<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T23:26:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039"></link>
            <id>https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>

எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை
ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும்
வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற
பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>முக்கிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு
கூறப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3834f3b-a92d-40af-a95c-a592b12b48aa/26-6a581439a8855.webp' /></p><p> அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று
வருகிறது.
</p><p>
வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை
தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒரு விசேட கலந்துரையாடல்
விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டு
ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p><p>

அதனடிப்படையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சூழ்நிலை,
அதற்குரிய நிலப் பயன்பாடு, அந்த நிலச் சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் மாவட்ட
விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு
மாவட்டத்துக்கும் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதன்
ஊடாக அந்த விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்,
மன்னார் மாவட்டத்தின் முதலாவது கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் கால பிக்குகள் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் - அம்பிட்டிய தேரர் பற்றிய ஆதாரமும் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.&nbsp;</p><p>அவர் அண்மையில், "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா?
</p><p>
இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில், கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>அதேநேரம்,&nbsp;மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் தமிழர்கள் தொடர்பில் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தவர் தான்.&nbsp;</p><p>தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் இவர் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qGn__FhhhGc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட மூவர் அதிரடிப்படையினரால் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632</id>
            <summary type="text">திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் &#039;ஐஸ்&#039;
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான &#039;கெம்பா&#039; உட்பட மூன்று
சந்தேக நபர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் 'ஐஸ்'
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெம்பா' உட்பட மூன்று
சந்தேக நபர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம்(14.7.2026)மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு
போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>இதன்போது, முக்கிய சந்தேக நபரிடமிருந்து 16 கிராம் 'ஐஸ்'
போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும்
இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்,
மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்
கைப்பற்றப்பட்டன.</p><p>
கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத
செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e70dd99-df46-45d2-84dd-228c3a4e07b4/26-6a57f29abf23a.webp' /></p><p>
</p><p>
இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தமை மற்றும்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான்
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட
வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T21:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஜனாதிபதி யார்! இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கூட்டணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351"></link>
            <id>https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.</p><p>இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.</p><p>பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>எதிர்வரும்&nbsp;ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b746TCSqv10" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மார் உள்நாட்டுப் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் சம்மதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/myanmar-civil-war-both-sides-agree-to-peace-talks-1784147186"></link>
            <id>https://tamilwin.com/article/myanmar-civil-war-both-sides-agree-to-peace-talks-1784147186</id>
            <summary type="text">மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்
கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும்
பேச்சுவார்த்தை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்
கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும்
பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தாய்லாந்து வெளியுறவுத்
துறை அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த மோதலுக்கு இராணுவ ரீதியாக எந்தத் தீர்வும் காண முடியாது என்பதை இரு
தரப்பினருமே ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு, அங்கு
ஏற்பட்டுள்ள வன்முறைகளில் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்
உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து
இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

இந்த நிலையில், தேக்கமடைந்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும்
தொடங்குவதற்குத் தேவையான உதவிகளையும், அதற்கான இடத்தையும் வழங்கத் தயாராக
இருப்பதாகத் தாய்லாந்து அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c92d53-a5ea-4a26-a6bb-acb1e31f28fb/26-6a57ecf4dbebf.webp' /></p><p>
</p><p>
இது மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆசியான் கூட்டமைப்பு
எடுத்து வரும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக்
கருதப்படுகிறது.
</p><p>
ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதரான பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் மரியா
தெரசா லாசரோ மற்றும் தாய்லாந்து அதிகாரிகள், மியன்மார் இராணுவ ஆதரவு பெற்ற
தேசிய ஒற்றுமை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன்&nbsp; பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தை நோக்கி அடுத்தடுத்து ஏவப்பட்ட 21 ட்ரோன்கள்.. இலக்கு வைக்கப்பட்ட அதிமுக்கிய தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022"></link>
            <id>https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022</id>
            <summary type="text">குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&amp;nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&amp;nbsp;4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&nbsp;</p><p>4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தற்போது அறிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிமுக்கிய உள்கட்டமைப்புகள்..&nbsp;&nbsp;</h2><p>
இத்தாக்குதல்கள் தொடர்பாக அவர் மேலும், "ஈரானின் இந்த வான்வழித் தாக்குதல்கள் குவைத்தின் முக்கிய மற்றும் அதிமுக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194187b9-4156-4d92-8e3b-55987342736f/26-6a57ec50946fe.webp' /></p><p> இதனால் சில பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692</id>
            <summary type="text">மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
அதே நேரத்தில், தங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து அந்த நாட்டின்
சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு
தடுப்புப் பணிகள் பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ளன.
</p><p>
கொங்கோவின் இத்துரி (Ituri) மாகாணத்தில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை
2,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754 ஆக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>உயிரிழப்புகள்</h2><p>
</p><p>
எனினும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையை விட உண்மையான
உயிரிழப்புகள் 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார
அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
</p><p>
வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவி வரும் மூன்றாவது பெரிய எபோலா அலை இதுவென
எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11282cfd-b43e-4ccc-802f-a00759697265/26-6a57db66270ca.webp' /></p><p>
</p><p>
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியம் பல மாதங்களாக
வழங்கப்படவில்லை எனக் கூறி இத்துரி மாகாணத்தின் புனியா (Bunia) மற்றும்
ரவாம்பரா (Rwampara) பொது மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தொற்று பரவத் தொடங்கியது முதல் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், போதிய
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் உழைத்த தங்களுக்கு எவ்வித ஊதியமும்
வழங்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் சரமாரி தாக்குதல்கள்.. அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-launches-fresh-strikes-on-iran-1784146283"></link>
            <id>https://tamilwin.com/article/us-launches-fresh-strikes-on-iran-1784146283</id>
            <summary type="text">ஈரான் மீதான தனது இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஹோர்முஸ் நீரிணை&amp;nbsp;  இதுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தனது இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p> </p><p> இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 3 p.m. ET, U.S. forces launched operations for a second wave of strikes today against Iran. The strikes are targeting Iranian military capabilities used to threaten vessels freely transiting through the Strait of Hormuz, an international waterway vital to global commerce. The…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2077471657456025781?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அதன்படி, "சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சுதந்திரமாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் பயன்படுத்தி வரும் இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் இலக்குகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T20:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ.. அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-fire-warning-for-7-districts-in-usa-1784145951"></link>
            <id>https://tamilwin.com/article/wild-fire-warning-for-7-districts-in-usa-1784145951</id>
            <summary type="text">அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&amp;nbsp;க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2>&nbsp;காற்றின் தர எச்சரிக்கைகள்</h2><p>
</p><p>
கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472255dc-2991-4d26-9810-ab9605ad413d/26-6a57e8218feda.webp' /></p><p>
</p><p>

காட்டுத்தீயினால் ஏற்படும் புகையில் 'PM2.5' என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய துகள்கள் (fine particulate matter) உள்ளன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களின் மிகச்சிறிய துகள்களைக் கொண்ட இவை மனித திசுக்களுக்குள் ஊடுருவி சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>


மேலும், சில பகுதிகளில் காற்றின் தரம், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது என்பதிலிருந்து மிகவும் ஆரோக்கியமற்றது என்பது வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் எத்தனோல் கலந்த பெற்றோலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorists-unhappy-ethanol-blended-petrol-in-india-1784145620"></link>
            <id>https://tamilwin.com/article/motorists-unhappy-ethanol-blended-petrol-in-india-1784145620</id>
            <summary type="text">இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும்
வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி வாகன சாரதிகள் பெரும்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
</p><p>
மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், பெற்றோலில் 20 சதவீத
எத்தனோல் கலக்கும் இலக்கு 2030ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டிற்குள்
முன்கூட்டியே மாற்றப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள்
நிலையங்களிலும் E20 பெட்ரோல் மட்டுமே தற்போது விநியோகிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஏற்பட்டுள்ள பிரச்சினை&nbsp;</h2><p>
</p><p>
ஆனால், இந்த விரைவான மாற்றம் வாகன சாரதிகளுக்குப் பெரும் சிரமத்தை
ஏற்படுத்தியுள்ளது.

E20 பெற்றோல் பயன்படுத்திய பிறகு தங்களது கார்களின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும்
மேல் குறைந்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c76a7-a976-4645-b59d-078afdc8d27e/26-6a57e6d705349.webp' /></p><p>

மேலும், வாகனத்தின் வேகம் குறைவதோடு, மேடான பகுதிகளில் பயணிக்கும் போதும் ஏசி
(AC) இயங்கும் போதும் காரின் இயக்கம் மந்தமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.</p><p>

எத்தனோல் சாதாரண பெற்றோலை விடக் குறைந்த ஆற்றலையே உருவாக்குகிறது என்பதால்
மைலேஜ் குறைவது தவிர்க்க முடியாதது என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.</p><p>

அதோடு, 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 எரிபொருளுக்கு
ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாலும், அதற்கு முன்பு வாங்கிய
இலட்சக்கணக்கான பழைய வாகனங்களின் என்ஜின்களில் உள்ள இறப்பர் குழாய்கள்,
கேஸ்கெட்டுகள் மற்றும் சீல் ஆகியவற்றைப் பெற்றோலுடன் கலந்திருக்கும் எத்தனோல்
அரித்துச் சிதைத்துவிடும் என்ற அச்சமும் தற்போது நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனைவி - பிள்ளைகள் எங்கே! அரசியல்வாதிகள் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399"></link>
            <id>https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.&nbsp;</p><p>அவர், சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அண்மையில் அவரின் குடும்பத்தினர் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.&nbsp;</p><p>&nbsp;சுரேஷ் சலே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகார்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் மனைவி ஊடக பரப்பில் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.&nbsp;</p><p>சலேவின் தாய் மற்றும் மகன் உட்பட அவரின் குடும்பத்தினர், ஊடகங்களுக்கு முன்னிலையில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்நதனர்.&nbsp;</p><p>இந்நிலையில், சமீப காலமாக அவர்களில் யாரும் பெரிதாக எவ்வித வெளிப்பாடுகளையும் முன்வைத்து வருவதில்லை. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்னும் கேள்வி எழும் அளவுக்கு அமைதியாக உள்ளனர்.&nbsp;</p><p>இதற்கான காரணம் தான் என்ன? இது தொடர்பில் பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T19:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்துவேனியா மீதான தாக்குதல் திட்டம் வெறும் கதை: குற்றச்சாட்டுகளை மறுத்தது ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996"></link>
            <id>https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996</id>
            <summary type="text">தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவிற்கு எதிராக தங்களை இராணுவமயமாக்கிக் கொள்வதற்காகவே லித்துவேனியா
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ரஷ்யா சாடியுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
முன்னதாகப் பேட்டியளித்த லித்துவேனியா ஜனாதிபதி கிட்டானஸ் நௌசேடா, தங்கள்
நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்
தங்களுக்கு உளவுத்துறைத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து
மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33976a57-9197-4e84-92ed-6ebde8a6f212/26-6a57d0bad9229.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின்
செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "மக்களை மூளைச்சலவை செய்து, நாட்டை
மேலும் இராணுவமயமாக்குவதற்காகப் பரப்பப்படும் அச்சுறுத்தல் கதைகளின் சமீபத்திய
வடிவமே இதுவாகும்.</p><p>

இந்த நோக்கத்தை அடைவதற்காக, அவர்கள் மற்றொரு நாட்டை - இந்தச் சூழலில் எங்களது
நாட்டை - எதிரியாகக் காட்ட வேண்டியுள்ளது.
</p><p>
இந்த சாக்கைப் பயன்படுத்தி பால்டிக் நாடுகளில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ
உள்கட்டமைப்புகளை அவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்” என்று
குற்றம் சாட்டினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடான் உள்நாட்டுப் போர்: கம் அரபிக் பசை வர்த்தகம் மூலம் நிதியுதவி - ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897</id>
            <summary type="text">சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் &#039;கம் அரபிக்&#039; எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் 'கம் அரபிக்' எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
முக்கிய நிதியாதாரமாக விளங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
</p><p>
உலகளாவிய சந்தையில் குளிர்பானங்கள், மருந்துப் பொருட்கள், சொக்லேட்டுகள்
மற்றும் அழகுசாதனப் பொருட்களில் நிலைநிறுத்தியாக மற்றும் அடர்த்தியாக்கியாக
இம்மூலப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
உலகளவில் தேவைப்படும் இந்த கம் அரபிக் பசையின் ஒட்டுமொத்த உற்பத்தியில்
சுமார் 80 விழுக்காட்டை சூடான் நாடே பூர்த்தி செய்து வருகிறது.
</p><p>
சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவப் பிரிவான விரைவு ஆதரவுப் படைக்கும்
(RSF) இடையே தொடரும் இந்த மோதலில், இரு தரப்புமே இந்த வர்த்தகத்தைக்
கட்டுப்படுத்தி தங்களின் இராணுவச் செயல்பாடுகளுக்கான நிதியைப் பெற்று
வருகின்றன.</p><p></p><h2>சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி</h2><p>
</p><p>
குறிப்பாக, RSF அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து
பெருமளவிலான கம் அரபிக் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்பட்டு, பின்னர்
அங்கிருந்து அந்த நாடுகளின் உள்ளூர் தயாரிப்புகள் போல போலியாக சர்வதேச
சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5039149c-5a9a-4c03-9574-ee4db188a64b/26-6a57cbf25cc4f.webp' /></p><p>
</p><p>
இதனால் இந்த மூலப்பொருட்களின் அசல் உற்பத்தி நாட்டைத் துல்லியமாகக் கண்டறிவது
உலகளாவிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>

இந்தப் போர்ச் சூழலால், கம் அரபிக் உற்பத்தி மற்றும் சேகரிப்பில் ஈடுபடும்
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதுகாப்பு
அச்சுறுத்தல்களையும், கொள்ளைச் சம்பவங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர்
துர்க், சர்வதேச நிறுவனங்கள் மோதலால் பாதிக்கப்பட்ட விநியோகச்
சங்கிலிகளிலிருந்து தங்களது மூலப்பொருட்களைப் பெறும்போது கூடுதல் பொறுப்புடன்
செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>

நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நடைமுறைகள் மூலம் மறைமுகமாக இந்த வன்முறைக்கும்
மனித உரிமை மீறல்களுக்கும் நிதியுதவி அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ய முறையான
சரிபார்ப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:05:42+00:00</updated>
        </entry>
    </feed>
