<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-12T19:45:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை உலுக்கிய பாவி சூறாவளி: 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-bavi-over-2-8m-evacuated-in-china-48-1783880844"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-bavi-over-2-8m-evacuated-in-china-48-1783880844</id>
            <summary type="text">இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த இயற்கைச் சீற்றமான &#039;பாவி&#039;
சூறாவளி, அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைக் கடுமையாகச்
சூறையாடியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த இயற்கைச் சீற்றமான 'பாவி'
சூறாவளி, அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைக் கடுமையாகச்
சூறையாடியுள்ளது.
</p><p>
சனிக்கிழமை நள்ளிரவில் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் மற்றும் வென்சூ
நகரங்களுக்கு இடையே இந்த சூறாவளி கரையைக் கடந்தது.</p><p></p><h2>பாவி சூறாவளி</h2><p>

இதன் காரணமாகப் பலத்த காற்றும், பெருமழையும் கொட்டித் தீர்த்ததால்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா முழுவதும் 28 இலட்சத்திற்கும் அதிகமான
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
இதில் தொழில்நுட்ப மையமாகத் திகழும் ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து மட்டும் 22
இலட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf68831-ef34-4462-95a2-9aa5e92f9960/26-6a53de61cfda5.webp' /></p><p>
</p><p>
சூறாவளி கரையைக் கடந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அது ஓரளவுக்கு
வலுவிழந்த போதிலும், பிரான்ஸ் நாட்டின் பரப்பளவைக் கொண்ட இந்த மாபெரும் புயல்
சின்னம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் வடக்கு சீனாவில்
மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
புயலின் தாக்கத்தால் வென்சூ நகரின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு
சாய்ந்துள்ளன, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புப்
பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.</p><p></p><h2>சீனாவின் போக்குவரத்து</h2><p>
</p><p>
அதிர்ஷ்டவசமாக சீனாவில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும்,
அண்டை தீவான தாய்வானைக் கடந்தபோது அங்கு பலத்த காற்றினால் 134 பேர்
காயமடைந்துள்ளனர்.</p><p>

இந்த இயற்கைச் சீற்றத்தால் சீனாவின் போக்குவரத்து நெட்வொர்க் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.

ஷங்காய் மற்றும் ஹாங்சோ நகரங்களில் 2,300க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகளும்,
சுமார் 1,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும்
இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aadd37f-49b2-41d7-8c2a-c508d2255f13/26-6a53de612bf8c.webp' /></p><p>
</p><p>
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு சீனா அதிகளவிலான தீவிர வானிலைச்
சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
தற்போது அன்ஹுய் மாகாணத்தை நோக்கி நகர்ந்துள்ள புயல் காரணமாக, ஏற்கனவே
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜிலின், லியோனிங், ஹெபெய் மற்றும் ஷான்டாங்
மாகாணங்களுக்குப் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமரை மாற்ற ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelensky-decides-to-replace-ukraine-pm-1783879670"></link>
            <id>https://tamilwin.com/article/zelensky-decides-to-replace-ukraine-pm-1783879670</id>
            <summary type="text">உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முடிவு செய்துள்ளார்.</p><p>

நாட்டின் "புதுப்பிக்கப்பட்ட அரசியல் உத்தியை" செயல்படுத்துவதற்காக இந்த அமைச்சரவை மாற்றம் அவசியம் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவுடனான உறவு
</h2><p>
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, "உக்ரைன் குழுவில் பிரதமராக யூலியா ஆற்றிய தெளிவான, நிலையான மற்றும் பயனுள்ள பணிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2db35e-f8df-404e-ac2c-90a12bf18a8b/26-6a53da13bda92.webp' /></p><p>உக்ரைனின் மிக முக்கிய கூட்டாளி நாடான அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் ஒரு புதிய மற்றும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்க முன்வந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2025 ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>

உக்ரைன் பிரதமர் பதவி விலகல்</h2><p>

உக்ரைன் சட்டப்படி பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட வேண்டும் என்பதால், உக்ரைன் அரசில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd4da504-f755-4f1d-bdb4-b9fed750fbd8/26-6a53da146f564.webp' /></p><p>புதிய பிரதமருக்கான பந்தயத்தில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ், எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் 'நாஃப்டோகாஸ்' (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் செர்ஹி கொரெட்ஸ்கி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
பிரதமருடன் சேர்த்து உக்ரைனின் சட்ட நடைமுறையாக்க முகமைகளின் தலைவர்களும் மாற்றப்பட உள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்: நிதி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-in-parliament-on-november-ministry-of-finance-1783872595"></link>
            <id>https://tamilwin.com/article/2027-in-parliament-on-november-ministry-of-finance-1783872595</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம்
திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம்
திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு
அறிவித்துள்ளது. இது தொடர்பான கால அட்டவணையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.</p><p> அதன் பிரகாரம்,
ஒவ்வொரு அமைச்சுக்குமான முன்மொழியப்பட்ட செலவின ஒதுக்கீடுகளைக் கொண்ட
சட்டமூலத்தின் வரைவு, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையின்
அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><h2>முக்கிய திகதிகள்&nbsp;&nbsp;</h2><p>செப்டெம்பர் 18: ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும், ஒக்டோபர் 7: நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பு இடம்பெறும், நவம்பர் 12: நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்படும்,&nbsp; நவம்பர் 13 முதல் 20 வரை: வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு
விவாதம் நடைபெறும்,&nbsp; நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை: குழு நிலை விவாதங்கள் இடம்பெறும்.</p><p> நாட்டின் எதிர்வரும் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதாரக்
கொள்கைகளை உள்ளடக்கிய இந்த வரவு - செலவுத் திட்டத்தின் மீது அரசியல் மற்றும்
பொதுத் தளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3379a624-e06e-4be6-82d4-5d3d80e37fa3/26-6a53bcfac2dba.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கூரையில் கதறிய இளம்பெண்ணின் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&amp;nbsp;போராட்டத்தின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&nbsp;</p><p>போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இருந்த இளம் பெண் தொடர்பான பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.&nbsp;</p><p>குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p> சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார்.&nbsp;</p><p>இருப்பினும் அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் சில பின்னணிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_F3wv6u1dlQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் அமீரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954"></link>
            <id>https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இரங்கல் செய்தி&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><h2>இரங்கல் செய்தி&nbsp;&nbsp;</h2><p>

தனது 'X' தளம் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில், மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கட்டாரிற்கு ஆற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் சேவையையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாக அவர் கூறினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, Father Emir of Qatar.<br><br>His visionary leadership and service to Qatar will be remembered.<br><br>On behalf of the Government and people of Sri Lanka, I extend heartfelt condolences to HH Sheikh Tamim bin…</p>&mdash; Anura Kumara Dissanayake (@anuradisanayake) <a href="https://x.com/anuradisanayake/status/2076331689014710763?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக, ஜனாதிபதி, கட்டாரின் தற்போதைய அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டாரில் மாற்றத்தை ஏற்படுத்திய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று (12) காலமானார்.
</p><p>
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கத்தார் நாட்டின் மிக உயர்ந்த அரச நிறுவனமான எமிரி திவான், நாட்டில் நான்கு நாட்கள் தேசிய துக்க காலத்தை அறிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப்பட்ட கைதிகள் காணொளி தொழில்நுட்பம் வழியாகவே விசாரணைகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைக்கைதிகள்</h2><p>
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், மாற்றப்பட்ட கைதிகளை ஒவ்வொரு நீதிமன்ற அமர்விற்கும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b50b18-0d64-4485-954a-36d7a46b99f9/26-6a53a10e3b8f7.webp' /></p><p>
</p><p>
இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
</p><p>
அந்த குழு சேதங்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கியமாகச் செயற்பட தமிழ்பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம் - நாளை கொழும்பில் கூட்டாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780"></link>
            <id>https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780</id>
            <summary type="text">இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. </p><p>அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும்
சேர்ந்து கூட்டாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை பிற்பகல்
1 மணிக்கு கொழும்பு - கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெறுகின்றது.</p><p>

இதில் அந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்களும் ஒரே மேசையிலிருந்து தங்கள் கூட்டுச்
செயற்பாட்டுக்கான இணக்கப்பாட்டையும் அது தொடர்பான திட்டங்களையும் நாளை
அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>கட்சிகளின் ஐக்கியம்&nbsp;&nbsp;</h2><p>
வடக்கு, கிழக்கு தமிழர்கள் தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும்
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி, மலையகத் தமிழர்கள் தரப்பில் தமிழ்
முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம்கள்
தரப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியனவே ஒன்றுபட்டுச் செயற்பட இணங்கியிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d9a019-a90e-45c3-b350-5a96790d595a/26-6a53d552a68ee.webp' /></p><p>
</p><p>
பிரதான எதிரணிக் கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ்பேசும் மக்களின்
கட்சிகளின் ஐக்கிய செயற்பாட்டுக்கு இணங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தக் கூட்டு அமைப்புக்கு பெயர் ஏதும் உண்டா என்று கேட்ட போது ''இப்போதைய நிலையில் இது ஒரு கூட்டு அமைப்பல்ல. ஒன்றுபட்டு விடயங்களை
எதிர்கொள்வதற்கான இணக்கப்பாடு மட்டுமே.</p><p> அதனால் அதற்கு விசேடமான பெயர்
ஒன்றுமில்லை'' என்று இந்த ஏற்பாட்டுக்குப் பின்னணியில் செயற்படும் கட்சித்
தலைவர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பிரித்தானிய அமைச்சர் அன் விடிகோம்ப் கொலை - அரசியல் பின்னணி இல்லை என பொலிஸ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-former-uk-minister-police-explain-political-1783874942"></link>
            <id>https://tamilwin.com/article/murder-former-uk-minister-police-explain-political-1783874942</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பெண் அமைச்சரும், ரிஃபார்ம் யூகே கட்சியின்
முக்கிய நிர்வாகியுமான அன் விடிகோம்ப் (வயது 78) கொலையின் பின்னணியில் அரசியல்
காரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பெண் அமைச்சரும், ரிஃபார்ம் யூகே கட்சியின்
முக்கிய நிர்வாகியுமான அன் விடிகோம்ப் (வயது 78) கொலையின் பின்னணியில் அரசியல்
காரணங்கள் எதுவும் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று அந்நாட்டு&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

தென்மேற்கு பிரித்தானியாவின் கிராமப்புற பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், கடந்த
வியாழக்கிழமை அன் விடிகோம்ப் படுகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><p>
இந்த கொடூரக் கொலை தொடர்பாக வடக்கு பிரித்தானியாவின் ரோதர்ஹாம் பகுதியைச் சேர்ந்த
28 வயதுடைய பிரித்தானிய இளைஞர் ஒருவரை பொலிஸார் சனிக்கிழமை இரவு கைது
செய்துள்ளனர்.
</p><p>
இந்த வழக்கு குறித்து டெவோன் மற்றும் கார்ன்வால் பகுதியின் உதவி தலைமை பொலிஸ் அதிகாரி மேட் லாங்மேன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போதைய விசாரணை
நிலவரப்படி, இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவொரு தொடர்பும்
இல்லை.</p><p></p><h2>பல்வேறு கோணங்கள்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

புலனாய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தாலும், இது அரசியல்
தூண்டுதலால் நடத்தப்பட்ட கொலை என்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இதுவரை
கிடைக்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f1a060-4992-4678-b801-cf4b8a2d08cf/26-6a53c96ac80c3.webp' /></p><p>
</p><p>
முன்னதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், விசாரணக்குப்
பின் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டார்.
</p><p>
தீவிர சமூகக் கொள்கை பற்றாளரான அன் விடிகோம்ப், 1990களில் ஜான் மேஜரின்
கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தில் இளநிலை அமைச்சராகப் பணியாற்றியவர்.
</p><p>
2010இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய அவர், பின்னர் நைஜல்
ஃபரேஜின் ரிஃபார்ம் யூகே கட்சியில் இணைந்து அதன் குடியேற்றம் மற்றும்
நீதித்துறைக்கான செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தார்.
</p><p>
பிரித்தானியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஜோ காக்ஸ் (2016) மற்றும் டேவிட் அமேஸ்
(2021) ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் மற்றும் தீவிரவாதக்
காரணங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் அன்
விடிகோம்பின் இந்த மரணம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 640 பேர் கைது! நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரின் குற்றத்தடுப்பு வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/640-arrested-single-day-nationwide-police-crime-1783869793"></link>
            <id>https://tamilwin.com/article/640-arrested-single-day-nationwide-police-crime-1783869793</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள்
ஒழிப்புச் சோதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள்
ஒழிப்புச் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30
முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது,
நாடு முழுவதும் 27 ஆயிரத்து 217 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு
உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>640 பேர் கைது</h2><p> குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக
அடையாளம் காணப்பட்ட 30 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் - 640 நபர்கள், பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் - 88 சந்தேகநபர்கள், நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் - 228 சந்தேகநபர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393a7079-1471-432f-a086-d3fb0f42f41c/26-6a53b450c2040.webp' /></p><p>
</p><p>
அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகளுக்கு எதிராகவும், ஆபத்தான
முறையில் வாகனம் செலுத்திய 133 சாரதிகளுக்கு எதிராகவும், ஏனைய போக்குவரத்து
விதிமீறல்களுக்காக 4 ஆயிரத்து 51 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ்
நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் வலய மட்டத்திலான இந்த விசேட சோதனை
நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்
பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T15:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வணிகப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது: ட்ரம்ப் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commercial-traffic-hormuz-operating-usual-despite-1783867236"></link>
            <id>https://tamilwin.com/article/commercial-traffic-hormuz-operating-usual-despite-1783867236</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும்
போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது
என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும்
போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது
என்று ஜனாதிபதி&nbsp; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
NBC தொலைக்காட்சியின் 'மீட் த பிரஸ்' நிகழ்ச்சியுடனான நேர்காணலின் போது
டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
சமீபத்திய மோதல் சூழலில், "மறுஅறிவிப்பு வரும் வரை" ஹோர்முஸ் நீரிணையை
மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7623313-541a-4152-b48b-b530143433bd/26-6a53ad21d0ff4.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கப்பல்கள் அதன் வழியே தொடர்ந்து பயணித்து வருவதாக அமெரிக்க
இராணுவம் முன்னதாக வலியுறுத்திக் கூறியிருந்தது.
</p><p>
"ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை. கப்பல் போக்குவரத்து
தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது," என்று மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப்
படைகளைக் கண்காணிக்கும் சென்ட்காம் (CENTCOM) அமைப்பு எக்ஸ் (X) தளத்தில்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T15:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை விவகாரம் விஸ்வரூபம் - உலக எண்ணெய் விநியோகத்திற்கு புதிய அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-closes-strait-of-hormuz-causing-fuel-shortage-1783866436"></link>
            <id>https://tamilwin.com/article/iran-closes-strait-of-hormuz-causing-fuel-shortage-1783866436</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா
விமானம்) தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா
விமானம்) தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>
வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு
நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு
வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க தாக்குதல் அதிகரிப்பு</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (US CENTCOM)
நேற்றைய தினம்(11) ஈரானின் 140 இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது.



கடந்த மூன்று நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள்
குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8abdcd4d-76c1-4ca1-aa18-600933027139/26-6a53a4ca7a81e.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது இஸ்லாமிய
புரட்சிகர காவல்படையை (IRGC) ஏவி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ
மையங்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளைக் குறி வைத்து ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளது.
</p><p>
ஜோர்டானில் உள்ள அமெரிக்க கட்டுப்பாட்டு மையம், குவைத்தில் உள்ள ரேடார் தளம்,
கத்தாரில் உள்ள போர்விமான பராமரிப்பு மையம் மற்றும் ஓமானில் உள்ள அமெரிக்க
கடற்படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல்களால் கத்தாரில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் ஈரானின்
ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும்
பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.
</p><h2>

எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்</h2><p>

இதேவேளை, ஓமன் கடற்பகுதியில் பயணித்த 'ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' (GFS Galaxy)
என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அதில் பயணித்த 11
இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு இந்திய கடற்படை வீரர் காணாமல்
போயுள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd798904-0c1d-41ff-8804-0b78ff1918d6/26-6a53a4cb42cb5.webp' /></p><p> </p><p> 

இந்த பகுதியில் அமெரிக்காவின் தலையீடு முடியும் வரை ஹோர்முஸ் நீரிணை
திறக்கப்படாது என ஈரான் தெரிவிக்கும் நிலையில், உலகளவில் மசகு
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலை உயரும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>

உலகப் பொருளாதாரத்தை உலுக்கி வரும் இந்த பிரச்சினையைத் தீர்க்க ஓமன் மற்றும்
பாகிஸ்தான் நாடுகள் தீவிர சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மைதானத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்த கருணா: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விவரித்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479</id>
            <summary type="text">விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&amp;nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த சம்பம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த செவ்வியில்,</p><p>
எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார். </p><h2>


</h2><p></p><h2>பொலிஸ் மைதானத்தில் நடந்த சம்பவம்</h2><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார். </p><p>அவர் இருபுறமும் பாதுகாப்புப் பிரிவினரை வைத்துக்கொண்டு நடக்கும்போது, அந்த மைதானத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய ஒரு பொலிஸ் தடகள வீரரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போதேஜு 1990 ஆம் ஆண்டு&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் கைப்பற்றிக் கொண்ட பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரை சரணடையுமாறு கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce727709-c3d3-4db5-ad4e-03761416d0a1/26-6a5394d1bf566.webp' /></p><p>
</p><p>ஆனால் போதேஜு சரணடைய முடியாது என்று கூறியவர். அவர் சார்பாக நாம் இன்னும் பொலிஸ் விளையாட்டு விழாக்களில் சவால் கிண்ணம் ஒன்று வழங்கப்படுகிறது. </p><p>அவர் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உருவாக்கிய ஒரு திறமையான தடகள வீரர்.விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் பொலிஸ் மைதானத்தில் குறித்த பெண்ணுடன் நடைபயிற்சி செய்யும் போது அங்கு இருந்த மற்றொரு அதிகாரி என் அருகில் வந்து இவ்வாறு கூறினார்.</p><h2>&nbsp;துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை</h2><p>கிழக்கில் நிராயுதபாணியாக இருந்து 674 பொலிஸாரை கொலை செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கி போதேஜு போன்ற திறமையான ஒரு வீரரைக் கொன்ற கொலையாளி, கருணா அம்மான் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திலேயே நடந்து திரியும்போது, எனக்குள் பாரியதொரு ஆக்ரோஷம் ஏற்படுகிறது.</p><p>இதனை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது?" என்று அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் கூறினார்.
எனக்குத் தெரிந்தவரை, இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55c68bf5-0c23-41e9-a690-c23e35a5c9b1/26-6a539e34752c7.webp' /></p><p> </p><p>அந்தப் படுகொலைகளுக்கு முழுமையான தலைமைத்துவத்தை வழங்கிய கருணா இந்நாட்டின் அமைச்சரானார். அத்தோடு பழமையான அரசியல் கட்சியொன்றின் உபதலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. </p><p>அதேபோல், இதில் இரண்டாவது இடத்தில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிரதிமைச்சரானார். அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். </p><p>எனவே, இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தவிர, இன்றுவரை இந்த மனிதப் பேரவலக் கொலைகள் குறித்து விசாரணை எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp; </p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xYo28VM_jxI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-12T14:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழந்த அதிகாரிகளுக்கு அரசு வெளியிட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198"></link>
            <id>https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான
நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 


உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா என்பது
ஆரம்பக்கட்ட நிவாரணக் கொடுப்பனவு மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின்
ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்.</p><p></p><p> 

உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள்
திணைக்களத்தின் முழுமையான செலவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ள என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை
வழங்குவதற்கும் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> </p><h2>

அதிகாரிகளின் தற்போதைய நிலைமை</h2><p>
இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள்
தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேச்சாளர், 

"தற்போது 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1211b792-e686-403c-9f4c-fa45b1686609/26-6a539c0f33f31.webp' /></p><p> </p><p>அவர்களில் மூவர், கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களுக்கான நட்டஈடு மற்றும் இதர உதவிகள் குறித்தும் சிறைச்சாலைகள்
திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:53:05+00:00</updated>
        </entry>
    </feed>
