<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-19T09:40:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசுக்குத் தைரியமில்லை! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-not-have-courage-provincial-elections-1784452753"></link>
            <id>https://tamilwin.com/article/government-not-have-courage-provincial-elections-1784452753</id>
            <summary type="text">&quot;மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு இதுவரை எந்தவிதமான வினைத்திறனான
நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச்
செயற...</summary>
            <content type="html"><![CDATA[<p>"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு இதுவரை எந்தவிதமான வினைத்திறனான
நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச்
செயற்குழுவின் நடவடிக்கைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
எம்.பி. தெரிவித்தார்.</p><p>மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>எதிர்க்கட்சி குற்றச்சாட்டு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>
</p><p>
"மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம் என்று அரசு மேடைப் பேச்சுகளில்
மாத்திரமே கூறி வருகின்றது, செயலில் ஒன்றும் நடக்கவில்லை. செயற்குழுவில்
முன்வைக்கப்படும் யோசனைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே அரசின்
செயற்பாடுகள் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ceb7b0-9ebc-4849-9b5a-b07e6c76d489/26-6a5c987d71548.webp' /></p><p> </p><p>தேர்தலை விரைவாக நடத்தும் எவ்வித நோக்கமும்
அரசுக்கு இல்லை.

மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாகக் கூறும் அரசு, தைரியமிருந்தால்
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். </p><p>தேர்தல் ஒன்று இடம்பெற்றால்
மட்டுமே மக்கள் தமது உண்மையான அபிப்ராயத்தை வெளிப்படுத்துவார்கள். அரசின்
மீதான மக்களின் நம்பிக்கை தற்போது பெருமளவு சிதைவடைந்துள்ளதால், அரசு
தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றது என&nbsp;குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T09:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தியுங்கள்! கூட்டு தமிழ் பேசும் கட்சிகளிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-request-tamil-speaking-party-form-coalition-1784451579"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-request-tamil-speaking-party-form-coalition-1784451579</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும், தமிழ் மக்கள் சார்ந்த இதர முக்கிய
விடயங்கள் தொடர்பிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும், தமிழ் மக்கள் சார்ந்த இதர முக்கிய
விடயங்கள் தொடர்பிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின்
இராஜதந்திரிகளைச் சந்தித்து வலியுறுத்துமாறு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான நேற்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிகாரப் பகிர்வு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"அதிகாரப் பகிர்வு, புராதன சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய அரசியல்
நிலவரங்கள் குறித்து வடக்கு - கிழக்கு தமிழ்க் கட்சிகள், மலையகத் தமிழ்க்
கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அடங்கிய ஆறு கட்சிகளின் கூட்டுச்
சந்திப்பில் விரிவாகப் பேசினோம்.

தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாகாண சபையின் அதிகாரங்களை அரசு எந்தக் காரணத்தைக்
கொண்டும் பறிமுதல் செய்யக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c802d3f-400c-4c2f-9bc7-a57268a308e9/26-6a5c93ce3079e.webp' /></p><p> </p><p>அண்மையில் மன்னார் மற்றும் தெல்லிப்பழை
ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள்
முன்னெடுக்கப்பட்டமை சட்டவிரோதமானதும், அரசமைப்புக்கு முரணானதும் ஆகும்.
</p><p>பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை
மீண்டும் மத்திய அரசுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நாம் எதிர்க்கின்றோம்.</p><p></p><h2>&nbsp;மாகாண சபைத் தேர்தல்</h2><p>
</p><p>இவ்வாறான விடயங்கள் குறித்து மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த
வேண்டியது அவசியம்.
</p><p>
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், புதிய அரசமைப்பை உருவாக்குதல் மற்றும்
மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆறு கட்சிகளின் கூட்டு மன்றத்தில்
முன்னிலைப்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d617d568-f9a4-4f93-8f79-731b1bfb4919/26-6a5c93cf115d9.webp' /></p><p> </p><p>குறிப்பாக, இந்த விவகாரங்கள் தொடர்பாக
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்துக்
கலந்துரையாடுமாறு, குறித்த மன்றத்தில் சுமந்திரன் உள்ளிட்ட தலைவர்களிடம்
வலியுறுத்தியுள்ளோம். </p><p>இவ்வாறான கூட்டுச் செயற்பாடுகளே சிறுபான்மை தேசிய
இனங்களின் பிரச்சினைகளுக்கு வலுச்சேர்க்கும் என&nbsp;குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T09:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது! சுமந்திரன் அறிவுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-powers-to-the-central-government-1784448157"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-powers-to-the-central-government-1784448157</id>
            <summary type="text">&quot;காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று நாம் தொடர்ந்து
குறைகூறி வருகின்றோம், இந்நிலையில், தற்போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>"காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று நாம் தொடர்ந்து
குறைகூறி வருகின்றோம், இந்நிலையில், தற்போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து
கொள்ளக்கூடாது" என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.</p><p>

யாழ்ப்பாணத்தில் நேற்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்
பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிகாரப் பகிர்வு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அதிஉச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய முறைமை மாற்றமே எமது அடிப்படைத்
தீர்வாகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் தற்போது மாகாணங்களுக்குப்
பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc69057f-6399-431a-a857-3788f8ae938c/26-6a5c8cbb7130e.webp' /></p><p> </p><p>தேசிய பாடசாலைகள் மற்றும் தேசிய வைத்தியசாலைகள்
என்ற போர்வையில், மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை மத்திய அரசு மீளப்
பெறுவதை நாம் முழுமையாக எதிர்க்க வேண்டும். </p><p>இவ்வாறான நிறுவனங்கள் தேசிய
மயமாக்கப்படுவதால் எமக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற தவறான புரிதல் சிலரிடம்
உள்ளது. அவ்வாறான எண்ணப்பாடுகளைக் கைவிட்டு, போராட்டங்கள் ஊடாகப்
பெற்றுக்கொண்ட அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது.</p><p>

நாட்டின் சனத்தொகையில் 25 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள்
ஒன்றிணைந்து, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், அதியுச்ச அதிகாரப்
பகிர்வுடன் கூடிய புதிய அரசமைப்பை உருவாக்குதல் மற்றும் காணிப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.</p><p></p><h2>&nbsp;வடக்கு - கிழக்கு</h2><p> இது
தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துக்
கலந்துரையாடவுள்ளோம்.

தொல்லியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகத்துடன் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நானும் கலந்துரையாடியுள்ளோம். </p><p>தொல்லியல் திணைக்களத்தைப்
பயன்படுத்தி, வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும்
முயற்சியைக் கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac2c1d7d-2519-4ba4-8422-995ec12547aa/26-6a5c8cbc48300.webp' /></p><p>
</p><p>
மந்திரிமனை மீள் உருவாக்கம் மற்றும் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை
விவகாரங்களில் எமது மக்களின் வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்துவது
தொடர்பாகவும் அவருடன் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T08:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடங்கியது முகநூல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-is-down-1784449697"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-is-down-1784449697</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. </p><p>

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கணினிகளின் ஊடாக முகநூல் சமூக வலைத்தளத்தை பார்வையிட முடியவில்லை. எனினும், ஒரு சில தொலைபேசிகளில் முகநூல் சமூக வலைத்தளம் இயங்குகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27d951bd-abc0-46cb-ab98-2ac811bad692/26-6a5c8b4d6c77c.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T08:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-shooting-in-kalubowila-1784427521"></link>
            <id>https://tamilwin.com/article/police-shooting-in-kalubowila-1784427521</id>
            <summary type="text">புதிய இணைப்புபிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதன்போது கூர்மையான ஆயுத தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p></p><h2>கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல்&nbsp;</h2><p>

கூர்மையான ஆயுதங்களை ஏந்தியபடி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு சந்தேகநபர்கள், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5a6475-18f6-4b17-a410-ca4c9e391efc/26-6a5c84d3bb82e.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதன்பின்னர், சந்தேகநபர்கள் பிலியந்தலாவை நோக்கி தப்பிச்செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HYHENil4KRM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
அதன்படி, பிலியந்தலாவ பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிள் சாரதி தனது கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.</p><p>இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸ் அதிகாரியை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>
</p><p>இதனையடுத்து காயமடைந்த 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய நபர் தப்பிச்சென்றுள்ளார்.</p><h2>போதைப்பொருள் தகராறு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கொஸ் மல்லி என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உத்வியாளரே காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

</p><p>மேலும், தாக்குதலுக்குள்ளான வீட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p>போதைப்பொருள் தகராறு காரணமாக வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p>குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, ​​சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரரை தாக்க முயன்றுள்ளார்.
</p><p>
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>

இவ்வாறு காயமடைந்த சந்தேக நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த மற்றொரு நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7393c176-d618-4699-b260-cfd5e2c2bb5d/26-6a5c3d676b45a.webp' /></p><p>
</p><p>சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-19T07:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போன குடும்பஸ்தர் 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-family-man-recovered-dead-after-three-days-1784445700"></link>
            <id>https://tamilwin.com/article/missing-family-man-recovered-dead-after-three-days-1784445700</id>
            <summary type="text">மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற
நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர்
சடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற
நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்படி நபர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில்
காணாமல்போயிருந்தார்.
</p><p>
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின்போது, அவரது வீட்டுக்கு அருகில் இருந்த
பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து அவர் நேற்று(18)o சனிக்கிழமை சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613d1e02-c7d3-43f9-a00e-572ea8491937/26-6a5c7cb4b098c.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் படல்கும்புரை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T07:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இளைஞர் பலி - மற்றுமொருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-death-injured-in-motorcycle-accident-1784443372"></link>
            <id>https://tamilwin.com/article/youth-death-injured-in-motorcycle-accident-1784443372</id>
            <summary type="text">குருநாகல் - நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாக பயணித்த இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்
மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p></p><h2>ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>குறித்த விபத்தில் பன்னலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e17aa140-1505-46b9-906d-dd37e753c696/26-6a5c750a364ff.webp' /></p><p>
</p><p>இந்த விபத்தின் போது மற்றைய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த
19 வயது இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T06:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/horona-motor-cycle-and-lorry-accident-1784438717"></link>
            <id>https://tamilwin.com/article/horona-motor-cycle-and-lorry-accident-1784438717</id>
            <summary type="text">ஹொரணை - மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிவேகமாக சென்ற மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை - மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
</p><p>
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>
உயிரிழந்தவர்கள் பன்னிப்பிட்டிய மற்றும் கிரிவத்துடுவவை சேர்ந்த, 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷா சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6aad00f-2cd8-444e-aca0-c5dd765f0b8b/26-6a5c659a08edb.webp' /></p><p>

ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>

ஹொரணையிலிருந்து அதிவேகமாக சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களும், கனன்வில வளைவில் திரும்ப முயன்றபோது, ​​கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறப்பாதைக்குள் விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தை தொடர்ந்து டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T06:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-former-igp-c-t-wickramaratne-investigation-1784438049"></link>
            <id>https://tamilwin.com/article/death-former-igp-c-t-wickramaratne-investigation-1784438049</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா போன்ற விடயங்கள் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என&amp;nbsp;பொதும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா போன்ற விடயங்கள் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என&nbsp;பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன்,அவரது மெய்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98260112-8798-44c7-999c-c9b6bcee4de4/26-6a5c676f85fdd.webp' /></p><p>


அத்துடன் துப்பாக்கிரப்பிரயோகத்தின் மூலம் அவர் உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, அவர் உயிரிழந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான முடிவினை கூறமுடியும் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜி.எஸ்.பி. பிளஸ் விவகாரம் : பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை - முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gsp-plus-issue-ranil-s-advice-1784438457"></link>
            <id>https://tamilwin.com/article/gsp-plus-issue-ranil-s-advice-1784438457</id>
            <summary type="text">இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுகளை, பிரான்ஸுடன்
நடத்துவதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுகளை, பிரான்ஸுடன்
நடத்துவதில் பயனில்லை என்றும், அது குறித்து பிரஸ்ஸல்ஸ் நகருடனேயே பேச
வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>"ஜி.எஸ்.பி. பிரச்சினை குறித்து பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை. இது குறித்து
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலேயே பேச வேண்டும். அதேபோன்று இங்கிலாந்துடனும்
பேச்சு நடத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>மீண்டும் விண்ணப்பிக்கவுள்ள இலங்கை&nbsp;&nbsp;</h2><p> ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றும்
முறைமையின்படியே இங்கிலாந்தும் ஜி.எஸ்.பி. சலுகையை வழங்குகின்றது. எனவே,
பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்லாமல் பிரான்ஸுக்குச் செல்வதால் எவ்விதப் பலனும்
கிடைக்காது.&nbsp; இது முற்றிலும் பிரஸ்ஸல்ஸ் சார்ந்த ஒரு விடயமாகும்"&nbsp; என்று
குறிப்பிட்டுள்ளார். </p><p>இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கும் ஜி.எஸ்.பி.
பிளஸ் வரிச்சலுகை, கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஐரோப்பிய
ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb97b9a-57f6-4556-a23d-c14062578cd3/26-6a5c613347138.webp' /></p><p> </p><p>மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச
உடன்படிக்கைகளை இலங்கை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்
அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது.
</p><p>
முன்னதாக, 2010 ஆம் ஆண்டில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால்
நிறுத்தப்பட்ட இந்தச் சலுகை, பின்னர் 2017 இல் மீண்டும் வழங்கப்பட்டது.</p><p>இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம்
திகழ்கின்றது. 2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இருதரப்புக்கும் இடையிலான மொத்த
வர்த்தகம் 3.9 பில்லியன் யூரோக்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41078bb-ae77-4ac2-959a-0c51cc12d2de/26-6a5c613297635.webp' />&nbsp;&nbsp;</p><p>இதில் இலங்கையின் ஏற்றுமதியில்
பாதிக்கும் மேற்பட்டவை ஆடைத் துறையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளுக்கு அமைய, இலங்கை இந்தச்
சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தயாராகி வரும் பின்னணியில், பயங்கரவாதத்
தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை சர்வதேசத்
தரத்துக்கு ஏற்ப மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைத் தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் சிப்பாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-soldier-caught-with-ice-drugs-1784437241"></link>
            <id>https://tamilwin.com/article/former-soldier-caught-with-ice-drugs-1784437241</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருள் வைத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>சந்தேகநபர் போதைப்பொருள் வைத்துள்ளதாக நேற்று (18) கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d7034fd-ce07-427c-8213-6493c1ca63bf/26-6a5c5ba17bc13.webp' />&nbsp;</p><p>இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 120 கிராம் ஐஸ் போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு ஏற்பட்ட கடும் வாக்குவாதம்! மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-brutally-murdered-his-wife-1784435426"></link>
            <id>https://tamilwin.com/article/husband-brutally-murdered-his-wife-1784435426</id>
            <summary type="text">காலி , இக்கடுவை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி , இக்கடுவை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>கணவன் கைது</h2><p>நேற்று இரவு (18) மதுபோதையில் வீட்டுக்கு திரும்பிய கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இரவு உணவு தயாரிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b78da-3183-46d8-93e1-696f015b437c/26-6a5c538c738c0.webp' /></p><p>
</p><p>இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் பிள்ளைகளின் கண் முன்பாகவே மனைவியை சரமாரியாக
வெட்டியுள்ளார்.
</p><p>இதன் காரணமாக படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார், கொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T04:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை இளைஞர் விபத்தில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-accident-boy-death-investigation-1784433436"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-accident-boy-death-investigation-1784433436</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்,
இளைஞர் ஒருவர் சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்,
இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

பருத்தித்துறை, தும்பளை, நெல்லண்டையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27)
என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்தபோது, சிட்டிவேரம் அம்மன் ஆலயத்துக்கு அருகில் சென்ற வேளையில்
திடீரென வண்டு ஒன்று அவரது கண்ணுக்குள் புகுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e4d82e-f3b9-4218-b046-836fef8dee26/26-6a5c4fbf87c31.webp' /></p><p> </p><p>இதனால் நிலைதடுமாறிய
அவர், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T04:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நிகழும் முக்கியஸ்தர்களின் மர்ம மரணங்கள்! விசாரணையை தீவிரப்படுத்தும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-dies-in-suspected-1784431969"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-dies-in-suspected-1784431969</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இது குறித்து
எதிர்க்கட்சியினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இது குறித்து
எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சரவைப்
பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>மர்ம மரணங்கள்&nbsp;</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>
"முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக
உள்ளது. இந்த விவகாரத்தை அரசு அலட்சியப்படுத்தவில்லை. முறையான விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன.</p><p> எனவே, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
என்றும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சியினர் அச்சப்படத்
தேவையில்லை. இச்சம்பவத்தை அரசியலாக்குவது முறையற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa7e8934-82dd-410c-a3ff-8c604430847e/26-6a5c4cd315c58.webp' /></p><p>
</p><p>
சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று
வரும் நிலையில், சாட்சியாளர்கள் உயிரிழப்பது பாரிய சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சிலர், தற்போது தேசிய
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஊடகச் சந்திப்புகளை நடத்தி
வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T04:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வரி செலுத்தாதோருக்கு இறைவரித்திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inland-revenue-department-issued-warning-taxes-1784431750"></link>
            <id>https://tamilwin.com/article/inland-revenue-department-issued-warning-taxes-1784431750</id>
            <summary type="text">இலங்கையில் வரி செலுத்த தவறுவோருக்கு இறைவரித்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும், அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வரி செலுத்த தவறுவோருக்கு இறைவரித்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும், அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p></p><h2>நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டம்</h2><p>இதற்கமைய, 2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டத்தின் கீழ், உரிய கால அவகாசத்திற்குள் இணங்காதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5e9ec2-c88e-43cb-9a56-037a55e365b6/26-6a5c46e3ead81.webp' /></p><p>எனவே பதிவு செய்யத்தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை குற்றங்களாக கருதப்படுகின்றன.</p><p>

இந்த நிலையில் வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்பட்டு குறித்த நாளிலிருந்து, வரி செலுத்துபவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த 30 நாட்களுக்குள் இணங்கத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சிறைத்தண்டனை அல்லது&nbsp;அபராதம் </h2><p>
நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையின் பின்னர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.</p><p>

இந்த சட்டங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை குறிவைக்கவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ஒத்துழைப்பு வழங்கும் குடிமக்களை இது பாதிக்காது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T03:40:27+00:00</updated>
        </entry>
    </feed>
