<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-18T09:39:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25ஆவது நாளை எட்டிய கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keppapilavu-land-liberation-protest-enters-25thday-1784364335"></link>
            <id>https://tamilwin.com/article/keppapilavu-land-liberation-protest-enters-25thday-1784364335</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
மீளப் பெற்றுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட
தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(18.07.2026) 25ஆவது நாளை எட்டியுள்ளது.
</p><p>
இன்றைய போராட்டத்தில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா
கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், மக்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.</p><p></p><h2>25ஆவது நாளை எட்டியுள்ள&nbsp;போராட்டம்</h2><p>
</p><p>
தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள கேப்பாப்பிலவு மக்கள்,
பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழிமுறைகளில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து
வருகின்றனர்.
</p><p>
இருப்பினும், தங்களது சொந்தக் காணிகளில் மீளக் குடியேறவும், விவசாயம் உள்ளிட்ட
வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாத நிலை தொடர்வதாக அவர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56079074-57a0-4b4c-9b95-86122da5c8d4/26-6a5b3f72f2ed4.webp' /></p><p>
</p><p>
கேப்பாப்பிலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை
நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது நில உரிமைகளை மீண்டும்
வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை
ஆரம்பித்துள்ளனர்.</p><p>

கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. </p><p>

குறித்த காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள
ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்த தொடர் கவனயீர்ப்பு
போராட்டம் 25ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83536e47-07a5-4d1f-83f7-3de1d3beddef/26-6a5b3f7408ab0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T09:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை முடிவை பொறுத்தே பொலிஸ் மரியாதை! சி.டி. விக்ரமரத்ன விவகாரத்தில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-dies-in-suspected-suicide-1784362002"></link>
            <id>https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-dies-in-suspected-suicide-1784362002</id>
            <summary type="text">
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று(17) நடைபெற்றுள்ளன.
</p><p>
விசாரணையின் ஆரம்ப கட்டமாக, கொழும்பு கிழக்கு முல்லேரியாவைச் சேர்ந்த நீதிமருத்துவ அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் வசித்த வீட்டிற்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தேவையான மருத்துவ குறிப்புகளைப் பதிவு செய்தார்.</p><p></p><h2>&nbsp;தவறான முடிவு&nbsp;</h2><p>
</p><p>
நீதிமருத்துவ மற்றும் நீதவான் விசாரணைகளின் மூலம் இது தவறான முடிவு என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி அவரது உடலுக்கு பொலிஸ் சீருடை அணிவிக்கவோ அல்லது பொலிஸ் மரியாதை செலுத்தவோ முடியாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இலங்கை பொலிஸ் வரலாற்றில், பொலிஸ் மா மா அதிபராக பதவி வகித்த ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92cefe73-f064-4f89-aa92-a81b9ab28735/26-6a5b39875b7a3.webp' /></p><p>
</p><p>

இதற்கு முன்பும் தவறான முடிவு செய்து கொண்ட எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அதிகாரப்பூர்வ பொலிஸ் மரியாதை வழங்கப்படவில்லை என்றும் உயர் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
நேற்று(17) காலை மாலபே – தலஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அளித்த வாக்குமூலத்தின்படி, "ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது சேவைத் துப்பாக்கியை கேட்டுள்ளார்.</p><p> </p><p>பின்னர், ஒரு தண்ணீர் கொண்டு வருமாறு காவலரை வெளியே அனுப்பியுள்ளார். அதன்பிறகே துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்ப விசாரணைகளில், அவரது மார்புப் பகுதியில் ஒரு தோட்டா பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்தே அந்த ரிவால்வர் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டது.
</p><p>
 பொலிஸாரின் தகவலின்படி, நேற்று காலை வழக்கம்போல தனது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். காலை சுமார் 7.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.</p><p></p><h2>சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு&nbsp;</h2><p>
</p><p>
உடனடியாக குடும்பத்தினரும் அயலவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் அவரை இரத்தக் காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><p>

உயிரிழக்கும் போது அவர் அறுபது வயதை கடந்திருந்ததுடன், இரண்டு மகன்களின் தந்தையாக இருந்தார்.


சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தலங்கம பொலிஸார் மற்றும் பல உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298f7301-2682-449a-9641-82b914b173c1/26-6a5b398838157.webp' /></p><p>

நீதியியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்ட குழுக்கள் அறிவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.</p><p>தற்போதைய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>
 பொலிஸ் வட்டாரங்களின் தகவலின்படி, அண்மைக்காலமாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமும் குடும்பத் தகராறும் இந்த துயரமான முடிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><p>

அவரது மகனின் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அதோடு குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>வாழ்க்கையின் இறுதிக் கட்டம்</h2><p>
</p><p>
தான் பல ஆண்டுகள் கண்ணியமாக வழிநடத்திய பொலிஸ் அமைப்பே தனது குடும்ப விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும் அவரை மனரீதியாக மிகவும் பாதித்ததாக நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e150f28-09f6-4277-9b4a-c2a381373754/26-6a5b39892ca97.webp' /></p><p>
</p><p>
வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் எதிர்கொண்ட இந்த குடும்பப் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக அவப்பெயரை தாங்க முடியாமல் அவர் கடுமையான மனவேதனையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

சி.டி. விக்ரமரத்ன மத நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். அவர் இறைச்சி உணவுகளைத் தவிர்த்ததுடன், மது மற்றும் புகைப்பழக்கங்களிலிருந்தும் முற்றிலும் விலகி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அவருடன் பொலிஸ் பயிற்சியில் இணைந்து பயின்ற ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பொன்சேகா, பொலிஸ் மா அதிபராக இருந்த காலத்திலும் அவர் தியான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T08:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 ஏக்கர் காணியை கையகப்படுத்திய இராணுவ அதிகாரி - அரசின் அசமந்தப் போக்கிற்கு எழும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/equal-rights-movement-media-conference-1784355157"></link>
            <id>https://tamilwin.com/article/equal-rights-movement-media-conference-1784355157</id>
            <summary type="text">ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்று(17.07.2026) இடம்பெற்ற சம உரிமை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p> குறிப்பாக முல்லைதீவு
மாவட்டம் - கேப்பாப்புலவு, யாழ்ப்பாணம் மாவட்டம் - பலாலி, வயாவிளான், மயிலிட்டி
பகுதிகளில் உள்ள காணிகள் இதுவரையில் உரிய மக்களிடம் கையளிக்கப்படவில்லை.</p><p>இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் எதிர்கட்சிகளாக இருந்த போது,&nbsp; சுட்டிக்காட்டியவர்கள் இன்று அரசாங்கமாக மாறிய பொழுது கூறிய விடயங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f126984-9bd6-42d5-8251-13a8f7281da2/26-6a5b1a65069a5.webp' /></p><p>இவர்களின் இடதுசாரி கொள்கை என்பது பொய்யான
கொள்கையாகவே உள்ளது. இவர்களின் இடதுசாரி கொள்கையை வைத்துக்கொண்டு பொய்யாக
அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><p>ஒரு
இராணுவ உயர் அதிகாரிக்காக 100 ஏக்கர் பொதுமக்களுடைய காணியை வலிகாமம் - வடக்கு
பகுதியில் கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, உரிய காணி உரிமையாளருக்கு காணி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T08:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக மோசடி - பொலிஸாரின் தந்திரத்தில் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australia-job-man-arrested-for-defrauding-people-1784340216"></link>
            <id>https://tamilwin.com/article/australia-job-man-arrested-for-defrauding-people-1784340216</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை வெளிநாட்டு வேலைவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து தலா 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை குறித்த நபர் பணம் பெற்றுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
பண மோசடி</b></h2><p>அதற்கமைய, இவரால் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f48b1b-7b8e-4b41-adee-d75edf4bb9d6/26-6a5b2e05d7e99.webp' /></p><p>குறித்த சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
</p><p>
அவரை கைது செய்ய அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும், அவர் தொடர்ந்து அதிகாரிகளிடமிருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். </p><p>இறுதியாக, தந்திரமாக செயல்பட்ட அதிகாரிகள், வெளிநாட்டு வேலை தேவை என்று கூறி அவரைத் தொடர்புகொண்டு, அவிசாவளை நகரில் வைத்து பெரும் முயற்சிக்குப் பிறகு கைது செய்தனர்.</p><p></p><h3><b> வெளிநாட்டு வேலை</b></h3><p>கைது செய்யப்பட்ட நபர், இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் விற்பனை முகாமையாளராக பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1311285-1798-4e81-b22f-49229c3abf7d/26-6a5b2e0691122.webp' /></p><p>சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. </p><p>பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமமின்றி வெளிநாட்டு வேலைகளுக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பண மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர், நேற்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் விலை உயர்வு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரேரணை நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-fish-price-hike-motion-passed-1784357485"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-fish-price-hike-motion-passed-1784357485</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த கூட்டமானது, நேற்று முன்தினம்(16.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மீன் விலை உயர்வை கட்டுப்படுத்தல்</h2><p>
</p><p>இதன்போது, பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பல்வேறு
பிரச்சினைகள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன், மக்களின்
நலனை கருத்தில் கொண்டு மீன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய
பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f49626f-e46c-4717-a176-dda1fb3047de/26-6a5b259396610.webp' /></p><p>கடல் வளம் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் கூட சாதாரண மக்கள் வாங்கக்கூடிய
மீன்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், கடற்றொழிலாளர்கள் குறைந்த
விலையில் விற்பனை செய்யும் மீன்கள் இடைத்தரகர்கள் மூலம் பல மடங்கு விலை
உயர்த்தப்பட்டு நுகர்வோரிடம் சென்றடைகிறது. இது கண்டிக்கத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.
</p><p>
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், பிரதேச சபைக்குட்பட்ட
பகுதிகளில் மீன் விற்பனையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிகள் மற்றும் மாலை
நேரங்களில் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக பிரதேச
சபையிடமிருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்ற பிரேரணை
அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>நுகர்வோர் பாதிப்பை கட்டுப்படுத்தல்</h2><p>
மேலும் மீன் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு
கடற்தொழில் அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் கடற்தொழில்
சமாசங்களுக்கு கடிதம் அனுப்புவதற்கும் சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db31ae6e-0d4c-45fb-849a-dcfd02071def/26-6a5b2592e6125.webp' /></p><p>
</p><p>மேலும் சாதாரண மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் நியாயமான விலையில்
கடலுணவுகளை பெற்றுக்கொள்ளும் சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும்,
இடைத்தரகர்களின் காரணமாக மீன்களின் விலை சடுதியாக உயர்வதால் நுகர்வோர்
பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் முல்லைத்தீவு மட்டுமன்றி வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இதே பிரச்சினை காணப்படுவதால், நாடளாவிய
ரீதியில் நிலையான விலை கட்டுப்பாட்டு பொறிமுறையை அரசாங்கம் விரைவில்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கு.அகிலன் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-involved-drug-trade-has-been-arrested-1784359570"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-involved-drug-trade-has-been-arrested-1784359570</id>
            <summary type="text">நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் 3,820
மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் 3,820
மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின்
பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட
சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>திடீர் சோதனை</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி. கஸ்தூரி ஆராய்ச்சி
வழிகாட்டலிலும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸார்
நெறிப்படுத்தலில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.ஆர்.எம். பிர்தௌஸ் வழங்கிய இரகசியத்
தகவலொன்றின் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
பொலிஸ் பரிசோதகர் பி.பிரகலாதன் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர்
இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca41463-b7e8-4322-b481-524f4b12bf71/26-6a5b2d3f2ba84.webp' /></p><p>
</p><p>
இதன்போது, சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய திடீர்
சோதனையின் போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் காவலில்
வைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து திருடிய சிறுவர்கள் கைது: விசாரணையில் சிக்கிய தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boys-arrested-for-breaking-into-a-shop-stealing-1784358542"></link>
            <id>https://tamilwin.com/article/boys-arrested-for-breaking-into-a-shop-stealing-1784358542</id>
            <summary type="text">கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர் 
 எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(17.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


14 வயது சிறுவர்கள் கைது</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கடந்த 4ஆம் திகதி குறித்த இரு மாணவர்களும், எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைபேசிக் கடையை அதிகாலை நேரத்தில் உடைத்து தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலவ நபாதவெவ மற்றும் எப்பாவல ரொட்டவெவ பகுதிகளில் வசிக்கும் 14 வயதுடைய மாணவர்கள் என்றும், அவர்கள் எப்பாவல, தெகல்ல பகுதியில் உள்ள உறைவிட பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cbf4c61-5dce-4c0a-a266-8c518ad65407/26-6a5b29c541807.webp' /></p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்களை தம்புட்டெகம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், சம்பந்தப்பட்ட கைபேசிகளின் EMI எண்கள் மற்றும் தொலைபேசி சமிக்ஞைகள் மூலம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

திருட்டு நடந்த நேரத்தில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள், தம்புட்டெகம பொலிஸ் பிரிவின் அதிகாரப்பூர்வ நாய் ஜானி மற்றும் கைரேகைப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><h2>

10 இலட்சம் பெறுமதியான கைபேசிகள் மீட்பு</h2><p>
கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேக நபர்களிடமிருந்து ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 6 திருடப்பட்ட ஸ்மார்ட் மொபைல் போன்களும், ரூ. 5,000 மதிப்புள்ள பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு கடைக்குச் சென்று பல நவீன மொபைல் போன்களின் விலைகளைப் பற்றி விசாரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c99e7f4-6fc4-4754-ba5a-ed36395f86f6/26-6a5b29c5e7d5c.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், அவர் தனது தந்தையிடம் தனக்கு ஒரு மொபைல் போன் வாங்கித் தருமாறு கேட்டதாகவும், ஆனால் அவரது தந்தை அதற்கு விருப்பமின்மையை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த மாணவர், மற்றொரு நண்பருடன் வந்து மொபைல் போன்களைத் திருடியுள்ளார். </p><p>

இவ்வாறு திருடப்பட்ட மொபைல் போன்களில் இரண்டைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக வைத்துக்கொண்டு, மற்ற நவீன மொபைல் போன்களைப் பிரிவெனாவைச் சேர்ந்த ஒரு தேரரருக்கும் அவரது தந்தைக்கும் மற்றும் பல மாணவர்களுக்கும் கொடுத்துள்ளார். </p><h2>

சிம் கார்ட் கொடுத்த தேரர்</h2><p>
கோயிலைச் சேர்ந்த தேரர் ஒருவருக்குச் சொந்தமான சிம் கார்டை, திருடப்பட்ட கைபேசியில் இந்த மாணவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தங்களது கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய விளையாட்டு விளையாடி வந்ததாகவும், அந்த விளையாட்டுக்கு அடிமையானதன் காரணமாகவே இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27a2c19-c545-46c8-ad49-fd13645c449a/26-6a5b29c69b714.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் திருடப்பட்ட கைபேசிகளும் இன்று(18.07.2026) தம்புட்டெகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். </p><p>

எப்பாவல பொலிஸ் அயலாரின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு அயலார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒன்று இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடகமாடிய வெளிநாட்டு பெண் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/54-year-old-foreign-woman-who-swallowed-drug-pills-1784349167"></link>
            <id>https://tamilwin.com/article/54-year-old-foreign-woman-who-swallowed-drug-pills-1784349167</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 237 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் சுங்க போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 237 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 


அங்கோலாவை சேர்ந்த 54 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் சந்தேக நபர், அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு வந்து, அங்கிருந்து கத்தார் நாட்டின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>

14 கொக்கைன் மாத்திரைகள் மீட்பு</h2><p>
விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், அவர் சக்கர நாற்காலியில் விமான நிலைய முனையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது குறித்த பெண்ணின் நடத்தையில் சந்தேகித்த சுங்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2559b9db-a9a7-4e2c-8f5e-f750544f8e51/26-6a5b02453137f.webp' /></p><p> 

இதன்போது, 14 கொக்கைன் போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், பல போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியதாகவும் அந்தபெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுதிறனாளிகளுக்கான விசேட திட்டம்: 2027 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/budget-proposals-persons-disabilities-completed-1784356877"></link>
            <id>https://tamilwin.com/article/budget-proposals-persons-disabilities-completed-1784356877</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
சமூகத்தினால், ஆறு முக்கிய துறைகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத்
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
சமூகத்தினால், ஆறு முக்கிய துறைகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத்
திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(17.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><h2>



மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட திட்டம்</h2><p>


இந்த முறை வரவு - செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு விசேட
கவனம் செலுத்தப்பட்டு, அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
செய்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசுக்கு
மாற்றுத்திறனாளிகள் சமூகம் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd29b09d-9327-4ca7-9de0-334af82d8411/26-6a5b20b49010a.webp' /></p><p> 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின்
தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா கருத்துத்
தெரிவிக்கையில், </p><p>

"மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சாதாரண பங்காளிகளாக மாற்றுவது
அவசியம். இதற்காக “ஒன்றாக பிடி தளராது” எனும் தேசிய கொள்கை வரைவு
தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்ட
முன்மொழிவுகளும் அந்தத் தேசிய கொள்கைக்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளன” என்றார். </p><h2>

விசேட தீர்மானங்கள்</h2><p>
இதன்போது, சுற்றுலாத்துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை
அதிகரித்தல் மற்றும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துதல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8d7e9e-4c37-4330-97b6-9c76a04817d1/26-6a5b20b58520a.webp' /></p><p>

அத்துடன், பாரம்பரியமான பயிற்சிகள் மூலமாக வேலைவாய்ப்பு சந்தையில்
மாற்றுத்திறனாளிகளுக்குப் போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால், நவீன
தேவைக்கேற்ற பயிற்சிகளை முன்னெடுத்தல்.
</p><p>
 மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சம பங்காளிகளாக மாற்ற
அரசாங்கம் பல கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவித்த
ஜனாதிபதியின் செயலாளர், இதற்கான சுற்றறிக்கைகள் மற்றும் பணிப்புரைகளை விரைவாக
வெளியிடுவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்துள்ளார். </p><p>

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,
நாடாளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிவில்
சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc858ea-8544-4436-9027-10decc3d11f9/26-6a5b20b655f16.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b7dcb56-17cc-40ee-8313-3d06cb93def9/26-6a5b20b723b70.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:44:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்கல்வியை மேம்படுத்த 2027 வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க அரசு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/steps-strengthen-the-vocational-education-sector-1784353156"></link>
            <id>https://tamilwin.com/article/steps-strengthen-the-vocational-education-sector-1784353156</id>
            <summary type="text">நாட்டின் தொழிற்கல்வித் துறையை
வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத்
தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவு - செலவுத் திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தொழிற்கல்வித் துறையை
வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத்
தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத்
தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில்
ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்
திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(17.07.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே
ஜனாதிபதி இவ்வாறு&nbsp; குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>303 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு</h2><p>
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி
அமைச்சுக்கு 303 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொதுக்
கல்விக்காக 160 பில்லியனும், உயர்கல்விக்காக 122 பில்லியனும் மற்றும்
தொழிற்கல்விக்காக 20 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>அந்த நிதியின்
கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும்
அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன்,
வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் மாத்திரம் அவற்றை
செலவிடாமல், தேசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை இனங்கண்டு நிதியைப்
பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e26208-a469-4be6-a498-f52ab84300d1/26-6a5b15b0aef73.webp' /></p><p>
</p><p>
தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மூலதனச் செலவினமான 8 பில்லியன்
ரூபா இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தின் கீழ் செயற்படும்
310 தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு காலாண்டுகளில் 57,959
மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு விசேட கவனம்
செலுத்தப்பட்டதுடன், கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர காணி ஒன்றை
வழங்குவது குறித்தும், வாழ்க்கைத் தொழில்சார் தொழினுட்பவியல்
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைச் இணைத்துக்கொள்வதை அடுத்த ஆண்டு முதல்
படிப்படியாக அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மாணவர் உதவித்தொகை திட்டம்</h2><p>
</p><p>
மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும்
அவற்றின் தரத்தையும் மேம்படுத்தி, பிராந்திய மட்டத்தில் மாணவர்கள்
தொழில்நுட்பப் பட்டங்களையும் டிப்ளோமாக்களையும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை
ஏற்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுக் கல்வியின்கீழ் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்
வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிநாட்டு
உதவிகளின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, அவற்றை வெறும் கடன்
சுமையாக மாற்றிக்கொள்ளாமல், இந்த நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கு இணங்கவும்
தேவைகளின் அடிப்படையிலும் மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இங்கு
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27beb49-2bde-4e9d-b2b3-106f9bd965ae/26-6a5b15aec9589.webp' />&nbsp;</p><p>
</p><p>
பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்கள்
குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப,
தகுதியான பயனாளிகளுக்கே நன்மைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்கான
முன்னுரிமைகளைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர் உதவித்தொகைத்
திட்டங்களுக்காக ஜனாதிபதி நிதியம் எப்போதும் தயாராக இருப்பதால், அத்தகைய
தேவைகள் குறித்த முன்மொழிவொன்றைத் தயாரித்து அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி
அறிவுறுத்தியுள்ளர்.
</p><p>
மேலும், 2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம்
வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்தும், தேசிய கல்வியியல்
கல்லூரிகளின் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதன் அவசியம்
குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம்&nbsp;</h2><p>
</p><p>
தற்போது நடைமுறையிலுள்ள மாணவர் காப்புறுதித் திட்டத்தில் காணப்படும்
பிரச்சினைகள் குறித்து இங்கு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
2027 ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கல்வித் துறையின்
முன்னேற்றத்திற்காக 382 பில்லியன் ரூபா பெருந்தொகையான முதலீட்டை
மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன்
கீழ் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம் குறித்தும் விசேட
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f508d152-4404-4433-bc2e-7b64e67d5ca2/26-6a5b15afdc515.webp' /></p><p>
</p><p>
டித்வா சூறாவளியினால் சேதமடைந்த 20 பாடசாலைகள் மற்றும் கல்வியியற்
கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 1.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பற்றாக்குறை
மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து
எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கும், அதற்காக விசேட ஆணைக்குழுவின் ஊடாக
நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T06:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு உயிரிழப்பு 53 ஆக அதிகரிப்பு! 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-death-toll-rises-to-53-1784353316"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-death-toll-rises-to-53-1784353316</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக
உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக
உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய மொத்த டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை 74 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது. </p><p>டெங்கு நோயின் பரவல்
தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.&nbsp;</p><p></p><h2>முறையான மருத்துவப் பரிசோதனை</h2><p>இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஏனைய
அறிகுறிகள் தென்படுமாயின், காலதாமதம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள
மருத்துவமனைகளுக்குச் சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு
பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2706735-55ce-4485-9a7c-3265ca47e01b/26-6a5b168078f5f.webp' /></p><p>
தொடர்ச்சியான காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் இதர அறிகுறிகளை
அலட்சியப்படுத்தாமல், தகுதியான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நோயின்
தீவிரத்தைக் குறைக்கவும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் அவசியமாகும் என்று
சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T06:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கான ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-tightens-visa-rules-foreign-students-journalist-1784352080"></link>
            <id>https://tamilwin.com/article/us-tightens-visa-rules-foreign-students-journalist-1784352080</id>
            <summary type="text">அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், கலாசாரப் பரிமாற்ற
பார்வையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கான விசா கால வரம்பைக் குறைத்து
விதிமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், கலாசாரப் பரிமாற்ற
பார்வையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கான விசா கால வரம்பைக் குறைத்து
விதிமுறைகளைக் கடுமையாக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய இறுதி விதியை
அறிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி,
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் கலாசாரப் பரிமாற்ற திட்டங்களில் வருபவர்களின்
விசா காலம் இனி அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் என வரம்பிடப்படும்.</p><p></p><h2>விசா விதிமுறைகள்</h2><p>
</p><p>
அதேபோன்று, ஊடகவியலாளர்களுக்கான விசா காலம் வெறும் 240 நாட்களாகக்
குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பாக, சீனாவைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு இந்த விசா கால வரம்பு
90 நாட்களாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சர்வதேச மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவை விட்டு
வெளியேறுவதற்கான கால அவகாசம் 60 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் பாதியாகக்
குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c4b2301-97a0-495d-84b0-8fd722d14daa/26-6a5b0f48d984f.webp' /></p><p>
</p><p>
கல்வி பயிலும் போது மாணவர்கள் தங்களது நோக்கங்களை மாற்றுவதற்கோ அல்லது உரிய
அனுமதியின்றி வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுவதற்கோ புதிய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களின் வருகை 11 சதவீதம் அதிகரித்ததால்,
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டினரைக் கண்காணிப்பது தங்களுக்குப்
பெரும் சவாலாக இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அமெரிக்காவின் இந்த புதிய விசா கொள்கை முற்றிலும் "பாரபட்சமானது" என சீன
வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளதுடன், அமெரிக்கா இதனை உடனடியாகத்
திரும்பப் பெறாவிட்டால் தகுந்த பதிலடி நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும்
எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T06:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்குபவர்களை குறி வைக்கும் கும்பல் - தொடரும் மர்ம மரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalists-question-the-government-1784345779"></link>
            <id>https://tamilwin.com/article/journalists-question-the-government-1784345779</id>
            <summary type="text">இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேளையில், சிலர் மர்மமான முறையில் உயிரிழப்பது ஏன் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேளையில், சிலர் மர்மமான முறையில் உயிரிழப்பது ஏன் என ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் திடீர் மரணத்தை சுட்டிக்காட்டியே ஊடகவியலாளர்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தனர்.</p><p> 

இந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதிலளித்தார்.
</p><p>
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரை மாய்த்துக் கொண்டமை குறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.</p><p></p><p>
</p><h2><b>
சட்ட நடவடிக்கை</b></h2><p>விசாரணைகளின் முடிவிலேயே இதற்கான உண்மையான காரணங்கள் தெரியவரும் நபர் ஒருவர் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க முடியாத சூழலில் இவ்வாறான முடிவுகளை எடுக்கும் போக்கு காணப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/135dc947-577e-495a-a67f-bdd41ce8697f/26-6a5af921a2a19.webp' /></p><p>முன்னாள் பொலிஸ் மா அதிபருக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்த மக்கள் மத்தியில் நிலவும் நியாயமான சந்தேகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தின் முன்னால் இத்தகைய சந்தேகங்கள் உண்மையானதா இல்லையா என்பது நிரூபிக்கப்படும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h3><b>ஊழல் மற்றும் குற்றச்செயல்</b></h3><p>

சமகால அநுர அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4c3d68c-3f4a-4d6f-8cec-da9d14516a84/26-6a5af922522d3.webp' /></p><p>குறித்த ஆறு பேரும் முன்னாள் ஆட்சியாளர்களான மகிந்த ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SzeAdYQ6W6E" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-07-18T05:52:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபான்மைக் கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை- சஜித் அணி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-are-not-opposed-to-the-minority-alliance-1784351818"></link>
            <id>https://tamilwin.com/article/we-are-not-opposed-to-the-minority-alliance-1784351818</id>
            <summary type="text">தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக்
கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவதில்
எமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக்
கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவதில்
எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,

"மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின்
உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் தனியாக ஒழுங்கமைவதில் தவறில்லை.
</p><p></p><h2>அரசின் நிர்வாகக் குறைபாடுகள்&nbsp;</h2><p>அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் எமது ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துதான்
பயணிக்கின்றனர். தற்போதைய மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை
இலக்குக்காக, எதிர்காலத் தேர்தல்களில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து
செயற்படும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c42a9d-657b-466b-b668-3ca8e06521f3/26-6a5b0f1a8c20a.webp' /></p><p>இதன்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் அரசின் நிர்வாகக்
குறைபாடுகள் குறித்தும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
</p><p>
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும்
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதிக்கம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர்,
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் அரசின்
நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்</h2><p>சிறைக்குள் வன்முறை வெடித்தபோது, உரிய நேரத்தில் பொலிஸாரின் உதவியைப் பெறவோ
அல்லது முறையான முடிவுகளை எடுக்கவோ சிறைச்சாலை நிர்வாகத்துக்கு அதிகாரம்
வழங்கப்படவில்லை. </p><p>இக்கட்டான சூழலில் நீதி அமைச்சரைத் தொடர்புகொள்ள அதிகாரிகள்
பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதுவே இந்த அரசின் நிர்வாகக்
கட்டமைப்பு சிதைந்துள்ளதற்கான சான்று என்று அவர் சாடியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2217d8c6-a96d-499d-aa3a-375968e0222e/26-6a5b0f1b3ea95.webp' /></p><p>
அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசிய திஸ்ஸ அத்தநாயக்க, ஒன்பது
ஆண்டுகளாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குச் சவால் விடுத்தார்.
</p><p>முகநூலில் பகிரப்படும் கருத்துக்களைத் தாண்டி, அரசுக்கு உண்மையிலேயே மக்கள்
ஆதரவு உள்ளதா என்பதை நிரூபிக்கும் களமாக மாகாண சபைத் தேர்தல் அமையும்.
</p><p>ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் பிராந்தியங்களை நிர்வகிப்பது அரசமைப்பை
மீறும் செயலாகும். ஜனாதிபதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்குமாயின்,
தேர்தலை நடத்தி அதனை நிரூபித்துக் காட்டட்டும் என்றும் அவர் மேலும்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T05:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் பொலிஸ் அதிகாரியிடம் தவறாக நடந்துக் கொண்ட உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-dismissed-1784351734"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-dismissed-1784351734</id>
            <summary type="text">பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் தவறான முறையில், நடந்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் தவறான முறையில், நடந்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(17.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 



தவறான முறையில் நடந்துக் கொண்ட அதிகாரி</h2><p>
கலேவெல அருகே, மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த 15ஆம் திகதி தம்புள்ள கம்உதாவ மைதானத்தில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்வொன்றுக்கு கடமைக்கு சென்ற நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fea65db-61a6-4706-a187-5d9b76d7b079/26-6a5b0c3c173d9.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அங்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டதும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண் உத்தியோகத்தரிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டுள்ளார்.
</p><h2>

பணியிடை நீக்கம்</h2><p>
இதனையடுத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர், தனது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் அப்பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
</p><p>
ஒரு பெண் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றது மற்றும் பணியில் இருந்தபோது மதுபோதையில் இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையை பணியிடை நீக்கம் செய்ய அப்பகுதிக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வரவுள்ள ஐரோப்பியத் தூதுவர் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-delegation-to-visit-chemmani-mass-grave-1784349818"></link>
            <id>https://tamilwin.com/article/european-delegation-to-visit-chemmani-mass-grave-1784349818</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை
வருகை தரவுள்ளது.
</p><p>
இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து
மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப்
புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

விசேட கலந்துரையாடல்</h2><p>
யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22
ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c6cbb1-6309-4d17-9e54-b788e0ef95af/26-6a5b047c0e01b.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனுவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hearing-on-suresh-saleh-s-petition-1784348095"></link>
            <id>https://tamilwin.com/article/hearing-on-suresh-saleh-s-petition-1784348095</id>
            <summary type="text">அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தன்னைக் குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராகத் தாக்கல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தன்னைக் குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராகத் தாக்கல்
செய்துள்ள மனுவில், தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு கருத்துகளை
முன்வைக்க அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள்
மீதான பரிசீலனை மீதான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. </p><p>

இதற்கமைய, இது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் அபேசூரிய முன்னிலையில்,
குறித்த மனுக்கள் நேற்று(17.07.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
</p><h2>
மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு</h2><p>
பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் கர்தினால்
ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 8 தரப்பினரால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89fbf638-d598-4054-a101-a22a973c1b22/26-6a5afdc173db2.webp' /></p><p>
</p><p>
நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி
சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னரே, இந்த இடைக்கால மனுக்கள்
தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நீதியரசர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனடிப்படையில், இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தரப்புச் சட்டத்தரணிகளின்
இணக்கப்பாட்டுடன், அந்த மனுக்களைப் பரிசீலனைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4
மற்றும் 6ஆம் திகதிகளில் மீண்டும் நீதிமன்றில் அழைக்குமாறு மேன்முறையீட்டு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2330dedc-52dd-43fc-b3f7-7bc98896337a/26-6a5afdc231507.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8637d08-4138-4c50-a35e-448d92b490fd/26-6a5afdc2de679.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகல் கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்காத ஜனாதிபதி - எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-not-responded-central-governor-1784346938"></link>
            <id>https://tamilwin.com/article/president-not-responded-central-governor-1784346938</id>
            <summary type="text">மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தான் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தான் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று (17) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நடைமுறைக்கு வரும் வகையில்</h2><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஆளுநர் பதவியை ஏற்கும் சந்தர்ப்பத்திலேயே, மிகக் குறுகிய காலத்திற்குள் நான் இதிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்துவிட்டே பதவியைப் பொறுப்பேற்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3ef2946-ae07-48a7-b002-42eeadb5dab0/26-6a5afc42415f8.webp' /></p><p>ஆயினும், 'டித்வா' சூறாவளி நிலைமை காரணமாக மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, எனது முடிவை இதுவரையில் பிற்படுத்தியிருந்தேன்.
</p><p>
முற்றிலும் தனிப்பட்ட காரணத்தினால் நான் தனது பதவியிலிருந்து விலகுகின்றேன். இதற்கு எவருடையோ அழுத்தமோ வேறு விடயங்களோ காரணம் இல்லை.
</p><p>
ஜனாதிபதி என்னுடைய பதவி விலகலை ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன் என்றும் பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T04:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் - சர்ச்சையை ஏற்படுத்திய யூடியூப்பரின் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hambantota-magistrate-dismissed-1784347525"></link>
            <id>https://tamilwin.com/article/hambantota-magistrate-dismissed-1784347525</id>
            <summary type="text">தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிநாட்டு யூடியூப் குழுவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லால் பிரியந்த என்பவர் அண்மையில் யூடியூப் காணொளி ஒன்றின் மூலம், ஹம்பாந்தோட்டை - அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தின் நீதவான் எரந்தி ஹேவாவசம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து, நீதிச் சேவை ஆணைக்குழு நேற்றுமுன்தினம்(16.07.2026) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நீதவான் எரந்தி ஹேவாவசத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளது.</p><h2>

பணியிடை நீக்கம்</h2><p>

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவைத் தலைவராக கொண்டு செயற்படும் நீதிச் சேவை ஆணைக்குழு, மாஜிஸ்திரேட் எரந்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றிய உத்தால சுவந்துருகொடவை அங்குணகொலபெலஸ்ஸ குற்றவியல் நீதவான் பதவிக்கு நியமித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9866c67-ef61-41da-9704-29b662cac37a/26-6a5afbd4749e3.webp' /></p><p>

நீதவான் உத்தால சுவந்துருகொட அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

அதேபோன்று பல சர்ச்சைக்குரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வரும், இலங்கையின் சட்டத்துறையில் மிகவும் மதிக்கப்படுபவருமான சிரேஷ்ட நீதிபதி இசுரு நெத்திகுமாராவும், நீதித்துறை சேவை சங்கத்தில் உயர் பதவியில் இருந்தபோதே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். </p><p>

அவரும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் தற்போது கடமையாற்றி வருகிறார்.

நீதவான் உத்தால சுவந்துருகொடாவின் சகோதரிகளில் ஒருவரும் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், அவரும் இடமாற்றமொன்றை எதிர்பார்த்துள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் புதிய சிலோன் தேயிலை கிராமங்கள் 500 திட்டம்- மலையக மக்களின் வாழ்தாரத்தை கேள்விக்குறியாக்குமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ceylon-tea-villages-500-project-1784346464"></link>
            <id>https://tamilwin.com/article/ceylon-tea-villages-500-project-1784346464</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார வரலாற்றை எழுதும்போது தேயிலைத் துறையைத் தவிர்த்து எழுத முடியாது. அதேபோன்று, தேயிலைத் துறையின் வரலாற்றை எழுதும்போது பெருந்தோட்டத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார வரலாற்றை எழுதும்போது தேயிலைத் துறையைத் தவிர்த்து எழுத முடியாது. </p><p>அதேபோன்று, தேயிலைத் துறையின் வரலாற்றை எழுதும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தியாகத்தையும் உழைப்பையும் புறக்கணிக்க முடியாது.</p><p>

நூற்றாண்டுக்கும் மேலாக மலைநாட்டின் கடினமான காலநிலையிலும், மிகக் குறைந்த
வசதிகளுடனும் உழைப்புக்கேற்ற ஊதியமின்றி உழைத்த மலையக மக்கள், இலங்கைக்கு பில்லியன் கணக்கான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளனர்.</p><p></p><p>

ஆனால் வரலாறு சொல்லும் இன்னொரு உண்மை என்னவென்றால், நாட்டின் பொருளாதாரத்தைத்
தாங்கிய இந்த பெருந்தோட்டத் துறை, கடந்த பல தசாப்தங்களாக அரசியல் கொள்கைகளில்
பின்தள்ளப்பட்ட துறையாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும்.</p><h2>

முடங்கும் நிலையில் தேயிலை உற்பத்தி</h2><p>

1990களுக்குப் பின்னர் பல அரசுகள் சிறுதோட்ட உரிமையாளர்களை உருவாக்கும்
கொள்கைக்கு முன்னுரிமை அளித்தன. உர மானியம், காணி ஒதுக்கீடு, இலவச ஆலோசனை
சேவைகள், பயிற்சி, நிதி உதவிகள், தேயிலைச் சபையின் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட
பல்வேறு திட்டங்கள் சிறுதோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9285a42-b521-4db8-ba55-f7cfa5d41f22/26-6a5af85f48e10.webp' /></p><p>

இந்த எந்த திட்டத்திலும் பெருந்தோட்டப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள்
உள்வாங்கப்படவில்லை என்பதே உண்மை அதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது
காணியுரிமை இல்லாமையே என்றால் அதுவும் பிழை என்று கூறுவதற்கில்லை.
</p><p>

அதன் விளைவாக, இன்று இலங்கையின் தேயிலை உற்பத்தியில் பெரும் பங்கு
சிறுதோட்டங்களிடமிருந்து கிடைக்கிறது.

 நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி மற்றும்
ஏற்றுமதிக்கான மூலப்பொருளில் சுமார் 78 சதவீதத்தை சிறுதோட்ட உரிமையாளர்களே
வழங்குகின்றனர் என்பது, இந்தக் கொள்கையின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
</p><p>

இது நாட்டிற்கு நல்லதுதான். ஏனெனில் அதிகமான உற்பத்தியாளர்கள் உருவாகிறார்கள்.
கிராமப்புற வருமானம் உயர்கிறது. பொருளாதார வாய்ப்புகள் பரவலாகின்றன. ஆனால் இதில் பெருந்தோட்டங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ள என்பது யாவரும்
அறிந்த உண்மையே. இதே வேளையில் ஒரு ஆபத்தான போக்கும் உருவாகியுள்ளது.
</p><h2>
பராமரிப்பின்றி மூடப்படும் தொழிற்சாலைகள்</h2><p>

சிறுதோட்டத் துறை தொடர்ந்து வளர்ந்த நிலையில், பெருந்தோட்டத் துறையை
நவீனமயப்படுத்தும் முயற்சிகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. பல
தோட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் தொழில் வாய்ப்பினை
இழந்துள்ளனர்.


பல தோட்டங்களில் இன்னும் பழைய உற்பத்தி முறைகளே தொடர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89c9d85-d806-4578-9458-ca81f180c585/26-6a5af8601a9e5.webp' /></p><p>
</p><p>இயந்திரமயமாக்கல், மீள் நடுகை, தொழிலாளர் நலன், வீடமைப்பு, சுகாதாரம், கல்வி,
குடிநீர், அடிப்படை வசதிகள் போன்ற பல துறைகளில் பாரிய முதலீடுகள்
தேவைப்படுகின்றன.
</p><p>

இந்த நிலை நீடித்தால், “பெருந்தோட்டங்கள் இல்லாமல்கூட நாடு இயங்கிவிடும்” என்ற
தவறான எண்ணம் கொள்கை வகுப்பாளர்களிடையே உருவாகும் அபாயம் உள்ளது.</p><h2>


பெருந்தோட்டங்களின் வளர்ச்சிக்கு புதிய பங்களிப்பு</h2><p>
சிலோன் தேயிலை கிராமங்கள் 500 - நல்ல திட்டம், ஆனால்...
மக்கள் அரசாங்கம் தற்போது “சிலோன் தேயிலை கிராமங்கள் 500” என்ற புதிய
வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de2bc3b3-2c2a-412e-b8a4-06f4e670a744/26-6a5af860d6874.webp' /></p><p>
</p><p>
 நாட்டின் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதும்,
புதிய சிறுதோட்ட உரிமையாளர்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.


ஆனால் ஒரு அடிப்படை கேள்விக்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும்.</p><p>
இந்த புதிய தேயிலை கிராமங்கள் எங்கே உருவாக்கப்படுகின்றன?
அவை ஏற்கனவே சிறுதோட்டங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் உருவாக்கப்படுமா?

அல்லது பெருந்தோட்டப் பகுதிகளிலும் திட்டமிட்டு உருவாக்கப்படுமா?
இந்தக் கேள்விக்கான பதில்தான் மலையக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்
போகிறது.</p><h2>


78 சதவீதம் இன்று - நாளை 90 சதவீதமா?</h2><p>
இன்று சிறுதோட்டங்கள் ஏற்கனவே பெரும்பான்மையான உற்பத்தியை வழங்குகின்றன.
அரசின் புதிய திட்டங்கள் தொடர்ந்து இந்தத் துறையை மட்டுமே ஊக்குவித்தால்,
எதிர்காலத்தில் இந்தப் பங்கு மேலும் அதிகரிக்கும்.</p><p>

அப்போது, பெருந்தோட்டங்களைப் பாதுகாக்கவும், அவற்றில் முதலீடு செய்யவும்,
தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தவும் தேவையில்லை என்ற எண்ணம் உருவாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8f23a6a-1e12-48e8-a511-960532a868c4/26-6a5af861b6435.webp' /></p><p>
</p><p>

இது பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினை.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று பெருந்தோட்டங்களையே நம்பி வாழ்கின்றன.
</p><p>
அவர்களின் வேலைவாய்ப்பு, குடியிருப்பு, சமூக பாதுகாப்பு, கல்வி, மருத்துவம்,
எதிர்காலம் அனைத்தும் இந்தத் துறையோடு பிணைக்கப்பட்டுள்ளன.
</p><p>பெருந்தோட்டங்கள் பலவீனமடைந்தால், பாதிக்கப்படுவது நிறுவனங்கள் மட்டுமல்ல்
முழு மலையக சமூகமே. </p><h2>

அரசாங்கம் சிந்திக்க வேண்டிய மாற்று வழி</h2><p>
தேயிலை கிராமத் திட்டத்தை பெருந்தோட்டத் துறையுடன் இணைத்து செயல்படுத்த
முடியாதா?
பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாமல் உள்ள நிலங்கள், குறைந்த உற்பத்தி தரும்
காணிகள் அல்லது பொருத்தமான பகுதிகளை திட்டமிட்டு மலையக மக்களுக்கு நீண்டகால குத்தகை அல்லது உரிமை அடிப்படையில் வழங்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28cc06ca-e50d-4d4f-914c-4f1263999da7/26-6a5af86298aaf.webp' /></p><p>
</p><p>
அந்த நிலங்களில் திட்டமிட்ட “தேயிலை கிராமங்கள்” உருவாக்கப்படலாம். அங்கு வாழும் தொழிலாளர்களே சிறுதோட்ட உரிமையாளர்களாக
மாற்றப்படலாம்.
</p><p>

அவர்களுக்கு காணி, தரமான தேயிலை நாற்றுகள், உர
மானியம்,தொழில்நுட்ப ஆலோசனை,குறைந்த வட்டி கடன்,சந்தைப்படுத்தல்
வசதிகள்,கூட்டுறவு அமைப்புகள் என அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் வழங்கலாம்.</p><h2>


வருமானம் அதிகரிப்பு</h2><p>
இந்த அணுகுமுறையால் அரசு ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளை அடைய முடியும். ஒருபுறம் பெருந்தோட்டங்கள் தொடர்ந்தும் உற்பத்தியில் இருக்கும்.

மறுபுறம் மலையக மக்கள் வெறும் கூலித் தொழிலாளர்களாக அல்லாமல், சொந்த
உற்பத்தியாளர்களாகவும் தொழில் முனைவோராகவும் உருவாக முடியும்.
</p><p>
இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து வறுமை குறையும். இளைஞர்கள் தோட்டங்களை விட்டு
வெளியேற வேண்டிய நிலை குறையும். 

காணி உரிமை மூலம் சமூகப் பாதுகாப்பு
அதிகரிக்கும். </p><p>மலையகத்தின் பொருளாதாரம் புதிய அடித்தளத்தைப் பெறும்.
மலையக மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை
மலையக மக்கள் பல தலைமுறைகளாக உழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் உழைத்த நிலத்தின்
உரிமையாளர்களாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது.
இன்று அந்த வரலாற்றை மாற்றும் வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
</p><h2>
சிறு தோட்டங்களை ஊக்குவிப்பு நடவடிக்கை</h2><p>

சிலோன் தேயிலை கிராமங்கள் 500 என்பது வெறும் உற்பத்தித் திட்டமாக
அல்லாமல், மலையக மக்களின் பொருளாதார விடுதலைத் திட்டமாக மாற்றப்பட வேண்டும்.</p><p>
அதற்கு பெருந்தோட்டப் பகுதிகளிலேயே திட்டமிட்ட தேயிலை கிராமங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமான தீர்வாகும்.

தேயிலை கிராமங்களுக்கும் பெருந்தோட்டங்களுக்கும் இடையே போட்டி இருக்க வேண்டிய
அவசியமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b845486b-eded-464b-92af-316862ad8727/26-6a5af8634eb0d.webp' /></p><p> </p><p>இரண்டும் இலங்கையின் தேயிலைத் துறையின் இரு வலுவான தூண்கள்.
அரசாங்கம் சிறுதோட்டங்களை ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கது. 

ஆனால் அதே நேரத்தில்,
பெருந்தோட்டத் துறையையும் நவீனமயப்படுத்தி பாதுகாக்க வேண்டும். </p><p>குறிப்பாக,
பெருந்தோட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு காணி உரிமை,
உற்பத்தி வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வழங்கும் வகையில் தேயிலை
கிராமம் திட்டம் பெருந்தோட்டப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><p>

அவ்வாறு நடந்தால், அது ஒரு திட்டத்தின் வெற்றியாக மட்டும் இருக்காது.
இலங்கையின் தேயிலைத் துறைக்கு புதிய அத்தியாயத்தையும், மலையக மக்களுக்கு புதிய
வரலாற்றையும் எழுதும் மகத்தான தேசிய முயற்சியாக அமையும்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:52:19+00:00</updated>
        </entry>
    </feed>
