பாணந்துறையில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞர் கைது
பாணந்துறை பிரதேசத்தில் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, மாலமுல்ல,கோங்கஹகொட்டுவ பிரதேசத்தில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஹிரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவரது வீட்டினுள் அட்டைப்பெட்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11,080 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 5,000 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிரண பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 10 இலட்சம் ரூபா ஆகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam