<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-11T16:30:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடுவில் இராணுவ முகாமில் வதைமுகாமில் நூலிழையில் தப்பிய பெண்ணின் திடுக்கிடும் தகவல்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-escaped-the-torture-camp-uduvil-army-base-1783784648"></link>
            <id>https://tamilwin.com/article/woman-escaped-the-torture-camp-uduvil-army-base-1783784648</id>
            <summary type="text">ஈழத் தமிழ் பெண் ஒருவர் உடுவில் மற்றும் பல வதை முகாம்களில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் உயிர் தப்பிய துயரமான நிகழ்வுகளைப் லங்காசிறியின் ஊடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழ் பெண் ஒருவர் உடுவில் மற்றும் பல வதை முகாம்களில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் உயிர் தப்பிய துயரமான நிகழ்வுகளைப் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.</p><p>

கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றப்பட்டு, கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உடுவில் ராணுவ முகாமில் நடந்த அநீதிகளை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அப்பாவி மக்கள்,குறிப்பாக இளைஞர்கள் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள், மற்றும் சித்திரவதைக் கூடங்களில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐசிஆர்சி (ICRC) அமைப்பில் அவர் பதிவு செய்திருந்ததாலும், ஒரு வெளிநாட்டு பெண் அதிகாரி அவருக்கு உதவியதாலும், அவர் உயிர்தப்ப முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலிலும், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fMFa3YEfClg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் திடீர் மரணம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-african-footballer-jayden-adams-dies-1783785366"></link>
            <id>https://tamilwin.com/article/south-african-footballer-jayden-adams-dies-1783785366</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணி மற்றும் &#039;மாமலோடி சண்டவுன்ஸ்&#039; கிளப்
அணியின் நடுகள ஆட்டக்காரரான 25 வயது இளம் வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார்.2026 ஃப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணி மற்றும் 'மாமலோடி சண்டவுன்ஸ்' கிளப்
அணியின் நடுகள ஆட்டக்காரரான 25 வயது இளம் வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார்.</p><p>2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்கா
வரலாற்றுச் சாதனையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முக்கியக் காரணமாக இருந்த
இவர்,&nbsp; உயிரிழந்திருப்பது அந்நாட்டு கால்பந்து
இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>திடீர் மரணம்</h2><p>

கேப்டவுன் நகரின் ஸ்காட்செக்லூஃப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவரது உடல்
கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb45b446-e3ee-4879-be39-4b228f0abc38/26-6a5268ffddda3.webp' /></p><p>
</p><p>
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாததால்,
வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர்
கேட்டுக் கொண்டுள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே லீக் பட்டங்களையும், ஆபிரிக்க சம்பியன்ஸ் லீக் பட்டத்தையும்
வென்று, நாட்டின் மிகச்சிறந்த இளம் திறமையாளராக உருவெடுத்த ஜெய்டன் ஆடம்ஸின்
மறைவுக்கு ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உள்ளிட்ட உலக கால்பந்து
பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:02:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-playback-singer-janaki-passes-away-mysuru-1783782318"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-playback-singer-janaki-passes-away-mysuru-1783782318</id>
            <summary type="text">புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி&amp;nbsp;இன்று தனது 88ஆவது வயதில் காலமானார். 

இந்த&amp;nbsp; செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி&nbsp;இன்று தனது 88ஆவது வயதில் காலமானார். </p><p>

இந்த&nbsp; செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p></p><h2>மூத்த பின்னணிப் பாடகி</h2><p>
</p><p>
குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எஸ். ஜானகி தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக உயிர் பிரிந்தார் என்றும், இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
அப்சரா தனது பதிவில்,

என் அன்பு பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான&nbsp; எஸ். ஜானகி மறைந்த செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Apsara Vydyula (@apsaravydyula)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
</p><p>
மேலும்,

"அவர் தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக எங்களை விட்டுப் பிரிந்தார். </p><p>எங்கள் இதயங்கள் கனத்திருந்தாலும், அவர் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கைக்கும், தனது காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு அளித்த மகிழ்ச்சிக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம்."

என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
உலக மக்களுக்கு மறக்க முடியாத குரலாக இருந்த ஜானகி, குடும்பத்தினருக்கு அன்பும், எளிமையும், கருணையும் நிறைந்த பாட்டியாக என்றும் நினைவில் வாழ்வார் என்றும் அவரது பேத்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>அடையாளக் குரல்</h2><p>

தனது அறுபது ஆண்டு காலப் பயணத்தில், அவர் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஏறத்தாழ 48,000 பாடல்களைப் பதிவுசெய்து, பல தலைமுறை திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஓர் அடையாளக் குரலாகத் திகழ்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a0fd92-0673-4fcb-8bbf-92a4fc008fe0/26-6a525e7336e6a.webp' /></p><p> 

இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடனான தனது புகழ்பெற்ற கூட்டுப் பணிகளுக்காக அவர் அறியப்படுகிறார்.</p><p> 

அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b><i>மேலதிக தகவல் - அமல்</i></b></p><p>


</p>]]></content>
            <updated>2026-07-11T15:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஈரான் இனி கட்டுப்படாது: ஐ.நா தூதுவர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-will-not-abide-by-the-memorandum-usa-1783781654"></link>
            <id>https://tamilwin.com/article/iran-will-not-abide-by-the-memorandum-usa-1783781654</id>
            <summary type="text">அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனுடன் எட்டப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் இனி மதிக்காது என்று ஐ.நாவுக்கான ஈரானிய
தூதுவர் அமீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனுடன் எட்டப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் இனி மதிக்காது என்று ஐ.நாவுக்கான ஈரானிய
தூதுவர் அமீர் சயீத் இரவானி அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளார்.</p><p>

ஜூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் ஈரானிய தீவுகள் மற்றும் தெற்கு நகரங்களை
இலக்காகக் கொண்டு வொஷிங்டன் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், ஐ.நா சாசனத்தை மிக
மோசமாக மீறும் செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
</p><p>
ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இரவானி, "அமெரிக்கா
தனது கடப்பாடுகளைத் தொடர்ந்து மீறினால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை
நிறைவேற்ற ஈரான் கடமைப்பட்டிருக்காது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8953ee8-9081-4a52-b4c3-cbcd87dff11a/26-6a525ca99345c.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தனது நிபந்தனைகளை முழுமையாகவும் நேர்மையாகவும்
பின்பற்றினால் மட்டுமே, ஈரான் தனது தரப்பு உடன்பாடுகளைத் தொடர்ந்து
கடைப்பிடிக்கத் தயாராக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T15:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூகவலைத்தளங்களில் பேசுபொருளான சிறை அதிகாரியின் காணொளி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1783781873"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1783781873</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கலவரம் மற்றும் சிறைக் கைதிகள்-சிறை ஊழியர்கள் தொடர்பில் உருக்கமான மற்றும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து&amp;nbsp; டி. பி. தசநாயக்க என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கலவரம் மற்றும் சிறைக் கைதிகள்-சிறை ஊழியர்கள் தொடர்பில் உருக்கமான மற்றும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து&nbsp; டி. பி. தசநாயக்க என்ற இரண்டாம் நிலை சிறைக்காவலர் (Jailer) தனது சமூக வலைத்தளத்தில் கொணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
</p><p>இந்த காணொளி மக்கள் மத்தில் போசு பொருளானதுடன் மனதை உருக்கும் சம்பவமாக மாறியுள்ளது.
என்னால் இந்தத் காணொளியை (Video) வெளியிட முடியாது என்பதை அறிவேன். </p><p>இதற்காக வழங்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இந்தத் காணொளியை வெளியிடுகிறேன்.</p><p>அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்: நான் சமூக ஊடகங்களில் (Facebook) எமது அதிகாரிகள் கருத்து தெரிவிப்பதைக் அவதானித்தேன். </p><p>குறித்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பலர் பதிவிட்டுள்ளனர். ஆம், பழிவாங்க வேண்டிய நேரம் இதுதான். ஆனால் நாம் புதிதாகப் பழிவாங்க ஒன்றும் இல்லை. போதைப்பொருள் ஒழிப்பே போதுமானதாகும். </p><h2> 

</h2><p></p><h2>நேர்மையான அதிகாரிகளின் தியாகம்</h2><p>எமது திணைக்களத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் சட்டப்படியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். </p><p>ஆனால், கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுக்க முன்வந்தபோதும், அவற்றை ஏறெடுத்தும் பார்க்காத நேர்மையான அதிகாரிகள் எம்மோடு இருந்தார்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.
</p><p>
உயிரிழந்த அந்த அதிகாரிகளின் இறுதிச்சடங்கின் போது அவர்களின் வீடுகளை ஊடகங்களில் காட்டினார்கள். கோடிக்கணக்கான இலஞ்சப் பணத்தை நிராகரித்த அந்த மனிதர்கள் எவ்வளவு ஏழ்மையான வீடுகளில் வாழ்ந்துள்ளார்கள் என்பது புரியும். </p><p>அவர்கள் பணத்திற்கு அடிபணியவில்லை. அத்தகைய உன்னதமான மனிதர்களுக்கே இந்த அநீதியும் கொடூரக் கொலை நடந்துள்ளது. இதனை நாம் இத்துடன் அப்படியே விட்டுவிட முடியாது.</p><h2>
நாம் செய்ய வேண்டியது என்ன?</h2><p>சிறைச்சாலைக்குள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மற்றும் கலவரம் செய்யும் கும்பல்களுக்கு முறையான தண்டனைகளை வழங்க வேண்டிய நேரம் இதுவாகும். </p><p>சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. நமக்கு சம்பளப் பிரச்சினைகள், வாழ்வாதாரக் குறைகள் இருக்கலாம். அவை ஒரு சில வருடங்களில் தீர்ந்துவிடப் போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d707845-9dbe-47ce-be54-56b06d384030/26-6a5259f3dbf9e.webp' /></p><p>அவை தீரும் வரை நாம் எமது கடமையைக் கைவிட முடியாது. சமூகத்தால் நமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நாம் சரியாகச் செய்ய வேண்டிய தருணம் இது.
</p><p>
இந்த இக்கட்டான சூழ்நிலையில், பதவிகளையோ அல்லது வேலை செய்யும் பிரிவுகளையோ பார்க்காமல், சிறைச்சாலைத் திணைக்களமாக எமது அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்த விதத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன், நேசிக்கிறேன்.
</p><h2>
சிறைக்கைதிகளின் கொடூரமான உண்மை முகம்</h2><p>அன்று அந்த மோதல் நடந்த வேளையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக் குறித்தும் அதிகாரிகளின் செயற்பாடுகளைக் குறித்தும் சமூகத்தில் சிலர் மிகக் கேவலமாக, விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். </p><p>அந்த மக்கள் வெளியே வந்து பார்த்தால்தான் உண்மை தெரியும்.

பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு உண்மையை நான் கூறுகிறேன்: நாம் இந்தச் சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைத்திருப்பது சாதாரண மனிதர்களை அல்ல. </p><p>ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து மோசமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைக்கு வந்து, பின்னர் விடுதலையாகிச் சென்று 15 வயது சிறுமியைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு வந்த ஒரு கைதி இருக்கிறான். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194753c5-0486-446b-a652-08f136341902/26-6a5259f48ba9b.webp' /></p><p>அவன் மீண்டும் பிணையில் வெளியே சென்று, ஒரு தந்தையைக் கொலை செய்துவிட்டு அவரது மகளை மோசமான செயலுக்குட்படுத்திய வழக்கில் மீண்டும் சிறைக்கு வந்துள்ளான்.</p><p> </p><p>இவ்வாறான கொடூர மிருகங்களைத்தான் நாம் எமது உயிரைப் பணயம் வைத்து சிறைக்குள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் வெளியே வந்தால் சமூகத்தின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T15:02:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vietnam-tourist-boat-accident-8-tamils-killed-1783779854"></link>
            <id>https://tamilwin.com/article/vietnam-tourist-boat-accident-8-tamils-killed-1783779854</id>
            <summary type="text">வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>


விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 8 தமிழர்கள் அடங்குவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>&nbsp;8 தமிழர்கள்</h2><p> </p><p>

இதில் பழனியைச் சேர்ந்த முருக பிரபு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா நிறுவனம் சிலரை சுற்றுலா அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebb781c-927e-472c-85a5-b631ea1c40f3/26-6a52590135aef.webp' /></p><p>
</p><p>
36 பேர் பயணித்த அந்தப் படகு, மே ருட் ஙோஆய் (May Rut Ngoai) தீவின் கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் திடீரென கவிழ்ந்தது.</p><p>

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சுற்றுலாப் படகுகள் மற்றும் கடலோர காவல்படை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. </p><p>
இதில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனனர். 

உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>32 இந்தியர்கள்</h2><p>இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலில்,
இந்த சம்பவம் தொடர்பாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம், படகில் பயணித்த 32 இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3f53008-27a8-471b-b461-8bee1ec0198b/26-6a525901de910.webp' /></p><p>

"பு குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது மிகவும் துயரமான சம்பவமாகும்" என்று இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தகவல் மற்றும் உதவி வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>&nbsp;ஆழ்ந்த இரங்கல்</h2><p>


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Extremely saddened to learn about the tragic news of a boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam. <br><br>My sincere condolences to the families who lost their loved ones. My prayers for the early recovery of the injured survivors.<br><br>Our Embassy and Consulate are…</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2075914593751449679?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அவர் வெளியிட்ட பதிவில், இந்த சுற்றுலாவில் பங்கேற்றவர்கள் லாவா மொபைல் (Lava Mobile) நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த Lava Mobile நிறுவன ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர்களே படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



</p>]]></content>
            <updated>2026-07-11T14:55:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் உடல் நசுங்கி பலியான இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-youngsters-killed-in-an-accident-1783779369"></link>
            <id>https://tamilwin.com/article/2-youngsters-killed-in-an-accident-1783779369</id>
            <summary type="text">கொழும்பு - கண்டி பிரதான வீதியில், பட்டலிய சந்திக்கு அருகில் சம்பவித்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கண்டி பிரதான வீதியில், பட்டலிய சந்திக்கு அருகில் சம்பவித்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் ரதாவடுன்ன பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p> 

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் முற்பட்டபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p> </p><h2><b>

ஆரம்பகட்ட விசாரணை</b></h2><p>மோட்டார் சைக்கிள் முதலில் பேருந்தின் மீது மோதியதாகவும், பின்னர் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதி அதன் அடியில் சிக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eda8ad8-2e1c-4430-bcc0-5bf54c4eb821/26-6a5252e599347.webp' /></p><p>பேருந்து மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
</p><p>
எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p>]]></content>
            <updated>2026-07-11T14:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரின் சொகுசு ரிசார்ட் நிலத்தில் முறைகேடு! தீவிரமடையும் போராட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregular-regarding-trump-son-ii-law-luxury-resort-1783777803"></link>
            <id>https://tamilwin.com/article/irregular-regarding-trump-son-ii-law-luxury-resort-1783777803</id>
            <summary type="text">அமெரிக்க&amp;nbsp; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர்
முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள சொகுசு ரிசார்ட் நிலத்தின் பத்திரங்கள்
போலியாகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க&nbsp; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர்
முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள சொகுசு ரிசார்ட் நிலத்தின் பத்திரங்கள்
போலியாகத் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து அல்பேனியா நாட்டின் ஊழல்
தடுப்புப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p>
பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில், இந்த நில
மோசடிப் முறைப்பாடு திட்டத்திற்குப் புதிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>நிலத்தில் முறைகேடு</h2><p>
</p><p>
இந்த நிலத்தை விற்பனை செய்த மியாமி தொழிலதிபர் அர்தூர் ஷேஹு மற்றும் அவரது
கூட்டாளிகள், கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை அல்பேனியா
நாட்டுப் சொத்துகளில் முதலீடு செய்ததாகவும், பணத்தின் ஆதாரத்தை மறைக்கப்
போலிப் பத்திரங்களைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a366a4-092f-42ec-a894-0787e170a0f9/26-6a52501cbad3e.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, இந்த நில விற்பனையுடன் தொடர்புடைய சுமார் 110 மில்லியன் யூரோ
(சுமார் 126 மில்லியன் டொலர்) பணத்தை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், இந்த நில விவகாரத்தில் குஷ்னருக்கோ அல்லது அவரது நிறுவனத்திற்கோ
ஷேஹு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னரே தெரிந்திருந்ததற்கான ஆதாரங்கள்
எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிரமடையும் போராட்டம்</h2><p>

கடலாமைகள் மற்றும் பிளமிங்கோ (பூநாரை) பறவைகளின் புகலிடமாக விளங்கும்
அல்பேனியாவின் தெற்கு கடலோரப் பாதுகாக்கப்பட்ட ஈரநிலப் பகுதியில் இந்த சொகுசு
ரிசார்ட் அமையவிருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள்
நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2275544-9276-447c-9a1b-e3a1182530e1/26-6a52501d76a22.webp' /></p><p>
</p><p>
இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் பிளமிங்கோ பறவையைத் தங்களின் அடையாளமாகப்
பயன்படுத்தி, இதனை ஒரு 'பிளமிங்கோ புரட்சி' என்று அழைத்து வருகின்றனர்.</p><p>

தொடக்கத்தில் ரிசார்ட் திட்டத்திற்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள்,
தற்போது பிரதமர் எதி ராமா தலைமையிலான அரசின் ஊழல்களுக்கு எதிராகவும், அவரது பதவி விலகலை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளன.</p><p>

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முன் திரண்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார்
கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கலைத்ததால்
பெரும் வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T14:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை நோக்கி நகரும் சூறாவளி! அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cyclone-paavi-moving-towards-china-1783775034"></link>
            <id>https://tamilwin.com/article/cyclone-paavi-moving-towards-china-1783775034</id>
            <summary type="text">தீவிர சூறாவளி சீனாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதைத் தொடர்ந்து,
அங்குள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவசர
அவசரமாகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிர சூறாவளி சீனாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதைத் தொடர்ந்து,
அங்குள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவசர
அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

ஜப்பான் மற்றும் தாய்வான் நாடுகளைக் கடந்து வந்துள்ள இந்தச் சூறாவளி, தற்போது
சற்றே பலவீனமடைந்திருந்தாலும், அதன் மேகக்கூட்டங்கள் அதிகப்படியான
ஈரப்பதத்தைக் கொண்டுள்ளதால் பெருமழை மற்றும் கடுமையான பாதிப்புகளை
ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் இருந்து 5
இலட்சத்திற்கும் அதிகமான மக்களும், அண்டை மாகாணமான புஜியானில் (Fujian)
இருந்து 1 இலட்சம் மக்களும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இந்தச் சூறாவளி நாளை(12.7.2026)அதிகாலையில் சீனாவின் மக்கள் அடர்த்தி மிகுந்த
வென்ஜோவ் நகருக்கு அருகில் கரையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e40729-8271-4049-b375-a7ba53b37e5c/26-6a5245a1a409a.webp' /></p><p>

இதனால் சீன தேசிய வானிலை மையம் இரண்டாவது மிக உயர்ந்த 'ஒரஞ்சு' எச்சரிக்கையை
விடுத்துள்ளது.
</p><p>
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் படகுப்
போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும்
குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தற்காப்பு நடவடிக்கை</h2><p>ஏற்கனவே 'மேசாக்' புயலின் தாக்கத்தில் இருந்து மீளாத சீனாவிற்கு, இந்த 'பாவி'
சூறாவளி மேலும் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b89859c-abd7-4053-b8ad-f937ce830ff5/26-6a5245a0f186a.webp' /></p><p>

தற்காப்பு நடவடிக்கையாகப் பல்லாயிரக்கணக்கான மீட்புப் படையினர் தற்போது தயார்
நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T13:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு! 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் - ட்ரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-continues-trump-warning-1783770720"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-continues-trump-warning-1783770720</id>
            <summary type="text">ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்கமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. </p><p>

இதனை தொடர்ந்து, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p> 

தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய ஈரான் அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டால், உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இராணுவத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள்</h2><p> 

மேலும், ஒரு வருட காலத்திற்குள் ஈரானை முழுமையாக அழிக்க அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் எச்சரித்துள்ளார். </p><p>

அண்மையில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கத்தார் மற்றும் சவூதி அரேபிய எண்ணெய் டாங்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும் பிராந்தியத்தில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. </p><p>

இந்த மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p> இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர ஈரான் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் போர்நிறுத்தம் என்பது இனி கிடையாது என்பதைத் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21089c22-838f-450e-92a3-a1e562fdd2c4/26-6a5233f0d9e1a.webp' /></p><h2>கடுமையான அச்சுறுத்தல்</h2><p> அமெரிக்காவின் இந்த கடுமையான அச்சுறுத்தல்களுக்கு ஈரானும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வொஷிங்டனின் மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது என்றும், அமெரிக்கா தங்களுக்குத் துரோகம் இழைத்தால் முழு அளவிலான பாதுகாப்பை மேற்கொள்ளத் தங்களது நாடு தயாராக இருப்பதாகவும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். </p><p>தற்போதைய சூழலில், பிராந்தியத்தில் மீண்டும் போர் மூள்வதைத் தவிர்க்கவும், ஸ்தம்பித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மூலம் தீவிர திரைமறைவு இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T13:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-ni-o-is-approaching-the-indian-ocean-1783773923"></link>
            <id>https://tamilwin.com/article/el-ni-o-is-approaching-the-indian-ocean-1783773923</id>
            <summary type="text">மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் ஜூலை தொடக்கம் ஒக்டோபர்
மாதம் வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் ஜூலை தொடக்கம் ஒக்டோபர்
மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்
துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;யாழ் கலட்டி வீதியில் அமைந்துள்ள மிலேனியம் தனியார்
விடுதியில் இன்று(11) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த
எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில்
சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது
அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>எல்நினோ</h2><p>
</p><p>


இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும்
மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0f3a9f-c3cc-44f1-ade4-4ab03a979857/26-6a523f618076e.webp' /></p><p>

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத் தீவு
மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை
ஏற்படுத்தும்.
</p><p>


நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக
வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற
கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.
</p><p>
ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்சியையும் ஏற்படுத்தும்.</p><p></p><h2>&nbsp;அதிகமான வறட்சி</h2><p>



இருந்தாலும் இந்த தாள முக்கங்கள் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்
பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப்
பகுதியில் அதிக வறட்சியே நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6aa071-6e10-4937-bcfd-e2c1964037d5/26-6a523f625e26e.webp' /></p><p>

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர்
முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற
நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என
அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி
சிறிரங்கன் யாழ் மாவட்ட கடத்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்
அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ
ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p></p><p>You May Like This..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LHumhALpmd4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-11T13:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கடுமையாகவுள்ள வரி அறவிடல் செயற்பாடுகள்! சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsh-tax-collection-measures-in-sri-lanka-imf-1783771221"></link>
            <id>https://tamilwin.com/article/harsh-tax-collection-measures-in-sri-lanka-imf-1783771221</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வரி அறவிடல் செயற்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வரி அறவிடல் செயற்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித் திட்டம் 2027-மார்ச்சில் முடிவடைய உள்ளது. </p><p>இந்தக் காலக்கெடுவுக்குள் நாட்டின் வரி நிர்வாகத்தை முழுமையாகச் சீர்திருத்துமாறு இலங்கையின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் சபைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதித் துறை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியம்</h2><p>
</p><p>
அதன் பிரகாரம் வரி விகிதங்களை மாற்றுவதற்குப் பதிலாக, வரி ஏய்ப்பாளர்களையும் வணிகங்களையும் டிஜிட்டல் முறையில் சிக்க வைப்பதே ஒரே தீர்வு என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e81f24f-c5f8-40d6-8d16-a352b00b86fe/26-6a5232c3989ab.webp' /></p><p> அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் சுங்கத்திணைக்களமும் கைகோர்த்துச் செயற்படவுள்ளன.</p><p>

இலங்கையில் பிரதான வரி அறவிடல் நிறுவனங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதுதான் இதுவரை இருந்த மிகப்பெரிய பலவீனம் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>சுங்க நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
அதன் காரணமாக இனிவரும் காலங்களில் சுங்க மோசடி மற்றும் வரி ஏய்ப்பைத்&nbsp; தடுக்க பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d41814a-6961-40a1-b3a5-6d92eafdac0f/26-6a5232c447459.webp' /></p><p>
</p><p>மேலும் காகிதமில்லா சுங்க நடவடிக்கைகள் மற்றும் ஒரு புதிய கலால் வரி முகாமைத்துவ அமைப்பு என்பனவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T12:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைத் தண்டிக்கவே பிரதம நீதியரசருக்குப் பதவி நீடிப்பு! ஜனாதிபதி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-chief-justice-tenure-solely-punish-1783771884"></link>
            <id>https://tamilwin.com/article/extension-chief-justice-tenure-solely-punish-1783771884</id>
            <summary type="text">இலஞ்சம், ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை தண்டிப்பதற்கு பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்திருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம், ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை தண்டிப்பதற்கு பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாக தெரிய வந்துள்ளது.</p><p>

ஜனாதிபதிக்கு நெருக்கமான தேசிய மக்கள் சக்தியின் முக்கிய சட்டத்தரணிகள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியபோது இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி வலியுறுத்தல்</h2><p>
</p><p>
அதன்போது பிரதம நீதியரசருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் பதவி நீடிப்பு வழங்க ஜனாதிபதி அனுரகுமார மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி குறித்து தேசிய மக்கள் சக்தியின் முக்கிய சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f9b1d2-be40-4cbf-9d08-64b8ca183f3c/26-6a5234116a527.webp' /></p><p>
</p><p>
எனினும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தவறுகளுக்குத் தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பதாயின் அதற்கு பிரதம நீதியரசர் தொடர்ந்தும் பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன் அவ்வாறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தண்டிக்கப்படாது போனால் அடுத்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுத் தளம் குறைந்துவிடும் என்பதும் ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T12:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக் கலவரம் மொட்டு கட்சியின் அரசியல் சதி: சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி நாமல் ராஜபக்சவுக்கு வேண்டப்பட்டவர்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1783771451"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1783771451</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்தான கதை ஒன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது பயங்கரமான அரசியல் சதித்திட்டம் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்தான கதை ஒன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இது பயங்கரமான அரசியல் சதித்திட்டம் என்பது ஆரம்ப நிலை விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தை தூண்ட மொட்டு கட்சி சம்பந்தப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
தற்போது சம்பவம் குறித்து ஒரு குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களமும் (CID) விசேட விசாரணைகளை நடத்தி வருகிறது. </p><p>யார் என்ன கூறினாலும், சிறைச்சாலைக்குள் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது. அந்தச் சதியின் ஒரு நீட்சிதான் இந்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல். </p><h2>

</h2><p></p><h2>சம்பவங்களின் பின்னணி</h2><p>5 ஆம் திகதி மோதல் கைதிகளுக்கு இடையே மட்டுமே நடந்த ஒரு மோதலாகும். சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு அன்றைய தினமே இந்த மோதலைத் தணித்து வைத்தனர்.
</p><p>
6 ஆம் திகதி காலை ஜெயிலர் கசுன் லக்சித்த காலையில் கைதிகள் உணவு வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு அவர் எந்தவொரு காரணமும் இன்றி ஒரு கைதியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த கைதிகள், முதல் நாள் நடந்த சம்பவத்திற்காகவே அதிகாரி பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04dcece-915d-452b-a00f-bcacfcbc1bd5/26-6a52313deaa28.webp' /></p><p>கைதிகள் தன்னைச் சூழ்ந்துகொள்வதை அவதானித்த கசுன் லக்சித்த, உடனடியாக அங்கிருந்து நழுவி, சிறைச்சாலை வாசலால் வெளியேறி, தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கொழும்புக்குத் தப்பியோடியுள்ளார்.
</p><p>
குறித்த சிறை அதிகாரியான கசுன் லக்சித்த கடந்த 2016 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சிறையிலிருந்த போது, அவருக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்தவர்.</p><p> அன்றைய சிறைச்சாலை காவலராக இருந்த இதே கசுன் லக்சித்த தான். நாமல் ராஜபக்சவிற்கு செய்த அந்த விசுவாசமான பணிவிடைக்கு கைமாறாக, பின்னர் நாமல் ராஜபக்சவினால் இவர் 'ஜெயிலர்' ஆக பதவியுயர்த்தப்பட்டார்.
</p><h2>
மோதலை திசைதிருப்பியவர்</h2><p>கைதிகளுக்குள் இருந்த மோதலை, அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு இடையிலான மோதலாக மாற்றியது கசுன் லக்சித்தவையே சாரும். </p><p>மோதல் தீவிரமடைந்த போது, சிறைச்சாலை பொலிஸுக்குப் பொறுப்பாகவிருந்த ஜெயிலர் "தட்ட மஹேஷ்" மஹேஷ் லங்காத்திலக்க வந்துள்ளார்.
</p><p>அங்கு மோதல் நடந்துகொண்டிருந்த போது, மற்றொரு அதிகாரி மஹேஷிடம் வந்து, "முட்டாள்தனமாக எதையும் செய்ய வேண்டாம்,சிறை பொலிஸாரை ஆயுதமேந்திய கைதிகள் மத்தியில் அனுப்ப வேண்டாம்" என்று தடுத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6333b399-f3e7-4460-bd58-e9c11ad40941/26-6a52313ea006c.webp' /></p><p>ஆனால் மஹேஷ், "நீ வாயை மூடிக்கொண்டு இரு, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு, சிறைச்சாலை பொலிஸ் குழுவை 7 பேர் ஒரு பக்கமாகவும், ஏனையோரை மறு பக்கமுமாகப் பிரித்து வன்முறைக் கைதிகள் மத்தியில் அனுப்பியுள்ளார்.
</p><p>
 அதிகாரிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, மஹேஷ் லங்காத்திலக்க தான் அணிந்திருந்த நீல நிற டி-ஷர்ட்டைக் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு, மரத்தடிக்குச் சென்று தொலைபேசி அழைப்புகளை எடுத்துக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p>
இலங்கை சிறைச்சாலை வரலாற்றில் எத்தனையோ மோதல்கள் நடந்துள்ளன. ஆனால், கைதிகளைத் தூண்டிவிட்டு அதிகாரிகளைப் படுகொலை செய்ய வழிவகுத்த இந்தச் சம்பவம் முற்றிலும் ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதியாகும்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T12:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதலீடுகளை திரும்பப்பெறத் தொடங்கியுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-investors-started-withdrawing-investments-1783769431"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-investors-started-withdrawing-investments-1783769431</id>
            <summary type="text">இலங்கையின் பங்கு மற்றும் அரசாங்கக் கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் போக்கு அண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பங்கு மற்றும் அரசாங்கக் கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் போக்கு அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>

அவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்துச் சென்றதால், இந்த ஆண்டுக்கான மொத்த நிகர வெளிநாட்டு மூலதன வெளியேற்றம் தற்போது 30 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது.
</p><p>
கொழும்புப் பங்குச் சந்தையிலிருந்து இந்த ஆண்டு இதுவரை (ஆண்டுத் தொடக்கத்திலிருந்து) நிகர வெளிநாட்டு வெளியேற்றம் 25 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.</p><p></p><h2>முதலீடு</h2><p> </p><p>தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விற்பனைச் சரிவு காரணமாக பங்குச் சந்தையின் வேகம் குறைந்துள்ளது.</p><p>

இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பிணைமுறிப்பத்திரங்களிலிருந்து நிகரமாக 13.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (அல்லது 5 பில்லியன் ரூபாவுக்கும் மேல்) அதிகமான தொகையை விற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d75e7a-3c1c-4d11-927b-39c07046892e/26-6a522c02a6563.webp' /></p><p>

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், டொலரின் மதிப்பைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இயல்பாகவே தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர். </p><p>உலகளாவிய அரசியல் அமைதியின்மை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவுகள் காரணமாக, சர்வதேச நிதி முதலீட்டாளர்கள் பலவீனமான சந்தைகளிலிருந்து விலகி, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதும் இதற்கு ஒரு காரணமாகும் என்று தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T11:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகளவானோர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/84-percent-of-people-in-donate-their-eyes-1783768009"></link>
            <id>https://tamilwin.com/article/84-percent-of-people-in-donate-their-eyes-1783768009</id>
            <summary type="text">இலங்கை மக்களில் 84 சதவீதம் பேர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தேசிய கண் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களில் 84 சதவீதம் பேர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.</p><p>

தேசிய கண் வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 17,000 கண் வில்லைகளை 12,000 நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளமை குறித்தும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
வெளிநாடுகளின் கோரிக்கைகளையும் கணக்கில் கொண்டு, 4,000 முதல் 5,000 வரையிலான கண் வில்லைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b68c1bcf-49fa-4ee7-9489-1d43899e3fe3/26-6a522532535d5.webp' /></p><p>
தேசிய கண் வங்கி ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகச் செயல்படுகிறது. மேலும், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிற ஆசிய மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து கண் மாற்று உறுப்புகளுக்கு அதிக கோரிக்கை உள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregularities-on-the-kilinochchi-vavuniya-route-1783768068"></link>
            <id>https://tamilwin.com/article/irregularities-on-the-kilinochchi-vavuniya-route-1783768068</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா
வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான
நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா
வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த பேருந்து சேவைகள் தொடர்பிலும், பயணிகளுடனான தகாத நடத்தைகள்
தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், அதிகார சபை இது குறித்து எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த பேருந்துக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>

சாரதி மீது சட்ட நடவடிக்கை</h2><p>

கடந்த 30.06.2026 அன்று குறித்த பேருந்தின் சேவையின்போது பயணிகளுக்கு ஏற்பட்ட
அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசேட
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c51d06-120c-4608-b3e7-54f82733cc2e/26-6a5224b6d498d.webp' /></p><p>
</p><p>
இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றங்கள், 

அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு ஏற்பச் சேவையில் ஈடுபடாமை. அனுமதிக்கப்பட்ட
கட்டணத்தை விடப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை. வழித்தட அனுமதிப்
பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பாதையைத் தவிர்த்து வேறு பாதையில் சேவையில்
ஈடுபட்டமை. பேருந்தில் பயணித்த பயணிகளுடன் முரண்படும் வகையில் தகாத முறையில்
நடந்துகொண்டமை.</p><p> 

மேற்குறிப்பிட்ட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து,
உரிய தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தினத்தில் பணியாற்றிய சாரதி
மற்றும் நடத்துனருக்கு 7 நாட்களுக்குப் பணித்தடையும் (வேலை நிறுத்தம்)
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில்
01.07.2026 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பேருந்துக்கான
கடுமையான நிபந்தனைகளுடனான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><h2>


விதிமுறைகள்</h2><p>

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் காலை 9.20 மணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
தரித்து நின்று, ஓட்டுதல் குறிப்புத் தாளைப் பதிவுசெய்து காலை 9.50க்குப்
பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும்.</p><p>

இதேவேளை, காலை 9.55க்குக் கிளிநொச்சி
பொது மருத்துவமனையிலுள்ள நேரக்கணிப்பாளர் நிலையத்தைக் கடந்து, காலை 11.30க்கு
வவுனியா பேருந்து நிலையத்தைச் சென்றடைய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40fe0578-fbaa-4567-8edd-49655582fcb5/26-6a5224b7ad4c8.webp' /></p><p> </p><p>

வவுனியாவிலிருந்து
திரும்பும் பயணத்தின்போது, பிற்பகல் 4.15க்கு வவுனியா பேருந்து நிலையத்தில்
ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நின்று ஓட்டுதல் தாளைப் பதிவுசெய்து,
4.45க்குப் புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு வெளித்தரிப்பிடத்திலிருந்து
கிளிநொச்சி நோக்கிப் பயணிக்க வேண்டும்.
</p><p>
 மேலும், பேருந்தில் பணியாற்றும்
சாரதி, நடத்துனர்களின் பெயர் விவரங்கள் வழித்தட அனுமதிப் பத்திரத்தில்
கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் தமது தொழில்
அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><h2>


பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>
பொதுப் போக்குவரத்தில் பணியாற்றும் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும்
வகையிலும், அதிகார சபையின் விதிகளுக்கு அமைவாகவும் சுய ஒழுக்கத்துடன் பணியாற்ற
வேண்டும் எனக் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81bbfc59-0b2f-4101-8867-d964cb25da16/26-6a5224b85c42c.webp' /></p><p>
</p><p>
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும்
சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமுமின்றி
முறைப்பாடு செய்ய முடியும். </p><p>

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த
ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற
வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-committee-appointed-to-assess-1783766289"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-committee-appointed-to-assess-1783766289</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது, சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது, சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மோதல் சம்பவம் தொடர்பில் தனியான விசாரணையை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>சிறைச்சாலை மோதல்</h2><p>
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11fec91e-873f-4d1a-aab1-c9bdb5778525/26-6a522081444be.webp' /></p><p>

மேலும், இந்த மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உடனடியாக பதவி உயர்வும், அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T10:52:53+00:00</updated>
        </entry>
    </feed>
