இளம் தாயும் மகனும் மாயம் - மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர்.
தாயும் மகளும் மாயம்
யசோதா ஹன்சனி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-859 1639 அல்லது என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)
என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம் News Lankasri
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)