<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T05:30:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைக்கும் திருட்டுக் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-thieves-targeting-homes-of-foreign-visitors-1784092625"></link>
            <id>https://tamilwin.com/article/gang-thieves-targeting-homes-of-foreign-visitors-1784092625</id>
            <summary type="text">காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட
குற்றத்தடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட
குற்றத்தடுப்புப் பிரிவினரால்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த கைது நடவடிக்கை நேற்று(14.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும்
கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை
மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb58bb9-f0e1-4ece-adc0-99ca7f709d11/26-6a57195a884e5.webp' /></p><p>இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை
துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p>விசாரணைகளுககு அமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளது.
</p><p>சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வுப் பணி இன்று மீண்டும் ஆரம்பம்! இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-excavation-work-resumes-today-1784091019"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-excavation-work-resumes-today-1784091019</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம்
கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15.07.2026) காலை மீண்டும்
ஆர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம்
கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15.07.2026) காலை மீண்டும்
ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட
அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.</p><p></p><p> கடந்த 32
நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன்
பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.</p><p> இந்நிலையில், இன்று பணிகள்
மீண்டும் தொடரவுள்ளன.
</p><h2>
இதுவரையிலான அகழ்வுப் பணிகள்</h2><p>
முதலாம் கட்டம்: கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி, 9 நாள்கள் நடைபெற்ற
அகழ்வுகளில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.</p><p>

இரண்டாம் கட்டம்: கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை 45
நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில், முதலாம் கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை உட்பட
மொத்தம் 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdca9789-01cd-4d5c-a023-a822bdae8b10/26-6a571525e0e82.webp' /></p><p>
</p><p>
மூன்றாம் கட்டம் (முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி): கடந்த ஏப்ரல் 27 முதல் மே
9 வரை 12 நாள்களும், ஜூன் 1 முதல் ஜூன் 23 வரை 22 நாள்களும் பணிகள்
இடம்பெற்றன. </p><p>இதில் மே மாதம் மட்டும் 21 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
</p><p>
இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 412
எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 409 எலும்புக்கூடுகள்
இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு ஒழிப்புக்காக களமிறங்கும் முப்படை- நாளை முதல் விசேட கூட்டு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tri-services-to-launch-joint-operation-dengue-1784090384"></link>
            <id>https://tamilwin.com/article/tri-services-to-launch-joint-operation-dengue-1784090384</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்
தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் புதிய விசேட
கூட்டு ஒழிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்
தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் புதிய விசேட
கூட்டு ஒழிப்பு செயற்றிட்டமொன்று நாளை((16) முதல்
முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்
வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 69 ஆயிரத்து 951 டெங்கு
தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். </p><p></p><h2>அதிகளவிலான தொற்றாளர்கள்&nbsp;</h2><p>குறிப்பாக, இந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 14
ஆயிரத்து 572 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு தொற்று காரணமாக
இதுவரை 48 மரணங்கள் சம்பவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/453ff9b4-2307-4aac-987b-36b113aacd32/26-6a57141448721.webp' /></p><p>தற்போது மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும்,
தற்போதைய நிலவரப்படி கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள்
பதிவாகியுள்ளனர். </p><p>சதவீத அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 20.6 சதவீதமும்,
கொழும்பு மாவட்டத்தில் 20.2 சதவீதமும் பாதிப்புகள் காணப்படுகின்றன.</p><p> மேலும்,
களுத்துறை, கொழும்பு மாநகர சபை எல்லைகள் மற்றும் காலி, மாத்தறை
மாவட்டங்களிலும் டெங்கு பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, 'தூய்மையான இலங்கை' திட்டத்துடன் இணைந்து
சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை
செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன் புதிய விசேட செயற்றிட்டம்
ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><h2>நுளம்புகள் பெருகும் இடங்கள்</h2><p>முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் ஒரு வார காலத்துக்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898d6929-9026-4c15-923f-a87e29c29ef1/26-6a571414ef860.webp' /></p><p>
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கும் தலா 10 குழுக்கள் வீதம்
நிறுத்தப்பட்டு, வீடுகள் மற்றும் பொது இடங்கள் தீவிர சோதனைக்கு
உட்படுத்தப்படும்.
</p><p>
ஒரு வார காலத்தின் பின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட
நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.&nbsp;</p><p>பொதுமக்கள் தங்களின் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்தத்
தேசியப் பணியில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். </p><p>நீர் சேமிப்புத் தொட்டிகள்
மற்றும் கொள்கலன்களை முறையாக மூடி வைப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களை
உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும்" என்று வைத்தியர் கபில கன்னங்கர,
பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
ஒரு நுளம்பின் பரவல் எல்லை 150 மீற்றர் வரை உள்ளதால், தனிநபர் பொறுப்புடன்
சமூகக் கூட்டுப் பொறுப்பும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:02:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-died-after-his-motorcycle-collided-with-lorry-1784088132"></link>
            <id>https://tamilwin.com/article/man-died-after-his-motorcycle-collided-with-lorry-1784088132</id>
            <summary type="text">மொனராகலை, மாகந்தனமுல்ல வீதியின் லிதேகடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன
விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, மாகந்தனமுல்ல வீதியின் லிதேகடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன
விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த விபத்து நேற்று(14.07.2026) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><h2>சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில்</h2><p>
மொனராகலை நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றும், அதற்கு
எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் லிதேகடை சந்திப் பகுதியில்
எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c2b774-2af3-4393-930d-eb94d3de922a/26-6a57097cb1d2c.webp' /></p><p>இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுடைய நபர் பலத்த
காயங்களுக்குள்ளான நிலையில், மீட்கப்பட்டு சிறிகல வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இருப்பினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்
பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்து தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T04:16:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234</id>
            <summary type="text">பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கஞ்சிபானி இம்ரான் கொலைகள் மற்றும் கொடூரமான மனிதநேயமற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, இலங்கையின் பாதாள உலகக் குழுவின் மிகக் கொடூரமான மற்றும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>சர்வதேச பொலிஸாரின் வலையிலிருந்தும் தப்பித்து, வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் அச்சுறுத்தலான பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை இயக்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முக்கிய சூத்திரதாரி</span></p><p>2019ஆம் ஆண்டு துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர், அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரான், 2021ஆம் ஆண்டு பிணையில்&nbsp; செல்ல அனுமதிக்கப்பட்டதைத்&nbsp; தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடினார்.</p><p> அன்றிலிருந்து போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடமாடி வரும் கஞ்சிபானி இம்ரான், பல கொடூரமான கொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய சூத்திரதாரியாக விளங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cc94e88-b95e-4fde-b6f4-45eb3856f3e4/26-6a56df9c53820.webp' />&nbsp;&nbsp;</p><p>
'கஞ்சிபானி இம்ரான்' வெறும் உள்நாட்டு பாதாள உலக குழு செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை எனவும், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பாரிய மாஃபியா கும்பல்களுடன் கைகோர்த்துள்ளதாக&nbsp; புலனாய்வுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p> 
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இயக்கி வரும் கஞ்சிபானி இம்ரானினால் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சாதாரணமானதொன்றல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f0605a6-493e-4ffe-89d4-a5ba12598312/26-6a5703a1865af.webp' />&nbsp;</p><p>
இந்தக் குற்றவாளியைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் ஊடாக 2024 ஆகஸ்ட் 02 அன்று 'A-888' என்ற இலக்கத்தின் கீழ் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) ஒன்றைப் பிறப்பித்துள்ளனர். </p><p>
எனினும், தொடர்ச்சியாகத் தனது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு, பாதுகாப்புப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
இவ்வாறானதொரு கொடூரமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் இருந்தால் குற்றப் புலனாய்வு பிரிவு அல்லது இன்டர்போலிற்கோ தகவல் வழங்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T04:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகலை அறிவித்த மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-governer-resigned-1784085804"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-governer-resigned-1784085804</id>
            <summary type="text">மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் குறித்த கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p> பதவி விலகல் குறித்த கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம், சரத் அபேகோன் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தனிப்பட்ட காரணங்கள்&nbsp;</h2><p>அத்துடன், ஜனாதிபதி இந்த பதவி விலகலை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என இது தொடர்பாக பேராசிரியர் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தனிப்பட்ட காரணங்களினாலேயே தான் இந்த பதவி விலகல் முடிவை எடுத்ததாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேராசிரியர் சரத் அபேகோன் முன்னதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d6842e7-1d36-4a1f-829c-3c8c048df37b/26-6a570281401bc.webp' /></p><p>
</p><p>
மத்திய மாகாண ஆளுநர் செயலாளர் பதவியும் வெற்றிடம்
இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக காணப்படுகிறது.</p><p> இப்பதவியை வகித்து வந்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றமையே இதற்கு காரணமாகும்.

இதனையடுத்து, குறித்த பதவியின் பொறுப்புக்களை தற்காலிகமாக முன்னெடுப்பதற்காக மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T03:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-security-for-dignitaries-1784084130"></link>
            <id>https://tamilwin.com/article/special-security-for-dignitaries-1784084130</id>
            <summary type="text">இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட
பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு
அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட
பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு
அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது
தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த
ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.</p><p></p><h2>விசேட பாதுகாப்பு&nbsp;</h2><p>

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர,
திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மத்தும பண்டார,
எச்.எம். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும்
எந்தவித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பதை விசேட
பாதுகாப்புப் பிரிவு பொலிஸ்மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a4661f5-9658-4a72-a6e4-bf4880390836/26-6a56fd84b1d2e.webp' /></p><p>
</p><p>அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட இத்தகைய விசேட பாதுகாப்புகள்
வழங்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சர் விளக்கமளிக்கையில், </p><p>"தற்போது
நடைமுறையில் உள்ள 2020ஆம் ஆண்டின் '2398/26' இலக்க பொலிஸ் சுற்றறிக்கைக்கு
அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதுகாப்புத் தேவை எனக்
கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட
'அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை' கோரப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688e9ad0-53c8-4a4c-8d60-02c72d6c53ea/26-6a56fd840ecca.webp' /></p><p> </p><p>அதனடிப்படையில், பொது மக்கள்
பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான
விசேட குழுவின் பரிந்துரையின் பேரே பாதுகாப்பு அதிகாரிகள்
நியமிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு, தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில்
இல்லாவிட்டாலும், உளவுத்துறையின் அச்சுறுத்தல் விவரங்களின் அடிப்படையிலேயே
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T03:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதன்முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-assisted-robotic-surgeries-1784085613"></link>
            <id>https://tamilwin.com/article/ai-assisted-robotic-surgeries-1784085613</id>
            <summary type="text">இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடனான ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பிலுள்ள தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடனான ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில், அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் இந்த இரண்டு தனித்தனி அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>இவற்றில் ஒரு சிகிச்சை, 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பையை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதுடன், மற்றையது மிகவும் சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையாகும்.</p><p></p><h2>தொழில்நுட்ப உதவியுடனான அறுவை சிகிச்சை</h2><p>
இந்த ரோபோடிக் அமைப்பானது தானாகவே இயங்கி அறுவை சிகிச்சைகளைச் செய்வதில்லை என்றும், இது முற்றிலும் அறுவை சிகிச்சை நிபுணரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p>
இதன்போது, பிரத்யேக கன்சோல் வசதியைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்களது கைகளின் அசைவுகளை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ரோபோடிக் கைகளை வழிநடத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dafb46ef-b73c-4dde-8092-24244bbd8919/26-6a56fc7285065.webp' /></p><p>
செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட கணினி நிரலாக்கத்தின் ஒருங்கிணைப்பு காரணமாக, இந்த அமைப்பினால் மிக நுணுக்கமான அசைவுகளை மேற்கொள்ள முடிகிறது. இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது துல்லியத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவுகிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடனான அறுவை சிகிச்சைகள் மூலம் நோயாளிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து 
இந்த நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையானது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.</p><p> இதன் மூலம் அறுவை சிகிச்சையின் போது இரத்தப்போக்கு பெருமளவு குறைக்கப்படுவதுடன், மிகச் சிறிய வெட்டுக்காயங்களே&nbsp; ஏற்படுத்தப்படுவதாக வைத்தியர் சமந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p> 
 இதனால் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் குறைவடைவதுடன், நோயாளிகள் மிக விரைவாக குணமடைந்து வீடு திரும்ப முடியும். அத்துடன் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தவறுகளுக்கான வாய்ப்புகளும் இதனால் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T03:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் சிதையும் சுரேஷ் சலேயின் குடும்பம் - தப்பியோடும் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salley-s-wife-and-family-are-in-helpless-1784082652"></link>
            <id>https://tamilwin.com/article/salley-s-wife-and-family-are-in-helpless-1784082652</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி பாரிய ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>

இதன் காரணமாக, அவர்கள் மிகவும் இக்கட்டான மற்றும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சுரேஷ் சலே மரணப் போராட்டம் நடத்துவதாக பிரபல அரசியல்வாதிகளான உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட தரப்பினர் மிகவும் அறமற்ற முறையிலான பிரசாரங்களை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><h2><b>
தப்பியோடும் அரசியல்வாதிகள்</b></h2><p>இந்த ஊடக பிரசாரங்களுக்காக சுரேஷ் சலேயின் மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோரும் பயன்படுத்தப்பட்டனர். </p><p>எனினும், தற்போதைய நிலையில், குறிப்பிட்ட அரசியல் தரப்பினர் சுரேஷ் சலே குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5593cc37-eddd-404c-989d-ab80280c9452/26-6a56f3d5d5b7b.webp' />&nbsp;&nbsp;</p><p>

சலே தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் குறித்து உறவினர்கள் அவரிடமும் மகனிடமும் வினவப்பட்டுள்ளது. </p><p>

அவர்களால் எவ்வித பதிலும் அளிக்க முடியாமல் மிகவும் மன வேதனைக்கும் இக்கட்டான நிலைக்கும் ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T03:11:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு தொற்று குறித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-threat-rises-1784084098"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-threat-rises-1784084098</id>
            <summary type="text">டெங்கு தொற்றுநோய் நிலைமையானது தீவிர தொற்றுநோயாக உருவெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் தற்போது நடைமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு தொற்றுநோய் நிலைமையானது தீவிர தொற்றுநோயாக உருவெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>
எனினும் தற்போது நடைமுறையிலுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் மூலம் இந்த நிலைமைக்கு முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p>ஜூலை மாதத்தின் முதலாவது வாரம் நிறைவடையும் போது 142 ஆக காணப்பட்ட அதி அபாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை, தற்போது 175 ஆக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வருடத்தின் முதல் 6 மாதங்களில்</h2><p>
</p><p>டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வது ஒரு 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையாகும் என தெரிவித்துள்ளார்.</p><p> 
இந்த நெருக்கடியை சமாளிக்க முறையான திட்டமிடல்கள் எதனையும் தற்போது காண முடியவில்லை என அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bc055a1-4f28-4783-a7df-e95e82693166/26-6a56f68453507.webp' /></p><p>டெங்கு ஒழிப்பு தொடர்பாக கீழ்நிலை தீர்மானங்களை எடுக்கும் வேகம் போதாது எனவும், குறைந்தபட்சம் இது தொடர்பாக ஜனாதிபதி செயலணி ஒன்றாவது உடனடியாக நிறுவப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>இந்த நிலைமை இதே போன்று தொடருமானால், 2017 ஆம் ஆண்டில் நாம் கண்ட பாரிய பேரழிவை மீண்டும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 32 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் மாத்திரம் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன.</p><p> இது டெங்கு தீவிர தொற்றுநோய் நிலைமை ஏற்படுவதற்கான ஒரு முன்கூட்டிய அறிகுறியாகும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகள் பாதாள உலகத்தின் கட்டுப்பாட்டில்! நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-tens-situation-1784083096"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-tens-situation-1784083096</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்
பரிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்
பரிந்துரைகளை அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறியமையே பிரதான காரணம்
என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குற்றம்
சாட்டினார்.</p><p>

கொழும்பில் உள்ள தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் காரியாலயத்தில் நேற்று
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசின் பாரிய தவறு</h2><p>
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>அனுராதபுரம், தங்காலை மற்றும் மஹர சிறைச்சாலை மோதல்களைப் போலன்றி, இம்முறை
சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறைச்சாலைகள் தற்போது
பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதை
உறுதிப்படுத்துகின்றது. </p><p>உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, ஆயுதமற்ற
அதிகாரிகளை இவ்வாறான ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது அரசின் பாரிய தவறு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df39ae01-059f-4707-9859-38883afd0af6/26-6a56f5fc08017.webp' /></p><p>
</p><p>
தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர்
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள். மேலும், 70 சதவீதத்தினர்
அபராதம் செலுத்த முடியாத ஏழைகளே.</p><p>இவர்களைப் பராமரிக்க அரசு நாளொன்றுக்கு தலா
ஆயிரம் ரூபாவுக்கும் மேல் செலவிடுகின்றது. புதிய சிறைச்சாலைகளை அமைப்பது
இதற்குத் தீர்வாகாது. </p><p>போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைக்
குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களை நோயாளிகளாகக் கருதி மறுவாழ்வு அளிப்பதே
சிறைச்சாலை நெருக்கடிகளுக்கான உண்மையான தீர்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/724e53d8-de66-4cce-9cdb-3e652621e57f/26-6a56f5fcb405d.webp' /></p><p>

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 27 பக்க அறிக்கையைச்
செயற்படுத்தாமல், வெறும் அரசியல் நாடகங்களை நடத்துவதில் பயனில்லை. </p><p>ஜனாதிபதி,
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைவரும் குறித்த அறிக்கையை
வாசித்து, அதன் பரிந்துரைகளை உடனடியாகச் செயற்படுத்த முன்வர வேண்டும்&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கடிதத்துக்கு பதிலளிக்காத சஜித்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
கடந்த 7ஆம் திகதி நாமல் ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை தன்னிச்சையான முறையில் நீடிக்க முயற்சிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம்” குறித்து சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. </p><p></p><h2>ஏன் பதிலளிக்கவில்லை</h2><p>இதற்கு உடனடியாக தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அந்த கடிதத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, நாடாளுமன்றத்தில் கூட இது குறித்து எந்தவொரு வலியுறுத்தலும் செய்யப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
நாமல் ராஜபக்ச இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு நேரடியாகக் கடிதம் அனுப்புவதற்கு முன்னர், சிதறிப்போயுள்ள எதிர்க்கட்சியின் பல குழுக்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி அமைக்க முயற்சித்தன. </p><p>அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையிலேயே, தலைமைத்துவ மட்டத்தில் நாமல் ராஜபக்சவினால் இவ்வாறானதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f769b19c-1c01-44fe-aa3c-51af24795d2c/26-6a56eb333056c.webp' /></p><p>இந்த உத்தியோகபூர்வ கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருப்பது, சஜித் பிரேமதாசவினால் நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட ஒரு ஏளனமான செயல் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
கடந்த அரசாங்கக் காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082"></link>
            <id>https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082</id>
            <summary type="text">தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
பல சொத்துகளுக்கு உரிமையாளரான 75 வயதுடைய பெண், உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்வதில் நான்கு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.
</p><p>
உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதற்காக முன்வந்த நான்கு தரப்பினராலும் தமக்கு சட்டபூர்வமான உரிமை உள்ளதை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.</p><p>
</p><h2><b>
கோடீஸ்வர பெண் </b></h2><p>நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை உடலை எந்த தரப்பினருக்கும் கையளிக்கப் போவதில்லை என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397260a9-5830-4238-b3bc-5230eb0f6db6/26-6a56eae5a888a.webp' /></p><p>குறித்த பெண்ணுக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் மேல் தளத்தில், சுமார் 16 வருடங்களாக தம்பதி ஒன்று தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். 

அவர்கள் உயிரிழந்த பெண்ணை மிகவும் அன்புடன் கவனித்து வந்துள்ளனர். அத்துடன், 14 வருடங்களாக அவரிடம் வாடகைப்பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.</p><p>

உயிரிழந்த பெண் சுகவீனமுற்று பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவரது அனைத்து தேவைகளையும் அந்த குடும்பமே நிறைவேற்றியுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>

இந்தக் குடும்பத்தினர் உடலை பொறுப்பேற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என கூறி மேலும் மூவர் முன்வந்துள்ளனர்.</p><h3><b> 

பிரேத பரிசோதனை</b></h3><p>அவர்களில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் மகன், மற்றொரு உறவினர் மற்றும் கணவர் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவரும் அடங்குவர்.

உயிரிழந்த பெண் திருமணம் செய்யாதவர் என்பது தெரியவந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0bd03a-17ee-4154-b8ae-781ce94a7983/26-6a56eae657419.webp' /></p><p>இதனையடுத்து, கணவர் என்று கூறிக் கொள்ளும் நபர் சமர்ப்பித்த திருமணப் பதிவை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்ட பெயர் உயிரிழந்த பெண்ணின் சகோதரியினுடையது என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கு ஒப்படைப்பது என்பதில் கடுமையான சிக்கல் நிலை எழுந்துள்ளது. 

இதனால், பிரேத பரிசோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்து, உரிமை தொடர்பான சிக்கலை தீர்த்துக்கொண்டு வருமாறு பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T02:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879</id>
            <summary type="text">
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான&nbsp; ஆசிரியை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த தம்பதி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 25 வயதுடைய மனைவி மற்றும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2><b>
தம்பதி கைது</b></h2><p>சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆசிரியையான மனைவியிடம் இருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>வான் ஒன்றின் முன்பக்கத்தில் வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதம்பிட்டி பகுதியில் விநியோகிப்பதாக மாதம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa4f3fc-c032-4724-b563-48521865f816/26-6a56e07d50f1f.webp' />&nbsp;&nbsp;</p><p>
அதற்கமைய சந்தேகநபரான தம்பதியினர் மாதம்பிட்டி பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறித்த வானில் இருந்த தம்பதியினரை சோதனையிட்டபோது அவர்களிடம் இந்த போதைப்பொருள் கண்டுகிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவை வத்தளை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறைசேரியின் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server) ஆபத்தான நிலையில்! கோப் (COPF) குழுவில் அம்பலமான இரகசியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088"></link>
            <id>https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088</id>
            <summary type="text">திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாதுகாப்பு புதுப்பித்தலும் (Update) இன்றி 2019ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பாதுகாப்பற்ற முறையில் பேணப்பட்டு வந்துள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
</p><p>

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதில் இடம்பெற்ற பெருமளவிலான நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகக் கூட்டப்பட்ட விசேட குழு அமர்வின் போது, </p><p>அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற நீண்ட விசாரணைக்கு மத்தியில், நாட்டின் சைபர் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது.
</p><h2>

</h2><p></p><h2>மிகவும் பழமையான அமைப்பு</h2><p>இங்கு குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை கணினி அவசர தயார்நிலை அமைப்பின் (CERT) அதிகாரிகள், திறைசேரியினால் தற்போது கூட பயன்படுத்தப்பட்டு வருவது 2016ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் (Server system) என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அதன் உத்தியோகபூர்வ சேவைக்காலம் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை அதற்காக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வருடாந்த பாதுகாப்பு தணிக்கை (Annual Security Audit) எதுவும் செய்யப்படவில்லை என்றும் நிதிக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ad4de8-a2ad-4261-bf3f-12333b0a1c87/26-6a56e2f23a625.webp' /></p><p>2019 ஆம் ஆண்டுடன் காலாவதியான இந்த அமைப்பை எந்தவொரு சேவைப் பராமரிப்போ (service) அல்லது இக்காலப்பகுதிக்குரிய புதுப்பித்தலோ (update) இல்லாத ஒரு சேவையகத்தின் (server) மூலமாகவே திறைசேரியின் இந்த அனைத்து இரகசிய ஆவணங்களும் அனுப்பப்பட்டன? யார் வேண்டுமானாலும் மிக எளிதாக ஊடுருவக்கூடியதாகவும் இருந்துள்ளது.
</p><p>
கொடுக்கல் வாங்கல்களில் பணச் சலவை (Money laundering) அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank), சிட்டி வங்கி (Citi Bank) என்பன இலங்கை மத்திய வங்கி ஊடாக திறைசேரிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தமை இக்குழுவில் வெளிப்பட்டது. </p><p>எனினும், திறைசேரியின் கீழ்மட்ட அதிகாரிகளினால் அந்த பாரதூரமான எச்சரிக்கைகள் குறித்து உயர் நிர்வாகத்திற்கோ அல்லது நிதிச் செயலாளருக்கோ அறிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குழுவின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>

அதிகாரிகளினால் இப்பிரச்சினை குறித்து உயர் மட்டத்திற்கு அறிக்கை செய்யப்படாமல், தங்களது மட்டத்திலேயே தீர்மானங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒருமுறை அந்த மோசடியான கணக்குகளுக்கே பணத்தை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் குழுவின் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-riot-cid-investigation-update-1784074376"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-riot-cid-investigation-update-1784074376</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.</p><p> </p><p>இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;உடற்பயிற்சி நேரம்..&nbsp;</h2><p>இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bec7af-9127-4a2e-8ac4-dc2d158aad57/26-6a56d7d89f970.webp' /></p><p>மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.</p><p> கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>&nbsp;CCTV பதிவுகள்</h2><p>கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f51b65b-efd6-4e1e-8020-943c20c78cd8/26-6a56d85c0d432.webp' /></p><p> </p><p>அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர். </p><p>சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன. அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593fa4d8-08e7-4723-b072-d36c5999ef9b/26-6a56d85cc383d.webp' /></p><p>இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் வாக்குறுதிகள் வெறும் கற்பனையே! மொட்டுக் கட்சி கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/podujana-peramuna-criticized-anura-government-1784072205"></link>
            <id>https://tamilwin.com/article/podujana-peramuna-criticized-anura-government-1784072205</id>
            <summary type="text">எதிர்க்கட்சியில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய
தற்போதைய அரசு, நாட்டை ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று
ஸ்ரீலங்கா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய
தற்போதைய அரசு, நாட்டை ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார
விமர்சித்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவித்ததாவது, "அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது, மக்களின்
பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார்.</p><p>வளமான நாடு -
அழகான வாழ்க்கை' என்ற கொள்கைப் பிரகடனத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு,
மக்களை வறுமையின் உச்சத்துக்கே தள்ளியுள்ளது.</p><p></p><h2>அரசின் வாக்குறுதிகள்..&nbsp;</h2><p>

திறைசேரியில் பணம் இருப்பதாகக் கூறினாலும், மக்களுக்கு எந்தவித நிவாரணமும்
வழங்கப்படவில்லை. தூய்மையான இலங்கை என்று கூறும் அரசு, உள்ளூராட்சி
மன்றங்களின் நிர்வாகச் சீர்கேட்டால் நாடு முழுவதும் டெங்கு பரவும் சூழலை
உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2508e7b-1e90-4096-b6cf-811e41651fad/26-6a56c8b32f337.webp' /></p><p>
</p><p>
விவசாயிகள் குறித்துப் பேசியவர்கள், இன்று நெல் கொள்முதல் விலையை வழங்க
முடியாமல் தவிக்கின்றனர். அரிசி இறக்குமதியை நிறுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு
வந்தவர்கள், தற்போது பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்து உள்நாட்டு
விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டனர்.</p><p>

இறுதியாக, இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசும் செய்யாத வகையில், நீதிமன்றக்
கட்டமைப்புக்குள் தலையீடு செய்ய இந்த அரசு முயற்சிக்கின்றது. உயர் நீதிமன்ற
மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன்
மூலம், தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற அரசு திட்டமிடுகின்றது.
</p><p>இத்தகைய செயல்கள் நீதித்துறையின் சுதந்திரத்தையும், மக்கள் அதன் மீது
கொண்டுள்ள நம்பிக்கையையும் சீர்குலைக்கும். எனவே, நாட்டை இத்தகைய குழப்ப
நிலைக்குத் தள்ள வேண்டாம் என அரசை எச்சரிக்கின்றேன்" என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:42:17+00:00</updated>
        </entry>
    </feed>
