<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-16T08:42:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூடப்படாத நிலையில் மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்ட குழிகள் - மக்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/norwood-gem-mining-1784188602"></link>
            <id>https://tamilwin.com/article/norwood-gem-mining-1784188602</id>
            <summary type="text">நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள
மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள
மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p>இதனால் பெரும்
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
</p><p></p><h2>தோட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலை</h2><p>சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள தேயிலை தோட்டத்திலும் ,
கெசல்கமு ஓயா பகுதியிலும் நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டப் பிரிவிலும்,
மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள
மூடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9bb12df-4199-4890-98ac-2e125f1cc1f1/26-6a58930e2a358.webp' /></p><p>குறித்த குழுவினர் தேயிலை மரங்களை வேரோடு பிடுங்கி,
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்தெடுத்து வருவதாகவும், இதனால்
பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் தொழில் செய்ய
முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகமும்
கூறுகின்றன.</p><p>நேற்று (15) இரவு நோர்வூட் தோட்டத்திற்குச் சொந்தமான என்.சி தேயிலைப்
பிரிவில், சிலர் தேயிலைச் செடிகளுக்கு அடியில் உள்ள மாணிக்கக்கல் அடங்கிய
மண்ணைத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். </p><p>இதனால் தோண்டப்பட்ட குழிகளால்,
தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
</p><p>
என்.சி தேயிலைத் தோட்டத்தில் பல குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக
நோர்வூட் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு
எதுவும் காணப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><h2>குழிகளில் தேங்கும் மழைநீர்</h2><p>நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள காசல்ரீ
நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் கெசல்கமு ஓயா அருகில் தொடர்ந்து இரவில் 200இற்கும் மேற்பட்டோர் மாணிக்ககல் அகழ்ந்தெடுத்து வருவதால் அப்பகுதியில் பெரும்
சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருகிறது.</p><p>இவற்நோடு அகழ்வு பணிகளின் பின்னர் குறித்த தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல்
கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81591934-64c3-4250-9356-ad78f295271d/26-6a5897ee1d90c.webp' /></p><p>இதனால் மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் முறையாக
ஒழுங்குபடுத்தப்படாத அகழ்வுகள் மற்றும் மூடப்படாத குழிகள் பாரிய சுற்றுச்சூழல்
சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>நிலத்தடி நீர் குறைதல், மண் அரிப்பு மற்றும்
தேயிலை தோட்டத்தில் நடுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற குழிகளால் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழக்கும்
சம்பவங்கள் அடிக்கடி பதிவாகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
குறிப்பாக சட்டவிரோதமாக அல்லது முறையாக மூடப்படாமல் திறந்த நிலையில்
விடப்படும் குழிகளில் தேங்கும் மழைநீர், நுளம்புகள் பெருக வழிவகுத்து டெங்கு
போன்ற நோய்களை உருவாக்குகிறது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T08:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-decisions-of-trinco-district-committee-1784189031"></link>
            <id>https://tamilwin.com/article/important-decisions-of-trinco-district-committee-1784189031</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் இன்று(1...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த கூட்டம் இன்று(16.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது,&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், அரச அதிகாரிகள்,
பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாவட்டத்தின் முக்கிய
பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.</p><h2>முடிவுகள் மற்றும் முன்மொழிவுகள்&nbsp;</h2><p>
</p><p>இதன்படி, எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் முன்மொழிவுகள் பின்வருமாறு,</p><p>
முறையான ஆவணங்களின்றி நீண்டகாலமாக காணியில் வசித்து
வரும் மக்களுக்கு விரைவாக உரிமைப்பத்திரங்களை வழங்குவது குறித்து விரிவாக
ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
முத்து நகர் கிராம மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டதுடன், கிண்ணியா சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள காணி
விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fd1fbc2-f293-4d4f-85d2-637b63ef9ccd/26-6a58927e64bed.webp' /></p><p>
</p><p>
கந்தளாய், ஜெயந்திபுர பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய
நிலங்கள் வழங்கப்பட்ட 58 விவசாயிகளுக்கு, வட்டி மற்றும் வரிகளை உடனடியாகச்
செலுத்துமாறு விதிக்கப்பட்டுள்ள உத்தரவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு
காண வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வீதி அபிவிருத்தி அதிகார சபை, வனவிலங்கு மற்றும் கடற்கரை பாதுகாப்பு
திணைக்களங்களுக்குச் சொந்தமான அரச ஒதுக்கீட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது
குறித்துக் கடுமையான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><p>

தம்பலகாமம் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில்
வெளியான புகார்கள் குறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் ஊடாக விசாரிக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாலம் புனரமைப்பு</h2><p> </p><p>

அத்துடன், கிண்ணியா தள வைத்தியசாலையை அரசாங்கத்தின் நேரடி
நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவும், அனர்த்த பாதிப்புக்குள்ளாகும் ஈச்சிலம்பற்று
வைத்தியசாலையை பூநகர் பகுதிக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கின்னியாவில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை ஒரு மாதத்திற்குள் நிறுத்தி, புதிய
இடம் கிடைக்கும் வரை பாலம்போட்டாறு - சிங்ஹகந்த பகுதியை தற்காலிகமாகப்
பயன்படுத்த திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903030c3-8f79-4f6f-a6f3-1d6bfdba253e/26-6a58927f37da2.webp' /></p><p>

மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாலங்களின் தரம் குறித்து ஒருங்கிணைந்த அறிக்கை
தயாரிக்கப்படவுள்ளது. மேலும், சாபி நகர், கடற்கரைச்சேனை, தாஹா நகர், தக்வா
நகர், கட்டைபறிச்சான் மற்றும் வெருகல் புன்னையடி ஆகிய பகுதிகளில் புதிய
பாலங்களை அமைக்கவும், பழுதடைந்துள்ள பாலங்களைப் புனரமைக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
விவசாய வளர்ச்சியை நோக்காகக் கொண்டு கைவிடப்பட்ட 205 சிறு குளங்களையும் 25
அணைக்கட்டுகளையும் வரும் நிதியாண்டில் மறுசீரமைக்க நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன் மாவிலாறு அணைக்கட்டு புனரமைப்புப் பணிகளை
விரைவுபடுத்தவும், நீலாப்பொளை வீதியை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><h2>யானை-மனித மோதல்கள்</h2><p>
</p><p>
தற்போதைய படகுச் சேவைகளில் பயணிகளுக்கு உயிர் காக்கும் அங்கிகளை (Life
Jackets) கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
யானை-மனித மோதல்களுக்கு நேரடியாக முகம் கொடுக்கும் பாடசாலைகள் மற்றும்
வைத்தியசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079eaf00-44b8-49c2-9ee6-db94deca327b/26-6a5892801236c.webp' /></p><p>
</p><p>
மொரவெவ நாமல்வத்த கிராமத்திலிருந்து அதிகாலையிலேயே பேருந்து மூலம் பாடசாலைக்கு
வரும் மாணவர்கள், யானை அச்சுறுத்தல் காரணமாகப் பாடசாலை ஆரம்பிக்கும் வரை
காத்திருக்க வேண்டியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார்
மற்றும் போக்குவரத்து அதிகார சபையினர் இணைந்து நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது.
</p><p>
வெருகல் பிரதேசத்தை யானைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க மேலும் 12 கி.மீ
நீளத்திற்கு யானை வேலி அமைக்க வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனம்
ஈர்க்கப்பட்டுள்ளது.</p><p>

கந்தளாய் குளம் சார்ந்த அழகுபடுத்தல் திட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
</p><p>உப்புவெளி கடற்கரை பூங்காவிற்குள் இருக்கும் வீதியைப் பொதுமக்களின்
பயன்பாட்டிற்காகத் திறக்கவும், புதிய சுற்றுலாத் தலங்களை அடையாளம் காணவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>கடற்றொழிலாளர்களின் பிரச்சினை</h2><p>
</p><p>
சீனக்குடா விமானப்படை தளம் மற்றும் மார்பிள் பீச் (Marble Beach) பகுதிகளில்
கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை நீக்குவது குறித்து
கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
கிளிவெட்டி, பாரதிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களின் மக்கள் வங்கிச் சேவைகளுக்காக
நீண்ட தூரம் பயணிப்பதைத் தவிர்க்க, கிளிவெட்டி பிரதேச மருத்துவமனை வளாகத்தில்
இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ATM/CDM இயந்திரங்களை நிறுவக் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d19f2aa-b085-4c51-b98d-7eebac4c4358/26-6a589280db746.webp' /></p><p>

2026 வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள்
மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தும்,
அதற்கான உரிய விண்ணப்பங்கள் இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், தகுதியானவர்களை
இனங்கண்டு விரைந்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில்
தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் பிரஜா சக்தி
திட்டங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன்,
மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி
செய்யும் வகையில் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தலைவர்களினால்
வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T08:24:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/panel-to-recommend-public-lands-to-ministry-1784187553"></link>
            <id>https://tamilwin.com/article/panel-to-recommend-public-lands-to-ministry-1784187553</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள
பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு கலந்துரையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள
பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில்&nbsp; நேற்று(15.07.2026) நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>ஒன்றுகூடல்</h2><p>&nbsp;கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள
பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தி தொடர்ச்சியான அதன் முன்னேற்ற
செயற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக மாவட்ட மட்டத்தில் இந்த உப குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/027f8778-cd99-4163-8fcb-0241d8762dc9/26-6a588b6c2c375.webp' /></p><p>இதன்போது குறித்த
காணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உரிய
அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளது. </p><p>இந்தக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக
அரசாங்க அதிபர் காணி அஜிதா பிரதீபன், வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட
உதவிப்பணிப்பாளர்கள், மாவட்ட மட்ட காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T08:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோவால் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் - பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1784189085"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1784189085</id>
            <summary type="text">வரப்போகும் எல்நினோ காலநிலை மாற்றத்தினால் நாட்டில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>வரப்போகும் எல்நினோ காலநிலை மாற்றத்தினால் நாட்டில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இதனால், விவசாய பயன்பாட்டிற்கான நீரையும் குடிநீரையும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் திணைக்களத்தின் நீர் முகாமத்துவப் பிரிவின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் கூறுகையில், 

நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச் சேமிப்பு தற்போது சுமார் 48 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.</p><p></p><h2>விசேட நீர் முகாமைத்துவத் திட்டங்கள்</h2><p> </p><p>தற்போதுள்ள நீரானது தற்போதைய யால பயிர்ச்செய்கை பருவத்திற்குப் போதுமானதாக இருக்கும்.

எனினும், வறட்சியான காலநிலை நீடித்து, வரவிருக்கும் பெரும்போக பயிர்ச் செய்கை பருவத்தைப் பாதித்தால், முன்னுரிமை அடிப்படையில் தண்ணீரை விநியோகிப்பதற்காக விசேட நீர் முகாமைத்துவத் திட்டங்களை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
</p><p>
வறட்சியின் தாக்கத்தைக் குறைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, வறண்ட வலயத்தில் உள்ள பாரம்பரிய எல்லங்கா குளக் கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
உபரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதற்கான வடமத்திய மாகாண கால்வாய் திட்டப் பணிகள் தொடர்கின்றன.

நீர் வீணாவதைத் தடுக்க நீர்ப்பாசனக் கால்வாய்களுக்கான தானியங்கி கதவுக் கட்டமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை உடனுக்குடன் கண்காணிக்கும் சென்சார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e198ac3-da18-45e6-8c73-773cbe6d3e08/26-6a5891c8e09ca.webp' /></p><h2>ஆற்றுப்படுகைகளின் நீர்மட்டம்</h2><p>
</p><p>
களனி, களு, ஜின், நில்வளவை மற்றும் மல்வத்து உள்ளிட்ட முக்கிய ஆற்றுப்படுகைகளின் நீர்மட்டம் தற்போது சாதாரண மட்டத்திலேயே காணப்படுகிறது. உடனடி வெள்ளப் பெருக்கு அபாயம் எதுவும் இல்லை.

எனினும், வறண்ட காலநிலை தொடர்ந்தால் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக வீழ்ச்சியடையக்கூடும்.
</p><p>
விவசாயப் பணிகளை மிகவும் அவதானமாகத் திட்டமிடுமாறும், குறைந்த அளவு நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ஏற்கனவே எச்சரிக்கையான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கி, பொறுப்புடன் தண்ணீரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T08:10:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலிருந்து கிளம்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியில் நடந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-killed-in-bus-collision-in-batticaloa-1784189171"></link>
            <id>https://tamilwin.com/article/one-killed-in-bus-collision-in-batticaloa-1784189171</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (16.07.2026) இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் இன்று (16.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடமைக்காக பாண்டிருப்பில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>

உயிரிழந்தவர், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த மட்டக்களப்பு நாவற்குடா, இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed44743c-debe-4269-9c99-e8afdfc42425/26-6a58918acd161.webp' /></p><p> </p><p>திருமணத்தின் பின்னர் அவர் பாண்டிருப்பில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdaa39c9-98b9-4a0b-9ba1-7c689876d5b9/26-6a58918bb9949.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T08:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமகம பகுதியில் கால்வாய்க்குள் சடலமாக கிடந்த இளைஞர் - விசாரணையில் சிக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-recovered-from-canal-in-homagama-1784183349"></link>
            <id>https://tamilwin.com/article/body-recovered-from-canal-in-homagama-1784183349</id>
            <summary type="text">ஹோமகம - பிட்டிபான, கலகஹேன பகுதியில் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று(16.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமகம - பிட்டிபான, கலகஹேன பகுதியில் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இந்த சம்பவம் இன்று(16.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><h2>

சடலமாக மீட்பு</h2><p>
கலகஹேன பகுதியில் கால்வாய் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, உயிரிழந்த இளைஞரின் ஒரு ஜோடி காலணியொன்றும், 20 ரூபாய் நோட்டும் நிலத்திலிருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c309ec2-ffc4-4bdf-8664-48bf66f29716/26-6a588e8119218.webp' /></p><p> 

கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சடலம் விலங்குகளால் சிதைக்கப்பட்ட நிலையில், முகம் அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>


காணாமல் போனதாக முறைப்பாடு</h2><p>

இதற்கிடையில், ஹோமகம, கடனவத்த, பிட்டிபான, சமகி மாவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று இரவு(15.07.2026) முதல் காணாமல் போனதாக மீகோட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்த முறைப்பாட்டில் உள்ள தகவல்களும், கொலை செய்யப்பட்ட நபரின் தகவல்களும் ஒத்திருப்பதாக ஹோமகம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

காணாமல் போனவர் ஒரு ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் என்றும், அவர் பகுதி நேர செயலி டாக்சி சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>

இருப்பினும், நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் குறித்த இளைஞர், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பில் ஹோமகம பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-16T07:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-for-postponement-of-the-advanced-level-1784187689"></link>
            <id>https://tamilwin.com/article/request-for-postponement-of-the-advanced-level-1784187689</id>
            <summary type="text">வரவிருக்கும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதியை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் பின்னர் முடிவுகள் 23ஆம் திகதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரவிருக்கும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதியை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் பின்னர் முடிவுகள் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த வழக்கு இன்று(16.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே 
 மேல்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.</p><p>தேர்வில் பங்கேற்கும் ஒரு மாணவர் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77ee22f-c197-419b-8684-8a1d397bd233/26-6a588b58dc504.webp' /></p><p> 

மனுதாரர் மற்றும் தலைமை சட்டத்தரணி முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T07:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-drive-launched-3-state-institutions-cases-1784183147"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-drive-launched-3-state-institutions-cases-1784183147</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல்
திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச
நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல்
திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச
நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>நேற்றைய தினம்(15.07.2026) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><h2>டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்</h2><p>
</p><p>
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில் ஒரே
நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.</p><p>

"சட்டம் அனைவருக்கும் சமமானது" என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள்
மட்டுமன்றி, அரச நிறுவனங்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி சுகாதாரத்துறை
மற்றும் முப்படை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a889ce70-8602-4d39-b098-d7ce533b0a23/26-6a587c1012e0c.webp' /></p><p>

மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையினர் இணைந்து விசேட
வேலைத்திட்டம் ஒன்றை நேற்று புதன்கிழமை(15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்றைய தினம் அரச அலுவலகங்கள், விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது டெங்கு நுளம்பு பெறுகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை
வைத்திருந்ததன் அடிப்படையில், 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T07:24:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமது ஆட்சியில்தான் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது! கடற்றொழில் அமைச்சர் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-workers-pay-hikes-r-npp-fisheries-minister-1784180981"></link>
            <id>https://tamilwin.com/article/govt-workers-pay-hikes-r-npp-fisheries-minister-1784180981</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் போராட்டங்கள் எதுவுமின்றி அரச
ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டன. என கடற்றொழில் அமைச்சர்
இராமலிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் போராட்டங்கள் எதுவுமின்றி அரச
ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டன. என கடற்றொழில் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.</p><p>கிளிநொச்சி வித்யாலயத்தில் நேற்று(15.07.2026) இடம்பெற்ற வகுப்பறை கட்டிடத்தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு&nbsp; உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சம்பள உயர்வுகள்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> அடுத்த ஆண்டு கல்விக்காக அதிக நிதியொதுக்கீடுகள்
செய்யப்படும். ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வுகள் வழங்கப்படவுள்ளன. முன்னைய காலங்களில் சம்பள உயர்வு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. </p><p>ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் போராட்டங்கள் எதுவுமின்றி சம்பள
உயர்வுகள் வழங்கப்பட்டன.</p><p> மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கும் முற்றுப்புள்ளி வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d4d41c2-94bb-414d-91dd-535dfdcb2045/26-6a5877a0cc459.webp' /></p><p>கிளிநொச்சி ஐயனார்புரம் அ.த.க பாடசாலையில் 31மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கடற்றொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன், மாகாண கல்வி
அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கிளிநொச்சி - தெற்கு வலயக் கல்வி
பணிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T07:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவால் கடும் குழப்பம் : பொலிஸாரால் வெளியேற்றம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-dcc-meeting-1784183267"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-dcc-meeting-1784183267</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம்
இன்றைய தினம்(16.07.2026) நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இடை நடுவே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம்
இன்றைய தினம்(16.07.2026) நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இடை நடுவே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.</p><p>திருவையாறு
பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில்
மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய
சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த
சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் உடந்தையாக செயல்படுகிறார் என
தாறுமாறாக தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களில் அர்ச்சுனா ஈடுபட்டதை அடுத்து நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறியுள்ளார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OzdSGPoZMMY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இதன்போது, அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை வெளியேறிச் செல்லுமாறு கூறிய நிலையில், அமைச்சர் சந்திரிசேகருக்கும், அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.&nbsp;&nbsp;</p><p>இதன்போது, இடையே குறுக்கிட்ட பொலிஸார் அர்ச்சுனா எம்.பியை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.&nbsp;</p><p>தொடர்ந்து பொது அமைப்புகள்
மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின்
பிரதேச செயலாளர்கள் இடைநடுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக
அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி
குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது.</p><p><br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e8555cb-1093-4e0a-8745-5d93a3eb030a/26-6a5880f499db0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec5ea49-640d-4d4b-a3c6-e685955f0388/26-6a5880f59e5b4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82353d17-40f2-4c5b-ac59-2fd6eeaec109/26-6a587eeb87442.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0e12e1-8dbf-4476-b797-f23817ef5534/26-6a5880f66ef48.webp' /></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக
திறன் விருத்தி மண்டபத்தில் இன்று(16.07.2026) பகல் 9 மணிக்கு நடைபெற்றது.
</p><p>
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு
தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><h2>மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள்</h2><p>
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில்
அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் வரவேற்புரையுடன் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.</p><p>
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த
ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், க.இளங்குமரன், அர்சுனா
இராமநாதன் உட்பட&nbsp; பொலிஸார், கடற்படையினர், இராணுவத்தினர், மாகான அமைச்சுக்களின்
செயலாளர்கள், துறைசார் திணைக்கள பதவி நிலை அதிகாரிகள் எனப் பலர் கலந்து
கொண்டனர்.</p><p><b><i>மேலதிக தகவல் சுடரோன்&nbsp;</i></b></p>]]></content>
            <updated>2026-07-16T06:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-in-yoshida-s-case-1784182652"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-in-yoshida-s-case-1784182652</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

இந்த வழக்கு இன்று(16.07.2026) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு</h2><p>
இதன்போது, அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்து, விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்கான திகதியை நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a89f163d-13b8-49c2-8972-f2d688975ef2/26-6a58795d28866.webp' /></p><p> </p><p>

 அப்போதைய வழக்கில் இரண்டாவது பிரதிவாதியான டெய்சி பரஸ்ட் தொடர்பான அரசுத் தரப்பின் நிலைப்பாட்டையும், குற்றப்பத்திரிகையில் செய்யப்படும் திருத்தங்களையும் அப்போது அவர்களுக்குத் தெரிவிப்பதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார். </p><p>

சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்ட் 31ஆம் விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சட்டவிரோதமாகச் சம்பாதித்த சுமார் 59 மில்லியன் ரூபாயை வங்கிக் கணக்குகளில் செலுத்தியதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, இந்த இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தலைமை சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[72000 ஆக உயர்ந்த டெங்கு பாதிப்புகள் : இதுவரை 49 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-rise-to-72430-this-year-1784181925"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-rise-to-72430-this-year-1784181925</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளது.

 

நேற்று (15.07.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
 

நேற்று (15.07.2026) மொத்தம் 1,195 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>49 பேர் உயிரிழப்பு</h2><p>
 

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 17,051 டெங்கு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e27c140-e8eb-40f7-b6f4-e202a92c012a/26-6a5878e9da9c4.webp' /></p><p>
 

மேற்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 38,160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தெற்கு மாகாணத்தில் 11,274 வழக்குகளும், சபரகமுவ மாகாணத்தில் 6,073 வழக்குகளும், மத்திய மாகாணத்தில் 6,026 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
 

ஜூலை மாதத்தில், கம்பஹா மாவட்டத்தில் 15,082 டெங்கு நோய்த்தொற்றுகளும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 நோய்த்தொற்றுகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
 

டெங்கு நோய்த்தொற்று காரணமாக இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் இலங்கையரின் நிறுவனத்தில் நடந்த மோசடி - பெருந்தொகை டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-fined-in-new-zealand-1784180349"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-fined-in-new-zealand-1784180349</id>
            <summary type="text">நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றியமைத்து மோசடியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், இலங்கையருக்கு சொந்தமான கார் விற்பனை நிறுவனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றியமைத்து மோசடியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், இலங்கையருக்கு சொந்தமான கார் விற்பனை நிறுவனம் ஒன்று தண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நியூசிலாந்து அதிகாரிகளின் தகவலுக்கமைய, Sachis Holdings Ltd நிறுவனத்தினால் நடத்தப்படும் கார்போரியம் வாகன விற்பனை நிலையம், 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக வாகனம் ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
</p><p>
ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த குறித்த வாகனம், வழமையான சேவைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதன் ஓடோமீட்டர் பதிவிற்கும் சேவைப் பதிவேடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.
</p><h2><b>
வாகனம்&nbsp;கொள்வனவு </b></h2><p>விசாரணையில், குறித்த வாகனம் ஒக்லாந்து வாகன ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டபோது 150,031 கிலோமீற்றராக அதன் பயணத் தூரம் காணப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8dc6ddf-ce74-4bd7-b6e8-a418eac82326/26-6a5878cb87adc.webp' /></p><p>வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டபோது 119,244 கிலோமீற்றராகக் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. </p><p>

சுமார் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் போலியாகக் குறைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நியூசிலாந்தின் வணிக, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு, நடத்திய விசாரணையை தொடர்ந்து, மோட்டார் வாகன விற்பனைச் சட்டத்தின் கீழ் ஓடோமீட்டர் மோசடி மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்டது.
</p><h3><b>
அபராதம்&nbsp;விதிப்பு</b></h3><p>தண்டனை வழங்குவதற்கு முன்னதாக, குறித்த வாகனத்தை ஆரம்பத்தில் விற்பனை செய்த அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு மீண்டும் கொள்வனவு செய்ய கார்போரியம் நிறுவனம் ஒப்புக்கொண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41735a5e-0e30-4b1e-ae72-e91e7b7f0860/26-6a5878cc53d82.webp' /></p><p>அத்துடன், குறித்த நிறுவனத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 1,000 நியூசிலாந்து டொலர்களை இழப்பீடாக வழங்குமாறும் நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-07-16T06:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-mullaitivu-district-1784180641"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-mullaitivu-district-1784180641</id>
            <summary type="text">விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக்
கொள்வனவு செய்துவருகின்றது.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக்
கொள்வனவு செய்துவருகின்றது.
</p><p>
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு நேற்றையதினம்(15.07.2026) முள்ளியவளை கமநல சேவே நிலய நெல் களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல்
சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
நெல் வகைகள் </h2><p>சிவப்பு நாடு - 120 ரூபாய்
</p><p>வெள்ளை நாடு- 120 ரூபாய்
</p><p>சம்பா - 130 ரூபாய்
</p><p>கீரிச்சம்பா - 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10687e88-de48-4543-a081-2e47cb3f1e9d/26-6a586fa705d68.webp' /></p><p>
</p><p>
ஒரு விவசாயிடம் இருந்து 2500kg நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.
</p><p>முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது முள்ளியவளை கமநல சேவை நிலையத்தின் நெல்
களஞ்சிய சாலையிலும், முற்றிப்பு நெல் களஞ்சிய சாலையிலும் நெல் கொள்வனவு
ஆரம்பிக்கப்படுகின்றது.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய
எதிர்பார்க்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ரூ.2 கோடி போதைப்பொருளுடன் பிரபல பாடசாலை ஆசிரியை கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-2-crore-1784181180"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-2-crore-1784181180</id>
            <summary type="text">



கொழும்பில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையின் ஆசிரியை ஒருவரும், அவரது கணவரும் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் மாதம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொழும்பில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையின் ஆசிரியை ஒருவரும், அவரது கணவரும் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(15.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

கொழும்பு வடக்கு பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இவ்வாறு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>

சட்டக்கல்வி மாணவி கைது</h2><p>
இதன்போது, கணவரிடம் இருந்து 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், மனைவியிடம் இருந்து 149.150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>

“மொதர மயூர” என அழைக்கப்படும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் ஆதரவாளர்களாக இவர்கள் பணிப்புரிந்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0093f17-5f4d-49c6-afd3-38003ecffb66/26-6a5876968cac1.webp' /></p><p> </p><p>

மேலும், குறித்த தம்பதியினர் சில காலமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும், சந்தேக நபர், ஒரு தனியார் நிறுவனத்தில் சட்ட மாணவி என்றும், அதற்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கத்தில் இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மனைவி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இருவரும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டார் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-returns-to-sri-lanka-after-qatar-visit-1784179656"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-returns-to-sri-lanka-after-qatar-visit-1784179656</id>
            <summary type="text">கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்காக கட்டாருக்குச் சென்றிருந்த பிரதமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்காக கட்டாருக்குச் சென்றிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16.07.2026) நாடு திரும்பியுள்ளார்.</p><p>பிரதமர் ஹரிணி லுசைல் அரண்மனையில் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்து, அரச குடும்ப உறுப்பினர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்கள்</h2><p>மேலும் அவர், காலஞ்சென்ற அமீரின் மகள்களான ஷேக்கா அல் மயஸ்ஸா பின்த் ஹமத் அல் தானி மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் ஹமத் அல் தானி ஆகியோருக்கும், அத்துடன் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c4225ab-f2a1-4f75-b0c3-9e318b161846/26-6a5873ff121ba.webp' /></p><p>இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமியும் கலந்துகொண்டிருந்ததுடன், அவரிடமும் இலங்கை சார்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது இரங்கலைத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை அதிக அபாயகரமான சூழ்நிலை - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1784180299"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1784180299</id>
            <summary type="text">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p>

எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு அவர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p> தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e25c2e-d051-4101-a90f-a5db05c006e5/26-6a586fe46c035.webp' /></p><p> </p><p>

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16.07.2026) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-gpNqfXN4mg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-16T05:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வீட்டுச் சிறை நடைமுறைக்கான சாத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-house-arrest-system-1784177426"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-house-arrest-system-1784177426</id>
            <summary type="text">இலங்கையில் புதிய சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வீட்டுச் சிறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புதிய சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வீட்டுச் சிறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

நேற்றையதினம் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.</p><p></p><h2>கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்&nbsp;</h2><p> 

கைதிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்கு காரணமான சட்டத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தற்போதைய அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது. </p><p>

போதைப் பொருள் வர்த்தகர்களைப் பாதுகாத்து, நாடு முழுவதும் போதைப்பொருள் பரவுவதற்கு வழிவகுத்த பலர் இன்று சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிவது குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bf4b764-d42b-49ce-8626-7f08d26ac024/26-6a586e733311e.webp' /></p><p> </p><p> 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படும் போது, அவர்களுக்கு ஆதரவாகச் சென்று தழுவிக் கொண்டவர்கள் இன்று எப்படி பேசுகின்றாரகள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.</p><p> 

கடந்த காலத்தில் நாட்டில் போதைப்பொருள் விஷ்வரூபமெடுப்பதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.
</p><p>
இன்று நாம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், குறித்த நபர்கள் பதற்றமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T05:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்பதிக்கு இடையே மோதல் - தலையிட்டவரால் அடித்து கொலை செய்யப்பட்ட கணவர் - மனைவி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-a-fight-1784173356"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-a-fight-1784173356</id>
            <summary type="text">தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது.
</p><p>
இதன் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
முதலில் ஒரே வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2><b>தம்பதியினருக்கு இடையே மோதல்</b></h2><p>அதன் பின்னர் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த நபர் இந்த மோதலில் தலையிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ffe44fe-4237-463b-9d7b-051d21dda35e/26-6a585a2ab0a4c.webp' /></p><p>தலையிட்ட நபர் தடியால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய தடியைத் தனது வீட்டின் கூரை மீது வீசியிருந்தது கண்டறியப்பட்டது. பொலிஸாரால் அந்தத் தடி மீட்கப்பட்டது.</p><h2><b>
மேலதிக விசாரணை</b></h2><p>இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்து, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d88d894f-4e0c-40fb-b951-5a6705dde83d/26-6a585a2b692ea.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்தவர் குறித்த பகுதியில் வசித்து வந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய சுனில் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-gpNqfXN4mg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் - மீறினால் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-unregistered-nursing-homes-1784178018"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-unregistered-nursing-homes-1784178018</id>
            <summary type="text">பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 முதியோர் இல்லங்களை பதிவு செய்து கொள்வதற்காக எதிர்வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
</p><p>
 முதியோர் இல்லங்களை பதிவு செய்து கொள்வதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ae56be2-a1aa-4e96-a070-c9ebd536e38c/26-6a58681ebb83a.webp' /></p><p>
</p><p>
நாடு முழுவதுமுள்ள 459 முதியோர் இல்லங்களில் இதுவரை 148 இல்லங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T05:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-grave-issue-1784177142"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-grave-issue-1784177142</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்
காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து
முழுமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்
காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து
முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன
நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.</p><p></p><h2>வடக்கு மக்களிடமிருந்து பலத்த ஆதரவு&nbsp;</h2><p>

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தற்போதைய அரசின் முக்கிய நோக்கம் என்று
தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து மக்களுக்கும்
பொதுவான ஜனாதிபதி என்பதைச் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/217896fc-51cb-4315-94c8-e908cdee515e/26-6a5865d55140d.webp' /></p><p>வரலாற்றில் முதன்முறையாக இந்த அரசுக்கு வடக்கு மக்களிடமிருந்து பலத்த ஆதரவு
கிடைத்துள்ளது என்றும், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல வழிகளிலும் நல்லிணக்கத்தை
எட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர்
குறிப்பிட்டார்.
</p><p>
வடக்கு மற்றும் தெற்கு என இரு தரப்பிலும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று
தெரியாது பெற்றோர் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலை நீடிக்கின்றது என்று
குறிப்பிட்ட நீதி அமைச்சர், அந்த வேதனையைத் தீர்க்க அரசு முன்னுரிமை
அளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.</p><h2>பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி</h2><p>நாங்கள் ஆட்சிக்கு வரும்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் போதிய ஆளணி
வளம் இருக்கவில்லை. நாம் உடனடியாகப் புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து 60 பேரை
அதில் இணைத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46250cff-1297-4ccf-bdc1-4c44054c96b7/26-6a58678859d22.webp' /></p><p> இதற்கென வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும்
செய்யப்பட்டுள்ளன. தற்போது தலா மூன்று பேர் கொண்ட 15 விசாரணைப் புலனாய்வுக்
குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இதன்மூலம், நிலுவையிலுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அது போன்ற
சம்பவங்களில் உண்மையை வெளிக்கொணரவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்
பெற்றுக்கொடுக்கவும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும் அதற்குத்
தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T05:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-women-arrested-in-bia-1784177219"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-women-arrested-in-bia-1784177219</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில், இலங்கை பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணப் பைகளில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மலர்ச் செடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில், இலங்கை பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பயணப் பைகளில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மலர்ச் செடிகளைக் கொண்டு வர முயன்ற பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL 403 விமானத்தில்&nbsp; இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.</p><p>
</p><h2><b>
இலங்கை பெண் கைது</b></h2><p>குறித்த பயணி, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கத்தின் அதிகாரிகளால் பசுமை வழித்தடத்தில் வைத்து இடைமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c816f2-5fbc-4981-a74f-a929d09db7b2/26-6a586413ae614.webp' /></p><p>1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்திற்கமைய, தாவரங்கள் அல்லது அதன் பாகங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் மற்றும் ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து குறித்த தாவரங்கள் பூச்சிகளற்றவை என்பதையும், அனைத்து தனிமைப்படுத்தல் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளன என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் அவசியமாகும்.</p><p>
</p><h3><b>
தண்டனைக்குரிய குற்றமாகும்</b></h3><p>இந்த நிபந்தனைகளுக்கு புறம்பான எந்தவொரு இறக்குமதியும் சட்டவிரோதமான செயல் என்பதுடன், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என சுங்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47177ab-3efb-4880-9bae-ec972878c87c/26-6a5864145d3a5.webp' /></p><p>விசாரணைகளை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட மலர்ச் செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பயணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. </p><p>கைப்பற்றப்பட்ட தாவரங்கள், அழிப்பதற்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-16T04:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் நிர்வாகத்தின் ஐ.சி.சி தடைகளுக்கு எதிராக அமெரிக்காவில் புதிய வழக்கு: மனித உரிமை அமைப்புகள் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-lawsuit-in-the-us-against-icc-sanctions-1784176879"></link>
            <id>https://tamilwin.com/article/new-lawsuit-in-the-us-against-icc-sanctions-1784176879</id>
            <summary type="text">நெதர்லாந்தின் த ஹேக் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தின் (ICC) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்
விதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்தின் த ஹேக் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தின் (ICC) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்
விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், அமெரிக்கக் குடிமக்களின் அரசியலமைப்புச் சட்ட
உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று
தொடரப்பட்டுள்ளது.
</p><p>
வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட 'டான்' மனித உரிமைகள் அமைப்பு மற்றும்
'இனப்படுகொலைக்கு எதிரான வரி செலுத்துவோர் கூட்டணி' (TAAG) ஆகிய அமைப்புகள்
இணைந்து புதன்கிழமை இந்த வழக்கைத் தொடுத்துள்ளன.</p><p></p><h2>நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை</h2><p>
</p><p>
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
யோவ் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த
பிடியாணைகளுக்குப் பதிலடியாக, கடந்த 2025 பெப்ரவரியில் ஜனாதிபதி ட்ரம்ப்
நிர்வாகம் ஐ.சி.சி அதிகாரிகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
</p><p>
இந்தத் தடைகளின் கீழ், ஐ.சி.சி வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் சர்வதேச
நீதிமன்றத்திற்கு ஆதாரங்களை வழங்கிய சில பாலஸ்தீன அமைப்புகள் மட்டுமின்றி,
பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
பிரான்செஸ்கா அல்பானீஸ் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர்.</p><p></p><p>

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, பாலஸ்தீன மக்களின் மனித
உரிமைகளுக்காகப் பேசும் அமெரிக்கக் குடிமக்களின் பேச்சுரிமையையும், கருத்துச்
சுதந்திரத்தையும் அச்சுறுத்துவதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
சர்வதேச நீதிமன்றத்திடமோ அல்லது வெளிநாட்டு உரிமை ஆர்வலர்களிடமோ அமெரிக்கர்கள்
தொடர்புகொள்வதையும், தங்களது கருத்துகளைப் பகிர்வதையும் இந்த தடைகள்
தடுப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3395ae-eef7-43f6-9f8e-2193dee48f25/26-6a58627ea90a0.webp' /></p><h2>ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை</h2><p>
</p><p>
மேலும், இந்தத் தடைகள் தகவல் பரிமாற்றங்களை முடக்குவதற்கு ஜனாதிபதிக்கு
அதிகாரம் இல்லை என்று கூறும் 1977-ஆம் ஆண்டின் அமெரிக்காவின் 'சர்வதேச அவசரகால
பொருளாதார அதிகாரங்கள் சட்டத்திற்கு' எதிரானது என்றும் அந்த மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஐ.சி.சி நீதிமன்றத்தை
முற்றிலும் முடக்குவதற்கு அமெரிக்க அரசு தீவிரமாகச் செயல்படும் என்று
எச்சரித்திருந்த நிலையில், இந்த புதிய சட்டப் போராட்டம் ட்ரம்ப்
நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T04:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அடியோடு ஒழிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/executive-presidency-system-completely-abolished-1784174357"></link>
            <id>https://tamilwin.com/article/executive-presidency-system-completely-abolished-1784174357</id>
            <summary type="text">ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத்
தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத்
தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனாதிபதி முறைமையை ஒழிக்க அரசு முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தின் மூன்று
தூண்கள் என்றும், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கிய
வகிபாகத்தை ஆற்றி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
</p><p>
சுயாதீன ஊடகங்களும், சிவில் சமூகமுமே ஏனைய இரு முக்கிய தூண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்கள் எமக்கு வழங்கிய ஆணை</h2><p>இவ்வாறான சூழலில், தற்போதைய அரசு நீதிமன்றத்துக்குப் பாரிய அழுத்தங்களைப்
பிரயோகிப்பதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், உயர்நீதிமன்ற
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல் மற்றும் உயர்நீதிமன்றங்களில்
நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது விடுதல் போன்ற செயற்பாடுகள்
நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால்கள் என தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/052ed914-fb12-4c77-8796-3248aa1ea925/26-6a585a5bc7d76.webp' /></p><p>
நீதியரசர்களை நியமிக்காது வெற்றிடங்களை வைத்திருப்பது நீதிமன்றத்தின் மீதான
மறைமுக அழுத்தமாகும் என்று குறிப்பிட்ட அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை
நிலைநாட்ட ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் உறுதியுடன்
இருக்கின்றன என தெரிவித்தார்.
</p><p>ஜனநாயகத்தையும் நீதிமன்றத்தையும் சீர்குலைக்காது, நிறைவேற்று ஜனாதிபதி
முறைமையை ஒழிக்கக் கூடிய புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதே தற்போதைய
தேவையாகும். </p><p>மக்கள் எமக்கு வழங்கிய ஆணையும் ஜனாதிபதி முறைமையை ஒழித்து
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கே ஆகும். இந்த மக்கள் ஆணையை நிராகரிப்பது,
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T04:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சியளிக்கும் செம்மணிப் புதைகுழி! மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784173895"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784173895</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு சிறு குழந்தைகளின்
என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு சிறு குழந்தைகளின்
என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி
நேற்று (15.07.2026) ஆரம்பமாகியது.</p><p> இதன்போது புதிதாக சிறு குழந்தைகள் இருவருடைய என்புத்
தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><h2>மனித என்பு எச்சங்கள்</h2><p>

அதேவேளை, மேலும் இரண்டு மனித என்பு எச்சங்கள் குவியல்களும் நேற்று அடையாளம்
காணப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், நேற்று புதிதாக மனித என்புத் தொகுதிகள் எதுவும் அகழ்ந்து
எடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5514f160-d993-41e2-a27f-28b12293c60b/26-6a5858981e066.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும்
இரண்டிலிருந்து, இதுவரை மொத்தமாக 414 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் இதுவரை 409 என்புத் தொகுதிகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T04:06:08+00:00</updated>
        </entry>
    </feed>
