<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-18T21:43:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-in-the-us-against-artificial-data-centers-1784409803"></link>
            <id>https://tamilwin.com/article/protests-in-the-us-against-artificial-data-centers-1784409803</id>
            <summary type="text">அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்காக
அதிவேகமாக அமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்காக
அதிவேகமாக அமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள்
தீவிரமடைந்துள்ளன.</p><p>

இதன் முதற்கட்டமாக, சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள
சுமார் 125 இற்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த முறையில் பிரம்மாண்ட
போராட்டங்களை நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்
சேவை தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஓராண்டில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது செயற்கை
நுண்ணறிவுத் திட்டங்களுக்காகத் தரவு மையங்களை மிகத் தீவிரமாக விரிவுபடுத்தி
வருகின்றன.</p><p></p><h2>போராட்டம்</h2><p>
</p><p>
இதனால் உள்ளூர் மக்களின் மின்கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம்
ஏற்பட்டுள்ளதோடு, இந்த மையங்களின் குளிர்விப்புத் தேவைகளுக்காகப் பெருமளவிலான
நன்னீர் வளங்கள் உறிஞ்சப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும்
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eea85b2f-4b98-40c3-b423-d59e62795a0e/26-6a5bf04be4803.webp' /></p><p>

'ஹியுமன்ஸ்ஃபர்ஸ்ட்' என்ற மக்கள் நல அமைப்பினால் இந்த நாடு தழுவிய
போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு
மக்களையும் ஒன்றிணைத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T21:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் மர்ம நபர்கள்! சிக்கிய CCTV காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455"></link>
            <id>https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும் சிசிரிவி காணொளிகளை மீட்டு விசாரணைகளை மேற்கொள்வது என்று ஒரு கருத்து கூறப்படுகின்றது.அதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கின்றது என்று தெரியவில்லை.</p><p>ஏனென்றால் அவர் நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளை சாதாரணமாகத் தான் ஆரம்பித்து இருக்கின்றார்.ஏன் இந்தத் தவறான முடிவை அவர் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்தார் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.</p><p>வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகளை மையப்படுத்தி பொலிஸார் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலரின் வாக்குமூலத்தில் சந்தேகங்கள் எழுவதாகக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/01_b2ALaeiI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T19:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்.. வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-us-troops-killed-one-missing-iranian-attack-1784403160"></link>
            <id>https://tamilwin.com/article/two-us-troops-killed-one-missing-iranian-attack-1784403160</id>
            <summary type="text">ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்&amp;nbsp; தாக்குதல்களில்&amp;nbsp;இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார்.&amp;nbsp;10 ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்&nbsp; தாக்குதல்களில்&nbsp;இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார்.&nbsp;</p><h2>10 ஈரானிய ஏவுகணைகள்&nbsp;</h2><p>ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a95546-3172-4dbe-961f-00e600c59e09/26-6a5bdae8aa0ab.webp' /></p><p>இந்தத் தாக்குதலின் போது ஜோர்டான் வான்பரப்பில் நுழைந்த 10 ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் இராணுவம் கூறியுள்ளது.</p><p> இதற்கிடையில், அல்-அஸ்ராக் (Al-Azraq) தளத்திலிருந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை அழித்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T19:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வடமராட்சி மந்திகை பகுதியில் விபத்து: வயோதிபர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-manthikai-elderly-person-injured-1784400272"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-manthikai-elderly-person-injured-1784400272</id>
            <summary type="text">யாழ். வடமராட்சி- மந்திகை பகுதியில் மந்திகை பகுதியில் இடம்பெற்ற விபத்தித்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வடமராட்சி- மந்திகை பகுதியில் மந்திகை பகுதியில் இடம்பெற்ற விபத்தித்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்று
திடீரென வீதிக்கு குறுக்காக கடக்க முற்பட்ட வாயோதிபர் மீது மோதியதிலேயே
குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இதில் காயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள பருத்தித்துறை ஆதார
வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad4e8bf-5693-4694-b44c-39a34b88662d/26-6a5bd0e91273a.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T19:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keppapulavu-peoples-protest-release-of-their-lands-1784398091"></link>
            <id>https://tamilwin.com/article/keppapulavu-peoples-protest-release-of-their-lands-1784398091</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட,
கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி
25ஆவது நாளாக இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட,
கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி
25ஆவது நாளாக இன்றையதினம் (18) தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்தநிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர்போராட்டத்தில்
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்
மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.</p><p></p><h2>தெளிவூட்டல்</h2><p>
</p><p>
அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சிறீதரனக்கு, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் போராட்டம்
தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/671d6a01-5cf6-44ac-9f44-a439c7cdc4fa/26-6a5bc82d464b0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T18:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-former-igp-statements-record-from-10-people-1784383347"></link>
            <id>https://tamilwin.com/article/death-former-igp-statements-record-from-10-people-1784383347</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்புச் சம்பவம்
தொடர்பில் இதுவரை 10 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு
செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்புச் சம்பவம்
தொடர்பில் இதுவரை 10 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
64 வயதான சி.டி. விக்ரமரத்ன, நேற்று(17) காலை மாலம்பே, தலாஹேன
பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்
உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p> </p><p>தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ்
உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாகக் கூறி, அதனைப்
பெற்றுக்கொண்டு அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என முதற்கட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3ef402-c32f-486f-bfaf-96378ff52a3e/26-6a5b8a1a03de6.webp' /></p><p>
</p><p>
இந்த மரணம் தவறான முடிவெடுக்கப்பட்ட உயிர்மாய்ப்பு என கருதப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக
அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் வழங்கப்படமாட்டாது எனத்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p> சம்பவம் நடந்த வேளையில், இரு பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மனைவி மற்றும் இளைய மகன்
ஆகியோர் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர்
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>இறுதிச் சடங்குகள்</h2><p>
</p><p>இதற்கமைய, கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில்,
மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274ca6e3-35b0-45de-a5bd-ea161217dfdf/26-6a5b8a1ab254f.webp' /></p><p> </p><p>அத்துடன், நுகேகொட கோட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில்,
மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றார்.
</p><p>
இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை
பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
</p><p>
அவரது இறுதிச் சடங்குகள் நாளைமறுதினம்(20) திங்கட்கிழமை பிற்பகல் பொரளை பொது
மயானத்தில் நடைபெறவுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T18:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-s-first-private-orbital-rocket-vikram-1784387540"></link>
            <id>https://tamilwin.com/article/india-s-first-private-orbital-rocket-vikram-1784387540</id>
            <summary type="text">&amp;nbsp;பெங்களூரு – இந்தியாவின் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனமான &#039;ஸ்கைரூட்
ஏரோஸ்பேஸ்&#039;, நாட்டின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட்டான &#039;விக்ரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெங்களூரு – இந்தியாவின் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ஸ்கைரூட்
ஏரோஸ்பேஸ்', நாட்டின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட்டான 'விக்ரம்-1'
ஐ சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
</p><p>
இதன் மூலம் உலகளாவிய வணிக ரீதியிலான விண்வெளிச் சந்தையில் இந்தியா தனது
பங்களிப்பை வலுப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>விக்ரம்-1</h2><p>

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி
மையத்திலிருந்து "மிஷன் ஆகமன்" என்ற திட்டப் பெயரில் இந்த ரொக்கெட் விண்ணில்
ஏவப்பட்டது.
</p><p>
திட்டமிட்டபடி 15 நிமிடங்களில், புவிக்கு அருகேயுள்ள 450 கிலோமீற்றர்
சுற்றுப்பாதையில் வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை இந்த ரொக்கெட்
வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇳 India successfully launches first private orbital rocket Vikram-1 by Skyroot Aerospace, delivering payload to 450 km orbit. Major step for private space industry, competing with SpaceX. <a href="https://t.co/GvUZ3DFRpF">pic.twitter.com/GvUZ3DFRpF</a></p>&mdash; X News (@XNewsGlobalEn) <a href="https://x.com/XNewsGlobalEn/status/2078438540229394850?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம், தனியார் விண்வெளித் துறை மூலமாகச் சுற்றுப்பாதை ஏவுதல் திறனைப்
பெற்ற உலகின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.</p><p>

விமானப் பயணத்தின் போது ரொக்கெட்டின் உந்துவிசை, வழிகாட்டுதல் மற்றும்
கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சோதிப்பதற்காக இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக
ஸ்கைரூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>விண்வெளித் துறை</h2><p>
</p><p>
22 மீற்றர் உயரமுள்ள 'விக்ரம்-1' ரொக்கெட், 350 கிலோ வரையான எடையைச் சுமந்து
செல்லும் திறன் கொண்டது.

3டி பிரிண்டிங் தொழில்நுட்ப எஞ்சின் உட்பட உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் இதில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d455045-74ce-43bd-a237-3e863a02f1e1/26-6a5b9a8900b32.webp' /></p><p>
</p><p>
விண்வெளித் துறையை 2020ஆம் ஆண்டு தனியார் முதலீட்டிற்கு இந்திய அரசு
திறந்துவிட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1 பில்லியன் டொலர்
மதிப்பீட்டை எட்டிய முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஸ்கைரூட்
மாறியுள்ளது.</p><p>

தற்போது 8 பில்லியன் டொலராக இருக்கும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை,
தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு 2033ஆம் ஆண்டளவில் 44 பில்லியன் டொலராக
உயர்த்த இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T18:21:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய ஸ்டீல் நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்ட விவகாரம்: சீனா விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-issues-warning-over-british-steel-takeover-1784397865"></link>
            <id>https://tamilwin.com/article/china-issues-warning-over-british-steel-takeover-1784397865</id>
            <summary type="text">பிரித்தானிய ஸ்டீல் நிறுவனத்தைப் பிரித்தானிய அரசாங்கம் அரசுடைமையாக்கிய
நடவடிக்கையைத் தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் தனது
நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய ஸ்டீல் நிறுவனத்தைப் பிரித்தானிய அரசாங்கம் அரசுடைமையாக்கிய
நடவடிக்கையைத் தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் தனது
நாட்டின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தகுந்த
நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
பிரித்தானியாவின் நட்டமடைந்து வந்த பிரித்தானிய ஸ்டீல் நிறுவனம், சீனாவின்
தனியார் எஃகு உற்பத்தி நிறுவனமான 'ஜிங்யே' குழுமத்திற்குச் சொந்தமாக இருந்தது.</p><p></p><h2>அரசாங்கத்தின் நம்பகத்தன்மை&nbsp;</h2><p>
</p><p>
எனினும், தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, பிரித்தானிய அரசாங்கம்
கடந்த வியாழக்கிழமை அந்த நிறுவனத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டுவந்து அரசுடைமையாக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e49da2c0-304b-46b1-9732-19bd5df50def/26-6a5bc292641ec.webp' /></p><p>
</p><p>
இந்த விவகாரம் சீனாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சீன
வெளியுறவு அமைச்சு, "பிரித்தானியா இந்த விடயத்தைக் கையாளும் விதம்,
பிரித்தானியாவின் முதலீட்டுச் சூழல் மீது சீன முதலீட்டாளர்கள் கொண்டுள்ள
நம்பிக்கையையும், பிரித்தானிய அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து சீனப்
பொதுமக்கள் மத்தியில் எழும் கருத்துருவாக்கத்தையும் நேரடியாகப் பாதிக்கும்"
எனத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
அத்துடன், நட்டஈடு வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரு தரப்பினருக்கும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சுமுகமான தீர்வை பிரித்தானியா காண வேண்டும் என்றும்
சீனா வலியுறுத்தியுள்ளது.
</p><p>
பிரித்தானிய ஸ்டீல் நிறுவனத்தில் தாங்கள் செய்த முதலீட்டின் மூலம் ஏற்பட்ட
இழப்புகளுக்குப் பிரித்தானிய அரசாங்கம் தங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என
ஜிங்யே ஸ்டீல் நிறுவனம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T18:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கோர விபத்து: பொலிஸ் அதிகாரி பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-vavuniya-police-sergeant-killed-1784397745"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-vavuniya-police-sergeant-killed-1784397745</id>
            <summary type="text">வவுனியா- ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர்
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா- ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர்
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9
வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில்
தரித்து நின்ற கனரக வாகனத்தின் பின் பகுதியில் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சாஜன்டான
கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a7b7356-59fe-4160-85c3-5d4848eeca6e/26-6a5bbfb36860e.webp' /></p><p>
</p><p>
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T18:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய இடைத்தேர்தல் - நைஜல் ஃபரேஜை எதிர்த்து களம் காணும் 34 வேட்பாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uk-election-34-nominies-challenge-nigel-farage-1784395842"></link>
            <id>https://tamilwin.com/article/uk-election-34-nominies-challenge-nigel-farage-1784395842</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வலதுசாரி ரிஃபார்ம் யூகே கட்சியின் தலைவரான நைஜல் ஃபரேஜ்,
தனது நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் பதவி விலகியதை அடுத்து,
கிளாக்டன் தொகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வலதுசாரி ரிஃபார்ம் யூகே கட்சியின் தலைவரான நைஜல் ஃபரேஜ்,
தனது நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் பதவி விலகியதை அடுத்து,
கிளாக்டன் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஃபரேஜை எதிர்த்து, சாதனை அளவாக 33
வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
</p><p>
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தொகுதியில் மொத்தம் 34
வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்று இத்தேர்தலை நடத்தும்
டென்டரிங் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, தனக்குக் கிடைத்த நிதி நன்கொடைகளை முறையாக
அறிவிக்காதது தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியதை அடுத்தே ஃபரேஜ் தனது பதவி விலகினார்.</p><p></p><h2>இடைத்தேர்தல்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக, கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 5 மில்லியன் பவுண்டுகள்
($6.7 மில்லியன்) மதிப்பிலான தொகையைப் பெற்ற விவகாரம் பெரும் பூதாகரமானதை
அடுத்து இந்த பதவி விலகல் நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b895788e-8a90-427a-989e-c7365d6df1b8/26-6a5bbcdb7cdc5.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஃபரேஜ், தான் மீண்டும்
நாடாளுமன்றத்திற்குச் செல்வதை மக்களே தீர்மானிக்கட்டும் என்று
தெரிவித்துள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் இந்த இடைத்தேர்தலை ஒரு "ஊடக
சர்க்கஸ்" என்று கூறிப் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன.

இதன் காரணமாக, சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் நையாண்டிப்
பிரச்சாரகர்கள் இத்தேர்தலில் அதிகளவில் களம் இறங்கியுள்ளனர்.
</p><p>
இவர்களில், தலையில் ஒரு உலோகக் குப்பைத் தொட்டியை அணிந்து கொண்டு 'கவுண்ட்
பின்ஃபேஸ்' என்ற பெயரில் போட்டியிடும் நகைச்சுவை நடிகர் ஜான் ஹார்வி மற்றும்
பல தசாப்தங்களாக பிரித்தானியத் தேர்தல்களில் நையாண்டி அரசியல் செய்து வரும்
'அஃபிஷியல் மான்ஸ்டர் ரேவிங் லூனி' கட்சியின் தலைவர் ஆலன் ஹோப் ஆகியோர்
ஃபரேஜுக்கு முக்கிய சவாலாக விளங்குகின்றனர்.</p><p>

இவர்களுடன் தீவிர வலதுசாரி நடிகரான லாரன்ஸ் பாக்ஸும் போட்டியிடுகிறார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 13 அன்று நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் ஃபரேஜ் வெற்றி
பெறுவதற்கே 95 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக இணையவழி கணிப்புகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T17:56:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைவு: இந்த மாத தாக்குதல்களில் 50 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/escalation-of-us-iran-conflict-50-killed-1784395564"></link>
            <id>https://tamilwin.com/article/escalation-of-us-iran-conflict-50-killed-1784395564</id>
            <summary type="text">டெஹ்ரான் – ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள்
இந்த மாதத்தில் பெரும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூலை 6 ஆம் திகதி
முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெஹ்ரான் – ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள்
இந்த மாதத்தில் பெரும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூலை 6 ஆம் திகதி
முதல் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>அத்துடன் 500 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஏழாவது இரவாக நடத்திய தாக்குதல்களின் காரணமாக,
ஈரானின் தென்பகுதியில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மக்கள்
குடிநீர் விநியோகமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் தேசிய நீர் நிறுவனம்
தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பொருளாதாரத் தடை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து,
அமெரிக்க இராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்குப் பொருளாதாரத் தடையை விதிக்க
நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcc6a06b-af50-487e-a1ee-38d42e200f77/26-6a5bbcf0371df.webp' /></p><p>கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை
கையெழுத்தான போதிலும், தற்போது மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள
'பிக்அக்ஸ் மலை' நிலத்தடி அணுசக்தி மையத்தைத் தகர்க்கப் போவதாக அண்மையில்
எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த இடம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T17:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணையின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம்.. சிகிச்சையின் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னணி வர்த்தகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clothing-retailer-owner-remanded-customs-probe-1784390769"></link>
            <id>https://tamilwin.com/article/clothing-retailer-owner-remanded-customs-probe-1784390769</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
சுங்க அதிகாரிகளுடன் இருந்தபோது ஜயவர்தனவுக்கு இந்த மருத்துவ நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da25e7b8-008a-4760-b325-5f965946b6c1/26-6a5baa402d849.webp' /></p><p>
இந்நிலையில், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T16:49:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் கடும் வெள்ளப்பெருக்கு: 4 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-flooding-in-vietnam-4-dead-1784391377"></link>
            <id>https://tamilwin.com/article/severe-flooding-in-vietnam-4-dead-1784391377</id>
            <summary type="text">ஹனோய் – வியட்நாமின் வடக்கு மாகாணமான லாய் சௌவில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்
நான்கு பேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹனோய் – வியட்நாமின் வடக்கு மாகாணமான லாய் சௌவில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்
நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும்
மழையினால், வெள்ளிக்கிழமை அதிகாலை முவோங் தான் கிராமத்தில் இந்த வெள்ள
அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த அனர்த்தத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மண்சரிவுகள்&nbsp;</h2><p>
</p><p>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராமத்தில் செம்மண் மற்றும் வெள்ள நீர்
புகுந்துள்ளதையும், சேதமடைந்த வீதிகள் மற்றும் வீடுகளின் ஒரு மூலையில் கற்கள்
மற்றும் மரத்தடிகள் குவிந்துள்ளதையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b621fd85-ccc7-4385-88c8-1388fc68e147/26-6a5ba6d31df8f.webp' /></p><p>
</p><p>
கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள்
மற்றும் திடீர் வெள்ளத்தினால், அப்பகுதியில் வீதிகள், மின்சாரக் கட்டமைப்புகள்
மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
</p><p>
அத்துடன், சுமார் 238 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக
அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவ ண நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் சனிக்கிழமை 250 மில்லிமீற்றர் வரை கடும் மழை
பெய்யக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளதால், மேலதிக வெள்ளப்பெருக்கு
மற்றும் மண்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a86bdfe-c7d0-487e-a096-7c28cae19215/26-6a5ba6d3c474b.webp' /></p><p>

ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே வியட்நாமில் மழையுடன் கூடிய
காலநிலை உச்சத்தை அடைவதுடன், இக்காலகட்டத்தில் சூறாவளி மற்றும் வெள்ள
அனர்த்தங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும்.
</p><p>
கடந்த ஆண்டு இயற்கை அனர்த்தங்கள், முக்கியமாக வெள்ளப்பெருக்கினால் வியட்நாமில்
489 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T16:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கும் அமைச்சர் சந்திரசேகரன்: அன்னராசா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandresekaran-try-destroy-ident-fishing-community-1784388863"></link>
            <id>https://tamilwin.com/article/chandresekaran-try-destroy-ident-fishing-community-1784388863</id>
            <summary type="text">கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற்றொழிலாளர்களின் அடையாளங்களை அழிக்க முற்படுவதாக முன்னாள் கடற்தொழில் சமாசத்தின்
தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்&nbsp; இன்று(18) சனிக்கிழமை வடக்கு
 கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள்
போராட்ட முன்னணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>கடற்றொழிலாளர்களின் அடையாளம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத சீனக் கடல் அட்டை
பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊக்குவிப்பது எமது கடற்தொழில்
மக்களை கருவறுக்கும் செயற்பாடாக பார்க்கிறோம்.
</p><p>
இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக
இருப்பது கவலையை உண்டு பண்ணுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c15935a4-c93b-48a0-b200-f072cedfd2aa/26-6a5ba07eea295.webp' /></p><p> ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் உடைய பிரதேச செயலாளர்
பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள
நினைக்கிறார்கள்.

எமது கடல் எமக்குச் சொந்தம் கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது.
</p><p>அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என
கேட்க விரும்புகிறோம்.</p><p>

ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகத்தின் பாரம்பரிய கடற்தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு
அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினை&nbsp;</h2><p>

ஏனெனில் ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்தில் கடல் அட்ட பண்ணைக்கு எதிராக எம்மோடு
குரல் கொடுத்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தற்போது அட்டை
பண்ணைகளை வாரி வழங்க முற்படுவது ஏன்.
</p><p>
கடற்றொழில் சமூகத்தின் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கிற பல பிரச்சனைகள் தொடர்பில்
நாம் தெற்கை சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் கலந்துரையாடி அவர்களும்
எமக்காக குரல் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.
</p><p>
குறிப்பாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மீன்பிடி திருத்தச்
சட்டம் முற்றாக நீக்கப்படுவதோடு இந்தியா இழுவை மாடி கடற்றொழிலாளர்களின்
அட்டகாசங்களுக்கு இராஜதந்திர ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f8ff88-4f1d-4b84-9d5b-bf712a8735d6/26-6a5ba0800749d.webp' /></p><p>
</p><p>
மேலும் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார ரீதியில் பின்னோக்கி காணப்படுகின்ற நிலையில்
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானிய மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்தி விலை
குறைப்பு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை
முன்வைத்து எமது கலந்துரையாடலை மேற்கொண்டோம்.</p><p>

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தேர்தல் காலங்களில்
சாதகமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்த பின்னர் அது
தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் கடற்றொழில் சமூகம் போராட்டத்தின் மூலம்
அவர்களின் கவனத்தை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம்.</p><p>

ஆகவே எமது கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் அடையாளத்தை அழிப்பதற்கு
கடற்தொழில் அமைச்சர் முனைவாராயின் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம்
என அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T15:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்த் தேசியத்தைத் தாங்கும் வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்றே ஆடிப்பிறப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aadi-tradition-cultural-roots-tamil-nationalism-1784389870"></link>
            <id>https://tamilwin.com/article/aadi-tradition-cultural-roots-tamil-nationalism-1784389870</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் தொன்றுதொட்டு இடம்பிடித்து வரும்
பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இது வெறுமனே கூழும் கொழுக்கட்டையும்
ஆக்கிப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் தொன்றுதொட்டு இடம்பிடித்து வரும்
பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இது வெறுமனே கூழும் கொழுக்கட்டையும்
ஆக்கிப் பரிமாறும் பருவகாலச் சடங்கு அல்ல. இது தமிழ்த் தேசியத்தைத் தாங்கி
நிற்கின்ற வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்று என்று தமிழ்த் தேசியப் பசுமை
இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா நேற்று (17.07.2026) தாவடியில் நடைபெற்றது.</p><p> இவ்விழாவுக்குத் தலைமை வகித்து
உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழுகின்ற மக்கள் தங்களின்
தனித்துவமான மொழி, பண்பாடு, வாழ்வியல் விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு தங்களை
ஒரு தனிப்பெரும் சமூகமாக உணரும் கூட்டு ஆன்மா ஆகும். </p><p>இந்தக் கூட்டு அடையாளமே
அந்தச் சமூகத்துக்குத் தங்களது அரசியல், பொருளாதார, சமூக எதிர்காலத்தைத்
தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்குகின்றது. </p><p>ஆனால், எமது அரசியல்வாதிகள்
பலரும் தேசியம் என்பதன் முழுமையான பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாமல் அதனை
வெறும் அரசியல் கோசமாக மேடைகளில் முழங்கி வருகின்றார்கள்.&nbsp;</p><p>தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் பலரும் மொழி உரிமைக்கும் நில
மீட்புக்கும் கொடுக்கும் முதன்மைத்துவத்தைப் பண்பாட்டுப் பாதுகாப்புக்கு
வழங்குவதில்லை. ஒரு சமூகத்துக்குத் தேசிய இனம் என்ற தகுதியை வழங்குவதற்கு அது
பூர்வீகமாக வாழந்து வருகின்ற நிலமும், அது பேசுகின்ற மொழியும் எந்த அளவுக்கு
முக்கியத்துவம் பெறுகின்றதோ அந்த அளவுக்கு அதன் பண்பாடும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகும். </p><p>நிலமும், மொழியும் ஒரு உடலின் உறுப்புகளுக்கு ஒப்பானது என்றால்
பண்பாடு என்பது அந்த உடலைக் கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற
உயிருக்கு ஒப்பானது.

உயிர் பிரிந்த உடல் எவ்வாறு சிதைந்து போகுமோ அது போன்றே ஒரு தேசிய இனம் தன்
பண்பாட்டு வேர்களை இழந்து விட்டால் தன் அரசியல் உரிமைகளுக்காகப் போராடும்
வீரியத்தை இழந்துவிடும். </p><p>அதன் நிலமும், மொழியும் காலப்போக்கில் அந்நிய
ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி அழிந்து போய்விடும். உலக மயமாக்கலும், தென்
இலங்கையின் பண்பாட்டுத் திணிப்புகளும் வேகமாக நடக்கும் இக்காலத்தில்
ஆடிப்பிறப்புப் போன்ற பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதும், அதன்

முக்கியத்துவங்களை இளைய தலைமுறையினருக்குச் சேர்ப்பிப்பதும் ஓர் அரசியல்
போராட்டம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T15:52:25+00:00</updated>
        </entry>
    </feed>
