<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-18T00:39:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர்.. மொட்டு கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-dig-death-mottu-party-anura-govt-1784334173"></link>
            <id>https://tamilwin.com/article/former-dig-death-mottu-party-anura-govt-1784334173</id>
            <summary type="text">இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் உயிரிழப்புகள் தொடர்பில் முறையான
விசாரணைக்கு முன்னரே அவை உயிர்மாய்ப்பு எனத் திட்டமிட்டுச் சித்தரிக்கப்படும்
போக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் உயிரிழப்புகள் தொடர்பில் முறையான
விசாரணைக்கு முன்னரே அவை உயிர்மாய்ப்பு எனத் திட்டமிட்டுச் சித்தரிக்கப்படும்
போக்குக் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ்
கமகே தெரிவித்தார்.</p><p>

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
கூறினார்.
</p><p>
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவு குறித்துத் தனது
இரங்கலைத் தெரிவித்த மனோஜ் கமகே, கபில சந்திரசேன மற்றும் திறைசேரி அதிகாரி
உள்ளிட்டோரின் மரணங்களின் போது, உடல்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னரே
அவை உயிர்மாய்ப்பு எனச் செய்திகள் பரப்பப்பட்டது என்றார்.&nbsp;</p><p></p><h2>மரண பரிசோதனை</h2><p>

"ஒரு மரணம் இயற்கையானதா, உயிர்மாய்ப்பா அல்லது கொலையா என்பதை மரண பரிசோதனையே
தீர்மானிக்க வேண்டும். ஆனால், முறையான விசாரணைகளின்றி இவ்வாறான முடிவுகளை
ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடுவது பாரதூரமான நிலை" என்று அவர்
எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6cfe579-1e25-469e-b594-efd939e2d969/26-6a5ac940c8b0f.webp' /></p><p>
</p><p>மேலும், அரசை விமர்சிக்கும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாதத் தடைச்
சட்டத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால் என்றும், அதேபோல்,
நீதியரசர்களுக்கு அழுத்தம் கொடுத்து, நீதித்துறையையும் அரசு தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுகின்றது என்றும் அவர் சாடினார்.</p><p> "அரசமைப்பை மாற்ற மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தங்கள்
தேவைக்காக அனைத்தையும் தலைகீழாக மாற்றத் துடிக்கின்றனர்.</p><p> பொலிஸ் மற்றும் ஊழல்
தடுப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை ஏற்கனவே சீர்குலைந்துவிட்டது.
இந்தநிலையில், நீதித்துறையின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க
வேண்டியது சட்டத்தரணிகள் மற்றும் நீதியரசர்களின் பொறுப்பாகும்.&nbsp;</p><p>
ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்
உடனடியாக வீதிக்கு இறங்கி தலைமைத்துவத்தை வழங்க வேண்டும், அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:34:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harak-kata-bribery-probe-new-claims-involving-monk-1784332074"></link>
            <id>https://tamilwin.com/article/harak-kata-bribery-probe-new-claims-involving-monk-1784332074</id>
            <summary type="text">ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, பௌத்த தேரர் ஒருவர் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அதிகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, பௌத்த தேரர் ஒருவர் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குக் கைமாற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது தொடர்பில் விசாரணையாளர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் அருண் வருஷஹென்னடிகே ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைமாற்றப்பட்ட பணம்..&nbsp;</h2><p>

இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பௌத்த தேரரை விசாரணையாளர்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு மேலதிக விபரங்களை அறிக்கை செய்வதற்கு முன்னர் அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c207d04-7613-4bdf-bd3d-470e00bd9f71/26-6a5ac2ed9ad98.webp' /></p><p>இலஞ்சப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பதிவு செய்யப்பட்ட காணொளி வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், இலஞ்சப் பணத்திற்கு ஈடாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதமை தொடர்பில் ஹரக் கட்டாவின் மனைவிக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் அடங்கிய தொலைபேசி ஒன்றையும் விசாரணையாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இவ்வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே 1,300இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளதை விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பெறப்பட்ட வாக்குமூலங்கள்..</h2><p>
</p><p>
மேலும், இந்த இலஞ்ச விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்காக மூன்று சந்தேக நபர்களும் ஒன்றாக இந்தியாவுக்குச் சென்றதாக முன்னர் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4500538-8f2a-4502-83ac-b2c2265f2bda/26-6a5ac2ee9f575.webp' /></p><p> </p><p>குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பதிவுகளின்படி, சந்தேக நபர்கள் மூவரும் 2023 மார்ச் 3 ஆம் திகதி ஒரே விமானத்தில் இந்தியாவுக்குப் பயணித்து, மீண்டும் 2023 மார்ச் 7ஆம் திகதி ஒன்றாகவே இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். </p><p>இதே மூன்று சந்தேக நபர்களுடன் தொடர்புடைய மற்றுமொரு தனிப்பட்ட இலஞ்சச் சம்பவம் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்னுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் புதிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன அழுத்தமா.. அரசியல் அழுத்தமா.. சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து எழும் சந்தேகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-dig-cd-wickremarathna-death-cid-investigation-1784327359"></link>
            <id>https://tamilwin.com/article/ex-dig-cd-wickremarathna-death-cid-investigation-1784327359</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர்&amp;nbsp;சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.&amp;nbsp;அவரின் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர்&nbsp;சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அவரின் உயிரிழப்பு தொடர்பில் முதலில் சில தென்னிலங்கை ஊடகங்களில், அவர் உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகின.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை அறிவிக்கப்பட்டதுடன் உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில்,&nbsp; சி.டி. விக்ரமரத்ன நேற்று காலையில், உடற்பயிற்சிக்கு தயாராகி இருந்த நிலையில் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>எனவே, சாதாரணமாக தனது நாளை ஆரம்பித்த அவர், ஏன் உயிர்மாய்த்துக் கொள்ள வேண்டும் என இங்கு சந்தேகம் எழுகின்றது.</p><p>அதேநேரம், அவர், தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தருணம், தனது துப்பாக்கியை ஒப்படைத்துள்ளார். இருப்பினும் அவர் தனது மெய்காவலரிடம் இருந்து துப்பாக்கியை பெற்று சுட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aXDy5QAPX6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T22:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை.. ஜனாதிபதி மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-dic-meeting-issue-president-anura-1784326226"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-dic-meeting-issue-president-anura-1784326226</id>
            <summary type="text">கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி
மூலம் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி
மூலம் விசாரித்தார் என&nbsp;அமைச்சர்&nbsp;இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.&nbsp;</p><p> மேலும், அங்கு இடம்பெற்ற உண்மை நிலையைத் தான் அவருக்கு
விளக்கமளித்ததாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை
ஏற்படுத்திப் பேசினார்.</p><p></p><h2>ஏற்பட்ட சலசலப்பு&nbsp;</h2><p> </p><p>கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்
குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அந்தக் கூட்டம் பாதியிலேயே
இடைநிறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5239bfb6-5158-42d5-8e4b-7f9190deccae/26-6a5aa9be2b0ba.webp' /></p><p> </p><p>இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்
பேசுபொருளாக மாறியது.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள்
பரப்பப்பட்டன. </p><p>ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ
அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. </p><p>நேற்று நடைபெற்ற இந்தச்
சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த
உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்" என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T22:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-ramalingam-chandrasekar-1784324861"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-ramalingam-chandrasekar-1784324861</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப
முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப
முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும்
என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை
ஏற்படுத்திப் பேசினார். </p><p>கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட
அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கூட்டம்
பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்
பேசுபொருளாக மாறியது.
</p><p>


குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள்
பரப்பப்பட்டன. ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன்.</p><p></p><h2>ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை&nbsp;&nbsp;</h2><p> </p><p>யாருடனும் சண்டை போடுவதோ
அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. நேற்று நடைபெற்ற இந்தச்
சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35caf4a2-cf97-4b91-87c5-3da065fae7f4/26-6a5aa42447272.webp' /></p><p> எனினும், அங்கு நடந்த
உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்.
</p><p>


இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும்
வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான துல்லியமான தரவுகளைச் சேகரிக்குமாறு
ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டார்.</p><p>



ஏனெனில், எதிர்வரும் ஆண்டில் எமது அரசாங்கம் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கே
முன்னுரிமை வழங்கவுள்ளது. மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் இந்த சமூகப்
பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களது பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம்.
</p><p>


என்னுடைய அமைச்சுப் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சொந்தமானது
அல்ல. தேசிய மக்கள் சக்தியினருக்கு மட்டுமன்றி, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து
மக்களுக்கும் சேவை செய்வதே எமது பிரதான நோக்கமாகும். அனைவரையும்
அரவணைத்துக் கொண்டே எமது பயணம் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T21:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கென்யாவில் எபோலா தடுப்பு மையத்தில் 7 அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-americans-quarantined-an-ebola-center-in-kenya-1784322299"></link>
            <id>https://tamilwin.com/article/7-americans-quarantined-an-ebola-center-in-kenya-1784322299</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுக்கு
எதிராகப் பணியாற்றிய ஏழு அமெரிக்கத் தொண்டு ஊழியர்கள், கென்யாவில் புதிதாக
அமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுக்கு
எதிராகப் பணியாற்றிய ஏழு அமெரிக்கத் தொண்டு ஊழியர்கள், கென்யாவில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்களைச் சுயவிருப்பத்தின் பேரில் 21
நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
</p><p>
கொங்கோவிலிருந்து அமெரிக்கா திரும்பும் குடிமக்கள் அனைவரும் தங்களது
தாய்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக, ஒரு மூன்றாம் நாட்டில் மூன்று வாரங்கள்
தங்கியிருக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகளின்
காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

அமெரிக்காவால் கென்யாவின் விமானப் படைத் தளத்தில் கட்டப்பட்டு வரும் இந்த 50
படுக்கைகள் கொண்ட உயிரியல் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அந்த நாட்டு
மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p><p></p><h2>தனிமைப்படுத்தல்</h2><p>
</p><p>
எபோலா தொற்றால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களை அமெரிக்கா தங்கள் நாட்டின்
மீது சுமத்துவதாகக் கென்யர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மையத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த
போதிலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் செயற்கைக்கோள்
படங்கள் காட்டுகின்றன.
</p><p>
நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் கென்ய சுகாதார அமைச்சர் மீது நீதிமன்ற
அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dc3437e-9d14-4721-b324-ed51f49713aa/26-6a5a98fd3cd21.webp' /></p><p>

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் எவ்வித எபோலா அறிகுறிகளும்
இன்றி அமெரிக்கப் பொதுச் சுகாதாரப் பிரிவின் மருத்துவக் கண்காணிப்பில்
உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய எபோலா பரவல் கொங்கோவில் 828 பேரை பலிவாங்கியுள்ளதுடன், இதற்குத்
தடுப்பூசியோ முறையான சிகிச்சையோ இதுவரை கண்டறியப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T21:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய சுரேஷ் சலே - ஆபத்தில் சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-narrowly-escapes-kota-close-aide-1784311460"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-narrowly-escapes-kota-close-aide-1784311460</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று காலை&nbsp;மர்மமான முறையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன&nbsp;உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இவ்விவகாரம், நாட்டில் பெரும் பரபரப்பையும் அதிகாரிகள் மத்தியில் கடுமையாக கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&nbsp;</p><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன, பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில்,&nbsp;சந்தன தீபால் விக்ரமரத்ன உண்மையில் தவறான முடிவெடுத்து தான் தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்னும் கேள்வி எழும்பியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/L7gFZf-JpRo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-uniform-year-2027-donated-chinese-1784320935"></link>
            <id>https://tamilwin.com/article/school-uniform-year-2027-donated-chinese-1784320935</id>
            <summary type="text">அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.</p><p>

இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் கல்வி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p> இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் சான்றிதழைக் கையளித்திருந்தார்.</p><p></p><h2>நன்கொடை</h2><p>
</p><p>
இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c7ee968-7651-4a2d-acb9-25f4f4ef55a5/26-6a5a93aab6d45.webp' /></p><p> </p><p>இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான பாரிய சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.
</p><p>
கடந்த 2023ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட வேண்டுகோளின் பேரில் 88,60,990 மீட்டர் பாடசாலை சீருடை துணி சீன அரசாங்கத்தினால் முதற்தடவையாக இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் - அரசுடைமையாக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cigarettes-crores-rupees-abandoned-at-airport-1784320157"></link>
            <id>https://tamilwin.com/article/cigarettes-crores-rupees-abandoned-at-airport-1784320157</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் பயணப்பொதிகள் வந்தடையும் நகர்வு பொறி பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் பயணப்பொதிகள் வந்தடையும் நகர்வு பொறி பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.&nbsp;</p><p>நேற்று மதியம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த&nbsp;சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>அதிகாரிகளின் விசாரணை..&nbsp;</h2><p>
</p><p>
இந்த சிகரெட் தொகுதி நேற்று காலை 08:45 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bb7fbb-4549-403b-8e61-77b38fd78169/26-6a5a9486c3230.webp' /></p><p>
இவை 4 பயணப் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயணப் பொதிகளுக்குள், வெளிநாட்டு தயாரிப்பான 75,200 சிகரெட்டுகள் அடங்கிய 376 சிகரெட் கார்ட்டன்கள் இருந்தன.
</p><p>
இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறையான சுங்க விசாரணைகளை மேற்கொண்டு, கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:46:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தேர்தலில் சீனாவின் அத்துமீறல்.. ட்ரம்ப் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-makes-statement-on-election-security-1784319695"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-makes-statement-on-election-security-1784319695</id>
            <summary type="text">கடந்த 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சீனா தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து ஆற்றிய உரையில் குற்றம்
சாட்டியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சீனா தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து ஆற்றிய உரையில் குற்றம்
சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன் அமெரிக்காவின் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு முறையில்
அதிர்ச்சியளிக்கும் வகையில் பலவீனங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஜோ பைடனுக்குச் சாதகமாகத் தேர்தலை மாற்ற சீனா முயன்றதற்கான உளவுத்துறை
கோப்புகளைத் தான் பகிரங்கப்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார்.</p><p></p><h2>மறுக்கும் சீனா..&nbsp;</h2><p>

ஆனால், சீனாவின் வெளியுறவு அமைச்சு இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும்
ஜோடிக்கப்பட்டவை என்றும், ஆதாரமற்றவை என்றும் கூறி கடுமையாக மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58dcc03-7500-415b-ba52-8cbc043cb837/26-6a5a900ef0199.webp' /></p><p>

சீனா சுமார் 220 மில்லியன் அமெரிக்க வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களைத்
திருடியுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.</p><p>

18 மாநிலங்களில் உள்ள வாக்காளர் தரவுகள் சீனாவால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்ட அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளிநாட்டு எதிரிகளால்
ஊடுருவப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்தார்.</p><p>

அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ட்ரம்ப் வேண்டுமென்றே
தேர்தல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் சந்தேகத்தை விதைப்பதாக ஜனநாயகக்
கட்சியினர் சாடியுள்ளனர்.&nbsp;</p><p>வாக்காளர்கள் தங்களின் தலைவர்களைத் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதைத் ட்ரம்ப்
தடுக்க முயல்வதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elected-new-leader-of-the-british-labour-party-1784316381"></link>
            <id>https://tamilwin.com/article/elected-new-leader-of-the-british-labour-party-1784316381</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக
&#039;வடக்கின் அரசன்&#039; என்று அழைக்கப்படும் ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக
'வடக்கின் அரசன்' என்று அழைக்கப்படும் ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் மூலம் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்பதற்கான இறுதிப்
படிமுறை நிறைவடைந்துள்ளது.</p><p>

விசேட மாநாட்டில் உரையாற்றிய ஆண்டி பர்ன்ஹாம், தற்போதைய பிரதமர் கீர்
ஸ்டார்மருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.</p><p></p><h2>முக்கிய நோக்கம்</h2><p>

மேலும், இத்தனை காலம் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும்
நம்பிக்கையூட்டும் வகையில் தனது ஆட்சி அமையும் என்றும், நாட்டை ஒன்றிணைக்கத்
தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3b1c68-899b-40f3-a0ba-5430c6333b90/26-6a5a8f2ed6dfd.webp' /></p><p>

லண்டனில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்தானியாவின் பிற பிராந்தியங்களுக்கும்
பரவலாக்குவதே தனது முக்கிய நோக்கம் என்று பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் மூலம் பிராந்தியங்களுக்கு இடையேயான சமத்துவமின்மை குறைக்கப்பட்டு,
மக்களின் கோபத்திற்குத் தீர்வு காண முடியும் என்று அவர் நம்புகிறார்.</p><p></p><h2>பொதுத்தேர்தல்</h2><p>

பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க 'ரிஃபார்ம்
யூகே' கட்சியின் எழுச்சியைத் தடுக்கும் நோக்கில் பர்ன்ஹாமின் இந்த
வியூகம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/678e3297-71b1-4e67-af79-5daa2fc314be/26-6a5a8f2f84a4e.webp' /></p><p>
</p><p>
நைஜல் ஃபரேஜ் தலைமையிலான ரிஃபார்ம் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட
தொழிற்கட்சி இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
</p><p>
அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ள நிலையில், பர்ன்ஹாம்
தனது நீண்டகாலத் திட்டங்களை மிக விரைவாகச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
உள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:23:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI தொழில்நுட்பங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indonesia-copyright-law-strict-ai-technologies-1784318549"></link>
            <id>https://tamilwin.com/article/indonesia-copyright-law-strict-ai-technologies-1784318549</id>
            <summary type="text">இந்தோனேசியா தனது பதிப்புரிமைச் சட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்யப் புதிய
சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இந்த சட்டம் நிறைவேறினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியா தனது பதிப்புரிமைச் சட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்யப் புதிய
சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.</p><p>

இந்த சட்டம் நிறைவேறினால், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப்
பதிப்புரிமைச் சட்டத்திற்குள் கொண்டு வந்த முதல் நாடாக இந்தோனேசியா மாறும்.
</p><p>
இந்த புதிய விதிகளின்படி, முற்றிலும் ஏஐ மூலம் உருவாக்கப்படும்
படைப்புகளுக்குப் பதிப்புரிமைப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. </p><p>மாறாக, ஏஐ
தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டு, அதில் மனிதர்களின்
ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்கும் படைப்புகளுக்கு மட்டுமே பதிப்புரிமை
அங்கீகாரம் கிடைக்கும்.</p><p></p><h2>உரிய இழப்பீட்டுத் தொகை</h2><p>
</p><p>
கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளின் உள்ளடக்கங்களை
வெளியிடுவதற்கும், இணைப்பு முன்னோட்டங்களைக் காட்டுவதற்கும், ஏஐ மாதிரிகளைப்
பயிற்றுவிக்க அந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதற்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை
செய்தி வெளியீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்த ட்டம்
கட்டாயமாக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5078e3f7-06a4-434d-a9e5-5042239eec19/26-6a5a8afca1dec.webp' /></p><p>
</p><p>
இந்த புதிய சட்ட வரைவுக்குக் கூகுள் நிறுவனம் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மிகவும் பரந்த அளவில் உள்ளதாகவும், இவை
உள்ளூர் படைப்பாளர்களைப் பாதிப்பதோடு நாட்டின் டிஜிட்டல் எதிர்கால
முதலீடுகளையும் புதுமைகளையும் முடக்கிவிடும் என்றும் கூகுள் எச்சரித்துள்ளது.</p><p>

இந்தோனேசியாவின் இந்த நடவடிக்கை, உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்தை முறைப்படுத்தும்
முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.</p><p>

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் போலிப் பதிவுகளை (Deepfakes) அடையாளப்படுத்துவதை
கட்டாயமாக்கியுள்ள நிலையில், தற்போது இந்தோனேசியாவும் மனிதக் கட்டுப்பாட்டின்
கீழ் ஏஐ இயங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த சட்டத்தைக் கொண்டுவருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு காலையில் நடந்த கதி - முடிவை மாற்றுவாரா ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-cd-wickramarathna-death-case-cid-1784317594"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-cd-wickramarathna-death-case-cid-1784317594</id>
            <summary type="text">இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உயிரிழந்துள்ளமை பலரின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உயிரிழந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நேற்று காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>தனது புதல்வர் ஒருவரின் வழக்கு விவகாரம் தொடர்பான கவலை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவே சி.டி. விக்ரமரத்ன இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறிருக்கையில், உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் குறித்த அதிகாரி, தனது நாளாந்த நடவடிக்கைகளை சாதாரணமாகவே மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவ்விடயத்தில் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பிலான முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K2iAkhEjEgM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களைக் கொடூரமாக சுரண்டும் அநுர அரசு - ஆனந்த பாலித கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-ananda-palitha-criticized-1784309804"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-ananda-palitha-criticized-1784309804</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய
தற்போதைய அரசு, வரம்பற்ற வரி விதிப்புகள் மற்றும் எரிபொருள் மாபியாக்கள் மூலம்
மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய
தற்போதைய அரசு, வரம்பற்ற வரி விதிப்புகள் மற்றும் எரிபொருள் மாபியாக்கள் மூலம்
மக்களைக் கொடூரமாகச் சுரண்டி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின்
செயற்பாட்டாளர் ஆனந்த பாலித கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே அரசு கொள்வனவு
செய்வதால், விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p></p><h2>உடன் விசாரணை</h2><p>
</p><p>
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத நிலையிலும், கியூ.ஆர். முறையினால் முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e0a7b4-e564-447a-a677-84b9218383a1/26-6a5a84624421c.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலத்தில் எளிய மக்களுடன் இணைந்து செயற்பட்ட லால் காந்த, வசந்த
சமரசிங்க போன்ற தலைவர்கள், குறுகிய காலத்துக்குள் மாளிகை போன்ற சொகுசு
வீடுகளையும் வாகனங்களையும் வாங்கியது எப்படி என்பது குறித்து ஜனாதிபதி
உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசே
முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்றார்.
</p><p>
தொடர்ந்து உரையாற்றிய ஆனந்த பாலித, "அன்று பொதுமக்களின் குரலாக ஒலித்தவர்கள்,
இன்று அமைச்சர்களானதும் மக்களின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் வகையில்
செயற்படுகின்றனர். </p><p>இந்த மக்கள் விரோத அரசின் போக்கை முறியடிப்பதற்கு,
உழைக்கும் மக்களும் விவசாயிகளும் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கிப் போராட
வேண்டும்" என்றும் அறைகூவல் விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:38:07+00:00</updated>
        </entry>
    </feed>
