<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-19T07:38:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-shooting-in-kalubowila-1784427521"></link>
            <id>https://tamilwin.com/article/police-shooting-in-kalubowila-1784427521</id>
            <summary type="text">புதிய இணைப்புபிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதன்போது கூர்மையான ஆயுத தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>

கூர்மையான ஆயுதங்களை ஏந்தியபடி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு சந்தேகநபர்கள், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இதன்பின்னர், சந்தேகநபர்கள் பிலியந்தலாவை நோக்கி தப்பிச்செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அதன்படி, பிலியந்தலாவ பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிள் சாரதி தனது கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.
</p><p>
இதன்போது பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சாரதியை குறிவைத்து சுட்டதில், அவரது இடுப்பில் குண்டு பாய்ந்து, கீழே விழுந்துள்ளார்.</p><p>

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பண்டாரகம, வீதியகொடவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இச்சம்பவம் குறித்து பிலியந்தல மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையங்கள் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, ​​சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரரை தாக்க முயன்றுள்ளார்.
</p><p>
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>

இவ்வாறு காயமடைந்த சந்தேக நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த மற்றொரு நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7393c176-d618-4699-b260-cfd5e2c2bb5d/26-6a5c3d676b45a.webp' /></p><p>
</p><p>சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-19T07:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போன குடும்பஸ்தர் 3 நாள்களின் பின் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-family-man-recovered-dead-after-three-days-1784445700"></link>
            <id>https://tamilwin.com/article/missing-family-man-recovered-dead-after-three-days-1784445700</id>
            <summary type="text">மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற
நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர்
சடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற
நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்படி நபர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில்
காணாமல்போயிருந்தார்.
</p><p>
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின்போது, அவரது வீட்டுக்கு அருகில் இருந்த
பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து அவர் நேற்று(18)o சனிக்கிழமை சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613d1e02-c7d3-43f9-a00e-572ea8491937/26-6a5c7cb4b098c.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் படல்கும்புரை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T07:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இளைஞர் பலி - மற்றுமொருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-death-injured-in-motorcycle-accident-1784443372"></link>
            <id>https://tamilwin.com/article/youth-death-injured-in-motorcycle-accident-1784443372</id>
            <summary type="text">குருநாகல் - நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாக பயணித்த இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்
மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p></p><h2>ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>குறித்த விபத்தில் பன்னலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e17aa140-1505-46b9-906d-dd37e753c696/26-6a5c750a364ff.webp' /></p><p>
</p><p>இந்த விபத்தின் போது மற்றைய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த
19 வயது இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T06:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-former-igp-c-t-wickramaratne-investigation-1784438049"></link>
            <id>https://tamilwin.com/article/death-former-igp-c-t-wickramaratne-investigation-1784438049</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா போன்ற விடயங்கள் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என&amp;nbsp;பொதும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா போன்ற விடயங்கள் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என&nbsp;பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன்,அவரது மெய்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98260112-8798-44c7-999c-c9b6bcee4de4/26-6a5c676f85fdd.webp' /></p><p>


அத்துடன் துப்பாக்கிரப்பிரயோகத்தின் மூலம் அவர் உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, அவர் உயிரிழந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள.</p><p>இந்த நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான முடிவினை கூறமுடியும் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/horona-motor-cycle-and-lorry-accident-1784438717"></link>
            <id>https://tamilwin.com/article/horona-motor-cycle-and-lorry-accident-1784438717</id>
            <summary type="text">ஹொரணை - மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிவேகமாக சென்ற மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை - மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
</p><p>
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>
உயிரிழந்தவர்கள் பன்னிப்பிட்டிய மற்றும் கிரிவத்துடுவவை சேர்ந்த, 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷா சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6aad00f-2cd8-444e-aca0-c5dd765f0b8b/26-6a5c659a08edb.webp' /></p><p>

ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>

ஹொரணையிலிருந்து அதிவேகமாக சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களும், கனன்வில வளைவில் திரும்ப முயன்றபோது, ​​கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறப்பாதைக்குள் விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தை தொடர்ந்து டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜி.எஸ்.பி. பிளஸ் விவகாரம் : பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை - முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gsp-plus-issue-ranil-s-advice-1784438457"></link>
            <id>https://tamilwin.com/article/gsp-plus-issue-ranil-s-advice-1784438457</id>
            <summary type="text">இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுகளை, பிரான்ஸுடன்
நடத்துவதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுகளை, பிரான்ஸுடன்
நடத்துவதில் பயனில்லை என்றும், அது குறித்து பிரஸ்ஸல்ஸ் நகருடனேயே பேச
வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>"ஜி.எஸ்.பி. பிரச்சினை குறித்து பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை. இது குறித்து
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலேயே பேச வேண்டும். அதேபோன்று இங்கிலாந்துடனும்
பேச்சு நடத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>மீண்டும் விண்ணப்பிக்கவுள்ள இலங்கை&nbsp;&nbsp;</h2><p> ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றும்
முறைமையின்படியே இங்கிலாந்தும் ஜி.எஸ்.பி. சலுகையை வழங்குகின்றது. எனவே,
பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்லாமல் பிரான்ஸுக்குச் செல்வதால் எவ்விதப் பலனும்
கிடைக்காது.&nbsp; இது முற்றிலும் பிரஸ்ஸல்ஸ் சார்ந்த ஒரு விடயமாகும்"&nbsp; என்று
குறிப்பிட்டுள்ளார். </p><p>இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கும் ஜி.எஸ்.பி.
பிளஸ் வரிச்சலுகை, கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஐரோப்பிய
ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb97b9a-57f6-4556-a23d-c14062578cd3/26-6a5c613347138.webp' /></p><p> </p><p>மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச
உடன்படிக்கைகளை இலங்கை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்
அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது.
</p><p>
முன்னதாக, 2010 ஆம் ஆண்டில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால்
நிறுத்தப்பட்ட இந்தச் சலுகை, பின்னர் 2017 இல் மீண்டும் வழங்கப்பட்டது.</p><p>இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம்
திகழ்கின்றது. 2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இருதரப்புக்கும் இடையிலான மொத்த
வர்த்தகம் 3.9 பில்லியன் யூரோக்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41078bb-ae77-4ac2-959a-0c51cc12d2de/26-6a5c613297635.webp' />&nbsp;&nbsp;</p><p>இதில் இலங்கையின் ஏற்றுமதியில்
பாதிக்கும் மேற்பட்டவை ஆடைத் துறையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளுக்கு அமைய, இலங்கை இந்தச்
சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தயாராகி வரும் பின்னணியில், பயங்கரவாதத்
தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை சர்வதேசத்
தரத்துக்கு ஏற்ப மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைத் தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் சிப்பாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-soldier-caught-with-ice-drugs-1784437241"></link>
            <id>https://tamilwin.com/article/former-soldier-caught-with-ice-drugs-1784437241</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருள் வைத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>சந்தேகநபர் போதைப்பொருள் வைத்துள்ளதாக நேற்று (18) கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d7034fd-ce07-427c-8213-6493c1ca63bf/26-6a5c5ba17bc13.webp' />&nbsp;</p><p>இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 120 கிராம் ஐஸ் போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு ஏற்பட்ட கடும் வாக்குவாதம்! மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-brutally-murdered-his-wife-1784435426"></link>
            <id>https://tamilwin.com/article/husband-brutally-murdered-his-wife-1784435426</id>
            <summary type="text">காலி , இக்கடுவை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி , இக்கடுவை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>கணவன் கைது</h2><p>நேற்று இரவு (18) மதுபோதையில் வீட்டுக்கு திரும்பிய கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இரவு உணவு தயாரிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b78da-3183-46d8-93e1-696f015b437c/26-6a5c538c738c0.webp' /></p><p>
</p><p>இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் பிள்ளைகளின் கண் முன்பாகவே மனைவியை சரமாரியாக
வெட்டியுள்ளார்.
</p><p>இதன் காரணமாக படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார், கொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T04:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை இளைஞர் விபத்தில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-accident-boy-death-investigation-1784433436"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-accident-boy-death-investigation-1784433436</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்,
இளைஞர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்,
இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

பருத்தித்துறை, தும்பளை, நெல்லண்டையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27)
என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்தபோது, சிட்டிவேரம் அம்மன் ஆலயத்துக்கு அருகில் சென்ற வேளையில்
திடீரென வண்டு ஒன்று அவரது கண்ணுக்குள் புகுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e4d82e-f3b9-4218-b046-836fef8dee26/26-6a5c4fbf87c31.webp' /></p><p> </p><p>இதனால் நிலைதடுமாறிய
அவர், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T04:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நிகழும் முக்கியஸ்தர்களின் மர்ம மரணங்கள்! விசாரணையை தீவிரப்படுத்தும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-dies-in-suspected-1784431969"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-dies-in-suspected-1784431969</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இது குறித்து
எதிர்க்கட்சியினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இது குறித்து
எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சரவைப்
பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>மர்ம மரணங்கள்&nbsp;</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>
"முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக
உள்ளது. இந்த விவகாரத்தை அரசு அலட்சியப்படுத்தவில்லை. முறையான விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன.</p><p> எனவே, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
என்றும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சியினர் அச்சப்படத்
தேவையில்லை. இச்சம்பவத்தை அரசியலாக்குவது முறையற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa7e8934-82dd-410c-a3ff-8c604430847e/26-6a5c4cd315c58.webp' /></p><p>
</p><p>
சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று
வரும் நிலையில், சாட்சியாளர்கள் உயிரிழப்பது பாரிய சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சிலர், தற்போது தேசிய
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஊடகச் சந்திப்புகளை நடத்தி
வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T04:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வரி செலுத்தாதோருக்கு இறைவரித்திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inland-revenue-department-issued-warning-taxes-1784431750"></link>
            <id>https://tamilwin.com/article/inland-revenue-department-issued-warning-taxes-1784431750</id>
            <summary type="text">இலங்கையில் வரி செலுத்த தவறுவோருக்கு இறைவரித்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும், அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வரி செலுத்த தவறுவோருக்கு இறைவரித்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும், அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p></p><h2>நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டம்</h2><p>இதற்கமைய, 2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டத்தின் கீழ், உரிய கால அவகாசத்திற்குள் இணங்காதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5e9ec2-c88e-43cb-9a56-037a55e365b6/26-6a5c46e3ead81.webp' /></p><p>எனவே பதிவு செய்யத்தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை குற்றங்களாக கருதப்படுகின்றன.</p><p>

இந்த நிலையில் வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்பட்டு குறித்த நாளிலிருந்து, வரி செலுத்துபவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த 30 நாட்களுக்குள் இணங்கத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சிறைத்தண்டனை அல்லது&nbsp;அபராதம் </h2><p>
நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையின் பின்னர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.</p><p>

இந்த சட்டங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை குறிவைக்கவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ஒத்துழைப்பு வழங்கும் குடிமக்களை இது பாதிக்காது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T03:40:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவை புகழ்ந்து பாராட்டும்: போதகர் ஜெரோம் பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pastor-jerome-praised-president-anura-1784430966"></link>
            <id>https://tamilwin.com/article/pastor-jerome-praised-president-anura-1784430966</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி நாட்டில் இல்லாதிருந்தால், இலங்கை இதைவிட மிகவும் பாரதூரமானதொரு நிலைக்குத் தள்ளப்படுவது உறுதியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி நாட்டில் இல்லாதிருந்தால், இலங்கை இதைவிட மிகவும் பாரதூரமானதொரு நிலைக்குத் தள்ளப்படுவது உறுதியாகியிருக்கும் என்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>
மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, தனது அடியார்களை விளித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். </p><p>
ஜனாதிபதியின் செயற்பாடுகளை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டுக் குறிப்பிட்ட போதகர், ஜனாதிபதி மிகவும் நேர்மையான முறையில் தனது கடமைகளை நிறைவேற்றி வருவதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9482a583-944c-4c66-984f-d88136ecc862/26-6a5c4177bfc82.webp' /></p><p> </p><p>
"உங்கள் ஜனாதிபதி மிக நேர்த்தியாக, நேர்கோட்டில் பந்தை எதிர்கொள்கிறார் (நேரடியாகச் செயலாற்றுகிறார்). அவரது பாணி உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் மிகவும் நேரடியான ஒரு நபர்" என புகழ்ந்து பாராட்டியுள்ளார்.</p><p>அரசியல் நிலவரங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமாயின், அரசியல்வாதிகளுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அவர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.</p><p>உலக அரசியலில் நிலவும் மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், சாதாரண மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியுமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்களை உதாரணத்திற்குக் காட்டி, இவ்வாறான அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்காமல் சாதாரண மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>தற்போதைய ஜனாதிபதியின் தலையீடு இல்லாதிருந்தால், நாட்டின் நிலைமை இதைவிடப் பல மடங்கு மோசமடைந்திருக்கக்கூடும் என்பதைத் தன்னால் உறுதியாகக் கூற முடியும் என போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T03:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேற்றிரவு பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-panadura-with-drugs-1784427359"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-panadura-with-drugs-1784427359</id>
            <summary type="text">பாணந்துறை பகுதியில் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் 18 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த பல தகவல்களை பொலிஸார் தற்போது வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை பகுதியில் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் 18 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த பல தகவல்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சந்தேகநபர் நேற்று இரவு (18) கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 18 கிலோகிராம் (716 கிராம்) ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவை கைப்பற்றப்பட்டிருந்தன.
</p><p>
பாணந்துறை, அலுபொமுல்லா பகுதியை சேர்ந்த 26 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள்&nbsp; விநியோகம் மற்றும் கடத்தல்</h2><p>

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, ​​இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ், இந்த போதைப்பொருள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் மற்றும் கடத்தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5c6508-b499-4664-8d38-baae162e8185/26-6a5c4022b4bfc.webp' /></p><p>

அதன்படி, சந்தேகநபர் இன்று (19) பாணந்துரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கமைய, மேலதிக விசாரணைக்காக 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் திக்பிட்டிகொட பகுதியில், 2 கிலோகிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று இரவு பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>குற்றப்பிரிவு விசாரணை</h2><p>
</p><p>
அதே நேரத்தில், சந்தேகநபரிடமிருந்து 5,000 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p> 
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், திக்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.</p><p>

சந்தேகநபர் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T03:10:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை..! அவதானமாக இருக்குமாறு பல மாவட்ட மக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-alert-issued-for-21-districts-in-srilanka-1784426523"></link>
            <id>https://tamilwin.com/article/heat-alert-issued-for-21-districts-in-srilanka-1784426523</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று பகல் (19) வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று பகல் (19) வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகரித்த வெப்பநிலை &nbsp; &nbsp;</h2><p>அதன்படி, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகரித்த&nbsp;வெப்பநிலை&nbsp;காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d773a2c-290c-44de-a3f2-923633054bbd/26-6a5c32184565b.webp' />&nbsp;</p><p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p>
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
</p><p>
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><h2>கடல் பிராந்தியங்களில் மழை</h2><p>
</p><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66cd310-be51-4b9b-a4fe-234c1131f375/26-6a5c3218e812a.webp' />&nbsp;</p><p>கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.</p><p> இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.</p><p> இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T02:11:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மேலும் பல மர்ம மரணங்கள் நிகழும்! பின்னணி குறித்து எச்சரித்துள்ள அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-deaths-to-be-continues-1784383388"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-deaths-to-be-continues-1784383388</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்காலத்தில் முக்கிய சாட்சியங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும் இடம்பெறக்கூடும் என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்காலத்தில் முக்கிய சாட்சியங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும் இடம்பெறக்கூடும் என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
 எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் தற்போது நீதிமன்ற பிணையில் இருப்பதாகவும், இவ்வாறு உயிரை மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><h2><b>உயிரை மாய்க்கும் சம்பவங்கள்</b></h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed11265d-e94f-45ed-8b06-93369726b166/26-6a5ba6fae62f4.webp' /></p><p>“கடந்த சில நாட்களில் பல உயிரை மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றன. அண்மையில் ஒரு நபர் உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><p> முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், தான் கார்ல்டன் இல்லத்தில் வைத்து எவ்வளவு இலஞ்சம் கொடுத்தேன் என்பது குறித்து அந்த நபரே தனது கைப்பட கடிதங்களை எழுதியிருந்தார்.</p><p> எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எவ்வளவு இலஞ்சம் கொடுத்தேன் என்பது குறித்தும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.</p><h3><b> 20 வருட சிறைத்தண்டனை</b></h3><p>இறுதியில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். தற்போது ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபரும் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab5c819-dad9-4488-bf97-05771666d3c5/26-6a5ba6fb99c1c.webp' /></p><p>இன்னும் எத்தனை பேருக்கு இவ்வாறான நிலை ஏற்படும் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிணையில் வெளியே இருப்பவர்கள், அவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் உள்ளன. </p><p>மகிந்தானந்த அளுத்கமகே ஒரு வழக்கிற்காக 20 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். முன்னாள் வர்த்தக அமைச்சர் 25 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். </p><p>சரண குணவர்தன 16 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவை ஒரு சில வழக்குகளின் தீர்ப்புகள் மட்டுமே, அவர்களுக்கு எதிராக இன்னமும் பல வழக்குகள் வரிசையாக உள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T02:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரணியில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-woman-dies-after-electrocuted-in-varani-1784425572"></link>
            <id>https://tamilwin.com/article/family-woman-dies-after-electrocuted-in-varani-1784425572</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை
மீட்க முற்பட்ட குடும்ப பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக
உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை
மீட்க முற்பட்ட குடும்ப பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.</p><p>

வரணி பகுதியைச் சேர்ந்த தினேஷ் நேசமலர் (வயது 42) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
</p><p>
ஒன்பது மாதக் குழந்தை உட்பட இரு பிள்ளைகளின் தாயான இவர், நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை&nbsp;</h2><p>

வரணிப் பகுதியிலுள்ள 12 அடி பாதையூடாக கூட்டுறவு நிறுவனம் ஒன்றுக்கு செல்லும் ‘3 பேஸ்’ மின்சார இணைப்பு, அப்பகுதி மக்களின் குடியிருப்புகளுக்கு
மேலாக செல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cd41cb-df79-44fe-96f2-99c4c0ed203f/26-6a5c2d61a8835.webp' /></p><p> </p><p>நேற்று, தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்
குஞ்சை மீட்க, இரும்புக் கம்பி ஒன்றின் உதவியுடன் மீட்க முயன்ற போது, கிணற்றுக்கு மேலாகச் சென்ற மின் இணைப்பில் மின்சாரம் தாக்கி தூக்கி
வீசப்பட்ட நிலையில் அவர் கிணற்றுக்குள் விழுந்து மயக்கமடைந்துள்ளார்.</p><p>இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட உறவினர்கள், 10 நிமிடங்களுக்குள் அவரை மீட்டு
வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T01:50:45+00:00</updated>
        </entry>
    </feed>
