<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T14:29:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசிச பாணியிலான ஆட்சி முறைமையை திணிக்கின்றது அரசு - மொட்டுக் கட்சி கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-is-imposing-nazism-style-regime-1784123488"></link>
            <id>https://tamilwin.com/article/government-is-imposing-nazism-style-regime-1784123488</id>
            <summary type="text">தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து
மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப்
புற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து
மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப்
புறம்பான ஆட்சி முறையைத் திணிக்க முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம்
சாட்டியுள்ளார்.
</p><p>
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>ஹிட்லரின் நாசிச ஆட்சி</h2><p>மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"அரசைக் கைப்பற்றியதுடன் நில்லாமல், அரச இயந்திரத்தையும் முழுமையாகக் கைப்பற்ற
வேண்டும் என்ற ரீதியில் தற்போதைய அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டு
வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/074194bd-819a-49d2-8717-1457a14f9f5d/26-6a579635df9d4.webp' /></p><p>கிராம உத்தியோகத்தர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான பதவிகளை,
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தொண்டர்களே வழிநடத்த வேண்டும் என்று அவர்கள்
முனைகின்றார்கள். இது ஹிட்லரின் நாசிச ஆட்சியைப் போன்றது.</p><p>தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் போதாது
என்று அமைச்சர் எரங்க குணசேகர போன்றோர் கருத்து வெளியிடுகின்றனர். </p><h2>ஜனநாயகத்தை முற்றாக நிராகரிக்கும்</h2><p>நாட்டை
ஜனநாயக ரீதியில் ஆளாமல், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஒரு கட்சியினரின்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba126f5f-0e04-4e05-bfb9-32b14ab34fed/26-6a579636970a2.webp' /></p><p>ஹிட்லர் அன்று ‘தேசிய சோசலிசம்’
என்ற போர்வையில் தனது கொடூரமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது போல், இவர்களும்
அழகான வார்த்தைகளைக் கூறிக்கொண்டு, ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்
கருத்துக்களை இந்த நாட்டுக்குள் திணிக்கப் பார்க்கின்றனர்.
</p><p>
நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவரும், தமக்குக் கட்டுப்பட்டு வாழ
வேண்டும் என்ற இந்த விகாரமான ஆட்சி மாதிரியைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
</p><p>ஜனநாயகத்தை முற்றாக நிராகரிக்கும் இத்தகைய அச்சுறுத்தும் போக்கினை, மக்கள்
விழிப்புணர்வுடன் அவதானிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:17:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோதல் தீவிரம்: கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் - ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-threatens-more-key-sea-route-blockades-1784102340"></link>
            <id>https://tamilwin.com/article/iran-threatens-more-key-sea-route-blockades-1784102340</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.ஈரானின்
துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள
நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>ஈரானின்
துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள
நிலையில், ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை
இலக்காகக் கொண்டு அமெரிக்கா இன்று புதிய வான்வழித் தாக்குதல்களை
நடத்தியுள்ளன.
</p><p>
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும்
முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் இரு
நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
அமெரிக்கப் படைகள் ஈரானின் கிரேட்டர் டுன்பு தீவில் உள்ள கடலோரப் பாதுகாப்பு
அரண்கள் மற்றும் ஏவுகணைச் சேமிப்புக் கிடங்குகளை நோக்கிச் சுமார் 90
நிமிடங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.
</p><p>
இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள
அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய
புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e45e68f-c57f-46a4-abf1-f86a3e450485/26-6a57913c24894.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் பிற முக்கிய எரிசக்தி
ஏற்றுமதி வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து உலகளவில் மசகு
எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, புதிய உச்சத்தைத்
தொட்டுள்ளது.</p><p></p><h2>உடனடி பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர
வேண்டும் என்றும், தவறினால் அடுத்த வாரம் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள்
மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது
தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த மோதலினால் கடந்த சில நாட்களில் மட்டும் ஈரானின் தெற்குப் பகுதியில்
30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1835ac4-5f90-4d7e-ae2e-024bbf50cfb1/26-6a57913cd8ff3.webp' /></p><p>
</p><p>
அத்துடன் இராணுவ தளம் மீதான தாக்குதலில் 7 இராணுவ வீரர்களும்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
ஈரான் தனது நட்பு நாடான ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி பாப்
எல்-மண்டேப் கடல் வழித்தடத்தையும் மூடக்கூடும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுவதால்,
சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகப் பொருளாதாரம் பெரும்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் வீதியில் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youths-arrested-in-sammanthurai-1784122712"></link>
            <id>https://tamilwin.com/article/youths-arrested-in-sammanthurai-1784122712</id>
            <summary type="text">அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். </p><p>அத்துடன் குறித்த நபர்கள் பயணித்த மோட்டார்
சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பலத்த
கண்டனங்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த காணொளி ஒன்றினை
அடிப்படையாகக் கொண்டே சம்மாந்துறைப் பொலிஸாரால் இந்த விசேட அதிரடி நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>இதன் போது தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டியமை, ஒரே
மோட்டார் சைக்கிளில் 3 முதல் 4 பேர் வரை பயணித்தமை, பிரதான வீதியை மறித்து
ஆபத்தான முறையில் சாகசம் செய்தமை உள்ளிட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டனர்.
</p><p>அத்துடன், குறித்த கும்பல் ஏனைய வாகனங்கள் செல்லும் பிரதான வீதியை மறித்து, ஆபத்தான முறையில்
வாகனங்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் ஏனைய சாரதிகளுக்கும் அச்சுறுத்தல்
ஏற்படுத்தியமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a615ccc5-c9fc-44e1-8d69-9ac81d240539/26-6a57934174201.webp' /></p><p>இந்தக் காணொளியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப்
பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிச் செயற்பட்ட
குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ததுடன், அவர்களது
மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p> எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத
மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் போராட்டங்களில் ஈடுபட்ட நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-executes-man-involved-in-protests-1784121902"></link>
            <id>https://tamilwin.com/article/iran-executes-man-involved-in-protests-1784121902</id>
            <summary type="text">ஈரானில் கடந்த குளிர்காலத்தில் அரசுக்கு எதிராக வெடித்த தீவிரப்
போராட்டங்களில் பங்கேற்ற நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக
அந்நாட்டு நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் கடந்த குளிர்காலத்தில் அரசுக்கு எதிராக வெடித்த தீவிரப்
போராட்டங்களில் பங்கேற்ற நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக
அந்நாட்டு நீதித்துறை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

"எதிரிகளின் கூட்டாளியான முகமது அமினி தெஹாகானி என்ற நபரின் மரண தண்டனையை
உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, இன்று(15) காலை அவர்
தூக்கிலிடப்பட்டார்" என்று நீதித்துறையின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அவர் மீது "மொஹாரேபே" (இறைவனுக்கு எதிரான போர்) மற்றும் "பூமியில் ஊழல்/அழிவை
ஏற்படுத்துதல்" ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி</h2><p>
கடந்த ஜனவரி 9ஆம் திகதி, தெஹாகான் பகுதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தின்
வெளிப்பகுதியில் முகமது அமினி பெட்ரோல் குண்டு வீசியதாகவும், பொதுச்
சொத்துக்கள் மற்றும் நகர பொலிஸ் நிலையத்தை எரியூட்டி அழித்ததாகவும் அரசு
ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/321bcfd0-da95-438d-b773-d386e875b9f5/26-6a578d597fbca.webp' /></p><p>கடந்த டிசம்பர் மாத இறுதியில், ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு
எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், பின்னர் அரசியல் கோரிக்கைகளாக
உருவெடுத்து நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவின.</p><p>

இப்போராட்டங்களை ஒடுக்க அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
</p><p>
எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற கலவரங்களே
இவை என்று ஈரானிய அதிகாரிகள் சித்தரிப்பதோடு, வன்முறையில் சுமார் 3,000 பேர்
மட்டுமே இறந்ததாகக் கூறுகின்றனர்.
</p><p>
ஆனால், பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு
நடத்தியதாகக் கூறி, வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இந்த இறப்பு
எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம் என்று குற்றம் சாட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apply-for-ordinary-level-examination-without-nic-1784121638"></link>
            <id>https://tamilwin.com/article/apply-for-ordinary-level-examination-without-nic-1784121638</id>
            <summary type="text">நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அறிவுறுத்தல்</h2><p>&nbsp;அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5ddd796-a268-4e8c-942c-e596fa95d91f/26-6a578be667bad.webp' /></p><p> </p><p>

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். </p><p>

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p6HKJkzx3qc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:35:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானிக்கு உலகத் தலைவர்கள் நேரில் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-leaders-pay-respect-former-emir-qatar-sheikh-1784121820"></link>
            <id>https://tamilwin.com/article/world-leaders-pay-respect-former-emir-qatar-sheikh-1784121820</id>
            <summary type="text">கட்டார் நாட்டின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் &quot;தந்தை அமீர்&quot; என்று
போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, தனது 74ஆவது வயதில்
காலமானார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டார் நாட்டின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் "தந்தை அமீர்" என்று
போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, தனது 74ஆவது வயதில்
காலமானார்.
</p><p>
கடந்த ஜூலை 12ஆம்&nbsp; திகதியன்று&nbsp; அவர் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து,
கட்டார் நாட்டில் நான்கு நாட்களுக்குத் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டு,
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நேரில் இரங்கல்</h2><p>
</p><p>
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உலகத் தலைவர்கள் பலரும்
கட்டாரில் உள்ள லுசைல் அரண்மனைக்கு வருகை தந்து, தற்போதைய அமீர் ஷேக் தமீம்
பின் ஹமத் அல் தானியை நேரில் சந்தித்துத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைப்
பகிர்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b69929a-f65b-4cce-b787-615cf04d3bdf/26-6a578c5f1ab51.webp' /></p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாகத் தனது இரங்கலைத்
தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சிரிய ஜனாதிபதி அகமது
அல்-ஷரா, பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் அரபு நாடுகளின்
முக்கியப் பிரதிநிதிகள் பலரும் நேரில் வந்து கத்தார் மக்களுக்கும் அதன்
தலைமைக்கும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>

மறைந்த தந்தை அமீரின் உடல், தோஹாவில் உள்ள இமாம் முஹம்மது இப்னு அப்த்
அல்-வஹாப் மசூதியில் நடைபெற்ற இறுதி வழிபாட்டிற்குப் பிறகு, லுசைல் மயானத்தில்
நல்லடக்கம் செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக ஐ.நா.விடம் முறையிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-coalition-files-un-against-government-1784119096"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-coalition-files-un-against-government-1784119096</id>
            <summary type="text">நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில், ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில், ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமையகத்திற்குச் சென்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை சந்தித்து&nbsp; மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.</p><p>

இந்தச் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரள, பிரேமநாத் சி. தொலவத்த, அசாத் சாலி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><h2>சமத்துவக் கோட்பாடு</h2><p>இந்த சந்திப்பினை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,

 இலங்கையில் எவரும் இவ்வாறான மாற்றத்தைக் கோரவில்லை. சட்டத்தரணிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
எந்தவொரு வெளிப்படைத்தன்மையுமின்றி அரசு முன்னெடுக்கும் இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d1a987-43c1-4ead-bebf-c05b20ebd4ae/26-6a5780b01928c.webp' /></p><p>மேலும், “அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் வரும் சமத்துவக் கோட்பாட்டுக்கு முரணாக, நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பதவிக்காலத்தை நீடிக்க அரசு முனைகின்றது.</p><p>

நாட்டில் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காது, வீணான குழப்பங்களை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை</h2><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சுரேன் ராகவன்,

சம்பவம் நடந்து 10 நாள்கள் கடந்தும், இதுவரை இடைக்கால அறிக்கை கூட வெளியிடப்படவில்லை.இது துரதிர்ஷ்டவசமானது.</p><p>கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் போன்ற குறைந்தபட்ச பலப்பிரயோக முறைகளைக் கையாண்டிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78812939-fce4-4dfe-a918-6de4d11edf4b/26-6a5780b0dfc28.webp' /></p><p>
</p><p>
இந்த வன்முறையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டனை வழங்கப்படாத நிலையில், இவர்களின் ‘வாழும் உரிமை’ பறிக்கப்பட்டுள்ளது. </p><p>இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

முறைமை மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்தனர்.</p><p> ஆனால் அனுபவமற்ற நிர்வாகமே தற்போதைய நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு ‘இதுவே போதும்’ என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-launches-successive-airstrikes-on-iran-again-1784120408"></link>
            <id>https://tamilwin.com/article/us-launches-successive-airstrikes-on-iran-again-1784120408</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்க இராணுவம் பகல் நேரத்தில் புதிய சுற்று வான்வழித்
தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம்
அதிகாரப்பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்க இராணுவம் பகல் நேரத்தில் புதிய சுற்று வான்வழித்
தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

வொஷிங்டன் நேரப்படி காலை 6 மணி (சர்வதேச நேரப்படி 10:00 GMT) அளவில் இந்தத்
தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தாக்குதல்கள்</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்
நடத்துவதற்காக ஈரான் படைகள் பயன்படுத்தி வரும் இராணுவத் திறன்களை முற்றிலுமாக
அழிக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க
இராணுவத்தின் மத்திய கட்டளையகம் தனது செய்தி அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-dengue-eradication-operation-with-military-1784116481"></link>
            <id>https://tamilwin.com/article/special-dengue-eradication-operation-with-military-1784116481</id>
            <summary type="text">நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதுடன்,
உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றமையை கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது
சுகாதார வைத்திய அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதுடன்,
உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றமையை கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவோரியன் பகுதியில் இன்று (15.07.2026) நுளம்பு களத்தடுப்பு மற்றும் வீட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடித் தலைமையில், பொதுச் சுகாதார
பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் இலங்கை
இராணுவத்தினர் இணைந்து இந்தத் தீவிர கூட்டுத் தடுப்பு நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>டெங்கு ஒழிப்பு</h2><p>

இன்றைய கள நடவடிக்கையின் போது, வொலிவோரியன் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள வெற்று நிலங்கள் அனைத்தும் அதிகாரிகளினால் அணு அணுவாகப்
பரிசோதிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980218a8-50d8-4efd-8a5d-8976e4dd9ed8/26-6a57760483572.webp' /></p><p>இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் நீர்
தேங்கியிருந்த இடங்கள் மற்றும் டெங்கு பரவலுக்கு வழிவகுக்கும் அபாயகரமான
சூழல்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
அடையாளம் காணப்பட்ட நுளம்புப் பெருக்க இடங்கள் அனைத்தும் வீட்டு உரிமையாளர்களின்
முழுமையான ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றப்பட்டு, சுற்றுப்புறச் சூழல்
துப்புரவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>விழிப்புணர்வு&nbsp;</h2><p>
</p><p>
எதிர்காலத்தில் இவ்வாறான டெங்கு அபாய நிலைமைகள் மீண்டும் ஏற்படாதவாறு
பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் சுற்றுப்புறத்தைப் பேணுவது தொடர்பான
அத்தியாவசிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் இதன்போது அதிகாரிகளால்
வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d8125f-6d82-46ff-9285-c3c61f77c93b/26-6a5776057bba5.webp' /></p><p>டெங்கு அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் அனைவரும்
சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. </p><p>வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களையாவது ஒதுக்கி, தங்கள்
வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் நீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறு
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை மிக அவசரமாகக்
கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூதாட்டியின் சங்கிலி அறுப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கைவரிசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-woman-s-chain-cut-in-jaffna-1784119090"></link>
            <id>https://tamilwin.com/article/old-woman-s-chain-cut-in-jaffna-1784119090</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த
இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த
இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

நேற்று(14.07.2026) மாலை யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள தேவாலயப் பகுதிக்குச்
சமீபமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>கைது செய்வதற்கான நடவடிக்கை</h2><p>
மேற்படி மூதாட்டி, மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில்
பயணித்துக் கொண்டிருந்தபோது, இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்
அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3737e8b9-e6b9-4d08-90c2-ae12fa39b188/26-6a57849dbbcb8.webp' /></p><p>திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்ட அந்த
நபர்கள், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
சம்பவத்தின் போது, திருட்டில் ஈடுபட்ட இருவரும் அடையாளம் தெரியாத வகையில்
முகத்தை மறைக்கும் முகக்கவசங்களை அணிந்திருந்ததாகச் சம்பவத்தை நேரில்
கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் முறைப்பாடு பெற்று விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர். </p><p>அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளைக் கொண்டு
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களில் ஒரு தரப்பினருக்கான விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/circular-issued-regarding-holidays-1784119104"></link>
            <id>https://tamilwin.com/article/circular-issued-regarding-holidays-1784119104</id>
            <summary type="text">உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த திருத்தங்களை மேற்கொண்டு அரச நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>

கடந்த ஜூன் 22ஆம் திகதியன்று அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p></p><h2>வழங்கப்பட்டுள்ள வசதி</h2><p>

இதன்படி, குறித்த பதவிகளை வகிக்கும் தகுதியுடைய அரச உத்தியோகத்தர்கள் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அல்லது குறித்த பதவியில் இருக்கும் காலப்பகுதியில், தேவைப்படின் ஊதியமற்ற விடுமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b36c80c7-47dc-4434-b5e6-15aad43911b5/26-6a578605cfe49.webp' /></p><p>உள்ளூராட்சி மன்றப் பணிகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/injunction-against-removal-of-vavuniya-mayor-1784117167"></link>
            <id>https://tamilwin.com/article/injunction-against-removal-of-vavuniya-mayor-1784117167</id>
            <summary type="text">வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால்
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை
உத்தரவை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால்
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை
உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்
நீதிமன்றம் இன்று(15.07.2026) உத்தரவிட்டுள்ளது.</p><p>

மாநகர மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல்
செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனு, இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தின்&nbsp; இடைக்கால நிவாரணம்</h2><p>
</p><p>
இதன்போது, வழக்கின் பிரதிவாதிகளான வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி
ஆணையாளர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி தனது சமர்ப்பிப்புகளை
முன்வைத்துள்ளார். </p><p>பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தமக்குக் கால
அவகாசம் தேவைப்படுவதாக அவர் கோரியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f2bed0-eea1-4f20-9050-e5ae6c3bb3e0/26-6a5778ab51e7c.webp' /></p><p>மேலும், மனுதாரருக்குச் சாதகமாக
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணங்களை (தடை உத்தரவு) கடுமையாக
எதிர்ப்பதாகவும் அவர் மன்றுரைத்துள்ளார்.
</p><p>
இரு தரப்புவாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், பிரதிவாதிகள் தமது
ஆட்சேபனைகளை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும்
என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக
விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடித்த
நீதிமன்றம், வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ninthavur-regional-committee-meeting-decision-take-1784115039"></link>
            <id>https://tamilwin.com/article/ninthavur-regional-committee-meeting-decision-take-1784115039</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி மற்றும் பொது
மக்கள் நலன் சார்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான முக்கிய அபிவிருத்தி
முன்மொழிவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி மற்றும் பொது
மக்கள் நலன் சார்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான முக்கிய அபிவிருத்தி
முன்மொழிவுகளுக்கான அங்கீகாரமும் தீர்மானங்களும் இன்று (15) நடைபெற்ற
நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளன.</p><p>

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ஏ.ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப்
ஒருங்கிணைப்பில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம்
நடைபெற்றுள்ளது.</p><h2>முக்கிய தீர்மானங்கள்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.
தாஹிர் பிரதேசத்தின் நீண்டகாலத் தேவைகளை உள்ளடக்கிய விரிவான திட்ட வரைபைச்
சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
நிந்தவூர் மக்களின் நீண்டகால அபிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
இந்தத்திட்டங்கள் எந்தவித நிர்வாகத் தாமதமுமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து அரச திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
என அவர் தனது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35278be-b84a-4dd9-b795-3d172607f039/26-6a5770310492c.webp' /></p><p>நிந்தவூர் 05ஆம் பிரிவில் 3ஆம் குறுக்குத் தெருவிலிருந்து கடற்கரை 2ஆம் வீதி
வரையிலான குடியிருப்புகளில் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கைத் தடுக்கும்
நோக்கில், கிட்டங்கி வீதியூடாகப் புதிய வடிகால் அமைக்கப்பட்டு, அது நயீம்
பள்ளிவாசல் வடிகாலுடன் இணைக்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன், நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தைச் சுற்றி முறையான வடிகால்களை
அமைத்து, மண் நிரப்பி மைதானத்தை உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வெட்டுவாய்க்கால் வீதியில் காரைதீவு – நிந்தவூர் உள் பாலத்திற்கு
கிழக்கே காணப்படும் வீதி தாழ்வை நிரந்தரமாகச் சீரமைத்து,
நிறுத்திவைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் பணிகளை முழுமையாகப் பூர்த்தி
செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>

பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், அல்-மஸ்ஹர் பெண்கள்
உயர்தரப் பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இருமொழிக் கல்வித்
திட்டத்திற்காக மூன்று மாடிகளைக் கொண்ட நவீன வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை
அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு மேலதிகமாக, நிந்தவூர் 09 ஆம் பிரிவில் புதிய முன்பள்ளி பாலர் பாடசாலை
ஒன்றினை அமைப்பதற்கும், மினா, ஜேர்மன் மற்றும் அல்-சஹிதா பாடசாலை மாணவர்களை
மையப்படுத்தி புதிய பொது நூலகம் ஒன்றை அமைப்பதற்கும் ஏகமனதாகத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/330e6a54-f677-442f-9180-e8a5195c53c9/26-6a577031c2d55.webp' /></p><p>இந்தக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் விரிவாக
ஆராயப்பட்டு, அவற்றை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட
அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்குப் பரிந்துரைகளை
அனுப்பி, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று பணிகளை விரைவுபடுத்துவதற்கான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெவ்வை, நிந்தவூர்
பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், அரச திணைக்களங்களின்
தலைவர்கள், பாதுகாப்புப் படையினர், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும்
உயர் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restaurant-closed-on-court-order-1784111697"></link>
            <id>https://tamilwin.com/article/restaurant-closed-on-court-order-1784111697</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக 
பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக 
பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதன்போது குறித்த உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>கடந்த திங்கட் கிழமை(13) இரவு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இந்த உணவகம் அடையாளம் காணப்பட்டது.</p><p> </p><p>

அதனடிப்படையில் இன்று புதன்கிழமை(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecd875d-beed-4f4d-88ed-edafe21069b2/26-6a5769c6b068f.webp' /></p><p>

இதனையடுத்தே உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கிணங்க பொதுசுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-shot-in-katunayake-1784117584"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-shot-in-katunayake-1784117584</id>
            <summary type="text">கட்டுநாயக்கவில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்கவில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.</p><p>இந்த நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கட்டுநாயக்கவில் உள்ள தாவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குறி்த்த சம்பவம் சற்றுமுன் (15.07.2026) இடம்பெற்றுள்ளதாக&nbsp;தெரியவருகிறது.</p><p>பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>தப்பிச்சென்ற சந்தேகநபர்</h2><p>

மோட்டார் சைக்கிளில் குறித்த பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அதே வாகனத்தில் தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bacce458-b12a-48ba-8d25-1758970cc061/26-6a577c67b6ef6.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T12:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விநியோகித்த தம்பதியினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-distributing-drugs-1784117049"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-distributing-drugs-1784117049</id>
            <summary type="text">அம்பாறை முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள
கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து
&#039;ஐஸ்&#039; மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள
கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து
'ஐஸ்' மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த தம்பதியினர்,
அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (15) கைது
செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
முவங்கல பகுதியிலுள்ள உக்சிரிபுர பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள்
விற்பனையில் ஈடுபட முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள் விற்பனையின் மூலம்&nbsp;</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் முவங்கல கிராமம் 8 ஐச் சேர்ந்த
37 மற்றும் 34 வயதுடைய தம்பதியினர் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef30d6ec-6822-4804-9eeb-6a7119cb36dc/26-6a577a06b56ce.webp' /></p><p>
கைது செய்யப்பட்டபோது ஆண் சந்தேகநபரிடமிருந்து 5,120 மில்லிகிராம் ஹெரோயின்,
பெண் சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் 21,510 ரூபாய் பணமும், போதைப்பொருள் விநியோகத்திற்குப்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் எதிர்காலத் தலைமுறையினரான பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள்
அரக்கனிடமிருந்து பாதுகாக்க இத்தகைய கடுமையான சுற்றிவளைப்புகள் தொடரும் என
அம்பாறை பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-15T12:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-issue-pillayan-nexr-arrest-1784109054"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-issue-pillayan-nexr-arrest-1784109054</id>
            <summary type="text">சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவே நீர்கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே&nbsp; அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p>
கடந்த காலங்களில் இனக்கலவரங்கள் சிறைச்சாலை&nbsp; சம்பவங்களின் மூலமே தொடங்கப்பட்டது.</p><p>

இது போன்ற குழப்பங்கள் நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வர பயன்படுத்தப்படலாம்.
</p><p>
விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களை&nbsp; காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான குழப்பங்களை&nbsp; செயற்கையாக உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டார். 

அவருக்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக பிள்ளையான் கைது செய்யப்படுவார் எனவும் தாஹா ஐன்ஸ்டீன்&nbsp; குறிப்பிட்டார். </p><p>

கருணாவை பொறுத்தவரை, அத்தகைய நேரடி ஆதாரங்களோ அல்லது அண்மைய விசாரணைகளில் மையப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோ அவர் மீது வலுவாக இல்லை என்றும் தாஹா ஐன்ஸ்டீன் இதன்போது சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க ....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mYgm6Bv7xH4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காக்கைதீவு மக்களின் குரல்களுக்கு தீர்வு வழங்குவது அவசியம்! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/necessary-provide-solution-people-kakkaithivu-1784116781"></link>
            <id>https://tamilwin.com/article/necessary-provide-solution-people-kakkaithivu-1784116781</id>
            <summary type="text">காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத
பிரச்சினையாக இருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத
பிரச்சினையாக இருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,</p><p> 

குறித்த விடயம் தொடர்பாக இன்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து யாழ் மாநகர
சபைக்கு முன்னால் தங்களது பிரச்சினை தொடர்பில் அடையாள எதிர்பைக்
வெளிப்படுத்தியிருக்கின்றனர்.</p><p></p><h2>காக்கைதீவு மக்களின் குரல்கள்</h2><p>
</p><p>
அதன் தொடர்ச்சியாக எனக்கும் அது தொடர்பில் ஒரு மனு தந்துள்ளார்கள்.</p><p>

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் அரசியல், அபிவிருத்தி சார்
விடயங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தவன் என்ற வரலாற்று அனுபவத்தினூடாக சில
விடயங்களை கூறுகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42917473-f571-4664-bfa4-dff1274ba2ee/26-6a577894e8d42.webp' /></p><p>
</p><p>
அதாவது இந்த விடயம் நீண்டகாலமாக தொடர் பிரச்சினையாக இருப்பதால் மாநகரசபை இது
தொடர்பாக வடமாகாண ஆளுநர், மாநகர சபை நிர்வாகம் ஆகியோருடன் கதைத்து, இதற்கு
விரைவில் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க முடியும்.
</p><p>
குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என
வலியுறுத்தி வருகின்றார்கள்.

​</p><p>இதேவேளை நான் இப்பொழுது ஆட்சியில் இல்லை. இருந்தாலும் என்னுடைய அனுபவங்கள்
ஊடாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வை காண்பதுதான் சரியாக
இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - ஈ.பி.டி.பி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-people-reject-the-6-party-alliance-epdp-1784106397"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-people-reject-the-6-party-alliance-epdp-1784106397</id>
            <summary type="text">தமிழ் மக்களை ஏமாற்றி
அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய
முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களை ஏமாற்றி
அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய
முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என
ஈ.பி.டி.பி மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்
தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று(15.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழருக்கு கரிநாள்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>தமிழரசு கட்சியின் இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது தமிழரசு கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மறைந்த சம்பந்தன் இலங்கை தேசிய கொடியை அசைத்து தமிழர்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக சர்வதேசத்துக்குத் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb045603-f09f-4a66-b4f5-c438ff01aa90/26-6a57552469588.webp' /></p><p>அதன் பின்னர் இன்று அந்த கட்சியினர் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்றும் கூறுகின்றனர்.</p><p> 

இவ்வாறு இவர்கள் காலத்திற்கு காலம் நேரத்துக்கு நேரம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்.

இவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவை தேடித்தர வேண்டும் என்ற நோக்கம் இல்லை.</p><p>

தங்களுடைய அரசியல் இருப்புக்காகவும் தேவைகளுக்காகவும் கால காலமாக அரசியல் ஆசன இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அரசியல் செய்ய முடியாத கால கட்டங்களில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கும்
தேர்தல் வரும்போது கூட்டுச் சேர்ந்துகொள்வார்கள், தேர்தல் முடிந்த பின்னர் ஆளுக்கு ஆள் பிரிந்து சென்று விடுவார்கள்.</p><p></p><h2>ஆறு கட்சிகளின் கூட்டுச் சேர்வு</h2><p>
</p><p>
இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் இருப்பு தான் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. எனவே இந்த ஆறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதனை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.
</p><p>
மக்கள் விரைவில் உங்களுக்கான பதிலை தருவார்கள். இந்த கூட்டுச் சேர்வு குறித்து வடக்கு மாகாணம் பாதிக்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களுடைய இருப்பினை நிச்சயமாக பாதிக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7dab7eb-52e4-41c0-a808-771d705dfd42/26-6a5755252529a.webp' /></p><p>

உங்களால் அரசியல் செய்ய முடியாவிட்டால் நீங்கள் தயவு செய்து உங்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்.
</p><p>
நாட்டிலே படித்த வேலையற்ற பட்டதாரிகள் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அவர்களிடம் தமிழரசு கட்சியை கொடுங்கள். அவர்கள் அதை வழிநடத்திச் செல்வார்கள்.
</p><p>காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்தி விடவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-15T11:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimals-brother-arrested-in-gampaha-1784114686"></link>
            <id>https://tamilwin.com/article/wimals-brother-arrested-in-gampaha-1784114686</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் இன்றைய தினம் (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவர் இன்றைய தினம் (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் கைதாகியுள்ளார்.</p><h2>முறைகேடு சம்பவம்</h2><p></p><p> </p><p>

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb9e075-48ea-4500-8938-97a600d6a9f4/26-6a57730856578.webp' /></p><p> 

சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்பஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:52:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட தொடருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-for-nallur-festival-special-train-services-1784112761"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-for-nallur-festival-special-train-services-1784112761</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான இரண்டு மதத் திருவிழாக்களான நல்லூர் மற்றும் மடு திருவிழாக் காலங்களில் சிறப்பு தொடருந்து மற்றும் பேருந்து ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான இரண்டு மதத் திருவிழாக்களான நல்லூர் மற்றும் மடு திருவிழாக் காலங்களில் சிறப்பு தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
</p><p>
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் பொதுமக்களிடையே உரையாற்றியபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>சிறப்பு போக்குவரத்து சேவை</h2><p>

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையேயான தினசரி விரைவு தொடருந்து சேவை நான்கு நாட்களுக்கு குறைக்கப்படும் என தொடருந்து திணைக்களம் சமீபத்தில் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25078592-b65c-42e4-8edd-8c66abe1b489/26-6a576d768b6ce.webp' /></p><p>இதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வரக்காபொல பகுதியில் ஒரு தொடர்வண்டி சிக்கியிருப்பதும், மலைப்பாங்கான பகுதிகளில் தண்டவாளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தொடர்வண்டிகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விளக்கினார்.
</p><p>
இந்த தற்காலிக சவால்கள் இருந்தபோதிலும், நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டிற்கும் அரசாங்கம் நிச்சயமாக சிறப்பு போக்குவரத்து சேவைகளை வழங்கும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p>
தற்போது, ​​மவுண்ட் லவினியா - காங்கேசன்துறை விரைவு தொடருந்து வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இது காலை 5:15 மணிக்கு மவுண்ட் லவினியாவிலிருந்து புறப்பட்டு, மதியம் 12:13 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடைகிறது. </p><p>இதன் திரும்பும் பயணம் மதியம் 1:50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து தொடங்கி, இரவு 9:40 மணிக்கு மவுண்ட் லவினியாவில் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-governor-eastern-and-defense-officials-1784105509"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-governor-eastern-and-defense-officials-1784105509</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு
கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு
கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பானது நேற்று(14) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p><h2>பாதுகாப்பு அதிகாரிகள்</h2><p>பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கற்கைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு
மேற்கொண்ட களப்பயணத்தின் போது ஆளுநருடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7d33bb-3b09-4081-b406-6dd382291d1c/26-6a574a9e79a82.webp' /></p><p>இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக மற்றும் பாதுகாப்பு நிலைமைகள்
குறித்து ஆளுநர் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.</p><p>அத்துடன் மாகாணத்தில் நிலவும்
பிரச்சினைகள் மற்றும் குறித்த பிரச்சினைகளின் போது பாதுகாப்புத்துறையினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலைக்குள் மர்ம நபர்கள் வீசிய பொதி! தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-parcel-was-thrown-at-prisoners-at-galle-prison-1784113842"></link>
            <id>https://tamilwin.com/article/a-parcel-was-thrown-at-prisoners-at-galle-prison-1784113842</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையின் பின்புறம் உள்ள தொடருந்து நிலையப் பகுதி அருகிலிருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசி எறிந்து தப்பிக்க முயன்ற இரண்டு நபர்கள் குறித்து, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையின் பின்புறம் உள்ள தொடருந்து நிலையப் பகுதி அருகிலிருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசி எறிந்து தப்பிக்க முயன்ற இரண்டு நபர்கள் குறித்து, பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி காலி தலைமையக பொலிசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
அந்த இரண்டு நபர்களால் வீசப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி, பொலிஸ் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அதில், 2,180 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், புகையிலை மற்றும் 49 லைட்டர்களைக் கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3f5c3cc-e8e6-4f37-9aa7-d68e387942d7/26-6a576f81619c9.webp' /></p><p>

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் அடங்கிய அந்தப் பொதி, சிறைக் கைதிகளைக் குறிவைத்து சிறை சுவர்களைத் துளைத்து கடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

தலைமறைவான சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, காலி தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MM9VsQRIOig" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-15T11:31:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் பறக்கவிடும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-air-force-announcement-1784110933"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-air-force-announcement-1784110933</id>
            <summary type="text">விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

தற்போது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. </p><p> 

தற்போது நிலவும் பட்டம் விடும் பருவகாலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டம் விடுவது கணிசமாக அதிகரித்துள்ளது.</p><h2>கடுமையான அச்சுறுத்தல்</h2><p> 

இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் இடம்பெறும் விமான விபத்துகளுக்கு, ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் விடுவது ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடி இடையூறாகவும் அமைகிறது.</p><p></p><p> </p><p>

இலங்கையின் கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களைச் சூழவுள்ள வான்பரப்பில் இவ்வாறு அதிகளவில் பட்டம் விடப்படுவது தற்போது பெரும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது.</p><p> 

இந்த அபாயகரமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் வகையில், இன்றைய தினம் (2026.07.15) இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சி நடவடிக்கைகளுக்காக வானில் எழும்பிய Y-12 ரக விமானம் ஒன்று, பட்டத்தின் நூல்களால் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. </p><p>

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், வான்பரப்பில் ஏற்பட்ட அச்சுறுத்தலையடுத்து உடனடியாக அவசரமாக இரத்மலானை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfce602-61cb-43db-8472-b316821d0b8d/26-6a576c99e6051.webp' /></p><h2>நேரடி ஆபத்து</h2><p> </p><p>

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனைகளின் போது, அந்த விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க எஞ்சின் பகுதி மற்றும் மேலும் சில பாகங்களில் பட்டத்தின் நூல்கள் பெருமளவில் சுற்றியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

விமானத்தின் எஞ்சினுக்குள்ளோ அல்லது அதன் முக்கிய செயல்பாட்டு அமைப்புகளுக்குள்ளோ பட்டத்தின் நூல்களோ அல்லது பட்டத்தின் பாகங்களோ சிக்கிக்கொண்டால், ஒட்டுமொத்த விமானமும் விபத்துக்குள்ளாகும் நேரடி ஆபத்து உள்ளது.</p><p></p><p> </p><p>

இதன்மூலம் பாரிய உயிர்ச்சேதங்களும் சொத்துச்சேதங்களும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். </p><p>

எனவே, வான்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், இத்தகைய வான் பாதுகாப்பு வலயங்களுக்குள் பட்டம் விடுவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் பகுதியில் இரண்டு வாகன சாரதிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-drivers-arrested-in-kandalai-area-1784100345"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-drivers-arrested-in-kandalai-area-1784100345</id>
            <summary type="text">கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின்போது மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின்
சாரதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின்போது மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின்
சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கந்தளாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் பண்டார
தலைமையில் இன்று(15.07.2026) காலை பல்வேறு இடங்களில விசேட சுற்றிவளைப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசேட சோதனை நடவடிக்கை</h2><p> இந்த நிலையில் மணல் ஏற்றுவதற்கு வருகை தந்த 19 டிப்பர்
வாகனங்கள் பொலிஸாரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f2e5615-9f8e-4f17-a660-848d6d7334f6/26-6a5746eec6496.webp' /></p><p>இதன்போது
மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவரையும்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கந்தளாய் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:18:05+00:00</updated>
        </entry>
    </feed>
