<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-11T05:46:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674</id>
            <summary type="text">கிளிநொச்சி -&amp;nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி -&nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.</p><p>பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞனே மின்சாரம்
தாக்கி மரணமடைந்துள்ளார்.</p><p></p><h2>மின்சார இணைப்பு வேலை</h2><p>
</p><p>குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கு ம்போது மின்சாரம்
தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e5b6413-b291-43c0-a856-820f87028b90/26-6a51d75641d5c.webp' /></p><p>இந்நிலையில், குறித்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-orders-closure-all-govt-institutions-1783742153"></link>
            <id>https://tamilwin.com/article/president-orders-closure-all-govt-institutions-1783742153</id>
            <summary type="text">பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. </p><p></p><h2>மூடுவதற்கான செயற்பாடுகள்</h2><p>இலங்கை உரக் கூட்டுத்தாபனம் செயற்பாட்டில் இருக்கத்தக்கதாக எப்பாவல பொஸ்பேட் நிறுவனம் உருவாக்கப்பட்டமை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a4753f-7b46-4db0-bec6-16c0eace36f8/26-6a51c483974d1.webp' /></p><p>பல்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவ்வாறான நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதால், அரசாங்கம் கூடுதல் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே செயற்பாட்டிற்கான பல நிறுவனங்கள் இருப்பதால், திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு - வெலிக்கடை அதிகாரிகளுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-rights-commission-summons-welikada-officials-1783746772"></link>
            <id>https://tamilwin.com/article/human-rights-commission-summons-welikada-officials-1783746772</id>
            <summary type="text">பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் நலன்கள் மற்றும் அவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளானமை தொடர்பில் ஆராயும் நடவடிக்கையொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் ஒரு அங்கமாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த 07ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உட்பிரவேசிக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.</p><h2>

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை&nbsp;</h2><p>
ஜூலை 7ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணத்தின்போது, ​​தனது அதிகாரிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3bd8719-022b-40fe-a4fd-969519896a67/26-6a51d12cd318e.webp' /></p><p>
</p><p>
இது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தை மீறுவதாகும் என்றும், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தனது அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

மறுநாள் சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டபோதிலும், இந்தத் தாமதம் உரிய நேரத்தில் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பை பறித்துவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையொன்றுக்காக (பதில்)சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஆகியோர் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: வருகிறது கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783743975"></link>
            <id>https://tamilwin.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783743975</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஓய்வூதிய முறை</h2><p></p><p> </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம். 

அதாவது, ஓய்வுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாக பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.</p><p> 

சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5daf1e-f542-4fa7-8044-be35b51949a7/26-6a51d0609d07b.webp' /></p><h3>வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு</h3><p> </p><p>

தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது. 

இருப்பினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். </p><p>இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும். 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929"></link>
            <id>https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929</id>
            <summary type="text">கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை கட்டுநாயக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது. </p><h2><b>மீண்டும் தரையிறக்கம் </b></h2><p> அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112a1042-c6e1-4a5d-8c84-dac19164099f/26-6a51c400d694e.webp' /></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T04:18:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய லொத்தர் சபை ஊழல்! ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-lottery-board-corruption-ravi-1783740024"></link>
            <id>https://tamilwin.com/article/national-lottery-board-corruption-ravi-1783740024</id>
            <summary type="text">கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
ஆணைக்குழுவால் தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதே இந்த அழைப்பாணையின் நோக்கமாகும்.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அதன்பிரகாரம் ரவி கருணநாயக்க இம் மாதம் 17ஆம் திகதி ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7055b8e-9296-462b-a044-31a8fe671427/26-6a51ba1200186.webp' /></p><p>தேசிய லொத்தர் சபையின் ஒரு விசேட செயற்திட்டத்தின் கீழ் ஊழியர்களை நியமிக்கும் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே ரவி கருணநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதே சம்பவம் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேராவும் முன்னர் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T03:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியாது..! அதிகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-speaks-on-authority-to-order-1783740810"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-speaks-on-authority-to-order-1783740810</id>
            <summary type="text">சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் கீழ், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>சிறை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு</h2><p>
இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்பில் ஒரு 'கட்டளைத் தொடர்' மூலம் செயல்படுத்தப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவுகள் சிறை அமைப்பில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தனக்கு இன்னும் ஆழமான புரிதல் இல்லை என்றும், அதுகுறித்து தனக்கு மேலதிக தெளிவு தேவைப்படுவதாகவும் அமைச்சர் ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a099db86-3211-4e89-b05f-ecef0187b51c/26-6a51b9d651008.webp' /></p><p>
</p><p>
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தாதது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிறை வளாகத்திற்குள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என்று விளக்கம் கொடுத்துள்ளார். </p><p>

சிறை வளாகத்திற்குள் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு - வர்த்தக பிரதிநிதி குழுவினர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/federation-of-indian-exporters-1783740211"></link>
            <id>https://tamilwin.com/article/federation-of-indian-exporters-1783740211</id>
            <summary type="text">இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி
நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations - FIEO)
தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி
நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations - FIEO)
தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. </p><p>

இந்த விஜயம், 2026 ஜூலை 8 முதல் 10 வரை மேற்கொள்ளப்படும் என்றும், இந்தியா - இலங்கை இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை
மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


இதன்போது, பிரதிநிதிகள் குழுவில் மருந்துத் தயாரிப்பு, பொறியியல் உற்பத்திகள்,
ஆடை மற்றும் நெசவுத் துறை, உணவு மற்றும் விவசாயப் பொருட்கள், உட்கட்டமைப்பு
உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளளனர்.</p><h2>முக்கிய தீர்மானங்கள்</h2><p>
</p><p>

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 
பிரதிநிதிகள் குழு சந்தித்து கலந்துரையாடி, இலங்கையின் வளர்ந்து வரும்
பொருளாதாரம், இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பின் விரிவடைந்துவரும் நிலை
மற்றும் இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான பரந்த
வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குழுவிற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d05f20a3-997b-49b9-9486-cff94adcd0f9/26-6a51b786b8c50.webp' /></p><p>
</p><p>

மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள்,
இலங்கையின் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் துறைசார் விடயங்கள் மற்றும்
ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.</p><p>

அதன் பின்னர், பிரதிநிதிகள் குழு இந்தோ - இலங்கை
வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை (ILCCI), Access Group நிறுவன பிரதிநிதிகள்
மற்றும் GOPIO ஒருங்கிணைத்த பல்வேறு சந்தைச் சங்கங்களின் உறுப்பினர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p><p>இதன் அடிப்படையில், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து, வணிகத் தொடர்புகளை
ஏற்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வழிகள் ஆகிய விடயங்களில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db43231b-b4c5-4eb8-8a10-0e2aac4dc9f5/26-6a51b787a3ff7.webp' /></p><p>
</p><p>

இருதரப்பு வர்த்தகத்தையும், வணிக நிறுவனங்களுக்கு இடையிலான (B2B)
தொடர்புகளையும் மேம்படுத்தும் தனது தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக,
இந்திய உயர்ஸ்தானிகராலயம் 2026 ஜூலை 9ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா
ஹோட்டலில் "இந்தியா–இலங்கை வர்த்தக இணைப்பு: FIEO பிரதிநிதிகள் குழுவுடனான
கலந்துரையாடல்" என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 


இந்த நிகழ்வில், இந்திய வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருடன், இலங்கையின்
முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய வணிக அமைப்புகளான Indian CEO Forum
(ICF), National Chamber of Exporters of Sri Lanka (NCE), Indo-Lanka
Chamber of Commerce and Industry (ILCCI) மற்றும் Ceylon Chamber of Young
Lankan Entrepreneurs (COYLE) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55f93713-5e8b-4b9d-8a0b-9ff23a120656/26-6a51b78877984.webp' /></p><p> புதிய
வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தவும்
பயனுள்ள B2B கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இதன்போது உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், 

உயர்ஸ்தானிகர் இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பின்
விரிவடைந்துவரும் நிலையை எடுத்துரைத்தார். </p><p>

இந்தியா தொடர்ந்து இலங்கையின்
முக்கிய வர்த்தகப் பங்காளி, மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரம் மற்றும்
இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக இருப்பதை அவர்
குறிப்பிட்டார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T03:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணியொருவரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இளைஞர் குழு கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/group-of-youth-arrested-kidnap-tourist-1783737610"></link>
            <id>https://tamilwin.com/article/group-of-youth-arrested-kidnap-tourist-1783737610</id>
            <summary type="text">இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயன்ற இளைஞர்கள் குழுவொன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயன்ற இளைஞர்கள் குழுவொன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் காலி அருகே உணவட்டுன பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p></p><h2>சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல்</h2><p>
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த பிரேசில் பிரஜையொருவர், காலி, தல்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e56fe55-f3b0-43cb-aeb2-9163823f5175/26-6a51b145ee513.webp' /></p><p>
இந்நிலையில், அந்த இடத்திற்கு வந்த இருவர் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த சுற்றுலாப் பயணியின் அறையை சோதனையிட்டுள்ளனர்.
</p><p>
அதன்போது சுற்றுலாப் பயணியின் பிரேசில் நாட்டு பாஸ்போர்ட், அமெரிக்க ஆவணங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற உபகரணங்களை வலுக்கட்டாயமாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
</p><p>
அத்துடன் அந்த இடத்திற்கு வந்த மற்றொரு நபரையும் இணைத்துக் கொண்டு, மூவருமாக குறித்த பிரேசில் பிரஜைக்கு கைவிலங்கு போட்டு அச்சுறுத்தியுள்ளனர்.</p><p>குறித்த சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல் இருக்க கொழும்பிலுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரியொருவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அந்த குழுவினர் கூறியுள்ளனர்.</p><h2>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்&nbsp;</h2><p>

தமக்கு 30 இலட்சம் ரூபா லஞ்சம் வேண்டும் எனவும், அத்தொகையை உடனடியாக வழங்குமாறும் பிரேசில் பிரஜையை அவர்கள் மிரட்டியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fa0f28-3665-46a5-adf8-5b1e33d912a9/26-6a51b2a717a7d.webp' /></p><p>
இதற்கிடையே சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், உணவடுன சுற்றுலா பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், சந்தேகநபர்கள் இந்தக் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய அல்டோ ரக காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்குப் பொருட்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், உணவட்டுன சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T03:04:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டரை மில்லியன் டொலர் மோசடி : COPF வெளியிட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-and-a-half-million-dollar-fraud-1783735702"></link>
            <id>https://tamilwin.com/article/two-and-a-half-million-dollar-fraud-1783735702</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை வழங்கிய வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி மோசடி குறித்த தனது இறுதி அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை வழங்கிய வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி மோசடி குறித்த தனது இறுதி அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) நேற்று(10.07.2026) வெளியிட்டுள்ளது.</p><p>

இது தொடர்பாக பொது நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
</p><p>
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் இணையவழி மோசடி தொடர்பாக நிறுவனங்களுக்குள் ஏதேனும் உள் கூட்டுச் சதி இருந்ததா என்பதை ஒரு குற்றவியல் விசாரணை மூலம் விசாரிக்க வேண்டும்.</p><p></p><h2>நிறுவனங்களுக்குள் ஏதேனும் கூட்டுச் சதி</h2><p>

'திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்டது குறித்து நிதிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை, இணையவழி மோசடி நிகழ்ந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. </p><p>அதன்படி, 2.5 மில்லியன் டொலர் பொது நிதி திருடப்பட்டுள்ளதாகவும், இந்த இணையவழி மோசடியைச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குள் ஏதேனும் உள் கூட்டுச் சதி அல்லது சதித்திட்டம் இருந்ததா என்பதை விசாரிக்க, குற்றவியல் விசாரணைகள் உட்பட சட்ட அமுலாக்க செயல்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26e541fc-347a-4439-9227-c0cc641fc526/26-6a51a9f0e6dc8.webp' /></p><p>இதன் மூலம் மட்டுமே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் செயல்களில் அறியாமை, திறமையின்மை மற்றும் அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக மட்டுமே செயல்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. </p><p>மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் முழு வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறை குறித்தும், நிதி அமைச்சும் பொது நிதி செயல்முறைகளைக் கையாளும் நிதி நிறுவனங்கள் குறித்தும் உடனடியாக ஒரு விசேட கணக்காய்வு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. </p><p>விதிமுறைகளை உடனடியாக சீர்திருத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.' என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகள்</h2><p>2.5 மில்லியன் டொலர் திருட்டு – இணையவழிக் குற்றம் தொடர்பான மோசடியின் காரணமாக, வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலின் போது அவுஸ்திரேலியாவிற்கு 2.5 மில்லியன் பொது நிதி இழப்பு ஏற்பட்டதாக இந்த அறிக்கை முடிவு செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9cf7beb-776d-4477-961a-e4bcd7bdef9d/26-6a51a9f198b1f.webp' /></p><p>உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் – திறைசேரிச் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் மட்டத்தில் இருந்த கட்டுப்பாட்டுக் குறைபாடுகளே இந்த மோசடி நடைபெற வழிவகுத்த தோல்விகளுக்குக் காரணமாக அமைந்தன என்று COPF கூறுகிறது.
</p><p>
காலாவதியான மின்னஞ்சல் அமைப்பு திறைசேரியால் வெளிப்படுத்தப்பட்டது – பல காரணி அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதிருந்தன, மேலும் பாதுகாப்பு ஆதரவு நிறுத்தப்பட்ட பின்னரும் நிதி அமைச்சு காலாவதியான மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வரைப் பயன்படுத்தி வந்தது.</p><h2>கடன் வழங்குநர்களின் மின்னஞ்சல் டொமைன்கள்</h2><p>பல நாடுகளை உள்ளடக்கிய மோசடி முயற்சிகள் – இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக் கடன் திருப்பிச் செலுத்துதலில் சந்தேகத்திற்கிடமான அல்லது மோசடியான பணம் செலுத்தும் வழிமுறைகள் அடையாளம் காணப்பட்டதாக COPF அறிக்கை வெளிப்படுத்துகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e316e8b-706a-4aa8-8734-2874504de78e/26-6a51a9f24eb14.webp' /></p><p>இது மேலும் இழப்புகளைத் தடுக்க அதிகாரிகளுக்கு உதவியது. இந்த 2.5 மில்லியன் இணையவழி மோசடி அவுஸ்திரேலியாவிற்கு திருப்பிச் செலுத்துதலில் மட்டும் நிகழ்ந்துள்ளது.
</p><p>
முக்கிய சரிபார்ப்புத் தோல்விகள் அடையாளம் காணப்பட்டன – கடன் வழங்குநர்களின் மின்னஞ்சல் டொமைன்களைச் சரிபார்க்க அதிகாரிகள் தவறியது, சரிபார்க்கப்படாத மின்னஞ்சல் தகவல் தொடர்புகளை நம்பியிருந்தது மற்றும் திறமையான உள் கட்டுப்பாடுகள் இல்லாதது ஆகியவை இந்த மோசடியை மாதக்கணக்கில் தொடர அனுமதித்தன.</p><p>நான்கு அதிகாரிகள் மட்டுமே இடைநீக்கம் – பல்வேறு நிறுவனங்களில் அமைப்பு ரீதியான தோல்விகள் கண்டறியப்பட்ட போதிலும், இதுவரை நான்கு நடுத்தர நிலை திறைசேரி அதிகாரிகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
</p><p>
விசேட கணக்காய்வு மற்றும் சீர்திருத்தங்கள் பரிந்துரை – வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் முழு செயல்முறைக்கும் ஒரு விசேட கணக்காய்வு, அரசு நிறுவனங்கள் முழுவதும் வலுவான இணையப் பாதுகாப்பு, புதுப்பிக்கப்பட்ட நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொதுக் கடன் முகாமைத்துவ அமைப்புகள் ஆகியவற்றை COPF வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T02:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இளைஞன் பலி - தாய் படுகாயம் - தப்பியோடிய சாரதி வவுனியாவில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516"></link>
            <id>https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516</id>
            <summary type="text">
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p>

வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
82 பாதுகாப்பு கமெராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், மாரவில தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
நேருக்கு நேர் மோதி விபத்து</b></h2><p>கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b027737d-21c1-4dbd-9f63-3c7b7d62f53c/26-6a51a75c1c0a2.webp' /></p><p>இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அத்துடன், அவருடன் பின்னால் பயணித்த அவரது தாயார் பலத்த காயங்களுடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்றவுடன், டிப்பர் வாகனத்தை நிறுத்தாது அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அந்த வாகனத்தை கைப்பற்ற விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
</p><h3><b>
சாரதி கைது</b></h3><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியில் வசித்து வந்த ரித்ம பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cd1af6-4118-4794-8f06-88fb40bb4bcc/26-6a51a75cbfc6f.webp' /></p><p>உயிரிழந்தவர் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என தெரியவந்துள்ளது.

அத்துடன், அவரது தந்தையும் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் இலக்கத் தகடுகளில் இலக்கங்கள் தெளிவாக இருக்கவில்லை. </p><p>82 பாதுகாப்பு கமெராக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, பல பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் பயணித்த பாதையை அவதானித்து, வவுனியாவில் மறைந்திருந்த சாரதியை கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T02:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தின் ஜன்னல் உடைந்து வெளியே இழுக்கப்பட்ட பயணி: நடுக்காட்டில் நடந்த திகில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-pulled-out-of-plane-1783720468"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-pulled-out-of-plane-1783720468</id>
            <summary type="text">கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகருக்குப்
புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தில்,
நடுவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகருக்குப்
புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தில்,
நடுவானில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த
60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், காற்றின் கடுமையான அழுத்தத்தால் ஜன்னல்
வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>இன்ஜினிலிருந்து உடைந்த பாகங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அதிர்ஷ்டவசமாக அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், அவரது தலை மற்றும்
தோள்பட்டை வரை மட்டுமே ஜன்னலுக்கு வெளியே தொங்கியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">😱 Horrifying! A passenger was partially sucked through a shattered plane window at an altitude of 6,000 metres<br><br>Shortly after a Ryanair flight from Thessaloniki to Germany took off, a fragment broke off the engine and smashed a window.<br><br>The 61-year-old man began to be pulled… <a href="https://t.co/cax9KP96pY">pic.twitter.com/cax9KP96pY</a></p>&mdash; NEXTA (@nexta_tv) <a href="https://x.com/nexta_tv/status/2075607226245403026?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

விமானத்திற்குள் இருந்த மற்ற பயணிகள் உடனடியாகச் செயல்பட்டு, சில நிமிட
போராட்டத்திற்குப் பிறகு அவரை பத்திரமாக உள்ளே இழுத்து மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fd44ef5-226f-4b20-9b4a-9336fa8ed602/26-6a516bace8ca8.webp' /></p><p>
</p><p>
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பலத்த சத்தத்துடன் ஜன்னல்
உடைந்ததாகவும், உடனடியாக விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் குறைந்து ஒக்சிஜன்
முகமூடிகள் மேலே இருந்து கீழே விழுந்ததாகவும் பயணிகள் விவரித்துள்ளனர்.
</p><p>
இன்ஜினில் இருந்து உடைந்த சில பாகங்கள் ஜன்னலில் மோதியதால் இந்த விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என பயணிகள் கருதினாலும், விமான நிறுவனம் இது குறித்து
அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p></p><h2>பத்திரமாகத் தரையிறங்கிய விமானம்</h2><p>
</p><p>
இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானம் உடனடியாகத் தெசலோனிகி விமான
நிலையத்திற்குத் திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8faebb1-6fd8-4fa9-8168-2d175f687890/26-6a516bad95e5e.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட பயணிக்குத் தரையிறங்கியவுடன் முதலுதவி சிகிச்சைகள்
அளிக்கப்பட்டன.

இந்த 18 ஆண்டுகள் பழமையான விமானத்தை ரையான்ஏர் நிறுவனத்தின் துணை நிறுவனமான
மல்டா ஏர் இயக்கியுள்ளது.</p><p>

இந்த அபாயகரமான விபத்து குறித்து கிரீஸ் மற்றும் மல்டா நாட்டின் சிவில் விமான
போக்குவரத்துத் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T02:05:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்களுக்கு அமைச்சரைக் குறைகூறுவதில் நியாயமில்லை! ரஞ்சன் ராமநாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unfair-minister-prison-clashes-ranjan-ramanayake-1783731391"></link>
            <id>https://tamilwin.com/article/unfair-minister-prison-clashes-ranjan-ramanayake-1783731391</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்கள் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்கள் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல, அது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடு என்பதே உண்மையாகும்.</p><p>

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றேயாகும்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்</h2><p>
</p><p>
இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது. நானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db13ac31-f1db-49f3-9628-57e7a66e9ad4/26-6a51972ee6549.webp' /></p><p> அதே போலவே நானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்தேன்.

மேலும்,சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. </p><p>சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை, இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.</p><p>

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என்பதை மறுக்க முடியாது.
</p><p>
இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், 'நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்' என்று தைரியமாக முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது.</p><p>

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை நான் மதிக்கின்றேன் என்றும் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T01:07:00+00:00</updated>
        </entry>
    </feed>
