விபத்தில் பலியான இளம் பெண்
சிலாபம் - முந்தல் கோயில் சந்திப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வேம்பு மரத்தில் மோதியதில் அதில் பயணித்த 24 வயதான யுவதி மரணமடைந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
முந்தல் கோயில் சந்தி வில்பெத்த பகுதியை சேர்ந்த 24 வயதான குணரத்ன அபேசிங்க முதியன்சலாகே அஞ்சலி ருவன்திமா பியுமந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யுவதி தனது சகோதரன் மற்றும் தாயாருடன் நுவரெலியா பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதியின் வீட்டுக்கு மிக அருகில் கோயில் சந்தியில் இந்த விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டியை யுவதி சகோதரர் ஓட்டியுள்ளார்.
அவருக்கு நித்திரை மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேம்பு மரத்தில் மோதியுள்ளது.
விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யுவதியின் சகோதரரும் தாயும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த யுவதி வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாகவும் யுவதியும் சகோதரரும் தாயுடன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri
