<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-16T02:44:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைத்த முக்கிய புள்ளி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-of-dinesh-schaffter-ruled-a-murder-1784165207"></link>
            <id>https://tamilwin.com/article/death-of-dinesh-schaffter-ruled-a-murder-1784165207</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க என்று&nbsp;இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். </p><p>இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பிரசாத் ரணசிங்க இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே. தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
</h2><p></p><h2>தப்பிச் செல்வதற்கான முயற்சி</h2><p>உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள்</p><p>பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><p> அன்று&nbsp; பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். 
இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a691014b-abc9-492b-80df-5335216fc7b5/26-6a58335962c8e.webp' /></p><p>அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் (Dinesh Schaffter) கொலை செய்யப்பட்டார். </p><p>இன்று 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது 2022 இலிருந்து 2026 வரை இந்தக் கொலை மூடிமறைக்கப்பட்டது.மேலும் இந்த விசாரணையை மூடிமறைத்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) பொய்க் குறிப்புக்களை எழுதிய, பொய்ச் சாட்சியங்களை உருவாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T02:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-is-not-a-criminal-1784079590"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-is-not-a-criminal-1784079590</id>
            <summary type="text">சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் பிரதிவாதியாக சுரேஷ் சலே இருந்தாலும், எந்த இடத்திலும் அவரது பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் பிரதிவாதியாக சுரேஷ் சலே இருந்தாலும், எந்த இடத்திலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். </p><p>

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் காசிம் பதுங்கி இருந்த இடம்கூட, தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான நிலந்த ஜயவர்தனவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>

எனினும், அவரை கைது செய்ய அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.</p><p> </p><h2><b>

மனு விசாரணை</b></h2><p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவை செல்லாததாக்கி, உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce9e786-4646-4825-91d0-4950454879b4/26-6a57aff49b0e7.webp' /></p><p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><p> 

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கருத்து வெளியிட்ட சஞ்சீவ ஜயவர்தன, ஈஸ்டர் தாக்குதலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே மத ரீதியான தாக்குதல் ஒன்று இடம்பெற வாய்ப்புள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>

இருந்த போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஸஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து 97 அறிக்கைகளை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><h3><b>

சட்ட நடவடிக்கை </b></h3><p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது. 

பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் 129 பேர் கொண்ட பட்டியலையும் அவர் சமர்ப்பித்திருந்த போதிலும், பிரதிவாதிகள் அது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை என சஞ்சீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c2853f-3391-4b36-a44f-c73c8d5f8aa7/26-6a57aff54d96a.webp' /></p><p>தனது கட்சிக்காரர் எவ்வித சம்பவத்துடனும் தொடர்புடையவர் என்பது எந்தவொரு விசாரணையிலோ அல்லது ஆணைக்குழு அறிக்கைகளிலோ வெளியாகவில்லை என சஞ்சீவ ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் ஜயகி டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையில், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T01:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்.. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurunegala-child-car-virul-video-police-report-1784160616"></link>
            <id>https://tamilwin.com/article/kurunegala-child-car-virul-video-police-report-1784160616</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.</p><p> பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p></p><h2>உரிய ஆதாரங்கள்..&nbsp;</h2><p> இந்த சம்பவத்திற்கு அங்கு நின்ற 8 வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d497f69-fb16-4547-a994-191df4aedd2b/26-6a5822e34ff0b.webp' /></p><p>

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்த காரின் அருகே நடந்து சென்றதும் பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784160924"></link>
            <id>https://tamilwin.com/article/the-matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784160924</id>
            <summary type="text">&amp;nbsp;மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச.</p><p>இவர் கஜபா படையணியின் முதலாவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
அந்த காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து பொறுப்புக்களும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்துடன் கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க அன்று முன்னிலையில் செயற்பட்டவராவார்.
</p><h2>
</h2><p></p><h2>2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி</h2><p>2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாத்தளை மாவட்டத்தில் (Bio Gas) நிலையம் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜயசேன ஆகியோர் விசாரணை நடத்தி ஒரு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். </p><p>
அதன் பின்னர் அன்றைய ராஜபக்ச அரசாங்கம் இதுகுறித்து ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்த எச்சங்கள் 1950-க்கு முந்தியவை என்று கூறப்பட்டது. </p><p>ஆனால் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் வைத்தியர் அஜித் ஜயசேனவும் தெளிவாக, இவை 1986 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த கொலைகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டனர். </p><p>
இந்த உடல்களில் பலவற்றில் சித்திரவதைக்கான தெளிவான அடையாளங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் பல பகுதிகளில் கூர்மையான பொருட்களால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருந்தன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2877c7-2015-47e4-830c-e0c9862749f0/26-6a58229f7ab11.webp' /></p><p>கழுத்தில் கயிறு போடப்பட்டதைக் காட்டும் தடயங்களும் இருந்தன. பல்வேறு வகையான சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் காணப்பட்டன.
</p><p>இந்த விவகாரம் குறித்து இன்று நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கமால் குணரத்ன மற்றும் ஷவேந்திர சில்வா போன்ற இராணுவ அதிகாரிகளும் சில காலங்களில் அந்தப் பகுதிகளை பொறுப்பேற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.</p><p>
1988–89 காலப்பகுதியில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கம் நாடு முழுவதும் உத்தியோகப்பூர்வமாக அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையில் கொலைக் குழுக்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஆறுகள், ஏரிகள் போன்ற இடங்களில் மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. </p><p>ஆனால் காலப்போக்கில் சில ஆதாரங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாத்தளை கூட்டுப் புதைகுழி அவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக நீதிக்காக மாத்தளை நீதிமன்றத்திற்கும் பல்வேறு அதிகாரிகளிடமும் முறையிட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.</p><h2>
கிடைக்காத நீதி</h2><p>அண்மையில் சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, மாத்தளை மனித புதைகுழி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில், சுமார் 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட எச்சங்களுக்கு DNA பரிசோதனை நடத்தவும், </p><p>இந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தேவையான உத்தரவுகளை வழங்கவும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eedb4ef-b575-435e-aef1-a3beec41923c/26-6a58229ec00ed.webp' /></p><p>இந்த மனுவை பரிசீலித்த மாத்தளை நீதிவான், இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு என்றும், பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் உடனடியாக உத்தரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்தார். </p><p>இதற்காக மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் ஜூலை 16 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
அதனுடன் இந்த விவகாரம் மீண்டும் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. </p><p>அறிக்கைகளின்படி, அந்த கூட்டுப் புதைகுழியில் இருந்து மொத்தம் 154 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T00:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் துப்பாக்கியை பிடுங்கி அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-after-shooting-officer-katunayake-1784158410"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-after-shooting-officer-katunayake-1784158410</id>
            <summary type="text">கட்டுநாயக்கவின் கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் (15) மினுவாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்கவின் கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று பிற்பகல் (15) மினுவாங்கொடவின் தேவோலபோல பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அதிகாரியின் துப்பாக்கி&nbsp;</h2><p>

போதைப்பொருள் கடத்தல்காரரான அந்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் துரத்திப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1dbc784-858f-40ad-b3ed-76da052cca9f/26-6a581b1364fbf.webp' /></p><p>
</p><p>
பின்னர், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துவர ஒரு அதிகாரி சென்றுள்ளார்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ​​தன்னுடன் இருந்த அதிகாரியின் பணித் துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டுவிட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039"></link>
            <id>https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>

எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை
ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும்
வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற
பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>முக்கிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு
கூறப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3834f3b-a92d-40af-a95c-a592b12b48aa/26-6a581439a8855.webp' /></p><p> அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று
வருகிறது.
</p><p>
வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை
தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒரு விசேட கலந்துரையாடல்
விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டு
ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p><p>

அதனடிப்படையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சூழ்நிலை,
அதற்குரிய நிலப் பயன்பாடு, அந்த நிலச் சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் மாவட்ட
விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு
மாவட்டத்துக்கும் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதன்
ஊடாக அந்த விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்,
மன்னார் மாவட்டத்தின் முதலாவது கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் கால பிக்குகள் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் - அம்பிட்டிய தேரர் பற்றிய ஆதாரமும் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.&nbsp;</p><p>அவர் அண்மையில், "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா?
</p><p>
இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில், கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>அதேநேரம்,&nbsp;மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் தமிழர்கள் தொடர்பில் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தவர் தான்.&nbsp;</p><p>தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் இவர் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qGn__FhhhGc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட மூவர் அதிரடிப்படையினரால் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632</id>
            <summary type="text">திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் &#039;ஐஸ்&#039;
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான &#039;கெம்பா&#039; உட்பட மூன்று
சந்தேக நபர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் 'ஐஸ்'
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெம்பா' உட்பட மூன்று
சந்தேக நபர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம்(14.7.2026)மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு
போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>இதன்போது, முக்கிய சந்தேக நபரிடமிருந்து 16 கிராம் 'ஐஸ்'
போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும்
இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்,
மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்
கைப்பற்றப்பட்டன.</p><p>
கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத
செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e70dd99-df46-45d2-84dd-228c3a4e07b4/26-6a57f29abf23a.webp' /></p><p>
</p><p>
இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தமை மற்றும்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான்
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட
வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T21:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஜனாதிபதி யார்! இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கூட்டணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351"></link>
            <id>https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.</p><p>இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.</p><p>பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>எதிர்வரும்&nbsp;ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b746TCSqv10" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:56:08+00:00</updated>
        </entry>
    </feed>
