<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-11T23:35:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் - சஜித் இணைப்புக்கான பேச்சுகள் வெற்றிப்பாதையில்! முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajith-alliance-talks-mujibur-rahman-mp-1783812130"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajith-alliance-talks-mujibur-rahman-mp-1783812130</id>
            <summary type="text">ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள்
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள்
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின்
பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பிலிருந்து இரு வேட்பாளர்கள்
போட்டியிட்டமை தான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.</p><p></p><h2>தொடர் கலந்துரையாடல்கள்</h2><p> </p><p>எனவே, எதிர்கால அரசியல்
தேவைகளைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் ஒரே முகாமாக இணைக்க இணக்கம்
காணப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பேச்சுகள் சுமுகமாக இடம்பெற்று
வருகின்றன." என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77bb039c-db2c-4f42-b665-591a19d135e8/26-6a52d23c33359.webp' /></p><p>
</p><p>
மேலும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான
நேரடிச் சந்திப்புகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன என்றும், கட்சியின்
செயலாளர்கள் மட்டத்திலும் தொடர் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>இரு தரப்பினரும் ஒன்றிணைய
வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை
வெளியிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T23:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-oppose-extending-the-retirement-age-judges-1783809729"></link>
            <id>https://tamilwin.com/article/judges-oppose-extending-the-retirement-age-judges-1783809729</id>
            <summary type="text">பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப்பதாக நீதிச்சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.
</p><p>
இலங்கையின் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான்களைக் கொண்ட நீதிச்சேவை சங்கத்தின் இன்றைய நிறைவேற்றுக்கு குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>குறித்த&nbsp;பொதுக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றது.&nbsp;</p><p></p><h2>திருத்த முன்மொழிவு&nbsp;</h2><p>

இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, நீதிச் சேவைகள் சங்கத்தின் (JSA) ஒரு விசேட பொதுக் கூட்டம் நேற்று (11) கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809a2514-db11-454f-9c06-5af1f0ad4aec/26-6a52c8dccaf9f.webp' /></p><p>

இந்தக் கூட்டம் ஆரம்பத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அனுமதி கிடைக்காத காரணத்தினால் கடுவெலவுக்கு மாற்றப்பட்டிருந்தது. </p><p>இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நீதிபதிகளும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவை கடுமையாக எதிர்த்துள்ளனர். </p><p>இதனை அவர்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
இன்றைய நீதிச்சேவைகள் சங்க நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்துக்கு அதன் மூன்றில் ஒரு பங்கு அளவான 65 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த காரணத்தினால் அவர்களின் தீர்மானம் செல்லுபடியற்றது என்றும் இன்னொரு தரப்பு நீதிபதிகள் குழுவொன்று விமர்சித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T22:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shots-were-fired-at-house-mathugama-1783806769"></link>
            <id>https://tamilwin.com/article/shots-were-fired-at-house-mathugama-1783806769</id>
            <summary type="text">மதுகமவின் நெபோடா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.பொலிஸாரின் விசாரணை

நேற்று பிற்பகல் (11) ஒரு குழுவினரால் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுகமவின் நெபோடா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸாரின் விசாரணை</h2><p>
</p><p>
நேற்று பிற்பகல் (11) ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b676b94-faf4-4cf6-b81e-a47b503ac556/26-6a52bd01d92ad.webp' /></p><p>
</p><p>
டி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>
இருப்பினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்த பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T22:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியந்தியை தேடிய ஜனாதிபதி அநுர..! நாமலின் அரசின் அமைச்சரவையின் பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757"></link>
            <id>https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&amp;nbsp;நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் குறித்த வன்முறைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எளிமையான பண்புகள் தொடர்பில் பலரும் கருத்துக்கள் முன்வைத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தனது பாடசாலை நண்பர்களை சந்தித்த&nbsp;ஜனாதிபதி, அவர்களுடம் மிக எளிமையாக உரையாடியிருந்தார்.&nbsp;</p><p>அதன்போது, தனது பாடசாலை நண்பர்களில் பிரியந்தி என்ற ஒருவரை&nbsp;ஜனாதிபதி குறிப்பாக விசாரித்திருந்தார், இது பலர் மத்தியில் பேசுபொருளாகியிருந்தது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IoIwSxx4WZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 44 பேர் பலி - 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் தவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/floods-in-bangladesh-44-people-died-1783796108"></link>
            <id>https://tamilwin.com/article/floods-in-bangladesh-44-people-died-1783796108</id>
            <summary type="text">பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக
ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44
பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக
ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44
பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>சட்டோகிராம், காக்ஸ் பஜார், பண்டர்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2.6 இலட்சம் குடும்பங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><h2>தீவிர இயற்கை பேரிடர்கள்</h2><p>

போக்குவரத்து துண்டிப்பு, மின்சாரமின்மை போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள்
சவாலாக மாறியுள்ள சூழலில், இராணுவம் மற்றும் கடற்படையினர் படகுகள் மூலம்
மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab634078-2046-4b30-8ecb-8881f5377680/26-6a5292a5d1d6b.webp' /></p><p>

காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் ஏற்பட்ட
நிலச்சரிவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தால்
இதுபோன்ற தீவிர இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: பொறுப்பான அமைச்சே காரணம் - மரிக்கார் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-incident-government-blame-marikar-1783795574"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-incident-government-blame-marikar-1783795574</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப்
பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப்
பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத்
தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.
மரிக்கார் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம்
சாட்டியுள்ளார்.</p><p></p><h2>அமைச்சரின் பொறுப்பற்ற தன்மை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>முதல் நாள் அசம்பாவிதம் இடம்பெற்றபோதே, அமைச்சர் தனது அதிகாரத்தைப்
பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு
செய்திருந்தால், இரண்டாம் நாள் ஏற்பட்ட பாரதூரமான வன்முறைச் சம்பவங்களைத்
தடுத்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab22dc6-1b08-4d71-a795-1820347c98d8/26-6a52900348972.webp' /></p><p> அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே இத்தனை உயிர்கள் பலியாகக்
காரணமானது. இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை போன்றது.</p><p>நீதி அமைச்சரின் செயல்பாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
பாராட்டி இருந்தார். அரசின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும்
நோக்கோடே அவர் அவ்வாறு பேசுகின்றார்.</p><p></p><h2>அரசுக்குச் சார்பாகச் செயல்</h2><p> </p><p>தனக்கு வழங்கப்பட்ட அரைவாசி பொது மன்னிப்பை
முழுமையாக மாற்றிக்கொள்ளும் சுயநல நோக்கிலேயே அவர் அரசுக்குச் சார்பாகச்
செயற்படுகின்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc062cd-7097-4406-9ba3-15c5df703d83/26-6a5290ac43a1b.webp' /></p><p>மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்தால் அசம்பாவிதத்தைத்
தடுத்திருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றமை,
அதிகாரிகளின் மெத்தனத்தைக் காட்டுகின்றது.</p><p> 2 ஆயிரத்து 400 கைதிகளை ஒரே
இடத்தில் வைத்திருக்கின்றமை பெரும் தவறு. வன்முறையில் ஈடுபட்ட 100 அல்லது 200
கைதிகளை அன்றைய தினமே வேறொரு சிறைக்கு மாற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு
மோசமடைந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தின் தெளிவற்ற ஒப்பந்தங்களே மோதலுக்குக் காரணம் – முன்னாள் பிரித்தானிய தூதுவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-deal-cause-of-conflict-british-ambassador-1783794427"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-deal-cause-of-conflict-british-ambassador-1783794427</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (MoU) உள்ள தெளிவற்ற ஒப்பந்தங்கள், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (MoU) உள்ள தெளிவற்ற ஒப்பந்தங்கள், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இரு
நாடுகளும் தங்களுக்குச் சாதகமாக வெவ்வேறு விளக்கங்களை அளிக்க வழிவகுத்துள்ளதாக
கட்டார் மற்றும் ஈரானுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் நிக்கோலஸ் ஹொப்டன்
தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த தெளிவற்ற தன்மையே சமீபத்திய பரஸ்பர வான்வழித் தாக்குதல்களுக்கு முக்கியக்
காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் இத்தகைய பல ஆவணங்கள் பொதுவாகவே
தெளிவற்றதாகவும், மாறுபட்ட விளக்கங்களுக்கு இடம் கொடுப்பதாகவும்
அமைந்திருப்பது வழக்கம் என்றும், இந்த 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும்
அதுவே நடந்துள்ளது என்றும் அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்து குறித்த
ஒப்பந்தத்தின் 5-வது பிரிவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான
கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/169a47ba-dc37-45eb-ba16-149f9acf328f/26-6a528c314d42a.webp' /></p><p>அந்த நீரிணையின் மீது தங்களுக்கு இன்னும் ஓரளவிற்கு கட்டுப்பாடு உள்ளதாகவும்,
அதைக் கடந்து செல்லும் கப்பல்கள் தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
என்றும் ஈரான் பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது.
</p><p>
இதனால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து இந்த வாரம் தாக்குதல்கள்
நடத்தப்பட்டாலும், நிலைமை மீண்டும் ஒரு முழு அளவிலான போராக மாறவில்லை என்பது
ஒரு நல்ல செய்தி என்று ஹாப்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்த ஒரு பெரிய
சாதனையாகவே இந்த அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாம் கருத வேண்டும்
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரவெட்டியில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-camp-non-communicable-diseases-karavetti-1783793344"></link>
            <id>https://tamilwin.com/article/medical-camp-non-communicable-diseases-karavetti-1783793344</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில்
கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் சிவநேசன் ஞாபகர்த்த பொது நோக்கு மண்டபத்தில்
இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில்
கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் சிவநேசன் ஞாபகர்த்த பொது நோக்கு மண்டபத்தில்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் யாழ் கிளையின் அனுசரணயில் தொற்றா நோய்கள்
தொடர்பான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த முகாமானது&nbsp; நேற்று(11.07.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மருத்துவ முகாம்</h2><p>
</p><p>குறித்த மருத்துவ முகாமில் 41 பேருக்கு கண் பார்வை பாதிப்புக்களும்,
3 பேருக்கு நீரிழிவு அதிகரிப்பும்,
ஒருவருக்கு
உயர் இரத்த அழுத்தமும், 19 பேருக்கு பல் பிரச்சனையும் கண்டறியப்பட்டு மேலதிக
வைத்திய ஆலோசனையும் வழங்கப்பட்டள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95941eff-8521-453f-8ad5-64cc6ae24cdb/26-6a528962e97e7.webp' /></p><p>இதன்போது கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய பிரிந்திகா செந்தூரன்
தலைமையில் இடம்பெற்ற மருத்துவ முகாமில் பதில் சுகாதார வைத்திய அதிகாரி ரஞ்சன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான சிந்துஜன், ஆதவன், புவீந்திரன்,
அருட்குமரன், தாதியா உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர்கள், இலங்கை
செஞ்சிலுவைச் சங்கம் யாழ் கிளையின் ஆளுநர் சபை உறுப்பினர்
சதாசிவம் சதானந்தன், சிவநேசன் நினைவு மண்டப தலைவர் லோகேஷ்வரன், மற்றும்
மருத்துவ ஆலோசனை பெற வந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-increase-to-47-1783791914"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-increase-to-47-1783791914</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக
உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக
உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67,174 டெங்கு
நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு</h2><p>

அதேநேரம், ஜூலை மாதத்தின் முதல் 9 நாள்களில் மட்டும் 10,685 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர் எனவும் நேற்று(10) ஒரே நாளில் சுமார் 1,110 புதிய நோயாளர்கள்
கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர்
மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ecb61c-0c7c-4bcb-902f-c0fa621b27d2/26-6a52823d920da.webp' /></p><p>தற்போது பல முக்கிய மருத்துவமனைகள் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளன. இதன்
காரணமாக சுகாதாரக் கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன்,
மருத்துவமனைகளில் நோயாளிகளின் நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி விடுத்த எச்சரிக்கை.. அவசர அவசரமாக திட்டங்களை மாற்றிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ali-khamnei-funeral-mojtaba-khamenei-mourns-1783798865"></link>
            <id>https://tamilwin.com/article/ali-khamnei-funeral-mojtaba-khamenei-mourns-1783798865</id>
            <summary type="text">இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி என அவரது மகனும், தற்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி என அவரது மகனும், தற்போதைய உயர் தலைவருமான மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், "கமேனி மற்றும் தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவது தனிப்பட்ட நபர்களைச் சார்ந்தது அல்ல, அது தவிர்க்க முடியாத வகையில் நிச்சயம் நிறைவேற்றப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின்&nbsp;பயணத்திட்டங்கள்..&nbsp;</h2><p> </p><p>அண்மையில் மஷ்ஹத் நகரில் நடைபெற்ற அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிலையில், மக்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50faffdf-d5b4-4eee-ac83-4bfa6177df39/26-6a529e42e5449.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், தன்னை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.</p><p> இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் தகவல்களை மேற்கோள் காட்டி ட்ரம்ப் இதனை கூறி வரும் போதிலும், அமெரிக்க உளவு அமைப்புகள் இதுவரை இந்த அச்சுறுத்தலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. </p><p>இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக நேட்டோ மாநாட்டிற்குப் பிறகு ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் சதி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-against-freedom-sajith-furious-1783789931"></link>
            <id>https://tamilwin.com/article/government-against-freedom-sajith-furious-1783789931</id>
            <summary type="text">இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச்
சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என
எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச்
சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியிருக்கின்றார்.</p><p>ஐக்கிய மக்கள் சக்தி தலைமை செயலகத்தில் தாபிக்கப்பட்டுள்ள டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தில் இன்று(11.07.2026) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>ஜனநாயக உரிமைகளை ஒடுக்கம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுகின்றன. </p><p>இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசமைப்பில் குறிப்பிடப்படாவிட்டாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி
பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85fecb38-fd98-4dda-9044-9ccda25356fe/26-6a527edc6287f.webp' /></p><p> நிகழ்நிலை காப்புச் சட்டம்,
பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று இவர்கள் ஏலவே
கூறினாலும், அவை இன்னும் நடைமுறையில் இருக்கின்றமையோடு, தற்போது
நாடாளுமன்றத்தில் பேசும் சுதந்திரம் கூட மீறப்பட்டு வருகின்றது.</p><p>இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குக் கூட
சுதந்திரம் இல்லை. தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்
நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவோம் என பிரஸ்தாபித்தனர். இன்று அது 120
ரூபாவிற்கும் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளது.</p><p>ஒரு கிலோ நெல்லை உற்பத்தி
செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில்,
விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று
விவசாயிக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுனருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-between-governor-and-asian-countries-1783787823"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-between-governor-and-asian-countries-1783787823</id>
            <summary type="text">மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய
நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய
நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசேகரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள
ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள்
மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும்
விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.</p><p></p><h2>முதலீட்டு வாய்ப்புகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு
வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caca8258-4e2e-4171-95d6-5ba46b530820/26-6a52751a882d8.webp' /></p><p> மேலும், கிழக்கு மாகாணத்தில்
சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக அமையக்கூடிய இடங்களை இந்தத் தூதுக்குழு
பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்கே.குணநாதன், கிழக்கு மாகாண
சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவின் ஊழல் தடுப்பு தலைமை அரசு சட்டத்தரணி வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-cash-seized-from-indonesia-prosecutor-s-home-1783782130"></link>
            <id>https://tamilwin.com/article/gold-cash-seized-from-indonesia-prosecutor-s-home-1783782130</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் முன்னணி ஊழல் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமை அரசு
சட்டத்தரணி ஃபெப்ரி அத்ரியான்சா என்பவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில்
பொலிஸார் நடத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் முன்னணி ஊழல் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமை அரசு
சட்டத்தரணி ஃபெப்ரி அத்ரியான்சா என்பவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில்
பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், கிலோ கணக்கில் தங்கக் கட்டிகளும்,
கோடிக்கணக்கான ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்த ஊழல் முறைப்பாட்டின் எதிரொலியாக அவர் தனது பதவியை சனிக்கிழமை அன்று
இராஜினாமா செய்துள்ளார்.</p><p></p><h2>சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கம்</h2><p>

சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கத்தின் நேர்மை மற்றும் நடுநிலைமையைப் பேணும் நோக்கில்
ஃபெப்ரி அத்ரியான்சா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அந்த நாட்டின் தலைமை
சட்டத்தரணி அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c975361-4a56-4f37-a921-dbb61f022782/26-6a525f533f9d1.webp' /></p><p>அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டுக்குக் காரணமான
ஊழல் மற்றும் இலஞ்ச விவகாரங்கள் தொடர்பாக ஜகார்த்தா, தெற்கு டாங்கராங் மற்றும்
போகோர் உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில்
பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.</p><p>

இந்த சோதனையின் போது, ஃபெப்ரிக்கு சொந்தமான வீட்டில் இருந்து 74 கிலோ எடையுள்ள
தங்கக் கட்டிகள் மற்றும் இந்தோனேசிய ருபியா, அமெரிக்க டொலர், சிங்கப்பூர்
டொலர், சவுதி ரியால் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பில் சுமார் 20
மில்லியன் டொலர் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்வெட்டு விவகாரம்</h2><p>
</p><p>
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஃபெப்ரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மின்வெட்டு விவகாரத்தில் தான் ஏன் விசாரிக்கப்படுகிறேன் என்று தனக்கு
புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b3356f-8778-4950-8618-fb0c627c6a81/26-6a525f5257320.webp' /></p><p>

58 வயதான ஃபெப்ரி, இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் இலவச
பாடசாலை உணவுத் திட்டத்தில் நிலவும் ஊழல் முறைப்பாடு மற்றும் 'கோஜெக்' (Gojek)
நிறுவனத்தின் நிறுவனர் நாடிம் மகரிம் மீதான வழக்குகள் உள்ளிட்ட பல முக்கிய
உயர் மட்ட ஊழல் வழக்குகளை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது அவர் மீது இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு
செய்யப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் இந்தோனேசிய அரசியலில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:31:24+00:00</updated>
        </entry>
    </feed>
