<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-10T14:31:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785"></link>
            <id>https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய கடந்த 5 மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்குள் கிளம்பிய மோதலில் 8 அதிகாரிகள் உட்பட 29 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p>

இதன் அடிப்படையில், நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>

கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்ட கைதிகள்</h2><p>
அத்துடன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 29 அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/111933e8-297a-4336-8dbc-ffba4edbc9a9/26-6a51011db2169.webp' /></p><p>
</p><p>
அவர்களில் உள்ள அனைத்து கைதிகளும் கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை இன்னும் முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஏனெனில், சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்கு உகந்த உடல்நிலையில் இல்லை.</p><p>

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த எட்டு சிறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

அதிகாரிகளுக்கு பதவி உயர்வு</h2><p>

கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறைக்காவலர் எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதலாம் வகுப்பு சிறைக்காவலர் பதவிக்கும், மற்ற சிறைக்காவலர்கள் சார்ஜென்ட் (Sergeant) பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73edd57-3283-452d-9abb-74380e1cb02c/26-6a51011e5fe0c.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்து கைதிகளும் இன்று மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜென்ட் கமகே உபாலியின் உடல், இன்று(10.07.2026) கம்புருபிட்டியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த சார்ஜென்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று(10) பிற்பகல் அம்பகஹாவெவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-10T14:26:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் வைத்தியசாலை கழிவு அகற்றலில் பாரிய மோசடி: சிவில் புலனாய்வு முன்னணி முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-fraud-disposal-at-anuradhapura-hospital-1783687968"></link>
            <id>https://tamilwin.com/article/massive-fraud-disposal-at-anuradhapura-hospital-1783687968</id>
            <summary type="text">அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும்
ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள
சிவில் புலனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும்
ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள
சிவில் புலனாய்வு முன்னணி, இது தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளரிடம்
முறைப்பாட்டை அளித்துள்ளது.
</p><p>
கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று, சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம்
மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மூன்று நிறுவனங்கள்
விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன. </p><p>விதிகளின்படி, ஒரு கிலோகிராமுக்கு
ஆகக்குறைந்த விலையான 179 ரூபாவைக் கோரிய நிறுவனத்துக்கே ஒப்பந்தம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p></p><h2>நிதி நட்டம்</h2><p>

எனினும், அந்தத் தேர்வு இரத்துச் செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபா
கோரியிருந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4096f4-e424-415b-b980-971a2c71a59a/26-6a50ebfb547ce.webp' /></p><p> </p><p>இந்த முறைகேடான
தெரிவினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபா வீதம், அரசுக்கு மொத்தம் 3 கோடியே 31
இலட்சத்துக்கும் அதிகமான நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சிவில் புலனாய்வு
முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று அந்த அமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.</p><p></p><h2>முறைகேடுகள்</h2><p> </p><p>'சமல் ராஜபக்ச வேஸ்ட் பெசிலிட்டி மேனேஜ்மென்ட்' என இருந்த அந்த
நிறுவனத்தின் பெயர் தற்போது 'ஜி.எஃப்.சி' என மாற்றப்பட்டுள்ளது என்று
ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec4928f6-0f9b-4897-a02d-66053247c34c/26-6a50ebfc2b64a.webp' /></p><p>

டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள், தங்கள் தனிப்பட்ட
இலாபத்துக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தகுதியான நிறுவனங்களை
ஓரங்கட்டிவிட்டு, அதிக விலை கோரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

மருத்துவக் கழிவுகளை அகற்றுவது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன்
தொடர்புடைய முக்கியமான விடயமாக இருப்பதால், இத்தகைய முறைகேடுகள் பெரும்
அபாயங்களை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வாரங்களாக தொடரும் உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு போராட்டம் - அநுர அரசிடம் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-security-zone-land-release-1783688359"></link>
            <id>https://tamilwin.com/article/high-security-zone-land-release-1783688359</id>
            <summary type="text">இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக
தற்போதைய அரசாங்கம், தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக
தற்போதைய அரசாங்கம், தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்
பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன், மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்
பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி.
பிரதிநிதிகளுக்கு இருக்கின்ற நிலையில் எமது மக்களை ஏமாற்றப்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p> 

“உயர் பாதுகாப்பு வலயங்கள்” என்ற அடிப்படையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில்
இருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு முன்னெடுக்கப்படுகின்ற மயிலிட்டிப் பிரதேச
மக்களின் அமைதிவழப் போராட்டம் இன்று(10.07.2026) 12 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p> 

இந்த போராட்டத்திற்கு தார்மீக ரீதியிலான ஆதரவை வழங்கும் வகையில், போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b629ff48-0b58-46e5-8065-3b03330b5359/26-6a50ed2a1fcbc.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் என்ற கோட்பாட்டினை முன்வைத்து கடந்த
காலங்களில் எமக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் பலத்திற்கமைய,
பல்லாயிரக்கணக்கான தனியார் காணிகளை கட்டம் கட்டமாக விடுவித்து வந்தோம்.
</p><h2>

அநுர அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>
இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தினர், மக்களின் காணிகள் அனைத்தும்
விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி வாக்குளைப் பெற்றுக்
கொண்டனர்.

ஆனால், தற்போது தங்களுடைய வாக்குறுதியை மறந்து ஒவ்வொருவரும் வெவ்வேறு
கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி ஒரு கருத்தினை தெரிவிக்கின்றார்.
</p><p>
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மற்றுமொரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்,
அந்தக் கட்சிய சார்பாக எமது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள்
வேறுவிதமான கதையை சொல்கின்றார்கள்.
</p><p>
இவ்வாறு எங்களுடைய மக்களை ஏமாற்றாமல் காணி விடுவிப்பு தொடர்பான உண்மையான
நிலைப்பாட்டினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dee01b7-2dd8-4ed7-9415-e2f69ccfd1b2/26-6a50ed2b176ca.webp' /></p><p>
</p><p>

இந்த விடயத்தில் எங்களுடைய மக்களின் வாக்குகளைப் பெற்றக்கொண்ட ஜே.வி.பி.
பிரதிநிதிகள், வெறுமனவே தங்களுடைய கட்சியின் அரசியலையும் வேலைத்
திட்டத்தினையும் எமது மக்களிடம் எடுத்து வருகின்ற துதுவர்களாக இருக்காமல்,
எங்களுடைய மக்களின் எதிர்பார்ப்புக்களை தென்னிலங்கைகுக்கு எடுத்துச்
செல்கின்ற எமது மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
</p><p>

இந்நிலையில், எங்களைப் பொறுத்தவரையில் தனியார் காணிகள் அனைத்தும்
விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து
முன்னெடுக்கப்படுகின்ற சாத்வீகப் போராட்டங்கள் அனைத்திற்கும் செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தா சார்பில் தார்மீக ஆதரவு தொடரும் என்பதை தெரிவித்துக்கு
கொள்கின்றோம் என்றார்.
</p><p>
இப்போராட்டத்தின் இறுதியில் ஏற்பாட்டாளர்களினால், தங்களுடைய அபிலாசைகளை
வெளிப்படுத்திய மனு ஒன்றும் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9818a4-cd73-45c9-85bd-61c74cf944b9/26-6a50ed2be999c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: எரிபொருள் விலை இருமடங்காக உயர்வு - ட்ரம்ப்பின் ரகசிய திட்டம்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/blockade-of-the-strait-of-hormuz-1783687392"></link>
            <id>https://tamilwin.com/article/blockade-of-the-strait-of-hormuz-1783687392</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள போரினால்,
உலகளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்
போக்குவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள போரினால்,
உலகளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்
போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, கடந்த ஜூலை 7ஆம் திகதிக்குப் பிறகு, 10,000 டன் எடையுள்ள எந்தவொரு பெரிய கப்பலும் அமெரிக்கா ஒருங்கிணைத்த பாதுகாப்பான கடல்வழிப் பாதை வழியாகச்
செல்லவில்லை என்றும், ஓமன் நாட்டை ஒட்டிய கடல்வழிப் பாதையில் போக்குவரத்து
முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>
கடல்வழிப்போக்குவரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ட்ரம்ப்</h2><p>

கடந்த பெப்ரவரி மாதம் இந்த போர் தொடங்குவதற்கு முன்பு, நாளொன்றுக்கு சராசரியாக
130 கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை வெறும்
5 கப்பல்கள் மட்டுமே பாதையைக் கடந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3896863a-0fb0-4150-933d-d2563b938a35/26-6a50e9757ee79.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார்,
ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது
ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>

இந்த கடுமையான போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகச் சங்கிலி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களின்
பாதிப்பால் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.</p><h2>

டீசல் விலை அதிகரிப்பு</h2><p>
தற்போதைய சூழலில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பெரலுக்கு 76.58 டொலர் என்ற
அளவில் நிலையாக நீடித்தாலும், எதிர்வரும் கோடைக் காலத்தில் எண்ணெய் இருப்பு
குறைவதால் இதன் விலை பெரலுக்கு 10 முதல் 15 டொலர்கள் வரை மேலும்
அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0a0fed1-b0bf-4293-8f14-fddce555be98/26-6a50e97648191.webp' /></p><p>

இந்த பதற்றமான சூழலிலும், ஆசியப் பங்குச் சந்தைகளான ஜப்பான், தென் கொரியா
மற்றும் ஹொங்கொங் சந்தைகள் இன்று இலாபத்துடன் உயர்வுடன் வர்த்தகத்தைத்
தொடங்கியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Bqxne06FmU0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பாக இடம் பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-festival-st-arockia-annai-church-nanattan-1783685178"></link>
            <id>https://tamilwin.com/article/annual-festival-st-arockia-annai-church-nanattan-1783685178</id>
            <summary type="text">நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய
தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கல் இணைந்து கூட்டுத்திருப்பலியாக
ஒப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய
தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கல் இணைந்து கூட்டுத்திருப்பலியாக
ஒப்புக் கொடுத்தனர்.</p><p>

தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளார் தலைமையில்
அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக்
கொடுத்தனர்.</p><h2>திருவிழா திருப்பலி</h2><p>
</p><p>
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி யும் அதனைத் தொடர்ந்து
திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6589906c-2658-444f-af3c-a9188c6c2b0d/26-6a50e7c981b0b.webp' /></p><p>

இதன் போது அருட்தந்தையர்கள்,இருட்சகோதரர்கள்,அருட்சகோதரிகள் மக்கள் என பலர்
கலந்து கொண்டனர்.நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த
திருவிழாவுக்கான கொடியேற்றத்தின் போது நானாட்டான் பங்கிற்குற்பட்ட 8 துணை
ஆலயங்களின் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10)
புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடி இறக்கப் பட்ட நிலையில் குறித்த துணை ஆலயங்களின்
கொடிகளும் இறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-protest-demand-release-of-lands-1783683440"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-protest-demand-release-of-lands-1783683440</id>
            <summary type="text">வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்களா முன்பாக&amp;nbsp;போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக&nbsp;போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். </p><p>குறித்த போராட்டமானது இன்று(10.07.2026) 12ஆவது வாரமாகவும் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>17 வருடங்கள் கடந்த நிலையில்</h2><p>
வலி. வடக்கு பலாலி மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத
கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்,
அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/975441bc-7205-4774-b611-74c92e85e2d4/26-6a50de472d22a.webp' /></p><p>
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.</p><p>இந்நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக
காணி உரிமையாளர்கள் போராடி வருவதோடு, காணிகள் விடுவிக்கப்படாத நிலையில்
காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை
முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>குறிப்பாக இன்றையதினம்
வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா, பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் எனப் பலர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T12:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கலவரம்! 48 மணிநேரம் அமைதி காத்த அநுர அரசாங்கம் - பின்னணி குறித்து நாமலுக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783681873"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783681873</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தமை தொடர்பில் எமக்கு சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தமை தொடர்பில் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நேற்றையதினம் இடம்பெற்ற&nbsp; நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>எமக்கு சந்தேகம்..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>இந்த அரசாங்கம் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்காக இளைஞர்களை காரணம் எதுவுமின்றி சிறைகளில் அடைத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p>சிறையில் இருக்கக் கூடிய போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமே தவிர அவர்களை சிறையில் அடைப்பது சாத்தியமற்றது.</p><p>11 ஆயிரம் கைதிகள் மாத்திரம் அனுமதிக்கக் கூடிய சிறைச்சாலைகளில்&nbsp; மிக அதிகளவிலானோரை அடைத்து வைத்துள்ளதோடு, அவர்களை கண்காணிப்பதற்கு மிகக் குறைந்த அளவிலான பொலிஸ் அதிகாரிகளையே நியமித்துள்ளனர்.&nbsp; இதன் காரணமாக சிறைச்சாலையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aa1c9bd-bb3b-40eb-bf6a-98c1c3674fea/26-6a50d89adff2c.webp' /></p><p>கிட்டத்தட்ட 30 உயிர்களைக் காவு கொள்ளும் அளவுக்கு ஒரு மோதல் வெடிக்கும் வரை அரசாங்கத்தின் உளவுத் துறை என்ன செய்தது.&nbsp; சம்பவத்தின் போது உடனடி உத்தரவுகள் எவையும் பிறப்பிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன. தமக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் அமைச்சரிடத்திலேயே தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>அத்துடன் சம்பவம் நடந்த 48 மணித்தியாலங்கள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் மௌனமாகவே இருந்தது.&nbsp; இதுகுறித்து எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gN9PtQS-Fzc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-10T12:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-at-colombo-magazine-prison-1783684216"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-at-colombo-magazine-prison-1783684216</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;குறித்த சம்பவம்&amp;nbsp;இன்று (10.07.2026) பிற்பகல் இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>குறித்த சம்பவம்&nbsp;இன்று (10.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>இதன்போது சிறையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>இரு கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி</h2><p> </p><p>இந்த மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a57ccc-377f-4b21-b90b-4826055333d6/26-6a50e5edbaf6c.webp' /></p><p> </p><p>எனினும் இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T12:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்! அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை ஆரம்பிக்கும் சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-police-investigation-1783655455"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-police-investigation-1783655455</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு, சிறை வள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.
</p><p>
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு, சிறை வளாகத்தில் மோதல் நடந்த இடங்கள், சேதம் ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. </p><p>

 இந்த சம்பவம் தொடர்பாக கைதிகளிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெறத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள்</h2><p> 

மோதல் இடம்பெற்ற போது அன்று பணியில் இருந்த சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.

இதனையடுத்து நீர்கொழும்பு சிறைக்கு வெளியே இருந்த மக்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c00273c1-0fa3-4968-bccb-22bf4c0cf894/26-6a50a66646606.webp' />&nbsp;</p><p>

கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் கைதிகளும், சிறை அதிகாரிகளும் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 8 சிறை அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.
</p><p>
இதேவேளை, உயிரிழந்த சிறை அதிகாரிகளின் பிரேத பரிசோதனையில், அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேருக்கு, ஐந்து பேர் கொண்ட தடயவியல் குழு பிரேதப் பரிசோதனை நடத்தியது.</p><p>

அதன்படி, 14 மரணங்கள் துப்பாக்கிச்சூட்டாலும், மேலும் 9 மரணங்கள் தாக்குதல்களாலும் ஏற்பட்டதாக பிரேதப் பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>மற்றொரு குழுவினர் தொடர்ந்தும் சிகிச்சை</h2><p>

 இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு குழுவினர், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b6d1ce-17a1-4fa0-9636-81ae89fccbe1/26-6a50a666f1e43.webp' />&nbsp;</p><p>

இதற்கிடையில், 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையின் பிரதான ஜன்னலிலிருந்து கைதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சிறை அதிகாரி குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. </p><p>

குறித்த அதிகாரிக்கு தற்போது சில கைதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அவருடன் பணியாற்றும் சக அதிகாரிகள் அவருடன் இருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

சம்பவம் நடந்த நேரத்தில், அவர் நீர்கொழும்பு சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறையில் சேர்ந்துள்ளதுடன், பல சிறைகளிலும் பணியாற்றியுள்ளார். </p><p>

சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் இணக்கமாக பழகும் அதிகாரியாக அவர் கருதப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை: ஐந்துபேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-abducted-and-tortured-in-jaffna-5-arrested-1783682988"></link>
            <id>https://tamilwin.com/article/youth-abducted-and-tortured-in-jaffna-5-arrested-1783682988</id>
            <summary type="text">யாழில் திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான
கூரிய இரு வாள்களுடன் ஐவர்
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான
கூரிய இரு வாள்களுடன் ஐவர்
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக
சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன்
கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து தெரியவருகையில், யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர்
கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.</p><p></p><h2>சோதனை</h2><p>&nbsp;கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டு சென்ற குறித்த கும்பல்&nbsp; இளைஞனை உடைகளை
களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை
யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த
பொலிஸ் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da640eef-c93e-4355-b861-74cb5b6a8252/26-6a50dc701aa02.webp' /></p><p>
</p><p>
சந்தேகமுற்ற பொலிஸார் குறித்த "காரை" துரத்திச் சென்று இடைமறித்து
சொதித்துள்ளனர்.

சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய "வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு "சேட்"டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதையடுத்து பொலிசார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ்
போதையும் மீட்கப்படுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f491333-2822-447a-80fc-651f98d2be26/26-6a50dc70d7ddb.webp' /></p><p>
</p><p>
இதேவேளை பொலிசாதின் சாதுரியத்தால் கண்டறியப்பட்ட குறித்த கடத்தலுடன்
தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிசார்
தெரிவித்தனர்.</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T11:58:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை கிளப்பிய குரல் பதிவு - யாழ். மாணவி மீது புதிய குற்றச்சாட்டு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-chancellor-student-controversy-1783684118"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-chancellor-student-controversy-1783684118</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விவாகரத்துடன் தொடர்புடைய 14 பேரை எதிர் மனுதாரர்களாக
கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின்
கீழ், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம்
தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இவ்வாறு 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

மாணவி மீது துணைவேந்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம்
ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக
மாணவியும், இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவருமான பெண்ணொருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66c4d7a-3614-4aa2-9b1a-e8616ae7340f/26-6a50dca6194aa.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் உடன் முன்னாள் மாணவி உரையாடிய தொலைபேசி பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>

மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு</h2><p>

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில்,&nbsp; நிகழ்நிலை காப்பு
சட்டத்தின் பிரிவு 20 இன் கீழ், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி
சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரை எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f232f177-7454-49dc-a92e-6474a071ef4b/26-6a50dca6c2a0c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை
முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக
துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் ,
பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை
பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா ? இல்லையா என்பதனை 
முடிவு செய்வதற்காக வழக்கு இன்றைய நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, வழக்கு இன்று(10) விசாரணைக்கு எடுத்து
கொள்ளப்பட்ட போது, எந்தவித கட்டளைகளும் வழங்கப்படாது, வழக்கினை எதிர்வரும்
13ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் பிரேரணைகள் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passing-of-motions-in-the-pradeshiya-sabha-1783682995"></link>
            <id>https://tamilwin.com/article/passing-of-motions-in-the-pradeshiya-sabha-1783682995</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமர்வில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தவிசாளர்கள் உறுப்பினர்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமர்வில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தவிசாளர்கள் உறுப்பினர்களிடம் கோரிக்கையொன்றையும் விடுத்துள்ளார். </p><p>


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை
அமைப்பு இன்று(10.07.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச
சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, பிரதேச சபைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள சபை செயலாளர்
மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை
உறுப்பினர் ஆகியோருக்கு ஏனைய சபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

அமர்வில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்</h2><p>

இதனைத் தொடர்ந்து, சபையின் குறை நிரப்பு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு
நிறைவேற்றப்பட்டதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f011c1b-05df-455d-9d59-b9ddce79c7ab/26-6a50d7b5067c4.webp' /></p><p>
</p><p>


இதன்படி, ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை நிறுத்துதல், தனியார் கல்வி நிலையங்களினூடாக
கல்விச் சுற்றுலா செல்வதை இரத்துச் செய்தல், களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பிடத்தில் 
புதிதாக கடைத் தொகுதிகளை அமைத்தல், பட்டிருப்பு வலயக் கல்வி
அலுவலகத்தின் முன்னால் வீதியில் இடப்பட்டுள்ள வெள்ளைக் கோடுகளை அகற்றுமாறு
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தெரிவித்தல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c20144b-eb53-40fb-aa68-f81dde0aa068/26-6a50d7b5b20e7.webp' /></p><p>
</p><p>
அத்துடன், பிரதேசத்தில் பிரதேச சபையின்
அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்குரிய அனுமதியைப் பெறுவதற்கு
மக்களுக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்குதல், களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதியை கிழக்கு மாகாண ஆளுனரின்
பங்குபற்றுதலுடன் திறந்து வைத்தல், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின்
முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பு நிலையத்தை குத்தகைக்கு விடுதல்,
சேகரிக்கப்பட்டுள்ள கழிவுகளை புதைத்தல், மரண வீடுகளில் மதுபாவனை, வெற்றிலை
பாவணை, புகைத்தல், உள்ளிட்ட பாவணைகளை முற்றதக நிறுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் துண்டுபிரசுரங்கள் ஓட்டுதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் கட்சி பேதங்கள் அற்ற முறையில் முன்னெடுக்க சபை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கையில்
சிறந்ததொரு பிரதேச சபையாக இந்த பிரதேச சபை இயங்க வேண்டும் என்றும் தவிசாளர் உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7129924-7c97-4d63-a0e7-d0b8b5f15c29/26-6a50d7b668610.webp' /></p>]]></content>
            <updated>2026-07-10T11:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நூதனமான முறையில் போதைப்பொருள் கடத்தியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-smuggled-drug-soap-in-a-jaffna-1783681001"></link>
            <id>https://tamilwin.com/article/man-smuggled-drug-soap-in-a-jaffna-1783681001</id>
            <summary type="text"> யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில்
போதைப்பொருளை கடத்தி விற்பனைக்காக
கொண்டு சென்ற ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p> யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில்
போதைப்பொருளை கடத்தி விற்பனைக்காக
கொண்டு சென்ற ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் நேற்று (09.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸாரின் சோதனையின் போது</h2><p>
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன
கூறுகையில்,&nbsp;</p><p>யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில்
இடம்பெற்று வருவதாக யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து
முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747ecb36-66bc-47d3-a2cd-cef9d3d7eeaf/26-6a50d3f910484.webp' /></p><p>
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு வாசனை
சவற்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார்.</p><p>

பொலிஸாரின் சோதனையின் போது
வெளியிடமொன்றிலிருந்து பொதி சேவை மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில்
மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.</p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த
மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட
ஒருவராவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bfaf460-0593-446d-9e24-1ccd61c61d81/26-6a50d3f9e13ef.webp' /></p><p>
கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இந்த வாரம் 23 பேர் போதைப்பொருளுடன்
கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-10T11:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நகர் பகுதியில் 30 இற்கும் அதிகமான யாசகர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-police-removed-those-who-were-begging-1783681228"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-police-removed-those-who-were-begging-1783681228</id>
            <summary type="text">யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30
இற்கும் அதிகமான யாசகர்கள்&amp;nbsp; பொலிஸாரின் பங்களிப்புடன்
வெளியேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30
இற்கும் அதிகமான யாசகர்கள்&nbsp; பொலிஸாரின் பங்களிப்புடன்
வெளியேற்றப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றாலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் கூறுகையில்,

சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து
நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய
பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும்
உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற
போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம்
கோரிக்கை பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p></p><h2>பொலிஸார் நடவடிக்கை</h2><p>

இந்தநிலையில் இன்று(10.7.2026) குறித்த நடவடிக்கையை யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித
செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டு செல்லப்பட்டது.
</p><p>
அத்துடன் யாழ்.மாநகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் யாழ் மாநகரின் ஒத்துழைப்புடன் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
பாலித செனவிரத்னவின் வழிநடத்தலில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d936f924-2a9d-4012-b7ca-9054df940bf0/26-6a50d666de08f.webp' /></p><p>

இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும்
வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் குறித்த
நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம்
பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு
இனிவரும் நாள்களில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்ற ஒப்புதலுடன்
விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T11:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27th-tamil-sports-festival-france-1783557553"></link>
            <id>https://tamilwin.com/article/27th-tamil-sports-festival-france-1783557553</id>
            <summary type="text">தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் மற்றும் பிரான்ஸ் இணைந்து நடத்திய 27ஆவது தமிழர் விளையாட்டு விழா வெகு விமர்சையாக நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் மற்றும் பிரான்ஸ் இணைந்து நடத்திய 27ஆவது தமிழர் விளையாட்டு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
</p><p>
இந்த நிகழ்வு கடந்த 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை L’Aire des Vents Dugny திடலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், எமது தமிழ்வின், லங்காசிறி, மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்களின் அனுசரணையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>கடும் வெப்பத்திற்கு மத்தியில் நடந்த விளையாட்டு விழா</h2><p>

இயற்கையின் கடினமான காலநிலையினால் இந்நிகழ்வு நடப்பதற்கு சாத்தியமில்லை என இருந்த போதிலும், இடைநிறுத்தாமல் அனுமதி தந்த 93 பிராந்திய பொலிஸ் தலைமையகம், மாகாண அவைத் தலைவர் Stéphane Troussel மற்றும் திடலின் உரித்துடைய நகமன்றங்களுக்கும் ஏற்பாட்டாளர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்படி, காலை 10.30 மணியளவில் இசைப்பிரியா முழங்குவாத்திய (band) அணி இசை அணியுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74bd741-a2f0-448a-a06f-992f99a02c49/26-6a50ced9369e8.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து, பிரதான பொதுச் சுடரினை த. பு. க உபதலைவர் மு. ரவிக்காந் ஏற்றி வைத்தார், தமிழீழத் தேசியக்கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் சி. மகிந்தன் ஏற்றி வைத்தார். 

அதன்பின்னர், தாயக விடுதலைக்காப் போராடி வீர மரணத்தை தழுவிய மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், நினைவுகூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.
</p><p>
திடலில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நினைவுச்சுடரினை த. பு. க. உறுப்பினர் ஆ. அரியராசா ஏற்றிவைக்க, வருகை தந்த அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர் பாரம்பரிய இண்னியம் இசை நடனத்துடன் நகரபிதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், வர்த்தகர்கள், தொண்டர்கள், கலைஞர்கள், சமூக ஊடகத்தினர், மக்கள் அனைவரும் திடலின் மத்தியில் நாட்டப்பட்ட கொடிக்கம் வரை அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><h2>10 ஆயிரம் மக்கள் பங்கேற்பு</h2><p> </p><p>



பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியினை ஸ்டீபன் துர்சல்லும், ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை அலன் ஆனந்தனும், த. பு. க. கொடியினை த. பு .க. பிரான்ஸ் உறுப்பினர் த. செல்வரஞ்சனும் ஏற்றிவைத்தனர்.
</p><p>
மங்கள விளக்கினை கலந்துகொண்ட பிரமுகர்கள், வர்த்தக உரிமையாளர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்றி வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dad4650-8e66-4b10-b7a3-a53a879d1342/26-6a50ceda11c9a.webp' /></p><p> </p><p>

வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் இரு இசை இளம் அணி இசைக்கலைஞர்களும் நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் இதன்போது மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதற்கமைய, விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் ஆரம்பமாகி ஒதுக்கப்பட்ட குடில்களில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.</p><p>

அதன்பின்னர், சிறப்பு விருந்தினர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறைசார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.</p><p>

கல்யாணி உணவகம் மற்றும் சோழன் உணவகம் நிறுவப்பட்டு, சோழன் பல்பொருள் அங்காடியின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிர்ஷ்டலாப சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0458fe2-9969-4ad3-b7a9-7cb00369bc78/26-6a50cedad5f58.webp' /></p><p>
</p><p>


நல்வாய்ப்பில் புதிய மகிழுந்திற்கு குலுக்கல் முறையில் 1902 என்ற இலக்கம் தெரிவானதுடன், 100 ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு வழங்கப்பட்ட பரிசில்களை சோழன் பல்பொருள் வாணிபம் வழங்கியுள்ளனர்.
</p><p>
 பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் திரளுடன் இரவு 9.30 மணிவரை இடம்பெற்ற நிகழ்வு கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.</p><p>

தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகள், தன்னார்வத் தொண்டர்கள், குடும்பத்தினர்கள், தேசியக் கட்டமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடகங்கள், சமூக வலை ஒளி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bf846b-99d9-41c0-a1d1-263ac48211f9/26-6a50cedba69fc.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2594dc9-f3a5-4ada-80bd-b25d39a61423/26-6a50d214c31b5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4515f3c-be59-45f2-b1da-89e53fce3c4f/26-6a50d213df1e7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐந்தாயிரம் முதல் ஐந்து இலட்சம் வரையான கடன் - நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-loan-apps-shared-on-social-media-1783680012"></link>
            <id>https://tamilwin.com/article/fake-loan-apps-shared-on-social-media-1783680012</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் பகிரப்படும் &#039;உடனடி&#039; மற்றும் &#039;அவசர&#039; கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் பகிரப்படும் 'உடனடி' மற்றும் 'அவசர' கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கையில், </p><p>

எவ்வித ஆவணங்களும் இன்றி 5000 முதல் 500000 ரூபா வரை கடன் தருவதாக விளம்பரங்கள் பகிரப்படுகின்றன. 

இத்தகைய செயலிகளைப் பதிவிறக்கும் போது உங்கள் கைபேசியின் கட்டுப்பாடு மோசடியாளர்களிடம் சென்றுவிடுகிறது.</p><p></p><h2>திருடப்படும் தகவல்கள்</h2><p>
</p><p>
இதன்மூலம் தனிப்பட்ட புகைப்படங்கள் குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்புகள் திருடப்படுகின்றன.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் கைபேசியில் உள்ள தொடர்புகளுக்கு மோசடியாளர்கள் அழைப்பு விடுத்து அவமானப்படுத்துகின்றனர்.
</p><p>
எனவே சந்தேகத்திற்கிடமான கடன் விளம்பரங்களை அணுகவோ, அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கவோ வேண்டாம். 

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை மட்டும் நாடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03997037-7d8f-45f2-b8f9-213b36389bbc/26-6a50d09bf2915.webp' /></p><p> </p><p>இத்தகைய மோசடிகளை உடனே உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடளியுங்கள். 

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க, அறியப்படாத நபர்களிடமோ அல்லது செயலிகளிடமோ எவ்வித நிதித் தகவல்களையும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T11:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/large-number-dengue-patients-identified-in-batti-1783678364"></link>
            <id>https://tamilwin.com/article/large-number-dengue-patients-identified-in-batti-1783678364</id>
            <summary type="text">மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09தினங்களில்
35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09தினங்களில்
35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.உதயகுமார் தெரிவித்தார். </p><p>அத்தோடு, இந்த வாரத்தில் டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக சுற்றாடலை
வைத்திருந்த 35பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்து டெங்கு அச்சுறுத்தலாக சிவப்பு வலயமாக சுகாதார
பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>ஆபத்தான பகுதி</h2><p>நாடு தழுவிய ரீதியில் இன்று டெங்கு நோய் சடுதியாக அதிகரித்துச் செல்கின்ற
காரணத்தினாலே, இன்றைக்கு நாட்டில் 15 பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட
பகுதிகள் மிகவும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு டெங்கு
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b638cd-a557-4d78-bb6a-05e09f8f032f/26-6a50c59f2f2c9.webp' /></p><p>இந்த
வாரம் மட்டும் எமது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால் பொலிஸாரின்
உதவியுடன் 35-க்கும் மேற்பட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது
மேலும் வலுப்படுத்தப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பில்லியன் ரூபாய் செலவில் போகம்பர சிறைச்சாலை புனரமைப்பு: அரசின் முடிவுக்கு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/steps-to-reopen-bogambara-prison-1783676533"></link>
            <id>https://tamilwin.com/article/steps-to-reopen-bogambara-prison-1783676533</id>
            <summary type="text">கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள போகம்பர சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அவசர அவசரமாக எடுத்துள்ளமை கண்டி மாவட்ட மக்களுக்கு இழைக்கப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள போகம்பர சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அவசர அவசரமாக எடுத்துள்ளமை கண்டி மாவட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார். </p><p>


கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று(10.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> 

சிறைச்சாலை புனரமைப்பு செய்ய நடவடிக்கை</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

 City &amp; Local Guides நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து, நீண்டகாலப் பிரச்சினைக்கு உடனடி நூடுல்ஸ் சமைப்பது போன்ற ஒரு தற்காலிகத் தீர்வினை அரசு தேடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca8e479-0092-43bc-a8f7-95c16afebcf0/26-6a50cc476050b.webp' /></p><p> 

100 வருடங்களுக்கும் மேல் பழமையான இந்த கட்டடத்தைப் புனரமைக்க மக்களின் வரிப்பணம் பில்லியன் கணக்கில் வீணடிக்கப்படவுள்ளது. 

தலதா மாளிகை அமைந்துள்ள புனித பூமியின் மையப்பகுதியில் இருக்கும் இந்த சிறைச்சாலை, சமூக மற்றும் கலாசார நகர அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே கடந்த 2014ஆம் ஆண்டு மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் பல்லேகல பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், கடந்த 1876ஆம் ஆண்டில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம் காலனித்துவப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும். </p><h2>


1500 ரூபாய் செலவு செய்து பாதுகாக்கப்படும் கைதிகள்</h2><p>
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த உயர் மதிப்புமிக்க நிலத்தில், ஜப்பானிய நிதியுதவியுடன் சுற்றுலாத்துறை மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கிய “கண்டியன் அரீனா” பன்னோக்கு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல்வேறு நெருக்கடிகளால் அது தடைச் செய்யப்பட்டுள்ளது. </p><p>

திறைசேரியில் பணம் இருப்பதாக அமைச்சர்கள் கூறும் நிலையில், அந்தப் பணப் பெட்டிகளைப் பூட்டி வைக்காமல், கண்டி மக்களின் நலனுக்காகவும் 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இந்த திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4957a443-edf7-4a4e-838d-a12b9f6d9106/26-6a50cc4832c51.webp' /></p><p> </p><p>

தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் காணப்படுகின்றனர். </p><p>அதற்குப் போகம்பரை சிறையைத் திறப்பது தீர்வல்ல. சிறைகளில் உள்ள 75 சதவீதமான விளக்கமறியல் கைதிகளின் நெருக்கடியைக் குறைக்க மாற்று வழிகளைக் கையாள வேண்டும். </p><p>

குறிப்பாக, மிகச் சிறிய குற்றங்களுக்காகச் சிறு தொகைப் பிணைப்பணத்தையோ அல்லது அபராதத்தையோ செலுத்த முடியாமல் சிறையில் வாடும் கைதிகளுக்காக ஒரு நாளைக்கு தலா 1,500 ரூபாய் வீதம் அரசு செலவிடுவதை விட, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைப் போல “பிணை நிதியம்” ஒன்றை உருவாக்கி அவர்களை விடுவிப்பதும், வீட்டுக்காவல் முறையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்திற்கே நிதி ரீதியாக இலாபகரமானது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbers-raid-ruling-party-mp-s-house-1783678984"></link>
            <id>https://tamilwin.com/article/robbers-raid-ruling-party-mp-s-house-1783678984</id>
            <summary type="text">களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்குச் சொந்தமான, பாணந்துறை நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்குச் சொந்தமான, பாணந்துறை நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

வீட்டின் கூரையிலிருந்து பல ஓடுகளை அகற்றி சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p></p><h2>பெறப்பட்ட முறைப்பாடு</h2><p>

இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மதிப்புமிக்க வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a0fa9c0-d008-495c-ac64-6e662ae02598/26-6a50cc098d85a.webp' /></p><p>திருட்டை நிகழ்த்திய பின்னர், சந்தேக நபர்கள் வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து தப்பிச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இது தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றில் பாரியளவில் உயர்ந்த இலவங்கப்பட்டை விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/record-cinnamon-prices-reported-as-exports-rise-1783677018"></link>
            <id>https://tamilwin.com/article/record-cinnamon-prices-reported-as-exports-rise-1783677018</id>
            <summary type="text">இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஒரு கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, ஒரு கிலோ இலவங்கப்பட்டை தற்போது ரூ. 5,000 முதல் 5,500 வரை விற்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.</p><p>அதன்படி, அல்பா தர இலவங்கப்பட்டை ஒரு கிலோ கிராமுக்கு ரூ.7,000 ஐ எட்டியுள்ளது.</p><p></p><h2>இலவங்கப்பட்டை விலை உயர்வுக்கு காரணம்</h2><p>
</p><p>
அதிகரித்த தேவையும், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமும் இலவங்கப்பட்டை விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/168f3fa5-8e0e-4dc3-9005-18bc369506d8/26-6a50c3822e8ff.webp' /></p><p>

இந்த ஆண்டு இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்ட நாடு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த சாதனை விலைகள் எட்டப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நாயகம் ஜனக லிண்டர கூறியுள்ளார்.
</p><p>
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலவங்கப்பட்டை ஏற்றுமதி வருவாய் ரூ. 27 மில்லியன் அதிகரித்து இத்துறையில் வளர்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T10:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dayasiri-to-be-arrested-soon-1783678404"></link>
            <id>https://tamilwin.com/article/dayasiri-to-be-arrested-soon-1783678404</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விரைவில் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தயாசிறி ஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விரைவில் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். </p><p>

தயாசிறி ஜயசேகரவைக் குறிவைத்து அரசாங்கம் ஒரு அரசியல் வேட்டையை நடத்தி வருவதாகவும், அவரைக் கைது செய்வதற்கான தேவையான பின்னணிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் இன்று(10.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>

மருத்துவ செலவில் மோசடி</h2><p>

தனது சமூக ஊடக வலைப்பின்னல்களையும் பல்வேறு தரப்புகளையும் பயன்படுத்தி, தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக பொதுமக்கள் அபிப்பிராயம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf104951-c3be-4bb9-894f-559f6ed4066c/26-6a50c62fb6b9c.webp' /></p><p>
</p><p>
2019ஆம் ஆண்டில், தயாசிறி ஜயசேகர மருத்துவ சிகிச்சைக்காக ஐந்து இலட்சம் ரூபாய் உதவித்தொகையைப் பெற்றதாகவும், அவர் தனது சிகிச்சைக்காக 868,000 ரூபாய் செலவழித்ததாகவும், உதவித்தொகை வழங்கப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட ரசீதுகளில் பிழைகள் இருப்பதாகக் கூறி அரசாங்கம் அவரைக் கைது செய்யத் தயாராகி வருவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

“கருணைக்கொடை என்பது நிறைவேற்று ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் ஒரு நன்கொடையாகும். அதற்காக ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. </p><p>

இத்தகைய சூழ்நிலையில், ரசீதுகளில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்ய முயற்சிப்பது தெளிவான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் சஜித் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>

முன்னாள் அரசியல்வாதிகள் மீதான பழிவாங்கல்</h2><p>
நாட்டில் நிலவும் கடுமையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb5f4df1-5648-440e-9a63-7de49c25e1a7/26-6a50c630716bc.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலை கட்டமைப்பை நிர்வகித்தல், சரிந்துவரும் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளித்தல், வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்தல், வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயை எதிர்த்துப் போராடுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளைப் புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சஜித் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> 

தயாசிறி ஜயசேகரவின் உரிமைகளுக்காகத் தானும் எதிர்க்கட்சியினரும் எந்த நேரத்திலும் துணை நிற்போம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:16:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் டிரான் அலஸை கைதாவாரா.. முன்பிணை கோரி மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tirran-alles-arrested-1783675637"></link>
            <id>https://tamilwin.com/article/tirran-alles-arrested-1783675637</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டிரான் அலஸைக் கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்பிணை மனுவொன்றை அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டிரான் அலஸைக் கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்பிணை மனுவொன்றை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>

இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான காசோலைப் பரிவர்த்தனை தொடர்பாக, தன்னைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைத் தடுக்கும் வகையிலான இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
</p><p>
டிரான் அலஸுக்கு சொந்தமான சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் 'கேசர லங்கா' பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான காசோலைப் பரிவர்த்தனை தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>இடைக்கால உத்தரவு</h2><p> சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் கேசர லங்கா லிமிடெட் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
</p><p>
சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான டிரான் அலஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த ரிட் மனு, நீதியரசர்கள் மகேந்திரா மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் பரிசீலிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bcf09b1-0a14-4c57-be64-4234cccf5e07/26-6a50c57bad3bb.webp' /></p><p>
</p><p>
இந்த நெருக்கடி தொடர்பாக மனுதாரர் நிறுவனத்தின் பல ஊழியர்களிடம் பொலிசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. </p><p>இத்தகைய சூழலில் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரைக் கைது செய்வது சட்டவிரோதமானது என்பதால், மனுதாரர் நிறுவனம் ஒரு மேன்முறையீட்டு மனுவையும், அதைத் தடுக்கும் ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்குமாறு கோரியுள்ளது.
</p><p>
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், எதிர்வாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விராட் கொரியாவும் வாதங்களை முன்வைத்தனர்.</p><p>

அதனையடுத்து குறித்த மனு மீதான மேலதிக விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் 30ஆம் தேதி விசாரணைக்கு நிர்ணயித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:12:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லடி பாலத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/huge-commotion-near-the-kallady-bridge-1783675400"></link>
            <id>https://tamilwin.com/article/huge-commotion-near-the-kallady-bridge-1783675400</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே வெட்டி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள்
பொலிஸாருடன் மீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே வெட்டி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள்
பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>இன்று(10.07.2026) பகல் 11.30 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றதையடுத்து அங்கு பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
குறித்த பாலத்தில் சம்பவ தினமான இன்று பகலில் திடீரென வீதியில் வந்த ஆண்
ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததையடுத்து வீதியால் வந்த பொதுமக்கள்
பொலிஸார் இணைந்து குறித்த நபரை மீட்டு ம்ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc654e2-074b-4602-b5bf-e3712ca0b451/26-6a50c366871d8.webp' /></p><p>குறித்த நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33
வயதுடைய மகேந்திரன் அருள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
இது தொடர்பாக மட்டடக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:04:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் உயிரிழந்த வர்த்தகர்களுக்கு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/memorial-traders-lost-lives-in-puthukkudiyiruppu-1783676742"></link>
            <id>https://tamilwin.com/article/memorial-traders-lost-lives-in-puthukkudiyiruppu-1783676742</id>
            <summary type="text">கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்திற்குட்பட்ட பகுதியில்
வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்ந்து அஞ்சல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்திற்குட்பட்ட பகுதியில்
வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.</p><p>
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (11.07.2026) இந்த நிகழ்வு நடைபெற்றது.</p><h2>நினைவேந்தல்</h2><p>இந்தநிகழ்வில் , சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை
உறுப்பினர் சி.குகநேசன், வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள், வர்த்தக சங்க
பிரதிநிதிகள், வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், முச்சக்கர
வண்டி உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42b4c625-bf09-453f-b27c-a4ce87ebf1c5/26-6a50bf4dec200.webp' /></p><p>

இதேவேளை குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுக்குடியிருப்பு
வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-10T09:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே வழக்கில் சூடுபிடிக்கும் மனு மீதான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hearing-on-petition-filed-against-suresh-salley-1783663568"></link>
            <id>https://tamilwin.com/article/hearing-on-petition-filed-against-suresh-salley-1783663568</id>
            <summary type="text">புதிய இணைப்புஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனு இன்று(10.07.2026) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த மனு மீதான விசாரணையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன்பு பரிசீலிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் சுரேஷ் சாலே சார்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சஞ்சீவ ஜெயவர்தன மேலும் வாதங்களை முன்வைத்துள்ளார்.
</p><p>


அதன் பின்னர், மனு மீதான மேலதிக பரிசீலனை 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அன்று மேலதிக வாதங்களை முன்வைப்பார் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே தன்னுடைய தடுப்புக்காவலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவிற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
பெங்கமுவே நலக்க தேரோ, தேசபக்தி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குணதாச அமரசேகர மற்றும் பல தரப்பினர் இந்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். </p><h2> 

நீதிமன்ற உத்தரவு</h2><p>
இந்த மனுக்கள் இன்று(10.07.2026) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்களான நீதிபதிகள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><p>
எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், மூல மனு தொடர்பாக நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பினால் மட்டுமே இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிக்க முடியும் என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee8546a-f61b-4f73-956a-720c6cadf9b5/26-6a508e53499c4.webp' /></p><p> 

இதனையடுத்து,ஜனாதிபதி சட்டத்தரணி வி.கே. இடைக்கால மனுதாரர்களுக்காக முன்னிலையான சோக்சி, மனோகர டி சில்வா, கிரிஷ்மல் வர்ணசூரிய, அசோக் பரன் மற்றும் பிற வழக்கறிஞர்கள், இந்த வழக்கு மிகுந்த பொது கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இதில் தலையிட்டுத் தங்கள் வாதங்களை முன்வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.</p><p>

இருப்பினும், மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சஞ்சீவ ஜெயவர்தனவின் வாதங்கள் முடிவடைந்த பின்னரே இந்த இடைக்காலக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோகந்த அபேசூரிய உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1ATCyp0DsVA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-10T09:38:28+00:00</updated>
        </entry>
    </feed>
