<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-13T03:16:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522</id>
            <summary type="text">ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.</p><p></p><h2>குறைந்த போக்குவரத்து நெரிசல்</h2><p>
</p><p>இதேவேளை, பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24c3978-8a0f-484a-90e3-413422148338/26-6a5450ea7a9d1.webp' /></p><p>இதற்கிடையில், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த போக்குவரத்து நெரிசல் அளவுகளைப் பதிவு செய்துள்ளன.</p><p>பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் Numbeo நிறுவனம் இந்த குறியீட்டை தயாரித்துள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல் அளவிடல்</h2><p>பயண நேரம், நெரிசலால் வீணாகும் நேரம், எரிபொருள் திறனின்மை மற்றும் பயணத்துடன் தொடர்புடைய மதிப்பிடப்பட்ட CO₂ வெளியேற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் அளவிடப்படுகின்றது.</p><p>இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் விடுதலைப் புலிகளின் பெயரில் கடத்தல், கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன. </p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் போன சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p> 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.</p><p> </p><h2><b>

கடத்தல் மற்றும் காணாமல் போதல் </b></h2><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் பயன்படுத்திய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களே, இந்தக் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df0baa5-1626-4089-afa0-c5fbf85a63e9/26-6a543fbdd0eaa.webp' /></p><p>அரசினால் கைப்பற்றப்படும் வாகனங்களை அரசுடமையாக்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். </p><p>எனினும், அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
தற்போதைய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த காணாமல் போன விடயங்கள், கப்பம் பெறல் மற்றும் காணி அபகரிப்புகளை நோக்கமாகக் கொண்டே இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h3><b>

காணிகள் மற்றும் வீடுகள் </b></h3><p>கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக வணிக பெறுமதியைக் கொண்ட காணிகள் மற்றும் வீடுகள் பாரிய அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0799868-97b6-436c-9558-3bb9ed0529a2/26-6a543fbe81ee1.webp' /></p><p>அதற்காகவே அவற்றின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இந்தக் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா.. என்பது குறித்தும், அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-13T02:43:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த நாளில் மகனால் படுகொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111"></link>
            <id>https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111</id>
            <summary type="text">மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில் அவரை மகன் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
 

அக்குரஸ்ஸ, பரதூவ ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில் அவரை மகன் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
</p><p> 

அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே மகனின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். </p><p>

மதுப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த நபர் தனது தந்தையை கொலை செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

பிரேத பரிசோதனை</b></h2><p>வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0eeffa-89ca-4464-ba4f-b8808b6fc4bd/26-6a544f6c0fe15.webp' /></p><p>மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p>]]></content>
            <updated>2026-07-13T02:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும்
சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் விவகாரம்</h2><p>

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட
இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5314005c-7159-406a-bb4d-ec89b3a94a71/26-6a544be3d8f98.webp' /></p><p> துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை
விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மோதலுக்குப் பின்னர், சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில்
கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். </p><p>இதுவரை அங்கிருந்து
பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் 600 கைதிகளும்
விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>ஆரம்பக்கட்ட நட்டஈடு</h2><p> உயிரிழந்த
கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக
தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e13cf2a1-d1cb-49e4-b9bc-7b2120a49edf/26-6a544be4879da.webp' />&nbsp;</p><p> மேலதிகமாக, தலா 20 இலட்சம்
ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி
வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல்
காரணமாக ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, முன்னாள் மனித உரிமைகள்
ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்,</p><p>5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும். </p><p>அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம். </p><p>அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும். </p><h2>

</h2><p></p><h2>டெங்கு காய்ச்சல் பாதிப்பு</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான். </p><p>அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை. </p><p>இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது. </p><p>டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது.
இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38e4c9d-b1e7-43af-ab96-ef80785a0867/26-6a543e75eec5f.webp' /></p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர். நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர். </p><p>முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர். </p><p>அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது.
சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன. </p><p>அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள். </p><p>மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>உடற்பயிற்சிப் பிரிவு உடைக்கப்பட்டது</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர். </p><p>உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள். </p><p>என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59a98e2-0bdd-4629-be29-dcf3f1428761/26-6a543e769c726.webp' /></p><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று. </p><p>அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.
"சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர். </p><p> இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். </p><h2>

அதிகாரிகளை பாதுகாத்த கைதிகள்</h2><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p> எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது. </p><p>அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள். </p><p>எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது. அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது. </p><p>அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள். </p><p></p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர். </p><p>எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை.
இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T02:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் அதிரடியாக கைது - சிக்கிய போலி ஆவணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757</id>
            <summary type="text">சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&amp;nbsp; கைது செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்றபோது போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; &nbsp;</p><h2>போலியான முகவரி ஆதாரங்கள்</h2><p>இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57904980-7bff-41c6-9f7b-a2209cae76d7/26-6a5446acaee4a.webp' /></p><p>இவர்கள் தியாகராயநகர் பகுதியில் சிறிய நகைக்கடையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p>

இவர்கள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">4 பிரிவுகளில் வழக்குப்பதிவு&nbsp;</span></p><p>
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffca6b3c-7d3f-43fc-8243-d0c4313830c7/26-6a5446ad5ed0e.webp' />&nbsp;</p><p>
</p><p>
இந்த நிலையில், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>தமிழக சட்டமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த பலர் முறைகேடாக வாக்களித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், நேற்றும் இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T02:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக நாமலின் புதிய வியூகம் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716</id>
            <summary type="text">புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

“<b>புதிய அலை</b>” என்ற பெயரில் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
தென்னிலங்கை அரசியல்</b></h2><p>அத்துடன், டி.வி. சானக்க, சானக்க மாதுகொட, அனுராத ஜயரத்ன மற்றும் ரோகித அபேகுணவர்தன உள்ளிட்ட நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் இதில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a18a9b91-4bdb-42a0-bf87-509971d73cc7/26-6a54413ac9a45.webp' /></p><p>எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்களை ஒன்றிணைத்து பரந்ததொரு முன்னணியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p>
அதற்கமைய, பிரதேச மட்டத்தில் உள்ள துடிப்பான இளம் தலைவர்களை முன்னிலைக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
கூட்டு எதிர்க்கட்சி</b></h3><p>கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டங்களில் முன்னிலை வகித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அனுராத ஜயரத்ன உள்ளிட்ட சிலர் அதன் செயற்பாடுகளிலிருந்து விலகவுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d4ebb5-41a6-4ded-9f2f-ea2ddaac490c/26-6a54413b7c3d7.webp' /></p><p>அதில் இருந்து விலகி, இந்தப் புதிய குழுவுடன் இணையவுள்ளதாகவும், திலும் அமுனுகம உள்ளிட்ட சிலரும் எதிர்காலத்தில் இக்குழுவுடன் இணையவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-13T01:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகிறதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200"></link>
            <id>https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடி்ருந்த போதிலும் அவர்கள் எவரும் தற்போதைய ஜனாதிபதியைப் போல் நீதியரசர் பதவி வெற்றிடங்களை பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் தலா 4 நீதியரசர் பதவிகள் வீதம் பற்றாக்குறை நிலவுகிறது. என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbc3da0-9353-4762-a09d-bd1fdf6d6af8/26-6a543bb22f77f.webp' /></p><p>
இதனால் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்குரிய பதவி உயர்வுகளைப் பெற்றுச் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த நாட்களில் இன்னார்தான் சிறைக்குச் செல்வார், பால்சோறு சாப்பிடுவதற்குத் தயாராகுங்கள் என்று ஜனாதிபதி பகிரங்க மேடைகளில் கூறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>கீழ் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு லஞ்சமாக வழங்குவதற்காகவே இந்த உயர் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளனவா என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாட்டின் இத்தகைய நிலைமையைக் காணும்போது தனக்கு கடுமையான அருவருப்பு ஏற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T01:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-for-all-students-1783901845"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-for-all-students-1783901845</id>
            <summary type="text">டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருத்தமான ஆடைகள்&nbsp;</h2><p>
</p><p>அதன்படி, பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4277108f-ef16-4ede-b830-77edadfd33b2/26-6a542e9748d4f.webp' /></p><p>
வழக்கமான பாடசாலை சீருடையுடன் சேர்த்து, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய மாணவர்களை அனுமதிக்குமாறு பள்ளி அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தர நிர்ணயங்களுக்குட்பட்ட நுளம்பு விரட்டிகளை பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>பாடசாலை மாணவர்களை டெங்கு நுளம்புக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த அவசர நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை அதிகாரிகளை கதிகலங்க வைத்திருக்கும் சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட பை! ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-bloodshed-exposes-the-cracks-inside-1783902703"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-bloodshed-exposes-the-cracks-inside-1783902703</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு சோதனையின் போது கிடைத்த ஒரு பை (Bag) பல மர்மமான சம்பவங்களின் உள்ளார்ந்த கடும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு சோதனையின் போது கிடைத்த ஒரு பை (Bag) பல மர்மமான சம்பவங்களின் உள்ளார்ந்த கடும் கொடூரமான தகவல்கள் வெளிவரக் கூடும் என நம்பப்படுகிறது.
</p><p>இந்த பையை சோதனையிட்டுப் பார்க்கும் போதுதான், கடந்த சில நாட்களாக காண்பிக்கப்பட்ட, கத்திகள் மற்றும் இரும்பு ஆயுதங்கள் அடங்கிய ஒரு பையே கிடைத்துள்ளது. </p><p>இந்தப் பை எவ்வாறு இந்த இடத்திற்கு வந்தது என்பது குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. </p><h2>

</h2><p></p><h2>ஆயுதங்கள் எப்படி சிறைக்குள் வந்தது</h2><p>இப்போது இவை அனைத்தும் நீதிமன்ற வழக்குப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்தக் கத்திகள், இரும்பு ஆயுதங்கள் மற்றும் மன்னா கத்திகள் எவ்வாறு இங்கு வந்தன என்பது ஒரு பெரிய கேள்வியாகும். </p><p>இந்த பை எவ்வாறு சிறைச்சாலைக்குள் வைக்கப்பட்டது? முதலில் நினைத்தது இவை வெவ்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை என்றுதான். </p><p>இல்லை, இவை அனைத்தும் ஒரே பையில்தான் இருந்துள்ளன. அப்படியென்றால் இதன் நோக்கம் என்ன? சிறை பொலிஸ் அதிகாரிகள் மிகக் கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d52b62-7551-45b1-a812-a0bba03a9ef0/26-6a5431f143d96.webp' /></p><p>அவர்களின் ரகசிய உறுப்புகள் சிதைக்கப்பட்டு, வெட்டப்பட்டுள்ளன. எனவே, இந்த கலவரம் ம திட்டமிடப்பட்டிருந்தது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. </p><p>இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில்தான் செய்யப்பட்டுள்ளது.
இதிலிருந்து இப்போது தெளிவாகத் தெரியும் ஒரு விடயம் என்னவென்றால், சிறைச்சாலையில் இருந்த ஜெயிலர்களுக்கோ அல்லது காவலர்களுக்கோ எந்தவொரு காயமோ அல்லது தாக்குதலோ நடத்தப்படவில்லை. </p><p>அங்கு இருந்தது ஒரு சிலர்தான். இதில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டது சிறை பொலிஸாராகும். அவர்களை மிகக் கொடூரமாகவும் அநாகரிகமாகவும் அடித்துக் கொலை செய்ய இந்த சிறைக்கைதிகளுக்கு மாத்திரம் தான் தேவை இருந்ததா என்றொரு கேள்வி எழுகிறது. </p><p>ஏனெனில், இவ்வாறானதொரு ஆயுதப் பை எவ்வாறு அங்கு இருந்தது? சிறைச்சாலை நிர்வாக அதிகாரிகளின் அனுமதியின்றி இது எவ்வாறு சாத்தியமாகும்? இது பின்னர் கொண்டுவரப்பட்ட ஒன்றா? அல்லது முன்பே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஒன்றா?
</p><h2>சிசிடிவி காணொளிகளுக்கு என்ன நடந்தது</h2><p>கட்டுவெல்லேகம சுரேஷின் குழுவில் சுமார் 15 பேர் வரை இருக்கிறார்கள். அந்த குழுவினர் இதைத் தயார் செய்து வைத்திருந்தார்களா? ஏனெனில் இவை சாதாரண சிறிய கத்திகள் அல்ல, பெரிய மீன் வெட்டும் கத்திகள், அதாவது 'நீர்கொழும்பு டைப்' கத்திகள். </p><p>
தற்போது வரை எந்தவொரு சிசிடிவி (CCTV) காட்சிகளையும் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சாத்தியமில்லாமல் போயுள்ளது. எந்தவொரு தகவலையும் பெற வழியில்லை. அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன, அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.</p><p>இதன் காரணமாக, இனிவரும் நாட்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில், கொழும்பு கணினிப் பிரிவுக்கோ அல்லது கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பிரிவுக்கோ (UCSC) அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்பி இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33b916de-a64b-4d04-a529-6067702c5b51/26-6a5431f1ec597.webp' /></p><p>ஏனெனில், இந்த சம்பவத்தின் புகைப்படங்களையோ அல்லது தகவல்களையோ பெற வேறு வழியில்லை. தற்போது இருப்பது இந்த சிறைச்சாலை அதிகாரிகளின் வாக்குமூலம் மட்டும்தான். </p><p>அதையும் 100 வீதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாக்குமூலமாக எடுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இந்த நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள். இந்த சம்பவத்தின் பின்னணியில் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரும் இருக்கிறார்கள்.</p><h2>

இந்த கதையின் பின்னணி</h2><p>எனவே, ஒட்டுமொத்தமாக இந்த கதையின் பின்னணியில் உள்ள விடயங்களை ஆராய்ந்து பார்க்கும்போது.இது மிக மோசமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தன்மை தெளிவாகத் தெரிகிறது. </p><p>இப்போது ஊடகங்களில் 200 அல்லது 300 பேருக்குக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவை அப்பட்டமான பொய்கள். </p><p>எந்தவொரு கொலைக் குற்றச்சாட்டையும் சுமத்துமளவிற்கு எவ்வித சாட்சியங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இன்னும் கண்டறிய முடியாமல் போயுள்ளது.
</p><p></p><p>அதனால், சிறைக் கைதிகளிடம் இருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்குக் கூட இன்னும் ஆயத்தங்கள் இல்லை. ஏனெனில், நினைத்த மாத்திரத்தில் அதனைச் செய்ய முடியாது. </p><p>அதற்கு நீதிமன்ற உத்தரவொன்றின் மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இந்த 200 பேருக்குக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது என்பது அப்பட்டமான பொய்யான கதையாகும்.</p><p> இது ஊடகங்களால் உருவாக்கப்படும் ஒரு செய்தியே தவிர, அப்படியான எந்தவொரு தயார்படுத்தலும் இன்னும் இல்லை என்ற விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T00:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brutal-weapons-discovered-inside-negombo-prison-1783897803"></link>
            <id>https://tamilwin.com/article/brutal-weapons-discovered-inside-negombo-prison-1783897803</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற
பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற
பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட
விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்
இரும்புக் கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக்
கம்பிகள் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>கொடூர மோதல் சம்பவம்</h2><p>
</p><p>
முதற்கட்ட விசாரணைகளில், கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின்
சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள கூர்மையான ஆயுதங்களைக்
கையாண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
அத்துடன், சமையலறையிலிருந்த தேங்காய்களை அதிகாரிகள் மீது வீசித் தாக்குதல்
நடத்தியுள்ளமையும் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4270b717-3d49-4516-bccc-c214c3cb3d7c/26-6a542099cef38.webp' /></p><p>
</p><p>
இந்தக் கொடூர மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள்
என மொத்தம் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகள்
பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குத் தொடர்ச்சியாக
மாற்றப்பட்டு வருகின்றனர்.
</p><p>
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:11:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் தாண்டவமாடும் டெங்கு - 175 ஆக உயர்ந்த அபாய வலயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-outbreak-in-the-country-175-high-risk-zones-1783897259"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-outbreak-in-the-country-175-high-risk-zones-1783897259</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக
அதிகரித்து வருவதால் இன்று(13.07.2026) முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி
அபாய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக
அதிகரித்து வருவதால் இன்று(13.07.2026) முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி
அபாய வலயங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
முன்னெடுக்கப்படவுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>

'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>அதி அபாய வலயங்கள்</h2><p>

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை தற்போது 175
ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed18e92-7de4-4a02-8b80-cd3b57e68162/26-6a541dd8746d8.webp' /></p><p>

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தின் முதல் 10 நாள்களில் மட்டும் 11 ஆயிரத்து 764 நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர். (கடந்த ஜூன் மாதம் முழுவதிலும் 21 ஆயிரத்து 538 பேர்
பதிவாகியிருந்தனர்).</p><p></p><h2>47 உயிரிழப்புகள் பதிவு</h2><p>
இந்த வருடத்தில் இதுவரை 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் (ஒரு இலட்சத்து 86
ஆயிரத்து 101 பேர்) பதிவாகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8efd86b8-f1c7-4f50-becb-7bbcd54ae06e/26-6a541dd7af668.webp' /></p><p>தற்போது நிலவும் பாதிப்பு விகிதம்,
மீண்டும் அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கின்றது என்று சுகாதாரப் பிரிவினர்
தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும்,
நுளம்பு பெருக்கத்தை ஒழிப்பதன் மூலமும் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த
ஒத்துழைக்குமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சஜித் அணியின் உறுப்பினர்.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/repeater-gun-stashed-home-member-sajith-team-1783898253"></link>
            <id>https://tamilwin.com/article/repeater-gun-stashed-home-member-sajith-team-1783898253</id>
            <summary type="text">சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச
சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச
சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி
மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>
</p><p>
நேற்று பத்தேகம, தித்தேலியாவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த
வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd0774b9-1733-4708-a370-de0d3d41153d/26-6a54234b25203.webp' /></p><p>

நீண்டகாலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச்
சோதனையின் போது, சந்தேகநபரிடம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத்
தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T23:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரோயினுடன் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் - சுற்றிவளைத்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-student-caught-with-heroin-arrested-1783896721"></link>
            <id>https://tamilwin.com/article/university-student-caught-with-heroin-arrested-1783896721</id>
            <summary type="text">கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த
குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (12.07.2026) பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த
குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (12.07.2026) பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே, மேற்படி
மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்</h2><p> </p><p>அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய
நபராவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541123a2-1bf9-4925-9b93-01b1ae98f68a/26-6a541b2cb2a29.webp' /></p><p>இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது
முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T23:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல் எதிரொலி: கைதிகளின் வழக்கு இனி காணொளியில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-prisoners-case-now-on-video-1783895501"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-prisoners-case-now-on-video-1783895501</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பல்வேறு
சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளிக் காட்சி
தொழில்நுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பல்வேறு
சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளிக் காட்சி
தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கச் சிறைச்சாலைகள் திணைக்களம்
தீர்மானித்துள்ளது.</p><p>

இந்தப் புதிய நடைமுறை இன்று (13.07.2026) முதல் நடைமுறைக்கு வருகின்றது என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் ஆணையாளர் ஏ.சி.
கஜநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து,
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒரு குழுவினர் நாட்டின் ஏனைய
சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளனர். </p><p>இவ்வாறு
மாற்றப்பட்ட கைதிகளை, அவர்களது வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் அந்தந்த
நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன என்று
திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345c5fbf-5773-4eb2-991f-c17b99877e56/26-6a54178062e79.webp' /></p><p>இதனைத் தவிர்க்கும் நோக்கிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடரும்
பொருட்டும், காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகளை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நவீன முறையானது, கைதிகளைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதில் ஏற்படும்
சிரமங்களையும், பாதுகாப்புக் கவலைகளையும் குறைப்பதற்கு உதவும் என்று
திணைக்களம் நம்புகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T23:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டையில் பணத் தகராறால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-member-hacked-to-death-over-money-dispute-1783894837"></link>
            <id>https://tamilwin.com/article/family-member-hacked-to-death-over-money-dispute-1783894837</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (11.07.2026) இடம்பெற்ற
மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை
செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (11.07.2026) இடம்பெற்ற
மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்தச்
சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பணக் கொடுக்கல் - வாங்கல் விவகாரம்</h2><p>
</p><p>
பணக் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறே இந்தக்
கொலைக்குக் காரணமாக அமைந்தது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற போது, உயிரிழந்தவரும் கொலையைச் செய்தார் எனச்
சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அயல்வீட்டு இளைஞரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985fb57a-0aa1-4c89-a00f-7c9b77505168/26-6a54147214eab.webp' /></p><p>

இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூரிய ஆயுதத்தால்
தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.</p><p>

கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரான இளைஞர் அந்தப் பகுதியை விட்டுத்
தப்பியோடியுள்ளார்.</p><p>

இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது அவசியம் - மொட்டுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/necessary-to-bring-motion-against-president-1783893995"></link>
            <id>https://tamilwin.com/article/necessary-to-bring-motion-against-president-1783893995</id>
            <summary type="text">அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும்
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி,
நிறைவேற்றுத்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும்
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி,
நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் 'இலஞ்சம்' அல்லது
'பரிசு' போன்றதே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புதிய அரசமைப்பு</h2><p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><p>அரசு புதிய அரசமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகள்
கடந்தும், அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுகளைக்கூட முன்னெடுக்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fdc6d65-1800-44fc-84ec-1d99667339e4/26-6a5411656d3b0.webp' /></p><p>தங்களுக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காகவே நீதித்துறையினரின் பதவிக்காலத்தை
நீடிக்க அரசு முற்படுகின்றது.
</p><p>
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது
புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் ஊடாகவே அமைய வேண்டும். மாறாக, தற்போது
பணியிலுள்ளவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது முறையற்றது. </p><p>இந்த முயற்சிக்கு
எதிராக நீதிமன்ற சமூகம் மற்றும் நீதிபதிகள் சங்கங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு
வரவேற்கத்தக்கது.</p><p></p><h2>குற்றப்பிரேரணை</h2><p>
</p><p>
நீதித்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியே
பொறுப்புக்கூற வேண்டும். </p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு
நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் நீதித்துறையை
நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டு
வருவது அத்தியாவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd6e34d-5de2-407b-ae6a-0f4bb479d4e5/26-6a5411661b082.webp' /></p><p> நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் தார்மீகப் பொறுப்பேற்பதாகக்
கூறும் நீதி அமைச்சர், தனது பதவியை பதவி விலகல் செய்து சுயாதீன விசாரணைகளுக்கு
ஒத்துழைக்க வேண்டும்.</p><p>அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை
முன்னெடுப்பது சிறந்தது என கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு போதைப்பொருள்களை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-for-attempt-large-quantity-of-drugs-1783893251"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-for-attempt-large-quantity-of-drugs-1783893251</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெருமளவு போதைப்பொருள்களைக் கடத்த
முயன்ற 36 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம்(11.07.2026) கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெருமளவு போதைப்பொருள்களைக் கடத்த
முயன்ற 36 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம்(11.07.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு
அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, இந்தச் சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>போதைப்பொருளுடன் கைதானப் பெண்</h2><p>
</p><p>
மேற்படி சந்தேகநபர் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின்
விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95a2992-c1bf-4c37-b3a0-22751335374c/26-6a540e286b958.webp' /></p><p>கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருள்,
538 கிராம் ஹெரோயின் என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p> சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்
பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளையில் காட்டு யானை தாக்தி பெண் ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-attack-a-lady-death-1783892736"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-attack-a-lady-death-1783892736</id>
            <summary type="text">மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை
தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம்(11....</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை
தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று முன்தினம்(11.07.2026) இரவு மேற்படி பெண், தனது வீட்டின் அருகிலுள்ள மற்றுமொரு
வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதல்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த பெண்</h2><p>

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த அவர், உடனடியாக லக்கல
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர்
உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a625725e-cb6e-4564-a4ed-dd76777323c7/26-6a540bc30c82f.webp' /></p><p>கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை அச்சுறுத்தக் கூடாது: அமெரிக்க தூதுவர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-ambassador-ships-not-threatened-in-hormuz-1783885997"></link>
            <id>https://tamilwin.com/article/us-ambassador-ships-not-threatened-in-hormuz-1783885997</id>
            <summary type="text">ஈரானுடனான அமெரிக்காவின் தற்காலிக ஒப்பந்தம் &quot;எப்போதும் செயல்பாட்டின்
அடிப்படையிலானது&quot; என நேட்டோவிற்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.மேலும் ஹோர்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான அமெரிக்காவின் தற்காலிக ஒப்பந்தம் "எப்போதும் செயல்பாட்டின்
அடிப்படையிலானது" என நேட்டோவிற்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களைத் தெஹ்ரான்
"அச்சுறுத்தக் கூடாது" என்பது அதன் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானுடனான அமெரிக்க ஒப்பந்தம்</h2><p>அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய மெத்தியூ விட்டேக்கர், </p><p>ஜனாதிபதி ட்ரம்ப் "ஈரானுடன்
ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறார்" என்று கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43562d6-e834-4e75-9cdf-5567dda7426e/26-6a53f28fc2c00.webp' /></p><p>அதே வேளையில், சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களையும் அவர்
பாதுகாத்துப் பேசினார்.
</p><p>தற்போது, ஜனாதிபதி ட்ரம்ப் கூறியது போல் இந்த நாடு ஒரு சில விசித்திரமான
மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. </p><p>இறுதியில் அமெரிக்கா இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதை அவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டேக்கர் கூறினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு நோயின் வீரியம் அதிகரிப்பு; இனியும் வேடிக்கை பார்க்கப்போகிறீர்களா - சமல் சஞ்சீவ சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-surges-samal-sanjeeva-issues-warning-1783884292"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-surges-samal-sanjeeva-issues-warning-1783884292</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக்
கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக
முன்னெடுக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக்
கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக
முன்னெடுக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான
மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர்
சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமானது குதிரை ஓடிய பின்னர்
லாயத்தைப் பூட்டுகின்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>டெங்கு நோயாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>கடந்த 30 வருடங்களாக
நம் நாட்டு சுகாதாரக் கட்டமைப்பானது வருடாந்தம் ஏற்படுகின்ற டெங்கு
நோயாளர்களின் உச்சக்கட்ட அதிகரிப்பை முறையாகக் கட்டுப்படுத்துவதற்குத்
தவறியுள்ளது.</p><p> உலக நாடுகள் பயன்படுத்தும் பொதுச் சுகாதார அறிவியல் மற்றும் நவீன
தொழில்நுட்பம் சார்ந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நாம் செயற்படுத்த
வேண்டும் என முன்கூட்டியே எச்சரித்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a09eec70-51b3-4630-95e3-c1abfb13a116/26-6a53eee96c8ad.webp' /></p><p> எனினும், தொழில்நுட்பங்கள்
தேவையில்லை என ஒரு வாரத்துக்கு முன் கூறிய சுகாதார அமைச்சர், தற்போது நவீன
தொழில்நுட்ப முறைகளை நாட்டுக்குள் கொண்டு வரப் போவதாகக் கூறி தனது
நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
</p><p>
இந்த அலட்சியத்தின் பயங்கரமான விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து
வருகின்றது. மருத்துவமனைகளில் ஒரு கட்டிலில் 4 அல்லது 5 நோயாளர்கள் வரை இருக்க
வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன், பலர் தரையிலேயே தங்கியுள்ளனர்.</p><p>
</p><p>
சேலைன் போத்தல்களைத் தொங்கவிடுவதற்கு உரிய கம்பிகள் கூட இல்லாததால்,
சுவர்களில் ஆணிகளை அடித்து சேலைன் செலுத்துகின்ற நிலைமை காணப்படுகின்றது.</p><p></p><h2>மருந்துத் தட்டுப்பாடு மற்றும் ஊழியர் பற்றாக்குறை</h2><p> </p><p>சில
மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளைக்கூட செய்துகொள்ள முடியாமல் மக்கள்
வெளியிலுள்ள ஆய்வகங்களில் 1200 முதல் 2000 ரூபா வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
</p><p>மருந்துத் தட்டுப்பாடு மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாகப் பெருமளவான
சுகாதார ஊழியர்களும், பயிற்சி பெறும் செவிலியர்களும் மருத்துவ மாணவர்களும்கூட
டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4a6fccf-1768-4a37-a73c-de6697996674/26-6a53eeeac3e71.webp' /></p><p>

தற்போது உத்தியோகபூர்வமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தையும்,
மரணங்கள் 50 ஐயும் நெருங்கியுள்ளன. எனினும், அறிக்கை செய்யப்படாத நோயாளர்களின்
எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்தால், இந்த ஒட்டுமொத்தப் பாதிப்பு அதிகாரபூர்வ
எண்ணிக்கையை விட மேலும் 1.5 மடங்கு அதிகமாக இருக்கும்.</p><p>

தற்போதைய சூழ்நிலையானது சாதாரண நிலையைத் தாண்டிச் சென்றுள்ளதால், அரசு
உடனடியாகத் தலையிட்டு இதனை மேலாண்மை செய்ய வேண்டும்.</p><p> </p><p>வெறும் சுற்றறிக்கைகளை
வெளியிட்டு, புத்தகத்திலுள்ள பழைய வழிமுறைகளின்படி இனி டெங்கு நோயைக்
கட்டுப்படுத்த முடியாது.

இந்த விடயம் குறித்து முழுமையான புரிதலைக் கொண்டுள்ள இலங்கை மருத்துவ சங்கம்
மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடன் சுகாதார அமைச்சு முறையான
கலந்துரையாடல்களை நடத்தவில்லை.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை</h2><p>
</p><p>
இன்று கொழும்பு, மகரகம, தெஹிவளை, கல்கிசை, காலி மற்றும் போபே பொத்தல உள்ளிட்ட
முக்கிய பல உள்ளூராட்சி எல்லைகளுக்குள், குறிப்பாகக் கராப்பிட்டிய மருத்துவமனை
உள்ளிட்ட மருத்துவ வளாகங்களைச் சுற்றியே பெருமளவில் குப்பைகள் குவிந்து
கிடக்கின்றன. </p><p>அத்துடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கட்டுமானப்
பகுதிகளிலும் கொசுக்கள் பெருகும் இடங்கள் தாராளமாகக் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb4d6ab-0499-44e3-bac9-b97e20f9b188/26-6a53eeea1f071.webp' /></p><p>
இதன் காரணமாக, டெங்கு ஆபத்து அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள
வலயங்களிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி
நிறுவனங்களை ஆகக்குறைந்தது இரண்டு வார காலத்துக்காவது மூடிவிட்டு, இந்தத்
தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை முறையாகச் செயற்படுத்த வேண்டும்.
</p><p>
ஓர் அப்பாவிப் பிள்ளையின் உயிரிழப்பு அந்தந்தக் குடும்பங்களை மாத்திரமன்றி,
நாட்டின் மனிதவளத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். </p><p>எனவே, இந்த
நிலைமையைத் தட்டையாக எடுத்துக்கொண்டு, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்ததைப்
போல ஏதோ ஒன்று நடக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றோம்
என்றால், நமக்குச் சுகாதார அமைச்சர் என்று ஒருவர் தேவையற்றதாகும்&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-12T22:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செனகல் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senegal-football-team-head-coach-sacked-1783882763"></link>
            <id>https://tamilwin.com/article/senegal-football-team-head-coach-sacked-1783882763</id>
            <summary type="text">&amp;nbsp;உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் செனகல் தேசிய அணி மிக மோசமாகச் செயல்பட்டு
நாக்-அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, அணியின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் செனகல் தேசிய அணி மிக மோசமாகச் செயல்பட்டு
நாக்-அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, அணியின் தலைமைப்
பயிற்சியாளர் பாப் தியாவ் சனிக்கிழமை பதவியிலிருந்து அதிரடியாக
நீக்கப்பட்டுள்ளார்.
</p><p>

கடந்த 19 மாதங்களாக இப்பதவியில் நீடித்து வந்த 45 வயதான பாப் தியாவ், உலகக்
கிண்ணத்தில் செனகல் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு செல்வார் என்று பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.</p><p></p><h2>கால்பந்து இறுதிப்போட்டி</h2><p>
</p><p>

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான கால்பந்து

இறுதிப்போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி செனகல் சாம்பியன் பட்டம் வென்றதால்,
நடப்பு உலகக் கிண்ணத்தில் அந்த அணி ஒரு முக்கிய சவாலாக விளங்கும் என
எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால், லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் நோர்வே
அணிகளிடம் செனகல் அடுத்தடுத்து தோற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43953884-ee09-4bab-9881-9d39a11756b3/26-6a53e8e7c270b.webp' /></p><p>


அதைத்தொடர்ந்து நடைபெற்ற 32 அணிகளுக்கான நாக்-அவுட் சுற்றில், பெல்ஜியம்
அணிக்கு எதிராக ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள் வரை 2-0 என செனகல் முன்னிலையில்
இருந்தது.
</p><p>

எனினும், கடைசி நேரத்தில் சொதப்பியதால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்று,
இறுதியில் 3-2 என்ற கணக்கில் செனகல் பரிதாபமாகத் தோற்று தொடரை விட்டு
வெளியேறியது.</p><p></p><h2>நடுவர் பெனால்டி&nbsp;</h2><p>
</p><p>

இந்தத் தோல்விகளே பயிற்சியாளர் நீக்கத்திற்குக் முதன்மைக் காரணமாகக்
கூறப்படும் வேளையில், தியாவ் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கான 5 போட்டிகள்
தடை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a197a4f0-233b-488c-a9dc-b115863a7eee/26-6a53e8e872516.webp' /></p><p>


கடந்த 2025 ஏஎஃப்சிஓஎன் இறுதிப்போட்டியின் போது மொராக்கோவுக்கு நடுவர்
பெனால்டி வழங்கியதை எதிர்த்து, இவர் தனது வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறச்
செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><p>


இதற்கிடையே, செனகலின் டாக்கார் நகரில் பிறந்து, பிரான்ஸ் நாட்டுக்காக உலகக்
கிண்ணம் வென்று தந்த புகழ்பெற்ற முன்னாள் வீரர் பேட்ரிக் வியேரா செனகல்
அணியின் அடுத்த புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக
பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் அமீரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954"></link>
            <id>https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இரங்கல் செய்தி&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><h2>இரங்கல் செய்தி&nbsp;&nbsp;</h2><p>

தனது 'X' தளம் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில், மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கட்டாரிற்கு ஆற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் சேவையையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாக அவர் கூறினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, Father Emir of Qatar.<br><br>His visionary leadership and service to Qatar will be remembered.<br><br>On behalf of the Government and people of Sri Lanka, I extend heartfelt condolences to HH Sheikh Tamim bin…</p>&mdash; Anura Kumara Dissanayake (@anuradisanayake) <a href="https://x.com/anuradisanayake/status/2076331689014710763?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக, ஜனாதிபதி, கட்டாரின் தற்போதைய அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டாரில் மாற்றத்தை ஏற்படுத்திய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று (12) காலமானார்.
</p><p>
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கத்தார் நாட்டின் மிக உயர்ந்த அரச நிறுவனமான எமிரி திவான், நாட்டில் நான்கு நாட்கள் தேசிய துக்க காலத்தை அறிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கூரையில் கதறிய இளம்பெண்ணின் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&amp;nbsp;போராட்டத்தின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&nbsp;</p><p>போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இருந்த இளம் பெண் தொடர்பான பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.&nbsp;</p><p>குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p> சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார்.&nbsp;</p><p>இருப்பினும் அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் சில பின்னணிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_F3wv6u1dlQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:19:14+00:00</updated>
        </entry>
    </feed>
