அவர்களை கண்காணித்த உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று குறிப்பிட்டார். </p><p>

சிறை வன்முறையைத் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>


அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிக்கின்றனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகள் வரவுள்ள நிலையில், சிறைக் கலவரம் இச்செய்திகளை மழுங்கடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
</p><p>
இந்த வன்முறையானது நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, முதலீடுகளைத் தடுத்து, தற்போதைய அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார். </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/to1YQFyZKn8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T16:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு மூதவைப் பிரதிநிதிகள் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/election-senate-representatives-south-eastern-uni-1784131986"></link>
            <id>https://tamilwin.com/article/election-senate-representatives-south-eastern-uni-1784131986</id>
            <summary type="text">தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவை அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவை அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத்
தலைவருமான பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் மற்றும் ஆங்கில மொழிக்
கற்பித்தல்&nbsp; துறையின் பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் உயரிய தீர்மானங்களை எடுக்கும் நிர்வாக அமைப்பான பேரவையில்
மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இவ்விரு சிரேஷ்ட
கல்வியாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பது, அவர்களின் கல்விசார் ஆளுமை,
நிர்வாக அனுபவம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்திடம் பெற்றுள்ள உயர்ந்த
நம்பிக்கைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக கல்வி வட்டாரங்களில்
கருதப்படுகிறது.
</p><p>
பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் கல்வி, ஆராய்ச்சி, நிர்வாகம்
மற்றும் பல்கலைக்கழக ஆளுமைத்துவம் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்ற
கல்வியாளராகத் திகழ்கிறார்.</p><h2>பிரதிநிதிகள் தெரிவு</h2><p> </p><p>சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல்
பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி வரும் அவர், கல்வி மற்றும்
நிர்வாகத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.</p><p>அதேவேளை, பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் அவர்கள் ஆங்கில மொழிக்
கற்பித்தல் துறையில் நீண்டகால கல்வி, ஆய்வு மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட
கல்வியாளராகப் பரவலாக அறியப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a88daf0a-0044-4df2-9976-d9239959c97d/26-6a57b336ad57d.webp' /></p><p> </p><p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி
வளர்ச்சிக்கும், தரமான ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கும் அவர்
ஆற்றிவரும் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.</p><p>இவர்களின் கல்விசார் அனுபவமும் தொலைநோக்குப் பார்வையும், பல்கலைக்கழகத்தின்
எதிர்கால கல்வி, ஆராய்ச்சி, நிர்வாக மற்றும் கொள்கைத் தீர்மானங்களை மேலும்
வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக சமூகத்தினர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T16:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன..! பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-happened-in-negombo-prison-1784130764"></link>
            <id>https://tamilwin.com/article/what-happened-in-negombo-prison-1784130764</id>
            <summary type="text">1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வரலாற்று ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். </p><p>

ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் 'களம்' நிகழ்ச்சியில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். </p><p>

வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளின் கண்கள் தோண்டப்பட்டும் நாக்குகள் வெட்டப்பட்டு கொலை செய்யபட்டுள்ளனர்.
</p><p>
குட்டிமணியின் நாக்கை வெட்டிய ஒரு சகோதர இனத்தை சேர்த்த ஒரு நபர் அதிலுள்ள இரத்தத்தை குடித்து விட்டு நான் ஒரு விடுதலை புலிகளின் இரத்தைதை குடித்து விட்டேன் என்று கத்தியுள்ளார்.
</p><p>
அன்றைய அரசு இந்த சிறை படுகொலைக்கு அனுமதித்தது என்பதை அப்போதைய அமைச்சர் ஒருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p> 

எனவே அதனை சமீபத்தில் நடந்த நீர்கொழும்பு சிறை கலவரத்துடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
</p><p> 
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற தாக்குதல், கலவரத்தின் தொடக்கப் புள்ளியாக எவ்வாறு அமைந்தது என்பதையும் விளக்கினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WnyVEz62VZo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charge-sheet-filed-against-mervyn-silva-1784127386"></link>
            <id>https://tamilwin.com/article/charge-sheet-filed-against-mervyn-silva-1784127386</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்&nbsp;&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மோசடி</h2><p>கிரிபத்கொட பகுதியில் அரச நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோதமாக ரூ. 800 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளில் மேர்வின் சில்வா சமீபகாலமாகச் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75d13a2-4165-4d1f-86c6-9f51a2e01c65/26-6a57a889975a7.webp' /></p><p> </p><p>இந்த வழக்குகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:35:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mayor-of-negombo-municipal-council-resigns-1784127276"></link>
            <id>https://tamilwin.com/article/mayor-of-negombo-municipal-council-resigns-1784127276</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவ்வாறு பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ரொபர்ட் ஹின்கெந்த தனது மேயர் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதிலும், பின்னர் அவர் அந்த முடிவை மாற்றிக்கொண்டதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.</p><p>[DCXD8N
]</p><p> 
எனினும், அவர் இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>தேசிய மக்கள் சக்தி கட்சி தரப்பில் இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் இது குறித்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T14:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிந்து வரும் மரங்களைக் காக்கக் கழிவிலிருந்து பசுமை ஆற்றல்: பெண்ணின் நெகிழ்ச்சியான சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/green-energy-from-waste-to-save-endangered-trees-1784125276"></link>
            <id>https://tamilwin.com/article/green-energy-from-waste-to-save-endangered-trees-1784125276</id>
            <summary type="text">உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும்
நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான
எரிசக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும்
நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான
எரிசக்தியை உருவாக்கிப் புரட்சி செய்து வருகிறார்.</p><p>

உகாண்டாவின் வடக்குப் பகுதியில் கரிக்காக ஷியா மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு
கவலையடைந்த லூசி எவர்லின் ஆட்டிம் என்ற காலநிலை ஆர்வலர், இதற்கு மாற்றாக ஒரு
புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்.
</p><p>
கடந்த 2023ஆம் ஆண்டு அவர் தொடங்கிய 'மொயாவோ ஆப்பிரிக்கா முன்முயற்சி' என்ற
சமூக நிறுவனம், வீணாகத் தூக்கி எறியப்படும் ஷியா பழங்களின் உமிகளைக் கொண்டு
சமையல் எரிபொருள் கட்டிகளை தயாரித்து வருகிறது.</p><p></p><h2>பசுமை ஆற்றல்</h2><p>
</p><p>
உகாண்டாவில் சுமார் 90 சதவீத வீடுகள் சமையலுக்குக் கரியையே நம்பியிருப்பதால்,
ஆண்டுதோறும் 1,22,000 ஹெக்டேயளர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
லூசியின் இந்தத் திட்டம் காடுகளைப் பாதுகாப்பதோடு மட்டுமன்றி, 1,200க்கும்
மேற்பட்ட கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் தற்சார்பையும்
வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01483718-d47c-48c5-95c1-8f8700955b93/26-6a579cd064d15.webp' /></p><p>

இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற பெண்கள், ஷியா உமிகளைச் சேகரித்து, அவற்றை
இடித்து, களிமண் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவுடன் கலந்து எரியூட்டும்
கட்டிகளாக மாற்றித் தங்களின் சமையல் தேவைகளுக்கும் பயன்படுத்தி, விற்பனையும்
செய்து வருகின்றனர்.
</p><p>
காடுகளைப் பாதுகாப்பதுடன், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்
இந்த சுற்றுச்சூழல் நட்பு முயற்சிக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசிச பாணியிலான ஆட்சி முறைமையை திணிக்கின்றது அரசு - மொட்டுக் கட்சி கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-is-imposing-nazism-style-regime-1784123488"></link>
            <id>https://tamilwin.com/article/government-is-imposing-nazism-style-regime-1784123488</id>
            <summary type="text">தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து
மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப்
புற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து
மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப்
புறம்பான ஆட்சி முறையைத் திணிக்க முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம்
சாட்டியுள்ளார்.
</p><p>
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>ஹிட்லரின் நாசிச ஆட்சி</h2><p>மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"அரசைக் கைப்பற்றியதுடன் நில்லாமல், அரச இயந்திரத்தையும் முழுமையாகக் கைப்பற்ற
வேண்டும் என்ற ரீதியில் தற்போதைய அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டு
வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/074194bd-819a-49d2-8717-1457a14f9f5d/26-6a579635df9d4.webp' /></p><p>கிராம உத்தியோகத்தர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான பதவிகளை,
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தொண்டர்களே வழிநடத்த வேண்டும் என்று அவர்கள்
முனைகின்றார்கள். இது ஹிட்லரின் நாசிச ஆட்சியைப் போன்றது.</p><p>தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் போதாது
என்று அமைச்சர் எரங்க குணசேகர போன்றோர் கருத்து வெளியிடுகின்றனர். </p><h2>ஜனநாயகத்தை முற்றாக நிராகரிக்கும்</h2><p>நாட்டை
ஜனநாயக ரீதியில் ஆளாமல், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஒரு கட்சியினரின்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba126f5f-0e04-4e05-bfb9-32b14ab34fed/26-6a579636970a2.webp' /></p><p>ஹிட்லர் அன்று ‘தேசிய சோசலிசம்’
என்ற போர்வையில் தனது கொடூரமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது போல், இவர்களும்
அழகான வார்த்தைகளைக் கூறிக்கொண்டு, ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்
கருத்துக்களை இந்த நாட்டுக்குள் திணிக்கப் பார்க்கின்றனர்.
</p><p>
நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவரும், தமக்குக் கட்டுப்பட்டு வாழ
வேண்டும் என்ற இந்த விகாரமான ஆட்சி மாதிரியைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
</p><p>ஜனநாயகத்தை முற்றாக நிராகரிக்கும் இத்தகைய அச்சுறுத்தும் போக்கினை, மக்கள்
விழிப்புணர்வுடன் அவதானிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:17:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோதல் தீவிரம்: கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் - ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-threatens-more-key-sea-route-blockades-1784102340"></link>
            <id>https://tamilwin.com/article/iran-threatens-more-key-sea-route-blockades-1784102340</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.ஈரானின்
துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள
நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>ஈரானின்
துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள
நிலையில், ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை
இலக்காகக் கொண்டு அமெரிக்கா இன்று புதிய வான்வழித் தாக்குதல்களை
நடத்தியுள்ளன.
</p><p>
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும்
முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் இரு
நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
அமெரிக்கப் படைகள் ஈரானின் கிரேட்டர் டுன்பு தீவில் உள்ள கடலோரப் பாதுகாப்பு
அரண்கள் மற்றும் ஏவுகணைச் சேமிப்புக் கிடங்குகளை நோக்கிச் சுமார் 90
நிமிடங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.
</p><p>
இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள
அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய
புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e45e68f-c57f-46a4-abf1-f86a3e450485/26-6a57913c24894.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் பிற முக்கிய எரிசக்தி
ஏற்றுமதி வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து உலகளவில் மசகு
எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, புதிய உச்சத்தைத்
தொட்டுள்ளது.</p><p></p><h2>உடனடி பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர
வேண்டும் என்றும், தவறினால் அடுத்த வாரம் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள்
மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது
தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த மோதலினால் கடந்த சில நாட்களில் மட்டும் ஈரானின் தெற்குப் பகுதியில்
30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1835ac4-5f90-4d7e-ae2e-024bbf50cfb1/26-6a57913cd8ff3.webp' /></p><p>
</p><p>
அத்துடன் இராணுவ தளம் மீதான தாக்குதலில் 7 இராணுவ வீரர்களும்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
ஈரான் தனது நட்பு நாடான ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி பாப்
எல்-மண்டேப் கடல் வழித்தடத்தையும் மூடக்கூடும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுவதால்,
சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகப் பொருளாதாரம் பெரும்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் வீதியில் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youths-arrested-in-sammanthurai-1784122712"></link>
            <id>https://tamilwin.com/article/youths-arrested-in-sammanthurai-1784122712</id>
            <summary type="text">அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். </p><p>அத்துடன் குறித்த நபர்கள் பயணித்த மோட்டார்
சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பலத்த
கண்டனங்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த காணொளி ஒன்றினை
அடிப்படையாகக் கொண்டே சம்மாந்துறைப் பொலிஸாரால் இந்த விசேட அதிரடி நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>இதன் போது தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டியமை, ஒரே
மோட்டார் சைக்கிளில் 3 முதல் 4 பேர் வரை பயணித்தமை, பிரதான வீதியை மறித்து
ஆபத்தான முறையில் சாகசம் செய்தமை உள்ளிட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டனர்.
</p><p>அத்துடன், குறித்த கும்பல் ஏனைய வாகனங்கள் செல்லும் பிரதான வீதியை மறித்து, ஆபத்தான முறையில்
வாகனங்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் ஏனைய சாரதிகளுக்கும் அச்சுறுத்தல்
ஏற்படுத்தியமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a615ccc5-c9fc-44e1-8d69-9ac81d240539/26-6a57934174201.webp' /></p><p>இந்தக் காணொளியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப்
பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிச் செயற்பட்ட
குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ததுடன், அவர்களது
மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p> எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத
மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:04:48+00:00</updated>
        </entry>
    </feed>
