<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T22:35:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாதம் என ரஷ்யா கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-attack-the-sea-azov-russia-accuses-1784068124"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-attack-the-sea-azov-russia-accuses-1784068124</id>
            <summary type="text">ரஷ்யாவின் தானிய ஏற்றுமதியில் கால் பகுதிக்கும் மேல் கையாளும் முக்கிய
வழித்தடமான அசோவ் கடலில், உக்ரைன் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி
வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் தானிய ஏற்றுமதியில் கால் பகுதிக்கும் மேல் கையாளும் முக்கிய
வழித்தடமான அசோவ் கடலில், உக்ரைன் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி
வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
உக்ரைனின் ட்ரோன் படைகள் ஒரே இரவில் 5 எண்ணெய் டாங்கர்கள் மற்றும் 5 சரக்குக்
கப்பல்கள் உட்பட 11 ரஷ்ய கப்பல்களைத் தாக்கியுள்ளதாக உக்ரைன் தரப்பு
தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் அசோவ் கடலில் உக்ரைனால்
தாக்கப்பட்ட ரஷ்ய கப்பல்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>உக்ரைனின் நோக்கம்&nbsp;</h2><p>
</p><p>
இந்த தொடர் தாக்குதல்களால் அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள ரஷ்ய வெளியுறவு
அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இது கடற்கொள்ளையர்களை விடவும் மோசமான, தூய்மையான
பயங்கரவாதம் என்று சாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8321ec22-d906-4008-9e3f-7c0c3234eee9/26-6a56b81e12287.webp' /></p><p>

சேதத்தை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்துவதே உக்ரைனின் நோக்கம் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
</p><p>
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள உக்ரைன் இராணுவம், தாங்கள் ரஷ்யாவின்
போர் திறனை வலுப்படுத்தும் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும்,
பொதுமக்கள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தும்
தாக்குதல்களை திசைதிருப்பவே இத்தகைய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முன்வைப்பதாகவும்
தெரிவித்துள்ளது.</p><p>
இதற்கிடையில், இந்த மோதல் காரணமாக அசோவ் கடல் வழியாக மேற்கொள்ளப்படும் தானிய
ஏற்றுமதியை கருங்கடல் (Black Sea) அல்லது பால்டிக் கடல் (Baltic Sea)
துறைமுகங்கள் வழியாக மாற்று வழித்தடத்தில் கொண்டு செல்ல ரஷ்யாவின் விவசாய
அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
தற்காலிக போக்குவரத்து சிக்கல்கள் இருந்தாலும், வெளிநாட்டு கூட்டாளிகளுக்கான
தானிய ஏற்றுமதி கடமைகளை ரஷ்யா முழுமையாக நிறைவேற்றும் என்று ரஷ்ய தானிய
ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:28:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதனை அளவிலான எல் நினோ: கிழக்கு ஆப்பிரிக்கா - ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ள அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-ni-o-risk-catastrophic-floods-east-africa-asia-1784067408"></link>
            <id>https://tamilwin.com/article/el-ni-o-risk-catastrophic-floods-east-africa-asia-1784067408</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக வலுவடைந்து வரும் &#039;எல் நினோ&#039; காலநிலை மாற்றம்
காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் உள்ள ஏழை நாடுகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக வலுவடைந்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம்
காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் உள்ள ஏழை நாடுகளில்
கடுமையான வெள்ளம், பஞ்சம் மற்றும் நோய்ப் பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதாக
சர்வதேச மீட்புக் குழு (IRC) எச்சரித்துள்ளது.</p><p>

ஏற்கனவே வறட்சி, உள்நாட்டுப் போர்கள் மற்றும் நிதி நெருக்கடியால் தவித்து
வரும் நாடுகளை இந்த இயற்கைச் சீற்றம் மேலும் நிலைகுலையச் செய்யும் என்று
அஞ்சப்படுகிறது.</p><p></p><h2>கடுமையான ஆபத்து&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச மீட்புக் குழுவின் மூத்த அதிகாரி பாப் கிட்சன் இதுகுறித்துக்
கூறுகையில், ஒரே நேரத்தில் பல அவசர நிலைகள் ஒன்றிணைவதை நாம் காண்கிறோம்
என்றும், இதில் மற்றொரு அதிர்ச்சியைத் தாங்கும் திறன் மிகக் குறைவாக உள்ள
நாடுகளே எல் நினோவின் நேரடி இலக்காக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8239675e-1646-40f6-a5a3-807bfb4dc7d2/26-6a56b6cf2277f.webp' /></p><p>
</p><p>
கிழக்கு ஆப்பிரிக்காவில் சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளும், ஆசியாவில்
பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இதனால் மிகக் கடுமையான
ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.
</p><p>
அமெரிக்க காலநிலை கணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்த எல் நினோ 1950ஆம்
ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகச் சக்திவாய்ந்த இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாக
மாறுவதற்கு 81 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
</p><p>
இது இந்த ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் தனது
உச்சக்கட்ட தீவிரத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் நீரின் வெப்பநிலை முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக காலநிலை ஆய்வாளர் டேனியல் ஸ்வெய்ன்
எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 வருட வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த அதிசயம் - சிறைச் செல்லப்போகும் தமிழ்த் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திற்கு கூட்டாகக் கொண்டு செல்லும் நோக்கில் பிரதான 6 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.</p><p> புதிய அரசியலமைப்பு மாற்றம், மாகாண சபை தேர்தல் தாமதம் மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகிய மூன்று முக்கிய புள்ளிகளை மையமாக வைத்தே இந்த கூட்டணி உருவாகியுள்ளது.&nbsp;</p><p>இது ஒரு இனவாதக் கூட்டணி அல்ல, மாறாக உரிமைகளுக்கான பொதுவான தளம் என இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.</p><p>இந்நிலையில், இந்த கூட்டணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>மேலும், இந்த புதிய தமிழ் கூட்டணியின் உருவாக்கம் குறித்து தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zosPXE6eNVQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு எதிரான நீதிமன்றத்தின் இரகசிய அறிக்கை கோட்டாபயவிடம் - கலக்கத்தில் சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-gotabaya-rajapaksa-cid-inquiry-1784057391"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-gotabaya-rajapaksa-cid-inquiry-1784057391</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறை தலைவர் சுரேஷ் சலே தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் தீவிரமடைந்த நிலையில்&nbsp;உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை.&nbsp;</p><p>தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பிற தரப்பினர் என பலரும்&nbsp;சிறைச்சாலை விகாரத்தை மாத்திரமே நோக்கி செயற்பட்டு வருவதாக தெரிகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;சுரேஷ் சலே குறித்த விசாரணைகள் மற்றும்&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பற்றி மறந்து விட்டதா என கேள்வி எழுப்ப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேநேரம்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மறைக்க சிறைச்சாலை விவகாரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/prVilbf_uUQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலை ஒற்றைப்பனை அடியில் சம்பந்தனை முதன் முதலில் சந்தித்த விடுதலை புலிகளின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-sambanthan-tamil-eelam-1784051147"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-sambanthan-tamil-eelam-1784051147</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 11ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.&nbsp;</p><p>அதன்போது, அவர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eJR3fcBrnMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T18:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க – ஈரான் மோதல் குறித்து ஐ.நா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-chief-warns-1784052255"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-chief-warns-1784052255</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் "பெரும் பின்னடைவு" என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் எச்சரித்துள்ளார். </p><p>
மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது, இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன், நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6378bf9-d057-4ff2-b85a-684e614f37e6/26-6a567a21731d9.webp' /></p><p>
</p><p>பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். </p><p>
இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
</p><p>தற்போதைய இக்கட்டான சூழலில், இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை, பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். </p><p>
மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T18:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரும் கச்சா எண்ணெய் விலை: டிரம்பிற்கு ஏற்படக்கூடிய நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rising-oil-and-gas-prices-could-impact-us-1784051494"></link>
            <id>https://tamilwin.com/article/rising-oil-and-gas-prices-could-impact-us-1784051494</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>
அமெரிக்காவில் பணவீக்கம் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீட்டை விடக் குறைந்துள்ளதாகவும், அங்கு வாகன எரிபொருட்களின் விலை சற்று சரிந்து நுகர்வோருக்கு நிதியுதவி ரீதியாகச் சிறிய நிம்மதியை அளித்துள்ளதாகவும் இன்று காலைதான் செய்திகள் வெளியாகின.
</p><p>ஆனால், இந்த நல்ல செய்திக்கு மத்தியில், ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அந்நாட்டுக் கப்பல்களை இலக்கு வைத்து, அமெரிக்கா மீண்டும் ஹார்முஸ் நீரிணையில் ராணுவ முற்றுகையை அமல்படுத்தத் திட்டமிட்டு வருவது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f13c303-080a-4a2e-8063-ea66ff99ea47/26-6a567727b5e48.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் இந்த ராணுவ முற்றுகை நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>இதன் எதிரொலியாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குப் பல டாலர்கள் வரை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.
இதனால் விரைவில் நுகர்வோருக்கான எரிபொருள் விலையும் கணிசமாக உயரும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவில் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>பொதுவாக அமெரிக்க மக்கள் தங்களின் அன்றாடச் செலவுகள் மற்றும் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டே வாக்களிப்பார்கள். 
எரிபொருள் மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், அதற்கு ஆளும் அரசே பொறுப்பு எனக்கருதி, தற்போதைய அரசியல்வாதிகளைத் தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:52:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத செயல் குற்றச்சாட்டுக்காக 5.6 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்திய டிரம்ப்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-pays-writer-e-jean-carroll-5m-1784051074"></link>
            <id>https://tamilwin.com/article/trump-pays-writer-e-jean-carroll-5m-1784051074</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு (E Jean Carroll) பாலியல் அத்துமீறல் மற்றும் அவதூறு வழக்கில் நீதிமன்றம் விதித்த 5.62 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு (E Jean Carroll) பாலியல் அத்துமீறல் மற்றும் அவதூறு வழக்கில் நீதிமன்றம் விதித்த 5.62 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார்.
</p><p> இதனை ஜீன் கரோலின் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>முன்னாள் பத்திரிகை பத்தியாளரான 82 வயது ஜீன் கரோல், 1990-களின் மத்தியில் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் ஆடை மாற்றும் அறையில் டொனால்ட் டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c385463-e472-4ef7-a3ea-e56e8db69fe9/26-6a56758487e36.webp' /></p><p> </p><p>
மேலும், 2022-ஆம் ஆண்டில் தனது 'ட்ரூத் சோஷியல்' இணையதளப் பதிவின் மூலம் டிரம்ப் இந்தத் குற்றச்சாட்டுகளை மறுத்து, தன் மீது அவதூறு பரப்பியதாகவும் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார்.
</p><p>இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்ற ஜூரிகள் குழு, 2023-இல் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, கரோலுக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
</p><p>இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ததால், இழப்பீட்டுத் தொகை நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
டிரம்ப் இந்தத் தொகையை வழங்குவதைத் தாமதப்படுத்த முயன்று, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.</p><p> ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கரோலுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு டிரம்பிற்கு அதிரடி உத்தரவிட்டார்.
</p><p>இதனைத் தொடர்ந்து, அசல் இழப்பீட்டுத் தொகையான 5 மில்லியன் டாலர் மற்றும் மேல்முறையீட்டுக் காலத்தில் சேர்ந்த வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 5.62 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை ஜீன் கரோலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>பணம் தமக்குக் கிடைத்ததை உறுதி செய்த ஜீன் கரோல், தனது வலைப்பதிவில், "நாங்கள் வென்றுவிட்டோம்! இந்த வெற்றி உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்குமானது!" என கரோல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்த வழக்கு ஜனநாயகக் கட்சியினரால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு "திட்டமிட்ட சதி" மற்றும் "பழிவாங்கும் நடவடிக்கை" என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>
மேலும், இந்த வழக்கின் நீதிபதி லூயிஸ் கப்லான் நடுவர் குழுவை டிரம்பிற்கு எதிராகத் திசைதிருப்பும் சாட்சியங்களை முறையற்று அனுமதித்தார் என டிரம்ப் தரப்பு வாதிட்டது. எனினும், மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் டிரம்பின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரன் பதவி விலக வேண்டும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ilankai-tamilarasu-party-sumanthiran-should-resign-1784048828"></link>
            <id>https://tamilwin.com/article/ilankai-tamilarasu-party-sumanthiran-should-resign-1784048828</id>
            <summary type="text">இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் பதவியில் இருந்து சி.வி.கே. சிவஞானத்தை விலகுமாறு அக்கட்சியின் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் பதவியில் இருந்து சி.வி.கே. சிவஞானத்தை விலகுமாறு அக்கட்சியின் காங்கேசன்தறை தொகுதிக் கிளை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு&nbsp;</h2><p>குறித்த கடிதத்தில், பின்வரும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b972bbae-94ce-4ae3-9edc-92c2252732fb/26-6a5672d6a2df3.webp' /></p><p>1. 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போது வலி. வடக்கு பிரதேச
சபைக்கு வேட்புமனு சமர்ப்பித்தலிலுள்ள முறைகேடுகள்.</p><p>

2. 21.10.2025 அன்று காங்கேசந்துறை தொகுதிக்கிளைக்கு எதிராக போட்டிக்கிளை
அமைக்கப்பட்டமை தொடர்பான முறைகேடுகள்.</p><p>

3. 31.05.2026 அன்று புதிய யாழ்ப்பாண மாவட்ட கிளை அமைக்கப்பட்டதிலுள்ள
முறைகேடுகள்.</p><p>இவற்றை சுட்டிக்காட்டி, இக்காரணங்களுக்காக பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து
உடனடியாக விலகுமாறு&nbsp; காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை கோரியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T17:33:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போருக்கு அஞ்சியதில்லை! முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட சில கருத்துக்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-inspector-general-priyantha-jayakody-1783997548"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-inspector-general-priyantha-jayakody-1783997548</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உண்மையில் யுத்தத்திற்குப் பயப்படவில்லை. அவர்களிடம் யுத்த பலம் இருந்தது, அதனால் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கை இருந்தது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உண்மையில் யுத்தத்திற்குப் பயப்படவில்லை. அவர்களிடம் யுத்த பலம் இருந்தது, அதனால் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கை இருந்தது. </p><p>அவர்கள் பயந்திருந்தது அமைதிக்கே. அதாவது, சமாதானத்தை அவர்கள் தங்களது பலவீனமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார்கள் என்று முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள்</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் எப்போதும் அவர்களின் ஒட்டுமொத்த செயல்முறையிலுமே மிகவும் தந்திரமான செயற்பாடுகளையே முன்னெடுத்தனர்.
</p><p></p><h2>அவரின் தனிப்பட்ட கருத்து</h2><p>எனது தனிப்பட்ட கருத்துப்படி,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குத் தவறிய இடங்கள் மிகக் குறைவே. பிரதானமான தவறு என்னவென்றால், 2005 இல் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து, மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி தாமாகவே வம்பை விலைக்கு வாங்கியதாகும். </p><p>அதேபோன்று தான் ரஜீவ் காந்தியின் படுகொலையும். இப்படி சில பாரதூரமான தவறுகள் அவர்களினால் செய்யப்பட்டன.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கும் அவர்கள் தங்களது வழக்கமான ஏமாற்று வித்தையையே செய்தார்கள்.</p><p>இந்திய அமைதிப்படையை பிரேமதாச ஜனாதிபதி விரட்டினார். அவர்கள் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதாகக் கூறி வந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c8661ac-728a-47ed-a609-4d5efd61243e/26-6a55a46e451ee.webp' /></p><p>அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் பரிமாற்றப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது.
அவர்கள் பலவீனமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சமாதானத்தை முன்னிறுத்திச் செயற்பட்டே மீண்டும் பலமடைந்தார்கள். </p><p>
2009 இலும் அதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு நடக்கவில்லை. 
ரணில் விக்ரமசிங்கவையும் ஏமாற்றினார்கள். </p><p>அது சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ 'மை பெல்லி இஸ் வைட்' (My Belly is White ) என்று சற்றே பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தப் புத்தகத்தில் அனைத்து விபரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T17:12:44+00:00</updated>
        </entry>
    </feed>
