கொழும்பில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்
வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த இளைஞன் நுழைந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு அழைத்துள்ளனர்.
அத்துடன் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உடல்நிலை
காவலில் இருந்தபோது அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மருத்துவமனை தாதி தொடர்பான பாடத்திட்டத்தை கற்று வருகின்றார். குறித்த இளைஞன் ஒரு நடனக் கலைஞர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
