நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்: சஜித் பிரேமதாச சாடல்
பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் பெறுமதி சேர் வரி(VAT) உள்ளிட்ட அதிகளவான வரிச் சுமையை மக்கள் மீது இந்த அரசாங்கம் திணித்துள்ளமையே என கூறியுள்ளார்.
இதனால் இளைய சமூகம் எதிர்ப்பார்ப்பிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமற்ற நாட்டின் எதிர்காலம்
இலங்கையை விடவும் அபிவிருத்தி குறைந்த நாடுகள் நோக்கி இளைஞர் யுவதிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்திஜீவிகள், தொழில் வல்லுனர்கள் போன்றே இளைஞர் யுவதிகளும் நாட்டை விட்டு பெருவாரியாக வெளியேறிச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி அரசாங்கம் செயற்படத் தவறியுள்ளதாகவும் நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் ஆரோக்கியமானதல்ல என புரிந்து கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan